கோவில்களுக்குள் அர்ச்சகர்கள் கேமரா செல்போன் பயன்படுத்த தடை வருமா?
ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 22, 2009, 16:21 [IST]
http://thatstamil.oneindia.in/news/2009/11/22/will-govt-ban-camera-cell-phones.html
சென்னை: காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதன் செய்த காம சேட்டைகளைப் பார்க்கும்போது கோவில் களுக்குள் அர்ச்சகர்கள் கேமரா செல்போன்களை பயன்படுத்த தடை விதிக்கலாம் என்று மக்களிடையே கருத்து எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோவில் அர்ச்சகரான தேவநாதன் தான் செய்த காமலீலைகள் குறித்து அளித்துள்ள வாக்குமூலத்தில், 2 வருடங்களுக்கு முன்பு சைனா செல்போன் ஒன்று வாங்கினேன். அதில் வீடியோ மற்றும் கேமரா வசதி இருந்தது. கோவிலுக்கு வரும் 99 சதவீத பெண்கள் சேலை அணிந்துதான் வருவார்கள். அவர்கள் குணிந்து சாமி கும்பிடும்போது யாருக்கும் தெரியாமல், ஓரமாக நின்று அவர்களை ஆபாசமாக படம் எடுப்பேன். அந்த படங்களை ஓய்வு நேரங்களில் பார்த்து ரசிப்பேன்.
எனது நண்பர்கள் சிலரிடம் இருந்து ஆபாச படங்களை செல்போன் மூலம் பெற்று பார்த்து ரசிப்பேன். என்னதான் பெண்களை அனுபவித்திருந்தாலும் செல்போனில் பார்ப்பதில் தனி சுகம் கிடைத்தது. இதனால் நாமும் பெண்களுக்கு தெரியாமல் படம் எடுக்க வேண்டும் என்று எண்ணினேன்.
அதன்படி கோவிலில் என்னுடன் உல்லாசத்தில் ஈடுபடும் பெண்களுக்கு தெரியாமல் கோவில் விளக்கு பின்புறம் செல்போனை மறைத்து வைத்தேன். பெண்களை மயக்கி கருவறைக்குள் அழைத்து வந்து காம வேலைகளில் ஈடுபட்டேன் என்று கூறியுள்ளார்.
அர்ச்சகர்கள் குறித்து மக்கள் குறிப்பாக பெண்கள் பெரும் பீதி அடையும் அளவுக்கு தேவநாதனின் செய்கையும், வாக்குமூலமும் அமைந்துள்ளது.
இன்று கோவில்களில் பெரும்பாலான அர்ச்சகர்கள் கையில் செல்போனும், வாயில் மந்திரமுமாகத்தான் உள்ளனர். இவர்கள் அனைவருமே தேவநாதனைப் போல காமராஜன்கள் என்று யாரும் கூறவில்லை. ஆனால் எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ என்ற பயம் பெண்கள் மத்தியில் வந்துள்ளது.
இப்படிப்பட்ட பீதியை மக்கள் மனதிலிருந்து குறிப்பாக பெண்களின் மனதிலிருந்து அகற்றும் வகையில் அர்ச்சகர்கள் கோவிலில் பணி நேரத்தின்போது செல்போன்களை குறிப்பாக கேமரா செல்போன்களைப் பயன்படுத்துவதை தடை செய்யலாம் என பெண்கள் கருதுகின்றனர்.
குறிப்பாக இந்து அறநிலையத்துறையின் கீழ் இருக்கும் கோவில்களில் இந்த தடையை அமல்படுத்தலாம்.
ஏற்கனவே சென்னை அண்ணா பல்கலைக்கழகம் செல்போன்களை குறிப்பாக கேமரா செல்போன்களை பயன்படுத்தக் கூடாது என தடை விதித்தது.
அதேபோல, கோவிலில் சாமி கும்பிட வரும் பெண்கள் குனிந்து நிற்பதை படம் பிடிக்கும் கேவலமான புத்தி உடைய தேவநாதன் போன்ற அர்ச்சகர்களிடமிருந்து பெண்களின் மானத்தைக் காக்கும் வகையில், கேமரா செல்போன்களை கோவில்களுக்குள் அர்ச்சகர்கள் பயன்படுத்த அரசு தடை விதிக்க வேண்டும் என பெண்கள் கோருகின்றனர்.
விமர்சனம்:
1. செல்போன் மட்டுமல்ல பலவித கேமராக்கள் முதலிய நவீன கருவிகளால் என்னவேண்டுமானாலும் செய்யலாம். தம்மை படம் எடுப்பதை அறியாமலே செய்யலாம். ஆகையாதான் இத்தகையச் செயல்களை “சமூகத் தீவிரவாதம்” என்கிறேன்.
2. இதை ஆரம்பித்து வைத்தவர்கள் மேனாட்டவர்கள், அவர்களது அடிவருடிகள், அரசியல்வாதிகள், ஊடக முதலைகள், சினிமாக்காரர்கள், எழுத்தாளர்கள், ஆபாசத்தை, விபச்சாரத்தை வளர்க்கும் நிகழ்ச்சிகள், நடனங்கள், அழகிப்போட்டிகள், பப்ஸ் என பட்டியல் நீளுகின்றது. இவர்களை என்ன செய்வது?
3. இன்று இவ்விடங்களில் உள்ள மரியாதைக்கு உரிய பெண்மணிகள் சேலை என்றால் என்ன என்றல்லவோ கேட்பார்கள்?
* இதற்கும் பட்டிமன்றங்கள் / விவாதங்கள் நடத்தி அத்தகைய ஆபாச ஆடைகள் அணிவதுதான் நவீனம் என்று த்ரச்சான்றிதழ் கொடுக்கிறார்களே?
* உடைகளை அவிழ்த்துப் போட்டு ஆடத்துடிக்கும் தமிழ் நடிகைகளை என்னசெய்வது?
4. அவ்வாறே – அதாவது அறைகுரை உடைகளோடு – பொது நிகழ்ச்சிகளுக்கு வருவது, ஆடுவது, குதிப்பது தடுக்கப் படுமா?
* “மானாட-மயிலாட-மார்பாட’ என்று சொன்னபோது கோபம் வந்துவிட்டதாம்- இப்பொழுதும் ஆட்டியும், குலுக்கியும் தானே செய்கின்றனர்? யாருக்கும் கோபம் வருகிறார்போல இல்லையே?
* கோவில் நிகழ்ச்சிகளில் ஏன் அத்தகைய மதிப்பும்-மரியாதையும் உள்ள பெண்கள் வந்து ஆடவேண்டும்?
* ஆண்கள் செய்யும் சில்மிஷங்களை ஏற்றுக் கொந்து பிறகு, உள்ளூர் அரசியல்வாதிகளுடன் செல்லவேண்டும்?
5. பொது நிகழ்ச்சிகளில், படோபட விழாக்களில் சேலை அணியாமலே வருகின்றனரே?
* அங்கே மதிப்புக்குரிய அப்பெண்கள் குனியவே வேண்டாமே?
* தெரியவேண்டியவை நன்றாகவேத் தெரிகின்றனவே?
* செல்போனையே செல் என்றல்லாவா கட்டளையிடுகின்றன?
6. திருட்டுத்தனமாக செல்போனிலே படம் எடுக்கவேண்டாமே, வெளிப்படையாக 50-100 பேர்கள் கும்பல் கும்பலாக நின்றுகொண்டு, அருகில் வந்து, நெருங்கி வந்து, “ஜூம்” [தொலைவில் இருப்பது அருகில் இருக்கிறார்போல காட்டும்] செய்து அப்பட்டமாக “லைவாக” [நேரிலே பார்க்கிறார்போல, உயிரோட்டத்துடன் ஆடுவது, நகர்வது, “ஸ்லோ மோஷன்” இத்யாதி உள்பட] எடுக்கிறார்களே?
7. கோடிக்கணக்கான மக்கள் பார்க்கும்படி ஒளிப்பரப்புகிறார்களே?
8. அப்பொழுது அந்த பெண்களுக்கு அறிவு எங்கு போயிற்று?
9. போட்டோ, வீடியோ எடுப்பதைத் தடுத்தார்களா? அசிங்கம், ஆபாசம், கேவலமான புத்தி என்றெல்லாம் யாருக்கும் யோசிக்கக் கூட அறிவு வரவில்லையே?
10. நடுத்தெரு நிர்வாணங்கள், அரங்க ஆபாச நடனங்கள், “நீலநிறப்படங்களையும்” விஞ்சும் கொக்கரக்கோ பாடல்கள், குலுக்கும் நடனங்கள், குத்தாட்டங்கள் இவையெல்லாம் என்ன? கேவலமாக இல்லாமல் நன்றாக இருக்கின்றனவா?
11. ஆளுகின்ற வயதான, மதிப்பும்-மரியாதைக்கும் உரிய முதல்வர், பல அதிகாரிகள், பெண்கள், சிறுவர்கள் என இவர்கலது முன்பாகவே அத்தகைய நிகழ்ச்சிகள் நடக்கின்றனவே?
12. வயதானவர்கள் என்றால் தட்டி கேட்கவேண்டாமா? ஆனால் கருப்புக் கண்ணடி போட்டுக் கொண்டு ரசித்து பார்ப்பது, அவரது நெற்றி சுருங்குவது, கண்கள்-விழிகள் இடம் மாறுவதால் புருவஜாலனங்கள், தாடைகள், கன்னங்கள் அளவு பெரிதாகுவது முதலியவற்றை உன்னிப்பாக பார்க்கும்போது, உண்மை தெரிகின்றதே?
13. மூதறிஞராக இருக்கும் பட்சத்தில் அறிவுரை வழங்க வேண்டாமோ? ஆனால் பரிசல்லவோ தருகிறார். சரி அத்தகைய அறைகுரை ஆடை அணிந்த நடிகைகள் இவர் உட்கார்ந்திருப்பதனால் குனிந்துதானே வாங்கிக் கொள்கின்றனர்? அப்பொழுதும் யாரும் அறிவுரை சொல்லவில்லையா?