Archive for the ‘வேலியே பயிர் மேய்கிறது’ Category

ஜாபர் சாதிக் விவகாரம் – சகோதரர்கள் தலைமறைவாக உள்ள நிலை, தொடரும் விசாரணை (7)

மார்ச் 25, 2024

ஜாபர் சாதிக் விவகாரம்சகோதரர்கள் தலைமறைவாக உள்ள நிலை, தொடரும் விசாரணை (7)

ஜாபர் சாதிக்கின் வீட்டின் சீல் நீக்க போட்ட மனு: முன்னர் நோட்டீஸ் ஒட்டியதை, சாத்தின் தாய் கிழித்துப் போட்டாள் என்ற செய்தி வந்தது[1]. அதே போல, இப்பொழுதும் ஏதாவது ஏற்படுமோ என்று தெரியவில்லை[2]. வீட்டில் சோதனை நடந்த போது, சாட்சிகளுடன் தான் அதிகாரிகள் நடத்துவர். பிறகு, அப்பொழுது யார் இருந்தது என்ற கேள்வி எழுகிறது. இதற்கிடையே, ஜாபர் சாதிக் வீட்டில் போடப்பட்டுள்ள சீலை அகற்றக்கோரி டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஜாபர் சாதிக்கின் வழக்கறிஞர் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது[3].  முக்கியமான விசயத்தை விட்டு, எப்படியெல்லாம், இடையில் திசைத் திருப்பப் படுகிறது என்பதையும் கவனிக்கலாம். உண்மையில், இவ்வாறெல்லாம் சட்டமீறல் காரியங்கள் எல்லாம் செய்யாமல், தாய் தடுத்திருக்கலாம். ஆனால், இப்பொழுது, தெரிந்தும், சட்டத்தை மதிக்காமல், நோட்டீஸைக் கிழித்து எறிகிறாள் என்றால், அவர்கள் ஏதோ இந்திய சட்டங்கள் எல்லாம் தமக்கு அமூலாகாது என்று சொல்லுவது போல உள்ளது.

சதானந்தம் என்ற கூட்டாளி: இதற்கிடையில், சென்னையில் விசாரணை நடத்திய போது, ஜாபர் சாதிக் அளித்துள்ள வாக்குமூலம்: “சென்னை பெருங்குடியில், நானும் என் நண்பரான சதானந்தமும் நடத்தி வந்த, போதைப்பொருள் தயாரிப்பு தொழிற்சாலையில், வெளிநாடுகளுக்கு உணவு பொருட்கள் அனுப்பியது தொடர்பாக, ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ரசீதுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை உணவு பொருட்கள் அல்ல; போதை பொருள் கடத்தியதற்கான ரசீதுகள். எங்கள் கூட்டாளிகள், திருச்சி மற்றும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளை சேர்ந்த இவர்கள் தான், எங்கள் தொழிலை விரிவுபடுத்தியவர்கள். வெளிநாடுகளுக்கு போதை பொருள் கடத்தியதில், என்னை விட என் சகோதரர் முகமது சலீம் தான் மூளையாக செயல்பட்டு வந்தார். மலேஷியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா என, வெளிநாட்டு தொடர்புகள் அனைத்தையும், முகமது சலீமே கவனித்து வந்தார். வி.சி., நிர்வாகியாக இருந்த அவருக்கு, தமிழகத்தில் செயல்படும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. “

பேரீச்சம் பழமும், போதைப் பொருளும்: ஜாபர் சாதிக் தன்னுடைய வாக்குமூலத்தில் தொடர்ந்து கூறியது,  “அந்த வகையில், சென்னை அண்ணா நகரில் மிகவும் முக்கியமான நபர்களின் பின்னணியில் போதைப்பொருள் கடத்தல் நடக்கிறது. இவர்களுடன் என் தம்பிக்கு தொடர்பு உள்ளது. மற்றொரு தம்பி மைதீன், சினிமாவில் நடித்து வருகிறார். அவர் வாயிலாக, கோலிவுட்டில் போதை பொருள்சப்ளைசெய்துள்ளோம். எங்களின் வாடிக்கையாளர்களாக சில நடிகர், நடிகையர், கல்லுாரி மாணவர்கள், .டி., நிறுவன ஊழியர்கள் உள்ளிட்ட பல தரப்பினர் உள்ளனர். அவர்களுக்கு எல்லாம் பேரீச்சம் பழத்தில் வைத்து போதை பொருட்களை விற்பனை செய்தோம்[4]. இதுபற்றி வெளியே தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக, பேரீச்சம் பழம் இறக்குமதி தொழிலும் செய்து வந்தோம்[5]….”

கோலிவுட் தொடர்பு: ஜாபர் சாதிக் தன்னுடைய வாக்குமூலத்தில் தொடர்ந்து கூறியது,  ‘இதற்கு கோலிவுட்டில் எங்களுடன் நெருக்கமான தொடர்பில் இருந்த முக்கிய நபர் தான், ‘ஐடியா’ கொடுத்தார். பேரீச்சம் பழம் வியாபாரத்திலும் நல்ல லாபம் கிடைத்தது. இவ்வாறு வாக்குமூலத்தில் ஜாபர் சாதிக் தெரிவித்துள்ளார். ஜாபர் சாதிக்கின் சகோதரர்கள் முகமது சலீம், மைதீன் ஆகியோர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க, அவர்களுக்கு எதிராக, ‘லுக் அவுட்’ நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் அடிக்கடி செல்லும் இடங்கள் குறித்து, அதிகாரிகளிடம் ஜாபர் சாதிக் தெரிவித்துள்ளார். இருவரும் விரைவில் சிக்குவர் என, மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். பலமுறை வாக்குமூலம் கொடுத்து, தங்களை வற்புருத்தி அவ்வாறு வாங்கிக் கொண்டனர் என்று, மனு தாக்குதல் செய்வதும் உண்டு. இதெல்லாம், வழக்கமாக, வழக்கறிஞர்கள் செய்யும் வேலைகள் தான். அரசு அதிகாரிகள் எந்த அளவுக்கு கஷ்டப் பட்டு, வழக்கை நிலைநிறுத்த, ஆதாரங்களை சேகரித்து வலுசேர்க்கும் நிலையில், சிறிய விசயங்களை வைத்து, முக்கியமான விசயத்தையே மறக்கும் படி அல்லது ஓரங்கட்டும் முறையில், வேறு பிரச்சினையைக் கொண்டு வரும் சாதுர்யமும், வக்கீல்களில் உண்டு.

பேரீச்சம் பழம் மற்றும் போதை மருந்து வியாபாரம் சேர்ந்து நடந்தது: பேரீச்சம் பழம் வியாபாரம் மற்றும் அப்பழங்களில் போதை மருந்து வைத்து விற்பனை செய்யப்பட்டது எல்லாம் திகைப்பாக இருக்கிறது. பழங்கள் விற்ப்பது மற்றும் பழங்கள் உள்ளேன் போதை மருந்து விற்பனை, ஆக இரண்டு வகை முறைகளும் நடந்து வந்ததும் அதிர்ச்சியாக இருக்கிறது. இவ்வாறு, இவையெல்லாம் மக்களுக்கு சென்று அடைவது, அதைவிட மிக கொடுமையான சமூகத்தை பாதிக்கும் காரியம் என்று சொல்ல வேண்டி இருக்கிறது. மாணவர்கள் படிப்பது, முன்னேற மற்ற பரீட்சைகளை எழுதுவது போன்றவற்றில் எல்லாம் கவனம் செலுத்தாமல், இவ்வரான விவகாரங்களில் சிக்கிக் கொள்வது மிகவும் வருத்துவமாக உள்ளது. இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டு இந்த போதை பொருள் விற்கும் காரியம் அதர்மம், தனிமனிதனை, குடும்பத்தை, சமூகத்தை சீரழிக்கும் கயமைத் தனம் என்றே அடையாளம் காணவேண்டியுள்ளது.

போதை மருந்து வியாபார யுக்தி என்ன?: போதை மருந்து மனிதனை, குடும்பத்தை, சமூகத்தை, ஏன் பல சமூகங்களை சீரழக்கிறது என்பது தெரிந்தும், அது ஏன் ஊக்குவிக்கப்படுகிறது, பல முறைகளில் மறைத்து வியாபாரம் செய்யப்படுகிறது, அத்தகைய முறைகளை கையாளுபவர்கள் எப்படி தொழில் நுட்பங்களை கூறுகின்றனர் என்பதெல்லாம் கூட கவனிக்க வேண்டிய விஷயங்களாக இருக்கின்றன. ஏனெனில் இக்காலத்தில் இவ்வாறு எந்த பொருளையும் விற்க்க வேண்டும் என்றால், அதற்கு ஏதோ ஒரு வகையில் விளம்பரம் தேவைப்படுகிறது. ஆனால் போதை மருந்து விவகாரம் என்பது, அவ்வாறு விளம்பரத்துடன் செய்யப்படும் வியாபாரம் அல்ல. மிகவும் ரகசியமாக அதனை உபயோகிப்பவர்கள் யார் என்று கண்டறிந்து அல்லது தொடர்ந்து அதன் உபயோகத்தில் கட்டுண்டுக் கிடக்கும் அடிமைகளை கண்டறிந்த வியாபாரம் செய்பவர்கள் தான் அதிகமாக உள்ளனர். ஏதோ ஒரு வகையில் பாதைக்கு உட்பவர்கள் தான் இதனை விற்பவர்களாகவும் மாறுகின்றனர். அனைவரும் கண்காணித்து, அவ்வாறான போதைப் பொருளை கையாள்கிறார்கள் என்றறிந்து, அவர்களையே ஏஜென்டுகளக்கி விடுகின்றனர். அதனால் அத்தகைய வியாபாரம் செய்யும் போதை மருந்துஜஏஜென்டுகளை, மிகவும் அக்கறையாக அவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கு வேண்டியவை எல்லாம் கொடுக்கிறார்கள். ஆகையால் தான் இவ்வியாபாரத்தை, மிகவும் ரகசியமாக செய்து வருகிறார்கள், அதே நேரத்தில் தீவிரமாகவும் நடைபெற்று வருகிறது.

இந்தியாவை குறிவைக்கும் போதை மருந்து சக்திகல்கூட்டங்கள்: இந்தியா 140 கோடி மக்கள் தொகையை கொண்ட நாடாகும் பலவித பொருளாதார பிரச்சனைகள் கொண்டிருக்கும் நாடு. இன்றைய அளவில் எல்லாவித பிரச்சனைகளையும் தாங்கிக் கொண்டுதான் தொடர்ந்து முன்னேறி வருகிறது. சுதந்திரத்திற்கு பிறகு எல்லைப் பகுதியில் அதிகமான ஊடுருவங்கள் குறிப்பாக பாகிஸ்தான் சைனா என்று ஆரம்பித்து இப்பொழுது பர்மாவிலிருந்து அகதிகள் போர்வையில் முஸ்லிம்கள் ஊடுருவி வருகிறார்கள். அதே போன்ற ஊடுருவல்கள் வடகிழக்கிலும் இருக்கின்றன. ஆனால் அவற்றுடன் போதைப் பொருளும் சேர்ந்து இருக்கிறது. அதுதான் பிரச்சினை. வடமேற்கில் இருந்து வரும் ஊடுருவல்கள் தான் மற்றும் வட பாகிஸ்தான் பகுதிகளில் போதை மருந்து உற்பத்தி, கடத்தல், விநியோகம், வியாபாரம், என்றெல்லாம் செய்து வரும் கூட்டங்களும் ஊடுருவல்கார்களுடன் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். இதனால் தான் பல விஷயங்கள் பொதுப்படையாக பேச முடிவதில்லை. நாட்டு நலன் கருதாமல், விரோதத்துடன் செயல்படுபவர்கள் இவ்விவகாரங்களில் ஒன்றாகிறார்கள். சமூகத்தைச் சீரழிப்பது என்பது தான் அவர்களது குறிக்கோளாக இருக்கிறது.

© வேதபிரகாஷ்

20-03-2024


[1] குமுதம்,சென்னை வீட்டிற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஜாபர் சாதிக் மனுத்தாக்கல்,  Mar 19, 2024 – 20:10

[2] https://kumudam.com/Jaffer-Sadiq-Remanded-To-14-Days-Custody – google_vignette

[3]  https://www.maalaimalar.com/news/national/zafar-sadiq-remanded-to-14-days-court-custody-in-drug-trafficking-case-708748

[4] மாலைமலர், கோடி கோடியாக கொட்டிய பணத்தை ஓட்டல்சினிமாவில் முதலீடு செய்த ஜாபர் சாதிக், Byமாலை மலர்19 மார்ச் 2024 3:53 PM

[5] https://www.maalaimalar.com/news/state/jaffer-sadiq-invested-money-hotel-and-cinema-708725

2024ல் பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு – பெங்களூரில் தொடர்ந்து குண்டுகள் ஏன் வெடிக்கின்றன? இதன் பின்னணி என்ன, தடுக்க முடியாதா? (2)

மார்ச் 6, 2024

2024ல் பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்புபெங்களூரில் தொடர்ந்து குண்டுகள் ஏன் வெடிக்கின்றன? இதன் பின்னணி என்ன, தடுக்க முடியாதா? (2)

சந்தேகிக்கும் நபர் பற்றி துப்புத் துலங்க விவரம் கொடுப்பருக்கு ரூ 10 லட்சம் பரிசு அறிவிப்பு: பெங்களூரு குண்டலஹள்ளியில் உள்ள ராமேஸ்வரம் ஓட்டலில் சமீபத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) தனது முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளது. என்.ஐ.ஏ., புதன்கிழமை வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரின் புகைப்படத்தை வெளியிட்டதுடன், சந்தேக நபரை கைது செய்ய வழிவகுக்கும் முக்கிய தகவல்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவித்தது. பொதுமக்களின் ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் முயற்சியில், என்ஐஏ உறுதியளித்தது. சந்தேக நபர் தொடர்பான முக்கியமான தகவல்களை வழங்கும் எந்தவொரு தகவலறிந்தவரின் அடையாளமும் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும். இந்த நடவடிக்கையானது, சாத்தியமான உதவியாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதையும், வழக்கை விரைவாகத் தீர்ப்பதை எளிதாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. தொடர்புடைய தகவல் தெரிந்தவர்கள் தங்கள் விசாரணைக்கு முன் வந்து உதவுமாறு என்ஐஏ வலியுறுத்தியுள்ளது. குடிமக்கள் 08029510900 அல்லது 8904241100 என்ற எண்ணிற்கு நியமிக்கப்பட்ட ஹாட்லைன்களை அழைப்பதன் மூலம் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.

19-11-2022 மங்களூரு குண்டுவெடிப்புக்கும் இதற்கு தொடர்பா?: பயன்படுத்தப்பட்ட வெடிபொருள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை[1]. ஆனால் ராமேஸ்வரம் ஓட்டலில் பயன்படுத்தப்பட்ட கருவிக்கும் மங்களூரு குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட சாதனங்களுக்கும் பல ஒற்றுமைகள் இருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் சொல்கின்றன[2]. கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி மங்களூருவில் ஆட்டோவில் குண்டுவெடிப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது[3]. இது தொடர்பாக ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த முகமது ஷாரிக் என்பவர் தீக்காயங்களுடன் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கை தற்போது என்ஐஏ விசாரித்து வருகிறது[4]. குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய கர்நாடகா அரசு தனிப்படைகள் அமைத்துள்ளது[5]. தனிப்படைகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன. குண்டு வைத்ததாக சந்தேகப்படும் நபரின் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு, அதன் அடிப்படையில் குற்றவாளியை தீவிரமாக தேடிவருகிறது[6]. தார்வாத், ஹூப்ளி, மற்றும் பெங்களூரு பகுதிகளை சேர்ந்த நான்கு பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருவதாக தகவல் கூறப்பட்டு உள்ளது[7]. இதுகுறித்து ஒயிட் ஃபீல்ட் போலீஸார் 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்[8]. தடயவியல் துறை அதிகாரிகள், வெடிகுண்டு தடுப்புப் படை அதிகாரிகள் ஆகியோரும் தடயங்களை சேகரித்து, விசாரணை நடத்தி வருகின்ற‌னர். தேசியபுலனாய்வு முகமையை சேர்ந்த அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிஜாமாபாத் PFI வழக்கு தொடர்பாக கைது செய்யப் பட்ட ஆளுக்கும் இதற்கும் தொடர்பு இருக்கிறதா?: பெங்களூரு ராமேஸ்வரம் ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர் என்று “M9News” என்ற ஊடகம் கூறுகிறது[9]. குற்றம் சாட்டப்பட்டவர் அப்துல் சலீம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கடப்பா மாவட்டத்தில் அமைந்துள்ள மைடகுருவில் உள்ள பிரார்த்தனை மண்டபம் அருகே சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் கைது செய்யப்பட்டார்[10]. கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சலீம் ஐதராபாத்திற்கு மாற்றப்பட்டார். சலீம் ஜகித்யாலைச் சேர்ந்தவர் என்றும், தடை செய்யப்பட்ட அமைப்பான பீப்பிள் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) உடன் தொடர்பு வைத்திருப்பதாகவும் நம்பப்படுகிறது. ராமேஸ்வரம் கஃபே சம்பவம், குறைந்த தீவிரம் கொண்ட குண்டுவெடிப்பாக இருந்தாலும், பெங்களூரு முழுவதையும் உலுக்கியது.

தென்னிந்தியாவில் இவர்கள் எல்லோரும் சேர்ந்து வேலை செய்கின்றனரா?: நிஜாமாபாத் PFI வழக்கு தொடர்பாக சலீம் மார்ச் 2 அன்று NIA ஆல் கைது செய்யப்பட்டார் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது, இதில் “பயங்கரவாத மற்றும் வன்முறைச் செயல்களைச் செய்ய தடைசெய்யப்பட்ட அமைப்பினால் இந்தியாவுக்கு எதிரான சதி” இருந்தது[11]. மத்திய அமைப்பின் கூற்றுப்படி, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் PFI தெலுங்கானா வடக்கு மாநில செயலாளராக இருந்தார். தெலுங்கானா வடக்கில் PFI இன் மாநிலச் செயலாளராகப் பணியாற்றிய சந்தேக நபர், பல முறைகேடான செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுவது வெளிச்சத்திற்கு வந்ததிலிருந்து சட்ட அமலாக்கத்தைத் தவிர்த்து வந்தார். NIA இன் விசாரணை, நாட்டிற்குள் பயங்கரவாதம் மற்றும் வன்முறைச் செயல்களைத் திட்டமிடுவதில் சலீமின் உத்தேசித்த பங்கைக் குறிக்கிறது[12]. ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு மற்றும் பெங்களூரு குண்டுவெடிப்பு உட்பட பல சம்பவங்களில் அவருக்கு தொடர்பு இருப்பதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பான வளர்ச்சியில், பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்த வழக்கில் தமீம் அசோக் மற்றும் ஹசன் அலி ஆகிய இருவரை என்ஐஏ சென்னையில் கைது செய்துள்ளது. பெங்களூரு சிறையில் லஷ்கர்-இ-தொய்பா (எல்இடி) பயங்கரவாதி கைதிகளை தீவிரவாதிகளாக மாற்றியது தொடர்பான விசாரணை. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 7 மாநிலங்களில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

பெங்களூரில் தொடர்ந்து குண்டுவெடிப்புகள் நடந்து வருவது: பெங்களூரில் குண்டு வெடிப்பது என்பது ஒன்றும் புதிய விஷயம் அல்ல.

  • 2008 குண்டுவெடிப்பில் தொடர்ந்து ஒன்பது குண்டுகள் வெடித்ததன. அதில் ஒருவர் கொலையுண்டார், 20க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இதன் பின்னணியில் சிமி, லஸ்கர்-இ-தொய்பா போன்ற தீவிரவாத இயக்கங்கங்கள் இருந்ததாக தெரிந்தது.
  • 2010ல் கூட குண்டுவெடிப்பு நடந்துள்ளது.
  • இது போல 2013 மற்றும் சென்ற வருடங்களிலும் குண்டு வெடிப்புகள் நடந்துள்ளன.
  • 2014ல் ஒரு உணவவகம் அருகில் குண்டு வெடிப்பு நடந்த போது ஒரு பெண் கொல்லப்பட்டாள் ம்ற்றும் நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.
  • 2023ல் பிரஷர்குக்கர் குண்டுவெடிப்பு நடந்துள்ளது.

ஆகவே இவ்வாறு தொடர்ந்து நடைபெறுவது என்பது சாதாரண விஷயமாக எடுத்துக் கொள்ள முடியாது. ஏனெனில் உலக அளவில் பெங்களூர் என்பது வர்த்தக ரீதியில், குறிப்பாக தகவல் தொடர்பு மற்றும் மின்னணு போன்ற தலைகள் முதல் இடத்தில் சிறந்து வளர்ந்து வரும் நிலையில், எவரும் இது மாதிரியான நாச வேலைகளில் ஈடுபட மாட்டார்கள்

© வேதபிரகாஷ்

06-03-2024


[1] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், பெங்களூரு குண்டுவெடிப்பு: இட்லி சாப்பிட்டுவிட்டு குண்டு வைத்துச் சென்ற மர்ம நபர்! சிசிடிவி காட்சிகள் வெளியீடு!, SG Balan, First Published Mar 2, 2024, 9:31 AM IST, Last Updated Mar 2, 2024, 10:15 AM IST.

[2] https://tamil.asianetnews.com/india/suspect-in-the-rameshwaram-cafe-blast-in-bengaluru-caught-on-cctv-sgb-s9pci2

[3] தமிழ்.நியூஸ்.18, நாட்டை அதிரவைத்த பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம்: மத்திய உள்துறை போட்ட அதிரடி உத்தரவு, FIRST PUBLISHED : MARCH 4, 2024, 10:42 AM IST, LAST UPDATED : MARCH 4, 2024, 10:42 AM IST.

[4] https://tamil.news18.com/national/bengaluru-rameswaram-cafe-blast-case-investigated-by-nia-1366846.html

[5] மாலைமலர், ராமேஸ்வரம் கஃபே உணவக குண்டு வெடிப்பு வழக்கு என்...-யிடம் ஒப்படைப்பு, By மாலை மலர்4 மார்ச் 2024 10:51 AM (Updated: 4 மார்ச் 2024 2:20 PM).

[6] https://www.maalaimalar.com/news/national/mha-hands-over-bengaluru-rameshwaram-cafe-blast-probe-to-nia-agency-files-fir-706189

[7] இடிவி.பாரத், ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு: 4 பேரிடம் போலீசார் விசாரணை?,   By PTI,Published : Mar 2, 2024, 2:17 PM IST.

[8] https://www.etvbharat.com/ta/!bharat/four-people-detained-and-being-interrogated-in-bengaluru-blast-case-says-police-sources-tns24030202956

[9] M9News, Rameshwaram Cafe Blast Accused Arrested In AP, By M9 Updated 11:11 March 03, 2024.

[10] https://www.m9.news/social-media-viral/rameshwaram-cafe-blast-accused-arrested-in-ap/

[11] An individual has been arrested by the police in connection with the bomb blast at Bengaluru’s Rameshwaram Cafe. The accused has been identified as Abdul Saleem, who was taken into custody under suspicious circumstances while roaming near a prayer hall in Mydakuru, located in the Kadapa district. Following his arrest, Saleem was transferred to Hyderabad. It has been reported that Saleem hails from Jagityal and is believed to have affiliations with the banned organization, People Front of India (PFI). he Rameshwaram Cafe incident, despite being a low-intensity blast, shook the entire Bengaluru. It is alleged that the accused entered the cafe carrying a bag, which he then set with a timer. The explosion occurred approximately an hour later, resulting in injuries to around 10 individuals.

M9News, Rameshwaram Cafe Blast Accused Arrested In AP, By M9 Updated 11:11 March 03, 2024.

[12] The report also stated that Saleem was detained on March 2 by the NIA in connection with the Nizamabad PFI case, which involved “an anti-India conspiracy by the banned outfit to carry out acts of terror and violence.” According to the central agency, the accused in the case was the state secretary for the PFI Telangana North. The suspect, who served as the state secretary of PFI in Telangana North, had been evading law enforcement since his alleged involvement in several illicit activities came to light. NIA’s investigation indicates Salim’s purported role in planning acts of terrorism and violence within the country. Authorities suspect his links to multiple incidents, including the Rameswaram Cafe Blast and the Bengaluru bomb blast. In a related development, NIA has arrested two individuals, Thameem Ashok and Hassan Ali, in Chennai in connection with a terror funding case. The investigation pertains to the radicalization of prisoners by a Lashkar-e-Taiba (LeT) terrorist in a Bengaluru prison. Raids are being conducted at multiple locations across seven states, including Tamil Nadu, Kerala, and Karnataka.

https://www.m9.news/social-media-viral/rameshwaram-cafe-blast-accused-arrested-in-ap

ஆசிரியர் போர்வையில் காமக்கொடூரன் – பல இளம்பெண்களை-மாணவிகளை சீரழித்த கயவன்!

திசெம்பர் 20, 2016

ஆசிரியர் போர்வையில் காமக்கொடூரன் பல இளம்பெண்களைமாணவிகளை சீரழித்த கயவன்!

tution-centre-rape-sivamar-arrested-deccan-chronicleஇதுவரை, பாதிரிகள் மற்ற காமுகர்கள் இளம்பெண்களை பாலியல் ரீதியில் வன்புணர்ந்த கொடூரங்களைப் படித்து வந்தோம். இப்பொழுது, ஒரு ஆசிரியரே அத்தகைய ஏலையை செய்துள்ளது திகைக்க வைத்தாக உள்ளது. ஆசிரியர் என்ற புனிதத்தையேக் கெடுக்கும் வகையில், அந்த கயவன் ஈடுபட்டுள்ளான். மாணவ-மாணவியர் ஒழுங்காகப் படித்தால், டியூஷன் என்றெல்லாம் செல்ல வேண்டிய அவசியமே இருக்காது. இதுவும், காலத்தின் அலங்கோலமாக இருக்கிறது. இன்று டியூஷன் சென்டர்கள் இத்தகைய மாணவ-மாணவியர்களால் தான் பெருகி வருகிறது. மேலும், அவர்களில் சிலர் வசதியாக இருந்தால், பொழுது போக்கிற்கு வந்து செல்கிறார்கள். டியூஷன் சென்டர்கள், டுடோரியல் காலேஜுகள் முதலியவற்றில் படிக்க வருகிறார்களோ இல்லையோ, காதல் செய்ய வருகிறார்கள் என்று முன்னமே தெரிந்த விசயமாக இருக்கின்றது.

tution-centre-rape-sivaumarமாணவியை ஏமாற்றியது, அனுபவித்தது, கல்யாணம் செய்து கொண்டது: தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டை சேர்ந்த சீனிவாசன் மகன் சிவக்குமார், 27. கடந்த 2012ல் பாலக்கோட்டில் தனலட்சுமி என்ற பெயரில் சிவகுமார்  டியூசன் சென்டர் ஆரம்பித்தார், என்று இப்படி மரியாதையாகத்தான் ஊடகங்கள் குறிபிடுகின்றன. பாலக்கோடு மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப்புற மாணவ, மாணவிகள் டியூசனில் சேர்ந்தனர். அப்போது,  10ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷத்தை சிவகுமார் தொடங்கினார். அந்த மாணவி மயங்கவே, வகுப்பறையிலேயே உல்லாசமாக இருந்து செல்போன் மூலம் வீடியோ பதிவு செய்துள்ளார்[1]. அதை நண்பர் ஈஸ்வரனிடம் காண்பித்தார் எனும்போது, அவனின் குரூரக் குணம் வெளிப்படுகிறது. இதை சொல்லி அந்த மாணவியிடம் தன்னுடைய ஆசைக்கு இணங்குமாறு ஈஸ்வரன் கூற அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதாவது, நிச்சயமாக அந்த கயவர்களின் கூட்டு வெளிப்படுகிறது. அந்த மாணவி புகார் செய்யவே பெற்றோரும், உறவினர்களும், டியூசன் சென்டருக்கு வந்து சிவகுமாரையும், ஈஸ்வரனையும் சரமாரியாக அடித்து உதைத்தனர்.  இதைதொடர்ந்து உறவுக்கார பெண்ணை திருமணம் செய்வதாக கூறி, உல்லாசம் அனுபவித்துவிட்டு மறுத்துள்ளார். அந்த பெண்ணின் பெற்றோர், சிவகுமாரை மிரட்டி  திருமணம் செய்து கொடுத்தனர்[2]. அதாவது, திருமணம் ஆனப் பிறகும், ஒழுங்கில்லாமல் இருந்ததும் தெரிகின்றது.

tution-centre-rape-sivamarகுளிர்பானங்களில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மாணவிகள் மயங்கி விழுந்ததும் அவர்களிடம் உல்லாசம் அனுபவித்து: இவர், தர்மபுரி மற்றும் பாலக்கோட்டில், தளிர் என்ற பெயரில் டியூசன் சென்டர் நடத்தியதோடு, குரூப் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்பு எடுத்து வந்தார். அதாவது, மனைவி, குடும்பத்தினருக்கு தெரியுமா இல்லையா என்று குறிப்பிடவில்லை. இங்கு படிக்கும் மாணவிகளிடம், சிவக்குமார் ஆசைவார்த்தை கூறி ஏமாற்றியுள்ளார். இவரது ஆசை வார்த்தையில் மயங்கிய ஒரு சில மாணவிகளை, சிவக்குமார் பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அதை வீடியோ படம் எடுத்து மிரட்டி, அவர்களுடன் உல்லாசமாக இருந்து வந்தார்[3]. அதாவது, மாணவிகள் அந்த அளவுக்கு சபலத்துடன் இருந்தார்களா என்ற கேள்வியும் எழுகின்றது. இதனால், அலைகின்ற காமுகர்களுக்கு எளிதாக இரையாகின்றானர். மேலும் டியூசன் படிக்க வரும் மாணவிகளில் சிலருக்கு தனியாக அதிக நேரம் பாடம் சொல்லி கொடுப்பது போல நாடகம் ஆடியுள்ளார் சிவக்குமார். அப்போது சில மாணவிகளுக்கு குளிர்பானங்களில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மாணவிகள் மயங்கி விழுந்ததும் அவர்களிடம் உல்லாசம் அனுபவித்துள்ளார்[4]. டெக்கான் குரோனிகல் நாளிதழ் மட்டும் தான், இந்த கயவர்கள் கற்பழித்ததால் கைது செய்யப்பட்டனர் என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது[5].

tution-centre-rape-sivamar-arrestedஒரு மாணவி துணிந்து புகார் கொடுக்க கைதான காமக்கொடூரன்: மேலும், சில மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவும் கொடுத்துள்ளார்[6]. “பாலியல் ரீதியில் தாக்கியதற்காக, ஒரு மனிதன் கைது” என்று தி இந்து செய்தி வெளியிட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது[7]. பல மாணவிகள் பலிகடா ஆனாலும், ஒரு மாணவி துணிந்து புகார் கொடுக்க முடிவு செய்தாள். எனவே, இதுகுறித்து, 17 வயது மாணவி ஒருவர் 04-12-2016 அன்று புகார் கொடுத்தார். கொடுத்த புகாரின் படி[8], பாலக்கோடு இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் விசாரித்து, சிவக்குமாரை போஸ்கோ சட்டத்தில் கைது செய்தார்[9]. மேலும், அவரிடம் இருந்து, மாணவிகளின் ஆபாச படம் இருந்த மொபைல்போனையும் பறிமுதல் செய்தார்[10]. விசாரணையில், பாலியல் பலாத்காரம் செய்த மாணவிகளின் வீடியோக்களை, டியூசன் சென்டரில் பணியாற்றும், தன் நண்பர்கள் ஈஸ்வரன், மற்றொரு சிவக்குமார் மற்றும் மற்றொரு நண்பருக்கு, சிவக்குமார் காட்டியுள்ளார். இவ்வாறு ஆதாரங்களைத் திரட்டினர் போலீஸார்.

tution-centre-sexபாலியல் ரீதியில் பாதிக்கப்பட்டது எத்தனை மாணவிகள்?: ஊடகங்களுக்கு இத்தகைய பிரச்சினைகளை செய்தியாக வெளியிடும்போது, பொறுப்போடு செயல்பட வேண்டும். ஏதோ மற்றவர்களை ஈர்க்கும் வகையில், தலைப்பிட்டு செய்திகளாக வெளியிடுவதை விட, படிப்பவர்களுக்கு நீதி புகட்டும் முறையில், அவற்றை வெளியிட வேண்டும். இதையடுத்து, சிவகுமார், ஈஸ்வரன், மற்றொரு சிவக்குமார் நான்கு பேரும் சேர்ந்து, 20க்கும் மேற்பட்ட மாணவிகளை மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. 25க்கும் மேற்பட்ட மாணவிகளை அவர்கள் சீரழித்ததுடன், அவற்றை வீடியோவாக பதிவு செய்து ரசித்தும், நண்பர்களுக்கு அந்த வீடியோவை போட்டு காண்பித்தும் தங்களுடைய கொடூரத்தை அரங்கேற்றியுள்ளனர், என்று தினகரன் கூறுகிறது. இந்தியன் எக்ஸ்பிரஸ் 30 என்று கூறுகிறது[11]. எத்தனை பேர் பாதித்திருந்தாலும், அது ஈடுகொடுக்க முடியாத இழப்பாகும். பெண்மையை மதிக்கத் தெரியாத அந்த கயவர்கள் தூக்கில் ஓட்டால் தான், மற்ற காமக்கொடூரர்களுக்கு உரிய பாடமாக இருக்கும். இதையடுத்து, தலைமறைவாக இருந்த ஈஸ்வரன், 26, மற்றொரு சிவக்குமார், 27, ஆகியோரை போலீசார் 16-12-2016 அன்று கைது செய்து[12], பாலியல் பலாத்காரம் செய்த வீடியோ காட்சி அடங்கிய மொபைல்போன்களை, அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்தனர்[13].

tution-centre-rape-sivamar-arrested-vedaprakashடியூஷன் சென்டர்கள், டுடோரியல் காலேஜுகள் கண்காணிக்கப் படவேண்டியுள்ளது: இதை கூட்டாகவே செய்திருப்பது, ஆசிரியன், வீடியோ கடைக்காரன், வனது நண்பன் என்று இருப்பது தெளிவு படுத்துகிறது. மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மற்றொருவரை போலீசார் தேடிவருகின்றனர். மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்துள்ளதால், இங்கு படித்த மாணவிகள் மட்டுமன்றி, அவர்களின் பெற்றோரும் பீதியடைந்துள்ளனர்[14]. நியாயமான விசயம் என்றாலும், தங்களது பெண்களைக் கவனிக்காமல், கண்காணிக்காமல் அப்படி விட்டது அவர்களது பொறுப்பற்றத் தன்மையினையை வெளிப்படுத்துகிறது. இந்த வழக்கு தொடர்பாக, சிவக்குமாரிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால், அவரை, போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தியாவில் பலப் பகுதிகளில் இத்தகைய குற்றங்கள் நடந்து வருவதால், டியூஷன் சென்டர்கள், டுடோரியல் காலேஜுகள் கண்காணிக்கப்படவேண்டியுள்ளது[15]. ஏனெனில், அத்தகைய பாலியல் குற்றங்களில் ஒரு மாதிரி வெளிப்படுகிறது[16].

© வேதபிரகாஷ்

20-12-2016

[1] தினகரன், தர்மபுரி டியூசன் சென்டர் லீலைகள் அம்பலம் மாணவிகளை பலாத்காரம் செய்ததை வீடியோ எடுத்த ஆசிரியர், Date: 2016-12-18@ 00:24:14

[2] http://www.dinakaran.com/News_detail.asp?Nid=266408

[3] http://www.dinamalar.com/news_detail.asp?id=1670161

[4] தமிழ்.ஒன்.இந்தியா, குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து 30 மாணவிகளிடம் உல்லாசம்.. டியூசன் ஆசிரியர்கள் 3 பேர் கைது !, By:  Karthikeyan, Published: Thursday, December 15, 2016, 18:47 [IST]

[5] In a shocking development, the Dharmapuri police on Thursday arrested three people including a teacher of a private tuition center for raping some schoolgirls studying in classes ten and plus-2. They were arrested after a victim informed her parents about the incident leading to the police complaint against the accused people.

Deccan Chronicle, Chennai: 3 including teacher held for raping schoolgirls, Published: Dec 16, 2016, 7:46 am IST; Updated: Dec 16, 2016, 8:00 am IST.

http://www.deccanchronicle.com/nation/crime/161216/chennai-3-including-teacher-held-for-raping-schoolgirls.html

[6] The Hindu, Man held for sexually assaulting minor girl, DHARMAPURI: DECEMBER 16, 2016 00:00 IST ,UPDATED: DECEMBER 16, 2016 03:56 ISTUPDATED: DECEMBER 16, 2016 03:56 IST

[7] The police have arrested Sivakumar, a tuition teacher, on the charge of sexually assaulting a 17-year-old girl. In a complaint, the girl said that she used to go to a tuition centre where he taught. Easwaran, another staff at the centre, had recorded the assault on his mobile phone. He too has been arrested. The police is on the lookout for one more person in this regard.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/Man-held-for-sexually-assaulting-minor-girl/article16843687.ece

[8] the incident came to light only on December 4 when the victim summoned the courage to lodge a complaint with the police. Investigators have so far arrested three persons, including the prime accused.

Indian Express, Sleazy tuition teacher held for raping minor girl two years back, By Expres News Service, Published: 17th December 2016 04:16 AM, Last Updated: 17th December 2016 04:16 AM

[9] தினகரன், மாணவியரை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டியவர் கைது, பதிவு செய்த நாள். டிசம்பர்.05, 2016. 09.52.

[10] http://www.dinamalar.com/news_detail.asp?id=1663653

[11] Meanwhile, rumours spread in the place that around 30 girls were sexually assaulted and videographed by Sivakumar. However, the SP denied this.

[12] After investigations, his friend Eswaran was arrested on Tuesday and another friend M Sivakumar on Friday.

http://www.newindianexpress.com/states/tamil-nadu/2016/dec/17/sleazy-tuition-teacher-held-for-raping-minor-girl-two-years-back-1550079.html

[13] தினமலர், 20க்கும் மேற்பட்ட மாணவிகள் பாலியல் பலாத்காரம்: வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் மேலும் இருவர் கைது, பதிவு செய்த நாள். டிசம்பர்.16, 2016. 08.17.

[14] http://tamil.oneindia.com/news/tamilnadu/teacher-arrested-having-allegedly-sex-with-students-269813.html

[15] The Times of India, Tuition teacher arrested for molesting young girl in Mumbai, Vijay V Singh| TNN | Oct 1, 2014, 11.16 PM IST.

[16] http://timesofindia.indiatimes.com/city/mumbai/Tuition-teacher-arrested-for-molesting-young-girl-in-Mumbai/articleshow/44021309.cms

சிறுமியின் நிர்வாணப்படத்தினை இண்டர்நெட்டில் பார்த்த “ரொமான்ஸ்” நீதிபதி கைது!

ஓகஸ்ட் 30, 2010

சிறுமியின் நிர்வாணப்படத்தினை இண்டர்நெட்டில் பார்த்தரொமான்ஸ்நீதிபதி கைது!

பிரபல குற்றவியல் வழக்கறிஞர்: நியூயார்க்கில், சிறுமியின் நிர்வாணப்படத்தினை கம்ப்யூட்டரில் பார்த்துக்கொண்டிருந்த நீதிபதியை  சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்து அவருக்கு தர்ம அடி கொடுத்தனர்[1].  இது குறித்து நியூயார்க் போஸ்ட்  பத்திரிகைய வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்காவில் நியூயார்க்கைச் சேர்ந்த ஜேம்ஸ் கிப்ஸன் என்பவர் தன்னுடைய அலுவலக கம்ப்யூட்டரில் ஏராளமான நிர்வாணப்படங்களை லோடு செய்து வைத்திருந்தார்[2]. இவர் பிரசித்தி பெற்ற குற்றவியல் வழக்கறிஞர் ஆவார். பல கற்பழிப்பாளர்களை ஜெயிலிற்கு அனுப்பியுள்ளார். ஆனால், ஓரு முறை அவர் 14 வயது சிறுமியின் நிர்வாணப்படத்தினை பார்த்துக்கொண்டிருந்ததாக கம்ப்யூட்டர் தடவியல்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்[3].

James_gibbons_headshot

James_gibbons_headshot

“ரோமான்சில்” ஈடுபட்ட வழக்கறிஞர்[4]: 47 வயதான இவர், மற்றொரு ஜீன் எம்ஹோஃப் என்ற 31 வயதான துணை வழக்கறிஞருடன் “ரோமான்சில்” ஈடுபட்டபோது, மற்றவர்கள் ஆச்சரியப்பட்டனர். சில வாரங்களுக்கு முன்பு, ஒரு ஆண்குழந்தையும் பிறந்ததாம்!

Judge James Gibbons

Judge James Gibbons

சட்டங்களை மீறியதால் பதவி விலகல்: அமெரிக்க சட்டவிதிகளின் படி 17 வயதிற்குட்பட்ட இளம் பெண்களின் நிர்வாணப்படத்தினை பார்ப்பதும், இண்டர்நெட்டில் வெளியிடுவதும் குற்றமாகும். இதனால், பல சட்டப்பிரிவுகளை மீறியதற்காகக் குற்றத்தை செய்தவராக உள்ளார், இருப்பினும் கைது செய்யப் படவில்லை. இந்நிலையில் நீதிபதியின் இந்த செயலை கண்டுபிடித்து அவருக்கு தர்ம அடி கொடுத்தனர்.  தற்போது அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்[5]. இவ்வாறு அந்த பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.


[1] தினமலர், சிறுமியின் நிர்வாணப்படத்தினை இண்டர்நெட்டில் பார்த்த நீதிபதி கைது, ஆகஸ்ட் 30, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=73258

[2] http://www.nypost.com/p/news/local/manhattan/judge_pix_called_kid_porn_CjD6zuSc3wfwwJsqUW4uHI

[3] http://www.nydailynews.com/ny_local/2010/08/26/2010-08-26_courthouse_mystery_criminal_court_judge_james_d_gibbons_abruptly_resigns_without.html?obref=obnetwork

[4] Read more: http://www.nydailynews.com/ny_local/2010/08/26/2010-08-26_courthouse_mystery_criminal_court_judge_james_d_gibbons_abruptly_resigns_without.html?obref=obnetwork#ixzz0y6aZQiJJ

[5] http://www.nydailynews.com/ny_local/2010/08/29/2010-08-29_porn_judges_neighbors_say_theyre_still_in_state_of_shock.html

பல இளம் மாணவிகளை கற்பழித்த சலாவுத்தீன் அயூப்: இன்னுமொரு பிரைட்!

ஜூலை 23, 2010

பல இளம் மாணவிகளை கற்பழித்த சலாவுத்தீன் அயூப்: இன்னுமொரு பிரைட்!

எம். எல். பிரைட் என்ற கொடைக்கானல் பள்ளி தாளாளர் எப்படி ஷீபாபால் என்ற பிரின்ஸிபாலின் துணையுடன், பல மாணவிகளை பாலியல் வன்மத்திற்கு உட்படுத்தப்பட்டார்களோ, அதே மாதிரியான நிலை இங்கேயும் காணப்படுகிறது. பெண்களே பெண்களின் சீரழிவிற்கு உடந்தையாகயிருப்பது ஆராய்ச்சிக்குரியதாக உள்ளது.

அது மட்டுமல்லாது, மாணவிகளின் விடுதியில் அறையை வைத்திருந்தது, தனியாக அழைத்தது, ஆபாச படங்களைக் காட்டியது, தொட்டுப்பேசியது, கட்டிப்பிடித்தது…………………….

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: ஷிபாபால் மற்றும் பிரைட் கைது!

http://christianityindia.wordpress.com/2010/07/03/மாணவிகளுக்கு-பாலியல்-தொந/

24-07-2019 (சனிக்கிழமை):முஹமது சலாவுத்தீன் அயூப் தான் 17 வயது மாணவியைக் கற்பழித்ததை ஒப்புக்கொண்டு விட்டதாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.

parkwood school director-மாணவிகளுடன்

parkwood school director-மாணவிகளுடன்

23-07-2019 (வெள்ளிக்கிழமை): நேற்றுவரை தமது சகோதரரை வலுவாக ஆதரித்து வந்த முஹமது சலாவுத்தீன் அயூப்பீன் சகோதரி ஆயிஷா தன்வீர், 23-07-2010 அன்று நடந்த செய்தியாளர்களின் கூட்டத்தில், அயூப் தனது பதவியிலிருந்து விலக்கப்பட்டார் என்று அறிவுத்துள்ளார். இதைத்தவிர, தமது பள்ளியின் பெயரைக் கெடுக்கத்தான், இவ்வாறான செயல்களை செய்யப்படுகிறது என்றெல்லாம் கூட பேசியுள்ளார்.

போலீஸார், ஹைதராபாதில் உள்ள கிளினிக்கில் விசாரித்தபோது, மருத்துவர், அயூப் அந்த பெண்ணை கருக்கலைக்க அழைத்து வந்ததாகவும், ஆனால், மாத்திரிகைகள் கொடுத்ததால், கர்ப்பமடைந்து ஆனால் ஆரம்பநிலையிலேயே கலைந்து விட்டதாகவும், அதனால், தான் சாதாரணமாகத்தான் சிகிச்சையளித்ததாக கூறியுள்ளார்.

முஹமது-அயூப்-கற்பழிக்கப்பட்ட-மாணவி

முஹமது-அயூப்-கற்பழிக்கப்பட்ட-மாணவி

துப்பாக்கி முனையில் மாணவி கற்பழிப்பு: பள்ளி முதல்வர் கைது: துப்பாக்கி முனையில், மாணவியை கற்பழித்த பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டத்திலுள்ள “பார்க் வுட்’ சர்வதேச பள்ளியின் முதல்வர் சலாவுதீன் முகமது அயூப்பை, கற்பழிப்பு புகாரின் அடிப்படையில், ஜூபிலி ஹில்ஸ் போலீசார் கைது செய்துள்ளனர். அந்த பள்ளியில் படிக்கும் 9ம் வகுப்பு மாணவியை, அயூப் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி கற்பழித்ததாக, அந்த மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், நேற்று முன்தினம் அவர் கைது செய்யப்பட்டார்[1].

சலாவுத்தீன்-அயூப்-கைது-மாணவிகள்-கற்பழிப்பு

சலாவுத்தீன்-அயூப்-கைது-மாணவிகள்-கற்பழிப்பு

இது குறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது[2]: தன் பள்ளியில் படிக்கும் 9ம் வகுப்பு மாணவியை, அயூப், ஜூபிலி ஹில்ஸிலுள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று, துப்பாக்கியைக் காட்டி, மிரட்டி கற்பழித்துள்ளார். ஆபாசப் படமும் எடுத்துள்ளார்[3]. இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லக் கூடாதென்று கூறியும், ஆபாசப் படத்தை காட்டி மிரட்டியும், கடந்த ஒரு ஆண்டாக அந்த மாணவி மீது பாலியல் வன்முறைகளை நிகழ்த்தி வந்துள்ளார். கருக்கலைப்பு மாத்திரைகளைத் தனக்குக் கொடுத்தது இல்லாமல், மருத்துவரிடத்திலும் அழைத்துச் சென்றுள்ளதாகக் கூறியுள்ளாள்..

மாணவி-ஹைதரபாத்-மும்பை

மாணவி-ஹைதரபாத்-மும்பை

பிரைட்டின் முறையை விஞ்சிய அயூப்பின் முறை: அயூப் மாணவிகளின் ஹாஸ்டலில் ஒரு தங்கும் அறை வைத்திருந்தான். மார்ச் 10ம் தேதி அந்த மாணவியை அங்கு வருமாறு அழைத்தானாம். மயக்கமருந்து கலந்த பானத்தைக் கொடுத்து மயக்கம் அடைந்தவுடன் அம்மாணவியைக் கெடுத்துள்ளானாம். 17-வயதான அம்மாணவி மயக்கம் தெளிந்ததும், வலியாக இருக்கிறது என்று சொன்னபோது, அயூன், கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்றானாம். 45 நாட்கள் கழித்து அதேமுறையைக் கையாண்டானாம். பிறகு மயக்க மருந்து கொடுக்காமலே கற்பழிக்க முயன்றபோது, அம்மாணவி தடுத்திருக்கிறாள். ஆனால், உன்னையும், உன் சகோதரி மற்றும் சகோதரனையும் கொன்று விடுவேன் என்று மிரட்டி கற்பழித்திருக்கிறான். இதுமாதிரி தன்னை 1520 தடவை கற்பழித்ததாக புகாரில் குறிப்பிட்டுள்ளாள். அதில் இரண்டுமுறை, அயூப் தன்னுடைய இல்லத்திலேயே அழைத்துச் சென்று கற்பழித்திருக்கிறான்.

பெற்றோரிடம் சொல்லிய பிறகு புகார் கொடுக்கப்பட்டது: இது குறித்து, டில்லியிலுள்ள தனது பெற்றோரிடம் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மாணவி கூறியிருக்கிறார். இதனையடுத்து, அவளது பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், பள்ளி முதல்வர் அயூப் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு போலீசார் கூறினர்.

பள்ளி பெண் ஊழியர், அசிரியைகள், மாணவிகள் பட்டபாடு[4]: அந்த பள்ளியின் மாணவிகள் மற்றும் வேலைசெய்வோர் அயூபின் நடத்தைப் பற்றி பலமுறை புகார் கொடுத்துள்ளதாகக் கூறுகிறார்கள். ஏனெனில், அலுவலகத்தில் வேலை செய்வோர் மற்றும் ஆசரியைகள் கூட அயூப்பின் நடத்தையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2003லிருந்து வேலை செய்து வரும் ஒரு பெண் ஊழியர் கூறுவதாவது, “மாணவியர்களிடம் அவை நடந்து கொள்ளும் விதம் எனக்குக்கொஞ்சம்கூட பிடிக்கவில்லை. மாணவிகளிடம் அடிக்கடி சக மாணவர்களிடம் அவர்களுடைய உறவு எப்படியுள்ளது என்று கேள்விகள் எல்லாம் கேட்டிருக்கிறான். வயதுக்கு வர்ம் போது ஏற்படும் உணர்ச்சிகள், அனுபவங்கள் முதலியவற்றை தன்னிடம் விவரிக்கும்படும் கட்டாயப்படுத்துவான். இதையெல்லாம் “ஆலோசனைக் கூறுதல்” என்ற போர்வையில் நடத்திவந்தான். நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் கேட்கவில்லை”. அந்த மாணவியின் கற்பழிப்புப் பற்றி நெடுங்காலமாக கேட்டு வந்துள்ளானாம். அதுமட்டுமல்லாது, அடிக்கடி ஆசிரியைகளை தொந்தரவு செய்வதுடன், அசிங்கமான வார்த்தைகளையும் பிரயோகித்து பேசுவானாம்.

புகார் கூறிய மாணவி மீது நடவடிக்கை – பள்ளீயிலிருந்து நீக்கம்: இதனிடையே, அந்த மாணவிக்கு படிப்பில் போதிய ஆர்வமில்லையென்று கூறி, பள்ளியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என பள்ளி நிர்வாகம் கருத்து தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் பலர் நேற்று அப்பள்ளியின் முன் ரகளை செய்து அலுவலகத்திலுள்ள நாற்காலிகளை உடைத்தனர். இப்பள்ளி மிகவும் பிரபலமானது. கனடா, துபாய் மற்றும் சவுதி அரேபியாவில் இப்பள்ளியின் கிளைகள் உள்ளன.

ஆயிஷா தன்வீர் மாணவிகளைக் குற்றஞ்ச்சாட்டுவது[5]: அயூப்பின் சகோதரி மற்றும் அப்பள்ளியின் மற்றொரு இயக்குனராக இருக்கும் ஆயிஷா தன்வீர் என்ற பெண் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. அம்மாணவி 2009லேயே வகுப்புவாதப் பிரச்சினையை உருவாக்க முயன்றபோது, அப்பள்ளியிலிருந்து நீக்கப்பட்டாள். அவள் அப்பள்ளி மாணவனுடன் உறவு வைத்திருந்ததாகவும், அதனால் அவனை மதம் மாற பிடிவாதம் பிடித்ததாகவும், இதனால் மதப்பிரச்சினை வரும் என்று, குறிப்பாக, அம்மாணவனே புகார் கொடுத்தபோது, பள்ளியிலிருந்து நீக்கப்பட்டாள். மறுபடியும் இந்த வருடம் ஜனவரியில் அந்த பெண்ணின் தந்தை வந்து கெஞ்சியதால், மறுபடியும் அனுமதி வழகினோம்.

ஆதரிக்கும்-ஆயிஷா-தன்வீர்-பள்ளிப்பெண்கள்-கற்பழிப்பு

ஆதரிக்கும்-ஆயிஷா-தன்வீர்-பள்ளிப்பெண்கள்-கற்பழிப்பு

மேலும், அம்மாணவி உயர்ந்த இடத்திலிருந்து வந்துள்ளதால், பள்ளி நிர்வாகம் மறுக்கமுடியாமல் போய்விட்டது என்று ஒரு ஆசிரியை சொல்கிறார். அதனால் அம்மாணவியும் மற்றவர்களிடம் கொஞ்சம் துடுக்காகவே பேசுவாள், “என்னை யாதாவது செய்தால், இந்த பள்ளிக்கே பிரச்சினையை உண்டாக்கி விடுவேன்”, என்பாளாம். அப்பெண்ணின் தந்தை, “பள்ளியின் பெயர் கெட்டுவிடும் என்று அயூப் என்னை மிரட்டுகிறார். அது மட்டுமல்லாது, எனக்கு ஒரு வெற்று-செக்கைக் கொடுத்து அமைதியாக இருக்கும்படியும் மிரட்டியுள்ளார்”, என்கிறார்.


[1] தினமலர், துப்பாக்கி முனையில் மாணவி கற்பழிப்பு: பள்ளி முதல்வர் கைது, ஜூலை 22,2010,  http://www.dinamalar.com/News_Detail.asp?Id=45139

[2] P Hareesh, Parkwood school director molested six more girls, First Published : 23 Jul 2010 04:44:26 AM IST

http://expressbuzz.com/cities/hyderabad/parkwood-school-director-molested-six-more-girls/192246.html

[3] The Hindu, Friday, Jul 23, 2010, http://www.hindu.com/2010/07/23/stories/2010072358310100.htm

[4] Times of India, ‘Parkwood staff, students faced abuse’, TNN, Jul 22, 2010, 11.56pm IST

http://timesofindia.indiatimes.com/city/hyderabad/Parkwood-staff-students-faced-abuse/articleshow/6202912.cms

[5] http://www.mumbaimirror.com/article/2/20100723201007230340093091b362324/Malad-girl-in-Hyderabad-alleges-rape-by-principal.html

திருமணம் செய்ய மறுத்த காதலி மீது ‘ஆசிட்’ வீச்சு : காதலன் கைது!

ஏப்ரல் 27, 2010
திருமணம் செய்ய மறுத்த காதலி மீது ‘ஆசிட்’ வீச்சு : காதலன் கைது
ஏப்ரல் 28,2010,00:00  IST

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=7357

Front page news and headlines today

திருச்சி : திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த காதலி மீது, ஆத்திரம் கொண்டு, அவரை கோவிலுக்கு வரச் சொல்லி, அவர் மீது’ ஆசிட்’ வீசிய காதலனை போலீசார் கைது செய்தனர்.

சென்னை நீலாங்கரையை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகள் சரண்யா (21). திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்டில் உள்ள இந்திரா காந்தி கல்லூரி ஹாஸ்டலில் தங்கி, இரண்டாம் ஆண்டு பி.காம்., படிக்கிறார். வார விடுமுறை நாட்களில், சரண்யா திருச்சி ரயில்வே ஜங்ஷன் பின்புறம் உள்ள கல்லுக்குழியில் உள்ள தன் தாத்தா, பாட்டி வீட்டுக்குச் செல்வது வழக்கம்.சரண்யா,சென்னையில் உள்ள பள்ளி ஒன்றில், மேல்நிலை பள்ளி படிப்பை படித்துள்ளார். அப் போது, அதேபள்ளியில் படித்த ஏழுமலை மகன் ராமு என்கிற ராமஜெயத்துடன் (24) நெருங்கி பழகியுள்ளார். ஐந்தாண்டாக இருவரும் காதலித்து வந்தனர். பள்ளிப்படிப்பை முடித்த ராமஜெயம், கார் டிரைவராக பணியில் சேர்ந்தார். ஆறுமாதங்களுக்கு முன், சரண்யாவை திருமணம் செய்து கொள்ள, அவரது தாயாரிடம் பெண் கேட்டு ராமஜெயம் சென்றார்.அதற்கு, சரண்யாவின் தாயார் மறுத்துள்ளார்.

திருமணத்துக்கு அம்மா மறுப்பு தெரிவித்ததால், சில மாதங்களாக ராமஜெயத்துடன் மொபைல் போனில் பேசுவதைக் கூட, சரண்யா தவிர்த்துள் ளார். இதனால் ஆத்திரமடைந்த ராமஜெயம், நேற்று காலை எட்டு மணிக்கு, சரண்யாவை சந்திக்க, சென்னையில் இருந்து திருச்சி கல்லுக்குழியில் உள்ள தாத்தா வீட்டுக்குச் சென்றார். அங்கிருந்த சரண்யாவிடம் பேசவேண் டும் என்று கூறியுள்ளார். சரண்யா, தன் பெரியம்மாவுடன் அருகிலுள்ள மாரியம்மன் கோவில் அருகே சென்று ராமஜெயத்துடன் பேசினார். அப்போது, ராமஜெயம் தன்னை திருமணம் செய்து கொள் ளுமாறு வலியுறுத்தினார். அதற்கு சரண்யா, வீட்டார் சம்மதமில்லாமல் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ராமஜெயம், தான் எடுத்து வந்த ‘ஆசிட்’ டை சரண்யாவின் முகத்தில் வீசிவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். ஆசிட் பட்டதில், சரண்யா முகத்தின் ஒரு பகுதி, கழுத்து ஆகியவை வெந்தது. அவர் எரிச்சல் தாங்க முடியாமல் அலறித்துடித்தார். சரண்யாவின் பெரியம்மா, உடனடியாக அங்கிருந்த டீக்கடையிலிருந்து இரண்டு குடம் தண்ணீரை கொண்டு வந்து சரண்யாவின் முகத்தில் ஊற்றினார். சரண்யா சிகிச்சைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். திருச்சியில், கல்லூரி மாணவி சரண்யா முகத்தில் ஆசிட் வீசியது குறித்து, கன்டோன்மென்ட் போலீசில் புகார் செய்யப்பட்டது. அவர்கள், ஆசிட் வீசி விட்டு தப்பி யோடிய ராம ஜெயத்தை பஸ் ஸ்டாண்ட், ஐங் ஷன் ஆகிய இடங்களில் தேடி வந்தனர்.

திருச்சி வக்கீல் ஒருவரின் உதவியோடு, ராமஜெயம் கன் டோன்மென்ட் போலீசில் சரணடைந்தார். ஆனால் கன்டோன்மென்ட் போலீ சாரோ ரயில்வே ஜங்ஷனில் பதுங்கியிருந்த ராமஜெயத்தை கஷ்டப்பட்டு பிடித்ததாக கூறினர். கைது செய்யப்பட்ட, ராமஜெயம் மீது போலீசார் வழக்குபதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

எவ்வளவு கோரமாக இருந்தாலும் திருமணம் செய்வேன்: காதலன் : ராமஜெயம் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: சரண்யாவுக்கும், எனக்கும் கடந்த 2008ம் ஆண்டு, திருப்பதியில் வீட்டுக்கு தெரியாமல் திருமணம் நடந்தது. நாங்கள் 5 நாட்கள் அங்கேயே குடும்பமும் நடத்தினோம். இது யாருக்கும் தெரியாது. அதன்பின் சரண்யாவின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது. பல ஆண்களுடன் அவர் மொபைலில் பேசியதை தெரிந்ததும் கேட்டேன். ஆனால், நான் அப்படியில்லை என்று மறுத்து விட்டார். அதன்பின் பல ஆண்களுடன் சரண்யா பழகிவருவதை தெரிந்து கொண்டேன். என்னையும் அவள் தவிர்த்து வந்தாள். அதனால் தான் எனக்கு கிடைக்காத காதலி, யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று ஆசிட் வீசினேன். ஆசிட் வீசியதில் அழகை இழந்த சரண்யா எவ்வளவு கோரமாக இருந்தாலும் திருமணம் செய்து கொள்ள தயாராக இருக்கிறேன். இவ்வாறு வாக்குமூலத்தில் ராமஜெயம் தெரிவித்துள்ளான்.

கிருத்துவர்களின் செக்ஸ்-ஊழல்கள்!

மார்ச் 30, 2010

கிருத்துவர்களின் செக்ஸ்-ஊழல்கள்

உள்ளூர்வாசி ஷாஜியின் வழிமுறையை விளக்குகிறார்

உள்ளூர்வாசி ஷாஜியின் வழிமுறையை விளக்குகிறார்

சிறுவர்-சிறுமிகள் கொடுமைப் படுத்தப் பட்டத்தை விளக்குகிறார்

சிறுவர்-சிறுமிகள் கொடுமைப் படுத்தப் பட்டத்தை விளக்குகிறார்

செக்ஸிற்காக வளர்க்கப் படும் குழந்தைகள், சிறுவர்-சிறுமிகள்

இன்னொரு உள்ளுர்வாசி சொல்கிறார்

இன்னொரு உள்ளுர்வாசி சொல்கிறார்

ஒரு கிருத்துவர் விவரிக்கிறார்

ஒரு கிருத்துவர் விவரிக்கிறார்

அதற்காகவே வேலை செய்யும் நம்பிக்கயான ஊழியர்கள்

ஒரே அறையில் அடைத்து வைத்திருந்தனர்

ஒரே அறையில் அடைத்து வைத்திருந்தனர்

குளிக்க, குடிக்க தண்ணீர் இல்லை

குளிக்க, குடிக்க தண்ணீர் இல்லை

விசுவாசமான ஊழியம் செய்யும் பரிசுத்த ஆவியால் ஆசிர்வாதிக்கப் பட்டவர்கள்

ஒரு பாதிரி காரணங்களை விளக்குகிறார்

ஒரு பாதிரி காரணங்களை விளக்குகிறார்

வடகிழக்கு மாநிலத்தவர் காரணங்களை விவரிக்கிறார்

வடகிழக்கு மாநிலத்தவர் காரணங்களை விவரிக்கிறார்

செக்ஸ்-டூரிஸத்தை ஊக்குவிக்கும் அயல்நாட்டுக் கிருத்துவர்கள்

"ஏசு பதிலளிக்கிறார்" - சென்னையில் இயங்கி வந்த பாலியியல் தொழிற்சாலை

“ஏசு பதிலளிக்கிறார்” ….

ஏசுவின் வீடு

ஏசுவின் வீடு- சென்னையில் இயங்கி வந்த பாலியியல் தொழிற்சாலை - Plot No.11/295, Vasantha street, Golden george nagar, ..., Chennai - 600.

செக்ஸ்-பாதிரிகள், செக்ஸ்-பாஸ்டர்கள், செக்ஸ்-போதகர்கள் தோன்றியுள்ளது, அந்த தொழில் நன்றாக நிறுவப்பட்டுள்ளதைக் காட்டுகிறது.

சிறுவர்கள் தாங்கள் எப்படியெல்லாம் கொடுமைப் ப்டுத்தப் பட்டனர் என்று விவரிக்கிறார்கள்

சிறுவர்கள் தாங்கள் எப்படியெல்லாம் கொடுமைப் ப்டுத்தப் பட்டனர் என்று விவரிக்கிறார்கள்

சன் - டிவியின் அரைத்த மாவை அரைக்கும் முறை

சன் - டிவியின் அரைத்த மாவை அரைக்கும் முறை

பணிவிடை போர்வையில் செக்ஸ் கொடுக்கப்படும்

church-abused-men-sodonomy

church-abused-men-sodonomy

Bethel-develpoment-trust

Bethel-develpoment-trust

இறையியலை இப்பலானத் தொழிலுக்கு நியாயப்படுத்துதல்

லிபரேஷன் தியோலஜி (விடுதலை இறையியல் = Liberation Theology) போல செக்ஸ்-தியோலஜியை (பாலியல் இறையியல் = Sex Theology) உருவாக்கியுள்ள இறையியல் வல்லுனர்கள்

தூய்மையான கர்ப்பம் (Immaculate conception), கன்னியாஸ்திரீ சேவை (Nunnery), ஏசுவின் தெய்வீக காதலிகள் / மனைவிகள் (Brides of Christ), ஜேஹோவாவின் சேவகியர் (Slaves of Jehovah), புனித புணர்ச்சி சடங்குகள் (Sex-Rites, Sex-Ritual), கூட்டுப் புனர்ச்சி (Hermatic Sexulaism)………………….முதலியவை மறைமுகமாக அறிமுகப் படுத்தல்.

இதற்காக சிறுவயதிலிருந்தே தயார்படுத்தல்

மனம்-உடல் கட்டுப்படுத்தல், தயாராதல், ஏற்புடையதாக்குதல், தகவமைத்தல், உடன்படுதல், சமர்ப்பித்தல் முதலிய ரீதியில் உருவாக்கப்படும் தெய்வீக விபச்சாரிகள்

வில் ஹியூம், ரப்பி ஆலன் ஜே, மஹாபலிபுரம் காட்டும் உண்மைகள் என்ன?

பிப்ரவரி 20, 2010

வில் ஹியூம், ரப்பி ஆலன் ஜே, மஹாபலிபுரம் காட்டும் உண்மைகள் என்ன?

வேதபிரகாஷ்

அனைதுலக “தப்பியோடும் தண்டனைக் குற்றாவாளி” இந்தியாவில் நுழைந்ததிலிருந்து வெளியேற்றப்பட்ட வரை பதிலளிக்கப்படாத பல வினாக்கள்: ஆங்கிலத்தில் “fugitive” எனக் குறிப்பிடப்படும் “தப்பியோடும் தண்டனைக் குற்றாவாளி”யைப் பற்றி பரவலாக எல்லா விமானநிலையங்களிலும் அவனைப்பற்றிய விவரங்கள், புகைப்படங்கள் எல்லமே இருக்கும்[1]. ஆகையால் அவன் சென்னை அனைத்துலக விமான நிலையித்தின் வழியாக உள்ளே நுழைந்திருக்கிறான் என்றாலே அதில் மர்மம் உள்ளது[2]. அதாவது அவன் எப்படி தப்பித்து உள்ளே நுழைந்தான் என்பதே! பிறகு தாராளமாக மஹாபலிபுரத்திற்குச் சென்று அங்கு ஒரு “ரிஸார்ட்”டில் ஒருவருடம் வரைத் தங்கியுள்ளான் என்றால், நிச்சயமாக உள்ளூர் போலீஸார் ஒன்றும் கண்டு கொள்ளாமல் இருந்திருக்கிறார்கள் என்று தெரிகின்றது[3]. அதுமட்டுமல்லாது அவனுக்குத் தேவையான தினசரி பொருட்கள், உணவு இத்யாதிகளை எடுத்துக் கொண்டு வந்து வழங்கியவர்களுக்கும் தெரியாமல் இருந்தது / வாழ்ந்தது[4] விந்தையிலும் பெரிய விந்தையே!

Horowitz_Alan-India2007 

Horowitz_Alan-India2007

ரப்பி ஆலன் ஜே என்ற குழந்தை-பாலியல் குற்றவாளி: ரப்பி என்றால் யூதமதகுரு, சந்நியாசி, துறவி, குருக்கள், பூஜாரி, இமாம், காஜி, அர்ச்சகர் என்றெல்லாம் பொருள் கொள்ளலாம். கிருத்துவத்தில் பிஷப், பாஸ்டர், பிரீஸ்ட், பிரீச்சர்,…………………….என்றெல்லாம் அவரது இறையியல் தகுதி / நிலைக்கேற்ற அழைக்கப்படுவர். சில நேரங்களில் யூத்-கிருத்துவ-முஸ்லிம் மதங்கள் இந்த வார்த்தையை “மரியாதைக்குரிய” என்ற நிலையில் உபயோகிக்கின்றனர். உதாரணத்திற்கு ஒரு முஸ்லிம் நடத்திவருகின்ற[5], “ரப்பானி மருத்துவமனை”! இந்த ரப்பி ஆலன் ஜே “ஸ்னெயூர்” ஹொரோவிட்ஸ் என்பவர் ஒரு குழந்தை மனோத்ததுவ மருத்துவர். ஸ்னேயோர் ஆல்டர், மைக் சோங்கின், ஆலன் ஹொரோவிட்ஸ், ஸ்னெயூர் ஹொரோவிட்ஸ், எலிஸா ஹொரோவிட்ஸ், நம்பலா ரப்பி என்று பலபெயர்களில் அழைக்கப்பட்ட இவன் ஒரு பெரிய குழந்தை பாலியல்-குற்றாவாளியும் கூட. இவனுடைய சரித்திரம் பாலியலாகத்தான் உள்ளது[6]:

1964-1968 ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில், பாஸ்டனில் படித்து முதுகலைப் பட்டம் பெறுகிறான்.
1971 வடக்கு கரோலினாவிலுள்ள, டுயூக் பல்கலைகழகத்தில் மனோத்ததுவம், குழந்தை மனோதத்துவயியல் படித்து எம்.டி, பி. எச்.டி பட்டங்கள் பெறுகிறான்.
1973-76 அகஸ்டாவிலுள்ள ஜியார்ஜியா மருத்துவமனை கல்லூரியில் மனோதத்துவ மருத்துவராக வேலைப் பார்க்கிறான்.
1976-78 வுட்வார்ட் என்ற இடத்திலுள்ள அயோவா பல்கலைகழகத்தில் குழந்தை மனோதத்துவியல், துணை பேராசியராகப் பணியாற்றுகிறான்.
1983 யாகட்வொர்த்டவுன், அரிஜோனா – எம்.டி யாகப் பணிபுரிகிறான்.
1983-85 மோசெய், நியூயார்க்
1985-1990 ஜெருஸலேம் மற்றும் மேற்குகரை, இஸ்ரேல்
1990-91 ஸ்கெனெக்டாடி, நியூயார்க்
1991 வுட்வார்ட், அமெரிக்கா
1991-2004 குழந்தை பாலியல் குற்றங்களில் ஈடுபடுதல், சிக்குதல், கைது செய்யப்படுதல்
2004-2006 ஒனெய்டா ஜெயில், நியூயார்க்
2006 பரோலில் விடிவிக்கப்பட்டு அல்பேனி, நியூயார்க்
2006 பரோலில் விடிவிக்கப்பட்டு டெல் அவிவ், இஸ்ரேலுக்குத் தப்பிச் செல்கிறான்.
2006 ஜப்பான்
2006 தார்லாந்து
2006 ஹாங்காங், சைனா நாடுகள்
2007 ஸ்ரீலங்கா
2007 மஹாபலிபுரம், இந்தியா

மே 22, 2007 அன்று காஞ்சிபுரம் போலீஸாரால் கைது செய்யப்படுகிறான். அதாவது 2006 முதல் மே 2007 வரை அவன் மஹாபலிபுரம் ரிஸார்டில் தங்கியுள்ளான்.

Horowitz_Alan-Interpol-1 

Horowitz_Alan-Interpol-1
Horowitz_Alan-Interpol-2 

Horowitz_Alan-Interpol-2

வி ஹியூம் மற்றும் இந்த ரப்பி ஆலன் ஜேவிற்கு தொடர்பு இருந்ததா? இருவருமே குழந்தை செக்ஸ்-விவகாரத்தில் வல்லுனர்களாக இருந்துள்ளார்கள். முன்னவன் படிக்காமலேயே, தனது அனுபவத்தின் மீதாக வல்லுனனாக இருந்திருக்கிறான், பின்னவனோ படித்து பி.எச்.டி பெற்று மருத்துவம்-மனோதத்துவம் படித்தே எப்படி குழந்தைகளை பக்குவமாகத் தமது காம இச்சைக்குட்படுத்துவது என்று அறிந்து, செயல்படுத்தி, அனுபவித்து சுவைத்துவந்துள்ளான். அந்த விஷயத்தில் இருவருமே ஒத்துப் போகின்றனர். பிறகு மஹாபலிபுரம்[7], புருவங்களை உயர்த்துகின்றன. ஏன் மற்ற இடத்திற்கு செல்லாமல், மஹபலிபுரத்தைத் தேர்ந்தெடுக்கிறான்? கோவா[8], புவனேஸ்வர்[9], பூரி[10] இப்படி அருமையான இடங்களை விடுத்து ஏன் இங்கு வருகிறான்? ஒரு அயல்நாட்டவன், குறிப்பாக சட்டப்பிடியிலிருந்துத் தப்பியோடி திருட்டுத்தனமாக பல நாடுகளில் ஓடித்திரிந்து மறைய வருகிறன் என்றல் அவனுக்கு அங்கு ஒரு “தொடர்பு” இல்லாமல் வரமாட்டான், வரமுடியாது. விசா, பாஸ்போர்ட் முதலியவை இருக்கவேண்டும். ஆகவே, நிச்சயமாக அவனுக்கு உதவிய “தொடர்பாளிகள்”, கூட்டாளிகள், சம்பந்தப்பட்டோர் இருந்திருக்கிறார்கள். வில் ஹியூமோ தனது குடும்பம் சகிதமாக இருந்து தனது செக்ஸ்-தொழிலை செய்து வந்துள்ளன். ஆகவே, ஒருவேளை அவர்கள் சந்தித்து இருக்கலாம் அல்லது உதவியிருக்கலாம். மே 2002ல் கைது செய்யப்பட்ட வில் ஹியூம் பிறகு பிணையில் வந்து மறைந்து போகிறான். நவம்பர் 2009ல்தான் சூளைமேட்டில் கைது செய்யப்படுகிறான். ஆகவே அத்தகைய ரகசிய வாழக்கை வாழ்ந்த காலத்தில் யாருடன் இருந்தான், யேரெல்லாம் அவனை சந்தித்துள்ளனர் அல்லது இவன் சந்தித்தான் என்ற விவரங்கள் ரகசியமாகவே, மர்மமாகவே இருந்துள்ளன. ஆகவே இவனுக்கும் பல உதவியுள்ளார்கள் என்பதெல்லாம் முன்னமே எடுத்துக் காட்டப்பட்டுள்ளது[11].

வேதபிரகாஷ்

20-02-2010


[1] அவன் ஒரு குழந்தை பாலியல் குற்றவாளி என்பதால் அமெரிக்கா மற்றும் இன்டர்போல் எச்சரிக்கைகள் அனுப்பப்படுள்ளன.

 

[2] அதாவது பாஸ்போர்ட் சரிபார்த்தல், வெளிநாட்டவர் உள்நுழைய அனுமதிக்கும் அதிகாரியின் (Immigration officer) ஒப்புதல் அளித்தல், அத்தகைய அறிவிப்பை “சாஸ்திரி வவனில்” உள்ள அதிகாரிக்கு / அலுவலகத்திற்கு அறிவிக்காமல் இருந்தது என பல சட்டமீறல்கள் அடுக்கப்படும். அந்நிலையில் அதற்காகத் துணைபோன அதிகாரிகளின் பட்டியலும் நீள்கின்றது.

[3] காரில் சென்றிருந்தால், அந்த டிரைவர் நன்றாகவே பார்த்திருப்பான். தினமும் வெளிநாட்டவட் வந்து தங்கும்போது ஹோட்டல் மற்றும் ரிஸார்ட் காரர்கள் அருகிலுள்ள போலீஸாரிடம் வந்துள்ளவர்கள் பற்றி அறிவிக்கவேண்டும் மற்றும் போலீஸாரே வந்து அதற்கான ரிஜிஸ்டரைப் பார்த்துத் தெரிந்து கொள்ளவேண்டும். தின-அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும்.

[4] ஏனெனில் இங்கு பணம் வருகின்றது. சாதாரணமாக வெளிநாட்டவர்களிடத்திலே அவ்வாறு பணம் இருக்கிறது அல்லது இல்லாத நிலையிலும் உள்ளூர்வாசிகள் அல்லது சென்னையிலிருந்து உதவுகின்றனர் என்றால் அவன் வருகை அந்த உள்ளூர்வாசிகளுக்கு / தொடர்பாளிகளுக்குத் தெரியாமலில்லை.

[5] தொலைக்காட்சிக்களில் அதிகமாக விளம்பரங்கள் கொடுக்கப்படுகின்றன. அந்த மருத்துவர் முந்தைய ஜனாதிபதி அப்துல்கலாமுடன் கூட சேர்ந்து நிற்கும் புகைப்படங்கள் எல்லாம் கூட நடுநடுவே காட்டுவர்.

[6] கீழ்காணும் இணைதளத்தில் அவனைப் பற்றிய மேலும் பல  விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்: http://www.theawarenesscenter.org/Horowitz_Alan.html

[7] வேதபிரகாஷ், ,சென்னைசெக்ஸ் நகரமாகமாறுகிறதா?, மேலும் விவரங்களுக்கு இங்கே பார்க்கவும்:

https://socialterrorism.wordpress.com/2009/11/30/சென்னை-செக்ஸ்-நகரமாக-மாற/

வேதபிரகாஷ், குழந்தை விபச்சாரம்: பாலியல் வன்முறைக் கொடுமைகள், மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்: http://womanissues.wordpress.com/2009/11/13/குழந்தை-விபச்சாரம்-பாலி/

வேதபிரகாஷ், வில் ஹியூம்குழந்தைக் கற்ப்பழிப்பாளி! ,மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்: http://womanissues.wordpress.com/2009/11/17/வில்-ஹியூம்-குழந்தைக்-கற/

[8] கோவாவில் எல்லாவிதமான விபச்சாரமும் சாதாரணமானது, சகஜமானது. பணம் வருகிறது, உள்ள பல்நாட்டு முதலாளிகளை சந்தோஷப்படுத்துகிறது என்பதனால் அரசாங்கள் கண்களைமூடிக்கொண்டு இருக்கிறது.

[9] புவனேஸ்வரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்மான ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் முதலியன பிரமிப்பாக இருக்கிறது. வெளிநாட்டவர்கள் அங்கு அதிகமாக வந்து செல்வதும் மர்மமாக உள்ளது. கடந்த வருடங்களில் பல ஃபிடோஃபைல்கள் / குழந்தை பாலியல் வன்முறையாளர்கள் இங்கு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

[10] பூரியும் இதே நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. வந்துள்ள வெளிநாட்டுக் குழுக்களிடம் இதைப் பற்ரியேல்லாம் கேட்கிறர்களா இல்லையா என்றதெல்லாம் தெரிவவில்லை.

[11] வேதபிரகாஷ், வில் ஹியூம், புவனேஸ்வரி, தேவநாதன் I – IV பார்க்கவும்.

வேதபிரகாஷ், வில் ஹியூம், புவனேஸ்வரி, தேவநாதன்: தமிழ் ஊடகங்கள்!, https://socialterrorism.wordpress.com/2009/11/20/வில்-ஹியூம்-புவனேஸ்வரி-த /

வில் ஹியூம் விடுதலை! காமக்கொடூரன் கதை தொடர்கிறது!

பிப்ரவரி 10, 2010

வில் ஹியூம் விடுதலை! காமக்கொடூரன் கதை தொடர்கிறது!

© வேதபிரகாஷ்

இங்கு “குழந்தைகள்” என்று சொல்லியே பச்சையாக உண்மைகளை சம்பந்தப் பட்டுள்ளவர்கள் மறைக்கிறார்கள். 2002லேயே “டீன்-ஏஜ்” பருவத்தில் இருப்பவர்களை அனுபவித்தான் என்றால் அது கசப்பான உண்மை. இப்பொழுது அவர்கள் – கற்பழிக்கப்பட்ட பெண்கள், பாலியல் வேலையில் ஈடுபடுத்தப் பட்ட ஆண்கள், 20-26 வயதுகளில் இருப்பாட்கள். ஆகவே, அவர்கள் தம்மை மறைத்துக் கொள்கிறார்கள் அல்லது மறைத்து வைக்கப்படுகிறர்கள் என்று நன்றாகவேத் தெரிகிறது. கோடிகளில் பணம் வருகிறது என்ற உண்மையை இப்பொழுது வில் ஹியூம் வாயிலேயே வந்துவிட்டது. ஆகவே லட்சங்கள் கொடுத்து அவர்கள் அமைதிப் படுத்தப் பட்டால், நிச்சயம் மௌனிகளாகி விடுவர். கூப்பிட்டாலும், எந்த கோர்ட்டிற்கும் வரப்போவதில்லை.

உண்மை / வாய்மை மறக்கப்படும். 10-02-2010 அன்றுதான் தமிழகத்தின் அரசர் உண்மைக்கும், வாய்மைக்கும் மான்குட்டி-வேடன் கதை மூலம் விளக்கம் அளித்திருக்கிறார்!

பாவம், இந்த மான்குட்டிகளை யார் காப்பாற்றுவது?

சைதாப்பேட்டை நீதிமன்றம் வில் ஹியூமிற்கு பிணை-விடுதலை அளித்தது![1] : கிருத்துவத்தின் பெயரால் எத்தனை ஆண்-பெண் “குழந்தைகள்”, வயது வந்த வாலிபர்கள், இளைஞர்கள் வில் ஹியூமினால் பாலியல் வன்முறைக் கொடுமைகளுக்குட்படுத்தப் பட்டார்கள் என்பது அந்த பரலோகத்தில் இருக்கும் “பரமபிதாவிற்கு”த்தான் தெரிந்திருக்கும்!. கடந்த நவம்பர் 7, 2009 அன்று நிர்வாணப் படங்களை இணைதளங்களில் ஏற்றும்போது, இன்டர்போல் துறையால் தகவல் கொடுக்கப்பட்டு சென்னை போலீஸாரால் கைது செய்யப்பட்டான். ஆனால், 08-02-2010 அன்று சப்தமில்லாமல் விடுதலை செய்யப்படுகிறான்! ரவிகுமார் என்ற அவனது வக்கீல் அவன் குற்றமற்றவன், மேலும் 80 நாட்கள் ஆனபிறகும், அவன் மீது எந்த குற்றப்பத்திரிக்கையும் போலீஸார் வதிவு செய்யவில்லை என்று வாதாடியதும், நீதியரசர் பிணை-விடுதலையளித்துவிட்டார்!

வீர வசனங்கள் பேசி, போராட்டங்கள் நடத்தும் சமுதாய அமைப்புகள், சங்கங்கள் முதலியன என்னசெய்கின்றன என்று தெரியவில்லை. தகவல் தொழிற்நுட்ப சட்டத்தின் படி (The Information Technology Act) போலீஸாரால் 80 நாட்களில் சார்ச் ஸீட் / குற்றப்பத்திரிக்கை பதிவு[2] செய்யமுடியவில்லையாம்! என்னே விந்தை! அருகிலேயே இருந்து கொண்டு சுகவாசம் புரிந்து உல்லாசமாக பவனி வந்து கொண்டிருந்த இவனைப் பிடிக்கவே இன்டர்போல் துறை தகவல் கொடுக்கவேண்டியதாயிற்று[3]. ஆனால் பிடித்த அவன்மீது குற்றப்பத்திரிக்கை தயார் செய்யமுடியவில்லை என்றால், அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? இதில் மேலும் கூத்து என்னவென்றால் இந்த சட்டமே அக்டோபர் 27, 2009ல்தான் அமூலுக்கு வந்ததாம்! அப்படியே நிரூபனம் செய்யப்பட்டு தண்டனைக் கொடுக்கப்பட்டால் ஏழாண்டுகள் சிறைவாசம், ரூ. 10 லட்சம் அபராதம் விதிக்கப்படுமாம்! ஏன் 40ற்கும் மேலாக – குறிப்பாக அதில் பாதிக்கும் மேலாக இருந்த பெண்களை கற்பழித்தக் குற்றத்திற்கு மொத்தமாக தண்டனையைக் கூட்டினால் அவனை தூக்கில் போடலாமே? புதிய சட்டத்தில்தான் அவனை பதிவு செய்து ஏன் சட்ட-ஓட்டைகளில் சலுகைகள் செய்துதரவேண்டும்? யார் அப்படி அவனுக்கு உதவுகிறார்கள்?

திருட்டு விசிடி, இண்டர்நெட், சைபர் கிரைம்: குற்றம் என்றால் குற்றம்தான், அனைத்துக் குற்றவாளிகளும் ஒரே மாதிரிதான் நடத்தவேண்டும். வழக்குகள் பதிவு செய்யப்படவேண்டும்………………..தண்டனை கொடுக்கவேண்டும். ஆனால், திருட்டு விசிடி என்றால் போலீஸார் பாய்ந்து-பாய்ந்து வேலை செய்கின்றனர். சரத்குமார்-ராதிகா தம்பதியர் அழுதவுடன் அடுத்த நாளே இணைதளத்தில் ஏற்றிய இஞ்சினியரைப் பிடித்து விடுகின்றனர்! ஆனால் தேவநாதன் வீடியோக்களை இணைதளத்தில் ஏற்றியவர்களைப் பிடிக்கமுடியவில்லை. ஆபாச விசிடிக்கள் விற்றாலும் கவலைப்படுவதில்லை! வில் ஹியூம் நிர்வாணப் படங்களை இணைதளங்களில் ஏற்றும்போது, இன்டர்போல் துறை வந்து தகவல் அளிக்கவேண்டும்? என்ன இதெல்லாம்? சாதாரண அறிவு, பகுத்தறிவு, மின்னறிவு, மென்னறிவு, பெரிய-அறிவு…………………….எது கொண்டு யோசித்தாலும் புரியவில்லையே? தொழிற்நுட்பத்தில் கூட ஜாதி வேறுபாடு, இன வேறுபாடு முதலியவை உள்ளனவா?

போலீஸ் கமிஷனர் சொல்வது[4]: சென்னை போலிஸ் கமிஷனர் டி. ராஜேந்திரன் சொல்வதென்னவென்றால், “அவன் மீது பலமான குற்றப்பத்திரிக்கை ஒன்று 15 நாட்களில் பதிவு செய்யப்படும்”! பிறகு முன்பு ஏன் கோட்டை விட்டார்கள்? இந்த மூன்று மாத காலத்தில் போலீஸாருக்கு அல்லது போலீஸார் தரப்பில் வேலை செய்யும் சட்ட வல்லுனர்களுக்கு வெளிவரும் செய்திகள், நடக்கும் நிகழ்ச்சிகள் முதலியன தெரியாமலா போய்விடும்? ஏற்கெனவே எழுப்பியுள்ள கேள்விகளுக்கு பதில் தேடினாலே கூட்டத்தோடு பிடித்திருக்கலாமே? தமிழ் சட்டவல்லுனர்களுக்கு அத்தகைய “பலமான குற்றப்பத்திரிக்கை” அந்த 80 நாட்களில் செய்யாததை, இந்த 15 நாட்களில் செய்யப் போகிறர்களா?

சட்ட அமைச்சரின் சொதப்பலான பதில்[5]: வீரப்ப மொய்லி என்ற சட்ட அமைச்சர், இத்தகைய குற்றங்களுக்கு கடுமையான சட்டங்களை எடுத்துவரவேண்டும் என்கிறார்! இவர் இனிமேல் சட்டத்தை எடுத்துவந்து என்ன ஆகிவிடப் போகிறது? கற்பழிக்கப்பட்டப் பெண்களின் கற்பு திரும்ப வந்துவிடுமா? இந்தியாவில் ஏதோ சட்ட்டங்களுக்குக் குறைவு மாதிரி. ஏற்கெனவே ஆயிரக்கணக்கில் சட்டங்கள் உள்ளன. உட்கார்ந்தால் சட்டம், எழுந்தால் சட்டம். இங்கு பெண்களை கற்பழித்தது, ஆண்களை பாலியல் வன்முறைக்குட்படுத்தியது என்று பார்த்தால் உள்ள சட்டங்களே போதும். இணைதளச் சட்டம், வலைச் சட்டம் என்றெல்லாம் ஆராய்ச்சி செய்யவேண்டாம். கற்பழிப்பு என்பது வேறு, நிர்வாண படங்களை இணைதளத்தில் வெளியிட்டான் என்பது வேறு. இருக்கும் சட்டங்களை விடுத்து, இல்லாததைப் பற்றி பேசுவது, அத்தகைய கொடுங்கோலர்களுக்கு, குற்றவாளிகளுக்கு உதவுவது போல ஆகும். ஏனெனில், நாளை அவனுக்கு ஆஜராகும் விசிவாசமுள்ள வக்கீல் இதைத் தான் சீர்மிகு நீதிமன்றத்தில் மாண்புமிகு நீதியரசரின் முன்பு மொழிந்து, தனக்கெயுரிய அறிவுபூர்வமான வாதங்களினால் இந்த கொடுங்கோல காமுகனை, கற்பழிப்புக் காரனை விடுதலை செய்ய “சட்ட அமைச்சரே சொல்லிவிட்டார், குற்றம் புரிந்த நேரத்தில் அதற்கான சட்டம் இல்லை” என்று பொருள்பட எடுத்துக் காட்டி பேசுவான், பயன்படுத்துவான்.

தேவநாதனும், வில் ஹியுமும்: புரியாத மர்மம்!: தேவநாதன் விஷயத்தில் மட்டும் அப்படி பறந்து-பறந்து வேலை செய்தார்களே, இங்கு மட்டும் ஏன் தூக்கம்? 2002லேயே பதிவு செய்யப்பட்ட வழக்கு வேறு இருக்கிறது. அப்பொழுது 40ற்கும் மேலாக ஆண்-பெண்களை காமத்துடன் மிருகம் போன்று மாமல்லபுரத்தில் தனது இச்சைக்கு பயன்படுத்திக் கொண்டான். ஏசுவின் பெயரால் “சின்ன வீடு” – LITTLE HOME – அப்படியொரு அந்தப்புரத்தையே நடத்தி சல்லாபங்கள் செய்து வந்தான். ஏன் அந்த சிறுவர்-சிறுமியர்களை மருத்துவ பரிசோதனை செய்யவில்லை? தமிழச்சிகள் எல்லோரும் சைதாப்பேட்டை கோர்ட்டிற்கு சென்று அவனை துடப்பக்கட்டை, செருப்புகளால் அடிக்கவில்லை! தேவநாதன் என்றால் இனிக்கிறது, வில் ஹியூம் என்றால் கசக்கிறதா? இல்லை என்ன தடுக்கிறது? மர்மாகத்தான் உள்ளது! இந்திய தோல் வெள்ளைத்தோலுக்கு இனிக்கிறது, ஆனால் வெள்ளைத்தோலைக் கண்டால், இந்திய / தமிழக தோல்களுக்கு பயமாக உள்ளதா?

வில் ஹியூம் ஒரு மாபெரும் ஆபத்து: கிரிஸ்டைன் பெடௌ என்ற குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை ஆயும் வல்லுனர் கூறுவதாவது, வில் ஹியூம் குழந்தைகளுக்கு ஒரு அபாயகரம் என்கிறார்[6]. டச்சுநாட்டுடன் இணைந்து இந்தியா அவனுக்குத் தகுந்த தண்டனையளிக்கவேண்டும். முன்பு நவம்பர் 2009ல், சுதாகர், துணை போலீஸ் கமிஷனர், சைபர்-கிரைம் அவன் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம் மற்ற கூடுதல் அத்தாட்சிகளை சைதாப்பேட்டை மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார். காஞ்சிபுரம் சூப்பிரென்டென்ட்டும் அவன் மீதுள்ள வழக்கு விரைவில் விசாரிக்கப்படும் என்று வாக்களித்தார். முன்பு இந்திய குற்றவியல் சட்டம் section 377 of IPC மற்றும் பாஸ்போர்ட் சட்டம் கீழ் தவறான தகவல்கள் கொடுத்ததற்கும், அந்நியர் பதிவு சட்டத்தின் சரத்துகளை மீறியதற்கும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 2003லிருந்து பெயிலில் இருந்து வந்தான். ஆனால் 2004ல் விசாரணை ஆரம்பித்தபோது, ஏதாவது ஒரு காரணம் காட்டி வழக்கைத் தள்ளிப்போட வைத்தான். முக்கியமாக தன்மீது குற்றஞ்சாட்டிய ஏதாவது ஒரு குழந்தையையாவது கோர்ட்டில் ஆஜராகவேண்டும் என்றுக் கெட்டுக் கொண்டான்[7]. பிறகு எப்படி 40தில் ஒன்றுகூட வரவில்லை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை?

வில் ஹியூமின் “நிர்வாண” / வெளிப்படையான (?) நேர்காணல்[8]: டைம்ஸ்-நௌ கீழே கொடுத்துள்ள கேள்வி-பதில்கள் ஓரளவிற்கு அவனுடைய மனப்பாங்கைக் காட்டுவதாக உள்ளது, சில முக்கியமான உண்மைகளௌம் வெளிவருகின்றன[9]:

செய்தியாளர்: உங்களுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டீர்களா?

வில் ஹீயூம்: இல்லை, நிச்சயமாக இல்லை. நான் ஒன்றுமே செய்யவில்லை. நீங்கள் என்னுடைய வக்கீலுடன் பேசவும். அவருக்கு எல்லாமேத் தெரியும்[10].

செய்தியாளர்: மாமல்லபுரத்தில் உள்ள அந்த பாவப்பட்ட குழந்தகளின் கதி என்ன?

வில் ஹீயூம்: எங்களுக்கு ரூ. 2 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் என்னை வெளியே தள்ளிவிட்டார்கள்.

செய்தியாளர்: அரசாங்கம் சொல்கிறதே, நீங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு விட்டீர்கள் என்று?

வில் ஹீயூம்: இல்லை, நிச்சயமாக இல்லை.

செய்தியாளர்: நெதர்லாந்திற்கு திரும்ப விரும்புகிறீர்களா?

வில் ஹீயூம்: ஆமாம், நான் அப்படித்தான் நினைக்கிறேன். எனக்கு இங்கு நிறையவே கிடைக்கிறது.

செய்தியாளர்: போலீஸாருடைய விசாரிப்பு உங்களுக்குத் திருப்திகரமாக உள்ளதா?

வில் ஹீயூம்: இல்லை. அதனை நான் சொல்லமுடியாது.

கோடிகள் ஏன் கொடுக்கவேண்டும்?மாமல்லபுரத்தில் உள்ள அந்த பாவப்பட்ட குழந்தகளின் கதி என்ன?”, என்று கேட்டதற்கு,  “எங்களுக்கு ரூ. 2 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. என்கிறான் ஹியூம்!. அதாவது ரூ. 2 கோடி பாதிக்கப்பட்ட அந்த ‘குழந்தைகளுக்கு” டச்சு அரசு கொடுத்திருந்தால், அதன் நிர்பந்தம், சரத்துகள் என்ன? முன்பு, “தன்மீது குற்றஞ்சாட்டிய ஏதாவது ஒரு குழந்தையையாவது கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படவேண்டும்” தைரியமாக கேட்கவேண்டும், இப்பொழுதோ, “ஆனால் அவர்கள் என்னை வெளியே தள்ளிவிட்டார்கள்” அதாவது கழட்டி விட்டர்கள் என்ற முறையில் ஏன் பேசவேண்டும்? எப்படி அவனுக்கு இந்த விஷயங்கள் தெரியும்?  இப்படி காசுக்கு கற்ப்பை சமாதானப் படுத்திக் கொள்வதால்தான் அந்த அம்மையார், “வில் ஹியூம் ஒரு மாபெரும் ஆபத்து” என்று எச்சரிக்கிறாரா?  பணத்தைக் கொடுத்து மாபெரும் மனிதகுற்றங்களை மறைக்கப் பார்க்கிறர்கள். அதற்கு சில இந்திய அரசாங்கத்தினர், அதிகாரிகள், போலீஸ், சமூக-ஊழியர் முதலியோரும் உடன் போவதாகத் தெரிகின்றது. இப்படியே போனால், “தமிழகம்” இன்னொரு “தாய்லாந்து”[11] ஆகிவிடும்!

“தமிழகம்” இன்னொரு “தாய்லாந்து” ஆகிவிடும்! கடந்த காலத்தில், சமீமத்தைய நிகழ்ச்சிகளைக் கூர்ந்து கவனித்தால் பல அயல்நாட்டவர் தமிழகத்தை தாராளமாக செக்ஸ்-தொழிலுக்கு, செக்ஸ்-சுற்றுலாவிற்கு பயன்படுத்தி வந்ததற்கு பல உதாரணங்கள் (வேலூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், கன்யாகுமரி, திருநெவேலி, திருச்சி) காட்டுகின்றன. இதில் பாதிக்கப் படுவது வயது 10 முதல் 20 வரையுள்ள ஆண்-பெண் சிறுவர்-சிறுமியர்தாம். இதில் “குழந்தைகள்” என்று சொல்லி / குறிப்பிட்டு உண்மையை மறைக்கவேண்டிய பாவத்தைச் செய்யவேண்டியதில்லை. ஏனெனில், அவர்கள் ஏற்கெனவே கற்பழிக்கப் பட்டுள்ளார்கள். சீறிபாயும் செபாஸ்டியன் சீமான்கள்[12] எல்லாம் இவ்விஷயத்தில் ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை “கர்த்தர்” அப்படி ஆணையிட்டு விட்டார் போலும்!

ஆறுவயது சிருமியைக் கற்பழித்தான் என்றால் கைது செய்யப்பட்டு தண்டனைக் கொடுக்கப்படுகிறது! பிறகு இத்தகைய மிருகங்களை வைத்துக் கொண்டு ஏன் சட்டக்கதைகள் பேசிக்கொண்டு இருக்கவேண்டும்?

© வேதபிரகாஷ்

10-02-2010


[1] http://www.ptinews.com/news/508353_Dutch-national-granted-bail-in-child-pornography-case

[2] India Blooms News Service, Dutch Paedophile granted bail, விவரங்களுக்கு இங்கே பார்க்கவும்:

http://www.indiablooms.com/NewsDetailsPage/newsDetails090210l.php

[3] ஆனால் திருட்டு விசிடி விஷயத்தில் மட்டும் உடனே பிடித்து விடுகிறர்கள்! அதாவது இன்டர்போல் துறையையும் மிஞ்சி விடுகிறர்கள்!

[4] A charge sheet will be filed against alleged paedophile William Heum within 15 days, police here said Tuesday after the Dutch national was granted bail by a local court.  Chennai Police Commissioner T. Rajendran said a strong charge sheet against Heum would be filed in 15 days time.

http://sify.com/news/Chennai-police-to-file-charges-against-Will-Heum-in-15-days-news-National-kcka4eejbfe.html

[5] The Hindusthan Times, Moily slams ‘paedophile’ bail, plans tougher law, dated 10-02-2010; for details see at:  http://www.hindustantimes.com/Moily-slams-paedophile-bail/H1-Article1-507191.aspx

[6] Christine Bedoe, Director, ECPAT[6], UK, is concerned once again that Will Heum poses a big risk to children.

[7] http://www.timesnow.tv/articleshow/4332402.cms

[8] REPORTER: Have you confessed to your crime?
HEUM: No, of course not. I didn’t do anything. You talk to my lawyer. He knows everything.
REPORTER: What about the poor kids in Mahabalipuram?
HEUM: We got 2 crore rupees, they put me out.
REPORTER: But the Govt is saying that you confessed?
HEUM: No, of course not.
REPORTER: Do you want to go back to Netherlands?
HEUM: Yes. I think so. I get too much here.
REPORTER: Are you happy with police investigation?
HEUM: No. I cannot say that.

[9] TIMES-NOW, Bungling cops let ‘paedophile’ Heum off the hook, 9 Feb 2010, 1757 hrs IST, http://www.timesnow.tv/articleshow/4338110.cms

[10] அதாவது அவன் இதை ஒரு சாதாரண சட்டம், சட்டமீறல் குற்றம் என்று எடுத்துச் சென்று, பிறகு நிரூபிக்கப்படவில்லை அல்லது குற்றஞ்சாட்டியவகள் வரவில்லை, ஆஜர்படுத்தப்படவில்லை என்று வழக்கு முடிக்கப்படும். அந்த சிறிய குற்றங்களுக்கு அந்நியர் சட்டம், பாஸ்போர்ட் சட்டம் முதலியவற்றிற்கு ஆயிரம், ஐந்தாயிரம் அபராதம் வுதிக்கப்படும், கட்டிவிட்டு போய்விடுவான்.

[11] தாய்லாந்து ‘குழந்தை விபச்சாரத்திர்கு” பெயர்போனது. உலகத்தில் உள்ல விமானக்கள் எல்லாம் வந்து இங்கு வந்து சில மணி நேரம் ஓய்வெடுக்கும். அந்த நேரத்தில், விருப்பமுள்ள பயணிகள் ஜாலியாக பென்களை அனுபவித்து வந்து விமானித்தில் ஏறிவிடுவர்.

[12] சமீபத்தில் ஜெயராம் என்ற நடிகர் விஷயத்தில், தமிழ்பெண்களைப் பற்றி அவதூறாக பேசியபோது, மாபெரும் போராட்டத்தை நடத்தியுள்ளார். குஷ்பு வழக்கையும் இவரிடத்திலேயே விட்டுவிட்டால் தகுந்த தண்டனை அளிப்பார் போலயிருக்கிறது!

இன்னுமொரு வில் ஹியூம்!

ஜனவரி 26, 2010

இன்னுமொரு வில் ஹியூம்!

காப்பகம் நடத்திய போதகர் ஓட்டம்

பதிவு செய்த நாள் 1/27/2010 12:43:07 AM: தினகரனில் இப்படியொரு புகைப்படம்! இதில் யார் ஷாஜி என்று தெரியவில்லை!

Swine Fluகளியக்காவிளை : குமரி மாவட்டத்தில் விதிகளை மீறி காப்பகம் நடத்தி வந்த கிறிஸ்தவ போதகர் தலைமறைவானார்.

“பெதெஸ்டா ஆசிர்வாத இல்லம்” ('Bethesda Blessing Home')

“பெதெஸ்டா ஆசிர்வாத இல்லம்” ('Bethesda Blessing Home')

அனுமதி பெறாத குழந்தை காப்பகத்திலிருந்து 76 குழந்தைகள் மீட்பு: கன்னியாகுமரி மாவட்டம் பலவிளையில் அனுமதியின்றி இயங்கிய குழந்தைகள் காப்பகத்தில் இருந்த மணிப்பூர், அசாம் மாநில குழந்தைகளை சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கேரளா காரகோணத்தைச் சேர்ந்தவர் ஷாஜி. கிறிஸ்தவ தொண்டு நிறுவனம் நடத்திவரும் இவர், கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே, பலவிளையில் குழந்தைகளுக்கான காப்பகம் நடத்தி வந்தார்.

பெதெஸ்டா ஆசிர்வாத இல்லத்தில் அடைத்து வைத்து கொடுமைப் படுத்தப்பட்டது

பெதெஸ்டா ஆசிர்வாத இல்லத்தில் அடைத்து வைத்து கொடுமைப் படுத்தப்பட்டது

அங்கு, பெரும்பாலும் வெளிமாநில குழந்தைகள் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை சிறுவர் கூர்நோக்கு இல்ல அதிகாரிகள் சோதனை நடத்தினர். சிறுவர் காப்பகம் நடத்த அரசிடம் அனுமதி பெறவில்லை. மேலும் 76 சிறுவர்களில் 22 பேர் அசாம், 54 பேர் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிந்தது. போலீஸ் உதவியுடன் அந்த சிறுவர்கள் நெல்லை அழைத்துவரப்பட்டனர். நெல்லை சரணாலயம் தொண்டு நிறுவனத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சிறுவர்கள் பெரும்பாலானோர், பெற்றோரை பிரிந்த ஏக்கத்தில் இருந்தனர். அவர்களை நெல்லை கலெக்டர் ஜெயராமன் நேற்று சந்தித்து பேசினார். அவர்களுக்கு உணவு, உடை, மருத்துவம் வழங்க உத்தரவிட்டார். மணிப்பூர், அசாம் மாநில அரசின் குழந்தைகள் நல அமைப்புடன் பேசி, அவர்களை அனுப்பிவைக்கும் வரை, கல்வி கற்பிக்க உள்ளதாக, சரணாலய இயக்குனர் ஜான்சன் கூறினார்.

200க்கும் மேற்பட்ட குழந்தைகள் / டீன்-ஏஜ் பெண்கள் உடபட இருந்தது

200க்கும் மேற்பட்ட குழந்தைகள் / டீன்-ஏஜ் பெண்கள் உடபட இருந்தது

நெல்லை சரணாலயம்: ஆதரவற்ற சிறுமிகள், சிறுவர்கள் பெண்களுக்கு மறுவாழ்வு கொடுத்து வரும் நெல்லை சரணலயம் 1993ம் ஆண்டு முதல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இன்றைய சூழலில் குடும்பங்களில் நிலவும் பல்வேறு பிரச்சனைகள் மற்றும் பொருளாதார காரணங்களிலும், நகர்மயமாக்கல், கிராமப்புறத்து மக்கள் நகரங்களை நோக்கி இடம் பெயர்தல் போன்றவையாலும் மாறிவரும் காலச் சூழலுக்கேற்ப சிறுவர், சிறுமியரின் தேவைகள், ஆசைகள், குழப்பங்கள் போன்வற்றில் பெற்றோரும், ஆசிரியரும் இச்சமுதாயமும் அவர்களுக்கு சரியான திசையில் வழிகாட்டுதலிலும், நியாயமான தேவைகளை நிறைவு செய்வதில் ஏற்படும் குறைபாடுகளாலும் பல சிறுவர் சிறுமியர் குடும்ப உறவுகளை இழந்து வீதிகளுக்கு வரும் நிலை ஏற்படுகிறது் இத்தகைய வீதியோர சிறார்கள் மேல் அக்கறை கொண்டு அவர்கள் மறுவாழ்வு பெறுவதற்காக சரணாலயம் பணியாற்றி வருகிறது. இத்தகைய சிறுவர்களின் அவலங்களைக் கண்ணுறும் பொதுமக்கள் இவர்களுக்கு உதவிடவும் சிறுவர் உரிமைகளைப் பேணிடவும் மத்திய அரசின் சமூக ­நீதி மற்றும் அதிகாரம் வழங்குதல் துறை மூலம் நிறுவப்பட்டது தான் சைல்டு லைன் 1098 இலவச தொலைபேசியாகும் நாடெங்கும் ஐம்பத்தைந்து மாநகரங்களில் நிறுவப்பட்டுள்ள இந்த தொலைபேசி வாயிலாக 24 மணிநேரமும் தொடர்பு கொண்டு சிறுவர் குறித்த தகவல்கள் தெரிவிக்கலாம் ஏன்? சம்பந்தப்பட்ட சிறுவர்களே ௯ட தங்கள் இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். இதன் மூலம் அவர்களுக்கு ஆலோசனைகளும், மருத்துவ உதவி, கல்வி உதவி, குடும்பங்களோடு ஒன்றினைத்தல், அ­திகளுக்கு பரிகாரம் காணுதல் போன்ற சேவைகளைப் பெற முடியும்.

இல்லத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கை முதலிய விவரங்கள் இல்லை என்கிறார் ஜோஸப் ஜான்

இல்லத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கை முதலிய விவரங்கள் இல்லை என்கிறார் ஜோஸப் ஜான்ஸன்

ஷாஜி யார், மதபோதகரா, மர்ம மனிதரா, இன்னொரு வில்-ஹியூமா? கேரள மாநிலம் காரகோணம் பகுதியை சேர்ந்தவர் ஷாஜி. மத-போதகரான இவர் குமரி மாவட்டம் பாலவிளை அருகே சொந்த கட்டடத்தில் “பெதெஸ்டா ஆசிர்வாத இல்லம்” (‘Bethesda Blessing Home’) என்ற பெயரில்[1] குழந்தைகள் காப்பகம் நடத்தி வந்தார்[2]. அங்கு ஜெப கூட்டமும் நடந்தது. இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.ஷாஜி மீது இதுவரை எந்தப் புகாரும் இல்லை. எனினும் அவரை நாங்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என்றார்[3]. ஷாஜியிடம் நடந்த விசாரணையில் பசியால் வாடிய வெளிமாநில குழந்தைகளை ஏஜெண்டுகள் மூலம் கொண்டு வந்ததாக தெரிவித்தார்[4]. சமூகநலத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ஷாஜி நடத்திய காப்பகத்துக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளார். ஆனால் இதுவரை அனுமதி கொடுக்கப்படவில்லை.

சட்டத்தை மீறி அடைத்து வைத்தது பற்றி விளக்குகிறர் - டைம்ஸ்-நௌ டிவி

சட்டத்தை மீறி அடைத்து வைத்தது பற்றி விளக்குகிறர் - டைம்ஸ்-நௌ டிவி

சிறுவர்களுக்கு மருத்துவ பரிசோதனை: சரணாலயத்தில் உள்ள சிறுவர்களை நெல்லை கலெக்டர் ஜெயராமன் நேற்று சந்தித்தார். அவர்களுக்கு அரசு டாக்டர்கள் மூலம் மருத்துவப் பரிசோதனை நடத்த உத்தரவிட்டார்[5]. சென்ற புதன்கிழமைதான் (20-01-2010) சோழங்கநல்லூரில் இருந்த ஒரு (Reach Home Children Foundation)[6] அனாதை இல்லத்திலிருந்து, மணிப்பூர், மாவட்டம், பிஷ்ணுபூரைச் சேர்ந்த 17 குழந்தைகள் (பெண் குழந்தைகளையும் சேர்த்து) விடுவிக்கப்பட்டனர். தமிழ்நாடு குழந்தைகள் நல்வாழ்வு கமிட்டியின் தலைவி டாக்டர் பி. மனோரமா குழந்தைகள் சரிவர பரமரிக்கப்படவில்லை மற்றும் அவர்கள்மீது அடித்ததாக அடையாளங்கள் காணப்படுகின்றன என்றார். பெண்-குழந்தைகள் பாலியல் ரீதியில் துன்புறுத்தப் பட்டிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது[7].

உட்கார்ந்திருக்கும் இரு இளம் பெண்கள், குழந்தைகள் அல்ல, முகம் மறைக்கப்பட்டுள்ளது!

உட்கார்ந்திருக்கும் இரு இளம் பெண்கள், குழந்தைகள் அல்ல, முகம் மறைக்கப்பட்டுள்ளது!

“சிறுவர்கள்” என்று கூறி, டீன்–ஏஜ் பெண்கள் இருந்ததை மறைக்கின்றனர்: முன்பு போலவே, இப்பொழுதும் “சிறுவர்கள்” என்று கூறி, டீன்–ஏஜ் பெண்கள் இருந்ததை மறைக்கின்றனர். நேற்று டிவி-செனல்கள் காண்பித்தபோது, இளம் பெண்கள் இருந்தது நன்றாகவே தெரிந்தது. ஆனால், அடையாலம் தெரியக்கூடாது என்று, ஏதோ மறைப்பு வைத்து படம் பிடித்துள்ளதால் தெளிவாக முகங்கள் தெரியவில்லை. ஜோஸப் ஜான்ஸன் என்ற சமூகநல அதிகாரி குறிப்பிடும்போது, அனாதை இல்லத்தில் / ஆஸ்ரமத்தில் எத்தனை குழந்தைகள் / பெண்கள் இருந்தனர் என்பதற்கான எந்த ஆவணங்களையும் வைத்திருக்கவில்லை என்று குறிப்பிட்டார். ஆகவே,, இவர்கள் எல்லாம், “சுற்றுலா விபசாரத்திற்கு” உபயோகப்பட்டிருந்தால், விவரங்கள், விசாரித்தால்தான் தெரியவரும். அப்பொழுது, அவர்கள். தாங்கள் அந்த இல்லத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்று சொல்லிவிட்டால், ஒன்றும் செய்யமுடியாது.

உட்கார்ந்திருக்கும் இரு இளம் பெண்கள், குழந்தைகள் அல்ல, முகம் மறைக்கப்பட்டுள்ளது! நடுவிலே வந்த இன்னொரு பெண்!

உட்கார்ந்திருக்கும் இரு இளம் பெண்கள், குழந்தைகள் அல்ல, முகம் மறைக்கப்பட்டுள்ளது! நடுவிலே வந்த இன்னொரு பெண்!

அனாதை இல்லங்களும், கொலைகளும், கற்பழிப்புகளும்: திருநெல்வேலியைச் சேர்ந்த, “புதிய வாழ்க்கை மையம்” (‘New Life Centre), என்ற இல்லத்தில், 2005ல் மணிப்பூரைச் சேர்ந்த ரிச்சர்ட் என்ற சிறுவன் மர்மமான முறையில் இறந்து கிடந்தான். அவன் மூழ்கி இறந்ததாகக் கூறப்பட்டது. அடுத்த வருடம் 2006ல் அதே இல்லத்தைச் சேர்ந்த, பில்கிரிம் நிகோபார் (Pilgrim Nicobar), என்ற இன்னொரு சிறுவனும் ஒரு குட்டையில் பிணமாக மிதந்தான். அந்த அனாதை இல்லத்தின் அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், விசாரணை ஒன்றும் உண்மைகளை வெளிப்படுத்தவில்லை. அதேமாதிரி, சென்னை அனாதை இல்லத்தில் 2005ல், ஐந்து பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்குட்பட்டனர் என்று புகார் செய்தனர். போலீஸார் அதன் தலைவரை விசாரித்தனர், ஆனால் மேலே தொடராமல் அப்படியே விட்டுவிட்டனர்.

வேதபிரகாஷ்


[1] HNS, Authority caught in frenzy on rescue of state children in Chennai, Source: Hueiyen News Service / Thingnam Anjulika Samom, Imphal, January 25 2010

http://www.e-pao.net/GP.asp?src=10..260110.jan10

[2]தினமலர், ஜனவரி 26,2010

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=15699

[3] தினகரன், 24-01-2010

http://www.dinakaran.com/tamilnadudetail.aspx?id=4492

[4] http://thatstamil.oneindia.in/news/2010/01/25/76-other-state-kids-rescued-from.html

[5]தினகரன், 26-01-2010

http://www.dinakaran.com/highdetail.aspx?id=4566

[6] TIMES-NOW TV, Child trafficking racket exposed, 26 Jan 2010, 1326 hrs IST, for details, see at:

http://www.timesnow.tv/Child-trafficking-racket-exposed/articleshow/4337164.cms

[7] http://www.e-pao.net/GP.asp?src=10..260110.jan10