Posts Tagged ‘வாழ்க்கை’

வட்டிக்கு பணம் கொடுத்து, கற்பை சூரையாடிய கொடூரன் தண்டனை பெற்றதால் பெண்கள் பாதிப்பு நிவர்த்தியாகி விடுமா!

ஜனவரி 20, 2017

வட்டிக்கு பணம் கொடுத்து, கற்பை சூரையாடிய கொடூரன் தண்டனை பெற்றதால் பெண்கள் பாதிப்பு நிவர்த்தியாகி விடுமா!

dharmapuri-financier-jailed-19-01-2017-dailt-thanthi

சிவராஜின் செயல்திட்டமுறையும், காம-கொக்கோகமும், வீடியோ-சிடி விவகாரங்களும்: சிவராஜ் மீதான புகாரை பலப்படுத்த அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும், புகார் கொடுக்கும் பெண்களின் பெயர், முகவரி உள்ளிட்ட தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் சிவராஜால் பாதிக்கப்பட்ட மூன்று பெண்கள்  2014 அக்டோபர் 6ஆம் தேதி பாலக்கோடு போலீசில் புகார் கொடுத்துள்ளனர். அதில், “கடன் கொடுத்த நிதி நிறுவன அதிபர் சிவராஜ் எங்களின் வறுமை நிலையை சாதகமாக பயன்படுத்தி உல்லாசத்திற்கு அழைத்தார். வர மறுத்தபோது அதிக வட்டி தரவேண்டும் என்று கூறி மிரட்டினார். இதனால் பயந்து போன நாங்கள் அவரது பண்ணை வீட்டிற்கு சென்றோம். அங்கு சிவராஜ் எங்களை மிரட்டி உல்லாசமாக இருந்தார். இதனையடுத்து அவர் தனது செல்போனில் எடுத்த ஆபாச காட்சிகளை எங்களின் குடும்பத்தினருக்கு காட்டி விடுவதாக மிரட்டி, பலமுறை பண்ணை வீட்டிற்கு அழைத்து சென்று கற்பழித்தார்,” என்று கூறியுள்ளனர். தங்களை போல் இன்னும் ஏராளமான பெண்கள் சிவராஜால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அவர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

dharmapuri-financier-jailed-19-01-2017-vedaprakashபெண்மையை சுற்றியுள்ள சமுதாய-சட்டப் பிரச்சினைகள்: இதனையடுத்து புகார் கொடுத்த பெண்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், விசாரணை முழுவதையும் கேமராவில் பதிவு செய்துள்ளனர். புகாரின்பேரில் போலீஸார் நடத்திய புலன் விசாரணையில் சிவராஜ், அப் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் உள்பட 26-க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. பெண்களுக்கு முறைப்படி சட்டரீதியில் பாதுகாப்பு கொடுத்தல் போன்ற விவரங்கள்தெரியவில்லை. தற்போது போலீசார் நிதி நிறுவன அதிபர் சிவராஜ் மீது கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், சிவராஜால் பாதிக்கப்பட்ட பெண்கள் அவர் மீது தைரியமாக புகார் கொடுக்க முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். மூன்று பெண்களின் புகாரையடுத்து இந்த வழக்கு சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனால் சிவராஜை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்குள், இவ்வழக்கு முறையாக நடத்தப்படுமா என்ற சதேகம் வந்ததால், சிலர், பெரிய அளவில் விசாரணை தேவை என்று நினைத்தனர். இதை அரசியலாக்கும் விதத்தில், உள்ளூர் எம்.எல்.ஏ, தில்லி பாபு [சிபிஎம்] மற்றும் மகில இந்திய பெண்கள் இயக்கமும் சேர்ந்து ஆர்பாட்டம் நடத்தி, சிபி-சி.ஐ.டி விசாரணை தேவை என்று வற்புறுத்தினர்[1]. சிவராஜின் சொத்துகளும் பறிமுதல் செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்[2].

dharmapuri-financier-jailed-19-01-2017-sexபாதகர்கள் தண்டனை பெற்ற விவரங்கள்: இந்த வழக்கு தருமபுரி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் வழக்குரைஞர் ஆர். உமா மகேஸ்வரி ஆஜரானார். இந்த வழக்கில் மாவட்ட மகளிர் நீதிபதி எம். மீரா சுமதி 8-01-2017 [புதன்கிழமை] தீர்ப்பு வழங்கினார். முதல் குற்றவாளியான வட்டிக் கடைக்காரர் சிவராஜுக்கு பாலியல் பலாத்கார சட்டப்பிரிவில் நான்கு ஆயுள் தண்டனைகள் மற்றும் ரூ. 4,000 அபராதம் விதிக்கப்பட்டது[3].  மேலும், 67ஏ தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவின் கீழ் 12 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ. 2 லட்சம் அபராதமும், 66இ தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவின் கீழ் 8 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ. 40 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது[4]. அபராதத் தொகை மொத்தம் ரூ. 2.44 லட்சம்[5]. இச்சம்பவத்தில் செல்லிடப்பேசியில் இருந்த விடியோக்கள் வெளியே உலவக் காரணமாக இருந்தவன் அதே பகுதியைச் சேர்ந்த செல்லிடப்பேசி பழுதுபார்க்கும் தொழில் செய்து வந்தவன் மா. முன்னா[6]. அவனுக்கு பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் மொத்தம் 6 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 61 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது[7]. இரு குற்றவாளிகளின் கோரிக்கைகளை ஏற்று சிறைத் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கலாம் என்றும் நீதிபதி எம். மீரா சுமதி உத்தரவிட்டார்[8].

dharmapuri-financier-jailed-19-01-2017-video-1கற்பை சூரையாடிய கொடூரன் தண்டனை பெற்றதால் பெண்கள் பாதிப்பு நிவர்த்தியாகி விடுமா!: பாதகர்கள் தண்டனை பெற்றது சட்டப்படி நடந்துள்ளது என்றாலும், பெண்கள் பாதிப்பு சரிசெய்யமுடியாதது ஆகும். மனம் மற்றும் உடல் ரீதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கஷ்டங்களை, உபாதைகளை யார் சரிசெய்ய முடியும்? நடந்தது மாற்ற முடியும், சீர்செய்யமுடியும் என்ற நிலையாகாது.

  • ஒரு பெண் சீரழிந்தால், ஒரு குடும்பம் சீரழிகிறது;
  • ஒரு குடும்பம் சீரழிந்தால், ஒரு சமுதாயம் சீரழிகிறது;
  • ஒரு சமுதாயம் சீரழிந்தால், ஒரு தேசம் / நாடு சீரழிகிறது;

ஆகவே, குறிப்பிட்ட நாட்டின் மீது நடத்தப்படும் கலாச்சார தாக்குதல், இவ்வாறு பலநிலைகளில் பாதித்து, சீரழித்து வருவதை பொறுப்புள்ளவர்கள் மிக்க அக்கரையுடன் கவனிக்க வேண்டும். இன்றளவில், சினிமாநடிகைகளிடம் கற்பு, கலாச்சாரம், குடும்பம் முதலியவற்றைப் பற்றி கருத்து கேட்டு, விளம்பரம் செய்கிறார்கள். இதனால், அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவது போன்ற தோற்றத்தையும் ஏற்படுத்துகின்றார்கள். நிர்வாணமாக நடிப்பேன் என்று உரிமைகள் பேசி, அவ்வாறே தொழில் செய்யும் நடிகைகள் எப்படி முன்னுதாரணமாக இருக்க முடியும்?

© வேதபிரகாஷ்

20-01-2017

dharmapuri-financier-jailed-19-01-2017-video-2

[1] The Hindu, Plea for CB-CID probe , DHARMAPURI: OCTOBER 16, 2014 00:00 IST UPDATED: MAY 24, 2016 13:53 IST.

[2]The Communist Party of India (Marxist) staged a demonstration here at Palacode demanding CB-CID probe into the case of a local financier who was involved in sexual harassment of women. The financier Sivaraj was arrested last week [17-05-2016] on the charges of sexually harassing women. The demonstration was led by CPI (M) MLA Dilli Babu. Members of the All India Democratic Women’s Association also took part in the demonstration. The CPI (M) also demanded confiscation of the property belonging to Sivaraj.

 http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/plea-for-cbcid-probe/article6504755.ece

[3] தினமணி, பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து விடியோ எடுத்த வழக்கில் வட்டிக் கடைக்காரருக்கு 4 ஆயுள் தண்டனை, By தருமபுரி,  |   Published on : 19th January 2017 08:44 AM.

[4] http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2017/jan/19/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-4-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-2634850.html

[5] தினகரன், பெண்களை ஆபாச வீடியோ எடுத்து பலாத்காரம், பாலக்கோடு பைனான்சியருக்கு 4 ஆயுள் தண்டனை : தர்மபுரி கோர்ட் தீர்ப்பு, 2017-01-19@ 01:05:08

[6] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=273446

[7] The Hindu, Financier gets four life sentences for sexual abuse, DHARMAPURI: JANUARY 19, 2017 00:00 IST; UPDATED: JANUARY 19, 2017 04:00 IST.

[8] The District Mahila Court here on Wednesday [18-01-2017] convicted financier M. Sivaraj (44) of Palacode to four life sentences and imposed a fine of Rs. 2.44 lakh on him for sexually abusing women. The life sentences are to run concurrently. According to prosecution, Sivaraj sexually abused women who had availed themselves of loans from his firm, but could not repay the dues in time. He videographed the act on his mobile phone and used this to threaten them into submitting to sexual abuse again. The entire scandal came to light when Sivaraj gave his mobile phone to a local service centre to set right a snag. Munna, the owner of the service centre, after witnessing the obscene videos spread them in social media. On a complaint preferred by Vijana, village administrative officer, the Palacode Police arrested Sivaraj and M. Munna in October 2014 and filed a case in the District Mahila Court. The Mahila Court Judge M. Meera Sumathi found both the accused guilty of the charges. The Judge convicted Sivaraj to four life sentences and a fine of Rs. 4,000, eight years imprisonment and a fine of Rs. 40,000 under Section 66-E of the Information Technology Act 2000 (violation of privacy) and another 12 years imprisonment with a fine of Rs. 2 lakh under Section 67-A (publishing or transmitting obscene material in electronic form). The Judge sentenced Munna to three years imprisonment and a fine of Rs. 50,000 under Section 67-A of IT Act, two years and a fine of Rs. 10,000 under 66-B of IT Act and one year imprisonment and a fine of Rs. 1,000 under Section 292 IPC (publicly exhibiting or circulating obscene material). Munna’s prison terms will run concurrently.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/Financier-gets-four-life-sentences-for-sexual-abuse/article17057897.ece

வட்டிக்கு பணம் கொடுத்து, கற்பை சூரையாடிய கொக்கோக வன்புணர்ச்சியாளனும், சமூக சீரழிவு தீவிரவாதங்களும்!

ஜனவரி 20, 2017

வட்டிக்கு பணம் கொடுத்து, கற்பை சூரையாடிய கொக்கோக வன்புணர்ச்சியாளனும், சமூக சீரழிவு தீவிரவாதங்களும்!

dharmapuri-financier-jailed-19-01-2017-nakkeeran

மேனாட்டு கலாச்சார சீரழிவுகளால் இந்திய பெண்மை தாக்கப்படுவது: இக்கால சமூக சீரழிவுகளில் பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுவது, பலவிதங்களில் வெளிப்பட்டு வருகின்றது. விசயம் எதுவாக இருந்தாலும், பெண்மை தாக்கப்படுவது, பாலியல் ரீதியாகவே இருந்து வருகிறது. மேலும், மேனாட்டு முறை பாலியல் விவகாரங்களால், வக்கிரமான எண்ணங்களால் ஆண்கள் பெண்களை தாக்கி வருகின்றனர். பள்ளி, கல்லூரி, ஆதலன் – காதலி, குடும்பம், கண்வன் – மனைவி, என்ற நிலைகளில், உறவுகளில், சமூக ஊரையாடல்கள், சந்திப்புகள் மற்றும் பரஸ்பரங்களில் வக்கிரம் உச்சங்களை தொடுகின்றன. போர்னோகிராபி என்ற முறையும் அதிகமாக பாதித்து வருகின்றது. செல்போன், இன்டெர்நெட் முதலியவை இந்த வக்கிரங்களுக்கு தீனி போட்டு வருகின்றன. மேலும்-மேலும் எத்தனை பாலியல் வன்மங்கள், வக்கிரங்கள், சீரழிவுகள் வெளிவந்தாலும், அத்த்கைய அழிவுகள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. கற்பைப் பற்றி பேச முடியாது என்ற நிலையை சமுதாய தீவிரவாதிகள் பயங்கரத்தை உண்டாக்கி வருகின்றனர். இதைப் பற்றி கண்டித்து பேசினால், எழுதினாலும், யாரும் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை. செக்ஸ் எல்லோரையும் ஆட்டி வைக்கின்றது என்றே தெரிகின்றது.

dharmapuri-financier-jailed-19-01-2017-dinnathanthi

நிதியுதவி செய்து, பெண்களின் கற்பை சூரையாடிக கயவன்: தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு மேலத்தெருவை சேர்ந்தவர் சிவராஜ். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். நிதி நிறுவனம் நடத்தி வந்த சிவராஜ் தன்னிடம் வரும் பெண்களிடம் தாராளமாக வட்டிக்கு கடன் கொடுத்தான். கடன் திருப்பித் தரமுடியாத பெண்களை மிரட்டியும், கடன் வாங்க வரும் பெண்களை மயக்கியும், உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது, என்று தான் தினத்தந்தி கதையை சொன்னது. அதாவது, அவ்வாறு செய்தால் கடன் திருப்பிக் கொடுக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறான். வட்டியை குறைக்க கடன் வாங்கும் பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி தனது காம வலையில் வீழ்த்தினான்[1]. உல்லாசமாக இருப்பதற்காக பாலக்கோடு அருகே 10 ஏக்கர் பரப்பளவில் உள்ள குப்பைகொட்டாயில் உள்ள தனது பண்ணை வீட்டை சிவராஜ் பயன்படுத்தி வந்துள்ளான்[2]. அங்கு பெண்களை அழைத்து வரும் சிவராஜ் தனது விலை உயர்ந்த செல்போன் கேமராவில் அவர்களுக்கு தெரியாமல், உல்லாசமாக இருக்கும் ஆபாச காட்சிகளை வீடியோ எடுத்துள்ளான்[3]. இங்குதான் அவனது திட்டம் வெளிப்படுகிறது. அதாவது முறைதவறி மற்ற பெண்களை சீரழித்தது இல்லாமல், வக்கிரத்துடன் இருப்பதும் தெரிய வருகிறது. பின்னர் இந்த வீடியோக்களை தனது நண்பர்களுக்கு அனுப்பியும், தனியாக இருக்கும் நேரத்தில் அதை பார்த்தும் ரசித்துள்ளான்[4]. இது அடுத்து கோரநிலையைக் காட்டுகிறது. மற்றவர்களின் தொடர்புகளையும் இது காட்டுகிறது. மேலும், இந்த வீடியோக்களை சம்பந்தப்பட்ட பெண்களிடம் காட்டி அவர்களை மிரட்டி மீண்டும், மீண்டும் உல்லாசமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதவது, இருபக்கமும், அவனது வக்கிரம் வெளிப்பட்டது.

dharmapuri-financier-jailed-19-01-2017-dinamani

செல்போன் பழுதுபார்த்தல், உடலுறவு காட்சிகள் வெளியாதல், பணம் கேட்டு மிரட்டல்: கடந்த வாரம் [அக்டோபர் 6, 2014] இவரது செல்போனில் பழுது ஏற்பட்டதால் அதை சரி செய்ய பாலக்கோட்டில் உள்ள ஒரு கடையில் கொடுத்தபோது செல்போனில் இருந்த மெமரி கார்டை பார்த்த கடை ஊழியர் அதில் சிவராஜ் பல பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்துள்ளார். பின்னர் அதனை தனது நண்பர்களுக்கு அனுப்பி வைத்தும், இணையதளத்தில் வெளியிட்டும் இருக்கிறார். செல்போனில் உள்ள ஆபாச வீடியோக்களை வெளியிடாமல் இருக்க சிவராஜிடம் செல்போன் கடைக்காரர், ரூ.15 லட்சம் பேரம் பேசியதாகவும், இதற்காக சிவராஜ் அவரை தனது பண்ணை வீட்டிற்கு வரவழைத்து தர்ம அடி கொடுத்ததாகவும் தெரிகிறது[5]. உயிர் பிழைத்தால் போதும் என்று பண்ணை வீட்டில் இருந்து ஓடி வந்தவர் இது பற்றி கிராம நிர்வாக அலுவலரிடம் சிவராஜ் குறித்து தெரிவித்தார். அதன் பேரிலேயே கிராம நிர்வாக அலுவலர் போலீசில் புகார் செய்துள்ளார். அதைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவராஜை கைது செய்தனர்[6].  இவ்வாறாக இவ்விவகாரம் வெளிவந்தது.

dharmapuri-financier-jailed-19-01-2017-nakkeeran-1

போலீசாரிடம், ஆபாச சிடி விற்ற முன்னா கூறியது[7]: “சிவராஜின் மொபைல் போன், பழுதுநீக்க கொண்டுவந்த போது, மெமரி கார்டில், செக்ஸ் காட்சிகள் இருந்தன. இதை வைத்து, பணம் சம்பாதிக்க முடிவு செய்தேன். மெமரி கார்டை தரும்பித் தர, 15 லட்சம் ரூபாய் பேரம் பேசினேன். சிவராஜ் சம்மதித்தார். பணத்தை பெற, தன் பண்ணை வீட்டுக்கு அழைத்தார். அங்கு சென்றபோது, அடித்து உதைத்தார். இதனால், ஆத்திரத்தில், மெமரி கார்டில் இருந்த செக்ஸ் காட்சிகளை, நண்பர்களுக்கு அனுப்பினேன். சிவராஜ் கைதானதை அறிந்தவுடன், தலைமறைவாகிவிட்டேன்.“, இவ்வாறு, முன்னா கூறியுள்ளார். இதையடுத்து, சிவராஜூடன் உடந்தையாக இருந்த, இளம்பெண்ணையும் போலீசார் விசாரித்தனர். பண்ணை வீட்டுக்கு, பெண்களை அழைத்து சென்ற ஆட்டோ டிரைவரையும், போலீசார் தேடினர், விசாரித்தனர்[8]. பிறகு போலீஸார், அவரிடம் இருந்த செல்போன், உல்லாச பட வீடியோ காட்சிகள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அவரது பண்ணை வீட்டில் சோதனை நடத்திய போலீசார் அங்கு உணர்ச்சியை தூண்டும் மருந்து பாட்டில்கள், மாத்திரைகளையும் பறிமுதல் செய்துள்ளனர். தாவது, சிவராஜ் அனைத்தையும் திட்டமிட்டுதான் செய்துள்ளான். போர்னோகிராபி படங்கள் எடுக்க வேண்டும், அதை வைத்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற வக்கிரபுத்தியும் தெரிந்தது. இணைதளத்தில், சிவராஜ் பெயரில் பல வீடியோக்கள் உலாவந்துக் கொண்டிருப்பது தெரிகிறது. தற்போது சிவராஜ் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். பொதுவாக பல பெண்கள் சம்பந்தப்பட்டிருந்ததால், அவர்கள் தயக்கத்துடன் இருந்தார்கள் என்றும் புலப்படுகிறது.

dharmapuri-financier-jailed-19-01-2017-nakkeeran-3

இரண்டு பெண்களுடன் வாழ்ந்து, பல பெண்களை நாடி அலைந்த காமுக வக்கிர வன்புணர்வாளன்: சிவராஜ் கடந்த 15 வருடங்களாக பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். சிறு வயது முதலே பெண்கள் மீது அதிக நாட்டம் கொண்டவராக இருந்துள்ளார்[9]. சிவராஜின் இந்த குணம் பிடிக்காத காரணத்தால், அவரது முதல் மனைவி லதா, கடந்த 8 வருடங்களுக்கு முன் விவாகரத்து பெற்று சென்றார்[10]. பின்னர் 2வதாக அனுராதா என்ற பெண்ணுடன் சிவராஜ் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தான் பெண்களை மிரட்டி தனது வலையில் வீழ்த்தி உள்ளார். இந்த விவகாரத்தில் மேலும் 58 வீடியோக்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிடி விற்பனை செய்தவர் கைது பாலக்கோடு பகுதியில் உள்ள செல்போன், சிடி கடைகளில் நேற்று போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பிரபு (26) என்பவர், தனது செல்போன் கடையில் சிவராஜின் பாலியல் படங்களை சிடியில் பதிவு செய்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்த அவரை கைது செய்த போலீசார், மெமரி கார்டு, கம்ப்யூட்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். போலீசாரின் தீவிர நடவடிக்கைகளுக்கு அச்சமடைந்து, பாலக்கோடு பகுதியில் உள்ள பெரும்பாலான சிடி கடைகள் கடந்த சில தினங்களாக மூடப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள் என்பது தெரிந்த விசயமே. “மா. முன்னா” யார் என்று ஊடகங்கள் குறிப்பிடவில்லை.

© வேதபிரகாஷ்

20-01-2017

palacode-sivaraj-arrested-malaimalar

[1] தமிழ்.ஒன்.இந்தியா, 68 பெண்களின் வாழ்க்கையை சீரழித்த தர்மபுரி சிவராஜுக்கு 4 ஆயுள் தண்டனை, By: Karthikeyan, Updated: Wednesday, January 18, 2017, 23:41 [IST]

[2] http://tamil.oneindia.com/news/tamilnadu/dharmapuri-financier-was-gets-4-time-life-imprisonment-272101.html

[3] நக்கீரன், 68 பெண்களுடன் உல்லாசம்வீடியோதர்மபுரி சிவராஜ்க்கு 4 ஆயுள் தண்டனை, பதிவு செய்த நாள் : 18, ஜனவரி 2017 (18:56 IST); மாற்றம் செய்த நாள் :18, ஜனவரி 2017 (22:26 IST).

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=182157

[4] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=182157

[5] தினத்தந்தி, செக்ஸ் வீடியோ விவகாரம்: நிதி நிறுவன அதிபரிடம் ரூ.15 லட்சம் கேட்டு செல்போன் கடைக்காரர் பேரம்: புகார் கூறிய பெண்களிடம் போலீசார் விசாரணை, அக்டோபர் 13, 2014, 12:22 AM.

[6] http://www.dailythanthi.com/News/State/2014/10/13002201/Police-Enquired-over-Dharmapuri-Financier-Sex-Scanda.vpf

[7] தினமலர், நிதி நிறுவன அதிபர் செக்ஸ் லீலை : மொபைல் போனில் பரப்பியவர் கைது, பதிவு செய்த நாள்.அக்டோபர்.15, 2014.01.30.

[8]   http://www.dinamalar.com/news_detail.asp?id=1092204

[9] தமிழ்முரசு, பைனான்சியரின் புதிய வீடியோ சிக்கியது மேலும் 60 பெண்களை மிரட்டி உல்லாசம் அனுபவித்தது அம்பலம் பரபரப்பு தகவல்கள், பதிவு செய்த நாள் : 18, ஜனவரி 2017

[10] http://www.tamilmurasu.org/inner_tamil_news.asp?Nid=64463

 

ஆசிரியர் போர்வையில் காமக்கொடூரன் – பல இளம்பெண்களை-மாணவிகளை சீரழித்த கயவன்!

திசெம்பர் 20, 2016

ஆசிரியர் போர்வையில் காமக்கொடூரன் பல இளம்பெண்களைமாணவிகளை சீரழித்த கயவன்!

tution-centre-rape-sivamar-arrested-deccan-chronicleஇதுவரை, பாதிரிகள் மற்ற காமுகர்கள் இளம்பெண்களை பாலியல் ரீதியில் வன்புணர்ந்த கொடூரங்களைப் படித்து வந்தோம். இப்பொழுது, ஒரு ஆசிரியரே அத்தகைய ஏலையை செய்துள்ளது திகைக்க வைத்தாக உள்ளது. ஆசிரியர் என்ற புனிதத்தையேக் கெடுக்கும் வகையில், அந்த கயவன் ஈடுபட்டுள்ளான். மாணவ-மாணவியர் ஒழுங்காகப் படித்தால், டியூஷன் என்றெல்லாம் செல்ல வேண்டிய அவசியமே இருக்காது. இதுவும், காலத்தின் அலங்கோலமாக இருக்கிறது. இன்று டியூஷன் சென்டர்கள் இத்தகைய மாணவ-மாணவியர்களால் தான் பெருகி வருகிறது. மேலும், அவர்களில் சிலர் வசதியாக இருந்தால், பொழுது போக்கிற்கு வந்து செல்கிறார்கள். டியூஷன் சென்டர்கள், டுடோரியல் காலேஜுகள் முதலியவற்றில் படிக்க வருகிறார்களோ இல்லையோ, காதல் செய்ய வருகிறார்கள் என்று முன்னமே தெரிந்த விசயமாக இருக்கின்றது.

tution-centre-rape-sivaumarமாணவியை ஏமாற்றியது, அனுபவித்தது, கல்யாணம் செய்து கொண்டது: தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டை சேர்ந்த சீனிவாசன் மகன் சிவக்குமார், 27. கடந்த 2012ல் பாலக்கோட்டில் தனலட்சுமி என்ற பெயரில் சிவகுமார்  டியூசன் சென்டர் ஆரம்பித்தார், என்று இப்படி மரியாதையாகத்தான் ஊடகங்கள் குறிபிடுகின்றன. பாலக்கோடு மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப்புற மாணவ, மாணவிகள் டியூசனில் சேர்ந்தனர். அப்போது,  10ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷத்தை சிவகுமார் தொடங்கினார். அந்த மாணவி மயங்கவே, வகுப்பறையிலேயே உல்லாசமாக இருந்து செல்போன் மூலம் வீடியோ பதிவு செய்துள்ளார்[1]. அதை நண்பர் ஈஸ்வரனிடம் காண்பித்தார் எனும்போது, அவனின் குரூரக் குணம் வெளிப்படுகிறது. இதை சொல்லி அந்த மாணவியிடம் தன்னுடைய ஆசைக்கு இணங்குமாறு ஈஸ்வரன் கூற அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதாவது, நிச்சயமாக அந்த கயவர்களின் கூட்டு வெளிப்படுகிறது. அந்த மாணவி புகார் செய்யவே பெற்றோரும், உறவினர்களும், டியூசன் சென்டருக்கு வந்து சிவகுமாரையும், ஈஸ்வரனையும் சரமாரியாக அடித்து உதைத்தனர்.  இதைதொடர்ந்து உறவுக்கார பெண்ணை திருமணம் செய்வதாக கூறி, உல்லாசம் அனுபவித்துவிட்டு மறுத்துள்ளார். அந்த பெண்ணின் பெற்றோர், சிவகுமாரை மிரட்டி  திருமணம் செய்து கொடுத்தனர்[2]. அதாவது, திருமணம் ஆனப் பிறகும், ஒழுங்கில்லாமல் இருந்ததும் தெரிகின்றது.

tution-centre-rape-sivamarகுளிர்பானங்களில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மாணவிகள் மயங்கி விழுந்ததும் அவர்களிடம் உல்லாசம் அனுபவித்து: இவர், தர்மபுரி மற்றும் பாலக்கோட்டில், தளிர் என்ற பெயரில் டியூசன் சென்டர் நடத்தியதோடு, குரூப் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்பு எடுத்து வந்தார். அதாவது, மனைவி, குடும்பத்தினருக்கு தெரியுமா இல்லையா என்று குறிப்பிடவில்லை. இங்கு படிக்கும் மாணவிகளிடம், சிவக்குமார் ஆசைவார்த்தை கூறி ஏமாற்றியுள்ளார். இவரது ஆசை வார்த்தையில் மயங்கிய ஒரு சில மாணவிகளை, சிவக்குமார் பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அதை வீடியோ படம் எடுத்து மிரட்டி, அவர்களுடன் உல்லாசமாக இருந்து வந்தார்[3]. அதாவது, மாணவிகள் அந்த அளவுக்கு சபலத்துடன் இருந்தார்களா என்ற கேள்வியும் எழுகின்றது. இதனால், அலைகின்ற காமுகர்களுக்கு எளிதாக இரையாகின்றானர். மேலும் டியூசன் படிக்க வரும் மாணவிகளில் சிலருக்கு தனியாக அதிக நேரம் பாடம் சொல்லி கொடுப்பது போல நாடகம் ஆடியுள்ளார் சிவக்குமார். அப்போது சில மாணவிகளுக்கு குளிர்பானங்களில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மாணவிகள் மயங்கி விழுந்ததும் அவர்களிடம் உல்லாசம் அனுபவித்துள்ளார்[4]. டெக்கான் குரோனிகல் நாளிதழ் மட்டும் தான், இந்த கயவர்கள் கற்பழித்ததால் கைது செய்யப்பட்டனர் என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது[5].

tution-centre-rape-sivamar-arrestedஒரு மாணவி துணிந்து புகார் கொடுக்க கைதான காமக்கொடூரன்: மேலும், சில மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவும் கொடுத்துள்ளார்[6]. “பாலியல் ரீதியில் தாக்கியதற்காக, ஒரு மனிதன் கைது” என்று தி இந்து செய்தி வெளியிட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது[7]. பல மாணவிகள் பலிகடா ஆனாலும், ஒரு மாணவி துணிந்து புகார் கொடுக்க முடிவு செய்தாள். எனவே, இதுகுறித்து, 17 வயது மாணவி ஒருவர் 04-12-2016 அன்று புகார் கொடுத்தார். கொடுத்த புகாரின் படி[8], பாலக்கோடு இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் விசாரித்து, சிவக்குமாரை போஸ்கோ சட்டத்தில் கைது செய்தார்[9]. மேலும், அவரிடம் இருந்து, மாணவிகளின் ஆபாச படம் இருந்த மொபைல்போனையும் பறிமுதல் செய்தார்[10]. விசாரணையில், பாலியல் பலாத்காரம் செய்த மாணவிகளின் வீடியோக்களை, டியூசன் சென்டரில் பணியாற்றும், தன் நண்பர்கள் ஈஸ்வரன், மற்றொரு சிவக்குமார் மற்றும் மற்றொரு நண்பருக்கு, சிவக்குமார் காட்டியுள்ளார். இவ்வாறு ஆதாரங்களைத் திரட்டினர் போலீஸார்.

tution-centre-sexபாலியல் ரீதியில் பாதிக்கப்பட்டது எத்தனை மாணவிகள்?: ஊடகங்களுக்கு இத்தகைய பிரச்சினைகளை செய்தியாக வெளியிடும்போது, பொறுப்போடு செயல்பட வேண்டும். ஏதோ மற்றவர்களை ஈர்க்கும் வகையில், தலைப்பிட்டு செய்திகளாக வெளியிடுவதை விட, படிப்பவர்களுக்கு நீதி புகட்டும் முறையில், அவற்றை வெளியிட வேண்டும். இதையடுத்து, சிவகுமார், ஈஸ்வரன், மற்றொரு சிவக்குமார் நான்கு பேரும் சேர்ந்து, 20க்கும் மேற்பட்ட மாணவிகளை மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. 25க்கும் மேற்பட்ட மாணவிகளை அவர்கள் சீரழித்ததுடன், அவற்றை வீடியோவாக பதிவு செய்து ரசித்தும், நண்பர்களுக்கு அந்த வீடியோவை போட்டு காண்பித்தும் தங்களுடைய கொடூரத்தை அரங்கேற்றியுள்ளனர், என்று தினகரன் கூறுகிறது. இந்தியன் எக்ஸ்பிரஸ் 30 என்று கூறுகிறது[11]. எத்தனை பேர் பாதித்திருந்தாலும், அது ஈடுகொடுக்க முடியாத இழப்பாகும். பெண்மையை மதிக்கத் தெரியாத அந்த கயவர்கள் தூக்கில் ஓட்டால் தான், மற்ற காமக்கொடூரர்களுக்கு உரிய பாடமாக இருக்கும். இதையடுத்து, தலைமறைவாக இருந்த ஈஸ்வரன், 26, மற்றொரு சிவக்குமார், 27, ஆகியோரை போலீசார் 16-12-2016 அன்று கைது செய்து[12], பாலியல் பலாத்காரம் செய்த வீடியோ காட்சி அடங்கிய மொபைல்போன்களை, அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்தனர்[13].

tution-centre-rape-sivamar-arrested-vedaprakashடியூஷன் சென்டர்கள், டுடோரியல் காலேஜுகள் கண்காணிக்கப் படவேண்டியுள்ளது: இதை கூட்டாகவே செய்திருப்பது, ஆசிரியன், வீடியோ கடைக்காரன், வனது நண்பன் என்று இருப்பது தெளிவு படுத்துகிறது. மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மற்றொருவரை போலீசார் தேடிவருகின்றனர். மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்துள்ளதால், இங்கு படித்த மாணவிகள் மட்டுமன்றி, அவர்களின் பெற்றோரும் பீதியடைந்துள்ளனர்[14]. நியாயமான விசயம் என்றாலும், தங்களது பெண்களைக் கவனிக்காமல், கண்காணிக்காமல் அப்படி விட்டது அவர்களது பொறுப்பற்றத் தன்மையினையை வெளிப்படுத்துகிறது. இந்த வழக்கு தொடர்பாக, சிவக்குமாரிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால், அவரை, போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தியாவில் பலப் பகுதிகளில் இத்தகைய குற்றங்கள் நடந்து வருவதால், டியூஷன் சென்டர்கள், டுடோரியல் காலேஜுகள் கண்காணிக்கப்படவேண்டியுள்ளது[15]. ஏனெனில், அத்தகைய பாலியல் குற்றங்களில் ஒரு மாதிரி வெளிப்படுகிறது[16].

© வேதபிரகாஷ்

20-12-2016

[1] தினகரன், தர்மபுரி டியூசன் சென்டர் லீலைகள் அம்பலம் மாணவிகளை பலாத்காரம் செய்ததை வீடியோ எடுத்த ஆசிரியர், Date: 2016-12-18@ 00:24:14

[2] http://www.dinakaran.com/News_detail.asp?Nid=266408

[3] http://www.dinamalar.com/news_detail.asp?id=1670161

[4] தமிழ்.ஒன்.இந்தியா, குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து 30 மாணவிகளிடம் உல்லாசம்.. டியூசன் ஆசிரியர்கள் 3 பேர் கைது !, By:  Karthikeyan, Published: Thursday, December 15, 2016, 18:47 [IST]

[5] In a shocking development, the Dharmapuri police on Thursday arrested three people including a teacher of a private tuition center for raping some schoolgirls studying in classes ten and plus-2. They were arrested after a victim informed her parents about the incident leading to the police complaint against the accused people.

Deccan Chronicle, Chennai: 3 including teacher held for raping schoolgirls, Published: Dec 16, 2016, 7:46 am IST; Updated: Dec 16, 2016, 8:00 am IST.

http://www.deccanchronicle.com/nation/crime/161216/chennai-3-including-teacher-held-for-raping-schoolgirls.html

[6] The Hindu, Man held for sexually assaulting minor girl, DHARMAPURI: DECEMBER 16, 2016 00:00 IST ,UPDATED: DECEMBER 16, 2016 03:56 ISTUPDATED: DECEMBER 16, 2016 03:56 IST

[7] The police have arrested Sivakumar, a tuition teacher, on the charge of sexually assaulting a 17-year-old girl. In a complaint, the girl said that she used to go to a tuition centre where he taught. Easwaran, another staff at the centre, had recorded the assault on his mobile phone. He too has been arrested. The police is on the lookout for one more person in this regard.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/Man-held-for-sexually-assaulting-minor-girl/article16843687.ece

[8] the incident came to light only on December 4 when the victim summoned the courage to lodge a complaint with the police. Investigators have so far arrested three persons, including the prime accused.

Indian Express, Sleazy tuition teacher held for raping minor girl two years back, By Expres News Service, Published: 17th December 2016 04:16 AM, Last Updated: 17th December 2016 04:16 AM

[9] தினகரன், மாணவியரை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டியவர் கைது, பதிவு செய்த நாள். டிசம்பர்.05, 2016. 09.52.

[10] http://www.dinamalar.com/news_detail.asp?id=1663653

[11] Meanwhile, rumours spread in the place that around 30 girls were sexually assaulted and videographed by Sivakumar. However, the SP denied this.

[12] After investigations, his friend Eswaran was arrested on Tuesday and another friend M Sivakumar on Friday.

http://www.newindianexpress.com/states/tamil-nadu/2016/dec/17/sleazy-tuition-teacher-held-for-raping-minor-girl-two-years-back-1550079.html

[13] தினமலர், 20க்கும் மேற்பட்ட மாணவிகள் பாலியல் பலாத்காரம்: வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் மேலும் இருவர் கைது, பதிவு செய்த நாள். டிசம்பர்.16, 2016. 08.17.

[14] http://tamil.oneindia.com/news/tamilnadu/teacher-arrested-having-allegedly-sex-with-students-269813.html

[15] The Times of India, Tuition teacher arrested for molesting young girl in Mumbai, Vijay V Singh| TNN | Oct 1, 2014, 11.16 PM IST.

[16] http://timesofindia.indiatimes.com/city/mumbai/Tuition-teacher-arrested-for-molesting-young-girl-in-Mumbai/articleshow/44021309.cms

18-பெண்களைக் கற்பழித்த சாமுவேலும், அமைதியாக இருக்கும் பெண்ணியப் போராளிகளும், சமூக ஆர்வலர்களும், சட்ட நிபுணர்களும் (தொடரும் செக்ஸ் குற்றங்கள்-3)!

ஒக்ரோபர் 12, 2016

18-பெண்களைக் கற்பழித்த சாமுவேலும், அமைதியாக இருக்கும் பெண்ணியப் போராளிகளும், சமூக ஆர்வலர்களும், சட்ட நிபுணர்களும் (தொடரும் செக்ஸ் குற்றங்கள்-3)!

samuel-facebook-love-photos-removed-from-the-website

சாமுவேலிடம் மாட்டிக் கொண்ட பெண்களைப் பற்றிய விசாரணை: போலீசார் சாமுவேலுவை கைது செய்த பிறகு அவனால் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்ந்து ரகசியமாக காவல் நிலையத்தில் புகார் அளித்து வருகின்றனர். குறிப்பாக உல்லாசமாக இருக்கும் வீடியோவை காட்டி மிரட்டியதால் பல லட்சம் ரூபாய் பறிகொடுத்த பெண்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் புகார் அளித்து வருகின்றனர். சாமுவேலுக்கு உடந்தையாக இருந்த நெருங்கிய நண்பர்கள் இரண்டு பேருக்கு இந்த மோசடியில் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் போலீசார் கையில் சிக்கி உள்ளது. இதனால் ஓரிரு நாளில் இரண்டு பேரையும் பிடித்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும், சாமுவேலுவால் பாதிக்கப்பட்ட பெண்கள் யார் யார் என்ற பட்டியலை போலீசார் சேகரித்து வருகின்றனர். பணத்தை இழந்த பெண்கள் எத்தனை பேர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாமுவேல் மீது புகார்கள் குவிந்து வருவதால் அவனை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

samuel-sex-case-beauty-parlour-nexus

சாமுவேலின் மீது குவிந்த புகார்கள்: முன்னர் பாதிக்கப் பட்ட பெண்கள் யாரும் புகார் கொடுக்கவில்லை[1]. ஆனால், சிந்தாதிரிபேட்டை பெண் புகார் கொடுத்த பிறகு, மற்ற பெண்களும் புகார் கொடுக்க முன்வந்தனர். இதற்கிடையில் அவரால் பாதிக்கப்பட்ட சென்னை அண்ணாநகரை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். சாமுவேலிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அவரது வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டது. காதல் மன்னன் சாமுவேல் 27-09-2016 அன்று மாலை எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

 v-samuel-with-a-girl-9

இளம்பெண்களை வளைத்து தனது காதல் வலையில் விழ வைத்தது எப்படி?: கொக்கோக சாமுவேல் – காதல் மன்னன் சாமுவேல் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்து உள்ளார். வாக்குமூலம் விவரம் வருமாறு[2]: “கடந்த 2 வருடங்களாக நான் பெண்களோடு பழக ஆரம்பித்தேன். ‘முகநூல்மூலம் தான் பெண்களோடு எனக்கு பழக்கம் ஏற்பட்டது. ‘முகநூல்மூலமே எனது காதலை பெண்களிடம் தெரிவித்தேன். காதலில் பெண்கள் விழுந்ததும், அடுத்து திருமண ஆசை காட்டுவேன். திருமண ஆசை காட்டியதும், பெண்கள் என்னோடு நெருக்கமாக பழகுவார்கள்இதை பயன்படுத்தி எனது இதய ராணிகளை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடுகளுக்கு அழைத்து செல்வேன். அங்கே கடலில் குளிக்க வைத்து பெண்கள் அழகை ரசித்தேன்இவ்வாறு பெண்களை வளைத்து அடுத்தகட்டமாக உல்லாசத்தில் ஈடுபடுவேன். ரகசியமாக செல்போன்கள் மூலம் உல்லாச காட்சிகளை படம்பிடிப்பேன்.

  1. முதலில் எனது வலையில் விழுந்தது வேலூரை சேர்ந்த அழகான பட்டதாரி பெண் ஆவார்.
  2. அடுத்து மயிலாப்பூரை சேர்ந்த கோடீஸ்வரரின் மகளும் எனக்கு இன்ப விருந்து அளித்தார்.
  3. 4 பெண்களிடம் மட்டுமே நான் தவறாக நடந்து உள்ளேன். அந்த காட்சிகளை தான் ஆபாச படங்களாக இணையதளங்களில் எனது எதிரிகள் வெளியிட்டு விட்டனர்.
  4. ஆனால் 10–க்கும் மேற்பட்ட பெண்களிடம் நான் பழகி இருக்கிறேன்.
  5. ஆனால் என்னோடு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்த மாணவியை உயிருக்கு உயிராக காதலித்தேன்

அந்த மாணவியையே திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்தேன். அந்த கனவு இனிமேல் நிறைவேறாது. பெண்களோடு ஏற்பட்ட பழக்கத்தால் படிப்பில் கோட்டை விட்டு, என்ஜினீயரிங் படிப்பை என்னால் நிறைவு செய்ய முடியவில்லை. என்னோடு நெருக்கமாக பழகிய பெண்கள் அனைவரும் தானாக விரும்பியே என்னோடு படுக்கையை பகிர்ந்து கொண்டனர். நான் யாரையும் வற்புறுத்தவோ, கட்டாயப்படுத்தவோ இல்லை”, இவ்வாறு சாமுவேல் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்[3].

v-samuel-with-a-girl-10

என்னோடு நெருக்கமாக பழகிய பெண்கள் அனைவரும் தானாக விரும்பியே என்னோடு படுக்கையை பகிர்ந்து கொண்டனர்: “பெண்களோடு ஏற்பட்ட பழக்கத்தால் படிப்பில் கோட்டை விட்டு, என்ஜினீயரிங் படிப்பை என்னால் நிறைவு செய்ய முடியவில்லை. என்னோடு நெருக்கமாக பழகிய பெண்கள் அனைவரும் தானாக விரும்பியே என்னோடு படுக்கையை பகிர்ந்து கொண்டனர். நான் யாரையும் வற்புறுத்தவோ, கட்டாயப்படுத்தவோ இல்லை”, இவ்வாறு சாமுவேல் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்[4] என்பதே வேடிக்கையாக இருக்கிறது.  “தானாக விரும்பியே என்னோடு படுக்கையை பகிர்ந்து கொண்டனர்”, என்பது மிகவும் அபத்தமானது. இது பெண்களையே கேவலப்படுத்துவதாகும். பணக்காரப் பிள்ளை, கார்-சொத்து எல்லாம் இருக்கிறது என்று தன்னைப் பற்றி விளம்பரப் படுத்தி, பெண்ணின் மனதில் ஆசையை வளர்த்து, “உன்னையே கல்யாணம் செய்து கொள்கிறேன்”, என்று பேராசையை ஊட்டி, பிறகு, லாட்ஜுக்குக் கூட்டிச் சென்று கற்பழித்தது, சாதாரணமான விசயம் அல்ல. உண்மையில் 18-பெண்களை கற்பழித்தான் என்றுதான் அவன் மீது வழக்குப் போடவேண்டும். இத்தகைய காமக்கொடூரனைப் பற்றி, ஊடகங்கள் அமுக்கி வாசிப்பதே பெரிய பாவம் ஆகும். அதனை ஆண்டவன் நிச்சயம் மன்னிக்க மாட்டான்.

v-samuel-with-a-girl-11

தவறான பிள்ளையை நாங்கள் பெற்றுவிட்டோம். எனது பிள்ளை செய்த தவறுக்கு தக்க தண்டனை வாங்கி கொடுங்கள்’’: சாமுவேல் மீது பெண்களை மானபங்க படுத்துதல், ஆபாச படங்கள் எடுத்தல் மற்றும் கொலை மிரட்டல் ஆகிய 3 சட்டப்பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்கு போட்டு உள்ளனர். சாமுவேலின் பெற்றோர், ‘‘தவறான பிள்ளையை நாங்கள் பெற்றுவிட்டோம். எனது பிள்ளை செய்த தவறுக்கு தக்க தண்டனை வாங்கி கொடுங்கள்’’ என்று தெரிவித்ததாக பெண் போலீசார் தெரிவித்தனர். அவர்களே அவனது செயல்களுக்கு ஒத்துழைத்த பிறகு, இவ்வாறு சொல்வதில் என்ன பிரயோஜனம்? இதனால், போன மானம் பெண்களுக்கு திரும்ப வருமா? இப்படித்தானே, அவர்கள் யோசித்திருக்க வேண்டும். போலீசாரின் விசாரணைக்கு சாமுவேல் முழு ஒத்துழைப்பு கொடுத்தார், என்று ஊடகங்கள் இப்பொழுது கூறின. அப்படியென்றால், புகார் கொடுத்தவுடன் மறைந்திருக்க வேண்டாமே? நான்கு பெண்களுடன் அவர் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் ‘வாட்ஸ்–அப்’பில் வெளியாகி உள்ளது, அவரது செல்போனிலும், அந்த காட்சிகள் பதிவாகி உள்ளன, முதலியவற்றை போலீசார் ஆதாரமாக வைத்துள்ளனர்.

v-samuel-with-a-girl-12

2014லிலிருந்து சமூக ஊடகங்கள் மூலம் பெண்களை ஏமாற்றி சீரழித்து வந்த சாமுவேல்[5]: கடந்த இரண்டு ஆண்டுகளாக இவ்வாறு பேஸ்புக், வாட்ஸ்-அப் முதலியவற்றின் மூலம் ஏமாற்றி வந்துள்ளான். பெற்றோர் வளர்த்த விதம், பியூட்டி பார்லர் வைத்து தாய் வியாபாரம் செய்து வரும் போது, அங்கு சாமுவேல் வந்து, பெண்களை பார்த்து வந்தது, பழகியது, பிறகு படிப்படியாக அவர்களை காமவலையில் விழ வைத்தது, முதலியவை திட்டமிட்ட செயலாக இருக்கிறது[6]. அத்தாய் நினைத்திருந்தால், அங்கேயே தடுத்திருக்கலாம். ஒரு பெண்ணாக, பெண்களை அவ்வாறு தன் மகனே கற்பழிக்கிறான் எனும்போது, சும்மா இருக்க மாட்டாள். ஆனால், அவர் அவ்வாறு இருந்தது, பல கேள்விகளை எழுப்புகின்றன. பெற்றோர் உடந்தையாக இருந்ததும் அதிர்ச்சியாக இருக்கிறது. தறுதலை பிள்ளையைப் பெற்றோம் என்று பிறகு வருந்தினாலும்[7], நடந்தவற்றை மாற்ற முடியாது. ECR / OMR பண்ணை வீட்டில், கேமராக்கள் வைத்து, அவ்வாறு செய்துள்ளான் என்றால், அதற்கும் தொடர்பு இருக்கின்றது. ஏதோ ஒரு பரஸ்பர உடன்பாட்டோடு செய்யப்பட்டு வந்தது என்று தெரிகிறது. இணைதளங்களில் உள்ள வீடியோக்களும், அவனது “செய்முறை திட்டத்தை” நன்றாகவே விளக்குகின்றன[8].

© வேதபிரகாஷ்

12-10-2016

v-samuel-with-a-girl-13

[1] New Indian Express, Chennai engineering student held for circulating obscene pictures of women, By Express News Service  |   Published: 28th September 2016 12:11 AM Last Updated: 28th September 2016 12:12 AM

[2] தினத்தந்தி, சென்னையில், காதல் மன்னன் கைது பெண்களின் ஆபாச படங்களை முகநூலில் வெளியிட்டு லீலையில் ஈடுபட்டது அம்பலம் , பதிவு செய்த நாள்: புதன், செப்டம்பர் 28,2016, 1:33 AM IST; மாற்றம் செய்த நாள்: புதன், செப்டம்பர் 28,2016, 5:15 AM IST.

[3] http://www.dailythanthi.com/News/Districts/Chennai/2016/09/28013336/in-ChennaiKing-of-RomanceArrested.vpf

[4] http://www.dailythanthi.com/News/Districts/Chennai/2016/09/28013336/in-ChennaiKing-of-RomanceArrested.vpf

[5] NewsGlitz – Next Generation Tamil News Channel – https://www.youtube.com/watch?v=qIh-72-SyiM

[6] ராஜ் டிவியின் கோப்பியம் – https://www.youtube.com/watch?v=eyFWJJkKA3A

[7] இளம்பெண்களுடன் ஆபாசமாக படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய இன்ஜினியரிங் மாணவர் சாமுவேல். எச்சை பையன் – https://www.youtube.com/watch?v=kbg7NrhGXhI

[8] Leaked: Samuel chennai engineer scandal | cheated more then 15 girls – https://www.youtube.com/watch?v=ccJ1R8V-gUg

 

18-பெண்களைக் கற்பழித்த சாமுவேலுக்கு ஒத்துழைத்த பெற்றோர், உற்றோர், மற்றோர் – பிறகு வருந்தியதால், இதெல்லாம் திரும்பப் பெறும் விவகாரங்களா என்ன? (தொடரும் செக்ஸ் குற்றங்கள்-2)

ஒக்ரோபர் 12, 2016

18-பெண்களைக் கற்பழித்த சாமுவேலுக்கு ஒத்துழைத்த பெற்றோர், உற்றோர், மற்றோர் – பிறகு வருந்தியதால், இதெல்லாம் திரும்பப் பெறும் விவகாரங்களா என்ன? (தொடரும் செக்ஸ் குற்றங்கள்-2)

v-samuel-with-a-girl-3

பிளேட் நாடகம் ஆடி அனைத்தையும் சாதித்தான்[1]: சாமுவேல் காதல் வலையில் சிக்காத இளம் பெண்களிடம் பிளேடால் கையை கிழித்து தற்கொலை செய்து கொள்வது போல் நடித்து அவர்களை தன் வலையில் சிக்கவைத்ததும் தற்போது தெரியவந்துள்ளது. பல முறை பல காரணங்களுக்காக சாமுவேலை பெற்றோர் கண்டித்தபோது அவர்களிடலும் இதே பாணியை அவன் கடைபிடித்துள்ளான். அவனது பெற்றோருக்கு திருமணம் நடந்து 10 ஆண்டுகள் குழந்தை இல்லையாம். பல கோயில்கள் ஏறி இறங்கி பிறந்த குழந்தை என்பதால், அவன் செய்த தவறுகளை பெற்றோர் கண்டுகொள்ளாமல் இருந்ததும் தற்போது தெரியவந்துள்ளது[2]. திருமணம் ஆகி, பத்தாண்டுகள் குழந்தை இல்லை, பிறகு பிறந்தது என்றால், அவனை ஒழுங்காக வளர்த்திருக்க வேண்டும். ஆனால், தந்தையும், தாயாரும் இப்படி பியூட்டி பார்லர்-கார் விற்பனை என்று வைத்துக் கொண்டு, அவனுக்கு உடந்தையாக இருந்தது, 18-பெண்களின் வாழ்க்கையை நாசமாக்கியுள்ளது. இனி அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் நிலை எப்படி இருக்குமோ?

v-samuel-with-a-girl-4சாமுவேலும், அவனது பெற்றோரும் ஓடி மறைந்தது: 25-09-2016 அன்று புகார் கொடுத்ததுமே, சாமுவேல் பெங்களூருக்கு ஓடிவிட்டான். பிறகு, அவனது பெற்றோரும் வீட்டைப் பூட்டி விட்டு மறைந்து விட்டனர். அவர் வசித்த மயிலாப்பூர் வீட்டில் போய் பெண் போலீசார் தேடியபோது, அவரது வீடு பூட்டிக்கிடந்தது[3]. விசாரித்த போது, போலீசார் தன்னை தேடுவதை அறிந்ததும், தனது நண்பர்களோடு பெங்களூருவுக்கு தப்பி ஓடிவிட்டார் என்று தெரியவந்தது[4]. அவரது பெற்றோரும் வீட்டின் கதவை பூட்டிவிட்டு தலைமறைவு ஆகிவிட்டனர்[5]. ஆக பெற்றோரும், ஒத்துழைக்கின்றனர் என்று தெரிகிறது. இதனால், போலீஸார் அவர்களை வலைவீசி தேடி வந்தனர்[6]. “இதற்கிடையே சாமுவேல் விஷயத்தில் உயர் அதிகாரி ஒருவர் நெருக்கடி கொடுத்ததால் மகளிர் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காமல் அவரை விடுவித்து விட்டனர். இதையடுத்து சாமுவேல் தலைமறைவாகி விட்டார்”, என்று “தமிழ் முரசு” எடுத்துக் காட்டியது. ஆக, அந்த உயர் அதிகாரியே, ஒருவேளை அப்படி ஐடியா கொடுத்து ஓடச்சொன்னார் போலும்.

v-samuel-with-a-girl-5சாமுவேல் மீது பல வழக்குகள் இருந்தன[7]: கடந்த ஒரு மாதத்திற்கு முன் ஆகஸ்ட்.2016 மயிலாப்பூரில் உள்ள கல்லூரி மாணவியை பின் தொடர்ந்து தொல்லை கொடுத்ததால் அந்த கல்லூரி மாணவியின் பெற்றோர் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் சாமுவேல் மீது புகார் அளித்ததும் விசாரணையில் தெரியவந்தது.  மேலும், சாமுவேல் இரவு நேரத்தில் நண்பர்களுடன் ரேஸ் பைக் வீரராகவும் திகழ்ந்துள்ளார். கடந்த ஆண்டு கவர்னர் கான்வாய் செல்லும் போது அதிவேகமாக பைக் ஓட்டி கைதாகியிருக்கிறார். பேஸ்புக் மூலம் மற்றும் பள்ளியில் இருந்து கல்லூரிக்கு செல்லும் வசதிப்படைத்த மாணவிகளையே குறிவைத்து காதலிப்பது போல் நடித்து உல்லாசமாக இருந்து படம் எடுத்து மிரட்டி பணம் பறிப்பு செயலில் ஈடுபட்டதும், மிரட்டி பறிக்கப்பட்ட பணத்தை வைத்து கொண்டு நண்பர்களுடன் வெளிமாநிலங்களுக்கு சுற்றுலா சென்று வந்ததும் தெரியவந்தது. பெண்ணுடன் ஜல்ஸா முடிந்தவுடன், “வழக்கு எண் 18/9” படத்தில் வரும் காட்சியை போட்டுக் காட்டி மிரட்டி பணம் கேட்பது வாடிக்கையாக இருந்தது[8]. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். சாமுவேலுடன் அவரது நெருங்கிய நண்பர்கள் இரண்டு பேர் மோசடிகளில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இரண்டு பேரிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்[9]. இத்தகைய தொடர்புள்ள குற்றங்களை, ஒரு குழுவாக செய்வது, திட்டமிட்டு செய்ததே ஆகும். போலீஸ் அதிகாரி மற்ற தொடர்புகள் இருந்ததால், தப்பித்துக் கொள்ளலாம் என்ற மனப்பாங்கும், குற்றங்களைத் தொடர்ந்து செய்ய ஊக்குவி்த்துள்ளது.

v-samuel-with-a-girl-627-09-2016 செவ்வாய்கிழமை சாமுவேல் கைது[10]: சாமுவேலின் நெருங்கிய உறவினர் ஒருவர் தமிழக போலீஸ் துறையில் உயர் அதிகாரியாக பணியாற்றுகிறார்[11]. அவர் சாமுவேலை காப்பாற்றுவதற்கு முயற்சித்து உள்ளார்[12]. சாமுவேலை விசாரணைக்கு ஆஜராக சொல்லுங்கள், விசாரணை நடத்திவிட்டு அவரை விட்டுவிடுகிறோம் என்று சிந்தாதிரிப்பேட்டை பெண் போலீசார் உறுதி அளித்துள்ளனர். இதை நம்பிய போலீஸ் அதிகாரி 27-09-2016 அன்று இரவு சாமுவேலை பெங்களூரிலிருந்து சென்னைக்கு வரவழைத்து உள்ளார். “புகார் கொடுத்த பெண் அழைத்ததால், மைலாப்பூரில் ஒரு கோவிலுக்கு சாமுவேல் வந்தபோது பிடிபட்டான்னென்று இந்தியன் எக்ஸ்பிரஸ் எடுத்துக்க் காட்டியது[13]. சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சாமுவேல் விசாரணைக்கு ஆஜரானார். போலீசார் சாமுவேலிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் 10 பெண்களோடு உல்லாசத்தில் ஈடுபட்டு, அவர்களின் ஆபாச படங்களை ‘பேஸ்-புக்’கில் வெளியிட்டிருப்பது தெரியவந்தது. இதுதொடர்பான ஆதாரங்களையும் போலீசார் கைப்பற்றினர். வலுவான ஆதாரங்கள் இருந்ததால் சாமுவேல் நேற்று கைது செய்யப்பட்டார்.

v-samuel-with-a-girl-7சாமுவேலுக்கு உதவிய போலீஸ் அதிகாரி: ஊடகங்கள், “சாமுவேலின் நெருங்கிய உறவினர் ஒருவர் தமிழக போலீஸ் துறையில் உயர் அதிகாரியாக பணியாற்றுகிறார்[14]. அவர் சாமுவேலை காப்பாற்றுவதற்கு முயற்சித்து உள்ளார்[15]. சாமுவேலை விசாரணைக்கு ஆஜராக சொல்லுங்கள், விசாரணை நடத்திவிட்டு அவரை விட்டுவிடுகிறோம் என்று சிந்தாதிரிப்பேட்டை பெண் போலீசார் உறுதி அளித்துள்ளனர்”, என்று குறிப்பிட்டாலும், அவர் யார் என்று தெரியவில்லை. 18-பெண்களை கற்பழித்த, வாழ்க்கையினை சீரழித்த அவனை எப்படி காப்பாற்ற நினைத்தார் என்று தெரியவில்லை. சட்டத்தை மீறியவனுக்கு துணை போவது, எந்த விதத்தில் நியாமானது என்று தெரியவில்லை. ஒருவேளை தனது பெண்ணை ஒருவன் அப்படி செய்திருந்தால், விட்டு வைப்பாரா? பிறகு, இக்காலத்தில், இத்தகைய பாரபட்ச மன்ப்பாங்கு எப்படி உருவாகிறது என்று தெரியவில்லை.

© வேதபிரகாஷ்

12-10-2016

v-samuel-with-a-girl-8

[1] தினகரன், பெண்களை காதல் வலையில் வீழ்த்தியது எப்படி?, Date: 2016-09-29@ 00:24:28.

[2] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=248899

[3] தமிழ்.ஒன்.இந்தியா, 10 பெண்களை ஏமாற்றி காதலித்த காதல் மன்னன்: காதலிக்க மறுத்தால் ஆபாச புகைப்படம் பதிவு, By: Mayura Akilan, Published: Tuesday, September 27, 2016, 13:21 [IST].

[4] http://tamil.oneindia.com/news/tamilnadu/police-search-love-fraud-263779.html

[5] தமிழ்.வெப்துனியா, காதல், உல்லாசம், ஆபாச புகைப்படம் வெளியீடு: காதல் மன்னனுக்கு வலை வீச்சு!, Last Modified: செவ்வாய், 27 செப்டம்பர் 2016 (13:22 IST).

[6] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/love-airily-obscene-photo-released-police-searching-the-cheating-man-116092700008_1.html

[7] தமிழ்.முரசு, பேஸ்புக் மூலம் பழகி இளம்பெண்களை படம் எடுத்து மிரட்டிய இன்ஜினியர் கைது, 9/27/2016, 3:25:14 PM

[8] Once the relationship is established, he would pull off the scene from Vazhakku Enn 18/9 in which the unsuspecting girl believes that her boyfriend was concerned about her getting wet in the beach and that was the reason he had booked a room for her to change her dress.

http://www.deccanchronicle.com/nation/crime/280916/chennai-facebook-lover-held-for-cheating.html

[9] http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=98448

[10] An engineering student of a private college was arrested for sharing nude pictures of a woman with his friends through his mobile phone on Tuesday (27-09-2016). A senior police officer said the woman, who was working as an accountant in a petrol bunk, had stayed with her friend V. Samuel at a hotel in ECR last year 2015. During their stay, the accused Samuel had taken pictures of her changing clothes, without her knowledge. He had shared these pictures with his friends through his mobile phone. When she came to know about it, the 21-year-old woman filed a complaint at the Egmore All Women Police Station. The police arrested the accused when he came to meet her in Mylapore. The accused was produced before a Judicial magistrate and sent to Puzhal prison.

http://www.thehindu.com/news/cities/chennai/engineering-student-arrested-for-sharing-nude-photos-of-woman/article9155957.ece

[11] தினத்தந்தி, 10 பெண்களை ஏமாற்றிய காதல் மன்னன் கைது பேஸ்புக்கில் பெண்களின் ஆபாச படங்களை வெளியீட்டு மிரட்டல், பதிவு செய்த நாள்: செவ்வாய், செப்டம்பர் 27, 2016, 4:35 PM IST; மாற்றம் செய்த நாள்: செவ்வாய், செப்டம்பர் 27,2016, 4:35 PM IST.

[12] http://www.dailythanthi.com/News/India/2016/09/27163524/10-women-for-cheating-King-of-romance-arrested.vpf

[13] On the advice of the police officials, she had asked Samuel to meet her at a temple in Mylapore, where a trap was laid and he was caught red handed.

http://www.newindianexpress.com/cities/chennai/2016/sep/28/Chennai-engineering-student-held-for-circulating-obscene-pix-of-women-1523606.html

[14] தினத்தந்தி, 10 பெண்களை ஏமாற்றிய காதல் மன்னன் கைது பேஸ்புக்கில் பெண்களின் ஆபாச படங்களை வெளியீட்டு மிரட்டல், பதிவு செய்த நாள்: செவ்வாய், செப்டம்பர் 27, 2016, 4:35 PM IST; மாற்றம் செய்த நாள்: செவ்வாய், செப்டம்பர் 27,2016, 4:35 PM IST.

[15] http://www.dailythanthi.com/News/India/2016/09/27163524/10-women-for-cheating-King-of-romance-arrested.vpf

18-பெண்களின் வாழ்க்கையை சீரழித்த சாமுவேல் – ஆபாசப்படங்கள் எடுத்து சமூக ஊடகங்களின் மூலம் பரப்பி, சமூகத் தீவிரவாதியான தறுதலை பிள்ளை (தொடரும் செக்ஸ் குற்றங்கள்-1)!

ஒக்ரோபர் 12, 2016

18-பெண்களின் வாழ்க்கையை சீரழித்த சாமுவேல் – ஆபாசப்படங்கள் எடுத்து சமூக ஊடகங்களின் மூலம் பரப்பி, சமூகத் தீவிரவாதியான தறுதலை பிள்ளை (தொடரும் செக்ஸ் குற்றங்கள்-1)!

karppukkarasi-kannagi

இந்தியாவில், தமிழகத்தில் பெண்களின் நிலை: அடுத்தடுத்து தமிழகத்தில், இவ்வாறான நிகழ்வுகள் நடப்பது மிக்க கவலையை அளிக்கிறது. பெண்களைப் பெற்றவர்கள் நிச்சயமாக மனத்தளவில் பயந்து கொண்டிருப்பர். சுவாதி கொலைக்குப் பிறகும், இத்தகைய செயல்கள் தொடர்வது, அதிகமான சமூக சீரழிவைத் தான் காட்டுகிறது. பொதுவாக கற்பைப் போற்றும் பாரதம், அதிலும் குறிப்பாக “கற்புக்கரசி கண்ணகி” என்று போற்றப்படும் தமிழகத்தில், இவ்வாறு பெண்களின் கற்பை சூரையாடி வருவது, இளம்பெண்கள் திருமணத்திற்கு முன்பாகவே சோரம் போவது, ஆண்களின் வலையில் விழுந்து சீரழிவது முதலியன துக்கத்தை அளிப்பதாக இருக்கிறது.

samuel-facebook-love-cheat-sex-pervert-photo18-பெண்களை பாலியல் ரீதியில் ஏமாற்றி புகைப்படம் பிடித்த சாமுவேல்: சென்னையில் கல்லூரி மாணவி உள்பட 10 இளம்பெண்களை காதலித்து நெருக்கமாகப் பழகி அவர்களின் ஆபாச படங்களை ‘பேஸ்-புக்’கில் வெளியிட்ட சாமுவேல் என்ற காதல் மன்னனை போலீசார் கைது செய்தனர்[1]. சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்தவர் ராஜஸ்ரீ (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது தாயார் ராஜேஸ்வரி சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் 25-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது: “எனது மகள் பட்டப்படிப்பு படித்து உள்ளார். அவரை மயிலாப்பூரை சேர்ந்த சாமுவேல் என்ற இளைஞர் ஒரு தலையாக காதலித்து உள்ளார். காதலை சொல்லி அடிக்கடி பின்தொடர்ந்து வந்துள்ளார். எனது மகள் அவரது காதலை ஏற்கவில்லை. திடீரென்று அந்த வாலிபர் தனதுபேஸ்புக்கில் எனது மகளின் புகைப்படத்தை கிராபிக்ஸ் மூலம் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டுள்ளார். இதுபோல ஏராளமான பெண்களை காதலித்து நெருக்கமாகப் பழகி அந்த இளம்பெண்களின் ஆபாச புகைப்படங்களையும் தனதுபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். அவர்மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்”, இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த புகார் மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்க கமிஷனர் எஸ்.ஜார்ஜ் உத்தரவிட்டார்.

v-samuel-with-a-girlசாமுவேல் ஆடிய காதல் நாடகம்வலையில் விழுந்த பெண்[2]: பிபிஏ பட்டதாரியான நான் சில நாட்களாக (2015லிருந்து) ECR சாலையில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் கணக்காளராக வேலை பார்த்து வந்தேன்[3]. அப்போழுது சாமுவேல் என்னை பின் தொடர்ந்து, ‘உன்னை காதலிக்கிறேன்’ என்று ஒரு மாதமாக தொந்தரவு செய்தான். நான் முடியாது என்று மறுத்து விட்டேன். அதற்கு சாமுவேல் பிளேடால் கையை கிழித்து கொண்டு நீ இல்லையென்றால் இறந்து விடுவேன் என்று பயமுறுத்தினான். அதை நான் கண்டு கொள்ளவில்லை. அதன்பிறகு மறுபடியும் சில நாட்கள் கழித்து இன்னொரு கையை கிழித்து கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான் என்று அவனுடைய நண்பர்கள் எனக்கு தெரிவித்தார்கள். மறுபடியும் தொடர்பு கொண்ட நண்பர்கள், ‘நீ இல்லை என்றால் இறந்து விடுவான்’ என்று சொன்னார்கள். அவன் உன்னை கல்யாணம் செய்ய ஆசை படுகிறான் என்று அவன் நண்பர்கள் என்னிடம் கூறினார்கள். அதன்பிறகு அவனுடைய விருப்பத்தை நான் ஏற்று கொண்டேன். பல மாதங்களாக பழகினேன்[4].

v-samuel-with-a-girl-2பிரிஸ்கிலாஎன்ற ஒரு பெண் எச்சரித்தது[5]: அப்பொழுது அவனால் பாதிக்கப்பட்ட “பிரிஸ்கிலா” என்ற ஒரு பெண் என்னுடைய தொலைபேசியில் தொடர்பு கொண்டு சாமுவேலைப் பற்றி உனக்கு தெரியுமா அவன் ஏற்கனவே என்னையும் எனக்கு முன்னால் பல பெண்களையும் காதலித்து ஏமாற்றி இருக்கிறான் என்றார். அதை கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். பின்னர் மறுநாள் சாமுவேலை பார்க்கும்போது அவனுடைய மொபைல் போனை வாங்கி பார்த்தேன். அப்போது அந்த செல்போனில் பல பெண்களுடனும், மாணவிகளுடனும் கிளு கிளுப்பாக இருக்கும் போட்டோக்கள் ஏராளமாக இருந்தது. இதனால் அந்தப் பெண் சொன்னது உண்மை என்று தெரிந்து கொண்டு, பிறகு சாமுவேலிடம் இருந்து விலக ஆரம்பித்தேன். அவனிடம் இந்த பெண்கள் யார் என்று கேட்டேன். அதற்கு இது எல்லாம் மார்பிங் செய்த போட்டோக்கள் என்று தெரிவித்தான். அதை ஏன் வைத்திருக்கிறாய் என்று கேட்டதற்கு சும்மா என்றான். இதனால் அவனது தவறான புத்தியை தெரிந்து கொண்ட நான், ஒதுங்க ஆரம்பித்தேன். சாமுவேலும் என்னிடம் தொடர்பு கொள்ளவில்லை[6].

samuel-facebook-love-cheat-sex-pervert-demanding-money-dinakaran-cuttingரூ 10 லட்சம் கேட்டு மிரட்டியது[7]: திடீரென கடந்த வாரத்தில் (செப்டம்பர் 2016) வேறு ஒரு தொலைபேசியிலிருந்து என்னை தொடர்பு கொண்டு என்னிடம் பேச வேண்டும் என்று அழைத்தான். அதற்கு நான் மறுத்ததால் அவனுடன் நான் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை வாட்ஸ்-அப் மற்றும் பேஸ்புக்கில் அனுப்பிவிடுவேன் என்று மிரட்டி என்னிடம் ரூ.10 லட்சம் பணம் கேட்டான். நீ தரவில்லையென்றால் சுவாதி கொல்லப்பட்டது போல் உனனை நான் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினான். அதன்பிறகு உடனே என் தொலைபேசியை கட் செய்தேன். பின்னர் பார்த்தால் சாமுவேல் உண்மையாகவே என்னிடம் நெருங்கி பழகின புகைப்படத்தையும் பல பெண்களிடம் பழகிய புகைப்படத்தையும் வாட்ஸ்-அப்பில் பரவ விட்டான். இதைப்பார்த்த என் குடும்பத்தாரும் என் அம்மாவும் என்னை திட்டி அடித்தார்கள். இதன் காரணமாக என் முழு குடும்பமும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். சாமுவேலை விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்”, இவ்வாறு புகாரில் தெரிவித்துள்ளார்[8].

beauty-parlour-nexusபியூட்டி பார்லர் நடத்திய சாமுவேலின் தாய்பார்லருக்கு வந்த பெண்களையும் மாட்ட வைத்த சாமுவேல்: கூடுதல் கமிஷனர் சங்கர், இணை கமிஷனர் மனோகரன், துணை கமிஷனர் பெருமாள், உதவி கமிஷனர் குப்புசாமி ஆகியோர் மேற்பார்வையில் சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.  புகார் கூறப்பட்ட வி. சாமுவேல் [V. Samuel (21)] மயிலாப்பூர் சிவசாமி தெருவை சேர்ந்தவர். மதுரவயலில் ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்தவர் [a final year engineering student at a private university in Maduravoyal][9]. ஆனால் சில பாடங்களில் ‘பெயில்’ ஆகி உள்ளார். இவரது தாயார் சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். ஓய்வுக்குப் பிறகு, நெல்சன் மாணிக்கம் ரோடில், பியூட்டி பார்லர் வைத்து நடத்துகிறார். சாமுவேலிடம் மாட்டிய 18 பெண்களில் இந்த பார்லருக்கு வரும் கல்யாணம் ஆன பெண்களும் அடக்கம்[10]. அதாவது சாமுவேலின் ஆபாசவேலைகள் தாயுக்குத் தெரிந்தே உள்ளது[11]. தந்தை ஓய்வு பெற்ற எல்.ஐ.சி. அதிகாரி. தற்போது அவர் கார் வாங்கி விற்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். சாமுவேல் பெற்றோருக்கு ஒரே மகன் என்பதால் செல்லமாக வளர்க்கப்பட்டு உள்ளார். அவர் கேட்டதையெல்லாம் பெற்றோர் மறுக்காமல் செய்து கொடுத்து உள்ளனர்.

samuel-facebook-love-cheat-sex-pervert-dh-2சாமுவேலைச் சுற்றி இளம்பெண்களை ஏமாற்றி வந்த கூட்டம்: தந்தை கார் விற்பனை நிறுவனம் நடத்தி வருவதால் பல சொகுசு கார்களில், சாமுவேல் வலம் வந்து உள்ளார். தியேட்டர் அதிபர் ஒருவரது மகன் உள்பட இளைஞர் பட்டாளமே சாமுவேலுக்கு நண்பர்களாக உள்ளனர். செல்வம், அந்தஸ்து இருந்ததால் சாமுவேலின் வாழ்க்கை தப்பான பாதைக்கு சென்றுள்ளது. பேஸ்-புக் மூலம் அழகான இளம்பெண்களோடு தொடர்புகொண்டு, வலை விரித்துள்ளார். முதலில் காதலிப்பார். பின்னர் அந்த பெண்களை திருமணம் செய்வதாக ஏமாற்றி, நம்பிக்கையை ஊட்டி தனியாக வருமாறு செய்வார். ECR / OMR சாலைகளில் உள்ள பண்ணைவீடுகளுக்கு அழைத்துச் சென்று உல்லாசத்தில் ஈடுபடுவார். உல்லாசத்தில் ஈடுபடும் காட்சிகளை மறைமுகமாக தனது செல்போன் மூலம் படம் எடுத்து வந்தான். இதற்காக அறையில் பல கேமராக்களை பல கோணங்களில் பொருத்தியிருந்தான். இணையதளங்களில் அவற்றை வெளியிட்டு உள்ளான். ‘பேஸ்-புக்’கிலும் இவரது லீலைகளின் படங்கள் ஏராளமாக உள்ளதாக கூறப்படுகிறது. காதல் மன்னனாக வலம் வந்துள்ளார். இத்தகைய வேலைகளை 2014லிலிருந்தே செய்து வந்ததாகத் தெரிந்தது.

© வேதபிரகாஷ்

12-10-2016

facebook-love-murder-lust

[1] 18 பெண்கள் என்று சென்னைடைம்ஸ் கூறுகிறது – Chennaitimes,  Meet The Engg Student From Chennai Who Cheated More Than 18 Girls Including Married Women!, September.28, 2016.1.58.00 pm.

[2] தினகரன், பெண்களை காதல் வலையில் வீழ்த்தியது எப்படி?, Date: 2016-09-29@ 00:24:28.

[3] The Hindu, Engineering student arrested for sharing nude photos of woman, Chennai, September.28, 2016,  Updated: September 28, 2016 05:32 IST.

[4] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=248899

[5] தினகரன், பெண்களை காதல் வலையில் வீழ்த்தியது எப்படி?, Date: 2016-09-29@ 00:24:28.

[6] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=248899

[7] தினகரன், பெண்களை காதல் வலையில் வீழ்த்தியது எப்படி?, Date: 2016-09-29@ 00:24:28.

[8] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=248899

[9] Chennaitimes,  Meet The Engg Student From Chennai Who Cheated More Than 18 Girls Including Married Women!, September.28, 2016.1.58.00 pm.

[10] The married women who fell in his trap were clients of a beauty parlour which Samuel’s mother runs on Nelson Manickam Road. http://www.chennaimemes.in/2016/09/meet-engg-student-from-chennai-who.html

[11] Deccan Chronicle, Chennai: Facebook lover held for cheating, Published Sep 28, 2016, 6:29 am IST, Updated Sep 28, 2016, 6:29 am IST.

யாஸ்மினை கொலை செய்த ஹனீபா – பேஸ்புக் விவகாரம் தொடர்கிறது – ஒரு தலை காதல் என்றால், தொடரும் கொலைகளைத் தடுப்பது எப்படி-2?

ஒக்ரோபர் 11, 2016

யாஸ்மினை கொலை செய்த ஹனீபா – பேஸ்புக் விவகாரம் தொடர்கிறது – ஒரு தலை காதல் என்றால், தொடரும் கொலைகளைத் தடுப்பது எப்படி (2)?

%e0%ae%af%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d

தட்டிக் கேட்ட ஹனீபாவின் கன்னத்தில் அறைந்த யாஸ்மின்: சம்பவத்தன்று, பண்ருட்டியைச் சேர்ந்த ஒருவரிடம் பேஸ்புக்கில் சாட்டிங் செய்து கொண்டிருந்தை பார்த்து ஆத்திரம் அடைந்து, நான் யாஸ்மினின் வீட்டிற்கு சென்றேன்[1]. அப்போது அவரது வீட்டு கதவு வழக்கம் போல் உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து அவரை சத்தமிட்டு அழைத்து, தனக்கு குடிக்க தண்ணீர் வேண்டும் என்று கேட்டேன். அவர் கதவை திறந்து எனக்கு தண்ணீர் தந்தார். அப்போது, பேஸ்புக்கில் நீ யாருடனும் பேசாதே என்று தெரிவித்தேன்[2]. இதில் தன்னை சந்தேகப்படுகிறாயா? நீ என்று கேட்டு யாஸ்மின் ‘பளார்’ என என் கன்னத்தில் அறைந்தார்,” என்று சொன்னான்[3].

facebook-murder

ஆத்திரம் அடைந்த ஹனீபா உளியால் குத்திக்கொலை: ஹனீபா தொடர்ந்தான், “இதனால் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற நான், அங்கு இருந்த மிளகாய் பொடியை அவரது முகத்தில் வீசினேன். கோபத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் அங்கு இருந்த உளியை எடுத்து அவரது தலையில் ஓங்கி குத்தினேன். இதில் ரத்தம் வெளியேறிது. இருப்பினும் ஆத்திரம் தீரும் அளவிற்கு 8 முறைக்கு மேல் அவரை உளியால் குத்தினேன். இதில் அவர் சம்பவ இடத்திலேயே சரிந்து கீழே விழுந்து உயிரிழந்தார். இதன் பின்னர் செய்வதறியாமல் திகைத்து நின்ற நான், யாரிடமும் சிக்கி கொள்ளாமல் முதிலில் அங்கிருந்து தப்பி செல்ல முடிவெடுத்தேன். அதற்கு பணம் தேவைப்படும் என்பதால், யாஸ்மின் அணிந்திருந்த நகைகள், செல்போன் ஆகியவற்றை எடுத்துவிட்டு வெளியே ஓடினேன். இந்நிலையில் எனது சட்டையில் ரத்தக்கரை படிந்து இருந்தது. இதனால் சட்டையை யாஸ்மினின் வீட்டிற்கு அருகே உள்ள வேலிக்குள் அவிழ்த்து எறிந்து விட்டு, எனது வீட்டில் வேறு சட்டையை மாட்டிக்கொண்டு தலைமறைவானேன். இந்த சூழ்நிலையில் போலீசார் என் மீது சந்தேகமடைந்து விசாரணைக்காக தேடி வந்தனர். இதனால் எப்படியும் போலீசில் சிக்கி கொள்வோம் என்று நினைத்து கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்ததேன்,” இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறினார்.

police-enquiry

விசாரணைக்குப் பிறகு ஹனீபா சிறையில் அடைப்பு[4]: போலீஸார், ரத்தக் கரைப் படிந்த சட்டை, உளி முதலியவற்றைக் கைப்பற்றினர். புதரில் வீசப்பட்ட நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்[5]. பிறகு அனிபாவை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து ஹனீபாவிடம் இருந்த யாஸ்மினின் நகை, செல்போன் மற்றும் கொலை செய்ய பயன்படுத்திய உளி ஆகியவற்றை போலீசார் ஆதாரங்களாக பத்திரப்படுத்தினர். தொடர்ந்து ஹனீபாவை பண்ருட்டி உள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கடலூர் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். ஆக, ஆதாரங்கள் பத்திரமாக கைப்பற்றப் பட்டு, போலீஸாரிடம் உள்ளன என்று தெரிகிறது. இனி அவர்கள், அவற்றை முறையாக தடவியல் சோதனை கூடத்திற்கு அனுப்பி, சோதிக்கப் பட்டு, ஊர்ஜிதப் படுத்த வேண்டும்.

the-murderer-hanif-of-yasmin-panruti-media-7-tv-photo

பலாத்காரம் செய்து கொலையா?: இப்படி தலைப்பிட்டு, “லால்பேட்டை எக்ஸ்பிரஸ்” செய்தியை வெளியிட்டுள்ளது[6]. பண்ருட்டியில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் மர்ம மனிதர்களால் குத்தி கொலை செய்யப்பட்டார். “அலங்கோலமான” நிலையில் கிடந்தாள். அவரது வீட்டில் அதிக சத்தத்துடன் டி.வி. ஓடிக்கொண்டிருந்தது. சத்தம் வெளியே கேட்காமல் இருப்பதற்காக கொலையாளி டி.வி.யை அதிக சத்தத்தில் வைத்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அதேநேரத்தில் தினசரி மதியம் வீட்டிற்கு சாப்பிட வரும் சுலைமான் நேற்று வீட்டிற்கு சாப்பிட வரவில்லை என்று கூறப்படுகிறது. தடயவியல் நிபுணர் அங்கிருந்த தடயங்களை சேகரித்தார். மோப்பநாய் சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, யாஸ்மினை யாரேனும் பலாத்காரம் செய்து கொலை, கொள்ளையில் ஈடுபட்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்[7]. இறந்த ஒரு பெண்ணைப் பற்றி இத்தனை சந்தேகங்களை எழுப்புவது ஏன் என்று தெரியவில்லை.

the-murderer-hanif-panruti-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d

வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை கத்தியால் குத்திக் கொலை செய்த மர்ம நபர்கள்!: “செய்தி.காம்”, கொலை செய்தது பலர் என்பது போல செய்தி “வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை கத்தியால் குத்திக் கொலை செய்த மர்ம நபர்கள்!” வெளியிட்டுள்ளது[8]. “மர்ம நபர்கள்” என்று எப்படி அவர்களுக்குத் தெரியவந்தது[9] என்று தெரியவில்லை. முன்னர் “நகை திருடு” என்று ஆரம்பித்து கொலையில் முடிந்துள்ளது. இப்பொழுது, கொலையும் திசைத் திருப்பப் படுகிறது. ஹனீபா வாக்குமூலம் கொடுத்தது அவர்களுக்குத் தெரியவில்லை போலும். இத்தனை கொலைகள் நடந்து வரும் வேலையிலும், இப்படி முரண்பட்ட செய்திகளை வெளியிட்டு வருவது திகைப்பாக இருக்கிறது. செய்தியாளர்கள்-நிருபர்கள், ஒருவேளை சம்பவம் நடந்த இடத்திற்குச்  செல்லாமலேயே இப்படி உற்சாகம்-ஊக்குவிப்புகளுக்காக “அதிரடி” செய்திகளை அள்ளி வீசுகிறார்களா என்று தெரியவில்லை.

facebook-harassment-of-girls-women-love-and-lust

அத்தை மகள், மாமன் மகள், சித்தப்பா மகள், சித்தி மகள் முதலியோரை மணம் செய்வதில் இஸ்லாத்தில் பிரச்சினையா?: முதலில் ஹனீபா தன் அத்தை மகள் யாஸ்மினை விரும்பியதாகத் தெரிகிறது. அவளை ஹனீபாவுக்கு திருமணம் செய்து வைக்கும் முடிவில் பெற்றோர் இருந்தனர். இந்த நிலையில் திடீரென அவரை எனது பெரியப்பா மகன் சுலைமானுக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டனர், என்று செய்திகள் கூறுகின்றன. இதில், இஸ்லாமிய பிரச்சினை யாதவது உள்ளதா என்று கவனிக்க வேண்டியுள்ளது. சில உறவு மணமுறைகள் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. சில உறவு மணமுறைகள் செய்யலாமா-கூடாதா என்ற சர்ச்சை-குழப்பங்கள் இருக்கின்றன. மேலும், சமீபகாலத்தில், சொந்தத்தில் திருமணம் செய்து கொண்டால், குழந்தைகள் வீரியம், சக்தி, புத்தி, முதலியவை குறைந்து பிறக்கின்றன என்ற கருத்து வலுப்பட்டு வருகின்றது. இங்கு அத்தை-மாமன் மகனை விடுத்து, பெரியப்பா மகன் கூட திருமணம் செய்யப்பட்டிருப்பது, பிரச்சினையா என்பது தெரியவில்லை. இருப்பினும், இப்பொழுது இதனை ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், இனி, அத்தகைய குழப்பங்கள் நேராமல் இருக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

11-10-2016

facebook-love-murder-lust

[1] http://tamil.oneindia.com/news/tamilnadu/teen-girl-was-murdered-her-home-264720.html

[2] தமிழ்.வெப்துனியா, ஃபேஸ்புக்கில் நண்பர்களுடன் பழகிய மாமன் மகள் கொலை, Last Modified: திங்கள், 10 அக்டோபர் 2016 (15:07 IST).

[3] http://www.tamil.webdunia.com/article/regional-tamil-news/friendship-in-facebook-cousin-murdered-116101000026_1.html

[4] தினமலர், ஒருதலை காதலால் பெண் கொலை உறவினர் கைது; நகைகள் பறிமுதல், பதிவு செய்த நாள்: அக்டோபர் 10, 2016: 00.31.

[5] http://www.dinamalar.com/news_detail.asp?id=1624623

[6] லால்பேட்டை.எக்ஸ்பிரஸ், பண்ருட்டியில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் குத்தி கொலை, அக்டோபர்.9, 2016.

[7] http://lalpetexpress.com/exp/30957

[8] செய்தி.காம், வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை கத்தியால் குத்திக் கொலை செய்த மர்ம நபர்கள்!, Monday 2016-10-10 07:00.

[9] http://www.seithy.com/breifNews.php?newsID=167214&category=IndianNews&language=tamil

 

யாஸ்மினை கொலை செய்த ஹனீபா – ஒரு தலை காதல் என்றால், தொடரும் கொலைகளைத் தடுப்பது எப்படி?

ஒக்ரோபர் 11, 2016

யாஸ்மினை கொலை செய்த ஹனீபா – ஒரு தலை காதல் என்றால், தொடரும் கொலைகளைத் தடுப்பது எப்படி?

yasmin-murdered-by-hanif-panruti

பேஸ்புக் விவகாரம் மறுபடியும் இன்னொரு இளம்பெண்ணின் கொலையில் முடிந்துள்ளது: “பேஸ்புக் நட்பு / சாட்டிங்” இன்னொரு கொலையில் முடிந்துள்ளது. அதற்கும் ஒருதலை காதல் என்று தெரிகிறது. பண்ருடியில் பட்டப்பகலில் வீட்டில் இருந்த இளம் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், ‘பேஸ்புக்’கில் நண்பருடன் பேசி பழகியதால் உளியால் குத்தி கொலை செய்தேன் என்று கைதான மாமன் மகன் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளான். இருப்பினும், தமிழ் ஊடகங்கள் வழக்கம் போல, மாறுபட்ட, முரண்பட்ட, குழப்பமான செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். துரதிருஷ்ட வசமாக, இன்னொரு இளம்பெண் கொலை செய்யப்பட்டிருப்பது, மிகவும் துக்கக் கரமான விசயாமகும், கண்டிக்கத் தக்கதாகும். இத்தகைய மனப்பாங்கு இளைஞர்களிடம் உள்ளது, குரூரமான விதத்தில் வெளிப்படுவது, கொலையில் முடிவது ஏற்றுக் கொள்ள முடியாதது. இதனையும் சமூக தீவிரவாத செயலாகக் கொண்டு, இளைஞர்களுக்கு, தக்க ஆலோசனை வழங்க வேண்டும். அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள், புத்தகங்கள் முதலியவை, இட்தகைய உறவுகளை நியாயப்படுத்தவோ, ஏதோ பெரிய சாதனை போன்றோ, சித்தரிப்பது, விவரிப்பது தடுக்கப்பட வேண்டும். தணிக்கைக் குழுவினரால் கண்காணிக்கப்பட்டுத் தடுக்கப்படவேண்டும்.

the-murderer-hanif-of-yasmin-panruti-media-7-tv-photo08-10-2016 அன்று பிணமாகக் கிடந்த இளம் பெண் கொலை யாஸ்மின்[1]: கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள ஆர்.எஸ்.மணி நகர் 4–வது தெருவை சேர்ந்தவர் சுலைமான். இவர் பண்ருட்டியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி யாஸ்மின் (வயது 20). இவர் பிளஸ்–1 வரை படித்துள்ளார். இவர்களுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகிறது, குழந்தை இல்லை. சுலைமான் வேலைக்கு சென்றவுடன் யாஸ்மின் மட்டும் வீட்டில் தனியாக இருப்பார். பக்கத்து தெருவில் யாஸ்மினின் தந்தை காதர்பாஷா வசித்து வருகிறார். இதனால் யாஸ்மினின் தாய் பர்வீன் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வார். நேற்று முன்தினம் 08-10-2016 சனிக்கிழமை அன்று 3 மணியளவில் மகளுக்கு போன் செய்தார். அப்போது யாஸ்மினுடைய செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. சிறிது நேரம் கழித்து போன் செய்தபோதும், பலனில்லாததால் நேரில் பார்ப்பதற்காக மகள் வீட்டிற்கு வந்தார்[2]. அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவு திறந்த நிலையில், பூட்டு கதவில் இருந்தது. பர்வீன் சந்தேகப்பட்டு உள்ளே சென்று பார்த்தபோது, உள்ளே படுக்கையறையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்[3]. யாஸ்மினின் உடலில் பல இடங்களில் கத்தியால் குத்தப்பட்டு இருந்தது கொலை செய்யப்பட்டமை தெரிய வந்தது[4]. இதை பெரும்பாலான ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

the-murderer-hanif-of-yasmin-panrutiயாஸ்மின் மட்டும் தனியாக இருப்பதை அறிந்தவர்கள் வீட்டிற்குள் புகுந்து அவரை கத்தியால் குத்தி கொலை செய்து இருக்கலாம்போலீஸ் தீவிர விசாரணையில் தெரியவந்தது (09-10-2016): இதுபற்றிய தகவல் அறிந்த பண்ருட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, யாஸ்மினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பண்ருட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ்.முரளிதரன், ஆய்வாளர் கெங்காதரன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்[5]. விசாரணையில், யாஸ்மின் வீட்டில் இருந்து சுமார் 8 பவுன் நகை, வெள்ளிப் பொருள்கள் திருடுபோனது தெரியவந்தது[6]. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்[7]. மேலும் விசாரணையில், வழக்கமாக யாஸ்மின் வீட்டில் உள்பக்கமாக பூட்டிக்கொள்வார். தெரிந்தவர்கள் வந்தால் மட்டுமே கதவை திறப்பார்[8]. இதன் மூலம் யாஸ்மின் மட்டும் தனியாக இருப்பதை அறிந்தவர்கள் வீட்டிற்குள் புகுந்து அவரை கத்தியால் குத்தி கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர்[9]. அதன்பேரில் யாஸ்மினின் உறவினர்களிடம் இருந்து போலீசார் விசாரணையை தொடங்கினர்[10].

the-murderer-hanif-panruti-media-7-tv-photoமாமன் மகன் ஹனிபா மீது சந்தேகம் கொண்ட போலீஸார் (10-10-2016): அதில், அதேபகுதியில் உள்ள 6–வது தெருவில் வசித்து வரும் யாஸ்மினின் மாமன் நூர்தீன் என்பவரது மகன் ஹனீபா (22) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை விசாரிப்பதற்காக தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று ஹனீபா லட்சமிநாரயாணபுரம் கிராம நிர்வாக அலுவலர் சையத்இப்ராஹீம் என்பவரிடம் சரணடைந்தார். போலீஸாரிடம் செல்லாமல், கிராம நிர்வாக அலுவலர் சையத்இப்ராஹீமிடம் சென்றது வியப்பாக இருக்கிறது. இதையடுத்து ஹனீபாவை பண்ருட்டி போலீசாரிடம் சையத்இப்ராஹீம் ஒப்படைத்தார். தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு முரளிதரன், இன்ஸ்பெக்டர்கள் கங்காதரன், ஆகியோர் ஹனீபாவை கைது செய்து விசாரித்தனர்.

yasmin-hanif-panrutiபேஸ்புக்கில் பழக்கம் கொண்ட யாஸ்மின், பின் தொடர்ந்து கண்காணித்த ஹனீபா: அதில் யாஸ்மினை கொலை செய்ததை ஒப்புக்கொண்ட அவர், கொலைக்கான காரணம் குறித்து போலீசில் வாக்குமூலம் அளித்தார். அதில் அவர் கூறியதாவது: “தான் டிப்ளமோ படித்து முடித்து உள்ளேன். புதுச்சேரியில் ஓட்டல் மேனேஜ்மெண்ட் படித்தேன்[11]. தற்போது வேலை இல்லாமல் பெயிண்ட் தொழில் செய்து வந்தேன். என்னுடைய அத்தை மகள் தான் யாஸ்மின். எனவே எனக்கு அவரை திருமணம் செய்து வைக்கும் முடிவில் இருந்தனர். இந்த நிலையில் திடீரென அவரை எனது பெரியப்பா மகன் சுலைமானுக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டனர். இருந்தாலும் ஜாஸ்மீன் மீது எனக்கு ஒரு பிரியம் இருந்தது. பேஸ்புக்கில் ஜாஸ்மின் இருந்தது கண்டுபிடித்து கண்டித்தேன். திருமணத்திற்கு பின்னர் சில காலம் வெளிநாட்டில் இருந்த சுலைமான் தற்போது வீடு திரும்பி இருந்தார். இதற்கிடையே யாஸ்மின் ‘பேஸ்புக்’கில் இருந்தது எனக்கு தெரியவந்தது. அதில் அவரது நண்பர்கள் வட்டாரத்தில் பண்ருட்டியை சேர்ந்த ஒருவருடன் ‘பேஸ்புக்’கின் மூலம் பழகி வருவதை நான் அறிந்தேன். இதனால் யாஸ்மின் மீது எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர், எனது அண்ணனின் மனைவி என்பதால் நேரில் சென்று அவரை கண்டித்தேன். ஆனால் அவர் அதை பொருட்படுத்திக்கொள்ளாமல் தொடர்ந்து ‘பேஸ்புக்’கை பயன்படுத்தி வந்தார்.

© வேதபிரகாஷ்

11-10-2016

facebook-useless-love

[1] தினத்தந்தி, பண்ருட்டியில் இளம் பெண் படுகொலை: பேஸ்புக்கில் நண்பருடன் பேசி பழகியதால் கொலை செய்தேன் கைதான மாமன் மகன் வாக்குமூலம், பதிவு செய்த நாள்: ஞாயிறு, அக்டோபர் 09,2016, 10:52 PM IST; மாற்றம் செய்த நாள்: திங்கள் , அக்டோபர் 10,2016, 4:00 AM IST

[2] இந்நேரம்.காம், இளம்பெண் கொலை வழக்கில் திடுக் தகவல்!, Monday, 10 October 2016 16:41

http://www.inneram.com/news/tamilnadu/10515-young-girl-murder-case.html

[3] http://www.dailythanthi.com/News/Districts/Cuddalore/2016/10/09225214/Young-woman-killed-manaFacebookTalking-with-a-friend.vpf

[4] http://www.inneram.com/news/tamilnadu/10515-young-girl-murder-case.html

[5] தினமணி, பண்ருட்டியில் இளம்பெண் கொலை, By DIN  |   Last Updated on : 09th October 2016 01:40 AM

[6] http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2016/oct/09/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-2578366.html?pm=381

[7] அதிரடி.காம், வீட்டில் தனிமையில் இருந்த பெண்ணுக்கு நிகழ்ந்த கொடூரம்..!!, 10 October 2016.

[8] http://www.athirady.com/tamil-news/news/886071.html

[9] http://media7webtv, கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் முகநூலில் நண்பருடன் இளம்பெண் பேசி பழகியதால் கொலை, Mohaned Aslam, October 10, 2016.

[10] http://media7webtv.in/?p=2598

[11] தமிழ்.ஒன்.இந்தியா,பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் கத்தியால் குத்தி படுகொலை: பண்ருட்டி அருகே பரபரப்பு!, By: Karthikeyan, Published: Monday, October 10, 2016, 19:21 [IST]

அனிதா ஆசைக் காட்டி மயக்கி, மந்திர தாலி கட்டி வேலை வாங்கித் தருவதாக இளைஞர்களை தந்திரமாக ஏமாற்றி லட்சங்களைப் பறித்தது!

பிப்ரவரி 17, 2016

அனிதா ஆசைக் காட்டி மயக்கி, மந்திர தாலி கட்டி வேலை வாங்கித் தருவதாக இளைஞர்களை தந்திரமாக ஏமாற்றி லட்சங்களைப் பறித்தது!

அனிதா மோசடி பிப்ரவரி 2016.9

பொலீஸார் விசாரணை, கைது முதலியன: இந்த புகார் மனு மீது ஐகோர்ட்டு உதவி கமிஷனர் கண்ணன் மேற்பார்வையில், ஐகோர்ட்டு போலீசார் மோசடி மற்றும் கொலைமிரட்டல் சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்[1]. அனிதா பற்றிய விவரங்கள் இருந்ததினால், உதவி கமிஷனர் கண்ணன், இன்ஸ்பெக்டர் கீதா ஆகியோர் அனிதாவை விசாரணைக்காக அழைத்தனர். அப்போது சொகுசு காரில் பந்தாவாக வந்து இறங்கினார் அனிதா. தனது தந்தை அருப்புக்கோட்டையில் துணி மில் முதலாளியாக இருப்பதாகவும், தானும் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் மாதம் ரூ.2 லட்சம் சம்பளத்தில் வேலைபார்ப்பதாகவும், மோசடி எதிலும் தான் ஈடுபடவில்லை என்றும் கூறி போலீசாரிடம் கடும் மோதலில் அனிதா ஈடுபட்டார்[2]. மேலும் தனக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை என்று போலீஸாரிடம் சத்தியம் செய்தார் அனிதா. ஆனால் போலீஸாரின் கிடுக்குப்பிடி விசாரணை கேள்விகளால் சிக்கிக் கொண்டார். தொடர்ந்து அவரது வீட்டிலிருந்து அனிதாவின் லேப்டாப்பில் மோசடி செய்ததற்கான ஆவணங்கள் அனைத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். அனிதாவுடன் மோசடிக்கு உதவியாக இருந்த அவரது கணவர் சுரேசும் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தால் அனிதா குறித்து இன்னொரு அதிர்ச்சி தகவலைச் சொல்கிறார்கள்.

அனிதா மோசடி பிப்ரவரி 2016.6சுரேஷ்குமார் என்ற வக்கீல் அனிதாவின் மோசடி மற்றும் காதல் லீலைகள் பற்றி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள்: அனிதா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சிலரும் போலீசாரை வற்புறுத்தினார்கள். அதில், சுரேஷ்குமார் என்ற வக்கீல் அனிதாவின் மோசடி மற்றும் காதல் லீலைகள் பற்றி திடுக்கிடும் தகவல்களை போலீஸ் விசாரணையில் தெரிவித்தார். அவர் கூறிய தகவல்கள் வருமாறு:- இளைஞர்களிடம் காதல் லீலை அனிதா மீது தற்போது 4 பேர் மட்டுமே புகார் கொடுத்துள்ளனர். ஆனால், அவரிடம் வேலைவாய்ப்பு கேட்டு லட்சக்கணக்கில் பணம் கொடுத்து ஏராளமான இளைஞர்கள் ஏமாந்துள்ளனர். ஏமாந்த இளைஞர்களின் பட்டியலை நாங்கள் தயாரித்து வருகிறோம். அனிதா, ஏராளமான ஆண்களுடன் நெருங்கி போஸ் கொடுத்த புகைப்படங்களை கைப்பற்றி உள்ளோம். அதோடு ஒரு திருமண அழைப்பிதழும் உள்ளது. இந்த புகைப்படங்களில் உள்ளவர்கள் யார் என்று தெரியவில்லை. அனிதாவை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் மட்டுமே எத்தனை பேர் அவரிடம் ஏமாந்துள்ளார்கள் என்ற விவரம் தெரியவரும். அனிதா தன்னிடம் அறிமுகமாகியவர்களை அண்ணன், லவ்வர் என்ற உறவு முறையிலேயே பழகுவார். பிறகு அவர்களிடம் இருந்து பணம், நகை என எல்லாவற்றையும் ஏமாற்றிவிடுவார். சிலரை ரகசியமாக திருமணமும் செய்து இருப்பதாக தகவல் எங்களுக்கு கிடைத்துள்ளது. அனிதாவிடம் ஏமாந்தவர்களின் கதையை கேட்கும் போது சினிமாவை மிஞ்சும் வகையில் உள்ளது.

அனிதா மோசடி பிப்ரவரி 2016.8மந்திரத்த தாலி”, மயக்கும் வார்த்தைகள், சந்தோஷம் முதலியன: அனிதா, தனது முதல் கணவர் குமாரைக் கூட போலீஸில் சிக்க வைத்து அவரிடமிருந்து ஜீவனாம்சம் பெற நீதிமன்றத்தில் முயற்சித்து வந்துள்ளார். அனிதா குறித்த முழு தகவல்களும் அவரை கைது செய்த பிறகே குமாருக்கு தெரியவந்துள்ளது. அனிதா வழக்கில் தோண்ட தோண்ட பல தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றன” என்றனர். அனிதா மோசடி குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், “அனிதா பார்ப்பதற்கு அழகாக இருப்பதால் அதன் மூலமாக மோசடியில் ஈடுபட்டுள்ளார். அவருடைய அழகில் மயங்கியவர்கள் லட்சக்கணக்கான பணத்தை அவரிடம் கொடுத்து ஏமாந்துள்ளனர். வேலைவாங்கித் தருவதாகவும், திருமணம் செய்தும் பலரை அனிதா ஏமாற்றியுள்ளார். இதற்காக அவரது கையில் எப்போதும் தாலிச் செயின் ஒன்றை வைத்திருந்துள்ளார்[3]. அனிதாவுடன் நெருங்கிப் பழகியவர்களிடம் அந்த தாலிச் செயினை கொடுத்து இதை என்னுடைய கழுத்தில் கட்டினால் சந்தோஷமாக இருக்கலாம். இல்லையெனில் பல பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டியதிருக்கும். ஏனென்றால் இந்த செயின் கேரளாவில் உள்ள மந்திரவாதிகள் மாந்திரீகம் செய்து கொடுத்தது என்று சொல்லியே பலரை அனிதா ஏமாற்றியுள்ளார்” என்றனர். அனிதா போன்றவர்களிடம் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அனிதா மோசடி பிப்ரவரி 2016.7மந்திரத்த மலையாளத் தாலியினால் சந்தோஷம் வருமா?: அனிதாவின் தாலி அந்த அளவுக்கு தமிழ்நாட்டு இளைஞர்களை வலையில் வீழ்த்தியுள்ளது என்றால், வேடிக்கையாக இருக்கிறது.

  1. பெரியார் பிறந்த மண் – பகுத்தறிவு பகலவன் பிறந்ததால் திராவிட மக்கள் இப்படித்தான் வாழ்வார்கள் என்ற மனப்பாங்கு
  2. நாத்திகம் – இந்துக்களுக்கு எதிரானது என்பதால், அச்சித்தாந்தத்தில் ஊறியவர்கள் எதற்கு பயப்படாமல் இருப்பது.
  3. பகுத்தறிவு – இதனால்,விதண்டாவாதம் செய்து தேவையற்ற வேலைகளில் ஈடுபடுவது.
  4. சுயமரியாதை திருமணம் – முதலில் சட்டப்படி செல்லாது என்றாகி, பிறகு இந்துமத திருமண சட்டத்தில் ஏற்புடையானது – இது பகுத்தறிவுவாதிகளின் தோல்வி மற்றும் அவர்களின் குடும்பங்களின் முரண்பாடு வெளியானது.
  5. பிள்ளையார் உடைப்பு – முதலியன இந்துக்களின் மனங்களை வெகுவாக பாதித்ததன.
  6. ராமருக்கு செருப்பு மாலை – முதலியன இந்துக்களின் மனங்களை வெகுவாக பாதித்ததது மட்டுமன்றி, நாத்திகர்களின் போலித்தனம் வெளிப்படுதல் (துக்ளக் பறிமுதல் முதலியன)
  7. “ராமர் எந்த இஞ்சினியரிங் காலேஜில் படித்தார், என்ன நெற்றியில் ரத்தமா” என்ற கருணாநிதியின் நக்கல் (ஆனால் குடும்பமோ கோவில்-கோவிலாகச் சென்று வழிபடுதல், பூஜை, யாகம் செய்வது முதலியன),
  8. “ராமன் ஏகபத்தினி விரதன்” என்று வீரமணியின் தூஷண கட்டுரைகள் தாலி அறுப்பு விழா – உதாரணத்திற்கு ஒன்று – பல கட்டுரைகள் “விடுதலை”யில் வந்துள்ளன,
  9. ஆண்-பெண் கட்டுப்பாடு தேவையில்லை – இது மிகவும் ஆபத்தான சித்தாந்தம், இது விவாக ரத்து மட்டுமல்லாது, பலதார மணத்திற்கு ஊக்குவித்து, நெறிகெட்ட போது விபச்சாரத்திற்கும் வழி வகுத்தது.
  10. திருமணத்திற்கு முன்பாக பெண்களிடம் கற்பு இருக்கிறதா என்று எதிர்பார்க்க முடியாது (குஷ்பு போன்ற நடிகைகளின் வியாக்கியானம்),
  11. ………..இப்படியெல்லாம் 60 ஆண்டுகளுக்கும் மேலான நடந்து வரும் ஆட்சியினால், மக்களிடம் நீதி, நேர்மை, தார்மீகம், சட்ட-திட்டங்களை மதித்தல், பெரியவர்களுக்கு-பெற்றோர்களுக்கு மரியாதை கொடுப்பது…………….என்று எல்லாமே கொச்சைப்படுத்தப் பட்டு, மறக்கப் பட்டன.

குஷ்பு பெண்ண்ணிய கருத்துவங்கி கணக்கில் பணம் வாங்கிய அனிதா: புகார் கூறிய இளைஞர்களிடமிருந்து வங்கிக் கணக்கு மூலம் பணம் பெற்றுள்ளார் அனிதா. நவீனத்துவ முறையில் மோசடி செய்யும் போது, நம்பக முறைகளையும் கையாளுகிறார்கள் என்று தெரிகிறது. அதனால், கொடுத்தவர்கள் விவரங்களிலிருந்து, அவளது கணக்கை ஒப்பிட்டப் பார்த்த போது, பணம் பெற்றது ருஜுவானது. வங்கிக்கணக்கு மூலம் பணம் வாங்கியிருந்ததால் வழக்கில் இருந்து தப்பமுடியவில்லை. இது அவருக்கு எதிரான வலுவான ஆதாரமாக மாறியது[4]. இதனால், போலீசார் அனிதாவை கைது செய்தனர்[5]. கைது செய்யப்பட்ட அனிதா நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது மோசடி லீலைகளுக்கு பின்னணியாக மேலும் பலர் இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். அனிதா மீது பணமோசடி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட புகார்கள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்[6].  அனிதாவின் இந்த மோசடி லீலைகள் சென்னை ஐகோர்ட்டு வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

© வேதபிரகாஷ்

17-02-12016

[1] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=195881

[2] http://www.dailythanthi.com/News/State/2016/02/12004203/The-woman-whod-bought-the-work-in-court-for-fraud.vpf

[3] http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=160553

[4] http://tamil.oneindia.com/news/tamilnadu/chennai-woman-arrested-cheating-case-246757.html

[5] நக்கீரன், காதல் ராணிஅனிதாவின் மோசடி லீலைகள்: போலீஸ் விசாரணையில் அம்பலம், பதிவு செய்த நாள் : 12, பிப்ரவரி 2016 (9:26 IST); மாற்றம் செய்த நாள் :12, பிப்ரவரி 2016 (9:26 IST.

[6] http://ns7.tv/ta/promising-job-madras-high-court-million-scams.html