Archive for the ‘தமிழ் தாய்’ Category

அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது – சீமானின் பேச்சு, எதிர்ப்பு, கண்டனம் மற்றும் மிரட்டல் (2)

ஓகஸ்ட் 4, 2023

அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டதுசீமானின் பேச்சு, எதிர்ப்பு, கண்டனம் மற்றும் மிரட்டல் (2)

சீமான்இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் தி.மு.. செய்த ஒரு நன்மையைச் சொல்லுங்கள். நான் கட்சியை கலைத்துவிட்டுப் போகிறேன்: இதற்குப் பிறகு, சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தபோது பேசியதாவது: “தொடர்ச்சியாக 18% வாக்கை தி.மு.. காங்கிரசிற்குப் போடுகிறார்கள். பிறகு மாற்றம் எப்படி வரும்? எதிர்க்கட்சியாக இருக்கும்போது இஸ்லாமிய சிறைக் கைதிகளை விடுதலை செய்வதாகச் சொல்வார்கள். ஆட்சிக்கு வந்த பிறகு செய்ய மாட்டார்கள். எங்களுக்கு உரிமை இருக்கிறது, ஆதங்கம் இருக்கிறது என்பதால் சொல்கிறோம். இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் தி.மு.. செய்த ஒரு நன்மையைச் சொல்லுங்கள். நான் கட்சியை கலைத்துவிட்டுப் போகிறேன். நான் எவ்வளவோ பேசியிருக்கிறேன், அதையெல்லாம் விட்டுவிட்டு, சாத்தானின் பிள்ளைகள் என்று பேசிவிட்டாரே என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள்,என்று குறிப்பிட்டார்.

சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தபோது தொடர்ந்து பேசியதாவது: மணிப்பூரில் இருந்து வந்து நமக்கு யாரும் ஓட்டு போடப்போவதும் இல்லை. அதை பற்றி நாம் ஏன் பேச வேண்டும். இங்கு இருக்கக்கூடிய கிறிஸ்துவர்களும் நமக்காக வாக்களிக்கப்போவது கிடையாது. நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம், இஸ்லாத்தையும் கிறிஸ்துவத்தையும் ஏற்றுக்கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் என்று. அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகளாகிவிட்டது, என்று கூறி இருந்தார். அதோடு நிற்காமல், சும்மா போய் தேவாலயத்தில் தேவரே வாரீர் வாரீர் என்று பாடிவிட்டு, கடைசியில் யார் யாருக்கோ நாட்டை கொடுத்து இருக்கிறார்கள். இந்த நாட்டில் நடந்திருக்கும் அநீதி அக்கிரமங்களுக்கு பெரிய பொறுப்பு,” என்றும் கூறி சர்ச்சையை கிளப்பி இருந்தார். அவரின் இந்த பேச்சு பெரிய சர்ச்சையான நிலையில் சீமானின் பேச்சுக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் விமர்சனங்களை வைத்தன. அதேபோல் சில இஸ்லாமிய அமைப்புகள் சீமானுக்கு எதிராக காவல் நிலையத்திலும் புகார் வைத்தன.

சீமான் மன்னிப்பு கேட்டால் என்ன ஓட்டா கிடைக்கும்?: இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சீமானிடம் செய்தியாளர்கள் இந்த பேச்சு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சீமான், ”மன்னிப்பு கேட்டுவிட்டேன் என்றால் எனக்கு ஓட்டு போட்டுவிடுவார்களா? வருத்தம் தெரிவிக்க வேண்டியது எனது மக்கள்தான். என்னைப் போன்று நிற்போரை ஆதரிக்காமல் நடுத்தெருவில் போராட விட்டது யாரு? அநீதிக்கு எதிராக போராடிய ஒரே ஒருவர் பழனிபாபாதான். அவரையே நீங்கள் மதிப்பதில்லையே. அவரையே அநியாயமாக சாக விட்டவர்கள்தானே. மானமுள்ள தமிழன் திமுகவிற்கு ஓட்டு போடுவானா என கேட்டவர் பழனி பாபா. அதனால் அவரைப்பற்றி பேச மாட்டார்கள். அவரை விடவா நான் பேசிவிடப் போகிறேன். அவரே உங்களுக்கு ஒரு பொருட்டல்ல நானெல்லாம் ஒரு பொருட்டா? முதலில் அண்ணன் ஜவாஹிருல்லா கலைஞரைப் பற்றி பேசியதை கேட்டுள்ளீர்களா? முதுகில் குத்திய துரோகி எனக் கலைஞரை பேசியுள்ளார்[1]. ஆனால் இப்பொழுது அங்கு ஒரு சீட்டுக்காக நிற்கிறீர்கள்” என்றார். சீமானின் பேச்சு சர்ச்சையான நிலையில் மதக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திராவிட நட்பு கழகம் அமைப்பு சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது[2].

மதம், சாதியை விட எல்லா அடையாளங்களையும் விட மொழி இனம் தான் பெரியது: சீமான் தொடர்ந்து பேசியது ‛‛மதம், சாதியை விட எல்லா அடையாளங்களையும் விட மொழி இனம் தான் பெரியது. முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் தமிழன். பெரும்பான்மை தேசிய இனத்தின் மகன். வந்தவன், போனவன் எல்லாம் சிறுபான்மையினர்சிறுபான்மையினர்என சொல்பவர்களை செருப்பால் அடிப்பேன்,” என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்[3]. சென்னையில் நிருபர்களை சந்தித்த சீமான் கூறியதாவது[4]: முஸ்லீம்கள், கிறிஸ்தவர்களுக்கு காங்கிரஸ், தி.மு.க., ஏதாவது நல்லது செய்தது உண்டா? மதத்தை வைத்து மனித கூட்டத்தை கணக்கிட்டது எங்கேயாவது உள்ளதா? ஐரோப்பிய யூனியன் முழுவதும் கிறிஸ்தவர்கள் இருந்தாலும், பல நாடுகள் இருப்பதற்கு காரணம் மொழி வாரியாக தேசிய இனங்கள், நிலங்கள் உள்ளது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்ததற்கு காரணம் மதம். பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் பிரிந்ததற்கு காரணம் மொழி. மதம், சாதியை விட எல்லா அடையாளங்களையும் விட மொழி இனம் தான் பெரியது. இங்குள்ள கிறிஸ்தவனும், இஸ்லாமியனும் தமிழன்.. பெரும்பான்மையான தமிழ் தேசிய இனத்தின் மகன். வந்தவன், போனவன் எல்லாம் சிறுபான்மையினர்… சிறுபான்மையினர்… எனக்கூறினால் செருப்ப கழட்டி அடிப்பேன். வெறி கொண்டு இருக்கேன். மதத்தின் அடிப்படையில் மனிதர்களை பிரிப்பதை ஏற்க முடியாது. ஸ்டாலின் முதல்வர். உதயநிதி அமைச்சர். இன்பநிதிக்கு, அரசு விழாவில் என்ன வேலை. தலைதலைமுறையாக ஆட்சி செய்து கொண்டுள்ளீர்கள். உங்கள் குடும்பத்திற்கு என் நாடு பட்டா போட்டு கொடுக்கப்பட்டு உள்ளதா. மக்கள் உங்களுக்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்து உள்ளனரா? இவ்வாறு சீமான் கூறினார்.

சீமான் எழுப்பியுள்ள சில கேள்விகள்: ஊடகக்காரர்களைப் பார்த்டு நேரிடையாக சீமான் எழுப்பியுள்ள கேள்விகள்…தேசம், நாடு, மொழி, இனம், மதம், என்ற காரணிகளில் இந்த சித்தாந்திகளுக்கு எழுப்பப் பட்ட கேள்விகள்:

  1. காஷ்மீரில் இஸ்லிமிய பெரும்பான்மை தானே, ஆனால், ஒட்டுமொத்தமாக முஸ்லிம்களை சிறுபான்மையினர் என்று எப்படி சொல்ல முடியும்?
  2. மனிதன் தன்னுடைய மூலத்தை, மதம் மாற்றிக் கொள்ளக் கூடியது மொழியை, மொழி இனத்தை  மாற்றிக் கொள்ளமுடியாது.
  3. நேற்றைக்கு திலீப், இன்று ஏ.ஆர்.ரஹ்மான்; நேற்றைக்கு பெரும்பான்மை, இன்றைக்கு சிறுபான்மையா? கேவலமாக இல்லை.
  4. என்னுடைய அப்பா இளையராஜா பெருபான்மை, யுவன் ஷங்கர் ராஜா சிறுபான்மை;  போனவாரம் அவர் பெரும்பான்மை, இந்த வாரம் அவர் சிறுபான்மை;
  5. இந்த மாதிரியான உலக பைத்தியக்காரத்தனம் எங்கேயாவது இருக்கிறதா தம்பி?

ஒருவேளை, மதமாற்றத்தை எதிர்க்கிறாரா என்றும் யோசிக்க வேண்டியுள்ளது. இருப்பினும், சீமான் தமிழ்-தமிழர்-தமிழர் சயம் என்றால் எல்லாமே ஒன்று என்று விளக்கம் கொடுத்து விடுவார்.

கம்யூனிஸ்டுகளின் எதிர்ப்பு திகைப்பாக இருக்கிறது: சீமான் குறிப்பிட்டதைப் போலவே, அவர் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. பேராசிரியர் அருணன், க. உதயகுமார் ஒருங்கிணைப்பில் ஹிந்து என். ராம், டி.எம். கிருஷ்ணா, பேராசிரியர் வசந்தி தேவி, திரைப்படக் கலைஞர் ரோஹிணி ஆகியோரை உள்ளடக்கிய தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சீமானின் இந்தப் பேச்சைக் கண்டித்துள்ளது[5]. “இவரின் நோக்கம் தெளிவானது. பா... எதிர்ப்பு வாக்குகள் சிதற வேண்டும். அதன் மூலம் பா... அணி வெற்றிபெற வேண்டும் என்பது. இந்தச் சதி வேலைக்கு இணங்காமல் சிறுபான்மையினர் தி.மு.. அணிக்கு வாக்களிப்பதே இவரது ஆத்திரத்திற்குக் காரணம். அதனால்தான் சாத்தானின் பிள்ளைகள் என்று படுமோசமான வசவு மொழியை உதிர்த்திருக்கிறார்,” என அந்த அமைப்புச் சுட்டிக்காட்டியுள்ளது[6]. மொழி,இனம், நாடு, தேசம், மொழி-இனம், தேசிய-இனம் போன்ற அவர்களது விருப்பமான விசயங்களை விடுத்து, அவற்றையும் மீறி சீமானை அரசியல் தேர்தல், ஓட்டு என்ற ரீதியில் விளக்கம் கொடுத்து எதிர்த்திருப்பது கவனிக்கத் தக்கது.

© வேதபிரகாஷ்

04-08-2023


[1] நக்கீரன், சீமான் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார், Published on 02/08/2023 (18:59) | Edited on 03/08/2023 (07:35)

[2] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/complaint-against-seeman-police-commissioners-office

[3] தினமலர், சிறுபான்மையினர் என சொல்பவர்களை செருப்பால் அடிப்பேன்: சீமான், பதிவு செய்த நாள்: ஆக 03,2023 14:00

[4] https://m.dinamalar.com/detail.php?id=3394025

[5] பிபிசி, கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களை சாத்தானின் குழந்தைகள் எனக் கூறியது ஏன்? சீமான் விளக்கம், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி செய்தியாளர், 2 ஆகஸ்ட் 2023; புதுப்பிக்கப்பட்டது 3 ஆகஸ்ட் 2023; https://www.bbc.com/tamil/articles/clewz1d27nno

[6] https://www.bbc.com/tamil/articles/clewz1d27nno

அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகி விட்டது – சீமானின் பேச்சு, எதிர்ப்பு, கண்டனம் மற்றும் மிரட்டல் (1)

ஓகஸ்ட் 4, 2023

அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டதுசீமானின் பேச்சு, எதிர்ப்பு, கண்டனம் மற்றும் மிரட்டல் (1)

தமிழக அரசியல்வாதிகளின் முரண்பட்ட சித்தாந்தங்கள்: தேர்தல் வருகின்றது என்றால் அரசியல்வாதிகள் என்னவேண்டுமாலும், எப்படி வேண்டுமானாலும் பேசுவார்கள். ஒரு கொள்கைப் பிடிப்பற்ற, ஏன் கொள்கையற்ற, சித்தாந்த உதறல்களாகக் கூட பேச்சுகள் இருக்கும். கூட்டணி மயக்கம், போதை, பேரம் என்றெல்லாம் வந்து விட்டால், இப்பேச்சுகள் இன்னும் அதிகமாகி விடும். தமிழக, திராவிட, திராவிடத்துவ அரசியலில் பிரிவினைவாதம், திராவிடஸ்தான், திராவிடநாடு, தமிழ்நாடு, மாநில சுயயாட்சி, தமிழ் தேசியம், திராவிட தேசியம், மொழிபேசும் தேசிய இனங்கள், ஆரியன்,திராவிடன், வடுகண், வந்தேறி, குந்தேறி என்று விரிந்து கொண்டே போகும். மேனாட்டு பிரஹஸ்பதிகள் அவ்வப்பொழுது தங்களது தேவைக்கு ஏற்ப, இத்தகைய சித்தாந்தங்களை கருத்தியல், கருதுகோள், மாதிரி, உத்தேச வடிவம் என்ற ரீதியில் முன்வைப்பர், மற்றவர் மூலம் கருத்து பெற முயற்சிப்பர். பிறகு அவை தமக்கு உபயோகப் படும், லாபம் கிடைக்கும் என்றால், விஞ்ஞான முறையில் மெய்ப்பிக்கப் பட்டது என்று முலாம் பேசி  சுற்றில் விட்டு ஒத்திகைப் பார்ப்பர்.

மதஆதரவும், ஓட்டு வங்கியும், அரசியலும்: மணிப்பூர் கலவரத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம் ஜூலை 30-ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய சீமான்[1], “ஒவ்வொரு கலவரத்தின் பின்னணியிலும் பண வேட்டை இருக்கும். மணிப்பூர் கலவரத்திற்கும் அது தான் காரணம். ஆழ்ந்து பார்த்தால், மலைகளில், காடுகளில் வாழ்கிற பழங்குடி மக்கள் கிறிஸ்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் பா..விற்கு வாக்கு செலுத்த மாட்டார்கள். தரை தளத்தில் வாழும் மெய்த்தி இன மக்கள், இந்துத்துவ கோட்பாட்டை ஏற்கும் மக்களாக இருக்கிறார்கள். அதனால், அங்கே பழங்குடி இன மக்கள் சாவதைப் பற்றி அவர்களுக்கு கவலையில்லை. நமக்கும் இது நடந்துள்ளது. ஒகி புயலில் மீன் பிடிக்கச் சென்ற 200-க்கும் மேற்பட்டோர் இறந்து போய்விட்டனர். வலிமை மிக்க கடற்படையை வைத்திருக்கும் நம் நாடு, அவர்களை காப்பாற்ற வேண்டும் என்று எண்ணவே இல்லை. மக்கள் போராடியும் எந்த மதிப்பும் அதற்கு தரவில்லை. கடைசியாக, ‘உயிரற்ற உடலையாவது ஒப்படையுங்கள், மரியாதையான நல்லடக்கம் செய்கிறோம்என்று கூட போராடினார்கள். அப்போது கண்டுகொள்ளவில்லை. அதற்கு காரணம், அவர்கள் அனைவரும் கிறிஸ்தவர்கள், அவர்கள் வாக்கு நமக்கு வரப்போவதில்லை என்பதால் கண்டுகொள்ளவில்லை.

திராவிட அரசியல், தேசிய அரசியல், கலவரங்கள்: சீமான் தொடர்ந்து பேசியது[2],தேச ஒற்றுமையை பேச வக்கற்ற, தகுதியற்றவர்கள் தான் திரும்ப திரும்ப தேச ஒற்றுமை பற்றி பேசுகிறார்கள். திடீரென இவர்கள் புனிதர்களாகிவிடுவார்கள். அதை நாம் நம்ப வேண்டும். குஜராத் கலவரத்தை நாடாளுமன்றத்தில் ஆதரித்து பேசியவர்கள் தி.மு..வினர். இவர்கள் மணிப்பூர் கலவரத்தைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது? 76-வது நாளில் பேசுகிறீர்கள். 76 நாளில் என்ன செய்தீர்கள்? தேர்தல் வருகிறது, அதனால் பேசுகிறீர்கள். அங்கு பாதிக்கப்படும் கிறிஸ்தவர்களை வைத்து, இங்குள்ள கிறிஸ்தவர்களிடம்உனக்காக பேசுகிறோம்என்பதை காட்டுவதற்காக பேசுகிறார்கள். நான் ஈழத்தைப் பற்றி பேசிய போது, ‘அரசியலுக்காக பேசுகிறார்கள்என்று கூறியவர்கள் தான், இன்று மணிப்பூர் கலவரத்தைப் பற்றி பேசுகிறார்கள். தேர்தல் ஆதாயத்திற்காக இவர்கள் பேசுகிறார்கள். ஆஊனா கட்டுச்சோறு கட்டிக்கிட்டு நடைபயணம் கிளம்பிவிடுகிறார்கள். குஜராத் மாடல் மாதிரி, திராவிட மாடல் மாதிரி நடைபயணம் ஓல்டு மாடல். ராகுல் காந்தி, நடையா நடந்தார், ஒன்னும் நடக்கல போய்ட்டார். 9 ஆண்டுகள் ஆட்சி செய்துவிட்டு இப்ப தான் என்ன பிரச்னை என்று கேட்க வருகிறார்கள். பிரச்னையே நீங்க தானே!

மதரீதியிலான ஓட்டு வங்கி நிரந்தரமல்ல?: சீமான் தொடர்ந்து பேசியது, மணிப்பூர் விவகாரத்தை நாம் பேசுவதால், நமக்கு அங்குள்ள மக்கள் ஓட்டுப் போடப்போவதில்லை. இங்குள்ள கிறிஸ்தவர்களும் நமக்கு ஓட்டுப் போடப் போவதில்லை. நாம நினைத்துக் கொண்டிருக்கிறாமே், இஸ்லாமையும், கிறிஸ்துவத்தையும் ஏற்றுக் கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் என்று. ஆனால் அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது[3]. சும்மா தேவாலயத்திற்கு போய்தேவனே வாரீர்.. வாரீர்னு,’ பாடிட்டு, எவனிடமோ நாட்டை கொடுத்துவிட்டார்கள்[4]. இந்த நாட்டில் நடந்த அநீதிக்கு பெரிய பொறுப்பு ஏற்க வேண்டியவர்கள் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் தான். தொடர்ச்சியாக பல ஆண்டுகுள் 18 சதவீதம் வாக்குகளை தி.மு..வுக்கும், காங்கிரஸிற்கும் போட்டு போட்டு நாட்டை தெருவில் போட்டவர்கள் இவர்கள் தான். சலிக்க முடியாத ஊழல், லஞ்சம், சீர்கேடான நிர்வாகம், காரணம் இவர்கள் தான். இவர்கள் பாவம் கேட்கிறார்கள். பெரும்பாவமே அவர்கள் தான், அவர்களுக்கு எப்படி மன்னிப்பு கிடைக்கும். இன்னும் பாருங்கள், இவர்கள் தான் எங்களை பாதுகாப்பார்கள் என்று நம்புகிறார்கள். இஸ்லாமியர்களுக்கு தி.மு. தான் பாதுகாப்பு. ஆமாம், சிறையில் வைத்து பல ஆண்டுகளாக பாதுகாப்பது எவ்வளவு பெரிய பாதுகாப்பு? மீண்டும் இதே இஸ்லாமியர்களிடம் அவர்கள் ஓட்டு கேட்பார்கள். இந்த முறையும் அதே பொய்யை சொல்லி ஓட்டு கேட்பார்கள்[5]. நீங்கள் அவவர்களை விடுதலை செய்யுங்கள், நாம் தமிழர் கட்சியும் உங்களுக்கு வாக்களிக்கும்,என்று அந்த ஆர்பாட்டத்தில் சீமான் பேசினார்[6].

சீமான் பேசிற்கு ஊடகங்கள் இப்பொழுது அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது: சீமான் பேசும் பேச்சுகளில் பெரும்பாலாக லாஜிக், விசயம் இருக்கும் என்பது போல இருக்கும். இருப்பினும், சில நேரங்களில் தாராளமாக தமாஷான பேச்சு போல சிலவற்றை எடுத்து விடுவார். அந்த பேச்சுகளில் உள்நோக்கம் இருக்கிறதா-இல்லையா என்பது ஆராய வேண்டிய நிலையில் தான் உளளது. போதாகுறைக்கு யூ-டியூபாக மாறும் அல்லது சுற்றுக்கு வரும் பேச்சுகளில் உண்மைத் தன்மை 30-50% கூட இருப்பதில்லை. ஒரு சிறிய விசயம் கிடைத்தால், அதை ஊதி பெரிதாக்கி, தமக்குத் தான் எல்லாம் தெரியும் என்ற ரீதியில், வீடியோக்கள் தயாரித்து சுற்றில் விடுகின்றனர். பொழுது போக வேண்டும் என்று ஆயிரக்கணக்கில் மக்கள் பார்க்கின்றனர். அவர்களுக்கு உண்மை, உண்மைத் தன்மை, அதாரம் பற்றியெல்லாம் கவலையில்லை. சில நேரங்களில் அரசியல், வெறுப்புப் பேச்சு, காழ்ப்பு-வெறுப்பு போன்றவை சேரும் பொழுது விப்ரீதமாகிறது. எல்லா பேச்சுகளையும், எல்லோரும், ஒரே மாதிரியாக எடுத்துக் கொள்வ்தில்லை முக்கியத்துவம் கொடுப்பதில்லை. சமூக ஊடக பதிவுகளை வைத்து செய்திகளைத் தயாரிப்பது என்பது இக்கால செய்தி தயாரிப்பு முறையாக உள்ளது. அவ்விதத்தில், சீமான் பேசிற்கு ஊடகங்கள் இப்பொழுது அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளன என்று தெரிகிறது.

இஸ்லாமையும், கிறிஸ்துவத்தையும் ஏற்றுக் கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள்  –ஜவாஹிருல்லா கண்டனம்: இந்த ஆர்ப்பட்டத்தில்,இஸ்லாமையும், கிறிஸ்துவத்தையும் ஏற்றுக் கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் என்று. ஆனால் அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது.” என்று சீமான் பேசியது தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையானது. .. பொதுச் செயலாளர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்ததோடு சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், “இந்த கயமைத்தனமான பேச்சு வன்மையான கண்டனத்துக்கு உரியது. தன் கட்சிக்கு வாக்களிக்காத காரணத்தினாலேயே கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் சாத்தானின் பிள்ளைகள் என்று வர்ணிப்பது அநாகரிகமானது, அருவருப்பானது, என்பதோடு அரசியல் நேர்மையற்ற செயலுமாகும். இதை வன்மையாக கண்டிக்கிறோம்,” என்று ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்தார்.

© வேதபிரகாஷ்

04-08-2023


[1] தமிழ்.ஒன்.இந்தியா, காலை காட்டி சொன்னஅந்தவார்த்தை.. சீமான் அரசியலுக்கு என்னாச்சு? கொதித்து போன இஸ்லாமியர்கள்! திடுக், By Shyamsundar I Published: Thursday, August 3, 2023, 14:20 [IST]

[2] https://tamil.oneindia.com/news/chennai/why-naam-tamilar-party-seeman-attack-muslims-and-christians-all-of-a-sudden-526569.html

[3] தமிழ்.ஹிந்துஸ்தான்.டைம்ஸ், Seeman Speech: ‘இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் சாத்தானின் குழந்தைகள்சீமான் பகீர் பேச்சு!  , Stalin Navaneethakrishnan • HT Tamil, Jul 31, 2023 09:21 AM IST

[4] https://tamil.hindustantimes.com/tamilnadu/ntk-chief-coordinator-seeman-talks-about-muslims-and-christians-131690773683412.html

[5] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், சாத்தானின் குழந்தைகள் என பேசியது ஏன்? சீமான் விளக்கம், Written by WebDesk, August 3, 2023 01:18 IST.

[6] https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-electricity-employees-have-done-electricity-calculations-without-going-to-homes-734464/

கொலை-கொள்ளைகளில் பெண்கள் ஈடுபடுவது அதிகரிப்பு!

ஜனவரி 13, 2010

கொலை-கொள்ளைகளில் பெண்கள் ஈடுபடுவது அதிகரிப்பு!

ஆணுக்குப் பெண் நிகர்தான் என்று பெண்கள் மெய்ப்பித்து வருகின்றனர்.

3 பெண்கள் மீது கொலை வழக்கு

பதிவு செய்த நாள் 1/12/2010 12:27:40 AM

Swine Flu

சென்னை : அசோக் நகரில் குடிபோதையில் பெண்களிடம் தகராறு செய்த விடுதலை சிறுத்தைகள் வட்ட செயலாளர் கீழே விழுந்து இறந்தார். பெண்கள் தள்ளிவிட்டதால் அவர் பலியானதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து 3 பெண்களை கைது செய்தனர்.
அசோக்நகர் நல்லாங்குப்பம் 57வது தெரு 1வது பிளாக்கில் வசிப்பவர் ஆதி (எ) ஆதிமூர்த்தி (23), விடுதலை சிறுத்தைகள் கட்சி வட்ட செயலாளர். பெயிண்டராக பணி புரிகிறார். இவருக்கு மனைவி, 3 மாத குழந்தை உள்ளனர். குடிப்பழக்கம் உண்டு. நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு குடித்து விட்டு, கே.கே.நகர் ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு பின்புறம் உள்ள அம்பேத்கர் குடிசை பகுதிக்கு சென்றுள்ளார்.
அங்கு வீட்டுக்கு வெளியே படுத்திருந்த வனிதா என்ற பெண்ணிடம் ஆதிமூர்த்தி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் சத்தம் போட்டதால், அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் ஏராளமான பெண்கள் கூடி விட்டனர். அவர்கள், ஆதிமூர்த்தியை தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. அருகில் இருந்த சைக்கிள் மற்றும் பாறாங்கல் மீது ஆதிமூர்த்தி விழுந்தார். தலையில் அடிபட்டு அதே இடத்தில் இறந்தார்.
உடனே, அங்கிருந்த பெண்கள் இது பற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உதவி கமிஷனர் பரந்தாமன், இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வனிதா, ராதா, பொட்டுக்கண்ணி ஆகிய 3 பெண்களும், ‘‘ஆதிமூர்த்தி அடிக்கடி குடித்து விட்டு வந்து எங்கள் பகுதியை சேர்ந்த பெண்களிடம் தகராறு செய்வார். நாங்களும் பொறுத்து பார்த்தோம். ஆனால் அவர் திருந்தவில்லை. நள்ளிரவில் வந்து எங்களிடம் தவறாக நடக்க முயன்றார். அதனால் பெண்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து தள்ளி விட்டோம். அதில் அவர் கீழே விழுந்து விட்டார். போதையில் விழுந்து கிடப்பதாக நினைத்தோம். நீண்ட நேரமாக எழுந்திருக்காததால், போலீசுக்கு நாங்களே தகவல் தெரிவித்தோம்’’ என்று கூறியுள்ளனர். அதை தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையில் ஆதியின் உறவினர்கள் கூறும்போது, ‘‘அம்பேத்கர் குடிசை பகுதியில் கஞ்சா வியாபாரம் நடக்கிறது. அதை கண்டுபிடித்து போலீசில் சொல்வதற்காக சென்றவரைத்தான் அடித்து கொன்று விட்டனர்’’ என்று போலீசாரிடம் தெரிவித்தனர். இதுகுறித்து, எம்ஜிஆர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி
உள்ளது.


இதே செய்தி பலவாறு வெளியிடப்பட்டுள்ளன:

உல்லாச வெறி-வாலிபர் கொலை: 3 பெண்கள் கைது

திங்கள்கிழமை, ஜனவரி 11, 2010, 15:19[IST]

http://thatstamil.oneindia.in/news/2010/01/11/three-women-arrested-murdering-yout.html

குடிபோதையில் உல்லாசத்துக்கு அழைத்த வாலிபரை அடித்துக்கொலை செய்ததாக 3 பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.  சென்னை நல்லாங்குப்பம் பகுதியை சேர்ந்த பெயிண்டர் ஆதி (23). மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து பாதியில் நிறுத்தி விட்டார். பின்னர் 131வது வட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளராக பணியாற்றி வந்தார்.  இவர் போரூரைச் நந்தினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். நந்தினி பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்றிருந்தார்.

வீட்டில் தனியாக தங்கி இருந்த ஆதிக்கும் வனிதா என்ற பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு 11 மணிக்கு ஆதி குடிபோதையில் வனிதாவை தேடி எம்.ஜி.ஆர்.நகர் அம்பேத்கார் குடிசை பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றார்.  வீட்டில் தூங்கி கொண்டிருந்த வனிதாவை உல்லாசத்திற்கு அழைத்தார். வனிதா மறுத்ததால் பலவந்தபடுத்தியுள்ளார். இதனால் வனிதா கூச்சல் போடவே சத்தம் கேட்டு அருகில் இருந்த வனிதாவின் உறவுக்கார பெண்கள் ஓடி வந்தனர்.  ஆதியை வெளியே போகுமாறு கண்டித்தனர். ஆனால் போதையில் இருந்த ஆதி, வனிதா மீது ஆவேசமாக பாயவே, அவர்கள் ஒரு கயிற்றை ஆதி மீது வீசி, கட்டி இழுத்துள்ளனர்.  மீண்டும் திமிறிக்கொண்டு பாய முயற்சித்த ஆதியை பெண்கள் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர்.

பின் மண்டையில் பலத்த காயமடைந்த ஆதி அதே இடத்தில் சுருண்டு விழுந்து இறந்தார். அவர் கொலை செய்யப்பட்டதை உணர்ந்த வனிதா, உறவு பெண்கள் ராதா, பொட்டுகனி ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர். கொலையை மறைக்க முடிவு செய்த அவர்கள், ஆதியின் உடலை வெளியில் தூக்கி வந்து போட்டு இரும்பு ராடு ஒன்றின் மீது தவறி விழுந்து இறந்ததுபோல உடலை சாய்த்து வைத்தனர். பின்னர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் அசோக் நகர் போலீசார் வந்து விசாரித்ததில் ஆதி கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.  இதையடுத்து வனிதா, ராதா, பொட்டுக்கனி ஆகிய 3 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை கணவர் கொல்லப்பட்ட தகவல் அறிந்து கைக் குழந்தையுடன் ஓடி வந்த நந்தினி, குடிசைப் பகுதியில் கஞ்சா விற்றதை கண்டித்ததால் தான் என் கணவர் கொல்லப்பட்டார் என குற்றம் சாட்டினார்.

சென்னையில் காமுகன் ஒருவன் பெண்களால் அடித்துக்கொலை

நியூஇந்தியாநியூஸ் – ‎11 ஜன., 2010‎
குடிபோதையில் அட்டூழியம் செய்த இளைஞர் ஒருவர் பெண்களால் அடித்தே கொல்லப்பட்ட சம்பவம் சென்னை எம்.ஜி.ஆர் நகரில் நடந்துள்ளது. சென்னை நல்லாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஆதி

கஞ்சா பிரச்சினையா? கள்ளக்காதல் பிரச்சினையா? விடுதலை

தினத் தந்தி – ‎11 ஜன., 2010‎
சென்னை எம்.ஜி.ஆர். நகரில், விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரை அடித்து கொன்றதாக 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர். கஞ்சா விற்பனையால் ஏற்பட்ட பிரச்சினையில் கொலை நடந்ததா?

சமீபத்தில், கொலை-கொள்ளை-ஏமாற்றுவேலை-என எல்லாகுற்றங்களிலும் அதிகமாகப் பெண்கள் ஈடுபட்டிருப்பது ஆச்சரியமாக உள்ளது.

அதிலும், செக்ஸ் குற்றங்களில் அவர்களது கற்பனைக்கெட்டாத வரையில் உள்ள பங்குகள் மனங்களை உரைய வைக்கின்றன, வருத்தப்படச் செய்கின்றன.

குறிப்பாக தமிழகத்தில் அத்தகையவை நடக்கின்றது என்பது ஆய்வுக்குறியது.

கருணாநிதியைப் பின்பற்றிய தமிழச்சி!

ஜனவரி 9, 2010

தனக்குத் தானே பிரசவம் பார்த்த ‘எய்ட்ஸ்’ பெண் : மதுரை அரசு மருத்துவமனையில் அவலம்
http://www.dinamalar.com/district_main.asp?ncat=Madurai

மதுரை : மதுரை அரசு மருத்துவமனை ஆப்பரேஷன் தியேட்டரில், எச்.ஐ.வி., பாதித்த பெண்ணுக்கு, பிரசவம் பார்க்க டாக்டர்கள், நர்சுகள் இல்லாததால், தனக்குத் தானே பிரசவம் பார்த்து, ஆண் குழந்தை பெற்றெடுத்தார் அந்த பெண். இதுகுறித்து விசாரிக்க டீன் சிவக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் முத்து, விஜயா (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது) தம்பதி. எய்ட்ஸ் நோயாளிகளான இவர்கள், மதுரையில் கட்டட தொழிலாளர்களாக உள்ளனர். பெண் குழந்தை உள்ள நிலையில், விஜயா மீண்டும் கர்ப்பமானார். அரசு மருத்துவமனையில் அவ்வப்போது பரிசோதனை செய்து கொண்டார்.

ஜன.,5 இரவு 1 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. ஆப்பரேஷன் தியேட்டருக்கு கொண்டு செ ல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள், நர்சுகள் இல்லாத நிலையில், ஆண் குழந்தை வெளியே வர ஆரம்பித்தது. விஜயாவின் அலறல் சத்தம் கேட்டு யாரும் வரவில்லை. ஆப்பரேஷன் டேபிளில் இருந்து கீழே விழுந்துவிடக்கூடாது என்பதற்காக குழந்தையை தானே வெளியே எடுத்தார். பதினைந்து நிமிடங்களுக்கு பின், அங்கு வந்த மருத்துவ மாணவி, தொப்புள் கொடியை “கட்’ செய்துவிட்டு, மருந்து கொடுத்துவிட்டு சென்றார்.

“ஆண் குழந்தை பிறந்துள்ளதால், 1500 ரூபாய் தரவேண்டும்’ என்று பெண் ஊழியர் லஞ்சம் கேட்டதற்கு, விஜயா தர மறுத்தார். இதனால், தொற்றுநோயாளிகளுக்கென உள்ள பிரத்யேக அறையில், அவருக்கு படுக்கை ஒதுக்கப்படவில்லை. ஜன.,6 மதியம் 12 மணி முதல் நேற்று முன் தினம் வரை மகப்பேறு வராண்டாவில், கொட்டும் பனியில் பச்சிளம் குழந்தையுடன் விஜயா தங்கினார்.

நமது நிருபரிடம் அவர் கூறியதாவது : மருத்துவமனையில் பணம் கொடுத்தால்தான் எல்லா வேலையும் நடக்கிறது. “உனக்கெல்லாம் எதற்கு குழந்தை. “பெட்’ கொடுக்க முடியாது. வெளியேறு’ என, என்னை ஊழியர்கள் துரத்தினர். இங்கு பிறந்ததற்கு ரிக்கார்டு வேண்டும் என்பதற்காக, வெளியே செல்லாமல் வராண்டாவில் தங்கினேன். எந்த ஆவணமும் இன்றி வெளியேறினால், “திருட்டுக் குழந்தை’ என்று சொல்லிவிடுவர், என பயந்துதான் அங்கேயே இருந்தேன். ஆனால், நான் தலைமறைவாகி விட்டதாக, வார்டு பதிவேட்டில் குறித்துள்ளனர், என்றார்.

எய்ட்ஸ் நோயாளிகளுக்கான மதுரை நெட்வொர்க் ஆப் பாசிட்டிவ் பீப்பிள் வெல்ப்பேர் சொஸைட்டி அமைப்பு தலைவர் பாபு கூறியதாவது :  கடந்த 2006ல் எனது மனைவிக்கும் இதே நிலைதான் ஏற்பட்டது. இன்று வரை நிலைமை மாறவில்லை. காயம்பட்ட மருத்துவமனை ஊழியரைக்கூட ஸ்டிரெச்சரில் அழைத்துச் செல்ல, சக பணியாளர்கள் லஞ்சம் கேட்கும் நிலையில் மருத்துவமனை உள்ளது. எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, அரசு அதிக நிதி ஒதுக்கியுள்ள நிலையில், விஜயாவுக்கு பிரசவம் பார்க்க டாக்டர்கள், நர்சுகள் தயங்கியுள்ளனர். இப்பிரச்னை குறித்து மதியம் நிலைய மருத்துவ அதிகாரியிடம் புகார் கூறச்சென்றோம். ஆனால், அவர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள வீட்டில் தங்காமல், வெளியே தங்கியிருந்ததால் புகார் செய்ய முடியவில்லை. டீனும் அறையில் இல்லை.  எய்ட்ஸ் நோயாளிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறார்கள். இப்பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால், மருத்துவமனை முன்பு எய்ட்ஸ் நோயாளிகள் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம், என்றார்.
இதுகுறித்து டீன் சிவக்குமார் கவனத்திற்கு நமது நிருபர் கொண்டு சென்றார். உடனடியாக விஜயாவிடம் விசாரித்த அவர், “”சம்பந்தப்பட்ட டாக்டர்கள், நர்சுகளிடம் இன்று விசாரணை நடத்தப்படும்”, என்றார்.
மருத்துவமனையில் பிறப்பு முதல் இறப்பு வரை லஞ்சம் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது நிர்வாகம் கடும் நடவடிக்கைகள் எடுக்காதவரை, இதுபோன்ற மனிதாபிமானற்ற செயல்கள் தொடரும் என்பது உண்மை.

பெண் குழந்தை பெற்று, ஆண் குழந்தையை திருடிய தமிழச்சி!

திசெம்பர் 25, 2009

குற்றம் :ஆண் குழந்தை திருடிய இளம்பெண் சிக்கினார்

பதிவு செய்த நாள் 12/26/2009 12:31:20 AM

பெண் குழந்தை பெற்ற தாய் ஒருவர் அந்த குழந்தையை போட்டுவிட்டு, இன்னொரு பெண் பெற்றெடுத்த ஆண் குழந்தையை திருடிக்கொண்டு தப்பி ஓட முயன்றபோது பிடிபட்டார்!

Swine Fluசென்னை : மருத்துவமனையில் ஆண் குழந்தையை திருட முயன்ற பெண் பிடிபட்டார்.ஆலந்தூரை சேர்ந்தவர் சங்கர். அவர் மனைவி தங்கம் (35). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. மீண்டும் கர்ப்பமான தங்கம், கடந்த 17ம் தேதி எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அன்றே அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
இவரது பக்கத்து பெட்டில் திருவள்ளூரை சேர்ந்த பாபு என்பவரின் மனைவி அம்மு (30) இருந்தார். இவருக்கு 18ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.  நேற்று அதிகாலை 5 மணிக்கு தங்கம் குழந்தையுடன் வெளியே செல்ல முயன்றார். அப்போது எதிரில் வந்த நர்ஸ், ‘இந்த நேரத்தில் எங்கே போகிறீர்கள்’ என்று கேட்டார். வீட்டுக்கு போவதாக தங்கம் கூறியதும், டாக்டரினம் கூறினீர்களா? டிஸ்சார்ஸ் பாஸ் வாங்க விட்டீர்களா என நர்ஸ் அடுக்கடுக்காக கேள்வி கேட்டார். இதற்கு பதில்கூற திணறிய தங்கம், திடீரென ஓட தொடங்கினார்.
அப்போது வார்டில் இருந்த அம்மு, தனது குழந்தையை காணவில்லை என்று அலறவே, நர்ஸ் சுதாரித்துக் கொண்டு கூச்சலிட்டார். மருத்துவமனை ஊழியர்கள் விரட்டிச்சென்று தங்கத்தை பிடித்து எழும்பூர் போலீசில் ஒப்படைத்தனர்.

ஆண்குழந்தை வேண்டுமென்றதால் திருடினேன்! விசாரணையில், ‘எனக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. 3வதும் பெண்ணாக பிறந்துவிட்டது. ஆண் குழந்தை வேண்டும் என்பதால், அம்முவின் குழந்தையை எடுத்துக்கொண்டு சென்றேன்’ என்று கூறியுள்ளார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர்.

என்னத்தை விசாரித்து என்ன செய்யபோகிறார்கள்? ஆண்குழந்தை வேண்டுமென்றால், ஆண்குழந்தையைத் திருடிவிட்டாள்.

அதேபோலத்தான், தமிழச்சிகள் எனக்கு வேண்டிய ஆண்மகன்கள் வேண்டும் எனும்போது திருடி இருக்கிறார்கள்! அவர்கள் திருமணமானவர்கள் என்றதுகூட கவலை இல்லை! ஏனெனில், தாமும் திருமணம் ஆனவர்கள்தாம்!

என்னே சமத்துவம்! சமத்துவ தாம்பத்தியம்!! இதுதான் திராவிடம் என்பதா?

ஏன் பகுத்தறிவு பெண்களைத் திருத்தவில்லை? புராணக் கதைகளை கிண்டல் செய்தார்கள், செய்கிறார்கள். பகுத்தறிவு என்றார்கள்.

மூட நம்பிக்கைகளை விரட்டுவோம் என்றார்கள்!

இறகு எதற்கு இத்தகைய குற்றங்கள் நடக்கின்றன?

மாறாக, இவர்கள் தங்களது வாழ்க்கையில் மற்றவர்கள் பின்பற்றுவது போல நடந்தார்களா என்றால் அடுவும் இல்லை.

தலைவர்களுக்கு எல்லாம் ஒன்றிற்கு மேல் மனைவிகள், துணைவிகள், இத்யாதி வகைகள்.

அதில் அங்கீகரிக்கப்பட்டது, படாத வகைகள்.

ரகசியமாக உள்ளது.

சரி, பெண் தலைவிகள் – அவர்களும் சளைத்தவர்கள் இல்லை!

ஒன்றிற்கு மேல் மட்டுமல்ல! உள்ளூர், வெளியூர் என பல ரக கணவர்கள்.

விவாகரத்தெல்லாம் பகுத்தறிவாகிவிட்டது!

இல்லரமோ புகுத்தறிவாகிவிட்டது. ஐந்து / பத்தாண்டுகளுக்கு முன்பு ஒரு கணவன், இப்பொழுது ஒரு கணவன்!

முடிந்தால் அடுத்தவள் கணவனையேத் திருடுகிறாள்!

அதனால் நியாயம், தர்மம் இவற்றில் சிறிதுகூட பயம் இல்லாமல் போய்விட்டது.

இதோ புறப்பட்டு விட்டாள், புரட்சி தமிழச்சி!

நான் குழந்தைகளையேத் திருடுவேன் என்று!

பெற்றெடுத்த மற்றவளும் பெண்தானே என்று அந்த தமிழச்சி நினைக்கவில்லையா?

இத்தனைக்கால பகுத்தறிவு ஆட்சி அவளுக்குப் பாடம் புகட்டவில்லையா?

இல்லை, நானும் அறிஞர்கள், கலைஞர்கள், கவிஞர்கள் பாதையை பின்ப்ற்றுகிறேன் என்று கிளம்பி விட்டார்களா?

வாழ்க தமிழ்! வாழ்க தமிழச்சிகள்!! வாழ்க தமிழ் திருடிகள்!!!