அனாதை இல்லங்கள், குழந்தைகள் கடத்தல். விற்றல், நரபலி, பாலியல் தமிழகத்தில் என்னதான் நடக்கிறது?
மதுரையில் 7 மாதங்களில் 70 பேர் மாயம் : நரபலியா?: போலீஸ் சந்தேகம்[1]: மதுரையில் இந்தாண்டு ஜனவரி முதல் நேற்று முன் தினம் வரை 11 சிறுவர்கள், 29 பெண்கள் உட்பட 70 பேர் மாயமாகிஉள்ளனர். இவர்களை பிடிக்க அந்தந்த போலீஸ் ஸ்டேஷன்களில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மனநலம் பாதிப்பு, குடும்ப பிரச்னை, பெற்றோர் கண்டிப்பு உட்பட பல்வேறு காரணங்களால், நகரில் மாயமானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வெளிமாநிலத்தைச் சேர்ந்த சிறுவர்கள், பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு, மதுரை வருகின்றனர். காப்பகங்களில் தங்க வைக்கப்படும் இவர்கள், திடீரென மாயமாவது காப்பக பொறுப்பாளர்களுக்கும், போலீசாருக்கும் தலைவலியை ஏற்படுத்துகிறது. ஆந்திரா மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த நாணி (17) என்ற சிறுவன் லாரி மூலம் மதுரை வந்தார். அவரை மீட்ட போலீசார், முத்துப்பட்டி விடியல் காப்பகத்தில் தங்க வைத்தனர். ஜூலை 2ல் நாணியை காணவில்லை. ஜூலை 19ல், வீட்டிற்கு வெளியே கொண்டிருந்த மதுரை பைகாராவைச் சேர்ந்த கார்த்திக் (8) திடீரென்று மாயமானார். பின் தலையில் “வி’ வடிவ தழும்பு உடைய இவர், நான்காம் வகுப்பு படிக்கிறார். இவர்கள் இருவரையும் சுப்பிரமணியபுரம் போலீசார் தேடுகின்றனர். அதேபோல், ஏழாம் வகுப்பு படித்த, அருள்தாஸ்புரத்தைச் சேர்ந்த குருசாமி மகன் கணேசனும் (13) ஜூலை 21ல் மாயமானார்.
மதுரையில் காணப்படும் விளம்பரம்: “தாய் அல்லது தந்தையை இழந்த மாணவர்கள், தகப்பன் – மனைவியையும், பிள்ளைகளையும் விட்டுச்சென்ற குடும்பத்தில் உள்ள மாணவர்கள், பெற்றோர் நோயினால் வேலைக்கு போகமுடியாமல் வறுமையில் வாடும் குடும்பத்தில் மாணவர்கள் இருந்தால்,……..சுவிசேஷ அனாதை இல்லத்தில், ஜாதிமத வேறுபாடு இன்றி, இலவசமாக சேர்த்து கல்லூரி வரை படிக்க வைப்பது எங்களது பணி”, என்று அந்த விளம்பரம் கூறுகிறது. அப்பொழுது, சாதாரணமாக பாசம், கடமை, கட்டுப்பாடு முதலிய ரீதியில் பிள்ளைகளை வளர்த்து வருபவர்கள், காப்பாற்றி வருபவர்கள் முதலியோர்கூட, ஏன் பிள்ளைகளை அங்கு சேர்த்துவிடக்கூடாது? ஒருவேளை அங்கு நன்றாகப் பார்த்துக் கொள்வார்களோ என்னவோ? அல்லது வீட்டில் இருந்தால் பிரச்சினை, அங்கேயே இருக்கட்டும்………………இப்படி குழந்தைகளை அனாதை இல்லாத்தில் சேர்ப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.
அறிவிப்பு Regd. No. 80/95 தமிழக அரசு பதிவு எண் : 186/2003 1. தாய் அல்லது தந்தையை இழந்த மாணவர்கள். 2. தகப்பன் – மனைவியையும், பிள்ளைகளையும் விட்டுச்சென்ற குடும்பத்தில் உள்ள மாணவர்கள். 3. பெற்றோர் நோயினால் வேலைக்கு போகமுடியாமல் வறுமையில் வாடும் குடும்பத்தில் மாணவர்கள் இருந்தால், 3/36/36, நெல்லையப்பர் தெரு, திருநகர், மதுரை – 6 எனும் விலாசத்தில் செயல்பட்டு வரும், சிறுவர் நல இல்லம் என்கின்ற சுவிசேஷ அனாதை இல்லத்தில், ஜாதிமத வேருபாடு இன்றி, 4 வது வகுப்பு முதல் 8 வது வகுப்பு வரை படிக்கும் மாணவர்களை (boys only) இலவசமாக சேர்த்து கல்லூரி வரை படிக்க வைப்பது எங்களது பணி. மேலே குறிப்பிடப் பட்டுள்ளதுபடி மாணவர்கள் Er. J. அந்தோனிமுத்து, ஓய்வு பெற்ற E.B. பொறியாளர் காரியதரிசி, சிறுவர் நல இல்லம் (சுவிசேஷ அனாதை இல்லம்) 3-36/36, [C-196] நெல்லையப்பர் தெரு, திருநகர் எழாவது ஸ்டாப் , திருநகர் , மதுரை – 625 006. |
பெண்கள், ஆண்கள் காணாமல் போகும் மர்மம் என்ன? இதற்கிடையே பெரியவர்களும் மாயமாகி வருகின்றனர். வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்தவர் ரமேஷ் (28). மே 31ல் வீட்டை விட்டு சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. சிம்மக்கல் அனுமார் கோவில் படித்துறையைச் சேர்ந்தவர் ஜெயந்தி (30). கணவர் ராமுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், தந்தை வீட்டில் தங்கியிருந்தார். ஜூலை 21ல் காணவில்லை. சமீபகாலமாக “ஆள் காணவில்லை’ என போலீசார் வழக்குப்பதிவு செய்வது அதிகரித்துள்ளது. இந்தாண்டு ஜனவரி முதல் நேற்று முன் தினம் வரை 21 ஆண்கள் மாயமாகி உள்ளனர். இதில் 12 பேர் கண்டுபிடிக்கப்பட்டனர். மாயமான 29 பெண்களில் 18 பேரும், 11 சிறுவர்களில் 9 பேரும், 9 சிறுமியரில் 7 பேரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
கிருத்துவர்கள் பாலியல் என்றால், முஸ்லீம்கள் நரபலியியலா? சமீபத்தில், கோரிப்பாளையம் பள்ளிவாசலில் திருடப்பட்ட 15 மாத குழந்தை காதர்யூசுப், நரபலி கொடுக்கப்பட்டதை தொடர்ந்து, மாயமான சிறுவர்களை கண்டுபிடிக்க அந்தந்த ஸ்டேஷன்களில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது, கிருத்துவர்களைப் பொறுத்த வரைக்கும், பெரும்பாலான வழக்குகள் பாலியல் ரீதியாகவே இருந்துள்ளன[2]. முஸ்லீம்களைப் பொறுத்தவரைக்கும், முன்னமே நரபலி வழக்குகள்-செய்திகள் இருந்தாலும், இப்பொழுதுதான், ஒரளவிற்கு வெளிப்படையாக பேசப்படுகிறது[3]. இது முஸ்லீம்களின் நரபலி-மாந்திரீகவியல் சித்துவேலைகளுக்கு இப்படி பயன்படுத்தப் படுகிறார்களா என்பதை தீர ஆராயவேண்டியுள்ளது.
அரசிற்கும் மக்கள் நலவாழ்வில் பொறுப்பிருக்கிறது: கோடிக்கணக்கில் சினிமா, நாடகம், கூத்து…………என்று செலவழித்து, மக்கள் பணத்தை விரயம் செய்து வரும் அரசின் பொறுப்பை இதில் மறக்கமுடியாது. மக்களின் நலவாழ்வைவிட, அத்தகைய தமாஷாக்களுக்கு செலவழிப்பதைக் கண்டு மக்கள் பொறுத்திருக்க முடியாது. விளம்பரங்கள் மூலம் நாங்கள் செய்துவிட்டோம் அஎன்று பறைச்சாட்டிக் கொண்டிருக்கமுடியாது. இப்படி கேவலமாக, பயங்கரமாக, சமூக-மனித-நேயங்களுக்கு எதிராக பேய்-பிசாசு-அரக்கத்தன குர்ருரங்கள் நடந்து கொண்டிருக்கும்போது, அரசு தூக்கிக் கொண்டிருக்கமுடியாது. இது மதுரையில் மட்டும் இருக்காது, தமிழகத்தில் மற்ற இடங்களிலும் இருக்கக் கூடும். ஆகவே, அரசுதுறை அமைச்சர்கள், அதிகாரிகல் முதலியோர் இதில் கவனம் செல்லுத்தி உன்மைகளை மக்களுக்குத் தெரியப்படுத்தவேண்டும்.
வேதபிரகாஷ், குழந்தைகள் விபசார மையமாகும் இந்தியா : சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை, https://socialterrorism.wordpress.com/2010/01/30/குழந்தைகள்-விபச்சர-மையமாக/
வேதபிரகாஷ், அனாதை இல்லம் நடத்தும் இன்னுமொரு ஷாஜி!!, https://socialterrorism.wordpress.com/2010/01/27/அனாதை-இல்லம்-நடத்தும்-இன/
வேதபிரகாஷ், இன்னுமொரு வில் ஹியூம்!, https://socialterrorism.wordpress.com/2010/01/26/இன்னுமொரு-வில்-ஹியூம்/
வேதபிரகாஷ், அமலனின் காமலீலைகளுக்கு என்ன காரணம்?, https://socialterrorism.wordpress.com/2010/01/14/அமலனிந்காமலீலைகளுக்கு-எ/
வேதபிரகாஷ், பெண் குழந்தை பெற்று, ஆண் குழந்தையை திருடிய தமிழச்சி!, https://socialterrorism.wordpress.com/2009/12/25/பெண்-குழந்தையை-பெற்று-ஆண்-க/
வேதபிரகாஷ், வில் ஹியூம், புவனேஸ்வரி, தேவநாதன்: தமிழ் ஊடகங்கள் – IV, https://socialterrorism.wordpress.com/2009/12/20/வி-ஹியூம்-புவனேஸ்வரி-த-4/
வேதபிரகாஷ், வில் ஹியூம், புவனேஸ்வரி, தேவநாதன்: தமிழ் ஊடகங்கள் – III, https://socialterrorism.wordpress.com/2009/12/20/வி-ஹியூம்-புவனேஸ்வரி-த-3/
வேதபிரகாஷ், வில் ஹியூம், புவனேஸ்வரி, தேவநாதன்: தமிழ் ஊடகங்கள் – II, https://socialterrorism.wordpress.com/2009/12/20/வி-ஹியூம்-புவனேஸ்வரி-த-2/
வேதபிரகாஷ், குழந்தகைகளை வதைப்பது, வாட்டுவது, சதாய்ப்பது!, https://socialterrorism.wordpress.com/2009/12/11/குழந்தைகளை-வதைப்பது-வா /
வேதபிரகாஷ், சென்னை “செக்ஸ் நகரமாக” மாறுகிறதா?, மேலும் விவரங்களுக்கு இங்கே பார்க்கவும்:
https://socialterrorism.wordpress.com/2009/11/30/சென்னை-செக்ஸ்-நகரமாக-மாற/
[1] தினமலர், மதுரையில் 7 மாதங்களில் 70 பேர் மாயம் : நரபலியா?: போலீஸ் சந்தேகம், ஜூலை 27,2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=48577
[2] வேதபிரகாஷ், சிறுமியைப் பலாத்காரம் செய்ததாகப் புகார்: தலைமறைவான மதபோதகர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை, http://christianityindia.wordpress.com/2010/07/11/சிறுமியைப்-பலாத்காரம்-செ/
வேதபிரகாஷ், குமரியில் வில் ஹியூமை மிஞ்சும் வகையில் ஜஸ்டீன்! , http://christianityindia.wordpress.com/2010/07/08/குமரியில்-வில்-ஹியூமை-மி/
வேதபிரகாஷ், கிருத்துவர்களின் பாலியல் குற்றங்கள் பெருகுவது ஏன்?,http://christianityindia.wordpress.com/2010/07/07/கிருத்துவர்களிந்பாலியல/
[3] வேதபிரகாஷ், காளி உத்தரவுப்படிதான் நரபலி கொடுத்தோம், கொலைக்குதண்டனை கொடுப்பதாக இருந்தால் காளிக்கு கொடுங்கள்: கூறுவது அப்துல் கஃபூர்!, http://secularsim.wordpress.com/2010/07/28/காளி-உத்தரவுப்படிதான்-ந/
வேதபிரகாஷ்,முஸ்லீம் மாந்திரீக நரபலிகள் திராவிட நாட்டில் தொடரும் மர்மம்!, http://islamindia.wordpress.com/2010/07/26/முஸ்லீம்-மாந்திரீக-நரபலி/
வேதபிரகாஷ், முஸ்லீம் மாந்திரீக நரபலிகள் திராவிட நாட்டில் தொடரும் மர்மம் (2)!, http://islamindia.wordpress.com/2010/07/26/முஸ்லீம்-மாந்திரீக-நரபல2/