Posts Tagged ‘பெண்கள் குற்றங்களில் ஈடுபடுவது’

கொலை-கொள்ளைகளில் பெண்கள் ஈடுபடுவது அதிகரிப்பு!

ஜனவரி 13, 2010

கொலை-கொள்ளைகளில் பெண்கள் ஈடுபடுவது அதிகரிப்பு!

ஆணுக்குப் பெண் நிகர்தான் என்று பெண்கள் மெய்ப்பித்து வருகின்றனர்.

3 பெண்கள் மீது கொலை வழக்கு

பதிவு செய்த நாள் 1/12/2010 12:27:40 AM

Swine Flu

சென்னை : அசோக் நகரில் குடிபோதையில் பெண்களிடம் தகராறு செய்த விடுதலை சிறுத்தைகள் வட்ட செயலாளர் கீழே விழுந்து இறந்தார். பெண்கள் தள்ளிவிட்டதால் அவர் பலியானதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து 3 பெண்களை கைது செய்தனர்.
அசோக்நகர் நல்லாங்குப்பம் 57வது தெரு 1வது பிளாக்கில் வசிப்பவர் ஆதி (எ) ஆதிமூர்த்தி (23), விடுதலை சிறுத்தைகள் கட்சி வட்ட செயலாளர். பெயிண்டராக பணி புரிகிறார். இவருக்கு மனைவி, 3 மாத குழந்தை உள்ளனர். குடிப்பழக்கம் உண்டு. நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு குடித்து விட்டு, கே.கே.நகர் ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு பின்புறம் உள்ள அம்பேத்கர் குடிசை பகுதிக்கு சென்றுள்ளார்.
அங்கு வீட்டுக்கு வெளியே படுத்திருந்த வனிதா என்ற பெண்ணிடம் ஆதிமூர்த்தி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் சத்தம் போட்டதால், அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் ஏராளமான பெண்கள் கூடி விட்டனர். அவர்கள், ஆதிமூர்த்தியை தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. அருகில் இருந்த சைக்கிள் மற்றும் பாறாங்கல் மீது ஆதிமூர்த்தி விழுந்தார். தலையில் அடிபட்டு அதே இடத்தில் இறந்தார்.
உடனே, அங்கிருந்த பெண்கள் இது பற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உதவி கமிஷனர் பரந்தாமன், இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வனிதா, ராதா, பொட்டுக்கண்ணி ஆகிய 3 பெண்களும், ‘‘ஆதிமூர்த்தி அடிக்கடி குடித்து விட்டு வந்து எங்கள் பகுதியை சேர்ந்த பெண்களிடம் தகராறு செய்வார். நாங்களும் பொறுத்து பார்த்தோம். ஆனால் அவர் திருந்தவில்லை. நள்ளிரவில் வந்து எங்களிடம் தவறாக நடக்க முயன்றார். அதனால் பெண்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து தள்ளி விட்டோம். அதில் அவர் கீழே விழுந்து விட்டார். போதையில் விழுந்து கிடப்பதாக நினைத்தோம். நீண்ட நேரமாக எழுந்திருக்காததால், போலீசுக்கு நாங்களே தகவல் தெரிவித்தோம்’’ என்று கூறியுள்ளனர். அதை தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையில் ஆதியின் உறவினர்கள் கூறும்போது, ‘‘அம்பேத்கர் குடிசை பகுதியில் கஞ்சா வியாபாரம் நடக்கிறது. அதை கண்டுபிடித்து போலீசில் சொல்வதற்காக சென்றவரைத்தான் அடித்து கொன்று விட்டனர்’’ என்று போலீசாரிடம் தெரிவித்தனர். இதுகுறித்து, எம்ஜிஆர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி
உள்ளது.


இதே செய்தி பலவாறு வெளியிடப்பட்டுள்ளன:

உல்லாச வெறி-வாலிபர் கொலை: 3 பெண்கள் கைது

திங்கள்கிழமை, ஜனவரி 11, 2010, 15:19[IST]

http://thatstamil.oneindia.in/news/2010/01/11/three-women-arrested-murdering-yout.html

குடிபோதையில் உல்லாசத்துக்கு அழைத்த வாலிபரை அடித்துக்கொலை செய்ததாக 3 பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.  சென்னை நல்லாங்குப்பம் பகுதியை சேர்ந்த பெயிண்டர் ஆதி (23). மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து பாதியில் நிறுத்தி விட்டார். பின்னர் 131வது வட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளராக பணியாற்றி வந்தார்.  இவர் போரூரைச் நந்தினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். நந்தினி பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்றிருந்தார்.

வீட்டில் தனியாக தங்கி இருந்த ஆதிக்கும் வனிதா என்ற பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு 11 மணிக்கு ஆதி குடிபோதையில் வனிதாவை தேடி எம்.ஜி.ஆர்.நகர் அம்பேத்கார் குடிசை பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றார்.  வீட்டில் தூங்கி கொண்டிருந்த வனிதாவை உல்லாசத்திற்கு அழைத்தார். வனிதா மறுத்ததால் பலவந்தபடுத்தியுள்ளார். இதனால் வனிதா கூச்சல் போடவே சத்தம் கேட்டு அருகில் இருந்த வனிதாவின் உறவுக்கார பெண்கள் ஓடி வந்தனர்.  ஆதியை வெளியே போகுமாறு கண்டித்தனர். ஆனால் போதையில் இருந்த ஆதி, வனிதா மீது ஆவேசமாக பாயவே, அவர்கள் ஒரு கயிற்றை ஆதி மீது வீசி, கட்டி இழுத்துள்ளனர்.  மீண்டும் திமிறிக்கொண்டு பாய முயற்சித்த ஆதியை பெண்கள் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர்.

பின் மண்டையில் பலத்த காயமடைந்த ஆதி அதே இடத்தில் சுருண்டு விழுந்து இறந்தார். அவர் கொலை செய்யப்பட்டதை உணர்ந்த வனிதா, உறவு பெண்கள் ராதா, பொட்டுகனி ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர். கொலையை மறைக்க முடிவு செய்த அவர்கள், ஆதியின் உடலை வெளியில் தூக்கி வந்து போட்டு இரும்பு ராடு ஒன்றின் மீது தவறி விழுந்து இறந்ததுபோல உடலை சாய்த்து வைத்தனர். பின்னர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் அசோக் நகர் போலீசார் வந்து விசாரித்ததில் ஆதி கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.  இதையடுத்து வனிதா, ராதா, பொட்டுக்கனி ஆகிய 3 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை கணவர் கொல்லப்பட்ட தகவல் அறிந்து கைக் குழந்தையுடன் ஓடி வந்த நந்தினி, குடிசைப் பகுதியில் கஞ்சா விற்றதை கண்டித்ததால் தான் என் கணவர் கொல்லப்பட்டார் என குற்றம் சாட்டினார்.

சென்னையில் காமுகன் ஒருவன் பெண்களால் அடித்துக்கொலை

நியூஇந்தியாநியூஸ் – ‎11 ஜன., 2010‎
குடிபோதையில் அட்டூழியம் செய்த இளைஞர் ஒருவர் பெண்களால் அடித்தே கொல்லப்பட்ட சம்பவம் சென்னை எம்.ஜி.ஆர் நகரில் நடந்துள்ளது. சென்னை நல்லாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஆதி

கஞ்சா பிரச்சினையா? கள்ளக்காதல் பிரச்சினையா? விடுதலை

தினத் தந்தி – ‎11 ஜன., 2010‎
சென்னை எம்.ஜி.ஆர். நகரில், விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரை அடித்து கொன்றதாக 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர். கஞ்சா விற்பனையால் ஏற்பட்ட பிரச்சினையில் கொலை நடந்ததா?

சமீபத்தில், கொலை-கொள்ளை-ஏமாற்றுவேலை-என எல்லாகுற்றங்களிலும் அதிகமாகப் பெண்கள் ஈடுபட்டிருப்பது ஆச்சரியமாக உள்ளது.

அதிலும், செக்ஸ் குற்றங்களில் அவர்களது கற்பனைக்கெட்டாத வரையில் உள்ள பங்குகள் மனங்களை உரைய வைக்கின்றன, வருத்தப்படச் செய்கின்றன.

குறிப்பாக தமிழகத்தில் அத்தகையவை நடக்கின்றது என்பது ஆய்வுக்குறியது.