Posts Tagged ‘அபார்ஷன்’

பல இளம் மாணவிகளை கற்பழித்த சலாவுத்தீன் அயூப்: இன்னுமொரு பிரைட்!

ஜூலை 23, 2010

பல இளம் மாணவிகளை கற்பழித்த சலாவுத்தீன் அயூப்: இன்னுமொரு பிரைட்!

எம். எல். பிரைட் என்ற கொடைக்கானல் பள்ளி தாளாளர் எப்படி ஷீபாபால் என்ற பிரின்ஸிபாலின் துணையுடன், பல மாணவிகளை பாலியல் வன்மத்திற்கு உட்படுத்தப்பட்டார்களோ, அதே மாதிரியான நிலை இங்கேயும் காணப்படுகிறது. பெண்களே பெண்களின் சீரழிவிற்கு உடந்தையாகயிருப்பது ஆராய்ச்சிக்குரியதாக உள்ளது.

அது மட்டுமல்லாது, மாணவிகளின் விடுதியில் அறையை வைத்திருந்தது, தனியாக அழைத்தது, ஆபாச படங்களைக் காட்டியது, தொட்டுப்பேசியது, கட்டிப்பிடித்தது…………………….

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: ஷிபாபால் மற்றும் பிரைட் கைது!

http://christianityindia.wordpress.com/2010/07/03/மாணவிகளுக்கு-பாலியல்-தொந/

24-07-2019 (சனிக்கிழமை):முஹமது சலாவுத்தீன் அயூப் தான் 17 வயது மாணவியைக் கற்பழித்ததை ஒப்புக்கொண்டு விட்டதாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.

parkwood school director-மாணவிகளுடன்

parkwood school director-மாணவிகளுடன்

23-07-2019 (வெள்ளிக்கிழமை): நேற்றுவரை தமது சகோதரரை வலுவாக ஆதரித்து வந்த முஹமது சலாவுத்தீன் அயூப்பீன் சகோதரி ஆயிஷா தன்வீர், 23-07-2010 அன்று நடந்த செய்தியாளர்களின் கூட்டத்தில், அயூப் தனது பதவியிலிருந்து விலக்கப்பட்டார் என்று அறிவுத்துள்ளார். இதைத்தவிர, தமது பள்ளியின் பெயரைக் கெடுக்கத்தான், இவ்வாறான செயல்களை செய்யப்படுகிறது என்றெல்லாம் கூட பேசியுள்ளார்.

போலீஸார், ஹைதராபாதில் உள்ள கிளினிக்கில் விசாரித்தபோது, மருத்துவர், அயூப் அந்த பெண்ணை கருக்கலைக்க அழைத்து வந்ததாகவும், ஆனால், மாத்திரிகைகள் கொடுத்ததால், கர்ப்பமடைந்து ஆனால் ஆரம்பநிலையிலேயே கலைந்து விட்டதாகவும், அதனால், தான் சாதாரணமாகத்தான் சிகிச்சையளித்ததாக கூறியுள்ளார்.

முஹமது-அயூப்-கற்பழிக்கப்பட்ட-மாணவி

முஹமது-அயூப்-கற்பழிக்கப்பட்ட-மாணவி

துப்பாக்கி முனையில் மாணவி கற்பழிப்பு: பள்ளி முதல்வர் கைது: துப்பாக்கி முனையில், மாணவியை கற்பழித்த பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டத்திலுள்ள “பார்க் வுட்’ சர்வதேச பள்ளியின் முதல்வர் சலாவுதீன் முகமது அயூப்பை, கற்பழிப்பு புகாரின் அடிப்படையில், ஜூபிலி ஹில்ஸ் போலீசார் கைது செய்துள்ளனர். அந்த பள்ளியில் படிக்கும் 9ம் வகுப்பு மாணவியை, அயூப் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி கற்பழித்ததாக, அந்த மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், நேற்று முன்தினம் அவர் கைது செய்யப்பட்டார்[1].

சலாவுத்தீன்-அயூப்-கைது-மாணவிகள்-கற்பழிப்பு

சலாவுத்தீன்-அயூப்-கைது-மாணவிகள்-கற்பழிப்பு

இது குறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது[2]: தன் பள்ளியில் படிக்கும் 9ம் வகுப்பு மாணவியை, அயூப், ஜூபிலி ஹில்ஸிலுள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று, துப்பாக்கியைக் காட்டி, மிரட்டி கற்பழித்துள்ளார். ஆபாசப் படமும் எடுத்துள்ளார்[3]. இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லக் கூடாதென்று கூறியும், ஆபாசப் படத்தை காட்டி மிரட்டியும், கடந்த ஒரு ஆண்டாக அந்த மாணவி மீது பாலியல் வன்முறைகளை நிகழ்த்தி வந்துள்ளார். கருக்கலைப்பு மாத்திரைகளைத் தனக்குக் கொடுத்தது இல்லாமல், மருத்துவரிடத்திலும் அழைத்துச் சென்றுள்ளதாகக் கூறியுள்ளாள்..

மாணவி-ஹைதரபாத்-மும்பை

மாணவி-ஹைதரபாத்-மும்பை

பிரைட்டின் முறையை விஞ்சிய அயூப்பின் முறை: அயூப் மாணவிகளின் ஹாஸ்டலில் ஒரு தங்கும் அறை வைத்திருந்தான். மார்ச் 10ம் தேதி அந்த மாணவியை அங்கு வருமாறு அழைத்தானாம். மயக்கமருந்து கலந்த பானத்தைக் கொடுத்து மயக்கம் அடைந்தவுடன் அம்மாணவியைக் கெடுத்துள்ளானாம். 17-வயதான அம்மாணவி மயக்கம் தெளிந்ததும், வலியாக இருக்கிறது என்று சொன்னபோது, அயூன், கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்றானாம். 45 நாட்கள் கழித்து அதேமுறையைக் கையாண்டானாம். பிறகு மயக்க மருந்து கொடுக்காமலே கற்பழிக்க முயன்றபோது, அம்மாணவி தடுத்திருக்கிறாள். ஆனால், உன்னையும், உன் சகோதரி மற்றும் சகோதரனையும் கொன்று விடுவேன் என்று மிரட்டி கற்பழித்திருக்கிறான். இதுமாதிரி தன்னை 1520 தடவை கற்பழித்ததாக புகாரில் குறிப்பிட்டுள்ளாள். அதில் இரண்டுமுறை, அயூப் தன்னுடைய இல்லத்திலேயே அழைத்துச் சென்று கற்பழித்திருக்கிறான்.

பெற்றோரிடம் சொல்லிய பிறகு புகார் கொடுக்கப்பட்டது: இது குறித்து, டில்லியிலுள்ள தனது பெற்றோரிடம் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மாணவி கூறியிருக்கிறார். இதனையடுத்து, அவளது பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், பள்ளி முதல்வர் அயூப் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு போலீசார் கூறினர்.

பள்ளி பெண் ஊழியர், அசிரியைகள், மாணவிகள் பட்டபாடு[4]: அந்த பள்ளியின் மாணவிகள் மற்றும் வேலைசெய்வோர் அயூபின் நடத்தைப் பற்றி பலமுறை புகார் கொடுத்துள்ளதாகக் கூறுகிறார்கள். ஏனெனில், அலுவலகத்தில் வேலை செய்வோர் மற்றும் ஆசரியைகள் கூட அயூப்பின் நடத்தையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2003லிருந்து வேலை செய்து வரும் ஒரு பெண் ஊழியர் கூறுவதாவது, “மாணவியர்களிடம் அவை நடந்து கொள்ளும் விதம் எனக்குக்கொஞ்சம்கூட பிடிக்கவில்லை. மாணவிகளிடம் அடிக்கடி சக மாணவர்களிடம் அவர்களுடைய உறவு எப்படியுள்ளது என்று கேள்விகள் எல்லாம் கேட்டிருக்கிறான். வயதுக்கு வர்ம் போது ஏற்படும் உணர்ச்சிகள், அனுபவங்கள் முதலியவற்றை தன்னிடம் விவரிக்கும்படும் கட்டாயப்படுத்துவான். இதையெல்லாம் “ஆலோசனைக் கூறுதல்” என்ற போர்வையில் நடத்திவந்தான். நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் கேட்கவில்லை”. அந்த மாணவியின் கற்பழிப்புப் பற்றி நெடுங்காலமாக கேட்டு வந்துள்ளானாம். அதுமட்டுமல்லாது, அடிக்கடி ஆசிரியைகளை தொந்தரவு செய்வதுடன், அசிங்கமான வார்த்தைகளையும் பிரயோகித்து பேசுவானாம்.

புகார் கூறிய மாணவி மீது நடவடிக்கை – பள்ளீயிலிருந்து நீக்கம்: இதனிடையே, அந்த மாணவிக்கு படிப்பில் போதிய ஆர்வமில்லையென்று கூறி, பள்ளியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என பள்ளி நிர்வாகம் கருத்து தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் பலர் நேற்று அப்பள்ளியின் முன் ரகளை செய்து அலுவலகத்திலுள்ள நாற்காலிகளை உடைத்தனர். இப்பள்ளி மிகவும் பிரபலமானது. கனடா, துபாய் மற்றும் சவுதி அரேபியாவில் இப்பள்ளியின் கிளைகள் உள்ளன.

ஆயிஷா தன்வீர் மாணவிகளைக் குற்றஞ்ச்சாட்டுவது[5]: அயூப்பின் சகோதரி மற்றும் அப்பள்ளியின் மற்றொரு இயக்குனராக இருக்கும் ஆயிஷா தன்வீர் என்ற பெண் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. அம்மாணவி 2009லேயே வகுப்புவாதப் பிரச்சினையை உருவாக்க முயன்றபோது, அப்பள்ளியிலிருந்து நீக்கப்பட்டாள். அவள் அப்பள்ளி மாணவனுடன் உறவு வைத்திருந்ததாகவும், அதனால் அவனை மதம் மாற பிடிவாதம் பிடித்ததாகவும், இதனால் மதப்பிரச்சினை வரும் என்று, குறிப்பாக, அம்மாணவனே புகார் கொடுத்தபோது, பள்ளியிலிருந்து நீக்கப்பட்டாள். மறுபடியும் இந்த வருடம் ஜனவரியில் அந்த பெண்ணின் தந்தை வந்து கெஞ்சியதால், மறுபடியும் அனுமதி வழகினோம்.

ஆதரிக்கும்-ஆயிஷா-தன்வீர்-பள்ளிப்பெண்கள்-கற்பழிப்பு

ஆதரிக்கும்-ஆயிஷா-தன்வீர்-பள்ளிப்பெண்கள்-கற்பழிப்பு

மேலும், அம்மாணவி உயர்ந்த இடத்திலிருந்து வந்துள்ளதால், பள்ளி நிர்வாகம் மறுக்கமுடியாமல் போய்விட்டது என்று ஒரு ஆசிரியை சொல்கிறார். அதனால் அம்மாணவியும் மற்றவர்களிடம் கொஞ்சம் துடுக்காகவே பேசுவாள், “என்னை யாதாவது செய்தால், இந்த பள்ளிக்கே பிரச்சினையை உண்டாக்கி விடுவேன்”, என்பாளாம். அப்பெண்ணின் தந்தை, “பள்ளியின் பெயர் கெட்டுவிடும் என்று அயூப் என்னை மிரட்டுகிறார். அது மட்டுமல்லாது, எனக்கு ஒரு வெற்று-செக்கைக் கொடுத்து அமைதியாக இருக்கும்படியும் மிரட்டியுள்ளார்”, என்கிறார்.


[1] தினமலர், துப்பாக்கி முனையில் மாணவி கற்பழிப்பு: பள்ளி முதல்வர் கைது, ஜூலை 22,2010,  http://www.dinamalar.com/News_Detail.asp?Id=45139

[2] P Hareesh, Parkwood school director molested six more girls, First Published : 23 Jul 2010 04:44:26 AM IST

http://expressbuzz.com/cities/hyderabad/parkwood-school-director-molested-six-more-girls/192246.html

[3] The Hindu, Friday, Jul 23, 2010, http://www.hindu.com/2010/07/23/stories/2010072358310100.htm

[4] Times of India, ‘Parkwood staff, students faced abuse’, TNN, Jul 22, 2010, 11.56pm IST

http://timesofindia.indiatimes.com/city/hyderabad/Parkwood-staff-students-faced-abuse/articleshow/6202912.cms

[5] http://www.mumbaimirror.com/article/2/20100723201007230340093091b362324/Malad-girl-in-Hyderabad-alleges-rape-by-principal.html