Archive for நவம்பர், 2010

ஒன்பது இளம்பெண்களைக் கற்பழித்த எரிக் மார்டின் போடும் அப்பாவி வேடம்: பிரெஞ்சு அரசாங்கம் எனக்கு எதிராக சதி செய்கிறது என்கிறான்!

நவம்பர் 20, 2010

ஒன்பது இளம்பெண்களைக் கற்பழித்த எரிக் மார்டின் போடும் அப்பாவி வேடம்: பிரெஞ்சு அரசாங்கம் எனக்கு எதிராக சதி செய்கிறது என்கிறான்!

ஒன்பது இளம்பெண்களைக் கற்பழித்த எரிக் மார்டின் கைது[1]: சென்னையில் 16-11-2010 அன்று மாதவரத்தில் கைது செய்யப்பட்டு[2], புழல் சிறையில்[3] அடைக்கப்பட்டுள்ள எரிக் மார்டின், விசாரணையின்போது, “பிரெஞ்சு அரசாங்கம் எனக்கு எதிராக சதி செய்கிறது”, என்று போலீஸாரிடம் சொல்ல ஆரம்பித்து விட்டான்[4].

சமூக சேவையில் முதுகலை பட்டம் பெற்று விடுதி நடத்தி வந்தவன்: “சமூக சேவையில் முதுகலை பட்டம் பெற்ற நான் இளைஞர்களுக்காக “ல’ ஆர்பர் வாயேஜர்” (L’ Orbre Voyageur) என்ற தங்கும் விடுதியை அமெசாஸ் (Aumessas, France) என்ற இடத்தில் நடத்தி வந்தேன்.

இளம் குற்றவாளிகளை சீர்படுத்தும் நோக்கில் விடுதியில் அனுமதிக்கப் பட்டனர்: இளம் குற்றவாளிகளுக்கு பயிற்சி அளித்து சீர்படுத்தும் நோக்கில் அங்கு அனுமதிக்கப் பட்டனர் (அவர்கள் எல்லாம் இளம் பெண்கள் என்பதை குறிப்பிடவில்லை).

1990ல் அரசாங்கம் நிதியுதவி நிறுத்தப்பட்டதாம்: அதற்கு நிதியுதவியும் கொடுத்து வந்தது. ஆனால் 1990லிருந்து பொருளாதாரப் பிரச்சினைகளுக்காக, நிதியுதவி கொடுப்பதை நிறுத்தியது. இதனால், அங்கு தங்கியிருந்தவர்கள் ஒருவருக்கொருவரிடம் திருட ஆரம்பித்தனர். இதனால், நிறைய புகார்கள் அரசாங்கத்திற்குச் செல்ல ஆரம்பித்தன. நானும் அத்தகைய திருட்டுகளைக் கட்டுப்படுத்த புகார் கொடுத்தேன். அதனால், அரசாங்கம், அவர்களைத் தூண்டி தங்களைக் கற்பழித்து விட்டதாக புகார்கள் கொடுக்க செய்தது (இங்குதான் அவர்கள் இளம்பெண்கள் என்று தெரிகிறது).

நான் எந்த குற்றத்தையும் செய்யவில்லை, நிரபராதி: நான் எந்த குற்றத்தையும் செய்யவில்லை, நிரபராதி. எனது நிலையை மெய்ப்பித்த பிறகு, இந்தியாவிற்கு மறுபடியும் வருவேன். என்னுடைய தந்தையோடு வருவேன், இங்குதான் தங்குவேன்”.

காஞ்சிபுரத்தில் 2001ல் தங்கிருந்தானாம்: 2001ல் காஞ்சிபுரத்தில் தங்கியிருந்த போது, “அயல்நாட்டவர்” என்று போலீஸாரிடம் பதிவு செய்து கொண்டதாக கூறினான். போலீஸார் அந்த ஆவணங்களைத் தேடி வருகின்றனர். பிறகு தனது விசாவை உத்தராஞ்சலில் தொலைத்துவிட்டதாகக் கூறிக்கொள்கிறான்.

பாதிரி போன்று நிர்வாகம் செய்து வந்த எரிக் மார்டின்: அமெசாஸ் என்பது பிரெஞ்சு நாட்டில் தென்பகுதியில் உள்ள மக்கள் சேர்ந்து வாழும் “கொம்யூன்”[5] என்ற அரசாங்க நிர்வாகப் பிரிவில் வருகிறது[6]. இந்த கொம்யூன்கள் என்பவை “பேரிஸ்” எனப்படுகின்ற கிருத்துவ மதகுருக்கள் பார்வையில் வருகின்ற முனிசிபாலிடி அல்லது கிராமம் என்று சொல்லலாம்[7]. “கர்ட்” என்ற நதி பாய்வதால் “கர்ட்”பகுதி என்றும் சொல்லப்படும்[8]. இவ்வாறு பிரெஞ்சு நாட்டில் “டிபார்ட்மென்ட்” என்பது நாட்டை பகுதிகளகப் பிரித்து நிர்வாகம் செய்கின்ற முறை[9]. ஆக அந்த கிராமத்தில்தான், சிறுமியர் / இளம்பெண்கள் சீர்படுத்தும் விடுதியை நடத்தி வந்தான் என்று தெரிகிறது. அதனால்தான், அதற்கு நிதியுதவியும் கொடுத்து வந்தார்கள் போலிருக்கிறது. பிறகு கற்ப்பழிப்பு புகார்கள் வந்ததும் நிதியுதவி கொடுப்பது நிறுத்தப்பட்டிருக்கலாம்.

பரஸ்பரக் குற்றச்சாட்டுகள், பெண்கள் என்ற உண்மையை மறைப்பது எல்லாம் அவனது குற்ற மனப்பாங்கை எடுத்துக் காட்டுகிறது: முதலில் “அங்கு தங்கியிருந்தவர்கள் ஒருவருக்கொருவரிடம் திருட ஆரம்பித்தனர். இதனால், நிறைய புகார்கள் அரசாங்கத்திற்குச் செல்ல ஆரம்பித்தன. நானும் அத்தகைய திருட்டுகளைக் கட்டுப்படுத்த புகார் கொடுத்தேன்”, என்றெல்லாம் சொல்லிவிட்டு, “அதனால், அரசாங்கம், அவர்களைத் தூண்டி தங்களைக் கற்பழித்து விட்டதாக புகார்கள் கொடுக்க செய்தது”, என்கிறான். அதாவது இங்குதான் அவர்கள் இளம்பெண்கள் என்று தெரிகிறது. ஏனெனில், யாரும் ஒன்பது ஆண்களைக் கற்பழித்து விட்டான் என்று கூறமாட்டார்கள். ஆகவே, இங்கு வந்து, தன்னுடைய நாட்டின் மீதே குற்றஞ்சாட்டுவதால், அவனுடைய குற்ற மனப்பாங்குத்தான் வெளிப்படுகிறது. ஒன்பது 15 வயது கொண்ட இளம் பெண்களைக் கற்பழித்தக் குற்றத்திற்காக, புகார் கொடுக்கப்பட்டு, வழக்கு தொடர்ந்து, நீதிமன்ற தீர்ப்பில் 15 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. சிறையிலிருந்து தப்பி ஓடிவிட்டதால், 2006ல் இன்டர்போல் சிவப்புநிற எச்சரிக்கை அறிக்கை விடுத்திருந்தது. 2007ல் ஐரோப்பிய கைது வாரண்டும் பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆகையால், பிரெஞ்சு அரசாங்கம் ஒன்றும் பைத்தியமல்ல, அப்படி, அப்பாவி மக்களை சிறையிலடைக்க. அப்படியென்றால், இவனும் அதற்காக தப்பித்து இங்கு வந்து தங்கியிருக்க வேண்டிய அவசியம் இல்லை.

காஞ்சிபுரம், மஹாபலிபுரம் இவற்றை மையமாக வைத்துக் கொண்டு செயல்படுவது சந்தேகத்தை எழுப்புகிறது: இப்படி இந்த அனைத்துலகக் குற்றவாளிகள் எல்லோருமே காஞ்சிபுரம், மஹாபலிபுரம் போன்ற இந்துக்களின் புண்ணிய அல்லது முக்கியமான புராதான நகரங்களை மையமாக வைத்துக் கொண்டு செயல்படுவது சந்தேகத்தை எழுப்புகிறது. சுற்றுலா விசாவில்[10] வருகின்றவர்கள் ஒருவாரம் அல்லது ஒரு மாதம் ஆனதும் சென்றுவிட வேண்டும். ஆனால், அவ்வாறு இல்லாமல், தொடர்ந்து தங்குவது, பெயரை மாற்றிக் கொண்டு மறைந்து வாழ்வது, முதலியவை பல சந்தேகங்களை எழுப்புகின்றன. இந்திய சமூகத்தை சீரழிக்கத்தான் திட்டமிட்டு இங்கு வருகிறார்களா? இவர்களுக்கு இங்கு உதவும் உள்ளூர்வாசிகள், பல இடங்களுக்குச் சென்றுவரும்போது உதவுபவர்கள் முதலியோர் யார்?

வேதபிரகாஷ்

© 20-11-2010


[1]வேதபிரகாஷ், எரிக் மார்டினின் காமலீலைகள்: ஒன்பது இளம்பெண்களை கற்பழித்தான்!,  https://socialterrorism.wordpress.com/2010/11/18/378-eric-martin-raped-nine-girls-convicted/

[2] வேதபிரகாஷ், சிங்கார செக்ஸ் சென்னையில் இன்னுமொரு காமக்கொடூர செக்ஸ் வெறியன் கைது: மாதவரத்தில் மறைந்து வாழ்ந்த எரிக் மார்டின்!, https://socialterrorism.wordpress.com/2010/11/17/chennai-becomes-haven-for-fugitives-eric-martin/

[3] இதே சிறையில்தான் வில் ஹியூமும் இருக்கிறான். சிறையில் கஞ்சா, போன் எல்லாம் கிடைக்கும் போது, இவர்கள் இருவரும் பேசிக்கொள்ள என்ன வாய்ப்பா கிடைக்காது?

[4] U Tejonmayam, ‘French Govternment is conspiring against me’, Express News Service, First Published : 19 Nov 2010 02:56:00 AM IST; Last Updated : 19 Nov 2010 10:45:40 AM IST; http://expressbuzz.com/states/tamilnadu/french-govternment-is-conspiring-against-me/224331.html

[5] இதைப் பற்றி விவரமாக, கீழ்காணும் கட்டுரைகளில் காணலாம்:

வேதபிரகாஷ், கம்யூனிஸம், கம்யூன், காதல், காமம், கலவி, கற்பு, பாலியல், இத்யாதி – I,

http://indiancommunism.wordpress.com/2010/02/27/communism-commune-sex-rape-intercourse-etc-1/

வேதபிரகாஷ், கம்யூனிஸம், கம்யூன், காதல், காமம், கலவி, கற்பு, பாலியல், இத்யாதி – II,

http://indiancommunism.wordpress.com/2010/02/28/communism-commune-sex-rape-intercourse-etc-2/

வேதபிரகாஷ், கம்யூனிஸம், கம்யூன், காதல், காமம், கலவி, கற்பு, பாலியல், இத்யாதி – III,

http://indiancommunism.wordpress.com/2010/03/07/communism-commune-sex-rape-intercourse-3/

[6] Aumessas is a commune in the Gard department in southern France.

[7] The commune is the lowest level of administrative division in the French Republic. French communes are roughly equivalent to incorporated municipalities or villages in the United States or gemeinden in Germany. French communes have no exact equivalent in the United Kingdom, but are closest to parishes, towns or cities.

[8] Gard (Occitan: Gard) is a département located in southern France in the Languedoc-Roussillon region. It is named after the river Gardon (or Gard).

[9] The departments of France (French: département, pronounced: [depaʁtəmɑ̃]) and many of its former colonies are administrative divisions. The 100 French departments are grouped into 22 metropolitan and four overseas regions, all of which have identical legal status as integral parts of France. The departments are subdivided into 342 arrondissements, which in turn, are divided into cantons. Each canton consists of a small number of communes. In the overseas territories, some of the communes play a role at departmental level.

எரிக் மார்டினின் காமலீலைகள்: ஒன்பது இளம்பெண்களை கற்பழித்தான்!

நவம்பர் 18, 2010

எரிக் மார்டினின் காமலீலைகள்: ஒன்பது இளம்பெண்களை கற்பழித்தான்!

பிரெஞ்சு நாட்டு சல்லாபம், கொக்கோகம்: பிரெஞ்சு நாட்டுக் காரர்கள் செக்ஸ் விஷயத்தில் கொஞ்சம் வீக்குதான்! பிரபல எழுத்தாளரான அலெக்ஸண்டர் டூமாஸ் என்பவர் எப்பொழுதும் ஐந்தாறு பெண்களுடன் சல்லாபித்தவண்ணம் தான் இருப்பார் என்று தெரிகிறது. சென்னையில் ஈகா தியேட்டரில் “ஸ்பானிஸ் ஃபளை” என்ற படம் 1978ல் திரையிடப்பட்டது. அந்த ஸ்பானிஸ் பூச்சிற்கு ஒரு சக்தி இருக்கிறது. அதனை சாப்பிட்டால் அசாத்யமான செக்ஸ் வந்துவிடுமாம். அவ்வளவுதான் கண்ணில் படும் பெண்களுடன் உடனடியாக உடலுறவு கொள்ள ஆரம்பித்து விடுவார்களாம். ஒருவேளை, எரிக் மார்ட்டினும் அத்தகைய சக்தியைப் பெற்றானா என்று தெரியவில்லை. எரிக் மார்டின் கல்யாணம் செய்து கொண்டான், ஆனால், வாழ்க்கை கசந்தது. விவாக ரத்தானது.

இல்வாழ்க்கை கசந்ததால், அனாதை இல்லம், கொக்கோகம் பிரான்ஸ் நாட்டில் புரூசல்ஸ் பகுதியைச் சேர்ந்த எரிக் மார்டின் (54) புரூசல்ஸ் பகுதியில் ஆதரவற்ற சிறுவர்-சிறுமிகள் காப்பகம் நடத்தி வந்தான். அங்கு சுமார் 50க்கும் மேற்பட்ட சிறுவர்-சிறுமிகள் தங்கி இருந்தனர். அதாவது இந்த ஃபெடோஃபைல்கள் எல்லோருமே ஒரே மாதிரித்தான் இருக்கிறார்கள். ஒன்று தேவையானதைத் தேடி செல்வது அல்லது இப்படி காப்பகம் வைத்து நடத்துவது, வளர்ப்பது, அனுபவிப்பது.  அங்கு இருந்த 15 வயது நிரம்பிய இளம் சிறுமிகளைப் பார்த்தப்போது காம இச்சைக் கொண்டான்.  தாங்கமுடியாமல், இளம் மொட்டுகளை தொட்டே விட்டான். ஒன்று, இரண்டு என்று ஒன்பது சிறுமிகளை ஆசைதீரக் கற்பழித்தான். இதனால் புகார் கொடுக்கப்பட்டு, வழக்கு தொடர்ந்து, நீதிமன்|ற தீர்ப்பில் 15 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. ஆனால், முன்னமே குறிப்பிட்டப்படி[1], சிறையிலிருந்து தப்பி, சென்னைக்கு வந்து விட்டான்.

சிங்காரச் சென்னையில் மறைந்து வாழ்தல்: சென்னை, தமிழகம் இப்படி செக்ஸ் கூடாரமாகி வருவது வேடிக்கையாக இருக்கிறது. தமிழ் மக்கள் என்றுமே விருந்தோம்புவதில் வல்லவர்கள். வெள்ளைத் தோலைக் கண்டால் கேட்கவே வேண்டாம், சரண்டர் தான். அதிலும் அதிகமாக காசு வரும் என்றல், கேட்கவே வேண்டாம். இவ்வாறுதான், எரிக் மார்டின் எண்.14, நடேசன் தெரு மாதவரத்தில் வீடு வாடகைக்கு எடுத்தான். அந்த பிரெஞ்சுக்காரருடன் ஒத்துப்போக அண்டைவீட்டுக்காரர்களுக்கு நிறையவே பிரச்சினைகள் இருந்தன[2]. சாமியார் மாதிரி தனித்த வாழ்க்கை வாழ்ந்துவந்ததாக கூறுகின்றனர். “அந்த இடத்தையே எங்களுக்குப் பிடிக்கவில்லை. அந்த ஆளுக்கு ஆங்கிலம் கூட அவ்வளவாகத் தெரியவில்லை, பிரெஞ்சு மொழியிலேயே பேசிவந்தான்”, என்று ஒரு பெண்மணி கூறினார். இன்னொரு காரணம், “அவன் என்றுமே நேருக்கு நேராக கண்களைப் பார்த்து எங்களுடன் பேசியது கிடையாது. கிருஸ்துமஸ் அன்று தான், “ஹலோ” என்று கூறுவான்”, மற்றபடி யாருடன் பேசமாட்டான்.. எண்.14, நடேசன் தெருவில் இருந்த அவனுக்கு செடி-கொடிகள் மீட்து மட்டும் அலாதியான காதலாம்.

வீட்டைச் சுற்றி செடி-கொடிகளை வளர்த்து மர்ம வீட்டில் வாழ்ந்த காமுகன்: வாடகைக்கு எடுத்ததும் வீட்டைச் சுற்றி பல செடி-கொடிகளை வளர்க்க ஆரம்பித்தான். அவன் தங்கியிருந்த வீடு முழுவதும் செடி-கொடிகள் மண்டி கிடந்தன. அண்டை வீட்டார் கண்டபடி வளர்ந்திருந்த அந்த செடி-கொடிகளைப் பற்றி பலதடவை புகார் செய்துள்ளனர்.  ஆனால், அவற்றை வெட்ட அவன் அனுமதிப்பது இல்லை. வேலைக்காரப் பையனுக்கு சொன்னாலும், அவனை செய்ய விடுவதில்லை. “அவங்க கைகளை வெட்டிக் கொள்ளுங்கள் என்றால் அவர்கள் என்ன நினைப்பார்கள்”, என்று அந்த பையனிடம் சொல்வானாம். பானைகளில்பலவித செடிகள், தூண்கள், சுவர்கள் கூட கொடிகளால் பின்னப்பட்ட நிலையில் இருந்தன. வரண்டா மட்டுமல்லாது, மேலும், மாடியிலும் கூட கொடிகளை வளர்த்து படரவிட்டிருந்தான்.

மாடிவீட்டு கொட்டாயில் அயல்நாட்டவர்களுக்கு விருந்து; மாடியில் ஒரு ஓலைக்கொட்டாய் போட்டிருந்தான். அதில்தான் தன்னுடைய அயல்நாட்டு விருந்தாளிகளை உட்காரவைத்து காபி கொடுப்பான். அயல்நாட்டு விருந்தாளிகள் அவன் வீட்டிற்கு, குறிப்பாக கிருஸ்துமஸ் சமயத்தில் அதிகமாகவே வருவார்கள். அதென்ன கிருஸ்துமஸ் கூட்டம்? ஒருவேளை டான் பரவுன் எழுதியுள்ளது போல யாதாவது நடக்குமோ என்னமோ? மற்றபடி, அந்த வீட்டில் யாருமே இல்லாது போல இருக்கும். விளக்குகள் இப்பொழுதும் எரிந்து கொண்டே இருக்கும். அவை எப்பொழுதாவது தான் அணைக்கப்படும் அல்லது அணைக்கப்பட்டதே கிடையாது எனலாம்.

வெளியே சென்று வேலை செய்தல்; மற்றவர்களைப்போல இல்லாமல், இந்த காமுகன், காலை 11 மணிக்கு வெளியில் செல்வான், பிறகு மாலை தான் வருவான். அடிக்கடி தான் வைத்திருக்கும் பிரிமியர் காரில் எங்கோ சென்று வருவான். அயல்நாட்டு பயணிகளுக்கு, குறிப்பாக பிரெஞ்சுநாட்டவருக்கு கெயிடாகவும், பிரெஞ்சு மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு செய்தும் சம்பாதித்து வந்தான். அவன் ஒரு வேலைக்கரப் பையனையும், பெண்ணையும் வைத்திருந்தான்[3]. அதைத்தவிர அடையாளம் இல்லாத / பெயர் சொல்லப்படாத ஒரு அண்டைவீட்டுக்காரரும் உதவி வந்ததாகத் தெரிகிறது. வீட்டின் சாவிகளை தானே வைத்துக் கொள்வான். கேட்டின் சாவிகளை மட்டும் பணிப்பெண், வேலைக்காரப் பையனிடம் தந்துவந்தான். குழந்தைகளுடன் பேசியதையோ, நட்பாக இருப்பதையோ அண்டையார் என்றும் பார்த்ததில்லை[4].

வேதபிரகாஷ்

© 18-11-2010


[1] வேதபிரகாஷ், சிங்கார செக்ஸ் சென்னையில் இன்னுமொரு காமக்கொடூர செக்ஸ் வெறியன் கைது: மாதவரத்தில் மறைந்து வாழ்ந்த எரிக் மார்டின்!, https://socialterrorism.wordpress.com/2010/11/17/chennai-becomes-haven-for-fugitives-eric-martin/

[3] Cerise Negulici, Child sex abuser of France apprehended in Chennai,  Wed, 11/17/2010 – 05:28

http://frenchtribune.com/teneur/101981-child-sex-abuser-france-apprehended-chennai

சிங்கார செக்ஸ் சென்னையில் இன்னுமொரு காமக்கொடூர செக்ஸ் வெறியன் கைது: மாதவரத்தில் மறைந்து வாழ்ந்த எரிக் மார்டின்!

நவம்பர் 17, 2010

சிங்கார செக்ஸ் சென்னையில் இன்னுமொரு காமக்கொடூர செக்ஸ் வெறியன் கைது: மாதவரத்தில் மறைந்து வாழ்ந்த எரிக் மார்டின்!

சிங்கார சென்னை செக்ஸ் நகரமாகிறது[1]: நவம்பர் மாதம் வந்தாலே சென்னையில் கலக்கலன விஷயங்கள் தாம். சென்ற நவம்பரில் 2009 இன்டர்போல் சொன்ன சூளைமேட்டில் இருந்த வில் ஜியூமை பிறகு பாய்ந்து பிடித்தனர். வில் ஹியூம்ஸ்[2], ரப்பி ஆலன் ஜே, பாட்ரிக் மாத்யூஸ்[3] பிறகு எரிக் மார்டின் (53) என்ற இன்னுமொரு ஃபிடிடோஃபைல் சென்னையில் 16-11-2010 அன்று மாதவரத்தில் கைது செய்யப்பட்டுள்ளான். அவனைப் பார்க்க அவனது நண்பர்களுள் ஒருவன் வந்தபோது, பின் தொடர்ந்த போலீஸ் அவனைப் பார்த்து, அவன் தான் இன்டர்போல் எச்சரித்த குற்றவாளி என்று அடையாளம் அறிந்து கொண்டனர். பிறகு, உயர் அதிகாரிகளின் ஆணைக்கு இணங்க அவன் கைது செய்யப்பட்டான். 1996 முதல் 1999 வரை சிறுவர் பாலியல் / வன்புணர்ச்சி செக்ஸ் முதலிய கொக்கோகக் களியாட்டக் குற்றங்களில் ஈடுபட்டவன், பிரான்ஸில் கைது செய்யப்பட்டு, 15 வருடம் சிறைக்காவலில் வைக்கப்பட்டான்.

நேபாளம்-மஹாபலிபுரம்-காஞ்சிபுரம்-மர்மங்கள்: 2006ல் இன்டர்போல் சிவப்புநிற எச்சரிக்கை அறிக்கை விடுத்திருந்தது. 2007ல் ஐரோப்பிய கைது வாரண்டும் பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால், எப்படியோ பிரெஞ்சு சிறையிலிருந்து தப்பித்துக் கொண்டான். பிறகு தன்னைப்போன்ற குற்றவாளிகளுக்கு சிறந்த இடம் நேபாளம் என்று அறிந்து கொண்டு அங்கு சென்றான். தப்பித்துக் கொண்டு நேபாளுக்கு வந்து, அங்கிருந்து இந்தியாவில் நுழைய தீர்மானித்தான். சென்னையில் குறிப்பாக மகாபலிபுரத்தில் தன்னைப் போன்ற ஆட்களுக்கு தாராளமாக இடம் கொடுக்கிறார்கள் என்று அறிந்து அங்கு வந்தான்[4].

காஞ்சிபுரம்-சென்னை-மாதவரம்-மர்மங்கள்: சென்னைக்கு வந்தான். 2001லிருந்து இந்தியாவில் ஜாலியாக மறைந்து வாழ்ந்து கொண்டிருந்தான். ஜேக் பெர்டான்டிஸ் (Jack Fernandez) என்ற பெயரில் மஹாபலிபுரம், காஞ்சிபுரம் முதலிய இடங்களில் வசித்து, முடிவாக மாதவரத்தில் வீடு வாடகைக்கு எடுத்து மறைந்து வாழ்ந்து கொண்டிருந்தான். காஞ்சிபுரத்தில் எரிக் மார்டினின் வேலை என்ன என்று தெரியவில்லை. இவன் இருந்த இடமே தெரியாதிருக்கும் போது, எப்படித்தான் தேவநாதன் மாட்டிக்கொண்டானோ தெரியவில்லை[5].

நம்மூர் போலீஸார் சொல்வது: அவனை ஒருவழியாக பிடித்த சென்னை போலீஸார் (G Sampath Kumar, superintendent of police, Crime Branch-CID), “இந்தியாவில் இத்தனை காலம் தங்குவதற்கு போதுமான ஆவணங்கள் இல்லை என்பதைத் தவிர, வேறெந்த அவனைப்பற்றிய தகவலும் இல்லை. வேறெந்த குற்றமும் இந்தியாவில் செய்ததாக தெரியவில்லை”, என்கின்றனர். சிவில் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நாடு  கடத்தப் படுவான் என்றும் சொல்கின்றனர்.

2001லிருந்து 2010 வரை சென்னை, சென்னை சுற்றுப்புறங்களில் வாழ்ந்த எரிக் மார்டின்: ரப்பி ஆலன் ஜே, மே 22, 2007 அன்று காஞ்சிபுரம் போலீஸாரால் கைது செய்யப்படுகிறான். அதாவது 2006 முதல் மே 2007 வரை அவன் மஹாபலிபுரம் ரிஸார்டில் தங்கியுள்ளான்[6]. வில் ஹியூமும் அதே காலகட்டத்தில் இருந்திருக்கிறான். காஞ்சிபுர போலீஸார் தான் இந்த எல்லோரையும் கைது செய்துள்ளனர் அல்லது கேஸ்களில் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

வில் ஹியூம் மற்றும் இந்த ரப்பி ஆலன் ஜேவிற்கு தொடர்பு இருந்ததா? இருவருமே குழந்தை செக்ஸ்-விவகாரத்தில் வல்லுனர்களாக இருந்துள்ளார்கள். முன்னவன் படிக்காமலேயே, தனது அனுபவத்தின் மீதாக வல்லுனனாக இருந்திருக்கிறான், பின்னவனோ படித்து பி.எச்.டி பெற்று மருத்துவம்-மனோதத்துவம் படித்தே எப்படி குழந்தைகளை பக்குவமாகத் தமது காம இச்சைக்குட்படுத்துவது என்று அறிந்து, செயல்படுத்தி, அனுபவித்து சுவைத்துவந்துள்ளான். அந்த விஷயத்தில் இருவருமே ஒத்துப் போகின்றனர். பிறகு மஹாபலிபுரம்[7], புருவங்களை உயர்த்துகின்றன. ஏன் மற்ற இடத்திற்கு செல்லாமல், மகாபலிபுரத்தைத் தேர்ந்தெடுக்கிறான்? கோவா[8], புவனேஸ்வர்[9], பூரி[10] இப்படி அருமையான இடங்களை விடுத்து ஏன் இங்கு வருகிறான்? ஒரு அயல்நாட்டவன், குறிப்பாக சட்டப்பிடியிலிருந்துத் தப்பியோடி திருட்டுத்தனமாக பல நாடுகளில் ஓடித்திரிந்து மறைய வருகிறன் என்றல் அவனுக்கு அங்கு ஒரு “தொடர்பு” இல்லாமல் வரமாட்டான், வரமுடியாது. விசா, பாஸ்போர்ட் முதலியவை இருக்கவேண்டும். ஆகவே, நிச்சயமாக அவனுக்கு உதவிய “தொடர்பாளிகள்”, கூட்டாளிகள், சம்பந்தப்பட்டோர் இருந்திருக்கிறார்கள். வில் ஹியூமோ தனது குடும்பம் சகிதமாக இருந்து தனது செக்ஸ்-தொழிலை செய்து வந்துள்ளன். ஆகவே, ஒருவேளை அவர்கள் சந்தித்து இருக்கலாம் அல்லது உதவியிருக்கலாம். மே 2002ல் கைது செய்யப்பட்ட வில் ஹியூம் பிறகு பிணையில் வந்து மறைந்து போகிறான். நவம்பர் 2009ல்தான் சூளைமேட்டில் கைது செய்யப்படுகிறான். ஆகவே அத்தகைய ரகசிய வாழக்கை வாழ்ந்த காலத்தில் யாருடன் இருந்தான், யேரெல்லாம் அவனை சந்தித்துள்ளனர் அல்லது இவன் சந்தித்தான் என்ற விவரங்கள் ரகசியமாகவே, மர்மமாகவே இருந்துள்ளன. ஆகவே இவனுக்கும் பல உதவியுள்ளார்கள் என்பதெல்லாம் முன்னமே எடுத்துக் காட்டப்பட்டுள்ளது[11].

மகாபலிபுரம் செக்ஸ் கூடாரமாகி வருகின்றது: சென்னையில் நடக்கிறது, ஆனால் அனைவரும் மௌனம் காக்கின்றனர். இதன் ரகசியம் என்னவென்று புரியவில்லை. இப்பொழுது “வில்ஹெல்ம்ஸ் வேய்ஜ்டெவல்டு” என்ற கிருத்துவர் (அவரே சொல்லிக் கொண்டது) 30 வருடமாக தமிழ்நாட்டில் இருந்து வந்திருக்கிறேன். பல நூறு குழந்தைகளுடன் அவ்வாறு செக்ஸ் விளையாடல்கள் கொண்டுள்ளான். மே 2002ல் அத்தகைய பாலியல் குற்றங்களுக்கு கைது செய்யப் பட்டான். ஆனால் பெயிலில் வெளிவந்தவன் மறைந்து விட்டானாம்! இருப்பினும் அண்ணாமலை படத்தில் ரஜினிகாந்த்துடன் நடித்து இருக்கிறானாம்! ரப்பி ஆலன் ஜே மற்றும் எரிக் ம்ஆர்டினும் அங்கு ஜாலியாகத்தான் இருந்திருக்கிறார்கள்! மாஅட்டிக் கொள்ளும் போது மட்டும் சென்னைக்கு வருகிறார்கள் போலும்!

2009: பாட்ரிக் மாத்யூஸ் ஆகஸ்டில் கைது[12]: கடந்த ஜூன் மாதம் 2009 பாட்ரிக் மாத்யூஸ் என்ற மிஷினரி செயின்ட் ஜியார்ஜ் ஆங்கிலோ இந்திய உயர்நிலைப் பள்ளியில் படித்த குறைந்தபட்சம் ஒன்பது குழந்தைகளுடன் (14 வயது வரையுள்ள) பாலியில் ரீதியிலாக தொடர்பு கொண்டிருந்தான். 2003 லிருந்து 2006 வரை ஊழியராகவேலைசெய்து வந்தார். பேடிமான் டிரஸ்ட்[13] என்ற கிருத்துவ அமைப்பு ஆங்கிலோ-இந்திய சிறுவர்-சிறுமியர் அன்னாதைகளுக்காக உருவாக்கப் பட்டது.

மகாபலிபுரத்தில் வீடு: இந்த ஊழியருக்கு மகாபலிபுரத்தில் ஒரு வீடு இருக்கிறது[14]. சென்னை போலிஸாரது பள்ளியில் மற்றும் மகாபலிபுரத்திலுள்ள மக்களிடம் விசாரணையின்போது விழயங்கள் தெரியவந்தன. புகார்கள் சென்ரதால், இங்கிலாந்திலிருந்து கௌஸர்ஷயர் கான்ஸ்டெபுலரி (Gloucestershire Constabulary) என்ற போலீஸார் பிரத்யேகமாக விசாரிக்க சென்னைக்கு வந்தது. இவனை கைது செய்து கொண்டு சென்று விட்டது. இந்த “மகாபலிபுரம்” மர்மத்தையும் ஆராயவேண்டியுள்ளது. ஊடகங்கள் இவனைப் பற்றி ஒன்றும் வெளியிடவில்லை. தமிழ் ஊடகங்கள் மௌனமாகவே இருந்தன.

பத்தாண்டுகளாக மகாபலிபுரம், காஞ்சிபுரம், மாதவரம் என்று ஜாலியாக இருந்த எரிக் மர்டினை எப்படி போலீஸார் கண்டு கொள்ளவில்லை?

  • 2001லிருந்து 2010 வரை என்ன செய்து கொண்டிருந்தான்?
  • சுமார் 10 ஆண்டுகள் சென்னயில் / தமிழகத்தில் அவன் எவ்வாறு தனது காலத்தைக் கழித்தான்?
  • எப்படி அவன் செலவுகளுக்கு பணம் கிடைத்து வந்தது?
  • வெளிநாட்டவன் என்பதால் எப்படியும் தான் போலீஸாரிடம் சொல்லியிருக்க வேண்டும். எப்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள் முதலியோர் உதவி செய்தனர்?
  • பதிலுக்கு அவன் அவர்களுக்கு என்ன கொடுத்தான்?
  • அவ்வாறு கொடுப்பதற்கு பணம் எங்கிருந்து வந்தது?
  • அங்கேயே எப்படி 10 ஆண்டுகளாக யார் கண்ணிலும் படாமல் தனது தொழிலை செய்து வஎதான் எனத் தெரியவில்லை! காலை-மாலை அல்லது ஏதாவது ஒரு நேரம் வெளியில் வராமல் இருந்திருக்க முடியாது.
  • ஆகவே 2001லிருந்து 2010வரை, நிச்சயமாக போலிஸுக்கு அவன் இருப்பது தெரிந்தேயிக்கிறது. இருப்பினும் அவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

வேதபிரகாஷ்

© 17-11-2010


 

[1] வேதபிரகாஷ், சென்னை “செக்ஸ் நகரமாக” மாறுகிறதா?, 30-11-2009, https://socialterrorism.wordpress.com/2009/11/30/chennai-becomes-sex-city-haven-for-pedophiles-and-fugitives/

[2] வில் ஹியூம், புவனேஸ்வரி, தேவநாதன்: தமிழ் ஊடகங்கள் – II , https://socialterrorism.wordpress.com/2009/12/06/will-heum-buwaneswari-devanathan-and-media-2/

[3] வேதபிரகாஷ், வில் ஹியூம், ரப்பி ஆலன் ஜே, மஹாபலிபுரம் காட்டும் உண்மைகள் என்ன?, https://socialterrorism.wordpress.com/2010/02/20/will-heum-horowitz-alan-chennai-haven-for-pedophiles/

[4] வில் ஹியூம், புவனேஸ்வரி, தேவநாதன்: தமிழ் ஊடகங்கள் – III , https://socialterrorism.wordpress.com/2009/12/12/will-heum-buwaneswari-devanathan-media-3/

[5] வில் ஹியூம், புவனேஸ்வரி, தேவநாதன்: தமிழ் ஊடகங்கள் – IV, https://socialterrorism.wordpress.com/2009/12/20/will-heum-buwaneswari-devanathan-media-4/

[6]வேதபிரகாஷ், வில் ஹியூம், ரப்பி ஆலன் ஜே, மஹாபலிபுரம் காட்டும் உண்மைகள் என்ன?, https://socialterrorism.wordpress.com/2010/02/20/will-heum-horowitz-alan-chennai-haven-for-pedophiles/

[7] வேதபிரகாஷ், ,சென்னைசெக்ஸ் நகரமாகமாறுகிறதா?, மேலும் விவரங்களுக்கு இங்கே பார்க்கவும்:

https://socialterrorism.wordpress.com/2009/11/30/சென்னை-செக்ஸ்-நகரமாக-மாற/

வேதபிரகாஷ், குழந்தை விபச்சாரம்: பாலியல் வன்முறைக் கொடுமைகள், மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்: http://womanissues.wordpress.com/2009/11/13/குழந்தை-விபச்சாரம்-பாலி/

வேதபிரகாஷ், வில் ஹியூம்குழந்தைக் கற்ப்பழிப்பாளி! ,மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்: http://womanissues.wordpress.com/2009/11/17/வில்-ஹியூம்-குழந்தைக்-கற/

[8] கோவாவில் எல்லாவிதமான விபச்சாரமும் சாதாரணமானது, சகஜமானது. பணம் வருகிறது, உள்ள பல்நாட்டு முதலாளிகளை சந்தோஷப்படுத்துகிறது என்பதனால் அரசாங்கள் கண்களைமூடிக்கொண்டு இருக்கிறது.

[9] புவனேஸ்வரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்மான ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் முதலியன பிரமிப்பாக இருக்கிறது. வெளிநாட்டவர்கள் அங்கு அதிகமாக வந்து செல்வதும் மர்மமாக உள்ளது. கடந்த வருடங்களில் பல ஃபிடோஃபைல்கள் / குழந்தை பாலியல் வன்முறையாளர்கள் இங்கு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

[10] பூரியும் இதே நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. வந்துள்ள வெளிநாட்டுக் குழுக்களிடம் இதைப் பற்ரியேல்லாம் கேட்கிறர்களா இல்லையா என்றதெல்லாம் தெரிவவில்லை.

[11] வேதபிரகாஷ், வில் ஹியூம், புவனேஸ்வரி, தேவநாதன் I – IV பார்க்கவும்.