சென்னை போர்னோகிராபி வியாபார தம்பதியர் கைது – எச்சரிக்கை – அபாயகரமான சமூக தாக்குதல், செக்ஸ்–தீவிரவாதம் மற்றும் சமுதாய சீரழிவு!
சினிமா, செக்ஸ், போர்னோகிராபி, ஆண்–பெண் அந்தரங்க காட்சிகளை வெளியிடும் ஆபாச வலைத்தளங்களின் பயங்கரம்: இணையதளங்களுக்கான தேடல்களில் பொதுவாக உபயோகமுள்ள தகவல்களுக்காக தெடி, பலன் பெற்று வரும் நேரத்தில், சினிமா, செக்ஸ், போர்னோகிராபி, ஆண்-பெண் அந்தரங்க காட்சிகளை வெளியிடும் ஆபாச வலைத்தளங்களில் உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் அதிக நேரத்தை செலவிட்டு வருவது, தெரிந்த விசயமாகவே இருக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் தென்மேற்காசிய, அப்பிரிக்க நாடுகளில் இத்தகைய காரியங்களுக்கு விநியோகம் செய்ய, படங்கள், திரைப்படங்கள் முதலியவற்றை எடுத்து அனுப்பிக் கொண்டிருப்பது, ஒரு வேலையாகவே நடந்து வருகிறது. இருப்பினும், குழந்தை-உடலுறவு காட்சிகள் தடை செய்யப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக, சிறுவர்-சிறுமியர் தொடர்புடைய ஆபாச வலைத்தளங்களுக்கு (child pornography) உலகில் பல நாடுகள் தடை விதிக்கப்பட்டிருப்பதால் இதுபோன்ற வலைத்தளங்களுக்கு அதிக கிராக்கியும், மவுசும் உண்டு[1]. மேற்படி காட்சிகளை இணையத்தில் பதிவேற்றம் செய்து அவற்றை பார்க்கவரும் ‘ரசிகர்களிடம்’ ஏராளமான கட்டணம் சந்தாவாக வசூலிக்கப்படுகிறது[2].
சென்னையில் குழந்தை போர்னோகிராபி புதியதல்ல: மும்பு, வில் ஹியூம் என்ற டச்சுநாட்டுக் காரன், சென்னையிலேயே பல வருடங்கள் தங்கியிருந்து, இத்தகைய வேலையை செய்து வந்தான். பிறகு, மாட்டிக் கொண்டு, இப்பொழுது புழல் சிறையில் தண்டனை பெற்று வருகிறான். டாக்டர் பிரகாஷும் அதே வேலையை செய்துதான் மாட்டிக் கொண்டான். அதாவது, சென்னைவாசிகள், அனாதை இல்லங்கள் நடத்துபவர்கள், குழந்தைகளை இல்லங்களுக்குக் கூட்டி வருவது, அவர்களை அத்தகைய காரியங்களில் ஈடுபடுத்துவது, வீடியோ எடுப்பது என்ற நிலைகளில் பலர் நேரிடையாகவும், மறைமுகமுகமாகவும் செயல்பட்டுவருவது தெரிகிறது. சமூகத்தை சீரழிக்கிறோமோ என்ற எண்ணாமே அவர்களுக்கு இல்லாமல் இருந்தது நோக்கத்தக்கது. இந்நிலையில், தமிழகத்தின் தலைநகரான சென்னையின் அருகாமையில் வசித்துவரும் ஒரு தம்பதியர் இதுபோன்ற குழந்தைகளின் பாலியல் உறவு தொடர்பான காட்சிகளை வெளியிடும் கட்டண வலைத்தளத்தை நடத்தி வருவதாக சைபர் கிரைம் போலீசாருக்கு தெரியவந்தது[3]. இதையடுத்து, அந்த வலைத்தளத்தில் ஆபாசப் படங்களை பதிவேற்றம் செய்பவர்களின் ஐ.பி. நம்பர் மற்றும் இமெயில் ஐ.டி.க்களை மோப்பம் பிடித்த போலீசார் சென்னை அருகேயுள்ள சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அதிரடி ரெய்டு நடத்தினர்[4]. அங்கிருந்தபடி மேற்படி ஆபாசப் படங்களை பதிவேற்றம் செய்ய இந்த தம்பதியர் இரண்டு வலைத்தளங்களை நடத்தி வந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது[5].
கோடிகளில் புரளும் போனோகிராபி தொழில்: பர்மா பஜார் பக்கம் யாராவது நடந்து சென்றால், சிலர் அணுகி, “என்ன சார், அந்த…..சிடி வேண்டுமா, டிவிடி வேண்டுமா” என்று கேட்டு பின்னாலேயே வருவர். அதற்காக வருபவர்கள் மற்றும் சபலபுத்து கொண்டவர்கள் வாங்கிக் கொண்டு பார்ப்பர். பிறகு செயல்முறையில் கிடைக்குமா என்று தேடி போகவும் செய்வர். வெறும் பார்த்துக் கொண்டே இருப்பவர்கள், இணைதளங்களில் தேடும் போது பலான படங்கள், வீடியோக்கள் கிடைக்கும். இந்த வலைத்தளங்களை பார்வையிட வரும் வாடிக்கையாளர்களிடம் இருந்து 2 கோடியே 40 லட்சம் ரூபாயை கட்டணமாக வசூலித்துள்ளதாகவும், மேற்படி தொகை பெங்களூரில் உள்ள ஒரு வங்கி கணக்கில் செலுத்தப்பட்டதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்[6].
நன்கு படித்த சென்னை தம்பதியர் இத்தொழிலில் ஈடுபட்டது: இதையடுத்து, இந்த ஆபாச வலைத்தளங்களை நடத்திவந்த சித்தாத்தா வேலு (Siddhartha Velu 48) மற்றும் அவரது மனைவியான பிரிசில்லா மார்கரெச் தன்ராஜ் (Priscilla Margaret Dhanraj 45) ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சித்தார்த்த வேலு பிஎச்டி பட்டதாரி[7] / பள்ளிப்படிப்பே முடிக்காதவன்[8] என்றும் ஊடகங்கள் வழக்கம் போல மாறுபட்ட விவரங்களைக் கொடுக்கின்றன[9]. அவன் படித்தானா-இல்லையா என்ற விவரத்தை விட, மனிததன்மையற்ற அவன், இத்தகைய குரூர வேலை செய்தான் என்பது தான் அபாயகரமான விசயம். திருச்சியைச் சேர்ந்த இவன், வேலூரைச் சேர்ந்த பிரிசில்லாவை 2011ல் திருமணம் செய்து கொண்டான். இவன் நெட்வொர்கிங், வெப்ஹோஸ்டிங் முதலிய வேலைகளில் கில்லாடி. பிறகு “Cutecandid, indianshowgirls, mywife4u, indianswington, shakeela4u” முதலிய வெப்சைட்டுகளை உருவாக்கினான்[10]. இணைதள அறிவு, ஞானம், தொழிற்நுட்பம் எப்படி இதுமாதிரியான தீவிரவாதிகளில் சிக்கும் போது, துஷ்பிரயோகிக்கப் படுகிறது என்பதனையும் அறிந்து கொள்ளலாம். இதன் மூலம் தான் பலரது வாழ்க்கையினை கெடுத்துள்ளார்கள் இந்த தம்பதியர். தமது பையனை சிங்கபூரில் படிக்க வைக்கின்றனராம். தன் மகன் நன்றக இருக்க வேண்டும், மற்ற பிள்லைகள் நாசமாக வேண்டும் என்ற இவர்களின் வன்மத்தைக் கவனிக்க வேண்டும். பிறகு எப்படி மற்ற சிறுவர்-சிறுமியரை அத்தகைய வேலைகளில் ஈடுபடுத்தினர். இத்தகைய வக்கிரபுத்தி, அரக்கத்தனம் நிரம்பிய மனோப்பாங்கு முதலியவற்றை அடையாளங்கொண்டு, இவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்.
விசாரணைக்குப் பிறகு, கைது முதலியன: இவர்கள் இருவரும் இங்கிலாந்து, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் வசிக்கும்போது பல்வேறு இணையதளங்களை தொடங்கி, அவற்றில் ஆபாசபடங்களை குறிப்பாக சிறுவர், சிறுமிகளின் ஆபாச படங்களை வெளியிட்டு கோடி, கோடியாக பணத்தை சம்பாதித்து வந்தனர்[11]. அவர்கள் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சென்னைக்கு இருப்பிடத்தை மாற்றி விட்டனர்[12]. முன்னர் பெங்களூரில் இருந்தனர் என்று செய்திகள் அறிவிக்கின்றன[13]. இவ்வாறன இடங்கள் ஏற்கெனவே பிடோபைல்களுடன் சம்பந்தப்பட்டிருப்பதை நினைவு கூறவேண்டும். அதுமட்டுமல்லாது, அங்கிருக்கும் கிருத்துவ அனாதை இல்லங்கள், காப்பங்களில் பிடோபைல்களின் காமக் களியாட்டங்கள், செக்ஸ் வக்கிரகங்கள் நடந்தேறியுள்ளன. ஊடகங்கள் அவ்வாறான இணைப்புகளை, சம்பந்தங்களை எடுத்துக் காட்டாவிட்டாலும், நடந்து வரும் சமூக பிறழ்சிகள், செக்ஸ்-குற்றங்கள், முதலியவற்றை பல நோக்குகளில் கவனிக்க வேண்டியுள்ளது. சமூகத்தை பாதிக்கும், இத்தகைய வக்கிரங்களை எந்த சமூக ஆர்வலரும் பொறுத்துக் கொள்ள முடியாது, பெண்ணிய சித்தாந்திகளும் அடங்கியிருக்க முடியாது. ஆனால், இத்தகய விசயங்கள் வரும் போது, அவர்கள் அமுக்கியே வாசித்து வருகின்றனர் அல்லது அமைதியாக இருந்து விடுகின்றனர்.
எப்படி சிக்கினர்?: துரைப்பாக்கத்தில் பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தனர். அனாதை ஆசிரமங்களில் வசிக்கும் சிறுவர், சிறுமிகளை ஆபாசமாக படம் பிடித்து அந்த படங்களை, இணையதளங்களில் வெளியிட்டதாக இவர்கள் மீது புகார்கள் வந்தன. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. சைபர் கிரைம் போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டனர்[14]. இணைதள குற்றங்களை ஆராய்ந்து வரும் “சைபர்” பிரிவு போலீஸார், வல்லுனர்களின் உதவியுடன், அத்தகைய படங்கள் எங்கிருந்து தகவேற்றம் செய்யப்படுகின்றன முதலிய விவரங்களைக் கண்டுபிடித்து, குற்றவாளிகளை நெருங்கினர். சித்தார்த்த வேலு வசித்த வீட்டில் சோதனை நடத்தி, ஆபாச படங்கள் உள்ளிட்ட நிறைய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்[15]. முன்னர் அரசு ஆபாச தளங்களை முடக்கிய போது, இவை எப்படி தப்பித்தன என்று தெரியவில்லை. “சர்வர்” இந்தியாவில் இல்லை என்ற முறையில் தப்பித்தனவா அல்லது வேறேந்த காரணங்கள் உள்ளனவா என்று ஆராய வேண்டியுள்ளது. அவர்கள் செய்துவந்த குற்றமீறல்களுக்காக சம்பந்தப்பட்ட ஆதாரங்களும் கிடைத்தன[16]. தீவிர விசாரணைக்குப்பிறகு சித்தார்த்த வேலுவும், அவரது மனைவி பிரிசில்லா மார்க்கரேட்டும் 27-07-2016 புதன்கிழமை அன்று தகவல் தொழிற்நுட்பம் சட்டம் பிரிவுகளில் கைது செய்யப்பட்டனர்[17]. பிறகு 9வது குற்றவியல் மெட்ரோபோலிடின் மாஜிஸ்ட்ரேட் முன்னர் ஆஜர் செய்யப்பட்டனர்[18]. முறைப்படியான சட்டமுறைகளுக்குப் பிறகு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்[19]. இது பிடிஐ செய்தி ஆனதால், ஆங்கில ஊடகங்கள் அப்படியே போட்டிருக்கின்றன.
© வேதபிரகாஷ்
26-07-2016
[1] மாலைமலர், சிறுவர், சிறுமியர் உறவுகொள்ளும் ஆபாசப் படங்களை வெளியிட கட்டண வலைத்தளம் நடத்திய தம்பதியர் கைது, பதிவு: ஜூலை 27, 2016 08:55
[2] http://www.maalaimalar.com/News/TopNews/2016/07/27085555/1028540/TN-couple-host-child-pornography-websites-held.vpf
[3] தமிழ்.வெப்துனியா, சிறுவர்கள் ஆபாச வலைத்தளம் நடத்திய கணவன் மனைவி கைது, Last Modified: புதன், 27 ஜூலை 2016 (13:02 IST)
[4] http://www.tamil.webdunia.com/article/regional-tamil-news/couple-arrested-for-running-a-porn-website-116072700021_1.html
[5] தமிழ்.ஒன்.இந்தியா, கேவலம்.. குழந்தைகளின் ஆபாச படங்களை வெப்சைட்டில் வெளியிட்டு ரூ.2.4 கோடி வசூல்! சென்னையில் தம்பதி கைது, By: Veera Kumar, Published: Wednesday, July 27, 2016, 12:18 [IST].
[6] http://tamil.oneindia.com/news/tamilnadu/chennai-couple-arrested-running-child-porn-websites-258928.html
[7] பத்ரிகா.காம், இளம்வயது சிறுவர், சிறுமிகளின் ஆபாச இணையதளம்! தம்பதியர் கைது, Posted by ஏ.டி.எஸ்.பாண்டியன், Wednesday, ஜூலை 27, 2016. 1.00 pm.
[8] Police sources said, Siddhartha Velu, a native of Trichy was married to Priscillika from Vellore five years ago. The couple shifted to chenai and rented a house in sholinganallur. During investigations, it was revealed that Siddhartha, a school drop out was well versed in networking and webhosting.
[9] https://www.patrikai.com/adolescent-porn-website-couple-arrested/
[10] Velu hit upon the idea of child porn as he thought there weren’t many websites on it in India. He started two child porn websites -‘cutecandid’ and ‘indianshowgirls’. Later, he floated three more web portals, `mywife4u’, `indianswingtown’ and `shakeela4u’. The websites displayed contact email ids. The websites that had a paywall were linked to Velu’s bank account through an international money portal. Payments had to be made to view content.
[11] தினத்தந்தி, சிறுவர்,சிறுமிகளின் ஆபாச இணையதளம் நடத்தி வந்த சென்னை கணவன்–மனைவி கைது, பதிவு செய்த நாள்: புதன், ஜூலை 27,2016, 11:38 AM IST; மாற்றம் செய்த நாள்: புதன், ஜூலை 27,2016, 11:38 AM IST
[12] Business Standard, TN couple host child pornography websites, held, Press Trust of India | Chennai July 27, 2016 Last Updated at 00:07 IST
[13] http://www.business-standard.com/article/pti-stories/tn-couple-host-child-pornography-websites-held-116072700012_1.html
[14] http://www.dailythanthi.com/News/State/2016/07/27113809/Girls-porn-picture-Published-on-the-website-The-husbandwife.vpf
[15] Deccan Chronicle, Chennai couple arrested for allegedly running child porn websites,
PTI, PublishedJul 27, 2016, 9:29 am IST; UpdatedJul 27, 2016, 9:29 am IST
[16] Indiatoday, Chennai techie couple earned Rs 2 crore from child porn sites, arrested, Rohini Swamy | Posted by Liu Chuen Chen,Chennai, July 27, 2016 | UPDATED 09:44 IST
[17] A case was registered under provisions of Information Technology Act and searches were conducted at the residence of the couple at Sholinganallur in Chennai. Materials establishing the couple’s links with these two child porn websites besides other websites with porn content were recovered and seized, the release said.
[18] Indian Express, Couple who made a fortune running child porn site arrested in Chennai
Published: 27th July 2016 12:16 AM; Last Updated: 27th July 2016 06:37 AM
[19] http://www.newindianexpress.com/cities/chennai/Couple-who-made-a-fortune-running-child-porn-site-arrested-in-Chennai/2016/07/27/article3548708.ece