பல இளம் மாணவிகளை கற்பழித்த சலாவுத்தீன் அயூப்: இன்னுமொரு பிரைட்!

பல இளம் மாணவிகளை கற்பழித்த சலாவுத்தீன் அயூப்: இன்னுமொரு பிரைட்!

எம். எல். பிரைட் என்ற கொடைக்கானல் பள்ளி தாளாளர் எப்படி ஷீபாபால் என்ற பிரின்ஸிபாலின் துணையுடன், பல மாணவிகளை பாலியல் வன்மத்திற்கு உட்படுத்தப்பட்டார்களோ, அதே மாதிரியான நிலை இங்கேயும் காணப்படுகிறது. பெண்களே பெண்களின் சீரழிவிற்கு உடந்தையாகயிருப்பது ஆராய்ச்சிக்குரியதாக உள்ளது.

அது மட்டுமல்லாது, மாணவிகளின் விடுதியில் அறையை வைத்திருந்தது, தனியாக அழைத்தது, ஆபாச படங்களைக் காட்டியது, தொட்டுப்பேசியது, கட்டிப்பிடித்தது…………………….

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: ஷிபாபால் மற்றும் பிரைட் கைது!

http://christianityindia.wordpress.com/2010/07/03/மாணவிகளுக்கு-பாலியல்-தொந/

24-07-2019 (சனிக்கிழமை):முஹமது சலாவுத்தீன் அயூப் தான் 17 வயது மாணவியைக் கற்பழித்ததை ஒப்புக்கொண்டு விட்டதாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.

parkwood school director-மாணவிகளுடன்

parkwood school director-மாணவிகளுடன்

23-07-2019 (வெள்ளிக்கிழமை): நேற்றுவரை தமது சகோதரரை வலுவாக ஆதரித்து வந்த முஹமது சலாவுத்தீன் அயூப்பீன் சகோதரி ஆயிஷா தன்வீர், 23-07-2010 அன்று நடந்த செய்தியாளர்களின் கூட்டத்தில், அயூப் தனது பதவியிலிருந்து விலக்கப்பட்டார் என்று அறிவுத்துள்ளார். இதைத்தவிர, தமது பள்ளியின் பெயரைக் கெடுக்கத்தான், இவ்வாறான செயல்களை செய்யப்படுகிறது என்றெல்லாம் கூட பேசியுள்ளார்.

போலீஸார், ஹைதராபாதில் உள்ள கிளினிக்கில் விசாரித்தபோது, மருத்துவர், அயூப் அந்த பெண்ணை கருக்கலைக்க அழைத்து வந்ததாகவும், ஆனால், மாத்திரிகைகள் கொடுத்ததால், கர்ப்பமடைந்து ஆனால் ஆரம்பநிலையிலேயே கலைந்து விட்டதாகவும், அதனால், தான் சாதாரணமாகத்தான் சிகிச்சையளித்ததாக கூறியுள்ளார்.

முஹமது-அயூப்-கற்பழிக்கப்பட்ட-மாணவி

முஹமது-அயூப்-கற்பழிக்கப்பட்ட-மாணவி

துப்பாக்கி முனையில் மாணவி கற்பழிப்பு: பள்ளி முதல்வர் கைது: துப்பாக்கி முனையில், மாணவியை கற்பழித்த பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டத்திலுள்ள “பார்க் வுட்’ சர்வதேச பள்ளியின் முதல்வர் சலாவுதீன் முகமது அயூப்பை, கற்பழிப்பு புகாரின் அடிப்படையில், ஜூபிலி ஹில்ஸ் போலீசார் கைது செய்துள்ளனர். அந்த பள்ளியில் படிக்கும் 9ம் வகுப்பு மாணவியை, அயூப் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி கற்பழித்ததாக, அந்த மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், நேற்று முன்தினம் அவர் கைது செய்யப்பட்டார்[1].

சலாவுத்தீன்-அயூப்-கைது-மாணவிகள்-கற்பழிப்பு

சலாவுத்தீன்-அயூப்-கைது-மாணவிகள்-கற்பழிப்பு

இது குறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது[2]: தன் பள்ளியில் படிக்கும் 9ம் வகுப்பு மாணவியை, அயூப், ஜூபிலி ஹில்ஸிலுள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று, துப்பாக்கியைக் காட்டி, மிரட்டி கற்பழித்துள்ளார். ஆபாசப் படமும் எடுத்துள்ளார்[3]. இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லக் கூடாதென்று கூறியும், ஆபாசப் படத்தை காட்டி மிரட்டியும், கடந்த ஒரு ஆண்டாக அந்த மாணவி மீது பாலியல் வன்முறைகளை நிகழ்த்தி வந்துள்ளார். கருக்கலைப்பு மாத்திரைகளைத் தனக்குக் கொடுத்தது இல்லாமல், மருத்துவரிடத்திலும் அழைத்துச் சென்றுள்ளதாகக் கூறியுள்ளாள்..

மாணவி-ஹைதரபாத்-மும்பை

மாணவி-ஹைதரபாத்-மும்பை

பிரைட்டின் முறையை விஞ்சிய அயூப்பின் முறை: அயூப் மாணவிகளின் ஹாஸ்டலில் ஒரு தங்கும் அறை வைத்திருந்தான். மார்ச் 10ம் தேதி அந்த மாணவியை அங்கு வருமாறு அழைத்தானாம். மயக்கமருந்து கலந்த பானத்தைக் கொடுத்து மயக்கம் அடைந்தவுடன் அம்மாணவியைக் கெடுத்துள்ளானாம். 17-வயதான அம்மாணவி மயக்கம் தெளிந்ததும், வலியாக இருக்கிறது என்று சொன்னபோது, அயூன், கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்றானாம். 45 நாட்கள் கழித்து அதேமுறையைக் கையாண்டானாம். பிறகு மயக்க மருந்து கொடுக்காமலே கற்பழிக்க முயன்றபோது, அம்மாணவி தடுத்திருக்கிறாள். ஆனால், உன்னையும், உன் சகோதரி மற்றும் சகோதரனையும் கொன்று விடுவேன் என்று மிரட்டி கற்பழித்திருக்கிறான். இதுமாதிரி தன்னை 1520 தடவை கற்பழித்ததாக புகாரில் குறிப்பிட்டுள்ளாள். அதில் இரண்டுமுறை, அயூப் தன்னுடைய இல்லத்திலேயே அழைத்துச் சென்று கற்பழித்திருக்கிறான்.

பெற்றோரிடம் சொல்லிய பிறகு புகார் கொடுக்கப்பட்டது: இது குறித்து, டில்லியிலுள்ள தனது பெற்றோரிடம் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மாணவி கூறியிருக்கிறார். இதனையடுத்து, அவளது பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், பள்ளி முதல்வர் அயூப் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு போலீசார் கூறினர்.

பள்ளி பெண் ஊழியர், அசிரியைகள், மாணவிகள் பட்டபாடு[4]: அந்த பள்ளியின் மாணவிகள் மற்றும் வேலைசெய்வோர் அயூபின் நடத்தைப் பற்றி பலமுறை புகார் கொடுத்துள்ளதாகக் கூறுகிறார்கள். ஏனெனில், அலுவலகத்தில் வேலை செய்வோர் மற்றும் ஆசரியைகள் கூட அயூப்பின் நடத்தையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2003லிருந்து வேலை செய்து வரும் ஒரு பெண் ஊழியர் கூறுவதாவது, “மாணவியர்களிடம் அவை நடந்து கொள்ளும் விதம் எனக்குக்கொஞ்சம்கூட பிடிக்கவில்லை. மாணவிகளிடம் அடிக்கடி சக மாணவர்களிடம் அவர்களுடைய உறவு எப்படியுள்ளது என்று கேள்விகள் எல்லாம் கேட்டிருக்கிறான். வயதுக்கு வர்ம் போது ஏற்படும் உணர்ச்சிகள், அனுபவங்கள் முதலியவற்றை தன்னிடம் விவரிக்கும்படும் கட்டாயப்படுத்துவான். இதையெல்லாம் “ஆலோசனைக் கூறுதல்” என்ற போர்வையில் நடத்திவந்தான். நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் கேட்கவில்லை”. அந்த மாணவியின் கற்பழிப்புப் பற்றி நெடுங்காலமாக கேட்டு வந்துள்ளானாம். அதுமட்டுமல்லாது, அடிக்கடி ஆசிரியைகளை தொந்தரவு செய்வதுடன், அசிங்கமான வார்த்தைகளையும் பிரயோகித்து பேசுவானாம்.

புகார் கூறிய மாணவி மீது நடவடிக்கை – பள்ளீயிலிருந்து நீக்கம்: இதனிடையே, அந்த மாணவிக்கு படிப்பில் போதிய ஆர்வமில்லையென்று கூறி, பள்ளியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என பள்ளி நிர்வாகம் கருத்து தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் பலர் நேற்று அப்பள்ளியின் முன் ரகளை செய்து அலுவலகத்திலுள்ள நாற்காலிகளை உடைத்தனர். இப்பள்ளி மிகவும் பிரபலமானது. கனடா, துபாய் மற்றும் சவுதி அரேபியாவில் இப்பள்ளியின் கிளைகள் உள்ளன.

ஆயிஷா தன்வீர் மாணவிகளைக் குற்றஞ்ச்சாட்டுவது[5]: அயூப்பின் சகோதரி மற்றும் அப்பள்ளியின் மற்றொரு இயக்குனராக இருக்கும் ஆயிஷா தன்வீர் என்ற பெண் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. அம்மாணவி 2009லேயே வகுப்புவாதப் பிரச்சினையை உருவாக்க முயன்றபோது, அப்பள்ளியிலிருந்து நீக்கப்பட்டாள். அவள் அப்பள்ளி மாணவனுடன் உறவு வைத்திருந்ததாகவும், அதனால் அவனை மதம் மாற பிடிவாதம் பிடித்ததாகவும், இதனால் மதப்பிரச்சினை வரும் என்று, குறிப்பாக, அம்மாணவனே புகார் கொடுத்தபோது, பள்ளியிலிருந்து நீக்கப்பட்டாள். மறுபடியும் இந்த வருடம் ஜனவரியில் அந்த பெண்ணின் தந்தை வந்து கெஞ்சியதால், மறுபடியும் அனுமதி வழகினோம்.

ஆதரிக்கும்-ஆயிஷா-தன்வீர்-பள்ளிப்பெண்கள்-கற்பழிப்பு

ஆதரிக்கும்-ஆயிஷா-தன்வீர்-பள்ளிப்பெண்கள்-கற்பழிப்பு

மேலும், அம்மாணவி உயர்ந்த இடத்திலிருந்து வந்துள்ளதால், பள்ளி நிர்வாகம் மறுக்கமுடியாமல் போய்விட்டது என்று ஒரு ஆசிரியை சொல்கிறார். அதனால் அம்மாணவியும் மற்றவர்களிடம் கொஞ்சம் துடுக்காகவே பேசுவாள், “என்னை யாதாவது செய்தால், இந்த பள்ளிக்கே பிரச்சினையை உண்டாக்கி விடுவேன்”, என்பாளாம். அப்பெண்ணின் தந்தை, “பள்ளியின் பெயர் கெட்டுவிடும் என்று அயூப் என்னை மிரட்டுகிறார். அது மட்டுமல்லாது, எனக்கு ஒரு வெற்று-செக்கைக் கொடுத்து அமைதியாக இருக்கும்படியும் மிரட்டியுள்ளார்”, என்கிறார்.


[1] தினமலர், துப்பாக்கி முனையில் மாணவி கற்பழிப்பு: பள்ளி முதல்வர் கைது, ஜூலை 22,2010,  http://www.dinamalar.com/News_Detail.asp?Id=45139

[2] P Hareesh, Parkwood school director molested six more girls, First Published : 23 Jul 2010 04:44:26 AM IST

http://expressbuzz.com/cities/hyderabad/parkwood-school-director-molested-six-more-girls/192246.html

[3] The Hindu, Friday, Jul 23, 2010, http://www.hindu.com/2010/07/23/stories/2010072358310100.htm

[4] Times of India, ‘Parkwood staff, students faced abuse’, TNN, Jul 22, 2010, 11.56pm IST

http://timesofindia.indiatimes.com/city/hyderabad/Parkwood-staff-students-faced-abuse/articleshow/6202912.cms

[5] http://www.mumbaimirror.com/article/2/20100723201007230340093091b362324/Malad-girl-in-Hyderabad-alleges-rape-by-principal.html

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , ,

7 பதில்கள் to “பல இளம் மாணவிகளை கற்பழித்த சலாவுத்தீன் அயூப்: இன்னுமொரு பிரைட்!”

  1. vedaprakash Says:

    Hyderabad principal abused many kids: Investigators
    TNN, Jul 24, 2010, 03.48am IST
    http://timesofindia.indiatimes.com/city/hyderabad/Hyderabad-principal-abused-many-kids-Investigators/articleshow/6208081.cms

    HYDERABAD: Mohammed Salahuddin Ayub, director and principal of Parkwood International School, had sexually abused more than one girl student, according to Central Crime Station (CCS) sleuths investigating one of the most heinous sexual crime cases in the city.

    The 55-year-old-director, who has three sons in the same age group as his victims, was produced before the additional chief metropolitan court on Friday and was remanded in judicial custody till August 5. He was taken to Cherlapally jail.

    Before producing him in the court, the sleuths took the accused to Osmania General Hospital to check his medical fitness and then APFSL to conduct a potency test. The seized a handycam with memory card in which the accused allegedly recorded all the sleazy videos of the victims and a .32 pistol, with which the accused had allegedly threatened the victim.

    Police have also recorded statements from a doctor of Hyderabad Nursing Home near GHMC headquarters, to whom Ayub took the class XI student for abortion. In her statement, the doctor reportedly told the police that by the time Ayub brought the girl to hospital, her pregnancy had already got terminated by pills. As a result, they merely provided treatment to her

  2. vedaprakash Says:

    Shocked parents pull out wards from Parkwood
    TNN, Jul 24, 2010, 12.15am IST
    http://timesofindia.indiatimes.com/city/hyderabad/Shocked-parents-pull-out-wards-from-Parkwood/articleshow/6207357.cms

    HYDERABAD: Several parents of Parkwood International School have started pulling out their children from its residential campus at Vikarabad following the arrest of its director Md S Ayub on charges of allegedly raping a minor girl. The department of school education has sent a report to the state government asking it to withdraw the No Objection Certificate (NOC) given to the school seven years ago.

    State education officials are now in talks with other international schools to accommodate the 206 students of Parkwood International in their schools.

    With more students coming out with abuse stories, parents are also worried that their children would be called for questioning by police or officials of school education department.

    Officials of school education department have decided to take stringent action against Parkwood following the initial fact finding report submitted by the district education officer and regional joint director, school education department. “The report submitted by the senior officials of the department who conducted the inquiry on July 22, states that the school had shown least responsibility in protecting its students. Hence we are recommending the state government to withdraw its NOC,” said T Satyanarayana, director of school education. He said the school education department would report the matter to CBSE officials, New Delhi to take action against the management. “The affiliation might be withdrawn,” an official said. The final decision on the matter is expected to be taken by the minister for school education, Manikya Varaprasad Rao.

    Meanwhile, in an attempt to woo the parents back, the school management called for a press conference here on Friday stating that the accused, Md S Ayub, was removed from the governing council of the school and would not be part of any of its functioning till the inquiry is completed. “Let the law take its own course but the students should not be penalised unnecessarily. The school is definitely a safe place,” said Ayesha Tanveer, academic director and the current in-charge of the school. She added that the school will start functioning normally after July 25. “The students can come back and join us without any worry,” Tanveer said. Some parents present at the press conference supported the management.

  3. vedaprakash Says:

    வெளிநாட்டு மாணவி பாலியல் புகார்: பள்ளி முதல்வர் கைது
    http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=36364

    ஆந்திர மாநிலம் ரெங்கா ரெட்டி மாவட்டம் விகாராபாத்தில் உள்ள பார்க்வுட்’ சர்வதேச பள்ளியின் முதல்வர் சலாவுதீன் அயூப். இவர் மீது அப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வரும் அஜிதா என்ற மாணவி போலீசில் கற்பழிப்பு புகார் கொடுத்தார்.

    விசாரணையில் சலாவு தீன் அஜிதா உள்பட 5 மாணவிகளை மயக்க குளிர்பானம் கொடுத்து கற்பழித்திருந்தது தெரியவந்தது. மேலும் இதை வீடியோ படமாக எடுத்து மிரட்டியதும் அம்பலமானது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சஞ்சல்கடா சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் விகாராபாத் போலீஸ் நிலையத்தில் கொரியா நாட்டை சேர்ந்த மாணவி பெங்சூயி (பெயர் மாற்றம்) சலாவுதீன் மீது கற்பழிப்பு புகார் கொடுத்தார். அதில் நான் பார்க்வுட் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறேன்.

    ஒரு நாள் பள்ளி முதல்வர் சலாவுதீன் எனக்கு இன்டர்நெட்டில் அறிவியல் பாடம் பற்றிய தகவல்களை காட்டுவதாக கூறி தனி அறைக்கு அழைத்து சென்றார். திடீரென ஆபாச படங்களை காட்டினார்.

    நான் உடனே வெளியேற முயன்றேன். என்னை சமா தானப்படுத்திகுளிர் பானம் கொடுத்தார். அதை குடித்ததும் நான் மயங்கி விட்டேன். அப்போது அவர் என்னை கற்பழித்து விட்டார். அதை தனது வீடியோ கேமராவிலும் படம் எடுத்தார்.

    பின்னர் என்னிடம் அந்த வீடியோ படத்தை இன்டர் நெட்டில் வெளியிட்டு உன்னை அசிங்கப்படுத்தி விடுவேன் என்று மிரட்டி 21 முறை என்னை நாசம் செய்தார். அவரிடம் உள்ள அந்த ஆபாச வீடியோபடத்தை கைப்பற்றி அழித்து விடவேண்டும். என்னைப் போல் ஏராளமான மாணவி களை மிரட்டி கற்பழித்த பள்ளி முதல்வர் மீது கடுமை யான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    கொரிய மாணவி போலீசாரிடம் தனக்கு நேர்ந்த கொடுமைகளை விவரித்தார். இதையடுத்து போலீசார் பார்க்வுட்பள்ளியில் சோதனை நடத்திய போது, சலாவுதீன் அறையின் 4 பக்கமும் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.

    அவர் மாணவிகளை கற்பழித்த வீடியோ படத்தை இன்டர்நெட்டில் வெளியிட்டாரா? அவரது வலையில் சிக்கிய வேறு மாணவிகள் யார்? என்பது பற்றியும் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். இதற்கிடையே அப்பள்ளிக்கு மாணவிகளை அனுப்ப பெற்றோர் தயக்கம் காட்டுகிறார்கள். அவர்களை வேறு பள்ளிகளில் சேர்க்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.

  4. vedaprakash Says:

    மயக்க குளிர்பானம் கொடுத்து 5 மாணவிகளை கற்பழித்த பள்ளி முதல்வர் கைது; வீடியோ படம் எடுத்து மிரட்டினார்
    Nagari வெள்ளிக்கிழமை, ஜூலை 23, 12:57 PM IST
    http://www.maalaimalar.com/2010/07/23125718/five-girls-students-rape-in-pr.html

    நகரி, ஜூலை. 23-

    ஆந்திர மாநிலம் ரெங்கா ரெட்டி மாவட்டம் விகாராபாத்தில் பார்க்வுட் சர்வதேச பள்ளி உள்ளது. இதன் முதல்வராக இருப்பவர் முகமது சலாவுதீன் அயூப் (50). இவர் குத்துச்சண்டையில் தீவிர ஆர்வம் உடையவர். பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு மாலை நேரத்தில் குத்துச்சண்டை பயிற்சி அளிப்பார். அப்போது சில்மிஷத்தில் ஈடுபடுவார். எதிர்ப்பு தெரிவிக்கும் மாணவிகளுக்கு பயிற்சி அளிக்க மாட்டார்.

    இந்நிலையில் பிளஸ்-1 மாணவி அஜிதாவை (பெயர் மாற்றம்) ஒரு ஆண்டுக்கு முன்பு குத்துச்சண்டை பயிற்சிக்கு தனியாக அழைத்துச் சென்றார்.
    அப்போது அவர் அஜிதாவுக்கு மயக்க குளிர்பானம் கொடுத்து கற்பழித்தார். பின்னர் அதை தனது நவீன வீடியோ கேமராவில் பதிவு செய்தார்.

    அஜிதா மயக்கம் தெளிந்ததும் கூச்சல் போட்டார். ஆனால் அவர் வீடியோ படத்தை காட்டி நீ இதுபற்றி வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் என்று கூறியபடி துப்பாக்கியை எடுத்தார். இதில் மிரண்டு போன அஜிதா பணிந்தார்.

    அதன் பிறகு அவளை பல தடவை தனது வீட்டுக்கு அழைத்து சென்றும் தனது ஆசையை தீர்த்துக் கொண்டார்.

    இந்நிலையில் அஜிதா கர்ப்பமானார். அதன் பிறகும் சலாவுதீனின் சித்ரவதை தொடர்ந்ததால் மும்பையில் உள்ள பெற்றோரிடம் கூறினாள்.

    இதையடுத்து பெற்றோர் விரைந்து வந்து சலாவுதீன் மீது போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சலாவுதீனை கைது செய்தனர். அவரது அலுவலகம் மற்றும் வீட்டில் நடத்திய சோதனையில் அஜிதா மற்றும் 4 மாணவிகளுடன் சலாவுதீன் உல்லாசமாக இருக்கும் வீடியோ சி.டி. கிடைத்தது.

    இதைப் பார்த்ததும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பள்ளி முதல்வரால் கற்பழிக்கப்பட்ட மற்ற 4 மாணவிகளும் புகார் செய்தனர். அவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

    மாணவிகளை பள்ளி முதல்வர் கற்பழித்து வீடியோ படம் எடுத்த தகவல் விகாராபாத் நகரில் பரவியது. இதில் ஆத்திரமடைந்த பொது மக்கள் பள்ளியை அடித்து நொறுக்கினார்கள். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. பின்னர் அங்கு பாதுகாப்புக்கு போலீசார் நிறுத்தப்பட்டனர்.

    அஜிதாவின் பெற்றோர் தனது மகளை பள்ளி முதல்வர் சலாவுதீன் ஒரு ஆண்டு “செக்ஸ்” சித்ரவதை செய்ததாக மாநில மனித உரிமை ஆணைய தலைவர் நீதிபதி சுபாஷன் ரெட்டியிடம் புகார் செய்தனர்.

    5 மாணவிகளை பள்ளி முதல்வர் கற்பழித்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  5. vedaprakash Says:

    வெளிநாட்டு மாணவியை கற்பழித்த பள்ளி முதல்வர்; போலீசில் மேலும் ஒரு புகார்
    Nagari சனிக்கிழமை, ஜூலை 24, 11:47 AM IST
    http://www.maalaimalar.com/2010/07/24114752/five-girls-students-rape.html

    நகரி, ஜுலை. 24-

    ஆந்திர மாநிலம் ரெங்கா ரெட்டி மாவட்டம் விகாராபாத்தில் உள்ள `பார்க்வுட்’ சர்வதேச பள்ளியின் முதல்வர் சலாவுதீன் அயூப். இவர் மீது அப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வரும் அஜிதா என்ற மாணவி போலீசில் கற்பழிப்பு புகார் கொடுத்தார்.

    விசாரணையில் சலாவு தீன் அஜிதா உள்பட 5 மாணவி களை மயக்க குளிர்பானம் கொடுத்து கற்பழித்திருந்தது தெரியவந்தது. மேலும் இதை வீடியோ படமாக எடுத்து மிரட்டியதும் அம்பலமானது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சஞ்சல்கடா சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் விகாராபாத் போலீஸ் நிலையத்தில் கொரியா நாட்டை சேர்ந்த மாணவி பெங்சூயி (பெயர் மாற்றம்) சலாவுதீன் மீது கற்பழிப்பு புகார் கொடுத்தார். அதில் “நான் பார்க்வுட் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறேன்.

    ஒரு நாள் பள்ளி முதல்வர் சலாவுதீன் எனக்கு இன்டர்நெட்டில் அறிவியல் பாடம் பற்றிய தகவல்களை காட்டுவதாக கூறி தனி அறைக்கு அழைத்து சென்றார். திடீரென ஆபாச படங்களை காட்டினார்.

    நான் உடனே வெளியேற முயன்றேன். என்னை சமா தானப்படுத்திகுளிர் பானம் கொடுத்தார். அதை குடித்ததும் நான் மயங்கி விட்டேன். அப்போது அவர் என்னை கற்பழித்து விட்டார். அதை தனது வீடியோ கேமராவிலும் படம் எடுத்தார்.

    பின்னர் என்னிடம் அந்த வீடியோ படத்தை இன்டர் நெட்டில் வெளியிட்டு உன்னை அசிங்கப்படுத்தி விடுவேன் என்று மிரட்டி 21 முறை என்னை நாசம் செய்தார். அவரிடம் உள்ள அந்த ஆபாச வீடியோபடத்தை கைப்பற்றி அழித்து விடவேண்டும். என்னைப் போல் ஏராளமான மாணவி களை மிரட்டி கற்பழித்த பள்ளி முதல்வர் மீது கடுமை யான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    கொரிய மாணவி போலீசாரிடம் அழுதபடியே தனக்கு நேர்ந்த கொடுமைகளை விவரித்தார். இதையடுத்து போலீசார் பார்க்வுட்பள்ளியில் சோதனை நடத்திய போது, சலாவுதீன் அறையின் 4 பக்க மும் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.

    அவர் மாணவிகளை கற்பழித்த வீடியோ படத்தை இன்டர்நெட்டில் வெளியிட்டாரா? அவரது வலையில் சிக்கிய வேறு மாணவிகள் யார்? என்பது பற்றியும் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். இதற்கிடையே அப்பள்ளிக்கு மாணவிகளை அனுப்ப பெற்றோர் தயக்கம் காட்டுகிறார்கள். அவர்களை வேறு பள்ளிகளில் சேர்க்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.

  6. vedaprakash Says:

    Ayub confesses to raping 17-yr-girl
    TNN, Jul 25, 2010, 12.40am IST
    http://timesofindia.indiatimes.com/city/hyderabad/Ayub-confesses-to-raping-17-yr-girl/articleshow/6212104.cms

    HYDERABAD: Parkwood International School director Mohammed Salauddin Ayub has reportedly confessed to police that he had raped the 17-year-old girl on several occasions and also made a vain bid to rape a foreign student.

    According to sources, Salauddin Ayub confessed that he used to stay on the third floor of Princes Court Block, where girls used to stay on the school campus.

    Every day he used to call girl students from the first floor to the penthouse and urged them to stay even during late hours, sources said, quoting the confession statement drafted on a laptop on Thursday last. In March, the girl went to his room at 9.30 pm to clear some doubts. At that time, he hatched a plan and mixed a sedative in her cool drink and gave it to the girl, who after drinking it fell unconscious. He then raped the girl and also threatened her with his licensed 0.32 pistol that if she reveals to anybody he would kill her, the sources said.

    Salauddin Ayub confessed that he took the girl to two hospitals. He first took her to a corporate hospital in Banjara Hills on May 5 suspecting pregnancy. He stood outside the hospital and sent the girl inside by giving her the required money. After that, he took the girl to a private nursing home at Lower Tank Bund for subsequent treatment. A lady doctor at the hospital gave her some pills for abortion.

    Sources said he also confessed that he had the habit of taking photographs and videos of girl students at various times and used to see them during night. He also stated in the confession that he used to take the girls outside the school premises without noting in the security register.

    “On July 1, some girl students came to my room to see a movie on TV. The foreign student slept in my room while watching TV. I asked the other students to leave the girl in my room. When all the girls went away I touched her …and tried to remove her clothes…But she resisted and cried loudly. Then I changed my mind and threatened the girl not to reveal this to anybody,” Ayub admitted in the confession.

    In a related development, the state government has recommended to the CBSE to cancel recognition of the school.

  7. vedaprakash Says:

    అయూబ్‌ మృగాడే!
    శని వారం, జూలై 24, 2010 , 2:34 [IST]
    http://vaartha.com/content/21622/ayub-very-dangerous-fellow.html

    బాత్‌రూంలలోనూ రహస్య కెమేరాలు బాధితురాలు చెప్పినవన్నీ నిజాలే నిందితుడికి 14రోజుల జ్యుడిషియల్‌ రిమాండ్‌
    హైదరాబాద్‌ జులై23, ప్రభాతవార్త సిటీబ్యూరో: నగర శివార్లలోని ‘పార్క్‌ఉడ్‌ ఇంటర్నేషనల్‌ రెసిడెన్సియల్‌ పాఠశాల కీచక ఉపాధ్యాయుడు మహ్మద్‌ సలావుద్దీన్‌ అయూబ్‌ లీలలు మరిన్ని వెలుగు చూశాయి. ఒక బాలిక తన కుటుంబీకులతో కలిసి ఫిర్యాదు చేయడంతో అతని బాగోతమంతా బట్టబయలు అవుతోంది. తాజాగా ఎనిమి దవతరగతి చదువుకుతున్న మరో కొరియా బాలిక తననూ శారీరకంగా వేధింపులకుగురిచేశాడని పోలీసులకు ఫిర్యాదు చేసినట్లుతెలిసింది. ఇదేవిధంగా నలుగురుబాలికలు కూడా ఇతని వలలో చిక్కుకున్నట్లు పోలీసులకు చెప్పారు.

    తాము సెలవు కావాలని కోరితే తన వళ్లో కూరోవాలని బలవం తం చేసేవాడనిచెబుతున్నారు. స్కూల్‌లోగణితం బోధించే ఆయూబ్‌ హాస్టల్‌ వార్డెన్‌ ఇందిరతో బాలికలను తన గెస్ట్‌హౌస్‌కు పిలిపించుకుని వివాహమైన వారికి పిల్లలు ఏ విధంగా పుడతారో చూస్తావా అని అడిగి ఇంటర్నెట్‌లోని బూతు దృశ్యాలను చూపించేవాడు. ఆ తర్వాత శీతల పానియంలో మత్తుపదార్ధం కలిపి అత్యాచారం జరిపి ఆ సమయంలో తీసిన ఫొటోలను చూపి బ్లాక్‌మెయిల్‌ చేసి తన అకృత్యాలను కొనసాగిస్తూ వస్తున్నాడు.

    తన రివా ల్వర్‌తో చంపేస్తానని బెదిరించేవాడు. బాధిత బాలిక పోలీసులకు చెప్పినట్టుగానే స్కూల్‌లోని అతడి గెస్ట్‌హౌస్‌ లో శీతలపానియం బాటిళ్లు, అందులో కలిపే మత్తు పదార్ధాలు, ఇంటిలోగల కప్‌బోర్డులో ఉన్న తుపాకీని స్వాధీనం చేసుకున్నారు. దీంతో బాలిక ఇష్టంలేకనే ఇలా చేస్తున్నదని నిందితుడు ఆయూబ్‌ సోదరి చేస్తున్న ఆరోప ణలు అవాస్తవమని తేలిపోయింది.

    గతంలో ఇతడు ఆ బాలికకు ఒకసారి గర్భస్రావం కూడా చేయించినట్లు పోలీసుల దర్యాప్తులో స్పష్టమైంది. పాఠశా లలోని బాత్‌రూంలలోకూడా రహస్య కెమెరాలను బిగించి దృశ్యాలను రికార్డుచేసి వాటితో ఆయూబ్‌ పైశాచిక ఆనం దంపొందుతున్నట్లు కూడా పోలీసులకు సమాచారం అం దింది. రంగారెడ్డి జిల్లా, వికారాబాద్‌, మన్నెగూడ వద్ద ఉన్న ఈ పాఠశాలవద్ద స్థానికులు, రాజకీయ నాయకులు, విద్యార్ధుల తల్లిదండ్రులు నిత్యం ఆందోళన చేపడుతు న్నారు. ఆయూబ్‌తోపాటు హస్టల్‌కు వార్డెన్‌గా ఉంటున్న ఇందిర, మరికొందర్ని కూడా అదుపులోకితీసుకుని విచా రించాల్సిఉన్నా పోలీసులు ఆ దిశగా ఆలోచించడంలేదు.

    ఇంతపెద్దఎత్తున దుమారం రేగుతుండటంతో తనిఖీలు చేసేందుకు ఏఒక్క అధికారికూడా సాహసం చేయడం లేదు. ఇప్పటివరకు ఆ స్కూల్‌వైపు కన్నెత్తి చూడటంలేదు. ఇందుకు ఢిల్లీ స్థాయిలో ఆయూబ్‌కు ఉన్న రాజకీయ పలుకుబడే కారణం. ఇతడిపై ఈగకూడా వాలకూడదం టూ అధికారులకు బెదిరింపు ఫోన్లు వస్తున్నట్లు విశ్వనీ సయంగా తెలిసింది. ఇప్పటికే పత్రికలు, వీూడి యాలో వస్తున్న వరుస కథనాలతో కుటుంబీకులు స్కూల్‌కు చేరు కుని టిసీతోసహా తమ పిల్లలను తీసుకెళ్తున్నారు. ఫీజుల కింద చెల్లించినరూ. లక్షలుమాత్రం తిరిగి ఇవ్వడం లేదు.

    పోలీసులను ఆశ్రయించిన బాధిత బాలిక తన సోదరుడు,సోదరితో కలిసి టిసి తీసుకుని వెళ్లిపోయారు. తాము చెల్లించినరూ.25లక్షలను తిరిగి ఇవ్వాల్సిందిగా కోరుతున్నారు. మిగిలిన కొద్దిమంది పిల్లలు చికాగో, జపాన్‌, చైనా వంటి దేశాలకు చెందిన వారు కావడంతో వారి తల్లిదండ్రులు వెంటనే ఇక్కడికి రాలేకపోయారు. తమ పిల్లల బాధ్యతను చూడాల్సిందిగా తమ దేశ ఎంబసీకి మొరపెట్టుకున్నారు. వెంటనే భారత్‌ ఎంబసీకి సమాచారం ఇవ్వడంతో రంగారెడ్డి జిల్లా కలెక్టర్‌ నేతృత్వంలో ఆ పిల్లల సంరక్షణను చూస్తున్నారు.

    నిందితుడు ఆయూబ్‌పై నమోదు చేసిన 376, 506, 201సెక్షన్లకుతోడు తాజాగా 354సెక్షన్‌ను చేర్చారు. నేర నిరూపణకు అవసరమయ్యే రక్త నమూనాలను కూడా ఫోరెన్సిక్‌ విభాగం నిందితుడినుంచి సేకరించింది. రిమాండ్‌కు తరలించే విషయంలో పోలీసులు శుక్రవారం ఉదయంనుంచి సాయంత్రం వరకు హైడ్రామాను నడిపిం చారు. 14రోజుల జ్యుడీషియల్‌ రిమాండ్‌ను విధించడంతో ఆయూబ్‌ను చంచల్‌గూడ జైలుకు తరలించారు.

    కేసు 30కి వాయిదావేసిన హెచ్‌ఆర్‌సి
    ఈకేసును శుక్రవారం మానవ హక్కుల కమిషన్‌లో చైర్మన్‌ జస్టిస్‌ సుభాషణ్‌రెడ్డి విచారించారు. ప్రిన్సిపాల్‌ ఆయూ బ్‌పై చర్య తీసుకోవాలని శుక్రవారం పిడిఎస్‌యు కమి షన్‌ను ఆశ్రయించగా, విచారణకు రంగారెడ్డి జిల్లా ఎస్పీ తన నివేదికను సమర్పించారు. ఆయూబ్‌ సిసిఎస్‌ పోలీ సుల కస్టడీలో ఉన్నట్లు తన నివేదికలో తెలియజేసినట్లు తెలిసింది. దీంతో కమిషన్‌ చైర్మన్‌ జస్టిస్‌ సుభాషణ్‌రెడ్డి ఈ కేసు తదుపరి విచారణను 30కి వాయిదా వేశారు.

பின்னூட்டமொன்றை இடுக