Archive for the ‘விபச்சாரம்’ Category

ஜாபர் சாதிக் போதை மருந்து கடத்தலில் மாட்டிக் கொண்டது–சகாக்கள் கைதானது, தமிழகம் எதிர்க்க வேண்டிய முக்கியமான குற்றம் (3)

மார்ச் 3, 2024

ஜாபர் சாதிக் போதை மருந்து கடத்தலில் மாட்டிக் கொண்டது சகாக்கள் கைதானது, தமிழகம் எதிர்க்க வேண்டிய முக்கியமான குற்றம் (3)

ஜாபர் சாதிக் குறித்து செய்தி சேகரிக்க சென்ற சேனல் ரிப்போர்ட்டர் கொடூர தாக்குதல்.. பிடிபட்ட கட்சி நிர்வாகி:. போதை பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவான ஜாபர் சாதிக் குறித்து, செய்தி சேகரிக்க சென்ற தனியார் செய்தி தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் தாக்கப்பட்ட விவகாரத்தில், ஒருவரை போலீசார் கைது செய்தனர். இதில், திமுக நிர்வாகிகளான கலைச்செல்வன் மற்றும் பச்சையம்மாள் ஆகியோர் தனியார் செய்தி தொலைக்காட்சி ஒளிப்பதிவாளரை தாக்கி, அறைக்குள் அடைத்து கொடுமை படுத்தியதாக கூறப்படுகிறது[1]. புகாரின் அடிப்படையில் இது குறித்து விசாரணை நடத்தி வந்த போலீசார், ஆபாசமாக பேசுதல், சிறை வைத்து காயம் விளைவித்தல் என இருவர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்த நிலையில், கலைச்செல்வனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்[2]. ஊடகத்தினர் மீது தாக்குதல், ஊடகத்தின் குரல்வளை நெறிப்பு, கருத்து சுதந்திரம் பறிபோதல் என்றெல்லாம் போன்ற பேச்சும் இல்லை, விவாதமும் இல்லை. அரசியல் கூட்டணி பற்றிதான் தினம்-தினம் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

வங்கி கணக்குகள் முடக்கம்: பொதுவாக இத்தகையோரிடம் பலவித பெயர்களுடன், வங்கிக் கணக்குகள் பலவித காரியங்களுக்கு உபயோகமாக, செயல்படுத்த இருக்கும். வீட்டில் யாருமில்லாததாலும், விவரங்களை சொல்வதற்கும் ஆட்கள் இல்லாததாலும், இருக்கின்ற ஆதாரங்களை வைத்து, நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஆகிறது. அதிகாரிகள், போலீஸார் முதலியோருடன் ஒத்துழைப்புக் கொடுக்காமல் சதாய்த்து வருவதும் தெரிந்தது. மேலும், காலம் தாழ்த்தினால், வங்கிகளில் இருக்கும் பணமும் எடுக்கப் பட்டு, வேறு விவகாரங்களுக்கு உபயோகப் படும். ஜாபர் சாதிக் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் நிலம் மற்றும் வங்கி கணக்குகள் தொடர்புடைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன[3]. இந்த நிலையில், அவர் தொடர்புடைய 8 வங்கி கணக்குகள் இருப்பதும் தெரிந்தது[4]. இதனால், அவற்றை முடக்க தீர்மானம் எடுக்கப் பட்டது[5]. இப்பொழுது, கணக்குகளை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் முடக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது[6].

திரையுலக நிழல் தாதா[7]: ஒரு கட்டத்தில், தொழில் ரீதியாக சிலருடன் பிரச்னை உருவாகி, கடும் நெருக்கடி ஏற்பட்டது. வழக்குகளை எதிர்கொண்ட அவரும், அவரது சகோதரரும் அவற்றில் இருந்து விடுபட்டு, கொஞ்ச நாட்கள் அமைதியாக இருந்தனர். பின், சென்னை பர்மா பஜார் தொடர்பு ஏற்பட, அங்கிருந்தபடியே வெளிநாட்டு பொருட்களை இறக்குமதி செய்து வியாபாரத்தில் ஈடுபட்டனர். கடந்த, 2010 வரை இப்படி சென்று கொண்டிருந்த ஜாபர் சாதிக், அதே பர்மா பஜார் தொடர்பை பயன்படுத்தி, நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான, ஜக்குபாய் படத்தை, திருட்டு வி.சி.டி.,யில் தயாரித்து புழக்கத்தில் விட்டார். இது தொடர்பான பிரச்னையில், ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது, அவருக்கு பின்புலமாக இருந்து உதவியது, தற்போது திரையுலகில் இருக்கும் பிரபலமான இயக்குனர் ஒருவர் தான். இதையடுத்து, ஜாபர் சாதிக்கும், அவரின் சகோதரரும் வெளிநாடுகளில் இருந்து சட்ட அனுமதி பெறாத பொருட்களை எடுத்து வரும் ‘குருவி’யாக செயல்பட துவங்கினர். அப்போது அவர்களுக்கு, சர்வதேச அளவில் போதைப்பொருள் கடத்தும் நபர்களோடு தொடர்பு ஏற்பட்டது. அந்த தொடர்புகளை வைத்து, தமிழகம் வாயிலாக போதைப்பொருட்களை கடத்தி வந்தனர். அந்த வருமானத்தை வைத்து, சினிமாக்காரர்கள், போலீஸ் அதிகாரிகள், அரசியல் முக்கியஸ்தர்கள் என, பல தமிழக வி.ஐ.பி.,க்களுடன் நெருக்கமாகி விட்டனர்.

ரேவ் பார்டிகள் நடத்தப் பட்டது[8]: பணத்தை தண்ணீராக வாரி இரைத்து பலரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த ஜாபர் சாதிக், ஒரு கட்டத்தில் கோயம்புத்துார் பகுதியில் பிரமாதமாக நடந்து வரும், ‘ரேவ் பார்ட்டி’ எனப்படும், போதைப்பொருள் பார்டியை சென்னையிலும் அறிமுகம் செய்து வைத்தார். கிழக்கு கடற்கரை சாலையில், பண்ணை வீடுகளில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட, ‘ரேவ் பார்ட்டி’கள் அடிக்கடி நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சிகளுக்கு, தமிழக அரசியல், சினிமா, தொழில் அதிபர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள் என, பலரும் சென்று வந்துள்ளனர். இதன் வாயிலாக, ஆளும் கட்சியில் மிக மிக முக்கியமான புள்ளிகளுடன் தன் செல்வாக்கை வளர்த்துக் கொண்டார். பல ஆளும் கட்சி பிரமுகர்கள், போலீஸ் உயரதிகாரிகளுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன. தன்னை தேடி மத்திய போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் வருவது தெரிந்ததும், ஜாபர் தலைமறைவாகி விட்டார். அவர் தலைமறைவாவதற்கு முன், யாருடன் போனில் பேசினார் என்ற தகவலை போலீசார் எடுத்துள்ளனர்.

செக்யூலரிஸ போர்வையில் அடிப்படைவாதம் முதலியன[9]: அதில், சினிமா பிரபலங்களும், போலீஸ் அதிகாரிகளும், ஆளும்கட்சி அரசியல் பிரமுகர்களும் தொடர்ச்சியாக, ஜாபரை தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்துள்ளது. குறிப்பாக, சென்னை கிரீன்வேஸ் சாலையில் இருந்து தொடர்ச்சியாக அழைப்புகள் வந்துள்ளதை, போலீசார் கண்டறிந்து உள்ளனர். ஜாபர் சாதிக், திரைப்பட இயக்குனர் அமீர் மற்றும் இஸ்லாமிய மார்க்க பேச்சாளர் அப்துல் பாஸித் புகாரி ஆகியோர் இணைந்து நடத்தி வரும், ‘லா கபே’ என்ற நிறுவனத்தை பற்றியும், பல தகவல்கள் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பல்வேறு மட்டங்களில், பணத்தை வாரிக்கொடுத்து, தன் செல்வாக்கை வளர்த்துக்கொண்ட ஜாபர் சாதிக், மார்க்க போதகர்களிடமும் அணுக்கமாக இருந்தார். அவர்கள் வாயிலாக ஆயுத போராட்ட குழுக்களுக்கும், பண உதவி செய்திருக்கிறார் என்ற கோணத்தில் என்.ஐ.ஏ., விசாரிப்பதாக கூறப்படுகிறது. விசாரணையில் முன்னேற்றம் ஏற்படும் போது, மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லோருமே எதிர்க்க வேண்டிய போதை மருந்து: இன்று உலகம் முழுவதும் போதை மருந்துக்கு எதிராக எல்லா நாடுகளுமே மிகக்கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. மிகப்பெரிய குற்றம் என்பதனால், பைலில் வெளி வரமுடியாத குற்றம், உடனடியாக கைது, சிறை என்று கடினமான நிலைமை இதுதான் உலகமெங்கும் காணப்படுகிறது. ஏனெனில் இது மனிதனுடைய வாழ்க்கையை சீரழித்து, குடும்பங்களை சமூகங்களையும் சீரழித்து, இறுதியில் ஒட்டுமொத்த மனித இனத்தையே பாதிக்கின்ற ஒரு மிகப்பெரிய நோயாக அமைகிறது. கொரோனாவை பார்த்த பிறகு, அதைவிட இது மிகக் கொடுமையான நோய் என்று தோன்றுகிறது ஆகவே நிச்சயமாக எந்த சமூகமும் நாடும் இதனை எதிர்க்கும் என்பது நன்றாகவே புரிகிறது. ஆகவே, இத்தகைய காரியங்கள் தமிழகத்தில் நடப்பது என்பது மிகவும் வருத்தமான விஷயமாகும். ஆகவே எப்படியாவது இத்தகையை குற்றங்கள் ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட வேண்டும்

© வேதபிரகாஷ்

03-03-2024


[1] தினத்தந்தி, ஜாபர் சாதிக் குறித்து செய்தி சேகரிக்க சென்ற சேனல் ரிப்போர்ட்டர் மீது கொடூர தாக்குதல்.. பிடிபட்ட.., Thanthi TV,  Uploaded On 01.03.2024

[2] https://www.youtube.com/watch?v=vAAcb1uO5SE

[3] குமுதம், ஜாஃபர் சாதிக் வங்கி கணக்குள் முடக்கம்போதைப் பொருள் தடுப்பு பிரிவினரின் அடுத்த ஸ்கெச், Mar 2, 2024 – 17:13

[4] https://kumudam.com/Zafar-Sadiq-Bank-Account-Freeze-Next-Sketch-of-Narcotics-Squad

[5] தமிழ்.இந்து, போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் ஜாபர் சாதிக்கின் 8 வங்கி கணக்குகள் முடக்கம், செய்திப்பிரிவு, Published : 03 Mar 2024 05:38 AM; Last Updated : 03 Mar 2024 05:38 AM.

[6] https://www.hindutamil.in/news/tamilnadu/1209795-jafar-sadiq-8-bank-accounts-frozen.html?frm=rss_more_article

[7] தினமலர், குருவி முதல்ரேவ் பார்ட்டிவரைஜாபர் சாதிக் சேட்டைகள் ஏராளம், Added : மார்ச் 03, 2024 02:30…; https://www.dinamalar.com/news_detail.asp?id=3566085

[8] தினமலர், குருவி முதல்ரேவ் பார்ட்டிவரைஜாபர் சாதிக் சேட்டைகள் ஏராளம், Added : மார்ச் 03, 2024 02:30…; https://www.dinamalar.com/news_detail.asp?id=3566085

[9] தினமலர், குருவி முதல்ரேவ் பார்ட்டிவரைஜாபர் சாதிக் சேட்டைகள் ஏராளம், Added : மார்ச் 03, 2024 02:30…; https://www.dinamalar.com/news_detail.asp?id=3566085

திராவிட மேடைப் பேச்சாளர்களின் நாரசார அநாகரீக வார்த்தைப் பிரயோகம், பெண்மையைத் தூற்றும் போக்கு, மரத்துப் போன அல்லது சொரணையற்ற வசனங்கள் ஏற்றுக் கொள்ளப் படும் விதம்!

ஒக்ரோபர் 28, 2022

திராவிட மேடைப் பேச்சாளர்களின் நாரசார அநாகரீக வார்த்தைப் பிரயோகம், பெண்மையைத் தூற்றும் போக்கு, மரத்துப் போன அல்லது சொரணையற்ற வசனங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் விதம்!

திராவிட மேடைகளில், திராவிட பாரம்பரியங்களில் இப்பேச்சுகள் எல்லாம் சகஜமப்பா தான்: திமுக மேடைப் பேச்சாளிகள் 1960களிலிருந்து, இப்பொழுது வரை ஆபாசமாக, கொச்சையாக, மோசமாக பேசிவருவது ஒன்றும் புதியதல்ல. இரட்டை அர்த்தங்களில், பொருட்களில், சைகைகளில் பேசுவது-பாடுவதும் திராவிட மேடைகளில் சகஜமானதே. கவிதை நடையில், யதுகை-மோனைகளுடன், சில நேரங்களில் பாடிக் கொண்டும், ஆடிக் கொண்டும் கூட அத்தகைய பேச்சுகளைப் பேசுவது வழக்கமே. பெரியார் முதல் அண்ணன் வரை, அண்ணா தொடர்ந்து தம்பி வரை, அறிஞர் முதல் கலைஞர் வரை இதெல்லாம் சகஜமப்பா என்று தான் ஓடிக் கொண்டிருக்கின்றன. இப்பொழுது இந்த சாதிக உருவாகிருப்பதில் என்ற கழக சாதனையும் குறைந்து வி,டப் போவதில்லை. பிறகு, கொஞ்சம் நாகரிகம் கருதி, குறைத்துக் கொண்டாலும், வழக்கமான வார்த்தைகள் வெளிவந்து விடும். இப்பொழுது இதையெல்லாம் 60-70 வயதானவர்களுக்குத் தான் தெரியும். மற்றவர்கள் மறந்திருப்பார்கள்.

அநாகரிகமான, ஒழுங்கீன பேச்சாளர்கள் திமுகவில் உருவாகுவது எப்படி?: திமுக நிர்வாகி ஒருவர் பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதற்கு குஷ்பு  கண்டனம் தெரிவித்திருந்தார்[1].  இந்நிலையில், இச்சம்பவத்திற்கு திமுக துணை பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி வருத்தம் தெரிவித்துள்ளார்[2]. திமுகவை சேர்ந்த நிர்வாகி ஒருவர் –  பிரபல பேச்சாளரான சைதை சாதிக் பொதுமேடையில் பெண்கள் குறித்து பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது[3].  விமர்சனங்களும் எழுந்துள்ளன[4]. உண்மையில் திராவிட மாடலில், இந்த திராவிடியன் ஸ்டாக்குகள் மாறிவிட்டன என்றால், இத்தகைய ஒழுன்கீனமான, கொச்சையான, தரமில்லாத பேச்சுகள் வராது, வந்திருக்காது. ஆனால், ஊக்குவிப்பதால் தான், தொடர்ந்து அத்தகைய பேச்சாளர்கள் வளர்ந்து . வளார்க்கப் பட்டு வருகிறார்கள்.

ஆர்.கே.நகரில் திமுக பொதுக்கூட்டமும், சாதிக் பேசியதும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2வது முறையாக திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவித்து சென்னை ஆர்.கே.நகரில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் உரையாற்றி திமுக பேச்சாளர் சைதை சாதிக், பாஜகவில் 4 நடிகைகள் இருக்கிறார்கள் என்று குஷ்பு, நமிதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோரை குறிப்பிட்டு ஒருமையில் பேசினார்[5]. “நாங்கள் வட சென்னையில் கட்சியை வளர்த்தோம். அந்த காலத்திலிருந்து அண்ணன் சீதாபதியில் இருந்து, டி.ஆர்.பாலுவிலிருந்து, பலராமனில் இருந்து, இளைய அருணா வரை திமுகவில் வளர்த்து உள்ளார். இன்னும் வளர்த்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், பாஜகவில் இருக்கும் தலைவர்களை பொறுத்தவரை 4 பேருமே ****.” என்று ஆங்கிலத்தில் தவறான அர்த்தம் தரும் வார்த்தையை பயன்படுத்தினார்[6].  “இந்தியா டுடே” இதை வெளியிட்டுள்ளது[7]. சமீபத்தில் பெண்ணை “ஐட்டம்” என்று ஒரு தொழிலதிபர் சொன்னதற்கு, மும்பை நீதிமன்றம் ஒன்றரை ஆண்டு சிறைத்தண்டனை அளித்துள்ளது. ஆனால், இங்கோ மேடையில் ஒருவர் பேசுகிறார், வீடியோ சுற்றில் உள்ளது. சட்டப் படி எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.

அமித் ஷா தலையில் மயிர் முளைத்தாலும் முளைக்கும், ஆனால், தமிழகத்தில்………: தொடர்ந்து ஆதிக், “குஷ்பு தாமரை மலர்ந்தே தீரும் என்று தலை மேல் கையை உயர்த்தி சொல்கிறார்.” என்று ஒருமையில் பேசிய சாதிக், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தலைமுடி பற்றியும், “அமித் ஷா தலையில் மயிர் முளைத்தாலும் முளைக்கும், ஆனால், தமிழகத்தில்……….,” என விமர்சித்து பேசியுள்ளார். இதனை தொடர்ந்து குஷ்பு திமுகவில் இருக்கும்போது அவரை வைத்து இளைய அருணா கூட்டம் கூட்டியதை இரட்டை அர்த்தத்தில் சைதை சாதிக் பேச அங்கு சிரிப்பலை எழுந்தது. சுதாரித்துக்கொண்ட அவர் நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை, வம்பில் மாட்டிவிடாதீர்கள் என்று கூறி அங்கிருந்தவர்களை பார்த்து சிரித்தார். அக்டோபர் 4ஆம் தேதி, 2022 அன்று, திமுக கட்சிக் கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வார்த்தைகள் அல்லது செயலில் ஈடுபடும் கட்சித் தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருந்தார்[8]. இது ராஜா முதல் சாதிக் வரை அனைவருக்கும் பொறுந்தும் என திமுகவினருக்குத் தெரிந்திருக்கும்[9]..

குஷ்பு எதிர்ப்புத் தெரிவித்தது: இந்நிலையில், நடிகை குஷ்பு இது தொடர்பாக தனது எதிர்ப்பை பதிவு செய்தார்[10]. ட்விட்டரில் அவர், ஆண்கள் பெண்களை துஷ்பிரயோகம் செய்தால், அது அவர்கள் வளர்த்த விதமான வளர்ப்பையும், அவர்கள் வளர்ந்த நச்சு சூழலையும் காட்டுகிறது[11]. இந்த ஆண்கள் ஒரு பெண்ணின் கருப்பையை அவமதிக்கிறார்கள்[12]. அத்தகைய ஆண்கள் தங்களை #கலைஞரின் பின்பற்றுபவர்கள் என்று அழைக்கிறார்கள்[13]. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையின் கீழ் இதுதான் புதிய திராவிடமா” என்று கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், கனிமொழியையும் அவர் டேக் செய்திருந்தார். டுவிட்டரில் இது பற்றி நூற்றுக்கணக்கில் கருத்துகள் பதிவாகின. பொதுவாக அவை திமுகவினரை விமர்சித்தன.

கனிமொழி மன்னிப்புக் கேட்டது: இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மன்னிப்பு கேட்டுள்ள கனிமொழி, ‘ஒரு பெண்ணாகவும், மனிதனாகவும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். யார் செய்தாலும், சொல்லப்பட்ட இடம் அல்லது அவர்கள் கடைபிடிக்கும் கட்சி எதுவாக இருந்தாலும் இதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. திமுக இதை பொறுத்துக்கொள்ளாது. எனது தலைவர் ஸ்டாலினின் காரணமாக இச்சம்பவத்திற்கு என்னால் வெளிப்படையாக மன்னிப்புக் கோர முடியும்’ என பதிவிட்டுள்ளார். இந்நிலையில்,  வருத்தம் தெரிவித்த கனிமொழிக்கு குஷ்பூ நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், மிக்க நன்றி கனி. உங்கள் நிலைப்பாட்டையும் ஆதரவையும் உண்மையிலேயே பாராட்டுகிறேன். ஆனால் நீங்கள்  பெண்களின் கண்ணியம் மற்றும் சுயமரியாதைக்காக எப்போதும் துணை நிற்கும் ஒருவராக இருந்திருக்கிறீர்கள்” என பாராட்டியுள்ளார்.

திராவிட மேடைப் பேச்சாளர்களின் நாரசார அநாகரீக வார்த்தைப் பிரயோகம், பெண்மையைத் தூற்றும் போக்கு, மரத்துப் போன அல்லது சொரணையற்ற வசனங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் விதம்: இதை மனோதத்துவ ரீதியில் அலசினால், தொடர்ந்து ஒரு செயலைச் செய்து கொண்டிருந்தால், அது கெட்டதாக இருந்தாலும், யாரும் தடுக்காமல், கண்டிக்காமல் இருந்தால், அச்செயல் ஏற்றுக் கொள்ளப் படும் செயலாகி விடும்[14]. உதாரணத்திற்கு, பேரூந்துகளில் படிகட்டுகளில் பிரயாணம் செய்வது போன்றவை. அதே போல, பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலை மாணவர்களே, கெட்ட வார்த்தைகளை சகஜமாக உபயோகப் படுத்தி வருகிறார்கள்.  மாணவிகளும், பெண்களும் கூட அவ்வாறே பேசி வருவதை பார்க்கலாம். ஒரு நிலையில் அது “புதிய நாகரிக” அடையாளமாகக் கூட தகவமைக்கப் படுகிறது. ஆனால், நிச்சயமாக அவை சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப் பட்டவையோ, அங்கீகரிக்கப் பட்டவையோ கிடையாது. “மாப் மென்டாலிடி” போன்ற கூட்டமாக சேரும் போது, அத்தகைய மீறல்கள் ஏற்படுகின்றன. இவர்களே பல நேரங்களில், நிலைகளில் இரட்டை வேடம் போடுவதை கவனிக்கலாம்.

திராவிட பாரம்பரிய கெட்ட வார்த்தை பேச்சுகள்: ஆனால், திராவிடக் கட்சி மேடைப் பேச்சு பாரம்பரியத்தில், அத்தகைய அசிங்கமான-ஆபாசப் பேச்சுகள் கடந்த ஒரு நூற்றாண்டாக சாதாரணமாகி விட்டது[15]. சில கெட்ட வார்த்தைகள் பிரயோகிப்பாதை ரசிக்கவும் செய்கின்றனர். அதனால், அவை ஊக்குவிக்கப் பட்டு, அத்தகைய பேச்சாளர்கள் தயார் செய்யப் படுகிறார்கள். அதனால், மரத்துப் போன நிலை அதாவது, ஏற்றுக் கொண்ட நிலையில் அங்கீகாரம் கிடைத்ததாகி விடுகிறது. திராவிட கழகத்தினர் பேசும் பொழுது,பெண்கள் அங்கு நிற்கக் கூட முடியாமல், காதுகளை ஒப்பித்திக் கொண்டு ஓடிய நிலையையும் தமிழகத்தில், ஏன் சென்னையிலேயே பலர் பார்த்திருக்ககலாம். இப்பொழுது, விழிப்புணர்வு ஏர்பட்டுள்ளதால், பொது கூட்டங்களில் அத்தகைய நாரசாரத்தைக் குறைத்துக் கொன்டுள்ளார்கள். ஆகவே, இத்தகைய மனப்பாங்கு மாற வேண்டும். ஏனெனில், இதுவும் வார்த்தை தீவிரவாதம், பேச்சு பயங்கரவாதம் என்றாகி விடும். “தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு….,” என்பது தமிழர்களுக்கு, திராவிடர்களுக்கு,திராவிடத்துவவாதிகளுக்கு, திராவிட ஸ்டாக்கிஸ்டுகளுக்கு, திராவிட மாடல் பேச்சாளர்களுக்குத் தெரிந்திருக்கும்.

© வேதபிரகாஷ்

28-10-2022.


[1] தமிழ்.நியூஸ்.18, பெண்கள் குறித்து இழிவாக பேசிய திமுகவினர்குஷ்பூ முறையீடுமன்னிப்புக் கேட்ட கனிமொழி, Published by:Murugesh M, First published: October 27, 2022, 18:12 IST, LAST UPDATED : OCTOBER 27, 2022, 19:49 IST.

[2] https://tamil.news18.com/news/tamil-nadu/kanimozhi-apologies-to-bjp-kusboo-for-dmk-cadre-speech-826091.html

[3] தினத்தந்தி, குஷ்பு குறித்து திமுக நிர்வாகி ஆபாச பேச்சுமன்னிப்பு கேட்ட கனிமொழி எம்பி , By தந்தி டிவி 28 அக்டோபர் 2022 7:35 AM.

[4] https://www.thanthitv.com/latest-news/kanimozhi-apologize-kushboo-tweet-dmk-meeting-145059

[5] தமிழ்.ஒன்.இந்தியா, டபுள் மீனிங்”.. பாஜகவில் 4 நடிகைகள்.. திமுக பேச்சாளரால் குஷ்புவிடம் மன்னிப்பு கேட்ட கனிமொழி,  By Noorul Ahamed Jahaber Ali, Updated: Thursday, October 27, 2022, 22:31. IST.

[6] https://tamil.oneindia.com/news/chennai/kanimozhi-apologises-kushbu-for-dmk-executives-speech-482520.html

[7] While addressing a public meeting, Sadiq said, “All four leaders are items. Khushbu says that lotus will bloom in Tamil Nadu. I say that even hair will grow back in Amit Shah’s head, but lotus has no chance of blooming in Tamil Nadu.” He further said, “Do you all know how many times my brother Ilaya Aruna did Kushbu? I mean he had done meetings with her when she was in DMK. Nearly six times, he took Kushbu and had meetings in RA Puram.”

https://www.indiatoday.in/india/story/misinterpreted-says-dmk-leader-saidai-sadiq-apologises-derogatory-remarks-bjp-leader-khushbu-2290428-2022-10-28

[8] பிபிசி.தமிழ், குஷ்புவிடம் கனிமொழி கேட்ட மன்னிப்புதிமுக பிரமுகரின் சர்ச்சை பேச்சு விவகாரத்தில் நடந்தது என்ன?, 27 அக்டோபர் 2022.

[9] https://www.bbc.com/tamil/india-63416365

[10] தினமலர், குஷ்பு பற்றி தரக்குறைவாக பேச்சு: மன்னிப்பு கேட்டார் கனிமொழி, Added : அக் 28, 2022  07:37.

[11] https://www.dinamalar.com/news_detail.asp?id=3156293

[12] தமிழ்.ஏசியாநெட்.லைவ், ஆபாசமாக பேசிய திமுக பேச்சாளர்.. கண்டனம் தெரிவித்த குஷ்பு.. மன்னிப்பு கேட்ட கனிமொழி.. நடந்தது என்ன?, vinoth kumar, First Published Oct 28, 2022, 7:19 AM IST,

Last Updated Oct 28, 2022, 7:21 AM IST

[13] https://tamil.asianetnews.com/politics/dmk-cadre-controversy-speech-kanimozhi-apologies-to-bjp-kushboo-rkfx1u

[14]   திரைப் படங்களில் இத்தகைய ஒழிங்கீனங்கள் நாகரிகமாக அல்லது ஏதோ ஏற்றுக் கொள்ள்ப் பட்டவை போல காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதனை, மக்கள் ரசிக்கும் வரையில் சென்றடைந்து உள்ளன.

[15]  இது பெரியார் முதல் இக்காலம் வரையில் காணலாம்…….உடன் பிறவா சகோதரர்களே, ரத்தத்தின் ரத்தமே, போன்றவை உதாரணத்திற்கு சொல்லலாம்.

தெய்வத்தின் சொந்த தேசத்தில், அதிகம் எழுத்தறிவு கொண்ட மாநிலத்தில் நிர்வாண பூஜை, நரபலி முதலியன குரூர குற்றங்கள் எப்படி நடக்கின்றன – தீர்வு என்ன? (4)

ஒக்ரோபர் 15, 2022

தெய்வத்தின் சொந்த தேசத்தில், அதிகம் எழுத்தறிவு கொண்ட மாநிலத்தில் நிர்வாண பூஜை, நரபலி முதலியன குரூர குற்றங்கள் எப்படி நடக்கின்றன – தீர்வு என்ன? (4)

கேரள அரசு மாந்திரீக நரபலி நிபுணன் பைத்தியம் என்றது: அரசின் மெத்தனத்தால் தான் இத்தகைய குற்றங்கள் நடந்துள்ளன, என்று நீதிமன்றம் முதல் மற்ற பொறுப்புள்ளவர்கள் வெளிப்படையாக சொல்ல ஆரம்பித்துள்ளதால், ஆளும் மார்க்சீய அம்யூனிஸ்ட் ஆட்சி, இதனை திசைத் திருப்பி, அமுக்கி வாசிக்க முயல்கிறது. முக்கிய குற்றவாளி ஒரு பைத்தியம், மனோநல வியாதி கொண்டவன், என்றெல்லாம் சித்தரிக்கப் பட்டு வருகிறான். இறகு, அதே காரணத்திற்காக அவன் குற்றத்திலிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம். இதனால், அதே முறையில்[1], “உண்மையில் மனநிலை சரியில்லாதவர்களால் தான் இப்படி செய்ய முடியும். இது நவீன சமுதாயத்திற்கு சவாலாக உள்ளது. இதுபோன்ற தவறான எண்ணங்கள் மற்றும் மூடநம்பிக்கைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு, அனைத்திலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், இந்த தீமையை எதிர்த்துப் போராட வேண்டும்,” என்று முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது[2]. இவ்விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து கேரள மாநில காவல்துறை உத்தரவிட்டுள்ளது[3]. துணை ஆணையர் சசிதரன் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது[4].

கேரளாவும் ஆபாசப் படங்களும்: ஆபாசப் படம் / போர்ன் வீடியோ எடுப்பது, முதலியவை பல்லாண்டுகளாக கேரளாவில் நடந்து வருகின்றன என்று செய்திகள் மூலம் அறியப் படுகிறது. கேரள திரைப்படங்களே முன்பு 1960-70களில் பிரபலமாக இருந்தன. அத்தகைய காட்சிகள் வரும் என்று தியேட்டர்களுக்கு செல்லும் வழக்கமும் இருந்தது. பிறகு 1980களில் வீடியோ கேசட், சிடி என்று தொழிற்நுட்பமும் மாறி விட்டது. பிறகு இன்டெர்நெட் வந்ததிலிருந்து, செல்போன் போன்றவற்றால், தனிநபர் விருப்பங்களுக்கு ஏற்றபடி மாறின, மாறி விட்டன.  கேரளாவில் இதைப் பற்றிய செய்திகள் இன்றும் வரத்தான் செய்கிறது, சரிதா நாயர் விவகாரத்திலும் அப்பிரச்சினை உள்ளது. உதாரணத்திற்கு, இச்செய்தி கொடுக்கப் படுகிறது. கேரளாவில் 13 வயது சிறுமி ஒருவர், அவருடைய அண்ணனால் கர்ப்பமாகியுள்ளார். வயிற்றுவலி என சிகிச்சைக்காக மருத்துவமனை சென்றபோதுதான் 30 வார கர்ப்பமாக இருக்கிறார் என்பதே தெரியவந்துள்ளது[5]. இணையதளத்தில் ஆபாசப் படங்கள் எல்லா வயதினருக்கும் எளிதில் கிடைத்துவிடுகின்றன, இதனால், சமூக ஊடகங்கள் கட்டுப்படுத்தப் பட வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுருத்தியது.

கேரளாவில் சிறுவர், சிறுமியரின் ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பிய விவகாரம்: கேரளாவில் சிறுவர், சிறுமியரின் ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பிய 21 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்[6]. அவர்களிடம் இருந்து லேப்டாப்,  செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன[7]. கேரளாவில்  சமீப காலமாக வாட்ஸ்  அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் சிறுவர், சிறுமிகளின் ஆபாச   வீடியோக்கள் பரவி வருவதாக போலீசுக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இது   தொடர்பாக சர்வதேச  அளவிலும் புகார்கள் உள்ளன. சர்வதேச போலீசான   இன்டர்போலுக்கும் புகார்கள் வந்துள்ளன.இதையடுத்து சிறுவர், சிறுமியரின் ஆபாச வீடியோக்கள் வெளியிடுவதை தடுக்க இன்டர்போல் அழைப்பு  விடுத்துள்ளது. இதன்படி திருவனந்தபுரம்  சரக ஏடிஜிபி மனோஜ் ஆப்ரகாம்  தலைமையில் ‘பி-ஹண்ட்’ என்ற பெயரில்  ஒரு தனிப்படை  அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் கேரளா முழுவதும் 29 இடங்களில்  அதிரடி சோதனை நடத்தினர்.  இதில் சிறுவர், சிறுமியர் ஆபாச படங்களை பரப்பிய 21  பேர் கைது  செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்த லேப்டாப், செல்போன்கள், ஹார்ட்  டிஸ்க்,  யுஎஸ்பி டிரைவ் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. இதுகுறித்து ஏடிஜிபி   மனோஜ் ஆப்ரகாம் கூறியது: “சிறுவர், சிறுமியர் ஆபாச வீடியோ பரப்புகிறவர்களுக்கு 5 வருட சிறை தண்டனையும், 10 லட்சம் அபராதமும்  விதிக்கப்படும். பிஹண்ட் சோதனை மேலும் தீவிரப்படுத்தப்படும். கேரளா முழுவதும் 84 பேர் தீவிரமாக  கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். விரைவில்  மேலும் பலர் கைது  செய்யப்படுவார்கள். பல வாட்ஸ் அப், பேஸ்புக்  குரூப்புகள் கண்காணிக்கப்பட்டு  வருகின்றன,” இவ்வாறு  அவர் கூறினார்.

கேரள போர்ன், மாந்திரீகம், கொலை எல்லாம் திட்டமிட்டு நடக்கிறதா?: ஆபாசப் படங்கள் எடுக்க பெண்கள் தேவை, அதற்காக முறை தவறிய பெண்கள், அத்தகைய ஆண்களின் தொடர்புகளில் இருப்பார்கள். இது ஒரு “செக்சஸ்” என்பார்கள். அரசியல், சட்டம்-ஒழுங்கு அமூல் படுத்துகிறவர்களின் மறைமுக ஆதரவு என்றெல்லாம் இருந்து விட்டால், சாதாரண மக்கள் ஒன்றும் செய்ய முடியாது. பெரும்பாலான விவகாரங்கள், தெரியாமல், ரகசியமாகவே நடந்து கொன்டு இருக்கும். தினம் தினம் வேலை செய்து, வாழ்க்கை நடத்தும் மக்கள் இவற்றைப் பற்றி கவலைப் பட மாட்டார்கள், அதற்கு அவர்களுக்கு நேரமும் இல்லை, இருக்காது. ஆக, ஒருவேளை சம்பந்தப் பட்ட பெண்கள் ஏதோ காரணங்களுக்காக நச்சரித்துக் கொண்டே இருந்தால், ஆண்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு, எல்லைகளைக் கடக்கும் போது, தீர்த்துக் கட்டி விடலாம் என்ற முடிவுக்கும் வரலாம். அந்நிலையில், இத்தகைய பண ஆசை பிடித்த ஆட்கள் கிடைக்கும் போது, ஒரே கல்லால், இரு மாங்காய் அடிக்கும் விதத்தில், நரபலியும் கொடுத்து, பொஇரச்சினை செய்யும் பெண்ணையும் தீர்த்து கட்டுவார்களோ என்னமோ? இதெல்லாம் மற்றவர்களுக்கு தேவையில்லாத விசயங்கள். இருப்பினும், போலீஸார் அவ்வாறெல்லாம் கூட விசாரணை செய்யலாம். சாதாரண மக்கள் கடவுளை நம்பிக்கொண்டு, தெய்வ நம்பிக்கையுன், நிம்மதியாக வாழ்ந்தாலே போதும்.

தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டு வருபவனை சைக்கோ, மனநோயாளி, வக்கிரம் படித்தவன், அதனால் அப்படி செய்தான், செய்வான் என்று அமைதியாகி விடமுடியாது: அதிக படிப்பறிவு கொண்ட மாநிலம், முற்போக்கு எண்ணம் கொண்டவர்கள், மெத்தப் படித்தவர்கள், இந்திய அரசியலில் தொடர்ந்து தாக்கத்தை ஏர்படுத்தி வருகிறவர்கள், எல்லா துறைகளிலும், நிறுவனங்களிலும், இடங்களிலும் இருப்பவர்கள் என்றெல்லாம் இம்மாநிலத்தவர்கள் கருதப் பட்டு வருகிறார்கள். மதம், ஜாதி, சித்தாந்தம் போன்றவற்றால் வேறுபட்டிருந்தாலும், மலையாளத்தவர் என்று ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்று மற்ற மாநிலத்தவர்களால் அறியப் பட்டு வருகிறார்கள். அந்நிலையில், கேரளாவில் தொடர்ந்து இத்தகைய, குறிப்பாக பாலியல், செக்ஸ், காமம், கற்பழிப்பு, தகாத உறவுகள் என்று வக்கிரங்களாக, குற்றங்களாக, ஏன் கொலைகளாகக் கூட மாறி வருவதை பற்பல வழக்குகளில் தெரிந்து வருகிறது. அபயா கொலை, ஐஸ்கிரீம் பார்லர் செக்ஸ், மூலக்கல் பிஷப் கற்பழிப்பு என்று சமீபத்தைய விவகாரங்கள் அறியப் பட்டவையாக இருக்கின்றன. அந்த பட்டியலில் இதுவும் சேரலாம். கொஞ்சம் கொஞ்சமாக மறக்கப் படலாம். ஆனால், அத்தகைய சமூக சீரழிவுகள், வக்கிரங்கள், மனப்பாங்குகள் சட்டமீறல்கள் முறையாக ஆராயப் பட வேண்டியுள்ளது. தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டு வருபவனை சைக்கோ, மனநோயாளி, வக்கிரம் படித்தவன், அதனால் அப்படி செய்தான், செய்வான் என்று அமைதியாகி விடமுடியாது. கொலைகள் என்பது பெரிய குற்றம் தான். பல கொலைகள் செய்தால், குரூரமாக செய்தால், நோய் என்று வழக்குகளை மூடிவிட முடியாது.

© வேதபிரகாஷ்

14-10-2022.


[1] ஜீ.நியூஸ், கேரளா நரபலி: போலி சாமியார் முன் உடலுறவு! நரபலி கொடுக்க இதுதான் காரணமா?, Written by – Bhuvaneshwari P S | Edited by – Shiva Murugesan | Last Updated : Oct 12, 2022, 10:37 AM IST.

[2]  https://zeenews.india.com/tamil/india/sex-in-front-of-fake-preacher-this-reason-for-human-sacrifice-in-kerala-414483

[3] தினகரன், கேரளாவில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு..!!, 2022-10-13@ 10:46:16.

[4] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=806375

[5] ஹமிழ். ஏபிபி.லைவ், ஆபாசப்படம் ஈசியா கிடைக்குது.. சிறுமிகள் கருவுறுதல் குறித்த வழக்கில் கோர்ட் சொன்ன பல கருத்து!,By: ஜான் ஆகாஷ் | Updated at : 24 Jul 2022 01:49 PM (IST);  Published at : 24 Jul 2022 01:42 PM (IST)

https://tamil.abplive.com/news/india/teen-pregnancy-porn-spark-kerala-high-court-call-for-sex-ed-review-63331

[6] தினகரன், கேரளாவில் சிறுமிகள் ஆபாச வீடியோ பரப்பிய 21 பேர் அதிரடி கைது: லேப்டாப், செல்போன்கள் பறிமுதல், 2019-04-03@ 00:42:44

[7] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=485162

தெய்வத்தின் சொந்த தேசத்தில், அதிகம் எழுத்தறிவு கொண்ட மாநிலத்தில் நிர்வாண பூஜை,  நரபலி முதலிய குரூர குற்றங்கள் எப்படி நடந்தேறின? (3)

ஒக்ரோபர் 15, 2022

தெய்வத்தின் சொந்த தேசத்தில், அதிகம் எழுத்தறிவு கொண்ட மாநிலத்தில் நிர்வாண பூஜை,  நரபலி முதலிய குரூர குற்றங்கள் எப்படி நடந்தேறின? (3)

ஷபி ஒத்துழைக்கவில்லை என்று போலீஸார் கூறுவது: கொச்சி நகர சட்டம் ஒழுங்கு பிரிவு துணை ஆணையர் சசிதரன் கூறுகையில், “ஆரம்பத்தில் தமது குற்றத்தை ஒப்புக் கொள்ளாதவராகவே ஷாஃபி காணப்பட்டார். எதையும் வெளிப்படுத்தாமல் இருந்தார். கடைசியில் அவரை ஒப்புக் கொள்ள வைக்க அறிவியல்பூர்வ விசாரணை முறைகளையும் பிற நுட்பங்களையும் பயன்படுத்த வேண்டியிருந்தது. கடவந்திராவிற்கும் திருவல்லாவிற்கும் இடையே உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் காணாமல் போன பத்மாவுடன் ஷாஃபி ஒரு வாகனத்தில் நுழைந்த மங்கலான காட்சி மூலம் அவர்களின் அடையாளத்தை மீட்பது சவாலாக இருந்தது. அதன் பிறகே இந்த வழக்கில் துப்பு துலங்கியது,” என்று தெரிவித்தார். இந்த வழக்கில் கண்காணிப்பு கேமரா பதிவு மூலமாகவே துப்புதுலங்கியது[1]. கொலை செய்யப்பட்ட பெண்களில் ஒருவரை முகமது சஃபி தனது காரில் ஏற்றுவது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த ஆதாரத்தை வைத்து காவல் துறையினா் மேற்கொண்ட தொடா் விசாரணையில், இந்த கொலை சம்பவத்தின் முழு விவரமும் வெளிவந்தன.

கடந்த சில மாதங்களில் 12 பெண்கள் காணாமல் போனது கேரள போலீசார் விசாரணை:  “பதினோரம் வகுப்பு தேர்ச்சி பெறாத அவர் தமது 16-17ஆவது வயதில் வீட்டை விட்டு ஓடி வந்து விட்டார். மாநிலத்தின் கிட்டத்தட்ட எல்லா மாநிலங்களிலும் அவர் சுற்றியிருக்கிறார். கிடைத்த வேலைகளை செய்திருக்கிறார். கடைசியில் தமது நரபலி திட்டத்தை நிறைவேற்றும் நோக்கில் லாட்டரி சீட்டுகளை விற்கும் வெளி மாநில பெண்களை நோட்டம் பார்த்து அவர்களுக்கு புதிய வேலை ஆசை காட்சி தமது சதியை செயல்படுத்தியிருக்கிறார்,” என்று புலனாய்வாளர்கள் நம்மிடையே தெரிவித்தனர். இதற்கிடையே, ஷாஃபியிடமிருந்து தப்பிய பெண் என தன்னை அழைத்துக் கொள்ளும் ஒருவர், தன்னுடைய அடையாளத்தை மறைத்துக் கொண்டு அளித்த பேட்டியில், “ஷாஃபி மீது கொச்சி களமசேரி காவல் நிலையத்தில் ஒரு பெண்ணை மிதித்துக்கொன்றதாக வழக்கு உள்ளது. நான் அதிர்ஷ்டவசமாக அவரிடம் இருந்து தப்பித்தேன்,” என்று தெரிவித்தார்.  மேலும் பல பெண்கள் சபியிடம் சிக்கியிருக்கலாம், நிறைய பெண்கள் காணாமல் போயிருக்கிறார்கள் போன்ற செய்திகளும் வெளிவருகின்றன. கடந்த சில மாதங்களில் 12 பெண்கள் காணாமல் போனது கேரள போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது[2].  எனவே அந்த பெண்களும் நரபலிக்கு கொடுக்கப்பட்டிருக்கலாமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்[3].

தமிழகத்தைச் சேர்ந்தவர் உட்பட இரண்டு பெண்களை நரபலி கொடுத்த கேரள தம்பதி: தமிழகத்தைச் சேர்ந்தவர் உட்பட இரண்டு பெண்களை நரபலி கொடுத்த கேரள தம்பதி உட்பட மூன்று பேரை, 12 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு கொச்சி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இவர்களிடம் நடத்திய முதல்கட்ட விசாரணையில், விரைவில் பணக்காரராகும் ஆசையில், இந்த தம்பதி நரபலி கொடுத்ததும், அதற்கான ஆலோசனை வழங்கியதில் இருந்து நரபலி கொடுக்க இரண்டு பெண்களை அழைத்து வந்தது என, பல வகையில் முகமது ஷபி உதவியுள்ளதும் தெரியவந்துள்ளது. தமிழகத்தின் தர்மபுரியைச் சேர்ந்த பத்மா, கேரள மாநிலம் காலடியைச் சேர்ந்த ரோஸ்லின் ஆகியோர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதுடன், அவர்களுடைய உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டுஉள்ளது விசாரணையில் தெரியவந்தது. இதுவரை 61 பாக்கெட்டுகளையில் மனித உடல் பாகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஒரே குழியில் இருந்து 56 பாக்கெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. மற்றொரு குழியில் எலும்பு உள்ளிட்ட 5 பாகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அனைத்தும் டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  நிர்வாண பூஜை செய்ததுடன், கொல்லப்பட்ட பெண்களின் உடல் பாகங்களை, தம்பதி சமைத்து சாப்பிட்டதும் தெரியவந்து உள்ளது[4]. நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியம் கிடைக்கும் என கூறி முகமது ஷாஃபி இதை செய்ய வைத்துள்ளார்[5]. அந்த மாமிசத்தில் சிறிது சாப்பிட வேண்டும்” என முகமது ஷாஃபி கூறியுள்ளார். பகவல் சிங்கும், லைலாவும் முதலில் மறுத்துள்ளனர்.

ஹீலிங் செய்யும் மருத்துவருக்கு, மலையாள மாந்திரீகர் உதவ முன்வந்தது: முன்னதாக பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டது குறித்து கொச்சி போலீஸ் கமிஷனர் சி.எச்.நாகராஜு கூறியது: கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் பகவால் சிங். இவரிடம் வரும் நோயாளிகளின் நோய்களை குணமாக்கி வந்தார். ஆனால், இவரது “பணக்கார பேராசை” நோயை நீக்க ஒரு அலையாள மாந்திரீகன் தான் வர வேண்டிய நிலை போலும். இவரது மனைவி லைலா. ஹீலிங் எனப்படும் இந்தத் தொழிலை இவர்கள் பரம்பரை, பரம்பரையாக செய்து வருகின்றனர். இந்நிலையில், பகவால் சிங்குக்கு பணம் செழிப்பதற்காகவும், வளத்தைப் பெருக்குவதற்காகவும் 2 பெண்களை அழைத்து வந்து நரபலி கொடுத்த விவரம் எங்களுக்குத் தெரியவந்தது. இதற்கு உடந்தையாக இருந்த பெரும்பாவூர் ஷபி (எ) ரஷீத் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீதிமன்றம் அதிருப்தியை வெளிப்படுத்திய நிலை: கைது செய்யப்பட்ட மூவரும், கொச்சி நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தப்பட்டனர்[6]. இது குறித்து அம்மாநில உயர் நீதிமன்றம் அதிர்ச்சியையும், அவநம்பிக்கையையும் வெளிப்படுத்தியிருக்கிறது[7]. கேரள உயர் நீதிமன்ற நீதிபதி தேவன் ராமச்சந்திரன் செவ்வாய்க்கிழமை 11-10-2022 அன்று வேறு ஒரு வழக்கை விசாரித்துக் கொண்டிருக்கும்போது நரபலி குறித்த தனது அதிர்ச்சியையும், அதிருப்தியையும் வெளிப்படுத்தினார். இதுகுறித்து நீதிபதி ராமசந்திரன் கூறுகையில்[8], “அரசின் கவனக்குறைவையும், மக்களின் விசித்திரமான நடவடிக்கைகளையும் நீதிமன்றம் கவனித்து வருகிறது. கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்டிருக்கிறது என்று கேள்விப்படும் செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது என்பது மனித பகுத்தறிவை மீறிய செயல். இந்தச் செயல்களால் கேரளா எதை நோக்கிச் செல்கிறது என்ற ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது,” என்று தெரிவித்தார்[9]. அவர்களை, 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில், அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீஸ் தரப்பில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது[10]. இதை ஏற்ற நீதிமன்றம், 12-10-2022 புதன்கிழமை 12 நாள்  அக்டோபர் 26ஆம் தேதி வரை போலீஸ் காவலுக்கு அனுமதி அளித்துள்ளது[11].

© வேதபிரகாஷ்

14-10-2022.


[1] தினத்தந்தி.டிவி, நாட்டையே உலுக்கிய கேரள நரபலி சம்பவம்.. கேரள போலீஸ் அதிரடி, By தந்தி டிவி, அக்டோபர் 2022 11:08 AM

[2] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், கேரளா நரபலி கொடூரம்..! கொலையாளிகள் போலீசில் சிக்கியது எப்படி..? மேலும் 12 பெண்களில் நிலை என்ன..?, Ajmal Khan, First Published Oct 13, 2022, 10:44 AM IST; Last Updated Oct 13, 2022, 10:44 AM IST

[3] https://tamil.asianetnews.com/crime/police-identify-killers-involved-in-human-sacrifice-in-kerala-through-cctv-rjoejp

[4] நியூஸ்.18.தமிழ், நரபலி கொடுத்த உடலை சாப்பிட்ட தம்பதி.. கேரளாவை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்நடந்தது என்ன?, NEWS18 TAMIL, LAST UPDATED : OCTOBER 12, 2022, 11:53 IST.

[5] https://tamil.news18.com/news/national/kerala-2-lady-human-sacrifice-lot-of-startling-information-was-revealed-in-investigation-817644.html

[6] மாலைமலர், கேரளா நரபலி வழக்குகைது செய்யப்பட்ட 3 பேரையும் 12 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி, By மாலை மலர்13 அக்டோபர் 2022 4:29 PM

[7] https://www.maalaimalar.com/news/national/kerala-human-sacrifice-case-all-3-accused-sent-to-12-day-police-custody-523933

[8] தமிழ்.இந்து, கேரளா எதை நோக்கி செல்கிறது?” – 2 பெண்கள் நரபலி சம்பவத்தில் உயர் நீதிமன்றம் அதிர்ச்சி, செய்திப்பிரிவு, Published : 12 Oct 2022 01:42 PM; Last Updated : 12 Oct 2022 01:42 PM

[9] https://www.hindutamil.in/news/india/881847-kerala-human-sacrifice-high-court-expresses-its-shock-disbelief-1.html

[10] தினமலர், கேரள நரபலி கொடூரர்களுக்கு 1 2 நாள் போலீஸ்சாட்டை!’, Added : அக் 14, 2022  02:10

[11] https://www.dinamalar.com/news_detail.asp?id=3145306

தெய்வத்தின் சொந்த தேசத்தில், அதிகம் எழுத்தறிவு கொண்ட மாநிலத்தில் நிர்வாண பூஜை, நரபலி முதலியன – செக்யூலரிஸத்தில் புதிய வடிவங்கள் கொள்வது (2)

ஒக்ரோபர் 15, 2022

தெய்வத்தின் சொந்த தேசத்தில், அதிகம் எழுத்தறிவு கொண்ட மாநிலத்தில் நிர்வாண பூஜை, நரபலி முதலியனசெக்யூலரிஸத்தில் புதிய வடிவங்கள் கொள்வது (2)

ரோஸ்லியைக் கொன்று உடலை அறுத்து பூஜை செய்தது: பின்னர் அங்கிருந்து பகவல் சிங்கின் வீட்டுக்கு அழைத்துச் சென்று, இரவு நேரத்தில் நரபலி பூஜையை செய்துள்ளனர். கட்டிலில் கிடத்தி கைகளையும், கால்களையும் கட்டிப்போட்டு முதலில் கழுத்தை அறுத்துள்ளனர். பின்னர் உடலை சுமார் 22 துண்டுகளாக வெட்டியுள்ளனர். அப்பெண்ணின் கூக்குரல், அழுகுரல் எல்லாம் பக்கத்தில் இருப்பவர்களுக்குக் கேட்கவில்லையா போன்ற விவரங்களும் தெரியவில்லை. உடலை வைத்து சில பூஜைகள் செய்திருக்கின்றனர். பூஜை முடிந்த பிறகு வீட்டுக்கு வெளியே துணி துவைக்கும் கல் அமைந்திருக்கும் பகுதியில் குழிதோண்டி உடலைப் புதைத்து, அதன் மீது மஞ்சள் நட்டு வைத்திருக்கின்றனர். ஆனால், மந்திரத்தால். தந்திரத்தால், நிறம் மாறவில்லை, ஒன்று நடக்கவில்லை. முஹம்மது சபி எப்படி பணம் வரும் என்ற ரகசியமும் தெரியவில்லை. பகவல்சிங்-லைலா தம்பதி கோபித்துக் கொள்ள, முதல் பூஜையால் பலன் கிடைக்காததால், மற்றொரு நரபலி கொடுக்க வேண்டும் எனக் கூறி கடந்த மாதம் மீண்டும் ஒரு நரபலி கொடுக்க முடிவு செய்ய, அதற்கும் ஒப்புக் கொண்டனர்.

அடுத்த பலிகடாபத்மா: கடவந்தறா பகுதியில் லாட்டரி விற்பனை செய்துவந்த தருமபுரியைச் சேர்ந்த பத்மா (52) என்ற பெண்ணையும் பணம் கொடுப்பதாகக் கூறி திருவல்லாவுக்கு அழைத்துச் சென்று ரோஸ்லியை நரபலி கொடுத்தது போன்றே நரபலி கொடுத்துள்ளனர். அவரின் உடல்களையும் துண்டு துண்டாக வெட்டி வீட்டுக்கு வெளிப்பகுதியில் புதைத்துள்ளனர். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதால்,  இப்பொழுது, தமிழக ஊடகங்களில், இச்செய்தி உச்சத்திற்குச் சென்றுள்ளது. முதலில் முஹமது சபியின் பெயரை தமிழ் ஊடகங்கள் சொல்லவில்லை, அமுக்கி வாசித்தது, ஆனால், இப்பொழுது குறிப்பிட ஆரம்பித்து விட்டன என்பதையும் கவனிக்கலாம். ஆக, ஊடகங்கள் கூட “கேரள மாடல்,” “தமிழக மாடல்” என்றுதான் வேலை செய்கின்றன போலும். இருப்பினும், இரு மாநில முதல்வர்களும் இந்த செய்தியை மறந்து, இந்தி எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். இதைப் பற்றியெல்லாம் டிவியில் விவாட்தம் ஏற்பாடு செய்யவில்லை.

ஆகஸ்ட்செப்டம்பர் ஆதங்களில் தான் ரோஸ்லி முறையே பத்மா காணவில்லை என்று புகார் கொடுத்தது: ரோஸ்லியைக் காணவில்லை என கடந்த ஆகஸ்ட் மாதம் 17-ம் தேதி அவரின் மகள் மஞ்சு புகார் அளித்தார். அந்த விசாரணையில் பெரிய அளவில் துப்புத் துலங்கவில்லை. பத்மாவைக் காணவில்லை என அவரின் மகன் செல்வராஜ் கடந்த செப்டம்பர்  மாதம் 27-ம் தேதி புகார் அளித்தார். அவரின் செல்போனை ஆய்வு செய்தபோது அது திருவல்லா பகுதியில் கடைசியாகப் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. பின்னர் சிசிவிடிவி காட்சிகள் உள்ளிட்டவற்றை ஆய்வுசெய்து பத்மாவைக் கடத்திய முஹம்மது ஷாஃபி முதலில் கைதுசெய்யப்பட்டார். அவரிடம் விசாரித்ததில் பெண்கள் கொடூரமாக நரபலி கொடுக்கப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளியானது. அவர்களது உடலை அடையாளம் காணும்விதமாக டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்வதற்காகக் கோட்டயம் மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியில் அவர்களது உடல்கள் கொண்டு செல்லப்பட்டன. இது தொடர்பாக பகவல் சிங், 68, அவருடைய மனைவி லைலா, 58 மற்றும் மாந்த்ரீகத்தில் ஈடுபட்ட முகமது ஷபி, 52, ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முகமது சபி, மொஹம்மது ஷஃபி யார்?: முதலில் உடகங்கள் இவனது பெயரை அமுக்கி வாசித்தன, அதற்குள் உள்ளூர் நாளிதழ்கள் பகவல்சிங் சிபிஎம் நிர்வாகி என்றெல்லாம் குறிப்பிடப் பட்டவுடன், இவனது பெயர் பிரதானமாக குறிப்பிடப் பட்டது. முகமது ஷாஃபி / ரஷீத் மாந்திரீகராக – மலையாள மாந்தீரிகன் –  உள்ளூரில் அறியப்படுகிறார்[1] என்று பிபிசி மரியாதையுன் குறிப்பிடுகிறது. ஷபி, தன்னை மலையாள மாந்தீரிகன் போல் காட்டிக் கொண்டுள்ளார் என்கிறது இன்னொரு இணைதள நாளிதழ். வக்கிரபுத்தி கொண்ட சஃபி, தனது குற்றத்தில், ஆசை வார்த்தைக் கூறி மற்றவர்களை நம்ப வைத்து அவர்களையும் சேர்த்துக் கொண்டு, தனது குற்றத்துக்கு அவர்களையும் உடந்தையாக்கிவிடுவார். மிகவும் வஞ்சகமான குற்றவாளி, தனது திட்டத்தை மற்றவர்களின் துணையோடு செய்வது இவரது வழக்கம் என்றும் ஐஜிபி கூறியுள்ளார். இப்படி ஊடகங்கள் வர்ணிக்கின்றன. ஒரு முஸ்லிம் எப்படி கேரளாவில் இவ்வாறு மந்திரவாதியாக இருக்கிறான், தந்திரங்கள் செய்கிறான் என்றெல்லாம் விளக்கவில்லை. அதாவது, கேரளாவில் எல்லோரும் எல்லா வேலைகளையும் செய்யலாம் போலிருக்கிறது.

முகமது சபி / ரஷீத் என்ற கேரள மந்திரவாதி: பல பெயர்களில் உலா வரும் இவன் ஒரு தாதா போலத்தான் கருதப் பட்டு வருகிறான். இவன் பெரிய பணக்காரன் என்றும் தெரிகிறது. அவனிடத்தில் பேரூந்து, ஜீப், கார் என்று நான்கு வாகனங்களை வைத்திருக்கிறான். ஒரு ஓட்டலை நடத்தி வருகிறான். அங்கு தான் தனக்கு வேண்டியவர்கள் எல்லாம் வந்து செல்வது வழக்கம். ரோஸ்லி, பத்மா முதலியோர் இங்கு வழக்கமாக வரும் வாடிக்கையாளர்கள் என்றும் தெரிகிறது.  இவர்களிடம் தத்தம் தொழில்-வியாபார ரீதியில் தொடர்புகளும் இருந்து வருகின்றன. எர்ணாகுளத்தில், காந்திநகரில் இவனுக்கு வீடும் இருக்கிறது. போதாகுறைக்கு, ஊடகங்களின் செய்திகள் இவன் போதை மருந்து, விபச்சாரம், கற்பழிப்பு, திருட்டு முதலியவற்றிலும் ஈடு பட்டு வந்துள்ளான் என்றுள்ளது. ஆக, ஒரு சாதாராண ஆளால் இத்தனையும் செய்ய முடியாது.

கடந்த 15 ஆண்டுகளில் 10-க்கும் அதிகமான வழக்குகள் அவா் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன: ஷாஃபி மீது 2020இல் எர்ணாகுளம் புறநகர் மாவட்டத்தில் 75 வயது மூதாட்டியை கொடூரமாக தாக்கிக் காயப்படுத்தி கொலை செய்ததாக ஒரு கொலை வழக்கு குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நிலுவையில் உள்ளது[2]. அந்த வழக்கில் அவர் ஜாமீனில் இருக்கிறார். பிறகு எப்படி வெளிவந்தார் என்று தெரியவில்லை. அது தவிர வேறு சில சிறிய குற்றங்களுக்கான வழக்குகளும் அவர் மீது உள்ளன, என்று குறிப்பிட்டு, கஞ்சா கடத்தல், போதை மருந்து, விபச்சாரம் என்றெல்லாம் அடுக்குகின்றன. இந்த நபர்தான் தம்பதியை நரபலி கொடுக்க சம்மதிக்கச் செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் 10-க்கும் அதிகமான வழக்குகள் அவா் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன[3]. இருப்பினும் வெற்றிகரமாக வெளியில் ஜாலியாக சுற்றி வந்து, இத்தனை வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறான் என்றால், அவனது செல்வாக்கை கவனிக்கலாம். அந்த அளவுக்கு அரசியல், அதிகாரம் முதலிய ரீதிகளில் அழுத்தம் கொண்டவர்களின் பாதுகாப்பு இருப்பதும் தெரிகிறது.

ஷபியின் மனைவி மறுப்பது: முகமது ஷாஃபி தனது மனைவியின் செல்பேசியில் இருந்து சமூக வலைதளத்தில் ‘ஸ்ரீதேவி’ என்ற பெயரில் போலி கணக்கை உருவாக்கினார். இந்த வழக்கில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கப்பெறலாம் என்று கூறப்படும் நிலையில்[4], சஃபியின் மனைவியோ, தனக்கு திருமணமாகி 24 ஆண்டுகள் ஆவதாகவும், தனது கணவர் இப்படிப்பட்ட கொடூரமான காரியங்களில் ஈடுபடுவார் என்பதை தன்னால் நம்பவே முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்[5]. அதில் இருந்து மருத்துவரிடம் நட்பை ஏற்படுத்திக் கொண்டதாக முகமது ஷாஃபி தெரிவித்துள்ளார். பகவால் சிங்கை சந்தித்து, நெருக்கத்தை ஏற்படுத்திய பிறகு ஸ்ரீதேவியின் சுயவிவரத்தை நீக்கியதாகவும், முகமது ஷாஃபி கூறியதாக போலீஸார் தெரிவித்தனர். சமூக ஊடக பக்கத்தில் பதிவான ஸ்ரீதேவி என்ற அழிக்கப்பட்ட கணக்கின் தகவல்களை மீட்க கேரள காவல்துறை சைபர் கிரைம் பிரிவின் உதவியை நாடியுள்ளது.

© வேதபிரகாஷ்

14-10-2022.


[1] பிபிசி.தமிழ், கேரள நரபலி: மாந்திரீகரின் சர்ச்சை திட்டம், இரண்டு பெண்களை பலி கொடுத்த தம்பதிசமீபத்திய தகவல்கள், 12 அக்டோபர் 2022

[2] https://www.bbc.com/tamil/india-63228532

[3] https://www.thanthitv.com/news/tamilnadu/breaking-kerala-human-sacrifice-incident-that-shook-the-country-kerala-police-action-142246

[4] தினமணி, கேரள நரபலி: 61 பாக்கெட்டுகளில் உடல்பாகங்கள், By DIN  |   Published On : 13th October 2022 12:34 PM  |   Last Updated : 13th October 2022 04:27 PM

[5]  https://www.dinamani.com/india/2022/oct/13/kerala-human-sacrifice-body-parts-in-61-bags-3931784.html

தெய்வத்தின் சொந்த தேசத்தில், அதிகம் எழுத்தறிவு கொண்ட மாநிலத்தில் நிர்வாண பூஜை, நரபலி முதலியன எப்படி நடந்தேறின? (1)

ஒக்ரோபர் 15, 2022

தெய்வத்தின் சொந்த தேசத்தில், அதிகம் எழுத்தறிவு கொண்ட மாநிலத்தில் நிர்வாண பூஜை, நரபலி முதலியன எப்படி நடந்தேறின? (1)

கேரளாவில் மலையாள மாந்தீரிகனால் நரபலி: கேரளா, “தெய்வத்தின் சொந்த தேசம்,” “கடவுளுக்கே உரிய நாடு” என்றெல்லாம் ஒருபக்கமும், இந்தியாவிலேயே அதிக கல்வி அறிவு கொன்ட மாநிலம் என்று இன்னொரு பக்கமும் சொல்லப் பட்டு வருகின்றது. கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ளவர்கள் மெத்தப் படித்தவர்கள், முற்போக்குவாதிகள், செக்யூலரிஸவாதிகள், மார்க்சீயவாதிகள், என்றெல்லாமும் அறியப் பட்டு வருகிறார்கள். கம்யூனிஸ்டுகள், முஸ்லிம்கள், கிருத்துவர்கள் ஆதிக்கத்துடன் அரசியல், அதிகாரம் முதலியவற்றில் கோலோச்சி வருகிறார்கள். இந்தியா முழுவதும், ஏன் உலகம் முழுவதும் மலையாளிகள் பரவியுள்ளார்கள், இமய மலைக்கு சென்றாலும், அங்கு ஒரு நாயர், “டீ ஸ்டால்” வைத்திருப்பார் என்ற அளவுக்கு பேசப் பட்டு வருகிறது. அத்தகைய மாநிலத்திலிருந்து தான் அடிக்கடி கற்பழிப்பு, செக்ஸ் என்றெல்லாம் செய்திகள் வருவதுண்டு. இப்பொழுது, எல்லாம் சேர்ந்த ஒரு குரூரமான செய்தி வெளிவந்துள்ளது. ஒரு மலையாள மாந்திரீகன் நரபலி கொடுத்துள்ளான் என்ற செய்தி தான் அது.

பகவல்சிங்சகலகலா வல்லவன்மாந்திரீகம் மூலம் பணம் பெற ஆசைப் பட்டது: பகவல் சிங் – உள்ளூர் சிபிஎம் கட்சி நிர்வாகி, தலைவர் என்றெல்லாம் குறிப்பிடப் படும் இவர் – மசாஜ் சிகிச்சையாளர், ஆயுர்வேத மருத்துவர், பாரம்பரிய வைத்தியர், ஹீலிங் நிபுணர் என்றும் அறியப் படுகிறார். அதாவது மருத்துவத்தில் சகலகலா வல்லவன் போன்று திகழ்கிறார் போலும். இவரது மனைவி லைலா – அதாவது, இது எந்தமத பெயர் என்று தெரியவில்லை. “பகவல் சிங்” என்றாலும் புரியவில்லை, இவர் சீக்கியரா, கிறிஸ்துவரா தெரியவில்லை. எல்லாமே செக்யூலரிஸத்தின் உச்சத்தில் இருப்பதாகத் தெரிகிறது. இந்த, பத்தினம்திட்டா மாவட்டம் திருவல்லாவைச் சேர்ந்த தம்பதி தான், பணக்காரராக வேண்டும் என்ற ஆசையில் மாந்த்ரீகத்தை நம்பி, தமிழகத்தைச் சேர்ந்தவர் உட்பட இரண்டு பெண்களை நரபலி கொடுத்துள்ளனர்[1] என்கிறது விகடன். இங்கு விகடனுக்கு “தமிழகத்தைச் சேர்ந்தவர்” என்று மட்டும் தான் புலப்படுகிறது. அதிகமான கடன் மற்றும் பணப்பிரச்சினைகள் உள்ளன. பணப்பிரச்சினையில் இருந்து விடுபடவும், பணக்காரனாக மாறுவதற்கும் என்ன செய்ய வேண்டும் என்று தவித்த நிலையில், இவ்வழியில் மாட்டிக் கொண்டனர், என்றும் இன்னொரு ஊடகம் கூறுகிறது. மந்திரத்தால் மாங்காய் காய்க்குமா என்றால், கேரளாவில் நம்புவதற்கு ஆட்கள் இருக்கிறார்கள் என்று தெரிகிறது.

பகவல் சிங்சிபிஎம் கட்சிக் காரர் கூட: முக்கிய குற்றவாளியான ஆயுர்வேத மருத்துவர் பகவல்சிங், கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினர் என்றும் கட்சியிலிருந்து பணியாற்றி வந்திருந்தார் எனவும் பல்வேறு தகவல்கள் வெளியாகின[2]. இது குறித்து பலரும் விமர்சனம் செய்ய தொடங்கினர்[3]. அது கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்த் வருகிறது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்தினம்திட்டா பகுதி குழு செயலாளர் பி.ஆர்.பிரதீப் (CPM Pathanamthitta area secretary P.R. Pradeep) ANI செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில்[4], “பகவல்சிங் சில காலம் எங்களுடன் சேர்ந்து பணியாற்றினார். அப்போது அவர் முற்போக்காக இருந்தார். ஆனால் கட்சி உறுப்பினராக இல்லை. பின்னர் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட பிறகு அவர் மதவாதியாக மாறிவிட்டார்,” என்று கூறியுள்ளார். முதல் மனைவியை 15 வருடங்களுக்கு முன்னர் விவாக ரத்து செய்தார். சிபிஎம் ஊட்டங்களில் கலந்து கொண்டுள்ளார். புகைப் படங்களும் உள்ளூர் மலையாளம் நாளிதழ்களில் வெளியாகியுள்ளன. இருப்பினும், இப்பொழுது, இப்பிரச்சினை உண்டாகியுள்ள நிலையில் கட்சி மறுக்கிறது.

ஷிகாப் என்ற முஹம்மது மந்திரவாதி தொடர்பு கொண்டது: எர்ணாகுளம் மாவட்டம், பெரும்பாவூர் பகுதியைச் சேர்ந்த ஷிகாப் என்ற முஹம்மது ஷாஃபி போலி ஃபேஸ்புக் அக்கவுன்ட் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். அந்த அக்கவுன்ட் மூலம் பத்தனம்திட்டா மாவட்டம், இலந்தூரிலுள்ள வைத்தியர் பகவல் சிங்கைத் தொடர்புகொண்டார். அப்போது ஐஸ்வர்யம் பெருகவும், செல்வம் செழிக்கவும் வழிகாட்டப்படும் எனத் தகவல் தெரிவித்திருக்கிறார். விளம்பரங்களும் கொடுத்திருக்கிறார் என்று ஊடகங்கள் கூறுகின்றன. பின்னர் அதற்கு ஒரு பூஜை செய்ய வேண்டும் எனக் கூறியிருக்கிறார். பகவல் சிங்கின் வீட்டுக்குச் சென்று அந்த இடங்களைப் பார்வையிட்டுவிட்டு, ஒரு பெண்ணை நரபலி கொடுத்து பூஜை செய்ய வேண்டும் எனக் கூறியதுடன், அந்த பெண்ணை நானே அழைத்து வருகிறேன் எனவும் முஹம்மது ஷாஃபி கூறியிருக்கிறார். இதையெல்லாம் சிபிஎம் நிர்வாக எப்படி நமினார் என்று தெரியவில்லை. பொன்னுருண்ணியைச் சேர்ந்த லாட்டரி விற்பனையாளரான பத்மா மற்றும் அங்கமாலி அருகே காலடியில் வசிக்கும் ரோஸ்லின் ஆகியோரின் பணத்தேவையை பயன்படுத்தி, இருவரையும் வெவ்வேறு மாதங்களில் கடத்தி வந்து நரபலி கொடுத்துள்ளதாக போலீஸ் நடத்திய ஆரம்பநிலை விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இந்த கோர-குரூர சம்பவம் நாட்டையே உலுக்கியிருக்கிறது[5]. பத்தனம்திட்டா மாவட்டம், இலந்தூரில் ஐஸ்வர்யமும் செல்வமும் பெருக பூஜை செய்வதாக போலி மந்திரவாதியான முஹம்மது ஷாஃபி என்ற ஷிகாப் வழிகாட்டுதல்படி பாரம்பர்ய வைத்தியர் பகவல் சிங், அவரின் மனைவி லைலா ஆகியோர் நரபலியில் ஈடுபட்டுள்ளனர். நரபலி கொடுத்த சம்பவம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன, என்று தமிழில் இணைதள ஊடங்கள் விவரிக்கின்றன.

ரோஸ்லியை முஹம்மது ஷபி கூட்டி வந்தது: முஹம்மது ஷாஃபி எர்ணாகுளத்துக்குச் சென்று காலடிப் பகுதியில் தனியாக வாடகைக்கு வசித்துவந்த, கடவந்தறா பகுதியில் லாட்டரி விற்பனை செய்துவந்த / ஆயுர்வேத மருந்து விற்பனை செய்யும்[6]  ரோஸ்லி (59)-க்கு பத்து லட்சம் ரூபாய் பணம் கொடுப்பதாகக் கூறி திருவல்லாவுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.  ரோஸ்லியின் மகள் உத்தரப்பிரதேசத்தில் வசித்து வருகிறார். நிர்வாண படத்தில் நடித்தால் பல லட்சம் ரூபாய் பணம் கிடைக்கும் என கூறி ரோஸ்லியை நம்பவைத்துள்ளார்[7]. அதாவது ஓஸ்லியும் ஒப்புக் கொண்டாள் என்றாகிறது. அப்படியென்றால், அத்தகைய வியபாரமும் அங்கு நடந்து வருகிறது என்றாகிறது. அதற்கு ரோஸ்லி சம்மதித்துள்ளார்[8]. பின்னர், ரோஸ்லியை பகவல் சிங்கின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். ஆபாச படத்தில் நடிப்பதற்காக என்று கூறி, ரோஸ்லியை கட்டிலில் படுக்க வைத்து கை, கால்களை கட்டினர், என்று விவரிக்கிறது தினகரன்[9]. இதனையடுத்து அந்த பெண்ணை மருத்துவர் பகவல் சிங் வீட்டிற்கு அழைத்து வந்து கட்டிலில் நிர்வாணமாக கட்டி வைத்தான்[10]. அப்பொழுது, போர்ன் படம் எடுப்பதாக ரோஸ்லி நினைத்தாள் என்று சில ஊடகங்கள் கூறுகின்றன. “நிர்வாண பூஜை” என்று சில வர்ணிக்கின்றன. பிறகு  கொலை செய்துள்ளனர் என்று முடிக்கின்றன[11]. உடலுறவு கொண்டான், விடிய விடிய செக்ஸ் டார்ச்சர் என்றெல்லாம் ஊடகங்கள் தலைப்பிட்டு செய்திகளை வெளியிட்டன[12]. தலைப்புகள் இட்டாலும், உள்ளே ஒன்றும் விவரங்கள் இல்லை.

© வேதபிரகாஷ்

14-10-2022.


[1] விகடன், கேரளா: இரட்டை நரபலி; 22 துண்டுகளாக்கி பூஜை; மண்ணில் புதைத்து மஞ்சள் நட்டனர்அதிர்ச்சித் தகவல்கள்!, Published:Yesterday at 9 AMUpdated:Yesterday at 10 PM

[2] தமிழ்.ஒன்.இந்தியா, நரமாமிச கும்பல்.. கேரளாவில் நரபலி தந்து சடலத்தை சாப்பிட்ட கொடூரன்.. குற்றவாளி சிபிஎம் உறுப்பினரா?, By Halley Karthik Updated: Wednesday, October 12, 2022, 20:54 [IST].

[3] https://tamil.oneindia.com/thiruvananthapuram/bhagwalsingh-who-gave-human-sacrifice-in-kerala-is-not-a-communist-party-member-party-explanation/articlecontent-pf781895-480215.html

[4] AsiaNetNews, Party finally confirms, ‘Bhagwal Singh accused in human sacrifice case is CPM worker’, Web Team, First Published Oct 12, 2022, 1:15 PM IST; Last Updated Oct 12, 2022, 1:15 PM IST.

https://www.asianetnews.com/kerala-news/bhagaval-singh-was-an-active-member-of-cpm-says-cpm-pathanamthitta-area-secretary-rjmqvl

[5] https://www.vikatan.com/news/crime/kerala-human-sacrifice-issue-shocking-details

[6]  என்கிறது தினகரன் மற்றும் உள்ளூர் நாளிதழ்கள்.

[7] தமிழ்.சமயம், நிர்வாண பூஜையும், நரபலி விருந்தும்; சைக்கோ ஷபியை சிக்க வைத்த செல்போன்!,  Mageshbabu Jayaram | Samayam Tamil | Updated: 13 Oct 2022, 7:55 am

[8] தினகரன், தர்மபுரியை சேர்ந்தவர் உள்பட கேரளாவில் 2 பெண்கள் நரபலி: ஆபாச படத்தில் நடித்தால் ரூ.10 லட்சம் தருவதாக கூறி அழைத்து வந்து கொலை; போலி மந்திரவாதி, தம்பதி வெறிச்செயல், 2022-10-12@ 00:14:06

[9]  https://www.dinakaran.com/news_detail.asp?Nid=805964

[10] https://tamil.samayam.com/latest-news/india-news/how-habitual-offender-shafi-arrested-and-kerala-human-sacrifice-case-came-out/articleshow/94822646.cms

[11] தமிழ்.இந்தியம்.எக்ஸ்பிரஸ், விடிய விடிய செக்ஸ் டார்ச்சர்.. மனித கறி சாப்பிட்ட மிருகங்கள்.. கேரள பயங்கரம்..!, Written by WebDesk, October 12, 2022 11:17:02 pm.

[12] https://tamil.indianexpress.com/india/kerala-human-sacrifice-case-probe-points-to-accuseds-cannibalism-and-sexual-perversion-say-police-524589/

ரேவ் பார்ட்டிகள் தமிழகத்தில் நடப்பது: பொள்ளாச்சி விவகாரம் – அயல்நாட்டு தாக்கமா, அதிநவீன நாகரிக மோகமா, சமூகத்தைச் சீரழிக்க திட்டமா?

மே 10, 2019

ரேவ் பார்ட்டிகள் தமிழகத்தில் நடப்பது: பொள்ளாச்சி விவகாரம் – அயல்நாட்டு தாக்கமா, அதிநவீன நாகரிக மோகமா, சமூகத்தைச் சீரழிக்க திட்டமா?

Agrinest-about

வட இந்திய நகரங்களில் நடந்து வரும் ரேவ் பார்ட்டி எனப்படுகின்ற போதை மருந்து பார்ட்டி, இப்பொழுது தமிழகத்தில் நடப்பது திகைக்க வைக்கிறது. ஏனெனில், இது ஒட்டு மொத்தமாக, இளமைவினை சீரழித்து, மாணவ-மாணவியரை நரகத்திற்கு எடுத்துச் செல்லும் பார்ட்டியாகும். பணக்காரர்களின் மகன்-மகள்கள் கலந்து கொள்கிறார்கள் என்பதில்லை, நடுத்தர மற்றும் ஏழை குடும்ப இளைஞர்களும் சீரழிகிறார்கள். இதனால், தனிமனித பாதிப்பு மட்டுமல்லாது, குடும்பங்கள் பாதிக்கப் படுகின்றன, சீரழிகின்றன, சிதறுகின்றன. இந்நிலையில் தான், கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள  சேத்துமடை அண்ணாநகர் பகுதியிலுள்ள கணேஷ் என்பரது தோட்டத்தில் / விவசாய இடத்தில் கோவையில் படிக்கும் கேரள மாணவர்கள்  கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை [ganja, MDMA, cocaine, hashish and banned sedative tablets] உட்கொண்டு  மது விருந்து நடத்தி 03-05-2019 இரவில் விடிய விடிய நடனமாடி, கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட்டனர்[1] என்ற செய்தி வந்துள்ளது.

Agrinest-how to reach

சக்திமான்என்ற 13வாட்ஸப் குரூப் மூலம், ரூ.1,200/- செல்லுத்தி  சேர்ந்து வந்த கூட்டம்: கஞ்சா, போதை மாத்திரை,பல்வேறு விதமான சரக்கு வகைகளை  அடித்துவிட்டு கும்மாளம் போட்டுள்ளனர் [2], மேலும் அரைகுறை ஆடைகளுடன் இளம்பெண்களுடன் நடனம் ஆடியதும் தெரியவந்தது. இதிலிருந்து மற்ற செக்ஸ் ரீதியிலான அடாவடித் தங்களும் வெளிப்படுகின்றன. இந்த அடாவடியில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கோவையில் உள்ள பிரபல கல்லூரியில் படித்து வருகிறார்கள்[3].  மது, கஞ்சா, போதைப் பொருட்கள் என பலவற்றுக்கும் அடிமையான இளைஞர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் ஒன்றுகூடி இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர்[4]. சமூகவளைதள தொடர்புகள் மூலம், “சக்திமான்” என்ற 13வாட்ஸப் குரூப் மூலம், ரூ.1,200/- செல்லுத்தி  சேர்ந்து வந்துள்ளனர்[5]. கெட்டுப் போவதற்கு சமூக வலைதளம் எவ்வாறு உபயோகப் படுகிறது என்பதும் தெரிகிறது.

Agrinest Farm, Pollachi

போதை மருந்துகள் கிடைப்பது, விற்பது, விநியோகிப்பது எப்படி நடக்கின்றன?”: மாணவர்கள் ரகளை செய்ததாக பொதுமக்கள் தரப்பில் இருந்து போலீசாருக்கு புகார் கொடுக்கப்பட்டது[6]. புகாரை அடுத்து எஸ்.பி. சுஜித்குமார் தலைமையிலான போலீசார் தோட்டத்தில் ஆய்வு செய்தனர்[7]. அதில்  மது, போதைப்பொருட்களை பயன்படுத்தி ரகளையில் ஈடுபட்டது தெரியவந்தது[8].  போலீஸார், எம்.எம்.டி.ஏ, கோக்கைன், தடை செய்யப் பட்ட போதை மாத்திரைகள், முதலியவற்றை பரிமுதல் செய்துள்ளனர். 30 கிராம் கஞ்சா, ஒரு கிராம் ஹாஷிஸ் எண்ணை, 1.5 கிராம் எம்.எம்.டி.ஏ, மது பாட்டில்கள் முதலியவை அவற்றில் அடக்கம்[9]. இவற்றையெல்லாம் யார் உற்பத்தி செய்கிறார்கள், எங்கே எவ்வாறு செய்கிறார்கள் என்று தெரியவில்லை. இந்தியாவில் செய்கிறார்கள் என்றால், மருந்து உற்பத்தி தொழிற்சாலைகள் திருட்டுத் தனமாக ஈடுபட்டிருப்பது தெரிகிறது. பிறகு எப்படி பல அரசு அதிகாரிகளின் தணிக்கை, கட்டுப்பாடு, சரிபார்ப்பு போன்றவற்றிலிருந்து தப்பித்து நடக்கின்றன என்று தெரியவில்லை. கடத்தல் மூலம் வருகின்றன என்றாலும், சட்டமீறல்கள் ஆகின்றன, அதில், பலரது தொடர்புகள் இருப்பதைக் காட்டுகிறது. போதை மருந்து தடுப்புச் சட்டம், தமிழ்நாடு போதை மருந்து கட்டுப்பாடு மற்றும் தடுப்புச் சட்டம் முதலியவற்றின் பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது[10].

Coimatore rave party

முதற்கட்ட விசாரணையில், இதுபோன்று ஏற்கனவே இவர்கள் பல முறை போதை விருந்தை நடத்தியுள்ளது தெரிகிறது: கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களும், வசதி படைத்தக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்களும் இந்த போதை விருந்தில் பங்கேற்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது[11]. அவர்களின் செல்போன்கள், விலை உயர்ந்த கார், இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், அனுமதியில்லாமல் செயல்பட்டு வந்த விடுதிக்கும் சீல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தலைமறைவான உரிமையாளர் தேடப்பட்டு வருகிறார். முதற்கட்ட விசாரணையில், இதுபோன்று ஏற்கனவே இவர்கள் பல முறை போதை விருந்தை நடத்தியுள்ளதும், இந்த முறை ஒருவருக்கு தலா ரூ.1200 செலுத்தி இந்த விருந்தில் பங்கேற்றிருப்பதும் தெரிய வந்துள்ளது. தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை இவர்கள் பயன்படுத்தி வந்ததும், காவல்துறையினருக்கு இதுபற்றி தொடர்ந்து கிடைத்து வந்த தகவலின் அடிப்படையில் இவர்கள் தற்போது சுற்றிவளைத்துக் கைது செய்யப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது[12].

Pollachi rave party-another view-3

பொள்ளாச்சியில் தொடர்ந்து பாலியல் குற்றங்கள் நடைபெறுவது: இதனையடுத்து 159 இளைஞர்களையும் போலீசார் கைது செய்தனர்.  அனுமதியின்றி ரிசார்ட் நடத்திய தோட்டத்து உரிமையாளர் கணேஷ் உட்பட மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டனர்[13]. இதையடுத்து அனுமதியின்றி நடத்தப்பட்ட ரிசார்ட்டுக்கு மாவட்ட ஆட்சியர் சீல் வைக்க உத்தரவிட்டுள்ளார்[14]. பொள்ளாச்சியில் பாலியல் பலாத்காரச் சம்பவம் உக்கிரமாக இருந்த நிலையில் தற்போது மீண்டும் அதே பொள்ளாச்சியில் மாணவர்கள் போதையில் ரகளை செய்து கொத்தாக கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[15].

Pollachi rave party-another view

எல்லாவற்றையும், எல்லோரையும் ஏமாற்றி, இத்தகைய ரேவ் பார்ட்டிகள் நடத்த முடியுமா?: இதுவே மிகவும் சந்தேகமாகவும் பல கேள்விகளை எழுப்புவதாகவும் இருக்கின்றது. பலதடவை இது போன்ற போதை மருந்து பார்ட்டிகள் நடந்துள்ளன, என்பது அவர்களுக்கு வேண்டிய போதைமருந்துகளும் அங்கு கிடைத்துள்ளன-வந்துள்ளன, அதே போல நூற்றுக்கணக்கான மாணவ மாணவியர் மற்றும் வசதிபடைத்த அல்லது ஐடி.டெக்கீஸ் போன்றவர்கள் கலந்து கொண்டுள்ளது தெளிவாகிறது. போலீசாருக்கு தெரியாமல் நடந்து வருகின்றன என்பது நம்புவதாக இல்லை, ஏனெனில், இந்த தடை செய்யப்பட்ட போதை மருந்துகள் மாணவர்களுக்குக் கிடைப்பது, சமூக விரோத மற்றும் ஆண் பெண் நடனங்கள், குறிப்பாக இரவில் நடப்பது இவையெல்லாம் மற்றவர்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை. மேலும் பெற்றோர்களுக்கு தெரியாமல் நடக்கின்றனவா என்று கவனிக்கும் போதும் மற்ற கேள்விகள் எழுகின்றன இவற்றை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.

© வேதபிரகாஷ்

09-05-2019

Pollachi rave party-another view-2

[1] தினமணி, பொள்ளாச்சியில் போதை, மது விருந்து: 159 இளைஞர்கள் நள்ளிரவில் கைது, By DIN | Published on : 04th May 2019 03:51 PM.

[2] ஏசியாநெட்.நியூஸ், தடை செய்யப்பட்ட போதை பொருட்கள்அரைகுறை ஆடைகளுடன் இளம்பெண்கள்!! பொள்ளாச்சி பயங்கரம், 5, May 2019, 8:33 PM IST

[3] https://tamil.asianetnews.com/crime/girls-ware-semi-nude-dress-pollachi-pr1due

[4] https://www.dailythanthi.com/News/State/2019/05/04111819/Wine-party-in-Pollachi.vpf

[4]https://www.dinamani.com/tamilnadu/2019/may/04/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-159-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3145594.html

[5] The party was arranged through social media.The students gathered here through 13 WhatsApp groups named ‘Sakthiman’. Besides students, police arrested six persons, including farm owner Ganesh and resort staff. Organisers of the party charged Rs 1,200 per head.

English.mathrubhumi, Rave party in Pollachi: 150 students nabbed, including 90 from Kerala, for drug abuse, May 5, 2019, 09:21 AM IST.

https://english.mathrubhumi.com/news/crime-beat/rave-party-in-pollachi-150-students-nabbed-including-90-from-kerala-for-drug-abuse-1.3773559

[6] தினகரன், பொள்ளாச்சி அருகே உள்ள ரிசார்ட்டில் போதைப் பொருட்களுடன் 150 கேரள இளைஞர்கள் கைது, 2019-05-04@ 10:48:47

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=492726

[7] தினத்தந்தி, பொள்ளாச்சியில் மது விருந்து, விடிய விடிய நடனமாடி, கூச்சலிட்டு ரகளை : 159 இளைஞர்கள் கைது, பதிவு: மே 04, 2019 11:18 AM மாற்றம்: மே 04, 2019 12:27 PM

[8] https://www.dailythanthi.com/News/State/2019/05/04111819/Wine-party-in-Pollachi.vpf

[9] The police confiscated ganja, MDMA, cocaine, hashish and banned sedative tablets from the venue. Some of the seized items include 30 gms of ganja, 1 gram of hashish oil, 7 grams of ganja saras and 13.5 grams of MDMA tablets in addition to liquor.

https://www.thenewsminute.com/article/rave-party-busted-near-pollachi-165-youth-detained-cops-seize-drugs-101245

[10] TheNewsMinute, Rave party busted near Pollachi, 165 youth detained as cops seize drugs, TNM Staff, Sunday, May 05, 2019 – 12:31

An FIR has been filed under sections 8(C) (Illegal possession), 20 (b)(ii)(A) (Punishment for contravention in relation to cannabis plant and cannabis), 22(a) (Punishment for contravention in relation to psychotropic substances), 25 (Punishment for allowing premises, etc., to be used for commission of an offence), 27(a) (Punishment for consumption of any narcotic drug or psychotropic substance) of NDPS Act 1985 against resort owner and 15 others. The group has been arrested and remanded. The police have also arrested 24-year-old Naveen Venkatesh, an IT professional for possession and selling of IMFL Liquor along with 97 others for unlawful gathering and public nuisance. An FIR was filed under sections 143, 4(1)(a), 4(1)(k) of the Tamil Nadu Prohibition (TNP) Act and sections 290 (Punishment for public nuisance) of the IPC. This group was later let out on bail.

[11]https://www.dinamani.com/tamilnadu/2019/may/04/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-159-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3145594.html

[12] இந்தியன் எக்ஸ்பிரஸ்.தமிழ், பொள்ளாச்சி அருகே மது விருந்தில் ரகளை : கேரள மாணவர்கள் கைதுதோட்டத்தில் போதை பொருட்களை உட்கொண்டு ரகளை, WebDesk, May 04, 2019.

[13] https://tamil.indianexpress.com/tamilnadu/alcohol-party-near-pollachi-in-kerala-students-arrested/

[14] தமிழ்.ஒன்.இந்தியா, மீண்டும் அடிப்படும் பொள்ளாச்சி.. மதுவிருந்தில் கஞ்சா.. 159 கேரள மாணவர்கள் கைது.. ரிசார்ட்டுக்கு சீல், By Vishnupriya R, | Updated: Saturday, May 4, 2019, 13:30 [IST]

[15] https://tamil.oneindia.com/news/coimbatore/police-arrested-159-students-near-pollachi-who-involve-in-liquor-party-with-drugs-349050.html

அனிதா மந்திர தாலி கட்டி வேலை வாங்கித் தருவதாக இளைஞர்களை தந்திரமாக ஏமாற்றி லட்சங்களைப் பறித்தது – இதற்கு பரிகாரம் என்ன?

பிப்ரவரி 17, 2016

அனிதா மந்திர தாலி கட்டி வேலை வாங்கித் தருவதாக இளைஞர்களை தந்திரமாக ஏமாற்றி லட்சங்களைப் பறித்தது – இதற்கு பரிகாரம் என்ன?

அனிதா மோசடி பிப்ரவரி 2016.3

இந்த அனிதாவும், அந்த அனிதாவும் ஒன்றா, வேறா (2015): இதே பிப்ரவரி 2015ல் திருப்பூருல் ஒரு அனிதா இதே மாதிரியான மோசடியில் கைதாகியுள்ள செய்தி வந்துள்ளது. மேட்டூர், மாசிலாபாளையத்தை சேர்ந்தவர் பிரான்சிஸ் சேவியர், 30. “குவாலிட்டி கண்ட்ரோலராக’, திருப்பூரில் பணியாற்றுகிறார். திருமணம் செய்ய, பெண் தேடி, இணையதளத்தில் பதிவு செய்தார். கடந்த நவ., மாதம் தொடர்பு கொண்ட சென்னையை சேர்ந்த இளம்பெண், தன்னை ஜெலின் சிந்தியா, 22 என கூறி, தொடர்ந்து பேசியுள்ளார். “சாப்ட்வேர்’ நிறுவனத்தில் பணிபுரியும் தனக்கு, ஒரு “புராஜெக்ட்’டுக்கு பணம் தேவை; தாய் மருத்துவ சிகிச்சைக்கு பணம் அவசரம் என கூறி, 1.21 லட்சம் பணம் பெற்றுள்ளார். அதன் பின்னரே, அவர் திருமணமானவர், பெயர் அனிதா என தெரியவந்துள்ளது[1]. சில நாட்களுக்குபின், ஏமாற்றப்பட்டதை அறிந்த சேவியர், அனுப்பர்பாளையம் போலீசில் புகார் செய்தார். அனிதா மேலும் பணம் கேட்டபோது, தர்மபுரிக்கு வருமாறு அழைத்தார். நேரில் வராத அனிதா, தங்கை என சோனியா, 16 மற்றும் நண்பர் ராஜேந்திரன், 20, ஆகியோரை அனுப்பியுள்ளார். அவர்களை தர்மபுரி போலீஸ் உதவியுடன் பிடித்து, அனுப்பர்பாளையம் அழைத்து வந்தார். சம்பந்தப்பட்ட அனிதா இல்லாமல், எதுவும் செய்ய முடியாது என போலீசார் திருப்பி அனுப்பி விட்டனர்.

வக்கீல்கள் மற்றும் அடியாட்களுடன் அவர் வலம் வந்த அனிதா (2015): மோசடி செய்யப்பட்டது தொடர்பாக, “பேஸ்புக்’கில், அனிதா குறித்த விவரங்களுடன் சேவியர் பதிவு செய்தார். அதை பார்த்து, சேலத்தை சேர்ந்த சாமி என்பவர், அதே அனிதாவிடம், தான் ஏமாந்த பிரச்னையை தெரிவித்தார். பழைய பொருட்கள் விற்பனை செய்வதாக, இணைய தளத்தில் விளம்பரம் செய்து, தனது மொபைல் போன் மற்றும் “டிவி’யை விற்பதாக அனிதா தந்த விளம்பரத்தை பார்த்து, ஆயிரக்கணக்கில் பணம் அனுப்பி, அவர் ஏமாந்துள்ளார்[2]. சேவியர் மற்றும் சாமி ஆகியோர் கூறுகையில், “பலவிதங்களில் இப்பெண் பலரையும் மோசடி செய்துள்ளார். வேறு யாரும் அவரிடம் ஏமாறாமல் இருக்க வேண்டும். வக்கீல்கள் மற்றும் அடியாட்களுடன் அவர் வலம் வருவதாகத் தெரிகிறது. போலீசிடம் புகார் செய்தாலும், முறையாக விசாரிப்பதில்லை. முதல்வர் தனிப்பிரிவுக்கு அனுப்பிய மனு மீதும் நடவடிக்கை இல்லை. எங்களை போல் பலரும் அவரிடம் பணம் இழந்திருக்க வாய்ப்புள்ளது. அவர், இணைய தளத்தில் தொடர்ந்து விளம்பரம் செய்து வருகிறார். போலீசார், விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

குற்றங்கள் ஏன் ஏற்படுகின்றனர் அலசல் தேவை

ஆண்களுக்கு நிகராக அல்லது மிஞ்சும் வகையில் குற்றங்களில் ஈடுபடும் பெண்கள்!:  இணைய தளத்தில் பெண் தேடும் இளைஞர்களை குறி வைத்து, பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டுள்ள சென்னையை சேர்ந்த இளம்பெண்ணால், பலரும் பணம் இழந்து தவிக்கின்றனர், என்று செய்திகளை வெளியிட்டாலும், படித்த இளம்-பெண்கள் இத்தகைய குற்றங்களை ஏன் செய்கிறார்கள் என்று அலசாமல் இருக்கிறார்கள். நிறைய மாணவ-மாணவிகள் ஐ.டி முதலிய தொழிற்நுட்ப படிப்புகள் படித்து, கல்லூரிகளிலிருந்து வெளியே வரும் போது, குறைந்த அளவிலேயே “கேம்பஸ் இன்டர்வியூ” முறையில் நல்ல வேலை கிடைத்து, ரூ.25,000/- முதல் ரூ.40,000/- என்று வேலை கிடைக்கிறது. அதையெடுத்து நல்ல மார்க்குகள் வாங்கி சாமர்த்தியசாலிகளாக இருப்பவர்களுக்கு ரூ.10,000/- முதல் ரூ.20,000/- வேலை கிடைக்கிறது. மற்றவர்களுக்கு ரூ.10,000/- மற்றும் அதைவிட குறைவாக வேலை கிடைக்கிறது. ஆனால், வேலை இல்லாமல் அவதி படுவோர் அதிகமாக இருக்கின்றனர். இதை விட “டிராப்-அவுட்” மாணவ-மாணவியர்களின் நிலை இன்னும் மோசமாக இருக்கிறது. அவர்களது குடும்பங்களும், ஏற்கெனவே, லட்சங்களைக் கொட்டி அழுததால், மிகவும் கஷ்டமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில், இம்மாணவ-மாணவிகள் சந்தித்துப் பேசிக் கொள்ளும் போது, சினிமா என்றெல்லாம் வெளியே செல்லும் போது, வேலை-வேலையின்மை, நிறைய சம்பளம்-குறைந்த சம்பளம், செலவு செய்யும் தன்மை – செலவு செய்ய முடியாமல் இருக்கும் நிலை, முதலியன வெளிப்படுகின்றன. என்னத்தான் அவர்கள் நட்பு முறையில் அனுசரித்துச் சென்றாலும், ஒருநிலையில் பிரச்சினை ஏற்படுகிறது.

குற்றங்கள் ஏன் ஏற்படுகின்றன

சமூக ஒழுக்கமின்மை, தனிமனித கட்டுப்பாடின்மை: இல்லை-இயலாமை என்றவர்கள் மற்றவர்கள் போல இருக்க ஆசைப்படுகிறார்கள். முடியவில்லை அல்லது முடியாது எனும் போது, வேறு வழிகளையும் பின்பற்ற தயாராகி விடுகிறார்கள். அபோழுது தான் சட்டமீறல்கள் ஏற்படுகின்றன. தார்மீகம் ஏற்கெனவே சீரழிந்துள்ள நிலையில், சட்டம்-நீதி பற்றிய உணர்வும் மறக்கப்படுகின்றன. “கொன்றால் பாவம், தின்றால் போச்சு” என்பது எல்லாவற்றிலும் பின்பற்றப்படுகிறது. ஊழல் என்பதோ, தமிழகத்தில் 60 ஆண்டுகளாக நியாயப்படுத்தப் பட்டு வந்துள்ளது. “லஞ்சம் கொடுக்க லஞ்சம் வாங்கு” என்ற புதுமொழியினையே உண்டாக்கி வைத்துள்ளார்கள். மேலும், ஆட்சி செய்பவர்களே ஒழுக்கமின்மை, பலமணங்கள் புரிந்தவர்கள், குற்றங்களில் ஈடுபட்டவர்கள், ஜெயிலுக்குச் சென்றவர்கள் என்றெல்லாமிருக்கும் போது, அவர்கள் மீது மக்களுக்கு மதிப்பு-மரியாதை இல்லாமல் போகிறது. பதவியில் இருப்பதனால் கொடுக்கும் மரியாதை கிடைக்குமே தவிர, தனிப்பட்ட முறையில் எதுவும் இருக்காது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இது, எப்படி சினிமாகாரனை “வரான், போறான், வராண்டா-போரான்டா” என்கிறார்களோ, அரசியல்வாதிகளையும் அப்படித்தான் விளிக்கிறார்கள், குறிப்பிடுகிறார்கள், மற்றும் பேசிக்கொள்கிறார்கள்.

குஷ்பு, கற்பு, மணியம்மை

சமூகத்தை சீரழித்து வரும் சினிமாத் துறை: போதாகுறைக்கு சினிமாக்கள் கேவலமாக வெளி வந்துக் கொண்டிருக்கின்றன. கொச்சையான வசனங்கள், சேரி பாஷையை விட மோசமான வார்த்தை உபயோகம், ஆபாசமான பாடல்கள், ஒரு பெண்-பல ஆண்கள்-காதல்-உறவு அல்லது ஒரு ஆண்-பல பெண்கள் காதல்-உறவு என்ற ரீதியில் கதைகள், போர்னோகிராபியை மிஞ்சும் கொக்கோக நடனங்கள்……..இப்படி நாத்திக சித்தாந்தம், பகுத்தறிவு கொக்கோக சினிமா, இபற்றில் ஈடுபட்டுள்ளவர்களே கல்லூரிகளை வைத்து நடத்தும் நிலை, இவற்றால் என்ன நடக்கும்? அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. மீன் விற்று சம்பாதித்த காசு நாறுமா என்றால், லஞ்சம் வாங்கி கல்லூரி கட்டிய கல்லூரியில் படிப்பு வராது என்பார்களா பகுத்தறிவுவாதிகள்?

 சுயமரியாதை திருமணம் பெரியார் முன்னிலையில்

அதிகமாக பாதிப்பு அடைவது பெண்கள் தாம்: இப்படி எல்லா நிலைகளிலும் சீர்கெட்டுள்ள நிலைகளில், பெண்கள் எளிதாக பாதிக்கப்படுகிறார்கள். அவர்களைப் பொறுத்த வரையில், ஒருமுறை தவறக்கூடாது, தவறினால், மறுமுறை தவறினால் பரவாயில்லை என்ற நிலையில் இருக்கிறார்கள். இதனால், சாதாரண குற்றங்களிலில்ருந்து, பெரிய குற்றங்கள் செய்யும் போது, அதே மனப்பாங்கு வளர்கிறது, அதிகமாகிறது. காதல், ஆண்-பெண் உறவு, கல்யாணம்  என்றெல்லாம் வரும் போது, அத்தகைய உணர்வுகள் அதிகமாகவே பாதிக்கப்படுகின்றன. இங்குதான், பெண்களின் சீரழிவு அதிகமாகிறது. பாதிக்கப் பட்ட பெண், முதலில் ஆணை, ஆண்களை, ஆண்-வர்க்கத்தை எதிரியாக பாவிக்கிறாள். அவர்களை எப்படியாவது வீழ்த்த வேண்டும், ஒழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொள்கிறாள். அவ்வாறு செயல்படும் போது, அவள் அதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. தவறான –தாம்பத்திய உறவுகள், உறவுமுறைகள் முதலியவையும் மறுக்கப்படுகின்றன.

நிலைமை மாற வேண்டும்: தொடர்ந்து இத்தகைய குற்றங்கள் நடைபெற்றுவருவதால், நிலைமை மாற வேண்டும், அதாவது, கடந்த 60 ஆண்டு கால ஆட்சி, சித்தாந்தம் முதலியவை சமூகத்திற்கு உபயோகமாக இல்லை என்றாகிறது. அதனால், மாற்று வழி என்ன எனும்போது, ஏற்கெனவே உள்ளவற்றைத்தான் மக்கள் ஏற்றுக் கொண்டு நடக்க வேண்டும். அதைப் இன்பற்றி நடப்பவர்களில் பெரும்பாலோர் சந்தோஷமாக, சாதாரண குடிமகனாக, அமைதியாக இருக்கிறார்கள் எனும்போது அவற்றை ஏற்றுக் கொண்டு நடக்க வேண்டும். வர்த்தமான-காலநிலைகளில் அவற்றில் மாறுபாடுகள் இருந்தால், அவற்றால் தவறு, தீமை என்றால், தாராளமாக மாற்றிக் கொள்ளலாம். அதற்கான வழிமுறைகள் இந்தியாவில் தாராளமாக இருந்துள்ளன, இருக்கின்றன. பெண்கள் மதிக்கப் படவேண்டும் என்றால், அத்தகைய முறைகளை மறுபடியும் அறிமுகப்படுத்த வேண்டும்.  பழமை, பஞ்சாங்கம், இடைக்கால தத்துவம், என்றெல்லாம் பிரச்சாரம் செய்வதை விடுத்து, பின்பற்ற வேண்டும். பெண்மை போற்றப்படவேண்டும்-காக்கப்படவேண்டும், தாய்மை தூய்மையாகக் கருதப் படவேண்டும்-போற்றப்படவேண்டும், கற்பு பின்பற்றப்படவேண்டும்-காக்கப்படவேண்டும். அப்பொழுது குடும்பங்கள் பேணப்படும், சமூகம் மேன்படும்.

© வேதபிரகாஷ்

17-02-12016

[1] தினமலர், திருமண ஆசை காட்டி ஆன்லைனில் மோசடி; “வலைவிரித்து ஏமாற்றும் இளம்பெண், பிப்ரவரி.12,2015.02.13.

[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1182214&Print=1

கணவனிடம் கிடைக்காததை இளம் பையனிடம் கண்ட காமப்பேய்!

மார்ச் 6, 2012

கணவனிடம் கிடைக்காததை இளம் பையனிடம் கண்ட காமப்பேய்!

17 வயது மாணவனுடன் 37 வயது ஆசிரியை ஓட்டம்! கள்ளக்காதலுக்கும் கண் இல்லை! நக்கீரன் இத்தலைப்பில்[1] வெளியிட்டுள்ள செய்தி, பெண்ணும் காமத்தில் தாழ்ந்தவள் இல்லை என்பதனை மெய்ப்பித்துள்ளாள். இதுவரை, ஆண் ஆசிரியர்கள் பெண் சிறுமியர்-மாணவியர்களிடம் சில்மிஷம் செய்தது, ஓடிப்போனது, ஓட்டலில் தங்கியிருந்து திரும்பி வந்தது, வண்டியில் ஏறி போனது, என்ற பல செய்திகளை பார்த்தோம். இவற்றைப் பற்றிய இடுகைகள் “பெண்களின் நிலை” என்ற இணைதளத்தில் காணலாம்[2]. இப்பொழுது, ஒரு பெண் ஆசிரியை, தானும் சளைத்தவள் அல்ல, என்று காட்டியுள்ளாள். வாழ்க, தமிழச்சிகள், வாழ்க பெண்களின் கற்பு.

சமூகத்தைக் கெடுத்தக் கயவர்கள் யார் என்று அடையாளங்கண்டால், இத்தகைய சமூக சீரழிவுகளை தடுக்க முடியும். தனிப்பட்ட வாழ்க்கையில் கணவனுடன் சரியான உறவை வளர்த்துக் கொள்ளாமல், சினிமா போன்றவற்றைப் பார்த்து, மனத்தை வக்கிரமாக்கிக் கொண்ட பெண்ணின் நிலைதான் இது.

37 வயது மணமான பெண்ணின் அடாத செயல்: சென்னை சவுகார்பேட்டை பி.கே.ஆர். கார்டன் பகுதியில் வசித்து வருபவர் சுரேந்திரகுமார் (வயது 17) பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவன் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11 ம் வகுப்பு படித்து வந்தான். இதே பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிபவர் சுப்ரியா. (பெயர் மாற்றம்) 37 வயதான இவருக்கு திருமணமாகி 8 வயதில் மகன் இருக்கிறான். ஆசிரியை சுப்ரியா, மாணவன் சுரேந்திரகுமாரிடம் நெருங்கி பழகினார்.

காமத்தீயை மாணவனிடம் அணைக்க திட்டமிட்ட பாதகி: பாடம் கற்றுக் கொடுக்கும் ஆர்வத்தில் ஆசிரியை இப்படி நடந்து கொள்வதாக சுரேந்திரா நினைத்தான். ஆனால்

இளம் பையனை ஒரு பெண் சுலபமாக காமத்தில் ஈடுபட வைக்கலாம். அவ்வாறு பெரிய வயது பெண் செய்வதே பாவம் தான். ஆனால், புத்தி கெட்டுப்போன அந்த பெண் இத்தகைய செயலில் ஈடுப்பட்டுள்ளாள்.

நாளடைவில் சுப்ரியா அவனுக்கு காதல் பாடத்தை கற்றுக் கொடுத்தார். இதனால் குரு சிஷ்யன் உறவு மாறி 2 பேரும் காதல் வானில் சிறகடிக்க தொடங்கினர். பள்ளியில் காதலை கற்றுக் கொடுத்தது மட்டுமின்றி, மாலையில் டியூசன் என்ற பெயரிலும் சுப்ரியா, சுரேந்திராவுக்கு அறிவியலை கற்றுக் கொடுத்துள்ளார். செல்போன் மூலமாக ஆபாச எஸ்.எம்.எஸ். மற்றும் படங்களையும் சுப்ரியா அனுப்பினார்.

காமத்தீயில் எண்ணை ஊற்றி வளர்க்க கைவந்த கைகாரி: ஒருநாள் சுரேந்திரா வீட்டில் இருந்தபோது சுப்ரியா அனுப்பிய ஆபாச படம் அவனது செல்போனில் வந்து விழுந்தது. இதனை சுரேந்திராவின் பெற்றோர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கடந்த மாதம் யானைக்கவுனி போலீசில் புகார் செய்தனர்.

ருசி கண்ட பூனையை மாற்ற முடியாது. அந்த பெண், அப்பைனை அவ்வாறு தான் ஆட்டிப் படைக்கிறாள் என்று தெரிகிறது. இனி படிப்பு போய், காமத்தில் கிடக்க வேண்டியது தான். அலுத்துப் போன பிறகு, அந்த பெண், அப்பையனை உதறித்தள்ளப் போகிறாள்.

பள்ளியிலும் முறையிட்டனர். இதன்பிறகு ஆசிரியை மற்றும் மாணவனின் நலன் கருதி புகார் வாபஸ் பெறப்பட்டது. ஆசிரியை சுப்ரியாவை அழைத்து போலீசார் எச்சரித்து அனுப்பினர். இந்த நிலையில் கடந்த 4 ந்தேதி மாலையில் வீட்டை விட்டு சென்ற சுரேந்திரா பின்னர் வீடு திரும்பவில்லை. அப்பகுதி முழுவதும் தேடிப்பார்த்தும் அவனை கண்டுபிடிக்க முடியாததால் யானைக்கவுனி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவனை தேடினர்.

கணவனிடம் கிடைக்காததை இளம் பையனிடம் கண்ட காமப்பேய்: வியாசர்பாடியில் உள்ள ஆசிரியை சுப்ரியாவின் வீட்டுக்கு உடனடியாக தனிப்படை போலீசார் விரைந்து சென்றனர். ஆனால் அங்கு அவரையும் காணவில்லை. சுப்ரியாவும், சுரேந்திராவும் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது. 2 பேரும் தற்போது எங்கு இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. அவர்களை பிடிக்க போலீசார் வலை விரித்துள்ளனர். சுப்ரியாவின் செல்போனும், மாணவன் சுரேந்திராவின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்களை கண்டுபிடிப்பதில்

மணாமான பெண்கள் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். காமத்தைக் கணவனுடன் வைத்துக் கொண்டு திருப்தியாக வாழ வேண்டும். தமிழச்சி என்று சொல்லிக் கொண்டு பரத்தைப் போல வாழ்வது வாழ்க்கை அல்ல. கற்பு என்பதை மறந்து இப்படி காமத்தீயால் மாற்றவர்களை சுட்டுக் கொண்டிருந்தால், அது அவளையே அழித்து விடும்.

 போலீசாருக்கு தொய்வு ஏற்பட்டுள்ளது. யானைக்கவுனி இன்ஸ்பெக்டர் ராஜசேகர் விசாரணையை முடுக்கி விட்டுள்ளார். மாணவனுடன் ஓட்டம் பிடித்த ஆசிரியை சுப்ரியா கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். மாணவனை மீட்க போலீசார் நடவடிக்கை எடுத்துவரும் நேரத்தில் ஆசிரியை சிக்கினால் அவரை கடத்தல் வழக்கில் (மாணவர் மைனர் என்பதால்) கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். காதலுக்கு கண் இல்லை என்பார்கள் ஆனால் இன்று.. கள்ளக்காதலுக்கும் கண் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. குருவாக போற்றி மதிக்கப்படவேண்டிய ஆசிரியை ஒருவரே, தனது பள்ளியில் படிக்கும் 11 வது வகுப்பு மாணவனை மயக்கி காதல் வலையில் வீழ்த்திய சம்பவம் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதன் தொடர்ச்சியை கீழ் கண்ட பதிவில் காணவும்:

http://academicdegradation.wordpress.com/2012/03/20/37-years-old-elopes-with-17-years-boy-student/



குரூர-காம-கற்ப்பழிப்பாளி வில் ஹியூமை ஏன் தூக்கில் போடக்கூடாது?

மே 8, 2010

குரூர-காம-கற்ப்பழிப்பாளி வில் ஹியூமை ஏன் தூக்கில் போடக்கூடாது?

சென்னை உயர்நீதி மன்றம் வில் ஹியூமிற்கு கொடுத்த பிணைவிடுதலையை ரத்துச் செய்தது!

HC stays Dutchman’s bail in child porn case

TIMES NEWS NETWORK

http://epaper.timesofindia.com/Default/Scripting/ArticleWin.asp?From=Archive&Source=Page&Skin=TOINEW&BaseHref=TOICH/2010/05/08&PageLabel=3&EntityId=Ar00302&ViewMode=HTML&GZ=T

வில் ஹியூமை சிறைச்சாலைக்கு வெளியே விட்டால் தப்பித்துவிடுவான்“, சொல்வது அரசுத்தரப்பு வக்கீல்!: Chennai: The Madras High Court has stayed the bail granted to Dutch national Wilhelmus Weijdeveld, arrested in November last year on charges of uploading pornographic pictures of children on the internet from his Choolaimedu residence here.  Justice CS Karnan stayed his release after government advocate A Saravanan submitted that the magistrate had wrongly granted him bail and ordered his release even though the chargesheet had been filed by the Central Crime Branch police. If Wilhelmus, who is lodged in a special camp for foreigners, is allowed to remain outside the prison he might abscond, Saravanan argued.
மாஜிஸ்டிரேட் எப்படி தவறுதலாக விடுவித்திருக்கலாம்? அரசுதரப்பு வக்கீல் கூறுவதே வேடிக்கையாக உள்ளது. ஒரு அனைத்துலக, இன்டர்போல் தகவல் கொடுத்துப் பிடித்த குற்றாவஆளியை எப்படி, தவறுதலாக, ஒரு சாதாரண மாஜிஸ்டிரேட் விடுதலை செய்யலாம்? அநத அளவிற்கு சட்ட-ஞானம் இல்லாதவரா? ஏற்கெனெவே கைது செய்யப் பட்டு, பிணைவிடுதலை அளிக்கப் பட்டு, மரந்த வாழ்ந்தவன் தான் இந்த வில் ஹியூம்! ஆகவே, தமிழக அதிகாரிகள் தொடர்ந்து இப்படி அனுகூலமாகச் செயல்படுவது சந்தேகத்தைத் தான் எழுப்புகிறது.

பழையக் குற்றங்களைத் தவிர்த்து நீதிமன்ற அமர்வுகள் செல்லும் விதமும் சந்தேகத்திற்குரியவையாக உள்ளன: Concurring with these submissions and admitting the petition filed by the inspector of cyber crime cell of CCB on Friday, Justice Karnan also ordered notices to Wilhelmus. According to the prosecution, Wilhelmus was found to be uploading child pornographic pictures on the internet after a tip-off from the Child Exploitation on Online Protection Centre through Interpol in 2009. Invoking Section 67 of the Information Technology (Amendment) Act, a criminal case was registered and the 56-year-old Dutchman was arrested on November 6, 2009. During investigation, the police found that the accused had abused children in the neighbourhood as well, and hence added another charge punishable under Section 377 (unnatural offences) of the Indian Penal Code.
விஞ்ஞான முறைப்படியான கருத்தைப் பெறமுடியவில்லை” சொல்வது கிளாட்சன் ஜோஸ், இன்ஸ்பெக்டர்!:Explaining the reason for the police’s failure to file chargesheet within the 90-day period, after which an accused would get a statutory right to be released on bail, the investigation officer, inspector S Gladson Jose, said in the petition that the delay was because the scientific opinion of the analyst could not be obtained at short notice.
However, even before Wilhelmus could produce sureties for his release, the CCB filed the chargesheet on April 1. Once the chargesheet is filed, the right of the accused to go out on bail after the 90-day period would lapse, and he has to file bail pleas afresh before the court conducting the trial, the petition said. In the case of Wilhelmus, after a fast track court refused his bail plea, he approached the magistrate court again and convinced it to release him on bail, Jose said.
NO RESPITE: Wilhelmus