Posts Tagged ‘உதயநிதி’

ஜாபர் சாதிக் போதை மருந்து கடத்தலில் மாட்டிக் கொண்டது – 15-02-2924 முதல் 09-03-2024  வரை எங்கிருந்தான்?இந்தியா போதை மருந்து கூட்டங்களினின்று விடுபடுமா? (5)

மார்ச் 11, 2024

ஜாபர் சாதிக் போதை மருந்து கடத்தலில் மாட்டிக் கொண்டது – 15-02-2924 முதல் 09-03-2024  வரை எங்கிருந்தான்? இந்தியா போதை மருந்து கூட்டங்களினின்று விடுபடுமா? (5)

15-02-2924 [வியாழக்கிழமை] முதல் 09-03-2024 [சனிக்கிழமை] வரை எங்கிருந்தான்?: சாதாரணமாக குற்றவாளிகளுக்கு ஒரு மணி நேரம் அவகாசம் கொடுத்தாலே அவர்கள் தமக்கு எதிராக உள்ள அத்தனை ஆதாரங்களையும் அழித்துவிட்டு தப்பித்துக் கொள்ளத் தான் மிக வேகமாக செயல்படுவர் என்பது பொதுவாக குற்றவியல் வல்லுநர்கள் தெரிந்த விஷயமாக எடுத்துக் காட்டுகின்றனர்ர். அந்நிலையில் இப்பொழுது இந்தியாவில் மின்னணு யுகத்தில் எல்லா உபகரணங்களும் வைத்துள்ள நிலையில். இத்தனை நாட்கள் இவன் ரகசியமாக இருந்துள்ளாரன் என்பது திகைப்பாகத்தான் இருக்கிறது. ஆகவே அந்த குறிப்பிட்ட இடங்களில் எல்லாமே இவனுக்கு உதவியாளர்கள் அல்லது அவ்வாறு ரகசியமாக தங்க வைத்து அனுப்பி வைக்கக்கூடிய நண்பர்கள் இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. அதனால் தான் எத்தனை நாட்கள் அவன் தாராளமாக தங்கி இருந்து, தமிழகத்திலிருந்து ஜெய்பூர் வரைக்கும் சென்று இருக்கிறான். பிறகு தான் ஏதோ தகவல் கிடைத்த பிறகு, அவனை அங்கு சென்று பிடித்துள்ளனர்.

என்.சி.பி. அதிகாரி  கொடுத்த விவரங்கள்: இது குறித்து ஞானேஸ்வர்சிங் என்.சி.பி. அதிகாரி  நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு[1] : போதைப்பொருள் கடத்தலை தடுக்க முழு வீச்சில் நடவடிக்கை எடுத்துள்ளோம்[2]. திருவனந்தபுரம், மும்பை, ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் பதுங்கி இருந்துள்ளார். பங்களா ஒன்றில் பதுங்கியிருந்த ஜாபர் சாதிக்கை டில்லியில் கைது செய்தோம். சர்வதேச போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். டில்லி மற்றும் தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் மலேசியாவுக்கு ஜாபர் சாதிக் கடத்தி வந்தார். சினிமா, கட்டுமானத்துறையில் முதலீடு: போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு சம்பாதித்த பணத்தை சினிமா, ரியல் எஸ்டேட், கட்டுமானத்துறையில் ஜாபர் சாதிக் முதலீடு செய்துள்ளார். போதைப் பொருள் சம்பந்தப்பட்ட பணம் எங்கெங்கு முதலீடு செய்யப்பட்டதோ அது குறித்து விசாரிக்கப்படும். 3,500 கிலோ வரையிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஜாபர் சாதிக்கிற்கு முக்கிய பிரமுகர்கள் பலருடன் தொடர்பு உள்ளது. உணவுப்பொருள் ஏற்றுமதி என்ற பெயரில் போதைப்பொருட்களை பல்வேறு நாடுகளுக்கு ஜாபர் சாதிக் கடத்தி உள்ளார்.

தொடர்புடைய அரசியல்வாதிகள் யார்?: அரசியல் கட்சிகளுக்கு போதைப்பொருட்கள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தை வழங்கி உள்ளார். மங்கை என்ற பெயரில் தமிழ் திரைப்படம் ஒன்றை ஜாபர் சாதிக் தயாரித்துள்ளார். சென்னையில் ஓட்டல் ஒன்றை ஆரம்பித்துள்ளார். தமிழகத்தில் சில திரைப்பிரபலங்கள் உடன் தொடர்பு இருப்பதாக ஜாபர் சாதிக் வாக்குமூலம் அளித்துள்ளார். விசாரணைக்குப்பின் ஜாபருடன் தொடர்புடையவர்கள் பெயர்களை வெளியிடுவோம். கடந்த 25ம் தேதி கைது செய்யப்பட்ட போதை கடத்தல் நபர்கள் 3 பேர் கொடுத்த தகவலின் படி ஜாபர் சாதிக் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளில் 3,500 கிலோ சூடோபெட்ரின் போதைப்பொருட்களை ஜாபர் சாதிக் கடத்தியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

ஜாபர் சாதிக் நிரபராதி என்று வாதிடும் அவனது வக்கீல்: இந்நிலையில், ஜாபர் சாதிக்கின் வழக்கறிஞர்கள் தந்தி டிவி-க்கு அளித்த பேட்டியில், போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் நிரபராதி என்றும், அவரது குடும்பத்தினர் சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்[3]. ஜாபர் சாதிக்கின் வழக்கறிஞர் டி.ஆர். பிரபாகரன் தந்தி டிவி-க்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது[4]: “15.02.2024 அன்று கிட்டத்தட்ட 50 கிலோ சூடோபெட்ரைன் என்கிற போதை பொருளை டெல்லி என்.சி.பி பறிமுதல் செய்திருக்கிறார்கள். அது தொடர்பாக 3 பேர்களை கைது செய்து இருக்கிறார்கள். அந்த 3 பேரிடம் வாக்குமூலம் பெற்று அதன் அடிப்படையில் இன்று (09.03.2024) ஜாபர் சாதிக்கை கைது செய்திருக்கிறார்கள்[5]. அவரை பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினார்கள்[6]. அப்படி ஆஜர்படுத்தும் போது நாங்கள் அவருடைய வழக்கறிஞர்களாக நீதிபதியிடம் இந்த 50 கிலோ சூடோபெட்ரைன் என்.சி.பி சட்டத்தில் வரவில்லை, அது போதைப் பொருள் இல்லை என்று கூறி அவருக்கு உடனே ஜாமீன் கொடுக்க வேண்டும் என்று வாதிட்டோம். இதற்கு நீதிபதி, என்.சி.பி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார். இந்த வழக்கில் கைதானவர்களிடம் பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் கைது செய்திருக்கிறார்கள். ஜாபர் சாதிக்கிடம் இருந்து எந்த ஒரு போதைப் பொருளும் பறிமுதல் செய்யப்படவில்லை என்பதை நாங்கள் அழுத்தமாக கூறினோம்.”

என்.சி.பி 15 நாள் காவல் கேட்டதற்கு  7 நாட்கள் கொடுக்கப் பட்டது:என்.சி.பி நீதிபதி இல்லாததால், இந்த வாழ்க்கை விசாரித்த நீதிபதி பொறுப்பு நீதிபதி என்பதால், அவரை நாங்கள் இப்போதைக்கு நீதிமன்ற காவலில் வைக்கிறோம். நீங்கள் உங்களுடைய எந்த வாதமாக இருந்தாலும் ஜாமீன் கோரும்போது வாதிடுங்கள். அதற்குப் பிறகு நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் கொடுக்கலாமா வேண்டாமா என்று பரிசீலனை செய்யும் என்று கூறினார். அது இல்லாமல் என்.சி.பி தரப்பில் 15 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டார்கள். நாங்கள் அனுமதி அளிக்கக் கூடாது என்று கூறினோம். அவரிடம் விசாரிப்பதற்கு எதுவுமே இல்லை, அவர் நிரபராதி என்று நாங்கள் கூறினோம். அப்போது நீதிபதி, நீங்கள் ஏழு நாள் காவல் வைத்துக் கொள்ளலாம் என்று என்.சி.பி போலீசிடம் கூறி உத்தரவிட்டார். என்.சி.பி அதிகாரிகள், ஜாபர் சாதிக்கின் அடிப்படை உரிமைகளை மீறி இருக்கிறார்கள். அவருடைய குடும்பத்தினர் வயதான பாட்டி, அவருடைய மனைவி, அவருடைய 2 மைனர் மகள்கள், ஒரு மகன் என அனைவரையும் சட்டவிரோதமாக பிடித்து வைத்திருக்கிறார்கள்,” என்று ஜாபர் சாதிக்கின் வழக்கறிஞர் டி.ஆர். பிரபாகர் கூறினார்.

புதிர்களும், கேள்விகளும்: சாதாரணமான, இந்தியர்களுக்கு, இத்தனை புதிர்களும், மர்மங்களும் வேண்டாம். சமூகத்தை சீரழிக்கும் போதை மருந்து வேண்டாம். அத்தகைய சமூக தீவிரவாதிகளும் தேவையில்லை:

  1. தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக் கைது – போதைப்பொருள் கடத்தல் வழக்கில் நடவடிக்கை, விவரம் அறிவிக்கப் படவில்லை!
  2. ஜெய்பூரில் கைதான ஜாபர் சாதிக் டில்லி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப் பட்டு, பிறகு சென்னைக்குக் கொண்டு வர உறைப்படி, நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
  3. ஞானேஸ்வர்சிங் என்.சி.பி. அதிகாரி பங்களா ஒன்றில் பதுங்கியிருந்த ஜாபர் சாதிக்கை டில்லியில் கைது செய்தோம்.
  4. திருவனந்தபுரம், மும்பை, ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் பதுங்கி இருந்து, தில்லியில் மறைந்திருந்த போது கைது செய்யப் பட்டான்!
  5. தமிழகத்தின் சில திரைப்பிரபலங்கள் உடன் தொடர்பு இருப்பதாக ஜாபர் சாதிக் என்.சி.பியிடம் வாக்குமூலம் அளித்துள்ளாதாகத் தெரிகிறது.
  6. போதைப் பொருட் வருமானத்தை சினிமா, ஓட்டல், ரியல் எஸ்டேட், கட்டுமானத்துறைகளில் முதலீடு செய்யப் பட்டுள்ளது.
  7. இவனது போதை மருந்து வியாபாரம் தில்லி, தமிழகம் வழியாக மற்ற இடங்களுக்குப் பரவி, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, மலேசியா நாடுகளுக்குப் பாரவியது.
  8. திருவனந்தபுரம், மும்பை, புனே, ஹைதரபாத் சென்று ஜெய்ப்பூர் வந்துள்ளான். அங்கு பிடிக்கப் பட்டு, தில்லியில் கைது செய்யப்பட்டான்!
  9. ஆக, இவ்விடங்களில் இருந்த தொடர்புகள், எல்லாம் உதவி செய்தவர்கள் முதலியவர் மூலம் மேலும் விவரங்கள் வெளிவரலாம்.
  10. போதை சமுதாயத்தை சீரழிப்பது, நாசமாக்குவது, அத்தகையதை வியாபாரமாக்கிய இவர்கள்முறையாக தண்டிக்கப் படவேண்டும்.

© வேதபிரகாஷ்

10-03-2024


[1] தினமலர், ஜாபர் சாதிக் கைது ஆனது எப்படி?: அரசியல்வாதிகளும் சிக்குவர் ! என்.சி.பி. அதிகாரி பேட்டி, மாற்றம் செய்த நாள்: மார் 09,2024 15:57.

[2] https://m.dinamalar.com/detail.php?id=3571516

[3] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், வேறொரு குற்றவாளி வாக்குமூலம் அடிப்படையில் ஜாபர் சாதிக் கைது: வழக்கறிஞர்கள் பேட்டி, WebDesk, 10 Mar 2024 03:39 IST

[4] https://tamil.indianexpress.com/tamilnadu/jaffer-sadiq-advocate-speech-on-drug-case-and-argument-in-patiala-court-4320228

[5] தினத்தந்தி, ஜாபர் சாதிக் ஒரு நிரபராதி..கோர்ட்டில் நடந்தது இதுதான்..” – வழக்கறிஞர் சொன்ன தகவல், By தந்தி டிவி 9 மார்ச் 2024 10:15 PM.

[6] https://www.thanthitv.com/News/India/jabarsadhik-advocate-speech-thanthitv-251339?infinitescroll=1

ஒன்றிய அரசு என்று ஆரம்பித்து, அறநிலைத்துறை வழியாக நீட்டாக பயணித்து, துணைவேந்தர் பதிவுக்கு வந்து, கவர்னரை ராஜினாமா செய் என்று முடிந்துள்ள திமுக-ஆட்சி – விளம்பர அரசியலா, உண்மையான மோதலா? (2)

ஜனவரி 7, 2022

ஒன்றிய அரசு என்று ஆரம்பித்து, அறநிலைத்துறை வழியாக நீட்டாக பயணித்து, துணைவேந்தர் பதிவுக்கு வந்து, கவர்னரை ராஜினாமா செய் என்று முடிந்துள்ள திமுகஆட்சி விளம்பர அரசியலா, உண்மையான மோதலா? (2)

இடையிடையே சூர்யா வெற்றிகொண்டானின் நாகரிகமற்ற பேச்சுகள்: டிவி விவாதங்களில் கலந்து கொள்ளும் சூயா வெற்றிகொண்டான் என்பவரின் பேச்சை, வார்த்தைகளை, முகபாவங்களை கூர்ந்து கவனித்தால், அவரது அநாகரிகமான வார்த்தைப் பிரயோகங்களைக் கவனிக்கலாம். ஒருமையில் தலைவர்களைக் குறிப்பிடுவது முதலியன சரியாக இல்லை என்று சுருக்கமாக சொல்லலாம். ஜெயலலிதா பற்றி வரும் போது, அந்த பேச்சுகள் கொடுமையாக இருக்கின்றன.  ஏதோ அதிமுககாரர்கள் தான் அவரைக் கொன்று விட்டனர் என்பது போல பேசியது திகைப்பாக இருந்தது. ஜெயலலிதா என்ன புரட்சி செய்தார், ரஜினி ஆட்சி மாற்றம் வேண்டும் என்றா, ஆனால் கிட்னியைத்தான் மாற்றினார், என்றெல்லாம் பேசியுள்ளதை கவனிக்கலாம்.

1950-70கள் பேச்சுகள் 2022ல் தொடரகின்றனவா?: 1950-70களில்தமிழகத்தை பொறுத்த வரையில், ஈவேரா, அண்ணா, கருணாநிதி போன்ற திராவிடத்துவத் தலைவர்கள் மற்றும், அணுகுண்டு ஆறுமுகம், இரா. வெற்றிக் கொண்டான், தீப்பொறி சண்முகம் என்ற அடுத்த கட்ட மேடைப் பேச்சாளர்கள், 1950களிலிருந்தே, ஆபாசமாக, அருவருப்பாக, இரட்டை அர்த்தத்தில் செக்ஸ் தொணியில் பேசுவது வழக்கமாக, வாடிக்கையாக இருந்து வந்தது. இன்னொரு பக்கம் எதிர்கட்சித் தலைவர்களை கேவலமாகப் பேசுவர். அப்பொழுதெல்லாம், இரவு 10-11 மணிக்கு மேல், காலை 2 மணி வரை நடக்கும், இத்தகைய கூட்டங்களுக்கு பிரத்யேக கூட்டம் இருக்கும். நடுவில் ஜனரஞ்சகமாக இருக்க எஸ்.ஏ. அசோகன் போன்றோரையும்  பேச வைப்பது உண்டு. அவர் பேசிக் கொண்டே நடித்துக் காட்டுவார், நடித்துக் கொண்டே கிண்டலாக பேசுவார். இதற்ககென்றே தனிக் கூட்டம் வரும். உடன்பிறப்புகளே, ஒரு தாய் மக்களே, போன்றவற்றிற்கு சிறப்பான விளக்கமுமளிக்கப் படும். பிறகு திரைப்படம், திரைப்பட பாடல்கள், நாடகம், சினிமா என்று டிவி வந்தது. இவற்றிலும் அந்த ஆபாச-நகச்சுவை தொடர்ந்தது. பிறகு பட்டிப் பன்ற கலாச்சாரத்திலும் புகுந்தது.

1980-90களில் டிவி-பட்டிமன்றம்   மக்களின் நேரவிரயத்திற்கு அதிகமாகப் பயன் பட்டது. அந்நிலையில், பாப்பையா, லியோனி போன்றோர் பிரபலமாகினர். ஆபாச-கொக்கோக பேச்சுகளுக்கு லியோனி, தனி பிரான்ட் தான்! இப்பொழுது இரா வெற்றிகொண்டான் மகன் அதே பாதையைப் பின்பற்றுவது தெரிகிறது! 2016ல் “தீப்பொறி ஆறுமுகத்தை தாக்கி நாக்கை அறுக்க முயற்சித்தனர்…,” என்று ஸ்டாலின் நினைவு கூர்ந்ததை கவனிக்கலாம்[1]. நினைவஞ்சலியில் இது நினைவு வந்ததையும் கவனிக்கலாம்[2]. அதாவது அந்த அளவுக்கு தூண்டும் வகையில் கலவரத்தை உண்டாக்கும் வகையில் வன்மத்துடன் பேசுவர். இருப்பினும், பொதுமக்கள் இவர்களது குணாதசியங்களைக் கண்டு, ஒதுங்கி சென்று விடுவர்.

மறுபடியும் கோவில்கள் பிரச்சினைஸ்டாலின் தலைமையில் குழு: தமிழகத்தில் கோயில்களின் பராமரிப்பை செம்மைப்படுத்த, பக்தர்களின் வசதியை மேம்படுத்த முதல்வர் ஸ்டாலின் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது[3]. திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு அறநிலையத்துறையில் பல்வேறு முக்கிய நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது[4]. அதன்படி அனைத்து சாதியினரும் அர்ச்சகர், தமிழில் அர்ச்சனை, கோயில்களின் பராமரிப்பு செலவிற்கு நிதி ஒதுக்கீடு உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகள் செயல்படுத்தப்பட்டுள்ளது[5]. இந்த நிலையில் கோவில்களை மேம்படுத்த உயர்நிலை ஆலோசனைக் குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது[6]. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான 17 பேர்கள் கொண்ட இந்த குழுவின் துணை தலைவராக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நியமிக்கப்பட்டுள்ளார்[7].  மேலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அறநிலையத்துறை செயலாளர், இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் ஆகியோர் பதவி வழி அலுவல் சார் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர். அலுவல் சாரா உறுப்பினர்கள் அடங்கிய குழுவில், கீழ்கண்டவாறு இடம்பெற்றுள்ளனர்[8].

  1. ஸ்டாலின், முதலமைச்சர்.
  2. சேகர் பாபு, அறநிலையதுறை அமைச்சர்.
  3. அறநிலையத்துறை செயலாளர்,
  4. இந்துசமய அறநிலையத்துறை ஆணையர்
  5. தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்,
  6. ஶ்ரீமத் வராக மகாதேசிகன்,
  7. ஶ்ரீலஶ்ரீ அம்பலவாண தேசிய பரமாச்சாரிய சுவாமிகள்,
  8. சாந்தலிங்க மருதாசல அடிகளார்,
  9. நீதியரசர் டி.மதிவாணன் (ஓய்வு),
  10. சு.கி.சிவம்,
  11. கருமுத்து கண்ணன்,
  12. சத்தியவேல் முருகனார்ர்,
  13. இராமசுப்பிரமணியன்,
  14. தரணிபதி ராஜ்குமார்,
  15. மல்லிகார்ஜூன் சந்தான கிருஷ்ணன்,
  16. ஶ்ரீமதி சிவசங்கர்,
  17. தேச மங்கையர்க்கரசி

ஜெயா பாதையில் மோதலா, கூட்டணிக்கு பேரமா?: ஆளுநருக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை எடுத்த ஜெயலலிதா மீது 1995-ல் ஜெயலலிதா மீது ஊழல் வழக்கை பதிய ஆளுநர் அனுமதி அளித்து அதிர்ச்சியூட்டினார். இதற்கு ஜெயலலிதா தரப்பில் பதிலடி தொடர்ந்தது. அதில் ஒன்றாக, பல்கலைக்கழகங்களில் வேந்தரின் அதிகாரத்தை ஆளுநரிடமிருந்து மாநில முதல்வருக்கு மாற்றி சட்டத் திருத்தம் கொண்டுவந்தார் ஜெயலலிதா. அந்த சட்டத் திருத்தத்துக்கு ஆளுநரின் அனுமதி தேவைப்பட்டது. ஆனால், ஆளுநர் கையெழுத்திடவில்லை. 1996-இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, அந்த மசோதா மீது அன்றைய திமுக அரசு ஆர்வம் காட்டவில்லை[9]. அதனால், அந்த சட்ட மசோதா செயல்பாட்டுக்கு வரவில்லை. ஆனால், அதிரடியாக ஜெயலலிதா எடுத்த நடவடிக்கை பெரும் விவாதமானது. இன்று ஸ்டாலினும் ஜெயலலிதா எடுத்த அதேபோன்ற முடிவைதான் எடுத்துள்ளார்[10]. மார்ச் மாதத்தில் திமுக அரசு, சட்டத் திருத்தம் கொண்டு வந்தாலும், அதற்கு ஆளுநரின் ஒப்புதல் தேவை[11].  தன் அதிகாரங்களைக் குறைத்துக்கொள்ள ஆளுநரே ஒப்புக்கொள்வாரா, மத்திய அரசின் பிரதிநிதியாகச் செயல்படும் ஆளுநர் அதற்கு இணங்குவாரா  என்ற கேள்வியும் இதில் அடங்கியுள்ளது[12]. அப்படி ஆளுநர் ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டால்தான், அது செல்லுபடியாகும். எனவே, இந்த விவகாரத்தில் வெல்லப்போவது யார் என்பதை அறிய பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

07-01-2022


[1] தமிழ்.ஒன்.இந்தியா, தீப்பொறி ஆறுமுகத்தை தாக்கி நாக்கை அறுக்க முயற்சித்தனர்…. மு..ஸ்டாலின் நினைவஞ்சலி, By Mayura Akilan Published: Monday, November 7, 2016, 8:44 [IST]

[2] https://tamil.oneindia.com/news/tamilnadu/mk-stalin-pays-tribute-theepori-arumugam-266542.html?story=3

[3] தினகரன், தமிழகத்தில் கோவில்கள் பராமரிப்பை மேம்படுத்த முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 17 பேர் குழு அமைப்பு!!, 2022-01-07@ 08:56:19.

[4] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=733312

[5] புதியதலைமுறை, கோயில்களை மேம்படுத்த முதல்வர் ஸ்டாலின் தலைமையில் குழு அமைப்பு, தமிழ்நாடு, Jnivetha, Published : 07,Jan 2022 08:10 AM

[6] https://www.puthiyathalaimurai.com/newsview/126529/Committee-arranged-by-Chief-Minister-Stalin-to-improve-temples

[7] தினத்தந்தி, கோவில்களை மேம்படுத்த முதல்அமைச்சர் மு..ஸ்டாலின் தலைமையில் குழு அமைப்பு, பதிவு: ஜனவரி 07,  2022 09:45 AM

[8]  https://www.dailythanthi.com/News/State/2022/01/07094531/Committee-structure-headed-by-ChiefMinister-MK-Stalin.vpf

[9] ஏசியாநெட்நியூஸ், தமிழக ஆளுநருக்கு செக்.. ஜெயலலிதாவின் அஸ்திரத்தையே கையில் எடுக்கும் ஸ்டாலின்ஜெயிக்கப் போவது யார்..?,  Asianet Tamil Chennai, First Published Jan 6, 2022, 9:38 PM IST   Last Updated Jan 6, 2022, 9:44 PM IST

[10] https://tamil.asianetnews.com/politics/check-to-the-governor-of-tamil-nadu-stalin-who-will-take-jayalalithaa-s-ashes-in-his-hand-who-is-going-to-win–r5aq6i

[11] டாப்.டமிள்.நியூஸ்,  “அப்போ ஜெயலலிதா; இப்போ ஸ்டாலின்” – ஆளுநரின் அதிகாரத்தை பறிக்க மசோதா விரைவில்…!, By MATHIPRAKASH R Thu, 6 Jan 20222:40:48 PM.

[12] https://www.toptamilnews.com/politics/mk-stalin-about-new-bill-on-appointment-of-v-c-of/cid6181620.htm


ஒன்றிய அரசு என்று ஆரம்பித்து, அறநிலைத்துறை வழியாக நீட்டாக பயணித்து, துணைவேந்தர் பதிவுக்கு வந்து, கவர்னரை ராஜினாமா செய் என்று முடிந்துள்ள திமுக-ஆட்சி (1)

ஜனவரி 7, 2022

ஒன்றிய அரசு என்று ஆரம்பித்து, அறநிலைத்துறை வழியாக நீட்டாக பயணித்து, துணைவேந்தர் பதிவுக்கு வந்து, கவர்னரை ராஜினாமா செய் என்று முடிந்துள்ள திமுகஆட்சி (1)

இந்துவிரோத ஸ்டாலினை வைத்து கோவிலுக்கு விளம்பரம்: இந்து அறநிலையத் துறையை வைத்துக் கொண்டு, திமுக தினம்-தினம்யாரசியல் செய்து செய்திகளை வெளியிட்டு வருகிறது. முரசொலியிலேயே அத்தகைய விளம்படங்க்ளக் காணலாம். உதாரணத்திற்கு, இந்த படம் கொடுக்கப் படுகிறது.

  • மேகங்கள் சூழ ஆகாயம், வானளாவ இரண்டு கோபுரங்கள், நடுவில் ஸ்டாலின் உதயமாவது போல, ஏதோ ஆவி திடீரென்று தோன்றுவதுபோல, சிரித்த முக்த்துடன் ஸ்டாலின் உருவம் மங்கலாகக் காணப்படுகிறது.
  • இது காத்து-கருப்பு வேலையா, கருப்பர் கூட்டம் திட்டமா, கருப்பு-சிவப்பு கூட்டணி யுக்தியா…….இது கோவில்களை எப்படி. எவ்வாறு பாதிக்கும் என்று தெரியவில்லை.
  • ஒரு நாத்தினுக்கு, பெரியாரிஸ்டுக்கு, இந்துவிரோதிக்கே எந்த மாதிரியான ஆசை எல்லாம் வருகிறது?
  • பிறகு இல்லை என்றால், அவ்வாறு படம் போடாதே என்று ஆணை இட்டுயிருக்க வேண்டும்!
  • குங்குமம், விபூதி, சந்தனம் துடைத்தெறிந்தது போல, செய்தியிருக்க வேண்டும் ஆனால், செய்யவில்லையே?

இந்து அறநிலையத் துறையை வைத்து திமுக விளம்பரம்: இன்னொரு விளம்பரத்தில் கோவில் நிர்வாகிகளை வைத்து, ஒரு விளம்பரத்தை கொடுத்துள்ளது. அதில், கோவிலுக்கு தண்ணிர் குழாய் வைத்துத் தர கோரியுள்ளது.

 மக்கள் தான் தண்ணீர் குழாய் அமைத்துக் கொடுக்க வேண்டுமா?

  • இந்து அறநிலையத் துறை செய்யாதா?
  • அந்த எம்.எல்.ஏ கருணாநிதி தொகுதி நிதியிலிருந்து எடுத்து பணி செய்யலாமே?
  • பிறகு எதற்கு “ சில கஷ்டங்கள்” உள்ளன என்று கூற வேண்டும்?
  • கருணாநிதி, ஸ்டான் படங்கள் போடும் போது அவர்கள் தானம் கொடுக்கலாமே?
  • துர்கா ஸ்டாலினும் செய்யலாமே?

இவ்வாறு, விளம்பர அரசியல், இந்து அறநிலைத் துறையை பீடித்துள்ளது. சேகர்பாபு சொல்லி வைத்தால் போல, ஒருநாள் அது, அடுத்த நாள் இது, இன்னொரு நாள் எது என்ற “அது-இது-எது” பாணியில் வலம் வந்து கொண்டிருக்கிறார். ஊடகங்களும் செய்திகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கின்றன.

நீட் அரசியலும், மட்திய அரசு எதிர்ப்பும்கவர்னர் ராஜினாமா செய்ய வேண்டுமாம்: நீட்டை ஒழிப்போம் என்று தேர்தல் வாக்குருதி கொடுத்து அரசியலை ஆரம்பித்தது. ராஜன் கமிட்டி அமைத்து கருத்தைத் திணித்தது. ஆனால், நீட் நடந்தது, மருத்துவ அனுமதியும் முடிந்து விட்டது. அந்நிலையில், மறுபடியும் அரசியல் செய்ய, தீர்மானம் பெயரில் கலாட்டா செய்கிறது. இதுபற்றி பேசிய டி.ஆர்.பாலு, நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் சட்ட மசோதா நிலுவையில் இருப்பதற்கு ஆளுநர் தான் பொறுப்பு. எனவே, சட்டத்தை மதிக்காத ஆளுநர் உடனே பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்[1]. உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்திக்க 3வது முறையாக அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், உள்துறை அமைச்சகத்தில் மீண்டும் மனு அளிக்கப்பட்டுள்ளது என்றும் டி.ஆர்.பாலு கூறினார்[2]. எந்த மசோதாவும் கவர்னர் மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். அது சட்டம்-நீதிட்துறையில் அலசப் பட்டு, பிறகு பாராளுமன்றத்திற்கு வரும். விவாதித்து, முடிவெடிக்கப் படும்.  எல்லைகளில் சீனப்படைகளின் அட்டூழியம், எல்லைமீறல்கள், காஷ்மீரத்தில் தினம்-தினம் தீவிரவாதிகளின் கொட்டம், மும்பையில் தொற்று நுழைவுகள், வடகிழக்கு மாநிலங்களில் உள்நுழைவு பிரச்சினைகள், இவற்றையெல்லாம் விடுத்து, எங்களை பார்க்கவில்லை என்பது நிச்சயமாக இல்லாததை இருப்பது போல காட்டிக் கொள்ளும் பாவம் தான்.

கனிமொழிக்கு வாழ்த்து சொன்ன அமித் ஷா: கனிமொழி பிறந்த நாளுக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் ஆகியோர் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தனர் என்று தமிழ் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன[3]. திடீரென்று இதற்கு முக்கியத்துவம் கொடுப்பது விசித்திரம்மாக உள்ளது[4]. இருப்பினும், திராவிடத்துவ தலைவர்களுக்கு அத்தகைய நாகரிகம் உள்ளதா என்று தெரியவில்லை. இதே கனிமொழி மோடி, அமித் ஷா பற்றிப் பேசியுள்ளதை கவனித்தால் தெரியும். இப்பொழுதும், மோடி வருகைப் பற்றி ஒரு “தாக்குதல்-எதிர்ப்பு” ரீதியில் தான் பேச்சுகள் உள்ளன. கனிமொழிக்கு வாழ்த்து சொல்ல நேரம் இருக்கும் பொழுது, திமுகவினரை சந்திக்க நேரமில்லையா என்று கேட்பார்கள் போலிருக்கிறது.

மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு ஸ்டாலின் கண்டனம்: நீட் தேர்வுக்கு விலக்கு மசோதா பற்றி கடிதம் கொடுக்க மத்திய அமைச்சர் அமித்ஷா நேரம் கொடுக்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்[5]. அப்போது, நீட் தேர்வுக்கு விலக்கு மசோதா பற்றி கடிதம் கொடுக்க அனைத்து கட்சி எம்.பி.க்களை சந்திக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரம் கொடுக்கவில்லை. இது மக்களாட்சி தத்துவத்துக்கு எதிரானது. நீட் தேர்வு விலக்கு மசோதா ஆளுநரால் இன்னும் குடியரசுத் தலைவருக்கும் அனுப்பப்படவில்லை[6]. இதனால் இது குறித்து பேச  கடந்த பத்து நாட்களாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க தமிழக அனைத்து கட்சி எம்பிக்கள் முயற்சி செய்து வந்தனர்.   நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதா நிலுவையில் இருப்பதற்கு ஆளுநர் தான் பொறுப்பு.  இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கச் சென்றார்கள்.   மூன்று முறை அனுமதி கேட்டும் மூன்று முறை அனுமதி ரத்து செய்யப்பட்டிருக்கிறது.  நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரி உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி மீண்டும் மீண்டும் மனு அளிக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிப்பதற்கான தீர்மானம்: இவ்வாறு வருகிற மார்ச் மாதம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்[7]. மசோதா முலம் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என்றார்[8].  எதிர்க்கட்சிகள் ஆளும் சில மாநிலங்களில் ஆளுநர்களுக்கும் முதல்வர்களுக்கும் இடையே சமீபகாலமாக மோதல் ஏற்பட்டிருப்பதற்கு பல்கலைக்கழகங்கள் தொடர்பான விவகாரங்கள் முக்கியக் காரணமாக இருக்கின்றன[9]. மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், ஆளுநர் ஜகதீப் தங்கருக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நிலவிவருகிறது. மகாராஷ்டிராவிலும் கேரளாவிலும், அரசுக்கும் ஆளுநர்களுக்கும் இடையிலான மோதல் தற்போது தீவிரடைந்திருக்கிறது. மாநிலத்தில் பல்கலைக்கழகங்களுக்கு ஆளுநர்கள் வேந்தர்களாக இருப்பதால், துணைவேந்தர்கள் நியமனம் போன்றவை இவர்களின் மோதலுக்கு முக்கியக் காரணங்களாக இருக்கின்றன. மத்திய அரசின் பிரதிநிதிகளாக மாநில ஆளுநர்கள் நியமிக்கப்படும் நிலையில், எதிர்க்கட்சிகள் ஆளுகிற மாநிலங்களில் மாநில அரசுக்கும், ஆளுநர்களுக்கும் நல்ல புரிதல் இருக்கும் பட்சத்தில், இரு தரப்புக்கும் இடையே சுமுகமான உறவு நிலவும். அப்படியான சுமுகநிலையை ஒருசில மாநிலங்களில் பார்க்க முடியும். ஆனால், எதிர்க்கட்சிகள் ஆளுகிற மாநிலங்கள் பலவற்றில் இரு தரப்புக்கும் இடையே முட்டலும் மோதலும் இருப்பதையே பார்க்க முடிகிறது[10].

© வேதபிரகாஷ்

07-01-2022


[1] தினத்தந்தி, தமிழக கவர்னர் ராஜினாமா செய்ய வேண்டும்திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, ஜனவரி 05, 07:00 PM

[2] https://www.dailythanthi.com/amp/News/State/2022/01/05190004/Governor-of-Tamil-Nadu-should-resign.vpf

[3] தினமலர், கனிமொழி பிறந்த நாள்: அமித் ஷா வாழ்த்து, Added : ஜன 06, 2022  01:53; https://www.dinamalar.com/news_detail.asp?id=2930583

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=2930583

[5] தினமணி, நீட் தேர்வுக்கு விலக்கு மசோதா: அமித்ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம், By DIN  |   Published on : 06th January 2022 11:54 AM.

[6] https://www.dinamani.com/tamilnadu/2022/jan/06/exemption-bill-for-neet-exam-chief-minister-stalins-condemnation-of-amit-shah-3769086.html

[7] தினகரன், பல்கலைக்கழக துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிக்கும் தீர்மானம்: சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் என முதல்வர் மு..ஸ்டாலின் உறுதி, 2022-01-07@ 00:14:52.

[8] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=733222

[9] விகடன், முதல்வர் Vs ஆளுநர்வேந்தர், துணைவேந்தர் பதவிகள்அதிகார மோதல் எதற்காக?!, ஆ.பழனியப்பன், Published:Yesterday at 11 AMUpdated:Yesterday at 11 AM.

[10] https://www.vikatan.com/government-and-politics/education/tussle-between-governor-and-chief-ministers-over-appointments-of-vice-chancellors

திராவிட 2.0 போர்வையில் திராவிடத்துவ மாயைகளின் மீது அதாரமாக, புதிய திராவிடத்துவ மாயைகளை உண்டாக்கும் யுக்தி! திமுகவுக்கு வக்காலத்து வாங்கும் மெய்கீர்த்தி! (1)

ஒக்ரோபர் 15, 2021

திராவிட 2.0 போர்வையில் திராவிடத்துவ மாயைகளின் மீது அதாரமாக, புதிய திராவிடத்துவ மாயைகளை உண்டாக்கும் யுக்தி! திமுகவுக்கு வக்காலத்து வாங்கும் மெய்கீர்த்தி! (1)

திமுகவைத் தூக்கிப் பிடிக்க மெய்கீர்த்தி போல பாடிய பொருளாதார பாட்டு: ஒவ்வொரு கட்சிக்குக் ஆஸ்தான வித்வான்கள் போல, நிபுணர்கள், விற்பனர்கள், பண்டிதர்கள், கவிக்கள், கவிக்கோக்கள், கலைமாமணிகள் என்றெல்லாம் இருப்பார்கள். பணம், பதவி, விருது, அந்தஸ்து கொடுக்கும் நிலையில், அவர்கள் ஆட்சியாளர்களை அவ்வாறு பலன்களைக் கொடுப்பவர்களை வாழ்த்தித் தான் பாடுவார்கள். தொழிற்துறை மற்றும் வல்லுனத்திற்கு சிறிதும் தொடர்பில்லாமல் இருந்தாலும், எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் மீறி, கிண்டி இஞ்சினியரிங் காலேஜுக்கு அண்ணா பெயரை வைத்தனர். ஈவேராவுக்கும் வானியலுக்கும் சம்பந்தமே இல்லையென்றாலும், “பெரியார் கோளரங்கம்,” என்று வலுக்கட்டாயமாக பெயரை வைத்தார்கள். அதுபோல, இப்பொழுது, “டிராவிடியன் மாடல்,” என்றாலோ, “திராவிடன் 2.0” என்றாலோ, யாரும் கவலைப்படப் போவதில்லை. பணம், பதவி, விருது, அந்தஸ்து என்று கொடுப்பதால் அல்லது கிடப்பதால், இதைப் பற்றி படித்தவர்கள் திரித்து எழுதுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. மேலும், அந்த கட்டுரைகளைப் படித்துப் பார்த்தால், திமுகவிற்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு, வலுக் கட்டாயமாகத் திரித்து எழுதப் பட்டுள்ளவை என்றும் தெரிகிறது. கலையரசன் கட்டுரை பத்திகளுக்கு, கீழே தலைப்புகள் மூலமே பதில் சொல்லப் பட்டுள்ளன. அவற்றை விரித்தால், விளக்கம் கொடுக்கும்.

திராவிடம் 2.0 – கலையரசன்: சில மாதங்களுக்கு முன்பு ஆங்கிலத்தில் வெளியான ‘திராவிட மாடல்’ (Dravidian Model) எனும் புத்தகம் தமிழ் வாசகப் பரப்பில் பெரும் அதிர்வை உண்டாக்கியது[1]. இதன் ஆசிரியர்களில் ஒருவர் கலையரசன். சென்னையில் உள்ள எம்.ஐ.டி.எஸ் (MIDS) எனும் வளர்ச்சிக்கான ஆய்வு நிறுவனத்தில் பொருளாதாரப் பேராசிரியராகப் பணிபுரிந்த இவர், இப்போது உலகப் பல்கலைக்கழகங்களில் சிறப்பு ஆய்வாளராக இருக்கிறார். சமீபத்தில் ‘தி இந்து’ ஆங்கிலப் பத்திரிகையில் ஒரு முக்கியமான கட்டுரையை எழுதியிருந்தார். ‘திராவிடம் 2.0: எதிர்கால செயலுக்காக சிந்திப்பதற்கான நேரம்’ என்பது அதன் தலைப்பு. அந்தக் கட்டுரையின் சாராம்சத்தைப் பார்ப்போம்[2], என்று  இப்பொழுது அக்டோபர் 2021ல் குமுதம் வெளியிட்டுள்ளது[3].

ஈவேராஅண்ணாகருணாநிதி மாயை: தமிழகத்தை ஆளும் திமுக அரசு, பெரியார் ஈ.வெ.ராமசாமி, சி.என்.அண்ணாதுரை, மு.கருணாநிதி போன்ற திராவிட இயக்கத் திருவுருவங்களைப் புத்தூக்கத்துடன் கொண்டாடிக்கொண்டிருக்கிறது[4]. இந்நிலையில், தமிழ்நாடு மாநிலத்தையே மாற்றத்துக்குள்ளாக்கிய திராவிட இயக்கக் கொள்கைகளைத் திரும்பச் சென்று பார்க்கும் தேவையும் உள்ளது[5]. ஆற்றல் மிக்க உற்பத்தித்திறன் கொண்ட பொருளாதாரமாக முன்னிறுத்துவதோடு, குடிமக்களுக்கு அருமையான நலத்திட்டங்களையும் சேர்த்துத் தமிழ்நாடு மிக முன்னேறிய நவீன மாநிலமாக இன்று திகழ்கிறது[6]. அமைப்புரீதியாக அது அடைந்த மாறுதல் கணிசமானது. உழைப்பு ஆற்றல் சார்ந்து 30%-க்குக் குறைவானவர்களே விவசாயத்தில் இருக்க, உச்சபட்சமாக நகர்மயமான, மிகப் பெரிய தொழில்துறை உழைப்பு ஆற்றலைக் கொண்டிருக்கும் மாநிலம் இது. இந்த மாறுதல் நிச்சயமாக புதிய வாய்ப்புகளையும், குறிப்பாக அடிநிலை சாதிகள், பட்டியலினத்தோர் மற்றும் பெண்களையும் உள்ளடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் புதியதொரு சவால்களையும் உருவாக்கியுள்ளன. இது ‘இரண்டாம் தலைமுறை’ சந்திக்கும் சவால்கள்.

உழைப்பு திராவிடத்துவத்தால் வரவில்லை, அது திராடத்துவ ஊழலை வென்று நடந்த நிலை: முதல் தலைமுறை திராவிடக் கொள்கைகள், அனைவருக்குமான நீதியை உறுதிப்படுத்தும் செயல்பாட்டில் காட்டிய புதுமையான அணுகுமுறையின் மூலம் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கல்வி மற்றும் ஆரோக்கிய சேவைகள் சென்று சேரும் வண்ணம் அளவீட்டுரீதியான அணுகுமுறைகளைக் கையாண்டது. அத்துடன் சாதிரீதியான உழைப்பாளர்களைக் கூலிரீதியான உழைப்பாளர்களாக மாற்றியது[7]. இரண்டாம் தலைமுறை திராவிடக் கொள்கையாளர்கள் கல்வி, ஆரோக்கியம், சாதி மற்றும் பாலினப் பிரச்சினைகள் தொடர்பில் தரம் தொடர்பான அணுகுமுறைகளைக் கையாள வேண்டியிருக்கிறது. அத்துடன் அதிகாரப்பரவலாக்கம் கொண்ட நிர்வாகத்தையும் அவர்கள் கைக்கொள்ள வேண்டும்.

முடிவுகளை தேர்ந்தெடுத்து செய்யப் படும் ஆய்வுகளினால் எந்த பலனும் இல்லை: ஒரு சாதியினர் இந்தத் தொழில்தான் செய்யவேண்டுமென்ற அடிப்படையை, தொழில்துறை சார்ந்து உருவான, பரவலான மாற்றம் உடைத்துவிட்டது. ஆனால், இந்த மாற்றத்தினால் தரமான வேலைகள் போதுமான அளவு உருவாகவில்லை. விவசாயத்துக்கு வெளியே நிலையில்லாத, உத்தரவாதமற்ற வேலைகள்தான் இருக்கின்றன. சமீபத்தில் வெளிவந்த பீரியாடிக் லேபர் ஃபோர்ஸ் சர்வேஸ் (2018-2019) ஆய்வு விவரங்களின் அடிப்படையில் பார்த்தால், அமைப்புசாரா துறைகளில் 62% பணியாளர்கள் இருப்பதாகவும் 82% உழைப்பாளர்கள் எந்தச் சமூகப் பாதுகாப்பும் இல்லாமல் இருப்பதாகவும் தெரிகிறது. நிலையான வேலை, நிலைத்த வருவாயில் உள்ளவர்களிலும் 75.2% பேரிடம் எழுத்துரீதியான பணி ஒப்பந்தம் இல்லை. தமிழ்நாடு கடந்த மூன்று தசாப்தங்களில் உருவாக்கிய மோசமான கல்விச்சூழலின் விளைவுதான், இந்த முறையில்லாத நிலையும் அதன் விளைவாக ஏற்பட்ட கூலி சமனின்மையும் என்றே சொல்லலாம்[8].

கல்வித் திறன் புள்ளிவிவரங்களினால் தீர்மானிக்கப் படுவது இல்லை, படிப்புத் திறனை வைத்து வருவது: இந்தியக் கல்வி முறையில் இருந்த உயர் வர்க்கத்தினரின் ஆதிக்க நிலைமைக்குச் சவால்விடுத்து, அனைவருக்குமான பள்ளிக்கல்வியில் தமிழ்நாடு முன்னோடியாக விளங்கினாலும், அதிலும் பிரச்சினைகள் இல்லாமல் இல்லை. ஒன்றியக் கல்வி அமைச்சகம் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, கற்றல்ரீதியான பலன் அடிப்படையில் ஆய்வு செய்தபோது, தென்மாநிலங்களில் கடைசி நிலையில் தமிழகம் உள்ளது. செயல்திறன் மதிப்பீட்டுக் குறியீடு – 2019-20 அறிக்கை இது. எட்டாம் வகுப்பு படிப்பவர்களில் நான்கில் ஒரு மாணாக்கருக்கு இரண்டாம் வகுப்புப் பாடப் புத்தகத்தை வாசிக்கத் தெரியவில்லை. சாதாரண வகுத்தல் கணக்கு போட 50% மாணவர்களால் இயலவில்லை. கற்றலின் தாக்கத்தின் அடிப்படையில் கல்லூரிக்குச் செல்வது நிர்ணயிக்கப்படும் நிலையில், அது வேலைச் சந்தையிலும் பிரதிபலிக்கிறது. மொத்த சேர்க்கை விகிதத்தில் உயர் கல்விக்குச் செல்லும் தமிழ்நாட்டின் சாதனை 51.4% ஆகும். அகில இந்திய சராசரி 27.1%-தான். ஆனாலும், வேலைச் சந்தையில் தரத்தை எட்டுவதற்குத் தமிழ்நாட்டின் இந்தச் சாதனை உதவவில்லை[9].

© வேதபிரகாஷ்

15-10-2021


[1] இப்படி தனக்குத் தானே ஜால்றா போட்டுக் கொள்வதால் எந்த பிரயோஜனமும் இல்லை. வியாபார மற்றும் குடும்ப ரீதியில் “தி ஹிந்து” மற்றும் கருணாநிதி-தயாநிதி-கலாநிதி குழுமங்கள் இணைந்துள்ளதால், அவ்வாறு வக்காலத்து வாங்குவதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை.

[2]  குமுதம், திராவிடம் 2.0, – ஏ.கலையரசன், பொருளியல் ஆய்வு அறிஞர், ‘தி இந்து’, தமிழில் : ஷங்கர்

[3] http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=18606&id1=4&issue=20211010

[4] தமிழ்.இந்து, திராவிடம் 2.0 – பரிசீலனைக்கும் நடவடிக்கைக்குமான வேளை, செய்திப்பிரிவு, Published : 04 Oct 2021 03:11 AM; Last Updated : 04 Oct 2021 06:38 AM.

[5] https://www.hindutamil.in/news/opinion/columns/722758-dravidian-movement-2.html

[6]  இதற்கும் திராவிடத்துவத்திற்கும், திராவிடத் தலைவர்களுக்கும் சம்பந்தம் இல்லை. இருக்கும் தொழிற்சாலை, மற்ற வியாபார-வணிக, தொழிற்நுட்ப காரணங்களினால், சென்னையில் தொழிற்சாலைகளை வைத்துள்ளான. குறிப்பாக துறமுகம்-விமானநிலையங்கள் அருகில் உள்ளன, தென்கிழக்காசிய நாடுகளுடன் தொடர்புகள் எளிதில் வைத்துக் கொள்ளலாம்.,

[7] இறகு வியாபாரங்களை ஜாதிகளால் கட்டுண்டு கிடக்கும் செய்த நிலையில், தொழிலாளர்கள் சுரண்டும் நிலைகளில் தான் முடிந்துள்ளது. இப்பொழுதுள்ள முஸ்லிம்கள், நாடார்கள், செட்டியார்கள், முதலியார்கள், கவுண்டர்கள், வன்னியர்கள் என்றுள்ளவர்கள் தான் வியாபாரம்-வணிகங்களை ஒட்டு மொத்தமாக நடத்தி வருகிறார்கள்.

[8]  இப்படி ஒருபக்கம் கல்வியைக் குறை கூறிக்கொண்டு, இன்னொரு பக்கம் அதைத் தூக்கிப் பிடித்து விளக்க கொடுப்பது தமாஷாக இருக்கிறது. “மூன்று தசாப்தங்களில் உருவாக்கிய மோசமான கல்விச்சூழலின் விளைவு என்றால் அதற்கு பொறுப்பு திராவிடத்துவ அணுகுமுறைதான். நன்றாகப் படித்து, திறமையுடன் தேர்வுகள், போட்டித் தேர்வுகள் என்றிருக்கும் போது, பாடதிட்டங்களிலேயே பின்தங்கி இருந்தால், மற்றவர்களுக்கு சரியாக எப்படி போட்டி போட முடியும்?

[9]  இந்த முரண்பாட்டினை ஏற்கெனெவே எடுத்துக் காட்டியாகி விட்டது. அரசியலை நுழைத்து, பாடதிட்டங்களைக் கெடுத்து, திராவிடத்துவ அரசியல்வாதிகள், சினிமா போன்றவற்றை மட்டும் அறிந்து கொண்டுள்ள தமிழக மாணவ-மாணவிகள் என்ன செய்ய முடியும்?