Archive for the ‘இந்தி’ Category

அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது – சீமானின் பேச்சு, எதிர்ப்பு, கண்டனம் மற்றும் மிரட்டல் (2)

ஓகஸ்ட் 4, 2023

அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டதுசீமானின் பேச்சு, எதிர்ப்பு, கண்டனம் மற்றும் மிரட்டல் (2)

சீமான்இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் தி.மு.. செய்த ஒரு நன்மையைச் சொல்லுங்கள். நான் கட்சியை கலைத்துவிட்டுப் போகிறேன்: இதற்குப் பிறகு, சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தபோது பேசியதாவது: “தொடர்ச்சியாக 18% வாக்கை தி.மு.. காங்கிரசிற்குப் போடுகிறார்கள். பிறகு மாற்றம் எப்படி வரும்? எதிர்க்கட்சியாக இருக்கும்போது இஸ்லாமிய சிறைக் கைதிகளை விடுதலை செய்வதாகச் சொல்வார்கள். ஆட்சிக்கு வந்த பிறகு செய்ய மாட்டார்கள். எங்களுக்கு உரிமை இருக்கிறது, ஆதங்கம் இருக்கிறது என்பதால் சொல்கிறோம். இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் தி.மு.. செய்த ஒரு நன்மையைச் சொல்லுங்கள். நான் கட்சியை கலைத்துவிட்டுப் போகிறேன். நான் எவ்வளவோ பேசியிருக்கிறேன், அதையெல்லாம் விட்டுவிட்டு, சாத்தானின் பிள்ளைகள் என்று பேசிவிட்டாரே என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள்,என்று குறிப்பிட்டார்.

சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தபோது தொடர்ந்து பேசியதாவது: மணிப்பூரில் இருந்து வந்து நமக்கு யாரும் ஓட்டு போடப்போவதும் இல்லை. அதை பற்றி நாம் ஏன் பேச வேண்டும். இங்கு இருக்கக்கூடிய கிறிஸ்துவர்களும் நமக்காக வாக்களிக்கப்போவது கிடையாது. நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம், இஸ்லாத்தையும் கிறிஸ்துவத்தையும் ஏற்றுக்கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் என்று. அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகளாகிவிட்டது, என்று கூறி இருந்தார். அதோடு நிற்காமல், சும்மா போய் தேவாலயத்தில் தேவரே வாரீர் வாரீர் என்று பாடிவிட்டு, கடைசியில் யார் யாருக்கோ நாட்டை கொடுத்து இருக்கிறார்கள். இந்த நாட்டில் நடந்திருக்கும் அநீதி அக்கிரமங்களுக்கு பெரிய பொறுப்பு,” என்றும் கூறி சர்ச்சையை கிளப்பி இருந்தார். அவரின் இந்த பேச்சு பெரிய சர்ச்சையான நிலையில் சீமானின் பேச்சுக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் விமர்சனங்களை வைத்தன. அதேபோல் சில இஸ்லாமிய அமைப்புகள் சீமானுக்கு எதிராக காவல் நிலையத்திலும் புகார் வைத்தன.

சீமான் மன்னிப்பு கேட்டால் என்ன ஓட்டா கிடைக்கும்?: இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சீமானிடம் செய்தியாளர்கள் இந்த பேச்சு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சீமான், ”மன்னிப்பு கேட்டுவிட்டேன் என்றால் எனக்கு ஓட்டு போட்டுவிடுவார்களா? வருத்தம் தெரிவிக்க வேண்டியது எனது மக்கள்தான். என்னைப் போன்று நிற்போரை ஆதரிக்காமல் நடுத்தெருவில் போராட விட்டது யாரு? அநீதிக்கு எதிராக போராடிய ஒரே ஒருவர் பழனிபாபாதான். அவரையே நீங்கள் மதிப்பதில்லையே. அவரையே அநியாயமாக சாக விட்டவர்கள்தானே. மானமுள்ள தமிழன் திமுகவிற்கு ஓட்டு போடுவானா என கேட்டவர் பழனி பாபா. அதனால் அவரைப்பற்றி பேச மாட்டார்கள். அவரை விடவா நான் பேசிவிடப் போகிறேன். அவரே உங்களுக்கு ஒரு பொருட்டல்ல நானெல்லாம் ஒரு பொருட்டா? முதலில் அண்ணன் ஜவாஹிருல்லா கலைஞரைப் பற்றி பேசியதை கேட்டுள்ளீர்களா? முதுகில் குத்திய துரோகி எனக் கலைஞரை பேசியுள்ளார்[1]. ஆனால் இப்பொழுது அங்கு ஒரு சீட்டுக்காக நிற்கிறீர்கள்” என்றார். சீமானின் பேச்சு சர்ச்சையான நிலையில் மதக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திராவிட நட்பு கழகம் அமைப்பு சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது[2].

மதம், சாதியை விட எல்லா அடையாளங்களையும் விட மொழி இனம் தான் பெரியது: சீமான் தொடர்ந்து பேசியது ‛‛மதம், சாதியை விட எல்லா அடையாளங்களையும் விட மொழி இனம் தான் பெரியது. முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் தமிழன். பெரும்பான்மை தேசிய இனத்தின் மகன். வந்தவன், போனவன் எல்லாம் சிறுபான்மையினர்சிறுபான்மையினர்என சொல்பவர்களை செருப்பால் அடிப்பேன்,” என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்[3]. சென்னையில் நிருபர்களை சந்தித்த சீமான் கூறியதாவது[4]: முஸ்லீம்கள், கிறிஸ்தவர்களுக்கு காங்கிரஸ், தி.மு.க., ஏதாவது நல்லது செய்தது உண்டா? மதத்தை வைத்து மனித கூட்டத்தை கணக்கிட்டது எங்கேயாவது உள்ளதா? ஐரோப்பிய யூனியன் முழுவதும் கிறிஸ்தவர்கள் இருந்தாலும், பல நாடுகள் இருப்பதற்கு காரணம் மொழி வாரியாக தேசிய இனங்கள், நிலங்கள் உள்ளது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்ததற்கு காரணம் மதம். பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் பிரிந்ததற்கு காரணம் மொழி. மதம், சாதியை விட எல்லா அடையாளங்களையும் விட மொழி இனம் தான் பெரியது. இங்குள்ள கிறிஸ்தவனும், இஸ்லாமியனும் தமிழன்.. பெரும்பான்மையான தமிழ் தேசிய இனத்தின் மகன். வந்தவன், போனவன் எல்லாம் சிறுபான்மையினர்… சிறுபான்மையினர்… எனக்கூறினால் செருப்ப கழட்டி அடிப்பேன். வெறி கொண்டு இருக்கேன். மதத்தின் அடிப்படையில் மனிதர்களை பிரிப்பதை ஏற்க முடியாது. ஸ்டாலின் முதல்வர். உதயநிதி அமைச்சர். இன்பநிதிக்கு, அரசு விழாவில் என்ன வேலை. தலைதலைமுறையாக ஆட்சி செய்து கொண்டுள்ளீர்கள். உங்கள் குடும்பத்திற்கு என் நாடு பட்டா போட்டு கொடுக்கப்பட்டு உள்ளதா. மக்கள் உங்களுக்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்து உள்ளனரா? இவ்வாறு சீமான் கூறினார்.

சீமான் எழுப்பியுள்ள சில கேள்விகள்: ஊடகக்காரர்களைப் பார்த்டு நேரிடையாக சீமான் எழுப்பியுள்ள கேள்விகள்…தேசம், நாடு, மொழி, இனம், மதம், என்ற காரணிகளில் இந்த சித்தாந்திகளுக்கு எழுப்பப் பட்ட கேள்விகள்:

  1. காஷ்மீரில் இஸ்லிமிய பெரும்பான்மை தானே, ஆனால், ஒட்டுமொத்தமாக முஸ்லிம்களை சிறுபான்மையினர் என்று எப்படி சொல்ல முடியும்?
  2. மனிதன் தன்னுடைய மூலத்தை, மதம் மாற்றிக் கொள்ளக் கூடியது மொழியை, மொழி இனத்தை  மாற்றிக் கொள்ளமுடியாது.
  3. நேற்றைக்கு திலீப், இன்று ஏ.ஆர்.ரஹ்மான்; நேற்றைக்கு பெரும்பான்மை, இன்றைக்கு சிறுபான்மையா? கேவலமாக இல்லை.
  4. என்னுடைய அப்பா இளையராஜா பெருபான்மை, யுவன் ஷங்கர் ராஜா சிறுபான்மை;  போனவாரம் அவர் பெரும்பான்மை, இந்த வாரம் அவர் சிறுபான்மை;
  5. இந்த மாதிரியான உலக பைத்தியக்காரத்தனம் எங்கேயாவது இருக்கிறதா தம்பி?

ஒருவேளை, மதமாற்றத்தை எதிர்க்கிறாரா என்றும் யோசிக்க வேண்டியுள்ளது. இருப்பினும், சீமான் தமிழ்-தமிழர்-தமிழர் சயம் என்றால் எல்லாமே ஒன்று என்று விளக்கம் கொடுத்து விடுவார்.

கம்யூனிஸ்டுகளின் எதிர்ப்பு திகைப்பாக இருக்கிறது: சீமான் குறிப்பிட்டதைப் போலவே, அவர் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. பேராசிரியர் அருணன், க. உதயகுமார் ஒருங்கிணைப்பில் ஹிந்து என். ராம், டி.எம். கிருஷ்ணா, பேராசிரியர் வசந்தி தேவி, திரைப்படக் கலைஞர் ரோஹிணி ஆகியோரை உள்ளடக்கிய தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சீமானின் இந்தப் பேச்சைக் கண்டித்துள்ளது[5]. “இவரின் நோக்கம் தெளிவானது. பா... எதிர்ப்பு வாக்குகள் சிதற வேண்டும். அதன் மூலம் பா... அணி வெற்றிபெற வேண்டும் என்பது. இந்தச் சதி வேலைக்கு இணங்காமல் சிறுபான்மையினர் தி.மு.. அணிக்கு வாக்களிப்பதே இவரது ஆத்திரத்திற்குக் காரணம். அதனால்தான் சாத்தானின் பிள்ளைகள் என்று படுமோசமான வசவு மொழியை உதிர்த்திருக்கிறார்,” என அந்த அமைப்புச் சுட்டிக்காட்டியுள்ளது[6]. மொழி,இனம், நாடு, தேசம், மொழி-இனம், தேசிய-இனம் போன்ற அவர்களது விருப்பமான விசயங்களை விடுத்து, அவற்றையும் மீறி சீமானை அரசியல் தேர்தல், ஓட்டு என்ற ரீதியில் விளக்கம் கொடுத்து எதிர்த்திருப்பது கவனிக்கத் தக்கது.

© வேதபிரகாஷ்

04-08-2023


[1] நக்கீரன், சீமான் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார், Published on 02/08/2023 (18:59) | Edited on 03/08/2023 (07:35)

[2] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/complaint-against-seeman-police-commissioners-office

[3] தினமலர், சிறுபான்மையினர் என சொல்பவர்களை செருப்பால் அடிப்பேன்: சீமான், பதிவு செய்த நாள்: ஆக 03,2023 14:00

[4] https://m.dinamalar.com/detail.php?id=3394025

[5] பிபிசி, கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களை சாத்தானின் குழந்தைகள் எனக் கூறியது ஏன்? சீமான் விளக்கம், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி செய்தியாளர், 2 ஆகஸ்ட் 2023; புதுப்பிக்கப்பட்டது 3 ஆகஸ்ட் 2023; https://www.bbc.com/tamil/articles/clewz1d27nno

[6] https://www.bbc.com/tamil/articles/clewz1d27nno

அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகி விட்டது – சீமானின் பேச்சு, எதிர்ப்பு, கண்டனம் மற்றும் மிரட்டல் (1)

ஓகஸ்ட் 4, 2023

அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டதுசீமானின் பேச்சு, எதிர்ப்பு, கண்டனம் மற்றும் மிரட்டல் (1)

தமிழக அரசியல்வாதிகளின் முரண்பட்ட சித்தாந்தங்கள்: தேர்தல் வருகின்றது என்றால் அரசியல்வாதிகள் என்னவேண்டுமாலும், எப்படி வேண்டுமானாலும் பேசுவார்கள். ஒரு கொள்கைப் பிடிப்பற்ற, ஏன் கொள்கையற்ற, சித்தாந்த உதறல்களாகக் கூட பேச்சுகள் இருக்கும். கூட்டணி மயக்கம், போதை, பேரம் என்றெல்லாம் வந்து விட்டால், இப்பேச்சுகள் இன்னும் அதிகமாகி விடும். தமிழக, திராவிட, திராவிடத்துவ அரசியலில் பிரிவினைவாதம், திராவிடஸ்தான், திராவிடநாடு, தமிழ்நாடு, மாநில சுயயாட்சி, தமிழ் தேசியம், திராவிட தேசியம், மொழிபேசும் தேசிய இனங்கள், ஆரியன்,திராவிடன், வடுகண், வந்தேறி, குந்தேறி என்று விரிந்து கொண்டே போகும். மேனாட்டு பிரஹஸ்பதிகள் அவ்வப்பொழுது தங்களது தேவைக்கு ஏற்ப, இத்தகைய சித்தாந்தங்களை கருத்தியல், கருதுகோள், மாதிரி, உத்தேச வடிவம் என்ற ரீதியில் முன்வைப்பர், மற்றவர் மூலம் கருத்து பெற முயற்சிப்பர். பிறகு அவை தமக்கு உபயோகப் படும், லாபம் கிடைக்கும் என்றால், விஞ்ஞான முறையில் மெய்ப்பிக்கப் பட்டது என்று முலாம் பேசி  சுற்றில் விட்டு ஒத்திகைப் பார்ப்பர்.

மதஆதரவும், ஓட்டு வங்கியும், அரசியலும்: மணிப்பூர் கலவரத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம் ஜூலை 30-ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய சீமான்[1], “ஒவ்வொரு கலவரத்தின் பின்னணியிலும் பண வேட்டை இருக்கும். மணிப்பூர் கலவரத்திற்கும் அது தான் காரணம். ஆழ்ந்து பார்த்தால், மலைகளில், காடுகளில் வாழ்கிற பழங்குடி மக்கள் கிறிஸ்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் பா..விற்கு வாக்கு செலுத்த மாட்டார்கள். தரை தளத்தில் வாழும் மெய்த்தி இன மக்கள், இந்துத்துவ கோட்பாட்டை ஏற்கும் மக்களாக இருக்கிறார்கள். அதனால், அங்கே பழங்குடி இன மக்கள் சாவதைப் பற்றி அவர்களுக்கு கவலையில்லை. நமக்கும் இது நடந்துள்ளது. ஒகி புயலில் மீன் பிடிக்கச் சென்ற 200-க்கும் மேற்பட்டோர் இறந்து போய்விட்டனர். வலிமை மிக்க கடற்படையை வைத்திருக்கும் நம் நாடு, அவர்களை காப்பாற்ற வேண்டும் என்று எண்ணவே இல்லை. மக்கள் போராடியும் எந்த மதிப்பும் அதற்கு தரவில்லை. கடைசியாக, ‘உயிரற்ற உடலையாவது ஒப்படையுங்கள், மரியாதையான நல்லடக்கம் செய்கிறோம்என்று கூட போராடினார்கள். அப்போது கண்டுகொள்ளவில்லை. அதற்கு காரணம், அவர்கள் அனைவரும் கிறிஸ்தவர்கள், அவர்கள் வாக்கு நமக்கு வரப்போவதில்லை என்பதால் கண்டுகொள்ளவில்லை.

திராவிட அரசியல், தேசிய அரசியல், கலவரங்கள்: சீமான் தொடர்ந்து பேசியது[2],தேச ஒற்றுமையை பேச வக்கற்ற, தகுதியற்றவர்கள் தான் திரும்ப திரும்ப தேச ஒற்றுமை பற்றி பேசுகிறார்கள். திடீரென இவர்கள் புனிதர்களாகிவிடுவார்கள். அதை நாம் நம்ப வேண்டும். குஜராத் கலவரத்தை நாடாளுமன்றத்தில் ஆதரித்து பேசியவர்கள் தி.மு..வினர். இவர்கள் மணிப்பூர் கலவரத்தைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது? 76-வது நாளில் பேசுகிறீர்கள். 76 நாளில் என்ன செய்தீர்கள்? தேர்தல் வருகிறது, அதனால் பேசுகிறீர்கள். அங்கு பாதிக்கப்படும் கிறிஸ்தவர்களை வைத்து, இங்குள்ள கிறிஸ்தவர்களிடம்உனக்காக பேசுகிறோம்என்பதை காட்டுவதற்காக பேசுகிறார்கள். நான் ஈழத்தைப் பற்றி பேசிய போது, ‘அரசியலுக்காக பேசுகிறார்கள்என்று கூறியவர்கள் தான், இன்று மணிப்பூர் கலவரத்தைப் பற்றி பேசுகிறார்கள். தேர்தல் ஆதாயத்திற்காக இவர்கள் பேசுகிறார்கள். ஆஊனா கட்டுச்சோறு கட்டிக்கிட்டு நடைபயணம் கிளம்பிவிடுகிறார்கள். குஜராத் மாடல் மாதிரி, திராவிட மாடல் மாதிரி நடைபயணம் ஓல்டு மாடல். ராகுல் காந்தி, நடையா நடந்தார், ஒன்னும் நடக்கல போய்ட்டார். 9 ஆண்டுகள் ஆட்சி செய்துவிட்டு இப்ப தான் என்ன பிரச்னை என்று கேட்க வருகிறார்கள். பிரச்னையே நீங்க தானே!

மதரீதியிலான ஓட்டு வங்கி நிரந்தரமல்ல?: சீமான் தொடர்ந்து பேசியது, மணிப்பூர் விவகாரத்தை நாம் பேசுவதால், நமக்கு அங்குள்ள மக்கள் ஓட்டுப் போடப்போவதில்லை. இங்குள்ள கிறிஸ்தவர்களும் நமக்கு ஓட்டுப் போடப் போவதில்லை. நாம நினைத்துக் கொண்டிருக்கிறாமே், இஸ்லாமையும், கிறிஸ்துவத்தையும் ஏற்றுக் கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் என்று. ஆனால் அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது[3]. சும்மா தேவாலயத்திற்கு போய்தேவனே வாரீர்.. வாரீர்னு,’ பாடிட்டு, எவனிடமோ நாட்டை கொடுத்துவிட்டார்கள்[4]. இந்த நாட்டில் நடந்த அநீதிக்கு பெரிய பொறுப்பு ஏற்க வேண்டியவர்கள் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் தான். தொடர்ச்சியாக பல ஆண்டுகுள் 18 சதவீதம் வாக்குகளை தி.மு..வுக்கும், காங்கிரஸிற்கும் போட்டு போட்டு நாட்டை தெருவில் போட்டவர்கள் இவர்கள் தான். சலிக்க முடியாத ஊழல், லஞ்சம், சீர்கேடான நிர்வாகம், காரணம் இவர்கள் தான். இவர்கள் பாவம் கேட்கிறார்கள். பெரும்பாவமே அவர்கள் தான், அவர்களுக்கு எப்படி மன்னிப்பு கிடைக்கும். இன்னும் பாருங்கள், இவர்கள் தான் எங்களை பாதுகாப்பார்கள் என்று நம்புகிறார்கள். இஸ்லாமியர்களுக்கு தி.மு. தான் பாதுகாப்பு. ஆமாம், சிறையில் வைத்து பல ஆண்டுகளாக பாதுகாப்பது எவ்வளவு பெரிய பாதுகாப்பு? மீண்டும் இதே இஸ்லாமியர்களிடம் அவர்கள் ஓட்டு கேட்பார்கள். இந்த முறையும் அதே பொய்யை சொல்லி ஓட்டு கேட்பார்கள்[5]. நீங்கள் அவவர்களை விடுதலை செய்யுங்கள், நாம் தமிழர் கட்சியும் உங்களுக்கு வாக்களிக்கும்,என்று அந்த ஆர்பாட்டத்தில் சீமான் பேசினார்[6].

சீமான் பேசிற்கு ஊடகங்கள் இப்பொழுது அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது: சீமான் பேசும் பேச்சுகளில் பெரும்பாலாக லாஜிக், விசயம் இருக்கும் என்பது போல இருக்கும். இருப்பினும், சில நேரங்களில் தாராளமாக தமாஷான பேச்சு போல சிலவற்றை எடுத்து விடுவார். அந்த பேச்சுகளில் உள்நோக்கம் இருக்கிறதா-இல்லையா என்பது ஆராய வேண்டிய நிலையில் தான் உளளது. போதாகுறைக்கு யூ-டியூபாக மாறும் அல்லது சுற்றுக்கு வரும் பேச்சுகளில் உண்மைத் தன்மை 30-50% கூட இருப்பதில்லை. ஒரு சிறிய விசயம் கிடைத்தால், அதை ஊதி பெரிதாக்கி, தமக்குத் தான் எல்லாம் தெரியும் என்ற ரீதியில், வீடியோக்கள் தயாரித்து சுற்றில் விடுகின்றனர். பொழுது போக வேண்டும் என்று ஆயிரக்கணக்கில் மக்கள் பார்க்கின்றனர். அவர்களுக்கு உண்மை, உண்மைத் தன்மை, அதாரம் பற்றியெல்லாம் கவலையில்லை. சில நேரங்களில் அரசியல், வெறுப்புப் பேச்சு, காழ்ப்பு-வெறுப்பு போன்றவை சேரும் பொழுது விப்ரீதமாகிறது. எல்லா பேச்சுகளையும், எல்லோரும், ஒரே மாதிரியாக எடுத்துக் கொள்வ்தில்லை முக்கியத்துவம் கொடுப்பதில்லை. சமூக ஊடக பதிவுகளை வைத்து செய்திகளைத் தயாரிப்பது என்பது இக்கால செய்தி தயாரிப்பு முறையாக உள்ளது. அவ்விதத்தில், சீமான் பேசிற்கு ஊடகங்கள் இப்பொழுது அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளன என்று தெரிகிறது.

இஸ்லாமையும், கிறிஸ்துவத்தையும் ஏற்றுக் கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள்  –ஜவாஹிருல்லா கண்டனம்: இந்த ஆர்ப்பட்டத்தில்,இஸ்லாமையும், கிறிஸ்துவத்தையும் ஏற்றுக் கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் என்று. ஆனால் அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது.” என்று சீமான் பேசியது தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையானது. .. பொதுச் செயலாளர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்ததோடு சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், “இந்த கயமைத்தனமான பேச்சு வன்மையான கண்டனத்துக்கு உரியது. தன் கட்சிக்கு வாக்களிக்காத காரணத்தினாலேயே கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் சாத்தானின் பிள்ளைகள் என்று வர்ணிப்பது அநாகரிகமானது, அருவருப்பானது, என்பதோடு அரசியல் நேர்மையற்ற செயலுமாகும். இதை வன்மையாக கண்டிக்கிறோம்,” என்று ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்தார்.

© வேதபிரகாஷ்

04-08-2023


[1] தமிழ்.ஒன்.இந்தியா, காலை காட்டி சொன்னஅந்தவார்த்தை.. சீமான் அரசியலுக்கு என்னாச்சு? கொதித்து போன இஸ்லாமியர்கள்! திடுக், By Shyamsundar I Published: Thursday, August 3, 2023, 14:20 [IST]

[2] https://tamil.oneindia.com/news/chennai/why-naam-tamilar-party-seeman-attack-muslims-and-christians-all-of-a-sudden-526569.html

[3] தமிழ்.ஹிந்துஸ்தான்.டைம்ஸ், Seeman Speech: ‘இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் சாத்தானின் குழந்தைகள்சீமான் பகீர் பேச்சு!  , Stalin Navaneethakrishnan • HT Tamil, Jul 31, 2023 09:21 AM IST

[4] https://tamil.hindustantimes.com/tamilnadu/ntk-chief-coordinator-seeman-talks-about-muslims-and-christians-131690773683412.html

[5] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், சாத்தானின் குழந்தைகள் என பேசியது ஏன்? சீமான் விளக்கம், Written by WebDesk, August 3, 2023 01:18 IST.

[6] https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-electricity-employees-have-done-electricity-calculations-without-going-to-homes-734464/

இனம், இனவெறி மற்றும் இனவெறித்துவ காழ்ப்பு போன்ற நிலைகளில் கொலைவெறி சித்தாந்தத்துடன் வேலை செய்யும் திராவிடத்துவம், திராவிட ஸ்டாக் அரசியல் மற்றும் திராவிட மாடல்! (2)

ஜூன் 21, 2022

இனம், இனவெறி மற்றும் இனவெறித்துவ காழ்ப்பு போன்ற நிலைகளில் கொலைவெறி சித்தாந்தத்துடன் வேலை செய்யும் திராவிடத்துவம், திராவிட ஸ்டாக் அரசியல் மற்றும் திராவிட மாடல்! (2)

இந்தியை எதிர்த்து திமுக பேசி வருவது: 37வது நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் கூட்டம் தலைநகர் டெல்லியில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியாவில் மாநிலங்களுக்கு இடையேயான தொடர்பு மொழியாக ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியை ஏற்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். மேலும் அவர், இந்தி ஆங்கிலத்திற்குத் தான் மாற்றே தவிர உள்ளூர் மொழிகளுக்கு அல்ல என்றும் கூறியிருந்தார். மத்திய அமைச்சரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையானது. எதிர்கட்சினர் பலரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். மத்திய அரசு மீண்டும் இந்தியைத் திணிக்க முயல்கிறது என்று கூறி பலரும் சாடி பேசினர். அதோடு, நாட்டிலுள்ள பல்வேறும் மாநிலங்களில் இருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் முதல் பல்வேறு கட்சியினரும் தங்களின் வலுவான இந்தி எதிர்ப்பை அறிக்கை வாயிலாகவும், கண்டங்கள் மூலமாகவும் வெளிப்படுத்தினர்.

டிகேஎஸ் இளங்கோவன் இந்திஎதிர்ப்பு கருத்து: இது குறித்து சென்னையில் கடந்த சனிக்கிழமை 04-06-2022 திராவிடர் கழகம் நடத்திய இந்தி எதிர்ப்பு மாநாட்டில் பேசிய திமுக மூத்த தலைவர் டிகேஎஸ்.இளங்கோவன்[1], இந்தி மொழி என்பது வளர்ச்சியடையாத மாநிலங்களின் மொழி. அது நமக்கு எந்த நன்மையும் செய்யாது, அது நம்மை ‘சூத்திரர்’ போன்ற அடிமைகளாக்கும். நாம் மனிதனாக இருக்க வேண்டுமானால் அதை எதிர்க்க வேண்டும்”என்று கூறியிருந்தார்[2]. இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், “மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், பீகார் மற்றும் உத்தரப்பிரதேசம் போன்ற வளர்ச்சியடையாத மாநிலங்களில் இந்தி தான் தாய்மொழியாக உள்ளது. மேற்கு வங்காளம், கேரளா, தமிழ்நாடு, ஒடிசா, பஞ்சாப், கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்கள் இந்தி மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கவில்லை. இந்த மாநிலங்கள் அனைத்தும் வளர்ந்த மாநிலங்களாக உள்ளன. நான் அந்த மொழியைப் பற்றி மட்டுமே எனது கருத்தைத் தெரிவித்தேன். உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் பீகார் மாநிலங்களின் வளர்ச்சிக்கு இந்தி மொழி உதவவில்லை. நான் நானாக எதுவும் கூறவில்லை. நம்மிடம் இருக்கும் தரவுகளை வைத்தே நான் இப்படிக் கூறினேன்.

இந்தி நம்மைச் சூத்திரர்களாக மாற்றிவிடும்[3]: இந்தி என்ன செய்யும்? அது நம்மைச் சூத்திரர்களாக மாற்றிவிடும். அது நமக்கு எந்த நன்மையும் செய்யாது. நான் உங்களுக்குச் சொல்கிறேன். வளர்ச்சி அடைந்த மாநிலங்களின் தாய்மொழி எதுவும் இந்தி இல்லை. வட இந்தியாவில் மக்கள் சூத்திரர்கள் ஆக்கப்பட்டுள்ளனர்[4]. இந்த மனுதர்மம் மக்களைப் பிளவுபடுத்துவதால் வடக்கில் உள்ள அரசியல் கட்சிகளும் இப்போது திராவிட மாடலை கையில் எடுத்துள்ளன. வட இந்தியாவில் மனுதர்மம் கடைப்பிடிக்கப்பட்ட மக்கள் எப்படி சூத்திரர்கள் ஆக்கப்பட்டனரோ, அதேபோல இந்தி மொழி திணிக்கப்பட்டால், அடுத்து அந்த கலாசாரமும் திணிக்கப்படும். மொழியை நம் மீது திணித்தால், அது கலாச்சாரத்தைத் திணிக்கும் ஒரு முயற்சி. அதன் பின்னர் நாமும் சூத்திரர்களாக ஆக்கப்படுவோம்” என்று அவர் தெரிவித்து இருந்தார்.

சூத்திரர் என்று பேசிய இளங்கோவனுக்கு பாஜக கண்டனம்: இந்நிலையில், திமுகவின் மூத்த தலைவர் டிகேஎஸ் இளங்கோவனின் இந்தி எதிர்ப்புக் கருத்துக்கு பாஜக சார்பில் கடும் கண்டனம் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசியுள்ள பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, “அரசியலின் ஜென்டில்மேன்என்று அழைக்கப்படும் ஒருவர் இந்தி பேசும் மக்களை இழிவுபடுத்தியது உண்மையில் துரதிர்ஷ்டவசமானது. கடந்த ஓராண்டில் ஏற்பட்ட தோல்விகளை மறைத்து, புதைக்க, தமிழக மக்களை இவ்வாறு தூண்டிவிட்டு, திமுகவினர் நடத்திய சதி கடும் கண்டனத்துக்குரியது. தி.மு..,வின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அரசின் ஊழலை அம்பலப்படுத்தி வருவதால், தி.மு.கவினர்பா..கவை கண்டு பயப்படுகிறார்கள்,” என்று கூறியுள்ளார். மேலும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “முன்னேறாத மாநிலங்களின் மொழிஹிந்தி’. ஹிந்தியை பின்பற்றினால்சூத்திரர்களாகிவிடுவோம்: டி கே எஸ் இளங்கோவன், தி மு . மொழி அரசியல் செய்து வந்த தி மு மொழியோடு சாதியை இணைத்து அரசியல் செய்ய முனைவது பிரிவினை கருத்துகளை விதைப்பதற்கே. நீதிக்கட்சியின் வழி வந்தவர்கள் என்று மார்தட்டி கொள்ளும் தி மு இந்த பேச்சின் மூலம் தாங்கள்தலித்மக்களுக்கு எதிரானவர்கள் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. ஒரு வருட ஆட்சியின் அவலத்தை மூடி மறைக்க, மொழியால், சாதியால் மக்களை தூண்டி விட்டு இந்தியாவை பிளக்க நினைக்கும் தி மு கவின் முயற்சி முறியடிக்கப்படும்,” என்றும் பதிவிட்டுள்ளார்.

பிறகு இளங்கோவன் கொடுத்த விளக்கம்: விசயம் சிக்கலாகி, பிரச்சினையாகி விடும் என்ற நிலையில், இளங்கோவன் கொடுத்த விளக்கம், “சூத்திரர் என்ற சொல்லை நான் உருவாக்கவில்லை. தமிழ்ச் சமூகம் சமநிலையானது[5]. தெற்கில் வர்க்க வேறுபாடு கடைப்பிடிக்கப்படுவதில்லை[6]. வடக்கிலிருந்து நுழைந்த மொழி, எங்களைப் பிரித்தது. திராவிட இயக்க காலத்தில் மக்கள் சூத்திரர்கள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான கல்வி உரிமைகளுக்காகப் போராடினார்கள்[7]. நான் கூறியது என்னவென்றால், ஹிந்தி நுழைந்தால் வடக்கிலுள்ள கலாசார நடைமுறைகளும் உள்ளே நுழையும். எனவே, அது சூத்திர வர்க்கத்தை உறுதிப்படுத்தும் என்றுதான் நான் கூறினேன்,” என்று தெரிவித்துள்ளார் இளங்கோவன்[8]. இருப்பினும், மனுதர்மம், வர்ணம், சனாதனம் என்றெல்லாம் குறிப்பிட்டு, அவற்றை எதிர்க்கிறோம் என்ற சாக்கில், வழக்கம் போல, பார்ப்பன-துவேச சொல்லாடல்கள், வெறுப்புப் பேச்சு, முதலியவை வழக்கம் போல திரும்ப-திரும்ப சொல்வதும்-எழுதுவதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. 2017ல் பன்றிக்கு பூணூல் போடுகிறேன் என்று, மைலப்பூரில், ஒரு பிராமணரைத் தாக்கி அடித்தனர். முன்னர் 2006ல் அயோத்தியா மண்டபத்தில் இரண்டு அப்பாவி பிராமணாரை கத்தியால் வெட்டினர், மண்டபத்தில் பெட்ரோல் குண்டு வீசினர். இத்தகைய தாக்குதல்கள் முறையாக ஆவணப்படுத்தப்படவில்லை. 1950-60களிலிருந்து நடந்து வரும் தாக்குதல்கள் தேதிகளுடன் ஆவணப் படுத்த வேண்டும்.

பெரியாரின் பார்ப்பன உவமானமான பாம்பு, ஏன் 2017ல் பன்றியானது?: பெரியார் நினைவு நாளான டிசம்பர் 24, 2005 FUZZY and Neutrosopic Analysis of Periyar’s Views on Untouchability என்ற நூல் பெரியார் திடலில் வெளியிடப்பட்டது[9]. கி. வீரமணி அவர்கள் இந்த நூலை வெளியிட, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் சி. மகேந்திரன் நூலைப் பெற்றுக் கொண்டார். இவ்விழாவில் தமிழர் வீரமணி பேசும்போது[10], “பெரியார் பாம்பையும் பார்ப்பானையும் பார்த்தால் பாம்பை விட்டுவிடு; பார்ப்பானை அடி என்று குறிப்பிடுவார் தந்தை பெரியார்[11]. அதனுடைய தத்துவம் என்ன? பாம்பு கடித்தவுடனேயே மனிதன் இறந்து போய்விடுவான். கடித்தவுடனே மனிதனைச் சாகடிக்கும் பாம்புக்கு ‘நல்ல பாம்பு‘ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ஆனால் பார்ப்பனீயத்தின் தாக்குதல் இருக்கிறதே, பார்ப்பான் கடித்தால் அது உடனே செத்துபோய்விடுவது அல்ல; அன்றாடம் செத்துச் செத்துப் பிழைக்க வேண்டிய மிகப்பெரிய கொடுமை அது. அந்த அவதியைப் பலபேர் சந்தித்து இருக்கிறார்கள். சிலரால் வெளியே வர முடியும். பலரால் வரமுடியாது. அந்த மாதிரியான ஒரு பார்ப்பன நிர்வாகத்தின் கொடுமைகளைத் தாண்டி இப்படியொரு அருமையான புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார் வசந்தா கந்தசாமி”. “காஷ்மீர் பார்ப்பானுக்கு தேள் கொட்டினால் கன்னியாகுமரிப் பார்ப்பானுக்கு நெறி கட்டும் என்று பெரியார் ,” என்றும் பெரியார் கூறியிருக்கிறார். ஆனால் பாண்டே-வீரமணி பேட்டி-விவாதம் பிறகு, அவ்வாறு சொல்லவில்லை என்று மறுப்பது வேடிக்கையாக இருக்கிறது. ஆக பெரியார் பக்தர்கள் விசுவாசத்துடன், பாம்பிற்கு பூணூல் போட்டிருக்கலாம், ஆனால், பன்றிதான் பிடித்திருக்கிறது போலும்!

© வேதபிரகாஷ்

16-06-2022


[1] தமிழ்.ஒன்.இந்தியா, வளர்ச்சியடையாத மாநிலங்களுக்கு தான் இந்தி.. அது நம்மை சூத்திரர்கள் ஆக்கும்!” டிகேஎஸ் இளங்கோவன் பரபர By Vigneshkumar Published: Monday, June 6, 2022, 16:50 [IST].

[2] https://tamil.oneindia.com/news/chennai/hindi-language-of-underdeveloped-states-will-make-us-shudras-says-dmk-mp-tks-elangovan-461144.html

[3] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், இந்தி எதிர்ப்பு சூத்திரர் சர்ச்சை: டிகேஎஸ். இளங்கோவனை கண்டித்த பா.., Written by WebDesk, Updated: June 7, 2022 1:33:57 pm

[4] https://tamil.indianexpress.com/tamilnadu/bjp-condemns-tks-elangovan-for-his-anti-hindi-shudra-comment-463963/

[5] தினமணி, ஹிந்தி குறித்துப் பேசியது என்ன? டிகேஎஸ் இளங்கோவன் விளக்கம், By DIN  |   Published On : 06th June 2022 06:21 PM  |   Last Updated : 06th June 2022 06:25 PM.

[6] https://www.dinamani.com/tamilnadu/2022/jun/06/hindi-will-reduce-tamils-to-status-of-shudras-says-dmk-mp-3857247.html

[7] தமிழ்.ஏபிபி.லைவ், என் கருத்துக்கு வலுசேர்க்கவே அந்த வார்த்தையை பயன்படுத்தினேன்” : டி.கே.இளங்கோவன் MP, By: ஐஷ்வர்யா சுதா,Published at : 06 Jun 2022 09:11 PM (IST) ,  Updated at : 06 Jun 2022 09:05 PM (IST),

[8] https://tamil.abplive.com/news/india/entry-of-hindi-has-divided-people-in-south-dmk-mp-defends-his-shudra-remark-55259

[9] நூலின் மொத்தப் பக்கங்கள் 385, விலை 40 அமெரிக்கன் டாலர். வெளியீடு: ஹெக்சிஸ், அரிசோனாலி அமெரிக்கா.  இந்தியாவில் இருந்து கணிதப் பேராசிரியர் வசந்தா கந்தசாமி, மற்றும் அமெரிக்காவில் இருந்து புளோரன்டைன் ஸ்மாரன்டேக் என்பவரும் சேர்ந்து எழுதிய புத்தகம் இது.

[10] கி. வீரமணி, பெரியாரை உலக மயமாக்குவோம், கீற்று, பிப்ரவரி 2006.

[10] http://keetru.com/thaagam/feb06/veeramani.php

[11] [10] http://keetru.com/thaagam/feb06/veeramani.php

கருப்புக் கொடி போராட்டமும் – வன்முறையும் – கவர்னரைக் கேவலமாகத் திட்டுவது, வார்த்தை-வன்முறைகளால் தாக்குவது, ஒருமையில் பேசித் திட்டுவது முதலியன வள்ளுவர் போற்றும் நெறிகள் ஆகுமா? தமிழ் கலாச்சாரத்திற்கு தகுமா? நடப்பது எதைக் காட்டுகிறது? (3)

ஏப்ரல் 28, 2022

கருப்புக் கொடி போராட்டமும் – வன்முறையும் – கவர்னரைக் கேவலமாகத் திட்டுவது, வார்த்தை-வன்முறைகளால் தாக்குவது, ஒருமையில் பேசித் திட்டுவது முதலியன வள்ளுவர் போற்றும் நெறிகள் ஆகுமா? தமிழ் கலாச்சாரத்திற்கு தகுமா? நடப்பது எதைக் காட்டுகிறது? (3)

1953ல் நேருவுக்கு எதிராக கருப்புக் கொடி காட்டியது[1]: இந்தி எதிர்ப்பு பற்றி கேள்வி பட்ட நேரு அது, “அர்த்தமற்றது,” என்று ஆங்கிலத்தில் சாடினார். இதனால், திமுக பொத்க் குழுவில் நேருவுக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம் நடத்த வேண்டும் என்று தீர்மானம் போட்டது. 1953ல் ஜூலை 13 அன்று கூடிய திமுக செயற்குழு கூட்டத்தில் நேருவின் இந்தி திணிப்புக்கு எதிராக கருப்புக் கொடி காட்டுவது என முடிவானது. அதன் படி 15 ஆம் தேதி ரயில் மற்றும் விமானநிலையம் முற்றுகையிடப்பட்டது. அன்று டால்மியாபுரம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு கருணாநிதி கைதானார். “இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்திற்கு எதிரானவர்கள் இந்த நாட்டிற்கே எதிரானவர்கள்” என நேரு கண்டிக்கும் அளவுக்கு  விஷயம் விவகாரமானது. இதையொட்டி ராஜாஜி தமிழகம் வரும்போதெல்லாம் கருப்புக் கொடி மறியலுக்கு அவர் ஆளானார். இதே இந்தி திணிப்புக்கும் எதிராகவும் ‘வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது’ என்ற கருத்திற்கு வலுசேர்க்கும் விதத்தை காட்டவும் அண்ணாவும் மத்திய அமைச்சர்கள் வரும்போதெல்லாம் கருப்புக் கொடி போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார். அதனையொட்டி மத்திய தகவல் ஒலிப்பரப்புத்துறை அமைச்சர் ரங்கநாத் ராமச்சந்திர திவாகருக்கு எதிராக அண்ணா காலத்தில் கருப்புக் கொடிக் காட்டப்பட்டது.

1977ல் இந்திராவுக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம் – வன்முறையில், கொலைமுயற்சியில் முடிந்தது: நேருக்கு கருப்புக் கொடி காட்டிய திமுக அவரது மகள் இந்திராவையும் திமுக விட்டு வைக்கவில்லை. 1977ல் அவர் சென்னை வந்தபோது அவருக்கு எதிராக ஒரு கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் அரங்கேற்றப்பட்டது. மிசாவை எதிர்த்தும் நெருக்கடி நிலை பிரகடணத்தை எதிர்த்தும் தங்களின் எதிர்ப்பை பதிய வைக்கவே இப்போராட்டம் நடத்தப்பட்டது. அன்றுதான் மதுரையில் இந்திரா திமுகவினரால் தாக்கப்பட்டார். அன்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த பழ நெடுமாறன் அந்த ஆபத்தில் இருந்து இந்திராவைக் காப்பாற்றி அனுப்பி வைத்தார். அந்தச் அம்பவம் நெடுமாறன் அரசியல் வரலாற்றில் அழியாத சுவடாக பதிவானது. கருப்புக் கொடி ஆர்பாட்டம், இவ்வாறு கொலைமுயற்சி வரை சென்றதும் நிதர்சனம் ஆனது. Indira Gandhi Priyadarshini Nehru vs M. Karunanidhi, M. Muthu & Ors வழக்கு உச்சநீதி மன்ற வரை சென்றது. பிறகு, காங்கிரஸ்-திமுககூட்டணி ஏற்பட்டவுடன் மறாக்கப் பட்டது.

அட்வொகேட், சட்டம் படித்த மேதை பிரதமருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டுவது, கவர்னரைக் கேவலமாகத் திட்டுவது எப்படி?: மதுரையை சேர்ந்தவர் வக்கீல் பசும்பொன் பாண்டியன். இவர் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளராக இருந்து வருகிறார்[2]. இவர் தமிழக கவர்னர் ஆர். எம். ரவி குறித்து அவதூறாக பேசியதாக போலீசார் 22-04-2022 அன்று இரவு வக்கீல் பசும்பொன் பாண்டியனை கைது செய்தனர்[3]. முன்னதாக அவரிடம் விசாரணை நடத்துவதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திடீர்நகர் காவல் நிலையத்திற்கு பசும்பொன் பாண்டியன் அழைத்துவரப்பட்டார் இந்த தகவலை அறிந்த அவரது ஆதரவாளர்கள் திடீர் நகர் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது. சென்ற ஜனவரி 2019ல் கூட, மோடிக்கு எதிராக கருப்புக் கொடி காட்ட திட்டமிட்டதற்கு கைது செய்யப் பட்டார்[4]. அப்பொழுதும், இதே போன்ற கலவர நிலவரம் ஏற்பட்டது[5].

தமிழகத்தில் இவை, ஏன், எப்படி நடக்கிறது, நடக்கவேண்டும், தூண்டுவது என்ன, தூண்டுகிறவர்கள், ஊக்குவிப்பவர்கள் யார்?:

  1. பிரதம மந்திரியை இழிவு படுத்துவது, படத்தை நீக்குவது, உடைப்பது முதலியன மிகவும் கேவலமான செயல்கள்.
  2. கவர்னரை கெட்ட வார்த்தைகள் கொண்டு திட்டுவது, அவமரியாதை செய்வது, அவற்றை வெளிப்படையாக டிவி-தொலைக்காட்சிகளில் காட்டி ஒலி-ஒளிபரப்புவது, அடிமட்ட ஒழுன்கீனமானது[6].

ஒரு அட்வொகேட் அவ்வாறு செய்வது, எத்தகைய கீழ்த்தரமான வேலைகளீலும் இறங்கத் தயயாராக இருக்கின்றனர் என்று தெரிகிறது.

தமிழகத்தில், அவொகேட், பி.எல், வழக்கறிஞர் என்றெல்லாம் சொல்லிக் ஒள்பவர்கள் பல குற்றங்கள், ஒழுங்கீனங்கள், சட்டமீறல்கள் முதல்யவற்றில் ஈடுபடுவதும் நோக்கத் தக்கது.

  • உள்துறை அமைச்சர் வரும் போது கருப்புக் கொடி காட்டுவது, “திரும்பி போ” என்றெல்லாம் கத்துவது, மிக்க அநாகரிகமான, ஜனநாயகமில்லாத, காட்டுமிராண்டித் தனமானது.
  • இருப்பினும், இவையெல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன, போலீஸாரும் அனுமதித்து, வேடிக்கைப் பார்ப்பது போல விடியோக்கள் / செய்திகள் காண்பிக்கப் படுகின்றன.
  • கொம்புகள் முதலியவை கொண்டுவருவதைத் தடுக்காமல், அவற்றை தூக்கியெறியும் போது,  பிடித்துக் கொள்வது, கீழே விழுந்ததைக் கொண்டு வருவது முதலியனவும், மிக்க அவமரியாதையான, கீழ்த்தரமான செயலை செய்வது போலிருக்கிறது.
  • ஒரு படி சென்றால், அடிக்க செல்வார்கள், அதுவும் நிகழ்வேறும் என்ற நிலை உருவாகிறது.
  • கடந்த 50-60 வருடங்களாக திராவிட பாரம்பரியம், திராவிடம், தமிழ் என்றெல்லாம் பேசி வருகின்ற திக-திமுக போன்ற திராவிடக் கட்சியினர்களிடமிருந்து தான் இவை வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
  • அதே போல, மாணவ-மாணவியர்களின் ஒழுங்கினங்களும் வீடியோக்கள் மூலம் வெளிப் பட்டுக் கொண்டிருக்கின்றன.
  • ஒரு பக்கம், திருவள்ளுவர், திருக்குறள் என்றெல்லாம் பேசி ஆர்பாட்டம் செய்து வரும் பொழுது, குறளைப் போற்றும் இவர்கள் இத்தகைய குற்றங்கள், அநாகரிகங்கள் முத்லியவற்றில் எவ்வாறு ஈடுபடுவர் என்று தெரியவில்லை.
  • முதலில், இவர்களையெல்லாம், மனோதத்துவ முறையில் சோதித்து, ஒழுங்காகும் வரையில், விலக்கி வைக்க வேண்டும், அப்பொழுது தான் சமுதாயம் உருப்படும். இல்லையென்றால், இவற்றைப் பார்த்து, மற்றவர்களும் இதே மாதிரியான ஒழுங்கீனங்களில் ஈடுபடுவர், அவற்றைப் பெருமையாகவும் நினைத்துக் கொள்ளலாம்.

© வேதபிரகாஷ்

23-04-2022


[1] The first PM welcomed by DMK’s black flags was Nehru in 1953. It was the Dravidian party’s response to Nehru’s remark that the anti-Hindi agitations were “non-sense” protests. An executive committee meeting of DMK party on July 13,  1953, resolved that the party would block trains to protest Nehru’s “derogatory” remarks against the anti-Hindi protests and wave black flags to Nehru when he next visits Tamil Nadu. Many DMK leaders and cadre were arrested and jailed when they blocked trains on July 15, 1953. M Karunanidhi, who reportedly blocked a train at Dalmiapuram in Tiruchy district, was among them. When Nehru visited Tamil Nadu a few months later, there were only very less number of DMK cadre outside the prisons and they managed to wave black flags to Nehru and get arrested. 

[2] தினத்தந்தி, அ.தி.ம.மு.க. பொதுச்செயலாளர் கைது செய்யப்பட்டார், ஏப்ரல் 23, 11:35 PM.

[3] https://www.dailythanthi.com/amp/News/Districts/2022/04/23233537/arrest.vpf

[4] விகடன், பிரதமருக்குக் கறுப்புக்கொடி காட்டுவதாக அறிவித்த பசும்பொன் பாண்டியன் கைது!, செ.சல்மான் பாரிஸ், Published:26 Jan 2019 7 PM; Updated:26 Jan 2019 7 PM. https://www.vikatan.com/news/policies/148092-pasumpon-pandiyan-arrested-in-madurai

[5] https://www.vikatan.com/news/policies/148092-pasumpon-pandiyan-arrested-in-madurai

[6] Advocate S Pasumpon for Pandian, general secretary of Anna Dravida Makkal Munnetra Kazhagam, was arrested by police in Madurai his alleged provocative speech and derogatory comments against governor RN Ravi in a YouTube video. Police said that in a video interview to a private media channel on February 4, 2022 and uploaded in YouTube, the Dravidian outfit leader made several unsavoury, obscene and insulting remarks and threats against governor R N Ravi. He targeted the governor for returning the anti-NEET bill seeking exemption for Tamil Nadu from the test. It was also alleged to be provocative with intent to promote enmity and creating disharmony among the public. A case was registered at Karimedu police station against Pandian under IPC sections 294 (b), 504, 505 (2), and 153 (A). Condemning the arrest VCK leader Thol Thirumavalavan and INL have asked the government to release him. “Various BJP and right wing leaders have been making comments with the intent to promote enmity between religious groups but no action has been taken against any of them,” alleged INL state secretary Haji Rafeeq.

Times of Indiia, Dravidian outfit leader arrested in Madurai for provocative speech, remarks against TN governor, Sukshma Ramakrishnan / TNN / Apr 24, 2022, 20:00 IST.

https://timesofindia.indiatimes.com/city/madurai/dravidian-outfit-leader-arrested-in-madurai-for-provocative-speech-remarks-against-tn-governor/articleshow/91054086.cms

கருப்புக் கொடி போராட்டமும் – வன்முறையும் – கவர்னரைக் கேவலமாகத் திட்டுவது, வார்த்தை-வன்முறைகளால் தாக்குவது, ஒருமையில் பேசித் திட்டுவது முதலியன வள்ளுவர் போற்றும் நெறிகள் ஆகுமா? தமிழ் கலாச்சாரத்திற்கு தகுமா? நடப்பது எதைக் காட்டுகிறது? (1)

ஏப்ரல் 28, 2022

கருப்புக் கொடி போராட்டமும் – வன்முறையும் – கவர்னரைக் கேவலமாகத் திட்டுவது, வார்த்தை-வன்முறைகளால் தாக்குவது, ஒருமையில் பேசித் திட்டுவது முதலியன வள்ளுவர் போற்றும் நெறிகள் ஆகுமா? தமிழ் கலாச்சாரத்திற்கு தகுமா? நடப்பது எதைக் காட்டுகிறது? (1)

மத்திய அரசியல்தலைவர்கள், பிரதமமந்திரி முதலியோரை எதிர்ப்பது, கொல்வது தமிழகத்தில் நடந்துள்ள செயல்களாக இருக்கின்றன: காமராஜரை மிரட்டியது, பக்தவட்சலத்தைத் தாக்க திட்டமிட்டது, இந்திரகாந்தியைத் தாக்கியது ( The attack on Indira Gandhi by DMK men during her visit to Madurai on October 29, 1977,  உண்மையில் கொலை செய்ய திட்டம் போட்டது[1]), எம்ஜிஆரை தூஷித்தது, ஜெயலலிதாவைத் தாக்கியது என்பதெல்லாம் தமிழகத்தில் நடந்த உண்மையான நிகழ்ச்சிகளாகும். எல்லாவற்றிற்கும் மேலாக, பிரதமந்திரியையே / . ராஜிவ் காந்தியை இங்குதான் குண்டுவெடித்து கொலைசெய்துள்ளனர். அந்த கொலையாளிகளுக்கும் வக்காலத்து வாங்கி வருகின்றனர். மோடி-எதிர்ப்பு, மோடி-துவேசம் என்பதனை கொள்கையாகக் கொண்டு, அதனை கருணாநிதி மூலமே வெளிப்படுத்தியுள்ளனர். இப்பொழுது, அதே மிரட்டும் வன்முறை மூலம் ஆளுனரை மிரட்டப் பார்க்கின்றனர். பிரதம மந்திரி படம் வைக்கக் கூடாது என்று திமுகவினர் வெளிப்படையாக தேசவிரோதத்தை வளர்த்து வருகிறார்கள். இதை ஏதோ பெரிய வீரதீர செயலாக நினைக்கின்றனர். ஏனெனில், போலீஸாரும் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. முதலமைச்சரும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார். இவையெல்லாம் மேன்மேலும் வன்முறைக்குத் தான் வழி வகுக்கும்.

19-04-2022 கவர்னர் மயிலாடுதுறை வருகை: தெலங்கானாவில் நடைபெற உள்ள புஷ்கர விழாவுக்காக மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்தில் இருந்து ஞானரத யாத்திரை ஒன்று கடந்த 19 ஆம் தேதி கிளம்பியது[2]. இதனை தொடங்கி வைப்பதற்காக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை தந்தார்[3]. அப்பொழுது திகவினர், ஆதீனம் அவரி வரழைக்கக் கூடாது என்று எதிர்த்து செய்திகள் வெளியிட்டு ஆர்பாட்டம் செய்தனர்[4]. மயிலாடுதுறை மாவட்டத்தில் நடந்த இந்த அராஜகம் தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் தி.க.,வை சேர்ந்தோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்[5]. சிதம்பரம் அண்ணாமலை பல்கலை பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற கவர்னர் ரவி, நேற்று காலை, மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் அபிராமி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தார்[6]. அங்கிருந்து, தருமபுரம் ஆதின மடத்திற்கு வந்தார். தமிழக பா.ஜ., துணை தலைவர் முருகானந்தம் தலைமையில், அக்கட்சியினர் வரவேற்றனர்.

தருமபுரம் ஆதினம் விழாவில் கலந்து கொண்டது: தருமபுரம் ஆதினம் சார்பில், கவர்னருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர், தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளிடம், கவர்னர் ஆசி பெற்றார். மடத்தில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை, கவர்னர் திறந்து வைத்தார். அங்கிருந்த பழங்கால ஓலைச்சுவடிகள், கலைப் பொருட்கள், இசைக் கருவிகளை பார்வையிட்டார். பின், தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லுாரியின் பவள விழா கலை அரங்கத்திற்கு அடிக்கல் நாட்டினார். ஆதீனம் சார்பில் அவருக்கு, நடராஜர் உருவச்சிலை நினைவு பரிசாக வழங்கப்பட்டது. விழாவில், தருமபுரம் ஆதீனம் பேசியதாவது: “கவர்னர் பெயர் ரவி. ரவி என்றால் சூரியன். தமிழகத்தை ஆள்பவர்களின் சின்னம் சூரியன். தமிழகத்தில் இரண்டு சூரியன்கள் உள்ளது தெய்வச் செயல். கால்நடைகளை சரியாக பராமரிக்காததால் தான் கொரோனா போன்ற கொடிய நோய்களுக்கு ஆளாகி உள்ளோம். பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகளை நீக்கியதால் தான் பண்பாடு மற்றும் கலாசாரம் சீர்கெட்டு உள்ளது. அதனால், கல்வி நிலையங்களில் மீண்டும் நீதி போதனை வகுப்புகளை துவங்க வேண்டும்,: இவ்வாறு ஆதீனம் பேசினார்.

கவர்னர் ரவி பேசியதாவது: “இந்த புனித இடத்திற்கு வர வாய்ப்பளித்த குருமகா சன்னிதானத்திற்கு நன்றி. இங்கு வந்த பின் தான், நான் உண்மையான இந்தியன் என்ற உணர்வு ஏற்படுகிறது. குருமகா சன்னிதானம் சமயம் சார்ந்த பல்வேறு பணிகள் மட்டுமன்றி, நாட்டு மக்களுக்கு பல்வேறு பணிகளையும் செய்து வருகிறார். கொரோனா, பூகம்பம், கார்கில் போர் போன்ற சமயங்களில் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நிறைய உதவிகளை செய்துள்ளார். அடுத்த 25 ஆண்டுகளில் அதாவது 2047ல், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்ப துறைகளில் மட்டுமல்லாது, ஆன்மிக வளர்ச்சியிலும், இந்தியா முதலிடம் வகிக்கும். உலக மக்கள் மக்கள் அனைவரும், தினமும் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். நாகரிகம், கலாசாரம், கல்வி, நீதி போதனைகள், பண்பாடு ஆகியவற்றால் மட்டுமே, இதற்கு தீர்வு கிடைக்கும். மதத்தால், மொழியால், உணர்வால் இந்தியர்கள் பிரிந்து இருந்தாலும், அனைவரும் ஒரே குடும்பம்,” இவ்வாறு அவர் பேசினார். பின், தெலுங்கானாவில் நடக்கும் புஷ்கரம் விழாவுக்கு, தருமபுரம் ஆதீனம் மேற்கொள்ளும் ஞானரத யாத்திரையை, கவர்னர் ரவி கொடியசைத்து துவக்கி வைத்தார். கவர்னர் வருகையை ஒட்டி, ஐ.ஜி., பாலகிருஷ்ணன் தலைமையில், 2,௦௦௦ போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

கல் வீச்சு, கொடி கொம்புகள் வீச்சு: விழா முடிந்ததும், திருவாவடுதுறை ஆதீன மடத்திற்கு சென்ற கவர்னர், 24வது குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார். திருக்கடையூரில் இருந்து, தருமபுரம் ஆதீனத்திற்கு கவர்னர் ரவி சென்ற வழியில், மன்னம்பந்தல் கிராமத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் கழகம் மற்றும் பிற அமைப்புகளை சேர்ந்தவர்கள், கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கறுப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கவர்னர் பயணித்த கார் மீதும், உடன் சென்ற பாதுகாப்பு அதிகாரிகள் கார்கள் மீதும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், கறுப்பு கொடிகளையும், கற்களையும் வீசினர். இதனால், அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 96 பேரை, போலீசார் கைது செய்தனர்.

முரண்பட்ட அறிக்கைகள், புகார்கள்: கவர்னருக்கு எதிராக போராட நூற்றுக்கணக்கானோர் கூடியிருப்பது தெரிந்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதையும் போலீசார் எடுக்காமல், ஆர்ப்பாட்டத்திற்கு வழிவகுத்து கொடுத்தது, மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திரும்பினார். சிதம்பரம், திருக்கடையூர், தருமபுரம் என, மூன்று நாட்கள் (19, 20 மற்றும் 21-04-2022) பயணத்தை முடித்து, 21-04-2022 அன்று பகல், 2:௦௦ மணிக்கு, கவர்னர் சென்னை திரும்பினார். ‘கவர்னரின் பாதுகாப்பு வாகனங்கள் மீது கற்கள், கொடிகள் வீசியதாக கூறப்படுவதில் உண்மை இல்லை’ என, டி.ஜி.பி., தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, டி.ஜி.பி., அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: “கவர்னர் ரவி, நேற்று காலை, 7:50 மணிக்கு, கடலுார் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்பட்டு, 8:30 மணிக்கு மயிலாடுதுறை, ஆணைக்காரன் சத்திரம், கொள்ளிடம் சோதனை சாவடிக்கு வந்தடைந்தார். பின், திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின், தருமபுரம் ஆதீனத்தை சந்திக்க புறப்பட்டார்.கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மார்க்சிஸ்ட் கம்யூ., மாவட்ட செயலர் சீனிவாசன் உள்ளிட்ட, 73 பேர், .வி.சி., கல்லுாரி எதிரே வடகரை சாலையில் கறுப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டம் செய்தனர்”.

© வேதபிரகாஷ்

23-04-2022


[1]   இந்திரா காந்தி சுப்ரீம் கோர்ட்டில் கருணாநிதி, மதுரைமுத்து என்று 9 பேர் மீது வழக்குத் தொடுத்து, பிறகு, அரசியல் கூட்டணி போன்ற விவகாரங்களால் 1977ல் அமுக்கப் பட்டு விட்டது.

[2] பிபிசி தமிழ், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மீது தாக்குதல் நடத்தப்பட்டதா? போராட்டம் நடத்தியவர்கள் என்ன சொல்கிறார்கள்?, ஆ. விஜயானந்த், 20 ஏப்ரல் 2022

[3] https://www.bbc.com/tamil/india-61160300

[4] விடுதலையில் செய்தியைக் காணலாம். திகவினரின் போராட்டத்தையும் கவனித்திருக்கலாம். 

[5] தினமலர், கவர்னர் ரவி பாதுகாப்பு கார் மீது தாக்குதல்: மயிலாடுதுறையில் அராஜகம், Updated : ஏப் 20, 2022  10:11 |  Added : ஏப் 19, 2022  23:27.

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=3011204