Posts Tagged ‘குழந்தைகள் பாலியல்’

செங்கல்பட்டு குழந்தைகள் காப்பகம், குழந்தைகள் நலக்குழு உறுப்பினர், பெண்-குழந்தைகளைக் கற்ப்ழிப்பது, புகார் மற்றும் வழக்குகள் (2)

திசெம்பர் 25, 2020

செங்கல்பட்டு குழந்தைகள் காப்பகம்குழந்தைகள் நலக்குழு உறுப்பினர், பெண்குழந்தைகளைக் கற்ப்ழிப்பது, புகார் மற்றும் வழக்குகள் (2)

மணிகண்டனுக்கு நீதிமன்ற தண்டனை வழங்கியது (டிசம்பர் 2017): நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், செங்கல்பட்டு குழந்தைகள் நலக்குழுத் தலைவருக்கு, இரண்டு மாத சிறைதண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பரங்கிமலையில் புனித ஜோசப் பிரான்சிஸன் சகோதரிகள் அமைப்புக்கு சொந்தமான குழந்தைகள் காப்பகம், பதிவு செய்யப்படாததால் செங்கல்பட்டு குழந்தைகள் நலக் குழு, காப்பகத்தில் இருந்து ஐந்து சிறார்களை அழைத்துச் சென்று தனியார் மையத்தில் தங்கவைத்தது. ஐந்து குழந்தைகளையும் மீட்டுத் தரக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த, உயர்நீதிமன்றம் ஐந்து சிறார்களையும் உடனடியாக மீண்டும் அதே இல்லத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்தாததை அடுத்து தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி துரைசாமி, செங்கல்பட்டு குழந்தைகள் நலக்குழுத் தலைவர் மணிகண்டனுக்கு 2 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்[1]. நீதிமன்ற உத்தரவை பின்பற்றாதது மட்டுமல்லாமல், மன்னிப்பு கேட்க கூட அவர் முன் வரவில்லை. இது போன்ற நடவடிக்கைகளை அனுமதித்தால் ஒரு தவறான முன்னுதாரணம் ஆகி விடும் எனக் கூறி மணிகண்டனுக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார்[2]. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக தண்டனை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற மணிகண்டன் தரப்பு கோரிக்கையை ஏற்ற நீதிபதி, தண்டனை 2 வாரங்களுக்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.

குழந்தைகளை சீரழிக்கும் காமுகர்கள்: குழந்தை என்றால் 18 வயதிற்கு கிழேயுள்ள சிறுமி அல்லது சிறுவன் ஆகும். இதில், 3 முதல் 17 வரையுள்ள சிருமிகள், டீன் ஏஜில் உள்ள, வயதுக்கு வந்த இளம்பெண்கள் ஆவர். ஆகவே, இவர்களைத்தான், காமுகர்கள், தங்களது இச்சைக்கு சதாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை, கிருத்துவ பிடோபல் / சிறுவர் கற்ப்பழிப்பாளிகள் பற்றிதான், அதிகமாக செய்திகள் வந்துள்ளன. எப்பொழுதுவது, கூலிக் காரன், கிழவன், சிறுமியர்களிடம் சில்மிஷம் செய்ததாக, செய்திகள் வந்ததுண்டு. அவர்கள் தண்டனை பெற்ற / பெறு செய்த செய்திகளும் வந்துள்ளன / வருகின்றன. ஆனால், இந்த அரசு காப்பக கற்பழிப்புகள், பாலியல் குற்றங்கள் பற்றி விவரங்கள் வெளி வராமல் இருக்கின்றன. ஆகவே, இது பற்றிய விழிப்புணர்வு தேவை என்று தெரிகிறது. அனாதை இல்லங்களில் நடக்கும் அக்கிரமங்களைக் கண்காணிக்கப் படவேண்டும். ஏற்கெனவே அக்குழந்தைகள் பெற்றோர் அறியாமல், மற்றவர்களின் ஆதரவுடன் வளர்ந்து வரும் நிலையில், அவர்களை பாலியல் ரீதியில் பலாத்காரம் செய்வது, கற்பழிப்பது என்பது நினைத்துப் பார்க்க முடியாத காரியமாக, குற்றமாகத் தெரிகிறது. அதை செய்யத் துணியும் மற்றும் செய்து வரும் கயவர்கள், எத்தகைய கொடிய அரக்கர்களாக இருப்பர் என்பதனை அறிந்து கொள்ளலாம். ஆகவே, அவர்களுக்குக் கடுமையான தண்டனை அளிக்கப் படவேண்டும்.

காப்பகங்களில் உள்ள அதிகாரி போதை மருந்து வியாபாரத்தில் ஈடுபட்டதால் சஸ்பெண்ட் செய்யப் பட்டது (2018)[3]: தாஸ் என்கின்ற துணை தலைமை அதிகாரி (Das, assistant superintendent at the special home for children at Chengalpet) போதை மருந்து வியாபாரத்தில் ஈடுபட்டதாதத் தெரிந்தது. காப்பகத்திற்கு குழந்தைகளைப் பார்க்க வருபவர்கள் மூலம் கஞ்சா/கன்னபீஸ் போன்ற போதைப் பொருட்களை கொண்டு வருவதாகத் தெரிந்தது. இதனால், சிவகுமார், சூப்பிரென்டென்டுக்கு ஒரு மெமோவும் அனுப்பப் பட்டது. ஒரு முறை அங்கிருக்கும் சிறுவர்கள், போதையில் சிறைக் காவலரைத் தாக்கிய போது, விவகாரம் தெரிய வந்தது. அப்பொழுது அவர்களிடமிருந்து, போதைப் பொட்டலங்கள், செல்போன், சிம்கள் முதலியன பறிமுதல் செய்யப் பட்டன. காப்பகத்தில், அவையெல்லாம் தடை செய்யப் பட்டவை ஆகும். காப்பகத்தில் இருக்கும் உயர் அதிகாரிகளே, வரும் பார்வையாளர்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு, இத்தகைய வேலையை செய்து வருகின்றனர் என்று “டைம்ஸ் ஆப் இந்தியா,” செய்தி வெளியிட்டது. பார்வையாளர்கள், சாப்பாடு கொண்டு தரும் சாக்கில், உணவு டப்பாக்களில், இந்த போதைப் பொருட்களை, மறைத்து வைத்து, கொடுத்து விட்டுச் செல்வதாக, அங்குள்ளவர்கள் அறிவித்தனர். இதனால், நிலைமையை விசாரிக்க ஒரு குழு வந்து விவரங்களை அறிந்தது, ஒரு அறிக்கைக் கொடுத்தது. அதன் படி, சில குறிப்பிட்ட அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தது[4].

காப்பகங்களின் அவலநிலை (மார்ச்.2016): காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளில், அரசு அனுமதியின்றி, ஏராளமான காப்பகங்கள் முளைத்து வருகின்றன; அவற்றில், ஏராளமான குழந்தைகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்[5]. அந்த, ‘காப்பகங்களில்’ எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி, மோசமான நிலை உள்ளது. அங்கு பராமரிக்கப்படும் குழந்தைகள், வேலைக்கு அனுப்பப்படுவதாகவும் கூறப்படுகிறது[6]. மேலும், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள், காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்; அதற்கு, அரசு அனுமதியில்லை. எனினும், முறைகேடாக, பச்சிளம் குழந்தைகள் அங்கு பராமரிக்கப்படுகின்றன.கடந்த மூன்றாண்டுகளுக்கு முன் 2013ல், மாவட்டம் முழுவதும், 53 அனுமதியற்ற குழந்தைகள் காப்பகங்கள் மூடப்பட்டன. மாவட்ட நிர்வாகத்தின் கண்களை மறைத்து, சில அதிகாரிகள் துணையுடன், காப்பங்கங்கள் மீண்டும் முளைத்து வருகின்றன. அதாவது, அவ்வாறு காப்பகங்களை வைப்பதால், யாருக்கு லாபம் என்று கவனிக்க வேண்டும். காப்பகங்களை வைத்து, நிதியுதவி பெறுகின்றனர், மற்றும், செலவழித்தலும், அதிகமாக பணம் மிஞ்சுகிறது, அதனை, தமது விருப்பகங்களுக்கு ஏற்றபடி உபயோகப் படுத்துகின்றன என்று தெரிகிறது. இந்த காப்பகங்கள் மீது, மாவட்ட ஆட்சியரை தலைவராக கொண்டு செயல்படும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

© வேதபிரகாஷ்

19-12-2020 / 25-12-2020


[1] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ். செங்கல்பட்டு குழந்தைகள் நலக்குழு தலைவருக்கு 2 மாத ஜெயில் : ஐகோர்ட் உத்தரவுBy: WebDesk, December 13, 2017, 7:14:17 PM.

[2]  https://tamil.indianexpress.com/tamilnadu/chengalpattu-children-welfare-officer-2-months-jail-chennai-high-court-order/

[3] An official from the state social defence department has been suspended for his alleged involvement in drug trade at a government juvenile home. Das, assistant superintendent at the special home for children at Chengalpet, allegedly colluded with visitors to smuggle ganja (cannabis) into the home, a senior official from the department told TOI. Another official, Selvakumar, who works as the superintendent, has received a memo seeking an explanation. Last week, a group of boys attacked a guard allegedly under the influence of ganja. Sachets of the contraband, beedis, mobile phones and SIM cards – all banned items at the correctional facility – were seized by authorities. TOI reported the incident on October 3. 2018.

Times of India, Official suspended for aiding drug trade at juvenile home, Ram Sundaram | TNN | Oct 9, 2018, 05:53 IST.

[4] Insiders said higher-ups at the home colluded with visitors – families and friends of inmates – to smuggle in ganja by concealing them in bread packets and lunch boxes. Ganja addiction was common among inmates, they said. Based on the news report, a team inspected the home on October 4 and submitted a report. Disciplinary proceedings have been initiated against two officials based on the team’s report which confirmed that ganja was sneaked into the home, the official said.

https://timesofindia.indiatimes.com/city/chennai/official-suspended-for-aiding-drug-trade-at-juvenile-home/articleshow/66127333.cms

[5] தினமலர்,குழந்தைகள் காப்பகங்களில் நடக்கும் முறைகேடுகள் அம்பலம்! நிர்வாகிகளின் பணத்தாசைக்கு இரையாகும் பிஞ்சுகள் , Added : மார் 02, 2016  05:35

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=1469508&Print=1

ஆசிரியர் போர்வையில் காமக்கொடூரன் – பல இளம்பெண்களை-மாணவிகளை சீரழித்த கயவன்!

திசெம்பர் 20, 2016

ஆசிரியர் போர்வையில் காமக்கொடூரன் பல இளம்பெண்களைமாணவிகளை சீரழித்த கயவன்!

tution-centre-rape-sivamar-arrested-deccan-chronicleஇதுவரை, பாதிரிகள் மற்ற காமுகர்கள் இளம்பெண்களை பாலியல் ரீதியில் வன்புணர்ந்த கொடூரங்களைப் படித்து வந்தோம். இப்பொழுது, ஒரு ஆசிரியரே அத்தகைய ஏலையை செய்துள்ளது திகைக்க வைத்தாக உள்ளது. ஆசிரியர் என்ற புனிதத்தையேக் கெடுக்கும் வகையில், அந்த கயவன் ஈடுபட்டுள்ளான். மாணவ-மாணவியர் ஒழுங்காகப் படித்தால், டியூஷன் என்றெல்லாம் செல்ல வேண்டிய அவசியமே இருக்காது. இதுவும், காலத்தின் அலங்கோலமாக இருக்கிறது. இன்று டியூஷன் சென்டர்கள் இத்தகைய மாணவ-மாணவியர்களால் தான் பெருகி வருகிறது. மேலும், அவர்களில் சிலர் வசதியாக இருந்தால், பொழுது போக்கிற்கு வந்து செல்கிறார்கள். டியூஷன் சென்டர்கள், டுடோரியல் காலேஜுகள் முதலியவற்றில் படிக்க வருகிறார்களோ இல்லையோ, காதல் செய்ய வருகிறார்கள் என்று முன்னமே தெரிந்த விசயமாக இருக்கின்றது.

tution-centre-rape-sivaumarமாணவியை ஏமாற்றியது, அனுபவித்தது, கல்யாணம் செய்து கொண்டது: தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டை சேர்ந்த சீனிவாசன் மகன் சிவக்குமார், 27. கடந்த 2012ல் பாலக்கோட்டில் தனலட்சுமி என்ற பெயரில் சிவகுமார்  டியூசன் சென்டர் ஆரம்பித்தார், என்று இப்படி மரியாதையாகத்தான் ஊடகங்கள் குறிபிடுகின்றன. பாலக்கோடு மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப்புற மாணவ, மாணவிகள் டியூசனில் சேர்ந்தனர். அப்போது,  10ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷத்தை சிவகுமார் தொடங்கினார். அந்த மாணவி மயங்கவே, வகுப்பறையிலேயே உல்லாசமாக இருந்து செல்போன் மூலம் வீடியோ பதிவு செய்துள்ளார்[1]. அதை நண்பர் ஈஸ்வரனிடம் காண்பித்தார் எனும்போது, அவனின் குரூரக் குணம் வெளிப்படுகிறது. இதை சொல்லி அந்த மாணவியிடம் தன்னுடைய ஆசைக்கு இணங்குமாறு ஈஸ்வரன் கூற அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதாவது, நிச்சயமாக அந்த கயவர்களின் கூட்டு வெளிப்படுகிறது. அந்த மாணவி புகார் செய்யவே பெற்றோரும், உறவினர்களும், டியூசன் சென்டருக்கு வந்து சிவகுமாரையும், ஈஸ்வரனையும் சரமாரியாக அடித்து உதைத்தனர்.  இதைதொடர்ந்து உறவுக்கார பெண்ணை திருமணம் செய்வதாக கூறி, உல்லாசம் அனுபவித்துவிட்டு மறுத்துள்ளார். அந்த பெண்ணின் பெற்றோர், சிவகுமாரை மிரட்டி  திருமணம் செய்து கொடுத்தனர்[2]. அதாவது, திருமணம் ஆனப் பிறகும், ஒழுங்கில்லாமல் இருந்ததும் தெரிகின்றது.

tution-centre-rape-sivamarகுளிர்பானங்களில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மாணவிகள் மயங்கி விழுந்ததும் அவர்களிடம் உல்லாசம் அனுபவித்து: இவர், தர்மபுரி மற்றும் பாலக்கோட்டில், தளிர் என்ற பெயரில் டியூசன் சென்டர் நடத்தியதோடு, குரூப் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்பு எடுத்து வந்தார். அதாவது, மனைவி, குடும்பத்தினருக்கு தெரியுமா இல்லையா என்று குறிப்பிடவில்லை. இங்கு படிக்கும் மாணவிகளிடம், சிவக்குமார் ஆசைவார்த்தை கூறி ஏமாற்றியுள்ளார். இவரது ஆசை வார்த்தையில் மயங்கிய ஒரு சில மாணவிகளை, சிவக்குமார் பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அதை வீடியோ படம் எடுத்து மிரட்டி, அவர்களுடன் உல்லாசமாக இருந்து வந்தார்[3]. அதாவது, மாணவிகள் அந்த அளவுக்கு சபலத்துடன் இருந்தார்களா என்ற கேள்வியும் எழுகின்றது. இதனால், அலைகின்ற காமுகர்களுக்கு எளிதாக இரையாகின்றானர். மேலும் டியூசன் படிக்க வரும் மாணவிகளில் சிலருக்கு தனியாக அதிக நேரம் பாடம் சொல்லி கொடுப்பது போல நாடகம் ஆடியுள்ளார் சிவக்குமார். அப்போது சில மாணவிகளுக்கு குளிர்பானங்களில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மாணவிகள் மயங்கி விழுந்ததும் அவர்களிடம் உல்லாசம் அனுபவித்துள்ளார்[4]. டெக்கான் குரோனிகல் நாளிதழ் மட்டும் தான், இந்த கயவர்கள் கற்பழித்ததால் கைது செய்யப்பட்டனர் என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது[5].

tution-centre-rape-sivamar-arrestedஒரு மாணவி துணிந்து புகார் கொடுக்க கைதான காமக்கொடூரன்: மேலும், சில மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவும் கொடுத்துள்ளார்[6]. “பாலியல் ரீதியில் தாக்கியதற்காக, ஒரு மனிதன் கைது” என்று தி இந்து செய்தி வெளியிட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது[7]. பல மாணவிகள் பலிகடா ஆனாலும், ஒரு மாணவி துணிந்து புகார் கொடுக்க முடிவு செய்தாள். எனவே, இதுகுறித்து, 17 வயது மாணவி ஒருவர் 04-12-2016 அன்று புகார் கொடுத்தார். கொடுத்த புகாரின் படி[8], பாலக்கோடு இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் விசாரித்து, சிவக்குமாரை போஸ்கோ சட்டத்தில் கைது செய்தார்[9]. மேலும், அவரிடம் இருந்து, மாணவிகளின் ஆபாச படம் இருந்த மொபைல்போனையும் பறிமுதல் செய்தார்[10]. விசாரணையில், பாலியல் பலாத்காரம் செய்த மாணவிகளின் வீடியோக்களை, டியூசன் சென்டரில் பணியாற்றும், தன் நண்பர்கள் ஈஸ்வரன், மற்றொரு சிவக்குமார் மற்றும் மற்றொரு நண்பருக்கு, சிவக்குமார் காட்டியுள்ளார். இவ்வாறு ஆதாரங்களைத் திரட்டினர் போலீஸார்.

tution-centre-sexபாலியல் ரீதியில் பாதிக்கப்பட்டது எத்தனை மாணவிகள்?: ஊடகங்களுக்கு இத்தகைய பிரச்சினைகளை செய்தியாக வெளியிடும்போது, பொறுப்போடு செயல்பட வேண்டும். ஏதோ மற்றவர்களை ஈர்க்கும் வகையில், தலைப்பிட்டு செய்திகளாக வெளியிடுவதை விட, படிப்பவர்களுக்கு நீதி புகட்டும் முறையில், அவற்றை வெளியிட வேண்டும். இதையடுத்து, சிவகுமார், ஈஸ்வரன், மற்றொரு சிவக்குமார் நான்கு பேரும் சேர்ந்து, 20க்கும் மேற்பட்ட மாணவிகளை மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. 25க்கும் மேற்பட்ட மாணவிகளை அவர்கள் சீரழித்ததுடன், அவற்றை வீடியோவாக பதிவு செய்து ரசித்தும், நண்பர்களுக்கு அந்த வீடியோவை போட்டு காண்பித்தும் தங்களுடைய கொடூரத்தை அரங்கேற்றியுள்ளனர், என்று தினகரன் கூறுகிறது. இந்தியன் எக்ஸ்பிரஸ் 30 என்று கூறுகிறது[11]. எத்தனை பேர் பாதித்திருந்தாலும், அது ஈடுகொடுக்க முடியாத இழப்பாகும். பெண்மையை மதிக்கத் தெரியாத அந்த கயவர்கள் தூக்கில் ஓட்டால் தான், மற்ற காமக்கொடூரர்களுக்கு உரிய பாடமாக இருக்கும். இதையடுத்து, தலைமறைவாக இருந்த ஈஸ்வரன், 26, மற்றொரு சிவக்குமார், 27, ஆகியோரை போலீசார் 16-12-2016 அன்று கைது செய்து[12], பாலியல் பலாத்காரம் செய்த வீடியோ காட்சி அடங்கிய மொபைல்போன்களை, அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்தனர்[13].

tution-centre-rape-sivamar-arrested-vedaprakashடியூஷன் சென்டர்கள், டுடோரியல் காலேஜுகள் கண்காணிக்கப் படவேண்டியுள்ளது: இதை கூட்டாகவே செய்திருப்பது, ஆசிரியன், வீடியோ கடைக்காரன், வனது நண்பன் என்று இருப்பது தெளிவு படுத்துகிறது. மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மற்றொருவரை போலீசார் தேடிவருகின்றனர். மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்துள்ளதால், இங்கு படித்த மாணவிகள் மட்டுமன்றி, அவர்களின் பெற்றோரும் பீதியடைந்துள்ளனர்[14]. நியாயமான விசயம் என்றாலும், தங்களது பெண்களைக் கவனிக்காமல், கண்காணிக்காமல் அப்படி விட்டது அவர்களது பொறுப்பற்றத் தன்மையினையை வெளிப்படுத்துகிறது. இந்த வழக்கு தொடர்பாக, சிவக்குமாரிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால், அவரை, போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தியாவில் பலப் பகுதிகளில் இத்தகைய குற்றங்கள் நடந்து வருவதால், டியூஷன் சென்டர்கள், டுடோரியல் காலேஜுகள் கண்காணிக்கப்படவேண்டியுள்ளது[15]. ஏனெனில், அத்தகைய பாலியல் குற்றங்களில் ஒரு மாதிரி வெளிப்படுகிறது[16].

© வேதபிரகாஷ்

20-12-2016

[1] தினகரன், தர்மபுரி டியூசன் சென்டர் லீலைகள் அம்பலம் மாணவிகளை பலாத்காரம் செய்ததை வீடியோ எடுத்த ஆசிரியர், Date: 2016-12-18@ 00:24:14

[2] http://www.dinakaran.com/News_detail.asp?Nid=266408

[3] http://www.dinamalar.com/news_detail.asp?id=1670161

[4] தமிழ்.ஒன்.இந்தியா, குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து 30 மாணவிகளிடம் உல்லாசம்.. டியூசன் ஆசிரியர்கள் 3 பேர் கைது !, By:  Karthikeyan, Published: Thursday, December 15, 2016, 18:47 [IST]

[5] In a shocking development, the Dharmapuri police on Thursday arrested three people including a teacher of a private tuition center for raping some schoolgirls studying in classes ten and plus-2. They were arrested after a victim informed her parents about the incident leading to the police complaint against the accused people.

Deccan Chronicle, Chennai: 3 including teacher held for raping schoolgirls, Published: Dec 16, 2016, 7:46 am IST; Updated: Dec 16, 2016, 8:00 am IST.

http://www.deccanchronicle.com/nation/crime/161216/chennai-3-including-teacher-held-for-raping-schoolgirls.html

[6] The Hindu, Man held for sexually assaulting minor girl, DHARMAPURI: DECEMBER 16, 2016 00:00 IST ,UPDATED: DECEMBER 16, 2016 03:56 ISTUPDATED: DECEMBER 16, 2016 03:56 IST

[7] The police have arrested Sivakumar, a tuition teacher, on the charge of sexually assaulting a 17-year-old girl. In a complaint, the girl said that she used to go to a tuition centre where he taught. Easwaran, another staff at the centre, had recorded the assault on his mobile phone. He too has been arrested. The police is on the lookout for one more person in this regard.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/Man-held-for-sexually-assaulting-minor-girl/article16843687.ece

[8] the incident came to light only on December 4 when the victim summoned the courage to lodge a complaint with the police. Investigators have so far arrested three persons, including the prime accused.

Indian Express, Sleazy tuition teacher held for raping minor girl two years back, By Expres News Service, Published: 17th December 2016 04:16 AM, Last Updated: 17th December 2016 04:16 AM

[9] தினகரன், மாணவியரை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டியவர் கைது, பதிவு செய்த நாள். டிசம்பர்.05, 2016. 09.52.

[10] http://www.dinamalar.com/news_detail.asp?id=1663653

[11] Meanwhile, rumours spread in the place that around 30 girls were sexually assaulted and videographed by Sivakumar. However, the SP denied this.

[12] After investigations, his friend Eswaran was arrested on Tuesday and another friend M Sivakumar on Friday.

http://www.newindianexpress.com/states/tamil-nadu/2016/dec/17/sleazy-tuition-teacher-held-for-raping-minor-girl-two-years-back-1550079.html

[13] தினமலர், 20க்கும் மேற்பட்ட மாணவிகள் பாலியல் பலாத்காரம்: வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் மேலும் இருவர் கைது, பதிவு செய்த நாள். டிசம்பர்.16, 2016. 08.17.

[14] http://tamil.oneindia.com/news/tamilnadu/teacher-arrested-having-allegedly-sex-with-students-269813.html

[15] The Times of India, Tuition teacher arrested for molesting young girl in Mumbai, Vijay V Singh| TNN | Oct 1, 2014, 11.16 PM IST.

[16] http://timesofindia.indiatimes.com/city/mumbai/Tuition-teacher-arrested-for-molesting-young-girl-in-Mumbai/articleshow/44021309.cms

சென்னை போர்னோகிராபி வியாபார தம்பதியர் கைது – எச்சரிக்கை – அபாயகரமான சமூக தாக்குதல், செக்ஸ்-தீவிரவாதம் மற்றும் சமுதாய சீரழிவு!

ஜூலை 28, 2016

சென்னை போர்னோகிராபி வியாபார தம்பதியர் கைது எச்சரிக்கைஅபாயகரமான சமூக தாக்குதல், செக்ஸ்தீவிரவாதம் மற்றும் சமுதாய சீரழிவு!

Child porno couple arrested -Malai malarசினிமா, செக்ஸ், போர்னோகிராபி, ஆண்பெண் அந்தரங்க காட்சிகளை வெளியிடும் ஆபாச வலைத்தளங்களின் பயங்கரம்: இணையதளங்களுக்கான தேடல்களில் பொதுவாக உபயோகமுள்ள தகவல்களுக்காக தெடி, பலன் பெற்று வரும் நேரத்தில், சினிமா, செக்ஸ், போர்னோகிராபி, ஆண்-பெண் அந்தரங்க காட்சிகளை வெளியிடும் ஆபாச வலைத்தளங்களில் உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் அதிக நேரத்தை செலவிட்டு வருவது, தெரிந்த விசயமாகவே இருக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் தென்மேற்காசிய, அப்பிரிக்க நாடுகளில் இத்தகைய காரியங்களுக்கு விநியோகம் செய்ய, படங்கள், திரைப்படங்கள் முதலியவற்றை எடுத்து அனுப்பிக் கொண்டிருப்பது, ஒரு வேலையாகவே நடந்து வருகிறது. இருப்பினும், குழந்தை-உடலுறவு காட்சிகள் தடை செய்யப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக, சிறுவர்-சிறுமியர் தொடர்புடைய ஆபாச வலைத்தளங்களுக்கு (child pornography) உலகில் பல நாடுகள் தடை விதிக்கப்பட்டிருப்பதால் இதுபோன்ற வலைத்தளங்களுக்கு அதிக கிராக்கியும், மவுசும் உண்டு[1]. மேற்படி காட்சிகளை இணையத்தில் பதிவேற்றம் செய்து அவற்றை பார்க்கவரும் ‘ரசிகர்களிடம்’ ஏராளமான கட்டணம் சந்தாவாக வசூலிக்கப்படுகிறது[2].

Shady_homes_orphanages

Shady_homes_orphanages

சென்னையில் குழந்தை போர்னோகிராபி புதியதல்ல: மும்பு, வில் ஹியூம் என்ற டச்சுநாட்டுக் காரன், சென்னையிலேயே பல வருடங்கள் தங்கியிருந்து, இத்தகைய வேலையை செய்து வந்தான். பிறகு, மாட்டிக் கொண்டு, இப்பொழுது புழல் சிறையில் தண்டனை பெற்று வருகிறான். டாக்டர் பிரகாஷும் அதே வேலையை செய்துதான் மாட்டிக் கொண்டான். அதாவது, சென்னைவாசிகள், அனாதை இல்லங்கள் நடத்துபவர்கள், குழந்தைகளை இல்லங்களுக்குக் கூட்டி வருவது, அவர்களை அத்தகைய காரியங்களில் ஈடுபடுத்துவது, வீடியோ எடுப்பது என்ற நிலைகளில் பலர் நேரிடையாகவும், மறைமுகமுகமாகவும் செயல்பட்டுவருவது தெரிகிறது. சமூகத்தை சீரழிக்கிறோமோ என்ற எண்ணாமே அவர்களுக்கு இல்லாமல் இருந்தது நோக்கத்தக்கது. இந்நிலையில், தமிழகத்தின் தலைநகரான சென்னையின் அருகாமையில் வசித்துவரும் ஒரு தம்பதியர் இதுபோன்ற குழந்தைகளின் பாலியல் உறவு தொடர்பான காட்சிகளை வெளியிடும் கட்டண வலைத்தளத்தை நடத்தி வருவதாக சைபர் கிரைம் போலீசாருக்கு தெரியவந்தது[3]. இதையடுத்து, அந்த வலைத்தளத்தில் ஆபாசப் படங்களை பதிவேற்றம் செய்பவர்களின் ஐ.பி. நம்பர் மற்றும் இமெயில் ஐ.டி.க்களை மோப்பம் பிடித்த போலீசார் சென்னை அருகேயுள்ள சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அதிரடி ரெய்டு நடத்தினர்[4]. அங்கிருந்தபடி மேற்படி ஆபாசப் படங்களை பதிவேற்றம் செய்ய இந்த தம்பதியர் இரண்டு வலைத்தளங்களை நடத்தி வந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது[5].

Child porno couple arrested -Webdunia

கோடிகளில் புரளும் போனோகிராபி தொழில்: பர்மா பஜார் பக்கம் யாராவது நடந்து சென்றால், சிலர் அணுகி, “என்ன சார், அந்த…..சிடி வேண்டுமா, டிவிடி வேண்டுமா” என்று கேட்டு பின்னாலேயே வருவர். அதற்காக வருபவர்கள் மற்றும் சபலபுத்து கொண்டவர்கள் வாங்கிக் கொண்டு பார்ப்பர். பிறகு  செயல்முறையில் கிடைக்குமா என்று தேடி போகவும் செய்வர். வெறும் பார்த்துக் கொண்டே இருப்பவர்கள், இணைதளங்களில் தேடும் போது பலான படங்கள், வீடியோக்கள் கிடைக்கும். இந்த வலைத்தளங்களை பார்வையிட வரும் வாடிக்கையாளர்களிடம் இருந்து 2 கோடியே 40 லட்சம் ரூபாயை கட்டணமாக வசூலித்துள்ளதாகவும், மேற்படி தொகை பெங்களூரில் உள்ள ஒரு வங்கி கணக்கில் செலுத்தப்பட்டதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்[6].

Child porno couple arrested -ANNநன்கு  படித்த சென்னை தம்பதியர் இத்தொழிலில் ஈடுபட்டது: இதையடுத்து, இந்த ஆபாச வலைத்தளங்களை நடத்திவந்த சித்தாத்தா வேலு (Siddhartha Velu 48) மற்றும் அவரது மனைவியான பிரிசில்லா மார்கரெச் தன்ராஜ் (Priscilla Margaret Dhanraj 45) ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சித்தார்த்த வேலு பிஎச்டி பட்டதாரி[7] / பள்ளிப்படிப்பே முடிக்காதவன்[8] என்றும் ஊடகங்கள் வழக்கம் போல மாறுபட்ட விவரங்களைக் கொடுக்கின்றன[9]. அவன் படித்தானா-இல்லையா என்ற விவரத்தை விட, மனிததன்மையற்ற அவன், இத்தகைய குரூர வேலை செய்தான் என்பது தான் அபாயகரமான விசயம். திருச்சியைச் சேர்ந்த இவன், வேலூரைச் சேர்ந்த பிரிசில்லாவை 2011ல் திருமணம் செய்து கொண்டான். இவன் நெட்வொர்கிங், வெப்ஹோஸ்டிங் முதலிய வேலைகளில் கில்லாடி. பிறகு “Cutecandid, indianshowgirls, mywife4u, indianswington, shakeela4u” முதலிய வெப்சைட்டுகளை உருவாக்கினான்[10].  இணைதள அறிவு, ஞானம், தொழிற்நுட்பம் எப்படி இதுமாதிரியான தீவிரவாதிகளில் சிக்கும் போது, துஷ்பிரயோகிக்கப் படுகிறது என்பதனையும் அறிந்து கொள்ளலாம். இதன் மூலம் தான் பலரது வாழ்க்கையினை கெடுத்துள்ளார்கள் இந்த தம்பதியர். தமது பையனை சிங்கபூரில் படிக்க வைக்கின்றனராம். தன் மகன் நன்றக இருக்க வேண்டும், மற்ற பிள்லைகள் நாசமாக வேண்டும் என்ற இவர்களின் வன்மத்தைக் கவனிக்க வேண்டும். பிறகு எப்படி மற்ற சிறுவர்-சிறுமியரை அத்தகைய வேலைகளில் ஈடுபடுத்தினர். இத்தகைய வக்கிரபுத்தி, அரக்கத்தனம் நிரம்பிய மனோப்பாங்கு முதலியவற்றை அடையாளங்கொண்டு, இவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்.

Siddhartha Velu, Priscillika couple arrested 27-07-2016.விசாரணைக்குப் பிறகு, கைது முதலியன: இவர்கள் இருவரும் இங்கிலாந்து, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் வசிக்கும்போது பல்வேறு இணையதளங்களை தொடங்கி, அவற்றில் ஆபாசபடங்களை குறிப்பாக சிறுவர், சிறுமிகளின் ஆபாச படங்களை வெளியிட்டு கோடி, கோடியாக பணத்தை சம்பாதித்து வந்தனர்[11]. அவர்கள் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சென்னைக்கு இருப்பிடத்தை மாற்றி விட்டனர்[12]. முன்னர் பெங்களூரில் இருந்தனர் என்று செய்திகள் அறிவிக்கின்றன[13]. இவ்வாறன இடங்கள் ஏற்கெனவே பிடோபைல்களுடன் சம்பந்தப்பட்டிருப்பதை நினைவு கூறவேண்டும். அதுமட்டுமல்லாது, அங்கிருக்கும் கிருத்துவ அனாதை இல்லங்கள், காப்பங்களில் பிடோபைல்களின் காமக் களியாட்டங்கள், செக்ஸ் வக்கிரகங்கள் நடந்தேறியுள்ளன. ஊடகங்கள் அவ்வாறான இணைப்புகளை, சம்பந்தங்களை எடுத்துக் காட்டாவிட்டாலும், நடந்து வரும் சமூக பிறழ்சிகள், செக்ஸ்-குற்றங்கள், முதலியவற்றை பல நோக்குகளில் கவனிக்க வேண்டியுள்ளது. சமூகத்தை பாதிக்கும், இத்தகைய வக்கிரங்களை எந்த சமூக ஆர்வலரும் பொறுத்துக் கொள்ள முடியாது, பெண்ணிய சித்தாந்திகளும் அடங்கியிருக்க முடியாது. ஆனால், இத்தகய விசயங்கள் வரும் போது, அவர்கள் அமுக்கியே வாசித்து வருகின்றனர் அல்லது அமைதியாக இருந்து விடுகின்றனர்.

Siddhartha Velu, Priscillika arrested 27-07-2016

எப்படி சிக்கினர்?:  துரைப்பாக்கத்தில் பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தனர். அனாதை ஆசிரமங்களில் வசிக்கும் சிறுவர், சிறுமிகளை ஆபாசமாக படம் பிடித்து அந்த படங்களை, இணையதளங்களில் வெளியிட்டதாக இவர்கள் மீது புகார்கள் வந்தன. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. சைபர் கிரைம் போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டனர்[14]. இணைதள குற்றங்களை ஆராய்ந்து வரும் “சைபர்” பிரிவு போலீஸார், வல்லுனர்களின் உதவியுடன், அத்தகைய படங்கள் எங்கிருந்து தகவேற்றம் செய்யப்படுகின்றன முதலிய விவரங்களைக் கண்டுபிடித்து, குற்றவாளிகளை நெருங்கினர். சித்தார்த்த வேலு வசித்த வீட்டில் சோதனை நடத்தி, ஆபாச படங்கள் உள்ளிட்ட நிறைய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்[15]. முன்னர் அரசு ஆபாச தளங்களை முடக்கிய போது, இவை எப்படி தப்பித்தன என்று தெரியவில்லை. “சர்வர்” இந்தியாவில் இல்லை என்ற முறையில் தப்பித்தனவா அல்லது வேறேந்த காரணங்கள் உள்ளனவா என்று ஆராய வேண்டியுள்ளது. அவர்கள் செய்துவந்த குற்றமீறல்களுக்காக சம்பந்தப்பட்ட ஆதாரங்களும் கிடைத்தன[16]. தீவிர விசாரணைக்குப்பிறகு சித்தார்த்த வேலுவும், அவரது மனைவி பிரிசில்லா மார்க்கரேட்டும் 27-07-2016 புதன்கிழமை அன்று தகவல் தொழிற்நுட்பம் சட்டம் பிரிவுகளில் கைது செய்யப்பட்டனர்[17]. பிறகு 9வது குற்றவியல் மெட்ரோபோலிடின் மாஜிஸ்ட்ரேட் முன்னர் ஆஜர் செய்யப்பட்டனர்[18]. முறைப்படியான சட்டமுறைகளுக்குப் பிறகு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்[19]. இது பிடிஐ செய்தி ஆனதால், ஆங்கில ஊடகங்கள் அப்படியே போட்டிருக்கின்றன.

© வேதபிரகாஷ்

26-07-2016

[1] மாலைமலர், சிறுவர், சிறுமியர் உறவுகொள்ளும் ஆபாசப் படங்களை வெளியிட கட்டண வலைத்தளம் நடத்திய தம்பதியர் கைது, பதிவு: ஜூலை 27, 2016 08:55

[2]  http://www.maalaimalar.com/News/TopNews/2016/07/27085555/1028540/TN-couple-host-child-pornography-websites-held.vpf

[3] தமிழ்.வெப்துனியா, சிறுவர்கள் ஆபாச வலைத்தளம் நடத்திய கணவன் மனைவி கைது, Last Modified: புதன், 27 ஜூலை 2016 (13:02 IST)

[4] http://www.tamil.webdunia.com/article/regional-tamil-news/couple-arrested-for-running-a-porn-website-116072700021_1.html

[5] தமிழ்.ஒன்.இந்தியா, கேவலம்.. குழந்தைகளின் ஆபாச படங்களை வெப்சைட்டில் வெளியிட்டு ரூ.2.4 கோடி வசூல்! சென்னையில் தம்பதி கைது, By: Veera Kumar, Published: Wednesday, July 27, 2016, 12:18 [IST].

[6] http://tamil.oneindia.com/news/tamilnadu/chennai-couple-arrested-running-child-porn-websites-258928.html

[7] பத்ரிகா.காம், இளம்வயது சிறுவர், சிறுமிகளின் ஆபாச இணையதளம்தம்பதியர் கைது, Posted by ஏ.டி.எஸ்.பாண்டியன், Wednesday, ஜூலை 27, 2016. 1.00 pm.

[8] Police sources said, Siddhartha Velu, a native of Trichy was married to Priscillika from Vellore five years ago. The couple shifted to chenai and rented a house in sholinganallur. During investigations, it was revealed that Siddhartha, a school drop out was well versed in networking and webhosting.

[9] https://www.patrikai.com/adolescent-porn-website-couple-arrested/

[10] Velu hit upon the idea of child porn as he thought there weren’t many websites on it in India. He started two child porn websites -‘cutecandid’ and ‘indianshowgirls’. Later, he floated three more web portals, `mywife4u’, `indianswingtown’ and `shakeela4u’. The websites displayed contact email ids. The websites that had a paywall were linked to Velu’s bank account through an international money portal. Payments had to be made to view content.

http://timesofindia.indiatimes.com/city/chennai/Chennai-couple-held-for-running-child-porn-sites/articleshow/53410712.cms

[11] தினத்தந்தி, சிறுவர்,சிறுமிகளின் ஆபாச இணையதளம் நடத்தி வந்த சென்னை கணவன்மனைவி கைது, பதிவு செய்த நாள்: புதன், ஜூலை 27,2016, 11:38 AM IST; மாற்றம் செய்த நாள்: புதன், ஜூலை 27,2016, 11:38 AM IST

[12] Business Standard, TN couple host child pornography websites, held, Press Trust of India  |  Chennai July 27, 2016 Last Updated at 00:07 IST

[13] http://www.business-standard.com/article/pti-stories/tn-couple-host-child-pornography-websites-held-116072700012_1.html

[14] http://www.dailythanthi.com/News/State/2016/07/27113809/Girls-porn-picture-Published-on-the-website-The-husbandwife.vpf

[15] Deccan Chronicle, Chennai couple arrested for allegedly running child porn websites,

PTI, PublishedJul 27, 2016, 9:29 am IST; UpdatedJul 27, 2016, 9:29 am IST

[16] Indiatoday, Chennai techie couple earned Rs 2 crore from child porn sites, arrested, Rohini Swamy | Posted by Liu Chuen Chen,Chennai, July 27, 2016 | UPDATED 09:44 IST

Ihttp://indiatoday.intoday.in/story/chennai-couple-arrested-for-running-child-porn-sites/1/724907.html

[17] A case was registered under provisions of Information Technology Act and searches were conducted at the residence of the couple at Sholinganallur in Chennai. Materials establishing the couple’s links with these two child porn websites besides other websites with porn content were recovered and seized, the release said.

http://www.deccanchronicle.com/nation/crime/270716/chennai-couple-arrested-for-allegedly-running-child-porn-websites.html

[18] Indian Express, Couple who made a fortune running child porn site arrested in Chennai

Published: 27th July 2016 12:16 AM; Last Updated: 27th July 2016 06:37 AM

[19] http://www.newindianexpress.com/cities/chennai/Couple-who-made-a-fortune-running-child-porn-site-arrested-in-Chennai/2016/07/27/article3548708.ece

 

23 வயது ஆசிரியை, 15 வயது மாணவனுடன் ஓடிப்போனது, உறவு கொண்டது, கல்யாணம் செய்து கொண்டது, முதலியன இயற்கையானதா, சமூக ஏற்புடையதா, தனிமனித ஒழுக்கமா?

மார்ச் 13, 2016

23 வயது ஆசிரியை, 15 வயது மாணவனுடன் ஓடிப்போனது, உறவு கொண்டது, கல்யாணம் செய்து கொண்டது, முதலியன இயற்கையானதா, சமூக ஏற்புடையதா, தனிமனித ஒழுக்கமா?

ஓடிப்போன மாணவன், ஆசிரியை 2015-16.-பிடிபட்டனர்

சட்டப்படி நடக்கும் விசயங்கள்: இதன் பின்னர் கோதைலட்சுமி மற்றும் சிவசுப்பிரமணியன் இருவருக்கும் தென்காசி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது[1]. பின்னர் அவர்களை தொன்காசி நீதிமன்ற நீதிபதி ஜெகதீஸ்வரி முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர்[2]. அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து கோதைலட்சுமி நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்[3]. மாணவர் சிவசுப்பிரமணியன் நெல்லை கூர்நோக்கு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளார். சிவசுப்பிரமணியனின் தாயார் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளால் வரும் திங்கட்கிழமை 14-03-2016 சிவசுப்பிரமணியனை போலீசார் மதுரை உயர் நீதி மன்ற கிளையில் ஆஜர்படுத்த உள்ளனர். இதெல்லாம் சட்டப்படி நடக்கும் விவகாரங்கள், ஆனால், சமூகத்தில் இதன் விளைவைப் பற்றி கவலைப்படப் போவது யார்?

ஓடிப்போன கோதை ஆசிரியை 2015-16

முன்பு எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்லவில்லை: மாணவன் ஆசிரியையை வகுப்பில் தூக்கி நிற்பதைப் போன்று வெளியான புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏனெனில், பள்ளியில், அத்தகைய புகைப்படத்தை யார் எடுத்தது என்ற கேள்வி எழுந்தது. இணைதளத்தில் இருவரும் பாலியலில் ஈடுபடுவதைப் போன்ற வீடியோ சுற்றில் வந்தது. அப்பொழுது பல கேள்விகள் எழுப்பப்பட்டன. ஏனெனில், அதில், மூன்றவது நபர் ஒருவர் இல்லாமல், அத்தகைய வீடியோ வெளிவராது என்பது தெரிந்த விசயமானது. இன்றைய தேதியில் ஜே.என்.யூ போன்ற ட்லைசிறந்த பல்கலைக்கழகங்க வளாகத்தில் உள்ள ஹாஸ்டல்களில் புளூ பிளிம், போர்னோகிராபி எல்லாம் எடுக்கின்ற நிலையுள்ளது. உண்மையிலேயே காதல், திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தப் போகிறோம் என்றால், எந்த பெண்ணும் அத்தகைய நிலையில் நடந்து கொண்டு, புகைப்படங்களில், வீடியோக்களில் கேவலமாக பதிவு செய்ய அனுமதித்திருக்க மாட்டாள். ஆனால், அவையெல்லாம் நடந்துள்ளன. ஆசிரியைப் பற்றிய விவரங்களும் முழுமையாக வெளியிடப்படவில்லை. அவரின் புகைப்படங்களும் விதவிதமாக, மாறுபட்டிருந்தன. பெயரும் மாற்றப்பட்டிருந்தது. புகைப்படம் மற்றும் வீடியோ இவ்விருவரைத் தவிர மற்றவர்களும் பங்குக் கொண்டுள்ளது தெரிகிறது. சுமார் ரூ.15 லட்சம் நகை மற்றும் பணம் உடபட ஏன் எடுத்துச் செல்ல வேண்டும், அது என்னவாயிற்று என்று தெரியவில்லை. அப்பணம் இருந்தால், கர்ப்பினியாக இருக்கும் பெண் வேலை செய்யவேண்டிய அவசியம் இல்லை.

ஓடிப்போன மாணவன் 2015-16.-பிடிபட்டான்

தனிமனித ஒழுக்கம் தேவையா, இல்லையா?: இந்து போன்ற நாளிதழ்கள் (ஆங்கிலம்) இவற்றை மொத்தமாக சேர்த்து, ஒரு சட்டப் பிரச்சினையாக முன்னர் அணுகியது இங்கு மறுபடியும் நினைவு படுத்த வேண்டியுள்ளது[4]. அதாவது மற்ற காதலித்து வீட்டில் மறுத்ததால், எதிர்த்ததால் வீட்டைவிட்டு ஓடிபோதல், போன்ற விசயங்களாக அலசப்பட்டன. பொதுவாக உபதேசம் செய்பவர்கள், கற்பிப்பவர்கள், புத்திமதி சொல்பவர்கள் ஒழுங்காக இருக்க வேண்டும் என்பார்கள். ஆனால், “தி இந்து” ஆசிரியர்களிடம் எதிர்பார்க்க முடியாது. இங்கு தனிமனித ஒழுக்கத்தை அல்லது அவர்களது சொந்த விசயங்களைக் குறிப்பிடுவது என்பதில்லை, ஆனால், அவ்வாறிருப்பவர்கள் எப்படி ஒட்டு மொத்த சமூதாயத்தின் ஒழுக்கத்தைப் பேண உண்மையில் வேலைசெய்வார்கள் அல்லது எண்ணம் கொள்வார்கள் என்பதுதான் கேள்வி. கமல் ஹஸ்ஸன் போன்ற நடிகர்கள் ஒருவனுக்கு-ஒருத்தி, தாம்பத்தியம், இல்லறம், கற்பு முதலியவற்றைப் பற்றிப் பேசமுடியாது. அதுபோலவே பலதார மணம் புரிந்துள்ளும் ஆண்-பெண்களிடமும் இவற்றைப் பற்றி பேச்ச முடியாது. அந்நிலையில் அவர்களை பல்கலைக்கழகங்களில் அழைத்து பட்டம் கொடுத்து, பேசவைத்தால், மாணவ-மாணவியர்களிடம் எப்படி நற்பண்புகள் வளரும் என்று எதிர்பார்க்க முடியும் என்று தெரியவில்லை. “கொன்றால் பாவம், தின்ற்றால் போச்சு” என்ற ரீதியில் தான் இவர்கள் ஆண்-பெண் உறவுகளைப் பற்றி விளக்கம் கொடுப்பார்கள். பல பெண்களை மணந்து கொண்டும், சேர்ந்து வாழ்ந்தும், குழந்தைகளைப் பெற்றுக் கொண்டும், பிறகு மற்ற பெண்களுடன் சேர்ந்து வாழும் மனிதர்கள், “எயிட்ஸ்” போன்ற விளம்பரங்களுக்கு “போஸ்” கொடுப்பது, விளம்பரம்-பிரச்சாரம் செய்வது தான் காலத்தின் கோலமாக இருக்கிறது.

கோதை-மணி- காமம் -786 கதவு

கோதை-மணி- காமம் -786 கதவு

இச்சீரழிவிற்கான காரணம், ஒழுக்கமின்மைதான்: பிரச்சினைய அலசாமல் இருந்தால், ஒரு பிரயோஜனமும் இல்லை. சமீப காலத்தில் 20-30 வயதில் இருக்கும் ஆசிரியைகள் 14-18 வயதில் இருக்கும் மாணவர்களை இழுத்துக் கொண்டு ஓடும் நிகழ்ச்சிகள் ஊடகங்களில் காணப்படுகின்றன. இவை நாகரிக சீரழிவு என்று சமாதானப்படுத்தி கொள்வதா, சமூக சீர்கேடு என்று ஒதுங்கிக்கொள்வதா, அல்லது பெண்மையின் சீர்குலைவு என்று வருத்தப்படுவதா என்று தெரியவில்லை. ஆண்-பெண் படிக்கும் காலத்தில், படிப்பைத் தவிர மற்ற விசயங்களில் கவனம் செல்கிறது, மற்றும் கற்பிக்கும் ஆசிரியை-ஆசிரியர்களே காமத்துப்பாலை போதிக்கின்றனர், பயிற்சி கொடுக்கின்றனர் என்றால், அந்நிலையை அழிவு, சீர்கேடு என்று தானே சொல்ல வேண்டியுள்ளது? மேலும் “பிடோபைல்” (Pedophile) குற்றங்கள் ஆண்களிடம் தான் உள்ளது என்ற நிலைபோய், பெண்களிடமும் அத்தகைய நிலையுள்ளதா என்று கவனிக்க வேண்டியுள்ளது. இதெல்லாம் அந்நியர்களின் காமச்செயல்களாக இருந்துவரும் வேளையில் இப்பொழுது, இந்தியர்களிடம், குறிப்பாக, பெண்களிடமும் காணப்படுவது வருத்தத்திற்குரியதாகும். ஒழுக்கமின்மை தான் இதற்கு காரணம் என்று நன்றாகவே தெரிகிறது.

கோமதி-மணி- காமம்.-786

கோமதி-மணி- காமம்.-786

கல்வித்துறையில் நுழைந்துள்ள சமூக சீர்ப்பழிப்பாளர்கள்: கடந்த 60 ஆண்டுகளில் கல்வி, மேல்-படிப்பு மற்றும் சிறப்பு படிப்புகள் முதலியவற்றில் தரங்கெட்டவர்கள் வியாபார நோக்கில் நுழைந்து கோலோச்சி வருகின்றனர். சமூகத்தில் “மாதிரிகள்” (Role Models) என்றெல்லாம் தூக்கிக் காட்டப்படும் மனிதர்கள் கேடுகெட்டவர்களாக இருக்கின்றனர். என்னத்தான் பத்தினித்தன்மை பற்றி பேசினாலும், அவர்களது வேசித்தனம் பற்றி மக்கள் அறிந்துள்ளனர். ஆனால், அத்தகைய சமூக சீரழிப்பாளர்கள் பள்ளிகளில், பல்கலைக்கழகங்களில் கூடி வந்து அறிவுரை கொடுப்பது போன்ற நிகழ்வுகள் நடந்து வருகின்றன. பாடமளிப்பு விழாக்களுக்கே (Convocation function) அவர்கள் அழைக்கப்படுவது, மிகக் கேவலமான விசயம் ஆகும், அவர்களுக்கு யோக்கியதையே இல்லாத காரியத்திற்கு அவர்கள் உபயோகப்படுத்தப் படுகிறார்கள். ஏனெனில், அத்தகைய பள்ளி, கல்லூரி, பல்கலைகழகங்களின் சொந்தக்காரர்களே வரியேப்பு செய்தவர்கள், கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள், சாராய மன்னர்கள், விபச்சாரம் பெருக காரணமானவர்கள் என்று தான் இருக்கின்றனர். இனம்-இனத்தோடு சேரும் என்ற ரீதியில் தான் அவர்கள் கூட்டாக செயல்பட்டு வருகின்றனர். இவையெல்லாம் தான் மாணவ-மாணவியர்களுக்கு தவறான சமிஞைகளை அனுப்புகின்றன. ஆகவே, ஒழுக்கத்தைப் பேண வேண்டும். ஆசிரியர்-மாணவர்கள் உறவு மதிக்கப்பட வேண்டும், மாணவர்கள் ஆசிரியர்களுக்கு மதிப்பும்-மரியாதையும் கொடுக்க வேண்டும்.

கோதை-மணி- காமம்-சல்பீ

கோதை-மணி- காமம்-சல்பீ

1960லிருந்து 2016 வரையுள்ள தமிழகத்தின் நிலையும், இப்பொழுது மாற்றப்பட வேண்டிய அவசியமும்: “தாய்-தந்தை-ஆசிரியர்-தெய்வம்” என்று மதிக்கப்படும் முறை மறுபடியும் போதிக்கப்படவேண்டும்.

  • 1960-70களில் “தெய்வத்தை” மறந்தனர்;
  • 1980-90களில் ஆசிரியரை மறந்தனர்;
  • 2000-2010களில் தந்தையை மறந்தனர்:
  • இப்பொழுது தாயை மறக்க ஆரம்பித்துள்ளனர்.

இதனால் தான் எல்லா பிரச்சினைகளும் தலைத்தூக்கியுள்ளன. தாயை மதிக்காதவன், தந்தையை மதிக்க மாட்டான்; தந்தையை மதிக்காவன் குருவை-ஆசிரியனை மதிக்க மாட்டான்; இவர்களை மதிக்காதவம் கடவுளைப் பற்றி ஏன் கவலைப்படப் போகிறான். இதனை தலைகீழாகவும் சொல்லலாம். அதுதான் பெரும்பாலான காரணமாக அமைகிறது என்றுதான் நிதர்சனமான உண்மையாகிறது. சித்தாந்தங்கள் பேசி, இளைய சமுதாயத்தைக் கெடுப்பதை விட, அவர்களை நெறிபடுத்த வேண்டிய முறைகளை நேரிடையாக, நன்னெறியில், உபயோகப்படும் முறைகளில் செயல்படுத்த வேண்டும். ஒழுக்கம், கட்டுப்பாடு, சட்டதிட்டங்களை மதிக்கும் முறை, நீதி-நேர்மை போன்றவற்றிற்கு கட்டுப்பட்டு நடக்கும் தார்மீக நிலை முதலியவற்றை உருவாக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

13-03-2016

[1] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=162290

[2] http://tamil.oneindia.com/news/tamilnadu/tenkasi-teacher-arrested-police-248852.html

[3] http://www.tamil.webdunia.com/article/regional-tamil-news/tenkasi-teacher-affidavit-in-police-enqury-116031200024_1.html

[4] http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/elopement-a-major-law-and-order-problem/article4819305.ece

15 வயது மாணவன் 23 வயது ஆசிரியையுடன் பள்ளியை, வீட்டை விட்டு ஓடிப் போன சமாச்சாரமும், அவர்களை போலீஸார் தேடிப் பிடித்த கதையும்!

மார்ச் 13, 2016

15 வயது மாணவன் 23 வயது ஆசிரியையுடன் பள்ளியை, வீட்டை விட்டு ஓடிப் போன சமாச்சாரமும், அவர்களை போலீஸார் தேடிப் பிடித்த கதையும்!

ஓடிப்போன மாணவன், ஆசிரியை 2015-16

கோதைசங்கர் விவகாரம் (மார்ச்.2015)[1]: நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரகுமார். இவர் மத்திய ரிசர்வ் போலீசில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மாரியம்மாள். இவர்களது மகன் சிவசுப்பிரமணியன் (வயது 15). அங்குள்ள தனியார்  பள்ளியில் 10-ம்வகுப்பு படித்து வந்தார்.  கடந்த மார்ச் 31-ந்தேதி வீட்டை விட்டு சென்ற  சிவசுப்பிரமணியன் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து கடையநல்லூர் போலீசில் அவரது பெற்றோர் புகார் செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவசுப்பிரமணியன் எங்குசென்றார் என்று விசாரணை நடத்தி, இருவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது  சிவசுப்பிரமணியன் அவர் படித்து வந்த   பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்த செங்கோட்டை அருகே காலாங்கரையை சேர்ந்த கோதை (23)  என்பவருடன் ஓட்டம் பிடித்துள்ளது தெரியவந்தது[2], இப்படித்தான் சென்ற வருடம் மார்ச் 2015ல் இப்பிரச்சினை விவரிக்கப்பட்டது.

கோதை- சிவசுப்பிடரமணி-காமம், தூக்கல்

கோதை- சிவசுப்பிடரமணி-காமம், தூக்கல்

திட்டமிட்டு பணம்நகைகளுடன் ஓடிய ஜோடி: 10-ம்வகுப்பு படித்து வந்த சிவசுப்பிரமணியனுக்கு ஆசிரியை கோதை பாடம் எடுத்து உள்ளார். இதனால் அவர்கள் இருவரும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று ஜாலியாக இருந்துள்ளனர். மாணவர்கள் இல்லாத நேரம் வகுப்பறையிலேயே இருவரும் காதல் லீலையில் ஈடுபட்டுள்ளனர்.  புகைப்படங்கள் வேறு எடுத்துக் கொண்டுள்ளனர். இதனிடையே தங்களது காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிந்தால்  பிரித்து விடுவார்களோ என்று எண்ணிய அவர்கள் இருவரும் வெளியூர் செல்ல முடிவு செய்தனர். அதன்படி  கடந்த 31-ந்தேதி இருவரும் வீட்டிற்கு தெரியாமல் வெளியூருக்கு ஓட்டம் பிடித்தனர். போகும் போது சிவசுப்பிரமணியன் தனது வீட்டில் இருந்த ரூ.12 லட்சம் மதிப்புள்ள  60  பவுன் நகையையும் எடுத்து சென்று உள்ளார். தந்தையின் வங்கிக்கணக்கில் இருந்து பணத்தையும் எடுத்துள்ளான்[3]. இப்படி மேலும் தகவல்கள் சேர்த்துக் கொடுக்கப்பட்டன. 15 வயது பையனுக்கு எப்படி 23 வயது பெண்ணிடம், அதிலும், ஆசிரியையுடன் காதல் ஏற்பட்டது என்று விளக்கவில்லை. அது காதல் இல்லை, காமம் தான், அதிலும் இளம்பெண், வயது வந்த பையனுடன் உடலுறவு கொள்லும் அளவிற்கு ஏற்பட்ட கொக்கோக வெறித்தனம். தறிகெட்டு போனதால், ஒழுங்கீனத்தினால், முறைதவறி ஏற்பட்ட விபரீதம் ஆகும்.

கோதை-மணி காமம்

கோதை-மணி காமம்

கோதைசங்கர் விவகாரம் (மார்ச்.2016): ஒரு வருடம் கழித்து ஊடகங்கள் அக்கதை கூறும் விதம் வேடிக்கையாக இருக்கிறது. அது தவறு என்று சுட்டிக் காட்டவில்லை. மாறான, “சென்ஷேசனலிஸம்” ரீதியில் செய்திகளை வெளியிட்டுள்ளன. நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள இலத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தவர் பிரியா என்கின்ற கோதைலட்சுமி (வயது 23 / 29[4]). இவரது சொந்த ஊர் செங்கோட்டை அருகே உள்ள காலாங்கரை. எம்.எஸ்.சி., பட்டதாரியான இவருக்கும் அதே பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்த மாணவன் கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சிவசுப்பிரமணியன் என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் 31–ந் தேதி 2015 கோதைலட்சுமி, சிவசுப்பிரமணியன் ஆகிய இருவரும் மாயமாகினர் என்பது தமாஷான விசயம். ஏனெனில், போகும் போது சிவசுப்பிரமணியன் தனது வீட்டில் இருந்த ரூ.12 லட்சம் மதிப்புள்ள 60 பவுன் நகையையும் எடுத்து சென்று உள்ளார். தந்தையின் வங்கிக்கணக்கில் இருந்து பணத்தையும் எடுத்துள்ளான்[5]. அப்படியென்றால், இவ்விவகாரங்கள் தெரிந்து தான் இருக்கின்றன. சமூக சீரழிவுகளால், இந்த இருவரும் சீர்கெட்டு போனதை மறைத்துள்ளனர். ஆரம்பத்திலேயே, அத்தகைய தகாத உறவைக் கண்டித்து, முடித்திருக்க தவறி விட்டார்கள்.

கோமதி-மணி- காமம்.-786

கோமதி-மணி- காமம்.-786

திருப்பூரில் போலீஸார் பிடித்த ஜோடி: இச்சம்பவம் குறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இருவரையும் தேடிவந்தனர். நாட்டில் பற்பல பிரச்சினைகள் இருக்கும் போது, போலீஸார் இத்தகைய வேலைகளை எல்லாம் செய்ய வேண்டியுள்ளது. பெற்றோர் ஒழுங்காக வளர்த்திருந்தால், மாசிரியர்-மாணவ தர்மம் இருந்திருந்தால், இவையெல்லாம் நடந்திருக்குமா என்று நினைத்துப் பார்க்கவில்லை. மாணவன், ஆசிரியையின் நண்பர்களுக்கு திருப்பூர் பொதுதொலைபேசிகளில் இருந்து அடிக்கடி போன் வருவதை சைபர் கிரைம் போலீசார் அறிந்தனர்[6]. அவர்களை புதுவை, கும்மிடிப்பூண்டி, மதுரை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் தேடி வந்தனர். ஆசிரியை கோதைலெட்சுமி, மாணவன் சிவசுப்பிரமணியன் ஆகிய இருவரும் திருப்பூரில் பதுங்கி இருந்து அங்குள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலைபார்த்து வருவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.   இதையடுத்து டி.எஸ்.பி.ஜெயக்குமார், இன்ஸ்பெக்டர் பத்மநாப பிள்ளை தலைமையிலான தனிப்படை போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூருக்கு சென்று இருவரின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

கோதை-மணி- காமம்-சல்பீ

கோதை-மணி- காமம்-சல்பீ

தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டும்/ கெஞ்சும் ஆசிரியை: 10-03-2016 அன்று இரவு ஆசிரியை கோதைலெட்சுமி மாணவன் சிவசுப்பிரமணியன் இருவரையும் போலீசார் மடக்கி பிடித்தனர்[7]. பின்னர் அவர்கள் இருவரையும் 11-03-2016 அன்று மதியம் புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். அங்கிருந்து அவர்களை கடையநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்[8]. அப்போது ஆசிரியை கோதைலட்சுமி போலீசாரிடம் கூறும் போது, “நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் உண்மையாக காதலித்தோம். சேர்ந்து வாழ ஆசைப்பட்டோம். ஆனால் எங்கள் காதலை யாரும் ஏற்க மாட்டார்கள் என்பதால் புதுச்சேரி சென்று அங்கு நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். அதுவரை எங்களுக்குள் உடல் ரீதியான தொடர்பு இருந்ததில்லை. திருணமத்திற்கு பின்பு தான் கணவன்மனைவியாக வாழ்ந்தோம். இப்போது நான் 4 மாத கர்ப்பிணியாக உள்ளேன். எங்களை நிம்மதியாக சேர்ந்து வாழ விடுங்கள். சட்டத்தின் மூலம் எங்களை பிரித்தாலும் மீண்டும் நாங்கள் சேர்ந்து வாழ்வோம். பணத்தின் மூலம் எங்களை பிரிக்க நினைத்தால் நான் தற்கொலை செய்துகொள்வேன்[9],” என்று உருக்கமாக கூறி உள்ளார் என்று நக்கீரன்பதிவு செய்கிறது[10]. எங்களைப் பிரித்து விடாதீர்கள் என்று பிடிவாதமாக இருப்பது தெரிகிறது[11]. ஆனால், இதெல்லாம் தவறு என்று எடுத்துக் காட்டப்படவில்லை.

© வேதபிரகாஷ்

13-03-2016

[1] https://socialterrorism.wordpress.com/2015/04/12/trend-of-elopement-of-female-teachers-with-teenage-students/

[2] http://www.dailythanthi.com/News/State/2015/04/11141306/10class-student-love-Teacher-with-the-flow.vpf

[3] http://www.newindianexpress.com/states/tamil_nadu/Teacher-Elopes-with-Minor-Boy/2015/04/11/article2758555.ece

[4] தினமலர், தலைமறைவு மாணவன், ஆசிரியை திருப்பூரில் மீட்பு: தென்காசியில் நீதிபதி முன்பு ஆஜர், பதிவு செய்த நாள்
மார் 12,2016 00:04; மாற்றம் செய்த நாள்: மார்ச்.12, 2016: 03.11.

[5] http://www.newindianexpress.com/states/tamil_nadu/Teacher-Elopes-with-Minor-Boy/2015/04/11/article2758555.ece

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1476210

[7] தினத்தந்தி, மாணவருடன் ஓடிய ஆசிரியை கர்ப்பிணியாக திருப்பூரில் மீட்பு , பதிவு செய்த நாள்: வெள்ளி, மார்ச் 11,2016, 11:18 PM IST; மாற்றம் செய்த நாள்: சனி, மார்ச் 12,2016, 4:45 AM IST.

[8] http://www.dailythanthi.com/News/Districts/Thirunelveli/2016/03/11231842/The-student-ran-to-the-teacher–Pregnant-recovery.vpf

[9] தமிழ்.ஒன்.இந்தியா, தற்கொலை செய்து கொள்வேன்…10 ஆம் வகுப்பு மாணவனை பிரிய மறுக்கும் தென்காசி ஆசிரியை !, By: Karthikeyan, Published: Saturday, March 12, 2016, 20:44 [IST].

[10] நக்கீரன், நான் தற்கொலை செய்துகொள்வேன்மாணவனை பிரிய மறுக்கும் ஆசிரியை, பதிவு செய்த நாள்: 12, மார்ச் 2016 (18:21 IST); மாற்றம் செய்த நாள்: 12, மார்ச் 2016 (18:21 IST).

[11] வெப்துனியா, எங்களை பிரித்துவிடாதீர்கள்: மாணவனுடன் மீட்கப்பட்ட ஆசிரியை வேண்டுகோள், Last Modified: சனி, 12 மார்ச் 2016 (15:57 IST).

பள்ளிகளில் ஆசிரியைகள் பையன்களுக்கு காமத்துப்பாலைச் சொல்லிக் கொடுத்து, கூட்டிக் கொண்டு ஓடுவது, திருமணம் செய்து கொள்வது முதலியன!

ஏப்ரல் 12, 2015

பள்ளிகளில் ஆசிரியைகள் பையன்களுக்கு காமத்துப்பாலைச் சொல்லிக் கொடுத்து, கூட்டிக் கொண்டு ஓடுவது, திருமணம் செய்து கொள்வது முதலியன!

நாத்திகர்கள், இந்துமத விரோதிகள் என்ன செய்வார்கள்

நாத்திகர்கள், இந்துமத விரோதிகள் என்ன செய்வார்கள்

சமீப காலத்தில் 20-30 வயதில் இருக்கும் ஆசிரியைகள் 14-18 வயதில் இருக்கும் மாணவர்களை இழுத்துக் கொண்டு ஓடும் நிகழ்ச்சிகள் ஊடகங்களில் காணப்படுகின்றன. இவை நாகரிக சீரழிவு என்று சமாதானப்படுத்தி கொள்வதா, சமூக சீர்கேடு என்று ஒதுங்கிக்கொள்வதா, அல்லது பெண்மையின் சீர்குலைவு என்று வருத்தப்படுவதா என்று தெரியவில்லை. ஆண்-பெண் படிக்கும் காலத்தில், படிப்பைத் தவிர மற்ற விசயங்களில் கவனம் செல்கிறது, மற்றும் கற்பிக்கும் ஆசிரியை-ஆசிரியர்களே காமத்துப்பாலை போதிக்கின்றனர், பயிற்சி கொடுக்கின்றனர் என்றால், அந்நிலையை அழிவு, சீர்கேடு என்று தானே சொல்ல வேண்டியுள்ளது? மேலும் “பிடோபைல்” குற்றங்கள் ஆண்களிடம் தான் உள்ளது என்ற நிலைபோய், பெண்களிடமும் அததகைய நிலையுள்ளதா என்று கவனிக்க வேண்டியுள்ளது. இதெல்லாம் அந்நியர்களின் காமச்செயல்களாக இருந்துவரும் வேளையில் இப்பொழுது, இந்தியர்களிடம், குறிப்பாக, பெண்களிடமும் காணப்படுவது வருத்தத்திற்குரியதாகும்.

கோதை- சிவசுப்பிடரமணி-காமம், தூக்கல்

கோதை- சிவசுப்பிடரமணி-காமம், தூக்கல்

சமீபத்தைய கோதைசங்கர் விவகாரம் (மார்ச்.2015): நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பகுதியை சேர்ந்தவர்  சந்திரகுமார். இவர் மத்திய ரிசர்வ் போலீசில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மாரியம்மாள். இவர்களது மகன் சிவசுப்பிரமணியன் (வயது 15). அங்குள்ள தனியார்  பள்ளியில் 10-ம்வகுப்பு படித்து வந்தார்.  கடந்த மார்ச் 31-ந்தேதி வீட்டை விட்டு சென்ற  சிவசுப்பிரமணியன் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து  கடையநல்லூர் போலீசில் அவரது பெற்றோர் புகார் செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவசுப்பிரமணியன் எங்குசென்றார் என்று விசாரணை நடத்தி, -வரை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது  சிவசுப்பிரமணியன் அவர் படித்து வந்த   பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்த செங்கோட்டை அருகே காலாங்கரையை சேர்ந்த கோதை (23)  என்பவருடன் ஓட்டம் பிடித்துள்ளது தெரியவந்தது[1].  10-ம்வகுப்பு படித்து வந்த சிவசுப்பிரமணியனுக்கு  ஆசிரியை கோதை பாடம் எடுத்து உள்ளார். இதனால் அவர்கள் இருவரும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. இதையடுத்து இருவரும்  பல்வேறு இடங்களுக்கு சென்று ஜாலியாக இருந்துள்ளனர். மாணவர்கள் இல்லாத நேரம் வகுப்பறையிலேயே இருவரும் காதல் லீலையில் ஈடுபட்டுள்ளனர்.  புகைப்படங்கள் வேறு எடுத்துக் கொண்டுள்ளனர். இதனிடையே தங்களது காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிந்தால்  பிரித்து விடுவார்களோ என்று எண்ணிய அவர்கள் இருவரும் வெளியூர் செல்ல முடிவு செய்தனர். அதன்படி  கடந்த 31-ந்தேதி இருவரும் வீட்டிற்கு தெரியாமல் வெளியூருக்கு ஓட்டம் பிடித்தனர். போகும் போது சிவசுப்பிரமணியன் தனது வீட்டில் இருந்த ரூ.12 லட்சம் மதிப்புள்ள  60  பவுன் நகையையும் எடுத்து சென்று உள்ளார். தந்தையின் வங்கிக்கணக்கில் இருந்து பணத்தையும் எடுத்துள்ளான்[2].

கோதை-மணி காமம்

கோதை-மணி காமம்

கடந்த ஆண்டுகளில் நடந்த அத்தகைய ஓட்டங்கள்: இணைதளத்தில் தேடியபோது, கடந்த ஆண்டுகளிலேயே அத்தகைய ஓட்டங்கள் தமிழகம் மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் நடந்துள்ளது தெரிகிறது. சில உதாரணங்கள் கொடுக்கப்படுகின்றன:

ஆசிரியை பையனைக் கடத்தல்

ஆசிரியை பையனைக் கடத்தல்

மார்ச்.2014: 25 வயதான அஞ்சலி சிங் ஆங்கில ஆசிரியை 16 வயது பையனுடன் மும்பையிலிருந்து ஓடிவந்தபோது, அவளை பெங்களூரில் சிறுபையனை கடத்திக் கொண்டு வந்த குற்றத்திற்காக போலீஸார் மார்ச்.9, 2014 அன்று கைது செய்யதனர்[3].  பேஸ்புக்கில் இருந்த விவரங்களும் அவர்களைக் காட்டிக் கொடுத்தன[4]. மேலும் அந்த ஆசிரியை பையன் சிறுவனாக / மைனர் இருக்கிறான், மேஜராகியவுடன் / 18 வயதானதும், நான் அவனை திருமணம் செய்து கொள்கிறேன் என்றாள்[5].

மே.2013: அஹமதாபாதில் 45 வயது ஆசிரியை 16 வயது பையனோடு ஓட்டம். இவளுக்கு ஏற்கெனவே இருமுறை திருமணம் ஆகி, விவாகரத்து ஆகியுள்ளது[6].

ஏப்ரல்.2012: 35 வயதான குமுது என்ற ஆசிரியை சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் 11ம் வகுப்பு பையனுடன் குர்காவுக்கு ஓடிவிட்டாள். குமுதுக்கு கல்யாணம் ஆகி 8வயதில் பையன் இருக்கிறான், ஆனால், கணவனைப் பிரிந்து வாழ்நாதாள்.  போலீஸார் குர்காவில் அவளை கைது செய்தனர்[7].

டிசம்பர்.2011: 20 வயதில் உள்ள இரண்டு பள்ளி ஆசிரியைகள் இரண்டு எட்டாம் வகுப்பு பைன்களை விஜயவாடாவில் ரகசியமான இடத்திற்குக் கொண்டு சென்று கல்யாணம் செய்து கொண்டுள்ளனர்[8].

பிப்ரவரி.2010: ஆந்திராவிலோ, இன்னொரு ஆசிரியை புரட்சியே செய்துள்ளாள். ஆமாம், வாரங்கலில் 16 வயது மாணவன் 21 வயதான விஞ்ஞான ஆசிரியை திருமணமே செய்து கொண்டு விட்டான்[9].

ஏப்ரல்.2010: உதய்பூர் மாவட்டம், ராஜஸ்தான் – ஒரு தனியார் பள்ளி 27வயதான மோனிகா ஷேக், 16 வயது நிஷாங்க் என்ற பையனுடம் ஓடிப்போன போது, புகாரின் பேரில் போலீஸார் கைது செய்தனர். விசாரணையில், அவள் அதுபோல பல மாணவர்களுடன் உறவு வைத்திருந்தது தெரிய வந்தது[10]. ஒரு ஏப்ரல்.24, 2010.

கோதை-மணி- காமம் -786 கதவு

கோதை-மணி- காமம் -786 கதவு

இவற்றையெல்லாம் ஆயும்போது வெளியாகும் விசயங்கள்: முன்பெல்லாம் ஆசிரியைகள்-மாணவர்கள் அல்லது ஆசிரியர்கள்-மாணவிகள் வகுப்பில், பள்ளிகளில், சோதனைக் கூடங்களில் கட்டுப்பாட்டுடன், ஒழுக்கத்திடன், கண்ணியத்துடன் இருந்து கொள்பவர். திருமணம் ஆனாலும், ஆகாவிட்டாலும், மற்றவர்களிடம் பழகும் போது வரையறைகளுடன் இருந்துகொள்வார்கள். ஆனால், இப்பொழுது, நாகரிகம், இருபாலார் படிக்கும் பள்ளிகள்-கல்லூரிகள் முதலியவற்றாலும், சினிமா-டிவி போன்ற சாதனங்களின் எதிர்மறை நிகழ்ச்சிகள் முதலியவற்றாலும், இளம் வயது ஆண்கள்-பெண்கள் இவ்வாறு வரம்புகளை, எல்லைகளை, கட்டுப்பாடுகளை மீறுகிறார்கள் என்று தெரிகிறது.

  1. இளம் ஆசிரியைகள் வகுப்பில் பாடம் தவிர மற்ற விசயங்களை (சினிமா, டிவி நிகழ்சிகல் போன்ற) பற்றிப் பேசுவது.

  1. “எக்ஸ்கிரஷன்”, சுற்றுலா என்று வெளியே செல்வது, அங்கு மாணவர்களுக்கு வலைவீசுவது.

  1. சினிமா-டிவி முதலியவற்றில் நடிகைகள் எல்லாவற்றையும் காட்டி ஆடுவது, பாடுவது, குத்தாட்டம் போடுவது முதலியவற்றைப் பார்ப்பதால், ஈர்க்கப்படுதல்.

  1. டீன் ஏஜ் என்பதால், இவ்விசயங்கள் சொல்லாமல் தெரிந்து, செய்து பார்க்கத் துடிப்பது, ஏங்குவது.

  1. நெருக்கம், பேச்சு, உடை முதலியவை – பார்க்கும் முறை, போக்கு முதலியவை தூண்டும் சாதனங்களாக உபயோகிப்பது.

  1. பாடம் சொல்லிக்கொடுக்கும் போது, அருகில் வருவது, தொட்டுக் காட்டுவது, பேசுவது முதலியன.

  1. அந்நிலையில் ஆசிரியைகளிடம் மாட்டிக் கொள்வது. ஒருமுறை சுவைத்தப் பிறகு, இளமையினால் மறுபடி-மறுபடி சுவைக்கச் செல்வது.

  1. தாம்பத்தியம் சரியில்லை, புருஷனால் திருப்திப்படுத்த முடியவில்லை, விவாக ரத்து, தனித்து வாழ்தல் போன்ற பிரச்சினைகளினால், காமத்தைத் தீர்த்துக் கொள்ள மாணவர்களை உபயோகித்துக் கொள்ளுதல்.

  1. தமது வகுப்பில் படிக்கும் மாணவர்கள் என்பதினால், விசயத்தை வெளியே சொல்லாதே என்று பயமுறுத்துதல், வேன்டும் போது அனுபவித்துக் கொள்ளுதல்.

  1. ஆசிரியை-மாணவன், குரு-சிஷ்யன், போன்ற உறவுகளை காமம், உடலின்பம் முதலியவற்றால் முறித்து, இள்ளம்வயதை சீரழிக்கும் போக்கு.

பொதுவாக தார்மீக உணர்வுகள், மனக்கட்டுப்பாடு, உடலொழுக்கம், முதலியவை குன்றுவதாலே, இச்சீர்கேடுகள் ஏற்படுகின்றன என்று தெரிகிறது. போதாகுறைக்கு வளைதளம், அலைபேசி, பேஸ்புக் முதலியவை இவர்களின் காமப்பசிக்கு தீனி போடுகின்றன.

கோமதி-மணி- காமம்.-786

கோமதி-மணி- காமம்.-786

தனிமனித ஒழுக்கம் தேவையா, இல்லையா?: இந்து போன்ற நாளிதழ்கள் (ஆங்கிலம்) இவற்றை மொத்தமாக சேர்த்து, ஒரு சட்டப் பிரச்சினையாக அணுகுவது வேடிக்கையாக இருக்கிறது[11]. அதாவது மற்ற காதலித்து வீட்டில் மறுத்ததால், எதிர்த்ததால் வீட்டைவிட்டு ஓடிபோதல், போன்ற விசயங்களாக அலசுகின்றன. பொதுவாக உபதேசம் செய்பவர்கள், கற்பிப்பவர்கள், புத்திமதி சொல்பவர்கள் ஒழுங்காக இருக்க வேண்டும் என்பார்கள். ஆனால், “தி இந்து” ஆசிரியர்களிடம் எதிர்பார்க்க முடியாது. இங்கு தனிமனித ஒழுக்கத்தை அல்லது அவர்களது சொந்த விசயங்களைக் குறிப்பிடுவது என்பதில்லை, ஆனால், அவ்வாறிருப்பவர்கள் எப்படி ஒட்டு மொத்த சமூதாயத்தின் ஒழுக்கத்தைப் பேண உண்மையில் வேலைசெய்வார்கள் அல்லது எண்ணம் கொள்வார்கள் என்பதுதான் கேள்வி. கமல் ஹஸ்ஸன் போன்ற நடிகர்கள் ஒருவனுக்கு-ஒருத்தி, தாம்பத்தியம், இல்லறம், கற்பு முதலியவற்றைப் பற்றிப் பேசமுடியாது. அதுபோலவே பலதார மணம் புரிந்துௐஒல்லூம் ஆண்-பெண்களிடமும் இவற்றைப் பற்றி பேச்ச முடியாது. அந்நிலையில் அவர்களை பல்கலைக்கழகங்களில் அழைத்து பட்டம் கொடுத்து, பேசவைத்தால், மாணவ-மாணவியர்களிடம் எப்படி நற்பண்புகள் வளரும் என்று எதிர்பார்க்க முடியும் என்று தெரியவில்லை. “கொன்றால் பாவம், தின்ற்றால் போச்சு” என்ற ரீதியில் தான் இவர்கள் ஆண்-பெண் உறவுகளைப் பற்றி விளக்கம் கொடுப்பார்கள். பல பெண்களை மணந்து கொண்டும், சேர்ந்து வாழ்ந்தும், குழந்தைகளைப் பெற்றுக் கொண்டும், பிறகு மற்ற பென்களுடன் சேர்ந்து வாழும் மனிதர்கள், “எயிட்ஸ்” போன்ற விளம்பரங்களுக்கு “போஸ்” கொடுப்பது, விளம்பரம்-பிரச்சாரம் செய்வது தான் காலத்தின் கோலமாக இருக்கிறது.

கோதை-மணி- காமம்-சல்பீ

கோதை-மணி- காமம்-சல்பீ

20 வருடங்களுக்குப் பிறகு, தந்தைக்கு 38, தாயுக்கு 47, தனக்கு 20 என்று வயதிருந்தால் பரவாயில்லையா?: இப்பொழுதக்கு கடத்தல், சட்டமீறி அடைத்துவைத்தல், சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தல் போன்ற குற்றங்கள் இவற்றைட் தடுக்கும் சட்டத்தின் கீழ் [kidnapping, wrongful confinement and Protection of Children from Sexual Offences (POCSO) Act] நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.  அஞ்சலி சிங் போன்றோர் சட்டமீறலை சட்டமுறையாக்க, பையனுக்கு 18 வயதானதும் திருமணம் செய்து கொள்கிறேன் என்றாள். பையனுக்கு 18 வயதானால், தனக்கு 27 வயதாகுமே என்று யோசித்தாளா என்று தெரியவில்லை. ஒருவேளை 27 வயது ஆண், 18 வயது பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் போது, 27 வயது பெண், 18 வயது ஆணை திருமணம் செய்து கொள்ளக்கூடாதா என்று கேள்வி கேட்கலாம்.  ஆனால், பிறகு குழந்தை பிறந்து, 20 வருடங்களுக்குப் பிறகு, தந்தைக்கு 38, தாயுக்கு 47, தனக்கு 20 என்று வயதிருந்தால் பரவாயில்லையா? ஒருவேளை 20 வயதான மகள், 38 வயதான ஆணை திருமணம் செய்து கொண்டு குழந்தையைப் பெற்றுக் கொண்டால், அக்குழந்தையின் தந்தை மற்றும் தாத்தா இருவர்களுக்கு ஒரே வயது இருக்குமே? அக்குழந்தை வளரும் போது, மனநிலை எவ்வாறு இருக்கும்?

வேதபிரகாஷ்

© 12-04-2015

[1] http://www.dailythanthi.com/News/State/2015/04/11141306/10class-student-love-Teacher-with-the-flow.vpf

[2] http://www.newindianexpress.com/states/tamil_nadu/Teacher-Elopes-with-Minor-Boy/2015/04/11/article2758555.ece

[3] http://www.dnaindia.com/mumbai/report-teacher-who-eloped-with-student-traced-to-bangalore-arrested-1967981

[4] http://www.mumbaimirror.com/mumbai/crime/FB-posts-lead-to-arrest-of-teacher-25-who-eloped-with-her-teen-student/articleshow/31687961.cms

[5] http://timesofap.com/politics/teacher-plans-to-marry-student-after-he-turns-adult-mumbai-police.html

[6] http://daily.bhaskar.com/news/EDU-a-45-year-old-teacher-elopes-with-an-18-year-old-student-4196029-PHO.html

[7] http://archive.indianexpress.com/news/bail-denied-to-teacher-who–eloped–with-minor-boy/940738/

[8] Two teachers eloped with two minor students and married against the wishes of their parents.This incident, which sent shockwaves among parents of the schoolchildren, took place at Yerrabalem village in Mangalagiri rural mandal, a few km away from Vijayawada.The teachers, T. Mounika and P. Lakshmi Tirupatha-mma, took away minor twins, both students of Class VIII in a private school, to a secret location in Vijayawada where they married them.“The boys are minor. The teachers are in their early 20s. They left the school a few months ago after the management pulled them up for moving with the students. One of them is now working as a computer operator, and another is pursuing higher education. We had to do a lot of counselling to convince the teachers and the boys,” said P. Annapoorna Reddy, assistant superintendent of police, Mangalagiri.Though the police succeeded in handing over the minor boys to their parents, the teachers remained stubborn arguing that they would wait till the boys turn majors, and would marry them then.The teachers were let off, though a case has been registered against them. The school management, however, is silent on the whole affair.

[9] http://www.ndtv.com/cities/class-10-student-elopes-with-teacher-in-andhra-411244

[10] http://indiatoday.intoday.in/story/udaipur-teacher-elope-with-her-minor-student/1/106940.html

[11] http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/elopement-a-major-law-and-order-problem/article4819305.ece

பத்மா முதலியார், நாடார் மரத்தொட்டி, நாயர் டீ ஸ்டால், செட்டியார் மெஸ், முதலியார் கடை, தேவர் ஹோடல், ஐயங்கார் பேக்கரி, ஹலால் மாமிசக் கடை, பிராமணாள் கபே!

ஒக்ரோபர் 24, 2012

பத்மா முதலியார், நாடார் மரத்தொட்டி, நாயர் டீ ஸ்டால், செட்டியார் மெஸ், முதலியார் கடை, தேவர் ஹோடல், ஐயங்கார் பேக்கரி, ஹலால் மாமிசக் கடை, பிராமணாள் கபே!

ஜாதிகளை ஒழிப்போம் என்று சாதிகளைப் பெருக்கிய திராவிடத்துவ ஞானிகள்: ஜாதியில்லை என்று சொல்லிக்கொண்டு சாதிகளைப் பெருக்கிக் காட்டிப் பட்டியல்களை நீட்டிக் கொண்டிருப்பது திராவிடத்துவத்தில் தான்! இதனை திராவிடத்துவவாதிகள் மாபெரும் சாதனையென்றும் பறைச்சாற்றிக் கொண்டிருக்கிறார்கள்[1]. ஜாதிகளை ஒழிக்க அம்பேத்கார் பாடுபட்டார், ஆனால், அவர் பெயரைச் சொல்லிக் கொண்டே சாதித்துவத்தையும் வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது பெரியார் பெயரை வைத்துக் கொண்டு திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், பெரியார் பாசறை, என்று பற்பல இயக்கங்கள் இயங்கிக் கொண்டு வருகின்றன. இவற்றில் பெரும்பாலும் ஜாதி-எதிர்ப்பு என்ற பெயரில் அப்பாவி பிராமணர்களைத் தாக்கி வருகின்றனர்.

ஜாதி-எதிர்ப்புப் போர்வையில் பிராமணர்கள் தாக்கப்படுவது: பழைய மாம்பலத்தில் அயோத்தியா மண்டபத்தின் வாசலில் இரு பிராமணர்களைத் தாக்கி, கத்தியால் வெட்டியதை நினைவில் கொள்ள வேண்டும். பூணூலை அறுக்கிறேன் என்று நூற்றுக் கணக்கான பிராமணர்கள் தாக்கப் பட்டிருக்கிறார்கள். அதில் “தி ஹிந்துவை”ச் சேர்ந்த கணபதி என்பவரும் அடக்கம். சம்பந்தமே இல்லாத ஒரு ராகவேந்திரர் மடத்தில் நுழைந்து விக்கிரங்களை உடைத்து, அசிங்கம் செய்த போது அங்கிருந்த ஒரு பிராமணர் அழுது புலம்பியதை நாளேடுகளில் பார்த்திருக்கலாம். இப்படி பிராமணர்கள் என்றாலே கிண்டல் செய்வது, அவதூறு பேசுவது, கொச்சையாக வார்த்தைகளை வீசுவது முதலியன பொது இடங்களிலிருந்து, பத்திரிக்கைகள், சினிமாக்கள், ஊடகங்களில் அதிகமாகவே இருந்து வருகின்றன. இபோழுது கூட, சின்மயி ஸ்ரீபாத என்ற தமிழ் சினிமா பாடகி அத்தகைய தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். கைது செய்யப்பட்டப் பிறகும், குற்றவாளிகள் சமரசம் செய்து கொள் என்று மிரட்டி வருகின்றனர்.

பிராமணாள்கஃபேயைத் தொடங்கிய கிருஷ்ண ஐயரும் கிருத்துவப் பிரசங்கம் செய்யும் மணி ஐயரும்: ஸ்ரீரங்கத்தில் கிருஷ்ண அய்யர் என்பவர் பிராமணாள் கஃபே என்ற ஹோட்டலை நடத்தி வருகிறார்.  ஸ்ரீரங்கத்தில் 34/24, பாவை டவர்ஸ், ஈ.வி.எஸ். ரோட் என்னும் முகவரியில் கிருஷ்ணன் என்பவர்  நடத்தி வரும் ” ஸ்ரீ கிருஷ்ணையர்  ஹோட்டல்  பாரம்பரிய பிராமணாள் கபே “என்னும் பெயரில்  6 மாதங்களாக நடைபெறுகிறது[2]. இதற்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் பலத்த எதிர்ப்பை தெரிவித்து போராட்டங்கள் நடத்தினர் என 2012 அக்டோபர் 12ம் தேதி நக்கீரன் இதழில் செய்தி வெளியானது.  இந்த நிலையில் பெரியார் காலத்தில் அவரால் போராடி மூடப்பட்ட “பிராமணாள் கஃபே” தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா தொகுதியான ஸ்ரீரங்கத்தில் திடீரென்று முளைத்திருப்பது திராவிடர் கழகத்தில் உள்ளவர்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது[3] என்றும், இதனால் அந்த ஹோட்டல் பெயரை அழிக்கும் போராட்டம் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடைபெறும் என்றும், அந்த இயக்கத்தின் தலைவர் ஆனூர் ஜெகதீசன் அறிவித்திருந்தார். ஆனால், அந்த “முரளி கபே”விற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்று தெரிந்ததே.
பிராமணாள் ஓட்டல் பெயர் அழிப்பு போராட்டம்: தந்தை பெரியார் திராவிடர் கழகம் சனிக்கிழமை காலை 10 மணிக்கு திருவரங்கம் பேருந்து நிலையம் அருகில் “பிராமணாள் ஓட்டல் பெயர் அழிப்பு போராட்டம்” நடத்துவோம் என்று இரண்டு பக்க பிட்நோட்டீஸ் கொடுத்தது. இதன்படி இன்று (20.10.2012) காலை 10 மணிக்கு ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பிருந்து ஊர்வலகமாக புறப்பட்டனர் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர். இதில் போலீசாருக்கும், ஊர்வலத்தில் வந்தவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து 150 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றும், பிராமணாள் கஃபே பெயரை நீக்காமல் விடமாட்டோம் என்றும் கோவை ராமகிருஷ்ணன் கைது செய்யப்படும் முன் செய்தியாளர்களிடம் கூறினார்[4].

வர்க்கப் போராட்டமா, ஆரிய-திராவிட[5] போராட்டமா?: ஸ்ரீரங்கத்தில் ஒரு பார்ப்பனர், “பிராமணாள் உணவு விடுதி” என்ற பெயரில் ஓட்டல் நடத்தி வருவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆறு மாதங்களுக்கு முன்பு காவல்துறையிடம் கழக சார்பில் ஒரு பெரும் பகுதி சமுதாயத்தை ‘சூத்திரர்’ என்று இழிவுபடுத்தும் இந்த ‘பிராமணாள்’ பெயரை அகற்ற வேண்டும் என்று புகார் தரப்பட்டது. ஆனாலும், ஓட்டல் நடத்தும் பார்ப்பனர், தனக்கு ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி போன்ற அமைப்புகள் ஆதரவாக இருப்பதாக ஆணவத்துடன் பேசி வருகிறார். முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொகுதியாக இருப்பதால் முதல்வர் பார்ப்பனர் என்ற அடிப்படையில் தமக்கு அரசு அதிகாரத்தின் ஆதரவு இருக்கும் என்ற இறுமாப்பில், ‘பிராமணாள்’பெயர்ப் பலகையை அகற்ற முடியாது என்று பிடிவாதம் பிடிக்கிறார். ‘தேவர்’, ‘நாயுடு’ என்ற பெயரில் ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள் இருப்பதை இந்தப் பார்ப்பனர் சுட்டிக் காட்டுகிறார்[6]. இவை சாதிப் பெயர்கள்; இந்தப் பெயர்களுக்கும் தடைப் போட வேண்டும் என்பதே நமது கருத்து. பெரியார் நூற்றாண்டு விழாவின்போது முதல்வர் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் சாலைகளுக்கு இருந்த சாதிப் பெயர்களை முழுமையாக அரசு ஆணையின் பேரில் நீக்கப் பட்டதை நினைவுபடுத்துகிறோம்.

வர்ணத்தை ஆதரித்த காந்தியும், ஜாதிகளை எதிர்த்த பெரியாரும், சாதிகளை பெருக்கி வளர்க்கும் திராவிடர்களும்: வர்ணம் என்பது மனுஸ்மிருதியில் சொல்லப்பட்டது, மஹாத்மா காந்தி ஆதரித்தது. ஆனால், முதலியார், செட்டியார், நாயக்கர், நாயர் என்று சாதிகளை தங்களது தலைவர்களுடன் அடையாளம் காட்டிக் கொண்டு அரசியலில் லாபத்தை ஈட்டியது திராவிடக் கட்சிகள். “அண்ணாதுரை முதலியார்” என்று போஸ்டர்களை ஒட்டியதை திராவிடர்கள் இப்பொழுது மறந்திருக்கலாம். இருப்பினும் அவர்கள் வாதிப்பது இவ்வாறாக உள்ளது, “ஆனால், இப்பொழுதோ, ‘பிராமணாள்’ என்பது ஒரு குறிப்பிட்ட சாதிப் பிரிவினரைக் குறிக்கும் சொல் அல்ல. மாறாக, ‘மனு சாஸ்திரம்’ கூறும் நான்கு வர்ணப் பிரிவில் மேலானவர்கள் ‘பிரம்மா’வால் படைக்கப்பட்டவர்கள் என்று கூறப்படும் ‘பிராமணர்’ என்ற பிரிவை அங்கீகரிக்கும் சொல். இந்தப் ‘பெருமை’யை ‘பிராமணர்கள்’ கூறிக் கொண்டால், அதனால் மற்றவர்களுக்கு என்ன சங்கடம் என்ற கேள்வி எழக்கூடும். ஒருவன் தன்னை “பிராமணன்” என்று அடையாளப்படுத்துவதன் வழியாக ஏனைய பெரும் பகுதி உழைக்கும் மக்களை “சூத்திரர்கள்” என்று அறிவிக்கிறார்கள் என்பதுதான், இதில் அடங்கியுள்ள முக்கியப் பிரச்சினை. “வறுமைக் கோட்டுக்குக் கீழானவர்கள்” என்று அரசு, ஒரு புள்ளி விவரம் எடுக்கிறது என்றால், வறுமைக் கோட்டுக்கு மேலானவர்கள் இருக்கிறார்கள் என்பது எப்படி அர்த்தமாகிறதோ அதே போன்றுதான் இதுவும். அரசு கூட மக்கள் தொகையை சாதி வாரியாகக் கணக்கிடுகிறது. அது வேறு. ஆனால், அரசாங்கமே ‘பிராமணர்’, ‘சூத்திரர்’ என்ற வர்ணத்தின் அடிப்படையில் கணக்கிடுவது இல்லை. காரணம், ‘பிராமணன்’, ‘சூத்திரன்’ என்ற வர்ண பேதம் பெரும்பான்மை மக்களான சூத்திரர்களை “பார்ப்பனர்களின் தேவடியாள் மக்கள்” என்று பறைசாற்றுகிறது“.

மனுவைத் திரித்துக் கூறும் திராவிட சித்தாந்திகள்[7]: திராவிட சித்தாந்திகள் இக்காலத்திலும், இப்படி மனுவைத் திரித்துக் கூறி விளக்கம் அளித்து துவேஷத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். ‘மனு சாஸ்திரம்’ என்ன கூறுகிறது?

  • “அந்த பிரம்மாவானவர் இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காக தன் முகம், தோள், தொடை, பாதம் இவைகளிலிருந்து உண்டான பிராமண, ஷத்திரிய, வைசிய, சூத்திர வர்ணத்தாருக்கு இம்மைக்கும் மறுமைக்கும் உரிய உபயோகமான கருமங்களைத் (செயல்களை) தனித்தனியாகப் பகுத்தார். (அத்தியாயம் 1; சுலோகம் 85). [இப்படி குறிப்பிட்டிருந்தாலும் அவ்வாறில்லை என்பது வேடிக்கை – இந்த சுலோகத்தில் கிரேத, திரேத, துவாபர மற்றும் கலி யுகங்களில் என்ன கடமைகளை செய்ய வேண்டும் என்று கூறுகிறது[8]. குணங்கள் எப்படி மாறுபடும் என்று கூறுகிறது[9].]
  • பிராமனன் முதல் வர்ணத்தான் ஆனதாலும் பிரம்மாவின் உயர்ந்த இடத்தில் (முகத்தில்) பிறந்ததானாலும் இந்த உலகத்தில் உண்டாயிருக்கிற சகல வருணத்தாருடைய பொருள்களையும் தானம் வாங்க அவனே பிரபுவாகிறான். (மனு. அத்தியாயம் 1 – சுலோகம் 100). [பிரம்மா முதலில் பிராமணர்களைப் படைத்ததால் உலகத்தில் உள்ளவற்றை அவர்கள் பெறத் தகுதியானவர்கள் ஆகிறார்கள்.[10] பிறகு சத்திரியர், வைசியர், சூத்திரர் படைக்கப் பட்டவுடன் அவர்களும் அவற்றைப் பெறத் தகுதியானவர்கள் ஆகிறார்கள்].

மனு தர்ம அடிப்படையில், ‘பிராமணாள் கபே’ என்று ஒரு ஓட்டலுக்கு பெயர் சூட்டப்படுகிறது என்றால், அதன் பொருள் – ஓட்டல் நடத்தும் அந்த உரிமையாளன், ‘நான் பிரம்மாவின் முகத்திலிருந்து பிறந்தவன். இந்த ஓட்டலுக்கு வந்து காசு கொடுத்து சாப்பிட்டாலும் பிராமணரல்லாதவர்கள் என்றால், அவர்கள், எனது பார்வையில் ‘சூத்திரர்’கள் எனது அடிமைகள்.

இல்லாத அத்தியாயத்திலிருந்து திரித்துக் கூறுவது: மனுதர்மத்தின் 18வது அத்தியாயம் 122வது சுலோகத்தின்படி என்னுடைய ஓட்டலுக்கு காசு கொடுத்து சாப்பிட வரும் சூத்திரர்கள், நான் ஏற்றுள்ள தர்மப்படி என்னை வணங்க வேண்டியவர்கள். அதே சுலோகத்தின்படி எனது ஓட்டலுக்கு சாப்பிட வருவதே அவர்களுக்கு கிடைத்த பெரும் பாக்கியம். [மனு ஸ்மிருதியில் இருப்பதே 12 அத்தியாயங்கள் தாம், அப்படியிருக்கும் போது 18ம் அத்தியாயம் எப்படி வருகிறது என்று தெரியவில்லை[11]].

நான் ‘பிராமணரல்லாத’ கீழ் வர்ணக்காரர்களான சூத்திரர்களை மனுதர்மம் அத்தியாம் 8 – சுலோகம் 122-ன்படி கீழ்க்கண்டவாறுஅறிவிக்கிறேன்.

• போரில் புறமுதுகிட்டு ஓடிவந்த கோழை.

• இவன் என்னிடம் பக்தி கொண்டு தொண்டு செய்ய வேண்டியவன்.

• இவன் எனது விபச்சாரியின் மகன்.

• இவன் என்னால் விலைக்கு வாங்கப்பட்டவன்.

• இவன் தலை தலைமுறையாக எனது அடிமையாக இருந்து வருகிறவன்.

இதைத்தான் திருவரங்கத்தில் ஓட்டல் நடத்தும் பார்ப்பனர், தனது விளம்பரப் பலகையில் பொறித்து வைத்துள்ளார்.

வாடிக்கையாளர்கள் விற்பனைக்காக வசதிக்காக நடத்தப்படுகிற ஒரு வர்த்தக நிறுவனம் தன்னிடம் வாடிக்கையாளர்களாக சாப்பிட வருகிற பெரும்பான்மை மக்களையும் சமுதாயத்தில் உழைக்கும் பெரும்பான்மை மக்களையும்

ஏ, தேவடியாள் மகனே!

ஏ, அடிமையே!

ஏ, புறமுதுகிட்டு ஓடிய கோழையே!

ஏ, என்னை அண்டி வாழக்கூடிய இழிப் பிறவியே!

வா, வா, வந்து காசு கொடுத்துவிட்டு சாப்பிட்டுப் போ” என்று பகிரங்கமாக அறைகூவல் விடுப்பதை பக்தித் தமிழர்களே, நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணி, பா.ஜ.கவிலுள்ள பார்ப்பனரல்லாத தமிழர்களே, இந்த கீழ்மையை சிறுமையை அவமானத்தை அங்கீகரிக்கிறீர்களா?

இது நாத்திக-ஆத்திகப் பிரச்சினையல்ல;

இது இந்துமத எதிர்ப்புப் பிரச்சினையுமல்ல;

நீ, மானமுள்ள, சூடு, சொரணையுள்ள மனிதனாக இருக்கிறாயா என்பதை சோதனைக்குள்ளாக்கும் பிரச்சினை!

ஆமாம், நான் ‘சூத்திரன்’ என்று பச்சை குத்திக் கொள்ளப் போகிறீர்களா?
மானமுள்ள மனிதன் என்று போர்க்கொடி உயர்த்தப் போகிறீர்களா? “கீற்றில்” இதை அப்படியே போட்டிருப்பதும் வேடிக்கைத்தான்[12]. இப்படி “திராவிடர்கள்” தான் கலாட்டா செய்கிறார்கள் என்றால், கிருத்துவர்களும் உள்ளே நுழைந்துள்ளனர். தெய்வநாயகம் என்ற கிருத்துவர் “பிரமணாள் கபே இப்பொழுது திறக்கப்பட்டிருப்பது ஏன்?” என்ற தலைப்பில் ஆறுப்பக்க வண்ண பிட்நோட்டீஸ் விநியோகம் செய்துள்ளார்.

கிருத்துவர்களுக்கு திருவரங்கத்தில் என்ன வேலை?: “திராவிடர்கள்” என்று சொல்லிக் கொண்டு, “பெரியார்” பெயரை உபயோகப்படுத்திக் கொண்டு, வைகோக் கட்சிக் கொடியை தலைகீழாக வைத்துக் கொண்டு கலாட்டா செய்யும் வேலையில், இந்து சாமியார் போல அல்லது நித்யானந்தா போல, தெய்வநாயகம் என்ற குழப்பவாதி, கிருத்துவ வெறியன், இந்த குட்டையில் மீன் பிடிக்க வந்துள்ளது வியப்பாக உள்ளது. “பிரமணாள் கபே இப்பொழுது திறக்கப்பட்டிருப்பது ஏன்?” என்ற தலைப்பில் ஆறுப்பக்க வண்ண பிட்நோட்டீஸ் விநியோகம் செய்துள்ளார். இப்படி தருணம் வரும் என்று முன்னமே அச்சிட்டு தயாராக வைத்திருக்கிறார் போலும்! கிருத்துவ பிஷப்புகள், பாதிரிகள், பாஸ்டர்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் கன்னியாஸ்திரீக்களையும், சிறுமிகள், சிறுவர்களை பாலியல் ரீதியில், வன்புணர்ச்சியில் ஈடுபடுத்தி, குரூரமாக கொடுமைப் படுத்தி வரும் வேளையில், அவர்களை விடுத்து இந்த ஆல் எதற்கு ஸ்ரீரங்கத்தில் சுற்றி வர வேண்டும்? அந்த பிட்நோட்டீஸைப் படித்துப் பார்த்தால், அந்த “தாமஸ் கட்டுக்கதை”யை விட படு அபத்தமாக இருக்கிறது. “தமிழ்” பெயரை வைத்துக் கொண்டு இந்த ஆள் செய்யும் கலாட்டாவில் பல இந்துக்களும் ஏமாந்துள்ளனர்[13]. நக்கிரனின் “மாட்டிறைச்சி மாமி நான்” என்பதற்கும் இதற்கும் சம்பந்தம் உள்ளது என்று தெரிகிறது[14].

வேதபிரகாஷ்

24-10-2012


[1] நேற்றுக் கூட 23-10-2012, அண்ணாதுரை ஆட்சிக்காலத்தில் இருந்த முன்னாள் சட்டமந்திரி, ஒரு டிவி செனலில் கேள்வி கேட்டபோது, பெருமையாக விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார்.

[3] பல ஆண்டுகளாக ஓட்டல் தொழிலை நடத்தி வருவதாக அவர் கூறுகிறார். ஸ்ரீ கிருஷ்ணய்யர் என்ற பெயரில் லால்குடி, காந்தி மார்க்கெட் போன்ற இடங்களில் ஓட்டல் வைத்துள்ளாராம்.

http://www.vikatan.com/juniorvikatan/Sensation/25513-pramanal-hotel-srirangam-r.html#cmt241

[5] கி. வீரமணி ஜெயலலிதா ஆட்சிற்கு வந்தபோது, “ஆரிய-திராவிட போராட்டம் தொடர்கிறது” என்று ஒரு குறும்புத்தகத்தை வெளியிட்டது நினைவு கூறவேண்டும். பிறகு ஜெயலலிதா லட்சங்களைக் கொடுத்தவுடன் அமைதியாகி விட்டார்.

[6] ரெட்டி மெஸ், முனியாண்டி விலாஸ், கோனார் மெஸ், செட்டி நாடு ஹோட்டல், நாயர் டீக்கடை, நாடார் மரத்தொட்டி, தேவர் ஹோட்டல், ஆச்சி மசாலா முதலியவை இருப்பது உண்மைதான்.

[8] A. C. Burnell, The Ordinances of Manu, Oriental Books, New Delhi, 1971, p.12

[9]  R. N. Sharma, Manusmriti (translation of M. N. Dutt – Sanskrit verses with translation), Chaukhamba Sanskrit Pratishthan, New Delhi, 1998, p.30

[10] R. N. Sharma, Manusmriti (translation of M. N. Dutt – Sanskrit verses with translation), Chaukhamba Sanskrit Pratishthan, New Delhi, 1998, p.64-65.

[11] இப்படி இவர்களாகவே எதையாவது மொழிபெயர்த்துக் கொண்டு அல்லது மற்றவர்கள் சொல்லியதைக் கேட்டுக் கொண்டு இப்படி திரித்து எழுதி வருவது வழக்கமாகவே இருந்து வருகிறது.

[13] “உடையும் இந்தியா” என்ற புத்தகத்தில் தேவையில்லாமல், இந்த ஆளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, இந்துக்கள் எழுதியிருப்பது ஒரு தகவல். அது மட்டுமல்லாது, முன்பு, தருமபுர ஆதீனத்தில் இந்த ஆளுக்கு கூட்டத்தை நடத்தி, அதில் இவர் சொன்னதெல்லாம் தவறு என்று எடுத்துக் காட்டியப்பிறகுக் கூட, அருணை வடிவேலு முதலியார் மறுப்பு நூல் எழுதிய பிறகும் கூட, சில சைவர்கள் இவருக்கு ஆதரவு தெரிவித்து வருவது வேடிக்கையாக இருக்கிறது.

[14]முதலமைச்சர் ஜெயலலிதா, மாட்டுக்கறி சாப்பிட்டார் என்று ‘நக்கீரன்’ இதழில் வெளியான செய்திக்காக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ‘நக்கீரனுக்கு’ எதிராக ஆளும் கட்சியைச் சார்ந்தவர்கள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு வன்முறையில் இறங்கியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. இந்தத் தாக்குதல் ‘நக்கீரனுக்கு’ எதிரானதாக மட்டும் நாம் கருதவில்லை. ‘மாட்டுக்கறி’ சாப்பிடும் கோடானுகோடி மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் என்றே நாம் கருத வேண்டியிருக்கிறது.

http://www.periyarthalam.com/2012/01/13/%E0%AE%9C%E0%AF%86-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/

சமூக விரோத செயல்களுக்காக குழந்தைகள் கடத்தல்: சொல்கிறார் காங். எம்.பி!

ஓகஸ்ட் 15, 2011


சமூக விரோத செயல்களுக்காக குழந்தைகள் கடத்தல்: சொல்கிறார் காங். எம்.பி.,

 

உண்மையிலேயே, இவர் இந்த பிரச்சினையை எழுப்பியுள்ளாரா அல்லது மற்ற பிரச்சினைகளிலிருந்து கவனத்தைத் திருப்ப எழுப்பியுள்ளாரா என்பது தெரியவில்லை.

இருப்பினும், தமிழகத்தைப்  பொறுத்த மட்டிலுமே[1], அதிலும் சென்னையிலேயே பலமுறை வெளிநாட்டு ஃபிடோஃபைல் எனப்படும் செக்ஸ்-குற்றவாளிகள், தப்பி சுற்றி வரும் பாலியல் குற்றவாளிகள் என பலதரப்பட்டவர்கள் இன்டர்போல் எச்சரிக்கை மூலம் எச்சரிக்கப் பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இப்பிரச்சினை அதிகமாக இருப்பதாலும், குறிப்பாக கிருத்துவ மிஷனரிகள்[2], மேனாட்டவர்கள்[3] இங்கு வந்து பாலியல் குற்றங்களில்[4] ஈடுபட்டு[5], கைதாகி, பலர் தப்பித்து, சிலர் அகப்பட்டு, தண்டனைப் பெற்று, சிறையில் அடைக்கப்பட்டும் உள்ளனர்[6] என்பதை கவனித்துக் கொள்ளவேண்டும். கிருத்துவ மாநாடுகளே இதைப்பற்றி சென்னையிலேயே விவாதித்துள்ளன[7].

தமிழகத்திலேயே குழந்தைகள் கடத்தல், விற்றல், பாலியல் குற்றங்களில் ஈடுபடுத்துவது என்ற காரியங்கள் கடந்த 30-40 ஆண்டுகளில் அதிகமாகிக் கொண்டு வருகின்றன. அப்பொழுது இவ்விவகாரங்களை ஊடகங்கள் அமுக்கி வாசித்துக் கொண்டிருந்தன அல்லது சம்பந்தப் பட்டவர்கள் வெளியே வராமல் பார்த்துக் கொண்டனர். இப்பொழுது, ஓரளவிற்கு செய்திகள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன[8]. சமூக விரோத செயல்களுக்காக ஆண்டுதோறும் 44 ஆயிரம் குழந்தைகள் கடத்தப்படுவதாக தெரிவித்துள்ளார் நெல்லை தொகுதியின் எம்பி ராமசுப்பு[9]. இப்படி முக்கியமான பிரச்சினையை எழுப்பியதற்காக இவருக்கு நன்றி சொல்லவேண்டும்.

 

பாராளுமன்ற கூட்டத்தொடரின் பூஜ்ஜிய நேரத்தில் பேசியதாக தெரிவித்துள்ள ராமசுப்பு, பல மாநிலங்களில் ஆண்டுதோறும் கடத்தப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை மனித உரிமை ஆணையத்தின் புள்ளிவிவரப்படி 44 ஆயிரம் என்கிற கணக்கு தெரிய வருகிறது. இதுபோன்று கடத்தப்படும் குழந்தைகள் சமூக விரோத செயல்களில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்[10]. மருத்துவமனைகளில் இருந்து கடத்தப்படும் குழந்தைகள் பலர், குழந்தைகள் இல்லாத பெற்றோர்களுக்கு விற்கப்படுகின்றனர்[11]. இன்னும் சிலர் பிச்சையெடுக்கும தொழிலிலும் பணத்திற்காக பாலியல் தொழில் நடத்தும் கும்பலிடமும் விற்றுவிடுகின்றனர்[12]. இதுதொடர்பாக காவல்துறை உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. இதுபோன்ற குழந்தைகள் கடத்தும் கும்பல்கள் நாடு முழுவதும் 800 கும்பல்கள் செயல்படுவது பதற வைக்கும் விஷயம். எனவே இதுபோன்ற கடத்தலில் ஈடுபடும் கும்பல்களை கைது செய்யவும், குழந்தைகளை காப்பாற்ற வேண்டிய நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் நெல்லை தொகுதியின் எம்பி ராமசுப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரின் பூஜ்ஜிய நேரத்தில் பேசியதாக தெரிவித்துள்ளார்.

 

இந்தியா பாலியல் குற்றங்கள் அரங்கேற தேர்ந்தெடுக்கப்பட்டது போல, அத்தகைய செக்ஸ்-குற்றங்கள் அதிகமாகி வருவதைக் கண்டு, உச்சநீதி மன்றம் கடந்த ஜனவரி 2010ல் எச்சரிதுள்ளது[13]. அனாதை இல்லங்கள் நடத்துவதே குழந்தைகளிலிருந்து வளர்த்து அவர்களை செக்ஸில் ஈடுபடுத்துவதற்காகத்தான் என்று பலமுறை கிருத்துவர்கள் சிக்கியுள்ளனர்[14]. அபயகேந்திரங்கள் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பதும் வெளிவந்துள்ளது[15]. சென்னையே செக்ஸ் நகரமாகி விடுமா என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது[16].


[5] https://socialterrorism.wordpress.com/2010/05/08/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF/

https://socialterrorism.wordpress.com/2010/04/27/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2/

https://socialterrorism.wordpress.com/2010/03/30/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/

https://socialterrorism.wordpress.com/2010/02/12/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AE%E0%AF%8D-2/

https://socialterrorism.wordpress.com/2010/02/10/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95/

சிறுமியின் நிர்வாணப்படத்தினை இண்டர்நெட்டில் பார்த்த “ரொமான்ஸ்” நீதிபதி கைது!

ஓகஸ்ட் 30, 2010

சிறுமியின் நிர்வாணப்படத்தினை இண்டர்நெட்டில் பார்த்தரொமான்ஸ்நீதிபதி கைது!

பிரபல குற்றவியல் வழக்கறிஞர்: நியூயார்க்கில், சிறுமியின் நிர்வாணப்படத்தினை கம்ப்யூட்டரில் பார்த்துக்கொண்டிருந்த நீதிபதியை  சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்து அவருக்கு தர்ம அடி கொடுத்தனர்[1].  இது குறித்து நியூயார்க் போஸ்ட்  பத்திரிகைய வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்காவில் நியூயார்க்கைச் சேர்ந்த ஜேம்ஸ் கிப்ஸன் என்பவர் தன்னுடைய அலுவலக கம்ப்யூட்டரில் ஏராளமான நிர்வாணப்படங்களை லோடு செய்து வைத்திருந்தார்[2]. இவர் பிரசித்தி பெற்ற குற்றவியல் வழக்கறிஞர் ஆவார். பல கற்பழிப்பாளர்களை ஜெயிலிற்கு அனுப்பியுள்ளார். ஆனால், ஓரு முறை அவர் 14 வயது சிறுமியின் நிர்வாணப்படத்தினை பார்த்துக்கொண்டிருந்ததாக கம்ப்யூட்டர் தடவியல்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்[3].

James_gibbons_headshot

James_gibbons_headshot

“ரோமான்சில்” ஈடுபட்ட வழக்கறிஞர்[4]: 47 வயதான இவர், மற்றொரு ஜீன் எம்ஹோஃப் என்ற 31 வயதான துணை வழக்கறிஞருடன் “ரோமான்சில்” ஈடுபட்டபோது, மற்றவர்கள் ஆச்சரியப்பட்டனர். சில வாரங்களுக்கு முன்பு, ஒரு ஆண்குழந்தையும் பிறந்ததாம்!

Judge James Gibbons

Judge James Gibbons

சட்டங்களை மீறியதால் பதவி விலகல்: அமெரிக்க சட்டவிதிகளின் படி 17 வயதிற்குட்பட்ட இளம் பெண்களின் நிர்வாணப்படத்தினை பார்ப்பதும், இண்டர்நெட்டில் வெளியிடுவதும் குற்றமாகும். இதனால், பல சட்டப்பிரிவுகளை மீறியதற்காகக் குற்றத்தை செய்தவராக உள்ளார், இருப்பினும் கைது செய்யப் படவில்லை. இந்நிலையில் நீதிபதியின் இந்த செயலை கண்டுபிடித்து அவருக்கு தர்ம அடி கொடுத்தனர்.  தற்போது அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்[5]. இவ்வாறு அந்த பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.


[1] தினமலர், சிறுமியின் நிர்வாணப்படத்தினை இண்டர்நெட்டில் பார்த்த நீதிபதி கைது, ஆகஸ்ட் 30, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=73258

[2] http://www.nypost.com/p/news/local/manhattan/judge_pix_called_kid_porn_CjD6zuSc3wfwwJsqUW4uHI

[3] http://www.nydailynews.com/ny_local/2010/08/26/2010-08-26_courthouse_mystery_criminal_court_judge_james_d_gibbons_abruptly_resigns_without.html?obref=obnetwork

[4] Read more: http://www.nydailynews.com/ny_local/2010/08/26/2010-08-26_courthouse_mystery_criminal_court_judge_james_d_gibbons_abruptly_resigns_without.html?obref=obnetwork#ixzz0y6aZQiJJ

[5] http://www.nydailynews.com/ny_local/2010/08/29/2010-08-29_porn_judges_neighbors_say_theyre_still_in_state_of_shock.html

பல இளம் மாணவிகளை கற்பழித்த சலாவுத்தீன் அயூப்: இன்னுமொரு பிரைட்!

ஜூலை 23, 2010

பல இளம் மாணவிகளை கற்பழித்த சலாவுத்தீன் அயூப்: இன்னுமொரு பிரைட்!

எம். எல். பிரைட் என்ற கொடைக்கானல் பள்ளி தாளாளர் எப்படி ஷீபாபால் என்ற பிரின்ஸிபாலின் துணையுடன், பல மாணவிகளை பாலியல் வன்மத்திற்கு உட்படுத்தப்பட்டார்களோ, அதே மாதிரியான நிலை இங்கேயும் காணப்படுகிறது. பெண்களே பெண்களின் சீரழிவிற்கு உடந்தையாகயிருப்பது ஆராய்ச்சிக்குரியதாக உள்ளது.

அது மட்டுமல்லாது, மாணவிகளின் விடுதியில் அறையை வைத்திருந்தது, தனியாக அழைத்தது, ஆபாச படங்களைக் காட்டியது, தொட்டுப்பேசியது, கட்டிப்பிடித்தது…………………….

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: ஷிபாபால் மற்றும் பிரைட் கைது!

http://christianityindia.wordpress.com/2010/07/03/மாணவிகளுக்கு-பாலியல்-தொந/

24-07-2019 (சனிக்கிழமை):முஹமது சலாவுத்தீன் அயூப் தான் 17 வயது மாணவியைக் கற்பழித்ததை ஒப்புக்கொண்டு விட்டதாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.

parkwood school director-மாணவிகளுடன்

parkwood school director-மாணவிகளுடன்

23-07-2019 (வெள்ளிக்கிழமை): நேற்றுவரை தமது சகோதரரை வலுவாக ஆதரித்து வந்த முஹமது சலாவுத்தீன் அயூப்பீன் சகோதரி ஆயிஷா தன்வீர், 23-07-2010 அன்று நடந்த செய்தியாளர்களின் கூட்டத்தில், அயூப் தனது பதவியிலிருந்து விலக்கப்பட்டார் என்று அறிவுத்துள்ளார். இதைத்தவிர, தமது பள்ளியின் பெயரைக் கெடுக்கத்தான், இவ்வாறான செயல்களை செய்யப்படுகிறது என்றெல்லாம் கூட பேசியுள்ளார்.

போலீஸார், ஹைதராபாதில் உள்ள கிளினிக்கில் விசாரித்தபோது, மருத்துவர், அயூப் அந்த பெண்ணை கருக்கலைக்க அழைத்து வந்ததாகவும், ஆனால், மாத்திரிகைகள் கொடுத்ததால், கர்ப்பமடைந்து ஆனால் ஆரம்பநிலையிலேயே கலைந்து விட்டதாகவும், அதனால், தான் சாதாரணமாகத்தான் சிகிச்சையளித்ததாக கூறியுள்ளார்.

முஹமது-அயூப்-கற்பழிக்கப்பட்ட-மாணவி

முஹமது-அயூப்-கற்பழிக்கப்பட்ட-மாணவி

துப்பாக்கி முனையில் மாணவி கற்பழிப்பு: பள்ளி முதல்வர் கைது: துப்பாக்கி முனையில், மாணவியை கற்பழித்த பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டத்திலுள்ள “பார்க் வுட்’ சர்வதேச பள்ளியின் முதல்வர் சலாவுதீன் முகமது அயூப்பை, கற்பழிப்பு புகாரின் அடிப்படையில், ஜூபிலி ஹில்ஸ் போலீசார் கைது செய்துள்ளனர். அந்த பள்ளியில் படிக்கும் 9ம் வகுப்பு மாணவியை, அயூப் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி கற்பழித்ததாக, அந்த மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், நேற்று முன்தினம் அவர் கைது செய்யப்பட்டார்[1].

சலாவுத்தீன்-அயூப்-கைது-மாணவிகள்-கற்பழிப்பு

சலாவுத்தீன்-அயூப்-கைது-மாணவிகள்-கற்பழிப்பு

இது குறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது[2]: தன் பள்ளியில் படிக்கும் 9ம் வகுப்பு மாணவியை, அயூப், ஜூபிலி ஹில்ஸிலுள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று, துப்பாக்கியைக் காட்டி, மிரட்டி கற்பழித்துள்ளார். ஆபாசப் படமும் எடுத்துள்ளார்[3]. இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லக் கூடாதென்று கூறியும், ஆபாசப் படத்தை காட்டி மிரட்டியும், கடந்த ஒரு ஆண்டாக அந்த மாணவி மீது பாலியல் வன்முறைகளை நிகழ்த்தி வந்துள்ளார். கருக்கலைப்பு மாத்திரைகளைத் தனக்குக் கொடுத்தது இல்லாமல், மருத்துவரிடத்திலும் அழைத்துச் சென்றுள்ளதாகக் கூறியுள்ளாள்..

மாணவி-ஹைதரபாத்-மும்பை

மாணவி-ஹைதரபாத்-மும்பை

பிரைட்டின் முறையை விஞ்சிய அயூப்பின் முறை: அயூப் மாணவிகளின் ஹாஸ்டலில் ஒரு தங்கும் அறை வைத்திருந்தான். மார்ச் 10ம் தேதி அந்த மாணவியை அங்கு வருமாறு அழைத்தானாம். மயக்கமருந்து கலந்த பானத்தைக் கொடுத்து மயக்கம் அடைந்தவுடன் அம்மாணவியைக் கெடுத்துள்ளானாம். 17-வயதான அம்மாணவி மயக்கம் தெளிந்ததும், வலியாக இருக்கிறது என்று சொன்னபோது, அயூன், கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்றானாம். 45 நாட்கள் கழித்து அதேமுறையைக் கையாண்டானாம். பிறகு மயக்க மருந்து கொடுக்காமலே கற்பழிக்க முயன்றபோது, அம்மாணவி தடுத்திருக்கிறாள். ஆனால், உன்னையும், உன் சகோதரி மற்றும் சகோதரனையும் கொன்று விடுவேன் என்று மிரட்டி கற்பழித்திருக்கிறான். இதுமாதிரி தன்னை 1520 தடவை கற்பழித்ததாக புகாரில் குறிப்பிட்டுள்ளாள். அதில் இரண்டுமுறை, அயூப் தன்னுடைய இல்லத்திலேயே அழைத்துச் சென்று கற்பழித்திருக்கிறான்.

பெற்றோரிடம் சொல்லிய பிறகு புகார் கொடுக்கப்பட்டது: இது குறித்து, டில்லியிலுள்ள தனது பெற்றோரிடம் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மாணவி கூறியிருக்கிறார். இதனையடுத்து, அவளது பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், பள்ளி முதல்வர் அயூப் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு போலீசார் கூறினர்.

பள்ளி பெண் ஊழியர், அசிரியைகள், மாணவிகள் பட்டபாடு[4]: அந்த பள்ளியின் மாணவிகள் மற்றும் வேலைசெய்வோர் அயூபின் நடத்தைப் பற்றி பலமுறை புகார் கொடுத்துள்ளதாகக் கூறுகிறார்கள். ஏனெனில், அலுவலகத்தில் வேலை செய்வோர் மற்றும் ஆசரியைகள் கூட அயூப்பின் நடத்தையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2003லிருந்து வேலை செய்து வரும் ஒரு பெண் ஊழியர் கூறுவதாவது, “மாணவியர்களிடம் அவை நடந்து கொள்ளும் விதம் எனக்குக்கொஞ்சம்கூட பிடிக்கவில்லை. மாணவிகளிடம் அடிக்கடி சக மாணவர்களிடம் அவர்களுடைய உறவு எப்படியுள்ளது என்று கேள்விகள் எல்லாம் கேட்டிருக்கிறான். வயதுக்கு வர்ம் போது ஏற்படும் உணர்ச்சிகள், அனுபவங்கள் முதலியவற்றை தன்னிடம் விவரிக்கும்படும் கட்டாயப்படுத்துவான். இதையெல்லாம் “ஆலோசனைக் கூறுதல்” என்ற போர்வையில் நடத்திவந்தான். நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் கேட்கவில்லை”. அந்த மாணவியின் கற்பழிப்புப் பற்றி நெடுங்காலமாக கேட்டு வந்துள்ளானாம். அதுமட்டுமல்லாது, அடிக்கடி ஆசிரியைகளை தொந்தரவு செய்வதுடன், அசிங்கமான வார்த்தைகளையும் பிரயோகித்து பேசுவானாம்.

புகார் கூறிய மாணவி மீது நடவடிக்கை – பள்ளீயிலிருந்து நீக்கம்: இதனிடையே, அந்த மாணவிக்கு படிப்பில் போதிய ஆர்வமில்லையென்று கூறி, பள்ளியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என பள்ளி நிர்வாகம் கருத்து தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் பலர் நேற்று அப்பள்ளியின் முன் ரகளை செய்து அலுவலகத்திலுள்ள நாற்காலிகளை உடைத்தனர். இப்பள்ளி மிகவும் பிரபலமானது. கனடா, துபாய் மற்றும் சவுதி அரேபியாவில் இப்பள்ளியின் கிளைகள் உள்ளன.

ஆயிஷா தன்வீர் மாணவிகளைக் குற்றஞ்ச்சாட்டுவது[5]: அயூப்பின் சகோதரி மற்றும் அப்பள்ளியின் மற்றொரு இயக்குனராக இருக்கும் ஆயிஷா தன்வீர் என்ற பெண் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. அம்மாணவி 2009லேயே வகுப்புவாதப் பிரச்சினையை உருவாக்க முயன்றபோது, அப்பள்ளியிலிருந்து நீக்கப்பட்டாள். அவள் அப்பள்ளி மாணவனுடன் உறவு வைத்திருந்ததாகவும், அதனால் அவனை மதம் மாற பிடிவாதம் பிடித்ததாகவும், இதனால் மதப்பிரச்சினை வரும் என்று, குறிப்பாக, அம்மாணவனே புகார் கொடுத்தபோது, பள்ளியிலிருந்து நீக்கப்பட்டாள். மறுபடியும் இந்த வருடம் ஜனவரியில் அந்த பெண்ணின் தந்தை வந்து கெஞ்சியதால், மறுபடியும் அனுமதி வழகினோம்.

ஆதரிக்கும்-ஆயிஷா-தன்வீர்-பள்ளிப்பெண்கள்-கற்பழிப்பு

ஆதரிக்கும்-ஆயிஷா-தன்வீர்-பள்ளிப்பெண்கள்-கற்பழிப்பு

மேலும், அம்மாணவி உயர்ந்த இடத்திலிருந்து வந்துள்ளதால், பள்ளி நிர்வாகம் மறுக்கமுடியாமல் போய்விட்டது என்று ஒரு ஆசிரியை சொல்கிறார். அதனால் அம்மாணவியும் மற்றவர்களிடம் கொஞ்சம் துடுக்காகவே பேசுவாள், “என்னை யாதாவது செய்தால், இந்த பள்ளிக்கே பிரச்சினையை உண்டாக்கி விடுவேன்”, என்பாளாம். அப்பெண்ணின் தந்தை, “பள்ளியின் பெயர் கெட்டுவிடும் என்று அயூப் என்னை மிரட்டுகிறார். அது மட்டுமல்லாது, எனக்கு ஒரு வெற்று-செக்கைக் கொடுத்து அமைதியாக இருக்கும்படியும் மிரட்டியுள்ளார்”, என்கிறார்.


[1] தினமலர், துப்பாக்கி முனையில் மாணவி கற்பழிப்பு: பள்ளி முதல்வர் கைது, ஜூலை 22,2010,  http://www.dinamalar.com/News_Detail.asp?Id=45139

[2] P Hareesh, Parkwood school director molested six more girls, First Published : 23 Jul 2010 04:44:26 AM IST

http://expressbuzz.com/cities/hyderabad/parkwood-school-director-molested-six-more-girls/192246.html

[3] The Hindu, Friday, Jul 23, 2010, http://www.hindu.com/2010/07/23/stories/2010072358310100.htm

[4] Times of India, ‘Parkwood staff, students faced abuse’, TNN, Jul 22, 2010, 11.56pm IST

http://timesofindia.indiatimes.com/city/hyderabad/Parkwood-staff-students-faced-abuse/articleshow/6202912.cms

[5] http://www.mumbaimirror.com/article/2/20100723201007230340093091b362324/Malad-girl-in-Hyderabad-alleges-rape-by-principal.html