Posts Tagged ‘காமலீலை அர்ச்சகர்’

வில் ஹியூம், புவனேஸ்வரி, தேவநாதன்: தமிழ் ஊடகங்கள் – IV

திசெம்பர் 20, 2009

வில் ஹியூம், புவனேஸ்வரி, தேவநாதன்: தமிழ் ஊடகங்கள் – IV

ஊடகங்களின் பிரச்சார ரீதியிலான அறிவிப்புகள் தொடர்கின்றன: ஒரு அர்ச்சகர் கிடைத்தாகிவிட்டது, அதுவும் பார்ப்பனர் என்று தெரிகின்றது. இப்பொழுது ஹேமலாதா என்ற பெண்மணி ஸ்ரீகுமார் பற்றி தாராளமாக புகார் கொடுக்கிறார், நிருபர்களைக் கூட்டி பேட்டி கொடுக்கிறார். 50 தடவை தான் பலாத்காரம் படுத்தப் பட்டார் என்றெல்லாம் கூறுகிறார். ஆனால் இங்கேயே ஒரு பெண்மணித் தான் கற்பழிப்புப் புகார் கொடுத்து பிணையில்லாத சொறையைலடைப்பு ரீதியில் வைக்கின்றனர். பிறகு நீதிமன்றத்திற்கு கொண்டு வந்தால் ஆபத்து என்று மறைக்கின்றனர்! இவையெல்லாம் ஆச்சரியமாக உள்ளது.

ஆகவே, ஊடகங்கள் தேவநாதன் விஷயத்தில் பல விஷயங்களை மறைக்க முயற்ச்சிப்பதாகத் தெரிகிறது. பாலியல் புகார் எடுபடாததினால், ஒருவேளை கற்ப்பழிப்பு புகார் மூலம் கைது செய்யப்பட்டாது போலத்தெரிகிறது. பிறகு குற்றம் செய்வதற்கு தூண்டுதல் / ஊக்கம் / காரணம் (motive) வேண்டும் என்பதற்கான மற்ற விஷயங்களைக் கொண்டு வருகின்றனர். உல்லாசமாக இருக்க பணம் வேண்டும்!

உண்டியல் திருட்டு: அர்ச்சகர் தேவநாதன் தன்னுடன் உல்லாசமாக இருக்கும் பெண்களுக்கு பணத்தை வாரி வழங்கியுள்ளார். இதற்காக கோவில் உண்டியலில் பக்தர்கள் போடும் காணிக்கை பணத்தையும் திருடியுள்ளார். இந்த பணத்தை வைத்துக் கொண்டு நட்சத்திர ஓட்டல்களிலும் பெண்களுடன் உல்லாசம் அனுபவித்துள்ளார். போலீஸ் விசாரணைக்கு பயந்து அர்ச்சகருடன் உல்லாசமாக இருந்த பெண்கள் பலர் தங்களது வீடுகளை காலி செய்து விட்டு வெளியூர்களுக்கு தப்பிச்சென்று விட்டனர்.

அசிங்க அர்ச்சகர் தேவநாதன் வங்கிக் கணக்கில் ரூ. 80 லட்சம் பணம்[1]: பக்தர்கள் தட்டில் போடும் தட்சணையை வைத்து பிழைப்பு நடத்தி வந்த அர்ச்சகர் தேவநாதனின் வங்கிக் கணக்கில் ரூ. 80 லட்சம் பணம் இருப்பதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். இவ்வளவு பணம் எப்படி இவருக்கு வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. அந்த வங்கிக் கணக்கு தற்போது முடக்கி வைக்கப்பட்டுள்ளது. கோவில் கருவறையில் பெண்களுடன் தகாத முறையில் நடந்து கொண்டதாக கைதாகியுள்ள காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதனை 3 நாள் காவலில் எடுத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே 2 நாள் காவலில் எடுத்து அவர் விசாரிக்கப்பட்டார். தற்போது 2வது முறையாக அவர் காவலில் எடுக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு வேலூர் சிறையிலிருந்து அவரை காஞ்சிபுரம் கொண்டு வந்தனர். பாலுச்செட்டிசத்திரம் காவல் நிலையத்தில் வைத்து தேவநாதனிடம் விசாரணை நடந்து வருகிறது. தேவநாதன் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட வங்கி கணக்கு புத்தகங்கள், மெமரி கார்டுகள் போன்றவற்றை ஆய்வு செய்தனர். அப்போது காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு வங்கியில் தேவநாதன் பெயரில் ரூ. 80 லட்சம் பணம் டெபாசிட் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிகிறது. தேவநாதன் கணக்கில் லட்சக்கணக்கில் பணம் வந்தது எப்படி? என்று தற்போது போலீஸார் ஆராய்ந்து வருகிறார்கள்.

மேலும் 5 பெண்களுடன் தொடர்பு இந்த நிலையில் அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன் மெமரி கார்டில் மேலும் 5 பெண்களின் ஆபாச படங்கள் பதிவு செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது. யார் அவர்கள், எப்போது படம் எடுக்கப்பட்டது என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தப் பெண்கள் யார் என்று தேவநாதனிடம் கேட்டபோது கோபமானாராம அவர். “ஒவ்வொருத்தாளும், தங்களுக்குப் பிடித்தவாளை படம் எடுத்து வச்சுக்குவா, அது நடிகையாகவும் இருக்கலாம், வேறு பெண்ணாகவும் இருக்கலாம். இதெல்லாம் தப்பா.. எனக்கு பிடித்த பொம்மனாட்டிகளை படம் பிடித்து வைத்திருந்தேன். அவாளை காட்டி கொடுக்கமாட்டேன்”, என்று அடம் பிடித்தாராம். இருந்தாலும் உரிய முறையி்ல் விசாரித்து தேவநாதன் செல்போன் மெமரியில் இருக்கும் ‘பொம்மனாட்டிகள்’ யார் என்பதை அறிய போலீஸார் தீவிரமாக முயன்று வருகின்றனர். ஆனால் போலீஸார் அவ்வாறே உரிய முறையி்ல் விசாரித்தார்களா இல்லையா என்று தெரியவில்லை!

அர்ச்சகரிடம் மீண்டும் போலீஸ் விசாரணை: அர்ச்சகர் தேவநாதனை போலீசார் மீண்டும் காவலில் எடுத்து விசாரித்தனர்[2]. காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோயில் அர்ச்சகர் தேவநாதன், கோயில் கருவறையில் பெண்களிடம் உல்லாசமாக இருந்ததாகவும், அதை அவரே செல்போனில் படம் பிடித்ததாகவும் புகார் எழுந்தது. போலீசார் அவரை தேடி வந்த நிலையில், காஞ்சிபுரம் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் முன்பு 16ம் தேதி சரண் அடைந்தார். 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் அனுமதி கேட்டனர். ஆனால், 2 நாள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் 3 நாட்கள் விசாரிக்க உயர்நீதிமன்றத்தில் போலீசார் மனுத்தாக்கல் செய்தனர். உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து, வேலூர் சிறையில் இருந்த தேவநாதனை, சிவகாஞ்சி போலீசார் நேற்று காலை 28-11-2009 காஞ்சிபுரம் அழைத்து வந்தனர். சிவகாஞ்சி போலீஸ் நிலையத்தில் வைத்து இன்ஸ்பெக்டர் பட்டாபிராமன் விசாரித்து வருகிறார். இதற்கிடையில், இந்து அறநிலையத் துறை உதவி ஆணையர் செல்வராஜ் நேற்று முன்தினம் கோயில் நிர்வாகிகளிடம் தேவநாதன் குறித்து விசாரித்தார்[3]. அவர் எப்போது கோயில் பணியில் சேர்ந்தார், அவரது நடவடிக்கை எப்படி என்று கேட்டறிந்தார்.

பூக்காரி உதவியுடன் கருவறையில் லீலை செய்த அர்ச்சகர் தேவநாதன்: காஞ்சீபுரம் கோவில் கருவறையில் பூக்காரி உதவியுடன் இருபதுக்கும் மேற்பட்ட பெண்களுடன் ஆபாச லீலை நடத்தியதாக காஞ்சீபுரம் மச்சேஸ்வரர் கோவில் அர்ச்சகர் தேவநாதன்[4] 27-11-2009 அன்று கூறப்பட்டது. இவர் கோவில் கருவறையில் வைத்து பெண்களிடம் செக்ஸ் லீலையில் ஈடுபட்டு அதனை ரகசியமாக காமிராவில் படம் பிடித்தார். இவரது ஆபாச படம் செல்போனில் பரவியது. தேவநாதனை காஞ்சீபுரம் போலீசார் தேடினர். இதையடுத்து அவர் கோர்ட்டில் சரண் அடைந்தார்.  செக்ஸ் அர்ச்சகர் தேவநாதனை 2 நாள் காவலில் எடுத்து விசாரித்த போது அவர் திடுக்கிடும் வாக்கு மூலம் அளித்தார். அதில் தான் 8 பெண்களை மட்டும் ஆபாச படம் எடுத்ததாக கூறினார். அவர்களது பெயர்களை மாற்றி கூறியும், உண்மையான தகவல்களை கூறாமலும் போலீசாரை ஏமாற்றினார். இதையடுத்து தேவநாதனை மீண்டும் போலீஸ் காவலில் எடுக்க போலீசார் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி: காஞ்சீபுரத்தை சேர்ந்த பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் மச்சேஸ்வரர் கோவிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். அவரிடம் தேவநாதன் நைசாக பேச்சு கொடுத்து நல்லவர் போல பழகி உள்ளார். அவரிடம் கருவறைக்குள் கண்ணை மூடி வேத மந்திரங்கள் சொன்னால் பரீட்சையில் அதிக மதிப்பெண் பெறலாம் என்று ஆசை காட்டி உள்ளார். மாணவியிடம் சில்மிஷங்கள் செய்து அதை செல்போனில் படம் பிடித்துள்ளார். தேவநாதன் தனது மனைவியையும் ஆபாச படம் பிடித்து வைத்துள்ளார். என்ற தகவலும் போலீசுக்கு கிடைத்துள்ளது. போலீஸுக்குக் கிடைத்தது இணைத்தளங்களுக்குக் கிடைக்கிறது!

பூக்காரி உடந்தை: அர்ச்சகர் தேவநாதன் 25 பெண்களுடன்[5] உல்லாசமாக இருப்பது போன்ற சி.டி.க்கள் வெளியாகியுள்ளது. இதில் குண்டு பெண் ஒருவர் கருவறையில் வைத்து தேவநாதனுடன் செக்ஸ் லீலையில் ஈடுபடுவது போன்ற சி.டி.யும் ஒன்று அந்த பெண் யார் என்பது தற்போது அடையாளம் தெரிந்துள்ளது. கோவில் அருகே பூ வியாபாரம் செய்து வரும் அப்பெண்ணிடமும் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். தேவநாதனின் செயலுக்கு உடந்தையாக அந்த பகுதியை சேர்ந்த பூக்காரி ஒருத்தி இருந்துள்ளார். அவர் தேவநாதனை பற்றி பல திடுக்கிடும் தகவல்களை கூறி வருகிறார். இந்த வழக்கில் அவரை முக்கிய சாட்சியாக சேர்க்க போலீசார் முடிவு செய்துள்ளனர். அவள் கூறிய தகவல்படி 20க்கும் மேற்பட்ட பெண்களை தேவநாதன் ஆபாசமாக படம் எடுத்துள்ளது தெரிய வந்துள்ளது.

விசாரணை மிகவும் ரகசியமாக நடத்தப்பட்டு வருகிறது[6]: இப்படி சொல்லிக் கொண்டே “ரகசியங்களை” அள்ளிவீசுகின்றன இணைதளங்கள்.குறிப்பாக “தட் ஈஸ் தமிழ்” என்ற இணைத்தளம் எல்லாவற்றையும் நேரிலேயே பார்த்தது மாதிரி செய்திகளை வெளியிடுகின்றது! பிறகு, நாளிதழ்களும் அதேமுறையைக் கையாளுகின்றன. விசாரணை ரகசியம் என்றால், எப்படிவிவரங்கள் வெளியே வருகின்றன. இதற்கும் புவனேஸ்வரி வழக்கிற்கும் ஒன்றும் வித்தியாசம் இல்லையே? இங்குள்ள பெண்கள் எல்லாம், நடிகைகள் அல்லர். அவர்களுக்குத் துணையாக சங்கம் இல்லை. இருந்திருந்தால், அர்ச்சகரை மட்டுமில்லாது, சிடி-தயாரித்து விற்ரவர்களையும் அதே மாதிரி திட்டியிருப்பார்கள். ஆகவே, ஒன்று போலீஸார் புவனேஸ்வரி வழக்கு மாதிரி, விஷயங்களை பத்திரிக்கைகளுக்குத் தந்திருக்கவேண்டும் அல்லது கசியும் விஷயங்களை வைத்துக் கொண்டு, கொஞ்சம் கற்பனையையும் கலந்து, ஆர்பாட்டத்திற்காக அவ்வாறு “செய்திகளை” வெளியிட வேண்டும்.

கருவறையில் காமலீலை- பெண்கள் பட்டியலை தந்தார் செக்ஸ் அர்ச்சகர்[7]: மேலே விஷயங்கள் சொன்னதையே சொன்னதாக நினைக்கக் கூடாது. எப்படி ஊடகங்கள் ஒரே செய்தியை வேறூபாடுகளுடன் வெளியிடுகின்றது என்பதைக் காட்டத்தான் அவ்வாறு குறிப்பிடப் படுகிறது. இப்படி தினம்-தினம் செய்திகள். முதலில் 8 பெண்கள் என்றார்கள்! அர்ச்சகர் தேவநாதன் 20 அல்லது 25 பெண்களுடன்[8] உல்லாசமாக இருப்பது போன்ற சி.டி.க்கள் வெளியாகியுள்ளது. பிறகு 30…. இப்படி எண்ணிக்கைக் கூடிக்கொண்டே போகின்றது. டாக்டரின் மனைவி தொடர்பு என்றார்கள்; பூக்காரி அவருக்கு உதவினாள் என்றார்கள்; ஆனால் சிடி-போட்டு ரூ.100/-க்கு விற்றது எப்படி, அதன் பின்னணி என்ன? இன்று 19-12-2009, திருநெல்வேலியில் அமோகமாக அந்த சிடி விற்க்கப்படுகிறது என்கிறார்கள்[9].

சிடி-தயாரிப்பாளர்களுக்கும் பெண்களுக்கும் தொடர்பு உண்டா? அந்த சிடி-தயரிப்பு, விற்பனை, அவர்கள் உபயோகப் படுத்திய உபகரணங்கள் முதலியனவற்றை பார்க்கும்போது, வில் ஹியூமிற்கும் இவர்களுக்கும் வித்தியசம் இல்லை எனவேத் தோன்றுகிறது. நிச்சயமாக, சிடி-தயாரிப்பாளர்களுக்கு எல்லா விஷயங்களும் தெரிந்திருக்கின்றன. அவர்கள் உள்ளூர்வாசிகள் என்பதனால், அதிலுள்ள பெண்களையும் அடையாளம் கண்டிருக்கலாம். சிடி-தயாரிப்பாளர்களிலிருந்துதான் விஷயமே வெளி வந்தது என்பது நோக்கத்தக்கது. ஆகவே, பெண்களுக்கும் சிடி-தயாரிப்பாளர்களுக்கும் தொடர்பு இருந்ததா? இத்தகைய விஷயங்கள் அனைவரும் ஒத்துழைக்காமல் முடியாது என்பது, பிரகாஷ் வழக்கு எடுத்துக் காட்டுகிறது.

டாக்டர் / மருத்துவர் பிரகாஷ் செயல்பாடு: மருத்துவர் பிரகாஷ்[10] எப்படி தனது பலி ஆடுகளை நீலப்படங்கள் எடுப்பதற்கு உபயோகப் படுத்தினானோ, அதேமாதிரியான போக்கு, இந்த வழக்கிலும் காணப்படுகிறது. அர்ச்சகரோடு, எப்படி எல்லோரும் ஒத்துழைத்தனர் என்பதற்கான காரணங்கள் “மனோதத்துவ ரீதியில் ஆறுதல் கூறுவது” என்பதைவிட மேலேச் சென்றுள்ளதால், அதுவும், ஒரு கோவிலின் கருவறைக்குள் நடந்துள்ளதால், அவ்விடம் அவர்களுக்கு மிகச் சிறந்த இடம் அதாவது யாருக்கும் தெரியாத “பாதுகாப்பான இடம்” என்பதனை அறிந்தே அவ்விடத்தைத் தேர்ந்தெடுத்தனர் எனவும் கொள்ள வாய்ப்புள்ளது. ஏனெனில், பிரகாஷ் எப்படி தனிமையான, ஆட்கள் வராத, வரமுடியாத இடக்களைத் தேந்தெடுத்தான் என்பதனை நினைவு கூறத்தக்கது. அவனும் தனது பலி-ஆடுகளுக்கு போதை / மயக்க மருந்து கொடுத்தான்.

சன்-டிவி செய்தியின்படி நீதிமன்ற வாசலிலே “தள்ளூ-முள்ளூ”: 30-11-2009 தேவநாதன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படுகிறான். ஏற்கெனவே அங்கு பெண்கள் கூட்டம் கூடியிருக்கிறது. அப்படியென்றால் அது போலிஸுக்குத் தெரியாமல் இருக்காது. தேவநாதன் வேனிலிருந்து இறக்கப்படுகிறான். பெண்கள் திடீரென்று அவன்மீது பாய்கின்றனர். போலீஸார் அவனை (தேவநாதனை)ப் பிடித்துத் தள்ளிவிடுகின்றனர் உள்ளே. டிவிக்களின் பாஷையில் சொல்லவேண்டுமானால் “தள்ளு-முள்ளு” ஏற்பட்டது. இதே மற்றவர் விஷயத்தில் அவ்வாறு போலீஸ் நடந்து கொண்டிருந்தால் அரசியல்வாதிகள் / கட்சிகள், மனித உரிமை / மிருக உரிமை என்ற பண்டிதர்கள் எல்லாம் பாய்ந்து வந்திருப்பார்கள். இங்கோ மௌனம்!

வில் ஹியூம்-தேவநாதன் போலீஸார் / ஊடகங்கள் நடத்தும் முறை: பாமக, விசி, ம.க.இ.க முதலிய குழுமங்கள் ஏற்கெனவே அந்த தேவநாதனை அடிக்கவேண்டும் என்று தீர்மானித்துள்ளதாக பேச்சு சில இணைதளங்களில் செய்தி வெளி வந்தது. ஆகவே போலீஸார் அந்த “தள்ளு-முள்ளு”வைத் தவிர்த்திருக்கலாம். டிவி-செனல்கள் காட்டுவதைதான் மக்கள் பார்க்கிறர்கள். வில் ஹியூம் கோர்ட்டிற்கு அழைத்துச் செல்லும்போதோ, வரும்போதோ எப்படி வருகிறான்? போலீஸார் தொடுவதுகூட கிடையாது! அப்படி என்ன மதிப்போ, மரியாதையோ தெரியவில்லை! ஆனால் தேவநாதனை ஏதோ தீவிரவாதியைப்போல தள்ளி அழைத்துச் செல்லப்படுகிறான். இங்கு அவன் செய்த குற்றங்கள் மறுக்கப்படவில்லை. ஆனால் போலீசார், ஊடகங்களின் பாரபட்சத் தன்மையினைத்தான் எடுத்துக் காட்டப் படுகிறது.

மயக்கி கற்பழித்து, படம் எடுத்து மிரட்டி தொல்லை- தேவநாதன் குறித்து பெண் வாக்குமூலம்: நாக்கில் மயக்க மருந்தைத் தடவி கோவில் கருவறைக்குள் கூட்டிக் கொண்டு போய் கற்பழித்து, அதை படம் எடுத்து வைத்துக் கொண்டு தொடர்ந்து தன்னைக் கற்பழித்ததாக அர்ச்சகர் தேவநாதன் மீது அவருடன் சம்பந்தப்பட்ட பெண் ஒருவர் கூறியுள்ளார்[11]. இதையடுத்து தேவநாதன் மீது கற்பழிப்பு வழக்கும் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோவில் கருவறைக்குள் அயோக்கியத்தனமாக நடந்து கொண்ட தேவநாதன் குறித்து மேலும் பல அசிங்கச் செய்திகள் வெளியாகியுள்ளன.

அப்பாவி போல இருந்தார்அவருடன் தொடர்புடைய ஒரு பெண் போலீஸாரிடம் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கொடுத்துள்ள வாக்குமூலத்தில், “தினமும் மச்சேஸ்வரர் கோவிலுக்கு செல்வேன். பயபக்தியுடன் சாமி கும்பிடுவேன். அங்கு அர்ச்சகராக இருந்த தேவநாதன் பார்ப்பதற்கு அப்பாவி போல நல்லவராக காட்சி அளித்தார். அவரிடம் என் கஷ்டங்களை சொல்லுவேன். அவரும் ஆறுதலாக பேசுவார். பொங்கல் கொடுத்தார்…ஒருநாள் எனக்கு கோவில் பிரசாதம் என்று சர்க்கரை பொங்கல் கொடுத்தார். பின்னர் ஒரு சாக்லெட் கொடுத்து சாப்பிட சொன்னார். நானும் சாமிக்கு வைத்து பூஜை செய்தது என்று நம்பி பிரசாதத்தை சாப்பிட்டேன். சிறிது நேரத்தில் எனக்கு மயக்கமாக இருந்தது. என்னை கோவிலின் கருவறைக்கு அர்ச்சகர் தேவநாதன் அழைத்து சென்றார். என் ஆடைகளை எல்லாம் களைந்தார். நான் தடுக்க முயன்றேன். ஆனால் மயக்கமாக இருந்ததால் என்னால் முடியவில்லை”. இத்தகைய வாக்குமூலங்களில் வெளியாவது, பெண்களின் ஒத்துழைப்புதன். ஹேமலாதாவும் இதே மாதிர் புகார் கொடுக்கிறார். இங்கு பிரசாதத்திற்கு பதிலாக காபி வருகிறது!

கற்பை சூறையாடினார்என்னை அர்ச்சகர் தேவநாதன் கருவறையில் வைத்து கற்பழித்து விட்டார். அதை தனது செல்போனில் படம் பிடித்து அடிக்கடி என்னை மிரட்டி பலமுறை என் கற்பை சூறையாடினார் என்று கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து தேவநாதன் மீது கற்பழிப்பு ஒன்றையும் போலீஸார் போட்டுள்ளனர். நிற்பது போன்ற படங்கள் இணைதளங்களில் வெளியிட்டுள்ளார்கள். முன்னமே குறிப்பிட்டது போல, அவை ஒன்றிற்கு மேற்ப்பட்ட நபர்கள் எடுத்திருக்கிறாற்கள். இப்படி கற்பழிப்பதற்கு வீடியோ ஆதாரம் இருக்குமேயானால் அவனை தூக்கில்கூட போடலாம்.

எப்படி .. நடித்துக் காட்டிய தேவநாதன்இதற்கிடையே, தேவநாதனை போலீஸார் பலத்த பாதுகாப்புடன் மச்சேஸ்வரர் கோவிலுக்குக் கூட்டிச் சென்றனர். அங்கு கருவறைக்குள் செய்த அசிங்கச் செயல்கள் குறித்து போலீஸார் விசாரித்தனர். இதையடுத்து தான் அசிங்கச் செயல்களில் ஈடுபட்ட இடங்கள், எங்கு செல்போனை வைத்து படமாக்கினேன் என்பது உள்ளிட்டவற்றை விளக்கினார் தேவநாதன். மேலும், எப்படி பெண்களுடன் செக்ஸ் உறவில் ஈடுபட்டேன் என்பதையும் அவர் நடித்துக் காட்டினாராம். விசாரணையின்போது கருவறையிலிருந்து முக்கிய ஆதாரம் ஒன்றையும் போலீஸார் கைப்பற்றினர். மேலும், தன் செல்போனில் பதிவு செய்த செக்ஸ் காட்சிகள் எவ்வாறு வெளியானது எனவும் தேவநாதன் விளக்கினார். காஞ்சீபுரம் கவரை தெருவில் உள்ள ஒரு செல்போன் கடையில்தான் தான் செல்போனை பழுது பார்க்கக் கொடுத்ததாகவும் அவர் அடையாளம் காட்டினார். அந்தக் கடையிலும் போலீஸார் விசாரணை நடத்தினர். தேவநாதன் பல பெண்களுடன் செக்சில் ஈடுபட்ட காட்சிகள் செல் போனில் இருந்து ஒரு லேப்-டாப் மூலம் டவுன்லோட் செய்யப்பட்டது தெரிய வந்தது. அந்த கடையில் இருந்து லேப்-டாப், உயர்ரக செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் தங்களுக்கு கிடைத்த ஆதாரங்களை அனைத்தையும் காஞ்சீபுரம் கோர்ட்டில் ஒப்படைத்துள்ளனர்.

வில் ஹியூம் விஷயத்தில் அவ்வாறு செய்தனரா? வில் ஹியூமை அவ்வாறே அசிங்கச் செயல்கள் குறித்து போலீஸார் விசாரித்தனரா?.

  • மஹாபலிபுரத்திற்கு சென்றனரா / அழைத்துச் செல்லப் பட்டாரா?
  • இதையடுத்து தான் அசிங்கச் செயல்களில் ஈடுபட்ட இடங்கள், எங்கு கேமரா வைத்து படமாக்கினேன் என்பது உள்ளிட்டவற்றை வில் ஹியூம் விளக்கினாரா.
  • மேலும், எப்படி பெண்களுடன் / சிறுவர்களுடன் செக்ஸ் உறவில் ஈடுபட்டேன் என்பதையும் அவர் நடித்துக் காட்டினாரா?
  • விசாரணையின்போது அதேமதிரி முக்கிய ஆதாரம் எதையேனும் போலீஸார் கைப்பற்றினரரா
  • மேலும், தன் லாப்டாப்பில் பதிவு செய்த செக்ஸ் காட்சிகள் எவ்வாறு வெளியானது எனவும் விளக்கினாரா.

இவையெல்லாம் ரகசியமாகவே உள்ளன, ஆனால் தேவநாதன் விழயத்தில் மட்டும் தாராளமாக உள்ளனர்!

ஆபாச ஐயர் தேவநாதனை எங்கு பார்த்தாலும் செருப்பால் அடிப்போம்: மகளிர் அமைப்பினர் ஆவேசம்[12]: அர்ச்சகர் தேவநாதன் நேற்று மாலையில் 01-12-2009 விசா ரணை முடிந்து காஞ்சீபுரம் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள் மன்றம் அமைப்பை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கோர்ட்டு வளாகத்தில் அர்ச்சகர் தேவநாதன் வந்த போலீஸ் ஜீப்பை வழிமறித்து செருப்பு மற்றும் துடைப்பம் ஆகியவற்றால் தாக்கினர். சாணியை வாரி ஜீப் மீது வீசினர். தகவலறிந்த டி.எஸ்.பி. சமுத்திரகனி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆவேசமாக இருந்த பெண்களை கைது செய்து ஜீப்பில் ஏற்றிசென்றனர். பின்னர் அர்ச்சகர் தேவநாதனை போலீசார் பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து சென்று நீதிபதி சுதா முன்பு ஆஜர்படுத்தினர். நீதிபதி சுதா அர்ச்சகர் தேவநாதனை மீண்டும் 15 நாள் காவலில் 16-12-2009 வரை வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து தேவநாதன் மீண்டும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அர்ச்சகர் தேவநாதனை செருப்பாலும், துடைப்பத்தாலும் தாக்கிய மக்கள் மன்ற அமைப்பாளர்களில் ஒருவரான மகேஷ் கூறியதாவது:-

கோவிலின் புனித இடமான கருவறையில் பெண்களுடன் காமவெறியாட்டம் நடத்திய காமகொடூரன் அர்ச்சகர் தேவநாதனை ஜாமீனில் விடுவிக்ககூடாது. மேலும் இந்த வழக்கில் பல உண்மைகள் வெளி வரவேண்டும். போலீசார் உரிய முறையில் விசாரணை நடத்தி பல உண்மைகளை வெளியில கொண்டு வந்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். மத உணர்வுகளை சீர்கெடுத்த காமகொடூரன் தேவநாதனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். தேவநாதனை எந்த காலத்திலும் எந்த கோவிலிலும் அனுமதிக்கவே கூடாது. அவருடைய சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும். அர்ச்சகர் தேவநாதனுக்கு உரிய தண்டனை வழங்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம் . காமகொடூரன் தேவநாதனை எங்கு பார்த்தாலும் அவரை விரட்டி, விரட்டி செருப்பால் அடிப்போம்”.

இவ்வாறு அவர் கூறினார். அர்ச்சகர் தேவநாதனுக்கு எதிராக கோர்ட்டு வளாகத்தில் போராட்டம் நடத்திய 47 பெண்கள் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். 447 ஐ.பி.சி. (அத்து மீறி நுழைதல்), 143 சட்ட விரோதமாக கூடுதல், 341 வழிமறித்து தாக்குதல், 294 ஆபாசமாக பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

டிவி நடிகையுடன் ஆபாச ஐயர் தேவநாதன் புது சிடிக்களால் பரபரப்பு[13]: மொத்தம் 21 பெண்கள் தேவநாதன் விரித்த செக்ஸ் வலையில் சிக்கியது தெரிய வந்துள்ளது[14]. இவர்களில் பெரும்பாலான பெண்களிடம் போலீசார் விசாரணை நடத்தி முடித்து விட்டனர்[15]. டாக்டர் மனைவி, பேராசிரியர் மனைவி, நர்ஸ், தொழில் அதிபர்களின் மனைவிகள் என தேவநாதனுடன் உல்லாச லீலையில் ஈடுபட்ட பெண்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது [அதெப்படி அவர்கள் எல்லாம் தாம் தேவநாதனுடன் உறவு வைத்துக் கொண்டதை பெருமையாக் கூறுகிறர்களா அல்லது புகார் கொடுக்கிரார்களா, தெரியவில்லையே]. இவர்களின் வரிசையில் டி.வி. நடிகை ஒருவரும் தற்போது சேர்ந்துள்ளார் [புவனேஸ்வரி பற்றி அப்படி ஆராய்ச்சி செய்தனரே, ஏன் இந்த நடிகையை மறைக்கின்றனர்?]. மச்சேஸ்வரர் கோவிலுக்கு அடிக்கடி வந்து செல்லும் அந்த டி.வி. நடிகையையும் தேவநாதன் தனது ஆபாச வலையில் வீழ்த்தி இருப்பதாக கூறப்படுகிறது [குடுமி வைத்த அவனிடம் என்ன அப்படி வசியம்?]. டி.வி. நடிகையும், அர்ச்சகரும் உல்லாசமாக இருப்பது போன்ற புதிய சி.டி. வெளியாகி இருப்பதாகவும் பரபரப்பாக பேசப்படுகிறது. காஞ்சீபுரம் மட்டுமின்றி அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் இந்த சி.டி. அமோகமாக விற்பனையாவதாகவும் கூறப்படுகிறது.

தேவநாதனின் பல “அவதாரங்கள்” / “நாமங்கள்”: கும்பகர்ண ஊடகங்கள் விழித்துவிட்டன, தமிழச்சிகள் முழித்துக் கொண்டனர், இணைடத்தளங்கள் ஆர்ப்பரிக்கின்றன, வலைகள் பின்ன ஆரம்பித்துவிட்டன! தேவநாதன் அர்ச்சிக்கப்படும் விதமே அலாதிதான்:

  • செக்ஸ் அர்ச்சகர்
  • ஆபாச அர்ச்சகர்
  • அசிங்க அர்ச்சகர்
  • கருவறைக் காம அர்ச்சகர்
  • காமலீலை அர்ச்சகர்
  • காமக்கொடூரன்
  • ஆபாச ஐயர்

………………..என்று தேவநாதன் பலவாறு அழைக்க / விவரிக்க / குறிப்பிடப் பட்டான். ஆனால், வில் ஹியூம். பெரும்பாலான மௌனம் மற்றும் ஒன்றுமே நடக்காதது மாதிரியான நடிப்பு. 19 வயது வரையிலுள்ள இளம்-சிறுமிகளை புதுவிதமாக பாலியிலில் வன்முறைக்குட்படுத்தி, படங்கள் / குறும்படங்கள் எடுத்து, இணைதலங்களில் வெளியிட்டு பல பாலியல் வன்முறைக் கொடுமைகள் செய்தவன் – வில் ஹியூம், வில்லியம்ஸ், “வில்ஹெல்ம்ஸ் வேய்ஜ்டெவல்டு” என்றுதான் குறிப்பிடப் படுகின்றான். அவனது ஜாதி, இனம், மதம், நிறம் முதலியனவைக் குறிப்பிடப்படுவதில்லை. ஆனால் இங்கு கடைசியல் “ஐயர்” என்று இறங்கி வந்துவிட்டனர்! அப்படியென்றால், இதிலுள்ள விஷயம் என்ன?

மன ஆறுதல் / ஆலோசனைக் கூறுதல் / கவுன்சிலிங் முதலியன அர்ச்சகர்கள் செய்யவேண்டியதில்லை: ஊடகங்களின் மூலமாக, பெண்கள் வாக்குமூலங்கள் கொடுத்துள்ளனர் என்பதிலிருந்து அறிவதாவது [அவை உண்மை என்ற படசத்தில்], அவர்கள் தங்களது குறைகளை, மனத்தில் இருக்கும் கஷ்டங்களை, ஆசைகளை வெளிப்படுத்து அவற்றை எப்படி அடைய / பூர்த்திசெய்யவேண்டும் என்ற முறையில் அந்த தேவநாதனிடத்தில் கூறியுள்ளனர் எனத் தெரிகிறது. அதனால், அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு இத்தகைய அசிங்கத்தைச் செய்திருக்கிறான். அவனுடைய வேலை, பூஜை செய்வதே தவிர வந்தவர்களுக்கு மன ஆறுதல் கூறுவது, கவுன்சிலிங் செய்வது அல்ல. டாக்டர் மனைவி, பேராசிரியர் மனைவி, நர்ஸ், தொழில் அதிபர்களின் மனைவிகள் என தேவநாதனுடன் உல்லாச லீலையில் ஈடுபட்ட பெண்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது எனும்போது, அவர்கள் எல்லொரும் ஒன்றும் தெரியாத குழந்தைகளோ, அப்பாவிகளோ அல்லர். ஆகவே, எப்படி அவர்கள் தேவநாதனிடம் மாட்டினர் அல்லது தேவநாதன் அவர்களிடம் மாட்டிக் கொண்டான் என்றும் ஆராயவேண்டியதுள்ளது.

தமிழகத்தில் ஏன் கற்பு கேவலமாகியுள்ளது? இக்காலத்தில் மேனாட்டு மற்றும் உள்நாட்டுத் தாக்குதல்களினால் இந்திய கூட்டுக்குடும்பங்கள் சிதறுண்டு, உறவுமுறைகள் பாதிக்கப்பட்டு கேவலப்படுகின்றன. ஆகையால் கணவன்-மனைவி, தாய்-மகள், தந்தை-தனயன் என்பவரெல்லாம் ஒன்றாக சேர்ந்து சாப்பிடுவது, பேசுவது, சுக–துக்கங்களை அனுபவிப்பது, என்பதெல்லாம் கானல் நீராகப் போய்விட்டது. நிச்சயமாக நாத்திக, குறிப்பாக திராவிட நாத்திகம் இத்தகைய ஆண்-பெண் உறவுகளைக் கேவலப் படுத்தியுள்ளது. மேலும் அத்தகைய உறவுகளைக் கேவலப் படுத்தும் ஊடகங்கள் – குறிபாக சின்னத்திரைகள், பெரியத் திரைகள், அதில் ‘சிரிப்பு நடிகர்கள்” என்று வரும் கூட்டங்கள் பெண்களை மிகவும் கேவலாமாகச் சித்தரிக்கின்றனர். அதாவது “ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்தால் தள்ளிக் கொண்டு போய்விடலாம்” என்று அசிங்கப் படுத்துகிறார்கள்! ஆனால் அவர்களுக்குத் தான் கலைமாமணி, பத்மஸ்ரீ………… முதலிய பட்டங்கள் கொடுக்கப் படுகின்றன.

படித்த / பணக்கார / நாகரிகப் பெண்கள்: டாக்டர் மனைவி, பேராசிரியர் மனைவி, நர்ஸ், தொழில் அதிபர்களின் மனைவிகள் என தேவநாதனுடன் உல்லாச லீலையில் ஈடுபட்ட பெண்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. ஆகவே, இவர்கள் எல்லோரும் “ஒன்றும் தெரியாத பாப்பாக்கள்” இல்லை! அறிந்தோ-அறியாமலோ இந்த மாதிரி காரியங்களில் பெண்களின் அனுசரிப்பு, இடம் கொடுத்தல், அனுமதி, ஒத்துழைப்பு முதலியன இல்லாமல் நடக்காது. பெண்களுக்கு இயற்கையாகவே உள்ள உணர்வு தன்னைக் காத்துக் கொள்வதுதான்.  அக்கையால்தான் எந்த ஆணும் வரம்பு மீறி பார்க்கிறான் எனும்போது, ஒரு பெண் தூரத்திலும் தனது ஆடையைச் சரிசெய்து கொள்கிறான். பார்ப்பவனுக்குத் தான் தெரியும் அவளது அந்த “தூரத்து உணர்வின்” சக்தியை! அவள் தனது ஆடையை சரிசெய்யும் போதோ அல்லது அப்படி த்ருமி பார்க்கும்போதோ தெரியும் அந்த ஆணுக்கு தான் செய்த தவறை! செருப்பால் அடிப்பதை விட பலமானது அந்தப் பார்வை. ஏனெனில் அவன் தனது தாயை அவ்வாறு பார்க்கமாட்டான்! ஆனால் இன்று நடப்பது என்ன?

ஊடகங்கள் தூபம் போடுவது செக்ஸ், அசிங்கம், ஆபாசம்: இந்த ஊடகங்களுக்கு என்ன பொறுப்பு இருக்கிறது? கலைமாமணி வாங்குபவர் ஏன் பத்மஸ்ரீ வாங்கியவர் நிஜவாழ்க்கையிலும் திரை அல்லது மற்ற தொழில் வாழ்க்கையிலும் பேசுவது, நடப்பது / நடிப்பது முதலியன என்னத்தைக் காட்டுகிறது? செக்ஸ் / பாலியில் ரீதியிலான ஆபாசம், அசிங்கம், காமம், இச்சை, கொக்கோகம் முதலியனத் தானே ஜோக்குகள், ஜொல்லுகள் என கவிதையாக, பாடலாக வெளிவந்து கலைமாமணிகளைத் தட்டிக் கொண்டுச் செல்கின்றன. கால்களை எந்த அளவிற்கு தூக்கினால் அல்லது முலைகளை எந்த அளவிற்குக் காட்டினால், அந்த அளவிற்கு கலைமாமணி நெருகங்குகிறது எனத்தெரிகிறதே அப்பட்டமாக! தமிழச்சிகள் இவர்களை துடைப்பக்கட்டை வைத்து சாத்தவேண்டுமோ? இல்லையே செய்வதில்லையே? முதல்வர் முன்னேயே முலை-தொடைகள் காட்டும் போது சாணத்தை வீசி சுத்தப்படுத்தியிருக்கவேண்டாமோ? “ஆபாச ஐயர் தேவநாதனை எங்கு பார்த்தாலும் செருப்பால் அடிப்போம்” என்ற வீரமகளிர் மற்றும்: மகளிர் அமைப்பினர் ஆவேசம் கொள்ளவில்லையே? எங்கேயிருந்தனர் அந்த வீரமங்கையினர்? புறநானூறு காலத்தில் கும்பகர்ணன் மாதிரி தூங்கிவிட்டு, இப்பொழுதுதான் அதுவும் காஞ்சிபுரத்தில் முழித்துக் கொண்டுவிட்டனாரா?

எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்று அலையும்போது, துடிக்கும்போது இயந்திர வாழ்க்கையில் சிக்கிக் கொள்கிறான். ஆகையால் இல்லத்தில் அனுபவிக்க வேண்டியவற்றை மற்றவரிடம் கிடைக்கும்போதோ அல்லது அத்தகைய வாய்ப்புகள், சூழ்நிலைகால் ஏற்பதும்போது, அறிந்தோ அறியாமலோ அவற்றை ஏற்றுக் கொள்கிறான். இது ஒரு காபி/டீ, மத்திய உணவு, பீடி/சிகெரெட் என்று இருக்கலாம், சினிமாவிற்கு போவது, மற்ற நிகழ்ச்சிகளுக்குப் போவது என்றும், “டிராப்” செய்வது / “லிஃப்ட்” கொடுப்பது என்றும் இருக்கலாம். இன்றைய நிலையில், பெண்கள் தினமும் தமது கணவன்மார்களுடன் தினமும் அவ்வளவு நெருக்கமாக நின்றுகொண்டோ அல்லது உட்காரவோ மாட்டார்கள். ஆனால், பஸ்களிலோ, சேர் ஆட்டோக்களிலோ அத்தகைய சந்தர்ப்பங்களை விலக்கும், மறுக்கும் பெண்கள் குறைவாகவே உள்ளனர். அத்தகைய பெரும்பான்மையான அனுசரித்துப் போகும் பெண்களாஅல் இந்தியா சீரழிகிறது. அதே நேரத்தில் அந்த குறைந்தபட்ச பெண்களால்தான் இந்த இந்தியா வாழ்கிறது.

வேதபிரகாஷ்

20-12-2009 ©


[1] சனிக்கிழமை, நவம்பர் 28, 2009, 16:56[IST]

 

http://thatstamil.oneindia.in/news/2009/11/28/devanathan-s-bank-account-freezed.html

[2] பதிவு செய்த நாள் 11/29/2009 1:15:43 AM,  http://www.dinakaran.com/chennaidetail.aspx?id=1274

[3] இத்தகைய துப்பறியும் தனத்தை வி ஹியூம் விஷயத்தில் கடைபிடித்ததாகத் தெரியவில்லை. ஏனெனில் அவன் விஷயத்தில் பல அரசு-துறைகள், அதிகாரிகள் சம்பந்தப் பட்டுள்ளனர்.

[4] வெள்ளிக்கிழமை, 27 நவம்பர் 2009, 01:00.12 PM GMT +05:30.

http://www.newindianews.com/view.php?224Yld0b3Kc0Qd4d3AMM3a0cKmV24de1D4I203eoOA2e2WC4mbcc2JOy4e

[5] http://www.newindianews.com/view.php?224Yld0b34c0Qd4d3AMM3a0cKmV34de1D4I203eoOA2e2gC4mbcc3JOS4e

[6] http://www.newindianews.com/view.php?224Yld0b34c0Qd4d3AMM3a0cKmV34de1D4I203eoOA2e2gC4mbcc3JOS4e

[7] http://thatstamil.oneindia.in/news/2009/11/29/devanathan-gives-the-list-women.html

[8] http://www.newindianews.com/view.php?224Yld0b34c0Qd4d3AMM3a0cKmV34de1D4I203eoOA2e2gC4mbcc3JOS4e

[9] தமிழ் இணைத் தளங்களைப் பார்க்கவும்.

[10] மருத்துவர் பிரகாஷ் மிகவும் தொழிற்நுட்பத்துடன், தனது மருத்துவ அறிவையும் பயன்படுத்தி, அரசியல் இணைப்புகளின், நடிகைகளின் துணைகளுடன் இந்த பாலியல் திரைப்படங்களை எடுத்ததில் முதன்மையானவர் எனலாம். இன்று அவர் சிறையில் இருக்கிறார்.

[11] செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 1, 2009, 14:13[IST]

http://thatstamil.oneindia.in/news/2009/12/01/more-filthy-stories-devanathan-emerge.html

[12] December 2, 2009; http://www.alaikal.com/news/?p=26487

[13] India News T | Thurai | December 2, 2009 at 11:21 am ; http://www.voicetamil.com/?p=13059

[14] எண்ணிக்கையை கவனமாக பார்க்கவும்.

[15] அப்படியென்றால் ஏன் செய்திகள் மறைக்கப் படுகின்றன? இணைதளத்தில் புகைப்படங்கள் தாராளமாக வெளிவருகின்றன. சிடிக்கள் விற்க்கப்படுவதாக செய்திகள் வருகின்றன. பிறகு ஏன் உண்மைகள் மறைக்கப் படவேண்டும்?