தெய்வத்தின் சொந்த தேசத்தில், அதிகம் எழுத்தறிவு கொண்ட மாநிலத்தில் நிர்வாண பூஜை, நரபலி முதலியன குரூர குற்றங்கள் எப்படி நடக்கின்றன – தீர்வு என்ன? (4)
கேரள அரசு மாந்திரீக நரபலி நிபுணன் பைத்தியம் என்றது: அரசின் மெத்தனத்தால் தான் இத்தகைய குற்றங்கள் நடந்துள்ளன, என்று நீதிமன்றம் முதல் மற்ற பொறுப்புள்ளவர்கள் வெளிப்படையாக சொல்ல ஆரம்பித்துள்ளதால், ஆளும் மார்க்சீய அம்யூனிஸ்ட் ஆட்சி, இதனை திசைத் திருப்பி, அமுக்கி வாசிக்க முயல்கிறது. முக்கிய குற்றவாளி ஒரு பைத்தியம், மனோநல வியாதி கொண்டவன், என்றெல்லாம் சித்தரிக்கப் பட்டு வருகிறான். இறகு, அதே காரணத்திற்காக அவன் குற்றத்திலிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம். இதனால், அதே முறையில்[1], “உண்மையில் மனநிலை சரியில்லாதவர்களால் தான் இப்படி செய்ய முடியும். இது நவீன சமுதாயத்திற்கு சவாலாக உள்ளது. இதுபோன்ற தவறான எண்ணங்கள் மற்றும் மூடநம்பிக்கைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு, அனைத்திலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், இந்த தீமையை எதிர்த்துப் போராட வேண்டும்,” என்று முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது[2]. இவ்விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து கேரள மாநில காவல்துறை உத்தரவிட்டுள்ளது[3]. துணை ஆணையர் சசிதரன் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது[4].
கேரளாவும் ஆபாசப் படங்களும்: ஆபாசப் படம் / போர்ன் வீடியோ எடுப்பது, முதலியவை பல்லாண்டுகளாக கேரளாவில் நடந்து வருகின்றன என்று செய்திகள் மூலம் அறியப் படுகிறது. கேரள திரைப்படங்களே முன்பு 1960-70களில் பிரபலமாக இருந்தன. அத்தகைய காட்சிகள் வரும் என்று தியேட்டர்களுக்கு செல்லும் வழக்கமும் இருந்தது. பிறகு 1980களில் வீடியோ கேசட், சிடி என்று தொழிற்நுட்பமும் மாறி விட்டது. பிறகு இன்டெர்நெட் வந்ததிலிருந்து, செல்போன் போன்றவற்றால், தனிநபர் விருப்பங்களுக்கு ஏற்றபடி மாறின, மாறி விட்டன. கேரளாவில் இதைப் பற்றிய செய்திகள் இன்றும் வரத்தான் செய்கிறது, சரிதா நாயர் விவகாரத்திலும் அப்பிரச்சினை உள்ளது. உதாரணத்திற்கு, இச்செய்தி கொடுக்கப் படுகிறது. கேரளாவில் 13 வயது சிறுமி ஒருவர், அவருடைய அண்ணனால் கர்ப்பமாகியுள்ளார். வயிற்றுவலி என சிகிச்சைக்காக மருத்துவமனை சென்றபோதுதான் 30 வார கர்ப்பமாக இருக்கிறார் என்பதே தெரியவந்துள்ளது[5]. இணையதளத்தில் ஆபாசப் படங்கள் எல்லா வயதினருக்கும் எளிதில் கிடைத்துவிடுகின்றன, இதனால், சமூக ஊடகங்கள் கட்டுப்படுத்தப் பட வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுருத்தியது.
கேரளாவில் சிறுவர், சிறுமியரின் ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பிய விவகாரம்: கேரளாவில் சிறுவர், சிறுமியரின் ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பிய 21 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்[6]. அவர்களிடம் இருந்து லேப்டாப், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன[7]. கேரளாவில் சமீப காலமாக வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் சிறுவர், சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள் பரவி வருவதாக போலீசுக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இது தொடர்பாக சர்வதேச அளவிலும் புகார்கள் உள்ளன. சர்வதேச போலீசான இன்டர்போலுக்கும் புகார்கள் வந்துள்ளன.இதையடுத்து சிறுவர், சிறுமியரின் ஆபாச வீடியோக்கள் வெளியிடுவதை தடுக்க இன்டர்போல் அழைப்பு விடுத்துள்ளது. இதன்படி திருவனந்தபுரம் சரக ஏடிஜிபி மனோஜ் ஆப்ரகாம் தலைமையில் ‘பி-ஹண்ட்’ என்ற பெயரில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் கேரளா முழுவதும் 29 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் சிறுவர், சிறுமியர் ஆபாச படங்களை பரப்பிய 21 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்த லேப்டாப், செல்போன்கள், ஹார்ட் டிஸ்க், யுஎஸ்பி டிரைவ் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. இதுகுறித்து ஏடிஜிபி மனோஜ் ஆப்ரகாம் கூறியது: “சிறுவர், சிறுமியர் ஆபாச வீடியோ பரப்புகிறவர்களுக்கு 5 வருட சிறை தண்டனையும், ₹10 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். பி–ஹண்ட் சோதனை மேலும் தீவிரப்படுத்தப்படும். கேரளா முழுவதும் 84 பேர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். விரைவில் மேலும் பலர் கைது செய்யப்படுவார்கள். பல வாட்ஸ் அப், பேஸ்புக் குரூப்புகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன,” இவ்வாறு அவர் கூறினார்.
கேரள போர்ன், மாந்திரீகம், கொலை எல்லாம் திட்டமிட்டு நடக்கிறதா?: ஆபாசப் படங்கள் எடுக்க பெண்கள் தேவை, அதற்காக முறை தவறிய பெண்கள், அத்தகைய ஆண்களின் தொடர்புகளில் இருப்பார்கள். இது ஒரு “செக்சஸ்” என்பார்கள். அரசியல், சட்டம்-ஒழுங்கு அமூல் படுத்துகிறவர்களின் மறைமுக ஆதரவு என்றெல்லாம் இருந்து விட்டால், சாதாரண மக்கள் ஒன்றும் செய்ய முடியாது. பெரும்பாலான விவகாரங்கள், தெரியாமல், ரகசியமாகவே நடந்து கொன்டு இருக்கும். தினம் தினம் வேலை செய்து, வாழ்க்கை நடத்தும் மக்கள் இவற்றைப் பற்றி கவலைப் பட மாட்டார்கள், அதற்கு அவர்களுக்கு நேரமும் இல்லை, இருக்காது. ஆக, ஒருவேளை சம்பந்தப் பட்ட பெண்கள் ஏதோ காரணங்களுக்காக நச்சரித்துக் கொண்டே இருந்தால், ஆண்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு, எல்லைகளைக் கடக்கும் போது, தீர்த்துக் கட்டி விடலாம் என்ற முடிவுக்கும் வரலாம். அந்நிலையில், இத்தகைய பண ஆசை பிடித்த ஆட்கள் கிடைக்கும் போது, ஒரே கல்லால், இரு மாங்காய் அடிக்கும் விதத்தில், நரபலியும் கொடுத்து, பொஇரச்சினை செய்யும் பெண்ணையும் தீர்த்து கட்டுவார்களோ என்னமோ? இதெல்லாம் மற்றவர்களுக்கு தேவையில்லாத விசயங்கள். இருப்பினும், போலீஸார் அவ்வாறெல்லாம் கூட விசாரணை செய்யலாம். சாதாரண மக்கள் கடவுளை நம்பிக்கொண்டு, தெய்வ நம்பிக்கையுன், நிம்மதியாக வாழ்ந்தாலே போதும்.
தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டு வருபவனை சைக்கோ, மனநோயாளி, வக்கிரம் படித்தவன், அதனால் அப்படி செய்தான், செய்வான் என்று அமைதியாகி விடமுடியாது: அதிக படிப்பறிவு கொண்ட மாநிலம், முற்போக்கு எண்ணம் கொண்டவர்கள், மெத்தப் படித்தவர்கள், இந்திய அரசியலில் தொடர்ந்து தாக்கத்தை ஏர்படுத்தி வருகிறவர்கள், எல்லா துறைகளிலும், நிறுவனங்களிலும், இடங்களிலும் இருப்பவர்கள் என்றெல்லாம் இம்மாநிலத்தவர்கள் கருதப் பட்டு வருகிறார்கள். மதம், ஜாதி, சித்தாந்தம் போன்றவற்றால் வேறுபட்டிருந்தாலும், மலையாளத்தவர் என்று ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்று மற்ற மாநிலத்தவர்களால் அறியப் பட்டு வருகிறார்கள். அந்நிலையில், கேரளாவில் தொடர்ந்து இத்தகைய, குறிப்பாக பாலியல், செக்ஸ், காமம், கற்பழிப்பு, தகாத உறவுகள் என்று வக்கிரங்களாக, குற்றங்களாக, ஏன் கொலைகளாகக் கூட மாறி வருவதை பற்பல வழக்குகளில் தெரிந்து வருகிறது. அபயா கொலை, ஐஸ்கிரீம் பார்லர் செக்ஸ், மூலக்கல் பிஷப் கற்பழிப்பு என்று சமீபத்தைய விவகாரங்கள் அறியப் பட்டவையாக இருக்கின்றன. அந்த பட்டியலில் இதுவும் சேரலாம். கொஞ்சம் கொஞ்சமாக மறக்கப் படலாம். ஆனால், அத்தகைய சமூக சீரழிவுகள், வக்கிரங்கள், மனப்பாங்குகள் சட்டமீறல்கள் முறையாக ஆராயப் பட வேண்டியுள்ளது. தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டு வருபவனை சைக்கோ, மனநோயாளி, வக்கிரம் படித்தவன், அதனால் அப்படி செய்தான், செய்வான் என்று அமைதியாகி விடமுடியாது. கொலைகள் என்பது பெரிய குற்றம் தான். பல கொலைகள் செய்தால், குரூரமாக செய்தால், நோய் என்று வழக்குகளை மூடிவிட முடியாது.
© வேதபிரகாஷ்
14-10-2022.
[1] ஜீ.நியூஸ், கேரளா நரபலி: போலி சாமியார் முன் உடலுறவு! நரபலி கொடுக்க இதுதான் காரணமா?, Written by – Bhuvaneshwari P S | Edited by – Shiva Murugesan | Last Updated : Oct 12, 2022, 10:37 AM IST.
[2] https://zeenews.india.com/tamil/india/sex-in-front-of-fake-preacher-this-reason-for-human-sacrifice-in-kerala-414483
[3] தினகரன், கேரளாவில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு..!!, 2022-10-13@ 10:46:16.
[4] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=806375
[5] ஹமிழ். ஏபிபி.லைவ், ஆபாசப்படம் ஈசியா கிடைக்குது.. சிறுமிகள் கருவுறுதல் குறித்த வழக்கில் கோர்ட் சொன்ன பல கருத்து!,By: ஜான் ஆகாஷ் | Updated at : 24 Jul 2022 01:49 PM (IST); Published at : 24 Jul 2022 01:42 PM (IST)
[6] தினகரன், கேரளாவில் சிறுமிகள் ஆபாச வீடியோ பரப்பிய 21 பேர் அதிரடி கைது: லேப்டாப், செல்போன்கள் பறிமுதல், 2019-04-03@ 00:42:44