ஜாபர்சாதிக்கின்வீட்டின்சீல்நீக்கபோட்டமனு: முன்னர் நோட்டீஸ் ஒட்டியதை, சாத்தின் தாய் கிழித்துப் போட்டாள் என்ற செய்தி வந்தது[1]. அதே போல, இப்பொழுதும் ஏதாவது ஏற்படுமோ என்று தெரியவில்லை[2]. வீட்டில் சோதனை நடந்த போது, சாட்சிகளுடன் தான் அதிகாரிகள் நடத்துவர். பிறகு, அப்பொழுது யார் இருந்தது என்ற கேள்வி எழுகிறது. இதற்கிடையே, ஜாபர் சாதிக் வீட்டில் போடப்பட்டுள்ள சீலை அகற்றக்கோரி டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஜாபர் சாதிக்கின் வழக்கறிஞர் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது[3]. முக்கியமான விசயத்தை விட்டு, எப்படியெல்லாம், இடையில் திசைத் திருப்பப் படுகிறது என்பதையும் கவனிக்கலாம். உண்மையில், இவ்வாறெல்லாம் சட்டமீறல் காரியங்கள் எல்லாம் செய்யாமல், தாய் தடுத்திருக்கலாம். ஆனால், இப்பொழுது, தெரிந்தும், சட்டத்தை மதிக்காமல், நோட்டீஸைக் கிழித்து எறிகிறாள் என்றால், அவர்கள் ஏதோ இந்திய சட்டங்கள் எல்லாம் தமக்கு அமூலாகாது என்று சொல்லுவது போல உள்ளது.
சதானந்தம்என்றகூட்டாளி: இதற்கிடையில், சென்னையில் விசாரணை நடத்திய போது, ஜாபர் சாதிக் அளித்துள்ள வாக்குமூலம்: “சென்னைபெருங்குடியில், நானும்என்நண்பரானசதானந்தமும்நடத்திவந்த, போதைப்பொருள்தயாரிப்புதொழிற்சாலையில், வெளிநாடுகளுக்குஉணவுபொருட்கள்அனுப்பியதுதொடர்பாக, ஐந்தாயிரத்திற்கும்மேற்பட்டரசீதுகள்பறிமுதல்செய்யப்பட்டன.அவைஉணவுபொருட்கள்அல்ல; போதைபொருள்கடத்தியதற்கானரசீதுகள். எங்கள்கூட்டாளிகள், திருச்சிமற்றும்சென்னைபுழல்சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளைசேர்ந்தஇவர்கள்தான், எங்கள்தொழிலைவிரிவுபடுத்தியவர்கள். வெளிநாடுகளுக்குபோதைபொருள்கடத்தியதில், என்னைவிடஎன்சகோதரர்முகமதுசலீம்தான்மூளையாகசெயல்பட்டுவந்தார். மலேஷியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியாஎன, வெளிநாட்டுதொடர்புகள்அனைத்தையும், முகமதுசலீமேகவனித்துவந்தார்.வி.சி., நிர்வாகியாகஇருந்தஅவருக்கு, தமிழகத்தில்செயல்படும்போதைப்பொருள்கடத்தல்கும்பல்களுடன்நெருங்கியதொடர்புஉள்ளது. “
கோலிவுட்தொடர்பு: ஜாபர் சாதிக் தன்னுடைய வாக்குமூலத்தில் தொடர்ந்து கூறியது, ‘இதற்கு கோலிவுட்டில் எங்களுடன் நெருக்கமான தொடர்பில் இருந்த முக்கிய நபர் தான், ‘ஐடியா’ கொடுத்தார். பேரீச்சம் பழம் வியாபாரத்திலும் நல்ல லாபம் கிடைத்தது. இவ்வாறு வாக்குமூலத்தில் ஜாபர் சாதிக் தெரிவித்துள்ளார். ஜாபர் சாதிக்கின் சகோதரர்கள் முகமது சலீம், மைதீன் ஆகியோர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க, அவர்களுக்கு எதிராக, ‘லுக் அவுட்’ நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் அடிக்கடி செல்லும் இடங்கள் குறித்து, அதிகாரிகளிடம் ஜாபர் சாதிக் தெரிவித்துள்ளார். இருவரும் விரைவில் சிக்குவர் என, மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். பலமுறை வாக்குமூலம் கொடுத்து, தங்களை வற்புருத்தி அவ்வாறு வாங்கிக் கொண்டனர் என்று, மனு தாக்குதல் செய்வதும் உண்டு. இதெல்லாம், வழக்கமாக, வழக்கறிஞர்கள் செய்யும் வேலைகள் தான். அரசு அதிகாரிகள் எந்த அளவுக்கு கஷ்டப் பட்டு, வழக்கை நிலைநிறுத்த, ஆதாரங்களை சேகரித்து வலுசேர்க்கும் நிலையில், சிறிய விசயங்களை வைத்து, முக்கியமான விசயத்தையே மறக்கும் படி அல்லது ஓரங்கட்டும் முறையில், வேறு பிரச்சினையைக் கொண்டு வரும் சாதுர்யமும், வக்கீல்களில் உண்டு.
பேரீச்சம்பழம்மற்றும்போதைமருந்துவியாபாரம்சேர்ந்துநடந்தது: பேரீச்சம் பழம் வியாபாரம் மற்றும் அப்பழங்களில் போதை மருந்து வைத்து விற்பனை செய்யப்பட்டது எல்லாம் திகைப்பாக இருக்கிறது. பழங்கள் விற்ப்பது மற்றும் பழங்கள் உள்ளேன் போதை மருந்து விற்பனை, ஆக இரண்டு வகை முறைகளும் நடந்து வந்ததும் அதிர்ச்சியாக இருக்கிறது. இவ்வாறு, இவையெல்லாம் மக்களுக்கு சென்று அடைவது, அதைவிட மிக கொடுமையான சமூகத்தை பாதிக்கும் காரியம் என்று சொல்ல வேண்டி இருக்கிறது. மாணவர்கள் படிப்பது, முன்னேற மற்ற பரீட்சைகளை எழுதுவது போன்றவற்றில் எல்லாம் கவனம் செலுத்தாமல், இவ்வரான விவகாரங்களில் சிக்கிக் கொள்வது மிகவும் வருத்துவமாக உள்ளது. இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டு இந்த போதை பொருள் விற்கும் காரியம் அதர்மம், தனிமனிதனை, குடும்பத்தை, சமூகத்தை சீரழிக்கும் கயமைத் தனம் என்றே அடையாளம் காணவேண்டியுள்ளது.
போதைமருந்துவியாபாரயுக்திஎன்ன?: போதை மருந்து மனிதனை, குடும்பத்தை, சமூகத்தை, ஏன் பல சமூகங்களை சீரழக்கிறது என்பது தெரிந்தும், அது ஏன் ஊக்குவிக்கப்படுகிறது, பல முறைகளில் மறைத்து வியாபாரம் செய்யப்படுகிறது, அத்தகைய முறைகளை கையாளுபவர்கள் எப்படி தொழில் நுட்பங்களை கூறுகின்றனர் என்பதெல்லாம் கூட கவனிக்க வேண்டிய விஷயங்களாக இருக்கின்றன. ஏனெனில் இக்காலத்தில் இவ்வாறு எந்த பொருளையும் விற்க்க வேண்டும் என்றால், அதற்கு ஏதோ ஒரு வகையில் விளம்பரம் தேவைப்படுகிறது. ஆனால் போதை மருந்து விவகாரம் என்பது, அவ்வாறு விளம்பரத்துடன் செய்யப்படும் வியாபாரம் அல்ல. மிகவும் ரகசியமாக அதனை உபயோகிப்பவர்கள் யார் என்று கண்டறிந்து அல்லது தொடர்ந்து அதன் உபயோகத்தில் கட்டுண்டுக் கிடக்கும் அடிமைகளை கண்டறிந்த வியாபாரம் செய்பவர்கள் தான் அதிகமாக உள்ளனர். ஏதோ ஒரு வகையில் பாதைக்கு உட்பவர்கள் தான் இதனை விற்பவர்களாகவும் மாறுகின்றனர். அனைவரும் கண்காணித்து, அவ்வாறான போதைப் பொருளை கையாள்கிறார்கள் என்றறிந்து, அவர்களையே ஏஜென்டுகளக்கி விடுகின்றனர். அதனால் அத்தகைய வியாபாரம் செய்யும் போதை மருந்துஜஏஜென்டுகளை, மிகவும் அக்கறையாக அவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கு வேண்டியவை எல்லாம் கொடுக்கிறார்கள். ஆகையால் தான் இவ்வியாபாரத்தை, மிகவும் ரகசியமாக செய்து வருகிறார்கள், அதே நேரத்தில் தீவிரமாகவும் நடைபெற்று வருகிறது.
இந்தியாவைகுறிவைக்கும்போதைமருந்துசக்திகல்–கூட்டங்கள்: இந்தியா 140 கோடி மக்கள் தொகையை கொண்ட நாடாகும் பலவித பொருளாதார பிரச்சனைகள் கொண்டிருக்கும் நாடு. இன்றைய அளவில் எல்லாவித பிரச்சனைகளையும் தாங்கிக் கொண்டுதான் தொடர்ந்து முன்னேறி வருகிறது. சுதந்திரத்திற்கு பிறகு எல்லைப் பகுதியில் அதிகமான ஊடுருவங்கள் குறிப்பாக பாகிஸ்தான் சைனா என்று ஆரம்பித்து இப்பொழுது பர்மாவிலிருந்து அகதிகள் போர்வையில் முஸ்லிம்கள் ஊடுருவி வருகிறார்கள். அதே போன்ற ஊடுருவல்கள் வடகிழக்கிலும் இருக்கின்றன. ஆனால் அவற்றுடன் போதைப் பொருளும் சேர்ந்து இருக்கிறது. அதுதான் பிரச்சினை. வடமேற்கில் இருந்து வரும் ஊடுருவல்கள் தான் மற்றும் வட பாகிஸ்தான் பகுதிகளில் போதை மருந்து உற்பத்தி, கடத்தல், விநியோகம், வியாபாரம், என்றெல்லாம் செய்து வரும் கூட்டங்களும் ஊடுருவல்கார்களுடன் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். இதனால் தான் பல விஷயங்கள் பொதுப்படையாக பேச முடிவதில்லை. நாட்டு நலன் கருதாமல், விரோதத்துடன் செயல்படுபவர்கள் இவ்விவகாரங்களில் ஒன்றாகிறார்கள். சமூகத்தைச் சீரழிப்பது என்பது தான் அவர்களது குறிக்கோளாக இருக்கிறது.
04-02-2024 முதல் 20-03-2024 வரைநடந்ததுஎன்ன?: போதை மருந்து விவகாரங்களில் நடவடிக்கைகள் வேகமாக நடக்கின்றனவா அல்லது வேகம் குறைவா போன்றவை நடவடிக்கைகள் வைத்து தீர்மானிக்கலாம்.
04-02-2024 போதை மருந்து தில்லியில் 50 கிலோ ரசாயன வகை போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
15-02-2024ல் தில்லியில் மூவர் கைது, ஜாபர் சாதிக் தலைமறைவு; லுக்-அவுட் நோட்டீஸ் கொடுக்கப் பட்டது.
22-02-2024 – படப்பிடிப்பு நிறுத்தப் பட்டது.
25-02-2024 – திமுகவில் இருந்து நீக்கப் பட்டது.
26-02-2024 – என்.சி.பி அலுவலத்தில் ஆஜராகும் படி ஆணை.
08-03-2024 – வெள்ளிக்கிழமை – ஜெய்பூர்
பிறகு 09-03-2024 சனிக்கிழமை அன்று ஜாபர் சாதிக் கைது செய்யப் பட்டான். ஒரு வாரம்காவல்.
சதானந்தன் கைது
16-03-2024 காவல் செவ்வாய்கிழமை வரை நீட்டிக்கப் பட்டது.
17-03-2024 ஞாயிறு – சென்னைக்கு கொண்டு செல்லுதல்
18-09-2024 திங்கட்கிழமை அன்று காலை விமானம் மூலம், சென்னைக்கு அழைத்து வரப்பட்டான்.
19-03-2024 செவ்வாய்கிழமை – தில்லிக்குத் திரும்ப அழைத்துச் செல்லப் பட்டான்.
20-03-2024 புதன் கிழமை– 14 நாட்கள் காவல்
ஜாபர்சாத்திக்சகோதரர்கள்தலைமறைவாகஉள்ளநிலை; ஜாபர் சாதிக் காணாமல் இருந்தது போல, அவனது சகோதரர்களும் மறைந்து வாழ்கின்றனர். இந்த நவநாகரிக காலத்தில் எப்படி மறைந்து வாழ முடியும் என்பதே திகைப்பாக இருக்கிறது. பணம், பலம், ஆட்கள், இருக்க இடம் என்று பல இல்லாமல், ஒரு நாள் கூட இருந்துவிட முடியாது. அந்நிலையில் பல நாட்கள் மறைந்து வாழ்வது எப்படி சாத்தியம் ஆகும். அப்ப்டியென்றால், இவர்களுக்கு எல்லாம் உதவ பல இடங்களில் ஆட்கள் இருக்கிறார்க்ச்ௐ என்றே தெரிகிறது. இதெல்லாம் நேரத்தை பயன் படுத்தி, ஆதாரங்களை மறைக்கவா அல்லது நடவடிக்கை நேரத்தை விரயமாக்கவா என்று தெரியவில்லை. ஜாபர் சாதிக்கின் சகோதரரும், வி.சி., முன்னாள் நிர்வாகியுமான முகமது சலீம், 28, மற்றொரு சகோதரரும், அமீர் இயக்கி வரும், இறைவன் மிகப்பெரியவன் என்ற படத்தின் நடிகருமான மைதீன், 23, ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை, மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தேடி வருகின்றனர். குடியுரிமை அதிகாரிகள் வாயிலாக இருவரும் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்லவில்லை என, உறுதி செய்யப்பட்டு உள்ளது. எனினும், விமான நிலையங்களுக்கு, ‘லுக் அவுட்’ நோட்டீசும் வழங்கப்பட்டுள்ளது.
NCB அதிகாரிகள்சொல்லும்விவரங்கள்; NCB அதிகாரிகள் முகமது சலீம், மைதீன் ஆகியோர் பதுங்கி இருக்கும் இடங்கள் குறித்து ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன மற்றும் அவர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன, என்கின்றனர். இவர்களுக்கு அடைக்கலம் தருவோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படும். முகமது சலீம் நெருங்கிய நட்பு வட்டத்தில், சென்னையைச் சேர்ந்த வி.வி.ஐ.பி.,யின் மகன் இருப்பதும், அவரும் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. அதுபற்றியும் ரகசிய விசாரணை நடக்கிறது. முகமது சலீம், மைதீன் ஆகியோர் விரைவில் சிக்குவர். இவ்வாறு அவர்கள் கூறினர்[1]. திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் சகோதரர்களுக்கு அடைக்கலம் தருவோர் மீது, வழக்குப்பதிவு செய்யப்படும்’ என, போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்[2]. ‘வெளிநாடுகளுக்கு உணவு பொருட்கள் அனுப்புவது போல, போதைப்பொருள் கடத்தியதில், என் சகோதரர் முகமது சலீமுக்கு தான் முக்கிய பங்கு உள்ளது’ என, ஜாபர் சாதிக் வாக்குமூலம் அளித்துள்ளார். தி.மு.க., அயலக பிரிவு முன்னாள் நிர்வாகியும், சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவனுமான ஜாபர் சாதிக், 35, டில்லியில் 09-03-2024 அன்று, கைதாகி, மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளின், 10 நாள் காவலில் விசாரிக்கப்பட்டார்[3].
18-03-2024 – சென்னையில்விசாரணை: பின், அவரை 18-09-2024 அன்று காலை விமானம் மூலம், சென்னைக்கு அழைத்து வந்து விசாரித்த அதிகாரிகள் மீண்டும் டில்லியில், போதை பொருள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் 20-03-2024 அன்று ஆஜர்படுத்தினர்[4]. என்.சி.பி இவ்வளவு கஷ்டப் பட்டு சட்டரீதியில் செயல்பட வேண்டியுள்ளது. அதிலும், போதை மருந்து விவகாரங்களில் மிகவும் எச்சரிக்கையுடன், ஜாக்கிரதையாக செயல்பட வேண்டியுள்ளது. இந்த விசாரணையில் ஜாபர் சாதிக்கிற்கு யார் யாருடன் தொடர்பு, போதைப்பொருள் கடத்தலுக்கு உதவி செய்வது யார் என என்சிபி துருவிதுருவி விசாரணை நடத்தியது. மேலும் அவரிடம் கைப்பற்றப்பட்ட 7 செல்போன்களை ஆய்வு செய்யும் பணியும் நடக்கிறது[5]. யார் யாரிடம் பேசியுள்ளார் என்பது குறித்து சைபர் கிரைம் தடயவியல் நிபுணர்களின் உதவியும் நாடப்பட்டுள்ளது[6]. இக்காலத்தில், சைபர் தொழிற்நுட்பம் மூலம், பல விசயங்களைத் தெரிந்து கொள்ளலாம். ஆனால், சம்பந்தப் பட்டவர்கள் எந்த அளவுக்கு நாணயமாக நடந்து கொள்வர் என்று கவனிக்க வேண்டும்.
என்.சி.பிஅலுவலகத்தில்விசாரணை; பின்னர் அயப்பாக்கத்தில் உள்ள போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதெல்லாம் துறை முறையில், சட்டப் படி, நடத்தப் படும் விசாரணை ஆகும். சாந்தோமில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீடு, பெருங்குடியில் உள்ள குடோன் ஆகியவற்றுக்கும் ஜாபர் சாதிக்கை அழைத்துச் சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்[7]. இங்கெல்லாம் என்ன நடந்தது, என்ன பேசினார்கள் என்பனவெல்லாம் அரசுமூறையில் காக்கப் படுகிறது எனலாம். எல்லாம் விசயங்களையும் பொதுவில் தெரியப் படுத்த முடியாது, செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. சுமார் 13 மணி நேர விசாரணைக்கு பிறகு ஜாபர் சாதிக் நேற்று இரவு சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டார்[8]. இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்[9]. ஜாபர் சாதிக்கை, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி சுதீர் குமார் சிரோஹி உத்தரவிட்டார்[10]. இதையடுத்து, ஜாபர் சாதிக், திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்[11].
[5] ஏசியாநெட்.நியூஸ், jaffer sadiq : சென்னைக்குஅழைத்துவரப்பட்டஜாபர்சாதிக்.. அடுத்துசிக்குப்போகுவதுயார்?, vinoth kumar, First Published Mar 18, 2024, 9:18 AM IST; Last Updated Mar 18, 2024, 10:07 AM IST
ஜாபர்சாதிக்போதைமருந்துகடத்தலில்மாட்டிக்கொண்டது – 15-02-2924 முதல் 09-03-2024 வரைஎங்கிருந்தான்?இந்தியாபோதைமருந்துகூட்டங்களினின்றுவிடுபடுமா? (5)
15-02-2924 [வியாழக்கிழமை] முதல் 09-03-2024 [சனிக்கிழமை] வரைஎங்கிருந்தான்?: சாதாரணமாக குற்றவாளிகளுக்கு ஒரு மணி நேரம் அவகாசம் கொடுத்தாலே அவர்கள் தமக்கு எதிராக உள்ள அத்தனை ஆதாரங்களையும் அழித்துவிட்டு தப்பித்துக் கொள்ளத் தான் மிக வேகமாக செயல்படுவர் என்பது பொதுவாக குற்றவியல் வல்லுநர்கள் தெரிந்த விஷயமாக எடுத்துக் காட்டுகின்றனர்ர். அந்நிலையில் இப்பொழுது இந்தியாவில் மின்னணு யுகத்தில் எல்லா உபகரணங்களும் வைத்துள்ள நிலையில். இத்தனை நாட்கள் இவன் ரகசியமாக இருந்துள்ளாரன் என்பது திகைப்பாகத்தான் இருக்கிறது. ஆகவே அந்த குறிப்பிட்ட இடங்களில் எல்லாமே இவனுக்கு உதவியாளர்கள் அல்லது அவ்வாறு ரகசியமாக தங்க வைத்து அனுப்பி வைக்கக்கூடிய நண்பர்கள் இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. அதனால் தான் எத்தனை நாட்கள் அவன் தாராளமாக தங்கி இருந்து, தமிழகத்திலிருந்து ஜெய்பூர் வரைக்கும் சென்று இருக்கிறான். பிறகு தான் ஏதோ தகவல் கிடைத்த பிறகு, அவனை அங்கு சென்று பிடித்துள்ளனர்.
என்.சி.பி. அதிகாரிகொடுத்த விவரங்கள்: இது குறித்து ஞானேஸ்வர்சிங் என்.சி.பி. அதிகாரி நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு[1] : போதைப்பொருள் கடத்தலை தடுக்க முழு வீச்சில் நடவடிக்கை எடுத்துள்ளோம்[2]. திருவனந்தபுரம், மும்பை, ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் பதுங்கி இருந்துள்ளார். பங்களா ஒன்றில் பதுங்கியிருந்த ஜாபர் சாதிக்கை டில்லியில் கைது செய்தோம். சர்வதேச போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். டில்லி மற்றும் தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் மலேசியாவுக்கு ஜாபர் சாதிக் கடத்தி வந்தார். சினிமா, கட்டுமானத்துறையில் முதலீடு: போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு சம்பாதித்த பணத்தை சினிமா, ரியல் எஸ்டேட், கட்டுமானத்துறையில் ஜாபர் சாதிக் முதலீடு செய்துள்ளார். போதைப் பொருள் சம்பந்தப்பட்ட பணம் எங்கெங்கு முதலீடு செய்யப்பட்டதோ அது குறித்து விசாரிக்கப்படும். 3,500 கிலோ வரையிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஜாபர் சாதிக்கிற்கு முக்கிய பிரமுகர்கள் பலருடன் தொடர்பு உள்ளது. உணவுப்பொருள் ஏற்றுமதி என்ற பெயரில் போதைப்பொருட்களை பல்வேறு நாடுகளுக்கு ஜாபர் சாதிக் கடத்தி உள்ளார்.
தொடர்புடையஅரசியல்வாதிகள்யார்?: அரசியல் கட்சிகளுக்கு போதைப்பொருட்கள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தை வழங்கி உள்ளார். மங்கை என்ற பெயரில் தமிழ் திரைப்படம் ஒன்றை ஜாபர் சாதிக் தயாரித்துள்ளார். சென்னையில் ஓட்டல் ஒன்றை ஆரம்பித்துள்ளார். தமிழகத்தில் சில திரைப்பிரபலங்கள் உடன் தொடர்பு இருப்பதாக ஜாபர் சாதிக் வாக்குமூலம் அளித்துள்ளார். விசாரணைக்குப்பின் ஜாபருடன் தொடர்புடையவர்கள் பெயர்களை வெளியிடுவோம். கடந்த 25ம் தேதி கைது செய்யப்பட்ட போதை கடத்தல் நபர்கள் 3 பேர் கொடுத்த தகவலின் படி ஜாபர் சாதிக் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளில் 3,500 கிலோ சூடோபெட்ரின் போதைப்பொருட்களை ஜாபர் சாதிக் கடத்தியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
ஜாபர்சாதிக்நிரபராதிஎன்றுவாதிடும்அவனதுவக்கீல்: இந்நிலையில், ஜாபர் சாதிக்கின் வழக்கறிஞர்கள் தந்தி டிவி-க்கு அளித்த பேட்டியில், போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் நிரபராதி என்றும், அவரது குடும்பத்தினர் சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்[3]. ஜாபர் சாதிக்கின் வழக்கறிஞர் டி.ஆர். பிரபாகரன் தந்தி டிவி-க்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது[4]: “15.02.2024 அன்றுகிட்டத்தட்ட 50 கிலோசூடோபெட்ரைன்என்கிறபோதைபொருளைடெல்லிஎன்.சி.பிபறிமுதல்செய்திருக்கிறார்கள். அதுதொடர்பாக 3 பேர்களைகைதுசெய்துஇருக்கிறார்கள். அந்த 3 பேரிடம்வாக்குமூலம்பெற்றுஅதன்அடிப்படையில்இன்று (09.03.2024) ஜாபர்சாதிக்கைகைதுசெய்திருக்கிறார்கள்[5]. அவரைபாட்டியாலாநீதிமன்றத்தில்இன்றுஆஜர்படுத்தினார்கள்[6]. அப்படிஆஜர்படுத்தும்போதுநாங்கள்அவருடையவழக்கறிஞர்களாகநீதிபதியிடம்இந்த 50 கிலோசூடோபெட்ரைன்என்.சி.பிசட்டத்தில்வரவில்லை, அதுபோதைப்பொருள்இல்லைஎன்றுகூறிஅவருக்குஉடனேஜாமீன்கொடுக்கவேண்டும்என்றுவாதிட்டோம். இதற்குநீதிபதி, என்.சி.பிஅதிகாரிகளிடம்விளக்கம்கேட்டார். இந்தவழக்கில்கைதானவர்களிடம்பெற்றவாக்குமூலத்தின்அடிப்படையில்கைதுசெய்திருக்கிறார்கள். ஜாபர்சாதிக்கிடம்இருந்துஎந்தஒருபோதைப்பொருளும்பறிமுதல்செய்யப்படவில்லைஎன்பதைநாங்கள்அழுத்தமாககூறினோம்.”
என்.சி.பி 15 நாள்காவல்கேட்டதற்கு 7 நாட்கள்கொடுக்கப்பட்டது:என்.சி.பிநீதிபதிஇல்லாததால், இந்தவாழ்க்கைவிசாரித்தநீதிபதிபொறுப்புநீதிபதிஎன்பதால், அவரைநாங்கள்இப்போதைக்குநீதிமன்றகாவலில்வைக்கிறோம். நீங்கள்உங்களுடையஎந்தவாதமாகஇருந்தாலும்ஜாமீன்கோரும்போதுவாதிடுங்கள். அதற்குப்பிறகுநீதிமன்றம்அவருக்குஜாமீன்கொடுக்கலாமாவேண்டாமாஎன்றுபரிசீலனைசெய்யும்என்றுகூறினார். அதுஇல்லாமல்என்.சி.பிதரப்பில் 15 நாள்காவலில்விசாரிக்கஅனுமதிகேட்டார்கள். நாங்கள்அனுமதிஅளிக்கக்கூடாதுஎன்றுகூறினோம். அவரிடம்விசாரிப்பதற்குஎதுவுமேஇல்லை, அவர்நிரபராதிஎன்றுநாங்கள்கூறினோம். அப்போதுநீதிபதி, நீங்கள்ஏழுநாள்காவல்வைத்துக்கொள்ளலாம்என்றுஎன்.சி.பிபோலீசிடம்கூறிஉத்தரவிட்டார். என்.சி.பிஅதிகாரிகள், ஜாபர்சாதிக்கின்அடிப்படைஉரிமைகளைமீறிஇருக்கிறார்கள். அவருடையகுடும்பத்தினர்வயதானபாட்டி, அவருடையமனைவி, அவருடைய 2 மைனர்மகள்கள், ஒருமகன்எனஅனைவரையும்சட்டவிரோதமாகபிடித்துவைத்திருக்கிறார்கள்,” என்று ஜாபர் சாதிக்கின் வழக்கறிஞர் டி.ஆர். பிரபாகர் கூறினார்.
புதிர்களும், கேள்விகளும்: சாதாரணமான, இந்தியர்களுக்கு, இத்தனை புதிர்களும், மர்மங்களும் வேண்டாம். சமூகத்தை சீரழிக்கும் போதை மருந்து வேண்டாம். அத்தகைய சமூக தீவிரவாதிகளும் தேவையில்லை:
தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக் கைது – போதைப்பொருள் கடத்தல் வழக்கில் நடவடிக்கை, விவரம் அறிவிக்கப் படவில்லை!
ஜெய்பூரில் கைதான ஜாபர் சாதிக் டில்லி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப் பட்டு, பிறகு சென்னைக்குக் கொண்டு வர உறைப்படி, நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ஞானேஸ்வர்சிங் என்.சி.பி. அதிகாரி பங்களா ஒன்றில் பதுங்கியிருந்த ஜாபர் சாதிக்கை டில்லியில் கைது செய்தோம்.
திருவனந்தபுரம், மும்பை, ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் பதுங்கி இருந்து, தில்லியில் மறைந்திருந்த போது கைது செய்யப் பட்டான்!
தமிழகத்தின் சில திரைப்பிரபலங்கள் உடன் தொடர்பு இருப்பதாக ஜாபர் சாதிக் என்.சி.பியிடம் வாக்குமூலம் அளித்துள்ளாதாகத் தெரிகிறது.
போதைப் பொருட் வருமானத்தை சினிமா, ஓட்டல், ரியல் எஸ்டேட், கட்டுமானத்துறைகளில் முதலீடு செய்யப் பட்டுள்ளது.
இவனது போதை மருந்து வியாபாரம் தில்லி, தமிழகம் வழியாக மற்ற இடங்களுக்குப் பரவி, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, மலேசியா நாடுகளுக்குப் பாரவியது.
திருவனந்தபுரம், மும்பை, புனே, ஹைதரபாத் சென்று ஜெய்ப்பூர் வந்துள்ளான். அங்கு பிடிக்கப் பட்டு, தில்லியில் கைது செய்யப்பட்டான்!
ஆக, இவ்விடங்களில் இருந்த தொடர்புகள், எல்லாம் உதவி செய்தவர்கள் முதலியவர் மூலம் மேலும் விவரங்கள் வெளிவரலாம்.
போதை சமுதாயத்தை சீரழிப்பது, நாசமாக்குவது, அத்தகையதை வியாபாரமாக்கிய இவர்கள்முறையாக தண்டிக்கப் படவேண்டும்.
15-02024 அன்றுதில்லியில்சோதனை: ஜாபர் சாதிக்கின் போதை மருந்து விவகாரம் திகைப்பாக இருக்கிறது. இதுவரை கிடைத்துள்ள விவரங்களை வைத்து ஆராய்ந்தால், நிச்சயமாக அத்தகைய வேலைகளை, சாதாரணமாக செய்து விடமுடியாது. பலர் அதன் பின்னணியில், ஒருமித்து, தீவிரமாக வேலை செய்திருக்க வேண்டும். அனைத்துலக போதைதடுப்பு துறைகளின் கவனத்திற்கு சென்றிருக்கிறது என்றால், எல்லாவற்றையும் அறிந்து, அவற்றையும் மீறித்தான் இக்காரியங்கள் நடைபெற்று வருகின்றன. போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய பொருட்களை தேங்காய் பவுடர் மற்றும் சத்து மாவு பாக்கெட்களில் மறைத்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது[1]. இதையடுத்து, டெல்லி போலீஸ் மற்றும் போதைப் பொருள் தடுப்புபிரிவு அதிகாரிகள் மேற்கு டெல்லி உள்ள கைலாஸ் பார்க் பகுதியில் கடந்த மாதம் 15 ஆம் அதிரடி சோதனை நடத்தினர்[2].
15-02-2024ல்தில்லியில்மூவர்கைது: இதில் அங்குள்ள குடோன் ஒன்றில் இருந்த கடத்தல் கும்பல் கிலோ எடை கொண்ட சுமார் 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆபத்து மிக்க போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்[3]. மேலும் அந்த குடோனில் இருந்து தமிழகத்தை சேர்ந்த 3 பேரை கைது செய்தனர்[4]. இவர்கள், சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிபுர் ரஹ்மான் மற்றும் விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக் குமார் என்பது தெரியவந்துள்ளது. ஜாஃபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர்கள்தான் இந்தக் கடத்தலுக்கு மூளையாக இருந்ததாகக் கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளார்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த போதை பொருள் கடத்தல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டது சென்னையை சேர்ந்த ஜாபர் சாதிக் என்பது தெரியவந்தது[5]. மேலும் அவர் தனது சகோதரர்கள் மைதீன் மற்றும் சலீம் ஆகியோருடன் சேர்ந்து இந்த போதை பொருள் கடத்தல் தொழிலை செய்து வந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது[6].
25-02-2024 – திமுகவிலிருந்துஜாபர்சாதிக்கைநிரந்தரமாகநீக்கியது: ஜாபர் சாதிக் சென்னையில் சினிமா தயாரிப்பாளராகவும் திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளருமாக இருந்து வந்துள்ளார்[7]. அவரது சகோதரர் மைதீன் நடிகராக உள்ளார்[8]. மற்றொரு சகோதரரான சலீம் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருப்பதும் தெரியவந்தது[9]. போதைப் பொருள் விவகாரம் வெளியானதும் ஜாபர் சாதிக் திமுகவிலிருந்து நிரந்தமாக நீக்கப்பட்டார்[10]. இதையடுத்து ஜாபர் சாதிக் விசாரணைக்கு ஆஜராகுமாறு என்சிபி போலீசார் சம்மன் அனுப்பினர்[11]. சென்னையில் உள்ள அவரது வீட்டிலும் சம்மனை ஒட்டினர். ஆனால் ஜாபர் சாதிக் குடும்பத்துடன் தலைமறைவானார்[12]. ஜாபர் சாதிக்கின் வீட்டில் சம்மனை ஒட்டிய என்சிபி போலீசார், அவரது வீட்டின் பூட்டை உடைத்து முக்கிய ஆவணங்களை அள்ளிச்சென்றனர்[13]. அவரது வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய என்சிபி போலீசார், வீட்டிற்கும் சீல் வைத்தனர்[14]. இருப்பினும் ஜாபர் சாதிக் பற்றி எந்த துப்பும் கிடைக்காமல் இருந்தது.
22-02-2024 அன்றுபடப்பிடிப்புநிறுத்தப்பட்டது – 26-02-2024 அன்றுதனக்கும்இதற்கும்சம்மந்தம்இல்லைஎன்றுஅறிக்கைவிட்டது: அமீர்[15], “கடந்த 22-ம்தேதிநான் “இறைவன்மிகப்பெரியவன்” திரைப்படத்தின்இறுதிக்கட்டபடப்பிடிப்பில்இருந்தபோது, திடீரெனபடப்பிடிப்புநிறுத்தப்பட்டது.ஏன்படப்பிடிப்புநிறுத்தப்பட்டது? என்னைச்சுற்றிஎன்னநடக்கிறது? என்பதைஊடகங்கள்வாயிலாகவேநான்அறிந்துகொண்டேன். உண்மைஎதுவென்றுஇப்போதுவரைஎனக்குத்தெரியவில்லை…….எதுவாயினும், செய்திகளில்வரும்குற்றச்சாட்டுகளில்உண்மைஇருக்குமேயானால், அதுகண்டிக்கப்படவேண்டியதும், தண்டிக்கப்படவேண்டியதுமே.!அந்தவகையில், சட்டவிரோதச்செயல்களில்எவர்ஈடுபட்டிருந்தாலும், அவர்களுடன்நான்தொடர்ந்துபணியாற்றப்போவதில்லைஎன்பதைத்தெரிவித்துக்கொள்கிறேன்…….” என்று அறிக்கை விட்டார்[16]. இவருக்கும் ஜாபர் சாதிக்கும் வியாபார ரீதியில் நிறைய தொடர்புகள் இருப்பதாக சொல்லப் படுகிறது.
15-02-2024 அன்றேஎன்.சி.பி, லுக்–அவுட்நோட்டீஸ்பிறப்பித்தது: அவர் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்க, அனைத்து விமான நிலையங்களுக்கும் ‘லுக்-அவுட்’ நோட்டீஸ் 15-02-2024 அன்றே கொடுக்கப்பட்டது[17]. அவரது 8 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன[18]. மேலும் அவரது சகோதரர்கள் முகமது சலீம், மைதீன் ஆகியோரையும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தேடி வருகின்றனர்[19]. இப்படியெல்லாம் செய்திகள் வந்தாலும், அவன் எங்கிருக்கிறான் என்று தெரியாமல் இருந்தது விசித்திரமான விசயம் தான். இந்தியாவில் அவ்வாறு ஒரு நபர் தலைமறைவாக எளிதில் இருக்கலாம், சுற்றி வரலாம் என்று தெரிகிறது. தன்னுடைய சொந்த பெயரில் பயணத்தில் தான், ரெயில் அல்லது விமானங்களில் தெரிந்து விடும். மற்றபடி பயணத்தால் யாராலும் கண்டுபிடிக்க முடியாது போலிருக்கிறது. ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அவரது கூட்டாளிகள் கொடுத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ராஜஸ்தான் மாநில ஜெய்ப்பூரில் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஜாபர் சாதிக்கை இன்று டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்[20].
09-03-2024 அன்றுஜெய்ப்பூரில்பிடிக்கப்பட்டு, தில்லியில்கைது: 15-02-2924 [வியாழக்கிழமை] முதல் 09-03-2024 [சனிக்கிழமை] வரை எங்கிருந்தான் என்று தெரியாத நிலையில், 23 நாட்கள் கழித்து கண்டுபிடிக்கப் படுகிறான். போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கை 7 நாட்களில் காவலில் வைத்து விசாரிக்க பாட்டியாலா உயர் நீதிமன்றம் என்.சி.பி-க்கு சனிக்கிழமை (09.03.2024) அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் ஏராளமானோர் சம்பந்தப்பட்டிருப்பதால் ஜாபர் சாதிக்கை போலீஸ் காவலில் விசாரிக்கவும் அனுமதி கோரினர். இதனை விசாரித்த நீதிபதி, ஜாபர் சாதிக்கை ஏழு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கிய நிலையில், அவரை என்.சி.பி அலுவலகத்திற்கு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். தொடர்ந்து, ஜாபர் சாதிக்கை சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ள அதிகாரிகள், விரைவில் அவரை சென்னை அழைத்து வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
[15] தினமணி, போதைப்பொருள்வழக்கில்தயாரிப்பாளர்.. அறிக்கைவெளியிட்டஅமீர்!, Published on: 27 பிப்ரவரி 2024, 12:56 pm; Updated on: 27 பிப்ரவரி 2024, 12:56 pm
[19] சமயம், போதைப்பொருள்கடத்தல்மன்னன்ஜாபர்சாதிக்கைது.. ஜெய்ப்பூரில்பதுங்கியிருந்தவைசுத்துப்போட்டபோலீஸ்!, Authored By பஹன்யா ராமமூர்த்தி | Samayam Tamil | 9 Mar 2024, 12:29 pm,
சந்தேகிக்கும்நபர்பற்றிதுப்புத்துலங்கவிவரம்கொடுப்பருக்குரூ 10 லட்சம்பரிசுஅறிவிப்பு: பெங்களூரு குண்டலஹள்ளியில் உள்ள ராமேஸ்வரம் ஓட்டலில் சமீபத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) தனது முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளது. என்.ஐ.ஏ., புதன்கிழமை வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரின் புகைப்படத்தை வெளியிட்டதுடன், சந்தேக நபரை கைது செய்ய வழிவகுக்கும் முக்கிய தகவல்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவித்தது. பொதுமக்களின் ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் முயற்சியில், என்ஐஏ உறுதியளித்தது. சந்தேக நபர் தொடர்பான முக்கியமான தகவல்களை வழங்கும் எந்தவொரு தகவலறிந்தவரின் அடையாளமும் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும். இந்த நடவடிக்கையானது, சாத்தியமான உதவியாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதையும், வழக்கை விரைவாகத் தீர்ப்பதை எளிதாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. தொடர்புடைய தகவல் தெரிந்தவர்கள் தங்கள் விசாரணைக்கு முன் வந்து உதவுமாறு என்ஐஏ வலியுறுத்தியுள்ளது. குடிமக்கள் 08029510900 அல்லது 8904241100 என்ற எண்ணிற்கு நியமிக்கப்பட்ட ஹாட்லைன்களை அழைப்பதன் மூலம் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.
19-11-2022 மங்களூருகுண்டுவெடிப்புக்கும்இதற்குதொடர்பா?: பயன்படுத்தப்பட்ட வெடிபொருள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை[1]. ஆனால் ராமேஸ்வரம் ஓட்டலில் பயன்படுத்தப்பட்ட கருவிக்கும் மங்களூரு குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட சாதனங்களுக்கும் பல ஒற்றுமைகள் இருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் சொல்கின்றன[2]. கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி மங்களூருவில் ஆட்டோவில் குண்டுவெடிப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது[3]. இது தொடர்பாக ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த முகமது ஷாரிக் என்பவர் தீக்காயங்களுடன் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கை தற்போது என்ஐஏ விசாரித்து வருகிறது[4]. குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய கர்நாடகா அரசு தனிப்படைகள் அமைத்துள்ளது[5]. தனிப்படைகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன. குண்டு வைத்ததாக சந்தேகப்படும் நபரின் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு, அதன் அடிப்படையில் குற்றவாளியை தீவிரமாக தேடிவருகிறது[6]. தார்வாத், ஹூப்ளி, மற்றும் பெங்களூரு பகுதிகளை சேர்ந்த நான்கு பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருவதாக தகவல் கூறப்பட்டு உள்ளது[7]. இதுகுறித்து ஒயிட் ஃபீல்ட் போலீஸார் 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்[8]. தடயவியல் துறை அதிகாரிகள், வெடிகுண்டு தடுப்புப் படை அதிகாரிகள் ஆகியோரும் தடயங்களை சேகரித்து, விசாரணை நடத்தி வருகின்றனர். தேசியபுலனாய்வு முகமையை சேர்ந்த அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிஜாமாபாத் PFI வழக்குதொடர்பாககைதுசெய்யப்பட்டஆளுக்கும்இதற்கும்தொடர்புஇருக்கிறதா?: பெங்களூரு ராமேஸ்வரம் ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர் என்று “M9News” என்ற ஊடகம் கூறுகிறது[9]. குற்றம் சாட்டப்பட்டவர் அப்துல் சலீம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கடப்பா மாவட்டத்தில் அமைந்துள்ள மைடகுருவில் உள்ள பிரார்த்தனை மண்டபம் அருகே சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் கைது செய்யப்பட்டார்[10]. கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சலீம் ஐதராபாத்திற்கு மாற்றப்பட்டார். சலீம் ஜகித்யாலைச் சேர்ந்தவர் என்றும், தடை செய்யப்பட்ட அமைப்பான பீப்பிள் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) உடன் தொடர்பு வைத்திருப்பதாகவும் நம்பப்படுகிறது. ராமேஸ்வரம் கஃபே சம்பவம், குறைந்த தீவிரம் கொண்ட குண்டுவெடிப்பாக இருந்தாலும், பெங்களூரு முழுவதையும் உலுக்கியது.
தென்னிந்தியாவில்இவர்கள்எல்லோரும்சேர்ந்துவேலைசெய்கின்றனரா?: நிஜாமாபாத் PFI வழக்கு தொடர்பாக சலீம் மார்ச் 2 அன்று NIA ஆல் கைது செய்யப்பட்டார் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது, இதில் “பயங்கரவாத மற்றும் வன்முறைச் செயல்களைச் செய்ய தடைசெய்யப்பட்ட அமைப்பினால் இந்தியாவுக்கு எதிரான சதி” இருந்தது[11]. மத்திய அமைப்பின் கூற்றுப்படி, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் PFI தெலுங்கானா வடக்கு மாநில செயலாளராக இருந்தார். தெலுங்கானா வடக்கில் PFI இன் மாநிலச் செயலாளராகப் பணியாற்றிய சந்தேக நபர், பல முறைகேடான செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுவது வெளிச்சத்திற்கு வந்ததிலிருந்து சட்ட அமலாக்கத்தைத் தவிர்த்து வந்தார். NIA இன் விசாரணை, நாட்டிற்குள் பயங்கரவாதம் மற்றும் வன்முறைச் செயல்களைத் திட்டமிடுவதில் சலீமின் உத்தேசித்த பங்கைக் குறிக்கிறது[12]. ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு மற்றும் பெங்களூரு குண்டுவெடிப்பு உட்பட பல சம்பவங்களில் அவருக்கு தொடர்பு இருப்பதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பான வளர்ச்சியில், பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்த வழக்கில் தமீம் அசோக் மற்றும் ஹசன் அலி ஆகிய இருவரை என்ஐஏ சென்னையில் கைது செய்துள்ளது. பெங்களூரு சிறையில் லஷ்கர்-இ-தொய்பா (எல்இடி) பயங்கரவாதி கைதிகளை தீவிரவாதிகளாக மாற்றியது தொடர்பான விசாரணை. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 7 மாநிலங்களில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
பெங்களூரில்தொடர்ந்துகுண்டுவெடிப்புகள்நடந்துவருவது: பெங்களூரில் குண்டு வெடிப்பது என்பது ஒன்றும் புதிய விஷயம் அல்ல.
2008 குண்டுவெடிப்பில் தொடர்ந்து ஒன்பது குண்டுகள் வெடித்ததன. அதில் ஒருவர் கொலையுண்டார், 20க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இதன் பின்னணியில் சிமி, லஸ்கர்-இ-தொய்பா போன்ற தீவிரவாத இயக்கங்கங்கள் இருந்ததாக தெரிந்தது.
2010ல் கூட குண்டுவெடிப்பு நடந்துள்ளது.
இது போல 2013 மற்றும் சென்ற வருடங்களிலும் குண்டு வெடிப்புகள் நடந்துள்ளன.
2014ல் ஒரு உணவவகம் அருகில் குண்டு வெடிப்பு நடந்த போது ஒரு பெண் கொல்லப்பட்டாள் ம்ற்றும் நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.
2023ல் பிரஷர்குக்கர் குண்டுவெடிப்பு நடந்துள்ளது.
ஆகவே இவ்வாறு தொடர்ந்து நடைபெறுவது என்பது சாதாரண விஷயமாக எடுத்துக் கொள்ள முடியாது. ஏனெனில் உலக அளவில் பெங்களூர் என்பது வர்த்தக ரீதியில், குறிப்பாக தகவல் தொடர்பு மற்றும் மின்னணு போன்ற தலைகள் முதல் இடத்தில் சிறந்து வளர்ந்து வரும் நிலையில், எவரும் இது மாதிரியான நாச வேலைகளில் ஈடுபட மாட்டார்கள்
[1] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், பெங்களூருகுண்டுவெடிப்பு: இட்லிசாப்பிட்டுவிட்டுகுண்டுவைத்துச்சென்றமர்மநபர்! சிசிடிவிகாட்சிகள்வெளியீடு!, SG Balan, First Published Mar 2, 2024, 9:31 AM IST, Last Updated Mar 2, 2024, 10:15 AM IST.
[3] தமிழ்.நியூஸ்.18, நாட்டைஅதிரவைத்தபெங்களூருகுண்டுவெடிப்புசம்பவம்: மத்தியஉள்துறைபோட்டஅதிரடிஉத்தரவு, FIRST PUBLISHED : MARCH 4, 2024, 10:42 AM IST, LAST UPDATED : MARCH 4, 2024, 10:42 AM IST.
[11] An individual has been arrested by the police in connection with the bomb blast at Bengaluru’s Rameshwaram Cafe. The accused has been identified as Abdul Saleem, who was taken into custody under suspicious circumstances while roaming near a prayer hall in Mydakuru, located in the Kadapa district. Following his arrest, Saleem was transferred to Hyderabad. It has been reported that Saleem hails from Jagityal and is believed to have affiliations with the banned organization, People Front of India (PFI). he Rameshwaram Cafe incident, despite being a low-intensity blast, shook the entire Bengaluru. It is alleged that the accused entered the cafe carrying a bag, which he then set with a timer. The explosion occurred approximately an hour later, resulting in injuries to around 10 individuals.
M9News, Rameshwaram Cafe Blast Accused Arrested In AP, By M9 Updated 11:11 March 03, 2024.
[12] The report also stated that Saleem was detained on March 2 by the NIA in connection with the Nizamabad PFI case, which involved “an anti-India conspiracy by the banned outfit to carry out acts of terror and violence.” According to the central agency, the accused in the case was the state secretary for the PFI Telangana North. The suspect, who served as the state secretary of PFI in Telangana North, had been evading law enforcement since his alleged involvement in several illicit activities came to light. NIA’s investigation indicates Salim’s purported role in planning acts of terrorism and violence within the country. Authorities suspect his links to multiple incidents, including the Rameswaram Cafe Blast and the Bengaluru bomb blast. In a related development, NIA has arrested two individuals, Thameem Ashok and Hassan Ali, in Chennai in connection with a terror funding case. The investigation pertains to the radicalization of prisoners by a Lashkar-e-Taiba (LeT) terrorist in a Bengaluru prison. Raids are being conducted at multiple locations across seven states, including Tamil Nadu, Kerala, and Karnataka.
01-03-2024 வெள்ளிக்கிழமைகுண்டுவெடித்தது: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒயிட் ஃபீல்டில் 500-க்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்ப மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இங்குள்ள ‘ராமேஸ்வரம் கஃபே’ உணவகம் பிரபலமானது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் சாப்பிடுகின்றனர். இந்நிலையில், இங்கு 01-03-2024 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகலில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. பெரிய சத்தத்துடன் வெடித்ததில் அப்பகுதியில் தீ மற்றும் புகை மூட்டம் ஏற்பட்டது. ஆனால் விரைவாக தீ பரவாமல் மட்டுப்படுத்தப்பட்டது. இதில் உணவக பணியாளர்கள் 2 பேர் உட்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 45 வயதான ஒரு பெண்மணிக்கு கிட்டத்தட்ட 40 சதவீத காயங்கள் ஏற்பட்டு ஐ.சி.யூ.வில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிரவாதிகளின்வன்முறைக்குஅப்பாவிமக்கள்ஏன்பலிகடாஆகவேண்டும்?: இவ்வாறு யாரோ தீவிரவாதம்-வன்முறை கைக்கொண்டு குண்டுவெடிப்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்ளலாம். அத்தகைய இளைஞர்கள் எவ்வாறு சமூகத்தில் ஆதரிக்கப்படலாம், பாதுகாப்புக் கொடுக்கலாம், பெற்றோர் எப்படி அவர்களை கவனிக்காமல் இருக்கிறார்கள்? அல்லது கவனித்தும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்களா? அல்லது, மதரீதியில் மகத்தாக காரியங்களில் ஈடுபட்டுள்ளான் என்று ஆதரவு தெரிவித்து, அமைதியாக இருக்கிறார்களா? இத்தகைய ஏகப் பட்ட கேள்விகள் எழுகின்றன. ஏனெனில், பெங்களூரில் குண்டுவெடிப்பது, ஒன்றும் புதியதல்ல. முன்பே, இவற்றையெல்லாம் அலசப் பட்டுள்ளன. ஆனால், இன்று மறக்கப் பட்டது போல, இதைப் பற்றி வேறுவிதமாக வாத-விவாதங்கள் திசைத் திரும்புகின்றன. தீவிரவாதம், பயங்கரவாஹம், குண்டுவெடிப்பு முதலியவை எக்காரணங்களினாலும் ஏற்றுக் கொள்ளமுடியாது. அத்தகையோர் மனிதகுலத்திற்கே எதிரானவர்கள் ஆவர்.
02-03-2024 முதலமைச்சர்ஆய்வு, பேட்டிமுதலியன: முதல்வர் சித்தராமையா, உள்துறை அமைச்சர் பரமேஷ்வர் ஆகியோர் குண்டுவெடித்த உணவகத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். பின்னர் சித்தராமையா, உள்துறை அமைச்சர் பரமேஷ்வர், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிரியங்க் கார்கே, காவல் துறை உயர் அதிகாரிகளுடன் இந்த சம்பவம் குறித்து அவசர ஆலோசனை நடத்தினார். குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய யாரும் தப்ப முடியாது என சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார். மேலும், இதை அரசியலாக்கக் கூடாது எனவும் கேட்டுக்கொண்டார். இருப்பினும், முஸ்லிம் விசயம் வரும்பொழுது, ஏன் திப்பு ஜெயந்தி கூட எவ்வாறு அரசியலாக்கப்படுகிறது என்பதெல்லாம் தெரிந்த விசயம் தான். ஹிஜாப் போன்ற விவகாரங்கள் பற்றிக் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை.
பேருந்தில்வந்தமர்மநபர்: முதல்வர் சித்தராமையா கூறும்போது, ”விபத்து நடந்த உணவகம் மற்றும் அதனை சுற்றியுள்ள கட்டிடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவிகேமரா பதிவுகளின் மூலம் சந்தேகிக்கப்படும் குற்றவாளியின் முகம் அடையாளம் காணப்பட்டுள்ளது. சம்பவத்தன்று காலை 11.45 மணிக்கு வெள்ளை டி ஷர்ட், ஜீன்ஸ் பேன்ட் அணிந்த நபர் மாநகராட்சி பேருந்தில் உணவகத்துக்கு அருகே வந்து இறங்குகிறார். அவர் தொப்பி, முகக் கவசம், கண்ணாடி ஆகியவற்றை அணிந்துள்ளார். 12.35 மணியளவில் உணவகத்தில் ரவா இட்லி வாங்கி சாப்பிட்டுள்ளார். தான் கொண்டுவந்த பையை மேஜைக்குஅடியில் வைத்துவிட்டு வெளியேறுகிறார்[1]. அடுத்த சில நிமிடங்களில் பயங்கரசத்தத்துடன் குண்டுவெடித்து சிதறியது[2]. அவரது முகத்தை தகவல் தொழில் நுட்பத்தின் உதவியுடன் வடிவமைக்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.இந்த விவகாரத்தில் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவர்”.
இதனைபாஜகவினர்அரசியலாக்கிஆதாயம்தேடப்பார்க்கிறது[3]: சித்தராமையா தொடர்ந்து கூறியது, “இதனை பாஜகவினர் அரசியலாக்கி ஆதாயம் தேடப் பார்க்கின்றனர்” என்றார்[4]. பெங்களூரு மாநகர காவல் ஆணையர் தயானந்த் கூறும்போது, ”இந்தகுண்டுவெடிப்புவழக்குமத்தியகுற்றப்பிரிவுபோலீஸுக்குமாற்றப்பட்டுள்ளது. 8 தனிப்படைகள்அமைக்கப்பட்டுவிசாரணைநடைபெற்றுவருகிறது. நன்குபயிற்சிபெற்றவர்மூலமாகஇந்தசதிசெயல்அரங்கேற்றப்பட்டுள்ளது.சக்திகுறைந்தவெடிகுண்டாகஇருப்பினும், டிஜிட்டல்டைமர்கருவிமூலம்இயக்கிவெடிக்கப்பட்டுள்ளது. டிபன்பாக்ஸ்மூலம்வெடிகுண்டுவைக்கப்பட்டுள்ளது. அதில்பல்ப்இழைடெட்டனேட்டராகச்செயல்பட்டதும்தெரியவந்துள்ளது. இவ்வழக்கில்ஹூப்ளி, தார்வாட், பெங்களூருஆகியஇடங்களில் 4 பேரைபிடித்துவிசாரித்துவருகிறோம். இந்தசம்பவத்தைத்தொடர்ந்துபெங்களூருவிமானநிலையம், ரயில்நிலையம்ஆகியவற்றில்பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது,” என்றார். ஆக, வகை-வகையான குண்டுகளைத் தயாரிக்கும் முறையும் வளர்ந்து வருகிறது போலும். டிபன் – பாக்ஸ், காஸ் சிலின்டர், குக்கர் என்று மாறி வருகிறது.
தொழில்போட்டிகாரணமா?: கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா கூறும்போது, ”இந்த குண்டுவெடிப்பு சம்பவம் பெங்களூருவாசிகளிடம் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் அரசு மக்களுக்கு பாதுகாப்பு வழங்க தவறிவிட்டது. தீவிரவாதிகள் விவகாரத்தில் காங்கிரஸ் அரசு அலட்சியமாக செயல்பட்டதால்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட ராமேஸ்வரம் கஃபே உணவகம் மாதந் தோறும் பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டுவதால், தொழில் ரீதியாக ஏராளமான எதிரிகள் இருந்துள்ளனர். எனவே தொழில் போட்டி காரணமாக இந்த சதி செயல் நடந்தததா? என விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதுவும் பொறுப்பற்ற சிந்தனையாக இருக்கிறது எனலாம், ஏனெனில், தொழில் போட்டி இருந்தால், இவ்வாறு குண்டு வைத்து தான், வியாபாரத்தில் முன்னேறலாம் என்பது, எந்த கல்லூரியில் நிர்வாகப் படிப்பில் சொல்லிக் கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை.
03-03-2024 வழக்குஎன்.ஐ.ஏ.-யிடம்ஒப்படைத்துள்ளது: கர்நாடக மாநில போலீசாரின் தனிப்படை விசாரணை நடத்தி வரும் நிலையில், பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு வழக்கை மத்திய உள்துறை அமைச்சகம் என்.ஐ.ஏ.-யிடம் ஒப்படைத்துள்ளது[5]. என்.ஐ.ஏ. குண்டு வெடிப்பு தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்[6]. தமிழகம் போலல்லாது, இங்கு, உடனடியாக என்.ஐ.ஏ.-யிடம் ஒப்படைத்துள்ளதை கவனிக்கலாம். கோயம்புத்தூர் குண்டுவெடிப்பின் போது, திமுக அரசு அதனை பலவழிகளில், விபத்து என்றெல்லாம் சொல்லி மறைக்கப் பார்த்தது. இதனைத் தொடர்ந்து இதுவரை நடைபெற்றுள்ள விசாரணைகள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் கர்நாடகா மாநில அரசால் அமைக்கப்பட்டுள்ள தனிப்படை என்.ஐ.ஏ.-யிடம் ஒப்படைக்கும்[7]. பெங்களூரு அனைத்துலக வியாபார மையமாக இருப்பதினால், இங்கு மேலும் இத்தகைய வன்முறை வேலைகள் நடப்பதை யாரும் விரும்பவில்லை. இதனால், உள்ளூர் வியாபாரம் மட்டுமல்லாது, அயல்நாட்டு வியாபாரம் பாதிக்க வாய்ப்பு உள்ளது. அந்த ஆள் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ 10 லட்சம் பரியும் அறிவிக்கப் பட்டுள்ளது[8].
[3] தமிழ்.இந்து, பெங்களூரு ‘ராமேஸ்வரம்கஃபே’ உணவகத்தில்வெடிகுண்டுவைத்தநபர்அடையாளம்காணப்பட்டார், இரா.வினோத், Published : 03 Mar 2024 06:55 AM; Last Updated : 03 Mar 2024 06:55 AM.
[7] தமிழ்.இந்து, பெங்களூருகுண்டுவெடிப்பு: குற்றவாளிகள்தப்பஇடமளிக்கக்கூடாது, செய்திப்பிரிவு, Published : 06 Mar 2024 06:25 AM, Last Updated : 06 Mar 2024 06:25 AM.
[8] In the wake of the recent bombing incident at Rameshwaram Cafe in Kundalahalli, Bengaluru, the National Investigation Agency (NIA) has stepped up its efforts to bring the perpetrators to justice. The NIA, on Wednesday, released a photograph of the suspected bomber and declared a reward of Rs 10 lakhs for any vital information that could lead to the arrest of the suspect.In a bid to encourage cooperation from the public, the NIA assured that the identity of any informant providing crucial information regarding the suspect would be kept strictly confidential. This move aims to instil confidence among potential tipsters and facilitate a swift resolution to the case. The NIA has urged anyone with relevant information to come forward and assist in their investigation. Citizens can reach out to the authorities by calling the designated hotlines at 08029510900 or 8904241100.
ஜாபர்சாதிக்குறித்துசெய்திசேகரிக்கசென்றசேனல்ரிப்போர்ட்டர்கொடூரதாக்குதல்.. பிடிபட்டகட்சிநிர்வாகி:. போதை பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவான ஜாபர் சாதிக் குறித்து, செய்தி சேகரிக்க சென்ற தனியார் செய்தி தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் தாக்கப்பட்ட விவகாரத்தில், ஒருவரை போலீசார் கைது செய்தனர். இதில், திமுக நிர்வாகிகளான கலைச்செல்வன் மற்றும் பச்சையம்மாள் ஆகியோர் தனியார் செய்தி தொலைக்காட்சி ஒளிப்பதிவாளரை தாக்கி, அறைக்குள் அடைத்து கொடுமை படுத்தியதாக கூறப்படுகிறது[1]. புகாரின் அடிப்படையில் இது குறித்து விசாரணை நடத்தி வந்த போலீசார், ஆபாசமாக பேசுதல், சிறை வைத்து காயம் விளைவித்தல் என இருவர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்த நிலையில், கலைச்செல்வனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்[2]. ஊடகத்தினர் மீது தாக்குதல், ஊடகத்தின் குரல்வளை நெறிப்பு, கருத்து சுதந்திரம் பறிபோதல் என்றெல்லாம் போன்ற பேச்சும் இல்லை, விவாதமும் இல்லை. அரசியல் கூட்டணி பற்றிதான் தினம்-தினம் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
வங்கிகணக்குகள்முடக்கம்: பொதுவாக இத்தகையோரிடம் பலவித பெயர்களுடன், வங்கிக் கணக்குகள் பலவித காரியங்களுக்கு உபயோகமாக, செயல்படுத்த இருக்கும். வீட்டில் யாருமில்லாததாலும், விவரங்களை சொல்வதற்கும் ஆட்கள் இல்லாததாலும், இருக்கின்ற ஆதாரங்களை வைத்து, நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஆகிறது. அதிகாரிகள், போலீஸார் முதலியோருடன் ஒத்துழைப்புக் கொடுக்காமல் சதாய்த்து வருவதும் தெரிந்தது. மேலும், காலம் தாழ்த்தினால், வங்கிகளில் இருக்கும் பணமும் எடுக்கப் பட்டு, வேறு விவகாரங்களுக்கு உபயோகப் படும். ஜாபர் சாதிக் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் நிலம் மற்றும் வங்கி கணக்குகள் தொடர்புடைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன[3]. இந்த நிலையில், அவர் தொடர்புடைய 8 வங்கி கணக்குகள் இருப்பதும் தெரிந்தது[4]. இதனால், அவற்றை முடக்க தீர்மானம் எடுக்கப் பட்டது[5]. இப்பொழுது, கணக்குகளை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் முடக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது[6].
திரையுலகநிழல்தாதா[7]: ஒரு கட்டத்தில், தொழில் ரீதியாக சிலருடன் பிரச்னை உருவாகி, கடும் நெருக்கடி ஏற்பட்டது. வழக்குகளை எதிர்கொண்ட அவரும், அவரது சகோதரரும் அவற்றில் இருந்து விடுபட்டு, கொஞ்ச நாட்கள் அமைதியாக இருந்தனர். பின், சென்னை பர்மா பஜார் தொடர்பு ஏற்பட, அங்கிருந்தபடியே வெளிநாட்டு பொருட்களை இறக்குமதி செய்து வியாபாரத்தில் ஈடுபட்டனர். கடந்த, 2010 வரை இப்படி சென்று கொண்டிருந்த ஜாபர் சாதிக், அதே பர்மா பஜார் தொடர்பை பயன்படுத்தி, நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான, ஜக்குபாய் படத்தை, திருட்டு வி.சி.டி.,யில் தயாரித்து புழக்கத்தில் விட்டார். இது தொடர்பான பிரச்னையில், ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது, அவருக்கு பின்புலமாக இருந்து உதவியது, தற்போது திரையுலகில் இருக்கும் பிரபலமான இயக்குனர் ஒருவர் தான். இதையடுத்து, ஜாபர் சாதிக்கும், அவரின் சகோதரரும் வெளிநாடுகளில் இருந்து சட்ட அனுமதி பெறாத பொருட்களை எடுத்து வரும் ‘குருவி’யாக செயல்பட துவங்கினர். அப்போது அவர்களுக்கு, சர்வதேச அளவில் போதைப்பொருள் கடத்தும் நபர்களோடு தொடர்பு ஏற்பட்டது. அந்த தொடர்புகளை வைத்து, தமிழகம் வாயிலாக போதைப்பொருட்களை கடத்தி வந்தனர். அந்த வருமானத்தை வைத்து, சினிமாக்காரர்கள், போலீஸ் அதிகாரிகள், அரசியல் முக்கியஸ்தர்கள் என, பல தமிழக வி.ஐ.பி.,க்களுடன் நெருக்கமாகி விட்டனர்.
ரேவ்பார்டிகள்நடத்தப்பட்டது[8]: பணத்தை தண்ணீராக வாரி இரைத்து பலரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த ஜாபர் சாதிக், ஒரு கட்டத்தில் கோயம்புத்துார் பகுதியில் பிரமாதமாக நடந்து வரும், ‘ரேவ் பார்ட்டி’ எனப்படும், போதைப்பொருள் பார்டியை சென்னையிலும் அறிமுகம் செய்து வைத்தார். கிழக்கு கடற்கரை சாலையில், பண்ணை வீடுகளில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட, ‘ரேவ் பார்ட்டி’கள் அடிக்கடி நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சிகளுக்கு, தமிழக அரசியல், சினிமா, தொழில் அதிபர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள் என, பலரும் சென்று வந்துள்ளனர். இதன் வாயிலாக, ஆளும் கட்சியில் மிக மிக முக்கியமான புள்ளிகளுடன் தன் செல்வாக்கை வளர்த்துக் கொண்டார். பல ஆளும் கட்சி பிரமுகர்கள், போலீஸ் உயரதிகாரிகளுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன. தன்னை தேடி மத்திய போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் வருவது தெரிந்ததும், ஜாபர் தலைமறைவாகி விட்டார். அவர் தலைமறைவாவதற்கு முன், யாருடன் போனில் பேசினார் என்ற தகவலை போலீசார் எடுத்துள்ளனர்.
செக்யூலரிஸபோர்வையில்அடிப்படைவாதம்முதலியன[9]: அதில், சினிமா பிரபலங்களும், போலீஸ் அதிகாரிகளும், ஆளும்கட்சி அரசியல் பிரமுகர்களும் தொடர்ச்சியாக, ஜாபரை தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்துள்ளது. குறிப்பாக, சென்னை கிரீன்வேஸ் சாலையில் இருந்து தொடர்ச்சியாக அழைப்புகள் வந்துள்ளதை, போலீசார் கண்டறிந்து உள்ளனர். ஜாபர் சாதிக், திரைப்பட இயக்குனர் அமீர் மற்றும் இஸ்லாமிய மார்க்க பேச்சாளர் அப்துல் பாஸித் புகாரி ஆகியோர் இணைந்து நடத்தி வரும், ‘லா கபே’ என்ற நிறுவனத்தை பற்றியும், பல தகவல்கள் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பல்வேறு மட்டங்களில், பணத்தை வாரிக்கொடுத்து, தன் செல்வாக்கை வளர்த்துக்கொண்ட ஜாபர் சாதிக், மார்க்க போதகர்களிடமும் அணுக்கமாக இருந்தார். அவர்கள் வாயிலாக ஆயுத போராட்ட குழுக்களுக்கும், பண உதவி செய்திருக்கிறார் என்ற கோணத்தில் என்.ஐ.ஏ., விசாரிப்பதாக கூறப்படுகிறது. விசாரணையில் முன்னேற்றம் ஏற்படும் போது, மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லோருமே எதிர்க்க வேண்டிய போதை மருந்து: இன்று உலகம் முழுவதும் போதை மருந்துக்கு எதிராக எல்லா நாடுகளுமே மிகக்கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. மிகப்பெரிய குற்றம் என்பதனால், பைலில் வெளி வரமுடியாத குற்றம், உடனடியாக கைது, சிறை என்று கடினமான நிலைமை இதுதான் உலகமெங்கும் காணப்படுகிறது. ஏனெனில் இது மனிதனுடைய வாழ்க்கையை சீரழித்து, குடும்பங்களை சமூகங்களையும் சீரழித்து, இறுதியில் ஒட்டுமொத்த மனித இனத்தையே பாதிக்கின்ற ஒரு மிகப்பெரிய நோயாக அமைகிறது. கொரோனாவை பார்த்த பிறகு, அதைவிட இது மிகக் கொடுமையான நோய் என்று தோன்றுகிறது ஆகவே நிச்சயமாக எந்த சமூகமும் நாடும் இதனை எதிர்க்கும் என்பது நன்றாகவே புரிகிறது. ஆகவே, இத்தகைய காரியங்கள் தமிழகத்தில் நடப்பது என்பது மிகவும் வருத்தமான விஷயமாகும். ஆகவே எப்படியாவது இத்தகையை குற்றங்கள் ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட வேண்டும்
பதுங்கியது, பதுங்கியிருப்பதுஏன்?: ஒரு பிரபலமான மனிதர், அதிலும் ஆளும் கட்சியின் பிரமுகர், பெரிய பணக்காரர், சினிமா அதிபர், பலகோடி வியாபாரங்களின் அதிபர் என்றெல்லாம் இருக்கின்ற ஒரு நபர் திடீரென்று காணாமல் போய் விட முடியாது. ஆகவே நிச்சயமாக மாட்டிக் கொண்டு விடுவோம் என்ற நிலையில் தான், காணாமல் போய்விட்டார் என்றால், இந்தியாவிலேயே இருக்கிறார் என்றால், மறைந்து எங்கே ஒரு இடத்தில் வாழலாம். அல்லது நாட்டை விட்டு வெளியேறி விட்டார் என்றால்[1], நிச்சயமாக வேற எந்த நாட்டிலேயோ பதுங்கி இருக்கிறார் என்று தெரிகிறது[2]. எது எப்படி இருந்தும் சட்டப்படி,போதை கட்டுப்பாடு துறை லுக் அவுட் நோட்டீஸ்கள் அனுப்பி விட்டது என்பதால், நிச்சயமாக வெளிவந்தால் மாட்டிக் கொள்வார்[3]. இவ்வாறெல்லாம் மறைந்து வாழலாம் போன்ற விவகாரங்கள் எல்லாம் அசாதாரண விவகாரங்கள் ஆகும். இருப்பினும் அத்தகைய முடிவை மேற்கொண்டது ஏன் என்பது கவனிக்கத் தக்கது[4].
யார்இந்தஜாபர்சாதிக்? – ஜாபர்சாதிக்பின்னணி: குற்றச்சாட்டுக்கு உள்ளான ஜாபர் சாதிக்கின் பூர்வீகம் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி. பல ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்புக்காக சென்னை வந்தவர், சொந்தமாக தங்கும் விடுதி, ஓட்டல், ஏற்றுமதி நிறுவனம், உணவு பதப்படுத்தும் நிறுவனம் என குறுகிய காலத்தில் உச்சம் தொட்டார். இவர், சென்னை புரசைவாக்கத்தில் விடுதி வைத்து நடத்துகிறார். பிரபல அசைவ ஹோட்டல் ஒன்றின் புரசைவாக்கம் கிளையையும் எடுத்து நடத்தும் சாதிக், தி.மு.க., முக்கிய தலைவர்கள் பலருடன் நெருக்கமான நட்பில் இருந்தார். சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க.,வின் முக்கிய புள்ளி வாயிலாக, கட்சியின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணியின் துணை அமைப்பாளர் பதவியை பெற்ற சாதிக், கட்சி மேலிடத்தில் இருப்போர் பலருடனும் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். ஒரு கட்டத்தில் திரைத் துறையில் காலடி எடுத்து வைத்த சாதிக், அங்கிருக்கும் பிரபலமான நபர்களுடனும் நெருக்கமான நட்பை வளர்த்துக் கொண்டார்; திரைப்படம் தயாரிக்கும் பணியிலும் இறங்கினார். மங்கை என்ற திரைப்படம் எடுத்து வரும் அவர், படத்துக்கான முதல் பாடல் வெளியீட்டு விழாவுக்கு, இயக்குனர் கிருத்திகா உதயநிதி உள்ளிட்ட தி.மு.க., பிரபலங்களையும் அழைத்திருந்தார்[5]. கட்சிக்கும், ஆட்சிக்கும் பல கட்டங்களில் தாராளமாக நிதி வழங்கியதால், ஜாபர் சாதிக்குக்கு அனைத்து மட்டங்களிலும் தொடர் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது[6].
சட்டமீறல் செயல்களில் எப்படி முஸ்லீம்கள் தைரியமாக ஈடுபடுகின்றனர்?: பொதுவாக திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முஸ்லிம்களுக்கு அதிக சலுகைகள் கொடுக்கப்படும் என்பது தெரிந்த விஷயமாக இருக்கிறது. எல்லோரும் காலமாக சிறையில் இருப்பவர்களை விடுவிப்பது பிறகு ரம்ஜான் மாதத்திற்கு அரிசி கொடுப்பது, சந்தனக்கூடு பண்டிகைக்கு சந்தனம் கொடுப்பது, தாராளமாக நிதி உதவி அளிப்பது என்றெல்லாம் நடந்து வருகின்றன. இப்பொழுது கூட சமீபத்தில் அவர்களுக்கு பல சலுகைகள் கொடுப்பதாக திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆகவே ஆன்மீகம் என்று சொல்லிக் கொண்டு இந்து மதத்தினரை வசை படுவது, சமதர்மம், செக்யூலரிஸம், பெரியாரிஸம் என்று சொல்லிக்கொண்டு, முஸ்லிம்களுக்கு தாஜா செய்வது என்பது தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் தான் அவர்கள் ஒருவேளை தைரியமாக இத்தகைய வேலைகளில் ஈடுபட்டு உள்ளனர் என்பது தெரிகிறது
போதைமருந்துகும்பல்களுடன்தொடர்பு, வேலைஆரம்பம்: இன்றைக்கு அரசியல்-வியாபாரம் என்பதெல்லாம் பணம் சம்பாதிக்கத் தான். பொது மக்களின் பணத்தை எப்படியாவது கொள்ளையடிப்பது தான், இவர்களின் வேலை. அதற்கு, சினிமா, குடி, கிரிக்கெட், விபச்சாரம் முதலியவை உபயோக படுத்துவது போன்ற, போதை மருந்தும் சேர்ந்து விட்டது. இவ்விதமாக, ஜாபர் சாதிக் தனது வியாபாரங்களை விஸ்தரித்த போது, அரசியல் லாபமும் கிட்டியது. அப்போதுதான் அவருக்கு சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே ஹெராயின் வகை போதைப் பொருட்கள் கடத்தலில், வெளிநாட்டு கும்பல் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அந்த போதைப் பொருளுக்கு நிகராக போதை தரக்கூடியது மெத்தாம் பெட்டமைன் வகை போதைப் பொருள் ஆகும். இதற்கு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அதிக தேவை ஏற்பட்டுள்ளது. இந்த போதைப் பொருளைத் தயாரிக்க சூடோபெட்ரின் என்ற மூலப்பொருள் அவசியம். இதன் விலை ஒரு கிலோ ரூ.1.50 கோடி ஆகும். இந்த சூடோபெட்ரினை கடத்தியதாக ஜாபர் சாதிக் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
போலீஸார் மூலம் அறியப் படும் விவகாரங்கள்: 3,500 கிலோ சூடோபெட்ரின்: இவரது கூட்டாளிகள் 450 முறை, 3,500 கிலோவுக்கும் அதிகமான சூடோபெட்ரினை பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி, கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ளனர். இதன்மூலம் கோடிகளில் புரண்ட ஜாபர் சாதிக், தனது செல்வாக்கை பயன்படுத்தி அரசியல் மற்றும் சினிமா துறைக்குள் நுழைந்துள்ளார். மேலும், அதிகாரிகளுடன் நட்பு கொண்டுள்ளார். இதுதவிர, ஹவாலா (ஆவணம் இல்லா பணம்) தொழிலையும் இவர் கையாண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான தகவல்களை போலீஸார் சேகரித்து வருகின்றனர். மேலும், ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் உள்ளவர்கள், அவரது பினாமிகள், அவரால் ஆதாயம் அடைந்தவர்கள் குறித்தும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் விவரங்களை சேகரித்து வருகின்றனர். விரைவில் அடுத்தடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
15-02-2024-லிருந்துஆள்இருப்பதுதெரியவில்லை: இரண்டு வாரங்கள் ஆகியும் ஜாபர் சாதிக் இருக்கும் இடம் தெரியாதலால், விசாரணை தொடரும் நிலையில், “லுக்-அவுட்-நோட்டீஸ்” விடப் பட்டுள்ளது. போதை மருந்து கடத்தல்காரர்கள், எந்த நிலைக்கும் தயாராக இருப்பார்கள். ஆகவே, இத்தனை நாட்களில் என்கு சென்றிருப்பான் என்று தெரியவில்லை. இந்நிலையில், அவர் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்கும்வகையில், ஜாபர் சாதிக்குக்கு எதிராக அனைத்து விமான நிலையங்களுக்கும் போலீஸார் ‘லுக்-அவுட்’ நோட்டீஸ் கொடுத்துள்ளனர்[7]. இனி அவர் எந்த விமானநிலையத்துக்கு சென்றாலும், உடனடியாக அங்குள்ள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்படுவார்[8]. இதற்காக அனைத்து விமான நிலைய அதிகாரிகளும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். கடல், தரை மார்க்கமாக அவர் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்கவும் போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்ச் இத்தனை சீரியஸான விசயத்தை ஏன் தமிழகத்தில் ஒன்றுமே நடக்காதது போல காட்டிக் கொள்கின்றனர் என்பதும் விசித்திரமாக இருக்கிறது.
[3] இ.டிவி.பாரத், போதைப்பொருள்கடத்தல்வழக்கில்தலைமறைவாகஉள்ளஜாபர்சாதிக்கிற்குலுக்அவுட்நோட்டீஸ்!, By ETV Bharat Tamil Nadu Desk, Published : Mar 1, 2024, 6:21 PM IST.
போதைமருந்துகடத்தலில்இந்தியாவழியாகச்சிக்கிக்கொண்டிருத்தல்: உலக நாடுகளில் போதை மருந்து பிரச்சினை தீவிரமாக இருக்கிறது. இதில், இந்தியா சிக்கிக் கொண்டு தவிக்கிறது எனலாம். போதை மருந்து கடத்தலில், இந்தியா ஒரு பாதையாக அமைத்துக் கொண்டு, அந்த கடத்தல்காரர்கள் செயல்பட்டு வருவதால், அடிக்கடி அவை பிடிக்கப் படுகின்றன. ஆனால், பிடிபடாமல் தப்பிச் செல்லும்சரக்குகள் பற்றி தெரிவதில்லை. போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப் பொருட்களை (சூடோபெட்ரின்), தேங்காய் பவுடர் மற்றும் ஹெல்த் மிக்ஸ் (சத்து மாவு) பாக்கெட்களில் மறைத்து வைத்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்படுவதாக டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. டெல்லியில் கடந்த சில நாட்களாக போதைப்பொருள் கும்பல்களை கைது செய்யும் நடவடிக்கையும் அது தொடர்பான சோதனைகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது[1]. கடந்த வாரம் தெற்கு டெல்லியில் இரண்டு போதைப் பொருள் குடோனை சோதனை நடத்தியதில் சுமார் 1700 கிலோ போதைப் பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்[2].
எல்லைத் தாண்டி நடக்கும் தீவிரவாதங்களில் போதை மருந்தும் முக்கியப் பங்கு வகிக்கிறது: 40 கோடி ஜனத்தொகை கொண்ட இந்திய என்று உலக அளவில் ஒரு பொருளாதார ரீதியில் முன்னேறி வருகின்ற நாடாக அமைகிறது. இத்தனை ஜனத்தொகை இருந்தாலும் ஓரளவுக்கு அக்களுக்கு உணவு, சுகாதாரம், மருத்துவம், இருப்பிடம், போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு, மக்கள் திருப்தியாக இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. இது மற்ற நாடுகளை ஒப்பிட்டு பார்க்கும்போதும், இந்த உண்மை தெரிகிறது. கொரோனா காலத்தைய துன்பங்களையும் மீண்டு, பழைய நிலைக்கு வந்திருப்பது எல்லாருக்கும் மகிழ்ச்சிகரமான செய்தி. இருப்பினும் எல்லைகளில் ஆப்கானிஸ்தானம், பாகிஸ்தான், சைனா மற்றும் மியான்மர் போன்ற நாடுகள் வழியாக, நமக்கு எல்லை தாண்டிய பயங்கரவாதம், பொருளாதார தாக்குதல், ஊடுருவல், போதை மருந்து கடத்தல் என்றெல்லாம் நடந்து கொண்டு இருக்கின்றன. இதனால் அவை உள்ளூர் பிரச்சனையாகவும் மாறும்பொழுது பாதிப்பு அதிகம் ஆகிறது.
15-02-2024 அன்றுதமிழககும்பல்டில்லியில்சிக்கிக்கொண்டது: இதுதொடர்பாக, டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில், கடத்தல் கும்பல், மேற்கு டெல்லி கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள கிடங்கில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. கடந்த பிப்ரவரி 15-ம் தேதி 2024 அங்கு நுழைந்த போலீஸார், அங்கிருந்த சென்னை முகேஷ், முஜிபுர், விழுப்புரம் அசோக்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போதைப் பொருட்கள் தயாரிக்க பயன்படும் 50 கிலோ வேதிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் சர்வதேச மதிப்பு ரூ.2,000 கோடி.கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது தமிழ் சினிமா திரைப்படத் தயாரிப்பாளரும், திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக் என்று குற்றம் சாட்டப்பட்டது. இதனால், பிரச்சினை தீவிரமாகியது. இடையில் சுமார் 10 நாட்கள் என்னவாயிற்று என்று தெரியவில்லை.
25-02-2024 – திமுகவிலிருந்துஜாபர்சாதிக்கைநிரந்தரமாகநீக்கியது: திமுகவில் ஸ்டாலின் முதல் மற்ற தலைவர்களுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் வெளியாகி வருவதாலும், பிரச்சினை போதைமருந்து விவகாரமாக இருப்பதாலும், திமுக இவரை கைக்கழுவத் தீர்மானித்தது போலும். இதையடுத்து, திமுகவில் இருந்து அவர் நிரந்தமாக நீக்கப்பட்டார்[3]என்ற செய்தி வந்துள்ளது. கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால்[4], அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் அ.ஜாபர் சாதிக்கை நிரந்தரமாக நீக்கி திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டு இருந்தார்[5]. “அயலகம்,” என்ற ரீதியில், வெளிநாட்டு தொடர்புகள் இனி எதை வெளிகாட்டும் என்றும் கவனிக்கலாம்[6]. திமுக என்றாலே, பொதுவாக “சிறுபான்மையினர்” அதிலும் முஸ்லிம்களுக்கு சாதகமாக இருக்கும் கட்சி என்று அறியப் படுகிறது. கோயம்புத்தூர் காஸ்-சிலின்டர்-குண்டுவெடிப்பில் “விபத்து” என்று ஆரம்பத்தில் பாட்டுப் பாடியது. அதுபோல இல்லாமல், மருந்து என்பதால், நடவடிக்கை எடுத்திருப்பது புரிகிறது.
‘இறைவன்மிகப்பெரியன்’ தயாரிப்பாளர்ஜாபர்சாதிக்குறித்துஅமீர்அறிக்கை: இறைவன் மிகப் பெரியவன் திரைப்படத்தின் ஜாபர் சாதிக் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்குமானால்[7], அது கண்டிக்கப்பட வேண்டியதும், தண்டிக்கப்பட வேண்டியதுமே.! என இயக்குநர் அமீர் அறிக்கை வெளியிட்டுள்ளார்[8]. “ஜாபர் சாதிக் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்குமானால்,” என்றால், இவ்வளவு நடந்ததும் பொய்யா அல்லது இவர் நம்பவில்லையா என்று தெரியவில்லை. மேலும் தான் விசாரணைக்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்[9]. இதைப் பற்றி ஒரு வீடியோவையும் வெளியிட்டிருப்பது தெரிகிறது[10]. சினிமாவில் செக்யூலார் போர்வையில் இவர்கள் கம்யூனலாக வேலை செய்வதும், அரசியல் ஆதரவு இருப்பதும் தெரிகிறது. பொதுவாக ஊருக்கு உபதேசம் என்ற பெயரில், வன்முறைக் காட்சிகளை வைத்துக் கொண்டு தான், இவர்கள் படங்களை எடுத்து வருகிறார்கள்.
26-02-2024 நேரில்ஆஜராகும்படிஜாபர்ஜாதிக்குநோட்டீஸ்: இந்நிலையில், போதைப் பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக, தங்கள் அலுவலகத்தில் பிப்ரவரி 26-ம் தேதி 2024 அன்று நேரில் ஆஜராகுமாறு டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார், கடந்த 23-ம் தேதி பிப்ரவரி, ஜாபர் சாதிக் சாந்தோம் அருளானந்தம் தெருவில் உள்ள வீட்டில் சம்மன் (அழைப்பாணை) ஒட்டினர். ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவரையும், அவரது கூட்டாளிகளையும் பிடிக்கதனிப்படை அமைக்கப்பட்டது. அவர்களை தனிப்படை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். வீட்டில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். வீட்டை பூட்டிவிட்டு ஜாபர் சாதிக் தலைமறைவாக இருக்கும் நிலையில் பூட்டை உடைத்துக் கொண்டு அதிகாரிகள் வீட்டுக்குள் புகுந்தனர்[11]. பின்னர் அங்கு சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினார்கள்[12]. நேற்று பகல் 12 மணி அளவில் தொடங்கிய இந்த சோதனை இரவு 8 மணி வரை நீடித்துள்ளது. இந்த சோதனையின்போது போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சோதனை முடிந்து வீட்டைவிட்டு வெளியேறிய அதிகாரிகள் அதிரடியாக வீட்டுக்கு சீல் வைத்துவிட்டுச் சென்றுள்ளனர்[13]. இதற்கிடையே தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக் எங்கிருக்கிறார்? என்பது தெரியவில்லை[14].
[3] ஜீ.நியூஸ், போதைப்பொருள்விவகாரம்: ஜாபர்சாதிக்திமுகவில்இருந்துடிஸ்மிஸ் – துரைமுருகன்அதிரடி!, Written by – S.Karthikeyan | Last Updated : Feb 25, 2024, 04:41 PM IST.
[7] புதியதலைமுறை, தண்டிக்கப்படவேண்டியதுதான்”-’இறைவன்மிகப்பெரியன்’ தயாரிப்பாளர்ஜாபர்சாதிக்குறித்துஅமீர்அறிக்கை!, Angeshwar G, Published on: 26 Feb 2024, 11:11 pm
[9] தந்திடிவி, வசமாய்சிக்கியஜாபர்சாதிக்போதைப்பொருள்கடத்தல்விவகாரம் “நான்விசாரணைக்குதயார்..” இயக்குநர்அமீர்வெளியிட்டவீடியோ, By தந்தி டிவி 1 மார்ச் 2024 10:45 AM
[13] தமிழ்.இந்து, திமுகமுன்னாள்நிர்வாகிஜாபர்சாதிக்கின்சென்னைவீட்டுக்கு `சீல்‘ வைப்பு, செய்திப்பிரிவு, Published : 01 Mar 2024 04:56 AM; Last Updated : 01 Mar 2024 04:56 AM
2020 – மோசடிசெயலில்ஈடுபட்டு, கைதாகி, ஜாமீனில்வெளிவந்து, மறுபடியுமோசடியில்ஈடுபட்டது: சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்தவர் கோபி என்ற கோபி கிருஷ்ணன் (வயது 30). பட்டதாரியான இவர் நூதனமான முறையில் மோசடி செயலில் ஈடுபட்டு, கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டியவர்[1]. இவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றவர். குண்டர் சட்டத்திலும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்[2]. ஜாமீனில் வெளிவந்த இவர் மீண்டும் மோசடி தொழிலை தொடங்கி உள்ளார். சென்னை திருமுல்லைவாயலில் போலி கால் சென்டர் ஒன்றை தொடங்கி, அதில் ஏராளமான இளம்பெண்களை வேலைக்கு அமர்த்தினார். அந்த இளம்பெண்கள் பொதுமக்களுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசி, ஏதாவது ஒரு நிதி நிறுவனம் பெயரைச் சொல்லி, அந்த நிறுவனத்தில் குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி தருவதாக சொல்லி ஏமாற்றுவடு தான் அவர்கள்து வேலை. இது தொடர்பாக, செல்வராஜ் கொடுத்த புகார் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் நாகஜோதி மேற்பார்வையில், உதவி கமிஷனர் பிரபாகரன் தலைமையிலான தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, மோசடி மன்னன் கோபிகிருஷ்ணன், அவரது மேலாளர் வளர்மதி (30) உள்பட 12 பேர் நேற்று கைது செய்தனர். அவர்கள் நடத்திய போலி கால்சென்டரிலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
2024 – அன்னைதெரசாமுதியோர்இல்லம்மோசடி: இதே பாணியில், அனாதை இல்லம், முதியோர் இல்லம், ஆசிரமம் என்று சொல்லிக் கொண்டு, கும்பல்கள் கிளம்பியுள்ளன. கால் சென்டர்களிலிருந்து, தொடர்ந்து பெண்கள் தொடர்பு கொண்டு, டொனேஷன் கேட்டுத் தொல்லை செய்வர். யாராவது, இரக்கப் பட்டு, பணம் கொடுத்தால் அபகரித்து விடுவர். அத்போன்ற , அனாதை இல்லம், முதியோர் இல்லம், இருக்காது. ஒரே இல்லத்தை ஐத்துக் கொண்டு, பல பெயர் / போர்டுகளை வைத்தும் ஏமாற்றி பணம் பறிக்கிறார்கள். பொதுவாக உதவி செய்கிறவர்கள், பென்சனர், முதலியோர்களது செல்போன் நம்பர்களை வைத்துக் கொண்டு [மற்ற நிறுவனங்களிலிருந்து பெற்றுக் கொண்டு] இவ்வாறு ஏமாற்றுகின்றனர். அவகையில், பெரம்பூரில், அன்னை தெரசா முதியோர் இல்லம் / ஓல்ட் ஏஜ் ஹோம் என்ற பெயரில், கால் சென்டர்களை வைத்து, மோசடி செய்து வருகின்றனர். புகார்கள் கொடுக்கப் பட்டுள்ளன.
அனாதைஇல்லம்,முதியோர்இல்லம்,வாழ்வற்றபெண்களுக்குபாதுகாப்புஇல்லம்நடக்கும்-நடத்தப் படும் விதம்: கிறிஸ்துவ நிறுவனங்கள் அனாதை இல்லம், முதியோர் இல்லம், வாழ்வற்ற பெண்களுக்கு பாதுகாப்பு இல்லம் என்றெல்லாம் நடத்தி மோசடி செய்து சிக்கிக் கொண்டுள்ள செய்திகள் பல வந்துள்ளன. இந்நிலையில் கால் சென்டர் நடத்தி இதே முறையில் அப்பாவி மக்களை ஏமாற்றும் கூட்டங்களை பற்றிய செய்திகளும் வந்து கொண்டே இருக்கின்றன. சில இடங்களில், முதியோர் இல்லங்கள் நல்ல முறையில் சகல வசதிகளுடன் பாதுகாப்பு கொண்ட முறையில் இயங்கி வருகின்றன. பெரும்பாலும், இவர்கள் ஒன்று தாமே முன்வந்து அங்கு சேர்ந்து விடுகின்றனர் அல்லது மகன் – மகள் வெளிநாடுகளில் வாழும் அல்லது நிரந்தரமாகத் தங்கி விடும் நிலையில் இத்தகைய இல்லங்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால் அதே நேரத்தில் சிறிய அளவில் நடத்தப்படுகின்ற முதியோர் இல்லங்களில் தான் நிறைய பிரச்சினைகள் உண்டாகின்றன.
சிறிய அளவில் நடக்கும்முதியோர் இல்லங்கள்: அதாவது அவர்கள் சேவையை முன்னிலைப் படுத்திக் கொண்டு அத்தகைய இல்லங்கள் ஆரம்பித்தாலும், பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற உள்நோக்கம் தான் அவர்களுக்கு அதிகமாக இருக்கிறது. இதனால் தான் கருணை இல்லம் என்ற பெயரில் அவர்கள் நடத்தி வரும் இடங்களில் சென்று பார்த்தாரல், ஒரு பெரிய ஹால், அதில் ஒரு 10-20 கட்டிலில் போடப்பட்டு, வயதானவர்கள் எல்லாம் படுக்க வைக்கப்பட்டு இருப்பார்கள். சாப்பாடு கூட, ஒரு எளிய முறையில் தான், கொஞ்சமாக கொடுப்பார்கள். கழிவறை போன்ற வசதிகளெல்லாம் கூட குறைவாகத் தான் இருக்கும். இந்த 10-20 அல்லது 50-100 முதியவர்களுக்கு ஒன்று முறையே ஐந்து-பத்து அறைகள் கூட இருக்காது. இதனால் அவர்கள் அங்கேயே, எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு, பிறகு சாப்பிட்டு,, தங்க வேண்டிய நெருக்கடி உள்ளது. மேலும் பல நேரங்களில் சமைப்பது, அறைகளை சுத்தம் செய்வது, ஏன் இந்த கழிப்பிடங்களை கூட சுத்தம் செய்யும் பணிகளில் இந்த முதியவர்கள் பணிக்கப்படுகிறார்கள்.
போலி இல்லங்கள் உருவாகும் விதம்: பணம் தான் பிரதானம் எனும் பொழுது, பல நேரங்களில் அவர்கள் சட்டப்படி பதிவு கூட செய்யாமல் இல்லங்களை நடத்தி வருகிறார்கள். சில பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மேலும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற கோணத்தில், இருக்கும் இடத்தையே இரண்டு மூன்று என்று பிரித்துக் காட்டி, வெவ்வேறு பெயர்களில் நடத்துவதாக பிரசாரம் செய்து இவர்கள் பண வசூல் நிலையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மத்திய-மாநில அரசு மானியங்கள் எல்லாம் கிடைக்கின்றன, வங்கிகளில் சில நிதி கிடைக்கின்றது போன்ற சலுகைகளை குறிவைத்து சம்பாதிக்க, இவர்கள் இத்தகைய வியாபாரத்தை செய்து வருகின்றனர். அயல்நாட்டு நிதியும் கிடைக்கும் பொழுது, மேன்மேலும் விசித்திரமான, குரூர கொடூரங்கள், குற்றங்களும் நடக்கின்றன. ஆனால், பல்வேறு காரணங்களுக்காக, அவை அமுக்கப்படுகின்றன, மறைக்கப் படுகின்றன.
கால்சென்டர் மூலம் முதியோர் இல்ல மோசடிகள்: மேன்மேலும் பணம் சம்பாதிப்பது எப்படி என்ற முறையில் தான் கால் சென்டர் வைத்துக் கொண்டு செய்யும் மோசடியும் இதில் சேர்ந்து உள்ளது. இருக்கின்ற ஆதரவு இல்லங்களில் நன்கொடை கொடுப்பவர்களின் விலாசம் செல்போன் நம்பரை எடுத்துக் கொண்டு, கால் சென்டர்கள் அமைத்து, அவற்ரிலிருந்து, அவர்களுக்கு அடிக்கடி தொடர்பு கொண்டு நன்கொடை கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அவர்களும் ஒரு முறை செய்வது என்பது சாதாரண நிலையாக தான் இருக்கின்றது. ஆனால், மேன்மேலும் அவர்கள் தொந்தரவு செய்யப்படும்போது, அவர்களுக்கு ஒரு சந்தேகம் வருகிறது. அந்நிலையில் தான், அவர்கள் பணத்தை கொடுத்து, பிறகு நேரில் சென்று பார்க்கலாம், என்று சென்று பார்த்தால் அத்தகைய நிறுவனமே இல்லாதது கண்டு திகைக்கின்றனர், அப்பொழுது போலீஸிடம் புகார் கொடுக்கின்றனர். பிறகு விசாரணையில் உண்மை வெளிவருகிறது.
2024ல் பெரம்பூரில் தெரசா பெயரில் போலி இல்லம்: ஒரு நாளைக்கு குறைந்தது 100 பேரிடம் பேச வேண்டும் என டார்கெட் கொடுத்து அந்த பெண்களை வேலைக்கு அமர்த்துகிறார்கள். மாதம் ரூ.8,000 முதல் 15000 வரை சம்பளம் அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. மேலும் அவ்வாறு அந்த பெண்கள் பேசி அதன் மூலம் பணம் கிடைத்து விட்டால், அதற்கும் கூடுதல் கமிஷன் கொடுக்கப்படுகிறது. இவ்வாறு டார்கெட் அமைத்து பொதுமக்களை இவர்கள் ஏமாற்றி வருகின்றனர் அவ்வாறு வாங்கப்படும் பணம் உண்மையிலேயே முதியோர் இல்லங்கள் கருணை இல்லங்களுக்கு செலவிடப்படுகிறது என்று பார்த்தால், கண்டிப்பாக கிடையாது. குறிப்பிட்ட அட்ரெஸ் வைத்திருக்கும் நபர்கள் சொகுசு பங்களா, கார், வெளிநாட்டு சுற்றுலா என்று ராஜபோகம் வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். இது அறியாத அப்பாவி பொதுமக்கள் ஏழைகளுக்காக பணம் கேட்கிறார்கள் என்று நினைத்து தங்களால் முடிந்த உதவிதைகளை செய்கின்றனர். பணக்காரர்களிடம் பணத்தைப் பெற்று அங்கு இருப்பவர்கள் அவர்களுக்காக வசூல் செய்கின்றனர். அந்த வகையில் சமீபத்தில் பெரம்பூரைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தை போலீசார் ஆய்வு செய்தபோது கார்ப்பரேட் கம்பெனி போல அந்த நிறுவனம் இயங்கி வந்தது தெரியவந்துள்ளது. பிறகு ஏமாந்தவர் கொடுத்த புகாரில் அங்கு சென்று சோதனை மேற்கொள்ளப்பட்ட போது அங்கு :மதர் தெரசா ஓல்ட் ஏஜ் ஹோம்” என்று ஒருவர் நடத்துவதாக தெரிந்தது. அதன் தலைவர் தலைமறைவாகி விட்டதால்,போலீசார் தேடி வருகின்றனர்.
[1] மாலைமலர், போலிகால்சென்டர்நடத்திலட்சக்கணக்கில்பணம்சுருட்டல்– மோசடிமன்னன்உள்பட 12 பேர்கைது, By மாலை மலர், 30 செப்டம்பர் 2020 7:57 AM (Updated: 30 செப்டம்பர்).