Posts Tagged ‘ஸ்டாலின் தொடர்பு’

ஜாபர் சாதிக் விவகாரம் – சகோதரர்கள் தலைமறைவாக உள்ள நிலை, தொடரும் விசாரணை (6)

மார்ச் 25, 2024

ஜாபர் சாதிக் விவகாரம்சகோதரர்கள் தலைமறைவாக உள்ள நிலை, தொடரும் விசாரணை (6)

04-02-2024 முதல் 20-03-2024 வரை நடந்தது என்ன?:  போதை மருந்து விவகாரங்களில் நடவடிக்கைகள் வேகமாக நடக்கின்றனவா அல்லது வேகம் குறைவா போன்றவை நடவடிக்கைகள் வைத்து தீர்மானிக்கலாம்.

04-02-2024 போதை மருந்து தில்லியில் 50 கிலோ ரசாயன வகை போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

15-02-2024ல் தில்லியில் மூவர் கைது, ஜாபர் சாதிக் தலைமறைவு; லுக்-அவுட் நோட்டீஸ் கொடுக்கப் பட்டது.

22-02-2024 – படப்பிடிப்பு நிறுத்தப் பட்டது.

25-02-2024 – திமுகவில் இருந்து நீக்கப் பட்டது.

26-02-2024 – என்.சி.பி அலுவலத்தில் ஆஜராகும் படி ஆணை.

08-03-2024 – வெள்ளிக்கிழமை – ஜெய்பூர்

பிறகு 09-03-2024 சனிக்கிழமை அன்று ஜாபர் சாதிக் கைது செய்யப் பட்டான்.  ஒரு வாரம்காவல்.

சதானந்தன் கைது

16-03-2024 காவல் செவ்வாய்கிழமை வரை நீட்டிக்கப் பட்டது.

17-03-2024 ஞாயிறு – சென்னைக்கு கொண்டு செல்லுதல்

18-09-2024 திங்கட்கிழமை அன்று காலை விமானம் மூலம், சென்னைக்கு அழைத்து வரப்பட்டான்.

19-03-2024  செவ்வாய்கிழமை – தில்லிக்குத் திரும்ப அழைத்துச் செல்லப் பட்டான்.

20-03-2024  புதன் கிழமை– 14 நாட்கள் காவல்

ஜாபர் சாத்திக் சகோதரர்கள் தலைமறைவாக உள்ள நிலை; ஜாபர் சாதிக் காணாமல் இருந்தது போல, அவனது சகோதரர்களும் மறைந்து வாழ்கின்றனர். இந்த நவநாகரிக காலத்தில் எப்படி மறைந்து வாழ முடியும் என்பதே திகைப்பாக இருக்கிறது. பணம், பலம், ஆட்கள், இருக்க இடம் என்று பல இல்லாமல், ஒரு நாள் கூட இருந்துவிட முடியாது. அந்நிலையில் பல நாட்கள் மறைந்து வாழ்வது எப்படி சாத்தியம் ஆகும். அப்ப்டியென்றால், இவர்களுக்கு எல்லாம் உதவ பல இடங்களில் ஆட்கள் இருக்கிறார்க்ச்ௐ என்றே தெரிகிறது. இதெல்லாம் நேரத்தை பயன் படுத்தி, ஆதாரங்களை மறைக்கவா அல்லது நடவடிக்கை நேரத்தை விரயமாக்கவா என்று தெரியவில்லை. ஜாபர் சாதிக்கின் சகோதரரும், வி.சி., முன்னாள் நிர்வாகியுமான முகமது சலீம், 28, மற்றொரு சகோதரரும், அமீர் இயக்கி வரும், இறைவன் மிகப்பெரியவன் என்ற படத்தின் நடிகருமான மைதீன், 23, ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை, மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தேடி வருகின்றனர். குடியுரிமை அதிகாரிகள் வாயிலாக இருவரும் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்லவில்லை என, உறுதி செய்யப்பட்டு உள்ளது. எனினும், விமான நிலையங்களுக்கு, ‘லுக் அவுட்’ நோட்டீசும் வழங்கப்பட்டுள்ளது.

NCB அதிகாரிகள் சொல்லும் விவரங்கள்; NCB அதிகாரிகள் முகமது சலீம், மைதீன் ஆகியோர் பதுங்கி இருக்கும் இடங்கள் குறித்து ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன மற்றும் அவர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன, என்கின்றனர். இவர்களுக்கு அடைக்கலம் தருவோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படும். முகமது சலீம் நெருங்கிய நட்பு வட்டத்தில், சென்னையைச் சேர்ந்த வி.வி.ஐ.பி.,யின் மகன் இருப்பதும், அவரும் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. அதுபற்றியும் ரகசிய விசாரணை நடக்கிறது. முகமது சலீம், மைதீன் ஆகியோர் விரைவில் சிக்குவர். இவ்வாறு அவர்கள் கூறினர்[1]. திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் சகோதரர்களுக்கு அடைக்கலம் தருவோர் மீது, வழக்குப்பதிவு செய்யப்படும்’ என, போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்[2]. ‘வெளிநாடுகளுக்கு உணவு பொருட்கள் அனுப்புவது போல, போதைப்பொருள் கடத்தியதில், என் சகோதரர் முகமது சலீமுக்கு தான் முக்கிய பங்கு உள்ளது’ என, ஜாபர் சாதிக் வாக்குமூலம் அளித்துள்ளார். தி.மு.க., அயலக பிரிவு முன்னாள் நிர்வாகியும், சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவனுமான ஜாபர் சாதிக், 35, டில்லியில் 09-03-2024 அன்று, கைதாகி, மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளின், 10 நாள் காவலில் விசாரிக்கப்பட்டார்[3].

18-03-2024 – சென்னையில் விசாரணை: பின், அவரை 18-09-2024 அன்று காலை விமானம் மூலம், சென்னைக்கு அழைத்து வந்து விசாரித்த அதிகாரிகள் மீண்டும் டில்லியில், போதை பொருள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் 20-03-2024 அன்று ஆஜர்படுத்தினர்[4]. என்.சி.பி இவ்வளவு கஷ்டப் பட்டு சட்டரீதியில் செயல்பட வேண்டியுள்ளது. அதிலும், போதை மருந்து விவகாரங்களில் மிகவும் எச்சரிக்கையுடன், ஜாக்கிரதையாக செயல்பட வேண்டியுள்ளது. இந்த விசாரணையில் ஜாபர் சாதிக்கிற்கு யார் யாருடன் தொடர்பு, போதைப்பொருள் கடத்தலுக்கு உதவி செய்வது யார் என என்சிபி துருவிதுருவி விசாரணை நடத்தியது. மேலும் அவரிடம் கைப்பற்றப்பட்ட 7 செல்போன்களை ஆய்வு செய்யும் பணியும் நடக்கிறது[5]. யார் யாரிடம் பேசியுள்ளார் என்பது குறித்து சைபர் கிரைம் தடயவியல் நிபுணர்களின் உதவியும் நாடப்பட்டுள்ளது[6]. இக்காலத்தில், சைபர் தொழிற்நுட்பம் மூலம், பல விசயங்களைத் தெரிந்து கொள்ளலாம். ஆனால், சம்பந்தப் பட்டவர்கள் எந்த அளவுக்கு நாணயமாக நடந்து கொள்வர் என்று கவனிக்க வேண்டும்.

என்.சி.பி அலுவலகத்தில் விசாரணை; பின்னர் அயப்பாக்கத்தில் உள்ள போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதெல்லாம் துறை முறையில், சட்டப் படி, நடத்தப் படும் விசாரணை ஆகும். சாந்தோமில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீடு, பெருங்குடியில் உள்ள குடோன் ஆகியவற்றுக்கும் ஜாபர் சாதிக்கை அழைத்துச் சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்[7]. இங்கெல்லாம் என்ன நடந்தது, என்ன பேசினார்கள் என்பனவெல்லாம் அரசுமூறையில் காக்கப் படுகிறது எனலாம். எல்லாம் விசயங்களையும் பொதுவில் தெரியப் படுத்த முடியாது, செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. சுமார் 13 மணி நேர விசாரணைக்கு பிறகு ஜாபர் சாதிக் நேற்று இரவு சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டார்[8]. இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்[9]. ஜாபர் சாதிக்கை, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி சுதீர் குமார் சிரோஹி உத்தரவிட்டார்[10]. இதையடுத்து, ஜாபர் சாதிக், திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்[11].

© வேதபிரகாஷ்

20-03-2024


[1] தினமலர், ஜாபர் சாதிக் தம்பிகளுக்கு அடைக்கலம் தந்தால் வழக்கு என்.சி.பி., அதிகாரிகள் எச்சரிக்கை, மாற்றம் செய்த நாள்: மார் 21,2024 03:24

[2] https://m.dinamalar.com/detail.php?id=3581149

[3] தினமலர், போதை கடத்தலில் தம்பி தான் மெயின் ரோல் :ஜாபர் சாதிக் அதிர்ச்சி வாக்குமூலம், பதிவு செய்த நாள்: மார் 19,2024 23:53; https://m.dinamalar.com/detail.php?id=3580226

[4] https://m.dinamalar.com/detail.php?id=3580226

[5] ஏசியாநெட்.நியூஸ், jaffer sadiq : சென்னைக்கு அழைத்து வரப்பட்ட ஜாபர் சாதிக்.. அடுத்து சிக்குப்போகுவது யார்?, vinoth kumar, First Published Mar 18, 2024, 9:18 AM IST; Last Updated Mar 18, 2024, 10:07 AM IST

[6] https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/jaffer-sadiq-brought-to-chennai-tvk-saiyks

[7] நக்கீரன், ஜாபர் சாதிக்கிற்கு நீதிமன்றக் காவல் விதிப்பு!,  நக்கீரன் செய்திப்பிரிவு,  Published on 19/03/2024 | Edited on 19/03/2024

[8] https://www.nakkheeran.in/24-by-7-news/india/jaber-sadiq-sentenced-court-custody

[9]தினகரன், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கிற்கு 14 நாள் நீதிமன்ற காவல்!, March 19, 2024, 5:03 pm

[10]  https://www.dinakaran.com/14dayscourtcustody-zafarsadiq-arrested-casedrugtrafficking/ – google_vignette

[11] மாலைமுரசு, போதைப் பொருள் கடத்தல் வழக்கு- ஜாபர் சாதிக்கிற்கு 14 நாள் நீதிமன்ற காவல், By மாலை மலர்19 மார்ச் 2024 5:48 PM