Archive for the ‘ஆபாசப் படம்’ Category

தெய்வத்தின் சொந்த தேசத்தில், அதிகம் எழுத்தறிவு கொண்ட மாநிலத்தில் நிர்வாண பூஜை, நரபலி முதலியன குரூர குற்றங்கள் எப்படி நடக்கின்றன – தீர்வு என்ன? (4)

ஒக்ரோபர் 15, 2022

தெய்வத்தின் சொந்த தேசத்தில், அதிகம் எழுத்தறிவு கொண்ட மாநிலத்தில் நிர்வாண பூஜை, நரபலி முதலியன குரூர குற்றங்கள் எப்படி நடக்கின்றன – தீர்வு என்ன? (4)

கேரள அரசு மாந்திரீக நரபலி நிபுணன் பைத்தியம் என்றது: அரசின் மெத்தனத்தால் தான் இத்தகைய குற்றங்கள் நடந்துள்ளன, என்று நீதிமன்றம் முதல் மற்ற பொறுப்புள்ளவர்கள் வெளிப்படையாக சொல்ல ஆரம்பித்துள்ளதால், ஆளும் மார்க்சீய அம்யூனிஸ்ட் ஆட்சி, இதனை திசைத் திருப்பி, அமுக்கி வாசிக்க முயல்கிறது. முக்கிய குற்றவாளி ஒரு பைத்தியம், மனோநல வியாதி கொண்டவன், என்றெல்லாம் சித்தரிக்கப் பட்டு வருகிறான். இறகு, அதே காரணத்திற்காக அவன் குற்றத்திலிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம். இதனால், அதே முறையில்[1], “உண்மையில் மனநிலை சரியில்லாதவர்களால் தான் இப்படி செய்ய முடியும். இது நவீன சமுதாயத்திற்கு சவாலாக உள்ளது. இதுபோன்ற தவறான எண்ணங்கள் மற்றும் மூடநம்பிக்கைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு, அனைத்திலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், இந்த தீமையை எதிர்த்துப் போராட வேண்டும்,” என்று முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது[2]. இவ்விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து கேரள மாநில காவல்துறை உத்தரவிட்டுள்ளது[3]. துணை ஆணையர் சசிதரன் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது[4].

கேரளாவும் ஆபாசப் படங்களும்: ஆபாசப் படம் / போர்ன் வீடியோ எடுப்பது, முதலியவை பல்லாண்டுகளாக கேரளாவில் நடந்து வருகின்றன என்று செய்திகள் மூலம் அறியப் படுகிறது. கேரள திரைப்படங்களே முன்பு 1960-70களில் பிரபலமாக இருந்தன. அத்தகைய காட்சிகள் வரும் என்று தியேட்டர்களுக்கு செல்லும் வழக்கமும் இருந்தது. பிறகு 1980களில் வீடியோ கேசட், சிடி என்று தொழிற்நுட்பமும் மாறி விட்டது. பிறகு இன்டெர்நெட் வந்ததிலிருந்து, செல்போன் போன்றவற்றால், தனிநபர் விருப்பங்களுக்கு ஏற்றபடி மாறின, மாறி விட்டன.  கேரளாவில் இதைப் பற்றிய செய்திகள் இன்றும் வரத்தான் செய்கிறது, சரிதா நாயர் விவகாரத்திலும் அப்பிரச்சினை உள்ளது. உதாரணத்திற்கு, இச்செய்தி கொடுக்கப் படுகிறது. கேரளாவில் 13 வயது சிறுமி ஒருவர், அவருடைய அண்ணனால் கர்ப்பமாகியுள்ளார். வயிற்றுவலி என சிகிச்சைக்காக மருத்துவமனை சென்றபோதுதான் 30 வார கர்ப்பமாக இருக்கிறார் என்பதே தெரியவந்துள்ளது[5]. இணையதளத்தில் ஆபாசப் படங்கள் எல்லா வயதினருக்கும் எளிதில் கிடைத்துவிடுகின்றன, இதனால், சமூக ஊடகங்கள் கட்டுப்படுத்தப் பட வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுருத்தியது.

கேரளாவில் சிறுவர், சிறுமியரின் ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பிய விவகாரம்: கேரளாவில் சிறுவர், சிறுமியரின் ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பிய 21 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்[6]. அவர்களிடம் இருந்து லேப்டாப்,  செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன[7]. கேரளாவில்  சமீப காலமாக வாட்ஸ்  அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் சிறுவர், சிறுமிகளின் ஆபாச   வீடியோக்கள் பரவி வருவதாக போலீசுக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இது   தொடர்பாக சர்வதேச  அளவிலும் புகார்கள் உள்ளன. சர்வதேச போலீசான   இன்டர்போலுக்கும் புகார்கள் வந்துள்ளன.இதையடுத்து சிறுவர், சிறுமியரின் ஆபாச வீடியோக்கள் வெளியிடுவதை தடுக்க இன்டர்போல் அழைப்பு  விடுத்துள்ளது. இதன்படி திருவனந்தபுரம்  சரக ஏடிஜிபி மனோஜ் ஆப்ரகாம்  தலைமையில் ‘பி-ஹண்ட்’ என்ற பெயரில்  ஒரு தனிப்படை  அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் கேரளா முழுவதும் 29 இடங்களில்  அதிரடி சோதனை நடத்தினர்.  இதில் சிறுவர், சிறுமியர் ஆபாச படங்களை பரப்பிய 21  பேர் கைது  செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்த லேப்டாப், செல்போன்கள், ஹார்ட்  டிஸ்க்,  யுஎஸ்பி டிரைவ் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. இதுகுறித்து ஏடிஜிபி   மனோஜ் ஆப்ரகாம் கூறியது: “சிறுவர், சிறுமியர் ஆபாச வீடியோ பரப்புகிறவர்களுக்கு 5 வருட சிறை தண்டனையும், 10 லட்சம் அபராதமும்  விதிக்கப்படும். பிஹண்ட் சோதனை மேலும் தீவிரப்படுத்தப்படும். கேரளா முழுவதும் 84 பேர் தீவிரமாக  கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். விரைவில்  மேலும் பலர் கைது  செய்யப்படுவார்கள். பல வாட்ஸ் அப், பேஸ்புக்  குரூப்புகள் கண்காணிக்கப்பட்டு  வருகின்றன,” இவ்வாறு  அவர் கூறினார்.

கேரள போர்ன், மாந்திரீகம், கொலை எல்லாம் திட்டமிட்டு நடக்கிறதா?: ஆபாசப் படங்கள் எடுக்க பெண்கள் தேவை, அதற்காக முறை தவறிய பெண்கள், அத்தகைய ஆண்களின் தொடர்புகளில் இருப்பார்கள். இது ஒரு “செக்சஸ்” என்பார்கள். அரசியல், சட்டம்-ஒழுங்கு அமூல் படுத்துகிறவர்களின் மறைமுக ஆதரவு என்றெல்லாம் இருந்து விட்டால், சாதாரண மக்கள் ஒன்றும் செய்ய முடியாது. பெரும்பாலான விவகாரங்கள், தெரியாமல், ரகசியமாகவே நடந்து கொன்டு இருக்கும். தினம் தினம் வேலை செய்து, வாழ்க்கை நடத்தும் மக்கள் இவற்றைப் பற்றி கவலைப் பட மாட்டார்கள், அதற்கு அவர்களுக்கு நேரமும் இல்லை, இருக்காது. ஆக, ஒருவேளை சம்பந்தப் பட்ட பெண்கள் ஏதோ காரணங்களுக்காக நச்சரித்துக் கொண்டே இருந்தால், ஆண்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு, எல்லைகளைக் கடக்கும் போது, தீர்த்துக் கட்டி விடலாம் என்ற முடிவுக்கும் வரலாம். அந்நிலையில், இத்தகைய பண ஆசை பிடித்த ஆட்கள் கிடைக்கும் போது, ஒரே கல்லால், இரு மாங்காய் அடிக்கும் விதத்தில், நரபலியும் கொடுத்து, பொஇரச்சினை செய்யும் பெண்ணையும் தீர்த்து கட்டுவார்களோ என்னமோ? இதெல்லாம் மற்றவர்களுக்கு தேவையில்லாத விசயங்கள். இருப்பினும், போலீஸார் அவ்வாறெல்லாம் கூட விசாரணை செய்யலாம். சாதாரண மக்கள் கடவுளை நம்பிக்கொண்டு, தெய்வ நம்பிக்கையுன், நிம்மதியாக வாழ்ந்தாலே போதும்.

தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டு வருபவனை சைக்கோ, மனநோயாளி, வக்கிரம் படித்தவன், அதனால் அப்படி செய்தான், செய்வான் என்று அமைதியாகி விடமுடியாது: அதிக படிப்பறிவு கொண்ட மாநிலம், முற்போக்கு எண்ணம் கொண்டவர்கள், மெத்தப் படித்தவர்கள், இந்திய அரசியலில் தொடர்ந்து தாக்கத்தை ஏர்படுத்தி வருகிறவர்கள், எல்லா துறைகளிலும், நிறுவனங்களிலும், இடங்களிலும் இருப்பவர்கள் என்றெல்லாம் இம்மாநிலத்தவர்கள் கருதப் பட்டு வருகிறார்கள். மதம், ஜாதி, சித்தாந்தம் போன்றவற்றால் வேறுபட்டிருந்தாலும், மலையாளத்தவர் என்று ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்று மற்ற மாநிலத்தவர்களால் அறியப் பட்டு வருகிறார்கள். அந்நிலையில், கேரளாவில் தொடர்ந்து இத்தகைய, குறிப்பாக பாலியல், செக்ஸ், காமம், கற்பழிப்பு, தகாத உறவுகள் என்று வக்கிரங்களாக, குற்றங்களாக, ஏன் கொலைகளாகக் கூட மாறி வருவதை பற்பல வழக்குகளில் தெரிந்து வருகிறது. அபயா கொலை, ஐஸ்கிரீம் பார்லர் செக்ஸ், மூலக்கல் பிஷப் கற்பழிப்பு என்று சமீபத்தைய விவகாரங்கள் அறியப் பட்டவையாக இருக்கின்றன. அந்த பட்டியலில் இதுவும் சேரலாம். கொஞ்சம் கொஞ்சமாக மறக்கப் படலாம். ஆனால், அத்தகைய சமூக சீரழிவுகள், வக்கிரங்கள், மனப்பாங்குகள் சட்டமீறல்கள் முறையாக ஆராயப் பட வேண்டியுள்ளது. தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டு வருபவனை சைக்கோ, மனநோயாளி, வக்கிரம் படித்தவன், அதனால் அப்படி செய்தான், செய்வான் என்று அமைதியாகி விடமுடியாது. கொலைகள் என்பது பெரிய குற்றம் தான். பல கொலைகள் செய்தால், குரூரமாக செய்தால், நோய் என்று வழக்குகளை மூடிவிட முடியாது.

© வேதபிரகாஷ்

14-10-2022.


[1] ஜீ.நியூஸ், கேரளா நரபலி: போலி சாமியார் முன் உடலுறவு! நரபலி கொடுக்க இதுதான் காரணமா?, Written by – Bhuvaneshwari P S | Edited by – Shiva Murugesan | Last Updated : Oct 12, 2022, 10:37 AM IST.

[2]  https://zeenews.india.com/tamil/india/sex-in-front-of-fake-preacher-this-reason-for-human-sacrifice-in-kerala-414483

[3] தினகரன், கேரளாவில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு..!!, 2022-10-13@ 10:46:16.

[4] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=806375

[5] ஹமிழ். ஏபிபி.லைவ், ஆபாசப்படம் ஈசியா கிடைக்குது.. சிறுமிகள் கருவுறுதல் குறித்த வழக்கில் கோர்ட் சொன்ன பல கருத்து!,By: ஜான் ஆகாஷ் | Updated at : 24 Jul 2022 01:49 PM (IST);  Published at : 24 Jul 2022 01:42 PM (IST)

https://tamil.abplive.com/news/india/teen-pregnancy-porn-spark-kerala-high-court-call-for-sex-ed-review-63331

[6] தினகரன், கேரளாவில் சிறுமிகள் ஆபாச வீடியோ பரப்பிய 21 பேர் அதிரடி கைது: லேப்டாப், செல்போன்கள் பறிமுதல், 2019-04-03@ 00:42:44

[7] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=485162

தெய்வத்தின் சொந்த தேசத்தில், அதிகம் எழுத்தறிவு கொண்ட மாநிலத்தில் நிர்வாண பூஜை,  நரபலி முதலிய குரூர குற்றங்கள் எப்படி நடந்தேறின? (3)

ஒக்ரோபர் 15, 2022

தெய்வத்தின் சொந்த தேசத்தில், அதிகம் எழுத்தறிவு கொண்ட மாநிலத்தில் நிர்வாண பூஜை,  நரபலி முதலிய குரூர குற்றங்கள் எப்படி நடந்தேறின? (3)

ஷபி ஒத்துழைக்கவில்லை என்று போலீஸார் கூறுவது: கொச்சி நகர சட்டம் ஒழுங்கு பிரிவு துணை ஆணையர் சசிதரன் கூறுகையில், “ஆரம்பத்தில் தமது குற்றத்தை ஒப்புக் கொள்ளாதவராகவே ஷாஃபி காணப்பட்டார். எதையும் வெளிப்படுத்தாமல் இருந்தார். கடைசியில் அவரை ஒப்புக் கொள்ள வைக்க அறிவியல்பூர்வ விசாரணை முறைகளையும் பிற நுட்பங்களையும் பயன்படுத்த வேண்டியிருந்தது. கடவந்திராவிற்கும் திருவல்லாவிற்கும் இடையே உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் காணாமல் போன பத்மாவுடன் ஷாஃபி ஒரு வாகனத்தில் நுழைந்த மங்கலான காட்சி மூலம் அவர்களின் அடையாளத்தை மீட்பது சவாலாக இருந்தது. அதன் பிறகே இந்த வழக்கில் துப்பு துலங்கியது,” என்று தெரிவித்தார். இந்த வழக்கில் கண்காணிப்பு கேமரா பதிவு மூலமாகவே துப்புதுலங்கியது[1]. கொலை செய்யப்பட்ட பெண்களில் ஒருவரை முகமது சஃபி தனது காரில் ஏற்றுவது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த ஆதாரத்தை வைத்து காவல் துறையினா் மேற்கொண்ட தொடா் விசாரணையில், இந்த கொலை சம்பவத்தின் முழு விவரமும் வெளிவந்தன.

கடந்த சில மாதங்களில் 12 பெண்கள் காணாமல் போனது கேரள போலீசார் விசாரணை:  “பதினோரம் வகுப்பு தேர்ச்சி பெறாத அவர் தமது 16-17ஆவது வயதில் வீட்டை விட்டு ஓடி வந்து விட்டார். மாநிலத்தின் கிட்டத்தட்ட எல்லா மாநிலங்களிலும் அவர் சுற்றியிருக்கிறார். கிடைத்த வேலைகளை செய்திருக்கிறார். கடைசியில் தமது நரபலி திட்டத்தை நிறைவேற்றும் நோக்கில் லாட்டரி சீட்டுகளை விற்கும் வெளி மாநில பெண்களை நோட்டம் பார்த்து அவர்களுக்கு புதிய வேலை ஆசை காட்சி தமது சதியை செயல்படுத்தியிருக்கிறார்,” என்று புலனாய்வாளர்கள் நம்மிடையே தெரிவித்தனர். இதற்கிடையே, ஷாஃபியிடமிருந்து தப்பிய பெண் என தன்னை அழைத்துக் கொள்ளும் ஒருவர், தன்னுடைய அடையாளத்தை மறைத்துக் கொண்டு அளித்த பேட்டியில், “ஷாஃபி மீது கொச்சி களமசேரி காவல் நிலையத்தில் ஒரு பெண்ணை மிதித்துக்கொன்றதாக வழக்கு உள்ளது. நான் அதிர்ஷ்டவசமாக அவரிடம் இருந்து தப்பித்தேன்,” என்று தெரிவித்தார்.  மேலும் பல பெண்கள் சபியிடம் சிக்கியிருக்கலாம், நிறைய பெண்கள் காணாமல் போயிருக்கிறார்கள் போன்ற செய்திகளும் வெளிவருகின்றன. கடந்த சில மாதங்களில் 12 பெண்கள் காணாமல் போனது கேரள போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது[2].  எனவே அந்த பெண்களும் நரபலிக்கு கொடுக்கப்பட்டிருக்கலாமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்[3].

தமிழகத்தைச் சேர்ந்தவர் உட்பட இரண்டு பெண்களை நரபலி கொடுத்த கேரள தம்பதி: தமிழகத்தைச் சேர்ந்தவர் உட்பட இரண்டு பெண்களை நரபலி கொடுத்த கேரள தம்பதி உட்பட மூன்று பேரை, 12 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு கொச்சி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இவர்களிடம் நடத்திய முதல்கட்ட விசாரணையில், விரைவில் பணக்காரராகும் ஆசையில், இந்த தம்பதி நரபலி கொடுத்ததும், அதற்கான ஆலோசனை வழங்கியதில் இருந்து நரபலி கொடுக்க இரண்டு பெண்களை அழைத்து வந்தது என, பல வகையில் முகமது ஷபி உதவியுள்ளதும் தெரியவந்துள்ளது. தமிழகத்தின் தர்மபுரியைச் சேர்ந்த பத்மா, கேரள மாநிலம் காலடியைச் சேர்ந்த ரோஸ்லின் ஆகியோர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதுடன், அவர்களுடைய உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டுஉள்ளது விசாரணையில் தெரியவந்தது. இதுவரை 61 பாக்கெட்டுகளையில் மனித உடல் பாகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஒரே குழியில் இருந்து 56 பாக்கெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. மற்றொரு குழியில் எலும்பு உள்ளிட்ட 5 பாகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அனைத்தும் டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  நிர்வாண பூஜை செய்ததுடன், கொல்லப்பட்ட பெண்களின் உடல் பாகங்களை, தம்பதி சமைத்து சாப்பிட்டதும் தெரியவந்து உள்ளது[4]. நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியம் கிடைக்கும் என கூறி முகமது ஷாஃபி இதை செய்ய வைத்துள்ளார்[5]. அந்த மாமிசத்தில் சிறிது சாப்பிட வேண்டும்” என முகமது ஷாஃபி கூறியுள்ளார். பகவல் சிங்கும், லைலாவும் முதலில் மறுத்துள்ளனர்.

ஹீலிங் செய்யும் மருத்துவருக்கு, மலையாள மாந்திரீகர் உதவ முன்வந்தது: முன்னதாக பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டது குறித்து கொச்சி போலீஸ் கமிஷனர் சி.எச்.நாகராஜு கூறியது: கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் பகவால் சிங். இவரிடம் வரும் நோயாளிகளின் நோய்களை குணமாக்கி வந்தார். ஆனால், இவரது “பணக்கார பேராசை” நோயை நீக்க ஒரு அலையாள மாந்திரீகன் தான் வர வேண்டிய நிலை போலும். இவரது மனைவி லைலா. ஹீலிங் எனப்படும் இந்தத் தொழிலை இவர்கள் பரம்பரை, பரம்பரையாக செய்து வருகின்றனர். இந்நிலையில், பகவால் சிங்குக்கு பணம் செழிப்பதற்காகவும், வளத்தைப் பெருக்குவதற்காகவும் 2 பெண்களை அழைத்து வந்து நரபலி கொடுத்த விவரம் எங்களுக்குத் தெரியவந்தது. இதற்கு உடந்தையாக இருந்த பெரும்பாவூர் ஷபி (எ) ரஷீத் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீதிமன்றம் அதிருப்தியை வெளிப்படுத்திய நிலை: கைது செய்யப்பட்ட மூவரும், கொச்சி நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தப்பட்டனர்[6]. இது குறித்து அம்மாநில உயர் நீதிமன்றம் அதிர்ச்சியையும், அவநம்பிக்கையையும் வெளிப்படுத்தியிருக்கிறது[7]. கேரள உயர் நீதிமன்ற நீதிபதி தேவன் ராமச்சந்திரன் செவ்வாய்க்கிழமை 11-10-2022 அன்று வேறு ஒரு வழக்கை விசாரித்துக் கொண்டிருக்கும்போது நரபலி குறித்த தனது அதிர்ச்சியையும், அதிருப்தியையும் வெளிப்படுத்தினார். இதுகுறித்து நீதிபதி ராமசந்திரன் கூறுகையில்[8], “அரசின் கவனக்குறைவையும், மக்களின் விசித்திரமான நடவடிக்கைகளையும் நீதிமன்றம் கவனித்து வருகிறது. கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்டிருக்கிறது என்று கேள்விப்படும் செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது என்பது மனித பகுத்தறிவை மீறிய செயல். இந்தச் செயல்களால் கேரளா எதை நோக்கிச் செல்கிறது என்ற ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது,” என்று தெரிவித்தார்[9]. அவர்களை, 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில், அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீஸ் தரப்பில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது[10]. இதை ஏற்ற நீதிமன்றம், 12-10-2022 புதன்கிழமை 12 நாள்  அக்டோபர் 26ஆம் தேதி வரை போலீஸ் காவலுக்கு அனுமதி அளித்துள்ளது[11].

© வேதபிரகாஷ்

14-10-2022.


[1] தினத்தந்தி.டிவி, நாட்டையே உலுக்கிய கேரள நரபலி சம்பவம்.. கேரள போலீஸ் அதிரடி, By தந்தி டிவி, அக்டோபர் 2022 11:08 AM

[2] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், கேரளா நரபலி கொடூரம்..! கொலையாளிகள் போலீசில் சிக்கியது எப்படி..? மேலும் 12 பெண்களில் நிலை என்ன..?, Ajmal Khan, First Published Oct 13, 2022, 10:44 AM IST; Last Updated Oct 13, 2022, 10:44 AM IST

[3] https://tamil.asianetnews.com/crime/police-identify-killers-involved-in-human-sacrifice-in-kerala-through-cctv-rjoejp

[4] நியூஸ்.18.தமிழ், நரபலி கொடுத்த உடலை சாப்பிட்ட தம்பதி.. கேரளாவை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்நடந்தது என்ன?, NEWS18 TAMIL, LAST UPDATED : OCTOBER 12, 2022, 11:53 IST.

[5] https://tamil.news18.com/news/national/kerala-2-lady-human-sacrifice-lot-of-startling-information-was-revealed-in-investigation-817644.html

[6] மாலைமலர், கேரளா நரபலி வழக்குகைது செய்யப்பட்ட 3 பேரையும் 12 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி, By மாலை மலர்13 அக்டோபர் 2022 4:29 PM

[7] https://www.maalaimalar.com/news/national/kerala-human-sacrifice-case-all-3-accused-sent-to-12-day-police-custody-523933

[8] தமிழ்.இந்து, கேரளா எதை நோக்கி செல்கிறது?” – 2 பெண்கள் நரபலி சம்பவத்தில் உயர் நீதிமன்றம் அதிர்ச்சி, செய்திப்பிரிவு, Published : 12 Oct 2022 01:42 PM; Last Updated : 12 Oct 2022 01:42 PM

[9] https://www.hindutamil.in/news/india/881847-kerala-human-sacrifice-high-court-expresses-its-shock-disbelief-1.html

[10] தினமலர், கேரள நரபலி கொடூரர்களுக்கு 1 2 நாள் போலீஸ்சாட்டை!’, Added : அக் 14, 2022  02:10

[11] https://www.dinamalar.com/news_detail.asp?id=3145306

தெய்வத்தின் சொந்த தேசத்தில், அதிகம் எழுத்தறிவு கொண்ட மாநிலத்தில் நிர்வாண பூஜை, நரபலி முதலியன – செக்யூலரிஸத்தில் புதிய வடிவங்கள் கொள்வது (2)

ஒக்ரோபர் 15, 2022

தெய்வத்தின் சொந்த தேசத்தில், அதிகம் எழுத்தறிவு கொண்ட மாநிலத்தில் நிர்வாண பூஜை, நரபலி முதலியனசெக்யூலரிஸத்தில் புதிய வடிவங்கள் கொள்வது (2)

ரோஸ்லியைக் கொன்று உடலை அறுத்து பூஜை செய்தது: பின்னர் அங்கிருந்து பகவல் சிங்கின் வீட்டுக்கு அழைத்துச் சென்று, இரவு நேரத்தில் நரபலி பூஜையை செய்துள்ளனர். கட்டிலில் கிடத்தி கைகளையும், கால்களையும் கட்டிப்போட்டு முதலில் கழுத்தை அறுத்துள்ளனர். பின்னர் உடலை சுமார் 22 துண்டுகளாக வெட்டியுள்ளனர். அப்பெண்ணின் கூக்குரல், அழுகுரல் எல்லாம் பக்கத்தில் இருப்பவர்களுக்குக் கேட்கவில்லையா போன்ற விவரங்களும் தெரியவில்லை. உடலை வைத்து சில பூஜைகள் செய்திருக்கின்றனர். பூஜை முடிந்த பிறகு வீட்டுக்கு வெளியே துணி துவைக்கும் கல் அமைந்திருக்கும் பகுதியில் குழிதோண்டி உடலைப் புதைத்து, அதன் மீது மஞ்சள் நட்டு வைத்திருக்கின்றனர். ஆனால், மந்திரத்தால். தந்திரத்தால், நிறம் மாறவில்லை, ஒன்று நடக்கவில்லை. முஹம்மது சபி எப்படி பணம் வரும் என்ற ரகசியமும் தெரியவில்லை. பகவல்சிங்-லைலா தம்பதி கோபித்துக் கொள்ள, முதல் பூஜையால் பலன் கிடைக்காததால், மற்றொரு நரபலி கொடுக்க வேண்டும் எனக் கூறி கடந்த மாதம் மீண்டும் ஒரு நரபலி கொடுக்க முடிவு செய்ய, அதற்கும் ஒப்புக் கொண்டனர்.

அடுத்த பலிகடாபத்மா: கடவந்தறா பகுதியில் லாட்டரி விற்பனை செய்துவந்த தருமபுரியைச் சேர்ந்த பத்மா (52) என்ற பெண்ணையும் பணம் கொடுப்பதாகக் கூறி திருவல்லாவுக்கு அழைத்துச் சென்று ரோஸ்லியை நரபலி கொடுத்தது போன்றே நரபலி கொடுத்துள்ளனர். அவரின் உடல்களையும் துண்டு துண்டாக வெட்டி வீட்டுக்கு வெளிப்பகுதியில் புதைத்துள்ளனர். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதால்,  இப்பொழுது, தமிழக ஊடகங்களில், இச்செய்தி உச்சத்திற்குச் சென்றுள்ளது. முதலில் முஹமது சபியின் பெயரை தமிழ் ஊடகங்கள் சொல்லவில்லை, அமுக்கி வாசித்தது, ஆனால், இப்பொழுது குறிப்பிட ஆரம்பித்து விட்டன என்பதையும் கவனிக்கலாம். ஆக, ஊடகங்கள் கூட “கேரள மாடல்,” “தமிழக மாடல்” என்றுதான் வேலை செய்கின்றன போலும். இருப்பினும், இரு மாநில முதல்வர்களும் இந்த செய்தியை மறந்து, இந்தி எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். இதைப் பற்றியெல்லாம் டிவியில் விவாட்தம் ஏற்பாடு செய்யவில்லை.

ஆகஸ்ட்செப்டம்பர் ஆதங்களில் தான் ரோஸ்லி முறையே பத்மா காணவில்லை என்று புகார் கொடுத்தது: ரோஸ்லியைக் காணவில்லை என கடந்த ஆகஸ்ட் மாதம் 17-ம் தேதி அவரின் மகள் மஞ்சு புகார் அளித்தார். அந்த விசாரணையில் பெரிய அளவில் துப்புத் துலங்கவில்லை. பத்மாவைக் காணவில்லை என அவரின் மகன் செல்வராஜ் கடந்த செப்டம்பர்  மாதம் 27-ம் தேதி புகார் அளித்தார். அவரின் செல்போனை ஆய்வு செய்தபோது அது திருவல்லா பகுதியில் கடைசியாகப் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. பின்னர் சிசிவிடிவி காட்சிகள் உள்ளிட்டவற்றை ஆய்வுசெய்து பத்மாவைக் கடத்திய முஹம்மது ஷாஃபி முதலில் கைதுசெய்யப்பட்டார். அவரிடம் விசாரித்ததில் பெண்கள் கொடூரமாக நரபலி கொடுக்கப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளியானது. அவர்களது உடலை அடையாளம் காணும்விதமாக டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்வதற்காகக் கோட்டயம் மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியில் அவர்களது உடல்கள் கொண்டு செல்லப்பட்டன. இது தொடர்பாக பகவல் சிங், 68, அவருடைய மனைவி லைலா, 58 மற்றும் மாந்த்ரீகத்தில் ஈடுபட்ட முகமது ஷபி, 52, ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முகமது சபி, மொஹம்மது ஷஃபி யார்?: முதலில் உடகங்கள் இவனது பெயரை அமுக்கி வாசித்தன, அதற்குள் உள்ளூர் நாளிதழ்கள் பகவல்சிங் சிபிஎம் நிர்வாகி என்றெல்லாம் குறிப்பிடப் பட்டவுடன், இவனது பெயர் பிரதானமாக குறிப்பிடப் பட்டது. முகமது ஷாஃபி / ரஷீத் மாந்திரீகராக – மலையாள மாந்தீரிகன் –  உள்ளூரில் அறியப்படுகிறார்[1] என்று பிபிசி மரியாதையுன் குறிப்பிடுகிறது. ஷபி, தன்னை மலையாள மாந்தீரிகன் போல் காட்டிக் கொண்டுள்ளார் என்கிறது இன்னொரு இணைதள நாளிதழ். வக்கிரபுத்தி கொண்ட சஃபி, தனது குற்றத்தில், ஆசை வார்த்தைக் கூறி மற்றவர்களை நம்ப வைத்து அவர்களையும் சேர்த்துக் கொண்டு, தனது குற்றத்துக்கு அவர்களையும் உடந்தையாக்கிவிடுவார். மிகவும் வஞ்சகமான குற்றவாளி, தனது திட்டத்தை மற்றவர்களின் துணையோடு செய்வது இவரது வழக்கம் என்றும் ஐஜிபி கூறியுள்ளார். இப்படி ஊடகங்கள் வர்ணிக்கின்றன. ஒரு முஸ்லிம் எப்படி கேரளாவில் இவ்வாறு மந்திரவாதியாக இருக்கிறான், தந்திரங்கள் செய்கிறான் என்றெல்லாம் விளக்கவில்லை. அதாவது, கேரளாவில் எல்லோரும் எல்லா வேலைகளையும் செய்யலாம் போலிருக்கிறது.

முகமது சபி / ரஷீத் என்ற கேரள மந்திரவாதி: பல பெயர்களில் உலா வரும் இவன் ஒரு தாதா போலத்தான் கருதப் பட்டு வருகிறான். இவன் பெரிய பணக்காரன் என்றும் தெரிகிறது. அவனிடத்தில் பேரூந்து, ஜீப், கார் என்று நான்கு வாகனங்களை வைத்திருக்கிறான். ஒரு ஓட்டலை நடத்தி வருகிறான். அங்கு தான் தனக்கு வேண்டியவர்கள் எல்லாம் வந்து செல்வது வழக்கம். ரோஸ்லி, பத்மா முதலியோர் இங்கு வழக்கமாக வரும் வாடிக்கையாளர்கள் என்றும் தெரிகிறது.  இவர்களிடம் தத்தம் தொழில்-வியாபார ரீதியில் தொடர்புகளும் இருந்து வருகின்றன. எர்ணாகுளத்தில், காந்திநகரில் இவனுக்கு வீடும் இருக்கிறது. போதாகுறைக்கு, ஊடகங்களின் செய்திகள் இவன் போதை மருந்து, விபச்சாரம், கற்பழிப்பு, திருட்டு முதலியவற்றிலும் ஈடு பட்டு வந்துள்ளான் என்றுள்ளது. ஆக, ஒரு சாதாராண ஆளால் இத்தனையும் செய்ய முடியாது.

கடந்த 15 ஆண்டுகளில் 10-க்கும் அதிகமான வழக்குகள் அவா் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன: ஷாஃபி மீது 2020இல் எர்ணாகுளம் புறநகர் மாவட்டத்தில் 75 வயது மூதாட்டியை கொடூரமாக தாக்கிக் காயப்படுத்தி கொலை செய்ததாக ஒரு கொலை வழக்கு குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நிலுவையில் உள்ளது[2]. அந்த வழக்கில் அவர் ஜாமீனில் இருக்கிறார். பிறகு எப்படி வெளிவந்தார் என்று தெரியவில்லை. அது தவிர வேறு சில சிறிய குற்றங்களுக்கான வழக்குகளும் அவர் மீது உள்ளன, என்று குறிப்பிட்டு, கஞ்சா கடத்தல், போதை மருந்து, விபச்சாரம் என்றெல்லாம் அடுக்குகின்றன. இந்த நபர்தான் தம்பதியை நரபலி கொடுக்க சம்மதிக்கச் செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் 10-க்கும் அதிகமான வழக்குகள் அவா் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன[3]. இருப்பினும் வெற்றிகரமாக வெளியில் ஜாலியாக சுற்றி வந்து, இத்தனை வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறான் என்றால், அவனது செல்வாக்கை கவனிக்கலாம். அந்த அளவுக்கு அரசியல், அதிகாரம் முதலிய ரீதிகளில் அழுத்தம் கொண்டவர்களின் பாதுகாப்பு இருப்பதும் தெரிகிறது.

ஷபியின் மனைவி மறுப்பது: முகமது ஷாஃபி தனது மனைவியின் செல்பேசியில் இருந்து சமூக வலைதளத்தில் ‘ஸ்ரீதேவி’ என்ற பெயரில் போலி கணக்கை உருவாக்கினார். இந்த வழக்கில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கப்பெறலாம் என்று கூறப்படும் நிலையில்[4], சஃபியின் மனைவியோ, தனக்கு திருமணமாகி 24 ஆண்டுகள் ஆவதாகவும், தனது கணவர் இப்படிப்பட்ட கொடூரமான காரியங்களில் ஈடுபடுவார் என்பதை தன்னால் நம்பவே முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்[5]. அதில் இருந்து மருத்துவரிடம் நட்பை ஏற்படுத்திக் கொண்டதாக முகமது ஷாஃபி தெரிவித்துள்ளார். பகவால் சிங்கை சந்தித்து, நெருக்கத்தை ஏற்படுத்திய பிறகு ஸ்ரீதேவியின் சுயவிவரத்தை நீக்கியதாகவும், முகமது ஷாஃபி கூறியதாக போலீஸார் தெரிவித்தனர். சமூக ஊடக பக்கத்தில் பதிவான ஸ்ரீதேவி என்ற அழிக்கப்பட்ட கணக்கின் தகவல்களை மீட்க கேரள காவல்துறை சைபர் கிரைம் பிரிவின் உதவியை நாடியுள்ளது.

© வேதபிரகாஷ்

14-10-2022.


[1] பிபிசி.தமிழ், கேரள நரபலி: மாந்திரீகரின் சர்ச்சை திட்டம், இரண்டு பெண்களை பலி கொடுத்த தம்பதிசமீபத்திய தகவல்கள், 12 அக்டோபர் 2022

[2] https://www.bbc.com/tamil/india-63228532

[3] https://www.thanthitv.com/news/tamilnadu/breaking-kerala-human-sacrifice-incident-that-shook-the-country-kerala-police-action-142246

[4] தினமணி, கேரள நரபலி: 61 பாக்கெட்டுகளில் உடல்பாகங்கள், By DIN  |   Published On : 13th October 2022 12:34 PM  |   Last Updated : 13th October 2022 04:27 PM

[5]  https://www.dinamani.com/india/2022/oct/13/kerala-human-sacrifice-body-parts-in-61-bags-3931784.html

தெய்வத்தின் சொந்த தேசத்தில், அதிகம் எழுத்தறிவு கொண்ட மாநிலத்தில் நிர்வாண பூஜை, நரபலி முதலியன எப்படி நடந்தேறின? (1)

ஒக்ரோபர் 15, 2022

தெய்வத்தின் சொந்த தேசத்தில், அதிகம் எழுத்தறிவு கொண்ட மாநிலத்தில் நிர்வாண பூஜை, நரபலி முதலியன எப்படி நடந்தேறின? (1)

கேரளாவில் மலையாள மாந்தீரிகனால் நரபலி: கேரளா, “தெய்வத்தின் சொந்த தேசம்,” “கடவுளுக்கே உரிய நாடு” என்றெல்லாம் ஒருபக்கமும், இந்தியாவிலேயே அதிக கல்வி அறிவு கொன்ட மாநிலம் என்று இன்னொரு பக்கமும் சொல்லப் பட்டு வருகின்றது. கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ளவர்கள் மெத்தப் படித்தவர்கள், முற்போக்குவாதிகள், செக்யூலரிஸவாதிகள், மார்க்சீயவாதிகள், என்றெல்லாமும் அறியப் பட்டு வருகிறார்கள். கம்யூனிஸ்டுகள், முஸ்லிம்கள், கிருத்துவர்கள் ஆதிக்கத்துடன் அரசியல், அதிகாரம் முதலியவற்றில் கோலோச்சி வருகிறார்கள். இந்தியா முழுவதும், ஏன் உலகம் முழுவதும் மலையாளிகள் பரவியுள்ளார்கள், இமய மலைக்கு சென்றாலும், அங்கு ஒரு நாயர், “டீ ஸ்டால்” வைத்திருப்பார் என்ற அளவுக்கு பேசப் பட்டு வருகிறது. அத்தகைய மாநிலத்திலிருந்து தான் அடிக்கடி கற்பழிப்பு, செக்ஸ் என்றெல்லாம் செய்திகள் வருவதுண்டு. இப்பொழுது, எல்லாம் சேர்ந்த ஒரு குரூரமான செய்தி வெளிவந்துள்ளது. ஒரு மலையாள மாந்திரீகன் நரபலி கொடுத்துள்ளான் என்ற செய்தி தான் அது.

பகவல்சிங்சகலகலா வல்லவன்மாந்திரீகம் மூலம் பணம் பெற ஆசைப் பட்டது: பகவல் சிங் – உள்ளூர் சிபிஎம் கட்சி நிர்வாகி, தலைவர் என்றெல்லாம் குறிப்பிடப் படும் இவர் – மசாஜ் சிகிச்சையாளர், ஆயுர்வேத மருத்துவர், பாரம்பரிய வைத்தியர், ஹீலிங் நிபுணர் என்றும் அறியப் படுகிறார். அதாவது மருத்துவத்தில் சகலகலா வல்லவன் போன்று திகழ்கிறார் போலும். இவரது மனைவி லைலா – அதாவது, இது எந்தமத பெயர் என்று தெரியவில்லை. “பகவல் சிங்” என்றாலும் புரியவில்லை, இவர் சீக்கியரா, கிறிஸ்துவரா தெரியவில்லை. எல்லாமே செக்யூலரிஸத்தின் உச்சத்தில் இருப்பதாகத் தெரிகிறது. இந்த, பத்தினம்திட்டா மாவட்டம் திருவல்லாவைச் சேர்ந்த தம்பதி தான், பணக்காரராக வேண்டும் என்ற ஆசையில் மாந்த்ரீகத்தை நம்பி, தமிழகத்தைச் சேர்ந்தவர் உட்பட இரண்டு பெண்களை நரபலி கொடுத்துள்ளனர்[1] என்கிறது விகடன். இங்கு விகடனுக்கு “தமிழகத்தைச் சேர்ந்தவர்” என்று மட்டும் தான் புலப்படுகிறது. அதிகமான கடன் மற்றும் பணப்பிரச்சினைகள் உள்ளன. பணப்பிரச்சினையில் இருந்து விடுபடவும், பணக்காரனாக மாறுவதற்கும் என்ன செய்ய வேண்டும் என்று தவித்த நிலையில், இவ்வழியில் மாட்டிக் கொண்டனர், என்றும் இன்னொரு ஊடகம் கூறுகிறது. மந்திரத்தால் மாங்காய் காய்க்குமா என்றால், கேரளாவில் நம்புவதற்கு ஆட்கள் இருக்கிறார்கள் என்று தெரிகிறது.

பகவல் சிங்சிபிஎம் கட்சிக் காரர் கூட: முக்கிய குற்றவாளியான ஆயுர்வேத மருத்துவர் பகவல்சிங், கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினர் என்றும் கட்சியிலிருந்து பணியாற்றி வந்திருந்தார் எனவும் பல்வேறு தகவல்கள் வெளியாகின[2]. இது குறித்து பலரும் விமர்சனம் செய்ய தொடங்கினர்[3]. அது கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்த் வருகிறது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்தினம்திட்டா பகுதி குழு செயலாளர் பி.ஆர்.பிரதீப் (CPM Pathanamthitta area secretary P.R. Pradeep) ANI செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில்[4], “பகவல்சிங் சில காலம் எங்களுடன் சேர்ந்து பணியாற்றினார். அப்போது அவர் முற்போக்காக இருந்தார். ஆனால் கட்சி உறுப்பினராக இல்லை. பின்னர் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட பிறகு அவர் மதவாதியாக மாறிவிட்டார்,” என்று கூறியுள்ளார். முதல் மனைவியை 15 வருடங்களுக்கு முன்னர் விவாக ரத்து செய்தார். சிபிஎம் ஊட்டங்களில் கலந்து கொண்டுள்ளார். புகைப் படங்களும் உள்ளூர் மலையாளம் நாளிதழ்களில் வெளியாகியுள்ளன. இருப்பினும், இப்பொழுது, இப்பிரச்சினை உண்டாகியுள்ள நிலையில் கட்சி மறுக்கிறது.

ஷிகாப் என்ற முஹம்மது மந்திரவாதி தொடர்பு கொண்டது: எர்ணாகுளம் மாவட்டம், பெரும்பாவூர் பகுதியைச் சேர்ந்த ஷிகாப் என்ற முஹம்மது ஷாஃபி போலி ஃபேஸ்புக் அக்கவுன்ட் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். அந்த அக்கவுன்ட் மூலம் பத்தனம்திட்டா மாவட்டம், இலந்தூரிலுள்ள வைத்தியர் பகவல் சிங்கைத் தொடர்புகொண்டார். அப்போது ஐஸ்வர்யம் பெருகவும், செல்வம் செழிக்கவும் வழிகாட்டப்படும் எனத் தகவல் தெரிவித்திருக்கிறார். விளம்பரங்களும் கொடுத்திருக்கிறார் என்று ஊடகங்கள் கூறுகின்றன. பின்னர் அதற்கு ஒரு பூஜை செய்ய வேண்டும் எனக் கூறியிருக்கிறார். பகவல் சிங்கின் வீட்டுக்குச் சென்று அந்த இடங்களைப் பார்வையிட்டுவிட்டு, ஒரு பெண்ணை நரபலி கொடுத்து பூஜை செய்ய வேண்டும் எனக் கூறியதுடன், அந்த பெண்ணை நானே அழைத்து வருகிறேன் எனவும் முஹம்மது ஷாஃபி கூறியிருக்கிறார். இதையெல்லாம் சிபிஎம் நிர்வாக எப்படி நமினார் என்று தெரியவில்லை. பொன்னுருண்ணியைச் சேர்ந்த லாட்டரி விற்பனையாளரான பத்மா மற்றும் அங்கமாலி அருகே காலடியில் வசிக்கும் ரோஸ்லின் ஆகியோரின் பணத்தேவையை பயன்படுத்தி, இருவரையும் வெவ்வேறு மாதங்களில் கடத்தி வந்து நரபலி கொடுத்துள்ளதாக போலீஸ் நடத்திய ஆரம்பநிலை விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இந்த கோர-குரூர சம்பவம் நாட்டையே உலுக்கியிருக்கிறது[5]. பத்தனம்திட்டா மாவட்டம், இலந்தூரில் ஐஸ்வர்யமும் செல்வமும் பெருக பூஜை செய்வதாக போலி மந்திரவாதியான முஹம்மது ஷாஃபி என்ற ஷிகாப் வழிகாட்டுதல்படி பாரம்பர்ய வைத்தியர் பகவல் சிங், அவரின் மனைவி லைலா ஆகியோர் நரபலியில் ஈடுபட்டுள்ளனர். நரபலி கொடுத்த சம்பவம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன, என்று தமிழில் இணைதள ஊடங்கள் விவரிக்கின்றன.

ரோஸ்லியை முஹம்மது ஷபி கூட்டி வந்தது: முஹம்மது ஷாஃபி எர்ணாகுளத்துக்குச் சென்று காலடிப் பகுதியில் தனியாக வாடகைக்கு வசித்துவந்த, கடவந்தறா பகுதியில் லாட்டரி விற்பனை செய்துவந்த / ஆயுர்வேத மருந்து விற்பனை செய்யும்[6]  ரோஸ்லி (59)-க்கு பத்து லட்சம் ரூபாய் பணம் கொடுப்பதாகக் கூறி திருவல்லாவுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.  ரோஸ்லியின் மகள் உத்தரப்பிரதேசத்தில் வசித்து வருகிறார். நிர்வாண படத்தில் நடித்தால் பல லட்சம் ரூபாய் பணம் கிடைக்கும் என கூறி ரோஸ்லியை நம்பவைத்துள்ளார்[7]. அதாவது ஓஸ்லியும் ஒப்புக் கொண்டாள் என்றாகிறது. அப்படியென்றால், அத்தகைய வியபாரமும் அங்கு நடந்து வருகிறது என்றாகிறது. அதற்கு ரோஸ்லி சம்மதித்துள்ளார்[8]. பின்னர், ரோஸ்லியை பகவல் சிங்கின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். ஆபாச படத்தில் நடிப்பதற்காக என்று கூறி, ரோஸ்லியை கட்டிலில் படுக்க வைத்து கை, கால்களை கட்டினர், என்று விவரிக்கிறது தினகரன்[9]. இதனையடுத்து அந்த பெண்ணை மருத்துவர் பகவல் சிங் வீட்டிற்கு அழைத்து வந்து கட்டிலில் நிர்வாணமாக கட்டி வைத்தான்[10]. அப்பொழுது, போர்ன் படம் எடுப்பதாக ரோஸ்லி நினைத்தாள் என்று சில ஊடகங்கள் கூறுகின்றன. “நிர்வாண பூஜை” என்று சில வர்ணிக்கின்றன. பிறகு  கொலை செய்துள்ளனர் என்று முடிக்கின்றன[11]. உடலுறவு கொண்டான், விடிய விடிய செக்ஸ் டார்ச்சர் என்றெல்லாம் ஊடகங்கள் தலைப்பிட்டு செய்திகளை வெளியிட்டன[12]. தலைப்புகள் இட்டாலும், உள்ளே ஒன்றும் விவரங்கள் இல்லை.

© வேதபிரகாஷ்

14-10-2022.


[1] விகடன், கேரளா: இரட்டை நரபலி; 22 துண்டுகளாக்கி பூஜை; மண்ணில் புதைத்து மஞ்சள் நட்டனர்அதிர்ச்சித் தகவல்கள்!, Published:Yesterday at 9 AMUpdated:Yesterday at 10 PM

[2] தமிழ்.ஒன்.இந்தியா, நரமாமிச கும்பல்.. கேரளாவில் நரபலி தந்து சடலத்தை சாப்பிட்ட கொடூரன்.. குற்றவாளி சிபிஎம் உறுப்பினரா?, By Halley Karthik Updated: Wednesday, October 12, 2022, 20:54 [IST].

[3] https://tamil.oneindia.com/thiruvananthapuram/bhagwalsingh-who-gave-human-sacrifice-in-kerala-is-not-a-communist-party-member-party-explanation/articlecontent-pf781895-480215.html

[4] AsiaNetNews, Party finally confirms, ‘Bhagwal Singh accused in human sacrifice case is CPM worker’, Web Team, First Published Oct 12, 2022, 1:15 PM IST; Last Updated Oct 12, 2022, 1:15 PM IST.

https://www.asianetnews.com/kerala-news/bhagaval-singh-was-an-active-member-of-cpm-says-cpm-pathanamthitta-area-secretary-rjmqvl

[5] https://www.vikatan.com/news/crime/kerala-human-sacrifice-issue-shocking-details

[6]  என்கிறது தினகரன் மற்றும் உள்ளூர் நாளிதழ்கள்.

[7] தமிழ்.சமயம், நிர்வாண பூஜையும், நரபலி விருந்தும்; சைக்கோ ஷபியை சிக்க வைத்த செல்போன்!,  Mageshbabu Jayaram | Samayam Tamil | Updated: 13 Oct 2022, 7:55 am

[8] தினகரன், தர்மபுரியை சேர்ந்தவர் உள்பட கேரளாவில் 2 பெண்கள் நரபலி: ஆபாச படத்தில் நடித்தால் ரூ.10 லட்சம் தருவதாக கூறி அழைத்து வந்து கொலை; போலி மந்திரவாதி, தம்பதி வெறிச்செயல், 2022-10-12@ 00:14:06

[9]  https://www.dinakaran.com/news_detail.asp?Nid=805964

[10] https://tamil.samayam.com/latest-news/india-news/how-habitual-offender-shafi-arrested-and-kerala-human-sacrifice-case-came-out/articleshow/94822646.cms

[11] தமிழ்.இந்தியம்.எக்ஸ்பிரஸ், விடிய விடிய செக்ஸ் டார்ச்சர்.. மனித கறி சாப்பிட்ட மிருகங்கள்.. கேரள பயங்கரம்..!, Written by WebDesk, October 12, 2022 11:17:02 pm.

[12] https://tamil.indianexpress.com/india/kerala-human-sacrifice-case-probe-points-to-accuseds-cannibalism-and-sexual-perversion-say-police-524589/

செங்கல்பட்டு குழந்தைகள் காப்பகம், குழந்தைகள் நலக்குழு உறுப்பினர், பெண்-குழந்தைகளைக் கற்ப்ழிப்பது, புகார் மற்றும் வழக்குகள் (2)

திசெம்பர் 25, 2020

செங்கல்பட்டு குழந்தைகள் காப்பகம்குழந்தைகள் நலக்குழு உறுப்பினர், பெண்குழந்தைகளைக் கற்ப்ழிப்பது, புகார் மற்றும் வழக்குகள் (2)

மணிகண்டனுக்கு நீதிமன்ற தண்டனை வழங்கியது (டிசம்பர் 2017): நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், செங்கல்பட்டு குழந்தைகள் நலக்குழுத் தலைவருக்கு, இரண்டு மாத சிறைதண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பரங்கிமலையில் புனித ஜோசப் பிரான்சிஸன் சகோதரிகள் அமைப்புக்கு சொந்தமான குழந்தைகள் காப்பகம், பதிவு செய்யப்படாததால் செங்கல்பட்டு குழந்தைகள் நலக் குழு, காப்பகத்தில் இருந்து ஐந்து சிறார்களை அழைத்துச் சென்று தனியார் மையத்தில் தங்கவைத்தது. ஐந்து குழந்தைகளையும் மீட்டுத் தரக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த, உயர்நீதிமன்றம் ஐந்து சிறார்களையும் உடனடியாக மீண்டும் அதே இல்லத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்தாததை அடுத்து தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி துரைசாமி, செங்கல்பட்டு குழந்தைகள் நலக்குழுத் தலைவர் மணிகண்டனுக்கு 2 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்[1]. நீதிமன்ற உத்தரவை பின்பற்றாதது மட்டுமல்லாமல், மன்னிப்பு கேட்க கூட அவர் முன் வரவில்லை. இது போன்ற நடவடிக்கைகளை அனுமதித்தால் ஒரு தவறான முன்னுதாரணம் ஆகி விடும் எனக் கூறி மணிகண்டனுக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார்[2]. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக தண்டனை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற மணிகண்டன் தரப்பு கோரிக்கையை ஏற்ற நீதிபதி, தண்டனை 2 வாரங்களுக்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.

குழந்தைகளை சீரழிக்கும் காமுகர்கள்: குழந்தை என்றால் 18 வயதிற்கு கிழேயுள்ள சிறுமி அல்லது சிறுவன் ஆகும். இதில், 3 முதல் 17 வரையுள்ள சிருமிகள், டீன் ஏஜில் உள்ள, வயதுக்கு வந்த இளம்பெண்கள் ஆவர். ஆகவே, இவர்களைத்தான், காமுகர்கள், தங்களது இச்சைக்கு சதாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை, கிருத்துவ பிடோபல் / சிறுவர் கற்ப்பழிப்பாளிகள் பற்றிதான், அதிகமாக செய்திகள் வந்துள்ளன. எப்பொழுதுவது, கூலிக் காரன், கிழவன், சிறுமியர்களிடம் சில்மிஷம் செய்ததாக, செய்திகள் வந்ததுண்டு. அவர்கள் தண்டனை பெற்ற / பெறு செய்த செய்திகளும் வந்துள்ளன / வருகின்றன. ஆனால், இந்த அரசு காப்பக கற்பழிப்புகள், பாலியல் குற்றங்கள் பற்றி விவரங்கள் வெளி வராமல் இருக்கின்றன. ஆகவே, இது பற்றிய விழிப்புணர்வு தேவை என்று தெரிகிறது. அனாதை இல்லங்களில் நடக்கும் அக்கிரமங்களைக் கண்காணிக்கப் படவேண்டும். ஏற்கெனவே அக்குழந்தைகள் பெற்றோர் அறியாமல், மற்றவர்களின் ஆதரவுடன் வளர்ந்து வரும் நிலையில், அவர்களை பாலியல் ரீதியில் பலாத்காரம் செய்வது, கற்பழிப்பது என்பது நினைத்துப் பார்க்க முடியாத காரியமாக, குற்றமாகத் தெரிகிறது. அதை செய்யத் துணியும் மற்றும் செய்து வரும் கயவர்கள், எத்தகைய கொடிய அரக்கர்களாக இருப்பர் என்பதனை அறிந்து கொள்ளலாம். ஆகவே, அவர்களுக்குக் கடுமையான தண்டனை அளிக்கப் படவேண்டும்.

காப்பகங்களில் உள்ள அதிகாரி போதை மருந்து வியாபாரத்தில் ஈடுபட்டதால் சஸ்பெண்ட் செய்யப் பட்டது (2018)[3]: தாஸ் என்கின்ற துணை தலைமை அதிகாரி (Das, assistant superintendent at the special home for children at Chengalpet) போதை மருந்து வியாபாரத்தில் ஈடுபட்டதாதத் தெரிந்தது. காப்பகத்திற்கு குழந்தைகளைப் பார்க்க வருபவர்கள் மூலம் கஞ்சா/கன்னபீஸ் போன்ற போதைப் பொருட்களை கொண்டு வருவதாகத் தெரிந்தது. இதனால், சிவகுமார், சூப்பிரென்டென்டுக்கு ஒரு மெமோவும் அனுப்பப் பட்டது. ஒரு முறை அங்கிருக்கும் சிறுவர்கள், போதையில் சிறைக் காவலரைத் தாக்கிய போது, விவகாரம் தெரிய வந்தது. அப்பொழுது அவர்களிடமிருந்து, போதைப் பொட்டலங்கள், செல்போன், சிம்கள் முதலியன பறிமுதல் செய்யப் பட்டன. காப்பகத்தில், அவையெல்லாம் தடை செய்யப் பட்டவை ஆகும். காப்பகத்தில் இருக்கும் உயர் அதிகாரிகளே, வரும் பார்வையாளர்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு, இத்தகைய வேலையை செய்து வருகின்றனர் என்று “டைம்ஸ் ஆப் இந்தியா,” செய்தி வெளியிட்டது. பார்வையாளர்கள், சாப்பாடு கொண்டு தரும் சாக்கில், உணவு டப்பாக்களில், இந்த போதைப் பொருட்களை, மறைத்து வைத்து, கொடுத்து விட்டுச் செல்வதாக, அங்குள்ளவர்கள் அறிவித்தனர். இதனால், நிலைமையை விசாரிக்க ஒரு குழு வந்து விவரங்களை அறிந்தது, ஒரு அறிக்கைக் கொடுத்தது. அதன் படி, சில குறிப்பிட்ட அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தது[4].

காப்பகங்களின் அவலநிலை (மார்ச்.2016): காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளில், அரசு அனுமதியின்றி, ஏராளமான காப்பகங்கள் முளைத்து வருகின்றன; அவற்றில், ஏராளமான குழந்தைகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்[5]. அந்த, ‘காப்பகங்களில்’ எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி, மோசமான நிலை உள்ளது. அங்கு பராமரிக்கப்படும் குழந்தைகள், வேலைக்கு அனுப்பப்படுவதாகவும் கூறப்படுகிறது[6]. மேலும், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள், காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்; அதற்கு, அரசு அனுமதியில்லை. எனினும், முறைகேடாக, பச்சிளம் குழந்தைகள் அங்கு பராமரிக்கப்படுகின்றன.கடந்த மூன்றாண்டுகளுக்கு முன் 2013ல், மாவட்டம் முழுவதும், 53 அனுமதியற்ற குழந்தைகள் காப்பகங்கள் மூடப்பட்டன. மாவட்ட நிர்வாகத்தின் கண்களை மறைத்து, சில அதிகாரிகள் துணையுடன், காப்பங்கங்கள் மீண்டும் முளைத்து வருகின்றன. அதாவது, அவ்வாறு காப்பகங்களை வைப்பதால், யாருக்கு லாபம் என்று கவனிக்க வேண்டும். காப்பகங்களை வைத்து, நிதியுதவி பெறுகின்றனர், மற்றும், செலவழித்தலும், அதிகமாக பணம் மிஞ்சுகிறது, அதனை, தமது விருப்பகங்களுக்கு ஏற்றபடி உபயோகப் படுத்துகின்றன என்று தெரிகிறது. இந்த காப்பகங்கள் மீது, மாவட்ட ஆட்சியரை தலைவராக கொண்டு செயல்படும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

© வேதபிரகாஷ்

19-12-2020 / 25-12-2020


[1] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ். செங்கல்பட்டு குழந்தைகள் நலக்குழு தலைவருக்கு 2 மாத ஜெயில் : ஐகோர்ட் உத்தரவுBy: WebDesk, December 13, 2017, 7:14:17 PM.

[2]  https://tamil.indianexpress.com/tamilnadu/chengalpattu-children-welfare-officer-2-months-jail-chennai-high-court-order/

[3] An official from the state social defence department has been suspended for his alleged involvement in drug trade at a government juvenile home. Das, assistant superintendent at the special home for children at Chengalpet, allegedly colluded with visitors to smuggle ganja (cannabis) into the home, a senior official from the department told TOI. Another official, Selvakumar, who works as the superintendent, has received a memo seeking an explanation. Last week, a group of boys attacked a guard allegedly under the influence of ganja. Sachets of the contraband, beedis, mobile phones and SIM cards – all banned items at the correctional facility – were seized by authorities. TOI reported the incident on October 3. 2018.

Times of India, Official suspended for aiding drug trade at juvenile home, Ram Sundaram | TNN | Oct 9, 2018, 05:53 IST.

[4] Insiders said higher-ups at the home colluded with visitors – families and friends of inmates – to smuggle in ganja by concealing them in bread packets and lunch boxes. Ganja addiction was common among inmates, they said. Based on the news report, a team inspected the home on October 4 and submitted a report. Disciplinary proceedings have been initiated against two officials based on the team’s report which confirmed that ganja was sneaked into the home, the official said.

https://timesofindia.indiatimes.com/city/chennai/official-suspended-for-aiding-drug-trade-at-juvenile-home/articleshow/66127333.cms

[5] தினமலர்,குழந்தைகள் காப்பகங்களில் நடக்கும் முறைகேடுகள் அம்பலம்! நிர்வாகிகளின் பணத்தாசைக்கு இரையாகும் பிஞ்சுகள் , Added : மார் 02, 2016  05:35

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=1469508&Print=1

செங்கல்பட்டு குழந்தைகள் காப்பகம், குழந்தைகள் நலக்குழு உறுப்பினர், பெண்-குழந்தைகளைக் கற்ப்ழிப்பது, புகார் மற்றும் வழக்குகள் (1)

திசெம்பர் 25, 2020

செங்கல்பட்டு குழந்தைகள் காப்பகம்குழந்தைகள் நலக்குழு உறுப்பினர், பெண்குழந்தைகளைக் கற்ப்ழிப்பது, புகார் மற்றும் வழக்குகள் (1)

செங்கல்பட்டில் உள்ள குழந்தைகள் காப்பகம் தொடர்ந்து பாலியல் குற்றங்களில் சம்பந்தப் பட்டுள்ளது: செங்கல்பட்டில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில்[1] உள்ள சிறுமிகளைக் கற்பழிப்பது, கர்ப்பமாக்கியது போன்ற விவகாரங்கள் நீதிமன்றம் வரைச் சென்றுள்ளன[2].  14 வயதான டீன் ஏஜ் சிறுமியை, ஒருவன் கற்பழித்ததால், கர்ப்பமடைந்தால். அந்த கர்ப்பத்தைக் கலைப்பது பற்றி நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளார்கள்[3]. “இந்தியா டுடேவிலும்” இதைப் பற்றி விவரமாக அலசப் பட்டது[4]. காப்பகங்களில் பெண்-குழந்தைகள் தொடர்ந்து இவ்வாறான பாலியல், செக்ஸ் தொல்லைகளுக்கு உட்படுத்தப் பட்டுள்ளார்கள்[5]. காப்பகத்தைச் சேர்ந்தவர்கள், பாதுகாவலர்கள் தான் அத்தகைய வேலைகளை செய்துள்ளனர். ஆனால், அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டது, தண்டனை கொடுக்கப் பட்டது போன்ற விவரங்கள் தெரியவில்லை. நீதிமன்றத் தீர்ப்புகள் இருந்தாலும், குற்றாவாளிகள் தண்டனையைப் பற்றி தெரியவில்லை, அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மற்றவர்கள் இவற்றில் ஈடுபட்டுள்ளதால், இத்தகைய விவரங்கள் பெரும்பாலும், மறைக்கப் பட்டு வருகின்றன. இந்நிலையில் தான், குழந்தைகள் நலக்குழுவில் உள்ள உறுப்பினர்கள், இன்னொரு உறுப்பினருக்கு எதிராக மனு/வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் தாமோதரனை நீக்க வழக்கு: செங்கல்பட்டு குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து, தாமோதரன் என்பவரை நீக்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது[6]. மனுவுக்கு பதில் அளிக்க, அரசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது[7]. செங்கல்பட்டு மாவட்ட சிறப்பு முகாம் உறுப்பினர்கள், செங்கல்பட்டு அரசு சிறப்பு முகாமில் உள்ள, குழந்தைகள் நல குழு உறுப்பினர்கள் குளோரி ஆனி, மணிகண்டன், முகமது சகாருதீன் ஆகியோர் உள்ளிட்ட மூவர் தாக்கல் செய்த மனுவில், ‘குழந்தைகள் நல குழுவில், உறுப்பினராக இருக்கும் தாமோதரன், சிறார் நீதி சட்டத்தை மீறி செயல்படுகிறார். ‘இவர், இந்த பொறுப்பில் தொடர்வது, காப்பகத்தில் உள்ள பெண் குழந்தைகளின் நலனுக்கு உகந்ததாக இல்லை[8]. எனவே, இவரை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்க உத்தரவிட வேண்டும்’ என, கூறப்பட்டுள்ளது[9]. குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்களே, இன்னொரு குழு-உறுப்பினர் மீது குற்றஞ்சாட்டி வழக்குத் தொடர்ந்துள்ளாதால், இது முக்கியமாகிறது. இருப்பினும், சில ஊடகங்களே, இச்செய்தியை வெளியிட்டுள்ளன..

வேலியே பயிரை மேய்க்கும் வேலையில் ஈடுபட்டுள்ள தாமோதரன்: அவர்கள் தாக்கல் செய்த மனுவில், “குழந்தைகள் நலக் குழுவில் உறுப்பினராக இருக்கும் தாமோதரன், சிறார் நீதிச் சட்டத்தை மீறிச் செயல்படுகிறார். பாலியல் தொல்லை உள்ளிட்ட பல்வேறு சிரமங்களிலிருந்து மீட்கப்படும் குழந்தைகளை குழுவின் முன் ஆஜர்படுத்தாமல் மறைக்கிறார்[10]. இது குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்குப் பாதுகாப்பாக அமைந்துவிடும். குழுவால் விசாரிக்கப்பட்ட சிறுமியிடம் நூறு ரூபாயைக் காண்பித்து, தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி உறுப்பினர் தாமோதரன் வற்புறுத்தியுள்ளது ஆபத்தைத் தருகிறது[11]. ஆபாசப் படங்கள் பார்க்கும் பழக்கம் கொண்ட அவரால், காப்பகக் குழந்தைகளுக்கு ஆபத்தான சூழல் நிலவுகிறது. இதுகுறித்து அரசிடம் புகார் அளித்த எங்களைத் தாக்கினார். உறுப்பினர் தாமோதரனைப் பதவியிலிருந்து நீக்கும்படி தமிழக சமூக நலத்துறை செயலாளர் மற்றும் சமூகப் பாதுகாப்பு இயக்குனரக ஆணையர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கோரிக்கை வைத்துள்ளனர். தாமோதரன் என்ற உறு[ப்பினர், உள்ளே இருந்து கொண்டு, இத்தனையும் செய்து வருவதே திகைப்பாக இருக்கிறது.

பிப்ரவரி 2021க்குத் தள்ளி வைக்கப் பட்ட வழக்கு: இம்மனு, நீதிபதி, புஷ்பா சத்தியநாராயணா முன் விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்கும்படி, சமூக நலத்துறை மற்றும் சமூக பாதுகாப்பு இயக்குனரகத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை, 2021, பிப்., 2ம் தேதிக்கு, நீதிபதி தள்ளி வைத்தார். இப்பொழுது வந்துள்ள செய்திகளிலிருந்து இவ்வாளவு தான் தெரிய வந்துள்ளது. நாளிதழ்கள், மேலும் விவரங்கள் கொடுக்குமா, கடைசி வரையில் என்னவாயிற்று, என்று தெரிவிப்பார்களா அல்லது, மேற்குறிப்பிட்ட வழக்குகளைப் போல, மறைத்து விடுவார்களா என்று தெரியவில்லை.

கடந்த இரு ஆண்டுகளில் 1,345 ஆதரவற்ற குழந்தைகள் கண்டறியப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றனர்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த இரு ஆண்டுகளில் 1,345 ஆதரவற்ற குழந்தைகள் கண்டறியப்பட்டு அவா்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக மாவட்டக் குழந்தைகள் நலக் குழுமத்தின் தலைவா் என்.ராமச்சந்திரன் வியாழக்கிழமை தெரிவித்தார். இது குறித்து அவா் மேலும் கூறியது: “காஞ்சிபுரம் மாவட்டத்தில் தனியாா் மற்றும் அரசு சாா்பில் 120 குழந்தைகள் காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன. இக்காப்பகங்களில் பராமரிக்கப்பட்டு வந்த 817 குழந்தைகள் 18 வயதைக் கடந்த பிறகு அவா்களது பெற்றோர்கள், உறவினா்கள் அல்லது காப்பாளா்களிடம் உறுதிமொழியின் பேரில் ஒப்படைக்கப்பட்டு வருகின்றனா். ஆதரவற்ற குழந்தைகள், பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகள் என பலரையும் கண்டறிந்து கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் 1,345 குழந்தைகள் காப்பகங்களில் சோ்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனா். தெருக்களில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த 5 பெண் குழந்தைகள் பள்ளியில் சோ்க்கப்பட்டு படித்து வருகின்றனா். காணாமல் போனதாக தெரிய வந்த 15 குழந்தைகள் கண்டு பிடிக்கப்பட்டு அவா்களது பெற்றோா்களிடமும், காப்பாளா்களிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளனா். 8 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் பா.பொன்னையா தலைமையில் நடந்த மீளாய்வுக் கூட்டத்தில் இவ்விவரங்களைத் தெரிவித்திருக்கிறோம்”.

டிசம்பர் 2010ல் குழந்தைகள் பாதுகாப்பு, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி என்று விழிப்புணா்வு முகாம்களை நடத்தியது[12]: குழந்தைகள் நலக் குழுமத்தின் சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி என விழிப்புணா்வு முகாம்களை நடத்தி வருவதாகவும் அவா் தெரிவித்தார். குழந்தைகள் நலக்குழு உறுப்பினா்கள் எஸ்.சக்திவேல், சா.நிர்மலா, குளோரி ஆனி, கே.தாமோதரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனா்[13]. இதில் தாமோதரனும் இருப்பது நோக்கத் தக்கது. இவ்வாறு ஒன்றாக வேலை செய்த குளோரி ஆனி தான், இப்பொழுது வழக்குத் தொடுத்துள்ள மூவரில் ஒருவர் என்று குறிப்பிடத் தக்கது. அதனால், ஒருவேளை, எல்லைகளை மீறி, தாமோதரன் செயல்பட்டிருக்கக் கூடும் என்று தெரிகிறது. ஒரு வருடத்தில், அத்தகைய பாலியல் தொந்தரவுகளை என்ன, எப்படி, ஏன் செய்தார் என்ற விவரங்கள் தெரியவில்லை. ஊடகங்களிலும் வரவில்லை போலும். செங்கல்பட்டு குழந்தைகள் நலக்குழுவில் இருப்பவர்கள் எல்லோருமே, ஒருமாதிரியாக நடந்து கொள்வதும் விசித்திரமாக உள்ளது.

© வேதபிரகாஷ்

19-12-2020 / 25-12-2020


[1] Govt Children Home for Boys, Taluk Office Compound, Chengalpettu, Kancheepuram  District,  Tamil Nadu – 603002. Phone – 27424458.

[2] IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS DATED : 28.04.2018, CORAM, THE HONOURABLE MR.JUSTICE T.RAJA, W.P.No.10155 of 2018

Child Welfare Committee,

represented by its

Chairperson and Members, Govt.Children Home for Boys, GST Road, Chengalpattu 603 002.

Kancheepuram District.                                                                                                                   …               Petitioner

vs-

1.The Principal Secretary,

   Health and Family Welfare Department,    Secretariat, Chennai 600 009.

2.The District Collector,    Collectorate Campus, Kancheepuram,    Kancheepuram District.

3.The Dean    Chengalpet Medical College Hosptial,    Chengalpet,    Kancheepuram District.

4.The HOD ,    Department of Obstetrics and Gynecology, Chengalpattu Medical College and Hospital,    Chengalpattu.

5.The Inspector of Police,    Uthiramerur Police Station,    Uthiramerur, Kancheepuram District.                                                                                                     …                Respondents

[3] https://indiankanoon.org/doc/2585106/

[4] India Today, Rape, abuse, torture: Why Tamil Nadu’s care homes for children are more like ‘scare’ homes, July 29, 2016, UPDATED: October 10, 2016 13:37 IST.

[5] https://www.indiatoday.in/india/story/tamil-nadu-care-homes-for-children-are-more-like-scare-homes-332042-2016-07-29

[6] தினகரன், செங்கல்பட்டு குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் தாமோதரனை பதவி நீக்கம் செய்யக் கோரிய வழக்கு, 2020-12-19@ 15:04:40.

[7] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=640175

[8] தினமலர், குழந்தைகள் நலக் குழு உறுப்பினரை நீக்க வழக்கு, Added : டிச 19, 2020 22:59.

[9]  https://www.dinamalar.com/news_detail.asp?id=2674337

[10] தமிழ்.இந்து,  பயிரை மேயும் வேலி; குழந்தைகள் நலக்குழு உறுப்பினரின் தவறான நடத்தை: நடவடிக்கை கோரிய வழக்கில் அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ், செய்திப்பிரிவு, Published : 19 Dec 2020 02:44 PM Last Updated : 19 Dec 2020 02:44 PM.

[11] https://www.hindutamil.in/news/tamilnadu/613420-crop-grazing-fence-misconduct-of-a-child-welfare-committee-member-high-court-notice-to-the-state-in-a-case-seeking-action.html

[12] தினமணி, இரு ஆண்டுகளில் 1,345 குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைப்பு, By DIN | Published on : 19th December 2019 11:32 PM.

[13]https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/dec/19/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-1345-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3310408.html

வட்டிக்கு பணம் கொடுத்து, கற்பை சூரையாடிய கொடூரன் தண்டனை பெற்றதால் பெண்கள் பாதிப்பு நிவர்த்தியாகி விடுமா!

ஜனவரி 20, 2017

வட்டிக்கு பணம் கொடுத்து, கற்பை சூரையாடிய கொடூரன் தண்டனை பெற்றதால் பெண்கள் பாதிப்பு நிவர்த்தியாகி விடுமா!

dharmapuri-financier-jailed-19-01-2017-dailt-thanthi

சிவராஜின் செயல்திட்டமுறையும், காம-கொக்கோகமும், வீடியோ-சிடி விவகாரங்களும்: சிவராஜ் மீதான புகாரை பலப்படுத்த அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும், புகார் கொடுக்கும் பெண்களின் பெயர், முகவரி உள்ளிட்ட தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் சிவராஜால் பாதிக்கப்பட்ட மூன்று பெண்கள்  2014 அக்டோபர் 6ஆம் தேதி பாலக்கோடு போலீசில் புகார் கொடுத்துள்ளனர். அதில், “கடன் கொடுத்த நிதி நிறுவன அதிபர் சிவராஜ் எங்களின் வறுமை நிலையை சாதகமாக பயன்படுத்தி உல்லாசத்திற்கு அழைத்தார். வர மறுத்தபோது அதிக வட்டி தரவேண்டும் என்று கூறி மிரட்டினார். இதனால் பயந்து போன நாங்கள் அவரது பண்ணை வீட்டிற்கு சென்றோம். அங்கு சிவராஜ் எங்களை மிரட்டி உல்லாசமாக இருந்தார். இதனையடுத்து அவர் தனது செல்போனில் எடுத்த ஆபாச காட்சிகளை எங்களின் குடும்பத்தினருக்கு காட்டி விடுவதாக மிரட்டி, பலமுறை பண்ணை வீட்டிற்கு அழைத்து சென்று கற்பழித்தார்,” என்று கூறியுள்ளனர். தங்களை போல் இன்னும் ஏராளமான பெண்கள் சிவராஜால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அவர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

dharmapuri-financier-jailed-19-01-2017-vedaprakashபெண்மையை சுற்றியுள்ள சமுதாய-சட்டப் பிரச்சினைகள்: இதனையடுத்து புகார் கொடுத்த பெண்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், விசாரணை முழுவதையும் கேமராவில் பதிவு செய்துள்ளனர். புகாரின்பேரில் போலீஸார் நடத்திய புலன் விசாரணையில் சிவராஜ், அப் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் உள்பட 26-க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. பெண்களுக்கு முறைப்படி சட்டரீதியில் பாதுகாப்பு கொடுத்தல் போன்ற விவரங்கள்தெரியவில்லை. தற்போது போலீசார் நிதி நிறுவன அதிபர் சிவராஜ் மீது கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், சிவராஜால் பாதிக்கப்பட்ட பெண்கள் அவர் மீது தைரியமாக புகார் கொடுக்க முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். மூன்று பெண்களின் புகாரையடுத்து இந்த வழக்கு சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனால் சிவராஜை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்குள், இவ்வழக்கு முறையாக நடத்தப்படுமா என்ற சதேகம் வந்ததால், சிலர், பெரிய அளவில் விசாரணை தேவை என்று நினைத்தனர். இதை அரசியலாக்கும் விதத்தில், உள்ளூர் எம்.எல்.ஏ, தில்லி பாபு [சிபிஎம்] மற்றும் மகில இந்திய பெண்கள் இயக்கமும் சேர்ந்து ஆர்பாட்டம் நடத்தி, சிபி-சி.ஐ.டி விசாரணை தேவை என்று வற்புறுத்தினர்[1]. சிவராஜின் சொத்துகளும் பறிமுதல் செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்[2].

dharmapuri-financier-jailed-19-01-2017-sexபாதகர்கள் தண்டனை பெற்ற விவரங்கள்: இந்த வழக்கு தருமபுரி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் வழக்குரைஞர் ஆர். உமா மகேஸ்வரி ஆஜரானார். இந்த வழக்கில் மாவட்ட மகளிர் நீதிபதி எம். மீரா சுமதி 8-01-2017 [புதன்கிழமை] தீர்ப்பு வழங்கினார். முதல் குற்றவாளியான வட்டிக் கடைக்காரர் சிவராஜுக்கு பாலியல் பலாத்கார சட்டப்பிரிவில் நான்கு ஆயுள் தண்டனைகள் மற்றும் ரூ. 4,000 அபராதம் விதிக்கப்பட்டது[3].  மேலும், 67ஏ தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவின் கீழ் 12 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ. 2 லட்சம் அபராதமும், 66இ தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவின் கீழ் 8 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ. 40 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது[4]. அபராதத் தொகை மொத்தம் ரூ. 2.44 லட்சம்[5]. இச்சம்பவத்தில் செல்லிடப்பேசியில் இருந்த விடியோக்கள் வெளியே உலவக் காரணமாக இருந்தவன் அதே பகுதியைச் சேர்ந்த செல்லிடப்பேசி பழுதுபார்க்கும் தொழில் செய்து வந்தவன் மா. முன்னா[6]. அவனுக்கு பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் மொத்தம் 6 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 61 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது[7]. இரு குற்றவாளிகளின் கோரிக்கைகளை ஏற்று சிறைத் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கலாம் என்றும் நீதிபதி எம். மீரா சுமதி உத்தரவிட்டார்[8].

dharmapuri-financier-jailed-19-01-2017-video-1கற்பை சூரையாடிய கொடூரன் தண்டனை பெற்றதால் பெண்கள் பாதிப்பு நிவர்த்தியாகி விடுமா!: பாதகர்கள் தண்டனை பெற்றது சட்டப்படி நடந்துள்ளது என்றாலும், பெண்கள் பாதிப்பு சரிசெய்யமுடியாதது ஆகும். மனம் மற்றும் உடல் ரீதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கஷ்டங்களை, உபாதைகளை யார் சரிசெய்ய முடியும்? நடந்தது மாற்ற முடியும், சீர்செய்யமுடியும் என்ற நிலையாகாது.

  • ஒரு பெண் சீரழிந்தால், ஒரு குடும்பம் சீரழிகிறது;
  • ஒரு குடும்பம் சீரழிந்தால், ஒரு சமுதாயம் சீரழிகிறது;
  • ஒரு சமுதாயம் சீரழிந்தால், ஒரு தேசம் / நாடு சீரழிகிறது;

ஆகவே, குறிப்பிட்ட நாட்டின் மீது நடத்தப்படும் கலாச்சார தாக்குதல், இவ்வாறு பலநிலைகளில் பாதித்து, சீரழித்து வருவதை பொறுப்புள்ளவர்கள் மிக்க அக்கரையுடன் கவனிக்க வேண்டும். இன்றளவில், சினிமாநடிகைகளிடம் கற்பு, கலாச்சாரம், குடும்பம் முதலியவற்றைப் பற்றி கருத்து கேட்டு, விளம்பரம் செய்கிறார்கள். இதனால், அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவது போன்ற தோற்றத்தையும் ஏற்படுத்துகின்றார்கள். நிர்வாணமாக நடிப்பேன் என்று உரிமைகள் பேசி, அவ்வாறே தொழில் செய்யும் நடிகைகள் எப்படி முன்னுதாரணமாக இருக்க முடியும்?

© வேதபிரகாஷ்

20-01-2017

dharmapuri-financier-jailed-19-01-2017-video-2

[1] The Hindu, Plea for CB-CID probe , DHARMAPURI: OCTOBER 16, 2014 00:00 IST UPDATED: MAY 24, 2016 13:53 IST.

[2]The Communist Party of India (Marxist) staged a demonstration here at Palacode demanding CB-CID probe into the case of a local financier who was involved in sexual harassment of women. The financier Sivaraj was arrested last week [17-05-2016] on the charges of sexually harassing women. The demonstration was led by CPI (M) MLA Dilli Babu. Members of the All India Democratic Women’s Association also took part in the demonstration. The CPI (M) also demanded confiscation of the property belonging to Sivaraj.

 http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/plea-for-cbcid-probe/article6504755.ece

[3] தினமணி, பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து விடியோ எடுத்த வழக்கில் வட்டிக் கடைக்காரருக்கு 4 ஆயுள் தண்டனை, By தருமபுரி,  |   Published on : 19th January 2017 08:44 AM.

[4] http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2017/jan/19/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-4-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-2634850.html

[5] தினகரன், பெண்களை ஆபாச வீடியோ எடுத்து பலாத்காரம், பாலக்கோடு பைனான்சியருக்கு 4 ஆயுள் தண்டனை : தர்மபுரி கோர்ட் தீர்ப்பு, 2017-01-19@ 01:05:08

[6] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=273446

[7] The Hindu, Financier gets four life sentences for sexual abuse, DHARMAPURI: JANUARY 19, 2017 00:00 IST; UPDATED: JANUARY 19, 2017 04:00 IST.

[8] The District Mahila Court here on Wednesday [18-01-2017] convicted financier M. Sivaraj (44) of Palacode to four life sentences and imposed a fine of Rs. 2.44 lakh on him for sexually abusing women. The life sentences are to run concurrently. According to prosecution, Sivaraj sexually abused women who had availed themselves of loans from his firm, but could not repay the dues in time. He videographed the act on his mobile phone and used this to threaten them into submitting to sexual abuse again. The entire scandal came to light when Sivaraj gave his mobile phone to a local service centre to set right a snag. Munna, the owner of the service centre, after witnessing the obscene videos spread them in social media. On a complaint preferred by Vijana, village administrative officer, the Palacode Police arrested Sivaraj and M. Munna in October 2014 and filed a case in the District Mahila Court. The Mahila Court Judge M. Meera Sumathi found both the accused guilty of the charges. The Judge convicted Sivaraj to four life sentences and a fine of Rs. 4,000, eight years imprisonment and a fine of Rs. 40,000 under Section 66-E of the Information Technology Act 2000 (violation of privacy) and another 12 years imprisonment with a fine of Rs. 2 lakh under Section 67-A (publishing or transmitting obscene material in electronic form). The Judge sentenced Munna to three years imprisonment and a fine of Rs. 50,000 under Section 67-A of IT Act, two years and a fine of Rs. 10,000 under 66-B of IT Act and one year imprisonment and a fine of Rs. 1,000 under Section 292 IPC (publicly exhibiting or circulating obscene material). Munna’s prison terms will run concurrently.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/Financier-gets-four-life-sentences-for-sexual-abuse/article17057897.ece

18-பெண்களைக் கற்பழித்த சாமுவேலும், அமைதியாக இருக்கும் பெண்ணியப் போராளிகளும், சமூக ஆர்வலர்களும், சட்ட நிபுணர்களும் (தொடரும் செக்ஸ் குற்றங்கள்-3)!

ஒக்ரோபர் 12, 2016

18-பெண்களைக் கற்பழித்த சாமுவேலும், அமைதியாக இருக்கும் பெண்ணியப் போராளிகளும், சமூக ஆர்வலர்களும், சட்ட நிபுணர்களும் (தொடரும் செக்ஸ் குற்றங்கள்-3)!

samuel-facebook-love-photos-removed-from-the-website

சாமுவேலிடம் மாட்டிக் கொண்ட பெண்களைப் பற்றிய விசாரணை: போலீசார் சாமுவேலுவை கைது செய்த பிறகு அவனால் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்ந்து ரகசியமாக காவல் நிலையத்தில் புகார் அளித்து வருகின்றனர். குறிப்பாக உல்லாசமாக இருக்கும் வீடியோவை காட்டி மிரட்டியதால் பல லட்சம் ரூபாய் பறிகொடுத்த பெண்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் புகார் அளித்து வருகின்றனர். சாமுவேலுக்கு உடந்தையாக இருந்த நெருங்கிய நண்பர்கள் இரண்டு பேருக்கு இந்த மோசடியில் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் போலீசார் கையில் சிக்கி உள்ளது. இதனால் ஓரிரு நாளில் இரண்டு பேரையும் பிடித்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும், சாமுவேலுவால் பாதிக்கப்பட்ட பெண்கள் யார் யார் என்ற பட்டியலை போலீசார் சேகரித்து வருகின்றனர். பணத்தை இழந்த பெண்கள் எத்தனை பேர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாமுவேல் மீது புகார்கள் குவிந்து வருவதால் அவனை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

samuel-sex-case-beauty-parlour-nexus

சாமுவேலின் மீது குவிந்த புகார்கள்: முன்னர் பாதிக்கப் பட்ட பெண்கள் யாரும் புகார் கொடுக்கவில்லை[1]. ஆனால், சிந்தாதிரிபேட்டை பெண் புகார் கொடுத்த பிறகு, மற்ற பெண்களும் புகார் கொடுக்க முன்வந்தனர். இதற்கிடையில் அவரால் பாதிக்கப்பட்ட சென்னை அண்ணாநகரை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். சாமுவேலிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அவரது வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டது. காதல் மன்னன் சாமுவேல் 27-09-2016 அன்று மாலை எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

 v-samuel-with-a-girl-9

இளம்பெண்களை வளைத்து தனது காதல் வலையில் விழ வைத்தது எப்படி?: கொக்கோக சாமுவேல் – காதல் மன்னன் சாமுவேல் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்து உள்ளார். வாக்குமூலம் விவரம் வருமாறு[2]: “கடந்த 2 வருடங்களாக நான் பெண்களோடு பழக ஆரம்பித்தேன். ‘முகநூல்மூலம் தான் பெண்களோடு எனக்கு பழக்கம் ஏற்பட்டது. ‘முகநூல்மூலமே எனது காதலை பெண்களிடம் தெரிவித்தேன். காதலில் பெண்கள் விழுந்ததும், அடுத்து திருமண ஆசை காட்டுவேன். திருமண ஆசை காட்டியதும், பெண்கள் என்னோடு நெருக்கமாக பழகுவார்கள்இதை பயன்படுத்தி எனது இதய ராணிகளை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடுகளுக்கு அழைத்து செல்வேன். அங்கே கடலில் குளிக்க வைத்து பெண்கள் அழகை ரசித்தேன்இவ்வாறு பெண்களை வளைத்து அடுத்தகட்டமாக உல்லாசத்தில் ஈடுபடுவேன். ரகசியமாக செல்போன்கள் மூலம் உல்லாச காட்சிகளை படம்பிடிப்பேன்.

  1. முதலில் எனது வலையில் விழுந்தது வேலூரை சேர்ந்த அழகான பட்டதாரி பெண் ஆவார்.
  2. அடுத்து மயிலாப்பூரை சேர்ந்த கோடீஸ்வரரின் மகளும் எனக்கு இன்ப விருந்து அளித்தார்.
  3. 4 பெண்களிடம் மட்டுமே நான் தவறாக நடந்து உள்ளேன். அந்த காட்சிகளை தான் ஆபாச படங்களாக இணையதளங்களில் எனது எதிரிகள் வெளியிட்டு விட்டனர்.
  4. ஆனால் 10–க்கும் மேற்பட்ட பெண்களிடம் நான் பழகி இருக்கிறேன்.
  5. ஆனால் என்னோடு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்த மாணவியை உயிருக்கு உயிராக காதலித்தேன்

அந்த மாணவியையே திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்தேன். அந்த கனவு இனிமேல் நிறைவேறாது. பெண்களோடு ஏற்பட்ட பழக்கத்தால் படிப்பில் கோட்டை விட்டு, என்ஜினீயரிங் படிப்பை என்னால் நிறைவு செய்ய முடியவில்லை. என்னோடு நெருக்கமாக பழகிய பெண்கள் அனைவரும் தானாக விரும்பியே என்னோடு படுக்கையை பகிர்ந்து கொண்டனர். நான் யாரையும் வற்புறுத்தவோ, கட்டாயப்படுத்தவோ இல்லை”, இவ்வாறு சாமுவேல் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்[3].

v-samuel-with-a-girl-10

என்னோடு நெருக்கமாக பழகிய பெண்கள் அனைவரும் தானாக விரும்பியே என்னோடு படுக்கையை பகிர்ந்து கொண்டனர்: “பெண்களோடு ஏற்பட்ட பழக்கத்தால் படிப்பில் கோட்டை விட்டு, என்ஜினீயரிங் படிப்பை என்னால் நிறைவு செய்ய முடியவில்லை. என்னோடு நெருக்கமாக பழகிய பெண்கள் அனைவரும் தானாக விரும்பியே என்னோடு படுக்கையை பகிர்ந்து கொண்டனர். நான் யாரையும் வற்புறுத்தவோ, கட்டாயப்படுத்தவோ இல்லை”, இவ்வாறு சாமுவேல் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்[4] என்பதே வேடிக்கையாக இருக்கிறது.  “தானாக விரும்பியே என்னோடு படுக்கையை பகிர்ந்து கொண்டனர்”, என்பது மிகவும் அபத்தமானது. இது பெண்களையே கேவலப்படுத்துவதாகும். பணக்காரப் பிள்ளை, கார்-சொத்து எல்லாம் இருக்கிறது என்று தன்னைப் பற்றி விளம்பரப் படுத்தி, பெண்ணின் மனதில் ஆசையை வளர்த்து, “உன்னையே கல்யாணம் செய்து கொள்கிறேன்”, என்று பேராசையை ஊட்டி, பிறகு, லாட்ஜுக்குக் கூட்டிச் சென்று கற்பழித்தது, சாதாரணமான விசயம் அல்ல. உண்மையில் 18-பெண்களை கற்பழித்தான் என்றுதான் அவன் மீது வழக்குப் போடவேண்டும். இத்தகைய காமக்கொடூரனைப் பற்றி, ஊடகங்கள் அமுக்கி வாசிப்பதே பெரிய பாவம் ஆகும். அதனை ஆண்டவன் நிச்சயம் மன்னிக்க மாட்டான்.

v-samuel-with-a-girl-11

தவறான பிள்ளையை நாங்கள் பெற்றுவிட்டோம். எனது பிள்ளை செய்த தவறுக்கு தக்க தண்டனை வாங்கி கொடுங்கள்’’: சாமுவேல் மீது பெண்களை மானபங்க படுத்துதல், ஆபாச படங்கள் எடுத்தல் மற்றும் கொலை மிரட்டல் ஆகிய 3 சட்டப்பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்கு போட்டு உள்ளனர். சாமுவேலின் பெற்றோர், ‘‘தவறான பிள்ளையை நாங்கள் பெற்றுவிட்டோம். எனது பிள்ளை செய்த தவறுக்கு தக்க தண்டனை வாங்கி கொடுங்கள்’’ என்று தெரிவித்ததாக பெண் போலீசார் தெரிவித்தனர். அவர்களே அவனது செயல்களுக்கு ஒத்துழைத்த பிறகு, இவ்வாறு சொல்வதில் என்ன பிரயோஜனம்? இதனால், போன மானம் பெண்களுக்கு திரும்ப வருமா? இப்படித்தானே, அவர்கள் யோசித்திருக்க வேண்டும். போலீசாரின் விசாரணைக்கு சாமுவேல் முழு ஒத்துழைப்பு கொடுத்தார், என்று ஊடகங்கள் இப்பொழுது கூறின. அப்படியென்றால், புகார் கொடுத்தவுடன் மறைந்திருக்க வேண்டாமே? நான்கு பெண்களுடன் அவர் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் ‘வாட்ஸ்–அப்’பில் வெளியாகி உள்ளது, அவரது செல்போனிலும், அந்த காட்சிகள் பதிவாகி உள்ளன, முதலியவற்றை போலீசார் ஆதாரமாக வைத்துள்ளனர்.

v-samuel-with-a-girl-12

2014லிலிருந்து சமூக ஊடகங்கள் மூலம் பெண்களை ஏமாற்றி சீரழித்து வந்த சாமுவேல்[5]: கடந்த இரண்டு ஆண்டுகளாக இவ்வாறு பேஸ்புக், வாட்ஸ்-அப் முதலியவற்றின் மூலம் ஏமாற்றி வந்துள்ளான். பெற்றோர் வளர்த்த விதம், பியூட்டி பார்லர் வைத்து தாய் வியாபாரம் செய்து வரும் போது, அங்கு சாமுவேல் வந்து, பெண்களை பார்த்து வந்தது, பழகியது, பிறகு படிப்படியாக அவர்களை காமவலையில் விழ வைத்தது, முதலியவை திட்டமிட்ட செயலாக இருக்கிறது[6]. அத்தாய் நினைத்திருந்தால், அங்கேயே தடுத்திருக்கலாம். ஒரு பெண்ணாக, பெண்களை அவ்வாறு தன் மகனே கற்பழிக்கிறான் எனும்போது, சும்மா இருக்க மாட்டாள். ஆனால், அவர் அவ்வாறு இருந்தது, பல கேள்விகளை எழுப்புகின்றன. பெற்றோர் உடந்தையாக இருந்ததும் அதிர்ச்சியாக இருக்கிறது. தறுதலை பிள்ளையைப் பெற்றோம் என்று பிறகு வருந்தினாலும்[7], நடந்தவற்றை மாற்ற முடியாது. ECR / OMR பண்ணை வீட்டில், கேமராக்கள் வைத்து, அவ்வாறு செய்துள்ளான் என்றால், அதற்கும் தொடர்பு இருக்கின்றது. ஏதோ ஒரு பரஸ்பர உடன்பாட்டோடு செய்யப்பட்டு வந்தது என்று தெரிகிறது. இணைதளங்களில் உள்ள வீடியோக்களும், அவனது “செய்முறை திட்டத்தை” நன்றாகவே விளக்குகின்றன[8].

© வேதபிரகாஷ்

12-10-2016

v-samuel-with-a-girl-13

[1] New Indian Express, Chennai engineering student held for circulating obscene pictures of women, By Express News Service  |   Published: 28th September 2016 12:11 AM Last Updated: 28th September 2016 12:12 AM

[2] தினத்தந்தி, சென்னையில், காதல் மன்னன் கைது பெண்களின் ஆபாச படங்களை முகநூலில் வெளியிட்டு லீலையில் ஈடுபட்டது அம்பலம் , பதிவு செய்த நாள்: புதன், செப்டம்பர் 28,2016, 1:33 AM IST; மாற்றம் செய்த நாள்: புதன், செப்டம்பர் 28,2016, 5:15 AM IST.

[3] http://www.dailythanthi.com/News/Districts/Chennai/2016/09/28013336/in-ChennaiKing-of-RomanceArrested.vpf

[4] http://www.dailythanthi.com/News/Districts/Chennai/2016/09/28013336/in-ChennaiKing-of-RomanceArrested.vpf

[5] NewsGlitz – Next Generation Tamil News Channel – https://www.youtube.com/watch?v=qIh-72-SyiM

[6] ராஜ் டிவியின் கோப்பியம் – https://www.youtube.com/watch?v=eyFWJJkKA3A

[7] இளம்பெண்களுடன் ஆபாசமாக படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய இன்ஜினியரிங் மாணவர் சாமுவேல். எச்சை பையன் – https://www.youtube.com/watch?v=kbg7NrhGXhI

[8] Leaked: Samuel chennai engineer scandal | cheated more then 15 girls – https://www.youtube.com/watch?v=ccJ1R8V-gUg

 

18-பெண்களைக் கற்பழித்த சாமுவேலுக்கு ஒத்துழைத்த பெற்றோர், உற்றோர், மற்றோர் – பிறகு வருந்தியதால், இதெல்லாம் திரும்பப் பெறும் விவகாரங்களா என்ன? (தொடரும் செக்ஸ் குற்றங்கள்-2)

ஒக்ரோபர் 12, 2016

18-பெண்களைக் கற்பழித்த சாமுவேலுக்கு ஒத்துழைத்த பெற்றோர், உற்றோர், மற்றோர் – பிறகு வருந்தியதால், இதெல்லாம் திரும்பப் பெறும் விவகாரங்களா என்ன? (தொடரும் செக்ஸ் குற்றங்கள்-2)

v-samuel-with-a-girl-3

பிளேட் நாடகம் ஆடி அனைத்தையும் சாதித்தான்[1]: சாமுவேல் காதல் வலையில் சிக்காத இளம் பெண்களிடம் பிளேடால் கையை கிழித்து தற்கொலை செய்து கொள்வது போல் நடித்து அவர்களை தன் வலையில் சிக்கவைத்ததும் தற்போது தெரியவந்துள்ளது. பல முறை பல காரணங்களுக்காக சாமுவேலை பெற்றோர் கண்டித்தபோது அவர்களிடலும் இதே பாணியை அவன் கடைபிடித்துள்ளான். அவனது பெற்றோருக்கு திருமணம் நடந்து 10 ஆண்டுகள் குழந்தை இல்லையாம். பல கோயில்கள் ஏறி இறங்கி பிறந்த குழந்தை என்பதால், அவன் செய்த தவறுகளை பெற்றோர் கண்டுகொள்ளாமல் இருந்ததும் தற்போது தெரியவந்துள்ளது[2]. திருமணம் ஆகி, பத்தாண்டுகள் குழந்தை இல்லை, பிறகு பிறந்தது என்றால், அவனை ஒழுங்காக வளர்த்திருக்க வேண்டும். ஆனால், தந்தையும், தாயாரும் இப்படி பியூட்டி பார்லர்-கார் விற்பனை என்று வைத்துக் கொண்டு, அவனுக்கு உடந்தையாக இருந்தது, 18-பெண்களின் வாழ்க்கையை நாசமாக்கியுள்ளது. இனி அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் நிலை எப்படி இருக்குமோ?

v-samuel-with-a-girl-4சாமுவேலும், அவனது பெற்றோரும் ஓடி மறைந்தது: 25-09-2016 அன்று புகார் கொடுத்ததுமே, சாமுவேல் பெங்களூருக்கு ஓடிவிட்டான். பிறகு, அவனது பெற்றோரும் வீட்டைப் பூட்டி விட்டு மறைந்து விட்டனர். அவர் வசித்த மயிலாப்பூர் வீட்டில் போய் பெண் போலீசார் தேடியபோது, அவரது வீடு பூட்டிக்கிடந்தது[3]. விசாரித்த போது, போலீசார் தன்னை தேடுவதை அறிந்ததும், தனது நண்பர்களோடு பெங்களூருவுக்கு தப்பி ஓடிவிட்டார் என்று தெரியவந்தது[4]. அவரது பெற்றோரும் வீட்டின் கதவை பூட்டிவிட்டு தலைமறைவு ஆகிவிட்டனர்[5]. ஆக பெற்றோரும், ஒத்துழைக்கின்றனர் என்று தெரிகிறது. இதனால், போலீஸார் அவர்களை வலைவீசி தேடி வந்தனர்[6]. “இதற்கிடையே சாமுவேல் விஷயத்தில் உயர் அதிகாரி ஒருவர் நெருக்கடி கொடுத்ததால் மகளிர் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காமல் அவரை விடுவித்து விட்டனர். இதையடுத்து சாமுவேல் தலைமறைவாகி விட்டார்”, என்று “தமிழ் முரசு” எடுத்துக் காட்டியது. ஆக, அந்த உயர் அதிகாரியே, ஒருவேளை அப்படி ஐடியா கொடுத்து ஓடச்சொன்னார் போலும்.

v-samuel-with-a-girl-5சாமுவேல் மீது பல வழக்குகள் இருந்தன[7]: கடந்த ஒரு மாதத்திற்கு முன் ஆகஸ்ட்.2016 மயிலாப்பூரில் உள்ள கல்லூரி மாணவியை பின் தொடர்ந்து தொல்லை கொடுத்ததால் அந்த கல்லூரி மாணவியின் பெற்றோர் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் சாமுவேல் மீது புகார் அளித்ததும் விசாரணையில் தெரியவந்தது.  மேலும், சாமுவேல் இரவு நேரத்தில் நண்பர்களுடன் ரேஸ் பைக் வீரராகவும் திகழ்ந்துள்ளார். கடந்த ஆண்டு கவர்னர் கான்வாய் செல்லும் போது அதிவேகமாக பைக் ஓட்டி கைதாகியிருக்கிறார். பேஸ்புக் மூலம் மற்றும் பள்ளியில் இருந்து கல்லூரிக்கு செல்லும் வசதிப்படைத்த மாணவிகளையே குறிவைத்து காதலிப்பது போல் நடித்து உல்லாசமாக இருந்து படம் எடுத்து மிரட்டி பணம் பறிப்பு செயலில் ஈடுபட்டதும், மிரட்டி பறிக்கப்பட்ட பணத்தை வைத்து கொண்டு நண்பர்களுடன் வெளிமாநிலங்களுக்கு சுற்றுலா சென்று வந்ததும் தெரியவந்தது. பெண்ணுடன் ஜல்ஸா முடிந்தவுடன், “வழக்கு எண் 18/9” படத்தில் வரும் காட்சியை போட்டுக் காட்டி மிரட்டி பணம் கேட்பது வாடிக்கையாக இருந்தது[8]. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். சாமுவேலுடன் அவரது நெருங்கிய நண்பர்கள் இரண்டு பேர் மோசடிகளில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இரண்டு பேரிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்[9]. இத்தகைய தொடர்புள்ள குற்றங்களை, ஒரு குழுவாக செய்வது, திட்டமிட்டு செய்ததே ஆகும். போலீஸ் அதிகாரி மற்ற தொடர்புகள் இருந்ததால், தப்பித்துக் கொள்ளலாம் என்ற மனப்பாங்கும், குற்றங்களைத் தொடர்ந்து செய்ய ஊக்குவி்த்துள்ளது.

v-samuel-with-a-girl-627-09-2016 செவ்வாய்கிழமை சாமுவேல் கைது[10]: சாமுவேலின் நெருங்கிய உறவினர் ஒருவர் தமிழக போலீஸ் துறையில் உயர் அதிகாரியாக பணியாற்றுகிறார்[11]. அவர் சாமுவேலை காப்பாற்றுவதற்கு முயற்சித்து உள்ளார்[12]. சாமுவேலை விசாரணைக்கு ஆஜராக சொல்லுங்கள், விசாரணை நடத்திவிட்டு அவரை விட்டுவிடுகிறோம் என்று சிந்தாதிரிப்பேட்டை பெண் போலீசார் உறுதி அளித்துள்ளனர். இதை நம்பிய போலீஸ் அதிகாரி 27-09-2016 அன்று இரவு சாமுவேலை பெங்களூரிலிருந்து சென்னைக்கு வரவழைத்து உள்ளார். “புகார் கொடுத்த பெண் அழைத்ததால், மைலாப்பூரில் ஒரு கோவிலுக்கு சாமுவேல் வந்தபோது பிடிபட்டான்னென்று இந்தியன் எக்ஸ்பிரஸ் எடுத்துக்க் காட்டியது[13]. சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சாமுவேல் விசாரணைக்கு ஆஜரானார். போலீசார் சாமுவேலிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் 10 பெண்களோடு உல்லாசத்தில் ஈடுபட்டு, அவர்களின் ஆபாச படங்களை ‘பேஸ்-புக்’கில் வெளியிட்டிருப்பது தெரியவந்தது. இதுதொடர்பான ஆதாரங்களையும் போலீசார் கைப்பற்றினர். வலுவான ஆதாரங்கள் இருந்ததால் சாமுவேல் நேற்று கைது செய்யப்பட்டார்.

v-samuel-with-a-girl-7சாமுவேலுக்கு உதவிய போலீஸ் அதிகாரி: ஊடகங்கள், “சாமுவேலின் நெருங்கிய உறவினர் ஒருவர் தமிழக போலீஸ் துறையில் உயர் அதிகாரியாக பணியாற்றுகிறார்[14]. அவர் சாமுவேலை காப்பாற்றுவதற்கு முயற்சித்து உள்ளார்[15]. சாமுவேலை விசாரணைக்கு ஆஜராக சொல்லுங்கள், விசாரணை நடத்திவிட்டு அவரை விட்டுவிடுகிறோம் என்று சிந்தாதிரிப்பேட்டை பெண் போலீசார் உறுதி அளித்துள்ளனர்”, என்று குறிப்பிட்டாலும், அவர் யார் என்று தெரியவில்லை. 18-பெண்களை கற்பழித்த, வாழ்க்கையினை சீரழித்த அவனை எப்படி காப்பாற்ற நினைத்தார் என்று தெரியவில்லை. சட்டத்தை மீறியவனுக்கு துணை போவது, எந்த விதத்தில் நியாமானது என்று தெரியவில்லை. ஒருவேளை தனது பெண்ணை ஒருவன் அப்படி செய்திருந்தால், விட்டு வைப்பாரா? பிறகு, இக்காலத்தில், இத்தகைய பாரபட்ச மன்ப்பாங்கு எப்படி உருவாகிறது என்று தெரியவில்லை.

© வேதபிரகாஷ்

12-10-2016

v-samuel-with-a-girl-8

[1] தினகரன், பெண்களை காதல் வலையில் வீழ்த்தியது எப்படி?, Date: 2016-09-29@ 00:24:28.

[2] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=248899

[3] தமிழ்.ஒன்.இந்தியா, 10 பெண்களை ஏமாற்றி காதலித்த காதல் மன்னன்: காதலிக்க மறுத்தால் ஆபாச புகைப்படம் பதிவு, By: Mayura Akilan, Published: Tuesday, September 27, 2016, 13:21 [IST].

[4] http://tamil.oneindia.com/news/tamilnadu/police-search-love-fraud-263779.html

[5] தமிழ்.வெப்துனியா, காதல், உல்லாசம், ஆபாச புகைப்படம் வெளியீடு: காதல் மன்னனுக்கு வலை வீச்சு!, Last Modified: செவ்வாய், 27 செப்டம்பர் 2016 (13:22 IST).

[6] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/love-airily-obscene-photo-released-police-searching-the-cheating-man-116092700008_1.html

[7] தமிழ்.முரசு, பேஸ்புக் மூலம் பழகி இளம்பெண்களை படம் எடுத்து மிரட்டிய இன்ஜினியர் கைது, 9/27/2016, 3:25:14 PM

[8] Once the relationship is established, he would pull off the scene from Vazhakku Enn 18/9 in which the unsuspecting girl believes that her boyfriend was concerned about her getting wet in the beach and that was the reason he had booked a room for her to change her dress.

http://www.deccanchronicle.com/nation/crime/280916/chennai-facebook-lover-held-for-cheating.html

[9] http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=98448

[10] An engineering student of a private college was arrested for sharing nude pictures of a woman with his friends through his mobile phone on Tuesday (27-09-2016). A senior police officer said the woman, who was working as an accountant in a petrol bunk, had stayed with her friend V. Samuel at a hotel in ECR last year 2015. During their stay, the accused Samuel had taken pictures of her changing clothes, without her knowledge. He had shared these pictures with his friends through his mobile phone. When she came to know about it, the 21-year-old woman filed a complaint at the Egmore All Women Police Station. The police arrested the accused when he came to meet her in Mylapore. The accused was produced before a Judicial magistrate and sent to Puzhal prison.

http://www.thehindu.com/news/cities/chennai/engineering-student-arrested-for-sharing-nude-photos-of-woman/article9155957.ece

[11] தினத்தந்தி, 10 பெண்களை ஏமாற்றிய காதல் மன்னன் கைது பேஸ்புக்கில் பெண்களின் ஆபாச படங்களை வெளியீட்டு மிரட்டல், பதிவு செய்த நாள்: செவ்வாய், செப்டம்பர் 27, 2016, 4:35 PM IST; மாற்றம் செய்த நாள்: செவ்வாய், செப்டம்பர் 27,2016, 4:35 PM IST.

[12] http://www.dailythanthi.com/News/India/2016/09/27163524/10-women-for-cheating-King-of-romance-arrested.vpf

[13] On the advice of the police officials, she had asked Samuel to meet her at a temple in Mylapore, where a trap was laid and he was caught red handed.

http://www.newindianexpress.com/cities/chennai/2016/sep/28/Chennai-engineering-student-held-for-circulating-obscene-pix-of-women-1523606.html

[14] தினத்தந்தி, 10 பெண்களை ஏமாற்றிய காதல் மன்னன் கைது பேஸ்புக்கில் பெண்களின் ஆபாச படங்களை வெளியீட்டு மிரட்டல், பதிவு செய்த நாள்: செவ்வாய், செப்டம்பர் 27, 2016, 4:35 PM IST; மாற்றம் செய்த நாள்: செவ்வாய், செப்டம்பர் 27,2016, 4:35 PM IST.

[15] http://www.dailythanthi.com/News/India/2016/09/27163524/10-women-for-cheating-King-of-romance-arrested.vpf

18-பெண்களின் வாழ்க்கையை சீரழித்த சாமுவேல் – ஆபாசப்படங்கள் எடுத்து சமூக ஊடகங்களின் மூலம் பரப்பி, சமூகத் தீவிரவாதியான தறுதலை பிள்ளை (தொடரும் செக்ஸ் குற்றங்கள்-1)!

ஒக்ரோபர் 12, 2016

18-பெண்களின் வாழ்க்கையை சீரழித்த சாமுவேல் – ஆபாசப்படங்கள் எடுத்து சமூக ஊடகங்களின் மூலம் பரப்பி, சமூகத் தீவிரவாதியான தறுதலை பிள்ளை (தொடரும் செக்ஸ் குற்றங்கள்-1)!

karppukkarasi-kannagi

இந்தியாவில், தமிழகத்தில் பெண்களின் நிலை: அடுத்தடுத்து தமிழகத்தில், இவ்வாறான நிகழ்வுகள் நடப்பது மிக்க கவலையை அளிக்கிறது. பெண்களைப் பெற்றவர்கள் நிச்சயமாக மனத்தளவில் பயந்து கொண்டிருப்பர். சுவாதி கொலைக்குப் பிறகும், இத்தகைய செயல்கள் தொடர்வது, அதிகமான சமூக சீரழிவைத் தான் காட்டுகிறது. பொதுவாக கற்பைப் போற்றும் பாரதம், அதிலும் குறிப்பாக “கற்புக்கரசி கண்ணகி” என்று போற்றப்படும் தமிழகத்தில், இவ்வாறு பெண்களின் கற்பை சூரையாடி வருவது, இளம்பெண்கள் திருமணத்திற்கு முன்பாகவே சோரம் போவது, ஆண்களின் வலையில் விழுந்து சீரழிவது முதலியன துக்கத்தை அளிப்பதாக இருக்கிறது.

samuel-facebook-love-cheat-sex-pervert-photo18-பெண்களை பாலியல் ரீதியில் ஏமாற்றி புகைப்படம் பிடித்த சாமுவேல்: சென்னையில் கல்லூரி மாணவி உள்பட 10 இளம்பெண்களை காதலித்து நெருக்கமாகப் பழகி அவர்களின் ஆபாச படங்களை ‘பேஸ்-புக்’கில் வெளியிட்ட சாமுவேல் என்ற காதல் மன்னனை போலீசார் கைது செய்தனர்[1]. சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்தவர் ராஜஸ்ரீ (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது தாயார் ராஜேஸ்வரி சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் 25-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது: “எனது மகள் பட்டப்படிப்பு படித்து உள்ளார். அவரை மயிலாப்பூரை சேர்ந்த சாமுவேல் என்ற இளைஞர் ஒரு தலையாக காதலித்து உள்ளார். காதலை சொல்லி அடிக்கடி பின்தொடர்ந்து வந்துள்ளார். எனது மகள் அவரது காதலை ஏற்கவில்லை. திடீரென்று அந்த வாலிபர் தனதுபேஸ்புக்கில் எனது மகளின் புகைப்படத்தை கிராபிக்ஸ் மூலம் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டுள்ளார். இதுபோல ஏராளமான பெண்களை காதலித்து நெருக்கமாகப் பழகி அந்த இளம்பெண்களின் ஆபாச புகைப்படங்களையும் தனதுபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். அவர்மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்”, இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த புகார் மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்க கமிஷனர் எஸ்.ஜார்ஜ் உத்தரவிட்டார்.

v-samuel-with-a-girlசாமுவேல் ஆடிய காதல் நாடகம்வலையில் விழுந்த பெண்[2]: பிபிஏ பட்டதாரியான நான் சில நாட்களாக (2015லிருந்து) ECR சாலையில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் கணக்காளராக வேலை பார்த்து வந்தேன்[3]. அப்போழுது சாமுவேல் என்னை பின் தொடர்ந்து, ‘உன்னை காதலிக்கிறேன்’ என்று ஒரு மாதமாக தொந்தரவு செய்தான். நான் முடியாது என்று மறுத்து விட்டேன். அதற்கு சாமுவேல் பிளேடால் கையை கிழித்து கொண்டு நீ இல்லையென்றால் இறந்து விடுவேன் என்று பயமுறுத்தினான். அதை நான் கண்டு கொள்ளவில்லை. அதன்பிறகு மறுபடியும் சில நாட்கள் கழித்து இன்னொரு கையை கிழித்து கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான் என்று அவனுடைய நண்பர்கள் எனக்கு தெரிவித்தார்கள். மறுபடியும் தொடர்பு கொண்ட நண்பர்கள், ‘நீ இல்லை என்றால் இறந்து விடுவான்’ என்று சொன்னார்கள். அவன் உன்னை கல்யாணம் செய்ய ஆசை படுகிறான் என்று அவன் நண்பர்கள் என்னிடம் கூறினார்கள். அதன்பிறகு அவனுடைய விருப்பத்தை நான் ஏற்று கொண்டேன். பல மாதங்களாக பழகினேன்[4].

v-samuel-with-a-girl-2பிரிஸ்கிலாஎன்ற ஒரு பெண் எச்சரித்தது[5]: அப்பொழுது அவனால் பாதிக்கப்பட்ட “பிரிஸ்கிலா” என்ற ஒரு பெண் என்னுடைய தொலைபேசியில் தொடர்பு கொண்டு சாமுவேலைப் பற்றி உனக்கு தெரியுமா அவன் ஏற்கனவே என்னையும் எனக்கு முன்னால் பல பெண்களையும் காதலித்து ஏமாற்றி இருக்கிறான் என்றார். அதை கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். பின்னர் மறுநாள் சாமுவேலை பார்க்கும்போது அவனுடைய மொபைல் போனை வாங்கி பார்த்தேன். அப்போது அந்த செல்போனில் பல பெண்களுடனும், மாணவிகளுடனும் கிளு கிளுப்பாக இருக்கும் போட்டோக்கள் ஏராளமாக இருந்தது. இதனால் அந்தப் பெண் சொன்னது உண்மை என்று தெரிந்து கொண்டு, பிறகு சாமுவேலிடம் இருந்து விலக ஆரம்பித்தேன். அவனிடம் இந்த பெண்கள் யார் என்று கேட்டேன். அதற்கு இது எல்லாம் மார்பிங் செய்த போட்டோக்கள் என்று தெரிவித்தான். அதை ஏன் வைத்திருக்கிறாய் என்று கேட்டதற்கு சும்மா என்றான். இதனால் அவனது தவறான புத்தியை தெரிந்து கொண்ட நான், ஒதுங்க ஆரம்பித்தேன். சாமுவேலும் என்னிடம் தொடர்பு கொள்ளவில்லை[6].

samuel-facebook-love-cheat-sex-pervert-demanding-money-dinakaran-cuttingரூ 10 லட்சம் கேட்டு மிரட்டியது[7]: திடீரென கடந்த வாரத்தில் (செப்டம்பர் 2016) வேறு ஒரு தொலைபேசியிலிருந்து என்னை தொடர்பு கொண்டு என்னிடம் பேச வேண்டும் என்று அழைத்தான். அதற்கு நான் மறுத்ததால் அவனுடன் நான் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை வாட்ஸ்-அப் மற்றும் பேஸ்புக்கில் அனுப்பிவிடுவேன் என்று மிரட்டி என்னிடம் ரூ.10 லட்சம் பணம் கேட்டான். நீ தரவில்லையென்றால் சுவாதி கொல்லப்பட்டது போல் உனனை நான் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினான். அதன்பிறகு உடனே என் தொலைபேசியை கட் செய்தேன். பின்னர் பார்த்தால் சாமுவேல் உண்மையாகவே என்னிடம் நெருங்கி பழகின புகைப்படத்தையும் பல பெண்களிடம் பழகிய புகைப்படத்தையும் வாட்ஸ்-அப்பில் பரவ விட்டான். இதைப்பார்த்த என் குடும்பத்தாரும் என் அம்மாவும் என்னை திட்டி அடித்தார்கள். இதன் காரணமாக என் முழு குடும்பமும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். சாமுவேலை விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்”, இவ்வாறு புகாரில் தெரிவித்துள்ளார்[8].

beauty-parlour-nexusபியூட்டி பார்லர் நடத்திய சாமுவேலின் தாய்பார்லருக்கு வந்த பெண்களையும் மாட்ட வைத்த சாமுவேல்: கூடுதல் கமிஷனர் சங்கர், இணை கமிஷனர் மனோகரன், துணை கமிஷனர் பெருமாள், உதவி கமிஷனர் குப்புசாமி ஆகியோர் மேற்பார்வையில் சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.  புகார் கூறப்பட்ட வி. சாமுவேல் [V. Samuel (21)] மயிலாப்பூர் சிவசாமி தெருவை சேர்ந்தவர். மதுரவயலில் ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்தவர் [a final year engineering student at a private university in Maduravoyal][9]. ஆனால் சில பாடங்களில் ‘பெயில்’ ஆகி உள்ளார். இவரது தாயார் சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். ஓய்வுக்குப் பிறகு, நெல்சன் மாணிக்கம் ரோடில், பியூட்டி பார்லர் வைத்து நடத்துகிறார். சாமுவேலிடம் மாட்டிய 18 பெண்களில் இந்த பார்லருக்கு வரும் கல்யாணம் ஆன பெண்களும் அடக்கம்[10]. அதாவது சாமுவேலின் ஆபாசவேலைகள் தாயுக்குத் தெரிந்தே உள்ளது[11]. தந்தை ஓய்வு பெற்ற எல்.ஐ.சி. அதிகாரி. தற்போது அவர் கார் வாங்கி விற்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். சாமுவேல் பெற்றோருக்கு ஒரே மகன் என்பதால் செல்லமாக வளர்க்கப்பட்டு உள்ளார். அவர் கேட்டதையெல்லாம் பெற்றோர் மறுக்காமல் செய்து கொடுத்து உள்ளனர்.

samuel-facebook-love-cheat-sex-pervert-dh-2சாமுவேலைச் சுற்றி இளம்பெண்களை ஏமாற்றி வந்த கூட்டம்: தந்தை கார் விற்பனை நிறுவனம் நடத்தி வருவதால் பல சொகுசு கார்களில், சாமுவேல் வலம் வந்து உள்ளார். தியேட்டர் அதிபர் ஒருவரது மகன் உள்பட இளைஞர் பட்டாளமே சாமுவேலுக்கு நண்பர்களாக உள்ளனர். செல்வம், அந்தஸ்து இருந்ததால் சாமுவேலின் வாழ்க்கை தப்பான பாதைக்கு சென்றுள்ளது. பேஸ்-புக் மூலம் அழகான இளம்பெண்களோடு தொடர்புகொண்டு, வலை விரித்துள்ளார். முதலில் காதலிப்பார். பின்னர் அந்த பெண்களை திருமணம் செய்வதாக ஏமாற்றி, நம்பிக்கையை ஊட்டி தனியாக வருமாறு செய்வார். ECR / OMR சாலைகளில் உள்ள பண்ணைவீடுகளுக்கு அழைத்துச் சென்று உல்லாசத்தில் ஈடுபடுவார். உல்லாசத்தில் ஈடுபடும் காட்சிகளை மறைமுகமாக தனது செல்போன் மூலம் படம் எடுத்து வந்தான். இதற்காக அறையில் பல கேமராக்களை பல கோணங்களில் பொருத்தியிருந்தான். இணையதளங்களில் அவற்றை வெளியிட்டு உள்ளான். ‘பேஸ்-புக்’கிலும் இவரது லீலைகளின் படங்கள் ஏராளமாக உள்ளதாக கூறப்படுகிறது. காதல் மன்னனாக வலம் வந்துள்ளார். இத்தகைய வேலைகளை 2014லிலிருந்தே செய்து வந்ததாகத் தெரிந்தது.

© வேதபிரகாஷ்

12-10-2016

facebook-love-murder-lust

[1] 18 பெண்கள் என்று சென்னைடைம்ஸ் கூறுகிறது – Chennaitimes,  Meet The Engg Student From Chennai Who Cheated More Than 18 Girls Including Married Women!, September.28, 2016.1.58.00 pm.

[2] தினகரன், பெண்களை காதல் வலையில் வீழ்த்தியது எப்படி?, Date: 2016-09-29@ 00:24:28.

[3] The Hindu, Engineering student arrested for sharing nude photos of woman, Chennai, September.28, 2016,  Updated: September 28, 2016 05:32 IST.

[4] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=248899

[5] தினகரன், பெண்களை காதல் வலையில் வீழ்த்தியது எப்படி?, Date: 2016-09-29@ 00:24:28.

[6] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=248899

[7] தினகரன், பெண்களை காதல் வலையில் வீழ்த்தியது எப்படி?, Date: 2016-09-29@ 00:24:28.

[8] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=248899

[9] Chennaitimes,  Meet The Engg Student From Chennai Who Cheated More Than 18 Girls Including Married Women!, September.28, 2016.1.58.00 pm.

[10] The married women who fell in his trap were clients of a beauty parlour which Samuel’s mother runs on Nelson Manickam Road. http://www.chennaimemes.in/2016/09/meet-engg-student-from-chennai-who.html

[11] Deccan Chronicle, Chennai: Facebook lover held for cheating, Published Sep 28, 2016, 6:29 am IST, Updated Sep 28, 2016, 6:29 am IST.