Archive for the ‘செக்ஸ்’ Category

சித்த மருத்துவர் பாலியல் சிகிச்சை கொடுத்தது- ஓரின சேர்க்கையில் ஈடுபட்டது, நோயாளியைக் கொன்றது, மனித மாமிசம் சாப்பிட்டது, உடல் பாகங்களைப் புதைத்தது! (2)

நவம்பர் 25, 2023

சித்த மருத்துவர் பாலியல் சிகிச்சை கொடுத்ததுஓரின சேர்க்கையில் ஈடுபட்டது, நோயாளியைக் கொன்றது, மனித மாமிசம் சாப்பிட்டது, உடல் பாகங்களைப் புதைத்தது!  (2)

கேசவமூர்த்தி அசோக்ராஜை கொலை செய்தது; இதுகுறித்து குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில் சோழபுரம் போலீஸார் விசாரித்து வந்தனர்[1]. அப்பொழுது அவர் “ஏதோ” சிகிச்சைக்கு கும்பகோணம் சென்றது தெரிந்தது. இது பற்றிய விவரங்களை ஊடகங்கள் தெளிவாக வெளியிடவில்லை. இவரை கும்பகோணம் சோழபுரம் கிழக்குத் தெருவை சேர்ந்த சித்த மருத்துவர் கேசவமூர்த்தி என்பவர் ஓரினசேர்கைக்கு அழைத்து சென்று அப்போது ஏற்பட்ட தகராறில் வெட்டி கொலை செய்தார்[2] என்று தெரிய வந்தது. அவரது உடலை கேசவ மூர்த்தி தனது வீட்டில் புதைத்தார். போலீசார் அசோக்ராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்[3]. மேலும் அங்கு தோண்டும் போது மற்றொரு மனித தாடை எலும்பு கூடு சிக்கியது[4]. இதுபற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.

13-11-2023 அன்று அசோக்ராஜ் சிகிச்சைப் பெற்றது, கொலையுண்டானது: இந்த சம்பவம் குறித்து போலீ ஸார் கூறியதாவது[5]: “கைது செய்யப்பட்டுள்ள கேசவமூர்த்தி, அந்தப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்டோருக்கு சுன்னத்செய்துள்ளார். அசோக் ராஜனுக்குஅண்மையில் செய்ததில், அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதுகுறித்து கேசவமூர்த்தியை தொடர்பு கொண்டு அசோக் ராஜன் கேட்டதற்கு, தீபாவளி பண்டிகைக்கு ஊருக்கு வரும்போது தன்னிடம் வந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு கேசவமூர்த்தி கூறியுள்ளார். அதன்படி, கடந்த 13-ம் தேதி கேசவமூர்த்தியை அசோக் ராஜன் சந்திக்கச் சென்றுள்ளார். அப்போது, தவறான சிகிச்சையால் அசோக் ராஜன் பாதிக்கப்பட்டதால், தான் போலி மருத்துவர் என்பது வெளியில் தெரிந்துவிடும் எனக் கருதி, அசோக் ராஜனை கொலை செய்ததாக கேசவமூர்த்தி கூறினார்,” இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்[6].

விசாரணையில் அசோக்ராஜை கொலை செய்ததை ஒப்புக் கொண்டது: இது குறித்து சோழவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கேசவமூர்த்தியை கைது செய்து கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைந்தனர். கேசவமூர்த்தி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, வருகிற டிசம்பர் 4ஆம் தேதி திங்கட்கிழமை வரை நீதிமன்ற காவலுக்குட்படுத்தி, சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். அநிநிலையில், விசாரணையின்போது, தான் அசோக்ராஜைக் கொன்றதை ஒப்புக்கொண்டுள்ளான், மேலும், உடல் பாகங்கள் கொண்டு மருந்து தயாரித்ததை கூறியுள்ளான். எலும்பு பாகங்கள் புதைத்தாகச் சொன்னான். இதனால், போலீஸார் அவன் வீட்டில் தோண்டி பார்த்தனர். தொடர்ந்து அங்கே 3 அடி அளவிற்கு மட்டும் பள்ளம் தோண்டி பார்த்தபோது 30க்கும் மேற்பட்ட துண்டுகளாக விரல் அளவிலான எலும்புகள் கிடைத்தது[7]. அந்த எலும்புகள் பார்ப்பதற்கு ஒரு நாயின் மண்டை ஓடு மற்றும் அதன் எலும்புகள் போல இருந்தது. இதில் சேகரிக்கப்பட்ட எலும்புகள் மனித எலும்புகளா அல்லது முகமதுஅனஸ் உடல் பாகங்களா என்று அறிய ஆய்வகத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர்[8]. பின்னர் தோண்டி எடுக்கப்பட்ட எலும்புகள், கேசவமூர்த்தி வீட்டில் இருந்த மருந்து மாத்திரைகள், மூலிகை பொடிகள், பெண்கள் பயன்படுத்தும் நகைகள், நைட்டி, ஆடைகள், பயன்படுத்தாத பொருட்களை 10க்கும் மேற்பட்ட பெட்டைகளில் போலீசார் எடுத்து சென்றனர்.

19-11-2023 அன்று அசோக்ராஜின் உடல் பாகங்கள் தோண்டி எடுத்தது: கடந்த 19ஆம் தேதி அசோக்ராஜின் உடல் பாகங்களைத் தோண்டி எடுக்கும் போது, அதில் மேலும் ஒரு மண்டை ஓடு கிடைத்துள்ளது[9]. அதனால் அது 2021ஆம் ஆண்டு மர்மமான முறையில் மாயமாகி இதுவரை கண்டுபிடிக்க முடியாத நிலையில் இருக்கும், கேசவமூர்த்தியின் மற்றொரு நண்பரான முகமது அனாஸ் உடையதாக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுவாக எழுந்துள்ளது[10]. இருப்பினும் தடய அறிவியல்துறையினர் ஆய்வின் முடிவிற்கு பிறகே அது உறுதி செய்யப்படும்[11]. தற்போது வரை கேசவமூர்த்தி சத்தமில்லாமல் இரு கொலைகளை அரங்கேற்றி அது வெளியே தெரியாமல் மறைக்க, ஆடு வெட்டும் பெரிய கத்தியை கொண்டு உடலில் இருந்து தலையை துண்டித்தும், உடல் பாகங்கள் விரைவாக மண்னோடு மண்ணாவதற்காக தோலை உரித்தும், சதை பாகங்களை தனியாக வெட்டி எடுத்தும் புதைத்திருப்பது தெரிய வந்துள்ளது[12].

கத்திகள், பிளேடுகள், அரிவாள்கள் போன்ற உபகரணங்கள் கிடைத்தது: இதனை இவர் தனித்து தான் செய்தாரா? அல்லது பின்னணியில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், கேசவமூர்த்தியில் வீட்டில் இருந்து மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் கத்திகள், பிளேடுகள், அரிவாள்கள் போன்ற உபகரணங்களையும், நாட்டு மருந்து பொடிகள், மருந்து வகைகள், வீட்டில் வளர்த்த மூலிகை செடிகளையும் பறிமுதல் செய்து அதன் தன்மை, பயன்கள் குறித்து ஆய்வு செய்ய போலீசார் மருத்துவ ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்[13]. இதனிடையே கேசவமூர்த்தி பயன்படுத்திய டைரி ஒன்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பெயர்கள் இருந்ததால் இதில் யாரையேனும் கேசவமூர்த்தி கொலை செய்திருக்க கூடுமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்[14].

சித்தாயுனானி போன்ற முறைகளைக் கடைப்பிடித்தானா?: மேலும், கொலை செய்யப்பட்ட அசோக் ராஜன் உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டப்பட்டதில் சில உடல் பாகத்தை கேசவமூர்த்தி சமைத்து சாப்பிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், “நரமாமிசம்” எப்படி சாப்பிட முடியும், ஒருவேளை அதை வைத்து, மருந்து தயாரிக்க முயன்றானா போன்ற கேள்விகளும் எழுகின்றன. சித்தா முறையில்லாமல் யுனானி போன்ற முறைகளில் பூச்சிகள், புழுக்கள், பறவைகள், விலங்குகள் ஏன் மனிதர்கள் முதலியவற்றின் சதை, ரத்தம் முதலியவை மருந்து தயாரிக்க உபயோகப் படுத்தப் படுவதாக உள்ளது. ஒருவேளை அம்முறைகளில் ஈடுபட்டான் என்ற கேள்வியும் எழுகிறது. கேசவமூர்த்தி இந்த இரண்டு கொலைகளை தான் செய்தாரா? அல்லது தனக்கு இணங்காத வேறு யாரையானும் இப்படி கொடூரமாக கொன்றுள்ளாரா என்பது முழுமையான விசாரணைக்கு பிறகே தெரியவரும். இந்நிலையில் நேற்று இரவு சம்பவ இடத்தை ஆய்வு செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத், இன்று மீண்டும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து ஆய்வு செய்தார்.

கேசமூர்த்தியின் வீட்டில் தோண்டி ஆய்வு செயந்து: கும்பகோணம் அருகே சோழபுரத்தில் ஓரின சேர்க்கை விவகாரத்தில் ஒருவரை கொலை செய்து புதைத்த வழக்கில் கைதான கேசமூர்த்தியில் வீட்டில் தோண்டி ஆய்வு செய்த போது மற்றொரு தலை கிடைத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன், ஆசிஸ் ராவத் முன்னிலையில் முதற்கட்டமாக வீட்டின் பின்பக்கம் உள்ள பகுதிகளை தோண்டும் பணி நடைபெறுகிறது. மேலும், தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் சோழா வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்படுகின்றன. இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷித்ராவத் தலைமையில் திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாபர்சித்திக் முன்னிலையில் இன்று மாலை ஜேசிபி எந்திரம் மூலம் கேசவமூர்த்தியின் வீட்டை சுற்றி மீண்டும் தோண்ட தொடங்கி உள்ளனர்[15]. இதனால் இந்த கொலை வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது[16].

© வேதபிரகாஷ்

25-11-2023.


[1] புதியதலைமுறை, கும்பகோணம் | இளைஞரைக் கொலை செய்து வீட்டுக்குள்ளேயே புதைத்த சித்த வைத்தியர்சிக்கியது எப்படி?, PT WEB, Published on : 20 Nov 2023, 3:38 pm.

[2] https://www.puthiyathalaimurai.com/tamilnadu/kumbakonam-siddha-doctor-brutally-murdered-young-man

[3] ஐபிசி.தமிழ்நாடு, தன்பாலின உறவுக்கு மறுப்பு‘ – இளைஞரை துண்டு துண்டாக வெட்டி புதைத்த சித்த வைத்தியர்!, By Jiyath, அவம்பர் 20, 2023.

[4] https://ibctamilnadu.com/article/siddha-doctor-arrested-younster-murder-case-1700466369

[5] தமிழ்.இந்து, செய்திப்பிரிவு, கும்பகோணம் | இளைஞர் கொலை வழக்கில் கைதான சித்த வைத்தியர் வீட்டை சுற்றிலும் ஏராளமான எலும்புகள் கண்டெடுப்பு, Published : 22 Nov 2023 05:42 AM, Last Updated : 22 Nov 2023 05:42 AM.

[6] https://www.hindutamil.in/news/crime/1157269-bones-were-found-around-the-house-of-siddha-doctor-who-was-arrested-in-the-case-of-youth-murder.html

[7] தினகரன், வாலிபர்களை கொன்று உடலை சமைத்து சாப்பிட்ட விவகாரம் போலி சித்த மருத்துவர் வீட்டில் தோண்ட, தோண்ட எலும்புகள்: 10 பெட்டிகளில் போலீசார் எடுத்து சென்றனர், November 25, 2023, 1:16 am

[8] https://www.dinakaran.com/teenagers_killed_fakepsychiatrist_bones_10boxes_police/ – google_vignette

[9] தினத்தந்தி, சிகிச்சைக்கு வந்த இளைஞர் உடலை துண்டு துண்டாக வெட்டி வீட்டில் சமாதி.. பிரபல டாக்டர் பகீர் காரியம், By தந்தி டிவி 20 நவம்பர் 2023 12:45 PM

[10] https://www.thanthitv.com/News/TamilNadu/the-body-of-the-young-man-who-came-for-treatment-was-cut-into-pieces-and-buried-at-home-227777

[11] இ.டிவி.பாரத், நாட்டு வைத்தியர் வீட்டில் தோண்ட தோண்ட எலும்பு கூடு..! மற்றொரு மண்டை ஓடு கிடைத்ததால் பதற்றம்!,

[12] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/thanjavur/skeleton-dug-up-from-the-siddha-vaidyar-house-who-was-arrested-in-the-youth-murder-case-near-kumbakonam/tamil-nadu20231124145055912912639

[13] காமதேனு, சிகிச்சைக்கு வந்தவர் கொலை! வீட்டைச் சுற்றி மனித எலும்புகள்சித்த வைத்தியரின் அதிர்ச்சி மறுபக்கம்!, Updated on : 22 Nov 2023, 3:15 pm

[14] https://kamadenu.hindutamil.in/crime-corner/human-bones-around-the-house-of-chitta-vaidyar-who-was-arrested-in-the-youth-murder

[15] மாலைமலர், சித்த வைத்தியர் வீட்டை மீண்டும் தோண்டும் போலீசார், By மாலை மலர், 24 நவம்பர் 2023, 3:32 PM.

[16] https://www.maalaimalar.com/news/district/police-re-excavate-siddha-vaidiyars-house-689114


சித்த மருத்துவர் பாலியல் சிகிச்சை கொடுத்தது- ஓரின சேர்க்கையில் ஈடுபட்டது, நோயாளியைக் கொன்றது, மனித மாமிசம் சாப்பிட்டது! (1)

நவம்பர் 25, 2023

சித்த மருத்துவர் பாலியல் சிகிச்சை கொடுத்ததுஓரின சேர்க்கையில் ஈடுபட்டது, நோயாளியைக் கொன்றது, மனித மாமிசம் சாப்பிட்டது!  (1)

வியாபாரமாகும் மருத்துவம்: இந்திய மக்கட்தொகை அதிகமாக-அதிகமாக, மக்களின் நோய்-சிகிச்சைக்கு மருத்துவர், மருத்துவமனை, மருந்து என்று எல்லாவற்றிற்கும் தேவை அத்கமாகிக் கொண்டிருக்கிறது. அந்நிலையில், இன்னொரு பக்கம் மருத்துவம், மருத்துவப் படிப்பு, மருத்துவமனை-சிகிச்சை என்று எல்லாமே வியாபாரமயமாக்கப் பட்டு விட்டது. இந்தியாவில் சிறந்த சிகிச்சைப் பெற குறைந்த அளவில் பணம் செலவழித்தால் போதும் என்ற நிலையும் அமெரிக்கர்-ஐரோப்பியர்களுக்குத் தெரிந்துள்ளது. குறிப்பாக “பை-பாஸ் சர்ஜரி” இந்தியாவில் செய்து கொள்வது மிகவும் அமெரிக்க-ஐரோப்பியர்களுக்குத் மலிவாக உள்ளது. தவிர வளைகுடா நாட்டு மக்களும் வந்து சிகிச்சை பெறுகின்றனர். இதனால், மருத்துவ வியாபாரம் நன்றாகவே நடந்து வருகிறது. அவர்கள் மூலம் வருமானமும் நன்றாகக் கிடைக்கிறது. அதனால், இத்தகைய மருத்துவ மனைகள் இந்தியர்களுக்கு சிகிச்சை அளிக்க விரும்பவதில்லை என்ற நிலைக்கே வந்து விட்டது எனலாம். ஆக இந்தியர்கள் சிகிச்சைப் பெரவேண்டும் என்றால், குறைந்தது ஒரு லட்ச ரூபாய் வைத்துக் கொண்டுதான் ஆச்பத்திரிக்குச் செல்லவேண்டியுள்ளது.

மருத்துவ வசதி சேவைசேவைத் தன்மையினை இழந்து விட்டது: அரசு ஆஸ்பத்திரிகளில் எல்லா வசதிகள் இருந்தாலும், தெரிந்தவர்கள் இல்லை என்றால், கவனிக்கப் படுவதில்லை. இல்லை, எல்லா இடங்களிலும், நிலைகளிலும் லஞ்சம் கொடுக்க வேண்டும், இல்லையென்றால், வேலை நடக்காது. ஒரு நாளில் நடப்பதை ஒரு மாதம் இழுத்து விடுவர். பொதுவாக, “அட்மிஸன்” ஆனால் தான் சிகிச்சை, இன்சூரன்ஸ் கிடைக்கும் போன்ற கன்டிஸன்களாலும், ஆஸ்பத்திரிகள் இந்த போக்கைக் கடைபிடித்து வருகிறார்கள். மேலும், “அட்மிஸன்” என்றால், குடும்பம் பாதிக்கப் படும். நோயாளியைப் பார்த்துக் கொள்ள ஒருவர் வேண்டும் என்றால், வீட்டில் சமைக்க, குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள, மேலும் வேலைக்குச் செல்ல என்று எல்லாவற்றையும் கவனிக்க முடியாது. இந்நிலைகளில் தான், சுயமருத்துவம், எளிதான சிகிச்சை அல்லது மாற்று முறையில் ஏதாவது கிடைக்குமா என்று நடுத்தர மக்கள் நினைக்கிறார்கள். அப்பொழுது தான் “போலி மருத்துவர்கள்” எனப் படுகின்ற மற்ற அலோபதி-அல்லாத மருத்துவர், நாட்டு மருத்துவர் முதலியோர் வருகின்றனர். முதலில் ஓரளவுக்கு நம்பிக்கைப் பெற்றதும், உள்ளூரில் மருத்துவர் என்ற பெயரைப் பெற்று விடுகின்றனர். பணம் வரவர கிளினிக்  வளர்ந்து, ஆஸ்பத்திரி ஆகிவிடுகிறது. இப்படித்தான், இந்த சித்த மருத்துவரும் இருந்துள்ளார்.

50 பேருக்கு சுன்னத் செய்தார்: என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுன்னத் என்பது முஸ்லிம்கள் கட்டாயமாக செய்து கொள்ள வேண்டிய ஒரு சடங்கு ஆகும். 50 பேருக்கு இவர் சொன்னது செய்துள்ளார் என்றால் நிச்சயமாக அவர்கள் முஸ்லிம்களாக தான் இருக்க வேண்டும். இல்லை அதில் சிலர் இந்துக்கள் இருக்கிறார்கள் என்றால் அது நிச்சயமாக செக்ஸ் ரீதியில் தான் அவர் அத்தகைய சுன்னத் செய்திருக்க வேண்டும். ஏனெனில், உடலுறவு இன்பம் நீட்டிக்க மற்றவர்களும் சுன்னத் செய்து கொள்வதாகத் தெரிகிறது. மேலும் இங்கு பாலியல் ரீதியில் பிரச்சினைகள் உள்ள ஒருவர் இவரிடம் சிசிச்சைக்கிற்காக வந்தது, அவருக்கு அதிகமாக மருந்து கொடுத்தது மற்றும் உடலுறவு கொண்டது போன்ற விவகாரங்கள் வெளிப்பட்டுள்ளதால், ஒருவேளை இவர் பாலியல் ரீதியிலாக மருத்துவ சிகிச்சை கொடுக்க முயற்சித்துள்ளார் அல்லது அதில் தான் ஒரு தெரிந்த மருத்துவர் என்ற நிலையில் புகழ விரும்பு அத்தகைய நடவடிக்கைகள் ஈடுபட்டுள்ளார் என்றும் கருத முடிகிறது.

செக்ஸ் மருத்துவத்தில் ஈடுபட்டாரா?: ஏனெனில் அவர் தயாரித்ததாக சொல்லப்படுகின்ற அந்த உணவு, அல்லது மனித மாமிசம் கொண்ட மருந்து, அல்லது அத்தகைய ஒரு மருத்துவ கலப்பு, என்றெல்லாம் சொன்னாலும், அத்தகைய மருந்தை தயாரித்து யாராவது ஒரு நோயாளிக்கு கொடுத்து, அதன் விளைவை சரிபார்த்து அதன் மூலமாக அத்தகைய பாலியல் நோய் தீர்க்க முடியும் என்ற முடிவுக்கு வருவதற்காக எத்தகைய பரிசோதனையை, அதாவது “கிளினிக்கல் டெஸ்டிங்” என்று சொல்வார்கள், கையாண்டார் என்பதற்கு சந்தேகம் வலிக்கிறது. கேரளாவில் அத்தகைய முறைகள் கையாளப்படுகின்றன, அதற்கு நரபலிம் கொடுக்கப்படுகிறது போன்ற செய்திகள் வந்துள்ளன. ஒருவேளை இவரும் அத்தகைய சிகிச்சையில் ஈடுபட்டாரா என்ற சந்தேகம் எழுகிறது.  நிச்சயமாக சமூகத்தில் இத்தகைய “போலி மருத்துவர்களிடம் ”மற்றவர் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தீபாவளிக்குச் சென்றவர் காணாமல் போனது: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே மணல்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக்ராஜன் (வயது 27)[1]. சென்னையில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த இவர், தீபாவளிக்கு ஊருக்கு வந்துவிட்டு, திரும்பிய போது மாயமானார்[2]. அசோக்ராஜனுக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில், தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு வந்தவர், கடந்த 13-ம் தேதி சிதம்பரத்துக்குச் சென்று நண்பரைப் பார்த்துவிட்டு மீண்டும் சென்னைக்குச் செல்வதாகத் தன்னுடைய பாட்டி பத்மினியிடம் சொல்லிவிட்டு வீட்டிலிருந்து கிளம்பியிருக்கிறார். அசோக்ராஜன் சென்னைக்கு சென்று சேர்ந்துவிட்டாரா எனக் கேட்பதற்காக, பாட்டி பத்மினி அவரது மொபைலுக்கு உறவினர் ஒருவர் மூலம் தொடர்புகொண்டுள்ளார். ஆனால், அசோக்ராஜன் மொபைல் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. ஊருக்கு போன அசதியில் உறங்கிக்கொண்டிருப்பார் என நினைத்த பாட்டி, சிறிது நேரம் கழித்து மீண்டும் உறவினர் மூலம் அசோக்ராஜ் எண்ணுக்கு தொடர்புகொண்டுள்ளார். அப்போதும், அவரது எண் ஸ்விட்ச் ஆஃப்பிலேயே இருந்துள்ளது. அதன் பிறகு அசோக்ராஜனிடமிருந்து எந்தத் தொடர்பும் இல்லை.

15-11-2023 அன்று பாட்டி போலீஸாரிடம் புகார் கொடுத்தது: இதனால், பயந்துபோன பாட்டி பத்மினி சோழபுரம் போலீசில் கடந்த 15 ஆம் தேதி புகார் அளித்துள்ளார். பாட்டி பத்மினி கொடுத்த புகாரின் பேரில், போலீஸார் சோழபுரம் கடைத் தெருவில் உள்ள சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது அசோக்ராஜன் கீழத்தெரு வழியாக சென்றவர், மீண்டும் திரும்பாதது தெரியவந்தது. இதற்கிடையில், அசோக்ராஜன் வீட்டிற்கு ஒரு கடிதம் ஒன்று வந்தது. அதில், தனக்கு ஆண்மை இல்லாமல் இருப்பதால் வாழப் பிடிக்கவில்லை என அசோக்ராஜன் எழுதியதாக இருந்தது. இதுவரை இதுபோன்ற சிக்கல்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை எனக் கூறிய குடும்பத்தாரும் நண்பர்களும், அசோக்ராஜன் ஊருக்கு வந்தபோது சோழபுரம் கீழத்தெருவைச் சேர்ந்த நாட்டு வைத்தியரான கேசவமூர்த்தி என்பவரிடம் சிகிச்சை பெற்றதாக போலீசாரிடம் கூறியுள்ளனர். 

17-11-2023 அன்று கேசமூர்த்தியை கைது செய்த போலீஸ்: இதன் அடிப்படையில், போலீசார் மற்றும் உறவினர்கள் அப்பகுதியில் விசாரணை நடத்தியபோது, நாட்டு வைத்தியர் கேசவமூர்த்திக்கும் அசோக்ராஜனுக்கும் பழக்கம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் கடந்த 17ம் தேதி, கேசவமூர்த்தியை அழைத்துச் சென்று இரண்டு நாட்களாக விசாரணை நடத்தினர். விசாரணையில், அசோக்ராஜன் தனக்கு ஆண்மை இல்லை என்றும் அதனால்  தனக்கு வாழப் பிடிக்கவில்லை எனக் கூறி என்னிடம் அழுதார். பின்னர், நான் தஞ்சாவூரில் உள்ள ஒரு டாக்டரிடம் சிகிச்சை பெற அறிவுறுத்தினேன். இதுதான் நடந்தது எனத் திரும்பத் திரும்ப சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்து சலித்துப்போன போலீசார், தங்கள் பாணியில் விசாரணையைத் துவக்கியுள்ளனர். அப்போது, பொலபொலவென நடந்ததை கொட்டி போலீசாருக்கே அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார் நாட்டு வைத்தியர் கேசவமூர்த்தி. அவர் சொல்வதைக் கேட்கும்போதே குமட்டும் அளவுக்கு கொடூரம் வெளிப்பட்டுள்ளது. 

விசாரணையில் வெளிவந்த விவகாரங்கள்: கேசவமூர்த்தியிடம் போலீஸ் நடத்திய விசாரணையில், ஆண்மை குறைபாட்டைப் போக்க மருந்து கொடுத்து வந்துள்ளார். இதற்காக அவர் கஞ்சா செடிகள் மற்றும் பலவித மூலிகை இலைகளை கொண்டு பொடி செய்து மாத்திரைகளாக தயாரித்து விற்பனை செய்திருக்கிறார். மூலிகை செடிகளை வைத்து ‘கிறுக்கி முறுக்கி’ என்ற மருந்தைத் தயாரித்து, அதை தனது இச்சைக்கு இணங்குபவர்களிடம் கொடுத்து ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்தநிலையில், அசோக்ராஜன் தனக்கு ஆண்மை இல்லை என்றும் அதனால் தனக்கு வாழ பிடிக்கவில்லை என்றும் கேசவமூர்த்தியிடம் அழுதார். தஞ்சாவூரில் உள்ள ஒரு டாக்டரிடம் சிகிச்சை பெற அறிவுறுத்திய கேசவமூர்த்தி, இதையே காரணமாக வைத்து அவரை மசியவைத்து ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்தி வந்துள்ளார். ஆனால், அசோக்ராஜன் இதை மறுத்துள்ளார். இந்த நிலையில் தீபாவளிக்கு ஊருக்கு வந்திருந்த அசோக்ராஜன், நாட்டு மருத்துவர் கேசவமூர்த்தியை சந்தித்துள்ளார். அப்போது, அசோக்ராஜனுக்கு ஆண்மை வீரியம் அதிகரிக்கும் மருந்து கொடுத்த கேசவமூர்த்தி, அந்த மருந்தை சாப்பிட வைத்துள்ளார். அதன் பிறகு, அசோக்ராஜனுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார். பிறகு அசோக்ராஜன் நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளார். இதில், எங்கே நாம் சிக்கிக்கொள்வோமோ என அஞ்சிய கேசவமூர்த்தி, அசோக்ராஜின் உடலைத் துண்டு துண்டாக வெட்டி, வீட்டின் உள்ளே புதைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல், அசோக்ராஜனின் பிறப்புறுப்பை வெட்டி தனியாகப் புதைத்துள்ளார்[3]. மேலும், அவரது உடலில் இருந்த இதயம், நுரையீரல், கல்லீரல் உள்ளிட்டவற்றை வெளியே எடுத்து அதனை சமைத்து சாப்பிட்டும், தான் வளர்க்கும் நாய்க்கும் விருந்தாகப் படைத்துள்ளார் கேசவமூர்த்தி[4]. இதனை எல்லாம் எந்தவிதப் பதற்றமும் இல்லாமல் கேசவமூர்த்தி சொன்னதைக் கேட்டு போலீஸார் அதிர்ந்துள்ளனர். 

© வேதபிரகாஷ்

22-11-2023.


[1] தமிழ்.ஒன்.இந்தியா, கும்பகோணம் சித்த வைத்தியர் வீட்டை சுற்றி தோண்ட தோண்ட எலும்புகள்.. திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சி, By Velmurugan P Updated: Wednesday, November 22, 2023, 16:21 [IST].

[2] https://tamil.oneindia.com/news/thanjavur/police-searching-chitta-vaidyar-house-who-arrested-in-youth-murder-case-near-kumbakonam-559131.html

[3] நக்கீரன், நரமாமிசம் சாப்பிட்ட வைத்தியர்! – லிஸ்டில் இருக்கும் 190 பேர்!,  செல்வகுமார், Published on 24/11/2023 (15:21) | Edited on 24/11/2023 (16:00).

[4] https://www.nakkheeran.in/special-articles/special-article/kumbakonam-doctor-kesavamoorthy-issue

05-12-2022 அன்று 5-க்கும் மேற்பட்ட பசுமாடுகளை வடமாநிலத் தொழிலாளர்கள் சேர்ந்து பாலியல் ரீதியான வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளது!

திசெம்பர் 14, 2022

05-12-2022 அன்று 5-க்கும் மேற்பட்ட பசு மாடுகளை வடமாநிலத் தொழிலாளர்கள் சேர்ந்து பாலியல் ரீதியான வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளது!

பசு மாடுகளை வடமாநிலத் தொழிலாளர்கள் சேர்ந்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது: பவானி அருகே மேய்ச்சலுக்கு சென்ற பசுக்களை பாலியல் வன்கொடுமையில் வட மாநில தொழிலாளர்கள் தொந்தரவு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, என்று “தமிழ் முரசு,” என்ற மாலை நாளிதழில் செய்தி 10-12-2022 அன்று வெளிவந்தது[1]. மற்ற பிரபல நாளிதழ்களில் தேடிப் பார்த்தபோது வந்ததாகத் தெரியவில்லை. ஒரே ஒரு இணைதளத்தில் “தமிழ் முரசு,” நாளிதழில் வந்துள்ள செய்தியை அப்படியே, அது வெளியிட்டுள்ளது[2]. பவானி – மேட்டூர் ரோடு பகுதியில் ஜீவா நகர் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 10-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்தனர்[3]. கடந்த சில மாதங்களாக இந்நிறுவனத்தில் தங்கி வேலை செய்து வந்துள்ளனர். அவர்கள் தங்கியிருந்த குடியிருப்புக்கு அருகாமையில் விவசாய நிலங்கள் உள்ளதால் அவ்வப்போது கால்நடைகள் மேய்ச்சலுக்கு வந்து செல்வது வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில், விவசாய நிலத்துக்கு மேய்ச்சலுக்கு வந்த 5-க்கும் மேற்பட்ட பசு மாடுகளை வடமாநிலத் தொழிலாளர்கள் சேர்ந்து பாலியல் ரீதியான வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளதோடு, பசுக்களைக் கடித்தும் காயப்படுத்தியுள்ளனர். இத்தகைய முறையற்ற கற்பழிப்புகள் மற்ற மாநிலங்களிலும் நடந்துள்ளதாகத் தெரிகிறது[4].

களவியலாகற்பியலா, மிருகங்களுடன் புனைவது தமிழர்களின் கலாச்சாரமா?: மிருகங்களுடன் புனைவது, உடலுறவு வைத்துக் கொள்வது, “சங்க காலத்திலிருந்து உள்ளது,” என்று ஏதாவது ஆதாம் உள்ளதா, “கீழடியில்” ஏதாவது கண்டு பிடிக்கப் பட்டதா, அதனால், போற்ற வேண்டும், ஆதரிக்க வேண்டும், “களவு” முறையில் மறைக்க வேண்டும் என்று, ஏதாவது “களவியல்” சித்தாந்தம் உளளதா? பசுக்கள் தான் பாலியல் வன்புணர்ச்சிகளுக்கு உட்பட்டுள்ளது, அதனால், “சனாதனிகள்,” சங்கிகள் தான் கவலைப் படவேண்டும், மற்ற தமிழர்கள் கவலைப் படவேண்டாம் என்றெல்லாம் உள்ளதா? சரி, அந்த பசுக்கள் கொடுக்கும் பாலை இனி மனிதகள் உட்கொள்ளலாமா, எந்த பிரச்சினையும் வராதா, என்றெல்லாம் பற்றி யாராவது விளக்க முடியுமா?  “களவியலா-கற்பியலா” என்று டிவி தொலைக்காட்சிகளில் வாத-இவாதம், பட்டி மன்றங்கள் நடட்துவார்களா?

இக்கொடூரத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அனைவரும் வாகனம் மூலம் அங்கிருந்து உடனடியாக உடமைகளுடன் வெளியேற்றப்பட்டது: இத்துணிகர வன்கொடுமை சம்பவம் கடந்த 5-ம் தேதி [05-12-2022 அன்று] அரங்கேறியுள்ளது. மேய்ச்சலுக்கு சென்ற பசுக்கள் காயங்களுடன் திரும்பியதைக் கண்ட உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் விசாரணையில் வடமாநிலத் தொழிலாளர்கள் சேர்ந்து பசுக்களை வன்புணர்வில் ஈடுபட்டது தெரியவந்தது. இத்தகவலறிந்த, பவானி வருவாய்த் துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, இக்கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அனைவரும் வாகனம் மூலம் அங்கிருந்து உடனடியாக உடமைகளுடன் வெளியேற்றப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து, பவானி போலீசாரும் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணை தொடர்பான அறிக்கை பவானி வருவாய்த்துறை மூலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வேலைக்கு வந்த வடமாநிலத் தொழிலாளர்கள் கும்பலாக சேர்ந்து மேய்ச்சலுக்கு வந்த பசுக்களிடம் வரம்புமீறி பாலியல் கொடுமையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள்என்று குறிபிடப் பட்டு, அடையாளம் மறைக்கப் படுவது: ஆனால், தொடர்ந்து,“வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள்’ என்று குறிபிடப் பட்டு, அவர்களின் பெயர்களைக் கூட தெரிவிக்காமல் இருப்பது வியப்பாக இருக்கிறது. போக்சோ சட்டத்தில் கூட பாதிக்கப் பட்ட பெண்களின் அடையாளத்தைத் தான் வெளியிடக் கூடாது என்றுள்ளது. இங்கு பாலியல் ரீதியில் பாதிக்கப் பட்டவை பசுக்கள் என்று தெரியப் படுத்தப் பட்டுள்ளது. பிறகு, வரம்புமீறி பாலியல் கொடுமையில் ஈடுபட்டது – வந்த 5-க்கும் மேற்பட்ட பசு மாடுகளை வடமாநிலத் தொழிலாளர்கள் சேர்ந்து பாலியல் ரீதியான வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளதோடு, பசுக்களைக் கடித்தும் காயப்படுத்தியுள்ளது முதலிய கொடிய-குரூர-பயங்கரமான குற்றங்களை, குற்றம் புரிந்தவர்களை ஏன் மறைக்க வேண்டும்?

 யார் அந்தவடமாநிலத் தொழிலாளர்கள்” ?: “இக்கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அனைவரும் வாகனம் மூலம் அங்கிருந்து உடனடியாக உடமைகளுடன் வெளியேற்றப்பட்டது தெரியவந்தது,” எனும் போது, அவ்வாறு ஏன் செய்யப் பட்டது என்று திகைப்பாக இருக்கிறது. குற்றம் செய்தவர்கள், அதிலும் இத்தகைய, இயற்கைக்கு மாறான “பசுக்களை வன்புணர்வில் ஈடுபட்டது” தெரிய வந்துள்ள போது, அதை மறைக்கும் முயற்சி எதைக் காட்டுகிறது என்று தெரியவில்லை. ஏற்கெனவே தமிழகத்தில், “வடமாநிலத் தொழிலாளர்கள்” அதிகம் வருவதால், வந்து பல இடங்களில் வேலை செய்வதால், தமிழர்களின் வேலை வாய்ப்பு பறிபோகிறது, குறைகிறது என்று பரவலாக, வெளிப்படையாக எல்லோராலும் பேசப் பட்டு வருகிறது. அரசியல் ரீதியாகவும் வெறுப்பு, காழ்ப்பு போன்றவை வெளிப்படுத்தப் பட்டு வருகின்றன. குற்றங்களில் அவர்கள் தாம் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் சொல்லப் படுகிறது. அந்நிலையில், அவர்கள் யார் என்று சொல்லப் பட வேண்டும்.

பங்களாதேசத்தவர், முஸ்லிம்கள் என்றாலும் தெரிவிக்கப் பட வேண்டும்: பங்களாதேசத்தவர், அவர்கள் முஸ்லிம்களாகத் தான் இருக்கின்றனர், ஆனால், தங்களது அடையாளங்களை மறைத்து, ஏன் “இந்துக்கள்” போர்வையிலும் வேலை செய்து வருகின்றனர். பங்களாதேசத்திலிருந்து, எவ்வாறு, இத்தனை தூரம் வரமுடிகிறது, அவர்களை எவ்வாறு  யார் எப்படி வேலைகளுக்கு வைக்கிறார்கள் என்பது தெரியவில்லை என்பது இல்லை. பெரும்பாலான கட்டிட வேலை நடக்கும் இடங்களில் இவர்கள் தான், ஆயிரக் கணக்கில் வேலை செய்து கொண்டிருக்கின்றனர். அங்கு வேலை செய்யும் மேஸ்திரிகளுக்கு, மேற்பார்வையாளர்களுக்கு, இஞ்சினியர்களுக்கு, பில்டர்களுக்கும் தெரிந்து தான் உள்ளது. ஆனால், யாரும் கண்டுகொள்வதில்லை என்றே தெரிகிறது. ஏற்கெனவே, கோவையில் “காஸ்-குண்டு வெடிப்பு,” முயற்சி நடந்திருக்கிறது. அது மங்களூரு “ஆட்டோ-குண்டு வெடிப்பு,”டன் தொடர்பு படுத்தி செய்திகள் வந்துக் கொண்டிருக்கின்றன. தமிழக-கர்நாடக இணைப்புகள் வெளிப்படுகின்றன. பிறகு, பங்களாதேச இணைப்பு என்ன என்று ஆராய வேண்டியுள்ளது.

அடையாளம் மறைப்பது எக்யூலரிஸமா அல்லது கம்யூனலிஸமா?: பீஹார், உத்திரபிரதேசம் என்றால் தூற்றவேண்டும், மற்ற “வடமாநிலத் தொழிலாளர்கள்” என்றால் அமைதியாக இருக்க வேண்டும், “பங்களாதேசத்தவர்” என்றால் இன்னும் அமுக்கி வாசிக்க வேண்டும், அதிலும் “முஸ்லிம்கள்” என்றால், மூச்சே விடக் கூடாது என்று ஏதாவது சம்பிரதாயம், தீர்மானம், கட்டுப்பாடு, என்று இருக்கிறதா என்று தெரியவில்லை. மேற்கு வங்காளம் மூலம் வருவதால், “கூட்டணி தர்மம்” ஏதாவது தடுக்கிறதா என்று தெரியவில்லை. அல்லது அவர்களுக்கும், இங்குள்ளவர்களுக்கும் ஏதாவது சம்பந்தம், தொடர்பு, இணைப்பு என்று உள்ளதா என்றும் தெரியவில்லை. “செக்யூலரிஸம்” அதசார்பற்ற நிலை, சமதர்மம்,  என்றெல்லாம் பேசிக் கொண்டு, கடைசியாக, “ஓட்டு வங்கி அரசியல்” எனும் போது, “கம்யூனலிஸமாகி” அதை  சித்தாந்தங்கள் மூலம் முலாம் பேசி, போற்றிக் கொன்டாடும் விதத்தை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

பவானி போலீசார் அறிக்கை பெற்ற மாவட்ட என்ன செய்வார்?: ஆட்சியர் இதுகுறித்து, பவானி போலீசாரும் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணை தொடர்பான அறிக்கை பவானி வருவாய்த்துறை மூலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, என்று செய்தி கூறுகிறது. சரி, அறிக்கை பெற்ற, வாங்கிக் கொண்ட மாவட்ட ஆட்சியாளர், படித்தப் பிறகு, என்ன நடவடிக்கை எடுத்தார்? இன்று 11-12-2022 ஆகிறது, ஆறு நாட்களாகியும் ஒன்றும் செய்யவில்லையா? அந்த “வடமாநிலத் தொழிலாளர்கள்”  வசதியாக அனுப்பப் பட்டு மறைந்து விட்டனரா?

© வேதபிரகாஷ்

14-12-2022.


[1]  தமிழ் முரசு, பசுக்களிடம் அத்துமீறிய வடமாநில தொழிலாளர்கள் விரட்டியடிப்பு சென்னை, 10-12-2022, பக்கம்.4.,

[2] லோகல்.அப்.தமிழ், பசுக்களுக்கு பாலியல் தொல்லை: வடமாநிலத்தவர்கள் அட்டகாசம், சக்கரவர்த்தி, By சக்கரவர்த்தி, Dec 10, 2022, 09:12 IST

[3] https://tamil.getlokalapp.com/tamilnadu-news/erode/anthiyur/sexual-harassment-of-cows-northerners-are-outraged-8542211

[4] தமிழ்.சமயம், உத்தர பிரதேசத்தில் பசுக்களை கற்பழித்த நபா் கைது, Samayam TamilUpdated: 22 May 2019, 11:12 pm

https://tamil.samayam.com/latest-news/india-news/man-held-for-raping-cows-at-shelter-in-ayodhya-up/articleshow/69450193.cms

தெய்வத்தின் சொந்த தேசத்தில், அதிகம் எழுத்தறிவு கொண்ட மாநிலத்தில் நிர்வாண பூஜை, நரபலி முதலியன – செக்யூலரிஸத்தில் புதிய வடிவங்கள் கொள்வது (2)

ஒக்ரோபர் 15, 2022

தெய்வத்தின் சொந்த தேசத்தில், அதிகம் எழுத்தறிவு கொண்ட மாநிலத்தில் நிர்வாண பூஜை, நரபலி முதலியனசெக்யூலரிஸத்தில் புதிய வடிவங்கள் கொள்வது (2)

ரோஸ்லியைக் கொன்று உடலை அறுத்து பூஜை செய்தது: பின்னர் அங்கிருந்து பகவல் சிங்கின் வீட்டுக்கு அழைத்துச் சென்று, இரவு நேரத்தில் நரபலி பூஜையை செய்துள்ளனர். கட்டிலில் கிடத்தி கைகளையும், கால்களையும் கட்டிப்போட்டு முதலில் கழுத்தை அறுத்துள்ளனர். பின்னர் உடலை சுமார் 22 துண்டுகளாக வெட்டியுள்ளனர். அப்பெண்ணின் கூக்குரல், அழுகுரல் எல்லாம் பக்கத்தில் இருப்பவர்களுக்குக் கேட்கவில்லையா போன்ற விவரங்களும் தெரியவில்லை. உடலை வைத்து சில பூஜைகள் செய்திருக்கின்றனர். பூஜை முடிந்த பிறகு வீட்டுக்கு வெளியே துணி துவைக்கும் கல் அமைந்திருக்கும் பகுதியில் குழிதோண்டி உடலைப் புதைத்து, அதன் மீது மஞ்சள் நட்டு வைத்திருக்கின்றனர். ஆனால், மந்திரத்தால். தந்திரத்தால், நிறம் மாறவில்லை, ஒன்று நடக்கவில்லை. முஹம்மது சபி எப்படி பணம் வரும் என்ற ரகசியமும் தெரியவில்லை. பகவல்சிங்-லைலா தம்பதி கோபித்துக் கொள்ள, முதல் பூஜையால் பலன் கிடைக்காததால், மற்றொரு நரபலி கொடுக்க வேண்டும் எனக் கூறி கடந்த மாதம் மீண்டும் ஒரு நரபலி கொடுக்க முடிவு செய்ய, அதற்கும் ஒப்புக் கொண்டனர்.

அடுத்த பலிகடாபத்மா: கடவந்தறா பகுதியில் லாட்டரி விற்பனை செய்துவந்த தருமபுரியைச் சேர்ந்த பத்மா (52) என்ற பெண்ணையும் பணம் கொடுப்பதாகக் கூறி திருவல்லாவுக்கு அழைத்துச் சென்று ரோஸ்லியை நரபலி கொடுத்தது போன்றே நரபலி கொடுத்துள்ளனர். அவரின் உடல்களையும் துண்டு துண்டாக வெட்டி வீட்டுக்கு வெளிப்பகுதியில் புதைத்துள்ளனர். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதால்,  இப்பொழுது, தமிழக ஊடகங்களில், இச்செய்தி உச்சத்திற்குச் சென்றுள்ளது. முதலில் முஹமது சபியின் பெயரை தமிழ் ஊடகங்கள் சொல்லவில்லை, அமுக்கி வாசித்தது, ஆனால், இப்பொழுது குறிப்பிட ஆரம்பித்து விட்டன என்பதையும் கவனிக்கலாம். ஆக, ஊடகங்கள் கூட “கேரள மாடல்,” “தமிழக மாடல்” என்றுதான் வேலை செய்கின்றன போலும். இருப்பினும், இரு மாநில முதல்வர்களும் இந்த செய்தியை மறந்து, இந்தி எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். இதைப் பற்றியெல்லாம் டிவியில் விவாட்தம் ஏற்பாடு செய்யவில்லை.

ஆகஸ்ட்செப்டம்பர் ஆதங்களில் தான் ரோஸ்லி முறையே பத்மா காணவில்லை என்று புகார் கொடுத்தது: ரோஸ்லியைக் காணவில்லை என கடந்த ஆகஸ்ட் மாதம் 17-ம் தேதி அவரின் மகள் மஞ்சு புகார் அளித்தார். அந்த விசாரணையில் பெரிய அளவில் துப்புத் துலங்கவில்லை. பத்மாவைக் காணவில்லை என அவரின் மகன் செல்வராஜ் கடந்த செப்டம்பர்  மாதம் 27-ம் தேதி புகார் அளித்தார். அவரின் செல்போனை ஆய்வு செய்தபோது அது திருவல்லா பகுதியில் கடைசியாகப் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. பின்னர் சிசிவிடிவி காட்சிகள் உள்ளிட்டவற்றை ஆய்வுசெய்து பத்மாவைக் கடத்திய முஹம்மது ஷாஃபி முதலில் கைதுசெய்யப்பட்டார். அவரிடம் விசாரித்ததில் பெண்கள் கொடூரமாக நரபலி கொடுக்கப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளியானது. அவர்களது உடலை அடையாளம் காணும்விதமாக டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்வதற்காகக் கோட்டயம் மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியில் அவர்களது உடல்கள் கொண்டு செல்லப்பட்டன. இது தொடர்பாக பகவல் சிங், 68, அவருடைய மனைவி லைலா, 58 மற்றும் மாந்த்ரீகத்தில் ஈடுபட்ட முகமது ஷபி, 52, ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முகமது சபி, மொஹம்மது ஷஃபி யார்?: முதலில் உடகங்கள் இவனது பெயரை அமுக்கி வாசித்தன, அதற்குள் உள்ளூர் நாளிதழ்கள் பகவல்சிங் சிபிஎம் நிர்வாகி என்றெல்லாம் குறிப்பிடப் பட்டவுடன், இவனது பெயர் பிரதானமாக குறிப்பிடப் பட்டது. முகமது ஷாஃபி / ரஷீத் மாந்திரீகராக – மலையாள மாந்தீரிகன் –  உள்ளூரில் அறியப்படுகிறார்[1] என்று பிபிசி மரியாதையுன் குறிப்பிடுகிறது. ஷபி, தன்னை மலையாள மாந்தீரிகன் போல் காட்டிக் கொண்டுள்ளார் என்கிறது இன்னொரு இணைதள நாளிதழ். வக்கிரபுத்தி கொண்ட சஃபி, தனது குற்றத்தில், ஆசை வார்த்தைக் கூறி மற்றவர்களை நம்ப வைத்து அவர்களையும் சேர்த்துக் கொண்டு, தனது குற்றத்துக்கு அவர்களையும் உடந்தையாக்கிவிடுவார். மிகவும் வஞ்சகமான குற்றவாளி, தனது திட்டத்தை மற்றவர்களின் துணையோடு செய்வது இவரது வழக்கம் என்றும் ஐஜிபி கூறியுள்ளார். இப்படி ஊடகங்கள் வர்ணிக்கின்றன. ஒரு முஸ்லிம் எப்படி கேரளாவில் இவ்வாறு மந்திரவாதியாக இருக்கிறான், தந்திரங்கள் செய்கிறான் என்றெல்லாம் விளக்கவில்லை. அதாவது, கேரளாவில் எல்லோரும் எல்லா வேலைகளையும் செய்யலாம் போலிருக்கிறது.

முகமது சபி / ரஷீத் என்ற கேரள மந்திரவாதி: பல பெயர்களில் உலா வரும் இவன் ஒரு தாதா போலத்தான் கருதப் பட்டு வருகிறான். இவன் பெரிய பணக்காரன் என்றும் தெரிகிறது. அவனிடத்தில் பேரூந்து, ஜீப், கார் என்று நான்கு வாகனங்களை வைத்திருக்கிறான். ஒரு ஓட்டலை நடத்தி வருகிறான். அங்கு தான் தனக்கு வேண்டியவர்கள் எல்லாம் வந்து செல்வது வழக்கம். ரோஸ்லி, பத்மா முதலியோர் இங்கு வழக்கமாக வரும் வாடிக்கையாளர்கள் என்றும் தெரிகிறது.  இவர்களிடம் தத்தம் தொழில்-வியாபார ரீதியில் தொடர்புகளும் இருந்து வருகின்றன. எர்ணாகுளத்தில், காந்திநகரில் இவனுக்கு வீடும் இருக்கிறது. போதாகுறைக்கு, ஊடகங்களின் செய்திகள் இவன் போதை மருந்து, விபச்சாரம், கற்பழிப்பு, திருட்டு முதலியவற்றிலும் ஈடு பட்டு வந்துள்ளான் என்றுள்ளது. ஆக, ஒரு சாதாராண ஆளால் இத்தனையும் செய்ய முடியாது.

கடந்த 15 ஆண்டுகளில் 10-க்கும் அதிகமான வழக்குகள் அவா் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன: ஷாஃபி மீது 2020இல் எர்ணாகுளம் புறநகர் மாவட்டத்தில் 75 வயது மூதாட்டியை கொடூரமாக தாக்கிக் காயப்படுத்தி கொலை செய்ததாக ஒரு கொலை வழக்கு குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நிலுவையில் உள்ளது[2]. அந்த வழக்கில் அவர் ஜாமீனில் இருக்கிறார். பிறகு எப்படி வெளிவந்தார் என்று தெரியவில்லை. அது தவிர வேறு சில சிறிய குற்றங்களுக்கான வழக்குகளும் அவர் மீது உள்ளன, என்று குறிப்பிட்டு, கஞ்சா கடத்தல், போதை மருந்து, விபச்சாரம் என்றெல்லாம் அடுக்குகின்றன. இந்த நபர்தான் தம்பதியை நரபலி கொடுக்க சம்மதிக்கச் செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் 10-க்கும் அதிகமான வழக்குகள் அவா் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன[3]. இருப்பினும் வெற்றிகரமாக வெளியில் ஜாலியாக சுற்றி வந்து, இத்தனை வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறான் என்றால், அவனது செல்வாக்கை கவனிக்கலாம். அந்த அளவுக்கு அரசியல், அதிகாரம் முதலிய ரீதிகளில் அழுத்தம் கொண்டவர்களின் பாதுகாப்பு இருப்பதும் தெரிகிறது.

ஷபியின் மனைவி மறுப்பது: முகமது ஷாஃபி தனது மனைவியின் செல்பேசியில் இருந்து சமூக வலைதளத்தில் ‘ஸ்ரீதேவி’ என்ற பெயரில் போலி கணக்கை உருவாக்கினார். இந்த வழக்கில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கப்பெறலாம் என்று கூறப்படும் நிலையில்[4], சஃபியின் மனைவியோ, தனக்கு திருமணமாகி 24 ஆண்டுகள் ஆவதாகவும், தனது கணவர் இப்படிப்பட்ட கொடூரமான காரியங்களில் ஈடுபடுவார் என்பதை தன்னால் நம்பவே முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்[5]. அதில் இருந்து மருத்துவரிடம் நட்பை ஏற்படுத்திக் கொண்டதாக முகமது ஷாஃபி தெரிவித்துள்ளார். பகவால் சிங்கை சந்தித்து, நெருக்கத்தை ஏற்படுத்திய பிறகு ஸ்ரீதேவியின் சுயவிவரத்தை நீக்கியதாகவும், முகமது ஷாஃபி கூறியதாக போலீஸார் தெரிவித்தனர். சமூக ஊடக பக்கத்தில் பதிவான ஸ்ரீதேவி என்ற அழிக்கப்பட்ட கணக்கின் தகவல்களை மீட்க கேரள காவல்துறை சைபர் கிரைம் பிரிவின் உதவியை நாடியுள்ளது.

© வேதபிரகாஷ்

14-10-2022.


[1] பிபிசி.தமிழ், கேரள நரபலி: மாந்திரீகரின் சர்ச்சை திட்டம், இரண்டு பெண்களை பலி கொடுத்த தம்பதிசமீபத்திய தகவல்கள், 12 அக்டோபர் 2022

[2] https://www.bbc.com/tamil/india-63228532

[3] https://www.thanthitv.com/news/tamilnadu/breaking-kerala-human-sacrifice-incident-that-shook-the-country-kerala-police-action-142246

[4] தினமணி, கேரள நரபலி: 61 பாக்கெட்டுகளில் உடல்பாகங்கள், By DIN  |   Published On : 13th October 2022 12:34 PM  |   Last Updated : 13th October 2022 04:27 PM

[5]  https://www.dinamani.com/india/2022/oct/13/kerala-human-sacrifice-body-parts-in-61-bags-3931784.html

தெய்வத்தின் சொந்த தேசத்தில், அதிகம் எழுத்தறிவு கொண்ட மாநிலத்தில் நிர்வாண பூஜை, நரபலி முதலியன எப்படி நடந்தேறின? (1)

ஒக்ரோபர் 15, 2022

தெய்வத்தின் சொந்த தேசத்தில், அதிகம் எழுத்தறிவு கொண்ட மாநிலத்தில் நிர்வாண பூஜை, நரபலி முதலியன எப்படி நடந்தேறின? (1)

கேரளாவில் மலையாள மாந்தீரிகனால் நரபலி: கேரளா, “தெய்வத்தின் சொந்த தேசம்,” “கடவுளுக்கே உரிய நாடு” என்றெல்லாம் ஒருபக்கமும், இந்தியாவிலேயே அதிக கல்வி அறிவு கொன்ட மாநிலம் என்று இன்னொரு பக்கமும் சொல்லப் பட்டு வருகின்றது. கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ளவர்கள் மெத்தப் படித்தவர்கள், முற்போக்குவாதிகள், செக்யூலரிஸவாதிகள், மார்க்சீயவாதிகள், என்றெல்லாமும் அறியப் பட்டு வருகிறார்கள். கம்யூனிஸ்டுகள், முஸ்லிம்கள், கிருத்துவர்கள் ஆதிக்கத்துடன் அரசியல், அதிகாரம் முதலியவற்றில் கோலோச்சி வருகிறார்கள். இந்தியா முழுவதும், ஏன் உலகம் முழுவதும் மலையாளிகள் பரவியுள்ளார்கள், இமய மலைக்கு சென்றாலும், அங்கு ஒரு நாயர், “டீ ஸ்டால்” வைத்திருப்பார் என்ற அளவுக்கு பேசப் பட்டு வருகிறது. அத்தகைய மாநிலத்திலிருந்து தான் அடிக்கடி கற்பழிப்பு, செக்ஸ் என்றெல்லாம் செய்திகள் வருவதுண்டு. இப்பொழுது, எல்லாம் சேர்ந்த ஒரு குரூரமான செய்தி வெளிவந்துள்ளது. ஒரு மலையாள மாந்திரீகன் நரபலி கொடுத்துள்ளான் என்ற செய்தி தான் அது.

பகவல்சிங்சகலகலா வல்லவன்மாந்திரீகம் மூலம் பணம் பெற ஆசைப் பட்டது: பகவல் சிங் – உள்ளூர் சிபிஎம் கட்சி நிர்வாகி, தலைவர் என்றெல்லாம் குறிப்பிடப் படும் இவர் – மசாஜ் சிகிச்சையாளர், ஆயுர்வேத மருத்துவர், பாரம்பரிய வைத்தியர், ஹீலிங் நிபுணர் என்றும் அறியப் படுகிறார். அதாவது மருத்துவத்தில் சகலகலா வல்லவன் போன்று திகழ்கிறார் போலும். இவரது மனைவி லைலா – அதாவது, இது எந்தமத பெயர் என்று தெரியவில்லை. “பகவல் சிங்” என்றாலும் புரியவில்லை, இவர் சீக்கியரா, கிறிஸ்துவரா தெரியவில்லை. எல்லாமே செக்யூலரிஸத்தின் உச்சத்தில் இருப்பதாகத் தெரிகிறது. இந்த, பத்தினம்திட்டா மாவட்டம் திருவல்லாவைச் சேர்ந்த தம்பதி தான், பணக்காரராக வேண்டும் என்ற ஆசையில் மாந்த்ரீகத்தை நம்பி, தமிழகத்தைச் சேர்ந்தவர் உட்பட இரண்டு பெண்களை நரபலி கொடுத்துள்ளனர்[1] என்கிறது விகடன். இங்கு விகடனுக்கு “தமிழகத்தைச் சேர்ந்தவர்” என்று மட்டும் தான் புலப்படுகிறது. அதிகமான கடன் மற்றும் பணப்பிரச்சினைகள் உள்ளன. பணப்பிரச்சினையில் இருந்து விடுபடவும், பணக்காரனாக மாறுவதற்கும் என்ன செய்ய வேண்டும் என்று தவித்த நிலையில், இவ்வழியில் மாட்டிக் கொண்டனர், என்றும் இன்னொரு ஊடகம் கூறுகிறது. மந்திரத்தால் மாங்காய் காய்க்குமா என்றால், கேரளாவில் நம்புவதற்கு ஆட்கள் இருக்கிறார்கள் என்று தெரிகிறது.

பகவல் சிங்சிபிஎம் கட்சிக் காரர் கூட: முக்கிய குற்றவாளியான ஆயுர்வேத மருத்துவர் பகவல்சிங், கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினர் என்றும் கட்சியிலிருந்து பணியாற்றி வந்திருந்தார் எனவும் பல்வேறு தகவல்கள் வெளியாகின[2]. இது குறித்து பலரும் விமர்சனம் செய்ய தொடங்கினர்[3]. அது கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்த் வருகிறது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்தினம்திட்டா பகுதி குழு செயலாளர் பி.ஆர்.பிரதீப் (CPM Pathanamthitta area secretary P.R. Pradeep) ANI செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில்[4], “பகவல்சிங் சில காலம் எங்களுடன் சேர்ந்து பணியாற்றினார். அப்போது அவர் முற்போக்காக இருந்தார். ஆனால் கட்சி உறுப்பினராக இல்லை. பின்னர் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட பிறகு அவர் மதவாதியாக மாறிவிட்டார்,” என்று கூறியுள்ளார். முதல் மனைவியை 15 வருடங்களுக்கு முன்னர் விவாக ரத்து செய்தார். சிபிஎம் ஊட்டங்களில் கலந்து கொண்டுள்ளார். புகைப் படங்களும் உள்ளூர் மலையாளம் நாளிதழ்களில் வெளியாகியுள்ளன. இருப்பினும், இப்பொழுது, இப்பிரச்சினை உண்டாகியுள்ள நிலையில் கட்சி மறுக்கிறது.

ஷிகாப் என்ற முஹம்மது மந்திரவாதி தொடர்பு கொண்டது: எர்ணாகுளம் மாவட்டம், பெரும்பாவூர் பகுதியைச் சேர்ந்த ஷிகாப் என்ற முஹம்மது ஷாஃபி போலி ஃபேஸ்புக் அக்கவுன்ட் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். அந்த அக்கவுன்ட் மூலம் பத்தனம்திட்டா மாவட்டம், இலந்தூரிலுள்ள வைத்தியர் பகவல் சிங்கைத் தொடர்புகொண்டார். அப்போது ஐஸ்வர்யம் பெருகவும், செல்வம் செழிக்கவும் வழிகாட்டப்படும் எனத் தகவல் தெரிவித்திருக்கிறார். விளம்பரங்களும் கொடுத்திருக்கிறார் என்று ஊடகங்கள் கூறுகின்றன. பின்னர் அதற்கு ஒரு பூஜை செய்ய வேண்டும் எனக் கூறியிருக்கிறார். பகவல் சிங்கின் வீட்டுக்குச் சென்று அந்த இடங்களைப் பார்வையிட்டுவிட்டு, ஒரு பெண்ணை நரபலி கொடுத்து பூஜை செய்ய வேண்டும் எனக் கூறியதுடன், அந்த பெண்ணை நானே அழைத்து வருகிறேன் எனவும் முஹம்மது ஷாஃபி கூறியிருக்கிறார். இதையெல்லாம் சிபிஎம் நிர்வாக எப்படி நமினார் என்று தெரியவில்லை. பொன்னுருண்ணியைச் சேர்ந்த லாட்டரி விற்பனையாளரான பத்மா மற்றும் அங்கமாலி அருகே காலடியில் வசிக்கும் ரோஸ்லின் ஆகியோரின் பணத்தேவையை பயன்படுத்தி, இருவரையும் வெவ்வேறு மாதங்களில் கடத்தி வந்து நரபலி கொடுத்துள்ளதாக போலீஸ் நடத்திய ஆரம்பநிலை விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இந்த கோர-குரூர சம்பவம் நாட்டையே உலுக்கியிருக்கிறது[5]. பத்தனம்திட்டா மாவட்டம், இலந்தூரில் ஐஸ்வர்யமும் செல்வமும் பெருக பூஜை செய்வதாக போலி மந்திரவாதியான முஹம்மது ஷாஃபி என்ற ஷிகாப் வழிகாட்டுதல்படி பாரம்பர்ய வைத்தியர் பகவல் சிங், அவரின் மனைவி லைலா ஆகியோர் நரபலியில் ஈடுபட்டுள்ளனர். நரபலி கொடுத்த சம்பவம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன, என்று தமிழில் இணைதள ஊடங்கள் விவரிக்கின்றன.

ரோஸ்லியை முஹம்மது ஷபி கூட்டி வந்தது: முஹம்மது ஷாஃபி எர்ணாகுளத்துக்குச் சென்று காலடிப் பகுதியில் தனியாக வாடகைக்கு வசித்துவந்த, கடவந்தறா பகுதியில் லாட்டரி விற்பனை செய்துவந்த / ஆயுர்வேத மருந்து விற்பனை செய்யும்[6]  ரோஸ்லி (59)-க்கு பத்து லட்சம் ரூபாய் பணம் கொடுப்பதாகக் கூறி திருவல்லாவுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.  ரோஸ்லியின் மகள் உத்தரப்பிரதேசத்தில் வசித்து வருகிறார். நிர்வாண படத்தில் நடித்தால் பல லட்சம் ரூபாய் பணம் கிடைக்கும் என கூறி ரோஸ்லியை நம்பவைத்துள்ளார்[7]. அதாவது ஓஸ்லியும் ஒப்புக் கொண்டாள் என்றாகிறது. அப்படியென்றால், அத்தகைய வியபாரமும் அங்கு நடந்து வருகிறது என்றாகிறது. அதற்கு ரோஸ்லி சம்மதித்துள்ளார்[8]. பின்னர், ரோஸ்லியை பகவல் சிங்கின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். ஆபாச படத்தில் நடிப்பதற்காக என்று கூறி, ரோஸ்லியை கட்டிலில் படுக்க வைத்து கை, கால்களை கட்டினர், என்று விவரிக்கிறது தினகரன்[9]. இதனையடுத்து அந்த பெண்ணை மருத்துவர் பகவல் சிங் வீட்டிற்கு அழைத்து வந்து கட்டிலில் நிர்வாணமாக கட்டி வைத்தான்[10]. அப்பொழுது, போர்ன் படம் எடுப்பதாக ரோஸ்லி நினைத்தாள் என்று சில ஊடகங்கள் கூறுகின்றன. “நிர்வாண பூஜை” என்று சில வர்ணிக்கின்றன. பிறகு  கொலை செய்துள்ளனர் என்று முடிக்கின்றன[11]. உடலுறவு கொண்டான், விடிய விடிய செக்ஸ் டார்ச்சர் என்றெல்லாம் ஊடகங்கள் தலைப்பிட்டு செய்திகளை வெளியிட்டன[12]. தலைப்புகள் இட்டாலும், உள்ளே ஒன்றும் விவரங்கள் இல்லை.

© வேதபிரகாஷ்

14-10-2022.


[1] விகடன், கேரளா: இரட்டை நரபலி; 22 துண்டுகளாக்கி பூஜை; மண்ணில் புதைத்து மஞ்சள் நட்டனர்அதிர்ச்சித் தகவல்கள்!, Published:Yesterday at 9 AMUpdated:Yesterday at 10 PM

[2] தமிழ்.ஒன்.இந்தியா, நரமாமிச கும்பல்.. கேரளாவில் நரபலி தந்து சடலத்தை சாப்பிட்ட கொடூரன்.. குற்றவாளி சிபிஎம் உறுப்பினரா?, By Halley Karthik Updated: Wednesday, October 12, 2022, 20:54 [IST].

[3] https://tamil.oneindia.com/thiruvananthapuram/bhagwalsingh-who-gave-human-sacrifice-in-kerala-is-not-a-communist-party-member-party-explanation/articlecontent-pf781895-480215.html

[4] AsiaNetNews, Party finally confirms, ‘Bhagwal Singh accused in human sacrifice case is CPM worker’, Web Team, First Published Oct 12, 2022, 1:15 PM IST; Last Updated Oct 12, 2022, 1:15 PM IST.

https://www.asianetnews.com/kerala-news/bhagaval-singh-was-an-active-member-of-cpm-says-cpm-pathanamthitta-area-secretary-rjmqvl

[5] https://www.vikatan.com/news/crime/kerala-human-sacrifice-issue-shocking-details

[6]  என்கிறது தினகரன் மற்றும் உள்ளூர் நாளிதழ்கள்.

[7] தமிழ்.சமயம், நிர்வாண பூஜையும், நரபலி விருந்தும்; சைக்கோ ஷபியை சிக்க வைத்த செல்போன்!,  Mageshbabu Jayaram | Samayam Tamil | Updated: 13 Oct 2022, 7:55 am

[8] தினகரன், தர்மபுரியை சேர்ந்தவர் உள்பட கேரளாவில் 2 பெண்கள் நரபலி: ஆபாச படத்தில் நடித்தால் ரூ.10 லட்சம் தருவதாக கூறி அழைத்து வந்து கொலை; போலி மந்திரவாதி, தம்பதி வெறிச்செயல், 2022-10-12@ 00:14:06

[9]  https://www.dinakaran.com/news_detail.asp?Nid=805964

[10] https://tamil.samayam.com/latest-news/india-news/how-habitual-offender-shafi-arrested-and-kerala-human-sacrifice-case-came-out/articleshow/94822646.cms

[11] தமிழ்.இந்தியம்.எக்ஸ்பிரஸ், விடிய விடிய செக்ஸ் டார்ச்சர்.. மனித கறி சாப்பிட்ட மிருகங்கள்.. கேரள பயங்கரம்..!, Written by WebDesk, October 12, 2022 11:17:02 pm.

[12] https://tamil.indianexpress.com/india/kerala-human-sacrifice-case-probe-points-to-accuseds-cannibalism-and-sexual-perversion-say-police-524589/

ரேவ் பார்ட்டிகள் தமிழகத்தில் நடப்பது: பொள்ளாச்சி விவகாரம் – அயல்நாட்டு தாக்கமா, அதிநவீன நாகரிக மோகமா, சமூகத்தைச் சீரழிக்க திட்டமா?

மே 10, 2019

ரேவ் பார்ட்டிகள் தமிழகத்தில் நடப்பது: பொள்ளாச்சி விவகாரம் – அயல்நாட்டு தாக்கமா, அதிநவீன நாகரிக மோகமா, சமூகத்தைச் சீரழிக்க திட்டமா?

Agrinest-about

வட இந்திய நகரங்களில் நடந்து வரும் ரேவ் பார்ட்டி எனப்படுகின்ற போதை மருந்து பார்ட்டி, இப்பொழுது தமிழகத்தில் நடப்பது திகைக்க வைக்கிறது. ஏனெனில், இது ஒட்டு மொத்தமாக, இளமைவினை சீரழித்து, மாணவ-மாணவியரை நரகத்திற்கு எடுத்துச் செல்லும் பார்ட்டியாகும். பணக்காரர்களின் மகன்-மகள்கள் கலந்து கொள்கிறார்கள் என்பதில்லை, நடுத்தர மற்றும் ஏழை குடும்ப இளைஞர்களும் சீரழிகிறார்கள். இதனால், தனிமனித பாதிப்பு மட்டுமல்லாது, குடும்பங்கள் பாதிக்கப் படுகின்றன, சீரழிகின்றன, சிதறுகின்றன. இந்நிலையில் தான், கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள  சேத்துமடை அண்ணாநகர் பகுதியிலுள்ள கணேஷ் என்பரது தோட்டத்தில் / விவசாய இடத்தில் கோவையில் படிக்கும் கேரள மாணவர்கள்  கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை [ganja, MDMA, cocaine, hashish and banned sedative tablets] உட்கொண்டு  மது விருந்து நடத்தி 03-05-2019 இரவில் விடிய விடிய நடனமாடி, கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட்டனர்[1] என்ற செய்தி வந்துள்ளது.

Agrinest-how to reach

சக்திமான்என்ற 13வாட்ஸப் குரூப் மூலம், ரூ.1,200/- செல்லுத்தி  சேர்ந்து வந்த கூட்டம்: கஞ்சா, போதை மாத்திரை,பல்வேறு விதமான சரக்கு வகைகளை  அடித்துவிட்டு கும்மாளம் போட்டுள்ளனர் [2], மேலும் அரைகுறை ஆடைகளுடன் இளம்பெண்களுடன் நடனம் ஆடியதும் தெரியவந்தது. இதிலிருந்து மற்ற செக்ஸ் ரீதியிலான அடாவடித் தங்களும் வெளிப்படுகின்றன. இந்த அடாவடியில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கோவையில் உள்ள பிரபல கல்லூரியில் படித்து வருகிறார்கள்[3].  மது, கஞ்சா, போதைப் பொருட்கள் என பலவற்றுக்கும் அடிமையான இளைஞர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் ஒன்றுகூடி இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர்[4]. சமூகவளைதள தொடர்புகள் மூலம், “சக்திமான்” என்ற 13வாட்ஸப் குரூப் மூலம், ரூ.1,200/- செல்லுத்தி  சேர்ந்து வந்துள்ளனர்[5]. கெட்டுப் போவதற்கு சமூக வலைதளம் எவ்வாறு உபயோகப் படுகிறது என்பதும் தெரிகிறது.

Agrinest Farm, Pollachi

போதை மருந்துகள் கிடைப்பது, விற்பது, விநியோகிப்பது எப்படி நடக்கின்றன?”: மாணவர்கள் ரகளை செய்ததாக பொதுமக்கள் தரப்பில் இருந்து போலீசாருக்கு புகார் கொடுக்கப்பட்டது[6]. புகாரை அடுத்து எஸ்.பி. சுஜித்குமார் தலைமையிலான போலீசார் தோட்டத்தில் ஆய்வு செய்தனர்[7]. அதில்  மது, போதைப்பொருட்களை பயன்படுத்தி ரகளையில் ஈடுபட்டது தெரியவந்தது[8].  போலீஸார், எம்.எம்.டி.ஏ, கோக்கைன், தடை செய்யப் பட்ட போதை மாத்திரைகள், முதலியவற்றை பரிமுதல் செய்துள்ளனர். 30 கிராம் கஞ்சா, ஒரு கிராம் ஹாஷிஸ் எண்ணை, 1.5 கிராம் எம்.எம்.டி.ஏ, மது பாட்டில்கள் முதலியவை அவற்றில் அடக்கம்[9]. இவற்றையெல்லாம் யார் உற்பத்தி செய்கிறார்கள், எங்கே எவ்வாறு செய்கிறார்கள் என்று தெரியவில்லை. இந்தியாவில் செய்கிறார்கள் என்றால், மருந்து உற்பத்தி தொழிற்சாலைகள் திருட்டுத் தனமாக ஈடுபட்டிருப்பது தெரிகிறது. பிறகு எப்படி பல அரசு அதிகாரிகளின் தணிக்கை, கட்டுப்பாடு, சரிபார்ப்பு போன்றவற்றிலிருந்து தப்பித்து நடக்கின்றன என்று தெரியவில்லை. கடத்தல் மூலம் வருகின்றன என்றாலும், சட்டமீறல்கள் ஆகின்றன, அதில், பலரது தொடர்புகள் இருப்பதைக் காட்டுகிறது. போதை மருந்து தடுப்புச் சட்டம், தமிழ்நாடு போதை மருந்து கட்டுப்பாடு மற்றும் தடுப்புச் சட்டம் முதலியவற்றின் பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது[10].

Coimatore rave party

முதற்கட்ட விசாரணையில், இதுபோன்று ஏற்கனவே இவர்கள் பல முறை போதை விருந்தை நடத்தியுள்ளது தெரிகிறது: கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களும், வசதி படைத்தக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்களும் இந்த போதை விருந்தில் பங்கேற்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது[11]. அவர்களின் செல்போன்கள், விலை உயர்ந்த கார், இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், அனுமதியில்லாமல் செயல்பட்டு வந்த விடுதிக்கும் சீல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தலைமறைவான உரிமையாளர் தேடப்பட்டு வருகிறார். முதற்கட்ட விசாரணையில், இதுபோன்று ஏற்கனவே இவர்கள் பல முறை போதை விருந்தை நடத்தியுள்ளதும், இந்த முறை ஒருவருக்கு தலா ரூ.1200 செலுத்தி இந்த விருந்தில் பங்கேற்றிருப்பதும் தெரிய வந்துள்ளது. தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை இவர்கள் பயன்படுத்தி வந்ததும், காவல்துறையினருக்கு இதுபற்றி தொடர்ந்து கிடைத்து வந்த தகவலின் அடிப்படையில் இவர்கள் தற்போது சுற்றிவளைத்துக் கைது செய்யப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது[12].

Pollachi rave party-another view-3

பொள்ளாச்சியில் தொடர்ந்து பாலியல் குற்றங்கள் நடைபெறுவது: இதனையடுத்து 159 இளைஞர்களையும் போலீசார் கைது செய்தனர்.  அனுமதியின்றி ரிசார்ட் நடத்திய தோட்டத்து உரிமையாளர் கணேஷ் உட்பட மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டனர்[13]. இதையடுத்து அனுமதியின்றி நடத்தப்பட்ட ரிசார்ட்டுக்கு மாவட்ட ஆட்சியர் சீல் வைக்க உத்தரவிட்டுள்ளார்[14]. பொள்ளாச்சியில் பாலியல் பலாத்காரச் சம்பவம் உக்கிரமாக இருந்த நிலையில் தற்போது மீண்டும் அதே பொள்ளாச்சியில் மாணவர்கள் போதையில் ரகளை செய்து கொத்தாக கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[15].

Pollachi rave party-another view

எல்லாவற்றையும், எல்லோரையும் ஏமாற்றி, இத்தகைய ரேவ் பார்ட்டிகள் நடத்த முடியுமா?: இதுவே மிகவும் சந்தேகமாகவும் பல கேள்விகளை எழுப்புவதாகவும் இருக்கின்றது. பலதடவை இது போன்ற போதை மருந்து பார்ட்டிகள் நடந்துள்ளன, என்பது அவர்களுக்கு வேண்டிய போதைமருந்துகளும் அங்கு கிடைத்துள்ளன-வந்துள்ளன, அதே போல நூற்றுக்கணக்கான மாணவ மாணவியர் மற்றும் வசதிபடைத்த அல்லது ஐடி.டெக்கீஸ் போன்றவர்கள் கலந்து கொண்டுள்ளது தெளிவாகிறது. போலீசாருக்கு தெரியாமல் நடந்து வருகின்றன என்பது நம்புவதாக இல்லை, ஏனெனில், இந்த தடை செய்யப்பட்ட போதை மருந்துகள் மாணவர்களுக்குக் கிடைப்பது, சமூக விரோத மற்றும் ஆண் பெண் நடனங்கள், குறிப்பாக இரவில் நடப்பது இவையெல்லாம் மற்றவர்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை. மேலும் பெற்றோர்களுக்கு தெரியாமல் நடக்கின்றனவா என்று கவனிக்கும் போதும் மற்ற கேள்விகள் எழுகின்றன இவற்றை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.

© வேதபிரகாஷ்

09-05-2019

Pollachi rave party-another view-2

[1] தினமணி, பொள்ளாச்சியில் போதை, மது விருந்து: 159 இளைஞர்கள் நள்ளிரவில் கைது, By DIN | Published on : 04th May 2019 03:51 PM.

[2] ஏசியாநெட்.நியூஸ், தடை செய்யப்பட்ட போதை பொருட்கள்அரைகுறை ஆடைகளுடன் இளம்பெண்கள்!! பொள்ளாச்சி பயங்கரம், 5, May 2019, 8:33 PM IST

[3] https://tamil.asianetnews.com/crime/girls-ware-semi-nude-dress-pollachi-pr1due

[4] https://www.dailythanthi.com/News/State/2019/05/04111819/Wine-party-in-Pollachi.vpf

[4]https://www.dinamani.com/tamilnadu/2019/may/04/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-159-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3145594.html

[5] The party was arranged through social media.The students gathered here through 13 WhatsApp groups named ‘Sakthiman’. Besides students, police arrested six persons, including farm owner Ganesh and resort staff. Organisers of the party charged Rs 1,200 per head.

English.mathrubhumi, Rave party in Pollachi: 150 students nabbed, including 90 from Kerala, for drug abuse, May 5, 2019, 09:21 AM IST.

https://english.mathrubhumi.com/news/crime-beat/rave-party-in-pollachi-150-students-nabbed-including-90-from-kerala-for-drug-abuse-1.3773559

[6] தினகரன், பொள்ளாச்சி அருகே உள்ள ரிசார்ட்டில் போதைப் பொருட்களுடன் 150 கேரள இளைஞர்கள் கைது, 2019-05-04@ 10:48:47

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=492726

[7] தினத்தந்தி, பொள்ளாச்சியில் மது விருந்து, விடிய விடிய நடனமாடி, கூச்சலிட்டு ரகளை : 159 இளைஞர்கள் கைது, பதிவு: மே 04, 2019 11:18 AM மாற்றம்: மே 04, 2019 12:27 PM

[8] https://www.dailythanthi.com/News/State/2019/05/04111819/Wine-party-in-Pollachi.vpf

[9] The police confiscated ganja, MDMA, cocaine, hashish and banned sedative tablets from the venue. Some of the seized items include 30 gms of ganja, 1 gram of hashish oil, 7 grams of ganja saras and 13.5 grams of MDMA tablets in addition to liquor.

https://www.thenewsminute.com/article/rave-party-busted-near-pollachi-165-youth-detained-cops-seize-drugs-101245

[10] TheNewsMinute, Rave party busted near Pollachi, 165 youth detained as cops seize drugs, TNM Staff, Sunday, May 05, 2019 – 12:31

An FIR has been filed under sections 8(C) (Illegal possession), 20 (b)(ii)(A) (Punishment for contravention in relation to cannabis plant and cannabis), 22(a) (Punishment for contravention in relation to psychotropic substances), 25 (Punishment for allowing premises, etc., to be used for commission of an offence), 27(a) (Punishment for consumption of any narcotic drug or psychotropic substance) of NDPS Act 1985 against resort owner and 15 others. The group has been arrested and remanded. The police have also arrested 24-year-old Naveen Venkatesh, an IT professional for possession and selling of IMFL Liquor along with 97 others for unlawful gathering and public nuisance. An FIR was filed under sections 143, 4(1)(a), 4(1)(k) of the Tamil Nadu Prohibition (TNP) Act and sections 290 (Punishment for public nuisance) of the IPC. This group was later let out on bail.

[11]https://www.dinamani.com/tamilnadu/2019/may/04/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-159-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3145594.html

[12] இந்தியன் எக்ஸ்பிரஸ்.தமிழ், பொள்ளாச்சி அருகே மது விருந்தில் ரகளை : கேரள மாணவர்கள் கைதுதோட்டத்தில் போதை பொருட்களை உட்கொண்டு ரகளை, WebDesk, May 04, 2019.

[13] https://tamil.indianexpress.com/tamilnadu/alcohol-party-near-pollachi-in-kerala-students-arrested/

[14] தமிழ்.ஒன்.இந்தியா, மீண்டும் அடிப்படும் பொள்ளாச்சி.. மதுவிருந்தில் கஞ்சா.. 159 கேரள மாணவர்கள் கைது.. ரிசார்ட்டுக்கு சீல், By Vishnupriya R, | Updated: Saturday, May 4, 2019, 13:30 [IST]

[15] https://tamil.oneindia.com/news/coimbatore/police-arrested-159-students-near-pollachi-who-involve-in-liquor-party-with-drugs-349050.html

தமிழகத்தில் ரேவ் பார்ட்டி – போதை, மது, மாது குத்தாட்டம் பார்ட்டி – ஐடி.எஞ்சினியர்கள், மாணவ-மாணவியர் கைது [2]

மே 9, 2019

தமிழகத்தில் ரேவ் பார்ட்டிபோதை, மது, மாது குத்தாட்டம் பார்ட்டிஐடி.எஞ்சினியர்கள், மாணவமாணவியர் கைது [2]

Pattipulam resort rave prty

பௌன்ஸர்கள் மூலம்தான் போதை பொருள்கள் தங்களுக்குக் கிடைத்ததாகத் தகவல்[1]: சோதனையில் ரிசார்ட்டுக்குள் கஞ்சா பொட்டலங்கள், அபின், போதை மாத்திரைகள், மது பாட்டில்கள் சிக்கின. அவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்[2]. மதுவிருந்தில் பிடிப்பட்டவர்களை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்றனர்[3]. அவர்களில் சிலருக்கு போதையில் என்ன நடக்கிறது என்றுகூட தெரியவில்லை. பிடிபட்டவர்களின் விவரங்களை போலீஸார் சேகரித்துவருகின்றனர். மேலும் சட்டவிரோதமாக போதை பொருள் மற்றும் மதுவிருந்தை நடத்திய ரிசார்ட் ஊழியர்களிடமும் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்[4]. இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “சம்பந்தப்பட்ட ரிசார்ட்டில் வார விடுமுறை நாள்களில் மதுவிருந்து நடப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்ததும் அங்கு சென்றோம். அப்போது நாங்கள் நடத்திய சோதனையில் மதுபாட்டில்கள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் சிக்கின. இந்த விருந்தில் பங்கேற்க ஆன் லைன் மூலம் முன்பதிவு நடந்துள்ளது. .டி. நிறுவனங்களில் பணியாற்றும் இன்ஜினீயர்கள், கல்லூரி மாணவர்கள், மாணவிகள், பெண் இன்ஜினீயர்கள் இந்த விருந்தில் கலந்துகொண்டுள்ளனர். அவர்களில் சிலரின் கார்களிலிருந்து கஞ்சா பொட்டலங்கள், போதை மாத்திரைகளையும் கைப்பற்றியுள்ளோம். மதுவிருந்தில் பங்கேற்க வந்தவர்களின் கார், பைக்குகளையும் பறிமுதல் செய்துள்ளோம். கேளிக்கை விருந்தில் பங்கேற்றவர்களிடம் விசாரித்தபோது பௌன்ஸர்கள் மூலம்தான் போதை பொருள்கள் தங்களுக்குக் கிடைத்ததாகத் தகவல் கிடைத்துள்ளது. இதனால் 11 பௌன்ஸர்களைப் பிடித்து விசாரித்துவருகிறோம்” என்றனர்[5].

Odour resort, Mamallapuram, villa-seized items

ஓடர் ரிஸார்டுக்கு சீல் வைக்கப் பட்டது[6]: இவ்வாறு எல்லாம் நடந்து முடிந்தது. இந்த நிலையில் லைசென்ஸ் இல்லாமல் சட்டவிரோத செயல்கள், போதை வஸ்த்துக்களுடன் கூடிய கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தியதாக கூறி, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா உத்தரவின்பேரில், செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. முத்துவடிவேல் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த தனியார் கேளிக்கை விடுதிக்கு நுழைவு வாயில் கேட்டை மூடி சீல் வைத்தனர்[7]. இதெல்லாம், நெறிமுறை-வழக்கத்துடன் செய்யும் செயலாகத் தெரிகிறது. முன்னரே, கண்காணிக்கப் பட்டிருந்தால், நடவடிக்கை எடுத்திருந்தால், இத்தகைய நிலைமையே வந்திருக்காதே. தொடர்ந்து, அத்தகைய குற்றங்கள் நடந்து கொண்டிருப்பதால், போலீஸார் மெத்தனமாகத் தான் இருக்கிறாற்கள், செயல்படுகிறார்கள் என்று தெரிகிறது.இந்த ரிசார்ட்டுகளில் சொந்தக்காரர்களின் பின்னணியை கவனித்தால் அவர்களில் பெரும்பாலோர் அரசியல் அரசியல் அதிகாரம் பணபலம் முதலியவற்றை பெற்றுள்ளதாக தெரிகிறது. தவிர உள்ளூர் போலீசாருக்கு இங்கு நடைபெறும் இத்தகைய சட்டமீறல்கள் பற்றி தெரிந்து இருக்கின்றது. ஆனால் மாதந்தோறும் அல்லது அவ்வப்போது அவர்களுக்கு சில பலன்கள், ஆதாயங்கள் மற்றும் பணமும் கொடுக்கப்படுவதால், அவர்கள் சட்டத்திற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்காமல் இருக்கின்றனர்.

Odour resort, Mamallapuram, off ECR-arrested-5

ஐடிடெக்கீஸ்களின் போதை, மது, மாது இரவு கேளிக்கைகள், சீரழியும் தமிழகம், சமூகம், இந்தியா!:  25 பேர் ஐடியில் வேலை செய்கிறார்கள், 31 அருகிலுள்ள இஞ்சினியர் கல்லூரியில் படிக்கிறார்கள், என்றால், படிக்க, வேலைக்கு என்று பெண்களை வெளியே அனுப்பும் பெற்றோரின் நிலை இனி என்ன? ஐடியில் வேலை செய்யும் ஆட்களுக்கும், கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும் என்ன தொடர்பு? பெற்றோர் கஷ்டப் பட்டு படிக்க வைப்பது இதற்குத் தானா? போலீஸாரும் இந்த போதை-மது-மாது பார்ட்டியில் கலந்து கொண்டவர்கள் வயது 18 -25, பெரும்பாலோர் கல்லூரி மாணவர்கள். .., ரூ.3,000/- செல்லுத்தி வந்துள்ளார்கள். ..என்கிறார்கள். அப்படியென்றால், யார் அந்த பணத்தைக் கொடுத்தது? பெற்றோர்கள் வந்த பிறகே, அவர்களை அனுப்பி வைத்ததாக போலீஸார் கூறுகின்றனர். அப்படியென்றால், அவர்களுக்குத் தெரிந்துள்ளது / தெரிகிறது[8]. வழக்கம் போல ஊடகங்கள் மாறுபட்ட செய்திகளை போட்டு, வழக்கைக் குழப்பும் என்று தெரிகிறது.

Odour resort, Mamallapuram, off ECR-arrested-4

இந்திய பெண்மையை குறி வைத்து தான், இத்தகைய தாக்குதல்கள் நடக்கின்றன. உலக அழகிப் போட்டிகளிலிருந்தே, அத்தாக்குதல்கள் ஆரம்பித்து விட்டன. ஏனெனில், திடீரென்று, இந்தியாவில் அழகிகள் இருக்கிறார்கள் என்று அமெரிக்கர்கள் கண்டு பிடிக்க வேண்டிய தேவையில்லை. மத்திய அமெரிக்க மற்றும் தென்னமெரிக்க நாடுகளில் “அழகிகள்” கண்டுபிடிக்கப் பட்டார்கள். அந்நாடுகள் நான், போதை மருந்து உற்பத்தி மற்றும் உபயோகங்களுக்கு அதிகமாக பாதிக்கப் பட்டது. அமெரிக்க சமூகம் ஏற்கெனவே அழிவில் உள்ளதால், அதைப் பற்றி அவர்கள் கவலைப் படாமல், மற்ற சமூகங்களை கெடுக்கவே திட்டம் போட்டு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பொருளாதார சதி திட்டத்தில் முக்கியமான குறி -இந்திய பெண்களும் சிறுவர்களும் தான். அவர்களை நோக்கி தங்களுடைய பொருட்களை விற்பதற்காக பலவிதமான விளம்பர யுக்திகளை கையாண்டு வருகிறார்கள். அலங்காரப் பொருட்கள் என்ற ரீதியில் உண்மைகள் தோல், தலைமுடி, கண்கள், பற்கள் இவற்றை பாதிக்கும் வகையில் உள்ள அலங்காரப் பொருட்கள்தான் அதிரடி விளம்பரங்கள் மூலம் விற்கப்படுகின்றன. அதற்கு துணையாக போகவேண்டும் என்ற ரீதியில் அழகுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இது திருமணமான தம்பதியர்களுக்கும் நடத்தப்படுவது தான், அந்த சதிதிட்டத்தில் ஒரு அங்கம் என்று கொள்ளலாம். ஏனெனில் திருமணமாகி குழந்தைகள் கொண்ட ஒரு பெண்மணி நூற்றுக்கணக்கானவர்கள் முன்பாக, தனது அழகை வெளிப்படுத்த முன்னும் பின்னும் ஆட்டிக் கொண்டும், நடந்து கொண்டும், போட்டி போட்டு, மேடை மீது வந்து செல்ல மனம் வராது. ஆனால் இப்பொழுது அந்த நிலை உருவாகியுள்ளது சீரழிவுதான் என்பதை நன்றாக தெரிந்து கொள்ளலாம்.

Odour resort, Mamallapuram, things

பெண்மை சக்தியாக, கடவுளாக பாவிக்கப் படுவதால், பெண்மை போற்றப் பட வேண்டும்: மறந்து வாழும் இந்துக்கள் – என்று நான் ஏன் குறிப்பிட்டேன் என்றால், பெரும்பான்மையினர் இந்துக்கள் எனும் போது, அதில் 50% ஆவது, ஒழுக்கமாக இருந்தாலே, இந்திய சமூகம் ஒழுக்கமாக இருக்கும். எந்தவித மேனாட்டு மோகத்தையும் எதிர்க்கலாம். பகவத் கீதையில் நுணுக்கமாக சொல்லப் பட்டுள்ள விசயங்களை நாம் கவனிக்க வேண்டும், “பெண் குணங்களில் புகழ், உயர்ந்த வாக்கு, ஞாபக சக்தி, மேதமை, உறுதி,பொறுமை, இவை அனைத்தும் நான்,” என்கிறது கீதை 10.34.குலநாசத்தால் என்றுமுள்ள குலதர்மங்கள் அழிகின்றன.  தர்மம் அழிவதனால் குலமுழுவதையும் அதர்மம் சூழ்கிறதன்றே? கீதை.1.40,” என்று குறிப்பிட்டு,கண்ணா, அதர்மம் சூழ்வதனால் குல ஸ்திரீகள் கெட்டுப் போகிறார்கள். விருஷ்ணி குலத் தோன்றலே, மாதர் கெடுவதனால் வர்ணக் குழப்பமுண்டாகிறது,” என்றும் சொல்லப்பட்டுள்ளது.

अधर्माभिभवात्कृष्ण प्रदुष्यन्ति कुलस्त्रियः।

स्त्रीषु दुष्टासु वार्ष्णेय जायते वर्णसङ्करः॥1.41, ४१॥

அதனால், இவ்வுண்மையினை அறிந்து பெண்மையினை போற்ற வேண்டும்.

© வேதபிரகாஷ்

09-05-2019

Odour resort- lady

[1] விகடன்,  ஸ்கெட்ச் போட்டது ரவுடிகளுக்கு; சிக்கியதோ..?! மாமல்லபுரம் நள்ளிரவு ரிசார்ட் நிலவரம், எஸ்.மகேஷ் வெளியிடப்பட்ட நேரம்: 13:52 (06/05/2019) கடைசி தொடர்பு:14:21 (06/05/2019).

[2] மாலைமலர், மாமல்லபுரம் சொகுசு விடுதியில் மதுவிருந்து கொண்டாட்டம் – 160 பேர் கைது, பதிவு: மே 06, 2019 10:35, மாற்றம்: மே 06, 2019 11:53.

[3] https://www.maalaimalar.com/News/District/2019/05/06103538/1240225/Mamallapuram-Luxury-Hotel-wine-party-celebration-160.vpf

[4] நியூஸ்.7.செய்தி, மாமல்லபுரம் தனியார் விடுதியில், போதை பொருள் மற்றும் மது விருந்தில் ஈடுபட்ட 153 பேர் கைது!, May 06, 2019,Posted By : Niruban

http://www.ns7.tv/ta/tamil-news/tamilnadu/6/5/2019/omr

[5] https://www.vikatan.com/news/tamilnadu/156765-160-persons-arrested-for-party.html

[6] தினத்தந்தி, போதை வஸ்த்துக்களுடன் விருந்து நடத்திய விவகாரம் : அனுமதியின்றி மதுவிருந்து நடந்திய கேளிக்கை விடுதிக்கு சீல், பதிவு : மே 07, 2019, 12:19 AM.

[7] https://www.thanthitv.com/News/TamilNadu/2019/05/07001930/1034446/police–arrested-brewing-private-hotel-mamallapuram.vpf

[8] Police said that the participants were in the age group of 18 to 25. Most of them were college students although a few IT professionals were also at the party. The participants had paid close to Rs 3,000 for entry, police added. “We could recover only a small amount of drugs and alcohol as the party was almost over. Except for the 16 organisers of the party, others were let off on station bail for the consumption of banned drugs and their parents were called. Only after their parents arrived were they allowed to go home. Some students are still at the marriage hall where they were detained as their parents are coming from other southern states,” said Ravikumar.

திராவிடமணி –திராவிட பிடோபைல், சிறுவர் கற்பழிப்பாளி, ஓரின சேர்க்கை மிருகம் உருவாக காரணம் என்ன?

மே 6, 2019

திராவிடமணி –திராவிட பிடோபைல், சிறுவர் கற்பழிப்பாளி, ஓரின சேர்க்கை மிருகம் உருவாக காரணம் என்ன?

Coimatore rave party

கோயம்புத்தூரைச் சுற்றிப் பெருகி வரும் பாலியல் குற்றங்கள்: சமீப காலத்தில் கோயம்புத்தூரை சுற்றியுள்ள பகுதிகளில் பாலியல் குற்றங்கள் மற்றும் பாலியல் ரீதியில் நடக்கும் சீரழிவுகள் பற்றிய செய்திகள் அதிகமாகவே வந்து கொண்டிருக்கின்றன. இதையெல்லாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. சமீபத்தில் ஏன், இவ்விடங்களில் “ரிசார்ட்” போன்ற இடங்கள் அதிகமாகியுள்ளன, மற்ற மாநிலத்தவர், குறிப்பாக, கேரளாவினர் அதிகம் வந்து, வியாபாரங்களில் ஈடுபடுகின்றனர், முதலியவற்றை விசாரிக்க வேண்டும். கூட்டு பாலியல் கற்பழிப்பு சீரழித்தது மிகவும் அளவுக்கு நடந்துள்ள குற்றங்கள் திகைப்படைய செய்கின்றன. வழக்கம்போல திராவிடக் கட்சியினர் குற்றம் சாட்டிக் கொண்டு உண்மையை விவரங்களை விவகாரங்களை மறைக்கத்தான் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அரசுதுறை ரீதியில், இரு கட்சிகளுக்கும், எல்லா இடங்களிலும் விசுவாசிகள் இருப்பதால், விவகாரம் அமுக்கப் படலாம், மக்களும் மறந்து விடலாம். ஆனால், பிரச்சினை மறக்க முடியாத அளவுக்கு, பாதிக்கப் பட்ட மனங்களில் ஏற்படுத்தியுள்ளன. அவர்கள் அவற்றிலிருந்து, மீண்டு, புதிய வாழ்க்கைக்கு மீளவே காலம் ஆகும்.

Dravidamani pedophile arrested-2

திராவிடமணி யார்?: அந்நிலையில், ஒரு திராவிட சித்தாந்தி, இப்பொழுது சிக்கியுள்ளது, திகைப்படையச் செய்கிறது. நீலகிரி அருகே, சிறுவர்களுக்கு ஒயின் கொடுத்து மயக்கி, பாலியல் சீண்டல்களில் ஈடுபட்ட, தி.மு.க., பிரமுகரை, ‘போக்சோ’ சட்டத்தில், போலீசார் கைது செய்தனர்[1], என்று செய்தியை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. ஏனெனில், நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகேயுள்ள நெல்லியாளம், டான்டீ சரகம்- –3 பகுதியைச் சேர்ந்தவர் திராவிடமணி, 54 வயதான ஆள்[2];

  • தி.மு.க., கலை, இலக்கிய, பகுத்தறிவு பேரவையின், மாவட்ட துணை அமைப்பாளர்[3].
  • கொளப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி வளர்ச்சி குழு தலைவர்.
  • தனது தலைவர் ஸ்டாலினுக்கு ஆதரவாக சமீபத்தில் போராட்டங்களை நடத்திய ஆள்.
  • திக கூட்டங்களிலும் கலந்து கொண்டு பெரியாரிஸவாதி.
  • ‘இவர், 2016 சட்டசபை தேர்தலில், கூடலுார் சட்டசபை தொகுதியில், தி.மு.க., சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தவர்;
  • நுாலகங்கள், பள்ளிகளில் பல பொறுப்புகள் வகித்துள்ளார்’

என்று அரசியல், ஆதிக்கம் முதலிய பதவி, பின்னணி முதலிய விவகாரங்கள் பட்டியல் இடப்படுகின்றன[4].

Tamilnadu child rapist- data

பிடோபலுக்கு வேண்டிய குணங்கள் எல்லாமே திராவிடமணியிடத்தில் இருந்தது: இப்போதைக்கு, இவனைப் பற்றிய விவரங்கள் குறைவாகவே செய்திகளில் வந்துள்ளன[5].

  • இவர், தன் வீட்டருகில் உள்ள சிறுவர்களுக்கு, ‘லேப்டாப்’பில் சினிமா காண்பிப்பது,
  • ‘கேம்ஸ்’ விளையாட வைப்பது,
  • சைக்கிள் ஓட்ட கற்றுத் தருவது

போன்றவற்றை செய்து வந்துள்ளார்[6]. ஆனால், என்னத்தை காண்பித்தார் போன்ற விவகாரங்கள் தெரியவில்லை. “சைக்கிள் ஓட்ட கற்றுத் தருவது” என்பது, குழந்தைகளை நெருக்கமாக, தொட்டு, செயல்பட கூடிய நிலையைக் காட்டுகிறது. விழும் நிலையில் பிடிக்கும் நிலை, நெருக்கத்தை, நட்பை, நம்பிக்கையை ஏற்படுத்தும். இது பிடோபைலுகளுக்கு அதிகமாக உதவும். மற்ற சாதாரணமான நேரங்களில், அதே போல தொடுவது, முதலிய வேலைகளை செய்தாலும், வித்தியாசமாகத் தெரியாது. திரும்ப-திரும்ப செய்யும் போது, “கன்டிஷன்” ஆகிவிடும். ஆகவே, தன்னுடைய பள்ளி முதலிய பதவிகளை பயன்படுத்திக் கொண்டு, இத்தகைய வேலைகளை செய்ததில் வியப்பில்லை. ஆனால், கண்டு பிடித்து, நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அது இப்பொழுது தான், நடந்துள்ளது போலும்.

Dravidamani pedophile arrested-Dinamalar, 06-05-2019, Chennai, p.5

நெருக்கத்தைப் பயன்படுத்தி, மிருகம் பாலியிலில் ஈடுபட்டது: அந்நிலையில், சில சிறுவர்களை வீட்டிற்கு அழைத்துள்ளான் போலும் அல்லது கேம்ஸ் விளையாட வழக்கம் போல, வந்திருக்கலாம். சீண்டல், சில்மிஷம் நிலைகள், எல்லைகள் அதிகமாகியதால், மிருக போதை கொண்ட அவன், தீவிர பாலியலில் இறங்க திட்டமிட்டுள்ளான். அப்போது, இரு சிறுவர்களுக்கு, வீட்டில் தயாரித்த நெல்லிக்காய், திராட்சை ஒயின் வழங்கி, மயக்கம்அடைய செய்து, பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறான். இதிலிருந்தே, அவனது வக்கிரத்தை அறிந்து கொள்ளலாம். புலி இறையை அடைய திட்டமிட்டே பதுங்கி வேலை செய்திருக்கிறது என்று தெரிகிறது. பிறகு, அச்சிறுவன் நடந்ததை உணர்திருக்கிறான். அதனால், திராவிடமணி பாலியல் தொல்லை கொடுத்ததாக, தந்தையிடம் கூறியிருக்கிறான்.

Dravidamani pedophile arrested-1

எல்லைகள் மீறிய போது, புகார் கொடுக்கப் பட்டது, கைதானது: “ஒரு சிறுவனின் தந்தை, சேரம்பாடி போலீசில் புகார் கொடுத்தார்” என்று செய்தி வந்துள்ளது[7]; திராவிடமணியோ பெரிய செல்வாக்குக் கொண்டு அரசியல்வாதி. அதனால், போலீஸார் வழக்குப் பதிவு செய்யவில்லை. இதனால், தந்தை ‘சைல்டு லைன்’ போன்ற அமைப்பை அணுகியுள்ளார். விவகாரத்தின் தன்மை அறிந்து ‘சைல்டு லைன்’ நிர்வாகிகள், நடவடிக்கை எடுக்க, போலீசாரிடம் வலியுறுத்தினர்[8]. இதனால், வேறு வழியின்றி, போலீசார் விசாரணை நடத்தி, ‘போக்சோ’ சட்டத்தில், திராவிட மணியை கைது செய்தனர்[9]. ‘இவர், 2016 சட்டசபை தேர்தலில், கூடலுார் சட்டசபை தொகுதியில், தி.மு.க., சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தவர்; நுாலகங்கள், பள்ளிகளில் பல பொறுப்புகள் வகித்துள்ளார்’ என, போலீசார் தெரிவித்தனர்[10].

How Dravidian pedophiles are created

திராவிடமணி –திராவிட பிடோபைல், சிறுவர் கற்பழிப்பாளி, ஓரின சேர்க்கை மிருகம் உருவாக காரணம் என்ன?: இன்றைய சித்தாந்த போராட்டங்கள், சட்ட மோதல்கள், அரசியல் மயமான சமூக சிக்கல்கள், பொய்மை மிக்க பேச்சுகள், கண்துடைப்பு நடவடிக்கைகள், முதலியவற்றை கவனிக்கும் போது, சிறுவர் கற்பழிப்பு, ஓரினச் சேர்க்கை, பிடோபைல் போன்ற மிகக் கொடிய, குரூர குற்றங்கள் நடப்பதை ஜாக்கிரதையாக கையாள வேண்டியுள்ளது. அமெரிக்க / மேனாட்டு நாகரிக தாக்கம், சாதாரண மக்கள் வாழ்க்கையின் மீது ஏற்படுத்துகின்ற தாக்கம், கலச்சார முரண்பாடு, குழப்பம், மோதல்கள் எல்லாமே, சமூகத்தை பாதிக்கும் காரணிகளாக உள்ளன. இவற்றையெல்லாம் ஏற்றுக் கொள்வதா-மறுப்பதா என்ற நிலையிலும், ஆண்-பெண் உறவுகள், குடும்ப வாழ்க்கை, பெரியவர்களை மதித்தல் முதலியவையும் சம்பந்தப் பட்டுள்ளன. அதிகமாக, செக்ஸ், பாலியல் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுப்பதனால், பள்ளி-கல்லூரி நாட்களிலேயே அவற்றின் பால் ஈர்ப்பு ஏற்ப்டுகின்றது. இந்திய சமூகம், பாரம்பரிய காரணணிகளுட பினிப் பிணைந்துள்ளதால், தப்பித்துக் கொள்பவர்கள் இருக்கிறார்கள், ஆனால், மாட்டிக் கொள்பவர்கள் தாம் சீரழிகின்றனர். எதிர்ப்பு சித்தாந்தங்கள், சுலபமாக குற்றங்களை செய்ய தூண்டுகிறது. அரசியல் ஆதரவு இர்க்கும் போது, குற்றங்கள் மறைக்கப் படுகின்றன. இங்கு தான் நடுநிலை தேவைப்படுகிறது.

© வேதபிரகாஷ்

06-05-2019

How Dravidian pedophiles are created-malai malar

[1] தினமலர், ஒயின் கொடுத்து சிறுவர்களிடம் சீண்டல்: ‘போக்சோவில், தி.மு.., பிரமுகர் கைது, Added : மே 06, 2019 01:59.

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=2270324

தினமணி, திமுக பிரமுகர் போக்ஸோ சட்டத்தில் கைது, By DIN | Published on : 05th May 2019 11:58 PM

https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2019/may/05/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8B-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3146239.html

மாலைமலர், ஒயின்கொடுத்து சிறுவர்களுக்கு பாலியல் தொல்லைதி.மு.. பிரமுகர் போக்சோ சட்டத்தில் கைது, பதிவு: மே 06, 2019 16:30

https://www.maalaimalar.com/News/District/2019/05/06163048/1240335/harassment-for-children-DMK-member-arrested.vpf

கதிர்.நியூஸ், ஒயின் கொடுத்து சிறுவர்களிடம் பாலியல் சீண்டல் : தி.மு. பிரமுகர் கைது பாலியல்குற்றவாளிதிமுக ?, மே.6. 2019.

http://www.kathirnews.com/2019/05/06/dmk-cadre-arrested-in-pocso/

செய்திபுனல், சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த திராவிடமணி!! போக்ஸோ சட்ட்த்தின் கீழ் கைது!!, குந்தவை, 06-05-2019. 05:02:02.03 PM

http://www.seithipunal.com/tamilnadu/dmk-member-sex-torched-to-boy

[3] தினமணி, திமுக பிரமுகர் போக்ஸோ சட்டத்தில் கைது, By DIN | Published on : 05th May 2019 11:58 PM

[4] https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2019/may/05/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8B-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3146239.html

[5] மாலைமலர், ஒயின்கொடுத்து சிறுவர்களுக்கு பாலியல் தொல்லைதி.மு.. பிரமுகர் போக்சோ சட்டத்தில் கைது, பதிவு: மே 06, 2019 16:30

[6] https://www.maalaimalar.com/News/District/2019/05/06163048/1240335/harassment-for-children-DMK-member-arrested.vpf

[7] கதிர்.நியூஸ், ஒயின் கொடுத்து சிறுவர்களிடம் பாலியல் சீண்டல் : தி.மு. பிரமுகர் கைது பாலியல்குற்றவாளிதிமுக ?, மே.6. 2019.

[8] http://www.kathirnews.com/2019/05/06/dmk-cadre-arrested-in-pocso/

[9] செய்திபுனல், சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த திராவிடமணி!! போக்ஸோ சட்ட்த்தின் கீழ் கைது!!, குந்தவை, 06-05-2019. 05:02:02.03 PM

[10] http://www.seithipunal.com/tamilnadu/dmk-member-sex-torched-to-boy

வட்டிக்கு பணம் கொடுத்து, கற்பை சூரையாடிய கொடூரன் தண்டனை பெற்றதால் பெண்கள் பாதிப்பு நிவர்த்தியாகி விடுமா!

ஜனவரி 20, 2017

வட்டிக்கு பணம் கொடுத்து, கற்பை சூரையாடிய கொடூரன் தண்டனை பெற்றதால் பெண்கள் பாதிப்பு நிவர்த்தியாகி விடுமா!

dharmapuri-financier-jailed-19-01-2017-dailt-thanthi

சிவராஜின் செயல்திட்டமுறையும், காம-கொக்கோகமும், வீடியோ-சிடி விவகாரங்களும்: சிவராஜ் மீதான புகாரை பலப்படுத்த அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும், புகார் கொடுக்கும் பெண்களின் பெயர், முகவரி உள்ளிட்ட தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் சிவராஜால் பாதிக்கப்பட்ட மூன்று பெண்கள்  2014 அக்டோபர் 6ஆம் தேதி பாலக்கோடு போலீசில் புகார் கொடுத்துள்ளனர். அதில், “கடன் கொடுத்த நிதி நிறுவன அதிபர் சிவராஜ் எங்களின் வறுமை நிலையை சாதகமாக பயன்படுத்தி உல்லாசத்திற்கு அழைத்தார். வர மறுத்தபோது அதிக வட்டி தரவேண்டும் என்று கூறி மிரட்டினார். இதனால் பயந்து போன நாங்கள் அவரது பண்ணை வீட்டிற்கு சென்றோம். அங்கு சிவராஜ் எங்களை மிரட்டி உல்லாசமாக இருந்தார். இதனையடுத்து அவர் தனது செல்போனில் எடுத்த ஆபாச காட்சிகளை எங்களின் குடும்பத்தினருக்கு காட்டி விடுவதாக மிரட்டி, பலமுறை பண்ணை வீட்டிற்கு அழைத்து சென்று கற்பழித்தார்,” என்று கூறியுள்ளனர். தங்களை போல் இன்னும் ஏராளமான பெண்கள் சிவராஜால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அவர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

dharmapuri-financier-jailed-19-01-2017-vedaprakashபெண்மையை சுற்றியுள்ள சமுதாய-சட்டப் பிரச்சினைகள்: இதனையடுத்து புகார் கொடுத்த பெண்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், விசாரணை முழுவதையும் கேமராவில் பதிவு செய்துள்ளனர். புகாரின்பேரில் போலீஸார் நடத்திய புலன் விசாரணையில் சிவராஜ், அப் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் உள்பட 26-க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. பெண்களுக்கு முறைப்படி சட்டரீதியில் பாதுகாப்பு கொடுத்தல் போன்ற விவரங்கள்தெரியவில்லை. தற்போது போலீசார் நிதி நிறுவன அதிபர் சிவராஜ் மீது கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், சிவராஜால் பாதிக்கப்பட்ட பெண்கள் அவர் மீது தைரியமாக புகார் கொடுக்க முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். மூன்று பெண்களின் புகாரையடுத்து இந்த வழக்கு சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனால் சிவராஜை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்குள், இவ்வழக்கு முறையாக நடத்தப்படுமா என்ற சதேகம் வந்ததால், சிலர், பெரிய அளவில் விசாரணை தேவை என்று நினைத்தனர். இதை அரசியலாக்கும் விதத்தில், உள்ளூர் எம்.எல்.ஏ, தில்லி பாபு [சிபிஎம்] மற்றும் மகில இந்திய பெண்கள் இயக்கமும் சேர்ந்து ஆர்பாட்டம் நடத்தி, சிபி-சி.ஐ.டி விசாரணை தேவை என்று வற்புறுத்தினர்[1]. சிவராஜின் சொத்துகளும் பறிமுதல் செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்[2].

dharmapuri-financier-jailed-19-01-2017-sexபாதகர்கள் தண்டனை பெற்ற விவரங்கள்: இந்த வழக்கு தருமபுரி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் வழக்குரைஞர் ஆர். உமா மகேஸ்வரி ஆஜரானார். இந்த வழக்கில் மாவட்ட மகளிர் நீதிபதி எம். மீரா சுமதி 8-01-2017 [புதன்கிழமை] தீர்ப்பு வழங்கினார். முதல் குற்றவாளியான வட்டிக் கடைக்காரர் சிவராஜுக்கு பாலியல் பலாத்கார சட்டப்பிரிவில் நான்கு ஆயுள் தண்டனைகள் மற்றும் ரூ. 4,000 அபராதம் விதிக்கப்பட்டது[3].  மேலும், 67ஏ தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவின் கீழ் 12 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ. 2 லட்சம் அபராதமும், 66இ தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவின் கீழ் 8 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ. 40 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது[4]. அபராதத் தொகை மொத்தம் ரூ. 2.44 லட்சம்[5]. இச்சம்பவத்தில் செல்லிடப்பேசியில் இருந்த விடியோக்கள் வெளியே உலவக் காரணமாக இருந்தவன் அதே பகுதியைச் சேர்ந்த செல்லிடப்பேசி பழுதுபார்க்கும் தொழில் செய்து வந்தவன் மா. முன்னா[6]. அவனுக்கு பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் மொத்தம் 6 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 61 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது[7]. இரு குற்றவாளிகளின் கோரிக்கைகளை ஏற்று சிறைத் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கலாம் என்றும் நீதிபதி எம். மீரா சுமதி உத்தரவிட்டார்[8].

dharmapuri-financier-jailed-19-01-2017-video-1கற்பை சூரையாடிய கொடூரன் தண்டனை பெற்றதால் பெண்கள் பாதிப்பு நிவர்த்தியாகி விடுமா!: பாதகர்கள் தண்டனை பெற்றது சட்டப்படி நடந்துள்ளது என்றாலும், பெண்கள் பாதிப்பு சரிசெய்யமுடியாதது ஆகும். மனம் மற்றும் உடல் ரீதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கஷ்டங்களை, உபாதைகளை யார் சரிசெய்ய முடியும்? நடந்தது மாற்ற முடியும், சீர்செய்யமுடியும் என்ற நிலையாகாது.

  • ஒரு பெண் சீரழிந்தால், ஒரு குடும்பம் சீரழிகிறது;
  • ஒரு குடும்பம் சீரழிந்தால், ஒரு சமுதாயம் சீரழிகிறது;
  • ஒரு சமுதாயம் சீரழிந்தால், ஒரு தேசம் / நாடு சீரழிகிறது;

ஆகவே, குறிப்பிட்ட நாட்டின் மீது நடத்தப்படும் கலாச்சார தாக்குதல், இவ்வாறு பலநிலைகளில் பாதித்து, சீரழித்து வருவதை பொறுப்புள்ளவர்கள் மிக்க அக்கரையுடன் கவனிக்க வேண்டும். இன்றளவில், சினிமாநடிகைகளிடம் கற்பு, கலாச்சாரம், குடும்பம் முதலியவற்றைப் பற்றி கருத்து கேட்டு, விளம்பரம் செய்கிறார்கள். இதனால், அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவது போன்ற தோற்றத்தையும் ஏற்படுத்துகின்றார்கள். நிர்வாணமாக நடிப்பேன் என்று உரிமைகள் பேசி, அவ்வாறே தொழில் செய்யும் நடிகைகள் எப்படி முன்னுதாரணமாக இருக்க முடியும்?

© வேதபிரகாஷ்

20-01-2017

dharmapuri-financier-jailed-19-01-2017-video-2

[1] The Hindu, Plea for CB-CID probe , DHARMAPURI: OCTOBER 16, 2014 00:00 IST UPDATED: MAY 24, 2016 13:53 IST.

[2]The Communist Party of India (Marxist) staged a demonstration here at Palacode demanding CB-CID probe into the case of a local financier who was involved in sexual harassment of women. The financier Sivaraj was arrested last week [17-05-2016] on the charges of sexually harassing women. The demonstration was led by CPI (M) MLA Dilli Babu. Members of the All India Democratic Women’s Association also took part in the demonstration. The CPI (M) also demanded confiscation of the property belonging to Sivaraj.

 http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/plea-for-cbcid-probe/article6504755.ece

[3] தினமணி, பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து விடியோ எடுத்த வழக்கில் வட்டிக் கடைக்காரருக்கு 4 ஆயுள் தண்டனை, By தருமபுரி,  |   Published on : 19th January 2017 08:44 AM.

[4] http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2017/jan/19/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-4-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-2634850.html

[5] தினகரன், பெண்களை ஆபாச வீடியோ எடுத்து பலாத்காரம், பாலக்கோடு பைனான்சியருக்கு 4 ஆயுள் தண்டனை : தர்மபுரி கோர்ட் தீர்ப்பு, 2017-01-19@ 01:05:08

[6] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=273446

[7] The Hindu, Financier gets four life sentences for sexual abuse, DHARMAPURI: JANUARY 19, 2017 00:00 IST; UPDATED: JANUARY 19, 2017 04:00 IST.

[8] The District Mahila Court here on Wednesday [18-01-2017] convicted financier M. Sivaraj (44) of Palacode to four life sentences and imposed a fine of Rs. 2.44 lakh on him for sexually abusing women. The life sentences are to run concurrently. According to prosecution, Sivaraj sexually abused women who had availed themselves of loans from his firm, but could not repay the dues in time. He videographed the act on his mobile phone and used this to threaten them into submitting to sexual abuse again. The entire scandal came to light when Sivaraj gave his mobile phone to a local service centre to set right a snag. Munna, the owner of the service centre, after witnessing the obscene videos spread them in social media. On a complaint preferred by Vijana, village administrative officer, the Palacode Police arrested Sivaraj and M. Munna in October 2014 and filed a case in the District Mahila Court. The Mahila Court Judge M. Meera Sumathi found both the accused guilty of the charges. The Judge convicted Sivaraj to four life sentences and a fine of Rs. 4,000, eight years imprisonment and a fine of Rs. 40,000 under Section 66-E of the Information Technology Act 2000 (violation of privacy) and another 12 years imprisonment with a fine of Rs. 2 lakh under Section 67-A (publishing or transmitting obscene material in electronic form). The Judge sentenced Munna to three years imprisonment and a fine of Rs. 50,000 under Section 67-A of IT Act, two years and a fine of Rs. 10,000 under 66-B of IT Act and one year imprisonment and a fine of Rs. 1,000 under Section 292 IPC (publicly exhibiting or circulating obscene material). Munna’s prison terms will run concurrently.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/Financier-gets-four-life-sentences-for-sexual-abuse/article17057897.ece

ஆசிரியர் போர்வையில் காமக்கொடூரன் – பல இளம்பெண்களை-மாணவிகளை சீரழித்த கயவன்!

திசெம்பர் 20, 2016

ஆசிரியர் போர்வையில் காமக்கொடூரன் பல இளம்பெண்களைமாணவிகளை சீரழித்த கயவன்!

tution-centre-rape-sivamar-arrested-deccan-chronicleஇதுவரை, பாதிரிகள் மற்ற காமுகர்கள் இளம்பெண்களை பாலியல் ரீதியில் வன்புணர்ந்த கொடூரங்களைப் படித்து வந்தோம். இப்பொழுது, ஒரு ஆசிரியரே அத்தகைய ஏலையை செய்துள்ளது திகைக்க வைத்தாக உள்ளது. ஆசிரியர் என்ற புனிதத்தையேக் கெடுக்கும் வகையில், அந்த கயவன் ஈடுபட்டுள்ளான். மாணவ-மாணவியர் ஒழுங்காகப் படித்தால், டியூஷன் என்றெல்லாம் செல்ல வேண்டிய அவசியமே இருக்காது. இதுவும், காலத்தின் அலங்கோலமாக இருக்கிறது. இன்று டியூஷன் சென்டர்கள் இத்தகைய மாணவ-மாணவியர்களால் தான் பெருகி வருகிறது. மேலும், அவர்களில் சிலர் வசதியாக இருந்தால், பொழுது போக்கிற்கு வந்து செல்கிறார்கள். டியூஷன் சென்டர்கள், டுடோரியல் காலேஜுகள் முதலியவற்றில் படிக்க வருகிறார்களோ இல்லையோ, காதல் செய்ய வருகிறார்கள் என்று முன்னமே தெரிந்த விசயமாக இருக்கின்றது.

tution-centre-rape-sivaumarமாணவியை ஏமாற்றியது, அனுபவித்தது, கல்யாணம் செய்து கொண்டது: தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டை சேர்ந்த சீனிவாசன் மகன் சிவக்குமார், 27. கடந்த 2012ல் பாலக்கோட்டில் தனலட்சுமி என்ற பெயரில் சிவகுமார்  டியூசன் சென்டர் ஆரம்பித்தார், என்று இப்படி மரியாதையாகத்தான் ஊடகங்கள் குறிபிடுகின்றன. பாலக்கோடு மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப்புற மாணவ, மாணவிகள் டியூசனில் சேர்ந்தனர். அப்போது,  10ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷத்தை சிவகுமார் தொடங்கினார். அந்த மாணவி மயங்கவே, வகுப்பறையிலேயே உல்லாசமாக இருந்து செல்போன் மூலம் வீடியோ பதிவு செய்துள்ளார்[1]. அதை நண்பர் ஈஸ்வரனிடம் காண்பித்தார் எனும்போது, அவனின் குரூரக் குணம் வெளிப்படுகிறது. இதை சொல்லி அந்த மாணவியிடம் தன்னுடைய ஆசைக்கு இணங்குமாறு ஈஸ்வரன் கூற அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதாவது, நிச்சயமாக அந்த கயவர்களின் கூட்டு வெளிப்படுகிறது. அந்த மாணவி புகார் செய்யவே பெற்றோரும், உறவினர்களும், டியூசன் சென்டருக்கு வந்து சிவகுமாரையும், ஈஸ்வரனையும் சரமாரியாக அடித்து உதைத்தனர்.  இதைதொடர்ந்து உறவுக்கார பெண்ணை திருமணம் செய்வதாக கூறி, உல்லாசம் அனுபவித்துவிட்டு மறுத்துள்ளார். அந்த பெண்ணின் பெற்றோர், சிவகுமாரை மிரட்டி  திருமணம் செய்து கொடுத்தனர்[2]. அதாவது, திருமணம் ஆனப் பிறகும், ஒழுங்கில்லாமல் இருந்ததும் தெரிகின்றது.

tution-centre-rape-sivamarகுளிர்பானங்களில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மாணவிகள் மயங்கி விழுந்ததும் அவர்களிடம் உல்லாசம் அனுபவித்து: இவர், தர்மபுரி மற்றும் பாலக்கோட்டில், தளிர் என்ற பெயரில் டியூசன் சென்டர் நடத்தியதோடு, குரூப் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்பு எடுத்து வந்தார். அதாவது, மனைவி, குடும்பத்தினருக்கு தெரியுமா இல்லையா என்று குறிப்பிடவில்லை. இங்கு படிக்கும் மாணவிகளிடம், சிவக்குமார் ஆசைவார்த்தை கூறி ஏமாற்றியுள்ளார். இவரது ஆசை வார்த்தையில் மயங்கிய ஒரு சில மாணவிகளை, சிவக்குமார் பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அதை வீடியோ படம் எடுத்து மிரட்டி, அவர்களுடன் உல்லாசமாக இருந்து வந்தார்[3]. அதாவது, மாணவிகள் அந்த அளவுக்கு சபலத்துடன் இருந்தார்களா என்ற கேள்வியும் எழுகின்றது. இதனால், அலைகின்ற காமுகர்களுக்கு எளிதாக இரையாகின்றானர். மேலும் டியூசன் படிக்க வரும் மாணவிகளில் சிலருக்கு தனியாக அதிக நேரம் பாடம் சொல்லி கொடுப்பது போல நாடகம் ஆடியுள்ளார் சிவக்குமார். அப்போது சில மாணவிகளுக்கு குளிர்பானங்களில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மாணவிகள் மயங்கி விழுந்ததும் அவர்களிடம் உல்லாசம் அனுபவித்துள்ளார்[4]. டெக்கான் குரோனிகல் நாளிதழ் மட்டும் தான், இந்த கயவர்கள் கற்பழித்ததால் கைது செய்யப்பட்டனர் என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது[5].

tution-centre-rape-sivamar-arrestedஒரு மாணவி துணிந்து புகார் கொடுக்க கைதான காமக்கொடூரன்: மேலும், சில மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவும் கொடுத்துள்ளார்[6]. “பாலியல் ரீதியில் தாக்கியதற்காக, ஒரு மனிதன் கைது” என்று தி இந்து செய்தி வெளியிட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது[7]. பல மாணவிகள் பலிகடா ஆனாலும், ஒரு மாணவி துணிந்து புகார் கொடுக்க முடிவு செய்தாள். எனவே, இதுகுறித்து, 17 வயது மாணவி ஒருவர் 04-12-2016 அன்று புகார் கொடுத்தார். கொடுத்த புகாரின் படி[8], பாலக்கோடு இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் விசாரித்து, சிவக்குமாரை போஸ்கோ சட்டத்தில் கைது செய்தார்[9]. மேலும், அவரிடம் இருந்து, மாணவிகளின் ஆபாச படம் இருந்த மொபைல்போனையும் பறிமுதல் செய்தார்[10]. விசாரணையில், பாலியல் பலாத்காரம் செய்த மாணவிகளின் வீடியோக்களை, டியூசன் சென்டரில் பணியாற்றும், தன் நண்பர்கள் ஈஸ்வரன், மற்றொரு சிவக்குமார் மற்றும் மற்றொரு நண்பருக்கு, சிவக்குமார் காட்டியுள்ளார். இவ்வாறு ஆதாரங்களைத் திரட்டினர் போலீஸார்.

tution-centre-sexபாலியல் ரீதியில் பாதிக்கப்பட்டது எத்தனை மாணவிகள்?: ஊடகங்களுக்கு இத்தகைய பிரச்சினைகளை செய்தியாக வெளியிடும்போது, பொறுப்போடு செயல்பட வேண்டும். ஏதோ மற்றவர்களை ஈர்க்கும் வகையில், தலைப்பிட்டு செய்திகளாக வெளியிடுவதை விட, படிப்பவர்களுக்கு நீதி புகட்டும் முறையில், அவற்றை வெளியிட வேண்டும். இதையடுத்து, சிவகுமார், ஈஸ்வரன், மற்றொரு சிவக்குமார் நான்கு பேரும் சேர்ந்து, 20க்கும் மேற்பட்ட மாணவிகளை மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. 25க்கும் மேற்பட்ட மாணவிகளை அவர்கள் சீரழித்ததுடன், அவற்றை வீடியோவாக பதிவு செய்து ரசித்தும், நண்பர்களுக்கு அந்த வீடியோவை போட்டு காண்பித்தும் தங்களுடைய கொடூரத்தை அரங்கேற்றியுள்ளனர், என்று தினகரன் கூறுகிறது. இந்தியன் எக்ஸ்பிரஸ் 30 என்று கூறுகிறது[11]. எத்தனை பேர் பாதித்திருந்தாலும், அது ஈடுகொடுக்க முடியாத இழப்பாகும். பெண்மையை மதிக்கத் தெரியாத அந்த கயவர்கள் தூக்கில் ஓட்டால் தான், மற்ற காமக்கொடூரர்களுக்கு உரிய பாடமாக இருக்கும். இதையடுத்து, தலைமறைவாக இருந்த ஈஸ்வரன், 26, மற்றொரு சிவக்குமார், 27, ஆகியோரை போலீசார் 16-12-2016 அன்று கைது செய்து[12], பாலியல் பலாத்காரம் செய்த வீடியோ காட்சி அடங்கிய மொபைல்போன்களை, அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்தனர்[13].

tution-centre-rape-sivamar-arrested-vedaprakashடியூஷன் சென்டர்கள், டுடோரியல் காலேஜுகள் கண்காணிக்கப் படவேண்டியுள்ளது: இதை கூட்டாகவே செய்திருப்பது, ஆசிரியன், வீடியோ கடைக்காரன், வனது நண்பன் என்று இருப்பது தெளிவு படுத்துகிறது. மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மற்றொருவரை போலீசார் தேடிவருகின்றனர். மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்துள்ளதால், இங்கு படித்த மாணவிகள் மட்டுமன்றி, அவர்களின் பெற்றோரும் பீதியடைந்துள்ளனர்[14]. நியாயமான விசயம் என்றாலும், தங்களது பெண்களைக் கவனிக்காமல், கண்காணிக்காமல் அப்படி விட்டது அவர்களது பொறுப்பற்றத் தன்மையினையை வெளிப்படுத்துகிறது. இந்த வழக்கு தொடர்பாக, சிவக்குமாரிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால், அவரை, போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தியாவில் பலப் பகுதிகளில் இத்தகைய குற்றங்கள் நடந்து வருவதால், டியூஷன் சென்டர்கள், டுடோரியல் காலேஜுகள் கண்காணிக்கப்படவேண்டியுள்ளது[15]. ஏனெனில், அத்தகைய பாலியல் குற்றங்களில் ஒரு மாதிரி வெளிப்படுகிறது[16].

© வேதபிரகாஷ்

20-12-2016

[1] தினகரன், தர்மபுரி டியூசன் சென்டர் லீலைகள் அம்பலம் மாணவிகளை பலாத்காரம் செய்ததை வீடியோ எடுத்த ஆசிரியர், Date: 2016-12-18@ 00:24:14

[2] http://www.dinakaran.com/News_detail.asp?Nid=266408

[3] http://www.dinamalar.com/news_detail.asp?id=1670161

[4] தமிழ்.ஒன்.இந்தியா, குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து 30 மாணவிகளிடம் உல்லாசம்.. டியூசன் ஆசிரியர்கள் 3 பேர் கைது !, By:  Karthikeyan, Published: Thursday, December 15, 2016, 18:47 [IST]

[5] In a shocking development, the Dharmapuri police on Thursday arrested three people including a teacher of a private tuition center for raping some schoolgirls studying in classes ten and plus-2. They were arrested after a victim informed her parents about the incident leading to the police complaint against the accused people.

Deccan Chronicle, Chennai: 3 including teacher held for raping schoolgirls, Published: Dec 16, 2016, 7:46 am IST; Updated: Dec 16, 2016, 8:00 am IST.

http://www.deccanchronicle.com/nation/crime/161216/chennai-3-including-teacher-held-for-raping-schoolgirls.html

[6] The Hindu, Man held for sexually assaulting minor girl, DHARMAPURI: DECEMBER 16, 2016 00:00 IST ,UPDATED: DECEMBER 16, 2016 03:56 ISTUPDATED: DECEMBER 16, 2016 03:56 IST

[7] The police have arrested Sivakumar, a tuition teacher, on the charge of sexually assaulting a 17-year-old girl. In a complaint, the girl said that she used to go to a tuition centre where he taught. Easwaran, another staff at the centre, had recorded the assault on his mobile phone. He too has been arrested. The police is on the lookout for one more person in this regard.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/Man-held-for-sexually-assaulting-minor-girl/article16843687.ece

[8] the incident came to light only on December 4 when the victim summoned the courage to lodge a complaint with the police. Investigators have so far arrested three persons, including the prime accused.

Indian Express, Sleazy tuition teacher held for raping minor girl two years back, By Expres News Service, Published: 17th December 2016 04:16 AM, Last Updated: 17th December 2016 04:16 AM

[9] தினகரன், மாணவியரை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டியவர் கைது, பதிவு செய்த நாள். டிசம்பர்.05, 2016. 09.52.

[10] http://www.dinamalar.com/news_detail.asp?id=1663653

[11] Meanwhile, rumours spread in the place that around 30 girls were sexually assaulted and videographed by Sivakumar. However, the SP denied this.

[12] After investigations, his friend Eswaran was arrested on Tuesday and another friend M Sivakumar on Friday.

http://www.newindianexpress.com/states/tamil-nadu/2016/dec/17/sleazy-tuition-teacher-held-for-raping-minor-girl-two-years-back-1550079.html

[13] தினமலர், 20க்கும் மேற்பட்ட மாணவிகள் பாலியல் பலாத்காரம்: வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் மேலும் இருவர் கைது, பதிவு செய்த நாள். டிசம்பர்.16, 2016. 08.17.

[14] http://tamil.oneindia.com/news/tamilnadu/teacher-arrested-having-allegedly-sex-with-students-269813.html

[15] The Times of India, Tuition teacher arrested for molesting young girl in Mumbai, Vijay V Singh| TNN | Oct 1, 2014, 11.16 PM IST.

[16] http://timesofindia.indiatimes.com/city/mumbai/Tuition-teacher-arrested-for-molesting-young-girl-in-Mumbai/articleshow/44021309.cms