Posts Tagged ‘மாணவி’

ஆசிரியர் போர்வையில் காமக்கொடூரன் – பல இளம்பெண்களை-மாணவிகளை சீரழித்த கயவன்!

திசெம்பர் 20, 2016

ஆசிரியர் போர்வையில் காமக்கொடூரன் பல இளம்பெண்களைமாணவிகளை சீரழித்த கயவன்!

tution-centre-rape-sivamar-arrested-deccan-chronicleஇதுவரை, பாதிரிகள் மற்ற காமுகர்கள் இளம்பெண்களை பாலியல் ரீதியில் வன்புணர்ந்த கொடூரங்களைப் படித்து வந்தோம். இப்பொழுது, ஒரு ஆசிரியரே அத்தகைய ஏலையை செய்துள்ளது திகைக்க வைத்தாக உள்ளது. ஆசிரியர் என்ற புனிதத்தையேக் கெடுக்கும் வகையில், அந்த கயவன் ஈடுபட்டுள்ளான். மாணவ-மாணவியர் ஒழுங்காகப் படித்தால், டியூஷன் என்றெல்லாம் செல்ல வேண்டிய அவசியமே இருக்காது. இதுவும், காலத்தின் அலங்கோலமாக இருக்கிறது. இன்று டியூஷன் சென்டர்கள் இத்தகைய மாணவ-மாணவியர்களால் தான் பெருகி வருகிறது. மேலும், அவர்களில் சிலர் வசதியாக இருந்தால், பொழுது போக்கிற்கு வந்து செல்கிறார்கள். டியூஷன் சென்டர்கள், டுடோரியல் காலேஜுகள் முதலியவற்றில் படிக்க வருகிறார்களோ இல்லையோ, காதல் செய்ய வருகிறார்கள் என்று முன்னமே தெரிந்த விசயமாக இருக்கின்றது.

tution-centre-rape-sivaumarமாணவியை ஏமாற்றியது, அனுபவித்தது, கல்யாணம் செய்து கொண்டது: தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டை சேர்ந்த சீனிவாசன் மகன் சிவக்குமார், 27. கடந்த 2012ல் பாலக்கோட்டில் தனலட்சுமி என்ற பெயரில் சிவகுமார்  டியூசன் சென்டர் ஆரம்பித்தார், என்று இப்படி மரியாதையாகத்தான் ஊடகங்கள் குறிபிடுகின்றன. பாலக்கோடு மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப்புற மாணவ, மாணவிகள் டியூசனில் சேர்ந்தனர். அப்போது,  10ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷத்தை சிவகுமார் தொடங்கினார். அந்த மாணவி மயங்கவே, வகுப்பறையிலேயே உல்லாசமாக இருந்து செல்போன் மூலம் வீடியோ பதிவு செய்துள்ளார்[1]. அதை நண்பர் ஈஸ்வரனிடம் காண்பித்தார் எனும்போது, அவனின் குரூரக் குணம் வெளிப்படுகிறது. இதை சொல்லி அந்த மாணவியிடம் தன்னுடைய ஆசைக்கு இணங்குமாறு ஈஸ்வரன் கூற அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதாவது, நிச்சயமாக அந்த கயவர்களின் கூட்டு வெளிப்படுகிறது. அந்த மாணவி புகார் செய்யவே பெற்றோரும், உறவினர்களும், டியூசன் சென்டருக்கு வந்து சிவகுமாரையும், ஈஸ்வரனையும் சரமாரியாக அடித்து உதைத்தனர்.  இதைதொடர்ந்து உறவுக்கார பெண்ணை திருமணம் செய்வதாக கூறி, உல்லாசம் அனுபவித்துவிட்டு மறுத்துள்ளார். அந்த பெண்ணின் பெற்றோர், சிவகுமாரை மிரட்டி  திருமணம் செய்து கொடுத்தனர்[2]. அதாவது, திருமணம் ஆனப் பிறகும், ஒழுங்கில்லாமல் இருந்ததும் தெரிகின்றது.

tution-centre-rape-sivamarகுளிர்பானங்களில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மாணவிகள் மயங்கி விழுந்ததும் அவர்களிடம் உல்லாசம் அனுபவித்து: இவர், தர்மபுரி மற்றும் பாலக்கோட்டில், தளிர் என்ற பெயரில் டியூசன் சென்டர் நடத்தியதோடு, குரூப் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்பு எடுத்து வந்தார். அதாவது, மனைவி, குடும்பத்தினருக்கு தெரியுமா இல்லையா என்று குறிப்பிடவில்லை. இங்கு படிக்கும் மாணவிகளிடம், சிவக்குமார் ஆசைவார்த்தை கூறி ஏமாற்றியுள்ளார். இவரது ஆசை வார்த்தையில் மயங்கிய ஒரு சில மாணவிகளை, சிவக்குமார் பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அதை வீடியோ படம் எடுத்து மிரட்டி, அவர்களுடன் உல்லாசமாக இருந்து வந்தார்[3]. அதாவது, மாணவிகள் அந்த அளவுக்கு சபலத்துடன் இருந்தார்களா என்ற கேள்வியும் எழுகின்றது. இதனால், அலைகின்ற காமுகர்களுக்கு எளிதாக இரையாகின்றானர். மேலும் டியூசன் படிக்க வரும் மாணவிகளில் சிலருக்கு தனியாக அதிக நேரம் பாடம் சொல்லி கொடுப்பது போல நாடகம் ஆடியுள்ளார் சிவக்குமார். அப்போது சில மாணவிகளுக்கு குளிர்பானங்களில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மாணவிகள் மயங்கி விழுந்ததும் அவர்களிடம் உல்லாசம் அனுபவித்துள்ளார்[4]. டெக்கான் குரோனிகல் நாளிதழ் மட்டும் தான், இந்த கயவர்கள் கற்பழித்ததால் கைது செய்யப்பட்டனர் என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது[5].

tution-centre-rape-sivamar-arrestedஒரு மாணவி துணிந்து புகார் கொடுக்க கைதான காமக்கொடூரன்: மேலும், சில மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவும் கொடுத்துள்ளார்[6]. “பாலியல் ரீதியில் தாக்கியதற்காக, ஒரு மனிதன் கைது” என்று தி இந்து செய்தி வெளியிட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது[7]. பல மாணவிகள் பலிகடா ஆனாலும், ஒரு மாணவி துணிந்து புகார் கொடுக்க முடிவு செய்தாள். எனவே, இதுகுறித்து, 17 வயது மாணவி ஒருவர் 04-12-2016 அன்று புகார் கொடுத்தார். கொடுத்த புகாரின் படி[8], பாலக்கோடு இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் விசாரித்து, சிவக்குமாரை போஸ்கோ சட்டத்தில் கைது செய்தார்[9]. மேலும், அவரிடம் இருந்து, மாணவிகளின் ஆபாச படம் இருந்த மொபைல்போனையும் பறிமுதல் செய்தார்[10]. விசாரணையில், பாலியல் பலாத்காரம் செய்த மாணவிகளின் வீடியோக்களை, டியூசன் சென்டரில் பணியாற்றும், தன் நண்பர்கள் ஈஸ்வரன், மற்றொரு சிவக்குமார் மற்றும் மற்றொரு நண்பருக்கு, சிவக்குமார் காட்டியுள்ளார். இவ்வாறு ஆதாரங்களைத் திரட்டினர் போலீஸார்.

tution-centre-sexபாலியல் ரீதியில் பாதிக்கப்பட்டது எத்தனை மாணவிகள்?: ஊடகங்களுக்கு இத்தகைய பிரச்சினைகளை செய்தியாக வெளியிடும்போது, பொறுப்போடு செயல்பட வேண்டும். ஏதோ மற்றவர்களை ஈர்க்கும் வகையில், தலைப்பிட்டு செய்திகளாக வெளியிடுவதை விட, படிப்பவர்களுக்கு நீதி புகட்டும் முறையில், அவற்றை வெளியிட வேண்டும். இதையடுத்து, சிவகுமார், ஈஸ்வரன், மற்றொரு சிவக்குமார் நான்கு பேரும் சேர்ந்து, 20க்கும் மேற்பட்ட மாணவிகளை மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. 25க்கும் மேற்பட்ட மாணவிகளை அவர்கள் சீரழித்ததுடன், அவற்றை வீடியோவாக பதிவு செய்து ரசித்தும், நண்பர்களுக்கு அந்த வீடியோவை போட்டு காண்பித்தும் தங்களுடைய கொடூரத்தை அரங்கேற்றியுள்ளனர், என்று தினகரன் கூறுகிறது. இந்தியன் எக்ஸ்பிரஸ் 30 என்று கூறுகிறது[11]. எத்தனை பேர் பாதித்திருந்தாலும், அது ஈடுகொடுக்க முடியாத இழப்பாகும். பெண்மையை மதிக்கத் தெரியாத அந்த கயவர்கள் தூக்கில் ஓட்டால் தான், மற்ற காமக்கொடூரர்களுக்கு உரிய பாடமாக இருக்கும். இதையடுத்து, தலைமறைவாக இருந்த ஈஸ்வரன், 26, மற்றொரு சிவக்குமார், 27, ஆகியோரை போலீசார் 16-12-2016 அன்று கைது செய்து[12], பாலியல் பலாத்காரம் செய்த வீடியோ காட்சி அடங்கிய மொபைல்போன்களை, அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்தனர்[13].

tution-centre-rape-sivamar-arrested-vedaprakashடியூஷன் சென்டர்கள், டுடோரியல் காலேஜுகள் கண்காணிக்கப் படவேண்டியுள்ளது: இதை கூட்டாகவே செய்திருப்பது, ஆசிரியன், வீடியோ கடைக்காரன், வனது நண்பன் என்று இருப்பது தெளிவு படுத்துகிறது. மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மற்றொருவரை போலீசார் தேடிவருகின்றனர். மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்துள்ளதால், இங்கு படித்த மாணவிகள் மட்டுமன்றி, அவர்களின் பெற்றோரும் பீதியடைந்துள்ளனர்[14]. நியாயமான விசயம் என்றாலும், தங்களது பெண்களைக் கவனிக்காமல், கண்காணிக்காமல் அப்படி விட்டது அவர்களது பொறுப்பற்றத் தன்மையினையை வெளிப்படுத்துகிறது. இந்த வழக்கு தொடர்பாக, சிவக்குமாரிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால், அவரை, போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தியாவில் பலப் பகுதிகளில் இத்தகைய குற்றங்கள் நடந்து வருவதால், டியூஷன் சென்டர்கள், டுடோரியல் காலேஜுகள் கண்காணிக்கப்படவேண்டியுள்ளது[15]. ஏனெனில், அத்தகைய பாலியல் குற்றங்களில் ஒரு மாதிரி வெளிப்படுகிறது[16].

© வேதபிரகாஷ்

20-12-2016

[1] தினகரன், தர்மபுரி டியூசன் சென்டர் லீலைகள் அம்பலம் மாணவிகளை பலாத்காரம் செய்ததை வீடியோ எடுத்த ஆசிரியர், Date: 2016-12-18@ 00:24:14

[2] http://www.dinakaran.com/News_detail.asp?Nid=266408

[3] http://www.dinamalar.com/news_detail.asp?id=1670161

[4] தமிழ்.ஒன்.இந்தியா, குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து 30 மாணவிகளிடம் உல்லாசம்.. டியூசன் ஆசிரியர்கள் 3 பேர் கைது !, By:  Karthikeyan, Published: Thursday, December 15, 2016, 18:47 [IST]

[5] In a shocking development, the Dharmapuri police on Thursday arrested three people including a teacher of a private tuition center for raping some schoolgirls studying in classes ten and plus-2. They were arrested after a victim informed her parents about the incident leading to the police complaint against the accused people.

Deccan Chronicle, Chennai: 3 including teacher held for raping schoolgirls, Published: Dec 16, 2016, 7:46 am IST; Updated: Dec 16, 2016, 8:00 am IST.

http://www.deccanchronicle.com/nation/crime/161216/chennai-3-including-teacher-held-for-raping-schoolgirls.html

[6] The Hindu, Man held for sexually assaulting minor girl, DHARMAPURI: DECEMBER 16, 2016 00:00 IST ,UPDATED: DECEMBER 16, 2016 03:56 ISTUPDATED: DECEMBER 16, 2016 03:56 IST

[7] The police have arrested Sivakumar, a tuition teacher, on the charge of sexually assaulting a 17-year-old girl. In a complaint, the girl said that she used to go to a tuition centre where he taught. Easwaran, another staff at the centre, had recorded the assault on his mobile phone. He too has been arrested. The police is on the lookout for one more person in this regard.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/Man-held-for-sexually-assaulting-minor-girl/article16843687.ece

[8] the incident came to light only on December 4 when the victim summoned the courage to lodge a complaint with the police. Investigators have so far arrested three persons, including the prime accused.

Indian Express, Sleazy tuition teacher held for raping minor girl two years back, By Expres News Service, Published: 17th December 2016 04:16 AM, Last Updated: 17th December 2016 04:16 AM

[9] தினகரன், மாணவியரை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டியவர் கைது, பதிவு செய்த நாள். டிசம்பர்.05, 2016. 09.52.

[10] http://www.dinamalar.com/news_detail.asp?id=1663653

[11] Meanwhile, rumours spread in the place that around 30 girls were sexually assaulted and videographed by Sivakumar. However, the SP denied this.

[12] After investigations, his friend Eswaran was arrested on Tuesday and another friend M Sivakumar on Friday.

http://www.newindianexpress.com/states/tamil-nadu/2016/dec/17/sleazy-tuition-teacher-held-for-raping-minor-girl-two-years-back-1550079.html

[13] தினமலர், 20க்கும் மேற்பட்ட மாணவிகள் பாலியல் பலாத்காரம்: வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் மேலும் இருவர் கைது, பதிவு செய்த நாள். டிசம்பர்.16, 2016. 08.17.

[14] http://tamil.oneindia.com/news/tamilnadu/teacher-arrested-having-allegedly-sex-with-students-269813.html

[15] The Times of India, Tuition teacher arrested for molesting young girl in Mumbai, Vijay V Singh| TNN | Oct 1, 2014, 11.16 PM IST.

[16] http://timesofindia.indiatimes.com/city/mumbai/Tuition-teacher-arrested-for-molesting-young-girl-in-Mumbai/articleshow/44021309.cms

பல இளம் மாணவிகளை கற்பழித்த சலாவுத்தீன் அயூப்: இன்னுமொரு பிரைட்!

ஜூலை 23, 2010

பல இளம் மாணவிகளை கற்பழித்த சலாவுத்தீன் அயூப்: இன்னுமொரு பிரைட்!

எம். எல். பிரைட் என்ற கொடைக்கானல் பள்ளி தாளாளர் எப்படி ஷீபாபால் என்ற பிரின்ஸிபாலின் துணையுடன், பல மாணவிகளை பாலியல் வன்மத்திற்கு உட்படுத்தப்பட்டார்களோ, அதே மாதிரியான நிலை இங்கேயும் காணப்படுகிறது. பெண்களே பெண்களின் சீரழிவிற்கு உடந்தையாகயிருப்பது ஆராய்ச்சிக்குரியதாக உள்ளது.

அது மட்டுமல்லாது, மாணவிகளின் விடுதியில் அறையை வைத்திருந்தது, தனியாக அழைத்தது, ஆபாச படங்களைக் காட்டியது, தொட்டுப்பேசியது, கட்டிப்பிடித்தது…………………….

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: ஷிபாபால் மற்றும் பிரைட் கைது!

http://christianityindia.wordpress.com/2010/07/03/மாணவிகளுக்கு-பாலியல்-தொந/

24-07-2019 (சனிக்கிழமை):முஹமது சலாவுத்தீன் அயூப் தான் 17 வயது மாணவியைக் கற்பழித்ததை ஒப்புக்கொண்டு விட்டதாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.

parkwood school director-மாணவிகளுடன்

parkwood school director-மாணவிகளுடன்

23-07-2019 (வெள்ளிக்கிழமை): நேற்றுவரை தமது சகோதரரை வலுவாக ஆதரித்து வந்த முஹமது சலாவுத்தீன் அயூப்பீன் சகோதரி ஆயிஷா தன்வீர், 23-07-2010 அன்று நடந்த செய்தியாளர்களின் கூட்டத்தில், அயூப் தனது பதவியிலிருந்து விலக்கப்பட்டார் என்று அறிவுத்துள்ளார். இதைத்தவிர, தமது பள்ளியின் பெயரைக் கெடுக்கத்தான், இவ்வாறான செயல்களை செய்யப்படுகிறது என்றெல்லாம் கூட பேசியுள்ளார்.

போலீஸார், ஹைதராபாதில் உள்ள கிளினிக்கில் விசாரித்தபோது, மருத்துவர், அயூப் அந்த பெண்ணை கருக்கலைக்க அழைத்து வந்ததாகவும், ஆனால், மாத்திரிகைகள் கொடுத்ததால், கர்ப்பமடைந்து ஆனால் ஆரம்பநிலையிலேயே கலைந்து விட்டதாகவும், அதனால், தான் சாதாரணமாகத்தான் சிகிச்சையளித்ததாக கூறியுள்ளார்.

முஹமது-அயூப்-கற்பழிக்கப்பட்ட-மாணவி

முஹமது-அயூப்-கற்பழிக்கப்பட்ட-மாணவி

துப்பாக்கி முனையில் மாணவி கற்பழிப்பு: பள்ளி முதல்வர் கைது: துப்பாக்கி முனையில், மாணவியை கற்பழித்த பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டத்திலுள்ள “பார்க் வுட்’ சர்வதேச பள்ளியின் முதல்வர் சலாவுதீன் முகமது அயூப்பை, கற்பழிப்பு புகாரின் அடிப்படையில், ஜூபிலி ஹில்ஸ் போலீசார் கைது செய்துள்ளனர். அந்த பள்ளியில் படிக்கும் 9ம் வகுப்பு மாணவியை, அயூப் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி கற்பழித்ததாக, அந்த மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், நேற்று முன்தினம் அவர் கைது செய்யப்பட்டார்[1].

சலாவுத்தீன்-அயூப்-கைது-மாணவிகள்-கற்பழிப்பு

சலாவுத்தீன்-அயூப்-கைது-மாணவிகள்-கற்பழிப்பு

இது குறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது[2]: தன் பள்ளியில் படிக்கும் 9ம் வகுப்பு மாணவியை, அயூப், ஜூபிலி ஹில்ஸிலுள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று, துப்பாக்கியைக் காட்டி, மிரட்டி கற்பழித்துள்ளார். ஆபாசப் படமும் எடுத்துள்ளார்[3]. இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லக் கூடாதென்று கூறியும், ஆபாசப் படத்தை காட்டி மிரட்டியும், கடந்த ஒரு ஆண்டாக அந்த மாணவி மீது பாலியல் வன்முறைகளை நிகழ்த்தி வந்துள்ளார். கருக்கலைப்பு மாத்திரைகளைத் தனக்குக் கொடுத்தது இல்லாமல், மருத்துவரிடத்திலும் அழைத்துச் சென்றுள்ளதாகக் கூறியுள்ளாள்..

மாணவி-ஹைதரபாத்-மும்பை

மாணவி-ஹைதரபாத்-மும்பை

பிரைட்டின் முறையை விஞ்சிய அயூப்பின் முறை: அயூப் மாணவிகளின் ஹாஸ்டலில் ஒரு தங்கும் அறை வைத்திருந்தான். மார்ச் 10ம் தேதி அந்த மாணவியை அங்கு வருமாறு அழைத்தானாம். மயக்கமருந்து கலந்த பானத்தைக் கொடுத்து மயக்கம் அடைந்தவுடன் அம்மாணவியைக் கெடுத்துள்ளானாம். 17-வயதான அம்மாணவி மயக்கம் தெளிந்ததும், வலியாக இருக்கிறது என்று சொன்னபோது, அயூன், கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்றானாம். 45 நாட்கள் கழித்து அதேமுறையைக் கையாண்டானாம். பிறகு மயக்க மருந்து கொடுக்காமலே கற்பழிக்க முயன்றபோது, அம்மாணவி தடுத்திருக்கிறாள். ஆனால், உன்னையும், உன் சகோதரி மற்றும் சகோதரனையும் கொன்று விடுவேன் என்று மிரட்டி கற்பழித்திருக்கிறான். இதுமாதிரி தன்னை 1520 தடவை கற்பழித்ததாக புகாரில் குறிப்பிட்டுள்ளாள். அதில் இரண்டுமுறை, அயூப் தன்னுடைய இல்லத்திலேயே அழைத்துச் சென்று கற்பழித்திருக்கிறான்.

பெற்றோரிடம் சொல்லிய பிறகு புகார் கொடுக்கப்பட்டது: இது குறித்து, டில்லியிலுள்ள தனது பெற்றோரிடம் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மாணவி கூறியிருக்கிறார். இதனையடுத்து, அவளது பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், பள்ளி முதல்வர் அயூப் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு போலீசார் கூறினர்.

பள்ளி பெண் ஊழியர், அசிரியைகள், மாணவிகள் பட்டபாடு[4]: அந்த பள்ளியின் மாணவிகள் மற்றும் வேலைசெய்வோர் அயூபின் நடத்தைப் பற்றி பலமுறை புகார் கொடுத்துள்ளதாகக் கூறுகிறார்கள். ஏனெனில், அலுவலகத்தில் வேலை செய்வோர் மற்றும் ஆசரியைகள் கூட அயூப்பின் நடத்தையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2003லிருந்து வேலை செய்து வரும் ஒரு பெண் ஊழியர் கூறுவதாவது, “மாணவியர்களிடம் அவை நடந்து கொள்ளும் விதம் எனக்குக்கொஞ்சம்கூட பிடிக்கவில்லை. மாணவிகளிடம் அடிக்கடி சக மாணவர்களிடம் அவர்களுடைய உறவு எப்படியுள்ளது என்று கேள்விகள் எல்லாம் கேட்டிருக்கிறான். வயதுக்கு வர்ம் போது ஏற்படும் உணர்ச்சிகள், அனுபவங்கள் முதலியவற்றை தன்னிடம் விவரிக்கும்படும் கட்டாயப்படுத்துவான். இதையெல்லாம் “ஆலோசனைக் கூறுதல்” என்ற போர்வையில் நடத்திவந்தான். நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் கேட்கவில்லை”. அந்த மாணவியின் கற்பழிப்புப் பற்றி நெடுங்காலமாக கேட்டு வந்துள்ளானாம். அதுமட்டுமல்லாது, அடிக்கடி ஆசிரியைகளை தொந்தரவு செய்வதுடன், அசிங்கமான வார்த்தைகளையும் பிரயோகித்து பேசுவானாம்.

புகார் கூறிய மாணவி மீது நடவடிக்கை – பள்ளீயிலிருந்து நீக்கம்: இதனிடையே, அந்த மாணவிக்கு படிப்பில் போதிய ஆர்வமில்லையென்று கூறி, பள்ளியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என பள்ளி நிர்வாகம் கருத்து தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் பலர் நேற்று அப்பள்ளியின் முன் ரகளை செய்து அலுவலகத்திலுள்ள நாற்காலிகளை உடைத்தனர். இப்பள்ளி மிகவும் பிரபலமானது. கனடா, துபாய் மற்றும் சவுதி அரேபியாவில் இப்பள்ளியின் கிளைகள் உள்ளன.

ஆயிஷா தன்வீர் மாணவிகளைக் குற்றஞ்ச்சாட்டுவது[5]: அயூப்பின் சகோதரி மற்றும் அப்பள்ளியின் மற்றொரு இயக்குனராக இருக்கும் ஆயிஷா தன்வீர் என்ற பெண் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. அம்மாணவி 2009லேயே வகுப்புவாதப் பிரச்சினையை உருவாக்க முயன்றபோது, அப்பள்ளியிலிருந்து நீக்கப்பட்டாள். அவள் அப்பள்ளி மாணவனுடன் உறவு வைத்திருந்ததாகவும், அதனால் அவனை மதம் மாற பிடிவாதம் பிடித்ததாகவும், இதனால் மதப்பிரச்சினை வரும் என்று, குறிப்பாக, அம்மாணவனே புகார் கொடுத்தபோது, பள்ளியிலிருந்து நீக்கப்பட்டாள். மறுபடியும் இந்த வருடம் ஜனவரியில் அந்த பெண்ணின் தந்தை வந்து கெஞ்சியதால், மறுபடியும் அனுமதி வழகினோம்.

ஆதரிக்கும்-ஆயிஷா-தன்வீர்-பள்ளிப்பெண்கள்-கற்பழிப்பு

ஆதரிக்கும்-ஆயிஷா-தன்வீர்-பள்ளிப்பெண்கள்-கற்பழிப்பு

மேலும், அம்மாணவி உயர்ந்த இடத்திலிருந்து வந்துள்ளதால், பள்ளி நிர்வாகம் மறுக்கமுடியாமல் போய்விட்டது என்று ஒரு ஆசிரியை சொல்கிறார். அதனால் அம்மாணவியும் மற்றவர்களிடம் கொஞ்சம் துடுக்காகவே பேசுவாள், “என்னை யாதாவது செய்தால், இந்த பள்ளிக்கே பிரச்சினையை உண்டாக்கி விடுவேன்”, என்பாளாம். அப்பெண்ணின் தந்தை, “பள்ளியின் பெயர் கெட்டுவிடும் என்று அயூப் என்னை மிரட்டுகிறார். அது மட்டுமல்லாது, எனக்கு ஒரு வெற்று-செக்கைக் கொடுத்து அமைதியாக இருக்கும்படியும் மிரட்டியுள்ளார்”, என்கிறார்.


[1] தினமலர், துப்பாக்கி முனையில் மாணவி கற்பழிப்பு: பள்ளி முதல்வர் கைது, ஜூலை 22,2010,  http://www.dinamalar.com/News_Detail.asp?Id=45139

[2] P Hareesh, Parkwood school director molested six more girls, First Published : 23 Jul 2010 04:44:26 AM IST

http://expressbuzz.com/cities/hyderabad/parkwood-school-director-molested-six-more-girls/192246.html

[3] The Hindu, Friday, Jul 23, 2010, http://www.hindu.com/2010/07/23/stories/2010072358310100.htm

[4] Times of India, ‘Parkwood staff, students faced abuse’, TNN, Jul 22, 2010, 11.56pm IST

http://timesofindia.indiatimes.com/city/hyderabad/Parkwood-staff-students-faced-abuse/articleshow/6202912.cms

[5] http://www.mumbaimirror.com/article/2/20100723201007230340093091b362324/Malad-girl-in-Hyderabad-alleges-rape-by-principal.html