அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது – சீமானின் பேச்சு, எதிர்ப்பு, கண்டனம் மற்றும் மிரட்டல் (3)
சீமானின் விளக்கம் – சாத்தானின் குழந்தைகள் என்று அனைத்து இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களையும் நான் கூறவில்லை: “சாத்தானின் குழந்தைகள் என்று அனைத்து இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களையும் நான் கூறவில்லை” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கம் அளித்துள்ளார்[1]. இது தொடர்பாக அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில்[2], “இஸ்லாம், கிறிஸ்தவம் இரண்டும் அநீதிக்கு எதிராக பிறந்தவை[3]. அநீதிக்கு எதிரான புரட்சித் தீயை பற்ற வைக்கவே நான் வந்தேன் என்று இயேசு கூறினார்[4]. எங்கே அந்தத் தீ. இந்த நாட்டில் மாறி மாறி திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக ஆட்சி நடக்கிறது. இதை எப்படி சகித்து கொள்கிறீர்கள்? 58 நிமிடம் அக்கறையாக பேசினேன். 2 நிமிடம் பேசியது மட்டுமே தெரிகிறது. இதைப் பற்றி எல்லாம் கவலைப்பட முடியாது. என்னுடைய பேரன்பின் வெளிப்பாடுதான் இது. என்னுடைய பெரும் கோபத்தில் உள்ள பேரன்பினை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால் என்ன செய்வது? இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களுக்கு திமுக, காங்கிரஸ் செய்த ஒரு நன்மையை சொல்ல முடியுமா?
மதத்தை வைத்து மனிதர்களை கணக்கிடுவது என்பது உலக வரலாற்றில் இல்லை: தொடர்ந்து சீமான் பேசியது, “தவறு என்று தெரிந்தால், சுட்டிக்காட்டுவது எனது கடமை. சாத்தான் என்பது குர்ஆன் மற்றும் பைபிலில் உள்ளது. இதை நான் கூறவில்லை. நபிகள், இயேசு கூறியுள்ளனர். சாத்தானின் செயல்களை இந்த ஆட்சியாளர்கள் செய்கின்றனர். அநீதி இழைப்பவர்களுக்கு ஆதரவாக இருப்பது யார்? குர்ஆன் சாத்தானின் நண்பர்கள் என்று கூறுகிறது. நான் சாத்தானின் குழந்தைகள் என்று கூறிவிட்டேன். இதை வேண்டும் என்றால் தவறு என்று கூறலாம். மதத்தை வைத்து மனிதர்களை கணக்கிடுவது என்பது உலக வரலாற்றில் இல்லை. எல்லாவற்றையும் விட பெரியது மொழி, இனம்தான். இங்கு உள்ள கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் தமிழர்கள். சிறுபான்மை என்று கூறினால் நான் வெறிகொண்டு விடுவேன். யார் சிறுபான்மை? சிறுபான்மை என்று எப்படி கூறுகிறார்கள். மதம் மாறிக் கொள்ளலாம். மொழி, இனத்தை மாற்றிக்கொள்ள முடியாது. அநீதிக்கு துணை நிற்பர்களை கூறினேன்[5]. மொத்தமாக அனைத்து இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களையும் கூறவில்லை[6]. அவர்கள் சாத்தானின் குழந்தைகள் என்று கூறவில்லை. சாத்தானின் குழந்தைகளாக மாறி வீட்டீர்களே என்று ஆதங்கப்படுகிறேன். அநீதிக்கு தொடர்ந்து துணை நின்று கொண்டுள்ளீர்கள். எனக்கு பதில் சொல்ல வேண்டாம். இறைவனுக்கு பதில் கூறியே ஆக வேண்டும்,” என்று சீமான் கூறினார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், அண்மையில் இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்துவர்கள் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையானது. இந்த நிலையில், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி சென்னை பத்திரிகையாளர் சங்கத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது சீமான் கருத்து தொடர்பாகப் பேசிய திருமுருகன் காந்தி[7], “நாம் தமிழர் கட்சி சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில், `இஸ்லாமியர்களும் கிறிஸ்துவர்களும் சாத்தானின் பிள்ளைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டன’ என்று சிறுபான்மை மக்களைக் கொச்சைப்படுத்தி பேசியிருக்கிறார் சீமான். மேலும், `இந்த நாட்டில் நடைபெற்றிருக்கும் அநீதி அக்கிரமங்களுக்குப் பெரிய பொறுப்பேற்க வேண்டியது இஸ்லாமிய – கிறிஸ்துவ மக்கள்தான்’ என நாட்டில் நெருக்கடியைச் சந்தித்துவரும் சிறுபான்மை சமூகத்தவர்கள்மீது அபாண்டமாகக் குற்றம்சாட்டியிருக்கிறார். சீமானின் இந்தப் பேச்சு, நாட்டில் சிறுபான்மை சமூகத்தவர்களை ஒடுக்கிவரும் பாசிச பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் குரலாக ஒலிக்கிறது. இதை மே 17 இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. தனக்கு வாக்கு செலுத்தாத இஸ்லாமியர்களையும் கிறிஸ்துவர்களையும் சாத்தானின் பிள்ளை எனக் கூறும் சீமான், தனக்கு வாக்களிக்காத இந்து மக்களை எதனின் பிள்ளை என்று அழைப்பார்?,” என்று கேள்வி எழுப்பினார்[8]. மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில், “மணிப்பூரில் சிறுபான்மை பழங்குடி கிறிஸ்துவர்கள் மீதும், ஹரியானாவில் சிறுபான்மை இஸ்லாமியர்கள் மீதும் ஆளும் ஒன்றிய – மாநில பா.ஜ.க அரசுகளின் ஒத்துழைப்புடன் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகள் வன்முறைகளை நிகழ்த்தி வரும் இந்த வேளையில், ஒடுக்கும் பாசிச பயங்கரவாதிகளைக் கண்டித்தும் ஒடுக்கப்படும் சிறுபான்மை சமூகத்தவர்களுக்கு ஆதரவாகவும் பேசக்கூடிய நேரத்தில் பாதிக்கப்பட்ட சமூகங்களே குற்றவாளியாக்கிய சீமானின் பேச்சு அரசியல் நாகரிகமற்ற செயலாகும்,” என்றார்.
தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அதரித்தது: இந்து கடவுள்களை சாத்தான் என கூறும் போது வேடிக்கைப் பார்த்து விட்டு தற்போது சீமான் கூறியதைக் கண்டிப்பது நியாமற்ற, நேர்மையற்ற செயலாகும் என தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி ’நாம் தமிழர்’ கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்[9]. இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி[10], “இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் தமிழ்நாட்டில் இருப்பது மாதிரி சாத்தானுடைய அரங்கு கிடையாது. ஏன் தமிழ்நாட்டைக் குறிவைத்து சாத்தான் ஸ்டாக் பண்ணியிருக்கிறான்?” என்றும் தமிழகத்தில் உள்ள ஹிந்து கோவில்களை… சாத்தானுடைய அரங்கு என்றும், ஹிந்து கடவுள்களை சாத்தான் என்றும் மோகன் சி லாசரஸ் குறிப்பிட்ட போது இதே ஜவாஹிருல்லா எங்கு போயிருந்தார்? தொடர்ந்து ஹிந்து கடவுள்களை சாத்தான் என்று பல்வேறு இஸ்லாமிய பேச்சாளர்கள் பேசும் போதேல்லாம் என்ன செய்து கொண்டிருந்தார் ஜவாஹிருல்லா? ஹிந்து கடவுள்களை சாத்தான் என்று வர்ணிப்பது நாகரீகமானதா? அருவருப்பானது இல்லையா? ஹிந்து கடவுள்களை விமர்சித்த போதெல்லாம் அமைதியாக இருந்து விட்டு இப்போது கண்டிப்பது தானே நியாயமற்ற, நேர்மையற்ற செயலாகும்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிஜேபி–எதிர் பிஜேபி என்றெல்லாம் சொல்வது: ஆர்எஸ்எஸின் முகமாக சீமான் இருக்கிறார் என திமுக கூட்டணி கட்சியினர் குற்றம்சாட்டி வரும் நிலையில், பாஜகவினர் சீமானின் கருத்தை ஆதரிப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாட்டை துரைமுருகன் என்பவரும், சீமான் சொல்லியதில் எந்த தவறும் இல்லை[11], ஆனால், மக்களுக்குப் புரியும் அகையில், தெளிவாக கூறியிருக்க வேண்டும் என்று கிட்டதட்ட இதே கருத்தை வெளியிட்டுள்ளார்[12]. கம்யூனிஸ்டுகளும் இதே கோணத்தில் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதை மேலே குற்ப்பிடப் பட்டது. இப்படி பிரச்சினைகளை பிஜேபி-எதிர் பிஜேபி என்றெல்லாம் விவரித்து, விவாதித்தாலும், அதிகமாக இந்துமதம் தாக்கப் பட்டு வந்த நிலையில், இப்பொழுது, கிறிஸ்தவர்-முஸ்லிம்கள் நேரிடையாக விமர்சிக்கப் பட்டுள்ளனர். விமர்சித்தவர் “செபாஸ்டியன் சைமன்” என்று சொல்லப் படுகின்ற சீமான் என்பதால், எதிர்ப்பு இந்த அளவில் இருக்கிறது. இதே, ஒரு இந்து சொல்லியிருந்தால் கைது செய்யப் பட்டிருப்பர்.
© வேதபிரகாஷ்
04-08-2023
[1] தமிழ்.இந்து, “அனைத்து இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களையும் நான் அப்படிச் சொல்லவில்லை” – சீமான், செய்திப்பிரிவு, Published : 03 Aug 2023 01:21 PM; Last Updated : 03 Aug 2023 01:21 PM.
[2] https://www.hindutamil.in/news/tamilnadu/1079267-seeman-said-that-i-am-not-saying-that-all-muslim-and-christian.html
[3] கல்கி.ஆன்.லைன், கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் சாத்தான் என கூறியது ஏன்? சீமான் விளக்கம்!, விஜி, Published on : 03 Aug 2023, 6:05 pm
[4] https://kalkionline.com/news/politics/naam-tamilar-seeman-pressmeet-about-saathan-word-issue
[5] விகடன், `அநீதிக்குத் துணை நின்றவர்களைத்தான் சாத்தானின் குழந்தைகள் என்றேன்!’ – சீமான் VM மன்சூர் கைரி, Published: 03-08-2023 Yesterday at 2 PM; Updated:Yesterday at 3 PM.
[6] https://www.vikatan.com/government-and-politics/politics/ntk-chief-seeman-clarification-regarding-his-speech-about-minorities
[7] விகடன், சீமானின் இந்தப் பேச்சு, பாசிச பாஜக – ஆர்எஸ்எஸ் குரலாக ஒலிக்கிறது” – திருமுருகன் காந்தி காட்டம், சா.முஹம்மது முஸம்மில், Published: 03-08-2023 at 6 PM; Updated: August 3, 2023 at 6 PM.
[8] https://www.vikatan.com/government-and-politics/politics/may-17-organization-coordinator-thirumurugan-gandhi-slams-seeman
[9] காமதேனு, தமிழக அரசியலில் பரபரப்பு… சீமானுக்கு ஆதரவாக களமிறங்கிய பாஜக!, Updated on : 03 Aug 2023, 12:55 pm
[10] https://kamadenu.hindutamil.in/politics/bjp-came-out-in-support-of-seeman
[11] தமிழ்.ஏபிபிலைவ், சாத்தானின் பிள்ளைகள் என சீமான் கூறியதில் தவறு இல்லை.. சப்போர்டுக்கு வந்த சாட்டை துரைமுருகன், By: அப்ரின் | Updated at : 02 Aug 2023 05:19 PM (IST); Published at : 02 Aug 2023 05:17 PM (IST)
[12] https://tamil.abplive.com/news/tamil-nadu/seeman-controversy-saathan-speech-sattai-durai-murugan-support-to-him-132611