திருமணம் செய்ய மறுத்த காதலி மீது ‘ஆசிட்’ வீச்சு : காதலன் கைது!

திருமணம் செய்ய மறுத்த காதலி மீது ‘ஆசிட்’ வீச்சு : காதலன் கைது
ஏப்ரல் 28,2010,00:00  IST

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=7357

Front page news and headlines today

திருச்சி : திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த காதலி மீது, ஆத்திரம் கொண்டு, அவரை கோவிலுக்கு வரச் சொல்லி, அவர் மீது’ ஆசிட்’ வீசிய காதலனை போலீசார் கைது செய்தனர்.

சென்னை நீலாங்கரையை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகள் சரண்யா (21). திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்டில் உள்ள இந்திரா காந்தி கல்லூரி ஹாஸ்டலில் தங்கி, இரண்டாம் ஆண்டு பி.காம்., படிக்கிறார். வார விடுமுறை நாட்களில், சரண்யா திருச்சி ரயில்வே ஜங்ஷன் பின்புறம் உள்ள கல்லுக்குழியில் உள்ள தன் தாத்தா, பாட்டி வீட்டுக்குச் செல்வது வழக்கம்.சரண்யா,சென்னையில் உள்ள பள்ளி ஒன்றில், மேல்நிலை பள்ளி படிப்பை படித்துள்ளார். அப் போது, அதேபள்ளியில் படித்த ஏழுமலை மகன் ராமு என்கிற ராமஜெயத்துடன் (24) நெருங்கி பழகியுள்ளார். ஐந்தாண்டாக இருவரும் காதலித்து வந்தனர். பள்ளிப்படிப்பை முடித்த ராமஜெயம், கார் டிரைவராக பணியில் சேர்ந்தார். ஆறுமாதங்களுக்கு முன், சரண்யாவை திருமணம் செய்து கொள்ள, அவரது தாயாரிடம் பெண் கேட்டு ராமஜெயம் சென்றார்.அதற்கு, சரண்யாவின் தாயார் மறுத்துள்ளார்.

திருமணத்துக்கு அம்மா மறுப்பு தெரிவித்ததால், சில மாதங்களாக ராமஜெயத்துடன் மொபைல் போனில் பேசுவதைக் கூட, சரண்யா தவிர்த்துள் ளார். இதனால் ஆத்திரமடைந்த ராமஜெயம், நேற்று காலை எட்டு மணிக்கு, சரண்யாவை சந்திக்க, சென்னையில் இருந்து திருச்சி கல்லுக்குழியில் உள்ள தாத்தா வீட்டுக்குச் சென்றார். அங்கிருந்த சரண்யாவிடம் பேசவேண் டும் என்று கூறியுள்ளார். சரண்யா, தன் பெரியம்மாவுடன் அருகிலுள்ள மாரியம்மன் கோவில் அருகே சென்று ராமஜெயத்துடன் பேசினார். அப்போது, ராமஜெயம் தன்னை திருமணம் செய்து கொள் ளுமாறு வலியுறுத்தினார். அதற்கு சரண்யா, வீட்டார் சம்மதமில்லாமல் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ராமஜெயம், தான் எடுத்து வந்த ‘ஆசிட்’ டை சரண்யாவின் முகத்தில் வீசிவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். ஆசிட் பட்டதில், சரண்யா முகத்தின் ஒரு பகுதி, கழுத்து ஆகியவை வெந்தது. அவர் எரிச்சல் தாங்க முடியாமல் அலறித்துடித்தார். சரண்யாவின் பெரியம்மா, உடனடியாக அங்கிருந்த டீக்கடையிலிருந்து இரண்டு குடம் தண்ணீரை கொண்டு வந்து சரண்யாவின் முகத்தில் ஊற்றினார். சரண்யா சிகிச்சைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். திருச்சியில், கல்லூரி மாணவி சரண்யா முகத்தில் ஆசிட் வீசியது குறித்து, கன்டோன்மென்ட் போலீசில் புகார் செய்யப்பட்டது. அவர்கள், ஆசிட் வீசி விட்டு தப்பி யோடிய ராம ஜெயத்தை பஸ் ஸ்டாண்ட், ஐங் ஷன் ஆகிய இடங்களில் தேடி வந்தனர்.

திருச்சி வக்கீல் ஒருவரின் உதவியோடு, ராமஜெயம் கன் டோன்மென்ட் போலீசில் சரணடைந்தார். ஆனால் கன்டோன்மென்ட் போலீ சாரோ ரயில்வே ஜங்ஷனில் பதுங்கியிருந்த ராமஜெயத்தை கஷ்டப்பட்டு பிடித்ததாக கூறினர். கைது செய்யப்பட்ட, ராமஜெயம் மீது போலீசார் வழக்குபதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

எவ்வளவு கோரமாக இருந்தாலும் திருமணம் செய்வேன்: காதலன் : ராமஜெயம் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: சரண்யாவுக்கும், எனக்கும் கடந்த 2008ம் ஆண்டு, திருப்பதியில் வீட்டுக்கு தெரியாமல் திருமணம் நடந்தது. நாங்கள் 5 நாட்கள் அங்கேயே குடும்பமும் நடத்தினோம். இது யாருக்கும் தெரியாது. அதன்பின் சரண்யாவின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது. பல ஆண்களுடன் அவர் மொபைலில் பேசியதை தெரிந்ததும் கேட்டேன். ஆனால், நான் அப்படியில்லை என்று மறுத்து விட்டார். அதன்பின் பல ஆண்களுடன் சரண்யா பழகிவருவதை தெரிந்து கொண்டேன். என்னையும் அவள் தவிர்த்து வந்தாள். அதனால் தான் எனக்கு கிடைக்காத காதலி, யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று ஆசிட் வீசினேன். ஆசிட் வீசியதில் அழகை இழந்த சரண்யா எவ்வளவு கோரமாக இருந்தாலும் திருமணம் செய்து கொள்ள தயாராக இருக்கிறேன். இவ்வாறு வாக்குமூலத்தில் ராமஜெயம் தெரிவித்துள்ளான்.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , ,

2 பதில்கள் to “திருமணம் செய்ய மறுத்த காதலி மீது ‘ஆசிட்’ வீச்சு : காதலன் கைது!”

  1. vedaprakash Says:

    பெண்கள் வன்கொடுமை சட்டத்தில் மாணவர் கைது
    ஏப்ரல் 28,2010,00:00 IST
    http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=18161

    சென்னை : கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், கடந்த மார்ச் 20ம் தேதி சி.பி.சி.ஐ.டி., கூடுதல் டி.ஜி.பி., அர்ச்சனா ராமசுந்தரத்திடம் புகார் கொடுத்தார். அதில், ‘மர்ம நபர் ஒருவர் தனது பெயரில் இ-மெயில் துவக்கி, எனது போட்டோவையும், மார்பிங் முறையில் தயாரித்த வீடியோ காட்சிகளையும், துன்புறுத்தும் நோக்கில் சோசியல் நெட்வொர்க் மற்றும் கல்லூரி மாணவர்களின் குரூப் இ-மெயில்களுக்கும் அனுப்பியுள்ளார்; அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தார். இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி., சைபர் கிரைம் போலீசார், தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி, பொள்ளாச்சி டி.கொட்டாம்பட்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டனை (23) கைது செய்தனர். மாணவியை துன்புறுத்தும் நோக்கில், போட்டோ சாப்ட்வேர் உதவியுடன் வீடியோ காட்சிகளை தயாரித்து, நெட்வொர்க்கில் உலவவிட்டது தெரிய வந்தது. மாணவியின் படம், மணிகண்டனின் பிரத்தியேக இ-மெயிலில் இருந்து கைப்பற்றப்பட்டது. கைதான மணிகண்டன், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

  2. vedaprakash Says:

    கள்ளக்காதலர்களால் பத்து குழந்தைகள் தவிப்பு
    ஏப்ரல் 28,2010,00:00 IST
    http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=18165

    நாகர்கோவில் : கள்ளக்காதலில் ஏற்பட்ட காமத்தால், மூன்று கள்ளக் காதல் ஜோடிகள், குழந்தைகளைத் தவிக்க விட்டு, தலைமறைவாகி விட்டனர். இதனால் மூன்று குடும்பங்களில் பத்து குழந்தைகள் தவித்து வருகின்றனர்.

    கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சு கிராமம் அருகே மயிலாடிபுதூரை சேர்ந்தவர் சந்திரசேகரன் (42). இவரது மனைவி அம்மாபழம் (38). இவர்களுக்கு மூன்று குழந்தைகள். மயிலாடியை சேர்ந்தவர் ஹரிகோபால் (29). இவரது மனைவி விகிலா (25). இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கோவில்களில் ஏடு வாசிக்க சென்ற இடத்தில் சந்திரசேகரனுக்கும், விகிலாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதற்கு இரு குடும்பத்திலும் எதிர்ப்பு ஏற்பட்டதால் சந்திரசேகரனும், விகிலாவும், அவரவர் குழந்தைகளை தவிக்க விட்டு விட்டு மாயமாகி விட்டனர். மனைவி இல்லாமல் ஹரிகோபால் மூன்று குழந்தைகளுடன் தவிப்பதை பார்த்து, உறவினரான சந்திரன் என்பவர் அவருக்கும், குழந்தைகளுக்கும் தனது வீட்டில் அடைக்கலம் கொடுத்தார். இங்கு தங்கியிருந்த போது ஹரிகோபாலுக்கும், சந்திரனின் மனைவிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதை சந்திரன் கண்டித்ததால் ஹரிகோபால், சந்திரன் மனைவியுடன் தலைமறைவாகி விட்டார். இதனால் சந்திரனின் நான்கு குழந்தைகள் தாயில்லாமல் தவிக்கின்றனர். இதுபற்றி தனித்தனியாக அளிக்கப்பட்ட புகார்கள் பற்றி அஞ்சுகிராமம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

vedaprakash -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி