Archive for the ‘சங்கத்தமிழ் பரத்தைத் தனம்’ Category

விபச்சாரமும், போலீஸும், கற்பும்!

மே 6, 2010

விபச்சாரமும், போலீஸும், கற்பும்!

$ கற்பு என்றாலே குதித்து கருவும் கன்னியம் மிக்கத் தமிழர்.

$ கண்ணகி என்றால் சொல்லவே வேண்டாம், நாந் – நீ என்று போட்டிப் போட்டுக் கொண்டு வருவர், சிலைக்காகத்தான்.

$ ஆனால், குஷ்புவோ அதெல்லாம் தமிழச்சிகளுக்கு, ஏன் பெண்களுக்கேத் தேவையில்லாத, எதிர்பார்க்கமுடியாத விஷயம் என்பாள்.

$ சங்கத்தமிழ் பரத்தைத் தனம் கொடிக்கட்டிப் பறக்கிறது போலும்.

$ பரத்தையர் வீதிகள் இல்லாதக் குறையைத் தீர்த்துவைக்கின்றனர், இப்பரத்தையர் வீதிகளிலேயே வலம் வந்து!

$ உச்சநீதிமன்ற தீர்ப்பினால், உச்சத்திற்கே போகும் நிலைகள்!

எஸ்.ஐ.,யை காரில் கடத்திய விபசார கும்பல்: கண்ணாடியை உடைத்து தப்பினார்
மே 07,2010,00:00  IST

தமிழர்கள் சினிமாவைத்தான் மிஞ்சுவர் போலும்: காரில் விபசாரம் நடத்தியவர்களை பிடிக்கச் சென்ற எஸ்.ஐ.,யை, அதே காரில் விபசார கும்பல் கடத்தியது. சினிமாவை மிஞ்சும் இந்த சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார். சென்னை, திருமங்கலம் காவல் நிலையத்தில் எஸ்.ஐ.,யாக இருப்பவர் சிவக்குமார் (34). திருமங்கலம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டூவீலர் திருட்டில் தொடர்புடைய ஒருவன், கிண்டி பகுதியில் பதுங்கியிருப்பதாக இவருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

விபச்சாரிகளைத் தேடிச் சென்ற போலிஸ்: நேற்று முன்தினம் இரவு 8:30 மணியளவில் அவர் போலீஸ் உடையின் மேல் சாதாரண சட்டை மட்டும் அணிந்து கொண்டு, தனது இருசக்கர வாகனத்தில் சென்றார். உடன்,  சில போலீசாரும் சென்றனர். கிண்டியில் அந்த டூவீலர் திருடன் இல்லாத நிலையில், மீண்டும் திருமங்கலம் திரும்பிய போது, இரவு 9:30 மணியளவில் சிவக்குமாருக்கு, கிண்டி பகுதியில் காரில் விபசாரம் நடப்பதாகவும், கார், அப்பகுதியில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனம் முன் நிற்பதாகவும் தகவல் கிடைத்தது.  முதலில் தயங்கிய சிவக்குமார், பின்பு போனில் தெரிவிக்கப்பட்ட இடத்திற்கு சென்றார். அங்கு கார் ஒன்று நின்று கொண்டிருந்தது.

போலீஸையேக் கடத்திய விபச்சாரக்கூட்டம்: காரின் அருகில் சென்ற சிவக்குமார், உள்ளே இருப்பவர்களை கவனித்தார். காரில் மூன்று பெண்கள் இருந்தனர். அருகில், டூவீலரில் ஒருவரும் நின்று கொண்டிருந்தார்.  விபசார புரோக்கரான அவரிடம் பேச்சுக் கொடுத்த சிவக்குமார், காரினுள் இருப்பவர்கள் அழகிகள் என்பதை உறுதி செய்து கொண்டு, காரின் பின்புற கதவை திறந்து ஏறினார். வாடிக்கையாளர் என்று காரில் இருந்தவர்கள் நினைத்தனர்.  டிரைவராக இருந்த நபர், சிவக்குமாரிடம், ‘நீங்கள்  யார்?’ என்று கேட்க, சிவக்குமார் தான் போலீஸ் என்பதை தெரிவித்ததால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து எஸ்.ஐ., சிவக்குமார், காரை அருகில் உள்ள கிண்டி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லுமாறு உத்தரவிட்டார்.  டிரைவர், காரை போலீஸ் நிலையம் கொண்டு செல்வது போன்று பாவலா காட்டி பல சந்துகளில் வேகமாக ஓட்டியதுடன், கிண்டி போலீஸ் நிலையத்தை தாண்டி ஜி.எஸ்.டி., சாலையில் நுழைந்து சைதாப்பேட்டை நோக்கிச் சென்றார்.

கதவை மூட வல்லவரான காரியக்காரன்: காரின் கண்ணாடிகள் ‘மின்னணு’ இயக்கத்துடன் இருந்ததால், டிரைவர் கண்ணாடிகளை உயர்த்தியதுடன், பவர் லாக் செய்தார். இதனால், எஸ்.ஐ.,யால் வெளியில் யாரையும் கூப்பிட முடியவில்லை. அப்போது காரின் டிரைவர், எஸ்.ஐ., சிவக்குமாரிடம், ‘எங்களையா பிடிக்கப் போகிறாய். உன்னை என்ன செய்கிறோம் பார். எங்கள் ஆள் அங்கு நிற்கின்றனர். அங்கு கொண்டு சென்று உன்னை கொல்லப் போகிறோம்’ என்று மிரட்டினார்.  கார், சின்னமலையில் வலதுபுறமாக திரும்பி ராஜ்பவன் நோக்கிச் சென்றது.  ராஜ் பவன் அருகில் சர்தார் படேல் சாலையில் திரும்பிய போது சுதாரித்துக் கொண்ட சிவக்குமார், கார் டிரைவரின் கழுத்தை பிடித்து பின்புறம் இழுத்தார். அத்துடன், காரின் கண்ணாடியையும் உடைத்தார். இதனால், நிலைதடுமாறிய டிரைவர், காரை பிரேக் போட்டு நிறுத்தினார். அப்போது இரவு 10.30 மணி. கார் அப்பகுதியில் உள்ள ஒரு பஸ் நிறுத்தத்தில் நின்றதால், அங்கிருந்த பொதுமக்களின் சிலரும் காரை பார்த்து ஓடிவந்தனர். அப்போது காரில் இருந்த மூன்று பெண்களும் இறங்கி ஓடிவிட்டனர்.

விபச்சாரம் மன்மதன்கள்: காரில் இருந்த நபரை பிடித்துக்கொண்ட எஸ்.ஐ., காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். கோட்டூர்புரம் ரோந்து போலீசார் சம்பவ இடம் வந்தனர். பிடிபட்டவரை அவர்களிடம் சிவக்குமார் ஒப்படைத்தார்.  சினிமாவில் வருவதை போன்று நடந்த அந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிடிபட்டவரையும், காரையும் போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் மணப்பாக்கத்தை சேர்ந்த சுஜித் கண்ணா (35) என்பதும்,  டூவீலரில் வந்தவன் பெயர் மதன் என்பதும் தெரியவந்தது.  இவர்கள் கன்னட பிரசாத்தின் கூட்டாளிகளா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கார் யாருடையது என்பது குறித்தும், தப்பி ஓடிய பெண்கள் குறித்தும் விசாரணையை துவக்கியுள்ளனர்.

சுதாரித்துக் கொள்ளும் போலீஸ்: கடத்தல் இல்லை; கமிஷனர் ராஜேந்திரன்: இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் கேட்ட போது, ‘எஸ்.ஐ.,யை யாரும் கடத்தவில்லை.  வேறு ஒரு குற்றவாளியை பிடிக்கச் சென்ற போது, விபசார கும்பல் குறித்த தகவல் கேட்டு, காரை பிடித்து அதில் சென்று ஒருவரை பிடித்துக் கொடுத்துள்ளார்’ என்றார்.

கோவையில் போலீசாரை தாக்கி தப்ப முயற்சி: கைதான ‘ஜிம்’ ஹக்கீமின் அதிர்ச்சி பின்னணி
மே 07,2010,00:00  IST

Important incidents and happenings in and around the world

இதோ வந்து விட்டான் ஜிம்-ஹக்கீம்: கோவை: கோவையில், சிறைத் தோழனின் காதலியை காரில் கடத்தி மானபங்கம் செய்ய முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, ‘ஜிம்’ ஹக்கீமின் பின்னணி குறித்து, அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர், ஒன்றரை ஆண்டுக்கு முன், தனியார் கல்லூரி எம்.பி.ஏ., மாணவியை காரில் கடத்தி கற்பழித்து, ‘புளூ பிலிம்’ எடுத்து மிரட்டிய வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்.

காதலில் ஆரம்பித்து போலிசுக்குச் சென்றது: பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (35). இவர், சூளேஸ்வரன்பட்டியைச் சேர்ந்த பாரதி ரோஷன் (28) என்ற பெண்ணை காதலித்தார். திருமணம் செய்ய மறுத்த ராமகிருஷ்ணனை, பாரதி ரோஷன் அளித்த புகார்படி கைது செய்த பொள்ளாச்சி பெண் போலீசார், கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இச்சம்பவம், ஒன்றரை ஆண்டுக்கு முன் நடந்தது. ராமகிருஷ்ணனுக்கு, சிறையில் அடைபட்டிருந்த கற்பழிப்பு வழக்கு கைதி, ‘ஜிம்’ ஹக்கீம் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. காதலி கொடுத்த புகாரால்  சிறைக்கு வந்த கதையை,  ராமகிருஷ்ணன், ஹக்கீமிடம் தெரிவித்தார். அதைக் கேட்ட ஹக்கீம், ‘உன் காதலியிடம் பேசி, வழக்கில் இருந்து உன்னை விடுவிக்க உதவுகிறேன்’ என, ஆறுதல் கூறி நடித்தார். அதை நம்பிய ராமகிருஷ்ணன், பாரதி ரோஷனின் மொபைல் போன் எண்களை ஹக்கீமிடம் தெரிவித்தார்.

“புளூ-பிளிம்” எடுப்பவன் கல்யாணம் செய்து வைக்கிரானாம்! சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த ஹக்கீம், பாரதி ரோஷனை தொடர்பு கொண்டு, ‘நான் கூறுவது போல நடந்து கொண்டால், காதலன் ராமகிருஷ்ணனை உனக்கு திருமணம் செய்து வைக்கிறேன்’ என, நயமாக பேசினார். அதை நம்பிய பாரதி ரோஷன், ஹக்கீமுடன் தொடர்ந்து போனில் பேசி வந்தார். இவர்களது பழக்கம் பல மாதங்களாக நீடித்தது. இரண்டு நாட்களுக்கு முன், பாரதி ரோஷனை மொபைல் போனில் தொடர்பு கொண்ட ஹக்கீம், ‘திருமண ஏற்பாடு விஷயமாக பேசலாம், கோவைக்கு வா’ என அழைத்தார்.  அதற்கு அவர், ‘கோவை, சித்தாபுதூரிலுள்ள என் உறவினர் வீட்டுக்கு வருகிறேன். அங்கு  பேசிக் கொள்ளலாம்’ என தெரிவித்தார். அதன்படி, கோவை வந்த பாரதி ரோஷனை, தன் காரில் ஏற்றிக் கொண்டு,  ஊர் சுற்றிய ஹக்கீம், ‘நீ என்னை திருமணம் செய்து கொள்; இல்லாவிடில் கொலை செய்து விடுவேன்’ என மிரட்டி, இரண்டரை சவரன் நகையை பறித்தார். அதிர்ச்சியடைந்த பாரதி ரோஷன், தப்பிக்கும் முயற்சியாக திருமணத்துக்கு ஒப்புக் கொண்டது போல நடித்து, காரில் இருந்து இறங்கி தப்பினார். பின், கோவை போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபுவிடம் புகார் அளித்தார்.

போலிஸுக்கு கொலை மிரட்டல் விடுத்த ஜிம்-ஹக்கீம்: ஹக்கீம் மீது, இந்திய தண்டனைச் சட்டம் 342 (வழி மறித்தல்), 392 (வழிப்பறி), 506 (2) கொலை மிரட்டல்), 354 (மானபங்கம்) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த ரேஸ்கோர்ஸ் போலீசார், ஹக்கீமை கைது செய்ய, தேடினர். அவன், நேற்று முன்தினம் இரவு சின்னவேடம்பட்டி அருகே காரில் செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ரேஸ்கோர்ஸ் போலீசார், ஜீப்பில் அவனை பின்தொடர்ந்தனர். வழியில் காரை நிறுத்தி தப்பிய ஹக்கீம், அருகிலிருந்த அபார்ட்மென்ட்  மீது ஏறி நின்று, தற்கொலை மிரட்டல் விடுத்தார். தன்னை பிடிக்க முயன்ற ஆயுதப்படை போலீசார் மாதவன் உன்னி, சதாசிவம் ஆகியோரை தாக்கிவிட்டு, கீழே குதித்தார். காலில் காயமடைந்த நிலையில் ஹக்கீமை மீட்ட போலீசார், கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசாரை தாக்கியது தொடர்பாக ஹக்கீம் மீது, இந்திய தண்டனைச் சட்டம் 353 பிரிவில் (அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல்) மேலும் ஒரு வழக்கு ரேஸ்கோர்ஸ் போலீசில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தீவிர விசாரணை நடக்கிறது.

ஜிம்-ஹக்கீம்: கற்பழிப்பு, புளு-பிளிம் எடுத்தல் வல்லுனன்: யார் இந்த ‘ஜிம்’ ஹக்கீம்?: கோவை, ஆத்துப்பாலம், கரும்புக்கடையைச் சேர்ந்த ‘ஜிம்’ ஹக்கீம் மீது, தனியார் கல்லூரி எம்.பி.ஏ., மாணவியை காரில் கடத்தி கற்பழித்த வழக்கு, கோர்ட் விசாரணையில் உள்ளது. ஒன்றரை ஆண்டுக்கு முன் இச்சம்பவம்  நடந்தது. ரேஸ்கோர்ஸ் பகுதியில் காரில் அமர்ந்து நண்பருடன் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவியை, கூட்டாளிகளுடன் சேர்ந்து காரில் கடத்திய ஹக்கீம், சூலூரில் ஒதுக்குப்புறமான பகுதியிலுள்ள பெண் போலீஸ் வீட்டில் அடைத்து வைத்து கற்பழித்தார். கேமராவில் ஆபாச படம் பிடித்து, பணம் கேட்டு மிரட்டினான். தகவலறிந்து சம்பவ இடத்தை முற்றுகையிட்ட  போலீசாரை தாக்கி, தப்பிக்க முயன்றபோது பிடிபட்டான். தற்போது, மற்றொரு வழக்கில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று, நகை பறித்த வழக்கில் கைதாகியுள்ளார்.

விபச்சாரத்தில் உள்ளவன், புளூ-பிளிம் எடுப்பவன், பெண்களைக் கற்பழிப்பவன் – இத்தகைய கேடு கெட்டவனை நம்பிச் சென்றதுதான் வேடிக்கை!