வட்டிக்கு பணம் கொடுத்து, கற்பை சூரையாடிய கொடூரன் தண்டனை பெற்றதால் பெண்கள் பாதிப்பு நிவர்த்தியாகி விடுமா!
சிவராஜின் செயல்திட்டமுறையும், காம-கொக்கோகமும், வீடியோ-சிடி விவகாரங்களும்: சிவராஜ் மீதான புகாரை பலப்படுத்த அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும், புகார் கொடுக்கும் பெண்களின் பெயர், முகவரி உள்ளிட்ட தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் சிவராஜால் பாதிக்கப்பட்ட மூன்று பெண்கள் 2014 அக்டோபர் 6ஆம் தேதி பாலக்கோடு போலீசில் புகார் கொடுத்துள்ளனர். அதில், “கடன் கொடுத்த நிதி நிறுவன அதிபர் சிவராஜ் எங்களின் வறுமை நிலையை சாதகமாக பயன்படுத்தி உல்லாசத்திற்கு அழைத்தார். வர மறுத்தபோது அதிக வட்டி தரவேண்டும் என்று கூறி மிரட்டினார். இதனால் பயந்து போன நாங்கள் அவரது பண்ணை வீட்டிற்கு சென்றோம். அங்கு சிவராஜ் எங்களை மிரட்டி உல்லாசமாக இருந்தார். இதனையடுத்து அவர் தனது செல்போனில் எடுத்த ஆபாச காட்சிகளை எங்களின் குடும்பத்தினருக்கு காட்டி விடுவதாக மிரட்டி, பலமுறை பண்ணை வீட்டிற்கு அழைத்து சென்று கற்பழித்தார்,” என்று கூறியுள்ளனர். தங்களை போல் இன்னும் ஏராளமான பெண்கள் சிவராஜால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அவர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
பெண்மையை சுற்றியுள்ள சமுதாய-சட்டப் பிரச்சினைகள்: இதனையடுத்து புகார் கொடுத்த பெண்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், விசாரணை முழுவதையும் கேமராவில் பதிவு செய்துள்ளனர். புகாரின்பேரில் போலீஸார் நடத்திய புலன் விசாரணையில் சிவராஜ், அப் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் உள்பட 26-க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. பெண்களுக்கு முறைப்படி சட்டரீதியில் பாதுகாப்பு கொடுத்தல் போன்ற விவரங்கள்தெரியவில்லை. தற்போது போலீசார் நிதி நிறுவன அதிபர் சிவராஜ் மீது கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், சிவராஜால் பாதிக்கப்பட்ட பெண்கள் அவர் மீது தைரியமாக புகார் கொடுக்க முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். மூன்று பெண்களின் புகாரையடுத்து இந்த வழக்கு சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனால் சிவராஜை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்குள், இவ்வழக்கு முறையாக நடத்தப்படுமா என்ற சதேகம் வந்ததால், சிலர், பெரிய அளவில் விசாரணை தேவை என்று நினைத்தனர். இதை அரசியலாக்கும் விதத்தில், உள்ளூர் எம்.எல்.ஏ, தில்லி பாபு [சிபிஎம்] மற்றும் மகில இந்திய பெண்கள் இயக்கமும் சேர்ந்து ஆர்பாட்டம் நடத்தி, சிபி-சி.ஐ.டி விசாரணை தேவை என்று வற்புறுத்தினர்[1]. சிவராஜின் சொத்துகளும் பறிமுதல் செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்[2].
பாதகர்கள் தண்டனை பெற்ற விவரங்கள்: இந்த வழக்கு தருமபுரி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் வழக்குரைஞர் ஆர். உமா மகேஸ்வரி ஆஜரானார். இந்த வழக்கில் மாவட்ட மகளிர் நீதிபதி எம். மீரா சுமதி 8-01-2017 [புதன்கிழமை] தீர்ப்பு வழங்கினார். முதல் குற்றவாளியான வட்டிக் கடைக்காரர் சிவராஜுக்கு பாலியல் பலாத்கார சட்டப்பிரிவில் நான்கு ஆயுள் தண்டனைகள் மற்றும் ரூ. 4,000 அபராதம் விதிக்கப்பட்டது[3]. மேலும், 67ஏ தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவின் கீழ் 12 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ. 2 லட்சம் அபராதமும், 66இ தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவின் கீழ் 8 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ. 40 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது[4]. அபராதத் தொகை மொத்தம் ரூ. 2.44 லட்சம்[5]. இச்சம்பவத்தில் செல்லிடப்பேசியில் இருந்த விடியோக்கள் வெளியே உலவக் காரணமாக இருந்தவன் அதே பகுதியைச் சேர்ந்த செல்லிடப்பேசி பழுதுபார்க்கும் தொழில் செய்து வந்தவன் மா. முன்னா[6]. அவனுக்கு பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் மொத்தம் 6 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 61 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது[7]. இரு குற்றவாளிகளின் கோரிக்கைகளை ஏற்று சிறைத் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கலாம் என்றும் நீதிபதி எம். மீரா சுமதி உத்தரவிட்டார்[8].
கற்பை சூரையாடிய கொடூரன் தண்டனை பெற்றதால் பெண்கள் பாதிப்பு நிவர்த்தியாகி விடுமா!: பாதகர்கள் தண்டனை பெற்றது சட்டப்படி நடந்துள்ளது என்றாலும், பெண்கள் பாதிப்பு சரிசெய்யமுடியாதது ஆகும். மனம் மற்றும் உடல் ரீதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கஷ்டங்களை, உபாதைகளை யார் சரிசெய்ய முடியும்? நடந்தது மாற்ற முடியும், சீர்செய்யமுடியும் என்ற நிலையாகாது.
- ஒரு பெண் சீரழிந்தால், ஒரு குடும்பம் சீரழிகிறது;
- ஒரு குடும்பம் சீரழிந்தால், ஒரு சமுதாயம் சீரழிகிறது;
- ஒரு சமுதாயம் சீரழிந்தால், ஒரு தேசம் / நாடு சீரழிகிறது;
ஆகவே, குறிப்பிட்ட நாட்டின் மீது நடத்தப்படும் கலாச்சார தாக்குதல், இவ்வாறு பலநிலைகளில் பாதித்து, சீரழித்து வருவதை பொறுப்புள்ளவர்கள் மிக்க அக்கரையுடன் கவனிக்க வேண்டும். இன்றளவில், சினிமாநடிகைகளிடம் கற்பு, கலாச்சாரம், குடும்பம் முதலியவற்றைப் பற்றி கருத்து கேட்டு, விளம்பரம் செய்கிறார்கள். இதனால், அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவது போன்ற தோற்றத்தையும் ஏற்படுத்துகின்றார்கள். நிர்வாணமாக நடிப்பேன் என்று உரிமைகள் பேசி, அவ்வாறே தொழில் செய்யும் நடிகைகள் எப்படி முன்னுதாரணமாக இருக்க முடியும்?
© வேதபிரகாஷ்
20-01-2017
[1] The Hindu, Plea for CB-CID probe , DHARMAPURI: OCTOBER 16, 2014 00:00 IST UPDATED: MAY 24, 2016 13:53 IST.
[2]The Communist Party of India (Marxist) staged a demonstration here at Palacode demanding CB-CID probe into the case of a local financier who was involved in sexual harassment of women. The financier Sivaraj was arrested last week [17-05-2016] on the charges of sexually harassing women. The demonstration was led by CPI (M) MLA Dilli Babu. Members of the All India Democratic Women’s Association also took part in the demonstration. The CPI (M) also demanded confiscation of the property belonging to Sivaraj.
[3] தினமணி, பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து விடியோ எடுத்த வழக்கில் வட்டிக் கடைக்காரருக்கு 4 ஆயுள் தண்டனை, By தருமபுரி, | Published on : 19th January 2017 08:44 AM.
[4] http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2017/jan/19/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-4-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-2634850.html
[5] தினகரன், பெண்களை ஆபாச வீடியோ எடுத்து பலாத்காரம், பாலக்கோடு பைனான்சியருக்கு 4 ஆயுள் தண்டனை : தர்மபுரி கோர்ட் தீர்ப்பு, 2017-01-19@ 01:05:08
[6] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=273446
[7] The Hindu, Financier gets four life sentences for sexual abuse, DHARMAPURI: JANUARY 19, 2017 00:00 IST; UPDATED: JANUARY 19, 2017 04:00 IST.
[8] The District Mahila Court here on Wednesday [18-01-2017] convicted financier M. Sivaraj (44) of Palacode to four life sentences and imposed a fine of Rs. 2.44 lakh on him for sexually abusing women. The life sentences are to run concurrently. According to prosecution, Sivaraj sexually abused women who had availed themselves of loans from his firm, but could not repay the dues in time. He videographed the act on his mobile phone and used this to threaten them into submitting to sexual abuse again. The entire scandal came to light when Sivaraj gave his mobile phone to a local service centre to set right a snag. Munna, the owner of the service centre, after witnessing the obscene videos spread them in social media. On a complaint preferred by Vijana, village administrative officer, the Palacode Police arrested Sivaraj and M. Munna in October 2014 and filed a case in the District Mahila Court. The Mahila Court Judge M. Meera Sumathi found both the accused guilty of the charges. The Judge convicted Sivaraj to four life sentences and a fine of Rs. 4,000, eight years imprisonment and a fine of Rs. 40,000 under Section 66-E of the Information Technology Act 2000 (violation of privacy) and another 12 years imprisonment with a fine of Rs. 2 lakh under Section 67-A (publishing or transmitting obscene material in electronic form). The Judge sentenced Munna to three years imprisonment and a fine of Rs. 50,000 under Section 67-A of IT Act, two years and a fine of Rs. 10,000 under 66-B of IT Act and one year imprisonment and a fine of Rs. 1,000 under Section 292 IPC (publicly exhibiting or circulating obscene material). Munna’s prison terms will run concurrently.