ஜாபர்சாதிக்போதைமருந்துகடத்தலில்மாட்டிக்கொண்டது – 15-02-2924 முதல் 09-03-2024 வரைஎங்கிருந்தான்?இந்தியாபோதைமருந்துகூட்டங்களினின்றுவிடுபடுமா? (5)
15-02-2924 [வியாழக்கிழமை] முதல் 09-03-2024 [சனிக்கிழமை] வரைஎங்கிருந்தான்?: சாதாரணமாக குற்றவாளிகளுக்கு ஒரு மணி நேரம் அவகாசம் கொடுத்தாலே அவர்கள் தமக்கு எதிராக உள்ள அத்தனை ஆதாரங்களையும் அழித்துவிட்டு தப்பித்துக் கொள்ளத் தான் மிக வேகமாக செயல்படுவர் என்பது பொதுவாக குற்றவியல் வல்லுநர்கள் தெரிந்த விஷயமாக எடுத்துக் காட்டுகின்றனர்ர். அந்நிலையில் இப்பொழுது இந்தியாவில் மின்னணு யுகத்தில் எல்லா உபகரணங்களும் வைத்துள்ள நிலையில். இத்தனை நாட்கள் இவன் ரகசியமாக இருந்துள்ளாரன் என்பது திகைப்பாகத்தான் இருக்கிறது. ஆகவே அந்த குறிப்பிட்ட இடங்களில் எல்லாமே இவனுக்கு உதவியாளர்கள் அல்லது அவ்வாறு ரகசியமாக தங்க வைத்து அனுப்பி வைக்கக்கூடிய நண்பர்கள் இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. அதனால் தான் எத்தனை நாட்கள் அவன் தாராளமாக தங்கி இருந்து, தமிழகத்திலிருந்து ஜெய்பூர் வரைக்கும் சென்று இருக்கிறான். பிறகு தான் ஏதோ தகவல் கிடைத்த பிறகு, அவனை அங்கு சென்று பிடித்துள்ளனர்.
என்.சி.பி. அதிகாரிகொடுத்த விவரங்கள்: இது குறித்து ஞானேஸ்வர்சிங் என்.சி.பி. அதிகாரி நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு[1] : போதைப்பொருள் கடத்தலை தடுக்க முழு வீச்சில் நடவடிக்கை எடுத்துள்ளோம்[2]. திருவனந்தபுரம், மும்பை, ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் பதுங்கி இருந்துள்ளார். பங்களா ஒன்றில் பதுங்கியிருந்த ஜாபர் சாதிக்கை டில்லியில் கைது செய்தோம். சர்வதேச போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். டில்லி மற்றும் தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் மலேசியாவுக்கு ஜாபர் சாதிக் கடத்தி வந்தார். சினிமா, கட்டுமானத்துறையில் முதலீடு: போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு சம்பாதித்த பணத்தை சினிமா, ரியல் எஸ்டேட், கட்டுமானத்துறையில் ஜாபர் சாதிக் முதலீடு செய்துள்ளார். போதைப் பொருள் சம்பந்தப்பட்ட பணம் எங்கெங்கு முதலீடு செய்யப்பட்டதோ அது குறித்து விசாரிக்கப்படும். 3,500 கிலோ வரையிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஜாபர் சாதிக்கிற்கு முக்கிய பிரமுகர்கள் பலருடன் தொடர்பு உள்ளது. உணவுப்பொருள் ஏற்றுமதி என்ற பெயரில் போதைப்பொருட்களை பல்வேறு நாடுகளுக்கு ஜாபர் சாதிக் கடத்தி உள்ளார்.
தொடர்புடையஅரசியல்வாதிகள்யார்?: அரசியல் கட்சிகளுக்கு போதைப்பொருட்கள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தை வழங்கி உள்ளார். மங்கை என்ற பெயரில் தமிழ் திரைப்படம் ஒன்றை ஜாபர் சாதிக் தயாரித்துள்ளார். சென்னையில் ஓட்டல் ஒன்றை ஆரம்பித்துள்ளார். தமிழகத்தில் சில திரைப்பிரபலங்கள் உடன் தொடர்பு இருப்பதாக ஜாபர் சாதிக் வாக்குமூலம் அளித்துள்ளார். விசாரணைக்குப்பின் ஜாபருடன் தொடர்புடையவர்கள் பெயர்களை வெளியிடுவோம். கடந்த 25ம் தேதி கைது செய்யப்பட்ட போதை கடத்தல் நபர்கள் 3 பேர் கொடுத்த தகவலின் படி ஜாபர் சாதிக் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளில் 3,500 கிலோ சூடோபெட்ரின் போதைப்பொருட்களை ஜாபர் சாதிக் கடத்தியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
ஜாபர்சாதிக்நிரபராதிஎன்றுவாதிடும்அவனதுவக்கீல்: இந்நிலையில், ஜாபர் சாதிக்கின் வழக்கறிஞர்கள் தந்தி டிவி-க்கு அளித்த பேட்டியில், போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் நிரபராதி என்றும், அவரது குடும்பத்தினர் சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்[3]. ஜாபர் சாதிக்கின் வழக்கறிஞர் டி.ஆர். பிரபாகரன் தந்தி டிவி-க்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது[4]: “15.02.2024 அன்றுகிட்டத்தட்ட 50 கிலோசூடோபெட்ரைன்என்கிறபோதைபொருளைடெல்லிஎன்.சி.பிபறிமுதல்செய்திருக்கிறார்கள். அதுதொடர்பாக 3 பேர்களைகைதுசெய்துஇருக்கிறார்கள். அந்த 3 பேரிடம்வாக்குமூலம்பெற்றுஅதன்அடிப்படையில்இன்று (09.03.2024) ஜாபர்சாதிக்கைகைதுசெய்திருக்கிறார்கள்[5]. அவரைபாட்டியாலாநீதிமன்றத்தில்இன்றுஆஜர்படுத்தினார்கள்[6]. அப்படிஆஜர்படுத்தும்போதுநாங்கள்அவருடையவழக்கறிஞர்களாகநீதிபதியிடம்இந்த 50 கிலோசூடோபெட்ரைன்என்.சி.பிசட்டத்தில்வரவில்லை, அதுபோதைப்பொருள்இல்லைஎன்றுகூறிஅவருக்குஉடனேஜாமீன்கொடுக்கவேண்டும்என்றுவாதிட்டோம். இதற்குநீதிபதி, என்.சி.பிஅதிகாரிகளிடம்விளக்கம்கேட்டார். இந்தவழக்கில்கைதானவர்களிடம்பெற்றவாக்குமூலத்தின்அடிப்படையில்கைதுசெய்திருக்கிறார்கள். ஜாபர்சாதிக்கிடம்இருந்துஎந்தஒருபோதைப்பொருளும்பறிமுதல்செய்யப்படவில்லைஎன்பதைநாங்கள்அழுத்தமாககூறினோம்.”
என்.சி.பி 15 நாள்காவல்கேட்டதற்கு 7 நாட்கள்கொடுக்கப்பட்டது:என்.சி.பிநீதிபதிஇல்லாததால், இந்தவாழ்க்கைவிசாரித்தநீதிபதிபொறுப்புநீதிபதிஎன்பதால், அவரைநாங்கள்இப்போதைக்குநீதிமன்றகாவலில்வைக்கிறோம். நீங்கள்உங்களுடையஎந்தவாதமாகஇருந்தாலும்ஜாமீன்கோரும்போதுவாதிடுங்கள். அதற்குப்பிறகுநீதிமன்றம்அவருக்குஜாமீன்கொடுக்கலாமாவேண்டாமாஎன்றுபரிசீலனைசெய்யும்என்றுகூறினார். அதுஇல்லாமல்என்.சி.பிதரப்பில் 15 நாள்காவலில்விசாரிக்கஅனுமதிகேட்டார்கள். நாங்கள்அனுமதிஅளிக்கக்கூடாதுஎன்றுகூறினோம். அவரிடம்விசாரிப்பதற்குஎதுவுமேஇல்லை, அவர்நிரபராதிஎன்றுநாங்கள்கூறினோம். அப்போதுநீதிபதி, நீங்கள்ஏழுநாள்காவல்வைத்துக்கொள்ளலாம்என்றுஎன்.சி.பிபோலீசிடம்கூறிஉத்தரவிட்டார். என்.சி.பிஅதிகாரிகள், ஜாபர்சாதிக்கின்அடிப்படைஉரிமைகளைமீறிஇருக்கிறார்கள். அவருடையகுடும்பத்தினர்வயதானபாட்டி, அவருடையமனைவி, அவருடைய 2 மைனர்மகள்கள், ஒருமகன்எனஅனைவரையும்சட்டவிரோதமாகபிடித்துவைத்திருக்கிறார்கள்,” என்று ஜாபர் சாதிக்கின் வழக்கறிஞர் டி.ஆர். பிரபாகர் கூறினார்.
புதிர்களும், கேள்விகளும்: சாதாரணமான, இந்தியர்களுக்கு, இத்தனை புதிர்களும், மர்மங்களும் வேண்டாம். சமூகத்தை சீரழிக்கும் போதை மருந்து வேண்டாம். அத்தகைய சமூக தீவிரவாதிகளும் தேவையில்லை:
தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக் கைது – போதைப்பொருள் கடத்தல் வழக்கில் நடவடிக்கை, விவரம் அறிவிக்கப் படவில்லை!
ஜெய்பூரில் கைதான ஜாபர் சாதிக் டில்லி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப் பட்டு, பிறகு சென்னைக்குக் கொண்டு வர உறைப்படி, நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ஞானேஸ்வர்சிங் என்.சி.பி. அதிகாரி பங்களா ஒன்றில் பதுங்கியிருந்த ஜாபர் சாதிக்கை டில்லியில் கைது செய்தோம்.
திருவனந்தபுரம், மும்பை, ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் பதுங்கி இருந்து, தில்லியில் மறைந்திருந்த போது கைது செய்யப் பட்டான்!
தமிழகத்தின் சில திரைப்பிரபலங்கள் உடன் தொடர்பு இருப்பதாக ஜாபர் சாதிக் என்.சி.பியிடம் வாக்குமூலம் அளித்துள்ளாதாகத் தெரிகிறது.
போதைப் பொருட் வருமானத்தை சினிமா, ஓட்டல், ரியல் எஸ்டேட், கட்டுமானத்துறைகளில் முதலீடு செய்யப் பட்டுள்ளது.
இவனது போதை மருந்து வியாபாரம் தில்லி, தமிழகம் வழியாக மற்ற இடங்களுக்குப் பரவி, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, மலேசியா நாடுகளுக்குப் பாரவியது.
திருவனந்தபுரம், மும்பை, புனே, ஹைதரபாத் சென்று ஜெய்ப்பூர் வந்துள்ளான். அங்கு பிடிக்கப் பட்டு, தில்லியில் கைது செய்யப்பட்டான்!
ஆக, இவ்விடங்களில் இருந்த தொடர்புகள், எல்லாம் உதவி செய்தவர்கள் முதலியவர் மூலம் மேலும் விவரங்கள் வெளிவரலாம்.
போதை சமுதாயத்தை சீரழிப்பது, நாசமாக்குவது, அத்தகையதை வியாபாரமாக்கிய இவர்கள்முறையாக தண்டிக்கப் படவேண்டும்.
ஜாபர்சாதிக்குறித்துசெய்திசேகரிக்கசென்றசேனல்ரிப்போர்ட்டர்கொடூரதாக்குதல்.. பிடிபட்டகட்சிநிர்வாகி:. போதை பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவான ஜாபர் சாதிக் குறித்து, செய்தி சேகரிக்க சென்ற தனியார் செய்தி தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் தாக்கப்பட்ட விவகாரத்தில், ஒருவரை போலீசார் கைது செய்தனர். இதில், திமுக நிர்வாகிகளான கலைச்செல்வன் மற்றும் பச்சையம்மாள் ஆகியோர் தனியார் செய்தி தொலைக்காட்சி ஒளிப்பதிவாளரை தாக்கி, அறைக்குள் அடைத்து கொடுமை படுத்தியதாக கூறப்படுகிறது[1]. புகாரின் அடிப்படையில் இது குறித்து விசாரணை நடத்தி வந்த போலீசார், ஆபாசமாக பேசுதல், சிறை வைத்து காயம் விளைவித்தல் என இருவர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்த நிலையில், கலைச்செல்வனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்[2]. ஊடகத்தினர் மீது தாக்குதல், ஊடகத்தின் குரல்வளை நெறிப்பு, கருத்து சுதந்திரம் பறிபோதல் என்றெல்லாம் போன்ற பேச்சும் இல்லை, விவாதமும் இல்லை. அரசியல் கூட்டணி பற்றிதான் தினம்-தினம் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
வங்கிகணக்குகள்முடக்கம்: பொதுவாக இத்தகையோரிடம் பலவித பெயர்களுடன், வங்கிக் கணக்குகள் பலவித காரியங்களுக்கு உபயோகமாக, செயல்படுத்த இருக்கும். வீட்டில் யாருமில்லாததாலும், விவரங்களை சொல்வதற்கும் ஆட்கள் இல்லாததாலும், இருக்கின்ற ஆதாரங்களை வைத்து, நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஆகிறது. அதிகாரிகள், போலீஸார் முதலியோருடன் ஒத்துழைப்புக் கொடுக்காமல் சதாய்த்து வருவதும் தெரிந்தது. மேலும், காலம் தாழ்த்தினால், வங்கிகளில் இருக்கும் பணமும் எடுக்கப் பட்டு, வேறு விவகாரங்களுக்கு உபயோகப் படும். ஜாபர் சாதிக் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் நிலம் மற்றும் வங்கி கணக்குகள் தொடர்புடைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன[3]. இந்த நிலையில், அவர் தொடர்புடைய 8 வங்கி கணக்குகள் இருப்பதும் தெரிந்தது[4]. இதனால், அவற்றை முடக்க தீர்மானம் எடுக்கப் பட்டது[5]. இப்பொழுது, கணக்குகளை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் முடக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது[6].
திரையுலகநிழல்தாதா[7]: ஒரு கட்டத்தில், தொழில் ரீதியாக சிலருடன் பிரச்னை உருவாகி, கடும் நெருக்கடி ஏற்பட்டது. வழக்குகளை எதிர்கொண்ட அவரும், அவரது சகோதரரும் அவற்றில் இருந்து விடுபட்டு, கொஞ்ச நாட்கள் அமைதியாக இருந்தனர். பின், சென்னை பர்மா பஜார் தொடர்பு ஏற்பட, அங்கிருந்தபடியே வெளிநாட்டு பொருட்களை இறக்குமதி செய்து வியாபாரத்தில் ஈடுபட்டனர். கடந்த, 2010 வரை இப்படி சென்று கொண்டிருந்த ஜாபர் சாதிக், அதே பர்மா பஜார் தொடர்பை பயன்படுத்தி, நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான, ஜக்குபாய் படத்தை, திருட்டு வி.சி.டி.,யில் தயாரித்து புழக்கத்தில் விட்டார். இது தொடர்பான பிரச்னையில், ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது, அவருக்கு பின்புலமாக இருந்து உதவியது, தற்போது திரையுலகில் இருக்கும் பிரபலமான இயக்குனர் ஒருவர் தான். இதையடுத்து, ஜாபர் சாதிக்கும், அவரின் சகோதரரும் வெளிநாடுகளில் இருந்து சட்ட அனுமதி பெறாத பொருட்களை எடுத்து வரும் ‘குருவி’யாக செயல்பட துவங்கினர். அப்போது அவர்களுக்கு, சர்வதேச அளவில் போதைப்பொருள் கடத்தும் நபர்களோடு தொடர்பு ஏற்பட்டது. அந்த தொடர்புகளை வைத்து, தமிழகம் வாயிலாக போதைப்பொருட்களை கடத்தி வந்தனர். அந்த வருமானத்தை வைத்து, சினிமாக்காரர்கள், போலீஸ் அதிகாரிகள், அரசியல் முக்கியஸ்தர்கள் என, பல தமிழக வி.ஐ.பி.,க்களுடன் நெருக்கமாகி விட்டனர்.
ரேவ்பார்டிகள்நடத்தப்பட்டது[8]: பணத்தை தண்ணீராக வாரி இரைத்து பலரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த ஜாபர் சாதிக், ஒரு கட்டத்தில் கோயம்புத்துார் பகுதியில் பிரமாதமாக நடந்து வரும், ‘ரேவ் பார்ட்டி’ எனப்படும், போதைப்பொருள் பார்டியை சென்னையிலும் அறிமுகம் செய்து வைத்தார். கிழக்கு கடற்கரை சாலையில், பண்ணை வீடுகளில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட, ‘ரேவ் பார்ட்டி’கள் அடிக்கடி நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சிகளுக்கு, தமிழக அரசியல், சினிமா, தொழில் அதிபர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள் என, பலரும் சென்று வந்துள்ளனர். இதன் வாயிலாக, ஆளும் கட்சியில் மிக மிக முக்கியமான புள்ளிகளுடன் தன் செல்வாக்கை வளர்த்துக் கொண்டார். பல ஆளும் கட்சி பிரமுகர்கள், போலீஸ் உயரதிகாரிகளுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன. தன்னை தேடி மத்திய போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் வருவது தெரிந்ததும், ஜாபர் தலைமறைவாகி விட்டார். அவர் தலைமறைவாவதற்கு முன், யாருடன் போனில் பேசினார் என்ற தகவலை போலீசார் எடுத்துள்ளனர்.
செக்யூலரிஸபோர்வையில்அடிப்படைவாதம்முதலியன[9]: அதில், சினிமா பிரபலங்களும், போலீஸ் அதிகாரிகளும், ஆளும்கட்சி அரசியல் பிரமுகர்களும் தொடர்ச்சியாக, ஜாபரை தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்துள்ளது. குறிப்பாக, சென்னை கிரீன்வேஸ் சாலையில் இருந்து தொடர்ச்சியாக அழைப்புகள் வந்துள்ளதை, போலீசார் கண்டறிந்து உள்ளனர். ஜாபர் சாதிக், திரைப்பட இயக்குனர் அமீர் மற்றும் இஸ்லாமிய மார்க்க பேச்சாளர் அப்துல் பாஸித் புகாரி ஆகியோர் இணைந்து நடத்தி வரும், ‘லா கபே’ என்ற நிறுவனத்தை பற்றியும், பல தகவல்கள் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பல்வேறு மட்டங்களில், பணத்தை வாரிக்கொடுத்து, தன் செல்வாக்கை வளர்த்துக்கொண்ட ஜாபர் சாதிக், மார்க்க போதகர்களிடமும் அணுக்கமாக இருந்தார். அவர்கள் வாயிலாக ஆயுத போராட்ட குழுக்களுக்கும், பண உதவி செய்திருக்கிறார் என்ற கோணத்தில் என்.ஐ.ஏ., விசாரிப்பதாக கூறப்படுகிறது. விசாரணையில் முன்னேற்றம் ஏற்படும் போது, மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லோருமே எதிர்க்க வேண்டிய போதை மருந்து: இன்று உலகம் முழுவதும் போதை மருந்துக்கு எதிராக எல்லா நாடுகளுமே மிகக்கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. மிகப்பெரிய குற்றம் என்பதனால், பைலில் வெளி வரமுடியாத குற்றம், உடனடியாக கைது, சிறை என்று கடினமான நிலைமை இதுதான் உலகமெங்கும் காணப்படுகிறது. ஏனெனில் இது மனிதனுடைய வாழ்க்கையை சீரழித்து, குடும்பங்களை சமூகங்களையும் சீரழித்து, இறுதியில் ஒட்டுமொத்த மனித இனத்தையே பாதிக்கின்ற ஒரு மிகப்பெரிய நோயாக அமைகிறது. கொரோனாவை பார்த்த பிறகு, அதைவிட இது மிகக் கொடுமையான நோய் என்று தோன்றுகிறது ஆகவே நிச்சயமாக எந்த சமூகமும் நாடும் இதனை எதிர்க்கும் என்பது நன்றாகவே புரிகிறது. ஆகவே, இத்தகைய காரியங்கள் தமிழகத்தில் நடப்பது என்பது மிகவும் வருத்தமான விஷயமாகும். ஆகவே எப்படியாவது இத்தகையை குற்றங்கள் ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட வேண்டும்
2020 – மோசடிசெயலில்ஈடுபட்டு, கைதாகி, ஜாமீனில்வெளிவந்து, மறுபடியுமோசடியில்ஈடுபட்டது: சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்தவர் கோபி என்ற கோபி கிருஷ்ணன் (வயது 30). பட்டதாரியான இவர் நூதனமான முறையில் மோசடி செயலில் ஈடுபட்டு, கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டியவர்[1]. இவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றவர். குண்டர் சட்டத்திலும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்[2]. ஜாமீனில் வெளிவந்த இவர் மீண்டும் மோசடி தொழிலை தொடங்கி உள்ளார். சென்னை திருமுல்லைவாயலில் போலி கால் சென்டர் ஒன்றை தொடங்கி, அதில் ஏராளமான இளம்பெண்களை வேலைக்கு அமர்த்தினார். அந்த இளம்பெண்கள் பொதுமக்களுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசி, ஏதாவது ஒரு நிதி நிறுவனம் பெயரைச் சொல்லி, அந்த நிறுவனத்தில் குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி தருவதாக சொல்லி ஏமாற்றுவடு தான் அவர்கள்து வேலை. இது தொடர்பாக, செல்வராஜ் கொடுத்த புகார் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் நாகஜோதி மேற்பார்வையில், உதவி கமிஷனர் பிரபாகரன் தலைமையிலான தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, மோசடி மன்னன் கோபிகிருஷ்ணன், அவரது மேலாளர் வளர்மதி (30) உள்பட 12 பேர் நேற்று கைது செய்தனர். அவர்கள் நடத்திய போலி கால்சென்டரிலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
2024 – அன்னைதெரசாமுதியோர்இல்லம்மோசடி: இதே பாணியில், அனாதை இல்லம், முதியோர் இல்லம், ஆசிரமம் என்று சொல்லிக் கொண்டு, கும்பல்கள் கிளம்பியுள்ளன. கால் சென்டர்களிலிருந்து, தொடர்ந்து பெண்கள் தொடர்பு கொண்டு, டொனேஷன் கேட்டுத் தொல்லை செய்வர். யாராவது, இரக்கப் பட்டு, பணம் கொடுத்தால் அபகரித்து விடுவர். அத்போன்ற , அனாதை இல்லம், முதியோர் இல்லம், இருக்காது. ஒரே இல்லத்தை ஐத்துக் கொண்டு, பல பெயர் / போர்டுகளை வைத்தும் ஏமாற்றி பணம் பறிக்கிறார்கள். பொதுவாக உதவி செய்கிறவர்கள், பென்சனர், முதலியோர்களது செல்போன் நம்பர்களை வைத்துக் கொண்டு [மற்ற நிறுவனங்களிலிருந்து பெற்றுக் கொண்டு] இவ்வாறு ஏமாற்றுகின்றனர். அவகையில், பெரம்பூரில், அன்னை தெரசா முதியோர் இல்லம் / ஓல்ட் ஏஜ் ஹோம் என்ற பெயரில், கால் சென்டர்களை வைத்து, மோசடி செய்து வருகின்றனர். புகார்கள் கொடுக்கப் பட்டுள்ளன.
அனாதைஇல்லம்,முதியோர்இல்லம்,வாழ்வற்றபெண்களுக்குபாதுகாப்புஇல்லம்நடக்கும்-நடத்தப் படும் விதம்: கிறிஸ்துவ நிறுவனங்கள் அனாதை இல்லம், முதியோர் இல்லம், வாழ்வற்ற பெண்களுக்கு பாதுகாப்பு இல்லம் என்றெல்லாம் நடத்தி மோசடி செய்து சிக்கிக் கொண்டுள்ள செய்திகள் பல வந்துள்ளன. இந்நிலையில் கால் சென்டர் நடத்தி இதே முறையில் அப்பாவி மக்களை ஏமாற்றும் கூட்டங்களை பற்றிய செய்திகளும் வந்து கொண்டே இருக்கின்றன. சில இடங்களில், முதியோர் இல்லங்கள் நல்ல முறையில் சகல வசதிகளுடன் பாதுகாப்பு கொண்ட முறையில் இயங்கி வருகின்றன. பெரும்பாலும், இவர்கள் ஒன்று தாமே முன்வந்து அங்கு சேர்ந்து விடுகின்றனர் அல்லது மகன் – மகள் வெளிநாடுகளில் வாழும் அல்லது நிரந்தரமாகத் தங்கி விடும் நிலையில் இத்தகைய இல்லங்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால் அதே நேரத்தில் சிறிய அளவில் நடத்தப்படுகின்ற முதியோர் இல்லங்களில் தான் நிறைய பிரச்சினைகள் உண்டாகின்றன.
சிறிய அளவில் நடக்கும்முதியோர் இல்லங்கள்: அதாவது அவர்கள் சேவையை முன்னிலைப் படுத்திக் கொண்டு அத்தகைய இல்லங்கள் ஆரம்பித்தாலும், பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற உள்நோக்கம் தான் அவர்களுக்கு அதிகமாக இருக்கிறது. இதனால் தான் கருணை இல்லம் என்ற பெயரில் அவர்கள் நடத்தி வரும் இடங்களில் சென்று பார்த்தாரல், ஒரு பெரிய ஹால், அதில் ஒரு 10-20 கட்டிலில் போடப்பட்டு, வயதானவர்கள் எல்லாம் படுக்க வைக்கப்பட்டு இருப்பார்கள். சாப்பாடு கூட, ஒரு எளிய முறையில் தான், கொஞ்சமாக கொடுப்பார்கள். கழிவறை போன்ற வசதிகளெல்லாம் கூட குறைவாகத் தான் இருக்கும். இந்த 10-20 அல்லது 50-100 முதியவர்களுக்கு ஒன்று முறையே ஐந்து-பத்து அறைகள் கூட இருக்காது. இதனால் அவர்கள் அங்கேயே, எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு, பிறகு சாப்பிட்டு,, தங்க வேண்டிய நெருக்கடி உள்ளது. மேலும் பல நேரங்களில் சமைப்பது, அறைகளை சுத்தம் செய்வது, ஏன் இந்த கழிப்பிடங்களை கூட சுத்தம் செய்யும் பணிகளில் இந்த முதியவர்கள் பணிக்கப்படுகிறார்கள்.
போலி இல்லங்கள் உருவாகும் விதம்: பணம் தான் பிரதானம் எனும் பொழுது, பல நேரங்களில் அவர்கள் சட்டப்படி பதிவு கூட செய்யாமல் இல்லங்களை நடத்தி வருகிறார்கள். சில பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மேலும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற கோணத்தில், இருக்கும் இடத்தையே இரண்டு மூன்று என்று பிரித்துக் காட்டி, வெவ்வேறு பெயர்களில் நடத்துவதாக பிரசாரம் செய்து இவர்கள் பண வசூல் நிலையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மத்திய-மாநில அரசு மானியங்கள் எல்லாம் கிடைக்கின்றன, வங்கிகளில் சில நிதி கிடைக்கின்றது போன்ற சலுகைகளை குறிவைத்து சம்பாதிக்க, இவர்கள் இத்தகைய வியாபாரத்தை செய்து வருகின்றனர். அயல்நாட்டு நிதியும் கிடைக்கும் பொழுது, மேன்மேலும் விசித்திரமான, குரூர கொடூரங்கள், குற்றங்களும் நடக்கின்றன. ஆனால், பல்வேறு காரணங்களுக்காக, அவை அமுக்கப்படுகின்றன, மறைக்கப் படுகின்றன.
கால்சென்டர் மூலம் முதியோர் இல்ல மோசடிகள்: மேன்மேலும் பணம் சம்பாதிப்பது எப்படி என்ற முறையில் தான் கால் சென்டர் வைத்துக் கொண்டு செய்யும் மோசடியும் இதில் சேர்ந்து உள்ளது. இருக்கின்ற ஆதரவு இல்லங்களில் நன்கொடை கொடுப்பவர்களின் விலாசம் செல்போன் நம்பரை எடுத்துக் கொண்டு, கால் சென்டர்கள் அமைத்து, அவற்ரிலிருந்து, அவர்களுக்கு அடிக்கடி தொடர்பு கொண்டு நன்கொடை கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அவர்களும் ஒரு முறை செய்வது என்பது சாதாரண நிலையாக தான் இருக்கின்றது. ஆனால், மேன்மேலும் அவர்கள் தொந்தரவு செய்யப்படும்போது, அவர்களுக்கு ஒரு சந்தேகம் வருகிறது. அந்நிலையில் தான், அவர்கள் பணத்தை கொடுத்து, பிறகு நேரில் சென்று பார்க்கலாம், என்று சென்று பார்த்தால் அத்தகைய நிறுவனமே இல்லாதது கண்டு திகைக்கின்றனர், அப்பொழுது போலீஸிடம் புகார் கொடுக்கின்றனர். பிறகு விசாரணையில் உண்மை வெளிவருகிறது.
2024ல் பெரம்பூரில் தெரசா பெயரில் போலி இல்லம்: ஒரு நாளைக்கு குறைந்தது 100 பேரிடம் பேச வேண்டும் என டார்கெட் கொடுத்து அந்த பெண்களை வேலைக்கு அமர்த்துகிறார்கள். மாதம் ரூ.8,000 முதல் 15000 வரை சம்பளம் அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. மேலும் அவ்வாறு அந்த பெண்கள் பேசி அதன் மூலம் பணம் கிடைத்து விட்டால், அதற்கும் கூடுதல் கமிஷன் கொடுக்கப்படுகிறது. இவ்வாறு டார்கெட் அமைத்து பொதுமக்களை இவர்கள் ஏமாற்றி வருகின்றனர் அவ்வாறு வாங்கப்படும் பணம் உண்மையிலேயே முதியோர் இல்லங்கள் கருணை இல்லங்களுக்கு செலவிடப்படுகிறது என்று பார்த்தால், கண்டிப்பாக கிடையாது. குறிப்பிட்ட அட்ரெஸ் வைத்திருக்கும் நபர்கள் சொகுசு பங்களா, கார், வெளிநாட்டு சுற்றுலா என்று ராஜபோகம் வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். இது அறியாத அப்பாவி பொதுமக்கள் ஏழைகளுக்காக பணம் கேட்கிறார்கள் என்று நினைத்து தங்களால் முடிந்த உதவிதைகளை செய்கின்றனர். பணக்காரர்களிடம் பணத்தைப் பெற்று அங்கு இருப்பவர்கள் அவர்களுக்காக வசூல் செய்கின்றனர். அந்த வகையில் சமீபத்தில் பெரம்பூரைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தை போலீசார் ஆய்வு செய்தபோது கார்ப்பரேட் கம்பெனி போல அந்த நிறுவனம் இயங்கி வந்தது தெரியவந்துள்ளது. பிறகு ஏமாந்தவர் கொடுத்த புகாரில் அங்கு சென்று சோதனை மேற்கொள்ளப்பட்ட போது அங்கு :மதர் தெரசா ஓல்ட் ஏஜ் ஹோம்” என்று ஒருவர் நடத்துவதாக தெரிந்தது. அதன் தலைவர் தலைமறைவாகி விட்டதால்,போலீசார் தேடி வருகின்றனர்.
[1] மாலைமலர், போலிகால்சென்டர்நடத்திலட்சக்கணக்கில்பணம்சுருட்டல்– மோசடிமன்னன்உள்பட 12 பேர்கைது, By மாலை மலர், 30 செப்டம்பர் 2020 7:57 AM (Updated: 30 செப்டம்பர்).
முதியோர் இல்லம், ஆதரவற்றோர் காப்பகம் மற்றும் கால் சென்டர் இவற்றிற்கு என்ன சம்மந்தம்? (1)
ஹை-டெக் பிரச்சாரம் மூலம் நன்கொடை வசூலிக்கும் மோசடி: ஏமாற்றுகிறவர்கள் இப்பொழுது எல்லாம் புது புது வழிகளை யுக்திகளை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். மொபைல் போன், கம்ப்யூட்டர் முதலியவை வந்த பிறகு, அதற்கு ஏற்றபடி தங்களது தொழிலையும் நவீனப்படுத்துகிறார்கள். அதாவது ஒரு கவர்ச்சிகரமான ஆபீஸ் போன்றவை வைத்துக்கொண்டு, அதில் பெண்களை வேலைக்கு அமைத்து, அவர்கள் மூலம் கால் சென்டர் போன்ற வைத்து, அதன் மூலமாக பலரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, வங்கியில் இருந்து கடன் வாங்கி தருகிறேன், இன்சூரன்ஸ் பாலிசிக்கு உதவுகிறேன், அனாதை இல்லங்கள் முதியோர்களுக்கு நன்கொடை கொடுங்கள், உதவி செய்யுங்கள் என்றெல்லாம் பிரச்சாரம் செய்து, தினமும் நூற்றுக்கணக்கான ஏன் ஆயிரக்கணக்கான மக்களிடம் தொடர்பு கொண்டு, எப்படியாவது ஒரு ஐந்து-பத்து பேர்களை வலையில் விழ வைத்து விடுகிறார்கள். அவர்கள் தான் ஏமாறுகிறார்கள், ஏமாளிகளாகி விடுகிறார்கள். இவ்வாறு தான் இப்பொழுது எல்லாம் நவீன முறையில் பணம் ஏமாற்றப்படக் வருகிறது.
2019 – அம்மாஅறக்கட்டளைமோசடி: “அம்மா அறக்கட்டளை” என்று ஆதரவற்றோர் இல்லம் போல் போலியாக நடத்தி பழைய துணிகள், பொருட்கள், பணம் உள்ளிட்டவற்றை சேகரித்து அமைப்பின் பெண் பணியாளர் ஒருவீட்டில் 11.5 லட்சம் ரூபாய் பணத்தை திருடிவிட்டு தலை மறைவானார். அவரை கைது செய்த போலீஸார் அதன் உரிமையாளரான போலி பத்திரிகையாளர் ஒருவரை தேடி வருகின்றனர். அம்மா அறக்கட்டளை அரவிந்தன் என்பவரின் பெயரில் பதிவு செய்யபட்டுள்ளதையும், அந்த நபர் மக்கள் நம்பிக்கை என்ற வாரஇதழை நடத்தி வருவதையும் போலீஸார் கண்டுபிடித்தனர். அரவிந்தன் ஆரம்பத்தில் ஒரு தொலைக்காட்சியில் விளம்பரப்பிரிவில் வேலைப்பார்த்ததும், அங்கு அவரது நடத்தைச் சரி இல்லாததால் வெளியேற்றப்பட்டதும், பின்னர் தானே பத்திரிகை ஆரம்பித்து காவல் ஆணையர் அலுவலகம், டிஜிபி அலுவலகம், தலைமைச் செயலகம் போன்ற இடங்களில் நுழைந்து பலரது அறிமுகத்தை பெற்றுள்ளார். காவல் ஆணையர் உள்ளிட்ட பிரபலங்களுடன் நெருக்கமாக இருப்பது போல் புகைப்படம் எடுத்து வைத்துகொண்டு போலி அறக்கட்டளை நடத்தி பண வசூலில் ஈடுபட்டு பொதுமக்களிடம் மோசடி செய்ததும் தெரியவந்துள்ளது. ஆதரவற்றோருக்கு உதவ வேண்டும் என்கிற பொதுமக்களின் நல்ல எண்ணத்தை மூலதனமாக்கி மோசடியில் ஈடுபட்ட அரவிந்தன் முக்கியமாக நடுத்தர மக்கள் வசிக்கும் பகுதியிலேயே தனது ஆட்களை அனுப்பி வசூலில் ஈடுபட்டு வந்துள்ளார்[1]. மகாலட்சுமியை கைது செய்த தேனாம்பேட்டை போலீஸார் பணம் ரூ. 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள போலி பத்திரிகையாளர் அரவிந்தனைத் தேடி வருகின்றனர்[2].
2020 – தனிநபர்கடன்பெற்றுதருவதாகமோசடி: ஒரு கும்பல் போலியான கால் சென்டர் மூலம் அப்பாவி மக்களை குறிவைத்து, இன்சூரன்ஸ் நிறுவனத்திலிருந்து பேசுவதாகவும், தனிநபர் கடன் பெற்று தருவதாகவும் கூறி முன்பணம் பெற்று ஏமாற்றி வருவதாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. விசாரணையில் குற்றவாளிகள் 3 பேரும் திருவான்மியூர், எல்.பி. சாலை மற்றும் பெருங்குடி ஆகிய 2 இடங்களில் போலியான கால் சென்டர் நடத்தி, பொதுமக்களிடம் இன்சூரன்ஸ் நிறுவனத்திலிருந்து பேசுவதாகவும், எங்களது இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பாலிசி எடுத்தால் தங்களுக்கு தனிநபர் கடன் பெற்று தருவதாகவும் அதற்கு முன்பணமாக இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணம் செலுத்த வேண்டும் என பொதுமக்களை தங்கள் வங்கிக்கணக்கில் பணத்தை போட வைத்துள்ளனர். மத்திய குற்றப்பிரிவு தனிப்படையினர் மேற்படி புகார்கள் மீது தீவிர விசாரணை மேற்கொண்டதில் பொதுமக்களிடம் தனிநபர் கடன் பெற்றுத் தருவதாக கூறி வந்த கும்பல் திருவான்மியூர் மற்றும் பெருங்குடியில் செயல்பட்டு வந்தது தெரியவந்தது[3]. அதனடிப்படையில், தனிப்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு மேற்படி குற்றச்செயலில் ஈடுபட்ட சேலத்தை தியாகராஜன் (38), சைதாப்பேட்டையை சேர்ந்த கோபிநாத், (28), விழுப்புரத்தைச் சேர்ந்த மணிபாலா (220 ஆகிய 3 பேரை நேற்று (09.7.2020) கைது செய்தனர்[4].
2020- குறைந்தவட்டிக்குவங்கியில்கடன்வாங்கிதருவேன்என்றமோசடி: வங்கிகளில் கடன் வாங்கி தருவதாகவும், வேலை வாங்கி தருவதாகவும் கவர்ச்சியாக பேசி பொது மக்களிடம் இருந்து பணத்தை மோசடி கும்பல் பறித்து உள்ளது. இதில் உயர் அதிகாரிகள் முதல் சாதாரண தொழிலாளிகள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பணத்தை பறிகொடுத்து உள்ளனர். அவர்களில் 400-க்கும் மேற்பட்டவர்கள் இந்த மோசடி குறித்து புகார் அளித்தனர். அதன்அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த மோசடி கும்பல் ஒரு பெரிய நெட்வொர்க் அமைத்து கோடிக்கணக்கில் பணத்தை பறித்தது தெரியவந்தது. மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் இந்த இளைஞர்களை தங்களது போலியான கால் சென்டர்களில் வேலைக்கு சேர்த்துள்ளனர். இந்த இளைஞர்கள் பொதுமக்களின் செல்போன் எண்களை சேகரித்து அவர்களுக்கு போனில் பேசுவார்கள். குறைந்த வட்டிக்கு வங்கியில் கடன் வாங்கி தருவதாக இவர்கள் சொல்வார்கள். இவர்களின் இனிப்பான பேச்சுக்கு மயங்கி, வங்கியில் கடன் வாங்க ஆசைப்படுபவர்களிடம், அவர்களின் ஆதார் எண், வங்கி ஏ.டி.எம். ரகசிய குறியீட்டு எண், வங்கி கணக்கு விவரம், பான் கார்டு விவரம் போன்றவற்றை சேகரித்து, அதன் மூலம் மோசடி வலையை வீசுவார்கள். பின்னர் வங்கி கடன் தொகைக்கு ஏற்ப வங்கியில் முதலில் முன்பணம் கட்ட வேண்டும், என்று இவர்கள் சொல்லுவார்கள். அந்த முன்பணத்தை தங்களது வங்கிக்கணக்கில் போடச்சொல்லுவார்கள். அந்த பண த்தை சுருட்டுவார்கள். பின்னர் அவர்களது ஓ.டி.பி. எண்ணை வாங்கி, அதன் மூலம், அவர்களது வங்கி கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் ஆன்லைன் மூலம் எடுத்து ஏப்பம் போட்டு விடுவார்கள். இது ஒருவகையான மோசடி[5]. இந்த வழக்கில், சென்னை பென்ஸ் கிளப் உரிமையாளர் பென்ஸ் சரவணன்(வயது 42), பிரபல அரசியல் கட்சி பிரமுகர் செல்வா என்ற செல்வகுமார் மற்றும் வேளச்சேரியைச் சேர்ந்த குமரன் (44), ராயப்பேட்டையைச் சேர்ந்த மிதுன்ராயன் (41) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்[6].
2021 – போலியானகால்சென்டரில்வேலைபார்த்தஅனுபவத்தைவைத்து, மோசடி: குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி தருவதாக சொல்லி ரூ.10 ஆயிரம் வரை என்னிடமிருந்து பணத்தை ஆன்லைன் மூலம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக தெரிய வந்தது[7]. இதுபற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று புகார் கொடுக்கப் பட்டது[8]. .இதுதொடர்பாக அடையாறு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தது[9]. திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியில் போலியாக கால்சென்டர் ஒன்றை நடத்தி, அதில் சிலரை வேலைக்கு அமர்த்தி, அவர்கள் மூலம் பொதுமக்களை செல்போனில் தொடர்பு கொண்டு, கடன் வாங்கி தருவதாக கூறி, கடன் வாங்கிக்கொடுக்காமல் இதுபோல் பண மோசடியில் ஈடுபடுவது தெரியவந்தது[10]. போலி கால்சென்டரை நடத்தி பண மோசடியில் ஈடுபட்டதாக, சென்னை நங்கநல்லூரைச்சேர்ந்த சண்முகப்பிரியா (வயது 24), செவ்வாய்பேட்டையைச் சேர்ந்த பிரேம்நாத் (30) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்[11]. இவர்கள் இருவரும், இதுபோல போலியான கால்சென்டரில் வேலை பார்த்த அனுபவத்தை வைத்து, மோசடி லீலைகளில் ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது[12].
2023 – ரிலையன்ஸ்லைப்இன்சூரன்ஸ்பெயர்சொல்லிமோசடி: ரிலையன்ஸ் லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகக் கூறி தொடர்பு கொண்டு, பணமோசடி செய்ததாக புகார் செய்யப் பட்டது[13]. விசாரித்ததில், போலி கால் சென்டர் தொலைபேசி அழைப்புகள் அனைத்தும், துரைப்பாக்கம் பகுதியில் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது[14]. தொடர் விசாரணையில், பெரும்பாக்கம் சேரன் நகரைச் சேர்ந்த முகமது ஜாவித், 33, என்பவரை போலீசார் கைது செய்தனர்[15]. இவர், துரைப்பாக்கம் பகுதியில், போலியான ‘டெலிகாலர்’ அலுவலகம் நடத்தி வந்தது தெரிந்தது. மேலும் அங்கிருந்து, போலி முகவரியில் பெறப்பட்ட தொலைபேசி எண்களில் இருந்து, பாதிக்கப்பட்டவர்களை தொடர்பு கொண்டு, இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது[16]. அவரிடம் இருந்து மடிக்கணினி, 12 தெலைபேசிகள், 3 மொபைல் போன், 15 சிம் கார்டுகளை பறிமுதல் செய்தனர்.
திராவிட மேடைப் பேச்சாளர்களின் நாரசார அநாகரீக வார்த்தைப் பிரயோகம், பெண்மையைத் தூற்றும் போக்கு, மரத்துப் போன அல்லது சொரணையற்ற வசனங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் விதம்!
திராவிடமேடைகளில், திராவிடபாரம்பரியங்களில்இப்பேச்சுகள்எல்லாம்சகஜமப்பாதான்: திமுக மேடைப் பேச்சாளிகள் 1960களிலிருந்து, இப்பொழுது வரை ஆபாசமாக, கொச்சையாக, மோசமாக பேசிவருவது ஒன்றும் புதியதல்ல. இரட்டை அர்த்தங்களில், பொருட்களில், சைகைகளில் பேசுவது-பாடுவதும் திராவிட மேடைகளில் சகஜமானதே. கவிதை நடையில், யதுகை-மோனைகளுடன், சில நேரங்களில் பாடிக் கொண்டும், ஆடிக் கொண்டும் கூட அத்தகைய பேச்சுகளைப் பேசுவது வழக்கமே. பெரியார் முதல் அண்ணன் வரை, அண்ணா தொடர்ந்து தம்பி வரை, அறிஞர் முதல் கலைஞர் வரை இதெல்லாம் சகஜமப்பா என்று தான் ஓடிக் கொண்டிருக்கின்றன. இப்பொழுது இந்த சாதிக உருவாகிருப்பதில் என்ற கழக சாதனையும் குறைந்து வி,டப் போவதில்லை. பிறகு, கொஞ்சம் நாகரிகம் கருதி, குறைத்துக் கொண்டாலும், வழக்கமான வார்த்தைகள் வெளிவந்து விடும். இப்பொழுது இதையெல்லாம் 60-70 வயதானவர்களுக்குத் தான் தெரியும். மற்றவர்கள் மறந்திருப்பார்கள்.
அநாகரிகமான, ஒழுங்கீனபேச்சாளர்கள்திமுகவில்உருவாகுவதுஎப்படி?: திமுக நிர்வாகி ஒருவர் பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதற்கு குஷ்பு கண்டனம் தெரிவித்திருந்தார்[1]. இந்நிலையில், இச்சம்பவத்திற்கு திமுக துணை பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி வருத்தம் தெரிவித்துள்ளார்[2]. திமுகவை சேர்ந்த நிர்வாகி ஒருவர் – பிரபல பேச்சாளரான சைதை சாதிக் பொதுமேடையில் பெண்கள் குறித்து பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது[3]. விமர்சனங்களும் எழுந்துள்ளன[4]. உண்மையில் திராவிட மாடலில், இந்த திராவிடியன் ஸ்டாக்குகள் மாறிவிட்டன என்றால், இத்தகைய ஒழுன்கீனமான, கொச்சையான, தரமில்லாத பேச்சுகள் வராது, வந்திருக்காது. ஆனால், ஊக்குவிப்பதால் தான், தொடர்ந்து அத்தகைய பேச்சாளர்கள் வளர்ந்து . வளார்க்கப் பட்டு வருகிறார்கள்.
ஆர்.கே.நகரில்திமுகபொதுக்கூட்டமும், சாதிக்பேசியதும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2வது முறையாக திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவித்து சென்னை ஆர்.கே.நகரில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் உரையாற்றி திமுக பேச்சாளர் சைதை சாதிக், பாஜகவில் 4 நடிகைகள் இருக்கிறார்கள் என்று குஷ்பு, நமிதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோரை குறிப்பிட்டு ஒருமையில் பேசினார்[5]. “நாங்கள்வடசென்னையில்கட்சியைவளர்த்தோம். அந்தகாலத்திலிருந்துஅண்ணன்சீதாபதியில்இருந்து, டி.ஆர்.பாலுவிலிருந்து, பலராமனில்இருந்து, இளையஅருணாவரைதிமுகவில்வளர்த்துஉள்ளார். இன்னும்வளர்த்துக்கொண்டுஇருக்கிறார்கள். ஆனால், பாஜகவில்இருக்கும்தலைவர்களைபொறுத்தவரை 4 பேருமே ****.” என்று ஆங்கிலத்தில் தவறான அர்த்தம் தரும் வார்த்தையை பயன்படுத்தினார்[6]. “இந்தியா டுடே” இதை வெளியிட்டுள்ளது[7]. சமீபத்தில் பெண்ணை “ஐட்டம்” என்று ஒரு தொழிலதிபர் சொன்னதற்கு, மும்பை நீதிமன்றம் ஒன்றரை ஆண்டு சிறைத்தண்டனை அளித்துள்ளது. ஆனால், இங்கோ மேடையில் ஒருவர் பேசுகிறார், வீடியோ சுற்றில் உள்ளது. சட்டப் படி எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.
அமித்ஷாதலையில்மயிர்முளைத்தாலும்முளைக்கும், ஆனால், தமிழகத்தில்………: தொடர்ந்து ஆதிக், “குஷ்புதாமரைமலர்ந்தேதீரும்என்றுதலைமேல்கையைஉயர்த்திசொல்கிறார்.” என்று ஒருமையில் பேசிய சாதிக், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தலைமுடி பற்றியும், “அமித் ஷா தலையில் மயிர் முளைத்தாலும் முளைக்கும், ஆனால், தமிழகத்தில்……….,” என விமர்சித்து பேசியுள்ளார். இதனை தொடர்ந்து குஷ்பு திமுகவில் இருக்கும்போது அவரை வைத்து இளைய அருணா கூட்டம் கூட்டியதை இரட்டை அர்த்தத்தில் சைதை சாதிக் பேச அங்கு சிரிப்பலை எழுந்தது. சுதாரித்துக்கொண்ட அவர் நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை, வம்பில் மாட்டிவிடாதீர்கள் என்று கூறி அங்கிருந்தவர்களை பார்த்து சிரித்தார். அக்டோபர் 4ஆம் தேதி, 2022 அன்று, திமுக கட்சிக் கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வார்த்தைகள் அல்லது செயலில் ஈடுபடும் கட்சித் தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருந்தார்[8]. இது ராஜா முதல் சாதிக் வரை அனைவருக்கும் பொறுந்தும் என திமுகவினருக்குத் தெரிந்திருக்கும்[9]..
குஷ்புஎதிர்ப்புத்தெரிவித்தது: இந்நிலையில், நடிகை குஷ்பு இது தொடர்பாக தனது எதிர்ப்பை பதிவு செய்தார்[10]. ட்விட்டரில் அவர், ஆண்கள் பெண்களை துஷ்பிரயோகம் செய்தால், அது அவர்கள் வளர்த்த விதமான வளர்ப்பையும், அவர்கள் வளர்ந்த நச்சு சூழலையும் காட்டுகிறது[11]. இந்த ஆண்கள் ஒரு பெண்ணின் கருப்பையை அவமதிக்கிறார்கள்[12]. அத்தகைய ஆண்கள் தங்களை #கலைஞரின் பின்பற்றுபவர்கள் என்று அழைக்கிறார்கள்[13]. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையின் கீழ் இதுதான் புதிய திராவிடமா” என்று கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், கனிமொழியையும் அவர் டேக் செய்திருந்தார். டுவிட்டரில் இது பற்றி நூற்றுக்கணக்கில் கருத்துகள் பதிவாகின. பொதுவாக அவை திமுகவினரை விமர்சித்தன.
கனிமொழிமன்னிப்புக்கேட்டது: இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மன்னிப்பு கேட்டுள்ள கனிமொழி, ‘ஒரு பெண்ணாகவும், மனிதனாகவும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். யார் செய்தாலும், சொல்லப்பட்ட இடம் அல்லது அவர்கள் கடைபிடிக்கும் கட்சி எதுவாக இருந்தாலும் இதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. திமுக இதை பொறுத்துக்கொள்ளாது. எனது தலைவர் ஸ்டாலினின் காரணமாக இச்சம்பவத்திற்கு என்னால் வெளிப்படையாக மன்னிப்புக் கோர முடியும்’ என பதிவிட்டுள்ளார். இந்நிலையில், வருத்தம் தெரிவித்த கனிமொழிக்கு குஷ்பூ நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், மிக்க நன்றி கனி. உங்கள் நிலைப்பாட்டையும் ஆதரவையும் உண்மையிலேயே பாராட்டுகிறேன். ஆனால் நீங்கள் பெண்களின் கண்ணியம் மற்றும் சுயமரியாதைக்காக எப்போதும் துணை நிற்கும் ஒருவராக இருந்திருக்கிறீர்கள்” என பாராட்டியுள்ளார்.
திராவிடமேடைப்பேச்சாளர்களின்நாரசாரஅநாகரீகவார்த்தைப்பிரயோகம், பெண்மையைத்தூற்றும்போக்கு, மரத்துப்போனஅல்லதுசொரணையற்றவசனங்கள்ஏற்றுக்கொள்ளப்படும்விதம்: இதை மனோதத்துவ ரீதியில் அலசினால், தொடர்ந்து ஒரு செயலைச் செய்து கொண்டிருந்தால், அது கெட்டதாக இருந்தாலும், யாரும் தடுக்காமல், கண்டிக்காமல் இருந்தால், அச்செயல் ஏற்றுக் கொள்ளப் படும் செயலாகி விடும்[14]. உதாரணத்திற்கு, பேரூந்துகளில் படிகட்டுகளில் பிரயாணம் செய்வது போன்றவை. அதே போல, பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலை மாணவர்களே, கெட்ட வார்த்தைகளை சகஜமாக உபயோகப் படுத்தி வருகிறார்கள். மாணவிகளும், பெண்களும் கூட அவ்வாறே பேசி வருவதை பார்க்கலாம். ஒரு நிலையில் அது “புதிய நாகரிக” அடையாளமாகக் கூட தகவமைக்கப் படுகிறது. ஆனால், நிச்சயமாக அவை சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப் பட்டவையோ, அங்கீகரிக்கப் பட்டவையோ கிடையாது. “மாப் மென்டாலிடி” போன்ற கூட்டமாக சேரும் போது, அத்தகைய மீறல்கள் ஏற்படுகின்றன. இவர்களே பல நேரங்களில், நிலைகளில் இரட்டை வேடம் போடுவதை கவனிக்கலாம்.
திராவிடபாரம்பரியகெட்டவார்த்தைபேச்சுகள்: ஆனால், திராவிடக் கட்சி மேடைப் பேச்சு பாரம்பரியத்தில், அத்தகைய அசிங்கமான-ஆபாசப் பேச்சுகள் கடந்த ஒரு நூற்றாண்டாக சாதாரணமாகி விட்டது[15]. சில கெட்ட வார்த்தைகள் பிரயோகிப்பாதை ரசிக்கவும் செய்கின்றனர். அதனால், அவை ஊக்குவிக்கப் பட்டு, அத்தகைய பேச்சாளர்கள் தயார் செய்யப் படுகிறார்கள். அதனால், மரத்துப் போன நிலை அதாவது, ஏற்றுக் கொண்ட நிலையில் அங்கீகாரம் கிடைத்ததாகி விடுகிறது. திராவிட கழகத்தினர் பேசும் பொழுது,பெண்கள் அங்கு நிற்கக் கூட முடியாமல், காதுகளை ஒப்பித்திக் கொண்டு ஓடிய நிலையையும் தமிழகத்தில், ஏன் சென்னையிலேயே பலர் பார்த்திருக்ககலாம். இப்பொழுது, விழிப்புணர்வு ஏர்பட்டுள்ளதால், பொது கூட்டங்களில் அத்தகைய நாரசாரத்தைக் குறைத்துக் கொன்டுள்ளார்கள். ஆகவே, இத்தகைய மனப்பாங்கு மாற வேண்டும். ஏனெனில், இதுவும் வார்த்தை தீவிரவாதம், பேச்சு பயங்கரவாதம் என்றாகி விடும். “தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு….,” என்பது தமிழர்களுக்கு, திராவிடர்களுக்கு,திராவிடத்துவவாதிகளுக்கு, திராவிட ஸ்டாக்கிஸ்டுகளுக்கு, திராவிட மாடல் பேச்சாளர்களுக்குத் தெரிந்திருக்கும்.
[1] தமிழ்.நியூஸ்.18, பெண்கள்குறித்துஇழிவாகபேசியதிமுகவினர்… குஷ்பூமுறையீடு… மன்னிப்புக்கேட்டகனிமொழி, Published by:Murugesh M, First published: October 27, 2022, 18:12 IST, LAST UPDATED : OCTOBER 27, 2022, 19:49 IST.
[7] While addressing a public meeting, Sadiq said, “All four leaders are items. Khushbu says that lotus will bloom in Tamil Nadu. I say that even hair will grow back in Amit Shah’s head, but lotus has no chance of blooming in Tamil Nadu.” He further said, “Do you all know how many times my brother Ilaya Aruna did Kushbu? I mean he had done meetings with her when she was in DMK. Nearly six times, he took Kushbu and had meetings in RA Puram.”
[12] தமிழ்.ஏசியாநெட்.லைவ், ஆபாசமாகபேசியதிமுகபேச்சாளர்.. கண்டனம்தெரிவித்தகுஷ்பு.. மன்னிப்புகேட்டகனிமொழி.. நடந்ததுஎன்ன?, vinoth kumar, First Published Oct 28, 2022, 7:19 AM IST,
[14] திரைப் படங்களில் இத்தகைய ஒழிங்கீனங்கள் நாகரிகமாக அல்லது ஏதோ ஏற்றுக் கொள்ள்ப் பட்டவை போல காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதனை, மக்கள் ரசிக்கும் வரையில் சென்றடைந்து உள்ளன.
[15] இது பெரியார் முதல் இக்காலம் வரையில் காணலாம்…….உடன் பிறவா சகோதரர்களே, ரத்தத்தின் ரத்தமே, போன்றவை உதாரணத்திற்கு சொல்லலாம்.
இந்தியைஎதிர்த்துதிமுகபேசிவருவது: 37வது நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் கூட்டம் தலைநகர் டெல்லியில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியாவில் மாநிலங்களுக்கு இடையேயான தொடர்பு மொழியாக ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியை ஏற்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். மேலும் அவர், இந்தி ஆங்கிலத்திற்குத் தான் மாற்றே தவிர உள்ளூர் மொழிகளுக்கு அல்ல என்றும் கூறியிருந்தார். மத்திய அமைச்சரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையானது. எதிர்கட்சினர் பலரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். மத்திய அரசு மீண்டும் இந்தியைத் திணிக்க முயல்கிறது என்று கூறி பலரும் சாடி பேசினர். அதோடு, நாட்டிலுள்ள பல்வேறும் மாநிலங்களில் இருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் முதல் பல்வேறு கட்சியினரும் தங்களின் வலுவான இந்தி எதிர்ப்பை அறிக்கை வாயிலாகவும், கண்டங்கள் மூலமாகவும் வெளிப்படுத்தினர்.
டிகேஎஸ்இளங்கோவன்இந்தி–எதிர்ப்புகருத்து: இது குறித்து சென்னையில் கடந்த சனிக்கிழமை 04-06-2022 திராவிடர் கழகம் நடத்திய இந்தி எதிர்ப்பு மாநாட்டில் பேசிய திமுக மூத்த தலைவர் டிகேஎஸ்.இளங்கோவன்[1], இந்தி மொழி என்பது வளர்ச்சியடையாத மாநிலங்களின் மொழி. அது நமக்கு எந்த நன்மையும் செய்யாது, அது நம்மை ‘சூத்திரர்’ போன்ற அடிமைகளாக்கும். நாம் மனிதனாக இருக்க வேண்டுமானால் அதை எதிர்க்க வேண்டும்”என்று கூறியிருந்தார்[2]. இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், “மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், பீகார் மற்றும் உத்தரப்பிரதேசம் போன்ற வளர்ச்சியடையாத மாநிலங்களில் இந்தி தான் தாய்மொழியாக உள்ளது. மேற்கு வங்காளம், கேரளா, தமிழ்நாடு, ஒடிசா, பஞ்சாப், கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்கள் இந்தி மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கவில்லை. இந்த மாநிலங்கள் அனைத்தும் வளர்ந்த மாநிலங்களாக உள்ளன. நான் அந்த மொழியைப் பற்றி மட்டுமே எனது கருத்தைத் தெரிவித்தேன். உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் பீகார் மாநிலங்களின் வளர்ச்சிக்கு இந்தி மொழி உதவவில்லை. நான் நானாக எதுவும் கூறவில்லை. நம்மிடம் இருக்கும் தரவுகளை வைத்தே நான் இப்படிக் கூறினேன்.
இந்திநம்மைச்சூத்திரர்களாகமாற்றிவிடும்[3]: இந்தி என்ன செய்யும்? அது நம்மைச் சூத்திரர்களாக மாற்றிவிடும். அது நமக்கு எந்த நன்மையும் செய்யாது. நான் உங்களுக்குச் சொல்கிறேன். வளர்ச்சி அடைந்த மாநிலங்களின் தாய்மொழி எதுவும் இந்தி இல்லை. வட இந்தியாவில் மக்கள் சூத்திரர்கள் ஆக்கப்பட்டுள்ளனர்[4]. இந்த மனுதர்மம் மக்களைப் பிளவுபடுத்துவதால் வடக்கில் உள்ள அரசியல் கட்சிகளும் இப்போது திராவிட மாடலை கையில் எடுத்துள்ளன. வட இந்தியாவில் மனுதர்மம் கடைப்பிடிக்கப்பட்ட மக்கள் எப்படி சூத்திரர்கள் ஆக்கப்பட்டனரோ, அதேபோல இந்தி மொழி திணிக்கப்பட்டால், அடுத்து அந்த கலாசாரமும் திணிக்கப்படும். மொழியை நம் மீது திணித்தால், அது கலாச்சாரத்தைத் திணிக்கும் ஒரு முயற்சி. அதன் பின்னர் நாமும் சூத்திரர்களாக ஆக்கப்படுவோம்” என்று அவர் தெரிவித்து இருந்தார்.
சூத்திரர்என்றுபேசியஇளங்கோவனுக்குபாஜககண்டனம்: இந்நிலையில், திமுகவின் மூத்த தலைவர் டிகேஎஸ் இளங்கோவனின் இந்தி எதிர்ப்புக் கருத்துக்கு பாஜக சார்பில் கடும் கண்டனம் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசியுள்ள பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, “அரசியலின்ஜென்டில்மேன்” என்றுஅழைக்கப்படும்ஒருவர்இந்திபேசும்மக்களைஇழிவுபடுத்தியதுஉண்மையில்துரதிர்ஷ்டவசமானது. கடந்தஓராண்டில்ஏற்பட்டதோல்விகளைமறைத்து, புதைக்க, தமிழகமக்களைஇவ்வாறுதூண்டிவிட்டு, திமுகவினர்நடத்தியசதிகடும்கண்டனத்துக்குரியது. தி.மு.க.,வின்மாநிலத்தலைவர்அண்ணாமலைஅரசின்ஊழலைஅம்பலப்படுத்திவருவதால், தி.மு.கவினர் ‘பா.ஜ.கவைகண்டுபயப்படுகிறார்கள்,” என்று கூறியுள்ளார். மேலும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “முன்னேறாதமாநிலங்களின்மொழி ‘ஹிந்தி’. ஹிந்தியைபின்பற்றினால் ‘சூத்திரர்களாகி’ விடுவோம்: டிகேஎஸ்இளங்கோவன், திமுக. மொழிஅரசியல்செய்துவந்ததிமுகமொழியோடுசாதியைஇணைத்துஅரசியல்செய்யமுனைவதுபிரிவினைகருத்துகளைவிதைப்பதற்கே. நீதிக்கட்சியின்வழிவந்தவர்கள்என்றுமார்தட்டிகொள்ளும்திமுகஇந்தபேச்சின்மூலம்தாங்கள் ‘தலித்’ மக்களுக்குஎதிரானவர்கள்என்பதைதெளிவுபடுத்தியுள்ளது. ஒருவருடஆட்சியின்அவலத்தைமூடிமறைக்க, மொழியால், சாதியால்மக்களைதூண்டிவிட்டுஇந்தியாவைபிளக்கநினைக்கும்திமுகவின்முயற்சிமுறியடிக்கப்படும்,” என்றும் பதிவிட்டுள்ளார்.
பிறகுஇளங்கோவன்கொடுத்தவிளக்கம்: விசயம் சிக்கலாகி, பிரச்சினையாகி விடும் என்ற நிலையில், இளங்கோவன் கொடுத்த விளக்கம், “சூத்திரர்என்றசொல்லைநான்உருவாக்கவில்லை. தமிழ்ச்சமூகம்சமநிலையானது[5]. தெற்கில்வர்க்கவேறுபாடுகடைப்பிடிக்கப்படுவதில்லை[6]. வடக்கிலிருந்துநுழைந்தமொழி, எங்களைப்பிரித்தது. திராவிடஇயக்ககாலத்தில்மக்கள்சூத்திரர்கள்மற்றும்இதரபிற்படுத்தப்பட்டோருக்கானகல்விஉரிமைகளுக்காகப்போராடினார்கள்[7]. நான்கூறியதுஎன்னவென்றால், ஹிந்திநுழைந்தால்வடக்கிலுள்ளகலாசாரநடைமுறைகளும்உள்ளேநுழையும். எனவே, அதுசூத்திரவர்க்கத்தைஉறுதிப்படுத்தும்என்றுதான்நான்கூறினேன்,” என்று தெரிவித்துள்ளார் இளங்கோவன்[8]. இருப்பினும், மனுதர்மம், வர்ணம், சனாதனம் என்றெல்லாம் குறிப்பிட்டு, அவற்றை எதிர்க்கிறோம் என்ற சாக்கில், வழக்கம் போல, பார்ப்பன-துவேச சொல்லாடல்கள், வெறுப்புப் பேச்சு, முதலியவை வழக்கம் போல திரும்ப-திரும்ப சொல்வதும்-எழுதுவதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. 2017ல் பன்றிக்கு பூணூல் போடுகிறேன் என்று, மைலப்பூரில், ஒரு பிராமணரைத் தாக்கி அடித்தனர். முன்னர் 2006ல் அயோத்தியா மண்டபத்தில் இரண்டு அப்பாவி பிராமணாரை கத்தியால் வெட்டினர், மண்டபத்தில் பெட்ரோல் குண்டு வீசினர். இத்தகைய தாக்குதல்கள் முறையாக ஆவணப்படுத்தப்படவில்லை. 1950-60களிலிருந்து நடந்து வரும் தாக்குதல்கள் தேதிகளுடன் ஆவணப் படுத்த வேண்டும்.
பெரியாரின்பார்ப்பனஉவமானமானபாம்பு, ஏன் 2017ல்பன்றியானது?: பெரியார் நினைவு நாளான டிசம்பர் 24, 2005 FUZZY and Neutrosopic Analysis of Periyar’s Views on Untouchability என்ற நூல் பெரியார் திடலில் வெளியிடப்பட்டது[9]. கி. வீரமணி அவர்கள் இந்த நூலை வெளியிட, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் சி. மகேந்திரன் நூலைப் பெற்றுக் கொண்டார். இவ்விழாவில் தமிழர் வீரமணி பேசும்போது[10], “பெரியார் பாம்பையும் பார்ப்பானையும் பார்த்தால் பாம்பை விட்டுவிடு; பார்ப்பானை அடி என்று குறிப்பிடுவார் தந்தை பெரியார்[11]. அதனுடைய தத்துவம் என்ன? பாம்பு கடித்தவுடனேயே மனிதன் இறந்து போய்விடுவான். கடித்தவுடனே மனிதனைச் சாகடிக்கும் பாம்புக்கு ‘நல்ல பாம்பு‘ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ஆனால் பார்ப்பனீயத்தின் தாக்குதல் இருக்கிறதே, பார்ப்பான் கடித்தால் அது உடனே செத்துபோய்விடுவது அல்ல; அன்றாடம் செத்துச் செத்துப் பிழைக்க வேண்டிய மிகப்பெரிய கொடுமை அது. அந்த அவதியைப் பலபேர் சந்தித்து இருக்கிறார்கள். சிலரால் வெளியே வர முடியும். பலரால் வரமுடியாது. அந்த மாதிரியான ஒரு பார்ப்பன நிர்வாகத்தின் கொடுமைகளைத் தாண்டி இப்படியொரு அருமையான புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார் வசந்தா கந்தசாமி”. “காஷ்மீர் பார்ப்பானுக்கு தேள் கொட்டினால் கன்னியாகுமரிப் பார்ப்பானுக்கு நெறி கட்டும் என்று பெரியார் ,” என்றும் பெரியார் கூறியிருக்கிறார். ஆனால் பாண்டே-வீரமணி பேட்டி-விவாதம் பிறகு, அவ்வாறு சொல்லவில்லை என்று மறுப்பது வேடிக்கையாக இருக்கிறது. ஆக பெரியார் பக்தர்கள் விசுவாசத்துடன், பாம்பிற்கு பூணூல் போட்டிருக்கலாம், ஆனால், பன்றிதான் பிடித்திருக்கிறது போலும்!
[5] தினமணி, ஹிந்திகுறித்துப்பேசியதுஎன்ன? டிகேஎஸ்இளங்கோவன்விளக்கம், By DIN | Published On : 06th June 2022 06:21 PM | Last Updated : 06th June 2022 06:25 PM.
[9] நூலின் மொத்தப் பக்கங்கள் 385, விலை 40 அமெரிக்கன் டாலர். வெளியீடு: ஹெக்சிஸ், அரிசோனாலி அமெரிக்கா. இந்தியாவில் இருந்து கணிதப் பேராசிரியர் வசந்தா கந்தசாமி, மற்றும் அமெரிக்காவில் இருந்து புளோரன்டைன் ஸ்மாரன்டேக் என்பவரும் சேர்ந்து எழுதிய புத்தகம் இது.
[10] கி. வீரமணி, பெரியாரைஉலகமயமாக்குவோம், கீற்று, பிப்ரவரி 2006.
கருப்புக் கொடி போராட்டமும் – வன்முறையும் – கவர்னரைக் கேவலமாகத் திட்டுவது, வார்த்தை-வன்முறைகளால் தாக்குவது, ஒருமையில் பேசித் திட்டுவது முதலியன வள்ளுவர் போற்றும் நெறிகள் ஆகுமா? தமிழ் கலாச்சாரத்திற்கு தகுமா? நடப்பது எதைக் காட்டுகிறது? (3)
1953ல் நேருவுக்கு எதிராக கருப்புக் கொடி காட்டியது[1]: இந்தி எதிர்ப்பு பற்றி கேள்வி பட்ட நேரு அது, “அர்த்தமற்றது,” என்று ஆங்கிலத்தில் சாடினார். இதனால், திமுக பொத்க் குழுவில் நேருவுக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம் நடத்த வேண்டும் என்று தீர்மானம் போட்டது. 1953ல் ஜூலை 13 அன்று கூடிய திமுக செயற்குழு கூட்டத்தில் நேருவின் இந்தி திணிப்புக்கு எதிராக கருப்புக் கொடி காட்டுவது என முடிவானது. அதன் படி 15 ஆம் தேதி ரயில் மற்றும் விமானநிலையம் முற்றுகையிடப்பட்டது. அன்று டால்மியாபுரம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு கருணாநிதி கைதானார். “இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்திற்கு எதிரானவர்கள் இந்த நாட்டிற்கே எதிரானவர்கள்” என நேரு கண்டிக்கும் அளவுக்கு விஷயம் விவகாரமானது. இதையொட்டி ராஜாஜி தமிழகம் வரும்போதெல்லாம் கருப்புக் கொடி மறியலுக்கு அவர் ஆளானார். இதே இந்தி திணிப்புக்கும் எதிராகவும் ‘வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது’ என்ற கருத்திற்கு வலுசேர்க்கும் விதத்தை காட்டவும் அண்ணாவும் மத்திய அமைச்சர்கள் வரும்போதெல்லாம் கருப்புக் கொடி போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார். அதனையொட்டி மத்திய தகவல் ஒலிப்பரப்புத்துறை அமைச்சர் ரங்கநாத் ராமச்சந்திர திவாகருக்கு எதிராக அண்ணா காலத்தில் கருப்புக் கொடிக் காட்டப்பட்டது.
1977ல் இந்திராவுக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம் – வன்முறையில், கொலைமுயற்சியில் முடிந்தது: நேருக்கு கருப்புக் கொடி காட்டிய திமுக அவரது மகள் இந்திராவையும் திமுக விட்டு வைக்கவில்லை. 1977ல் அவர் சென்னை வந்தபோது அவருக்கு எதிராக ஒரு கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் அரங்கேற்றப்பட்டது. மிசாவை எதிர்த்தும் நெருக்கடி நிலை பிரகடணத்தை எதிர்த்தும் தங்களின் எதிர்ப்பை பதிய வைக்கவே இப்போராட்டம் நடத்தப்பட்டது. அன்றுதான் மதுரையில் இந்திரா திமுகவினரால் தாக்கப்பட்டார். அன்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த பழ நெடுமாறன் அந்த ஆபத்தில் இருந்து இந்திராவைக் காப்பாற்றி அனுப்பி வைத்தார். அந்தச் அம்பவம் நெடுமாறன் அரசியல் வரலாற்றில் அழியாத சுவடாக பதிவானது. கருப்புக் கொடி ஆர்பாட்டம், இவ்வாறு கொலைமுயற்சி வரை சென்றதும் நிதர்சனம் ஆனது. Indira Gandhi Priyadarshini Nehru vs M. Karunanidhi, M. Muthu & Ors வழக்கு உச்சநீதி மன்ற வரை சென்றது. பிறகு, காங்கிரஸ்-திமுககூட்டணி ஏற்பட்டவுடன் மறாக்கப் பட்டது.
அட்வொகேட், சட்டம் படித்த மேதை பிரதமருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டுவது, கவர்னரைக் கேவலமாகத் திட்டுவது எப்படி?: மதுரையை சேர்ந்தவர் வக்கீல் பசும்பொன் பாண்டியன். இவர் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளராக இருந்து வருகிறார்[2]. இவர் தமிழக கவர்னர் ஆர். எம். ரவி குறித்து அவதூறாக பேசியதாக போலீசார் 22-04-2022 அன்று இரவு வக்கீல் பசும்பொன் பாண்டியனை கைது செய்தனர்[3]. முன்னதாக அவரிடம் விசாரணை நடத்துவதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திடீர்நகர் காவல் நிலையத்திற்கு பசும்பொன் பாண்டியன் அழைத்துவரப்பட்டார் இந்த தகவலை அறிந்த அவரது ஆதரவாளர்கள் திடீர் நகர் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது. சென்ற ஜனவரி 2019ல் கூட, மோடிக்கு எதிராக கருப்புக் கொடி காட்ட திட்டமிட்டதற்கு கைது செய்யப் பட்டார்[4]. அப்பொழுதும், இதே போன்ற கலவர நிலவரம் ஏற்பட்டது[5].
தமிழகத்தில் இவை, ஏன், எப்படி நடக்கிறது, நடக்கவேண்டும், தூண்டுவது என்ன, தூண்டுகிறவர்கள், ஊக்குவிப்பவர்கள் யார்?:
பிரதம மந்திரியை இழிவு படுத்துவது, படத்தை நீக்குவது, உடைப்பது முதலியன மிகவும் கேவலமான செயல்கள்.
கவர்னரை கெட்ட வார்த்தைகள் கொண்டு திட்டுவது, அவமரியாதை செய்வது, அவற்றை வெளிப்படையாக டிவி-தொலைக்காட்சிகளில் காட்டி ஒலி-ஒளிபரப்புவது, அடிமட்ட ஒழுன்கீனமானது[6].
ஒரு அட்வொகேட் அவ்வாறு செய்வது, எத்தகைய கீழ்த்தரமான வேலைகளீலும் இறங்கத் தயயாராக இருக்கின்றனர் என்று தெரிகிறது.
தமிழகத்தில், அவொகேட், பி.எல், வழக்கறிஞர் என்றெல்லாம் சொல்லிக் ஒள்பவர்கள் பல குற்றங்கள், ஒழுங்கீனங்கள், சட்டமீறல்கள் முதல்யவற்றில் ஈடுபடுவதும் நோக்கத் தக்கது.
உள்துறை அமைச்சர் வரும் போது கருப்புக் கொடி காட்டுவது, “திரும்பி போ” என்றெல்லாம் கத்துவது, மிக்க அநாகரிகமான, ஜனநாயகமில்லாத, காட்டுமிராண்டித் தனமானது.
இருப்பினும், இவையெல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன, போலீஸாரும் அனுமதித்து, வேடிக்கைப் பார்ப்பது போல விடியோக்கள் / செய்திகள் காண்பிக்கப் படுகின்றன.
கொம்புகள் முதலியவை கொண்டுவருவதைத் தடுக்காமல், அவற்றை தூக்கியெறியும் போது, பிடித்துக் கொள்வது, கீழே விழுந்ததைக் கொண்டு வருவது முதலியனவும், மிக்க அவமரியாதையான, கீழ்த்தரமான செயலை செய்வது போலிருக்கிறது.
ஒரு படி சென்றால், அடிக்க செல்வார்கள், அதுவும் நிகழ்வேறும் என்ற நிலை உருவாகிறது.
கடந்த 50-60 வருடங்களாக திராவிட பாரம்பரியம், திராவிடம், தமிழ் என்றெல்லாம் பேசி வருகின்ற திக-திமுக போன்ற திராவிடக் கட்சியினர்களிடமிருந்து தான் இவை வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
அதே போல, மாணவ-மாணவியர்களின் ஒழுங்கினங்களும் வீடியோக்கள் மூலம் வெளிப் பட்டுக் கொண்டிருக்கின்றன.
ஒரு பக்கம், திருவள்ளுவர், திருக்குறள் என்றெல்லாம் பேசி ஆர்பாட்டம் செய்து வரும் பொழுது, குறளைப் போற்றும் இவர்கள் இத்தகைய குற்றங்கள், அநாகரிகங்கள் முத்லியவற்றில் எவ்வாறு ஈடுபடுவர் என்று தெரியவில்லை.
முதலில், இவர்களையெல்லாம், மனோதத்துவ முறையில் சோதித்து, ஒழுங்காகும் வரையில், விலக்கி வைக்க வேண்டும், அப்பொழுது தான் சமுதாயம் உருப்படும். இல்லையென்றால், இவற்றைப் பார்த்து, மற்றவர்களும் இதே மாதிரியான ஒழுங்கீனங்களில் ஈடுபடுவர், அவற்றைப் பெருமையாகவும் நினைத்துக் கொள்ளலாம்.
[1] The first PM welcomed by DMK’s black flags was Nehru in 1953. It was the Dravidian party’s response to Nehru’s remark that the anti-Hindi agitations were “non-sense” protests. An executive committee meeting of DMK party on July 13, 1953, resolved that the party would block trains to protest Nehru’s “derogatory” remarks against the anti-Hindi protests and wave black flags to Nehru when he next visits Tamil Nadu. Many DMK leaders and cadre were arrested and jailed when they blocked trains on July 15, 1953. M Karunanidhi, who reportedly blocked a train at Dalmiapuram in Tiruchy district, was among them. When Nehru visited Tamil Nadu a few months later, there were only very less number of DMK cadre outside the prisons and they managed to wave black flags to Nehru and get arrested.
[2] தினத்தந்தி, அ.தி.ம.மு.க. பொதுச்செயலாளர் கைது செய்யப்பட்டார், ஏப்ரல் 23, 11:35 PM.
[6] Advocate S Pasumpon for Pandian, general secretary of Anna Dravida Makkal Munnetra Kazhagam, was arrested by police in Madurai his alleged provocative speech and derogatory comments against governor RN Ravi in a YouTube video. Police said that in a video interview to a private media channel on February 4, 2022 and uploaded in YouTube, the Dravidian outfit leader made several unsavoury, obscene and insulting remarks and threats against governor R N Ravi. He targeted the governor for returning the anti-NEET bill seeking exemption for Tamil Nadu from the test. It was also alleged to be provocative with intent to promote enmity and creating disharmony among the public. A case was registered at Karimedu police station against Pandian under IPC sections 294 (b), 504, 505 (2), and 153 (A). Condemning the arrest VCK leader Thol Thirumavalavan and INL have asked the government to release him. “Various BJP and right wing leaders have been making comments with the intent to promote enmity between religious groups but no action has been taken against any of them,” alleged INL state secretary Haji Rafeeq.
Times of Indiia, Dravidian outfit leader arrested in Madurai for provocative speech, remarks against TN governor, Sukshma Ramakrishnan / TNN / Apr 24, 2022, 20:00 IST.
யார் இந்த ஈஷ்வர்சந்திரன்சுப்ரமணியன்?: இப்பொழுது 39 / 45 வயாதான இவர், அமெரிக்க பல்கலைகழகத்தின் எம்.எஸ் பட்டதாரி, திருமணம் ஆகாதவர்[1]. அசோக் நகர் / பழைய / மேற்கு மாம்பலத்தைச்சேர்ந்தவர்[2]. கம்பெனிகளுக்கு ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர், இப்பொழுது, வேலையில்லாமல் இருக்கிறார்[3]. அந்த தனிநபர் யூ-ட்யூப் செனலுக்கு பேட்டி கொடுக்கும் பொழுது, சீல கருத்துகளை நீக்கிவிடும் படி கேட்டுக் கொண்டிருந்தார். அதனால், அவர் பேசியதில் எது வெட்டப் பட்டது, ஒட்டப் பட்டது என்பது தெரியாது. ஊடகங்கள் இவ்வாறு சில மாறுபட்ட விவரங்களைக் கொடுக்கிறது. அவரது பேசும் தொணியைக் கேட்கும் போது, மிகவும் உயர்வு நவிற்சியில், மிகைபடுத்தி, கேலியாக (sarcastic, cynical, ironical, derisive, sardonic) பேசுவது தெரிகிறது. காளமேகப் புலவர் பாணியில் ஔவையார் சொன்னது போல இருந்தது.
காந்தியை பசுவுடன் ஒப்பிட்டதால், அவரின் விரோதிகள் என்று சொல்லப் படும் அம்பேத்கர், ஜின்னா, பெரியார் இவர்களை எப்படி உதாரணமாக சொல்லவேண்டும் என்று தெரியவில்லை. ஏனெனில், நடுநடுவில், என்ன, நான் சொல்வது புரியுதா என்றும் கேட்கிறார். தலித்ஸ்தான், பாகிஸ்தான், திராவிடஸ்தான் கேட்ட அவர்களை விடுத்து, தேசத்திற்கு பாடுபட்ட காந்தி என்ற பசுவை கோட்சே கொன்றது தகுமோ என்பது போல பேசியது கவனிக்க வேண்டும்.
வெறுப்புப் பேச்சு என்றால் என்ன?: இந்திய அரசமைப்பில் மக்களிடையே வெறுப்புப் பேச்சுகளால் ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்க வெறுப்புப் பேச்சு சட்டங்கள் உள்ளன. இதன்படி ஒரு குடிமகனை அவரின் இனம், மொழி, பண்பாடு, வாழும் பகுதி, சமூகம் போன்ற ஏதோ ஒரு காரணத்திற்காகத் திட்டுபவர் தண்டிக்கப்படுவார். குறிப்பாக, சமய நம்பிக்கைப் பற்றி கேலி பேசி புண்படுத்துவோர் கடுமையாக தண்டிக்க்கப்படுவர், இந்திய அரசமைப்புச் சட்டம் இந்திய ஒன்றியத்திற்கு அடையாளமாக எந்த ஒரு தனி மதத்தையும் குறிப்பிடவில்லை. பகுதி 25 (1) இன் படி “அனைத்து குடிமக்களும் சமமான உரிமைகள் அளிக்கப்பட்டு அவர்களின் சமய நம்பிக்கையை கொண்டிருக்கவும் பரப்பவும் உரிமை அளிக்கப்படுகிறார். பகுதி 19 (Article 19) அனைத்து குடிமகன்களுக்கும் பேச்சு உரிமையை வழங்குவதுடன், பொது நாகரிகம், நீதி கருதி சில இடங்களில் வரைமுறை அளித்துள்ளது. ஆனால், தினம்-தினம் திராவிடத்துவவாதிகள் இந்துமதத்தைத் தாக்கி வருவதை காணலாம். ஆனான பட்ட ஸ்டாலினே, திருமண மந்திரங்களைப் பற்றி ஆபாசமாக பேசியது தெரிந்த விசயமே. பிராமணகளை கேலி பேசுவது, திட்டுவது, வைவது, ஆபாசமாக பேசுவது, சித்தரிப்பது என்பதும் ஊடகங்களில் சர்வசாதாரணமான விசயமாக் இருக்கிறது.
சட்டம், சட்டப்பிரிவுகள்சொல்வதுஎன்ன?[4]: பிரிவு 153A(1): பேச்சாலோ எழுத்தாலோ அல்லது சைகையாலோ, மத இன மொழி சாதி சமய சம்பந்தமான விரோத உணர்ச்சிகளைத் தூண்டி விட முயற்சி செய்வது குற்றமாகும். குற்றத்தினை புரிபவர்களுக்கு 5 ஆண்டு வரை சிறைக்காவலுமடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்
பிரிவு 153B(1)பேச்சு எழுத்து அல்லது சைகை அல்லது காணத்தகும் பொருள்களின் மூலமாகவாவது அல்லது வேறெந்த விதத்திலாவது
A ) ஒரு சமய இன மொழி அல்லது சாதி சமூகம் ஆகியவற்றில் உறுப்பினராக இருக்கின்ற காரணம் காட்டி எவரேனும் சட்ட ரீதியாக நிறுவப்பட்டுள்ள இந்திய அரசிடம் உண்மையான நம்பிக்கையோடும் விசுவாசத்தோடும் இருக்க முடியாது அல்லது இந்திய அரசாட்சியின் உரிமையும் முழுமையாக நிலை நிறுத்த முடியாது என்கிற வகையில் குற்றச்சாட்டை செய்தாலும் சுமத்தினாலும்
B) சமய இன மொழி அல்லது பிராந்திய குழு சாதி, சமூகம் அல்லது பிரிவு எதனிலேனும் உறுப்பினராக காரணம் காட்டி எவருக்கேனும் இந்தியாவின் குடிமக்கள் என்ற முறையில் அவர்களுக்குள்ள உரிமைகள் மறுக்கப்பட வேண்டும் பறிக்கப்பட வேண்டும் என்று உரைக்கிற அல்லது ஆலோசனை சொல்கின்ற பிரசாரம் செய்கின்ற அல்லது வெளியிடுகின்ற
C) சமய இன மொழி அல்லது பிராந்திய குழு சாதி, சமூகம் அல்லது பிரிசவு எதனிலேனும் உறுப்பினராக காரணம் காட்டி எந்த ஓர் உறுப்பினருக்குரிய கட்டுப்பாடு பற்றி உரைத்தல், ஆலோசனை, கோரிக்கை அல்லது வேண்டுகோள் எதையேனும்வெளியிடுதல் ஆகியவற்றால் அந்த வகுப்பினருக்கும் மற்றவர்களுக்கும் இடையே ஒற்றுமையின்மை பகை உணர்ச்சி அல்லது குரோதம் அல்லது வெறுப்பை உண்டாக்கும் விதத்தில் கோரிக்கை வேண்டுகோள், ஆலோசனை அறிவிப்பு வெளியிடுதல் போன்றவை குற்றமாகும்
மூன்று ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
295A: மதவழிபாட்டில் ஈடுபடுவோரின் உணர்ச்சிகளை சீற்றமுற்று எழச் செய்ய வேண்டும் என்ற தீய கருத்துடன் வேண்டுமென்றே பேச்சாலோ, எழுத்தாலோ, அல்லது ஜாடையாலோ அவர்கள் மதத்தை அல்லது மத உணர்வுகளை புண்படுத்துவதும் அல்லது புண்படுத்த முயற்சி செய்வதும் குற்றமாகும். 3 ஆனண்டு சிறைத்தண்டனை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
100-வருடதிராவிடத்துவபாரம்பரியம்வெறுப்பு–துவேச–ஆபாச–அருவறுப்புபேச்சுஎன்பதாகும்: 70 வருடங்களுக்கு முன்னர் ஈவேரா / பெரியார், அண்ணாதுரை, கருணாநிதி, தீப்பொறி ஆறுமுகம், அணுகுண்டு ஆறுமுகம், தீக்குச்சி சண்முகம், எஸ்.ஏ. அசோகன், வெற்றிகொண்டான், என்றெல்லாம் இருந்தனர். திக-திமுக-தமிழ் பிரிவினைவாதிகள், நக்சலைட் வகையறாக்கள் பேச்சை கேட்டவர்களுக்கு மற்றவை ஒன்றும் திகைப்படையச் செய்யாது. சாதாரணமாக, திகவினர் இந்துவிரோத பேச்சுகளை அள்ளி வீசும் போது, பெண்கள் ஓடாத குறையாக வேகவேகமாக சென்று விடுவதை கிராமங்களில், நகர்புறக் கூட்டங்களில் பார்த்திருக்கலாம். ஐயப்பன், ஐயப்பன் நம்பிக்கைக்கு எதிராகக் கூட கேவலமாக பேசி, ஆபாசமாக பிட் நோட்டீஸுகளை கொடுத்திருக்கிறார்கள். இப்பொழுது ஆர்.எஸ்.பாரதி, சீமான், ஜார்ஜ் பொன்னையா, எச். ராஜா, கல்யாணராமன், மாரிதாஸ், கிஷோர் கே சாமி, சாட்டை முருகன், தட்க்ஷிணாமூர்த்தி, ஈஷ்வர் சந்திரன் சுப்ரமணியன் என்று பட்டியல் நீள்கிறது. புகார்கள், கைதுகள், பெயிலில் வெளி வருவது, வழக்குகள் கிடப்பில் கிடப்பது, மறந்து விடுவது என்பனவெல்லாம், அரசியல், அதிகாரம், ஆதரவு, பரஸ்பர ஆதாயம் என்ற விதங்களில் தீர்மானிக்கப் படுகின்றன.
சிந்தனைக்குசிலகருத்துகள்: அரசு, ஆட்சி, சித்தாந்தம்….முதலியன எப்படி இருந்தாலும், இந்துக்கள் தமிழகத்தில் தங்களது உரிமைகளுடன் வாழ வேண்டும்.
1. ஈஸ்வர் சந்திரன் சுப்பிரமணியன் முட்டாள் இந்துவா, மெத்தப் படித்த (இரண்டு அமெரிக்க எம்.எஸ்) இந்துத்துவவாதியா, இந்து தீவிரவாதியா?
2. இருந்த இடம் பழைய மாம்பலமா, அஷோக்நகரா? AK-47, வெடிகுண்டுகள் எல்லாம் கைப்பற்றப் பட்டனவா? பிறகு எப்படி இந்து தீவிரவாதி ஆனது?
3. ஒருவன் தன்னை தீவிரவாதி என்று சொல்லிக் கொண்டால் தீவிரவாதி ஆகி விடுவானா, இல்லை குண்டு வெடித்து சிறையில் இருந்தும் வெளியே வர பரிந்துரை செய்யப் படுபவன் உத்தமன் ஆவானா?…
4. இந்த இந்து தீவிரவாதியை இந்து சட்ட வல்லுனர்கள் கப்பாற்றுவார்களா, பலிகடா ஆக்கி விடுவார்களா? பெயிலில் வர ஏற்பாடு செய்வார்களா, போராட்டம் நடத்துவார்களா?.
5. வெறுப்புப் பேச்சு என்றால், அவ்வாறு பேசியவன் எல்லோருமே கைதாகி, சிறைக்குச் சென்றிருக்க வேண்டுமே? வீடியோக்கள் உள்ளனவே? அவர்கள் புனிதர்களா?
6. சட்டத்தின் முன்னனெல்லோரும் சமம் என்றால் – three Sections of 153 (provocative speech to incite riot), 153A(1) (for trying to create causing disharmony between religious groups) and 505(1)(B) (intent to cause fear or alarm to the public) of the Indian Penal Code – இவையெல்லாம் ஆளுக்கு ஆள் மாறுமா?
7. கடந்த காலத்தில் இதே பிரிவுகளில் எத்தனை புகார் பதிவு, கைது, சிறை, பெயில், தண்டனை வழங்க பட்டன என்று கூற முடியுமா?
8. கோட்ஸே தாசன் என்றெல்லாம் பறைச்சாற்றிய எந்த ஒரு பேஸ்புக் இந்துத்துவ வாதியும் தைரியமாக கூவக் காணோமே? புத்தகம், சிவராத்திரி என்று பஜனை செய்து கொண்டிருக்கிறார்களே?
9. அந்த வீடியோவின் முழு பேச்சு, எந்த ஊடகமாவது வெளியிட்டுள்ளதா? பேசிய விவரங்கள் எல்லோருக்கும் தெரியுமா? புகார் கொடுத்தருக்குத் தெரியுமா?
10. இதுகுறித்து வழக்கறிஞர் சந்தோஷ் கூறும்போது, “சமீப காலமாக சமூக ஆர்வலர்கள் பலரை ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.க கும்பல் தாக்கியும் கொலை செய்தும் வரும் நிலையில் இதுபோன்ற சர்ச்சையான கருத்து தெரிவித்தவர் மீது தகுந்த நடவடிக்கையை எடுக்கவேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
[1] The Hindu, Ashok Nagar resident booked for hate speech, Special CorrespondentCHENNAIFEBRUARY 28, 2022 21:43 IST; UPDATED: FEBRUARY 28, 2022 21:43 IST.
இடையிடையேசூர்யாவெற்றிகொண்டானின்நாகரிகமற்றபேச்சுகள்: டிவி விவாதங்களில் கலந்து கொள்ளும் சூயா வெற்றிகொண்டான் என்பவரின் பேச்சை, வார்த்தைகளை, முகபாவங்களை கூர்ந்து கவனித்தால், அவரது அநாகரிகமான வார்த்தைப் பிரயோகங்களைக் கவனிக்கலாம். ஒருமையில் தலைவர்களைக் குறிப்பிடுவது முதலியன சரியாக இல்லை என்று சுருக்கமாக சொல்லலாம். ஜெயலலிதா பற்றி வரும் போது, அந்த பேச்சுகள் கொடுமையாக இருக்கின்றன. ஏதோ அதிமுககாரர்கள் தான் அவரைக் கொன்று விட்டனர் என்பது போல பேசியது திகைப்பாக இருந்தது. ஜெயலலிதா என்ன புரட்சி செய்தார், ரஜினி ஆட்சி மாற்றம் வேண்டும் என்றா, ஆனால் கிட்னியைத்தான் மாற்றினார், என்றெல்லாம் பேசியுள்ளதை கவனிக்கலாம்.
1950-70கள் பேச்சுகள் 2022ல் தொடரகின்றனவா?: 1950-70களில்தமிழகத்தை பொறுத்த வரையில், ஈவேரா, அண்ணா, கருணாநிதி போன்ற திராவிடத்துவத் தலைவர்கள் மற்றும், அணுகுண்டு ஆறுமுகம், இரா. வெற்றிக் கொண்டான், தீப்பொறி சண்முகம் என்ற அடுத்த கட்ட மேடைப் பேச்சாளர்கள், 1950களிலிருந்தே, ஆபாசமாக, அருவருப்பாக, இரட்டை அர்த்தத்தில் செக்ஸ் தொணியில் பேசுவது வழக்கமாக, வாடிக்கையாக இருந்து வந்தது. இன்னொரு பக்கம் எதிர்கட்சித் தலைவர்களை கேவலமாகப் பேசுவர். அப்பொழுதெல்லாம், இரவு 10-11 மணிக்கு மேல், காலை 2 மணி வரை நடக்கும், இத்தகைய கூட்டங்களுக்கு பிரத்யேக கூட்டம் இருக்கும். நடுவில் ஜனரஞ்சகமாக இருக்க எஸ்.ஏ. அசோகன் போன்றோரையும் பேச வைப்பது உண்டு. அவர் பேசிக் கொண்டே நடித்துக் காட்டுவார், நடித்துக் கொண்டே கிண்டலாக பேசுவார். இதற்ககென்றே தனிக் கூட்டம் வரும். உடன்பிறப்புகளே, ஒரு தாய் மக்களே, போன்றவற்றிற்கு சிறப்பான விளக்கமுமளிக்கப் படும். பிறகு திரைப்படம், திரைப்பட பாடல்கள், நாடகம், சினிமா என்று டிவி வந்தது. இவற்றிலும் அந்த ஆபாச-நகச்சுவை தொடர்ந்தது. பிறகு பட்டிப் பன்ற கலாச்சாரத்திலும் புகுந்தது.
1980-90களில் டிவி-பட்டிமன்றம் மக்களின் நேரவிரயத்திற்கு அதிகமாகப் பயன் பட்டது. அந்நிலையில், பாப்பையா, லியோனி போன்றோர் பிரபலமாகினர். ஆபாச-கொக்கோக பேச்சுகளுக்கு லியோனி, தனி பிரான்ட் தான்! இப்பொழுது இரா வெற்றிகொண்டான் மகன் அதே பாதையைப் பின்பற்றுவது தெரிகிறது! 2016ல் “தீப்பொறி ஆறுமுகத்தை தாக்கி நாக்கை அறுக்க முயற்சித்தனர்…,” என்று ஸ்டாலின் நினைவு கூர்ந்ததை கவனிக்கலாம்[1]. நினைவஞ்சலியில் இது நினைவு வந்ததையும் கவனிக்கலாம்[2]. அதாவது அந்த அளவுக்கு தூண்டும் வகையில் கலவரத்தை உண்டாக்கும் வகையில் வன்மத்துடன் பேசுவர். இருப்பினும், பொதுமக்கள் இவர்களது குணாதசியங்களைக் கண்டு, ஒதுங்கி சென்று விடுவர்.
மறுபடியும்கோவில்கள்பிரச்சினை– ஸ்டாலின்தலைமையில்குழு: தமிழகத்தில் கோயில்களின் பராமரிப்பை செம்மைப்படுத்த, பக்தர்களின் வசதியை மேம்படுத்த முதல்வர் ஸ்டாலின் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது[3]. திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு அறநிலையத்துறையில் பல்வேறு முக்கிய நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது[4]. அதன்படி அனைத்து சாதியினரும் அர்ச்சகர், தமிழில் அர்ச்சனை, கோயில்களின் பராமரிப்பு செலவிற்கு நிதி ஒதுக்கீடு உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகள் செயல்படுத்தப்பட்டுள்ளது[5]. இந்த நிலையில் கோவில்களை மேம்படுத்த உயர்நிலை ஆலோசனைக் குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது[6]. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான 17 பேர்கள் கொண்ட இந்த குழுவின் துணை தலைவராக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நியமிக்கப்பட்டுள்ளார்[7]. மேலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அறநிலையத்துறை செயலாளர், இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் ஆகியோர் பதவி வழி அலுவல் சார் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர். அலுவல் சாரா உறுப்பினர்கள் அடங்கிய குழுவில், கீழ்கண்டவாறு இடம்பெற்றுள்ளனர்[8].
ஸ்டாலின், முதலமைச்சர்.
சேகர் பாபு, அறநிலையதுறை அமைச்சர்.
அறநிலையத்துறை செயலாளர்,
இந்துசமய அறநிலையத்துறை ஆணையர்
தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்,
ஶ்ரீமத் வராக மகாதேசிகன்,
ஶ்ரீலஶ்ரீ அம்பலவாண தேசிய பரமாச்சாரிய சுவாமிகள்,
சாந்தலிங்க மருதாசல அடிகளார்,
நீதியரசர் டி.மதிவாணன் (ஓய்வு),
சு.கி.சிவம்,
கருமுத்து கண்ணன்,
சத்தியவேல் முருகனார்ர்,
இராமசுப்பிரமணியன்,
தரணிபதி ராஜ்குமார்,
மல்லிகார்ஜூன் சந்தான கிருஷ்ணன்,
ஶ்ரீமதி சிவசங்கர்,
தேச மங்கையர்க்கரசி
ஜெயாபாதையில்மோதலா, கூட்டணிக்குபேரமா?: ஆளுநருக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை எடுத்த ஜெயலலிதா மீது 1995-ல் ஜெயலலிதா மீது ஊழல் வழக்கை பதிய ஆளுநர் அனுமதி அளித்து அதிர்ச்சியூட்டினார். இதற்கு ஜெயலலிதா தரப்பில் பதிலடி தொடர்ந்தது. அதில் ஒன்றாக, பல்கலைக்கழகங்களில் வேந்தரின் அதிகாரத்தை ஆளுநரிடமிருந்து மாநில முதல்வருக்கு மாற்றி சட்டத் திருத்தம் கொண்டுவந்தார் ஜெயலலிதா. அந்த சட்டத் திருத்தத்துக்கு ஆளுநரின் அனுமதி தேவைப்பட்டது. ஆனால், ஆளுநர் கையெழுத்திடவில்லை. 1996-இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, அந்த மசோதா மீது அன்றைய திமுக அரசு ஆர்வம் காட்டவில்லை[9]. அதனால், அந்த சட்ட மசோதா செயல்பாட்டுக்கு வரவில்லை. ஆனால், அதிரடியாக ஜெயலலிதா எடுத்த நடவடிக்கை பெரும் விவாதமானது. இன்று ஸ்டாலினும் ஜெயலலிதா எடுத்த அதேபோன்ற முடிவைதான் எடுத்துள்ளார்[10]. மார்ச் மாதத்தில் திமுக அரசு, சட்டத் திருத்தம் கொண்டு வந்தாலும், அதற்கு ஆளுநரின் ஒப்புதல் தேவை[11]. தன் அதிகாரங்களைக் குறைத்துக்கொள்ள ஆளுநரே ஒப்புக்கொள்வாரா, மத்திய அரசின் பிரதிநிதியாகச் செயல்படும் ஆளுநர் அதற்கு இணங்குவாரா என்ற கேள்வியும் இதில் அடங்கியுள்ளது[12]. அப்படி ஆளுநர் ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டால்தான், அது செல்லுபடியாகும். எனவே, இந்த விவகாரத்தில் வெல்லப்போவது யார் என்பதை அறிய பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
[9] ஏசியாநெட்நியூஸ், தமிழகஆளுநருக்குசெக்.. ஜெயலலிதாவின்அஸ்திரத்தையேகையில்எடுக்கும்ஸ்டாலின்… ஜெயிக்கப்போவதுயார்..?, Asianet Tamil Chennai, First Published Jan 6, 2022, 9:38 PM IST Last Updated Jan 6, 2022, 9:44 PM IST
இந்துவிரோதஸ்டாலினைவைத்துகோவிலுக்குவிளம்பரம்: இந்து அறநிலையத் துறையை வைத்துக் கொண்டு, திமுக தினம்-தினம்யாரசியல் செய்து செய்திகளை வெளியிட்டு வருகிறது. முரசொலியிலேயே அத்தகைய விளம்படங்க்ளக் காணலாம். உதாரணத்திற்கு, இந்த படம் கொடுக்கப் படுகிறது.
மேகங்கள் சூழ ஆகாயம், வானளாவ இரண்டு கோபுரங்கள், நடுவில் ஸ்டாலின் உதயமாவது போல, ஏதோ ஆவி திடீரென்று தோன்றுவதுபோல, சிரித்த முக்த்துடன் ஸ்டாலின் உருவம் மங்கலாகக் காணப்படுகிறது.
இது காத்து-கருப்பு வேலையா, கருப்பர் கூட்டம் திட்டமா, கருப்பு-சிவப்பு கூட்டணி யுக்தியா…….இது கோவில்களை எப்படி. எவ்வாறு பாதிக்கும் என்று தெரியவில்லை.
ஒரு நாத்தினுக்கு, பெரியாரிஸ்டுக்கு, இந்துவிரோதிக்கே எந்த மாதிரியான ஆசை எல்லாம் வருகிறது?
பிறகு இல்லை என்றால், அவ்வாறு படம் போடாதே என்று ஆணை இட்டுயிருக்க வேண்டும்!
குங்குமம், விபூதி, சந்தனம் துடைத்தெறிந்தது போல, செய்தியிருக்க வேண்டும் ஆனால், செய்யவில்லையே?
இந்துஅறநிலையத்துறையைவைத்துதிமுகவிளம்பரம்: இன்னொரு விளம்பரத்தில் கோவில் நிர்வாகிகளை வைத்து, ஒரு விளம்பரத்தை கொடுத்துள்ளது. அதில், கோவிலுக்கு தண்ணிர் குழாய் வைத்துத் தர கோரியுள்ளது.
மக்கள் தான் தண்ணீர் குழாய் அமைத்துக் கொடுக்க வேண்டுமா?
இந்து அறநிலையத் துறை செய்யாதா?
அந்த எம்.எல்.ஏ கருணாநிதி தொகுதி நிதியிலிருந்து எடுத்து பணி செய்யலாமே?
பிறகு எதற்கு “ சில கஷ்டங்கள்” உள்ளன என்று கூற வேண்டும்?
கருணாநிதி, ஸ்டான் படங்கள் போடும் போது அவர்கள் தானம் கொடுக்கலாமே?
துர்கா ஸ்டாலினும் செய்யலாமே?
இவ்வாறு, விளம்பர அரசியல், இந்து அறநிலைத் துறையை பீடித்துள்ளது. சேகர்பாபு சொல்லி வைத்தால் போல, ஒருநாள் அது, அடுத்த நாள் இது, இன்னொரு நாள் எது என்ற “அது-இது-எது” பாணியில் வலம் வந்து கொண்டிருக்கிறார். ஊடகங்களும் செய்திகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கின்றன.
நீட்அரசியலும், மட்தியஅரசுஎதிர்ப்பும் – கவர்னர்ராஜினாமாசெய்யவேண்டுமாம்: நீட்டை ஒழிப்போம் என்று தேர்தல் வாக்குருதி கொடுத்து அரசியலை ஆரம்பித்தது. ராஜன் கமிட்டி அமைத்து கருத்தைத் திணித்தது. ஆனால், நீட் நடந்தது, மருத்துவ அனுமதியும் முடிந்து விட்டது. அந்நிலையில், மறுபடியும் அரசியல் செய்ய, தீர்மானம் பெயரில் கலாட்டா செய்கிறது. இதுபற்றி பேசிய டி.ஆர்.பாலு, நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் சட்ட மசோதா நிலுவையில் இருப்பதற்கு ஆளுநர் தான் பொறுப்பு. எனவே, சட்டத்தை மதிக்காத ஆளுநர் உடனே பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்[1]. உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்திக்க 3வது முறையாக அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், உள்துறை அமைச்சகத்தில் மீண்டும் மனு அளிக்கப்பட்டுள்ளது என்றும் டி.ஆர்.பாலு கூறினார்[2]. எந்த மசோதாவும் கவர்னர் மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். அது சட்டம்-நீதிட்துறையில் அலசப் பட்டு, பிறகு பாராளுமன்றத்திற்கு வரும். விவாதித்து, முடிவெடிக்கப் படும். எல்லைகளில் சீனப்படைகளின் அட்டூழியம், எல்லைமீறல்கள், காஷ்மீரத்தில் தினம்-தினம் தீவிரவாதிகளின் கொட்டம், மும்பையில் தொற்று நுழைவுகள், வடகிழக்கு மாநிலங்களில் உள்நுழைவு பிரச்சினைகள், இவற்றையெல்லாம் விடுத்து, எங்களை பார்க்கவில்லை என்பது நிச்சயமாக இல்லாததை இருப்பது போல காட்டிக் கொள்ளும் பாவம் தான்.
கனிமொழிக்குவாழ்த்துசொன்னஅமித்ஷா: கனிமொழி பிறந்த நாளுக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் ஆகியோர் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தனர் என்று தமிழ் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன[3]. திடீரென்று இதற்கு முக்கியத்துவம் கொடுப்பது விசித்திரம்மாக உள்ளது[4]. இருப்பினும், திராவிடத்துவ தலைவர்களுக்கு அத்தகைய நாகரிகம் உள்ளதா என்று தெரியவில்லை. இதே கனிமொழி மோடி, அமித் ஷா பற்றிப் பேசியுள்ளதை கவனித்தால் தெரியும். இப்பொழுதும், மோடி வருகைப் பற்றி ஒரு “தாக்குதல்-எதிர்ப்பு” ரீதியில் தான் பேச்சுகள் உள்ளன. கனிமொழிக்கு வாழ்த்து சொல்ல நேரம் இருக்கும் பொழுது, திமுகவினரை சந்திக்க நேரமில்லையா என்று கேட்பார்கள் போலிருக்கிறது.
மத்தியஅமைச்சர்அமித்ஷாவுக்குஸ்டாலின்கண்டனம்: நீட் தேர்வுக்கு விலக்கு மசோதா பற்றி கடிதம் கொடுக்க மத்திய அமைச்சர் அமித்ஷா நேரம் கொடுக்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்[5]. அப்போது, நீட் தேர்வுக்கு விலக்கு மசோதா பற்றி கடிதம் கொடுக்க அனைத்து கட்சி எம்.பி.க்களை சந்திக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரம் கொடுக்கவில்லை. இது மக்களாட்சி தத்துவத்துக்கு எதிரானது. நீட் தேர்வு விலக்கு மசோதா ஆளுநரால் இன்னும் குடியரசுத் தலைவருக்கும் அனுப்பப்படவில்லை[6]. இதனால் இது குறித்து பேச கடந்த பத்து நாட்களாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க தமிழக அனைத்து கட்சி எம்பிக்கள் முயற்சி செய்து வந்தனர். நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதா நிலுவையில் இருப்பதற்கு ஆளுநர் தான் பொறுப்பு. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கச் சென்றார்கள். மூன்று முறை அனுமதி கேட்டும் மூன்று முறை அனுமதி ரத்து செய்யப்பட்டிருக்கிறது. நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரி உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி மீண்டும் மீண்டும் மனு அளிக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில்பல்கலைக்கழகதுணைவேந்தர்களைதமிழகஅரசேநியமிப்பதற்கானதீர்மானம்: இவ்வாறு வருகிற மார்ச் மாதம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்[7]. மசோதா முலம் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என்றார்[8]. எதிர்க்கட்சிகள் ஆளும் சில மாநிலங்களில் ஆளுநர்களுக்கும் முதல்வர்களுக்கும் இடையே சமீபகாலமாக மோதல் ஏற்பட்டிருப்பதற்கு பல்கலைக்கழகங்கள் தொடர்பான விவகாரங்கள் முக்கியக் காரணமாக இருக்கின்றன[9]. மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், ஆளுநர் ஜகதீப் தங்கருக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நிலவிவருகிறது. மகாராஷ்டிராவிலும் கேரளாவிலும், அரசுக்கும் ஆளுநர்களுக்கும் இடையிலான மோதல் தற்போது தீவிரடைந்திருக்கிறது. மாநிலத்தில் பல்கலைக்கழகங்களுக்கு ஆளுநர்கள் வேந்தர்களாக இருப்பதால், துணைவேந்தர்கள் நியமனம் போன்றவை இவர்களின் மோதலுக்கு முக்கியக் காரணங்களாக இருக்கின்றன. மத்திய அரசின் பிரதிநிதிகளாக மாநில ஆளுநர்கள் நியமிக்கப்படும் நிலையில், எதிர்க்கட்சிகள் ஆளுகிற மாநிலங்களில் மாநில அரசுக்கும், ஆளுநர்களுக்கும் நல்ல புரிதல் இருக்கும் பட்சத்தில், இரு தரப்புக்கும் இடையே சுமுகமான உறவு நிலவும். அப்படியான சுமுகநிலையை ஒருசில மாநிலங்களில் பார்க்க முடியும். ஆனால், எதிர்க்கட்சிகள் ஆளுகிற மாநிலங்கள் பலவற்றில் இரு தரப்புக்கும் இடையே முட்டலும் மோதலும் இருப்பதையே பார்க்க முடிகிறது[10].
[9] விகடன், முதல்வர் Vs ஆளுநர்… வேந்தர், துணைவேந்தர்பதவிகள்… அதிகாரமோதல்எதற்காக?!, ஆ.பழனியப்பன், Published:Yesterday at 11 AMUpdated:Yesterday at 11 AM.