Archive for the ‘பாலியல் வன்புணர்ச்சி’ Category

சித்த மருத்துவர் பாலியல் சிகிச்சை கொடுத்தது- ஓரின சேர்க்கையில் ஈடுபட்டது, சுன்னத் செய்தது, நோயாளிகளைக் கொன்றது, மனித மாமிசம் சாப்பிட்டது, உடல் பாகங்களைப் புதைத்தது! (3)

நவம்பர் 30, 2023

சித்த மருத்துவர் பாலியல் சிகிச்சை கொடுத்ததுஓரின சேர்க்கையில் ஈடுபட்டது, சுன்னத் செய்தது, நோயாளிகளைக் கொன்றது, மனித மாமிசம் சாப்பிட்டது, உடல் பாகங்களைப் புதைத்தது!  (3)

நவ.13-ம் தேதி முதல் காணவில்லை என நவ.15-ம் தேதி புகார் அளித்த பாட்டி: கும்பகோணம் அருகே உள்ள சோழபுரத்தை அடுத்த மணல்மேடு பகுதியைச் சேர்ந்த சித்த வைத்தியர் கேசவமூர்த்தி 2 இளைஞர்களை மருள்-ஊமத்தை மருந்து கொடுத்து கொன்றுள்ளதாக தஞ்சாவூர் மாவட்ட காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை சார்பில் 26-11-2023 அன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் உட்கோட்டம் சோழபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மணல்மேடு பகுதியைச் சேர்ந்த பத்மினி (65) என்பவர் தனது பேரன் அசோக்ராஜை (27) நவ.13-ம் தேதி முதல் காணவில்லை என நவ.15-ம் தேதி புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அசோக்ராஜின் செல்போன் அழைப்பு விவரங்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இந்நிலையில், அசோக்ராஜ் எழுதியதாக, பத்மினிக்கு நவ.16-ம் தேதி வந்த கடிதம் குறித்தும் போலீஸார் விசாரித்தனர்.

இந்திய தண்டனைச் சட்டம் 302, 307, 201 ஆகியப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு: இதையடுத்து, நவ.19-ம் தேதி சோழபுரத்தைச் சேர்ந்த சித்த வைத்தியரான தங்கையன் மகன் கேசவமூர்த்தி (47) என்பவரை கைது செய்து விசாரித்ததில், காணாமல்போன அசோக்ராஜை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். தொடர்ந்து, கேசவமூர்த்தி மீது கொலை செய்தது உட்பட 3 பிரிவுகளின் கீழ் – இந்திய தண்டனைச் சட்டம் 302, 307, 201 ஆகியப் பிரிவுகளின் கீழ் – வழக்குப் பதிவு செய்த போலீஸார், அவரிடம் மேலும் விசாரணை நடத்தினர். குறிப்பாக, இளைஞர்களுக்கு போதையை தூண்டும் மருள்-ஊமத்தை செடியால் தயாரித்த மூலிகைப் பொடியை கொடுத்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக கேசவமூர்த்தியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வந்த அசோக்ராஜ், தனது உறவுக்கார பெண்ணை காதலித்து வருவதாகவும், அவரையே திருமணம் செய்யப்போவதாகவும் கூறியதால், ஆத்திரமடைந்த கேசவமூர்த்தி, அசோக்ராஜை கொலை செய்ய திட்டமிட்டிருந்தார்.

பிரச்சினைக்குரிய நோயாளி மருத்துவனாக மாறியது: இந்த விசாரணையில், கேசவமூர்த்தி தன்பாலின உறவு பழக்கம் உடையவர் என்பதும். இவருக்கு ஏற்கெனவே இரண்டு முறை திருமணமாகி குழந்தையின்மையால் இரண்டு மனைவிகளையும் பிரிந்து வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. பிரச்சினை குழந்தையின்மையா, ஆண்மையின்மையா, ஓரின சேர்க்கையா என்று பலவித கேள்விகள் எழுகின்றன. மேலும், சென்னையில் கட்டிடப்பணி செய்து வந்த இவர், நாட்டுவைத்தியர் ஒருவரிடம் உதவியாளராக பணியாற்றி, அவரிடம், சில விவரங்களை தெரிந்துகொண்டு, சோழபுரத்தில் நாட்டு வைத்தியம் செய்து வந்துள்ளார். அதாவது, பிரச்சினைக்குரியவரே மருத்துவராகி, சிகிச்சைகளில் ஈடுபட்டது தெரிகிறது. பிறகு, இவனை “சித்த” வைத்தியன் என்று ஏன் குறிப்பிடப் படுகிறான் என்று தெரியவில்லை. சித்த வைத்தியத்தில் “சுன்னத்” செய்யக் கற்றுக் கொடுக்கப் படுகிறதா என்று தெரியவில்லை. பொதுவாக, பெரிய வியாதிகாரன் பாதி வைத்தியனாகவும் இருப்பான். ஏனெனில், நோய் உபாதை, மருந்து, சிகிச்சை என்று அலைந்து அவஸ்தை படும் பொழுது, எல்லா விவரங்களையும் தெரிந்து கொள்கிறான். மேலும் இக்காலத்தில், ஒவ்வொன்றுக்கும் சோதனை என்று பரிசோதிக்கின்றனர். அதன் மூலமும் – சோதனைக் கூட அறிக்கை – விவரங்கள் தெரிய வருகின்றன. ரத்தம், கபம், சிறுநீர், விந்து எண்ணிக்கை என சோதனை மூலம் அதிகமான விவரங்கள் தெரிய வருகின்றன.

காணாமல் போன உடல் பாகங்கள்: இந்நிலையில், அசோக்ராஜ் நவ.13-ம் தேதி இரவு வழக்கம்போல கேசவமூர்த்தி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, அவருக்கு போதை மூலிகை மருந்தை அளவுக்கு அதிகமாக கொடுத்ததால் அவர் மயங்கினார். அசோக் ராஜனை வெட்டிக் கொலைசெய்திருக்கிறான். பின்னர் இதயம், கிட்னி, நுரையீரல் போன்ற உறுப்புகளை வெட்டி எடுத்து, சமைத்துச் சாப்பிட்டிருக்கிறான். மிச்சமிருந்த உடலை, வீட்டுக்குப் பின்புறமுள்ள பாத்ரூமில் குழி தோண்டிப் புதைத்துவிட்டான். “அசோக் ராஜ் உடலின் பாகங்கள் இதயம், மூளை போன்றவை மாயமாகி இருக்கின்றன[1]. உள்ளுறுப்புகள் எடுத்த பின் சதைப் பகுதியை மட்டுமே உடற்கூறு செய்து மருத்துவர்கள் வழங்கினர்[2]. மாயமான உடல் பாகங்கள் எங்கே என்ற கேள்வி உறவினர்கள் மத்தியில் எழுகிறது. எனவே, போலீசார் விசாரணை தீவிரப்படுத்தி உடல் பாகங்களை நாட்டு வைத்தியர் என்ன செய்தார் என தெளிவுபடுத்த வேண்டும் ” என்றார்.   

முகமது அனாஸும் திருமணம் செய்ய முயற்சித்த போது, கொலை செய்யப் பட்டது: பின்னர், அசோக்ராஜை கொலை செய்து உடல்பாகங்களை தனித்தனியே வெட்டி வீட்டின் பின்புறம் கழிப்பறை மற்றும் வீட்டில் மூலிகைச் செடி வளர்க்கும் இடங்களில் புதைத்துள்ளதாக, அவர் கூறியதன்பேரில், நவ.19-ம் தேதி வருவாய்த் துறையினர் முன்னிலையில் தடய அறிவியல் நிபுணர்கள் உதவியுடன் அசோக்ராஜின் உடல் பாகங்கள் தோண்டி எடுக்கப்பட்டு, அந்த இடத்திலேயே உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டு, அசோக்ராஜின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதேபோன்று, 2021-ம் ஆண்டு சோழபுரத்தில் காணாமல் போன தமிமுன் அன்சாரியின் மகனான முகமது அனாஸும், கேசவமூர்த்தியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். முகமது அனாஸும் திருமணம் செய்ய முயற்சித்த போது, அவருக்கும் மருள் ஊமத்தை மூலிகைப் பொடியை கொடுத்து, கொலை செய்து, தனது வீட்டின் பின்புறம் புதைத்ததாகவும் சிறிது நாட்களுக்கு பிறகு புதைத்த இடத்தை தோண்டி எலும்புகளை சுடுகாடு பகுதியில் வீசி விட்டதாகவும்[3], அதன் தாடை எலும்பு, வெள்ளி செயின் இரண்டை மட்டும் எடுத்து வீட்டினுள் மறைத்து வைத்துள்ளதாகவும் கேசவமூர்த்தி தெரிவித்துள்ளார்[4].

பொக்லைன் வைத்து சுவரை இடித்தது….

குழி நோண்டி எலும்பு பாகங்களை எடுத்தது…

எலும்புத் துண்டங்களை அட்டைப் பெட்டிகளில் போலீஸார் எடுத்துச் செல்வது…..

செக்ஸ் குற்றங்கள் அதிகமாகுவதேன்?: இதையடுத்து, அவை கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து, கேசவமூர்த்தியின் வீடு மற்றும் வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளை தோண்டி ஆய்வு செய்ததில், வேறு தடயம் ஏதும் கிடைக்கப்பெறவில்லை. கைப்பற்றப்பட்ட பொருட்கள், தடய அறிவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும், கேசவமூர்த்தியிடம் சிகிச்சை பெற்றவர்கள் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவனது தோல்வியுற்ற தாம்பத்திய வாழ்க்கை, ஓரின சேர்க்கை பழக்கம், செகச்-மருந்து தயாரிப்பு, சுன்னத் செய்யும் கலை, முதலியவை இவன் செக்ஸ்-வியாதி, மருத்துவம், ஆலோசனை போன்றவற்றில் ஈடுபட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. இப்பொழுதெல்லாம், தேவையில்லாமல், மேனாட்டு தீயபழக்கங்களை, இந்திய சினிமாக்களில் அறிமுகப் படுத்தி, அத்தகைய ஒவ்வாத செயல்பாடுகளை சித்தரித்துக் காட்டி வருகின்றனர். இதனை பார்த்து-பார்த்து மனங்களை வக்கிரமாக்கிக் கொண்டு, இவனைப் போன்றவர்கள், இத்தகைய உறவுகளில் ஈடுபடலாம். அத்தகைய குற்றங்களும் பெருகலாம்.

கசாப்புக் கடை கத்திகள் முதல் அறுவை சிகிச்சை / சர்ஜிகல் பிளேட் வரை கண்டெடுத்தது: பிணத்தை அறுக்க, வெட்ட யாதாவது கருவிகளை உபயோகித்தானா என்று, போலீஸார் சோதனையிட்டனர்[5]. அப்பொழுது, மருத்துவர் ஆப்பரேஷனில் உபயோகப் படுத்தும் சில கருவிகள் கிடைத்துள்ளன[6]. பலவகை கத்திகள் சிறியது முதல் பெரியது வரை கிடைத்தன[7]. கேசவமூர்த்தியின் வீட்டிலிருந்து ஆடு வெட்டும் கசாப்புக் கடைக்குப் பயன்படுத்தக்கூடிய  3 கத்திகள்[8], ஒரு கட்டர், அறுவை சிகிச்சைக்காக மருத்துவர்கள் பயன்படுத்தும் அதிநவீன 20 பிளேடுகள், கத்திரிக்கோல், கையுறை, போதை மாத்திரைகள் உள்ளிட்டவை போலீஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன[9]. இவையெல்லாம் அவன் உபயோகப் படுத்திய கருவிகள் என்றாகிறது[10]. சித்த வைத்தியர் கொலைசெய்வதற்கு இந்தப் பொருள்களைப் பயன்படுத்தியிருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது[11]. இவையெல்லாம் சோதனைக் கூடத்திற்கு ஆராய அனுப்பப் பட்டுள்ளது[12]. கேசவ மூர்த்தியின் மீது சோழபுரம் காவல் துறையினர் இந்திய தண்டனைச் சட்டம் 302, 307, 201 ஆகியப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

© வேதபிரகாஷ்

30-11-2023


[1] பிபிசி தமிழ், கும்பகோணம் அருகே 2 இளைஞர்கள் கொலைஇதயம், மூளையை எடுத்து விற்பனையா? நாட்டு வைத்தியர் கைது, தங்கதுரை குமாரபாண்டியன், 27 நவம்பர் 2023, புதுப்பிக்கப்பட்டது 28 நவம்பர் 2023.

[2] https://www.bbc.com/tamil/articles/cp0p5lyd5lgo

[3] தினமலர், மற்றொரு இளைஞரையும் கொன்ற சித்த வைத்தியர்: விசாரணையில் அம்பலம், மாற்றம் செய்த நாள்: நவ 27,2023 01:20,

[4] https://m.dinamalar.com/detail-amp.php?id=3490007

[5] விகடன், தன்பாலின ஈர்ப்புகொலைநரமாமிசம்‘ – குலை நடுங்கவைக்கும் கும்பகோணம் `சித்த வைத்தியர்!’, கே.குணசீலன், Published: 27th Nov, 2023 at 1:47 AM; Updated: 2 days ago.

[6] https://www.vikatan.com/amp/story/crime/spine-chilling-kumbakonam-horror-of-a-siddha-doctor-who-murdered-youngsters-and-ate-their-meat

[7] லோகல்.தமிழ், சோழபுரத்தில் கத்தி, அரிவாள் உள்பட 20 பொருட்கள் பறிமுதல், By A. Madhankumar, Nov 28, 2023, 06:11 IST .

[8] https://tamil.getlokalapp.com/tamilnadu-news/thanjavur/kumbakonam/20-items-including-knife-and-sickle-seized-in-cholapuram-12079627

[9] தமிழ்.இந்து, விஷம் கொடுத்து 2 இளைஞர்களை கொன்ற சித்த வைத்தியர் , செய்திப்பிரிவு, Published : 27 Nov 2023 05:37 AM, Last Updated : 27 Nov 2023 05:37 AM

[10] https://www.hindutamil.in/news/crime/1159710-siddha-vaidyar-who-poisoned-2-youths.html

[11] லோகல்.தமிழ், சித்த மருத்துவர் வீட்டில் ஆயுதங்கள் பறிமுதல், By Baskar Rajendiran, Nov 26, 2023, 20:11 IST.  

[12] https://tamil.getlokalapp.com/tamilnadu-news/weapons-seized-from-siddha-doctor-s-house-12072045

சித்த மருத்துவர் பாலியல் சிகிச்சை கொடுத்தது- ஓரின சேர்க்கையில் ஈடுபட்டது, நோயாளியைக் கொன்றது, மனித மாமிசம் சாப்பிட்டது, உடல் பாகங்களைப் புதைத்தது! (2)

நவம்பர் 25, 2023

சித்த மருத்துவர் பாலியல் சிகிச்சை கொடுத்ததுஓரின சேர்க்கையில் ஈடுபட்டது, நோயாளியைக் கொன்றது, மனித மாமிசம் சாப்பிட்டது, உடல் பாகங்களைப் புதைத்தது!  (2)

கேசவமூர்த்தி அசோக்ராஜை கொலை செய்தது; இதுகுறித்து குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில் சோழபுரம் போலீஸார் விசாரித்து வந்தனர்[1]. அப்பொழுது அவர் “ஏதோ” சிகிச்சைக்கு கும்பகோணம் சென்றது தெரிந்தது. இது பற்றிய விவரங்களை ஊடகங்கள் தெளிவாக வெளியிடவில்லை. இவரை கும்பகோணம் சோழபுரம் கிழக்குத் தெருவை சேர்ந்த சித்த மருத்துவர் கேசவமூர்த்தி என்பவர் ஓரினசேர்கைக்கு அழைத்து சென்று அப்போது ஏற்பட்ட தகராறில் வெட்டி கொலை செய்தார்[2] என்று தெரிய வந்தது. அவரது உடலை கேசவ மூர்த்தி தனது வீட்டில் புதைத்தார். போலீசார் அசோக்ராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்[3]. மேலும் அங்கு தோண்டும் போது மற்றொரு மனித தாடை எலும்பு கூடு சிக்கியது[4]. இதுபற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.

13-11-2023 அன்று அசோக்ராஜ் சிகிச்சைப் பெற்றது, கொலையுண்டானது: இந்த சம்பவம் குறித்து போலீ ஸார் கூறியதாவது[5]: “கைது செய்யப்பட்டுள்ள கேசவமூர்த்தி, அந்தப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்டோருக்கு சுன்னத்செய்துள்ளார். அசோக் ராஜனுக்குஅண்மையில் செய்ததில், அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதுகுறித்து கேசவமூர்த்தியை தொடர்பு கொண்டு அசோக் ராஜன் கேட்டதற்கு, தீபாவளி பண்டிகைக்கு ஊருக்கு வரும்போது தன்னிடம் வந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு கேசவமூர்த்தி கூறியுள்ளார். அதன்படி, கடந்த 13-ம் தேதி கேசவமூர்த்தியை அசோக் ராஜன் சந்திக்கச் சென்றுள்ளார். அப்போது, தவறான சிகிச்சையால் அசோக் ராஜன் பாதிக்கப்பட்டதால், தான் போலி மருத்துவர் என்பது வெளியில் தெரிந்துவிடும் எனக் கருதி, அசோக் ராஜனை கொலை செய்ததாக கேசவமூர்த்தி கூறினார்,” இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்[6].

விசாரணையில் அசோக்ராஜை கொலை செய்ததை ஒப்புக் கொண்டது: இது குறித்து சோழவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கேசவமூர்த்தியை கைது செய்து கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைந்தனர். கேசவமூர்த்தி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, வருகிற டிசம்பர் 4ஆம் தேதி திங்கட்கிழமை வரை நீதிமன்ற காவலுக்குட்படுத்தி, சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். அநிநிலையில், விசாரணையின்போது, தான் அசோக்ராஜைக் கொன்றதை ஒப்புக்கொண்டுள்ளான், மேலும், உடல் பாகங்கள் கொண்டு மருந்து தயாரித்ததை கூறியுள்ளான். எலும்பு பாகங்கள் புதைத்தாகச் சொன்னான். இதனால், போலீஸார் அவன் வீட்டில் தோண்டி பார்த்தனர். தொடர்ந்து அங்கே 3 அடி அளவிற்கு மட்டும் பள்ளம் தோண்டி பார்த்தபோது 30க்கும் மேற்பட்ட துண்டுகளாக விரல் அளவிலான எலும்புகள் கிடைத்தது[7]. அந்த எலும்புகள் பார்ப்பதற்கு ஒரு நாயின் மண்டை ஓடு மற்றும் அதன் எலும்புகள் போல இருந்தது. இதில் சேகரிக்கப்பட்ட எலும்புகள் மனித எலும்புகளா அல்லது முகமதுஅனஸ் உடல் பாகங்களா என்று அறிய ஆய்வகத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர்[8]. பின்னர் தோண்டி எடுக்கப்பட்ட எலும்புகள், கேசவமூர்த்தி வீட்டில் இருந்த மருந்து மாத்திரைகள், மூலிகை பொடிகள், பெண்கள் பயன்படுத்தும் நகைகள், நைட்டி, ஆடைகள், பயன்படுத்தாத பொருட்களை 10க்கும் மேற்பட்ட பெட்டைகளில் போலீசார் எடுத்து சென்றனர்.

19-11-2023 அன்று அசோக்ராஜின் உடல் பாகங்கள் தோண்டி எடுத்தது: கடந்த 19ஆம் தேதி அசோக்ராஜின் உடல் பாகங்களைத் தோண்டி எடுக்கும் போது, அதில் மேலும் ஒரு மண்டை ஓடு கிடைத்துள்ளது[9]. அதனால் அது 2021ஆம் ஆண்டு மர்மமான முறையில் மாயமாகி இதுவரை கண்டுபிடிக்க முடியாத நிலையில் இருக்கும், கேசவமூர்த்தியின் மற்றொரு நண்பரான முகமது அனாஸ் உடையதாக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுவாக எழுந்துள்ளது[10]. இருப்பினும் தடய அறிவியல்துறையினர் ஆய்வின் முடிவிற்கு பிறகே அது உறுதி செய்யப்படும்[11]. தற்போது வரை கேசவமூர்த்தி சத்தமில்லாமல் இரு கொலைகளை அரங்கேற்றி அது வெளியே தெரியாமல் மறைக்க, ஆடு வெட்டும் பெரிய கத்தியை கொண்டு உடலில் இருந்து தலையை துண்டித்தும், உடல் பாகங்கள் விரைவாக மண்னோடு மண்ணாவதற்காக தோலை உரித்தும், சதை பாகங்களை தனியாக வெட்டி எடுத்தும் புதைத்திருப்பது தெரிய வந்துள்ளது[12].

கத்திகள், பிளேடுகள், அரிவாள்கள் போன்ற உபகரணங்கள் கிடைத்தது: இதனை இவர் தனித்து தான் செய்தாரா? அல்லது பின்னணியில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், கேசவமூர்த்தியில் வீட்டில் இருந்து மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் கத்திகள், பிளேடுகள், அரிவாள்கள் போன்ற உபகரணங்களையும், நாட்டு மருந்து பொடிகள், மருந்து வகைகள், வீட்டில் வளர்த்த மூலிகை செடிகளையும் பறிமுதல் செய்து அதன் தன்மை, பயன்கள் குறித்து ஆய்வு செய்ய போலீசார் மருத்துவ ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்[13]. இதனிடையே கேசவமூர்த்தி பயன்படுத்திய டைரி ஒன்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பெயர்கள் இருந்ததால் இதில் யாரையேனும் கேசவமூர்த்தி கொலை செய்திருக்க கூடுமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்[14].

சித்தாயுனானி போன்ற முறைகளைக் கடைப்பிடித்தானா?: மேலும், கொலை செய்யப்பட்ட அசோக் ராஜன் உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டப்பட்டதில் சில உடல் பாகத்தை கேசவமூர்த்தி சமைத்து சாப்பிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், “நரமாமிசம்” எப்படி சாப்பிட முடியும், ஒருவேளை அதை வைத்து, மருந்து தயாரிக்க முயன்றானா போன்ற கேள்விகளும் எழுகின்றன. சித்தா முறையில்லாமல் யுனானி போன்ற முறைகளில் பூச்சிகள், புழுக்கள், பறவைகள், விலங்குகள் ஏன் மனிதர்கள் முதலியவற்றின் சதை, ரத்தம் முதலியவை மருந்து தயாரிக்க உபயோகப் படுத்தப் படுவதாக உள்ளது. ஒருவேளை அம்முறைகளில் ஈடுபட்டான் என்ற கேள்வியும் எழுகிறது. கேசவமூர்த்தி இந்த இரண்டு கொலைகளை தான் செய்தாரா? அல்லது தனக்கு இணங்காத வேறு யாரையானும் இப்படி கொடூரமாக கொன்றுள்ளாரா என்பது முழுமையான விசாரணைக்கு பிறகே தெரியவரும். இந்நிலையில் நேற்று இரவு சம்பவ இடத்தை ஆய்வு செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத், இன்று மீண்டும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து ஆய்வு செய்தார்.

கேசமூர்த்தியின் வீட்டில் தோண்டி ஆய்வு செயந்து: கும்பகோணம் அருகே சோழபுரத்தில் ஓரின சேர்க்கை விவகாரத்தில் ஒருவரை கொலை செய்து புதைத்த வழக்கில் கைதான கேசமூர்த்தியில் வீட்டில் தோண்டி ஆய்வு செய்த போது மற்றொரு தலை கிடைத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன், ஆசிஸ் ராவத் முன்னிலையில் முதற்கட்டமாக வீட்டின் பின்பக்கம் உள்ள பகுதிகளை தோண்டும் பணி நடைபெறுகிறது. மேலும், தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் சோழா வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்படுகின்றன. இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷித்ராவத் தலைமையில் திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாபர்சித்திக் முன்னிலையில் இன்று மாலை ஜேசிபி எந்திரம் மூலம் கேசவமூர்த்தியின் வீட்டை சுற்றி மீண்டும் தோண்ட தொடங்கி உள்ளனர்[15]. இதனால் இந்த கொலை வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது[16].

© வேதபிரகாஷ்

25-11-2023.


[1] புதியதலைமுறை, கும்பகோணம் | இளைஞரைக் கொலை செய்து வீட்டுக்குள்ளேயே புதைத்த சித்த வைத்தியர்சிக்கியது எப்படி?, PT WEB, Published on : 20 Nov 2023, 3:38 pm.

[2] https://www.puthiyathalaimurai.com/tamilnadu/kumbakonam-siddha-doctor-brutally-murdered-young-man

[3] ஐபிசி.தமிழ்நாடு, தன்பாலின உறவுக்கு மறுப்பு‘ – இளைஞரை துண்டு துண்டாக வெட்டி புதைத்த சித்த வைத்தியர்!, By Jiyath, அவம்பர் 20, 2023.

[4] https://ibctamilnadu.com/article/siddha-doctor-arrested-younster-murder-case-1700466369

[5] தமிழ்.இந்து, செய்திப்பிரிவு, கும்பகோணம் | இளைஞர் கொலை வழக்கில் கைதான சித்த வைத்தியர் வீட்டை சுற்றிலும் ஏராளமான எலும்புகள் கண்டெடுப்பு, Published : 22 Nov 2023 05:42 AM, Last Updated : 22 Nov 2023 05:42 AM.

[6] https://www.hindutamil.in/news/crime/1157269-bones-were-found-around-the-house-of-siddha-doctor-who-was-arrested-in-the-case-of-youth-murder.html

[7] தினகரன், வாலிபர்களை கொன்று உடலை சமைத்து சாப்பிட்ட விவகாரம் போலி சித்த மருத்துவர் வீட்டில் தோண்ட, தோண்ட எலும்புகள்: 10 பெட்டிகளில் போலீசார் எடுத்து சென்றனர், November 25, 2023, 1:16 am

[8] https://www.dinakaran.com/teenagers_killed_fakepsychiatrist_bones_10boxes_police/ – google_vignette

[9] தினத்தந்தி, சிகிச்சைக்கு வந்த இளைஞர் உடலை துண்டு துண்டாக வெட்டி வீட்டில் சமாதி.. பிரபல டாக்டர் பகீர் காரியம், By தந்தி டிவி 20 நவம்பர் 2023 12:45 PM

[10] https://www.thanthitv.com/News/TamilNadu/the-body-of-the-young-man-who-came-for-treatment-was-cut-into-pieces-and-buried-at-home-227777

[11] இ.டிவி.பாரத், நாட்டு வைத்தியர் வீட்டில் தோண்ட தோண்ட எலும்பு கூடு..! மற்றொரு மண்டை ஓடு கிடைத்ததால் பதற்றம்!,

[12] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/thanjavur/skeleton-dug-up-from-the-siddha-vaidyar-house-who-was-arrested-in-the-youth-murder-case-near-kumbakonam/tamil-nadu20231124145055912912639

[13] காமதேனு, சிகிச்சைக்கு வந்தவர் கொலை! வீட்டைச் சுற்றி மனித எலும்புகள்சித்த வைத்தியரின் அதிர்ச்சி மறுபக்கம்!, Updated on : 22 Nov 2023, 3:15 pm

[14] https://kamadenu.hindutamil.in/crime-corner/human-bones-around-the-house-of-chitta-vaidyar-who-was-arrested-in-the-youth-murder

[15] மாலைமலர், சித்த வைத்தியர் வீட்டை மீண்டும் தோண்டும் போலீசார், By மாலை மலர், 24 நவம்பர் 2023, 3:32 PM.

[16] https://www.maalaimalar.com/news/district/police-re-excavate-siddha-vaidiyars-house-689114


05-12-2022 அன்று 5-க்கும் மேற்பட்ட பசுமாடுகளை வடமாநிலத் தொழிலாளர்கள் சேர்ந்து பாலியல் ரீதியான வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளது!

திசெம்பர் 14, 2022

05-12-2022 அன்று 5-க்கும் மேற்பட்ட பசு மாடுகளை வடமாநிலத் தொழிலாளர்கள் சேர்ந்து பாலியல் ரீதியான வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளது!

பசு மாடுகளை வடமாநிலத் தொழிலாளர்கள் சேர்ந்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது: பவானி அருகே மேய்ச்சலுக்கு சென்ற பசுக்களை பாலியல் வன்கொடுமையில் வட மாநில தொழிலாளர்கள் தொந்தரவு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, என்று “தமிழ் முரசு,” என்ற மாலை நாளிதழில் செய்தி 10-12-2022 அன்று வெளிவந்தது[1]. மற்ற பிரபல நாளிதழ்களில் தேடிப் பார்த்தபோது வந்ததாகத் தெரியவில்லை. ஒரே ஒரு இணைதளத்தில் “தமிழ் முரசு,” நாளிதழில் வந்துள்ள செய்தியை அப்படியே, அது வெளியிட்டுள்ளது[2]. பவானி – மேட்டூர் ரோடு பகுதியில் ஜீவா நகர் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 10-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்தனர்[3]. கடந்த சில மாதங்களாக இந்நிறுவனத்தில் தங்கி வேலை செய்து வந்துள்ளனர். அவர்கள் தங்கியிருந்த குடியிருப்புக்கு அருகாமையில் விவசாய நிலங்கள் உள்ளதால் அவ்வப்போது கால்நடைகள் மேய்ச்சலுக்கு வந்து செல்வது வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில், விவசாய நிலத்துக்கு மேய்ச்சலுக்கு வந்த 5-க்கும் மேற்பட்ட பசு மாடுகளை வடமாநிலத் தொழிலாளர்கள் சேர்ந்து பாலியல் ரீதியான வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளதோடு, பசுக்களைக் கடித்தும் காயப்படுத்தியுள்ளனர். இத்தகைய முறையற்ற கற்பழிப்புகள் மற்ற மாநிலங்களிலும் நடந்துள்ளதாகத் தெரிகிறது[4].

களவியலாகற்பியலா, மிருகங்களுடன் புனைவது தமிழர்களின் கலாச்சாரமா?: மிருகங்களுடன் புனைவது, உடலுறவு வைத்துக் கொள்வது, “சங்க காலத்திலிருந்து உள்ளது,” என்று ஏதாவது ஆதாம் உள்ளதா, “கீழடியில்” ஏதாவது கண்டு பிடிக்கப் பட்டதா, அதனால், போற்ற வேண்டும், ஆதரிக்க வேண்டும், “களவு” முறையில் மறைக்க வேண்டும் என்று, ஏதாவது “களவியல்” சித்தாந்தம் உளளதா? பசுக்கள் தான் பாலியல் வன்புணர்ச்சிகளுக்கு உட்பட்டுள்ளது, அதனால், “சனாதனிகள்,” சங்கிகள் தான் கவலைப் படவேண்டும், மற்ற தமிழர்கள் கவலைப் படவேண்டாம் என்றெல்லாம் உள்ளதா? சரி, அந்த பசுக்கள் கொடுக்கும் பாலை இனி மனிதகள் உட்கொள்ளலாமா, எந்த பிரச்சினையும் வராதா, என்றெல்லாம் பற்றி யாராவது விளக்க முடியுமா?  “களவியலா-கற்பியலா” என்று டிவி தொலைக்காட்சிகளில் வாத-இவாதம், பட்டி மன்றங்கள் நடட்துவார்களா?

இக்கொடூரத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அனைவரும் வாகனம் மூலம் அங்கிருந்து உடனடியாக உடமைகளுடன் வெளியேற்றப்பட்டது: இத்துணிகர வன்கொடுமை சம்பவம் கடந்த 5-ம் தேதி [05-12-2022 அன்று] அரங்கேறியுள்ளது. மேய்ச்சலுக்கு சென்ற பசுக்கள் காயங்களுடன் திரும்பியதைக் கண்ட உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் விசாரணையில் வடமாநிலத் தொழிலாளர்கள் சேர்ந்து பசுக்களை வன்புணர்வில் ஈடுபட்டது தெரியவந்தது. இத்தகவலறிந்த, பவானி வருவாய்த் துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, இக்கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அனைவரும் வாகனம் மூலம் அங்கிருந்து உடனடியாக உடமைகளுடன் வெளியேற்றப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து, பவானி போலீசாரும் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணை தொடர்பான அறிக்கை பவானி வருவாய்த்துறை மூலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வேலைக்கு வந்த வடமாநிலத் தொழிலாளர்கள் கும்பலாக சேர்ந்து மேய்ச்சலுக்கு வந்த பசுக்களிடம் வரம்புமீறி பாலியல் கொடுமையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள்என்று குறிபிடப் பட்டு, அடையாளம் மறைக்கப் படுவது: ஆனால், தொடர்ந்து,“வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள்’ என்று குறிபிடப் பட்டு, அவர்களின் பெயர்களைக் கூட தெரிவிக்காமல் இருப்பது வியப்பாக இருக்கிறது. போக்சோ சட்டத்தில் கூட பாதிக்கப் பட்ட பெண்களின் அடையாளத்தைத் தான் வெளியிடக் கூடாது என்றுள்ளது. இங்கு பாலியல் ரீதியில் பாதிக்கப் பட்டவை பசுக்கள் என்று தெரியப் படுத்தப் பட்டுள்ளது. பிறகு, வரம்புமீறி பாலியல் கொடுமையில் ஈடுபட்டது – வந்த 5-க்கும் மேற்பட்ட பசு மாடுகளை வடமாநிலத் தொழிலாளர்கள் சேர்ந்து பாலியல் ரீதியான வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளதோடு, பசுக்களைக் கடித்தும் காயப்படுத்தியுள்ளது முதலிய கொடிய-குரூர-பயங்கரமான குற்றங்களை, குற்றம் புரிந்தவர்களை ஏன் மறைக்க வேண்டும்?

 யார் அந்தவடமாநிலத் தொழிலாளர்கள்” ?: “இக்கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அனைவரும் வாகனம் மூலம் அங்கிருந்து உடனடியாக உடமைகளுடன் வெளியேற்றப்பட்டது தெரியவந்தது,” எனும் போது, அவ்வாறு ஏன் செய்யப் பட்டது என்று திகைப்பாக இருக்கிறது. குற்றம் செய்தவர்கள், அதிலும் இத்தகைய, இயற்கைக்கு மாறான “பசுக்களை வன்புணர்வில் ஈடுபட்டது” தெரிய வந்துள்ள போது, அதை மறைக்கும் முயற்சி எதைக் காட்டுகிறது என்று தெரியவில்லை. ஏற்கெனவே தமிழகத்தில், “வடமாநிலத் தொழிலாளர்கள்” அதிகம் வருவதால், வந்து பல இடங்களில் வேலை செய்வதால், தமிழர்களின் வேலை வாய்ப்பு பறிபோகிறது, குறைகிறது என்று பரவலாக, வெளிப்படையாக எல்லோராலும் பேசப் பட்டு வருகிறது. அரசியல் ரீதியாகவும் வெறுப்பு, காழ்ப்பு போன்றவை வெளிப்படுத்தப் பட்டு வருகின்றன. குற்றங்களில் அவர்கள் தாம் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் சொல்லப் படுகிறது. அந்நிலையில், அவர்கள் யார் என்று சொல்லப் பட வேண்டும்.

பங்களாதேசத்தவர், முஸ்லிம்கள் என்றாலும் தெரிவிக்கப் பட வேண்டும்: பங்களாதேசத்தவர், அவர்கள் முஸ்லிம்களாகத் தான் இருக்கின்றனர், ஆனால், தங்களது அடையாளங்களை மறைத்து, ஏன் “இந்துக்கள்” போர்வையிலும் வேலை செய்து வருகின்றனர். பங்களாதேசத்திலிருந்து, எவ்வாறு, இத்தனை தூரம் வரமுடிகிறது, அவர்களை எவ்வாறு  யார் எப்படி வேலைகளுக்கு வைக்கிறார்கள் என்பது தெரியவில்லை என்பது இல்லை. பெரும்பாலான கட்டிட வேலை நடக்கும் இடங்களில் இவர்கள் தான், ஆயிரக் கணக்கில் வேலை செய்து கொண்டிருக்கின்றனர். அங்கு வேலை செய்யும் மேஸ்திரிகளுக்கு, மேற்பார்வையாளர்களுக்கு, இஞ்சினியர்களுக்கு, பில்டர்களுக்கும் தெரிந்து தான் உள்ளது. ஆனால், யாரும் கண்டுகொள்வதில்லை என்றே தெரிகிறது. ஏற்கெனவே, கோவையில் “காஸ்-குண்டு வெடிப்பு,” முயற்சி நடந்திருக்கிறது. அது மங்களூரு “ஆட்டோ-குண்டு வெடிப்பு,”டன் தொடர்பு படுத்தி செய்திகள் வந்துக் கொண்டிருக்கின்றன. தமிழக-கர்நாடக இணைப்புகள் வெளிப்படுகின்றன. பிறகு, பங்களாதேச இணைப்பு என்ன என்று ஆராய வேண்டியுள்ளது.

அடையாளம் மறைப்பது எக்யூலரிஸமா அல்லது கம்யூனலிஸமா?: பீஹார், உத்திரபிரதேசம் என்றால் தூற்றவேண்டும், மற்ற “வடமாநிலத் தொழிலாளர்கள்” என்றால் அமைதியாக இருக்க வேண்டும், “பங்களாதேசத்தவர்” என்றால் இன்னும் அமுக்கி வாசிக்க வேண்டும், அதிலும் “முஸ்லிம்கள்” என்றால், மூச்சே விடக் கூடாது என்று ஏதாவது சம்பிரதாயம், தீர்மானம், கட்டுப்பாடு, என்று இருக்கிறதா என்று தெரியவில்லை. மேற்கு வங்காளம் மூலம் வருவதால், “கூட்டணி தர்மம்” ஏதாவது தடுக்கிறதா என்று தெரியவில்லை. அல்லது அவர்களுக்கும், இங்குள்ளவர்களுக்கும் ஏதாவது சம்பந்தம், தொடர்பு, இணைப்பு என்று உள்ளதா என்றும் தெரியவில்லை. “செக்யூலரிஸம்” அதசார்பற்ற நிலை, சமதர்மம்,  என்றெல்லாம் பேசிக் கொண்டு, கடைசியாக, “ஓட்டு வங்கி அரசியல்” எனும் போது, “கம்யூனலிஸமாகி” அதை  சித்தாந்தங்கள் மூலம் முலாம் பேசி, போற்றிக் கொன்டாடும் விதத்தை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

பவானி போலீசார் அறிக்கை பெற்ற மாவட்ட என்ன செய்வார்?: ஆட்சியர் இதுகுறித்து, பவானி போலீசாரும் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணை தொடர்பான அறிக்கை பவானி வருவாய்த்துறை மூலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, என்று செய்தி கூறுகிறது. சரி, அறிக்கை பெற்ற, வாங்கிக் கொண்ட மாவட்ட ஆட்சியாளர், படித்தப் பிறகு, என்ன நடவடிக்கை எடுத்தார்? இன்று 11-12-2022 ஆகிறது, ஆறு நாட்களாகியும் ஒன்றும் செய்யவில்லையா? அந்த “வடமாநிலத் தொழிலாளர்கள்”  வசதியாக அனுப்பப் பட்டு மறைந்து விட்டனரா?

© வேதபிரகாஷ்

14-12-2022.


[1]  தமிழ் முரசு, பசுக்களிடம் அத்துமீறிய வடமாநில தொழிலாளர்கள் விரட்டியடிப்பு சென்னை, 10-12-2022, பக்கம்.4.,

[2] லோகல்.அப்.தமிழ், பசுக்களுக்கு பாலியல் தொல்லை: வடமாநிலத்தவர்கள் அட்டகாசம், சக்கரவர்த்தி, By சக்கரவர்த்தி, Dec 10, 2022, 09:12 IST

[3] https://tamil.getlokalapp.com/tamilnadu-news/erode/anthiyur/sexual-harassment-of-cows-northerners-are-outraged-8542211

[4] தமிழ்.சமயம், உத்தர பிரதேசத்தில் பசுக்களை கற்பழித்த நபா் கைது, Samayam TamilUpdated: 22 May 2019, 11:12 pm

https://tamil.samayam.com/latest-news/india-news/man-held-for-raping-cows-at-shelter-in-ayodhya-up/articleshow/69450193.cms

தெய்வத்தின் சொந்த தேசத்தில், அதிகம் எழுத்தறிவு கொண்ட மாநிலத்தில் நிர்வாண பூஜை, நரபலி முதலியன குரூர குற்றங்கள் எப்படி நடக்கின்றன – தீர்வு என்ன? (4)

ஒக்ரோபர் 15, 2022

தெய்வத்தின் சொந்த தேசத்தில், அதிகம் எழுத்தறிவு கொண்ட மாநிலத்தில் நிர்வாண பூஜை, நரபலி முதலியன குரூர குற்றங்கள் எப்படி நடக்கின்றன – தீர்வு என்ன? (4)

கேரள அரசு மாந்திரீக நரபலி நிபுணன் பைத்தியம் என்றது: அரசின் மெத்தனத்தால் தான் இத்தகைய குற்றங்கள் நடந்துள்ளன, என்று நீதிமன்றம் முதல் மற்ற பொறுப்புள்ளவர்கள் வெளிப்படையாக சொல்ல ஆரம்பித்துள்ளதால், ஆளும் மார்க்சீய அம்யூனிஸ்ட் ஆட்சி, இதனை திசைத் திருப்பி, அமுக்கி வாசிக்க முயல்கிறது. முக்கிய குற்றவாளி ஒரு பைத்தியம், மனோநல வியாதி கொண்டவன், என்றெல்லாம் சித்தரிக்கப் பட்டு வருகிறான். இறகு, அதே காரணத்திற்காக அவன் குற்றத்திலிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம். இதனால், அதே முறையில்[1], “உண்மையில் மனநிலை சரியில்லாதவர்களால் தான் இப்படி செய்ய முடியும். இது நவீன சமுதாயத்திற்கு சவாலாக உள்ளது. இதுபோன்ற தவறான எண்ணங்கள் மற்றும் மூடநம்பிக்கைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு, அனைத்திலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், இந்த தீமையை எதிர்த்துப் போராட வேண்டும்,” என்று முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது[2]. இவ்விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து கேரள மாநில காவல்துறை உத்தரவிட்டுள்ளது[3]. துணை ஆணையர் சசிதரன் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது[4].

கேரளாவும் ஆபாசப் படங்களும்: ஆபாசப் படம் / போர்ன் வீடியோ எடுப்பது, முதலியவை பல்லாண்டுகளாக கேரளாவில் நடந்து வருகின்றன என்று செய்திகள் மூலம் அறியப் படுகிறது. கேரள திரைப்படங்களே முன்பு 1960-70களில் பிரபலமாக இருந்தன. அத்தகைய காட்சிகள் வரும் என்று தியேட்டர்களுக்கு செல்லும் வழக்கமும் இருந்தது. பிறகு 1980களில் வீடியோ கேசட், சிடி என்று தொழிற்நுட்பமும் மாறி விட்டது. பிறகு இன்டெர்நெட் வந்ததிலிருந்து, செல்போன் போன்றவற்றால், தனிநபர் விருப்பங்களுக்கு ஏற்றபடி மாறின, மாறி விட்டன.  கேரளாவில் இதைப் பற்றிய செய்திகள் இன்றும் வரத்தான் செய்கிறது, சரிதா நாயர் விவகாரத்திலும் அப்பிரச்சினை உள்ளது. உதாரணத்திற்கு, இச்செய்தி கொடுக்கப் படுகிறது. கேரளாவில் 13 வயது சிறுமி ஒருவர், அவருடைய அண்ணனால் கர்ப்பமாகியுள்ளார். வயிற்றுவலி என சிகிச்சைக்காக மருத்துவமனை சென்றபோதுதான் 30 வார கர்ப்பமாக இருக்கிறார் என்பதே தெரியவந்துள்ளது[5]. இணையதளத்தில் ஆபாசப் படங்கள் எல்லா வயதினருக்கும் எளிதில் கிடைத்துவிடுகின்றன, இதனால், சமூக ஊடகங்கள் கட்டுப்படுத்தப் பட வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுருத்தியது.

கேரளாவில் சிறுவர், சிறுமியரின் ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பிய விவகாரம்: கேரளாவில் சிறுவர், சிறுமியரின் ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பிய 21 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்[6]. அவர்களிடம் இருந்து லேப்டாப்,  செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன[7]. கேரளாவில்  சமீப காலமாக வாட்ஸ்  அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் சிறுவர், சிறுமிகளின் ஆபாச   வீடியோக்கள் பரவி வருவதாக போலீசுக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இது   தொடர்பாக சர்வதேச  அளவிலும் புகார்கள் உள்ளன. சர்வதேச போலீசான   இன்டர்போலுக்கும் புகார்கள் வந்துள்ளன.இதையடுத்து சிறுவர், சிறுமியரின் ஆபாச வீடியோக்கள் வெளியிடுவதை தடுக்க இன்டர்போல் அழைப்பு  விடுத்துள்ளது. இதன்படி திருவனந்தபுரம்  சரக ஏடிஜிபி மனோஜ் ஆப்ரகாம்  தலைமையில் ‘பி-ஹண்ட்’ என்ற பெயரில்  ஒரு தனிப்படை  அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் கேரளா முழுவதும் 29 இடங்களில்  அதிரடி சோதனை நடத்தினர்.  இதில் சிறுவர், சிறுமியர் ஆபாச படங்களை பரப்பிய 21  பேர் கைது  செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்த லேப்டாப், செல்போன்கள், ஹார்ட்  டிஸ்க்,  யுஎஸ்பி டிரைவ் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. இதுகுறித்து ஏடிஜிபி   மனோஜ் ஆப்ரகாம் கூறியது: “சிறுவர், சிறுமியர் ஆபாச வீடியோ பரப்புகிறவர்களுக்கு 5 வருட சிறை தண்டனையும், 10 லட்சம் அபராதமும்  விதிக்கப்படும். பிஹண்ட் சோதனை மேலும் தீவிரப்படுத்தப்படும். கேரளா முழுவதும் 84 பேர் தீவிரமாக  கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். விரைவில்  மேலும் பலர் கைது  செய்யப்படுவார்கள். பல வாட்ஸ் அப், பேஸ்புக்  குரூப்புகள் கண்காணிக்கப்பட்டு  வருகின்றன,” இவ்வாறு  அவர் கூறினார்.

கேரள போர்ன், மாந்திரீகம், கொலை எல்லாம் திட்டமிட்டு நடக்கிறதா?: ஆபாசப் படங்கள் எடுக்க பெண்கள் தேவை, அதற்காக முறை தவறிய பெண்கள், அத்தகைய ஆண்களின் தொடர்புகளில் இருப்பார்கள். இது ஒரு “செக்சஸ்” என்பார்கள். அரசியல், சட்டம்-ஒழுங்கு அமூல் படுத்துகிறவர்களின் மறைமுக ஆதரவு என்றெல்லாம் இருந்து விட்டால், சாதாரண மக்கள் ஒன்றும் செய்ய முடியாது. பெரும்பாலான விவகாரங்கள், தெரியாமல், ரகசியமாகவே நடந்து கொன்டு இருக்கும். தினம் தினம் வேலை செய்து, வாழ்க்கை நடத்தும் மக்கள் இவற்றைப் பற்றி கவலைப் பட மாட்டார்கள், அதற்கு அவர்களுக்கு நேரமும் இல்லை, இருக்காது. ஆக, ஒருவேளை சம்பந்தப் பட்ட பெண்கள் ஏதோ காரணங்களுக்காக நச்சரித்துக் கொண்டே இருந்தால், ஆண்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு, எல்லைகளைக் கடக்கும் போது, தீர்த்துக் கட்டி விடலாம் என்ற முடிவுக்கும் வரலாம். அந்நிலையில், இத்தகைய பண ஆசை பிடித்த ஆட்கள் கிடைக்கும் போது, ஒரே கல்லால், இரு மாங்காய் அடிக்கும் விதத்தில், நரபலியும் கொடுத்து, பொஇரச்சினை செய்யும் பெண்ணையும் தீர்த்து கட்டுவார்களோ என்னமோ? இதெல்லாம் மற்றவர்களுக்கு தேவையில்லாத விசயங்கள். இருப்பினும், போலீஸார் அவ்வாறெல்லாம் கூட விசாரணை செய்யலாம். சாதாரண மக்கள் கடவுளை நம்பிக்கொண்டு, தெய்வ நம்பிக்கையுன், நிம்மதியாக வாழ்ந்தாலே போதும்.

தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டு வருபவனை சைக்கோ, மனநோயாளி, வக்கிரம் படித்தவன், அதனால் அப்படி செய்தான், செய்வான் என்று அமைதியாகி விடமுடியாது: அதிக படிப்பறிவு கொண்ட மாநிலம், முற்போக்கு எண்ணம் கொண்டவர்கள், மெத்தப் படித்தவர்கள், இந்திய அரசியலில் தொடர்ந்து தாக்கத்தை ஏர்படுத்தி வருகிறவர்கள், எல்லா துறைகளிலும், நிறுவனங்களிலும், இடங்களிலும் இருப்பவர்கள் என்றெல்லாம் இம்மாநிலத்தவர்கள் கருதப் பட்டு வருகிறார்கள். மதம், ஜாதி, சித்தாந்தம் போன்றவற்றால் வேறுபட்டிருந்தாலும், மலையாளத்தவர் என்று ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்று மற்ற மாநிலத்தவர்களால் அறியப் பட்டு வருகிறார்கள். அந்நிலையில், கேரளாவில் தொடர்ந்து இத்தகைய, குறிப்பாக பாலியல், செக்ஸ், காமம், கற்பழிப்பு, தகாத உறவுகள் என்று வக்கிரங்களாக, குற்றங்களாக, ஏன் கொலைகளாகக் கூட மாறி வருவதை பற்பல வழக்குகளில் தெரிந்து வருகிறது. அபயா கொலை, ஐஸ்கிரீம் பார்லர் செக்ஸ், மூலக்கல் பிஷப் கற்பழிப்பு என்று சமீபத்தைய விவகாரங்கள் அறியப் பட்டவையாக இருக்கின்றன. அந்த பட்டியலில் இதுவும் சேரலாம். கொஞ்சம் கொஞ்சமாக மறக்கப் படலாம். ஆனால், அத்தகைய சமூக சீரழிவுகள், வக்கிரங்கள், மனப்பாங்குகள் சட்டமீறல்கள் முறையாக ஆராயப் பட வேண்டியுள்ளது. தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டு வருபவனை சைக்கோ, மனநோயாளி, வக்கிரம் படித்தவன், அதனால் அப்படி செய்தான், செய்வான் என்று அமைதியாகி விடமுடியாது. கொலைகள் என்பது பெரிய குற்றம் தான். பல கொலைகள் செய்தால், குரூரமாக செய்தால், நோய் என்று வழக்குகளை மூடிவிட முடியாது.

© வேதபிரகாஷ்

14-10-2022.


[1] ஜீ.நியூஸ், கேரளா நரபலி: போலி சாமியார் முன் உடலுறவு! நரபலி கொடுக்க இதுதான் காரணமா?, Written by – Bhuvaneshwari P S | Edited by – Shiva Murugesan | Last Updated : Oct 12, 2022, 10:37 AM IST.

[2]  https://zeenews.india.com/tamil/india/sex-in-front-of-fake-preacher-this-reason-for-human-sacrifice-in-kerala-414483

[3] தினகரன், கேரளாவில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு..!!, 2022-10-13@ 10:46:16.

[4] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=806375

[5] ஹமிழ். ஏபிபி.லைவ், ஆபாசப்படம் ஈசியா கிடைக்குது.. சிறுமிகள் கருவுறுதல் குறித்த வழக்கில் கோர்ட் சொன்ன பல கருத்து!,By: ஜான் ஆகாஷ் | Updated at : 24 Jul 2022 01:49 PM (IST);  Published at : 24 Jul 2022 01:42 PM (IST)

https://tamil.abplive.com/news/india/teen-pregnancy-porn-spark-kerala-high-court-call-for-sex-ed-review-63331

[6] தினகரன், கேரளாவில் சிறுமிகள் ஆபாச வீடியோ பரப்பிய 21 பேர் அதிரடி கைது: லேப்டாப், செல்போன்கள் பறிமுதல், 2019-04-03@ 00:42:44

[7] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=485162

தெய்வத்தின் சொந்த தேசத்தில், அதிகம் எழுத்தறிவு கொண்ட மாநிலத்தில் நிர்வாண பூஜை,  நரபலி முதலிய குரூர குற்றங்கள் எப்படி நடந்தேறின? (3)

ஒக்ரோபர் 15, 2022

தெய்வத்தின் சொந்த தேசத்தில், அதிகம் எழுத்தறிவு கொண்ட மாநிலத்தில் நிர்வாண பூஜை,  நரபலி முதலிய குரூர குற்றங்கள் எப்படி நடந்தேறின? (3)

ஷபி ஒத்துழைக்கவில்லை என்று போலீஸார் கூறுவது: கொச்சி நகர சட்டம் ஒழுங்கு பிரிவு துணை ஆணையர் சசிதரன் கூறுகையில், “ஆரம்பத்தில் தமது குற்றத்தை ஒப்புக் கொள்ளாதவராகவே ஷாஃபி காணப்பட்டார். எதையும் வெளிப்படுத்தாமல் இருந்தார். கடைசியில் அவரை ஒப்புக் கொள்ள வைக்க அறிவியல்பூர்வ விசாரணை முறைகளையும் பிற நுட்பங்களையும் பயன்படுத்த வேண்டியிருந்தது. கடவந்திராவிற்கும் திருவல்லாவிற்கும் இடையே உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் காணாமல் போன பத்மாவுடன் ஷாஃபி ஒரு வாகனத்தில் நுழைந்த மங்கலான காட்சி மூலம் அவர்களின் அடையாளத்தை மீட்பது சவாலாக இருந்தது. அதன் பிறகே இந்த வழக்கில் துப்பு துலங்கியது,” என்று தெரிவித்தார். இந்த வழக்கில் கண்காணிப்பு கேமரா பதிவு மூலமாகவே துப்புதுலங்கியது[1]. கொலை செய்யப்பட்ட பெண்களில் ஒருவரை முகமது சஃபி தனது காரில் ஏற்றுவது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த ஆதாரத்தை வைத்து காவல் துறையினா் மேற்கொண்ட தொடா் விசாரணையில், இந்த கொலை சம்பவத்தின் முழு விவரமும் வெளிவந்தன.

கடந்த சில மாதங்களில் 12 பெண்கள் காணாமல் போனது கேரள போலீசார் விசாரணை:  “பதினோரம் வகுப்பு தேர்ச்சி பெறாத அவர் தமது 16-17ஆவது வயதில் வீட்டை விட்டு ஓடி வந்து விட்டார். மாநிலத்தின் கிட்டத்தட்ட எல்லா மாநிலங்களிலும் அவர் சுற்றியிருக்கிறார். கிடைத்த வேலைகளை செய்திருக்கிறார். கடைசியில் தமது நரபலி திட்டத்தை நிறைவேற்றும் நோக்கில் லாட்டரி சீட்டுகளை விற்கும் வெளி மாநில பெண்களை நோட்டம் பார்த்து அவர்களுக்கு புதிய வேலை ஆசை காட்சி தமது சதியை செயல்படுத்தியிருக்கிறார்,” என்று புலனாய்வாளர்கள் நம்மிடையே தெரிவித்தனர். இதற்கிடையே, ஷாஃபியிடமிருந்து தப்பிய பெண் என தன்னை அழைத்துக் கொள்ளும் ஒருவர், தன்னுடைய அடையாளத்தை மறைத்துக் கொண்டு அளித்த பேட்டியில், “ஷாஃபி மீது கொச்சி களமசேரி காவல் நிலையத்தில் ஒரு பெண்ணை மிதித்துக்கொன்றதாக வழக்கு உள்ளது. நான் அதிர்ஷ்டவசமாக அவரிடம் இருந்து தப்பித்தேன்,” என்று தெரிவித்தார்.  மேலும் பல பெண்கள் சபியிடம் சிக்கியிருக்கலாம், நிறைய பெண்கள் காணாமல் போயிருக்கிறார்கள் போன்ற செய்திகளும் வெளிவருகின்றன. கடந்த சில மாதங்களில் 12 பெண்கள் காணாமல் போனது கேரள போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது[2].  எனவே அந்த பெண்களும் நரபலிக்கு கொடுக்கப்பட்டிருக்கலாமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்[3].

தமிழகத்தைச் சேர்ந்தவர் உட்பட இரண்டு பெண்களை நரபலி கொடுத்த கேரள தம்பதி: தமிழகத்தைச் சேர்ந்தவர் உட்பட இரண்டு பெண்களை நரபலி கொடுத்த கேரள தம்பதி உட்பட மூன்று பேரை, 12 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு கொச்சி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இவர்களிடம் நடத்திய முதல்கட்ட விசாரணையில், விரைவில் பணக்காரராகும் ஆசையில், இந்த தம்பதி நரபலி கொடுத்ததும், அதற்கான ஆலோசனை வழங்கியதில் இருந்து நரபலி கொடுக்க இரண்டு பெண்களை அழைத்து வந்தது என, பல வகையில் முகமது ஷபி உதவியுள்ளதும் தெரியவந்துள்ளது. தமிழகத்தின் தர்மபுரியைச் சேர்ந்த பத்மா, கேரள மாநிலம் காலடியைச் சேர்ந்த ரோஸ்லின் ஆகியோர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதுடன், அவர்களுடைய உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டுஉள்ளது விசாரணையில் தெரியவந்தது. இதுவரை 61 பாக்கெட்டுகளையில் மனித உடல் பாகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஒரே குழியில் இருந்து 56 பாக்கெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. மற்றொரு குழியில் எலும்பு உள்ளிட்ட 5 பாகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அனைத்தும் டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  நிர்வாண பூஜை செய்ததுடன், கொல்லப்பட்ட பெண்களின் உடல் பாகங்களை, தம்பதி சமைத்து சாப்பிட்டதும் தெரியவந்து உள்ளது[4]. நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியம் கிடைக்கும் என கூறி முகமது ஷாஃபி இதை செய்ய வைத்துள்ளார்[5]. அந்த மாமிசத்தில் சிறிது சாப்பிட வேண்டும்” என முகமது ஷாஃபி கூறியுள்ளார். பகவல் சிங்கும், லைலாவும் முதலில் மறுத்துள்ளனர்.

ஹீலிங் செய்யும் மருத்துவருக்கு, மலையாள மாந்திரீகர் உதவ முன்வந்தது: முன்னதாக பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டது குறித்து கொச்சி போலீஸ் கமிஷனர் சி.எச்.நாகராஜு கூறியது: கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் பகவால் சிங். இவரிடம் வரும் நோயாளிகளின் நோய்களை குணமாக்கி வந்தார். ஆனால், இவரது “பணக்கார பேராசை” நோயை நீக்க ஒரு அலையாள மாந்திரீகன் தான் வர வேண்டிய நிலை போலும். இவரது மனைவி லைலா. ஹீலிங் எனப்படும் இந்தத் தொழிலை இவர்கள் பரம்பரை, பரம்பரையாக செய்து வருகின்றனர். இந்நிலையில், பகவால் சிங்குக்கு பணம் செழிப்பதற்காகவும், வளத்தைப் பெருக்குவதற்காகவும் 2 பெண்களை அழைத்து வந்து நரபலி கொடுத்த விவரம் எங்களுக்குத் தெரியவந்தது. இதற்கு உடந்தையாக இருந்த பெரும்பாவூர் ஷபி (எ) ரஷீத் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீதிமன்றம் அதிருப்தியை வெளிப்படுத்திய நிலை: கைது செய்யப்பட்ட மூவரும், கொச்சி நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தப்பட்டனர்[6]. இது குறித்து அம்மாநில உயர் நீதிமன்றம் அதிர்ச்சியையும், அவநம்பிக்கையையும் வெளிப்படுத்தியிருக்கிறது[7]. கேரள உயர் நீதிமன்ற நீதிபதி தேவன் ராமச்சந்திரன் செவ்வாய்க்கிழமை 11-10-2022 அன்று வேறு ஒரு வழக்கை விசாரித்துக் கொண்டிருக்கும்போது நரபலி குறித்த தனது அதிர்ச்சியையும், அதிருப்தியையும் வெளிப்படுத்தினார். இதுகுறித்து நீதிபதி ராமசந்திரன் கூறுகையில்[8], “அரசின் கவனக்குறைவையும், மக்களின் விசித்திரமான நடவடிக்கைகளையும் நீதிமன்றம் கவனித்து வருகிறது. கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்டிருக்கிறது என்று கேள்விப்படும் செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது என்பது மனித பகுத்தறிவை மீறிய செயல். இந்தச் செயல்களால் கேரளா எதை நோக்கிச் செல்கிறது என்ற ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது,” என்று தெரிவித்தார்[9]. அவர்களை, 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில், அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீஸ் தரப்பில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது[10]. இதை ஏற்ற நீதிமன்றம், 12-10-2022 புதன்கிழமை 12 நாள்  அக்டோபர் 26ஆம் தேதி வரை போலீஸ் காவலுக்கு அனுமதி அளித்துள்ளது[11].

© வேதபிரகாஷ்

14-10-2022.


[1] தினத்தந்தி.டிவி, நாட்டையே உலுக்கிய கேரள நரபலி சம்பவம்.. கேரள போலீஸ் அதிரடி, By தந்தி டிவி, அக்டோபர் 2022 11:08 AM

[2] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், கேரளா நரபலி கொடூரம்..! கொலையாளிகள் போலீசில் சிக்கியது எப்படி..? மேலும் 12 பெண்களில் நிலை என்ன..?, Ajmal Khan, First Published Oct 13, 2022, 10:44 AM IST; Last Updated Oct 13, 2022, 10:44 AM IST

[3] https://tamil.asianetnews.com/crime/police-identify-killers-involved-in-human-sacrifice-in-kerala-through-cctv-rjoejp

[4] நியூஸ்.18.தமிழ், நரபலி கொடுத்த உடலை சாப்பிட்ட தம்பதி.. கேரளாவை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்நடந்தது என்ன?, NEWS18 TAMIL, LAST UPDATED : OCTOBER 12, 2022, 11:53 IST.

[5] https://tamil.news18.com/news/national/kerala-2-lady-human-sacrifice-lot-of-startling-information-was-revealed-in-investigation-817644.html

[6] மாலைமலர், கேரளா நரபலி வழக்குகைது செய்யப்பட்ட 3 பேரையும் 12 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி, By மாலை மலர்13 அக்டோபர் 2022 4:29 PM

[7] https://www.maalaimalar.com/news/national/kerala-human-sacrifice-case-all-3-accused-sent-to-12-day-police-custody-523933

[8] தமிழ்.இந்து, கேரளா எதை நோக்கி செல்கிறது?” – 2 பெண்கள் நரபலி சம்பவத்தில் உயர் நீதிமன்றம் அதிர்ச்சி, செய்திப்பிரிவு, Published : 12 Oct 2022 01:42 PM; Last Updated : 12 Oct 2022 01:42 PM

[9] https://www.hindutamil.in/news/india/881847-kerala-human-sacrifice-high-court-expresses-its-shock-disbelief-1.html

[10] தினமலர், கேரள நரபலி கொடூரர்களுக்கு 1 2 நாள் போலீஸ்சாட்டை!’, Added : அக் 14, 2022  02:10

[11] https://www.dinamalar.com/news_detail.asp?id=3145306

தெய்வத்தின் சொந்த தேசத்தில், அதிகம் எழுத்தறிவு கொண்ட மாநிலத்தில் நிர்வாண பூஜை, நரபலி முதலியன – செக்யூலரிஸத்தில் புதிய வடிவங்கள் கொள்வது (2)

ஒக்ரோபர் 15, 2022

தெய்வத்தின் சொந்த தேசத்தில், அதிகம் எழுத்தறிவு கொண்ட மாநிலத்தில் நிர்வாண பூஜை, நரபலி முதலியனசெக்யூலரிஸத்தில் புதிய வடிவங்கள் கொள்வது (2)

ரோஸ்லியைக் கொன்று உடலை அறுத்து பூஜை செய்தது: பின்னர் அங்கிருந்து பகவல் சிங்கின் வீட்டுக்கு அழைத்துச் சென்று, இரவு நேரத்தில் நரபலி பூஜையை செய்துள்ளனர். கட்டிலில் கிடத்தி கைகளையும், கால்களையும் கட்டிப்போட்டு முதலில் கழுத்தை அறுத்துள்ளனர். பின்னர் உடலை சுமார் 22 துண்டுகளாக வெட்டியுள்ளனர். அப்பெண்ணின் கூக்குரல், அழுகுரல் எல்லாம் பக்கத்தில் இருப்பவர்களுக்குக் கேட்கவில்லையா போன்ற விவரங்களும் தெரியவில்லை. உடலை வைத்து சில பூஜைகள் செய்திருக்கின்றனர். பூஜை முடிந்த பிறகு வீட்டுக்கு வெளியே துணி துவைக்கும் கல் அமைந்திருக்கும் பகுதியில் குழிதோண்டி உடலைப் புதைத்து, அதன் மீது மஞ்சள் நட்டு வைத்திருக்கின்றனர். ஆனால், மந்திரத்தால். தந்திரத்தால், நிறம் மாறவில்லை, ஒன்று நடக்கவில்லை. முஹம்மது சபி எப்படி பணம் வரும் என்ற ரகசியமும் தெரியவில்லை. பகவல்சிங்-லைலா தம்பதி கோபித்துக் கொள்ள, முதல் பூஜையால் பலன் கிடைக்காததால், மற்றொரு நரபலி கொடுக்க வேண்டும் எனக் கூறி கடந்த மாதம் மீண்டும் ஒரு நரபலி கொடுக்க முடிவு செய்ய, அதற்கும் ஒப்புக் கொண்டனர்.

அடுத்த பலிகடாபத்மா: கடவந்தறா பகுதியில் லாட்டரி விற்பனை செய்துவந்த தருமபுரியைச் சேர்ந்த பத்மா (52) என்ற பெண்ணையும் பணம் கொடுப்பதாகக் கூறி திருவல்லாவுக்கு அழைத்துச் சென்று ரோஸ்லியை நரபலி கொடுத்தது போன்றே நரபலி கொடுத்துள்ளனர். அவரின் உடல்களையும் துண்டு துண்டாக வெட்டி வீட்டுக்கு வெளிப்பகுதியில் புதைத்துள்ளனர். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதால்,  இப்பொழுது, தமிழக ஊடகங்களில், இச்செய்தி உச்சத்திற்குச் சென்றுள்ளது. முதலில் முஹமது சபியின் பெயரை தமிழ் ஊடகங்கள் சொல்லவில்லை, அமுக்கி வாசித்தது, ஆனால், இப்பொழுது குறிப்பிட ஆரம்பித்து விட்டன என்பதையும் கவனிக்கலாம். ஆக, ஊடகங்கள் கூட “கேரள மாடல்,” “தமிழக மாடல்” என்றுதான் வேலை செய்கின்றன போலும். இருப்பினும், இரு மாநில முதல்வர்களும் இந்த செய்தியை மறந்து, இந்தி எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். இதைப் பற்றியெல்லாம் டிவியில் விவாட்தம் ஏற்பாடு செய்யவில்லை.

ஆகஸ்ட்செப்டம்பர் ஆதங்களில் தான் ரோஸ்லி முறையே பத்மா காணவில்லை என்று புகார் கொடுத்தது: ரோஸ்லியைக் காணவில்லை என கடந்த ஆகஸ்ட் மாதம் 17-ம் தேதி அவரின் மகள் மஞ்சு புகார் அளித்தார். அந்த விசாரணையில் பெரிய அளவில் துப்புத் துலங்கவில்லை. பத்மாவைக் காணவில்லை என அவரின் மகன் செல்வராஜ் கடந்த செப்டம்பர்  மாதம் 27-ம் தேதி புகார் அளித்தார். அவரின் செல்போனை ஆய்வு செய்தபோது அது திருவல்லா பகுதியில் கடைசியாகப் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. பின்னர் சிசிவிடிவி காட்சிகள் உள்ளிட்டவற்றை ஆய்வுசெய்து பத்மாவைக் கடத்திய முஹம்மது ஷாஃபி முதலில் கைதுசெய்யப்பட்டார். அவரிடம் விசாரித்ததில் பெண்கள் கொடூரமாக நரபலி கொடுக்கப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளியானது. அவர்களது உடலை அடையாளம் காணும்விதமாக டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்வதற்காகக் கோட்டயம் மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியில் அவர்களது உடல்கள் கொண்டு செல்லப்பட்டன. இது தொடர்பாக பகவல் சிங், 68, அவருடைய மனைவி லைலா, 58 மற்றும் மாந்த்ரீகத்தில் ஈடுபட்ட முகமது ஷபி, 52, ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முகமது சபி, மொஹம்மது ஷஃபி யார்?: முதலில் உடகங்கள் இவனது பெயரை அமுக்கி வாசித்தன, அதற்குள் உள்ளூர் நாளிதழ்கள் பகவல்சிங் சிபிஎம் நிர்வாகி என்றெல்லாம் குறிப்பிடப் பட்டவுடன், இவனது பெயர் பிரதானமாக குறிப்பிடப் பட்டது. முகமது ஷாஃபி / ரஷீத் மாந்திரீகராக – மலையாள மாந்தீரிகன் –  உள்ளூரில் அறியப்படுகிறார்[1] என்று பிபிசி மரியாதையுன் குறிப்பிடுகிறது. ஷபி, தன்னை மலையாள மாந்தீரிகன் போல் காட்டிக் கொண்டுள்ளார் என்கிறது இன்னொரு இணைதள நாளிதழ். வக்கிரபுத்தி கொண்ட சஃபி, தனது குற்றத்தில், ஆசை வார்த்தைக் கூறி மற்றவர்களை நம்ப வைத்து அவர்களையும் சேர்த்துக் கொண்டு, தனது குற்றத்துக்கு அவர்களையும் உடந்தையாக்கிவிடுவார். மிகவும் வஞ்சகமான குற்றவாளி, தனது திட்டத்தை மற்றவர்களின் துணையோடு செய்வது இவரது வழக்கம் என்றும் ஐஜிபி கூறியுள்ளார். இப்படி ஊடகங்கள் வர்ணிக்கின்றன. ஒரு முஸ்லிம் எப்படி கேரளாவில் இவ்வாறு மந்திரவாதியாக இருக்கிறான், தந்திரங்கள் செய்கிறான் என்றெல்லாம் விளக்கவில்லை. அதாவது, கேரளாவில் எல்லோரும் எல்லா வேலைகளையும் செய்யலாம் போலிருக்கிறது.

முகமது சபி / ரஷீத் என்ற கேரள மந்திரவாதி: பல பெயர்களில் உலா வரும் இவன் ஒரு தாதா போலத்தான் கருதப் பட்டு வருகிறான். இவன் பெரிய பணக்காரன் என்றும் தெரிகிறது. அவனிடத்தில் பேரூந்து, ஜீப், கார் என்று நான்கு வாகனங்களை வைத்திருக்கிறான். ஒரு ஓட்டலை நடத்தி வருகிறான். அங்கு தான் தனக்கு வேண்டியவர்கள் எல்லாம் வந்து செல்வது வழக்கம். ரோஸ்லி, பத்மா முதலியோர் இங்கு வழக்கமாக வரும் வாடிக்கையாளர்கள் என்றும் தெரிகிறது.  இவர்களிடம் தத்தம் தொழில்-வியாபார ரீதியில் தொடர்புகளும் இருந்து வருகின்றன. எர்ணாகுளத்தில், காந்திநகரில் இவனுக்கு வீடும் இருக்கிறது. போதாகுறைக்கு, ஊடகங்களின் செய்திகள் இவன் போதை மருந்து, விபச்சாரம், கற்பழிப்பு, திருட்டு முதலியவற்றிலும் ஈடு பட்டு வந்துள்ளான் என்றுள்ளது. ஆக, ஒரு சாதாராண ஆளால் இத்தனையும் செய்ய முடியாது.

கடந்த 15 ஆண்டுகளில் 10-க்கும் அதிகமான வழக்குகள் அவா் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன: ஷாஃபி மீது 2020இல் எர்ணாகுளம் புறநகர் மாவட்டத்தில் 75 வயது மூதாட்டியை கொடூரமாக தாக்கிக் காயப்படுத்தி கொலை செய்ததாக ஒரு கொலை வழக்கு குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நிலுவையில் உள்ளது[2]. அந்த வழக்கில் அவர் ஜாமீனில் இருக்கிறார். பிறகு எப்படி வெளிவந்தார் என்று தெரியவில்லை. அது தவிர வேறு சில சிறிய குற்றங்களுக்கான வழக்குகளும் அவர் மீது உள்ளன, என்று குறிப்பிட்டு, கஞ்சா கடத்தல், போதை மருந்து, விபச்சாரம் என்றெல்லாம் அடுக்குகின்றன. இந்த நபர்தான் தம்பதியை நரபலி கொடுக்க சம்மதிக்கச் செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் 10-க்கும் அதிகமான வழக்குகள் அவா் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன[3]. இருப்பினும் வெற்றிகரமாக வெளியில் ஜாலியாக சுற்றி வந்து, இத்தனை வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறான் என்றால், அவனது செல்வாக்கை கவனிக்கலாம். அந்த அளவுக்கு அரசியல், அதிகாரம் முதலிய ரீதிகளில் அழுத்தம் கொண்டவர்களின் பாதுகாப்பு இருப்பதும் தெரிகிறது.

ஷபியின் மனைவி மறுப்பது: முகமது ஷாஃபி தனது மனைவியின் செல்பேசியில் இருந்து சமூக வலைதளத்தில் ‘ஸ்ரீதேவி’ என்ற பெயரில் போலி கணக்கை உருவாக்கினார். இந்த வழக்கில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கப்பெறலாம் என்று கூறப்படும் நிலையில்[4], சஃபியின் மனைவியோ, தனக்கு திருமணமாகி 24 ஆண்டுகள் ஆவதாகவும், தனது கணவர் இப்படிப்பட்ட கொடூரமான காரியங்களில் ஈடுபடுவார் என்பதை தன்னால் நம்பவே முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்[5]. அதில் இருந்து மருத்துவரிடம் நட்பை ஏற்படுத்திக் கொண்டதாக முகமது ஷாஃபி தெரிவித்துள்ளார். பகவால் சிங்கை சந்தித்து, நெருக்கத்தை ஏற்படுத்திய பிறகு ஸ்ரீதேவியின் சுயவிவரத்தை நீக்கியதாகவும், முகமது ஷாஃபி கூறியதாக போலீஸார் தெரிவித்தனர். சமூக ஊடக பக்கத்தில் பதிவான ஸ்ரீதேவி என்ற அழிக்கப்பட்ட கணக்கின் தகவல்களை மீட்க கேரள காவல்துறை சைபர் கிரைம் பிரிவின் உதவியை நாடியுள்ளது.

© வேதபிரகாஷ்

14-10-2022.


[1] பிபிசி.தமிழ், கேரள நரபலி: மாந்திரீகரின் சர்ச்சை திட்டம், இரண்டு பெண்களை பலி கொடுத்த தம்பதிசமீபத்திய தகவல்கள், 12 அக்டோபர் 2022

[2] https://www.bbc.com/tamil/india-63228532

[3] https://www.thanthitv.com/news/tamilnadu/breaking-kerala-human-sacrifice-incident-that-shook-the-country-kerala-police-action-142246

[4] தினமணி, கேரள நரபலி: 61 பாக்கெட்டுகளில் உடல்பாகங்கள், By DIN  |   Published On : 13th October 2022 12:34 PM  |   Last Updated : 13th October 2022 04:27 PM

[5]  https://www.dinamani.com/india/2022/oct/13/kerala-human-sacrifice-body-parts-in-61-bags-3931784.html

தெய்வத்தின் சொந்த தேசத்தில், அதிகம் எழுத்தறிவு கொண்ட மாநிலத்தில் நிர்வாண பூஜை, நரபலி முதலியன எப்படி நடந்தேறின? (1)

ஒக்ரோபர் 15, 2022

தெய்வத்தின் சொந்த தேசத்தில், அதிகம் எழுத்தறிவு கொண்ட மாநிலத்தில் நிர்வாண பூஜை, நரபலி முதலியன எப்படி நடந்தேறின? (1)

கேரளாவில் மலையாள மாந்தீரிகனால் நரபலி: கேரளா, “தெய்வத்தின் சொந்த தேசம்,” “கடவுளுக்கே உரிய நாடு” என்றெல்லாம் ஒருபக்கமும், இந்தியாவிலேயே அதிக கல்வி அறிவு கொன்ட மாநிலம் என்று இன்னொரு பக்கமும் சொல்லப் பட்டு வருகின்றது. கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ளவர்கள் மெத்தப் படித்தவர்கள், முற்போக்குவாதிகள், செக்யூலரிஸவாதிகள், மார்க்சீயவாதிகள், என்றெல்லாமும் அறியப் பட்டு வருகிறார்கள். கம்யூனிஸ்டுகள், முஸ்லிம்கள், கிருத்துவர்கள் ஆதிக்கத்துடன் அரசியல், அதிகாரம் முதலியவற்றில் கோலோச்சி வருகிறார்கள். இந்தியா முழுவதும், ஏன் உலகம் முழுவதும் மலையாளிகள் பரவியுள்ளார்கள், இமய மலைக்கு சென்றாலும், அங்கு ஒரு நாயர், “டீ ஸ்டால்” வைத்திருப்பார் என்ற அளவுக்கு பேசப் பட்டு வருகிறது. அத்தகைய மாநிலத்திலிருந்து தான் அடிக்கடி கற்பழிப்பு, செக்ஸ் என்றெல்லாம் செய்திகள் வருவதுண்டு. இப்பொழுது, எல்லாம் சேர்ந்த ஒரு குரூரமான செய்தி வெளிவந்துள்ளது. ஒரு மலையாள மாந்திரீகன் நரபலி கொடுத்துள்ளான் என்ற செய்தி தான் அது.

பகவல்சிங்சகலகலா வல்லவன்மாந்திரீகம் மூலம் பணம் பெற ஆசைப் பட்டது: பகவல் சிங் – உள்ளூர் சிபிஎம் கட்சி நிர்வாகி, தலைவர் என்றெல்லாம் குறிப்பிடப் படும் இவர் – மசாஜ் சிகிச்சையாளர், ஆயுர்வேத மருத்துவர், பாரம்பரிய வைத்தியர், ஹீலிங் நிபுணர் என்றும் அறியப் படுகிறார். அதாவது மருத்துவத்தில் சகலகலா வல்லவன் போன்று திகழ்கிறார் போலும். இவரது மனைவி லைலா – அதாவது, இது எந்தமத பெயர் என்று தெரியவில்லை. “பகவல் சிங்” என்றாலும் புரியவில்லை, இவர் சீக்கியரா, கிறிஸ்துவரா தெரியவில்லை. எல்லாமே செக்யூலரிஸத்தின் உச்சத்தில் இருப்பதாகத் தெரிகிறது. இந்த, பத்தினம்திட்டா மாவட்டம் திருவல்லாவைச் சேர்ந்த தம்பதி தான், பணக்காரராக வேண்டும் என்ற ஆசையில் மாந்த்ரீகத்தை நம்பி, தமிழகத்தைச் சேர்ந்தவர் உட்பட இரண்டு பெண்களை நரபலி கொடுத்துள்ளனர்[1] என்கிறது விகடன். இங்கு விகடனுக்கு “தமிழகத்தைச் சேர்ந்தவர்” என்று மட்டும் தான் புலப்படுகிறது. அதிகமான கடன் மற்றும் பணப்பிரச்சினைகள் உள்ளன. பணப்பிரச்சினையில் இருந்து விடுபடவும், பணக்காரனாக மாறுவதற்கும் என்ன செய்ய வேண்டும் என்று தவித்த நிலையில், இவ்வழியில் மாட்டிக் கொண்டனர், என்றும் இன்னொரு ஊடகம் கூறுகிறது. மந்திரத்தால் மாங்காய் காய்க்குமா என்றால், கேரளாவில் நம்புவதற்கு ஆட்கள் இருக்கிறார்கள் என்று தெரிகிறது.

பகவல் சிங்சிபிஎம் கட்சிக் காரர் கூட: முக்கிய குற்றவாளியான ஆயுர்வேத மருத்துவர் பகவல்சிங், கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினர் என்றும் கட்சியிலிருந்து பணியாற்றி வந்திருந்தார் எனவும் பல்வேறு தகவல்கள் வெளியாகின[2]. இது குறித்து பலரும் விமர்சனம் செய்ய தொடங்கினர்[3]. அது கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்த் வருகிறது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்தினம்திட்டா பகுதி குழு செயலாளர் பி.ஆர்.பிரதீப் (CPM Pathanamthitta area secretary P.R. Pradeep) ANI செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில்[4], “பகவல்சிங் சில காலம் எங்களுடன் சேர்ந்து பணியாற்றினார். அப்போது அவர் முற்போக்காக இருந்தார். ஆனால் கட்சி உறுப்பினராக இல்லை. பின்னர் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட பிறகு அவர் மதவாதியாக மாறிவிட்டார்,” என்று கூறியுள்ளார். முதல் மனைவியை 15 வருடங்களுக்கு முன்னர் விவாக ரத்து செய்தார். சிபிஎம் ஊட்டங்களில் கலந்து கொண்டுள்ளார். புகைப் படங்களும் உள்ளூர் மலையாளம் நாளிதழ்களில் வெளியாகியுள்ளன. இருப்பினும், இப்பொழுது, இப்பிரச்சினை உண்டாகியுள்ள நிலையில் கட்சி மறுக்கிறது.

ஷிகாப் என்ற முஹம்மது மந்திரவாதி தொடர்பு கொண்டது: எர்ணாகுளம் மாவட்டம், பெரும்பாவூர் பகுதியைச் சேர்ந்த ஷிகாப் என்ற முஹம்மது ஷாஃபி போலி ஃபேஸ்புக் அக்கவுன்ட் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். அந்த அக்கவுன்ட் மூலம் பத்தனம்திட்டா மாவட்டம், இலந்தூரிலுள்ள வைத்தியர் பகவல் சிங்கைத் தொடர்புகொண்டார். அப்போது ஐஸ்வர்யம் பெருகவும், செல்வம் செழிக்கவும் வழிகாட்டப்படும் எனத் தகவல் தெரிவித்திருக்கிறார். விளம்பரங்களும் கொடுத்திருக்கிறார் என்று ஊடகங்கள் கூறுகின்றன. பின்னர் அதற்கு ஒரு பூஜை செய்ய வேண்டும் எனக் கூறியிருக்கிறார். பகவல் சிங்கின் வீட்டுக்குச் சென்று அந்த இடங்களைப் பார்வையிட்டுவிட்டு, ஒரு பெண்ணை நரபலி கொடுத்து பூஜை செய்ய வேண்டும் எனக் கூறியதுடன், அந்த பெண்ணை நானே அழைத்து வருகிறேன் எனவும் முஹம்மது ஷாஃபி கூறியிருக்கிறார். இதையெல்லாம் சிபிஎம் நிர்வாக எப்படி நமினார் என்று தெரியவில்லை. பொன்னுருண்ணியைச் சேர்ந்த லாட்டரி விற்பனையாளரான பத்மா மற்றும் அங்கமாலி அருகே காலடியில் வசிக்கும் ரோஸ்லின் ஆகியோரின் பணத்தேவையை பயன்படுத்தி, இருவரையும் வெவ்வேறு மாதங்களில் கடத்தி வந்து நரபலி கொடுத்துள்ளதாக போலீஸ் நடத்திய ஆரம்பநிலை விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இந்த கோர-குரூர சம்பவம் நாட்டையே உலுக்கியிருக்கிறது[5]. பத்தனம்திட்டா மாவட்டம், இலந்தூரில் ஐஸ்வர்யமும் செல்வமும் பெருக பூஜை செய்வதாக போலி மந்திரவாதியான முஹம்மது ஷாஃபி என்ற ஷிகாப் வழிகாட்டுதல்படி பாரம்பர்ய வைத்தியர் பகவல் சிங், அவரின் மனைவி லைலா ஆகியோர் நரபலியில் ஈடுபட்டுள்ளனர். நரபலி கொடுத்த சம்பவம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன, என்று தமிழில் இணைதள ஊடங்கள் விவரிக்கின்றன.

ரோஸ்லியை முஹம்மது ஷபி கூட்டி வந்தது: முஹம்மது ஷாஃபி எர்ணாகுளத்துக்குச் சென்று காலடிப் பகுதியில் தனியாக வாடகைக்கு வசித்துவந்த, கடவந்தறா பகுதியில் லாட்டரி விற்பனை செய்துவந்த / ஆயுர்வேத மருந்து விற்பனை செய்யும்[6]  ரோஸ்லி (59)-க்கு பத்து லட்சம் ரூபாய் பணம் கொடுப்பதாகக் கூறி திருவல்லாவுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.  ரோஸ்லியின் மகள் உத்தரப்பிரதேசத்தில் வசித்து வருகிறார். நிர்வாண படத்தில் நடித்தால் பல லட்சம் ரூபாய் பணம் கிடைக்கும் என கூறி ரோஸ்லியை நம்பவைத்துள்ளார்[7]. அதாவது ஓஸ்லியும் ஒப்புக் கொண்டாள் என்றாகிறது. அப்படியென்றால், அத்தகைய வியபாரமும் அங்கு நடந்து வருகிறது என்றாகிறது. அதற்கு ரோஸ்லி சம்மதித்துள்ளார்[8]. பின்னர், ரோஸ்லியை பகவல் சிங்கின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். ஆபாச படத்தில் நடிப்பதற்காக என்று கூறி, ரோஸ்லியை கட்டிலில் படுக்க வைத்து கை, கால்களை கட்டினர், என்று விவரிக்கிறது தினகரன்[9]. இதனையடுத்து அந்த பெண்ணை மருத்துவர் பகவல் சிங் வீட்டிற்கு அழைத்து வந்து கட்டிலில் நிர்வாணமாக கட்டி வைத்தான்[10]. அப்பொழுது, போர்ன் படம் எடுப்பதாக ரோஸ்லி நினைத்தாள் என்று சில ஊடகங்கள் கூறுகின்றன. “நிர்வாண பூஜை” என்று சில வர்ணிக்கின்றன. பிறகு  கொலை செய்துள்ளனர் என்று முடிக்கின்றன[11]. உடலுறவு கொண்டான், விடிய விடிய செக்ஸ் டார்ச்சர் என்றெல்லாம் ஊடகங்கள் தலைப்பிட்டு செய்திகளை வெளியிட்டன[12]. தலைப்புகள் இட்டாலும், உள்ளே ஒன்றும் விவரங்கள் இல்லை.

© வேதபிரகாஷ்

14-10-2022.


[1] விகடன், கேரளா: இரட்டை நரபலி; 22 துண்டுகளாக்கி பூஜை; மண்ணில் புதைத்து மஞ்சள் நட்டனர்அதிர்ச்சித் தகவல்கள்!, Published:Yesterday at 9 AMUpdated:Yesterday at 10 PM

[2] தமிழ்.ஒன்.இந்தியா, நரமாமிச கும்பல்.. கேரளாவில் நரபலி தந்து சடலத்தை சாப்பிட்ட கொடூரன்.. குற்றவாளி சிபிஎம் உறுப்பினரா?, By Halley Karthik Updated: Wednesday, October 12, 2022, 20:54 [IST].

[3] https://tamil.oneindia.com/thiruvananthapuram/bhagwalsingh-who-gave-human-sacrifice-in-kerala-is-not-a-communist-party-member-party-explanation/articlecontent-pf781895-480215.html

[4] AsiaNetNews, Party finally confirms, ‘Bhagwal Singh accused in human sacrifice case is CPM worker’, Web Team, First Published Oct 12, 2022, 1:15 PM IST; Last Updated Oct 12, 2022, 1:15 PM IST.

https://www.asianetnews.com/kerala-news/bhagaval-singh-was-an-active-member-of-cpm-says-cpm-pathanamthitta-area-secretary-rjmqvl

[5] https://www.vikatan.com/news/crime/kerala-human-sacrifice-issue-shocking-details

[6]  என்கிறது தினகரன் மற்றும் உள்ளூர் நாளிதழ்கள்.

[7] தமிழ்.சமயம், நிர்வாண பூஜையும், நரபலி விருந்தும்; சைக்கோ ஷபியை சிக்க வைத்த செல்போன்!,  Mageshbabu Jayaram | Samayam Tamil | Updated: 13 Oct 2022, 7:55 am

[8] தினகரன், தர்மபுரியை சேர்ந்தவர் உள்பட கேரளாவில் 2 பெண்கள் நரபலி: ஆபாச படத்தில் நடித்தால் ரூ.10 லட்சம் தருவதாக கூறி அழைத்து வந்து கொலை; போலி மந்திரவாதி, தம்பதி வெறிச்செயல், 2022-10-12@ 00:14:06

[9]  https://www.dinakaran.com/news_detail.asp?Nid=805964

[10] https://tamil.samayam.com/latest-news/india-news/how-habitual-offender-shafi-arrested-and-kerala-human-sacrifice-case-came-out/articleshow/94822646.cms

[11] தமிழ்.இந்தியம்.எக்ஸ்பிரஸ், விடிய விடிய செக்ஸ் டார்ச்சர்.. மனித கறி சாப்பிட்ட மிருகங்கள்.. கேரள பயங்கரம்..!, Written by WebDesk, October 12, 2022 11:17:02 pm.

[12] https://tamil.indianexpress.com/india/kerala-human-sacrifice-case-probe-points-to-accuseds-cannibalism-and-sexual-perversion-say-police-524589/

திராவிடமணி –திராவிட பிடோபைல், சிறுவர் கற்பழிப்பாளி, ஓரின சேர்க்கை மிருகம் உருவாக காரணம் என்ன?

மே 6, 2019

திராவிடமணி –திராவிட பிடோபைல், சிறுவர் கற்பழிப்பாளி, ஓரின சேர்க்கை மிருகம் உருவாக காரணம் என்ன?

Coimatore rave party

கோயம்புத்தூரைச் சுற்றிப் பெருகி வரும் பாலியல் குற்றங்கள்: சமீப காலத்தில் கோயம்புத்தூரை சுற்றியுள்ள பகுதிகளில் பாலியல் குற்றங்கள் மற்றும் பாலியல் ரீதியில் நடக்கும் சீரழிவுகள் பற்றிய செய்திகள் அதிகமாகவே வந்து கொண்டிருக்கின்றன. இதையெல்லாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. சமீபத்தில் ஏன், இவ்விடங்களில் “ரிசார்ட்” போன்ற இடங்கள் அதிகமாகியுள்ளன, மற்ற மாநிலத்தவர், குறிப்பாக, கேரளாவினர் அதிகம் வந்து, வியாபாரங்களில் ஈடுபடுகின்றனர், முதலியவற்றை விசாரிக்க வேண்டும். கூட்டு பாலியல் கற்பழிப்பு சீரழித்தது மிகவும் அளவுக்கு நடந்துள்ள குற்றங்கள் திகைப்படைய செய்கின்றன. வழக்கம்போல திராவிடக் கட்சியினர் குற்றம் சாட்டிக் கொண்டு உண்மையை விவரங்களை விவகாரங்களை மறைக்கத்தான் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அரசுதுறை ரீதியில், இரு கட்சிகளுக்கும், எல்லா இடங்களிலும் விசுவாசிகள் இருப்பதால், விவகாரம் அமுக்கப் படலாம், மக்களும் மறந்து விடலாம். ஆனால், பிரச்சினை மறக்க முடியாத அளவுக்கு, பாதிக்கப் பட்ட மனங்களில் ஏற்படுத்தியுள்ளன. அவர்கள் அவற்றிலிருந்து, மீண்டு, புதிய வாழ்க்கைக்கு மீளவே காலம் ஆகும்.

Dravidamani pedophile arrested-2

திராவிடமணி யார்?: அந்நிலையில், ஒரு திராவிட சித்தாந்தி, இப்பொழுது சிக்கியுள்ளது, திகைப்படையச் செய்கிறது. நீலகிரி அருகே, சிறுவர்களுக்கு ஒயின் கொடுத்து மயக்கி, பாலியல் சீண்டல்களில் ஈடுபட்ட, தி.மு.க., பிரமுகரை, ‘போக்சோ’ சட்டத்தில், போலீசார் கைது செய்தனர்[1], என்று செய்தியை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. ஏனெனில், நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகேயுள்ள நெல்லியாளம், டான்டீ சரகம்- –3 பகுதியைச் சேர்ந்தவர் திராவிடமணி, 54 வயதான ஆள்[2];

  • தி.மு.க., கலை, இலக்கிய, பகுத்தறிவு பேரவையின், மாவட்ட துணை அமைப்பாளர்[3].
  • கொளப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி வளர்ச்சி குழு தலைவர்.
  • தனது தலைவர் ஸ்டாலினுக்கு ஆதரவாக சமீபத்தில் போராட்டங்களை நடத்திய ஆள்.
  • திக கூட்டங்களிலும் கலந்து கொண்டு பெரியாரிஸவாதி.
  • ‘இவர், 2016 சட்டசபை தேர்தலில், கூடலுார் சட்டசபை தொகுதியில், தி.மு.க., சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தவர்;
  • நுாலகங்கள், பள்ளிகளில் பல பொறுப்புகள் வகித்துள்ளார்’

என்று அரசியல், ஆதிக்கம் முதலிய பதவி, பின்னணி முதலிய விவகாரங்கள் பட்டியல் இடப்படுகின்றன[4].

Tamilnadu child rapist- data

பிடோபலுக்கு வேண்டிய குணங்கள் எல்லாமே திராவிடமணியிடத்தில் இருந்தது: இப்போதைக்கு, இவனைப் பற்றிய விவரங்கள் குறைவாகவே செய்திகளில் வந்துள்ளன[5].

  • இவர், தன் வீட்டருகில் உள்ள சிறுவர்களுக்கு, ‘லேப்டாப்’பில் சினிமா காண்பிப்பது,
  • ‘கேம்ஸ்’ விளையாட வைப்பது,
  • சைக்கிள் ஓட்ட கற்றுத் தருவது

போன்றவற்றை செய்து வந்துள்ளார்[6]. ஆனால், என்னத்தை காண்பித்தார் போன்ற விவகாரங்கள் தெரியவில்லை. “சைக்கிள் ஓட்ட கற்றுத் தருவது” என்பது, குழந்தைகளை நெருக்கமாக, தொட்டு, செயல்பட கூடிய நிலையைக் காட்டுகிறது. விழும் நிலையில் பிடிக்கும் நிலை, நெருக்கத்தை, நட்பை, நம்பிக்கையை ஏற்படுத்தும். இது பிடோபைலுகளுக்கு அதிகமாக உதவும். மற்ற சாதாரணமான நேரங்களில், அதே போல தொடுவது, முதலிய வேலைகளை செய்தாலும், வித்தியாசமாகத் தெரியாது. திரும்ப-திரும்ப செய்யும் போது, “கன்டிஷன்” ஆகிவிடும். ஆகவே, தன்னுடைய பள்ளி முதலிய பதவிகளை பயன்படுத்திக் கொண்டு, இத்தகைய வேலைகளை செய்ததில் வியப்பில்லை. ஆனால், கண்டு பிடித்து, நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அது இப்பொழுது தான், நடந்துள்ளது போலும்.

Dravidamani pedophile arrested-Dinamalar, 06-05-2019, Chennai, p.5

நெருக்கத்தைப் பயன்படுத்தி, மிருகம் பாலியிலில் ஈடுபட்டது: அந்நிலையில், சில சிறுவர்களை வீட்டிற்கு அழைத்துள்ளான் போலும் அல்லது கேம்ஸ் விளையாட வழக்கம் போல, வந்திருக்கலாம். சீண்டல், சில்மிஷம் நிலைகள், எல்லைகள் அதிகமாகியதால், மிருக போதை கொண்ட அவன், தீவிர பாலியலில் இறங்க திட்டமிட்டுள்ளான். அப்போது, இரு சிறுவர்களுக்கு, வீட்டில் தயாரித்த நெல்லிக்காய், திராட்சை ஒயின் வழங்கி, மயக்கம்அடைய செய்து, பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறான். இதிலிருந்தே, அவனது வக்கிரத்தை அறிந்து கொள்ளலாம். புலி இறையை அடைய திட்டமிட்டே பதுங்கி வேலை செய்திருக்கிறது என்று தெரிகிறது. பிறகு, அச்சிறுவன் நடந்ததை உணர்திருக்கிறான். அதனால், திராவிடமணி பாலியல் தொல்லை கொடுத்ததாக, தந்தையிடம் கூறியிருக்கிறான்.

Dravidamani pedophile arrested-1

எல்லைகள் மீறிய போது, புகார் கொடுக்கப் பட்டது, கைதானது: “ஒரு சிறுவனின் தந்தை, சேரம்பாடி போலீசில் புகார் கொடுத்தார்” என்று செய்தி வந்துள்ளது[7]; திராவிடமணியோ பெரிய செல்வாக்குக் கொண்டு அரசியல்வாதி. அதனால், போலீஸார் வழக்குப் பதிவு செய்யவில்லை. இதனால், தந்தை ‘சைல்டு லைன்’ போன்ற அமைப்பை அணுகியுள்ளார். விவகாரத்தின் தன்மை அறிந்து ‘சைல்டு லைன்’ நிர்வாகிகள், நடவடிக்கை எடுக்க, போலீசாரிடம் வலியுறுத்தினர்[8]. இதனால், வேறு வழியின்றி, போலீசார் விசாரணை நடத்தி, ‘போக்சோ’ சட்டத்தில், திராவிட மணியை கைது செய்தனர்[9]. ‘இவர், 2016 சட்டசபை தேர்தலில், கூடலுார் சட்டசபை தொகுதியில், தி.மு.க., சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தவர்; நுாலகங்கள், பள்ளிகளில் பல பொறுப்புகள் வகித்துள்ளார்’ என, போலீசார் தெரிவித்தனர்[10].

How Dravidian pedophiles are created

திராவிடமணி –திராவிட பிடோபைல், சிறுவர் கற்பழிப்பாளி, ஓரின சேர்க்கை மிருகம் உருவாக காரணம் என்ன?: இன்றைய சித்தாந்த போராட்டங்கள், சட்ட மோதல்கள், அரசியல் மயமான சமூக சிக்கல்கள், பொய்மை மிக்க பேச்சுகள், கண்துடைப்பு நடவடிக்கைகள், முதலியவற்றை கவனிக்கும் போது, சிறுவர் கற்பழிப்பு, ஓரினச் சேர்க்கை, பிடோபைல் போன்ற மிகக் கொடிய, குரூர குற்றங்கள் நடப்பதை ஜாக்கிரதையாக கையாள வேண்டியுள்ளது. அமெரிக்க / மேனாட்டு நாகரிக தாக்கம், சாதாரண மக்கள் வாழ்க்கையின் மீது ஏற்படுத்துகின்ற தாக்கம், கலச்சார முரண்பாடு, குழப்பம், மோதல்கள் எல்லாமே, சமூகத்தை பாதிக்கும் காரணிகளாக உள்ளன. இவற்றையெல்லாம் ஏற்றுக் கொள்வதா-மறுப்பதா என்ற நிலையிலும், ஆண்-பெண் உறவுகள், குடும்ப வாழ்க்கை, பெரியவர்களை மதித்தல் முதலியவையும் சம்பந்தப் பட்டுள்ளன. அதிகமாக, செக்ஸ், பாலியல் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுப்பதனால், பள்ளி-கல்லூரி நாட்களிலேயே அவற்றின் பால் ஈர்ப்பு ஏற்ப்டுகின்றது. இந்திய சமூகம், பாரம்பரிய காரணணிகளுட பினிப் பிணைந்துள்ளதால், தப்பித்துக் கொள்பவர்கள் இருக்கிறார்கள், ஆனால், மாட்டிக் கொள்பவர்கள் தாம் சீரழிகின்றனர். எதிர்ப்பு சித்தாந்தங்கள், சுலபமாக குற்றங்களை செய்ய தூண்டுகிறது. அரசியல் ஆதரவு இர்க்கும் போது, குற்றங்கள் மறைக்கப் படுகின்றன. இங்கு தான் நடுநிலை தேவைப்படுகிறது.

© வேதபிரகாஷ்

06-05-2019

How Dravidian pedophiles are created-malai malar

[1] தினமலர், ஒயின் கொடுத்து சிறுவர்களிடம் சீண்டல்: ‘போக்சோவில், தி.மு.., பிரமுகர் கைது, Added : மே 06, 2019 01:59.

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=2270324

தினமணி, திமுக பிரமுகர் போக்ஸோ சட்டத்தில் கைது, By DIN | Published on : 05th May 2019 11:58 PM

https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2019/may/05/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8B-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3146239.html

மாலைமலர், ஒயின்கொடுத்து சிறுவர்களுக்கு பாலியல் தொல்லைதி.மு.. பிரமுகர் போக்சோ சட்டத்தில் கைது, பதிவு: மே 06, 2019 16:30

https://www.maalaimalar.com/News/District/2019/05/06163048/1240335/harassment-for-children-DMK-member-arrested.vpf

கதிர்.நியூஸ், ஒயின் கொடுத்து சிறுவர்களிடம் பாலியல் சீண்டல் : தி.மு. பிரமுகர் கைது பாலியல்குற்றவாளிதிமுக ?, மே.6. 2019.

http://www.kathirnews.com/2019/05/06/dmk-cadre-arrested-in-pocso/

செய்திபுனல், சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த திராவிடமணி!! போக்ஸோ சட்ட்த்தின் கீழ் கைது!!, குந்தவை, 06-05-2019. 05:02:02.03 PM

http://www.seithipunal.com/tamilnadu/dmk-member-sex-torched-to-boy

[3] தினமணி, திமுக பிரமுகர் போக்ஸோ சட்டத்தில் கைது, By DIN | Published on : 05th May 2019 11:58 PM

[4] https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2019/may/05/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8B-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3146239.html

[5] மாலைமலர், ஒயின்கொடுத்து சிறுவர்களுக்கு பாலியல் தொல்லைதி.மு.. பிரமுகர் போக்சோ சட்டத்தில் கைது, பதிவு: மே 06, 2019 16:30

[6] https://www.maalaimalar.com/News/District/2019/05/06163048/1240335/harassment-for-children-DMK-member-arrested.vpf

[7] கதிர்.நியூஸ், ஒயின் கொடுத்து சிறுவர்களிடம் பாலியல் சீண்டல் : தி.மு. பிரமுகர் கைது பாலியல்குற்றவாளிதிமுக ?, மே.6. 2019.

[8] http://www.kathirnews.com/2019/05/06/dmk-cadre-arrested-in-pocso/

[9] செய்திபுனல், சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த திராவிடமணி!! போக்ஸோ சட்ட்த்தின் கீழ் கைது!!, குந்தவை, 06-05-2019. 05:02:02.03 PM

[10] http://www.seithipunal.com/tamilnadu/dmk-member-sex-torched-to-boy

வட்டிக்கு பணம் கொடுத்து, கற்பை சூரையாடிய கொடூரன் தண்டனை பெற்றதால் பெண்கள் பாதிப்பு நிவர்த்தியாகி விடுமா!

ஜனவரி 20, 2017

வட்டிக்கு பணம் கொடுத்து, கற்பை சூரையாடிய கொடூரன் தண்டனை பெற்றதால் பெண்கள் பாதிப்பு நிவர்த்தியாகி விடுமா!

dharmapuri-financier-jailed-19-01-2017-dailt-thanthi

சிவராஜின் செயல்திட்டமுறையும், காம-கொக்கோகமும், வீடியோ-சிடி விவகாரங்களும்: சிவராஜ் மீதான புகாரை பலப்படுத்த அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும், புகார் கொடுக்கும் பெண்களின் பெயர், முகவரி உள்ளிட்ட தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் சிவராஜால் பாதிக்கப்பட்ட மூன்று பெண்கள்  2014 அக்டோபர் 6ஆம் தேதி பாலக்கோடு போலீசில் புகார் கொடுத்துள்ளனர். அதில், “கடன் கொடுத்த நிதி நிறுவன அதிபர் சிவராஜ் எங்களின் வறுமை நிலையை சாதகமாக பயன்படுத்தி உல்லாசத்திற்கு அழைத்தார். வர மறுத்தபோது அதிக வட்டி தரவேண்டும் என்று கூறி மிரட்டினார். இதனால் பயந்து போன நாங்கள் அவரது பண்ணை வீட்டிற்கு சென்றோம். அங்கு சிவராஜ் எங்களை மிரட்டி உல்லாசமாக இருந்தார். இதனையடுத்து அவர் தனது செல்போனில் எடுத்த ஆபாச காட்சிகளை எங்களின் குடும்பத்தினருக்கு காட்டி விடுவதாக மிரட்டி, பலமுறை பண்ணை வீட்டிற்கு அழைத்து சென்று கற்பழித்தார்,” என்று கூறியுள்ளனர். தங்களை போல் இன்னும் ஏராளமான பெண்கள் சிவராஜால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அவர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

dharmapuri-financier-jailed-19-01-2017-vedaprakashபெண்மையை சுற்றியுள்ள சமுதாய-சட்டப் பிரச்சினைகள்: இதனையடுத்து புகார் கொடுத்த பெண்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், விசாரணை முழுவதையும் கேமராவில் பதிவு செய்துள்ளனர். புகாரின்பேரில் போலீஸார் நடத்திய புலன் விசாரணையில் சிவராஜ், அப் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் உள்பட 26-க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. பெண்களுக்கு முறைப்படி சட்டரீதியில் பாதுகாப்பு கொடுத்தல் போன்ற விவரங்கள்தெரியவில்லை. தற்போது போலீசார் நிதி நிறுவன அதிபர் சிவராஜ் மீது கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், சிவராஜால் பாதிக்கப்பட்ட பெண்கள் அவர் மீது தைரியமாக புகார் கொடுக்க முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். மூன்று பெண்களின் புகாரையடுத்து இந்த வழக்கு சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனால் சிவராஜை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்குள், இவ்வழக்கு முறையாக நடத்தப்படுமா என்ற சதேகம் வந்ததால், சிலர், பெரிய அளவில் விசாரணை தேவை என்று நினைத்தனர். இதை அரசியலாக்கும் விதத்தில், உள்ளூர் எம்.எல்.ஏ, தில்லி பாபு [சிபிஎம்] மற்றும் மகில இந்திய பெண்கள் இயக்கமும் சேர்ந்து ஆர்பாட்டம் நடத்தி, சிபி-சி.ஐ.டி விசாரணை தேவை என்று வற்புறுத்தினர்[1]. சிவராஜின் சொத்துகளும் பறிமுதல் செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்[2].

dharmapuri-financier-jailed-19-01-2017-sexபாதகர்கள் தண்டனை பெற்ற விவரங்கள்: இந்த வழக்கு தருமபுரி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் வழக்குரைஞர் ஆர். உமா மகேஸ்வரி ஆஜரானார். இந்த வழக்கில் மாவட்ட மகளிர் நீதிபதி எம். மீரா சுமதி 8-01-2017 [புதன்கிழமை] தீர்ப்பு வழங்கினார். முதல் குற்றவாளியான வட்டிக் கடைக்காரர் சிவராஜுக்கு பாலியல் பலாத்கார சட்டப்பிரிவில் நான்கு ஆயுள் தண்டனைகள் மற்றும் ரூ. 4,000 அபராதம் விதிக்கப்பட்டது[3].  மேலும், 67ஏ தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவின் கீழ் 12 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ. 2 லட்சம் அபராதமும், 66இ தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவின் கீழ் 8 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ. 40 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது[4]. அபராதத் தொகை மொத்தம் ரூ. 2.44 லட்சம்[5]. இச்சம்பவத்தில் செல்லிடப்பேசியில் இருந்த விடியோக்கள் வெளியே உலவக் காரணமாக இருந்தவன் அதே பகுதியைச் சேர்ந்த செல்லிடப்பேசி பழுதுபார்க்கும் தொழில் செய்து வந்தவன் மா. முன்னா[6]. அவனுக்கு பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் மொத்தம் 6 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 61 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது[7]. இரு குற்றவாளிகளின் கோரிக்கைகளை ஏற்று சிறைத் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கலாம் என்றும் நீதிபதி எம். மீரா சுமதி உத்தரவிட்டார்[8].

dharmapuri-financier-jailed-19-01-2017-video-1கற்பை சூரையாடிய கொடூரன் தண்டனை பெற்றதால் பெண்கள் பாதிப்பு நிவர்த்தியாகி விடுமா!: பாதகர்கள் தண்டனை பெற்றது சட்டப்படி நடந்துள்ளது என்றாலும், பெண்கள் பாதிப்பு சரிசெய்யமுடியாதது ஆகும். மனம் மற்றும் உடல் ரீதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கஷ்டங்களை, உபாதைகளை யார் சரிசெய்ய முடியும்? நடந்தது மாற்ற முடியும், சீர்செய்யமுடியும் என்ற நிலையாகாது.

  • ஒரு பெண் சீரழிந்தால், ஒரு குடும்பம் சீரழிகிறது;
  • ஒரு குடும்பம் சீரழிந்தால், ஒரு சமுதாயம் சீரழிகிறது;
  • ஒரு சமுதாயம் சீரழிந்தால், ஒரு தேசம் / நாடு சீரழிகிறது;

ஆகவே, குறிப்பிட்ட நாட்டின் மீது நடத்தப்படும் கலாச்சார தாக்குதல், இவ்வாறு பலநிலைகளில் பாதித்து, சீரழித்து வருவதை பொறுப்புள்ளவர்கள் மிக்க அக்கரையுடன் கவனிக்க வேண்டும். இன்றளவில், சினிமாநடிகைகளிடம் கற்பு, கலாச்சாரம், குடும்பம் முதலியவற்றைப் பற்றி கருத்து கேட்டு, விளம்பரம் செய்கிறார்கள். இதனால், அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவது போன்ற தோற்றத்தையும் ஏற்படுத்துகின்றார்கள். நிர்வாணமாக நடிப்பேன் என்று உரிமைகள் பேசி, அவ்வாறே தொழில் செய்யும் நடிகைகள் எப்படி முன்னுதாரணமாக இருக்க முடியும்?

© வேதபிரகாஷ்

20-01-2017

dharmapuri-financier-jailed-19-01-2017-video-2

[1] The Hindu, Plea for CB-CID probe , DHARMAPURI: OCTOBER 16, 2014 00:00 IST UPDATED: MAY 24, 2016 13:53 IST.

[2]The Communist Party of India (Marxist) staged a demonstration here at Palacode demanding CB-CID probe into the case of a local financier who was involved in sexual harassment of women. The financier Sivaraj was arrested last week [17-05-2016] on the charges of sexually harassing women. The demonstration was led by CPI (M) MLA Dilli Babu. Members of the All India Democratic Women’s Association also took part in the demonstration. The CPI (M) also demanded confiscation of the property belonging to Sivaraj.

 http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/plea-for-cbcid-probe/article6504755.ece

[3] தினமணி, பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து விடியோ எடுத்த வழக்கில் வட்டிக் கடைக்காரருக்கு 4 ஆயுள் தண்டனை, By தருமபுரி,  |   Published on : 19th January 2017 08:44 AM.

[4] http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2017/jan/19/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-4-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-2634850.html

[5] தினகரன், பெண்களை ஆபாச வீடியோ எடுத்து பலாத்காரம், பாலக்கோடு பைனான்சியருக்கு 4 ஆயுள் தண்டனை : தர்மபுரி கோர்ட் தீர்ப்பு, 2017-01-19@ 01:05:08

[6] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=273446

[7] The Hindu, Financier gets four life sentences for sexual abuse, DHARMAPURI: JANUARY 19, 2017 00:00 IST; UPDATED: JANUARY 19, 2017 04:00 IST.

[8] The District Mahila Court here on Wednesday [18-01-2017] convicted financier M. Sivaraj (44) of Palacode to four life sentences and imposed a fine of Rs. 2.44 lakh on him for sexually abusing women. The life sentences are to run concurrently. According to prosecution, Sivaraj sexually abused women who had availed themselves of loans from his firm, but could not repay the dues in time. He videographed the act on his mobile phone and used this to threaten them into submitting to sexual abuse again. The entire scandal came to light when Sivaraj gave his mobile phone to a local service centre to set right a snag. Munna, the owner of the service centre, after witnessing the obscene videos spread them in social media. On a complaint preferred by Vijana, village administrative officer, the Palacode Police arrested Sivaraj and M. Munna in October 2014 and filed a case in the District Mahila Court. The Mahila Court Judge M. Meera Sumathi found both the accused guilty of the charges. The Judge convicted Sivaraj to four life sentences and a fine of Rs. 4,000, eight years imprisonment and a fine of Rs. 40,000 under Section 66-E of the Information Technology Act 2000 (violation of privacy) and another 12 years imprisonment with a fine of Rs. 2 lakh under Section 67-A (publishing or transmitting obscene material in electronic form). The Judge sentenced Munna to three years imprisonment and a fine of Rs. 50,000 under Section 67-A of IT Act, two years and a fine of Rs. 10,000 under 66-B of IT Act and one year imprisonment and a fine of Rs. 1,000 under Section 292 IPC (publicly exhibiting or circulating obscene material). Munna’s prison terms will run concurrently.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/Financier-gets-four-life-sentences-for-sexual-abuse/article17057897.ece

வட்டிக்கு பணம் கொடுத்து, கற்பை சூரையாடிய கொக்கோக வன்புணர்ச்சியாளனும், சமூக சீரழிவு தீவிரவாதங்களும்!

ஜனவரி 20, 2017

வட்டிக்கு பணம் கொடுத்து, கற்பை சூரையாடிய கொக்கோக வன்புணர்ச்சியாளனும், சமூக சீரழிவு தீவிரவாதங்களும்!

dharmapuri-financier-jailed-19-01-2017-nakkeeran

மேனாட்டு கலாச்சார சீரழிவுகளால் இந்திய பெண்மை தாக்கப்படுவது: இக்கால சமூக சீரழிவுகளில் பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுவது, பலவிதங்களில் வெளிப்பட்டு வருகின்றது. விசயம் எதுவாக இருந்தாலும், பெண்மை தாக்கப்படுவது, பாலியல் ரீதியாகவே இருந்து வருகிறது. மேலும், மேனாட்டு முறை பாலியல் விவகாரங்களால், வக்கிரமான எண்ணங்களால் ஆண்கள் பெண்களை தாக்கி வருகின்றனர். பள்ளி, கல்லூரி, ஆதலன் – காதலி, குடும்பம், கண்வன் – மனைவி, என்ற நிலைகளில், உறவுகளில், சமூக ஊரையாடல்கள், சந்திப்புகள் மற்றும் பரஸ்பரங்களில் வக்கிரம் உச்சங்களை தொடுகின்றன. போர்னோகிராபி என்ற முறையும் அதிகமாக பாதித்து வருகின்றது. செல்போன், இன்டெர்நெட் முதலியவை இந்த வக்கிரங்களுக்கு தீனி போட்டு வருகின்றன. மேலும்-மேலும் எத்தனை பாலியல் வன்மங்கள், வக்கிரங்கள், சீரழிவுகள் வெளிவந்தாலும், அத்த்கைய அழிவுகள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. கற்பைப் பற்றி பேச முடியாது என்ற நிலையை சமுதாய தீவிரவாதிகள் பயங்கரத்தை உண்டாக்கி வருகின்றனர். இதைப் பற்றி கண்டித்து பேசினால், எழுதினாலும், யாரும் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை. செக்ஸ் எல்லோரையும் ஆட்டி வைக்கின்றது என்றே தெரிகின்றது.

dharmapuri-financier-jailed-19-01-2017-dinnathanthi

நிதியுதவி செய்து, பெண்களின் கற்பை சூரையாடிக கயவன்: தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு மேலத்தெருவை சேர்ந்தவர் சிவராஜ். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். நிதி நிறுவனம் நடத்தி வந்த சிவராஜ் தன்னிடம் வரும் பெண்களிடம் தாராளமாக வட்டிக்கு கடன் கொடுத்தான். கடன் திருப்பித் தரமுடியாத பெண்களை மிரட்டியும், கடன் வாங்க வரும் பெண்களை மயக்கியும், உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது, என்று தான் தினத்தந்தி கதையை சொன்னது. அதாவது, அவ்வாறு செய்தால் கடன் திருப்பிக் கொடுக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறான். வட்டியை குறைக்க கடன் வாங்கும் பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி தனது காம வலையில் வீழ்த்தினான்[1]. உல்லாசமாக இருப்பதற்காக பாலக்கோடு அருகே 10 ஏக்கர் பரப்பளவில் உள்ள குப்பைகொட்டாயில் உள்ள தனது பண்ணை வீட்டை சிவராஜ் பயன்படுத்தி வந்துள்ளான்[2]. அங்கு பெண்களை அழைத்து வரும் சிவராஜ் தனது விலை உயர்ந்த செல்போன் கேமராவில் அவர்களுக்கு தெரியாமல், உல்லாசமாக இருக்கும் ஆபாச காட்சிகளை வீடியோ எடுத்துள்ளான்[3]. இங்குதான் அவனது திட்டம் வெளிப்படுகிறது. அதாவது முறைதவறி மற்ற பெண்களை சீரழித்தது இல்லாமல், வக்கிரத்துடன் இருப்பதும் தெரிய வருகிறது. பின்னர் இந்த வீடியோக்களை தனது நண்பர்களுக்கு அனுப்பியும், தனியாக இருக்கும் நேரத்தில் அதை பார்த்தும் ரசித்துள்ளான்[4]. இது அடுத்து கோரநிலையைக் காட்டுகிறது. மற்றவர்களின் தொடர்புகளையும் இது காட்டுகிறது. மேலும், இந்த வீடியோக்களை சம்பந்தப்பட்ட பெண்களிடம் காட்டி அவர்களை மிரட்டி மீண்டும், மீண்டும் உல்லாசமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதவது, இருபக்கமும், அவனது வக்கிரம் வெளிப்பட்டது.

dharmapuri-financier-jailed-19-01-2017-dinamani

செல்போன் பழுதுபார்த்தல், உடலுறவு காட்சிகள் வெளியாதல், பணம் கேட்டு மிரட்டல்: கடந்த வாரம் [அக்டோபர் 6, 2014] இவரது செல்போனில் பழுது ஏற்பட்டதால் அதை சரி செய்ய பாலக்கோட்டில் உள்ள ஒரு கடையில் கொடுத்தபோது செல்போனில் இருந்த மெமரி கார்டை பார்த்த கடை ஊழியர் அதில் சிவராஜ் பல பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்துள்ளார். பின்னர் அதனை தனது நண்பர்களுக்கு அனுப்பி வைத்தும், இணையதளத்தில் வெளியிட்டும் இருக்கிறார். செல்போனில் உள்ள ஆபாச வீடியோக்களை வெளியிடாமல் இருக்க சிவராஜிடம் செல்போன் கடைக்காரர், ரூ.15 லட்சம் பேரம் பேசியதாகவும், இதற்காக சிவராஜ் அவரை தனது பண்ணை வீட்டிற்கு வரவழைத்து தர்ம அடி கொடுத்ததாகவும் தெரிகிறது[5]. உயிர் பிழைத்தால் போதும் என்று பண்ணை வீட்டில் இருந்து ஓடி வந்தவர் இது பற்றி கிராம நிர்வாக அலுவலரிடம் சிவராஜ் குறித்து தெரிவித்தார். அதன் பேரிலேயே கிராம நிர்வாக அலுவலர் போலீசில் புகார் செய்துள்ளார். அதைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவராஜை கைது செய்தனர்[6].  இவ்வாறாக இவ்விவகாரம் வெளிவந்தது.

dharmapuri-financier-jailed-19-01-2017-nakkeeran-1

போலீசாரிடம், ஆபாச சிடி விற்ற முன்னா கூறியது[7]: “சிவராஜின் மொபைல் போன், பழுதுநீக்க கொண்டுவந்த போது, மெமரி கார்டில், செக்ஸ் காட்சிகள் இருந்தன. இதை வைத்து, பணம் சம்பாதிக்க முடிவு செய்தேன். மெமரி கார்டை தரும்பித் தர, 15 லட்சம் ரூபாய் பேரம் பேசினேன். சிவராஜ் சம்மதித்தார். பணத்தை பெற, தன் பண்ணை வீட்டுக்கு அழைத்தார். அங்கு சென்றபோது, அடித்து உதைத்தார். இதனால், ஆத்திரத்தில், மெமரி கார்டில் இருந்த செக்ஸ் காட்சிகளை, நண்பர்களுக்கு அனுப்பினேன். சிவராஜ் கைதானதை அறிந்தவுடன், தலைமறைவாகிவிட்டேன்.“, இவ்வாறு, முன்னா கூறியுள்ளார். இதையடுத்து, சிவராஜூடன் உடந்தையாக இருந்த, இளம்பெண்ணையும் போலீசார் விசாரித்தனர். பண்ணை வீட்டுக்கு, பெண்களை அழைத்து சென்ற ஆட்டோ டிரைவரையும், போலீசார் தேடினர், விசாரித்தனர்[8]. பிறகு போலீஸார், அவரிடம் இருந்த செல்போன், உல்லாச பட வீடியோ காட்சிகள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அவரது பண்ணை வீட்டில் சோதனை நடத்திய போலீசார் அங்கு உணர்ச்சியை தூண்டும் மருந்து பாட்டில்கள், மாத்திரைகளையும் பறிமுதல் செய்துள்ளனர். தாவது, சிவராஜ் அனைத்தையும் திட்டமிட்டுதான் செய்துள்ளான். போர்னோகிராபி படங்கள் எடுக்க வேண்டும், அதை வைத்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற வக்கிரபுத்தியும் தெரிந்தது. இணைதளத்தில், சிவராஜ் பெயரில் பல வீடியோக்கள் உலாவந்துக் கொண்டிருப்பது தெரிகிறது. தற்போது சிவராஜ் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். பொதுவாக பல பெண்கள் சம்பந்தப்பட்டிருந்ததால், அவர்கள் தயக்கத்துடன் இருந்தார்கள் என்றும் புலப்படுகிறது.

dharmapuri-financier-jailed-19-01-2017-nakkeeran-3

இரண்டு பெண்களுடன் வாழ்ந்து, பல பெண்களை நாடி அலைந்த காமுக வக்கிர வன்புணர்வாளன்: சிவராஜ் கடந்த 15 வருடங்களாக பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். சிறு வயது முதலே பெண்கள் மீது அதிக நாட்டம் கொண்டவராக இருந்துள்ளார்[9]. சிவராஜின் இந்த குணம் பிடிக்காத காரணத்தால், அவரது முதல் மனைவி லதா, கடந்த 8 வருடங்களுக்கு முன் விவாகரத்து பெற்று சென்றார்[10]. பின்னர் 2வதாக அனுராதா என்ற பெண்ணுடன் சிவராஜ் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தான் பெண்களை மிரட்டி தனது வலையில் வீழ்த்தி உள்ளார். இந்த விவகாரத்தில் மேலும் 58 வீடியோக்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிடி விற்பனை செய்தவர் கைது பாலக்கோடு பகுதியில் உள்ள செல்போன், சிடி கடைகளில் நேற்று போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பிரபு (26) என்பவர், தனது செல்போன் கடையில் சிவராஜின் பாலியல் படங்களை சிடியில் பதிவு செய்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்த அவரை கைது செய்த போலீசார், மெமரி கார்டு, கம்ப்யூட்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். போலீசாரின் தீவிர நடவடிக்கைகளுக்கு அச்சமடைந்து, பாலக்கோடு பகுதியில் உள்ள பெரும்பாலான சிடி கடைகள் கடந்த சில தினங்களாக மூடப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள் என்பது தெரிந்த விசயமே. “மா. முன்னா” யார் என்று ஊடகங்கள் குறிப்பிடவில்லை.

© வேதபிரகாஷ்

20-01-2017

palacode-sivaraj-arrested-malaimalar

[1] தமிழ்.ஒன்.இந்தியா, 68 பெண்களின் வாழ்க்கையை சீரழித்த தர்மபுரி சிவராஜுக்கு 4 ஆயுள் தண்டனை, By: Karthikeyan, Updated: Wednesday, January 18, 2017, 23:41 [IST]

[2] http://tamil.oneindia.com/news/tamilnadu/dharmapuri-financier-was-gets-4-time-life-imprisonment-272101.html

[3] நக்கீரன், 68 பெண்களுடன் உல்லாசம்வீடியோதர்மபுரி சிவராஜ்க்கு 4 ஆயுள் தண்டனை, பதிவு செய்த நாள் : 18, ஜனவரி 2017 (18:56 IST); மாற்றம் செய்த நாள் :18, ஜனவரி 2017 (22:26 IST).

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=182157

[4] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=182157

[5] தினத்தந்தி, செக்ஸ் வீடியோ விவகாரம்: நிதி நிறுவன அதிபரிடம் ரூ.15 லட்சம் கேட்டு செல்போன் கடைக்காரர் பேரம்: புகார் கூறிய பெண்களிடம் போலீசார் விசாரணை, அக்டோபர் 13, 2014, 12:22 AM.

[6] http://www.dailythanthi.com/News/State/2014/10/13002201/Police-Enquired-over-Dharmapuri-Financier-Sex-Scanda.vpf

[7] தினமலர், நிதி நிறுவன அதிபர் செக்ஸ் லீலை : மொபைல் போனில் பரப்பியவர் கைது, பதிவு செய்த நாள்.அக்டோபர்.15, 2014.01.30.

[8]   http://www.dinamalar.com/news_detail.asp?id=1092204

[9] தமிழ்முரசு, பைனான்சியரின் புதிய வீடியோ சிக்கியது மேலும் 60 பெண்களை மிரட்டி உல்லாசம் அனுபவித்தது அம்பலம் பரபரப்பு தகவல்கள், பதிவு செய்த நாள் : 18, ஜனவரி 2017

[10] http://www.tamilmurasu.org/inner_tamil_news.asp?Nid=64463