Posts Tagged ‘விபசாரம்’

விபச்சாரங்களில் பல ரகம்!

ஏப்ரல் 22, 2010
விமானத்தில் பறந்து வந்து விபசாரம் : இரு பெண்கள் உட்பட மூவர் கைது
ஏப்ரல் 22,2010,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=18010

சென்னை : பெங்களூரில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்து ஓட்டலில் விபசாரத்தில் ஈடுபட்ட மூவரை, போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இளம்பெண் ஒருவரும் மீட்கப்பட்டார்.

வெளி மாநிலத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்து விபசாரத்தில் சிலர் ஈடுபட்டு வருவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் சுதாகர், இன்ஸ்பெக்டர் சந்திரதாசன் மற்றும் போலீசார், சென்னை வடபழனி பகுதியில் கண்காணித்தனர். இந்த கும்பலை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார், வடபழனியில் உள்ள பிரபல ஓட்டலில் கடந்த 20ம் தேதி திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு விபசார கும்பல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, சாலிகிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவரது மகன் விஜயகுமார்(34), பெங்களூரைச் சேர்ந்த சதீஷ் என்பவரது மனைவி நளினி (45) மற்றும் குல்லப்பா என்பவரது மனைவி சந்திரிகா(எ) ஆர்த்தி(34) ஆகிய மூவரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து பெங்களூரைச் சேர்ந்த ரீனா(20) என்ற பெண்ணையும் மீட்டனர். இவர்கள் அனைவரும் அடிக்கடி பெங்களூரில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்து விபசாரத் தொழிலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

சாலிகிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார், அதே பகுதியில் ஜி.வி., ஸ்டூடியோ என்ற பெயரில் ரிகார்டிங் ஸ்டூடியோ நடத்தி வருவதும், அதில் வருமானம் போதுமானதாக இல்லாததால், விபசாரத் தொழிலில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. போலீசின் கண்ணில் சிக்காமல் இருக்க, அடிக்கடி விமானத்தில் பறந்து வெளிமாநிலங்களுக்கும் சென்று விபசாரத் தொழிலை நடத்தியது தெரிந்தது. மீட்கப்பட்ட பெண், அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். விபசாரத்திற்காக பயன்படுத்தப்பட்ட 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான கார் மற்றும் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

விபசார புரோக்கர் கன்னட பிரசாத் கூட்டாளிகள் சிக்கினர் : ஏழு பெண்கள் மீட்பு:கார்கள்,மொபைல்போன் பறிமுதல் : கன்னட பிரசாத் தப்பி ஓட்டம்
ஏப்ரல் 22,2010,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=18024

பரங்கிமலை: இளம்பெண்களை, விபசாரத்தில் ஈடுபடுத்திய கன்னடபிரசாத் கூட்டாளிகள் நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். ஏழு பெண்கள் மீட்கப்பட்டனர். தப்பி ஓடிய கன்னடபிரசாத்தை தேடி வருகின்றனர்.

சென்னை முகலிவாக்கம், மதனந்தபுரம் வி.ஜி.என்.,நகரில் உள்ள ஒரு பங்களாவில் ஐ.டி., நிறுவனங்களில் பணிபுரிவதாகக் கூறி இளம்பெண்கள் பத்துபேர் தங்கியிருந்தனர். அந்த பங்களாவுக்கு, ஆடம்பர கார்களில் அறிமுகமில்லாத ஆண்கள் இரவு நேரங்களில் வந்து சென்றனர். இதனால், அப்பகுதி மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து, புறநகர் கமிஷனர் ஜாங்கிட்டிற்கு புகார் செய்தனர். கமிஷனர் உத்தரவுப்படி, மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் ஜெயக்குமார் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் பிரதீப், நரசிம்மன், எஸ்.ஐ.,க்கள் அருள்மணி, மோகன்ராஜ், ரவிக்குமார் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அந்த பங்களாவை தீவிரமாக கண்காணித்தனர். பிரபல விபசார புரோக்கர் கன்னட பிரசாத் மற்றும் அவரது கூட்டாளிகள், இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்துவது தெரியவந்தது.

தனிப்படை போலீஸ்காரர் ஒருவர் மாறுவேடத்தில் வாடிக்கையாளர்போல் விபசார புரோக்கரை அணுகினார். அப்போது, முகலிவாக்கம் அலகாபாத் வங்கி அருகே, காரில் இரண்டு பெண்களை அனுப்பி வைப்பதாகக் கூறினர். இதையறிந்த, தனிப்படைபோலீசார் காரில் வந்த இரண்டு பெண்கள் மற்றும் கார் டிரைவரையும் சுற்றிவளைத்தனர். இவர்கள் கொடுத்த தகவலின்படி, முகலிவாக்கம் மதனந்தபுரம் பங்களாவில் போலீசார் திடீர் ரெய்டு நடத்தினர். அங்கு, ஏழு பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்திய திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், தாராபுரம்ரோட்டை சேர்ந்த சரவணன் (30), கன்னியாகுமரி அடுத்த தக்கலை, காஞ்சாம்விளையை சேர்ந்த கமலதாஸ் மகன் சதீஷ் (28), தேனி, போடிநாயக்கனூரை சேர்ந்த பழனிச்சாமி மகன் குமார் (23), விஜயவாடா, சீதாநகரை சேர்ந்த சந்திரன் மகன் ரமேஷ் (25) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். போலீசில் சிக்கிய சரவணன், சதீஷ் ஆகியோர் பிரபல விபசார புரோக்கர் கன்னட பிரசாத்தின் கூட்டாளிகள். சரவணன் மீது கடந்த 2005ம் ஆண்டு முதல் சென்னை நகர விபசார தடுப்பு பிரிவு போலீசில் வழக்குகள் பதிவாகியுள்ளன. மடிப்பாக்கம் போலீஸ் நிலையம் மற்றும் புறநகர் மத்திய குற்றப்பிரிவு விபசார பிரிவு போலீசாரால், கைது செய்யப்பட்ட சரவணன், கடந்த 2007ம் ஆண்டு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறை சென்றவர்.

சதீஷ் மீது 2009ம் ஆண்டு முதல், சென்னை நகர விபசார தடுப்பு பிரிவு போலீசில் வழக்குகள் பதிவாகியுள்ளன. குண்டர் சட்டத்தில் கைதாகி சிறை சென்ற சதீஷ், கடந்த மூன்று மாதங்களுக்கு முன் சிறையிலிருந்து வெளியே வந்தவர். கார் திருடிய வழக்கில் குமாரை செங்குன்றம் போலீசார் கடந்த 2009ம் ஆண்டு கைது செய்தனர். அப்போது, சிறையிலிருந்த கன்னட பிரசாத்துடன் பழக்கம் ஏற்பட்டு, வெளியே வந்ததும் அவருடன் கூட்டாக விபசார தொழிலில் ஈடுபட்டார். கைதான நான்கு பேரையும் புறநகர் மத்திய குற்றப்பிரிவு போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி, புழல் மத்திய சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய கன்னட பிரசாத்தை போலீசார் தேடி வருகின்றனர். விபசாரத்திற்கு பயன்படுத்தப்பட்ட, ஐந்து லட்ச ரூபாய் மதிப்புள்ள டி.என்.10 எஸ்.0031 மற்றும் டி.என்.09,ஏ.இசட் 3327 இரண்டு கார்கள் மற்றும் மொபைல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இளம்பெண்கள் மீட்பு: விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட கோல்கட்டாவை சேர்ந்த ரோஜினா பிவி (25), சோனியா ராய் (25), ரேஷ்மா தாஸ் (20), அன்வாரா பீவி (24), நர்கிஸ் (25), ஜோஸ்னா (23), பெங்களூரு பஸ்வேஸ் நகரை சேர்ந்த காவியா (20) ஆகிய ஏழு பெண்களை போலீசார் மீட்டனர். இவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு பின், சைதாப்பேட்டை மகளிர் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். சிறப்பாக செயல்பட்டு, பிரபல கன்னட பிரசாத் கூட்டாளிகளை கைது செய்த போலீசாரை, புறநகர் கமிஷனர் ஜாங்கிட் பாராட்டினார்.

விபச்சார வகைகளில்

படம் பார்க்கச் சென்று அனுபவிக்கும் விபச்சாரம்

காதலி /  மனைவி மாதிரி வந்து போகும் விபச்சாரம்

பாக்கெட் மணிக்கு / கார்ல் கேர்ள், செல் போன் விபச்சாரம்

கார் விபச்சாரம்

விமான விபசாரம்

விமானத்தில் பறந்து வந்து விபசாரம்

அயல்நாட்டிற்கே சென்ரு செய்யும் விபச்சாரம்

அயல்நாட்டில் “பேக்கேஜ்” டூர் விபச்சாரம்

டான்ஸ், கிளப், ரிஸார்ட் அங்கத்தினர் விபச்சாரம்

ஃபார்ம் ஹவுஸ் / பண்ணைத் தோட்ட விபச்சாரம்

புத்தாண்டு விழா, ஆண்டுவிழா,…………………

சப்ளையர்ஸ் மீட், ஏஜென்டுகள் மீட், ………..

ஒற்றர் விபச்சாரம், உளவு வேலை விபச்சாரம்……………………..

“கூடி-சேர்ந்து மகிழும்” விபச்சாரம்……………….