Posts Tagged ‘அனாதை’

முதியோர் இல்லம், ஆதரவற்றோர் காப்பகம் என்று சொல்லி, கால் சென்டர் மூலம் கவர்ந்து பணம் ஏமாற்றும் ஐ-டெக் கும்பல்கள் (2)

ஜனவரி 26, 2024

முதியோர் இல்லம், ஆதரவற்றோர் காப்பகம் என்று சொல்லி, கால் சென்டர் மூலம் கவர்ந்து பணம் ஏமாற்றும் டெக் கும்பல்கள் (2)

2020 – மோசடி செயலில் ஈடுபட்டு, கைதாகி, ஜாமீனில் வெளிவந்து, மறுபடியு மோசடியில் ஈடுபட்டது: சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்தவர் கோபி என்ற கோபி கிருஷ்ணன் (வயது 30). பட்டதாரியான இவர் நூதனமான முறையில் மோசடி செயலில் ஈடுபட்டு, கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டியவர்[1]. இவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றவர். குண்டர் சட்டத்திலும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்[2]. ஜாமீனில் வெளிவந்த இவர் மீண்டும் மோசடி தொழிலை தொடங்கி உள்ளார். சென்னை திருமுல்லைவாயலில் போலி கால் சென்டர் ஒன்றை தொடங்கி, அதில் ஏராளமான இளம்பெண்களை வேலைக்கு அமர்த்தினார். அந்த இளம்பெண்கள் பொதுமக்களுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசி, ஏதாவது ஒரு நிதி நிறுவனம் பெயரைச் சொல்லி, அந்த நிறுவனத்தில் குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி தருவதாக சொல்லி ஏமாற்றுவடு தான் அவர்கள்து வேலை. இது தொடர்பாக, செல்வராஜ் கொடுத்த புகார் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் நாகஜோதி மேற்பார்வையில், உதவி கமிஷனர் பிரபாகரன் தலைமையிலான தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, மோசடி மன்னன் கோபிகிருஷ்ணன், அவரது மேலாளர் வளர்மதி (30) உள்பட 12 பேர் நேற்று கைது செய்தனர். அவர்கள் நடத்திய போலி கால்சென்டரிலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

2024 – அன்னை தெரசா முதியோர் இல்லம் மோசடி: இதே பாணியில், அனாதை இல்லம், முதியோர் இல்லம், ஆசிரமம் என்று சொல்லிக் கொண்டு, கும்பல்கள் கிளம்பியுள்ளன. கால் சென்டர்களிலிருந்து, தொடர்ந்து பெண்கள் தொடர்பு கொண்டு, டொனேஷன் கேட்டுத் தொல்லை செய்வர். யாராவது, இரக்கப் பட்டு, பணம் கொடுத்தால் அபகரித்து விடுவர். அத்போன்ற , அனாதை இல்லம், முதியோர் இல்லம், இருக்காது. ஒரே இல்லத்தை ஐத்துக் கொண்டு, பல பெயர் / போர்டுகளை வைத்தும் ஏமாற்றி பணம் பறிக்கிறார்கள். பொதுவாக உதவி செய்கிறவர்கள், பென்சனர், முதலியோர்களது செல்போன் நம்பர்களை வைத்துக் கொண்டு [மற்ற நிறுவனங்களிலிருந்து பெற்றுக் கொண்டு] இவ்வாறு ஏமாற்றுகின்றனர். அவகையில், பெரம்பூரில், அன்னை தெரசா முதியோர் இல்லம் / ஓல்ட் ஏஜ் ஹோம் என்ற பெயரில், கால் சென்டர்களை வைத்து, மோசடி செய்து வருகின்றனர். புகார்கள் கொடுக்கப் பட்டுள்ளன.

அனாதை இல்லம், முதியோர் இல்லம், வாழ்வற்ற பெண்களுக்கு பாதுகாப்பு இல்லம் நடக்கும்-நடத்தப் படும் விதம்: கிறிஸ்துவ நிறுவனங்கள் அனாதை இல்லம், முதியோர் இல்லம், வாழ்வற்ற பெண்களுக்கு பாதுகாப்பு இல்லம் என்றெல்லாம் நடத்தி மோசடி செய்து சிக்கிக் கொண்டுள்ள செய்திகள் பல வந்துள்ளன. இந்நிலையில் கால் சென்டர் நடத்தி இதே முறையில் அப்பாவி மக்களை ஏமாற்றும் கூட்டங்களை பற்றிய செய்திகளும் வந்து கொண்டே இருக்கின்றன. சில இடங்களில், முதியோர் இல்லங்கள் நல்ல முறையில் சகல வசதிகளுடன் பாதுகாப்பு கொண்ட முறையில் இயங்கி வருகின்றன. பெரும்பாலும், இவர்கள் ஒன்று தாமே முன்வந்து அங்கு சேர்ந்து விடுகின்றனர் அல்லது மகன் – மகள் வெளிநாடுகளில் வாழும் அல்லது நிரந்தரமாகத் தங்கி விடும் நிலையில் இத்தகைய இல்லங்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால் அதே நேரத்தில் சிறிய அளவில் நடத்தப்படுகின்ற முதியோர் இல்லங்களில் தான் நிறைய பிரச்சினைகள் உண்டாகின்றன.

சிறிய அளவில் நடக்கும்முதியோர் இல்லங்கள்: அதாவது அவர்கள் சேவையை முன்னிலைப் படுத்திக் கொண்டு அத்தகைய இல்லங்கள் ஆரம்பித்தாலும், பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற உள்நோக்கம் தான் அவர்களுக்கு அதிகமாக இருக்கிறது. இதனால் தான் கருணை இல்லம் என்ற பெயரில் அவர்கள் நடத்தி வரும் இடங்களில் சென்று பார்த்தாரல், ஒரு பெரிய ஹால், அதில் ஒரு 10-20 கட்டிலில் போடப்பட்டு, வயதானவர்கள் எல்லாம் படுக்க வைக்கப்பட்டு இருப்பார்கள். சாப்பாடு கூட, ஒரு எளிய முறையில் தான், கொஞ்சமாக கொடுப்பார்கள். கழிவறை போன்ற வசதிகளெல்லாம் கூட குறைவாகத் தான் இருக்கும். இந்த 10-20 அல்லது 50-100 முதியவர்களுக்கு ஒன்று முறையே  ஐந்து-பத்து அறைகள் கூட இருக்காது. இதனால் அவர்கள் அங்கேயே, எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு, பிறகு சாப்பிட்டு,, தங்க வேண்டிய நெருக்கடி உள்ளது. மேலும் பல நேரங்களில் சமைப்பது, அறைகளை சுத்தம் செய்வது, ஏன் இந்த கழிப்பிடங்களை கூட சுத்தம் செய்யும் பணிகளில் இந்த முதியவர்கள் பணிக்கப்படுகிறார்கள்.

போலி இல்லங்கள் உருவாகும் விதம்: பணம் தான் பிரதானம் எனும் பொழுது, பல நேரங்களில் அவர்கள் சட்டப்படி பதிவு கூட செய்யாமல் இல்லங்களை நடத்தி வருகிறார்கள். சில பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மேலும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற கோணத்தில், இருக்கும் இடத்தையே இரண்டு மூன்று என்று பிரித்துக் காட்டி, வெவ்வேறு பெயர்களில் நடத்துவதாக பிரசாரம் செய்து இவர்கள் பண வசூல் நிலையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மத்திய-மாநில அரசு மானியங்கள் எல்லாம் கிடைக்கின்றன, வங்கிகளில் சில நிதி கிடைக்கின்றது போன்ற சலுகைகளை குறிவைத்து சம்பாதிக்க, இவர்கள் இத்தகைய வியாபாரத்தை செய்து வருகின்றனர். அயல்நாட்டு நிதியும் கிடைக்கும் பொழுது, மேன்மேலும் விசித்திரமான, குரூர கொடூரங்கள், குற்றங்களும் நடக்கின்றன. ஆனால், பல்வேறு காரணங்களுக்காக, அவை அமுக்கப்படுகின்றன, மறைக்கப் படுகின்றன.

கால்சென்டர் மூலம் முதியோர் இல்ல மோசடிகள்: மேன்மேலும் பணம் சம்பாதிப்பது எப்படி என்ற முறையில் தான் கால் சென்டர் வைத்துக் கொண்டு செய்யும் மோசடியும் இதில் சேர்ந்து உள்ளது. இருக்கின்ற ஆதரவு இல்லங்களில் நன்கொடை கொடுப்பவர்களின் விலாசம் செல்போன் நம்பரை எடுத்துக் கொண்டு, கால் சென்டர்கள் அமைத்து, அவற்ரிலிருந்து, அவர்களுக்கு அடிக்கடி தொடர்பு கொண்டு நன்கொடை கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அவர்களும் ஒரு முறை செய்வது என்பது சாதாரண நிலையாக தான் இருக்கின்றது. ஆனால், மேன்மேலும் அவர்கள் தொந்தரவு செய்யப்படும்போது, அவர்களுக்கு ஒரு சந்தேகம் வருகிறது. அந்நிலையில் தான், அவர்கள் பணத்தை கொடுத்து, பிறகு நேரில் சென்று பார்க்கலாம், என்று சென்று பார்த்தால் அத்தகைய நிறுவனமே இல்லாதது கண்டு திகைக்கின்றனர், அப்பொழுது போலீஸிடம் புகார் கொடுக்கின்றனர். பிறகு விசாரணையில் உண்மை வெளிவருகிறது.

2024ல் பெரம்பூரில் தெரசா பெயரில் போலி இல்லம்: ஒரு நாளைக்கு குறைந்தது 100 பேரிடம் பேச வேண்டும் என டார்கெட் கொடுத்து அந்த பெண்களை வேலைக்கு அமர்த்துகிறார்கள். மாதம் ரூ.8,000 முதல் 15000 வரை சம்பளம் அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. மேலும் அவ்வாறு அந்த பெண்கள் பேசி அதன் மூலம் பணம் கிடைத்து விட்டால், அதற்கும் கூடுதல் கமிஷன் கொடுக்கப்படுகிறது. இவ்வாறு டார்கெட் அமைத்து பொதுமக்களை இவர்கள் ஏமாற்றி வருகின்றனர் அவ்வாறு வாங்கப்படும் பணம் உண்மையிலேயே முதியோர் இல்லங்கள் கருணை இல்லங்களுக்கு செலவிடப்படுகிறது என்று பார்த்தால், கண்டிப்பாக கிடையாது. குறிப்பிட்ட அட்ரெஸ் வைத்திருக்கும் நபர்கள் சொகுசு பங்களா, கார், வெளிநாட்டு சுற்றுலா என்று ராஜபோகம் வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். இது அறியாத அப்பாவி பொதுமக்கள் ஏழைகளுக்காக பணம் கேட்கிறார்கள் என்று நினைத்து தங்களால் முடிந்த உதவிதைகளை செய்கின்றனர். பணக்காரர்களிடம் பணத்தைப் பெற்று அங்கு இருப்பவர்கள் அவர்களுக்காக வசூல் செய்கின்றனர். அந்த வகையில் சமீபத்தில் பெரம்பூரைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தை போலீசார் ஆய்வு செய்தபோது கார்ப்பரேட் கம்பெனி போல அந்த நிறுவனம் இயங்கி வந்தது தெரியவந்துள்ளது. பிறகு ஏமாந்தவர் கொடுத்த புகாரில் அங்கு சென்று சோதனை மேற்கொள்ளப்பட்ட போது அங்கு :மதர் தெரசா ஓல்ட் ஏஜ் ஹோம்” என்று ஒருவர் நடத்துவதாக தெரிந்தது. அதன் தலைவர் தலைமறைவாகி விட்டதால்,போலீசார் தேடி வருகின்றனர்.

© வேதபிரகாஷ்

26-01-2024


[1]  மாலைமலர், போலி கால் சென்டர் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சுருட்டல்மோசடி மன்னன் உள்பட 12 பேர் கைது, By மாலை மலர், 30 செப்டம்பர் 2020 7:57 AM (Updated: 30 செப்டம்பர்).

[2] https://www.maalaimalar.com/news/district/2020/09/30075722/1931037/Fake-CallCentre-conducting-Case-12-arrested-in-Chennai.vpf?infinitescroll=1

சென்னை போர்னோகிராபி வியாபார தம்பதியர் கைது – எச்சரிக்கை – அபாயகரமான சமூக தாக்குதல், செக்ஸ்-தீவிரவாதம் மற்றும் சமுதாய சீரழிவு!

ஜூலை 28, 2016

சென்னை போர்னோகிராபி வியாபார தம்பதியர் கைது எச்சரிக்கைஅபாயகரமான சமூக தாக்குதல், செக்ஸ்தீவிரவாதம் மற்றும் சமுதாய சீரழிவு!

Child porno couple arrested -Malai malarசினிமா, செக்ஸ், போர்னோகிராபி, ஆண்பெண் அந்தரங்க காட்சிகளை வெளியிடும் ஆபாச வலைத்தளங்களின் பயங்கரம்: இணையதளங்களுக்கான தேடல்களில் பொதுவாக உபயோகமுள்ள தகவல்களுக்காக தெடி, பலன் பெற்று வரும் நேரத்தில், சினிமா, செக்ஸ், போர்னோகிராபி, ஆண்-பெண் அந்தரங்க காட்சிகளை வெளியிடும் ஆபாச வலைத்தளங்களில் உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் அதிக நேரத்தை செலவிட்டு வருவது, தெரிந்த விசயமாகவே இருக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் தென்மேற்காசிய, அப்பிரிக்க நாடுகளில் இத்தகைய காரியங்களுக்கு விநியோகம் செய்ய, படங்கள், திரைப்படங்கள் முதலியவற்றை எடுத்து அனுப்பிக் கொண்டிருப்பது, ஒரு வேலையாகவே நடந்து வருகிறது. இருப்பினும், குழந்தை-உடலுறவு காட்சிகள் தடை செய்யப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக, சிறுவர்-சிறுமியர் தொடர்புடைய ஆபாச வலைத்தளங்களுக்கு (child pornography) உலகில் பல நாடுகள் தடை விதிக்கப்பட்டிருப்பதால் இதுபோன்ற வலைத்தளங்களுக்கு அதிக கிராக்கியும், மவுசும் உண்டு[1]. மேற்படி காட்சிகளை இணையத்தில் பதிவேற்றம் செய்து அவற்றை பார்க்கவரும் ‘ரசிகர்களிடம்’ ஏராளமான கட்டணம் சந்தாவாக வசூலிக்கப்படுகிறது[2].

Shady_homes_orphanages

Shady_homes_orphanages

சென்னையில் குழந்தை போர்னோகிராபி புதியதல்ல: மும்பு, வில் ஹியூம் என்ற டச்சுநாட்டுக் காரன், சென்னையிலேயே பல வருடங்கள் தங்கியிருந்து, இத்தகைய வேலையை செய்து வந்தான். பிறகு, மாட்டிக் கொண்டு, இப்பொழுது புழல் சிறையில் தண்டனை பெற்று வருகிறான். டாக்டர் பிரகாஷும் அதே வேலையை செய்துதான் மாட்டிக் கொண்டான். அதாவது, சென்னைவாசிகள், அனாதை இல்லங்கள் நடத்துபவர்கள், குழந்தைகளை இல்லங்களுக்குக் கூட்டி வருவது, அவர்களை அத்தகைய காரியங்களில் ஈடுபடுத்துவது, வீடியோ எடுப்பது என்ற நிலைகளில் பலர் நேரிடையாகவும், மறைமுகமுகமாகவும் செயல்பட்டுவருவது தெரிகிறது. சமூகத்தை சீரழிக்கிறோமோ என்ற எண்ணாமே அவர்களுக்கு இல்லாமல் இருந்தது நோக்கத்தக்கது. இந்நிலையில், தமிழகத்தின் தலைநகரான சென்னையின் அருகாமையில் வசித்துவரும் ஒரு தம்பதியர் இதுபோன்ற குழந்தைகளின் பாலியல் உறவு தொடர்பான காட்சிகளை வெளியிடும் கட்டண வலைத்தளத்தை நடத்தி வருவதாக சைபர் கிரைம் போலீசாருக்கு தெரியவந்தது[3]. இதையடுத்து, அந்த வலைத்தளத்தில் ஆபாசப் படங்களை பதிவேற்றம் செய்பவர்களின் ஐ.பி. நம்பர் மற்றும் இமெயில் ஐ.டி.க்களை மோப்பம் பிடித்த போலீசார் சென்னை அருகேயுள்ள சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அதிரடி ரெய்டு நடத்தினர்[4]. அங்கிருந்தபடி மேற்படி ஆபாசப் படங்களை பதிவேற்றம் செய்ய இந்த தம்பதியர் இரண்டு வலைத்தளங்களை நடத்தி வந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது[5].

Child porno couple arrested -Webdunia

கோடிகளில் புரளும் போனோகிராபி தொழில்: பர்மா பஜார் பக்கம் யாராவது நடந்து சென்றால், சிலர் அணுகி, “என்ன சார், அந்த…..சிடி வேண்டுமா, டிவிடி வேண்டுமா” என்று கேட்டு பின்னாலேயே வருவர். அதற்காக வருபவர்கள் மற்றும் சபலபுத்து கொண்டவர்கள் வாங்கிக் கொண்டு பார்ப்பர். பிறகு  செயல்முறையில் கிடைக்குமா என்று தேடி போகவும் செய்வர். வெறும் பார்த்துக் கொண்டே இருப்பவர்கள், இணைதளங்களில் தேடும் போது பலான படங்கள், வீடியோக்கள் கிடைக்கும். இந்த வலைத்தளங்களை பார்வையிட வரும் வாடிக்கையாளர்களிடம் இருந்து 2 கோடியே 40 லட்சம் ரூபாயை கட்டணமாக வசூலித்துள்ளதாகவும், மேற்படி தொகை பெங்களூரில் உள்ள ஒரு வங்கி கணக்கில் செலுத்தப்பட்டதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்[6].

Child porno couple arrested -ANNநன்கு  படித்த சென்னை தம்பதியர் இத்தொழிலில் ஈடுபட்டது: இதையடுத்து, இந்த ஆபாச வலைத்தளங்களை நடத்திவந்த சித்தாத்தா வேலு (Siddhartha Velu 48) மற்றும் அவரது மனைவியான பிரிசில்லா மார்கரெச் தன்ராஜ் (Priscilla Margaret Dhanraj 45) ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சித்தார்த்த வேலு பிஎச்டி பட்டதாரி[7] / பள்ளிப்படிப்பே முடிக்காதவன்[8] என்றும் ஊடகங்கள் வழக்கம் போல மாறுபட்ட விவரங்களைக் கொடுக்கின்றன[9]. அவன் படித்தானா-இல்லையா என்ற விவரத்தை விட, மனிததன்மையற்ற அவன், இத்தகைய குரூர வேலை செய்தான் என்பது தான் அபாயகரமான விசயம். திருச்சியைச் சேர்ந்த இவன், வேலூரைச் சேர்ந்த பிரிசில்லாவை 2011ல் திருமணம் செய்து கொண்டான். இவன் நெட்வொர்கிங், வெப்ஹோஸ்டிங் முதலிய வேலைகளில் கில்லாடி. பிறகு “Cutecandid, indianshowgirls, mywife4u, indianswington, shakeela4u” முதலிய வெப்சைட்டுகளை உருவாக்கினான்[10].  இணைதள அறிவு, ஞானம், தொழிற்நுட்பம் எப்படி இதுமாதிரியான தீவிரவாதிகளில் சிக்கும் போது, துஷ்பிரயோகிக்கப் படுகிறது என்பதனையும் அறிந்து கொள்ளலாம். இதன் மூலம் தான் பலரது வாழ்க்கையினை கெடுத்துள்ளார்கள் இந்த தம்பதியர். தமது பையனை சிங்கபூரில் படிக்க வைக்கின்றனராம். தன் மகன் நன்றக இருக்க வேண்டும், மற்ற பிள்லைகள் நாசமாக வேண்டும் என்ற இவர்களின் வன்மத்தைக் கவனிக்க வேண்டும். பிறகு எப்படி மற்ற சிறுவர்-சிறுமியரை அத்தகைய வேலைகளில் ஈடுபடுத்தினர். இத்தகைய வக்கிரபுத்தி, அரக்கத்தனம் நிரம்பிய மனோப்பாங்கு முதலியவற்றை அடையாளங்கொண்டு, இவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்.

Siddhartha Velu, Priscillika couple arrested 27-07-2016.விசாரணைக்குப் பிறகு, கைது முதலியன: இவர்கள் இருவரும் இங்கிலாந்து, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் வசிக்கும்போது பல்வேறு இணையதளங்களை தொடங்கி, அவற்றில் ஆபாசபடங்களை குறிப்பாக சிறுவர், சிறுமிகளின் ஆபாச படங்களை வெளியிட்டு கோடி, கோடியாக பணத்தை சம்பாதித்து வந்தனர்[11]. அவர்கள் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சென்னைக்கு இருப்பிடத்தை மாற்றி விட்டனர்[12]. முன்னர் பெங்களூரில் இருந்தனர் என்று செய்திகள் அறிவிக்கின்றன[13]. இவ்வாறன இடங்கள் ஏற்கெனவே பிடோபைல்களுடன் சம்பந்தப்பட்டிருப்பதை நினைவு கூறவேண்டும். அதுமட்டுமல்லாது, அங்கிருக்கும் கிருத்துவ அனாதை இல்லங்கள், காப்பங்களில் பிடோபைல்களின் காமக் களியாட்டங்கள், செக்ஸ் வக்கிரகங்கள் நடந்தேறியுள்ளன. ஊடகங்கள் அவ்வாறான இணைப்புகளை, சம்பந்தங்களை எடுத்துக் காட்டாவிட்டாலும், நடந்து வரும் சமூக பிறழ்சிகள், செக்ஸ்-குற்றங்கள், முதலியவற்றை பல நோக்குகளில் கவனிக்க வேண்டியுள்ளது. சமூகத்தை பாதிக்கும், இத்தகைய வக்கிரங்களை எந்த சமூக ஆர்வலரும் பொறுத்துக் கொள்ள முடியாது, பெண்ணிய சித்தாந்திகளும் அடங்கியிருக்க முடியாது. ஆனால், இத்தகய விசயங்கள் வரும் போது, அவர்கள் அமுக்கியே வாசித்து வருகின்றனர் அல்லது அமைதியாக இருந்து விடுகின்றனர்.

Siddhartha Velu, Priscillika arrested 27-07-2016

எப்படி சிக்கினர்?:  துரைப்பாக்கத்தில் பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தனர். அனாதை ஆசிரமங்களில் வசிக்கும் சிறுவர், சிறுமிகளை ஆபாசமாக படம் பிடித்து அந்த படங்களை, இணையதளங்களில் வெளியிட்டதாக இவர்கள் மீது புகார்கள் வந்தன. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. சைபர் கிரைம் போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டனர்[14]. இணைதள குற்றங்களை ஆராய்ந்து வரும் “சைபர்” பிரிவு போலீஸார், வல்லுனர்களின் உதவியுடன், அத்தகைய படங்கள் எங்கிருந்து தகவேற்றம் செய்யப்படுகின்றன முதலிய விவரங்களைக் கண்டுபிடித்து, குற்றவாளிகளை நெருங்கினர். சித்தார்த்த வேலு வசித்த வீட்டில் சோதனை நடத்தி, ஆபாச படங்கள் உள்ளிட்ட நிறைய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்[15]. முன்னர் அரசு ஆபாச தளங்களை முடக்கிய போது, இவை எப்படி தப்பித்தன என்று தெரியவில்லை. “சர்வர்” இந்தியாவில் இல்லை என்ற முறையில் தப்பித்தனவா அல்லது வேறேந்த காரணங்கள் உள்ளனவா என்று ஆராய வேண்டியுள்ளது. அவர்கள் செய்துவந்த குற்றமீறல்களுக்காக சம்பந்தப்பட்ட ஆதாரங்களும் கிடைத்தன[16]. தீவிர விசாரணைக்குப்பிறகு சித்தார்த்த வேலுவும், அவரது மனைவி பிரிசில்லா மார்க்கரேட்டும் 27-07-2016 புதன்கிழமை அன்று தகவல் தொழிற்நுட்பம் சட்டம் பிரிவுகளில் கைது செய்யப்பட்டனர்[17]. பிறகு 9வது குற்றவியல் மெட்ரோபோலிடின் மாஜிஸ்ட்ரேட் முன்னர் ஆஜர் செய்யப்பட்டனர்[18]. முறைப்படியான சட்டமுறைகளுக்குப் பிறகு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்[19]. இது பிடிஐ செய்தி ஆனதால், ஆங்கில ஊடகங்கள் அப்படியே போட்டிருக்கின்றன.

© வேதபிரகாஷ்

26-07-2016

[1] மாலைமலர், சிறுவர், சிறுமியர் உறவுகொள்ளும் ஆபாசப் படங்களை வெளியிட கட்டண வலைத்தளம் நடத்திய தம்பதியர் கைது, பதிவு: ஜூலை 27, 2016 08:55

[2]  http://www.maalaimalar.com/News/TopNews/2016/07/27085555/1028540/TN-couple-host-child-pornography-websites-held.vpf

[3] தமிழ்.வெப்துனியா, சிறுவர்கள் ஆபாச வலைத்தளம் நடத்திய கணவன் மனைவி கைது, Last Modified: புதன், 27 ஜூலை 2016 (13:02 IST)

[4] http://www.tamil.webdunia.com/article/regional-tamil-news/couple-arrested-for-running-a-porn-website-116072700021_1.html

[5] தமிழ்.ஒன்.இந்தியா, கேவலம்.. குழந்தைகளின் ஆபாச படங்களை வெப்சைட்டில் வெளியிட்டு ரூ.2.4 கோடி வசூல்! சென்னையில் தம்பதி கைது, By: Veera Kumar, Published: Wednesday, July 27, 2016, 12:18 [IST].

[6] http://tamil.oneindia.com/news/tamilnadu/chennai-couple-arrested-running-child-porn-websites-258928.html

[7] பத்ரிகா.காம், இளம்வயது சிறுவர், சிறுமிகளின் ஆபாச இணையதளம்தம்பதியர் கைது, Posted by ஏ.டி.எஸ்.பாண்டியன், Wednesday, ஜூலை 27, 2016. 1.00 pm.

[8] Police sources said, Siddhartha Velu, a native of Trichy was married to Priscillika from Vellore five years ago. The couple shifted to chenai and rented a house in sholinganallur. During investigations, it was revealed that Siddhartha, a school drop out was well versed in networking and webhosting.

[9] https://www.patrikai.com/adolescent-porn-website-couple-arrested/

[10] Velu hit upon the idea of child porn as he thought there weren’t many websites on it in India. He started two child porn websites -‘cutecandid’ and ‘indianshowgirls’. Later, he floated three more web portals, `mywife4u’, `indianswingtown’ and `shakeela4u’. The websites displayed contact email ids. The websites that had a paywall were linked to Velu’s bank account through an international money portal. Payments had to be made to view content.

http://timesofindia.indiatimes.com/city/chennai/Chennai-couple-held-for-running-child-porn-sites/articleshow/53410712.cms

[11] தினத்தந்தி, சிறுவர்,சிறுமிகளின் ஆபாச இணையதளம் நடத்தி வந்த சென்னை கணவன்மனைவி கைது, பதிவு செய்த நாள்: புதன், ஜூலை 27,2016, 11:38 AM IST; மாற்றம் செய்த நாள்: புதன், ஜூலை 27,2016, 11:38 AM IST

[12] Business Standard, TN couple host child pornography websites, held, Press Trust of India  |  Chennai July 27, 2016 Last Updated at 00:07 IST

[13] http://www.business-standard.com/article/pti-stories/tn-couple-host-child-pornography-websites-held-116072700012_1.html

[14] http://www.dailythanthi.com/News/State/2016/07/27113809/Girls-porn-picture-Published-on-the-website-The-husbandwife.vpf

[15] Deccan Chronicle, Chennai couple arrested for allegedly running child porn websites,

PTI, PublishedJul 27, 2016, 9:29 am IST; UpdatedJul 27, 2016, 9:29 am IST

[16] Indiatoday, Chennai techie couple earned Rs 2 crore from child porn sites, arrested, Rohini Swamy | Posted by Liu Chuen Chen,Chennai, July 27, 2016 | UPDATED 09:44 IST

Ihttp://indiatoday.intoday.in/story/chennai-couple-arrested-for-running-child-porn-sites/1/724907.html

[17] A case was registered under provisions of Information Technology Act and searches were conducted at the residence of the couple at Sholinganallur in Chennai. Materials establishing the couple’s links with these two child porn websites besides other websites with porn content were recovered and seized, the release said.

http://www.deccanchronicle.com/nation/crime/270716/chennai-couple-arrested-for-allegedly-running-child-porn-websites.html

[18] Indian Express, Couple who made a fortune running child porn site arrested in Chennai

Published: 27th July 2016 12:16 AM; Last Updated: 27th July 2016 06:37 AM

[19] http://www.newindianexpress.com/cities/chennai/Couple-who-made-a-fortune-running-child-porn-site-arrested-in-Chennai/2016/07/27/article3548708.ece

 

மூத்திர அமைச்சர் மாநிலத்தில் நடக்கும் தண்ணீர் ஊழல் – குடிக்க நீரில்லை, ஆனால் ஐபிஎல், சினிமா, தொழிற்சாலைகளுக்கு நீர் மலிவாக விற்கப்படுகிறது!

ஏப்ரல் 11, 2013

மூத்திர அமைச்சர் மாநிலத்தில் நடக்கும் தண்ணீர் ஊழல் – குடிக்க நீரில்லை, ஆனால் ஐபிஎல், சினிமா, தொழிற்சாலைகளுக்கு நீர் மலிவாக விற்கப்படுகிறது!

காங்கிரஸ் என்றாலே ஊழல், ஊழ ல்என்றாலே காங்கிரஸ்: காங்கிரஸ் என்றாலே ஊழல், ஊழல் என்றாலே காங்கிரஸ் என்ற நிலைக்கு வந்தபிறகு, வெட்கம், மானம், சூடு, சொரணை[1] எல்லாம் போன பிறகு, தண்ணீரிலும் ஊழல் செய்துள்ளனர் மஹாராஷ்ட்ரா காங்கிரஸ்காரர்கள். பெயர் சிறியது மாறியிருந்தாலும், “தேசியவாத காங்கிரஸ்ஸென்றாலும், காங்கிரஸ் இருக்கும் போது ஊழலும் வந்து விடுகிறது. நீர்பாசன வேலைகளை தாமதிப்படுத்தியதால் அரசிற்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது குறித்து, ஊழல் புகார் எழ, அதை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது[2].

Drought-IPL-Pardaphash-78158

ஐபிஎல் கிரிக்கெட் மைதானத்தை சமன் படுத்த தண்ணீர் தெளித்தல்: சரத் பவார் ஐபிஎல் மூலம் கோடிகளை அள்ளுகிறார் என்பது தெரிந்த விஷயமே. இந்நிலையில், மும்பை ஐபிஎல் நடக்கும் மைதானத்தில் தண்ணிர் தெளித்து, சமன் செய்து சீராக்க காலன் கணக்கில் அரசு தண்ணீரை மிகவும் குறைவான விலைக்கு விற்றுள்ளது. மக்கள் லிட்டர் தண்ணிரை ரூ.10/- என்று கொடுத்து வாங்கும் நிலையில், லிட்டர் 6 பைசா வீதத்தில் அரசு விற்றுள்ளது. அநியாயம் என்றவென்றால், அத்துறையின் அமைச்சரே என்.சி.பி கட்சியைச் சேர்ந்தவர் என்பதுதான்! இதை பிஜேபி எதிர்த்தாலும் கண்டுகொள்ளவில்லை[3]. ஒருநாளைக்கு 60,000 லிட்டர் வீதம் ஏப்ரல் 9 முதல் மே மதம் 15 வரை 36 நாட்களுக்கு இப்படி தண்ணிரை உபயோகப்படுத்தினால் என்னாவது என்று வினோத் தாவ்டே கேட்டபோது, அரசு, “அட போய்யா, ஐபிஎல் என்றல் இதெல்லாம் சகஜமய்யா” என்ற ரீதியில் பதில் சொல்லியுள்ளது[4].

ajit_pawar_waterloo-courtesy-IBN-CNN

வரட்சியை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கும் தலைவரைப் பார்க்க ஹெலிகாப்டர்,  ஹெலிகாப்டர் இறங்க தண்ணீர் தெளிப்பு: இதனிடையே னனத்துறை அமைச்சர், படங்க்ரோ கடம் என்பவர், ஔரங்காபாதில் உண்ணாவிரதம் இருக்கும், பிஜேபி தலைவர் கோபிநாத் முண்டேயைச் சந்திக்க ஹெலிபகாப்டரில் சென்றுள்ளார். ஆனால், அவர் இறங்க வேண்டிய இடத்தில் மண்புழுதி அதிகமாக இருந்ததால், இறங்கும் நேரத்தில், ஹெலிகாப்டர் இறக்கைகள் சுற்றுவதினால், அதிக புழுதி எழும்பும் என்று, ஆயிரக் கணக்கான லிட்டர் தண்ணீரை டேங்கட்கள் மூலம் எடுத்துவரப்பட்டு, தெளித்து இறங்கும் இடத்தை சரிபடுத்தி உள்ளனர்[5].

Ajit muthralayam - Ajit Urinal in Jalana

ஷாருக்கான் சினிமாவிற்கு தண்ணீர்: ஷாருக் கான் விடுவாரா, இந்நேரத்தில் சூட்டிங் எடுக்கிறேன் என்று கிளம்பி விட்டார். சத்தாராவில், “சென்னை எக்ஸ்பிரஸ்” படத்திற்கு, தண்ணீர் உபயோகித்துள்ளனர். கிராம மக்கள் அறிந்து, எதிர்த்துள்ளனர்[6]. இவர் மற்ற கான்கள் எல்லாம், விளம்பரத்தில் தாங்கள் என்னமோ பெரிய தியாகிகள், தேச பக்தர்கள் போல காட்டிக் கொள்கிறார்கள். ஆனால், நிஜவாழ்க்கையில் அப்படி அல்ல. பணம் இருப்பதால், அவ்வாறு தங்களை “மகான்கள்” போல காட்டிக் கொள்கிறார்கள். அப்பாவி மக்களை சினிமா மோகத்தில் ஏமாற்றி வருகிறார்கள்.

Indian urinal

தண்ணீர் முதலி ல்குடிக்க, பிறகு தொழிற்சாலைகளுக்கு,  கடைசியாகத்தான் விவசாயத்திற்கு: மூத்திர அமைச்சர்[7] இத்தகைய தண்ணீர் கொள்கையைக் கடைபிடித்து வருவதாக, புனேவைச் சேர்ந்த ஒரு அரசு-சாரா நிறுவனம் குற்றஞ்சாட்டியுள்ளது. ஆனால், மஹாராஷ்ட்ரா அரசு, வழக்கு உயர்நீதி மன்றத்திற்கு போகும் முன்னர், சட்டத்தைத் திருத்தி, அதனை சட்டரீதியாக்கி விட்டார்கள்! இதனால், சட்டரீதியாக ஒன்றும் தவறு இல்லையே, தொழிற்சாலைகளுக்கு நீரை விற்றிருந்தாலும், அது ஊழல் என்று சொல்ல முடியாதே என்றெல்லாம் வாதிக்க ஆரம்பித்துள்ளனர், காங்கிரஸ்காரர்கள். வேடிக்கை என்னவென்றால், அதிகபட்ச சர்க்கரை ஆலைகள் தேசியவாத காங்கிரஸ் தலைவர்களுக்த்தான் சொந்தமாக இருக்கின்றன. அவற்றிற்குத்தான் இந்நீர் கொடுக்கப்பட்டுள்ளது[8].

வேதபிரகாஷ்

11-04-2013


[1] சிறுநீர் கழிக்குமிடத்திற்கு, அஜித் பவார் பெயர் வைக்கப்பட்டுள்ளது. மக்கள் கொதித்து விடுவார்கள் என்று காங்கிரஸ்காரகள் அடக்கி வாசிக்கின்றனர். இல்லையென்றால், மேற்கு வங்காளம்மாதிரி ஆகியிருக்கும்.

https://socialterrorism.wordpress.com/2013/04/10/urinal-named-after-ajit-pawar-in-jalna/

[2] According to Mr Khadse, during the Nagpur session last year, the minister had stated that a special SIT would be instituted to investigate the inordinate delay in the completion of a slew of irrigation projects, resulting in heavy losses to the state exchequer.

http://www.ndtv.com/article/india/maharashtra-irrigation-scam-privilege-notice-against-minister-342031

[4]  With just two days to go for its sixth season, the Indian Premier League (IPL) is already surrounded by controversies. Maharashtra Opposition leader Vinod Tawde has objected to the use of water in stadiums in the drought-hit state. Tawde argues that pitch maintenance in these stadiums will consume 60,000 litres of water every day. “As per my knowledge, 60,000 litres of water would be used to maintain a cricket ground every day. Thus, during the entire season of IPL matches spread over 36 days (from April 9 to May 15 in Maharashtra), 21.6 lakh litre water will be used for a single ground,” Tawde said in a letter to IPL chief Rajeev Shukla. While acknowledging that the IPL matches would help the state government earn some revenue, he asked whether it would be appropriate to waste so much water on organising IPL matches when several parts of Maharashtra were facing drought. “Taking into consideration the plight of the drought-affected people, I hope that you will take an appropriate decision on holding the IPL tournament(in the state),” the BJP leader said.

http://ibnlive.in.com/news/maharashtra-bjp-leader-objects-to-use-of-water-in-stadiums-for-ipl/382370-37-64.html

[5] Even as Maharashtra faces one of its worst droughts in four decades and people are forced to drink dirty water, thousands of litres of water was wasted during Maharashtra Forest Minister Patangrao Kadam ‘s visit to Marathwada region on Tuesday (09-04-2013). Kadam visited Aurangabad on Tuesday to meet BJP leader Gopinath Munde, who is sitting on a fast against Maharashtra government’s policy to tackle drought, and convince him to end his protest. Due to the hot weather, the area around the helipad in Aurangabad where Kadam’s helicopter was to land had a lot of dust. So several thousand litres of water was sprayed on the helipad to ensure that there is no dust when the helicopter lands.The opposition parties have alleged that the water tankers brought to supply water to the drought affected people in Aurangabad were used to spray water on the helipad and nearby areas.

http://ibnlive.in.com/news/maharashtra-drought-water-used-to-settle-dust-for-ministers-chopper/384373-3-237.html

[8] Water from dam being diverted to mills owned by NCP leaders, allege activists. Pune and Solpaur, in fact, have the highest concentration of sugar mills. Altered cropping pattern with the focus on water-guzzling crops like sugarcane has resulted in the depletion, also depriving so many of drinking water.</p>

http://ibnlive.in.com/news/maha-water-from-dams-being-diverted-to-mills-owned-by-ncp-leaders/384232-37-64.html

பத்மா முதலியார், நாடார் மரத்தொட்டி, நாயர் டீ ஸ்டால், செட்டியார் மெஸ், முதலியார் கடை, தேவர் ஹோடல், ஐயங்கார் பேக்கரி, ஹலால் மாமிசக் கடை, பிராமணாள் கபே!

ஒக்ரோபர் 24, 2012

பத்மா முதலியார், நாடார் மரத்தொட்டி, நாயர் டீ ஸ்டால், செட்டியார் மெஸ், முதலியார் கடை, தேவர் ஹோடல், ஐயங்கார் பேக்கரி, ஹலால் மாமிசக் கடை, பிராமணாள் கபே!

ஜாதிகளை ஒழிப்போம் என்று சாதிகளைப் பெருக்கிய திராவிடத்துவ ஞானிகள்: ஜாதியில்லை என்று சொல்லிக்கொண்டு சாதிகளைப் பெருக்கிக் காட்டிப் பட்டியல்களை நீட்டிக் கொண்டிருப்பது திராவிடத்துவத்தில் தான்! இதனை திராவிடத்துவவாதிகள் மாபெரும் சாதனையென்றும் பறைச்சாற்றிக் கொண்டிருக்கிறார்கள்[1]. ஜாதிகளை ஒழிக்க அம்பேத்கார் பாடுபட்டார், ஆனால், அவர் பெயரைச் சொல்லிக் கொண்டே சாதித்துவத்தையும் வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது பெரியார் பெயரை வைத்துக் கொண்டு திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், பெரியார் பாசறை, என்று பற்பல இயக்கங்கள் இயங்கிக் கொண்டு வருகின்றன. இவற்றில் பெரும்பாலும் ஜாதி-எதிர்ப்பு என்ற பெயரில் அப்பாவி பிராமணர்களைத் தாக்கி வருகின்றனர்.

ஜாதி-எதிர்ப்புப் போர்வையில் பிராமணர்கள் தாக்கப்படுவது: பழைய மாம்பலத்தில் அயோத்தியா மண்டபத்தின் வாசலில் இரு பிராமணர்களைத் தாக்கி, கத்தியால் வெட்டியதை நினைவில் கொள்ள வேண்டும். பூணூலை அறுக்கிறேன் என்று நூற்றுக் கணக்கான பிராமணர்கள் தாக்கப் பட்டிருக்கிறார்கள். அதில் “தி ஹிந்துவை”ச் சேர்ந்த கணபதி என்பவரும் அடக்கம். சம்பந்தமே இல்லாத ஒரு ராகவேந்திரர் மடத்தில் நுழைந்து விக்கிரங்களை உடைத்து, அசிங்கம் செய்த போது அங்கிருந்த ஒரு பிராமணர் அழுது புலம்பியதை நாளேடுகளில் பார்த்திருக்கலாம். இப்படி பிராமணர்கள் என்றாலே கிண்டல் செய்வது, அவதூறு பேசுவது, கொச்சையாக வார்த்தைகளை வீசுவது முதலியன பொது இடங்களிலிருந்து, பத்திரிக்கைகள், சினிமாக்கள், ஊடகங்களில் அதிகமாகவே இருந்து வருகின்றன. இபோழுது கூட, சின்மயி ஸ்ரீபாத என்ற தமிழ் சினிமா பாடகி அத்தகைய தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். கைது செய்யப்பட்டப் பிறகும், குற்றவாளிகள் சமரசம் செய்து கொள் என்று மிரட்டி வருகின்றனர்.

பிராமணாள்கஃபேயைத் தொடங்கிய கிருஷ்ண ஐயரும் கிருத்துவப் பிரசங்கம் செய்யும் மணி ஐயரும்: ஸ்ரீரங்கத்தில் கிருஷ்ண அய்யர் என்பவர் பிராமணாள் கஃபே என்ற ஹோட்டலை நடத்தி வருகிறார்.  ஸ்ரீரங்கத்தில் 34/24, பாவை டவர்ஸ், ஈ.வி.எஸ். ரோட் என்னும் முகவரியில் கிருஷ்ணன் என்பவர்  நடத்தி வரும் ” ஸ்ரீ கிருஷ்ணையர்  ஹோட்டல்  பாரம்பரிய பிராமணாள் கபே “என்னும் பெயரில்  6 மாதங்களாக நடைபெறுகிறது[2]. இதற்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் பலத்த எதிர்ப்பை தெரிவித்து போராட்டங்கள் நடத்தினர் என 2012 அக்டோபர் 12ம் தேதி நக்கீரன் இதழில் செய்தி வெளியானது.  இந்த நிலையில் பெரியார் காலத்தில் அவரால் போராடி மூடப்பட்ட “பிராமணாள் கஃபே” தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா தொகுதியான ஸ்ரீரங்கத்தில் திடீரென்று முளைத்திருப்பது திராவிடர் கழகத்தில் உள்ளவர்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது[3] என்றும், இதனால் அந்த ஹோட்டல் பெயரை அழிக்கும் போராட்டம் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடைபெறும் என்றும், அந்த இயக்கத்தின் தலைவர் ஆனூர் ஜெகதீசன் அறிவித்திருந்தார். ஆனால், அந்த “முரளி கபே”விற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்று தெரிந்ததே.
பிராமணாள் ஓட்டல் பெயர் அழிப்பு போராட்டம்: தந்தை பெரியார் திராவிடர் கழகம் சனிக்கிழமை காலை 10 மணிக்கு திருவரங்கம் பேருந்து நிலையம் அருகில் “பிராமணாள் ஓட்டல் பெயர் அழிப்பு போராட்டம்” நடத்துவோம் என்று இரண்டு பக்க பிட்நோட்டீஸ் கொடுத்தது. இதன்படி இன்று (20.10.2012) காலை 10 மணிக்கு ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பிருந்து ஊர்வலகமாக புறப்பட்டனர் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர். இதில் போலீசாருக்கும், ஊர்வலத்தில் வந்தவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து 150 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றும், பிராமணாள் கஃபே பெயரை நீக்காமல் விடமாட்டோம் என்றும் கோவை ராமகிருஷ்ணன் கைது செய்யப்படும் முன் செய்தியாளர்களிடம் கூறினார்[4].

வர்க்கப் போராட்டமா, ஆரிய-திராவிட[5] போராட்டமா?: ஸ்ரீரங்கத்தில் ஒரு பார்ப்பனர், “பிராமணாள் உணவு விடுதி” என்ற பெயரில் ஓட்டல் நடத்தி வருவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆறு மாதங்களுக்கு முன்பு காவல்துறையிடம் கழக சார்பில் ஒரு பெரும் பகுதி சமுதாயத்தை ‘சூத்திரர்’ என்று இழிவுபடுத்தும் இந்த ‘பிராமணாள்’ பெயரை அகற்ற வேண்டும் என்று புகார் தரப்பட்டது. ஆனாலும், ஓட்டல் நடத்தும் பார்ப்பனர், தனக்கு ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி போன்ற அமைப்புகள் ஆதரவாக இருப்பதாக ஆணவத்துடன் பேசி வருகிறார். முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொகுதியாக இருப்பதால் முதல்வர் பார்ப்பனர் என்ற அடிப்படையில் தமக்கு அரசு அதிகாரத்தின் ஆதரவு இருக்கும் என்ற இறுமாப்பில், ‘பிராமணாள்’பெயர்ப் பலகையை அகற்ற முடியாது என்று பிடிவாதம் பிடிக்கிறார். ‘தேவர்’, ‘நாயுடு’ என்ற பெயரில் ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள் இருப்பதை இந்தப் பார்ப்பனர் சுட்டிக் காட்டுகிறார்[6]. இவை சாதிப் பெயர்கள்; இந்தப் பெயர்களுக்கும் தடைப் போட வேண்டும் என்பதே நமது கருத்து. பெரியார் நூற்றாண்டு விழாவின்போது முதல்வர் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் சாலைகளுக்கு இருந்த சாதிப் பெயர்களை முழுமையாக அரசு ஆணையின் பேரில் நீக்கப் பட்டதை நினைவுபடுத்துகிறோம்.

வர்ணத்தை ஆதரித்த காந்தியும், ஜாதிகளை எதிர்த்த பெரியாரும், சாதிகளை பெருக்கி வளர்க்கும் திராவிடர்களும்: வர்ணம் என்பது மனுஸ்மிருதியில் சொல்லப்பட்டது, மஹாத்மா காந்தி ஆதரித்தது. ஆனால், முதலியார், செட்டியார், நாயக்கர், நாயர் என்று சாதிகளை தங்களது தலைவர்களுடன் அடையாளம் காட்டிக் கொண்டு அரசியலில் லாபத்தை ஈட்டியது திராவிடக் கட்சிகள். “அண்ணாதுரை முதலியார்” என்று போஸ்டர்களை ஒட்டியதை திராவிடர்கள் இப்பொழுது மறந்திருக்கலாம். இருப்பினும் அவர்கள் வாதிப்பது இவ்வாறாக உள்ளது, “ஆனால், இப்பொழுதோ, ‘பிராமணாள்’ என்பது ஒரு குறிப்பிட்ட சாதிப் பிரிவினரைக் குறிக்கும் சொல் அல்ல. மாறாக, ‘மனு சாஸ்திரம்’ கூறும் நான்கு வர்ணப் பிரிவில் மேலானவர்கள் ‘பிரம்மா’வால் படைக்கப்பட்டவர்கள் என்று கூறப்படும் ‘பிராமணர்’ என்ற பிரிவை அங்கீகரிக்கும் சொல். இந்தப் ‘பெருமை’யை ‘பிராமணர்கள்’ கூறிக் கொண்டால், அதனால் மற்றவர்களுக்கு என்ன சங்கடம் என்ற கேள்வி எழக்கூடும். ஒருவன் தன்னை “பிராமணன்” என்று அடையாளப்படுத்துவதன் வழியாக ஏனைய பெரும் பகுதி உழைக்கும் மக்களை “சூத்திரர்கள்” என்று அறிவிக்கிறார்கள் என்பதுதான், இதில் அடங்கியுள்ள முக்கியப் பிரச்சினை. “வறுமைக் கோட்டுக்குக் கீழானவர்கள்” என்று அரசு, ஒரு புள்ளி விவரம் எடுக்கிறது என்றால், வறுமைக் கோட்டுக்கு மேலானவர்கள் இருக்கிறார்கள் என்பது எப்படி அர்த்தமாகிறதோ அதே போன்றுதான் இதுவும். அரசு கூட மக்கள் தொகையை சாதி வாரியாகக் கணக்கிடுகிறது. அது வேறு. ஆனால், அரசாங்கமே ‘பிராமணர்’, ‘சூத்திரர்’ என்ற வர்ணத்தின் அடிப்படையில் கணக்கிடுவது இல்லை. காரணம், ‘பிராமணன்’, ‘சூத்திரன்’ என்ற வர்ண பேதம் பெரும்பான்மை மக்களான சூத்திரர்களை “பார்ப்பனர்களின் தேவடியாள் மக்கள்” என்று பறைசாற்றுகிறது“.

மனுவைத் திரித்துக் கூறும் திராவிட சித்தாந்திகள்[7]: திராவிட சித்தாந்திகள் இக்காலத்திலும், இப்படி மனுவைத் திரித்துக் கூறி விளக்கம் அளித்து துவேஷத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். ‘மனு சாஸ்திரம்’ என்ன கூறுகிறது?

  • “அந்த பிரம்மாவானவர் இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காக தன் முகம், தோள், தொடை, பாதம் இவைகளிலிருந்து உண்டான பிராமண, ஷத்திரிய, வைசிய, சூத்திர வர்ணத்தாருக்கு இம்மைக்கும் மறுமைக்கும் உரிய உபயோகமான கருமங்களைத் (செயல்களை) தனித்தனியாகப் பகுத்தார். (அத்தியாயம் 1; சுலோகம் 85). [இப்படி குறிப்பிட்டிருந்தாலும் அவ்வாறில்லை என்பது வேடிக்கை – இந்த சுலோகத்தில் கிரேத, திரேத, துவாபர மற்றும் கலி யுகங்களில் என்ன கடமைகளை செய்ய வேண்டும் என்று கூறுகிறது[8]. குணங்கள் எப்படி மாறுபடும் என்று கூறுகிறது[9].]
  • பிராமனன் முதல் வர்ணத்தான் ஆனதாலும் பிரம்மாவின் உயர்ந்த இடத்தில் (முகத்தில்) பிறந்ததானாலும் இந்த உலகத்தில் உண்டாயிருக்கிற சகல வருணத்தாருடைய பொருள்களையும் தானம் வாங்க அவனே பிரபுவாகிறான். (மனு. அத்தியாயம் 1 – சுலோகம் 100). [பிரம்மா முதலில் பிராமணர்களைப் படைத்ததால் உலகத்தில் உள்ளவற்றை அவர்கள் பெறத் தகுதியானவர்கள் ஆகிறார்கள்.[10] பிறகு சத்திரியர், வைசியர், சூத்திரர் படைக்கப் பட்டவுடன் அவர்களும் அவற்றைப் பெறத் தகுதியானவர்கள் ஆகிறார்கள்].

மனு தர்ம அடிப்படையில், ‘பிராமணாள் கபே’ என்று ஒரு ஓட்டலுக்கு பெயர் சூட்டப்படுகிறது என்றால், அதன் பொருள் – ஓட்டல் நடத்தும் அந்த உரிமையாளன், ‘நான் பிரம்மாவின் முகத்திலிருந்து பிறந்தவன். இந்த ஓட்டலுக்கு வந்து காசு கொடுத்து சாப்பிட்டாலும் பிராமணரல்லாதவர்கள் என்றால், அவர்கள், எனது பார்வையில் ‘சூத்திரர்’கள் எனது அடிமைகள்.

இல்லாத அத்தியாயத்திலிருந்து திரித்துக் கூறுவது: மனுதர்மத்தின் 18வது அத்தியாயம் 122வது சுலோகத்தின்படி என்னுடைய ஓட்டலுக்கு காசு கொடுத்து சாப்பிட வரும் சூத்திரர்கள், நான் ஏற்றுள்ள தர்மப்படி என்னை வணங்க வேண்டியவர்கள். அதே சுலோகத்தின்படி எனது ஓட்டலுக்கு சாப்பிட வருவதே அவர்களுக்கு கிடைத்த பெரும் பாக்கியம். [மனு ஸ்மிருதியில் இருப்பதே 12 அத்தியாயங்கள் தாம், அப்படியிருக்கும் போது 18ம் அத்தியாயம் எப்படி வருகிறது என்று தெரியவில்லை[11]].

நான் ‘பிராமணரல்லாத’ கீழ் வர்ணக்காரர்களான சூத்திரர்களை மனுதர்மம் அத்தியாம் 8 – சுலோகம் 122-ன்படி கீழ்க்கண்டவாறுஅறிவிக்கிறேன்.

• போரில் புறமுதுகிட்டு ஓடிவந்த கோழை.

• இவன் என்னிடம் பக்தி கொண்டு தொண்டு செய்ய வேண்டியவன்.

• இவன் எனது விபச்சாரியின் மகன்.

• இவன் என்னால் விலைக்கு வாங்கப்பட்டவன்.

• இவன் தலை தலைமுறையாக எனது அடிமையாக இருந்து வருகிறவன்.

இதைத்தான் திருவரங்கத்தில் ஓட்டல் நடத்தும் பார்ப்பனர், தனது விளம்பரப் பலகையில் பொறித்து வைத்துள்ளார்.

வாடிக்கையாளர்கள் விற்பனைக்காக வசதிக்காக நடத்தப்படுகிற ஒரு வர்த்தக நிறுவனம் தன்னிடம் வாடிக்கையாளர்களாக சாப்பிட வருகிற பெரும்பான்மை மக்களையும் சமுதாயத்தில் உழைக்கும் பெரும்பான்மை மக்களையும்

ஏ, தேவடியாள் மகனே!

ஏ, அடிமையே!

ஏ, புறமுதுகிட்டு ஓடிய கோழையே!

ஏ, என்னை அண்டி வாழக்கூடிய இழிப் பிறவியே!

வா, வா, வந்து காசு கொடுத்துவிட்டு சாப்பிட்டுப் போ” என்று பகிரங்கமாக அறைகூவல் விடுப்பதை பக்தித் தமிழர்களே, நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணி, பா.ஜ.கவிலுள்ள பார்ப்பனரல்லாத தமிழர்களே, இந்த கீழ்மையை சிறுமையை அவமானத்தை அங்கீகரிக்கிறீர்களா?

இது நாத்திக-ஆத்திகப் பிரச்சினையல்ல;

இது இந்துமத எதிர்ப்புப் பிரச்சினையுமல்ல;

நீ, மானமுள்ள, சூடு, சொரணையுள்ள மனிதனாக இருக்கிறாயா என்பதை சோதனைக்குள்ளாக்கும் பிரச்சினை!

ஆமாம், நான் ‘சூத்திரன்’ என்று பச்சை குத்திக் கொள்ளப் போகிறீர்களா?
மானமுள்ள மனிதன் என்று போர்க்கொடி உயர்த்தப் போகிறீர்களா? “கீற்றில்” இதை அப்படியே போட்டிருப்பதும் வேடிக்கைத்தான்[12]. இப்படி “திராவிடர்கள்” தான் கலாட்டா செய்கிறார்கள் என்றால், கிருத்துவர்களும் உள்ளே நுழைந்துள்ளனர். தெய்வநாயகம் என்ற கிருத்துவர் “பிரமணாள் கபே இப்பொழுது திறக்கப்பட்டிருப்பது ஏன்?” என்ற தலைப்பில் ஆறுப்பக்க வண்ண பிட்நோட்டீஸ் விநியோகம் செய்துள்ளார்.

கிருத்துவர்களுக்கு திருவரங்கத்தில் என்ன வேலை?: “திராவிடர்கள்” என்று சொல்லிக் கொண்டு, “பெரியார்” பெயரை உபயோகப்படுத்திக் கொண்டு, வைகோக் கட்சிக் கொடியை தலைகீழாக வைத்துக் கொண்டு கலாட்டா செய்யும் வேலையில், இந்து சாமியார் போல அல்லது நித்யானந்தா போல, தெய்வநாயகம் என்ற குழப்பவாதி, கிருத்துவ வெறியன், இந்த குட்டையில் மீன் பிடிக்க வந்துள்ளது வியப்பாக உள்ளது. “பிரமணாள் கபே இப்பொழுது திறக்கப்பட்டிருப்பது ஏன்?” என்ற தலைப்பில் ஆறுப்பக்க வண்ண பிட்நோட்டீஸ் விநியோகம் செய்துள்ளார். இப்படி தருணம் வரும் என்று முன்னமே அச்சிட்டு தயாராக வைத்திருக்கிறார் போலும்! கிருத்துவ பிஷப்புகள், பாதிரிகள், பாஸ்டர்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் கன்னியாஸ்திரீக்களையும், சிறுமிகள், சிறுவர்களை பாலியல் ரீதியில், வன்புணர்ச்சியில் ஈடுபடுத்தி, குரூரமாக கொடுமைப் படுத்தி வரும் வேளையில், அவர்களை விடுத்து இந்த ஆல் எதற்கு ஸ்ரீரங்கத்தில் சுற்றி வர வேண்டும்? அந்த பிட்நோட்டீஸைப் படித்துப் பார்த்தால், அந்த “தாமஸ் கட்டுக்கதை”யை விட படு அபத்தமாக இருக்கிறது. “தமிழ்” பெயரை வைத்துக் கொண்டு இந்த ஆள் செய்யும் கலாட்டாவில் பல இந்துக்களும் ஏமாந்துள்ளனர்[13]. நக்கிரனின் “மாட்டிறைச்சி மாமி நான்” என்பதற்கும் இதற்கும் சம்பந்தம் உள்ளது என்று தெரிகிறது[14].

வேதபிரகாஷ்

24-10-2012


[1] நேற்றுக் கூட 23-10-2012, அண்ணாதுரை ஆட்சிக்காலத்தில் இருந்த முன்னாள் சட்டமந்திரி, ஒரு டிவி செனலில் கேள்வி கேட்டபோது, பெருமையாக விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார்.

[3] பல ஆண்டுகளாக ஓட்டல் தொழிலை நடத்தி வருவதாக அவர் கூறுகிறார். ஸ்ரீ கிருஷ்ணய்யர் என்ற பெயரில் லால்குடி, காந்தி மார்க்கெட் போன்ற இடங்களில் ஓட்டல் வைத்துள்ளாராம்.

http://www.vikatan.com/juniorvikatan/Sensation/25513-pramanal-hotel-srirangam-r.html#cmt241

[5] கி. வீரமணி ஜெயலலிதா ஆட்சிற்கு வந்தபோது, “ஆரிய-திராவிட போராட்டம் தொடர்கிறது” என்று ஒரு குறும்புத்தகத்தை வெளியிட்டது நினைவு கூறவேண்டும். பிறகு ஜெயலலிதா லட்சங்களைக் கொடுத்தவுடன் அமைதியாகி விட்டார்.

[6] ரெட்டி மெஸ், முனியாண்டி விலாஸ், கோனார் மெஸ், செட்டி நாடு ஹோட்டல், நாயர் டீக்கடை, நாடார் மரத்தொட்டி, தேவர் ஹோட்டல், ஆச்சி மசாலா முதலியவை இருப்பது உண்மைதான்.

[8] A. C. Burnell, The Ordinances of Manu, Oriental Books, New Delhi, 1971, p.12

[9]  R. N. Sharma, Manusmriti (translation of M. N. Dutt – Sanskrit verses with translation), Chaukhamba Sanskrit Pratishthan, New Delhi, 1998, p.30

[10] R. N. Sharma, Manusmriti (translation of M. N. Dutt – Sanskrit verses with translation), Chaukhamba Sanskrit Pratishthan, New Delhi, 1998, p.64-65.

[11] இப்படி இவர்களாகவே எதையாவது மொழிபெயர்த்துக் கொண்டு அல்லது மற்றவர்கள் சொல்லியதைக் கேட்டுக் கொண்டு இப்படி திரித்து எழுதி வருவது வழக்கமாகவே இருந்து வருகிறது.

[13] “உடையும் இந்தியா” என்ற புத்தகத்தில் தேவையில்லாமல், இந்த ஆளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, இந்துக்கள் எழுதியிருப்பது ஒரு தகவல். அது மட்டுமல்லாது, முன்பு, தருமபுர ஆதீனத்தில் இந்த ஆளுக்கு கூட்டத்தை நடத்தி, அதில் இவர் சொன்னதெல்லாம் தவறு என்று எடுத்துக் காட்டியப்பிறகுக் கூட, அருணை வடிவேலு முதலியார் மறுப்பு நூல் எழுதிய பிறகும் கூட, சில சைவர்கள் இவருக்கு ஆதரவு தெரிவித்து வருவது வேடிக்கையாக இருக்கிறது.

[14]முதலமைச்சர் ஜெயலலிதா, மாட்டுக்கறி சாப்பிட்டார் என்று ‘நக்கீரன்’ இதழில் வெளியான செய்திக்காக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ‘நக்கீரனுக்கு’ எதிராக ஆளும் கட்சியைச் சார்ந்தவர்கள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு வன்முறையில் இறங்கியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. இந்தத் தாக்குதல் ‘நக்கீரனுக்கு’ எதிரானதாக மட்டும் நாம் கருதவில்லை. ‘மாட்டுக்கறி’ சாப்பிடும் கோடானுகோடி மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் என்றே நாம் கருத வேண்டியிருக்கிறது.

http://www.periyarthalam.com/2012/01/13/%E0%AE%9C%E0%AF%86-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/

மகன் சாப்பாடு போடவில்லை: நடிகர் லூஸ்மோகன் கமிஷனரிடம் புகார்!

ஒக்ரோபர் 20, 2011

மகன் சாப்பாடு போடவில்லை: நடிகர் லூஸ்மோகன் கமிஷனரிடம் புகார்!

 

சினிமாவைப் பார்த்துக் கற்றுக் கொள்வதில் உள்ள கேடுகளில், இதுவும் சேந்து விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. ஏனெனில், நமது தமிழகத்தில், நாளைக்கு, “பார், சினிமாக்காரனுக்கே அந்த கதிதான். அதனால், மற்றவருக்கும் அதே நிலை ஏற்பட்டால் அதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை”, என்றும் பேச ஆரம்பித்து விடுவார்கள். “அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா”, என்பது போல!

 

மகன் சாப்பாடு போடவில்லை: நடிகர் லூஸ்மோகன் கமிஷனரிடம் புகார்

தினமணி – ‎9 மணிநேரம் முன்பு‎

சென்னை, அக். 20: சாப்பாடு போட மகன் மறுக்கிறார் என நடிகர் லூஸ்மோகன் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். லூஸ்மோகன் மயிலாப்பூரில் வசித்து வருகிறார்.

 

மகன் சாப்பாடு போடவில்லையே… காமெடி நடிகர் லூஸ் மோகன் கண்ணீர்!

தட்ஸ்தமிழ் – ‎8 மணிநேரம் முன்பு‎

சென்னை: சாப்பாடு போட மகன் மறுக்கிறார் என நடிகர் லூஸ்மோகன் சென்னை போலீஸ் கமிஷனரிடம் கண்ணீருடன் புகார் அளித்துள்ளார். மயிலாப்பூரில் வசித்து வருகிறார் நடிகர் லூஸ்மோகன்.

சிரிப்பு நடிகர் லூஸ் மோகன் கமிஷ்னரிடம் புகார்

சென்னை ஆன்லைன் – ‎11 மணிநேரம் முன்பு‎

சென்னை, அக்.20 (டிஎன்எஸ்) எம்.ஜி.ஆர் நடித்த அரிச்சந்திர படத்தின் மூலம் மூலம் அறிமுகமான லூஸ் மோகன் 1000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடக்க முடியாத நிலையில்

லூஸ் மோகனைப் பொறுத்த வறைக்கும், அவரால் ஆதாயம் பெற்றவர்கள் அதிகமாகவே உள்ளனர். குறிப்பாக, கமல் ஹஸன் போன்றவர்கள் இவரிடம், “மெட்ராஸ் பாஷை” எப்படி பேசுவது என்று பாடம் கற்றுக் கொண்டுள்ளார்கள். பலர், இவரைப் போல “இமிடேட்” செய்து நடுத்தும் உள்ளார்கள். சோவும் ஆரம்பத்தில், இவரைப்பொல பேசி நடித்துள்ளார்.

 

ஆனால், பெற்றொரைப் பார்த்துக் கொள்வதில், மகன்கள் தங்களது மனைவியரின் பேச்சைக் கொண்டுக் கொண்டு, இவ்வாறு உதாசீனப்படுத்துவது, அலட்சியப்படுத்துவது, ஒருவர் வீட்டிலிருந்து மற்றவர் விட்டிற்கு அலையவிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவது, வசதியான, பணக்காரர்கள் வீட்டிலும் நடந்து வருகிறது. ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட மகன்கள் இருந்தாலும், ஏன் அவன் வீட்டிற்கு செல்லக் கூடாது அல்லது ஏன் அவன் பார்த்துக் கொள்ளக் கூடாது என்று ஒரு மகன் அடுத்தவனை கேட்பது போன்ற செயல்கள் உள்ளன.

 

அவ்வாறான நிலையில், சில இடங்களில் மகள்கள் தங்களது பெற்றோர்களைப் பார்த்துக் கொள்கிறார்கள். இங்கும், பெற்றோர் குறிப்பிட்ட நாட்கள், மாதங்கள் தங்கியிருக்கலாம், பிறகு அடுத்தவர் வீட்டிற்குச் செல்ல வேண்டும். முதல் மகளின் வீட்டில் உன்று / இரண்டு / ஆறு மாதங்கள், அடுத்தது அடுத்த மளின் வீடு என்று இருக்கும் பெற்றோர்களும் உள்ளனர்.

 

முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டு பணத்தை மாதம்-மாதம் யார் செல்லுத்துவது என்று சண்டைப் போடும் மகன்களும் உள்ளனர். இல்லை வீட்டிலேயே வைத்துக் கொண்டு கழுத்தறுக்கும் மகன்ளும் இருக்கிறார்கள். வீடு, பணம், சொத்து கிடைக்கும் என்றால் மட்டும், போலித்தனமாகப் பார்த்துக் கொள்ளும், மன்கள், மகள்கள், மறுமகள்கள் என்றும் இருக்கிறார்கள். இதெல்லாம், நாகரிகத்தின் சீரழிவு என்றுதான் சொல்ல வேண்டும். இருப்பினும், நாளைக்கு அவர்களது மகள்கள்-மகன்களும் இதேபோலத்தன் தங்களது பேற்றோரை நடத்துவர்கள் என்றூ ஞாபகத்தில் வைத்துக் கொண்டால் சரிதான்! வயதானவர்களை ஒதுக்குவதும் சமூகத் தீவிரவாதம் தான்[1].


இன்னுமொரு வில் ஹியூம்!

ஜனவரி 26, 2010

இன்னுமொரு வில் ஹியூம்!

காப்பகம் நடத்திய போதகர் ஓட்டம்

பதிவு செய்த நாள் 1/27/2010 12:43:07 AM: தினகரனில் இப்படியொரு புகைப்படம்! இதில் யார் ஷாஜி என்று தெரியவில்லை!

Swine Fluகளியக்காவிளை : குமரி மாவட்டத்தில் விதிகளை மீறி காப்பகம் நடத்தி வந்த கிறிஸ்தவ போதகர் தலைமறைவானார்.

“பெதெஸ்டா ஆசிர்வாத இல்லம்” ('Bethesda Blessing Home')

“பெதெஸ்டா ஆசிர்வாத இல்லம்” ('Bethesda Blessing Home')

அனுமதி பெறாத குழந்தை காப்பகத்திலிருந்து 76 குழந்தைகள் மீட்பு: கன்னியாகுமரி மாவட்டம் பலவிளையில் அனுமதியின்றி இயங்கிய குழந்தைகள் காப்பகத்தில் இருந்த மணிப்பூர், அசாம் மாநில குழந்தைகளை சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கேரளா காரகோணத்தைச் சேர்ந்தவர் ஷாஜி. கிறிஸ்தவ தொண்டு நிறுவனம் நடத்திவரும் இவர், கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே, பலவிளையில் குழந்தைகளுக்கான காப்பகம் நடத்தி வந்தார்.

பெதெஸ்டா ஆசிர்வாத இல்லத்தில் அடைத்து வைத்து கொடுமைப் படுத்தப்பட்டது

பெதெஸ்டா ஆசிர்வாத இல்லத்தில் அடைத்து வைத்து கொடுமைப் படுத்தப்பட்டது

அங்கு, பெரும்பாலும் வெளிமாநில குழந்தைகள் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை சிறுவர் கூர்நோக்கு இல்ல அதிகாரிகள் சோதனை நடத்தினர். சிறுவர் காப்பகம் நடத்த அரசிடம் அனுமதி பெறவில்லை. மேலும் 76 சிறுவர்களில் 22 பேர் அசாம், 54 பேர் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிந்தது. போலீஸ் உதவியுடன் அந்த சிறுவர்கள் நெல்லை அழைத்துவரப்பட்டனர். நெல்லை சரணாலயம் தொண்டு நிறுவனத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சிறுவர்கள் பெரும்பாலானோர், பெற்றோரை பிரிந்த ஏக்கத்தில் இருந்தனர். அவர்களை நெல்லை கலெக்டர் ஜெயராமன் நேற்று சந்தித்து பேசினார். அவர்களுக்கு உணவு, உடை, மருத்துவம் வழங்க உத்தரவிட்டார். மணிப்பூர், அசாம் மாநில அரசின் குழந்தைகள் நல அமைப்புடன் பேசி, அவர்களை அனுப்பிவைக்கும் வரை, கல்வி கற்பிக்க உள்ளதாக, சரணாலய இயக்குனர் ஜான்சன் கூறினார்.

200க்கும் மேற்பட்ட குழந்தைகள் / டீன்-ஏஜ் பெண்கள் உடபட இருந்தது

200க்கும் மேற்பட்ட குழந்தைகள் / டீன்-ஏஜ் பெண்கள் உடபட இருந்தது

நெல்லை சரணாலயம்: ஆதரவற்ற சிறுமிகள், சிறுவர்கள் பெண்களுக்கு மறுவாழ்வு கொடுத்து வரும் நெல்லை சரணலயம் 1993ம் ஆண்டு முதல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இன்றைய சூழலில் குடும்பங்களில் நிலவும் பல்வேறு பிரச்சனைகள் மற்றும் பொருளாதார காரணங்களிலும், நகர்மயமாக்கல், கிராமப்புறத்து மக்கள் நகரங்களை நோக்கி இடம் பெயர்தல் போன்றவையாலும் மாறிவரும் காலச் சூழலுக்கேற்ப சிறுவர், சிறுமியரின் தேவைகள், ஆசைகள், குழப்பங்கள் போன்வற்றில் பெற்றோரும், ஆசிரியரும் இச்சமுதாயமும் அவர்களுக்கு சரியான திசையில் வழிகாட்டுதலிலும், நியாயமான தேவைகளை நிறைவு செய்வதில் ஏற்படும் குறைபாடுகளாலும் பல சிறுவர் சிறுமியர் குடும்ப உறவுகளை இழந்து வீதிகளுக்கு வரும் நிலை ஏற்படுகிறது் இத்தகைய வீதியோர சிறார்கள் மேல் அக்கறை கொண்டு அவர்கள் மறுவாழ்வு பெறுவதற்காக சரணாலயம் பணியாற்றி வருகிறது. இத்தகைய சிறுவர்களின் அவலங்களைக் கண்ணுறும் பொதுமக்கள் இவர்களுக்கு உதவிடவும் சிறுவர் உரிமைகளைப் பேணிடவும் மத்திய அரசின் சமூக ­நீதி மற்றும் அதிகாரம் வழங்குதல் துறை மூலம் நிறுவப்பட்டது தான் சைல்டு லைன் 1098 இலவச தொலைபேசியாகும் நாடெங்கும் ஐம்பத்தைந்து மாநகரங்களில் நிறுவப்பட்டுள்ள இந்த தொலைபேசி வாயிலாக 24 மணிநேரமும் தொடர்பு கொண்டு சிறுவர் குறித்த தகவல்கள் தெரிவிக்கலாம் ஏன்? சம்பந்தப்பட்ட சிறுவர்களே ௯ட தங்கள் இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். இதன் மூலம் அவர்களுக்கு ஆலோசனைகளும், மருத்துவ உதவி, கல்வி உதவி, குடும்பங்களோடு ஒன்றினைத்தல், அ­திகளுக்கு பரிகாரம் காணுதல் போன்ற சேவைகளைப் பெற முடியும்.

இல்லத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கை முதலிய விவரங்கள் இல்லை என்கிறார் ஜோஸப் ஜான்

இல்லத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கை முதலிய விவரங்கள் இல்லை என்கிறார் ஜோஸப் ஜான்ஸன்

ஷாஜி யார், மதபோதகரா, மர்ம மனிதரா, இன்னொரு வில்-ஹியூமா? கேரள மாநிலம் காரகோணம் பகுதியை சேர்ந்தவர் ஷாஜி. மத-போதகரான இவர் குமரி மாவட்டம் பாலவிளை அருகே சொந்த கட்டடத்தில் “பெதெஸ்டா ஆசிர்வாத இல்லம்” (‘Bethesda Blessing Home’) என்ற பெயரில்[1] குழந்தைகள் காப்பகம் நடத்தி வந்தார்[2]. அங்கு ஜெப கூட்டமும் நடந்தது. இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.ஷாஜி மீது இதுவரை எந்தப் புகாரும் இல்லை. எனினும் அவரை நாங்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என்றார்[3]. ஷாஜியிடம் நடந்த விசாரணையில் பசியால் வாடிய வெளிமாநில குழந்தைகளை ஏஜெண்டுகள் மூலம் கொண்டு வந்ததாக தெரிவித்தார்[4]. சமூகநலத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ஷாஜி நடத்திய காப்பகத்துக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளார். ஆனால் இதுவரை அனுமதி கொடுக்கப்படவில்லை.

சட்டத்தை மீறி அடைத்து வைத்தது பற்றி விளக்குகிறர் - டைம்ஸ்-நௌ டிவி

சட்டத்தை மீறி அடைத்து வைத்தது பற்றி விளக்குகிறர் - டைம்ஸ்-நௌ டிவி

சிறுவர்களுக்கு மருத்துவ பரிசோதனை: சரணாலயத்தில் உள்ள சிறுவர்களை நெல்லை கலெக்டர் ஜெயராமன் நேற்று சந்தித்தார். அவர்களுக்கு அரசு டாக்டர்கள் மூலம் மருத்துவப் பரிசோதனை நடத்த உத்தரவிட்டார்[5]. சென்ற புதன்கிழமைதான் (20-01-2010) சோழங்கநல்லூரில் இருந்த ஒரு (Reach Home Children Foundation)[6] அனாதை இல்லத்திலிருந்து, மணிப்பூர், மாவட்டம், பிஷ்ணுபூரைச் சேர்ந்த 17 குழந்தைகள் (பெண் குழந்தைகளையும் சேர்த்து) விடுவிக்கப்பட்டனர். தமிழ்நாடு குழந்தைகள் நல்வாழ்வு கமிட்டியின் தலைவி டாக்டர் பி. மனோரமா குழந்தைகள் சரிவர பரமரிக்கப்படவில்லை மற்றும் அவர்கள்மீது அடித்ததாக அடையாளங்கள் காணப்படுகின்றன என்றார். பெண்-குழந்தைகள் பாலியல் ரீதியில் துன்புறுத்தப் பட்டிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது[7].

உட்கார்ந்திருக்கும் இரு இளம் பெண்கள், குழந்தைகள் அல்ல, முகம் மறைக்கப்பட்டுள்ளது!

உட்கார்ந்திருக்கும் இரு இளம் பெண்கள், குழந்தைகள் அல்ல, முகம் மறைக்கப்பட்டுள்ளது!

“சிறுவர்கள்” என்று கூறி, டீன்–ஏஜ் பெண்கள் இருந்ததை மறைக்கின்றனர்: முன்பு போலவே, இப்பொழுதும் “சிறுவர்கள்” என்று கூறி, டீன்–ஏஜ் பெண்கள் இருந்ததை மறைக்கின்றனர். நேற்று டிவி-செனல்கள் காண்பித்தபோது, இளம் பெண்கள் இருந்தது நன்றாகவே தெரிந்தது. ஆனால், அடையாலம் தெரியக்கூடாது என்று, ஏதோ மறைப்பு வைத்து படம் பிடித்துள்ளதால் தெளிவாக முகங்கள் தெரியவில்லை. ஜோஸப் ஜான்ஸன் என்ற சமூகநல அதிகாரி குறிப்பிடும்போது, அனாதை இல்லத்தில் / ஆஸ்ரமத்தில் எத்தனை குழந்தைகள் / பெண்கள் இருந்தனர் என்பதற்கான எந்த ஆவணங்களையும் வைத்திருக்கவில்லை என்று குறிப்பிட்டார். ஆகவே,, இவர்கள் எல்லாம், “சுற்றுலா விபசாரத்திற்கு” உபயோகப்பட்டிருந்தால், விவரங்கள், விசாரித்தால்தான் தெரியவரும். அப்பொழுது, அவர்கள். தாங்கள் அந்த இல்லத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்று சொல்லிவிட்டால், ஒன்றும் செய்யமுடியாது.

உட்கார்ந்திருக்கும் இரு இளம் பெண்கள், குழந்தைகள் அல்ல, முகம் மறைக்கப்பட்டுள்ளது! நடுவிலே வந்த இன்னொரு பெண்!

உட்கார்ந்திருக்கும் இரு இளம் பெண்கள், குழந்தைகள் அல்ல, முகம் மறைக்கப்பட்டுள்ளது! நடுவிலே வந்த இன்னொரு பெண்!

அனாதை இல்லங்களும், கொலைகளும், கற்பழிப்புகளும்: திருநெல்வேலியைச் சேர்ந்த, “புதிய வாழ்க்கை மையம்” (‘New Life Centre), என்ற இல்லத்தில், 2005ல் மணிப்பூரைச் சேர்ந்த ரிச்சர்ட் என்ற சிறுவன் மர்மமான முறையில் இறந்து கிடந்தான். அவன் மூழ்கி இறந்ததாகக் கூறப்பட்டது. அடுத்த வருடம் 2006ல் அதே இல்லத்தைச் சேர்ந்த, பில்கிரிம் நிகோபார் (Pilgrim Nicobar), என்ற இன்னொரு சிறுவனும் ஒரு குட்டையில் பிணமாக மிதந்தான். அந்த அனாதை இல்லத்தின் அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், விசாரணை ஒன்றும் உண்மைகளை வெளிப்படுத்தவில்லை. அதேமாதிரி, சென்னை அனாதை இல்லத்தில் 2005ல், ஐந்து பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்குட்பட்டனர் என்று புகார் செய்தனர். போலீஸார் அதன் தலைவரை விசாரித்தனர், ஆனால் மேலே தொடராமல் அப்படியே விட்டுவிட்டனர்.

வேதபிரகாஷ்


[1] HNS, Authority caught in frenzy on rescue of state children in Chennai, Source: Hueiyen News Service / Thingnam Anjulika Samom, Imphal, January 25 2010

http://www.e-pao.net/GP.asp?src=10..260110.jan10

[2]தினமலர், ஜனவரி 26,2010

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=15699

[3] தினகரன், 24-01-2010

http://www.dinakaran.com/tamilnadudetail.aspx?id=4492

[4] http://thatstamil.oneindia.in/news/2010/01/25/76-other-state-kids-rescued-from.html

[5]தினகரன், 26-01-2010

http://www.dinakaran.com/highdetail.aspx?id=4566

[6] TIMES-NOW TV, Child trafficking racket exposed, 26 Jan 2010, 1326 hrs IST, for details, see at:

http://www.timesnow.tv/Child-trafficking-racket-exposed/articleshow/4337164.cms

[7] http://www.e-pao.net/GP.asp?src=10..260110.jan10