Posts Tagged ‘ஆபாசப் படங்கள்’

தெய்வத்தின் சொந்த தேசத்தில், அதிகம் எழுத்தறிவு கொண்ட மாநிலத்தில் நிர்வாண பூஜை, நரபலி முதலியன குரூர குற்றங்கள் எப்படி நடக்கின்றன – தீர்வு என்ன? (4)

ஒக்ரோபர் 15, 2022

தெய்வத்தின் சொந்த தேசத்தில், அதிகம் எழுத்தறிவு கொண்ட மாநிலத்தில் நிர்வாண பூஜை, நரபலி முதலியன குரூர குற்றங்கள் எப்படி நடக்கின்றன – தீர்வு என்ன? (4)

கேரள அரசு மாந்திரீக நரபலி நிபுணன் பைத்தியம் என்றது: அரசின் மெத்தனத்தால் தான் இத்தகைய குற்றங்கள் நடந்துள்ளன, என்று நீதிமன்றம் முதல் மற்ற பொறுப்புள்ளவர்கள் வெளிப்படையாக சொல்ல ஆரம்பித்துள்ளதால், ஆளும் மார்க்சீய அம்யூனிஸ்ட் ஆட்சி, இதனை திசைத் திருப்பி, அமுக்கி வாசிக்க முயல்கிறது. முக்கிய குற்றவாளி ஒரு பைத்தியம், மனோநல வியாதி கொண்டவன், என்றெல்லாம் சித்தரிக்கப் பட்டு வருகிறான். இறகு, அதே காரணத்திற்காக அவன் குற்றத்திலிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம். இதனால், அதே முறையில்[1], “உண்மையில் மனநிலை சரியில்லாதவர்களால் தான் இப்படி செய்ய முடியும். இது நவீன சமுதாயத்திற்கு சவாலாக உள்ளது. இதுபோன்ற தவறான எண்ணங்கள் மற்றும் மூடநம்பிக்கைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு, அனைத்திலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், இந்த தீமையை எதிர்த்துப் போராட வேண்டும்,” என்று முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது[2]. இவ்விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து கேரள மாநில காவல்துறை உத்தரவிட்டுள்ளது[3]. துணை ஆணையர் சசிதரன் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது[4].

கேரளாவும் ஆபாசப் படங்களும்: ஆபாசப் படம் / போர்ன் வீடியோ எடுப்பது, முதலியவை பல்லாண்டுகளாக கேரளாவில் நடந்து வருகின்றன என்று செய்திகள் மூலம் அறியப் படுகிறது. கேரள திரைப்படங்களே முன்பு 1960-70களில் பிரபலமாக இருந்தன. அத்தகைய காட்சிகள் வரும் என்று தியேட்டர்களுக்கு செல்லும் வழக்கமும் இருந்தது. பிறகு 1980களில் வீடியோ கேசட், சிடி என்று தொழிற்நுட்பமும் மாறி விட்டது. பிறகு இன்டெர்நெட் வந்ததிலிருந்து, செல்போன் போன்றவற்றால், தனிநபர் விருப்பங்களுக்கு ஏற்றபடி மாறின, மாறி விட்டன.  கேரளாவில் இதைப் பற்றிய செய்திகள் இன்றும் வரத்தான் செய்கிறது, சரிதா நாயர் விவகாரத்திலும் அப்பிரச்சினை உள்ளது. உதாரணத்திற்கு, இச்செய்தி கொடுக்கப் படுகிறது. கேரளாவில் 13 வயது சிறுமி ஒருவர், அவருடைய அண்ணனால் கர்ப்பமாகியுள்ளார். வயிற்றுவலி என சிகிச்சைக்காக மருத்துவமனை சென்றபோதுதான் 30 வார கர்ப்பமாக இருக்கிறார் என்பதே தெரியவந்துள்ளது[5]. இணையதளத்தில் ஆபாசப் படங்கள் எல்லா வயதினருக்கும் எளிதில் கிடைத்துவிடுகின்றன, இதனால், சமூக ஊடகங்கள் கட்டுப்படுத்தப் பட வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுருத்தியது.

கேரளாவில் சிறுவர், சிறுமியரின் ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பிய விவகாரம்: கேரளாவில் சிறுவர், சிறுமியரின் ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பிய 21 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்[6]. அவர்களிடம் இருந்து லேப்டாப்,  செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன[7]. கேரளாவில்  சமீப காலமாக வாட்ஸ்  அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் சிறுவர், சிறுமிகளின் ஆபாச   வீடியோக்கள் பரவி வருவதாக போலீசுக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இது   தொடர்பாக சர்வதேச  அளவிலும் புகார்கள் உள்ளன. சர்வதேச போலீசான   இன்டர்போலுக்கும் புகார்கள் வந்துள்ளன.இதையடுத்து சிறுவர், சிறுமியரின் ஆபாச வீடியோக்கள் வெளியிடுவதை தடுக்க இன்டர்போல் அழைப்பு  விடுத்துள்ளது. இதன்படி திருவனந்தபுரம்  சரக ஏடிஜிபி மனோஜ் ஆப்ரகாம்  தலைமையில் ‘பி-ஹண்ட்’ என்ற பெயரில்  ஒரு தனிப்படை  அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் கேரளா முழுவதும் 29 இடங்களில்  அதிரடி சோதனை நடத்தினர்.  இதில் சிறுவர், சிறுமியர் ஆபாச படங்களை பரப்பிய 21  பேர் கைது  செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்த லேப்டாப், செல்போன்கள், ஹார்ட்  டிஸ்க்,  யுஎஸ்பி டிரைவ் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. இதுகுறித்து ஏடிஜிபி   மனோஜ் ஆப்ரகாம் கூறியது: “சிறுவர், சிறுமியர் ஆபாச வீடியோ பரப்புகிறவர்களுக்கு 5 வருட சிறை தண்டனையும், 10 லட்சம் அபராதமும்  விதிக்கப்படும். பிஹண்ட் சோதனை மேலும் தீவிரப்படுத்தப்படும். கேரளா முழுவதும் 84 பேர் தீவிரமாக  கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். விரைவில்  மேலும் பலர் கைது  செய்யப்படுவார்கள். பல வாட்ஸ் அப், பேஸ்புக்  குரூப்புகள் கண்காணிக்கப்பட்டு  வருகின்றன,” இவ்வாறு  அவர் கூறினார்.

கேரள போர்ன், மாந்திரீகம், கொலை எல்லாம் திட்டமிட்டு நடக்கிறதா?: ஆபாசப் படங்கள் எடுக்க பெண்கள் தேவை, அதற்காக முறை தவறிய பெண்கள், அத்தகைய ஆண்களின் தொடர்புகளில் இருப்பார்கள். இது ஒரு “செக்சஸ்” என்பார்கள். அரசியல், சட்டம்-ஒழுங்கு அமூல் படுத்துகிறவர்களின் மறைமுக ஆதரவு என்றெல்லாம் இருந்து விட்டால், சாதாரண மக்கள் ஒன்றும் செய்ய முடியாது. பெரும்பாலான விவகாரங்கள், தெரியாமல், ரகசியமாகவே நடந்து கொன்டு இருக்கும். தினம் தினம் வேலை செய்து, வாழ்க்கை நடத்தும் மக்கள் இவற்றைப் பற்றி கவலைப் பட மாட்டார்கள், அதற்கு அவர்களுக்கு நேரமும் இல்லை, இருக்காது. ஆக, ஒருவேளை சம்பந்தப் பட்ட பெண்கள் ஏதோ காரணங்களுக்காக நச்சரித்துக் கொண்டே இருந்தால், ஆண்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு, எல்லைகளைக் கடக்கும் போது, தீர்த்துக் கட்டி விடலாம் என்ற முடிவுக்கும் வரலாம். அந்நிலையில், இத்தகைய பண ஆசை பிடித்த ஆட்கள் கிடைக்கும் போது, ஒரே கல்லால், இரு மாங்காய் அடிக்கும் விதத்தில், நரபலியும் கொடுத்து, பொஇரச்சினை செய்யும் பெண்ணையும் தீர்த்து கட்டுவார்களோ என்னமோ? இதெல்லாம் மற்றவர்களுக்கு தேவையில்லாத விசயங்கள். இருப்பினும், போலீஸார் அவ்வாறெல்லாம் கூட விசாரணை செய்யலாம். சாதாரண மக்கள் கடவுளை நம்பிக்கொண்டு, தெய்வ நம்பிக்கையுன், நிம்மதியாக வாழ்ந்தாலே போதும்.

தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டு வருபவனை சைக்கோ, மனநோயாளி, வக்கிரம் படித்தவன், அதனால் அப்படி செய்தான், செய்வான் என்று அமைதியாகி விடமுடியாது: அதிக படிப்பறிவு கொண்ட மாநிலம், முற்போக்கு எண்ணம் கொண்டவர்கள், மெத்தப் படித்தவர்கள், இந்திய அரசியலில் தொடர்ந்து தாக்கத்தை ஏர்படுத்தி வருகிறவர்கள், எல்லா துறைகளிலும், நிறுவனங்களிலும், இடங்களிலும் இருப்பவர்கள் என்றெல்லாம் இம்மாநிலத்தவர்கள் கருதப் பட்டு வருகிறார்கள். மதம், ஜாதி, சித்தாந்தம் போன்றவற்றால் வேறுபட்டிருந்தாலும், மலையாளத்தவர் என்று ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்று மற்ற மாநிலத்தவர்களால் அறியப் பட்டு வருகிறார்கள். அந்நிலையில், கேரளாவில் தொடர்ந்து இத்தகைய, குறிப்பாக பாலியல், செக்ஸ், காமம், கற்பழிப்பு, தகாத உறவுகள் என்று வக்கிரங்களாக, குற்றங்களாக, ஏன் கொலைகளாகக் கூட மாறி வருவதை பற்பல வழக்குகளில் தெரிந்து வருகிறது. அபயா கொலை, ஐஸ்கிரீம் பார்லர் செக்ஸ், மூலக்கல் பிஷப் கற்பழிப்பு என்று சமீபத்தைய விவகாரங்கள் அறியப் பட்டவையாக இருக்கின்றன. அந்த பட்டியலில் இதுவும் சேரலாம். கொஞ்சம் கொஞ்சமாக மறக்கப் படலாம். ஆனால், அத்தகைய சமூக சீரழிவுகள், வக்கிரங்கள், மனப்பாங்குகள் சட்டமீறல்கள் முறையாக ஆராயப் பட வேண்டியுள்ளது. தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டு வருபவனை சைக்கோ, மனநோயாளி, வக்கிரம் படித்தவன், அதனால் அப்படி செய்தான், செய்வான் என்று அமைதியாகி விடமுடியாது. கொலைகள் என்பது பெரிய குற்றம் தான். பல கொலைகள் செய்தால், குரூரமாக செய்தால், நோய் என்று வழக்குகளை மூடிவிட முடியாது.

© வேதபிரகாஷ்

14-10-2022.


[1] ஜீ.நியூஸ், கேரளா நரபலி: போலி சாமியார் முன் உடலுறவு! நரபலி கொடுக்க இதுதான் காரணமா?, Written by – Bhuvaneshwari P S | Edited by – Shiva Murugesan | Last Updated : Oct 12, 2022, 10:37 AM IST.

[2]  https://zeenews.india.com/tamil/india/sex-in-front-of-fake-preacher-this-reason-for-human-sacrifice-in-kerala-414483

[3] தினகரன், கேரளாவில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு..!!, 2022-10-13@ 10:46:16.

[4] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=806375

[5] ஹமிழ். ஏபிபி.லைவ், ஆபாசப்படம் ஈசியா கிடைக்குது.. சிறுமிகள் கருவுறுதல் குறித்த வழக்கில் கோர்ட் சொன்ன பல கருத்து!,By: ஜான் ஆகாஷ் | Updated at : 24 Jul 2022 01:49 PM (IST);  Published at : 24 Jul 2022 01:42 PM (IST)

https://tamil.abplive.com/news/india/teen-pregnancy-porn-spark-kerala-high-court-call-for-sex-ed-review-63331

[6] தினகரன், கேரளாவில் சிறுமிகள் ஆபாச வீடியோ பரப்பிய 21 பேர் அதிரடி கைது: லேப்டாப், செல்போன்கள் பறிமுதல், 2019-04-03@ 00:42:44

[7] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=485162

23 வயது ஆசிரியை, 15 வயது மாணவனுடன் ஓடிப்போனது, உறவு கொண்டது, கல்யாணம் செய்து கொண்டது, முதலியன இயற்கையானதா, சமூக ஏற்புடையதா, தனிமனித ஒழுக்கமா?

மார்ச் 13, 2016

23 வயது ஆசிரியை, 15 வயது மாணவனுடன் ஓடிப்போனது, உறவு கொண்டது, கல்யாணம் செய்து கொண்டது, முதலியன இயற்கையானதா, சமூக ஏற்புடையதா, தனிமனித ஒழுக்கமா?

ஓடிப்போன மாணவன், ஆசிரியை 2015-16.-பிடிபட்டனர்

சட்டப்படி நடக்கும் விசயங்கள்: இதன் பின்னர் கோதைலட்சுமி மற்றும் சிவசுப்பிரமணியன் இருவருக்கும் தென்காசி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது[1]. பின்னர் அவர்களை தொன்காசி நீதிமன்ற நீதிபதி ஜெகதீஸ்வரி முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர்[2]. அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து கோதைலட்சுமி நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்[3]. மாணவர் சிவசுப்பிரமணியன் நெல்லை கூர்நோக்கு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளார். சிவசுப்பிரமணியனின் தாயார் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளால் வரும் திங்கட்கிழமை 14-03-2016 சிவசுப்பிரமணியனை போலீசார் மதுரை உயர் நீதி மன்ற கிளையில் ஆஜர்படுத்த உள்ளனர். இதெல்லாம் சட்டப்படி நடக்கும் விவகாரங்கள், ஆனால், சமூகத்தில் இதன் விளைவைப் பற்றி கவலைப்படப் போவது யார்?

ஓடிப்போன கோதை ஆசிரியை 2015-16

முன்பு எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்லவில்லை: மாணவன் ஆசிரியையை வகுப்பில் தூக்கி நிற்பதைப் போன்று வெளியான புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏனெனில், பள்ளியில், அத்தகைய புகைப்படத்தை யார் எடுத்தது என்ற கேள்வி எழுந்தது. இணைதளத்தில் இருவரும் பாலியலில் ஈடுபடுவதைப் போன்ற வீடியோ சுற்றில் வந்தது. அப்பொழுது பல கேள்விகள் எழுப்பப்பட்டன. ஏனெனில், அதில், மூன்றவது நபர் ஒருவர் இல்லாமல், அத்தகைய வீடியோ வெளிவராது என்பது தெரிந்த விசயமானது. இன்றைய தேதியில் ஜே.என்.யூ போன்ற ட்லைசிறந்த பல்கலைக்கழகங்க வளாகத்தில் உள்ள ஹாஸ்டல்களில் புளூ பிளிம், போர்னோகிராபி எல்லாம் எடுக்கின்ற நிலையுள்ளது. உண்மையிலேயே காதல், திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தப் போகிறோம் என்றால், எந்த பெண்ணும் அத்தகைய நிலையில் நடந்து கொண்டு, புகைப்படங்களில், வீடியோக்களில் கேவலமாக பதிவு செய்ய அனுமதித்திருக்க மாட்டாள். ஆனால், அவையெல்லாம் நடந்துள்ளன. ஆசிரியைப் பற்றிய விவரங்களும் முழுமையாக வெளியிடப்படவில்லை. அவரின் புகைப்படங்களும் விதவிதமாக, மாறுபட்டிருந்தன. பெயரும் மாற்றப்பட்டிருந்தது. புகைப்படம் மற்றும் வீடியோ இவ்விருவரைத் தவிர மற்றவர்களும் பங்குக் கொண்டுள்ளது தெரிகிறது. சுமார் ரூ.15 லட்சம் நகை மற்றும் பணம் உடபட ஏன் எடுத்துச் செல்ல வேண்டும், அது என்னவாயிற்று என்று தெரியவில்லை. அப்பணம் இருந்தால், கர்ப்பினியாக இருக்கும் பெண் வேலை செய்யவேண்டிய அவசியம் இல்லை.

ஓடிப்போன மாணவன் 2015-16.-பிடிபட்டான்

தனிமனித ஒழுக்கம் தேவையா, இல்லையா?: இந்து போன்ற நாளிதழ்கள் (ஆங்கிலம்) இவற்றை மொத்தமாக சேர்த்து, ஒரு சட்டப் பிரச்சினையாக முன்னர் அணுகியது இங்கு மறுபடியும் நினைவு படுத்த வேண்டியுள்ளது[4]. அதாவது மற்ற காதலித்து வீட்டில் மறுத்ததால், எதிர்த்ததால் வீட்டைவிட்டு ஓடிபோதல், போன்ற விசயங்களாக அலசப்பட்டன. பொதுவாக உபதேசம் செய்பவர்கள், கற்பிப்பவர்கள், புத்திமதி சொல்பவர்கள் ஒழுங்காக இருக்க வேண்டும் என்பார்கள். ஆனால், “தி இந்து” ஆசிரியர்களிடம் எதிர்பார்க்க முடியாது. இங்கு தனிமனித ஒழுக்கத்தை அல்லது அவர்களது சொந்த விசயங்களைக் குறிப்பிடுவது என்பதில்லை, ஆனால், அவ்வாறிருப்பவர்கள் எப்படி ஒட்டு மொத்த சமூதாயத்தின் ஒழுக்கத்தைப் பேண உண்மையில் வேலைசெய்வார்கள் அல்லது எண்ணம் கொள்வார்கள் என்பதுதான் கேள்வி. கமல் ஹஸ்ஸன் போன்ற நடிகர்கள் ஒருவனுக்கு-ஒருத்தி, தாம்பத்தியம், இல்லறம், கற்பு முதலியவற்றைப் பற்றிப் பேசமுடியாது. அதுபோலவே பலதார மணம் புரிந்துள்ளும் ஆண்-பெண்களிடமும் இவற்றைப் பற்றி பேச்ச முடியாது. அந்நிலையில் அவர்களை பல்கலைக்கழகங்களில் அழைத்து பட்டம் கொடுத்து, பேசவைத்தால், மாணவ-மாணவியர்களிடம் எப்படி நற்பண்புகள் வளரும் என்று எதிர்பார்க்க முடியும் என்று தெரியவில்லை. “கொன்றால் பாவம், தின்ற்றால் போச்சு” என்ற ரீதியில் தான் இவர்கள் ஆண்-பெண் உறவுகளைப் பற்றி விளக்கம் கொடுப்பார்கள். பல பெண்களை மணந்து கொண்டும், சேர்ந்து வாழ்ந்தும், குழந்தைகளைப் பெற்றுக் கொண்டும், பிறகு மற்ற பெண்களுடன் சேர்ந்து வாழும் மனிதர்கள், “எயிட்ஸ்” போன்ற விளம்பரங்களுக்கு “போஸ்” கொடுப்பது, விளம்பரம்-பிரச்சாரம் செய்வது தான் காலத்தின் கோலமாக இருக்கிறது.

கோதை-மணி- காமம் -786 கதவு

கோதை-மணி- காமம் -786 கதவு

இச்சீரழிவிற்கான காரணம், ஒழுக்கமின்மைதான்: பிரச்சினைய அலசாமல் இருந்தால், ஒரு பிரயோஜனமும் இல்லை. சமீப காலத்தில் 20-30 வயதில் இருக்கும் ஆசிரியைகள் 14-18 வயதில் இருக்கும் மாணவர்களை இழுத்துக் கொண்டு ஓடும் நிகழ்ச்சிகள் ஊடகங்களில் காணப்படுகின்றன. இவை நாகரிக சீரழிவு என்று சமாதானப்படுத்தி கொள்வதா, சமூக சீர்கேடு என்று ஒதுங்கிக்கொள்வதா, அல்லது பெண்மையின் சீர்குலைவு என்று வருத்தப்படுவதா என்று தெரியவில்லை. ஆண்-பெண் படிக்கும் காலத்தில், படிப்பைத் தவிர மற்ற விசயங்களில் கவனம் செல்கிறது, மற்றும் கற்பிக்கும் ஆசிரியை-ஆசிரியர்களே காமத்துப்பாலை போதிக்கின்றனர், பயிற்சி கொடுக்கின்றனர் என்றால், அந்நிலையை அழிவு, சீர்கேடு என்று தானே சொல்ல வேண்டியுள்ளது? மேலும் “பிடோபைல்” (Pedophile) குற்றங்கள் ஆண்களிடம் தான் உள்ளது என்ற நிலைபோய், பெண்களிடமும் அத்தகைய நிலையுள்ளதா என்று கவனிக்க வேண்டியுள்ளது. இதெல்லாம் அந்நியர்களின் காமச்செயல்களாக இருந்துவரும் வேளையில் இப்பொழுது, இந்தியர்களிடம், குறிப்பாக, பெண்களிடமும் காணப்படுவது வருத்தத்திற்குரியதாகும். ஒழுக்கமின்மை தான் இதற்கு காரணம் என்று நன்றாகவே தெரிகிறது.

கோமதி-மணி- காமம்.-786

கோமதி-மணி- காமம்.-786

கல்வித்துறையில் நுழைந்துள்ள சமூக சீர்ப்பழிப்பாளர்கள்: கடந்த 60 ஆண்டுகளில் கல்வி, மேல்-படிப்பு மற்றும் சிறப்பு படிப்புகள் முதலியவற்றில் தரங்கெட்டவர்கள் வியாபார நோக்கில் நுழைந்து கோலோச்சி வருகின்றனர். சமூகத்தில் “மாதிரிகள்” (Role Models) என்றெல்லாம் தூக்கிக் காட்டப்படும் மனிதர்கள் கேடுகெட்டவர்களாக இருக்கின்றனர். என்னத்தான் பத்தினித்தன்மை பற்றி பேசினாலும், அவர்களது வேசித்தனம் பற்றி மக்கள் அறிந்துள்ளனர். ஆனால், அத்தகைய சமூக சீரழிப்பாளர்கள் பள்ளிகளில், பல்கலைக்கழகங்களில் கூடி வந்து அறிவுரை கொடுப்பது போன்ற நிகழ்வுகள் நடந்து வருகின்றன. பாடமளிப்பு விழாக்களுக்கே (Convocation function) அவர்கள் அழைக்கப்படுவது, மிகக் கேவலமான விசயம் ஆகும், அவர்களுக்கு யோக்கியதையே இல்லாத காரியத்திற்கு அவர்கள் உபயோகப்படுத்தப் படுகிறார்கள். ஏனெனில், அத்தகைய பள்ளி, கல்லூரி, பல்கலைகழகங்களின் சொந்தக்காரர்களே வரியேப்பு செய்தவர்கள், கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள், சாராய மன்னர்கள், விபச்சாரம் பெருக காரணமானவர்கள் என்று தான் இருக்கின்றனர். இனம்-இனத்தோடு சேரும் என்ற ரீதியில் தான் அவர்கள் கூட்டாக செயல்பட்டு வருகின்றனர். இவையெல்லாம் தான் மாணவ-மாணவியர்களுக்கு தவறான சமிஞைகளை அனுப்புகின்றன. ஆகவே, ஒழுக்கத்தைப் பேண வேண்டும். ஆசிரியர்-மாணவர்கள் உறவு மதிக்கப்பட வேண்டும், மாணவர்கள் ஆசிரியர்களுக்கு மதிப்பும்-மரியாதையும் கொடுக்க வேண்டும்.

கோதை-மணி- காமம்-சல்பீ

கோதை-மணி- காமம்-சல்பீ

1960லிருந்து 2016 வரையுள்ள தமிழகத்தின் நிலையும், இப்பொழுது மாற்றப்பட வேண்டிய அவசியமும்: “தாய்-தந்தை-ஆசிரியர்-தெய்வம்” என்று மதிக்கப்படும் முறை மறுபடியும் போதிக்கப்படவேண்டும்.

  • 1960-70களில் “தெய்வத்தை” மறந்தனர்;
  • 1980-90களில் ஆசிரியரை மறந்தனர்;
  • 2000-2010களில் தந்தையை மறந்தனர்:
  • இப்பொழுது தாயை மறக்க ஆரம்பித்துள்ளனர்.

இதனால் தான் எல்லா பிரச்சினைகளும் தலைத்தூக்கியுள்ளன. தாயை மதிக்காதவன், தந்தையை மதிக்க மாட்டான்; தந்தையை மதிக்காவன் குருவை-ஆசிரியனை மதிக்க மாட்டான்; இவர்களை மதிக்காதவம் கடவுளைப் பற்றி ஏன் கவலைப்படப் போகிறான். இதனை தலைகீழாகவும் சொல்லலாம். அதுதான் பெரும்பாலான காரணமாக அமைகிறது என்றுதான் நிதர்சனமான உண்மையாகிறது. சித்தாந்தங்கள் பேசி, இளைய சமுதாயத்தைக் கெடுப்பதை விட, அவர்களை நெறிபடுத்த வேண்டிய முறைகளை நேரிடையாக, நன்னெறியில், உபயோகப்படும் முறைகளில் செயல்படுத்த வேண்டும். ஒழுக்கம், கட்டுப்பாடு, சட்டதிட்டங்களை மதிக்கும் முறை, நீதி-நேர்மை போன்றவற்றிற்கு கட்டுப்பட்டு நடக்கும் தார்மீக நிலை முதலியவற்றை உருவாக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

13-03-2016

[1] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=162290

[2] http://tamil.oneindia.com/news/tamilnadu/tenkasi-teacher-arrested-police-248852.html

[3] http://www.tamil.webdunia.com/article/regional-tamil-news/tenkasi-teacher-affidavit-in-police-enqury-116031200024_1.html

[4] http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/elopement-a-major-law-and-order-problem/article4819305.ece

15 வயது மாணவன் 23 வயது ஆசிரியையுடன் பள்ளியை, வீட்டை விட்டு ஓடிப் போன சமாச்சாரமும், அவர்களை போலீஸார் தேடிப் பிடித்த கதையும்!

மார்ச் 13, 2016

15 வயது மாணவன் 23 வயது ஆசிரியையுடன் பள்ளியை, வீட்டை விட்டு ஓடிப் போன சமாச்சாரமும், அவர்களை போலீஸார் தேடிப் பிடித்த கதையும்!

ஓடிப்போன மாணவன், ஆசிரியை 2015-16

கோதைசங்கர் விவகாரம் (மார்ச்.2015)[1]: நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரகுமார். இவர் மத்திய ரிசர்வ் போலீசில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மாரியம்மாள். இவர்களது மகன் சிவசுப்பிரமணியன் (வயது 15). அங்குள்ள தனியார்  பள்ளியில் 10-ம்வகுப்பு படித்து வந்தார்.  கடந்த மார்ச் 31-ந்தேதி வீட்டை விட்டு சென்ற  சிவசுப்பிரமணியன் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து கடையநல்லூர் போலீசில் அவரது பெற்றோர் புகார் செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவசுப்பிரமணியன் எங்குசென்றார் என்று விசாரணை நடத்தி, இருவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது  சிவசுப்பிரமணியன் அவர் படித்து வந்த   பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்த செங்கோட்டை அருகே காலாங்கரையை சேர்ந்த கோதை (23)  என்பவருடன் ஓட்டம் பிடித்துள்ளது தெரியவந்தது[2], இப்படித்தான் சென்ற வருடம் மார்ச் 2015ல் இப்பிரச்சினை விவரிக்கப்பட்டது.

கோதை- சிவசுப்பிடரமணி-காமம், தூக்கல்

கோதை- சிவசுப்பிடரமணி-காமம், தூக்கல்

திட்டமிட்டு பணம்நகைகளுடன் ஓடிய ஜோடி: 10-ம்வகுப்பு படித்து வந்த சிவசுப்பிரமணியனுக்கு ஆசிரியை கோதை பாடம் எடுத்து உள்ளார். இதனால் அவர்கள் இருவரும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று ஜாலியாக இருந்துள்ளனர். மாணவர்கள் இல்லாத நேரம் வகுப்பறையிலேயே இருவரும் காதல் லீலையில் ஈடுபட்டுள்ளனர்.  புகைப்படங்கள் வேறு எடுத்துக் கொண்டுள்ளனர். இதனிடையே தங்களது காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிந்தால்  பிரித்து விடுவார்களோ என்று எண்ணிய அவர்கள் இருவரும் வெளியூர் செல்ல முடிவு செய்தனர். அதன்படி  கடந்த 31-ந்தேதி இருவரும் வீட்டிற்கு தெரியாமல் வெளியூருக்கு ஓட்டம் பிடித்தனர். போகும் போது சிவசுப்பிரமணியன் தனது வீட்டில் இருந்த ரூ.12 லட்சம் மதிப்புள்ள  60  பவுன் நகையையும் எடுத்து சென்று உள்ளார். தந்தையின் வங்கிக்கணக்கில் இருந்து பணத்தையும் எடுத்துள்ளான்[3]. இப்படி மேலும் தகவல்கள் சேர்த்துக் கொடுக்கப்பட்டன. 15 வயது பையனுக்கு எப்படி 23 வயது பெண்ணிடம், அதிலும், ஆசிரியையுடன் காதல் ஏற்பட்டது என்று விளக்கவில்லை. அது காதல் இல்லை, காமம் தான், அதிலும் இளம்பெண், வயது வந்த பையனுடன் உடலுறவு கொள்லும் அளவிற்கு ஏற்பட்ட கொக்கோக வெறித்தனம். தறிகெட்டு போனதால், ஒழுங்கீனத்தினால், முறைதவறி ஏற்பட்ட விபரீதம் ஆகும்.

கோதை-மணி காமம்

கோதை-மணி காமம்

கோதைசங்கர் விவகாரம் (மார்ச்.2016): ஒரு வருடம் கழித்து ஊடகங்கள் அக்கதை கூறும் விதம் வேடிக்கையாக இருக்கிறது. அது தவறு என்று சுட்டிக் காட்டவில்லை. மாறான, “சென்ஷேசனலிஸம்” ரீதியில் செய்திகளை வெளியிட்டுள்ளன. நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள இலத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தவர் பிரியா என்கின்ற கோதைலட்சுமி (வயது 23 / 29[4]). இவரது சொந்த ஊர் செங்கோட்டை அருகே உள்ள காலாங்கரை. எம்.எஸ்.சி., பட்டதாரியான இவருக்கும் அதே பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்த மாணவன் கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சிவசுப்பிரமணியன் என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் 31–ந் தேதி 2015 கோதைலட்சுமி, சிவசுப்பிரமணியன் ஆகிய இருவரும் மாயமாகினர் என்பது தமாஷான விசயம். ஏனெனில், போகும் போது சிவசுப்பிரமணியன் தனது வீட்டில் இருந்த ரூ.12 லட்சம் மதிப்புள்ள 60 பவுன் நகையையும் எடுத்து சென்று உள்ளார். தந்தையின் வங்கிக்கணக்கில் இருந்து பணத்தையும் எடுத்துள்ளான்[5]. அப்படியென்றால், இவ்விவகாரங்கள் தெரிந்து தான் இருக்கின்றன. சமூக சீரழிவுகளால், இந்த இருவரும் சீர்கெட்டு போனதை மறைத்துள்ளனர். ஆரம்பத்திலேயே, அத்தகைய தகாத உறவைக் கண்டித்து, முடித்திருக்க தவறி விட்டார்கள்.

கோமதி-மணி- காமம்.-786

கோமதி-மணி- காமம்.-786

திருப்பூரில் போலீஸார் பிடித்த ஜோடி: இச்சம்பவம் குறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இருவரையும் தேடிவந்தனர். நாட்டில் பற்பல பிரச்சினைகள் இருக்கும் போது, போலீஸார் இத்தகைய வேலைகளை எல்லாம் செய்ய வேண்டியுள்ளது. பெற்றோர் ஒழுங்காக வளர்த்திருந்தால், மாசிரியர்-மாணவ தர்மம் இருந்திருந்தால், இவையெல்லாம் நடந்திருக்குமா என்று நினைத்துப் பார்க்கவில்லை. மாணவன், ஆசிரியையின் நண்பர்களுக்கு திருப்பூர் பொதுதொலைபேசிகளில் இருந்து அடிக்கடி போன் வருவதை சைபர் கிரைம் போலீசார் அறிந்தனர்[6]. அவர்களை புதுவை, கும்மிடிப்பூண்டி, மதுரை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் தேடி வந்தனர். ஆசிரியை கோதைலெட்சுமி, மாணவன் சிவசுப்பிரமணியன் ஆகிய இருவரும் திருப்பூரில் பதுங்கி இருந்து அங்குள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலைபார்த்து வருவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.   இதையடுத்து டி.எஸ்.பி.ஜெயக்குமார், இன்ஸ்பெக்டர் பத்மநாப பிள்ளை தலைமையிலான தனிப்படை போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூருக்கு சென்று இருவரின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

கோதை-மணி- காமம்-சல்பீ

கோதை-மணி- காமம்-சல்பீ

தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டும்/ கெஞ்சும் ஆசிரியை: 10-03-2016 அன்று இரவு ஆசிரியை கோதைலெட்சுமி மாணவன் சிவசுப்பிரமணியன் இருவரையும் போலீசார் மடக்கி பிடித்தனர்[7]. பின்னர் அவர்கள் இருவரையும் 11-03-2016 அன்று மதியம் புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். அங்கிருந்து அவர்களை கடையநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்[8]. அப்போது ஆசிரியை கோதைலட்சுமி போலீசாரிடம் கூறும் போது, “நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் உண்மையாக காதலித்தோம். சேர்ந்து வாழ ஆசைப்பட்டோம். ஆனால் எங்கள் காதலை யாரும் ஏற்க மாட்டார்கள் என்பதால் புதுச்சேரி சென்று அங்கு நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். அதுவரை எங்களுக்குள் உடல் ரீதியான தொடர்பு இருந்ததில்லை. திருணமத்திற்கு பின்பு தான் கணவன்மனைவியாக வாழ்ந்தோம். இப்போது நான் 4 மாத கர்ப்பிணியாக உள்ளேன். எங்களை நிம்மதியாக சேர்ந்து வாழ விடுங்கள். சட்டத்தின் மூலம் எங்களை பிரித்தாலும் மீண்டும் நாங்கள் சேர்ந்து வாழ்வோம். பணத்தின் மூலம் எங்களை பிரிக்க நினைத்தால் நான் தற்கொலை செய்துகொள்வேன்[9],” என்று உருக்கமாக கூறி உள்ளார் என்று நக்கீரன்பதிவு செய்கிறது[10]. எங்களைப் பிரித்து விடாதீர்கள் என்று பிடிவாதமாக இருப்பது தெரிகிறது[11]. ஆனால், இதெல்லாம் தவறு என்று எடுத்துக் காட்டப்படவில்லை.

© வேதபிரகாஷ்

13-03-2016

[1] https://socialterrorism.wordpress.com/2015/04/12/trend-of-elopement-of-female-teachers-with-teenage-students/

[2] http://www.dailythanthi.com/News/State/2015/04/11141306/10class-student-love-Teacher-with-the-flow.vpf

[3] http://www.newindianexpress.com/states/tamil_nadu/Teacher-Elopes-with-Minor-Boy/2015/04/11/article2758555.ece

[4] தினமலர், தலைமறைவு மாணவன், ஆசிரியை திருப்பூரில் மீட்பு: தென்காசியில் நீதிபதி முன்பு ஆஜர், பதிவு செய்த நாள்
மார் 12,2016 00:04; மாற்றம் செய்த நாள்: மார்ச்.12, 2016: 03.11.

[5] http://www.newindianexpress.com/states/tamil_nadu/Teacher-Elopes-with-Minor-Boy/2015/04/11/article2758555.ece

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1476210

[7] தினத்தந்தி, மாணவருடன் ஓடிய ஆசிரியை கர்ப்பிணியாக திருப்பூரில் மீட்பு , பதிவு செய்த நாள்: வெள்ளி, மார்ச் 11,2016, 11:18 PM IST; மாற்றம் செய்த நாள்: சனி, மார்ச் 12,2016, 4:45 AM IST.

[8] http://www.dailythanthi.com/News/Districts/Thirunelveli/2016/03/11231842/The-student-ran-to-the-teacher–Pregnant-recovery.vpf

[9] தமிழ்.ஒன்.இந்தியா, தற்கொலை செய்து கொள்வேன்…10 ஆம் வகுப்பு மாணவனை பிரிய மறுக்கும் தென்காசி ஆசிரியை !, By: Karthikeyan, Published: Saturday, March 12, 2016, 20:44 [IST].

[10] நக்கீரன், நான் தற்கொலை செய்துகொள்வேன்மாணவனை பிரிய மறுக்கும் ஆசிரியை, பதிவு செய்த நாள்: 12, மார்ச் 2016 (18:21 IST); மாற்றம் செய்த நாள்: 12, மார்ச் 2016 (18:21 IST).

[11] வெப்துனியா, எங்களை பிரித்துவிடாதீர்கள்: மாணவனுடன் மீட்கப்பட்ட ஆசிரியை வேண்டுகோள், Last Modified: சனி, 12 மார்ச் 2016 (15:57 IST).

பள்ளிகளில் ஆசிரியைகள் பையன்களுக்கு காமத்துப்பாலைச் சொல்லிக் கொடுத்து, கூட்டிக் கொண்டு ஓடுவது, திருமணம் செய்து கொள்வது முதலியன!

ஏப்ரல் 12, 2015

பள்ளிகளில் ஆசிரியைகள் பையன்களுக்கு காமத்துப்பாலைச் சொல்லிக் கொடுத்து, கூட்டிக் கொண்டு ஓடுவது, திருமணம் செய்து கொள்வது முதலியன!

நாத்திகர்கள், இந்துமத விரோதிகள் என்ன செய்வார்கள்

நாத்திகர்கள், இந்துமத விரோதிகள் என்ன செய்வார்கள்

சமீப காலத்தில் 20-30 வயதில் இருக்கும் ஆசிரியைகள் 14-18 வயதில் இருக்கும் மாணவர்களை இழுத்துக் கொண்டு ஓடும் நிகழ்ச்சிகள் ஊடகங்களில் காணப்படுகின்றன. இவை நாகரிக சீரழிவு என்று சமாதானப்படுத்தி கொள்வதா, சமூக சீர்கேடு என்று ஒதுங்கிக்கொள்வதா, அல்லது பெண்மையின் சீர்குலைவு என்று வருத்தப்படுவதா என்று தெரியவில்லை. ஆண்-பெண் படிக்கும் காலத்தில், படிப்பைத் தவிர மற்ற விசயங்களில் கவனம் செல்கிறது, மற்றும் கற்பிக்கும் ஆசிரியை-ஆசிரியர்களே காமத்துப்பாலை போதிக்கின்றனர், பயிற்சி கொடுக்கின்றனர் என்றால், அந்நிலையை அழிவு, சீர்கேடு என்று தானே சொல்ல வேண்டியுள்ளது? மேலும் “பிடோபைல்” குற்றங்கள் ஆண்களிடம் தான் உள்ளது என்ற நிலைபோய், பெண்களிடமும் அததகைய நிலையுள்ளதா என்று கவனிக்க வேண்டியுள்ளது. இதெல்லாம் அந்நியர்களின் காமச்செயல்களாக இருந்துவரும் வேளையில் இப்பொழுது, இந்தியர்களிடம், குறிப்பாக, பெண்களிடமும் காணப்படுவது வருத்தத்திற்குரியதாகும்.

கோதை- சிவசுப்பிடரமணி-காமம், தூக்கல்

கோதை- சிவசுப்பிடரமணி-காமம், தூக்கல்

சமீபத்தைய கோதைசங்கர் விவகாரம் (மார்ச்.2015): நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பகுதியை சேர்ந்தவர்  சந்திரகுமார். இவர் மத்திய ரிசர்வ் போலீசில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மாரியம்மாள். இவர்களது மகன் சிவசுப்பிரமணியன் (வயது 15). அங்குள்ள தனியார்  பள்ளியில் 10-ம்வகுப்பு படித்து வந்தார்.  கடந்த மார்ச் 31-ந்தேதி வீட்டை விட்டு சென்ற  சிவசுப்பிரமணியன் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து  கடையநல்லூர் போலீசில் அவரது பெற்றோர் புகார் செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவசுப்பிரமணியன் எங்குசென்றார் என்று விசாரணை நடத்தி, -வரை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது  சிவசுப்பிரமணியன் அவர் படித்து வந்த   பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்த செங்கோட்டை அருகே காலாங்கரையை சேர்ந்த கோதை (23)  என்பவருடன் ஓட்டம் பிடித்துள்ளது தெரியவந்தது[1].  10-ம்வகுப்பு படித்து வந்த சிவசுப்பிரமணியனுக்கு  ஆசிரியை கோதை பாடம் எடுத்து உள்ளார். இதனால் அவர்கள் இருவரும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. இதையடுத்து இருவரும்  பல்வேறு இடங்களுக்கு சென்று ஜாலியாக இருந்துள்ளனர். மாணவர்கள் இல்லாத நேரம் வகுப்பறையிலேயே இருவரும் காதல் லீலையில் ஈடுபட்டுள்ளனர்.  புகைப்படங்கள் வேறு எடுத்துக் கொண்டுள்ளனர். இதனிடையே தங்களது காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிந்தால்  பிரித்து விடுவார்களோ என்று எண்ணிய அவர்கள் இருவரும் வெளியூர் செல்ல முடிவு செய்தனர். அதன்படி  கடந்த 31-ந்தேதி இருவரும் வீட்டிற்கு தெரியாமல் வெளியூருக்கு ஓட்டம் பிடித்தனர். போகும் போது சிவசுப்பிரமணியன் தனது வீட்டில் இருந்த ரூ.12 லட்சம் மதிப்புள்ள  60  பவுன் நகையையும் எடுத்து சென்று உள்ளார். தந்தையின் வங்கிக்கணக்கில் இருந்து பணத்தையும் எடுத்துள்ளான்[2].

கோதை-மணி காமம்

கோதை-மணி காமம்

கடந்த ஆண்டுகளில் நடந்த அத்தகைய ஓட்டங்கள்: இணைதளத்தில் தேடியபோது, கடந்த ஆண்டுகளிலேயே அத்தகைய ஓட்டங்கள் தமிழகம் மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் நடந்துள்ளது தெரிகிறது. சில உதாரணங்கள் கொடுக்கப்படுகின்றன:

ஆசிரியை பையனைக் கடத்தல்

ஆசிரியை பையனைக் கடத்தல்

மார்ச்.2014: 25 வயதான அஞ்சலி சிங் ஆங்கில ஆசிரியை 16 வயது பையனுடன் மும்பையிலிருந்து ஓடிவந்தபோது, அவளை பெங்களூரில் சிறுபையனை கடத்திக் கொண்டு வந்த குற்றத்திற்காக போலீஸார் மார்ச்.9, 2014 அன்று கைது செய்யதனர்[3].  பேஸ்புக்கில் இருந்த விவரங்களும் அவர்களைக் காட்டிக் கொடுத்தன[4]. மேலும் அந்த ஆசிரியை பையன் சிறுவனாக / மைனர் இருக்கிறான், மேஜராகியவுடன் / 18 வயதானதும், நான் அவனை திருமணம் செய்து கொள்கிறேன் என்றாள்[5].

மே.2013: அஹமதாபாதில் 45 வயது ஆசிரியை 16 வயது பையனோடு ஓட்டம். இவளுக்கு ஏற்கெனவே இருமுறை திருமணம் ஆகி, விவாகரத்து ஆகியுள்ளது[6].

ஏப்ரல்.2012: 35 வயதான குமுது என்ற ஆசிரியை சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் 11ம் வகுப்பு பையனுடன் குர்காவுக்கு ஓடிவிட்டாள். குமுதுக்கு கல்யாணம் ஆகி 8வயதில் பையன் இருக்கிறான், ஆனால், கணவனைப் பிரிந்து வாழ்நாதாள்.  போலீஸார் குர்காவில் அவளை கைது செய்தனர்[7].

டிசம்பர்.2011: 20 வயதில் உள்ள இரண்டு பள்ளி ஆசிரியைகள் இரண்டு எட்டாம் வகுப்பு பைன்களை விஜயவாடாவில் ரகசியமான இடத்திற்குக் கொண்டு சென்று கல்யாணம் செய்து கொண்டுள்ளனர்[8].

பிப்ரவரி.2010: ஆந்திராவிலோ, இன்னொரு ஆசிரியை புரட்சியே செய்துள்ளாள். ஆமாம், வாரங்கலில் 16 வயது மாணவன் 21 வயதான விஞ்ஞான ஆசிரியை திருமணமே செய்து கொண்டு விட்டான்[9].

ஏப்ரல்.2010: உதய்பூர் மாவட்டம், ராஜஸ்தான் – ஒரு தனியார் பள்ளி 27வயதான மோனிகா ஷேக், 16 வயது நிஷாங்க் என்ற பையனுடம் ஓடிப்போன போது, புகாரின் பேரில் போலீஸார் கைது செய்தனர். விசாரணையில், அவள் அதுபோல பல மாணவர்களுடன் உறவு வைத்திருந்தது தெரிய வந்தது[10]. ஒரு ஏப்ரல்.24, 2010.

கோதை-மணி- காமம் -786 கதவு

கோதை-மணி- காமம் -786 கதவு

இவற்றையெல்லாம் ஆயும்போது வெளியாகும் விசயங்கள்: முன்பெல்லாம் ஆசிரியைகள்-மாணவர்கள் அல்லது ஆசிரியர்கள்-மாணவிகள் வகுப்பில், பள்ளிகளில், சோதனைக் கூடங்களில் கட்டுப்பாட்டுடன், ஒழுக்கத்திடன், கண்ணியத்துடன் இருந்து கொள்பவர். திருமணம் ஆனாலும், ஆகாவிட்டாலும், மற்றவர்களிடம் பழகும் போது வரையறைகளுடன் இருந்துகொள்வார்கள். ஆனால், இப்பொழுது, நாகரிகம், இருபாலார் படிக்கும் பள்ளிகள்-கல்லூரிகள் முதலியவற்றாலும், சினிமா-டிவி போன்ற சாதனங்களின் எதிர்மறை நிகழ்ச்சிகள் முதலியவற்றாலும், இளம் வயது ஆண்கள்-பெண்கள் இவ்வாறு வரம்புகளை, எல்லைகளை, கட்டுப்பாடுகளை மீறுகிறார்கள் என்று தெரிகிறது.

  1. இளம் ஆசிரியைகள் வகுப்பில் பாடம் தவிர மற்ற விசயங்களை (சினிமா, டிவி நிகழ்சிகல் போன்ற) பற்றிப் பேசுவது.

  1. “எக்ஸ்கிரஷன்”, சுற்றுலா என்று வெளியே செல்வது, அங்கு மாணவர்களுக்கு வலைவீசுவது.

  1. சினிமா-டிவி முதலியவற்றில் நடிகைகள் எல்லாவற்றையும் காட்டி ஆடுவது, பாடுவது, குத்தாட்டம் போடுவது முதலியவற்றைப் பார்ப்பதால், ஈர்க்கப்படுதல்.

  1. டீன் ஏஜ் என்பதால், இவ்விசயங்கள் சொல்லாமல் தெரிந்து, செய்து பார்க்கத் துடிப்பது, ஏங்குவது.

  1. நெருக்கம், பேச்சு, உடை முதலியவை – பார்க்கும் முறை, போக்கு முதலியவை தூண்டும் சாதனங்களாக உபயோகிப்பது.

  1. பாடம் சொல்லிக்கொடுக்கும் போது, அருகில் வருவது, தொட்டுக் காட்டுவது, பேசுவது முதலியன.

  1. அந்நிலையில் ஆசிரியைகளிடம் மாட்டிக் கொள்வது. ஒருமுறை சுவைத்தப் பிறகு, இளமையினால் மறுபடி-மறுபடி சுவைக்கச் செல்வது.

  1. தாம்பத்தியம் சரியில்லை, புருஷனால் திருப்திப்படுத்த முடியவில்லை, விவாக ரத்து, தனித்து வாழ்தல் போன்ற பிரச்சினைகளினால், காமத்தைத் தீர்த்துக் கொள்ள மாணவர்களை உபயோகித்துக் கொள்ளுதல்.

  1. தமது வகுப்பில் படிக்கும் மாணவர்கள் என்பதினால், விசயத்தை வெளியே சொல்லாதே என்று பயமுறுத்துதல், வேன்டும் போது அனுபவித்துக் கொள்ளுதல்.

  1. ஆசிரியை-மாணவன், குரு-சிஷ்யன், போன்ற உறவுகளை காமம், உடலின்பம் முதலியவற்றால் முறித்து, இள்ளம்வயதை சீரழிக்கும் போக்கு.

பொதுவாக தார்மீக உணர்வுகள், மனக்கட்டுப்பாடு, உடலொழுக்கம், முதலியவை குன்றுவதாலே, இச்சீர்கேடுகள் ஏற்படுகின்றன என்று தெரிகிறது. போதாகுறைக்கு வளைதளம், அலைபேசி, பேஸ்புக் முதலியவை இவர்களின் காமப்பசிக்கு தீனி போடுகின்றன.

கோமதி-மணி- காமம்.-786

கோமதி-மணி- காமம்.-786

தனிமனித ஒழுக்கம் தேவையா, இல்லையா?: இந்து போன்ற நாளிதழ்கள் (ஆங்கிலம்) இவற்றை மொத்தமாக சேர்த்து, ஒரு சட்டப் பிரச்சினையாக அணுகுவது வேடிக்கையாக இருக்கிறது[11]. அதாவது மற்ற காதலித்து வீட்டில் மறுத்ததால், எதிர்த்ததால் வீட்டைவிட்டு ஓடிபோதல், போன்ற விசயங்களாக அலசுகின்றன. பொதுவாக உபதேசம் செய்பவர்கள், கற்பிப்பவர்கள், புத்திமதி சொல்பவர்கள் ஒழுங்காக இருக்க வேண்டும் என்பார்கள். ஆனால், “தி இந்து” ஆசிரியர்களிடம் எதிர்பார்க்க முடியாது. இங்கு தனிமனித ஒழுக்கத்தை அல்லது அவர்களது சொந்த விசயங்களைக் குறிப்பிடுவது என்பதில்லை, ஆனால், அவ்வாறிருப்பவர்கள் எப்படி ஒட்டு மொத்த சமூதாயத்தின் ஒழுக்கத்தைப் பேண உண்மையில் வேலைசெய்வார்கள் அல்லது எண்ணம் கொள்வார்கள் என்பதுதான் கேள்வி. கமல் ஹஸ்ஸன் போன்ற நடிகர்கள் ஒருவனுக்கு-ஒருத்தி, தாம்பத்தியம், இல்லறம், கற்பு முதலியவற்றைப் பற்றிப் பேசமுடியாது. அதுபோலவே பலதார மணம் புரிந்துௐஒல்லூம் ஆண்-பெண்களிடமும் இவற்றைப் பற்றி பேச்ச முடியாது. அந்நிலையில் அவர்களை பல்கலைக்கழகங்களில் அழைத்து பட்டம் கொடுத்து, பேசவைத்தால், மாணவ-மாணவியர்களிடம் எப்படி நற்பண்புகள் வளரும் என்று எதிர்பார்க்க முடியும் என்று தெரியவில்லை. “கொன்றால் பாவம், தின்ற்றால் போச்சு” என்ற ரீதியில் தான் இவர்கள் ஆண்-பெண் உறவுகளைப் பற்றி விளக்கம் கொடுப்பார்கள். பல பெண்களை மணந்து கொண்டும், சேர்ந்து வாழ்ந்தும், குழந்தைகளைப் பெற்றுக் கொண்டும், பிறகு மற்ற பென்களுடன் சேர்ந்து வாழும் மனிதர்கள், “எயிட்ஸ்” போன்ற விளம்பரங்களுக்கு “போஸ்” கொடுப்பது, விளம்பரம்-பிரச்சாரம் செய்வது தான் காலத்தின் கோலமாக இருக்கிறது.

கோதை-மணி- காமம்-சல்பீ

கோதை-மணி- காமம்-சல்பீ

20 வருடங்களுக்குப் பிறகு, தந்தைக்கு 38, தாயுக்கு 47, தனக்கு 20 என்று வயதிருந்தால் பரவாயில்லையா?: இப்பொழுதக்கு கடத்தல், சட்டமீறி அடைத்துவைத்தல், சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தல் போன்ற குற்றங்கள் இவற்றைட் தடுக்கும் சட்டத்தின் கீழ் [kidnapping, wrongful confinement and Protection of Children from Sexual Offences (POCSO) Act] நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.  அஞ்சலி சிங் போன்றோர் சட்டமீறலை சட்டமுறையாக்க, பையனுக்கு 18 வயதானதும் திருமணம் செய்து கொள்கிறேன் என்றாள். பையனுக்கு 18 வயதானால், தனக்கு 27 வயதாகுமே என்று யோசித்தாளா என்று தெரியவில்லை. ஒருவேளை 27 வயது ஆண், 18 வயது பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் போது, 27 வயது பெண், 18 வயது ஆணை திருமணம் செய்து கொள்ளக்கூடாதா என்று கேள்வி கேட்கலாம்.  ஆனால், பிறகு குழந்தை பிறந்து, 20 வருடங்களுக்குப் பிறகு, தந்தைக்கு 38, தாயுக்கு 47, தனக்கு 20 என்று வயதிருந்தால் பரவாயில்லையா? ஒருவேளை 20 வயதான மகள், 38 வயதான ஆணை திருமணம் செய்து கொண்டு குழந்தையைப் பெற்றுக் கொண்டால், அக்குழந்தையின் தந்தை மற்றும் தாத்தா இருவர்களுக்கு ஒரே வயது இருக்குமே? அக்குழந்தை வளரும் போது, மனநிலை எவ்வாறு இருக்கும்?

வேதபிரகாஷ்

© 12-04-2015

[1] http://www.dailythanthi.com/News/State/2015/04/11141306/10class-student-love-Teacher-with-the-flow.vpf

[2] http://www.newindianexpress.com/states/tamil_nadu/Teacher-Elopes-with-Minor-Boy/2015/04/11/article2758555.ece

[3] http://www.dnaindia.com/mumbai/report-teacher-who-eloped-with-student-traced-to-bangalore-arrested-1967981

[4] http://www.mumbaimirror.com/mumbai/crime/FB-posts-lead-to-arrest-of-teacher-25-who-eloped-with-her-teen-student/articleshow/31687961.cms

[5] http://timesofap.com/politics/teacher-plans-to-marry-student-after-he-turns-adult-mumbai-police.html

[6] http://daily.bhaskar.com/news/EDU-a-45-year-old-teacher-elopes-with-an-18-year-old-student-4196029-PHO.html

[7] http://archive.indianexpress.com/news/bail-denied-to-teacher-who–eloped–with-minor-boy/940738/

[8] Two teachers eloped with two minor students and married against the wishes of their parents.This incident, which sent shockwaves among parents of the schoolchildren, took place at Yerrabalem village in Mangalagiri rural mandal, a few km away from Vijayawada.The teachers, T. Mounika and P. Lakshmi Tirupatha-mma, took away minor twins, both students of Class VIII in a private school, to a secret location in Vijayawada where they married them.“The boys are minor. The teachers are in their early 20s. They left the school a few months ago after the management pulled them up for moving with the students. One of them is now working as a computer operator, and another is pursuing higher education. We had to do a lot of counselling to convince the teachers and the boys,” said P. Annapoorna Reddy, assistant superintendent of police, Mangalagiri.Though the police succeeded in handing over the minor boys to their parents, the teachers remained stubborn arguing that they would wait till the boys turn majors, and would marry them then.The teachers were let off, though a case has been registered against them. The school management, however, is silent on the whole affair.

[9] http://www.ndtv.com/cities/class-10-student-elopes-with-teacher-in-andhra-411244

[10] http://indiatoday.intoday.in/story/udaipur-teacher-elope-with-her-minor-student/1/106940.html

[11] http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/elopement-a-major-law-and-order-problem/article4819305.ece

சிறுமியின் நிர்வாணப்படத்தினை இண்டர்நெட்டில் பார்த்த “ரொமான்ஸ்” நீதிபதி கைது!

ஓகஸ்ட் 30, 2010

சிறுமியின் நிர்வாணப்படத்தினை இண்டர்நெட்டில் பார்த்தரொமான்ஸ்நீதிபதி கைது!

பிரபல குற்றவியல் வழக்கறிஞர்: நியூயார்க்கில், சிறுமியின் நிர்வாணப்படத்தினை கம்ப்யூட்டரில் பார்த்துக்கொண்டிருந்த நீதிபதியை  சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்து அவருக்கு தர்ம அடி கொடுத்தனர்[1].  இது குறித்து நியூயார்க் போஸ்ட்  பத்திரிகைய வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்காவில் நியூயார்க்கைச் சேர்ந்த ஜேம்ஸ் கிப்ஸன் என்பவர் தன்னுடைய அலுவலக கம்ப்யூட்டரில் ஏராளமான நிர்வாணப்படங்களை லோடு செய்து வைத்திருந்தார்[2]. இவர் பிரசித்தி பெற்ற குற்றவியல் வழக்கறிஞர் ஆவார். பல கற்பழிப்பாளர்களை ஜெயிலிற்கு அனுப்பியுள்ளார். ஆனால், ஓரு முறை அவர் 14 வயது சிறுமியின் நிர்வாணப்படத்தினை பார்த்துக்கொண்டிருந்ததாக கம்ப்யூட்டர் தடவியல்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்[3].

James_gibbons_headshot

James_gibbons_headshot

“ரோமான்சில்” ஈடுபட்ட வழக்கறிஞர்[4]: 47 வயதான இவர், மற்றொரு ஜீன் எம்ஹோஃப் என்ற 31 வயதான துணை வழக்கறிஞருடன் “ரோமான்சில்” ஈடுபட்டபோது, மற்றவர்கள் ஆச்சரியப்பட்டனர். சில வாரங்களுக்கு முன்பு, ஒரு ஆண்குழந்தையும் பிறந்ததாம்!

Judge James Gibbons

Judge James Gibbons

சட்டங்களை மீறியதால் பதவி விலகல்: அமெரிக்க சட்டவிதிகளின் படி 17 வயதிற்குட்பட்ட இளம் பெண்களின் நிர்வாணப்படத்தினை பார்ப்பதும், இண்டர்நெட்டில் வெளியிடுவதும் குற்றமாகும். இதனால், பல சட்டப்பிரிவுகளை மீறியதற்காகக் குற்றத்தை செய்தவராக உள்ளார், இருப்பினும் கைது செய்யப் படவில்லை. இந்நிலையில் நீதிபதியின் இந்த செயலை கண்டுபிடித்து அவருக்கு தர்ம அடி கொடுத்தனர்.  தற்போது அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்[5]. இவ்வாறு அந்த பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.


[1] தினமலர், சிறுமியின் நிர்வாணப்படத்தினை இண்டர்நெட்டில் பார்த்த நீதிபதி கைது, ஆகஸ்ட் 30, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=73258

[2] http://www.nypost.com/p/news/local/manhattan/judge_pix_called_kid_porn_CjD6zuSc3wfwwJsqUW4uHI

[3] http://www.nydailynews.com/ny_local/2010/08/26/2010-08-26_courthouse_mystery_criminal_court_judge_james_d_gibbons_abruptly_resigns_without.html?obref=obnetwork

[4] Read more: http://www.nydailynews.com/ny_local/2010/08/26/2010-08-26_courthouse_mystery_criminal_court_judge_james_d_gibbons_abruptly_resigns_without.html?obref=obnetwork#ixzz0y6aZQiJJ

[5] http://www.nydailynews.com/ny_local/2010/08/29/2010-08-29_porn_judges_neighbors_say_theyre_still_in_state_of_shock.html

பல இளம் மாணவிகளை கற்பழித்த சலாவுத்தீன் அயூப்: இன்னுமொரு பிரைட்!

ஜூலை 23, 2010

பல இளம் மாணவிகளை கற்பழித்த சலாவுத்தீன் அயூப்: இன்னுமொரு பிரைட்!

எம். எல். பிரைட் என்ற கொடைக்கானல் பள்ளி தாளாளர் எப்படி ஷீபாபால் என்ற பிரின்ஸிபாலின் துணையுடன், பல மாணவிகளை பாலியல் வன்மத்திற்கு உட்படுத்தப்பட்டார்களோ, அதே மாதிரியான நிலை இங்கேயும் காணப்படுகிறது. பெண்களே பெண்களின் சீரழிவிற்கு உடந்தையாகயிருப்பது ஆராய்ச்சிக்குரியதாக உள்ளது.

அது மட்டுமல்லாது, மாணவிகளின் விடுதியில் அறையை வைத்திருந்தது, தனியாக அழைத்தது, ஆபாச படங்களைக் காட்டியது, தொட்டுப்பேசியது, கட்டிப்பிடித்தது…………………….

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: ஷிபாபால் மற்றும் பிரைட் கைது!

http://christianityindia.wordpress.com/2010/07/03/மாணவிகளுக்கு-பாலியல்-தொந/

24-07-2019 (சனிக்கிழமை):முஹமது சலாவுத்தீன் அயூப் தான் 17 வயது மாணவியைக் கற்பழித்ததை ஒப்புக்கொண்டு விட்டதாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.

parkwood school director-மாணவிகளுடன்

parkwood school director-மாணவிகளுடன்

23-07-2019 (வெள்ளிக்கிழமை): நேற்றுவரை தமது சகோதரரை வலுவாக ஆதரித்து வந்த முஹமது சலாவுத்தீன் அயூப்பீன் சகோதரி ஆயிஷா தன்வீர், 23-07-2010 அன்று நடந்த செய்தியாளர்களின் கூட்டத்தில், அயூப் தனது பதவியிலிருந்து விலக்கப்பட்டார் என்று அறிவுத்துள்ளார். இதைத்தவிர, தமது பள்ளியின் பெயரைக் கெடுக்கத்தான், இவ்வாறான செயல்களை செய்யப்படுகிறது என்றெல்லாம் கூட பேசியுள்ளார்.

போலீஸார், ஹைதராபாதில் உள்ள கிளினிக்கில் விசாரித்தபோது, மருத்துவர், அயூப் அந்த பெண்ணை கருக்கலைக்க அழைத்து வந்ததாகவும், ஆனால், மாத்திரிகைகள் கொடுத்ததால், கர்ப்பமடைந்து ஆனால் ஆரம்பநிலையிலேயே கலைந்து விட்டதாகவும், அதனால், தான் சாதாரணமாகத்தான் சிகிச்சையளித்ததாக கூறியுள்ளார்.

முஹமது-அயூப்-கற்பழிக்கப்பட்ட-மாணவி

முஹமது-அயூப்-கற்பழிக்கப்பட்ட-மாணவி

துப்பாக்கி முனையில் மாணவி கற்பழிப்பு: பள்ளி முதல்வர் கைது: துப்பாக்கி முனையில், மாணவியை கற்பழித்த பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டத்திலுள்ள “பார்க் வுட்’ சர்வதேச பள்ளியின் முதல்வர் சலாவுதீன் முகமது அயூப்பை, கற்பழிப்பு புகாரின் அடிப்படையில், ஜூபிலி ஹில்ஸ் போலீசார் கைது செய்துள்ளனர். அந்த பள்ளியில் படிக்கும் 9ம் வகுப்பு மாணவியை, அயூப் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி கற்பழித்ததாக, அந்த மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், நேற்று முன்தினம் அவர் கைது செய்யப்பட்டார்[1].

சலாவுத்தீன்-அயூப்-கைது-மாணவிகள்-கற்பழிப்பு

சலாவுத்தீன்-அயூப்-கைது-மாணவிகள்-கற்பழிப்பு

இது குறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது[2]: தன் பள்ளியில் படிக்கும் 9ம் வகுப்பு மாணவியை, அயூப், ஜூபிலி ஹில்ஸிலுள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று, துப்பாக்கியைக் காட்டி, மிரட்டி கற்பழித்துள்ளார். ஆபாசப் படமும் எடுத்துள்ளார்[3]. இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லக் கூடாதென்று கூறியும், ஆபாசப் படத்தை காட்டி மிரட்டியும், கடந்த ஒரு ஆண்டாக அந்த மாணவி மீது பாலியல் வன்முறைகளை நிகழ்த்தி வந்துள்ளார். கருக்கலைப்பு மாத்திரைகளைத் தனக்குக் கொடுத்தது இல்லாமல், மருத்துவரிடத்திலும் அழைத்துச் சென்றுள்ளதாகக் கூறியுள்ளாள்..

மாணவி-ஹைதரபாத்-மும்பை

மாணவி-ஹைதரபாத்-மும்பை

பிரைட்டின் முறையை விஞ்சிய அயூப்பின் முறை: அயூப் மாணவிகளின் ஹாஸ்டலில் ஒரு தங்கும் அறை வைத்திருந்தான். மார்ச் 10ம் தேதி அந்த மாணவியை அங்கு வருமாறு அழைத்தானாம். மயக்கமருந்து கலந்த பானத்தைக் கொடுத்து மயக்கம் அடைந்தவுடன் அம்மாணவியைக் கெடுத்துள்ளானாம். 17-வயதான அம்மாணவி மயக்கம் தெளிந்ததும், வலியாக இருக்கிறது என்று சொன்னபோது, அயூன், கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்றானாம். 45 நாட்கள் கழித்து அதேமுறையைக் கையாண்டானாம். பிறகு மயக்க மருந்து கொடுக்காமலே கற்பழிக்க முயன்றபோது, அம்மாணவி தடுத்திருக்கிறாள். ஆனால், உன்னையும், உன் சகோதரி மற்றும் சகோதரனையும் கொன்று விடுவேன் என்று மிரட்டி கற்பழித்திருக்கிறான். இதுமாதிரி தன்னை 1520 தடவை கற்பழித்ததாக புகாரில் குறிப்பிட்டுள்ளாள். அதில் இரண்டுமுறை, அயூப் தன்னுடைய இல்லத்திலேயே அழைத்துச் சென்று கற்பழித்திருக்கிறான்.

பெற்றோரிடம் சொல்லிய பிறகு புகார் கொடுக்கப்பட்டது: இது குறித்து, டில்லியிலுள்ள தனது பெற்றோரிடம் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மாணவி கூறியிருக்கிறார். இதனையடுத்து, அவளது பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், பள்ளி முதல்வர் அயூப் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு போலீசார் கூறினர்.

பள்ளி பெண் ஊழியர், அசிரியைகள், மாணவிகள் பட்டபாடு[4]: அந்த பள்ளியின் மாணவிகள் மற்றும் வேலைசெய்வோர் அயூபின் நடத்தைப் பற்றி பலமுறை புகார் கொடுத்துள்ளதாகக் கூறுகிறார்கள். ஏனெனில், அலுவலகத்தில் வேலை செய்வோர் மற்றும் ஆசரியைகள் கூட அயூப்பின் நடத்தையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2003லிருந்து வேலை செய்து வரும் ஒரு பெண் ஊழியர் கூறுவதாவது, “மாணவியர்களிடம் அவை நடந்து கொள்ளும் விதம் எனக்குக்கொஞ்சம்கூட பிடிக்கவில்லை. மாணவிகளிடம் அடிக்கடி சக மாணவர்களிடம் அவர்களுடைய உறவு எப்படியுள்ளது என்று கேள்விகள் எல்லாம் கேட்டிருக்கிறான். வயதுக்கு வர்ம் போது ஏற்படும் உணர்ச்சிகள், அனுபவங்கள் முதலியவற்றை தன்னிடம் விவரிக்கும்படும் கட்டாயப்படுத்துவான். இதையெல்லாம் “ஆலோசனைக் கூறுதல்” என்ற போர்வையில் நடத்திவந்தான். நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் கேட்கவில்லை”. அந்த மாணவியின் கற்பழிப்புப் பற்றி நெடுங்காலமாக கேட்டு வந்துள்ளானாம். அதுமட்டுமல்லாது, அடிக்கடி ஆசிரியைகளை தொந்தரவு செய்வதுடன், அசிங்கமான வார்த்தைகளையும் பிரயோகித்து பேசுவானாம்.

புகார் கூறிய மாணவி மீது நடவடிக்கை – பள்ளீயிலிருந்து நீக்கம்: இதனிடையே, அந்த மாணவிக்கு படிப்பில் போதிய ஆர்வமில்லையென்று கூறி, பள்ளியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என பள்ளி நிர்வாகம் கருத்து தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் பலர் நேற்று அப்பள்ளியின் முன் ரகளை செய்து அலுவலகத்திலுள்ள நாற்காலிகளை உடைத்தனர். இப்பள்ளி மிகவும் பிரபலமானது. கனடா, துபாய் மற்றும் சவுதி அரேபியாவில் இப்பள்ளியின் கிளைகள் உள்ளன.

ஆயிஷா தன்வீர் மாணவிகளைக் குற்றஞ்ச்சாட்டுவது[5]: அயூப்பின் சகோதரி மற்றும் அப்பள்ளியின் மற்றொரு இயக்குனராக இருக்கும் ஆயிஷா தன்வீர் என்ற பெண் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. அம்மாணவி 2009லேயே வகுப்புவாதப் பிரச்சினையை உருவாக்க முயன்றபோது, அப்பள்ளியிலிருந்து நீக்கப்பட்டாள். அவள் அப்பள்ளி மாணவனுடன் உறவு வைத்திருந்ததாகவும், அதனால் அவனை மதம் மாற பிடிவாதம் பிடித்ததாகவும், இதனால் மதப்பிரச்சினை வரும் என்று, குறிப்பாக, அம்மாணவனே புகார் கொடுத்தபோது, பள்ளியிலிருந்து நீக்கப்பட்டாள். மறுபடியும் இந்த வருடம் ஜனவரியில் அந்த பெண்ணின் தந்தை வந்து கெஞ்சியதால், மறுபடியும் அனுமதி வழகினோம்.

ஆதரிக்கும்-ஆயிஷா-தன்வீர்-பள்ளிப்பெண்கள்-கற்பழிப்பு

ஆதரிக்கும்-ஆயிஷா-தன்வீர்-பள்ளிப்பெண்கள்-கற்பழிப்பு

மேலும், அம்மாணவி உயர்ந்த இடத்திலிருந்து வந்துள்ளதால், பள்ளி நிர்வாகம் மறுக்கமுடியாமல் போய்விட்டது என்று ஒரு ஆசிரியை சொல்கிறார். அதனால் அம்மாணவியும் மற்றவர்களிடம் கொஞ்சம் துடுக்காகவே பேசுவாள், “என்னை யாதாவது செய்தால், இந்த பள்ளிக்கே பிரச்சினையை உண்டாக்கி விடுவேன்”, என்பாளாம். அப்பெண்ணின் தந்தை, “பள்ளியின் பெயர் கெட்டுவிடும் என்று அயூப் என்னை மிரட்டுகிறார். அது மட்டுமல்லாது, எனக்கு ஒரு வெற்று-செக்கைக் கொடுத்து அமைதியாக இருக்கும்படியும் மிரட்டியுள்ளார்”, என்கிறார்.


[1] தினமலர், துப்பாக்கி முனையில் மாணவி கற்பழிப்பு: பள்ளி முதல்வர் கைது, ஜூலை 22,2010,  http://www.dinamalar.com/News_Detail.asp?Id=45139

[2] P Hareesh, Parkwood school director molested six more girls, First Published : 23 Jul 2010 04:44:26 AM IST

http://expressbuzz.com/cities/hyderabad/parkwood-school-director-molested-six-more-girls/192246.html

[3] The Hindu, Friday, Jul 23, 2010, http://www.hindu.com/2010/07/23/stories/2010072358310100.htm

[4] Times of India, ‘Parkwood staff, students faced abuse’, TNN, Jul 22, 2010, 11.56pm IST

http://timesofindia.indiatimes.com/city/hyderabad/Parkwood-staff-students-faced-abuse/articleshow/6202912.cms

[5] http://www.mumbaimirror.com/article/2/20100723201007230340093091b362324/Malad-girl-in-Hyderabad-alleges-rape-by-principal.html

குரூர-காம-கற்ப்பழிப்பாளி வில் ஹியூமை ஏன் தூக்கில் போடக்கூடாது?

மே 8, 2010

குரூர-காம-கற்ப்பழிப்பாளி வில் ஹியூமை ஏன் தூக்கில் போடக்கூடாது?

சென்னை உயர்நீதி மன்றம் வில் ஹியூமிற்கு கொடுத்த பிணைவிடுதலையை ரத்துச் செய்தது!

HC stays Dutchman’s bail in child porn case

TIMES NEWS NETWORK

http://epaper.timesofindia.com/Default/Scripting/ArticleWin.asp?From=Archive&Source=Page&Skin=TOINEW&BaseHref=TOICH/2010/05/08&PageLabel=3&EntityId=Ar00302&ViewMode=HTML&GZ=T

வில் ஹியூமை சிறைச்சாலைக்கு வெளியே விட்டால் தப்பித்துவிடுவான்“, சொல்வது அரசுத்தரப்பு வக்கீல்!: Chennai: The Madras High Court has stayed the bail granted to Dutch national Wilhelmus Weijdeveld, arrested in November last year on charges of uploading pornographic pictures of children on the internet from his Choolaimedu residence here.  Justice CS Karnan stayed his release after government advocate A Saravanan submitted that the magistrate had wrongly granted him bail and ordered his release even though the chargesheet had been filed by the Central Crime Branch police. If Wilhelmus, who is lodged in a special camp for foreigners, is allowed to remain outside the prison he might abscond, Saravanan argued.
மாஜிஸ்டிரேட் எப்படி தவறுதலாக விடுவித்திருக்கலாம்? அரசுதரப்பு வக்கீல் கூறுவதே வேடிக்கையாக உள்ளது. ஒரு அனைத்துலக, இன்டர்போல் தகவல் கொடுத்துப் பிடித்த குற்றாவஆளியை எப்படி, தவறுதலாக, ஒரு சாதாரண மாஜிஸ்டிரேட் விடுதலை செய்யலாம்? அநத அளவிற்கு சட்ட-ஞானம் இல்லாதவரா? ஏற்கெனெவே கைது செய்யப் பட்டு, பிணைவிடுதலை அளிக்கப் பட்டு, மரந்த வாழ்ந்தவன் தான் இந்த வில் ஹியூம்! ஆகவே, தமிழக அதிகாரிகள் தொடர்ந்து இப்படி அனுகூலமாகச் செயல்படுவது சந்தேகத்தைத் தான் எழுப்புகிறது.

பழையக் குற்றங்களைத் தவிர்த்து நீதிமன்ற அமர்வுகள் செல்லும் விதமும் சந்தேகத்திற்குரியவையாக உள்ளன: Concurring with these submissions and admitting the petition filed by the inspector of cyber crime cell of CCB on Friday, Justice Karnan also ordered notices to Wilhelmus. According to the prosecution, Wilhelmus was found to be uploading child pornographic pictures on the internet after a tip-off from the Child Exploitation on Online Protection Centre through Interpol in 2009. Invoking Section 67 of the Information Technology (Amendment) Act, a criminal case was registered and the 56-year-old Dutchman was arrested on November 6, 2009. During investigation, the police found that the accused had abused children in the neighbourhood as well, and hence added another charge punishable under Section 377 (unnatural offences) of the Indian Penal Code.
விஞ்ஞான முறைப்படியான கருத்தைப் பெறமுடியவில்லை” சொல்வது கிளாட்சன் ஜோஸ், இன்ஸ்பெக்டர்!:Explaining the reason for the police’s failure to file chargesheet within the 90-day period, after which an accused would get a statutory right to be released on bail, the investigation officer, inspector S Gladson Jose, said in the petition that the delay was because the scientific opinion of the analyst could not be obtained at short notice.
However, even before Wilhelmus could produce sureties for his release, the CCB filed the chargesheet on April 1. Once the chargesheet is filed, the right of the accused to go out on bail after the 90-day period would lapse, and he has to file bail pleas afresh before the court conducting the trial, the petition said. In the case of Wilhelmus, after a fast track court refused his bail plea, he approached the magistrate court again and convinced it to release him on bail, Jose said.
NO RESPITE: Wilhelmus

கற்பழிப்புக் காமுகன் வில் ஹியூம் பிணையில் விடுதலை – மௌனம் காக்கும் தமிழ் ஊடகங்கள்!

ஏப்ரல் 27, 2010
Sources: Will Heum kept at ‘refugee camp’
21 Apr 2010, 1018 hrs IST

http://www.timesnow.tv/Sources-Will-Heum-kept-at-refugee-camp/articleshow/4343458.cms


வில் ஹியூமின் மேல் எந்த குற்றப் பத்திரிக்கையும் தாக்கல் செய்யப் படவில்லை!

பிணையில் விடுதலை!

வாழ்க தமிழகப் போலீஸார்!

Police authorities have decided to restrict Dutch ‘paedophile’ Will Heum’s movements by lodging him at a special camp for foreign refugees on the outskirts of Chennai known as Chengelpet, a day after Heum was granted bail due to non-filing of a chargesheet against him.

The camp generally houses Sri Lankan refugees some of whom have criminal backgrounds.

Heum faces charges of abduction and unnatural offences and was arrested last year after Interpol identified him for uploading child pornography from Chennai.

A Saidapet court allowed Will Heum to walk free on bail yesterday, following the production of the required surety; however his lawyers claim that when they went to prison to meet Heum on his release, he was nowhere to be found.

Now, police sources tell TIMES NOW that Heum has been taken to the Chengelpet camp, located in Kancheepuram district. Heum has been detained on the basis of the Foreigners Act, which grants police the power to restrict the movements of a foreigner if he is seen to be posing a threat to society.

Proceedings in the paedophilia and internet child pornography cases against Will Heum have been under public and media eye for some time now. Six years ago, Heum was accused of sexually abusing young boys at an orphanage run by him in Tamil Nadu. What angers activists is that he was on bail in that case, when he was arrested for child pornography.

Heum was granted bail in this case in February this year. His lawyers were initially unable to find the money for his one-lakh bail.

Even as police dragged their feet on filing a chargesheet, Heum managed to collect money for bail and there was a strong chance that he would soon be free. There was yet another slip however, when the court hearing Heum’s case objected to the fact that Heum’s bail money was being supplied by his landlord, who is also a witness in the case.

On Tuesday (April 20), Heum’s lawyers finally satisfied the court on the bail bond conditions paving the way for his release.

The granting of bail came as a huge blow to child rights activists, who are fighting for justice in the case, as the police failed to quickly file a chargesheet.

TIMES NOW which has been following up the case since it began, has shown how police have taken the case lightly and postponed the filing of chargesheet as “there is no hurry since the 90-day deadline for submitting a chargesheet has not lapsed yet”. After 90 days Heum was automatically granted bail and the only reason he did not leave jail is due to lack of money and a surety for his bail.

An under-pressure police thus may have taken the decision not to let him walk free fearing a backlash.

தேவநாதனுக்கும் பிணை-விடுதலை!

பிப்ரவரி 19, 2010

தேவநாதனும், குஷியில் திளைக்கும் நிருபர்களும்! தேவநாதன் என்றாலே நிருபர்களுக்குக் குஷிதான்! பிளந்துக் கட்டுகிறர்கள். இதோ தலைப்புகள்:

·         தட் ஈஸ் தமிள் கூறுவதென்றால்[1], அசிங்க அர்ச்சகர் தேவநாதனுக்கு நிபந்தனை ஜாமீன்

·         தினத்தந்தி சொல்வது[2], “செக்ஸ் அர்ச்சகர் தேவநாதன் நிபந்தனை ஜாமீனில் விடுதலை …”!

·         தினகரன் சொல்வது[3], “அர்ச்சகர் தேவநாதன் ஜாமீனில் விடுதலை”!

பெண்களுடன் அசிங்கமாக நடந்து கொண்டு சிக்கினார்[4]: வெளியே, தலைப்பில் சொல்வது, “அசிங்க அர்ச்சகர் தேவநாதனுக்கு நிபந்தனை ஜாமீன்”! உள்ளேச் சொல்வதோ, “பெண்களுடன் அசிங்கமாக நடந்து கொண்டு…..”! தினத்தந்தி “செக்ஸ் அர்ச்சகர்” என்ற பட்டத்துடன் விளக்குகிறது! தினகரனோ, “அர்ச்சகர்” என்றே நிறுத்திக் கொள்கிறது!! இத்தகைய “ஊடக மரியாதை நிமித்தங்கள், வழக்குகள், பாரம்பரியங்கள்” முதலியவற்றை என்னுடைய முந்தைய கட்டுரைகளில் காணவும்[5]. ஊடகக்காரர்களின் செம்மொழி பாதிப்பு அதிகமாகவே உள்ளது [செம்மொழி = செம்மை + மொழி, செம் +மொழி, செ + மொழி, எனக்கொண்டால், தமிழ் புலவர்கள் அதற்கு என்ன அர்த்தம் என்று சொல்வார்கள்!]

ஜாமீனில் வெளியே வந்தால் தாக்கப்படலாம்: கோவில் கருவறையில் அசிங்கமாக நடந்து கொண்ட அர்ச்சகர் தேவநாதனுக்கு காஞ்சிபுரம் ஜுடிஸியல் மாஜிஸ்டிரேட் கோர்ட்- I நிபந்தனை ஜாமீன் அளித்துள்ளது. காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோவில் கருவறைக்குள் பெண்களுடன் அசிங்கமாக நடந்து கொண்டு சிக்கினார் தேவநாதன். தற்போது வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜாமீனில் வெளியே வந்தால் தாக்கப்படலாம் என்ற அச்சத்தில் அவர் ஜாமீன் கோராமலேயே இருந்து வந்தார். தமிழ்நாட்டுக் காமக் கொடூர எதிர்ப்பின் மகிமையே அலாதிதான்!

“கற்பழிக்கப்பட்ட பெண்களின்” பரிசோதனை என்னவாயிற்று? தன்னைக் கற்பழித்து விட்டதாக புகார் கொடுத்த பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை நடந்து விட்டது என்றெல்லாம் செய்தி வந்ததே என்னவாயிற்று? ஹேமலதா மாதிரி அமுக்கிவிட்டார்களா?  அத்தகைய பரிசோதனைகளில் என்னத்தான் தெரியவரும்? தேவநாதன் உடலுறவு கொண்டிருந்தால் உண்மை தெரியவரும். மற்றவர் புனைத்திருந்தால் அந்த உண்மைகளும் வெளிவரத்தானே செய்யும்? இதில் ஒருத்தி விபச்சாரி என்று வேறு சொல்கிறார்கள்! அந்த விஷயம்தான் மறைக்கப்படுகிறதா?

இதுவரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை! பெண்களுடன் தகாத முறையில் நடந்து கொண்டதற்காக இந்திய குற்றாவியல் சட்டத்தின் பிரிவுகள் 295; 153-A மற்றும் 506 (ii) பிரிவுகளில் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு வழக்குப் போடப்பட்டது[6]. இந்த நிலையில், நேற்று அவரை காஞ்சிபுரம் முதலாவது நீதித்துறை நடுவர் சுதா முன்பு போலீஸார் ஆஜர்படுத்தினர். அப்போது தேவநாதனின் காவலை மார்ச் 3ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். அப்போது தேவநாதனின் சார்பில் ஆஜரான வக்கீல், தேவநாதன் கைது செய்யப்பட்டு 90 நாட்களாகி விட்டது. இதுவரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. எனவே அவரை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதைப் பரிசீலித்த நீதிபதி, நிபந்தனை ஜாமீனில் – 2 நபர் ஜாமீனும், தலா ரூ. 5 ஆயிரம் சித்து பத்திரம் தாக்கல் செய்து விதலையாகலாம், அத்துடன் அவர் தினசரி காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும், வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். வெளியூர் செல்லக்ககடாது, என்ற நிபந்தனைகாளுடன் – தேவநாதனை விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

தேவநாதன் வழக்கை விசாரித்து வந்த டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் திடீர் மாற்றம்[7]: இதென்ன கலாட்டா? தேவநாதன் வழக்கை விசாரித்து வந்த டி.எஸ்.பி. மற்றும் இன்ஸ்பெக்டர் ஆகியோர் திடீரென மாற்றப்பட்டு விட்டனர். இவர் குறித்த புகாரின் பேரில் சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாபிராமன் அவர் மீது வழக்கு பதிவு செய்தார். கோர்ட்டில் சரண் அடைந்த தேவநாதனை காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தினார். இந்த வழக்கு மாவட்ட குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது. போலீஸ் டி.எஸ்.பி. விஜயராகவன் விசாரணையை தொடர்ந்தார். இந்நிலையில் தேவநாதன் வழக்கை முதலில் விசாரித்த இன்ஸ்பெக்டர் பட்டாபிராமன் திடீரென வேலூர் சரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். அது போல் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. விஜயராகவன், கிருஷ்ணகிரிக்கு மாற்றப்பட்டுள்ளார். தற்போது சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியை கூடுதலாக மாவட்ட குற்ற ஆவணப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் கவனித்து வருகிறார். தாலுகா இன்ஸ்பெக்டராக சம்பத் நியமிக்கப்பட்டு இருக்கிறார்[8]. இதிலும், நிருபர்களின் தலைப்புகள் இதோ:

அப்படியென்ன, இதில் பிரச்சினை?

நவம்பர் 2009 கைதுகள், பிப்ரவரி 2010 விடுதலைகள்!: புவனேஸ்வரி பிரச்சினையைத் தொடர்ந்ததுதான் இப்பிரச்சினைகள்-விவகாரங்கள்!

  • வில் ஹியூம் 07-11-2009 அன்று கைது செய்யப்படுகிறான்.
  • 08-02-2010 அன்று விடுதலை செய்யப்படுகிறான்!
  • தேவநாதன் 16-11-2009 அன்று கைது செய்யப்படுகிறான்.
  • 18-02-2010 அன்று[10] விடுதலை செய்யப்படுகிறான்!

தேவநாதனுக்கு-விடுதலை-பிணை

தேவநாதனுக்கு-விடுதலை-பிணை

குற்றவாளிகள் தண்டிக்கப் படுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனால், அவர்களை சாக்காக / முன்னுதாரணமாக வைத்துக் கொண்டு, பெரிய குற்றவாளிகள் தப்பித்துக் கொள்வதுதான் இப்பொழுதைய “modus operandi” யாகத் தெரிகிறது!

  • நிச்சயமாக புவனேஸ்வரி விசயத்தில் தப்பித்துக் கொண்டது மற்றவர்கள்தாம், பலிகடா ஆக்கப்பட்டது புவனேஸ்வரியும், பத்திரிக்கையாளர்களும்.
  • வில் ஹியூமை காப்பாற்றத் துடிப்பதிலும் பெரியவர்கள் உள்ளார்கள், இங்கு பலிகடா ஆக்கப்பட்டது பல பெண்களும், ஆண்களும்!
  • ஆனால், தேவநாதன் விஷயத்தில் மறைக்கப்படுபர்கள் வீடியோ-மாஃபியாவும், சம்பந்தப்பட்ட பெண்களும்தான், அதாவது பலிகடா ஆக்கப்பட்டது தேவநாதன்!

பின்னப்பட்டுள்ளப் புதிர்களை மக்கள்தாம் விடிவிக்கவேண்டும். மக்கள் ரசிப்பது உண்மைகளா அல்லது காமலீலைகளா என்ற விஷயம் வேறு! அதில்தான் உண்மைகள் ஊமையாகின்றன.


[1] தட் ஈஸ் தமிள், அசிங்க அர்ச்சகர் தேவநாதனுக்கு நிபந்தனை ஜாமீன், வியாழக்கிழமை, பிப்ரவரி 18, 2010

http://thatstamil.oneindia.in/news/2010/02/18/conditional-bail-archakar-devanatha.html

[2] தினத்தந்தி, http://www.dailythanthi.com/article.asp?NewsID=548145&disdate=2/19/2010

[3] தினகரன், http://www.dinakaran.com/nagaramdetail.aspx?id=5948

[4] தட் ஈஸ் தமிள், அசிங்க அர்ச்சகர் தேவநாதனுக்கு நிபந்தனை ஜாமீன், வியாழக்கிழமை, பிப்ரவரி 18, 2010

http://thatstamil.oneindia.in/news/2010/02/18/conditional-bail-archakar-devanatha.html

[5] வேதபிரகாஷ், வில் ஹியூம், புவனேஸ்வரி, தேவநாதன்: தமிழ் ஊடகங்கள்!, https://socialterrorism.wordpress.com/2009/11/20/வில்-ஹியூம்-புவனேஸ்வரி-த /

[6] http://www.thehindu.com/2010/02/19/stories/2010021959450200.htm

[7] தட் ஈஸ் தமிள், தேவநாதன் வழக்கை விசாரித்து வந்த டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் திடீர் மாற்றம், புதன்கிழமை, பிப்ரவரி 17, 2010

http://thatstamil.oneindia.in/news/2010/02/17/dsp-inspector-devanathan-case-shifted.html

[8]தினத்தந்தி,  http://www.dailythanthi.com/article.asp?NewsID=547691&disdate=2/17/2010

[9] நியூ இன்டியன் நியூஸ், ஆபாச ஐயர் தேவநாதன் வழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரிகள் திடீர் மாற்றம் , வியாழக்கிழமை, 18 பெப்ரவரி 2010

http://www.newindianews.com/view.php?2beffmA4ddc23QQAK334aaCe0AAad0e0xXO4Yccd24mmlRH22eecK466dce03OmM0o44b4cYYDD700

[10] தினமலர், குறிப்பிடுவது 19-02-2010 அன்று பிணையில் விடுதலைச் செய்யப்படுவான் என்பதாகும், சென்னைப் பதிப்பு, ப.14

வில் ஹியூம் விடுதலை! காமக்கொடூரன் கதை தொடர்கிறது!

பிப்ரவரி 10, 2010

வில் ஹியூம் விடுதலை! காமக்கொடூரன் கதை தொடர்கிறது!

© வேதபிரகாஷ்

இங்கு “குழந்தைகள்” என்று சொல்லியே பச்சையாக உண்மைகளை சம்பந்தப் பட்டுள்ளவர்கள் மறைக்கிறார்கள். 2002லேயே “டீன்-ஏஜ்” பருவத்தில் இருப்பவர்களை அனுபவித்தான் என்றால் அது கசப்பான உண்மை. இப்பொழுது அவர்கள் – கற்பழிக்கப்பட்ட பெண்கள், பாலியல் வேலையில் ஈடுபடுத்தப் பட்ட ஆண்கள், 20-26 வயதுகளில் இருப்பாட்கள். ஆகவே, அவர்கள் தம்மை மறைத்துக் கொள்கிறார்கள் அல்லது மறைத்து வைக்கப்படுகிறர்கள் என்று நன்றாகவேத் தெரிகிறது. கோடிகளில் பணம் வருகிறது என்ற உண்மையை இப்பொழுது வில் ஹியூம் வாயிலேயே வந்துவிட்டது. ஆகவே லட்சங்கள் கொடுத்து அவர்கள் அமைதிப் படுத்தப் பட்டால், நிச்சயம் மௌனிகளாகி விடுவர். கூப்பிட்டாலும், எந்த கோர்ட்டிற்கும் வரப்போவதில்லை.

உண்மை / வாய்மை மறக்கப்படும். 10-02-2010 அன்றுதான் தமிழகத்தின் அரசர் உண்மைக்கும், வாய்மைக்கும் மான்குட்டி-வேடன் கதை மூலம் விளக்கம் அளித்திருக்கிறார்!

பாவம், இந்த மான்குட்டிகளை யார் காப்பாற்றுவது?

சைதாப்பேட்டை நீதிமன்றம் வில் ஹியூமிற்கு பிணை-விடுதலை அளித்தது![1] : கிருத்துவத்தின் பெயரால் எத்தனை ஆண்-பெண் “குழந்தைகள்”, வயது வந்த வாலிபர்கள், இளைஞர்கள் வில் ஹியூமினால் பாலியல் வன்முறைக் கொடுமைகளுக்குட்படுத்தப் பட்டார்கள் என்பது அந்த பரலோகத்தில் இருக்கும் “பரமபிதாவிற்கு”த்தான் தெரிந்திருக்கும்!. கடந்த நவம்பர் 7, 2009 அன்று நிர்வாணப் படங்களை இணைதளங்களில் ஏற்றும்போது, இன்டர்போல் துறையால் தகவல் கொடுக்கப்பட்டு சென்னை போலீஸாரால் கைது செய்யப்பட்டான். ஆனால், 08-02-2010 அன்று சப்தமில்லாமல் விடுதலை செய்யப்படுகிறான்! ரவிகுமார் என்ற அவனது வக்கீல் அவன் குற்றமற்றவன், மேலும் 80 நாட்கள் ஆனபிறகும், அவன் மீது எந்த குற்றப்பத்திரிக்கையும் போலீஸார் வதிவு செய்யவில்லை என்று வாதாடியதும், நீதியரசர் பிணை-விடுதலையளித்துவிட்டார்!

வீர வசனங்கள் பேசி, போராட்டங்கள் நடத்தும் சமுதாய அமைப்புகள், சங்கங்கள் முதலியன என்னசெய்கின்றன என்று தெரியவில்லை. தகவல் தொழிற்நுட்ப சட்டத்தின் படி (The Information Technology Act) போலீஸாரால் 80 நாட்களில் சார்ச் ஸீட் / குற்றப்பத்திரிக்கை பதிவு[2] செய்யமுடியவில்லையாம்! என்னே விந்தை! அருகிலேயே இருந்து கொண்டு சுகவாசம் புரிந்து உல்லாசமாக பவனி வந்து கொண்டிருந்த இவனைப் பிடிக்கவே இன்டர்போல் துறை தகவல் கொடுக்கவேண்டியதாயிற்று[3]. ஆனால் பிடித்த அவன்மீது குற்றப்பத்திரிக்கை தயார் செய்யமுடியவில்லை என்றால், அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? இதில் மேலும் கூத்து என்னவென்றால் இந்த சட்டமே அக்டோபர் 27, 2009ல்தான் அமூலுக்கு வந்ததாம்! அப்படியே நிரூபனம் செய்யப்பட்டு தண்டனைக் கொடுக்கப்பட்டால் ஏழாண்டுகள் சிறைவாசம், ரூ. 10 லட்சம் அபராதம் விதிக்கப்படுமாம்! ஏன் 40ற்கும் மேலாக – குறிப்பாக அதில் பாதிக்கும் மேலாக இருந்த பெண்களை கற்பழித்தக் குற்றத்திற்கு மொத்தமாக தண்டனையைக் கூட்டினால் அவனை தூக்கில் போடலாமே? புதிய சட்டத்தில்தான் அவனை பதிவு செய்து ஏன் சட்ட-ஓட்டைகளில் சலுகைகள் செய்துதரவேண்டும்? யார் அப்படி அவனுக்கு உதவுகிறார்கள்?

திருட்டு விசிடி, இண்டர்நெட், சைபர் கிரைம்: குற்றம் என்றால் குற்றம்தான், அனைத்துக் குற்றவாளிகளும் ஒரே மாதிரிதான் நடத்தவேண்டும். வழக்குகள் பதிவு செய்யப்படவேண்டும்………………..தண்டனை கொடுக்கவேண்டும். ஆனால், திருட்டு விசிடி என்றால் போலீஸார் பாய்ந்து-பாய்ந்து வேலை செய்கின்றனர். சரத்குமார்-ராதிகா தம்பதியர் அழுதவுடன் அடுத்த நாளே இணைதளத்தில் ஏற்றிய இஞ்சினியரைப் பிடித்து விடுகின்றனர்! ஆனால் தேவநாதன் வீடியோக்களை இணைதளத்தில் ஏற்றியவர்களைப் பிடிக்கமுடியவில்லை. ஆபாச விசிடிக்கள் விற்றாலும் கவலைப்படுவதில்லை! வில் ஹியூம் நிர்வாணப் படங்களை இணைதளங்களில் ஏற்றும்போது, இன்டர்போல் துறை வந்து தகவல் அளிக்கவேண்டும்? என்ன இதெல்லாம்? சாதாரண அறிவு, பகுத்தறிவு, மின்னறிவு, மென்னறிவு, பெரிய-அறிவு…………………….எது கொண்டு யோசித்தாலும் புரியவில்லையே? தொழிற்நுட்பத்தில் கூட ஜாதி வேறுபாடு, இன வேறுபாடு முதலியவை உள்ளனவா?

போலீஸ் கமிஷனர் சொல்வது[4]: சென்னை போலிஸ் கமிஷனர் டி. ராஜேந்திரன் சொல்வதென்னவென்றால், “அவன் மீது பலமான குற்றப்பத்திரிக்கை ஒன்று 15 நாட்களில் பதிவு செய்யப்படும்”! பிறகு முன்பு ஏன் கோட்டை விட்டார்கள்? இந்த மூன்று மாத காலத்தில் போலீஸாருக்கு அல்லது போலீஸார் தரப்பில் வேலை செய்யும் சட்ட வல்லுனர்களுக்கு வெளிவரும் செய்திகள், நடக்கும் நிகழ்ச்சிகள் முதலியன தெரியாமலா போய்விடும்? ஏற்கெனவே எழுப்பியுள்ள கேள்விகளுக்கு பதில் தேடினாலே கூட்டத்தோடு பிடித்திருக்கலாமே? தமிழ் சட்டவல்லுனர்களுக்கு அத்தகைய “பலமான குற்றப்பத்திரிக்கை” அந்த 80 நாட்களில் செய்யாததை, இந்த 15 நாட்களில் செய்யப் போகிறர்களா?

சட்ட அமைச்சரின் சொதப்பலான பதில்[5]: வீரப்ப மொய்லி என்ற சட்ட அமைச்சர், இத்தகைய குற்றங்களுக்கு கடுமையான சட்டங்களை எடுத்துவரவேண்டும் என்கிறார்! இவர் இனிமேல் சட்டத்தை எடுத்துவந்து என்ன ஆகிவிடப் போகிறது? கற்பழிக்கப்பட்டப் பெண்களின் கற்பு திரும்ப வந்துவிடுமா? இந்தியாவில் ஏதோ சட்ட்டங்களுக்குக் குறைவு மாதிரி. ஏற்கெனவே ஆயிரக்கணக்கில் சட்டங்கள் உள்ளன. உட்கார்ந்தால் சட்டம், எழுந்தால் சட்டம். இங்கு பெண்களை கற்பழித்தது, ஆண்களை பாலியல் வன்முறைக்குட்படுத்தியது என்று பார்த்தால் உள்ள சட்டங்களே போதும். இணைதளச் சட்டம், வலைச் சட்டம் என்றெல்லாம் ஆராய்ச்சி செய்யவேண்டாம். கற்பழிப்பு என்பது வேறு, நிர்வாண படங்களை இணைதளத்தில் வெளியிட்டான் என்பது வேறு. இருக்கும் சட்டங்களை விடுத்து, இல்லாததைப் பற்றி பேசுவது, அத்தகைய கொடுங்கோலர்களுக்கு, குற்றவாளிகளுக்கு உதவுவது போல ஆகும். ஏனெனில், நாளை அவனுக்கு ஆஜராகும் விசிவாசமுள்ள வக்கீல் இதைத் தான் சீர்மிகு நீதிமன்றத்தில் மாண்புமிகு நீதியரசரின் முன்பு மொழிந்து, தனக்கெயுரிய அறிவுபூர்வமான வாதங்களினால் இந்த கொடுங்கோல காமுகனை, கற்பழிப்புக் காரனை விடுதலை செய்ய “சட்ட அமைச்சரே சொல்லிவிட்டார், குற்றம் புரிந்த நேரத்தில் அதற்கான சட்டம் இல்லை” என்று பொருள்பட எடுத்துக் காட்டி பேசுவான், பயன்படுத்துவான்.

தேவநாதனும், வில் ஹியுமும்: புரியாத மர்மம்!: தேவநாதன் விஷயத்தில் மட்டும் அப்படி பறந்து-பறந்து வேலை செய்தார்களே, இங்கு மட்டும் ஏன் தூக்கம்? 2002லேயே பதிவு செய்யப்பட்ட வழக்கு வேறு இருக்கிறது. அப்பொழுது 40ற்கும் மேலாக ஆண்-பெண்களை காமத்துடன் மிருகம் போன்று மாமல்லபுரத்தில் தனது இச்சைக்கு பயன்படுத்திக் கொண்டான். ஏசுவின் பெயரால் “சின்ன வீடு” – LITTLE HOME – அப்படியொரு அந்தப்புரத்தையே நடத்தி சல்லாபங்கள் செய்து வந்தான். ஏன் அந்த சிறுவர்-சிறுமியர்களை மருத்துவ பரிசோதனை செய்யவில்லை? தமிழச்சிகள் எல்லோரும் சைதாப்பேட்டை கோர்ட்டிற்கு சென்று அவனை துடப்பக்கட்டை, செருப்புகளால் அடிக்கவில்லை! தேவநாதன் என்றால் இனிக்கிறது, வில் ஹியூம் என்றால் கசக்கிறதா? இல்லை என்ன தடுக்கிறது? மர்மாகத்தான் உள்ளது! இந்திய தோல் வெள்ளைத்தோலுக்கு இனிக்கிறது, ஆனால் வெள்ளைத்தோலைக் கண்டால், இந்திய / தமிழக தோல்களுக்கு பயமாக உள்ளதா?

வில் ஹியூம் ஒரு மாபெரும் ஆபத்து: கிரிஸ்டைன் பெடௌ என்ற குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை ஆயும் வல்லுனர் கூறுவதாவது, வில் ஹியூம் குழந்தைகளுக்கு ஒரு அபாயகரம் என்கிறார்[6]. டச்சுநாட்டுடன் இணைந்து இந்தியா அவனுக்குத் தகுந்த தண்டனையளிக்கவேண்டும். முன்பு நவம்பர் 2009ல், சுதாகர், துணை போலீஸ் கமிஷனர், சைபர்-கிரைம் அவன் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம் மற்ற கூடுதல் அத்தாட்சிகளை சைதாப்பேட்டை மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார். காஞ்சிபுரம் சூப்பிரென்டென்ட்டும் அவன் மீதுள்ள வழக்கு விரைவில் விசாரிக்கப்படும் என்று வாக்களித்தார். முன்பு இந்திய குற்றவியல் சட்டம் section 377 of IPC மற்றும் பாஸ்போர்ட் சட்டம் கீழ் தவறான தகவல்கள் கொடுத்ததற்கும், அந்நியர் பதிவு சட்டத்தின் சரத்துகளை மீறியதற்கும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 2003லிருந்து பெயிலில் இருந்து வந்தான். ஆனால் 2004ல் விசாரணை ஆரம்பித்தபோது, ஏதாவது ஒரு காரணம் காட்டி வழக்கைத் தள்ளிப்போட வைத்தான். முக்கியமாக தன்மீது குற்றஞ்சாட்டிய ஏதாவது ஒரு குழந்தையையாவது கோர்ட்டில் ஆஜராகவேண்டும் என்றுக் கெட்டுக் கொண்டான்[7]. பிறகு எப்படி 40தில் ஒன்றுகூட வரவில்லை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை?

வில் ஹியூமின் “நிர்வாண” / வெளிப்படையான (?) நேர்காணல்[8]: டைம்ஸ்-நௌ கீழே கொடுத்துள்ள கேள்வி-பதில்கள் ஓரளவிற்கு அவனுடைய மனப்பாங்கைக் காட்டுவதாக உள்ளது, சில முக்கியமான உண்மைகளௌம் வெளிவருகின்றன[9]:

செய்தியாளர்: உங்களுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டீர்களா?

வில் ஹீயூம்: இல்லை, நிச்சயமாக இல்லை. நான் ஒன்றுமே செய்யவில்லை. நீங்கள் என்னுடைய வக்கீலுடன் பேசவும். அவருக்கு எல்லாமேத் தெரியும்[10].

செய்தியாளர்: மாமல்லபுரத்தில் உள்ள அந்த பாவப்பட்ட குழந்தகளின் கதி என்ன?

வில் ஹீயூம்: எங்களுக்கு ரூ. 2 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் என்னை வெளியே தள்ளிவிட்டார்கள்.

செய்தியாளர்: அரசாங்கம் சொல்கிறதே, நீங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு விட்டீர்கள் என்று?

வில் ஹீயூம்: இல்லை, நிச்சயமாக இல்லை.

செய்தியாளர்: நெதர்லாந்திற்கு திரும்ப விரும்புகிறீர்களா?

வில் ஹீயூம்: ஆமாம், நான் அப்படித்தான் நினைக்கிறேன். எனக்கு இங்கு நிறையவே கிடைக்கிறது.

செய்தியாளர்: போலீஸாருடைய விசாரிப்பு உங்களுக்குத் திருப்திகரமாக உள்ளதா?

வில் ஹீயூம்: இல்லை. அதனை நான் சொல்லமுடியாது.

கோடிகள் ஏன் கொடுக்கவேண்டும்?மாமல்லபுரத்தில் உள்ள அந்த பாவப்பட்ட குழந்தகளின் கதி என்ன?”, என்று கேட்டதற்கு,  “எங்களுக்கு ரூ. 2 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. என்கிறான் ஹியூம்!. அதாவது ரூ. 2 கோடி பாதிக்கப்பட்ட அந்த ‘குழந்தைகளுக்கு” டச்சு அரசு கொடுத்திருந்தால், அதன் நிர்பந்தம், சரத்துகள் என்ன? முன்பு, “தன்மீது குற்றஞ்சாட்டிய ஏதாவது ஒரு குழந்தையையாவது கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படவேண்டும்” தைரியமாக கேட்கவேண்டும், இப்பொழுதோ, “ஆனால் அவர்கள் என்னை வெளியே தள்ளிவிட்டார்கள்” அதாவது கழட்டி விட்டர்கள் என்ற முறையில் ஏன் பேசவேண்டும்? எப்படி அவனுக்கு இந்த விஷயங்கள் தெரியும்?  இப்படி காசுக்கு கற்ப்பை சமாதானப் படுத்திக் கொள்வதால்தான் அந்த அம்மையார், “வில் ஹியூம் ஒரு மாபெரும் ஆபத்து” என்று எச்சரிக்கிறாரா?  பணத்தைக் கொடுத்து மாபெரும் மனிதகுற்றங்களை மறைக்கப் பார்க்கிறர்கள். அதற்கு சில இந்திய அரசாங்கத்தினர், அதிகாரிகள், போலீஸ், சமூக-ஊழியர் முதலியோரும் உடன் போவதாகத் தெரிகின்றது. இப்படியே போனால், “தமிழகம்” இன்னொரு “தாய்லாந்து”[11] ஆகிவிடும்!

“தமிழகம்” இன்னொரு “தாய்லாந்து” ஆகிவிடும்! கடந்த காலத்தில், சமீமத்தைய நிகழ்ச்சிகளைக் கூர்ந்து கவனித்தால் பல அயல்நாட்டவர் தமிழகத்தை தாராளமாக செக்ஸ்-தொழிலுக்கு, செக்ஸ்-சுற்றுலாவிற்கு பயன்படுத்தி வந்ததற்கு பல உதாரணங்கள் (வேலூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், கன்யாகுமரி, திருநெவேலி, திருச்சி) காட்டுகின்றன. இதில் பாதிக்கப் படுவது வயது 10 முதல் 20 வரையுள்ள ஆண்-பெண் சிறுவர்-சிறுமியர்தாம். இதில் “குழந்தைகள்” என்று சொல்லி / குறிப்பிட்டு உண்மையை மறைக்கவேண்டிய பாவத்தைச் செய்யவேண்டியதில்லை. ஏனெனில், அவர்கள் ஏற்கெனவே கற்பழிக்கப் பட்டுள்ளார்கள். சீறிபாயும் செபாஸ்டியன் சீமான்கள்[12] எல்லாம் இவ்விஷயத்தில் ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை “கர்த்தர்” அப்படி ஆணையிட்டு விட்டார் போலும்!

ஆறுவயது சிருமியைக் கற்பழித்தான் என்றால் கைது செய்யப்பட்டு தண்டனைக் கொடுக்கப்படுகிறது! பிறகு இத்தகைய மிருகங்களை வைத்துக் கொண்டு ஏன் சட்டக்கதைகள் பேசிக்கொண்டு இருக்கவேண்டும்?

© வேதபிரகாஷ்

10-02-2010


[1] http://www.ptinews.com/news/508353_Dutch-national-granted-bail-in-child-pornography-case

[2] India Blooms News Service, Dutch Paedophile granted bail, விவரங்களுக்கு இங்கே பார்க்கவும்:

http://www.indiablooms.com/NewsDetailsPage/newsDetails090210l.php

[3] ஆனால் திருட்டு விசிடி விஷயத்தில் மட்டும் உடனே பிடித்து விடுகிறர்கள்! அதாவது இன்டர்போல் துறையையும் மிஞ்சி விடுகிறர்கள்!

[4] A charge sheet will be filed against alleged paedophile William Heum within 15 days, police here said Tuesday after the Dutch national was granted bail by a local court.  Chennai Police Commissioner T. Rajendran said a strong charge sheet against Heum would be filed in 15 days time.

http://sify.com/news/Chennai-police-to-file-charges-against-Will-Heum-in-15-days-news-National-kcka4eejbfe.html

[5] The Hindusthan Times, Moily slams ‘paedophile’ bail, plans tougher law, dated 10-02-2010; for details see at:  http://www.hindustantimes.com/Moily-slams-paedophile-bail/H1-Article1-507191.aspx

[6] Christine Bedoe, Director, ECPAT[6], UK, is concerned once again that Will Heum poses a big risk to children.

[7] http://www.timesnow.tv/articleshow/4332402.cms

[8] REPORTER: Have you confessed to your crime?
HEUM: No, of course not. I didn’t do anything. You talk to my lawyer. He knows everything.
REPORTER: What about the poor kids in Mahabalipuram?
HEUM: We got 2 crore rupees, they put me out.
REPORTER: But the Govt is saying that you confessed?
HEUM: No, of course not.
REPORTER: Do you want to go back to Netherlands?
HEUM: Yes. I think so. I get too much here.
REPORTER: Are you happy with police investigation?
HEUM: No. I cannot say that.

[9] TIMES-NOW, Bungling cops let ‘paedophile’ Heum off the hook, 9 Feb 2010, 1757 hrs IST, http://www.timesnow.tv/articleshow/4338110.cms

[10] அதாவது அவன் இதை ஒரு சாதாரண சட்டம், சட்டமீறல் குற்றம் என்று எடுத்துச் சென்று, பிறகு நிரூபிக்கப்படவில்லை அல்லது குற்றஞ்சாட்டியவகள் வரவில்லை, ஆஜர்படுத்தப்படவில்லை என்று வழக்கு முடிக்கப்படும். அந்த சிறிய குற்றங்களுக்கு அந்நியர் சட்டம், பாஸ்போர்ட் சட்டம் முதலியவற்றிற்கு ஆயிரம், ஐந்தாயிரம் அபராதம் வுதிக்கப்படும், கட்டிவிட்டு போய்விடுவான்.

[11] தாய்லாந்து ‘குழந்தை விபச்சாரத்திர்கு” பெயர்போனது. உலகத்தில் உள்ல விமானக்கள் எல்லாம் வந்து இங்கு வந்து சில மணி நேரம் ஓய்வெடுக்கும். அந்த நேரத்தில், விருப்பமுள்ள பயணிகள் ஜாலியாக பென்களை அனுபவித்து வந்து விமானித்தில் ஏறிவிடுவர்.

[12] சமீபத்தில் ஜெயராம் என்ற நடிகர் விஷயத்தில், தமிழ்பெண்களைப் பற்றி அவதூறாக பேசியபோது, மாபெரும் போராட்டத்தை நடத்தியுள்ளார். குஷ்பு வழக்கையும் இவரிடத்திலேயே விட்டுவிட்டால் தகுந்த தண்டனை அளிப்பார் போலயிருக்கிறது!