Archive for the ‘வயதானவரின் பாலியல்’ Category

கிருத்துவர்களின் செக்ஸ்-ஊழல்கள்!

மார்ச் 30, 2010

கிருத்துவர்களின் செக்ஸ்-ஊழல்கள்

உள்ளூர்வாசி ஷாஜியின் வழிமுறையை விளக்குகிறார்

உள்ளூர்வாசி ஷாஜியின் வழிமுறையை விளக்குகிறார்

சிறுவர்-சிறுமிகள் கொடுமைப் படுத்தப் பட்டத்தை விளக்குகிறார்

சிறுவர்-சிறுமிகள் கொடுமைப் படுத்தப் பட்டத்தை விளக்குகிறார்

செக்ஸிற்காக வளர்க்கப் படும் குழந்தைகள், சிறுவர்-சிறுமிகள்

இன்னொரு உள்ளுர்வாசி சொல்கிறார்

இன்னொரு உள்ளுர்வாசி சொல்கிறார்

ஒரு கிருத்துவர் விவரிக்கிறார்

ஒரு கிருத்துவர் விவரிக்கிறார்

அதற்காகவே வேலை செய்யும் நம்பிக்கயான ஊழியர்கள்

ஒரே அறையில் அடைத்து வைத்திருந்தனர்

ஒரே அறையில் அடைத்து வைத்திருந்தனர்

குளிக்க, குடிக்க தண்ணீர் இல்லை

குளிக்க, குடிக்க தண்ணீர் இல்லை

விசுவாசமான ஊழியம் செய்யும் பரிசுத்த ஆவியால் ஆசிர்வாதிக்கப் பட்டவர்கள்

ஒரு பாதிரி காரணங்களை விளக்குகிறார்

ஒரு பாதிரி காரணங்களை விளக்குகிறார்

வடகிழக்கு மாநிலத்தவர் காரணங்களை விவரிக்கிறார்

வடகிழக்கு மாநிலத்தவர் காரணங்களை விவரிக்கிறார்

செக்ஸ்-டூரிஸத்தை ஊக்குவிக்கும் அயல்நாட்டுக் கிருத்துவர்கள்

"ஏசு பதிலளிக்கிறார்" - சென்னையில் இயங்கி வந்த பாலியியல் தொழிற்சாலை

“ஏசு பதிலளிக்கிறார்” ….

ஏசுவின் வீடு

ஏசுவின் வீடு- சென்னையில் இயங்கி வந்த பாலியியல் தொழிற்சாலை - Plot No.11/295, Vasantha street, Golden george nagar, ..., Chennai - 600.

செக்ஸ்-பாதிரிகள், செக்ஸ்-பாஸ்டர்கள், செக்ஸ்-போதகர்கள் தோன்றியுள்ளது, அந்த தொழில் நன்றாக நிறுவப்பட்டுள்ளதைக் காட்டுகிறது.

சிறுவர்கள் தாங்கள் எப்படியெல்லாம் கொடுமைப் ப்டுத்தப் பட்டனர் என்று விவரிக்கிறார்கள்

சிறுவர்கள் தாங்கள் எப்படியெல்லாம் கொடுமைப் ப்டுத்தப் பட்டனர் என்று விவரிக்கிறார்கள்

சன் - டிவியின் அரைத்த மாவை அரைக்கும் முறை

சன் - டிவியின் அரைத்த மாவை அரைக்கும் முறை

பணிவிடை போர்வையில் செக்ஸ் கொடுக்கப்படும்

church-abused-men-sodonomy

church-abused-men-sodonomy

Bethel-develpoment-trust

Bethel-develpoment-trust

இறையியலை இப்பலானத் தொழிலுக்கு நியாயப்படுத்துதல்

லிபரேஷன் தியோலஜி (விடுதலை இறையியல் = Liberation Theology) போல செக்ஸ்-தியோலஜியை (பாலியல் இறையியல் = Sex Theology) உருவாக்கியுள்ள இறையியல் வல்லுனர்கள்

தூய்மையான கர்ப்பம் (Immaculate conception), கன்னியாஸ்திரீ சேவை (Nunnery), ஏசுவின் தெய்வீக காதலிகள் / மனைவிகள் (Brides of Christ), ஜேஹோவாவின் சேவகியர் (Slaves of Jehovah), புனித புணர்ச்சி சடங்குகள் (Sex-Rites, Sex-Ritual), கூட்டுப் புனர்ச்சி (Hermatic Sexulaism)………………….முதலியவை மறைமுகமாக அறிமுகப் படுத்தல்.

இதற்காக சிறுவயதிலிருந்தே தயார்படுத்தல்

மனம்-உடல் கட்டுப்படுத்தல், தயாராதல், ஏற்புடையதாக்குதல், தகவமைத்தல், உடன்படுதல், சமர்ப்பித்தல் முதலிய ரீதியில் உருவாக்கப்படும் தெய்வீக விபச்சாரிகள்

வில் ஹியூம், ரப்பி ஆலன் ஜே, மஹாபலிபுரம் காட்டும் உண்மைகள் என்ன?

பிப்ரவரி 20, 2010

வில் ஹியூம், ரப்பி ஆலன் ஜே, மஹாபலிபுரம் காட்டும் உண்மைகள் என்ன?

வேதபிரகாஷ்

அனைதுலக “தப்பியோடும் தண்டனைக் குற்றாவாளி” இந்தியாவில் நுழைந்ததிலிருந்து வெளியேற்றப்பட்ட வரை பதிலளிக்கப்படாத பல வினாக்கள்: ஆங்கிலத்தில் “fugitive” எனக் குறிப்பிடப்படும் “தப்பியோடும் தண்டனைக் குற்றாவாளி”யைப் பற்றி பரவலாக எல்லா விமானநிலையங்களிலும் அவனைப்பற்றிய விவரங்கள், புகைப்படங்கள் எல்லமே இருக்கும்[1]. ஆகையால் அவன் சென்னை அனைத்துலக விமான நிலையித்தின் வழியாக உள்ளே நுழைந்திருக்கிறான் என்றாலே அதில் மர்மம் உள்ளது[2]. அதாவது அவன் எப்படி தப்பித்து உள்ளே நுழைந்தான் என்பதே! பிறகு தாராளமாக மஹாபலிபுரத்திற்குச் சென்று அங்கு ஒரு “ரிஸார்ட்”டில் ஒருவருடம் வரைத் தங்கியுள்ளான் என்றால், நிச்சயமாக உள்ளூர் போலீஸார் ஒன்றும் கண்டு கொள்ளாமல் இருந்திருக்கிறார்கள் என்று தெரிகின்றது[3]. அதுமட்டுமல்லாது அவனுக்குத் தேவையான தினசரி பொருட்கள், உணவு இத்யாதிகளை எடுத்துக் கொண்டு வந்து வழங்கியவர்களுக்கும் தெரியாமல் இருந்தது / வாழ்ந்தது[4] விந்தையிலும் பெரிய விந்தையே!

Horowitz_Alan-India2007 

Horowitz_Alan-India2007

ரப்பி ஆலன் ஜே என்ற குழந்தை-பாலியல் குற்றவாளி: ரப்பி என்றால் யூதமதகுரு, சந்நியாசி, துறவி, குருக்கள், பூஜாரி, இமாம், காஜி, அர்ச்சகர் என்றெல்லாம் பொருள் கொள்ளலாம். கிருத்துவத்தில் பிஷப், பாஸ்டர், பிரீஸ்ட், பிரீச்சர்,…………………….என்றெல்லாம் அவரது இறையியல் தகுதி / நிலைக்கேற்ற அழைக்கப்படுவர். சில நேரங்களில் யூத்-கிருத்துவ-முஸ்லிம் மதங்கள் இந்த வார்த்தையை “மரியாதைக்குரிய” என்ற நிலையில் உபயோகிக்கின்றனர். உதாரணத்திற்கு ஒரு முஸ்லிம் நடத்திவருகின்ற[5], “ரப்பானி மருத்துவமனை”! இந்த ரப்பி ஆலன் ஜே “ஸ்னெயூர்” ஹொரோவிட்ஸ் என்பவர் ஒரு குழந்தை மனோத்ததுவ மருத்துவர். ஸ்னேயோர் ஆல்டர், மைக் சோங்கின், ஆலன் ஹொரோவிட்ஸ், ஸ்னெயூர் ஹொரோவிட்ஸ், எலிஸா ஹொரோவிட்ஸ், நம்பலா ரப்பி என்று பலபெயர்களில் அழைக்கப்பட்ட இவன் ஒரு பெரிய குழந்தை பாலியல்-குற்றாவாளியும் கூட. இவனுடைய சரித்திரம் பாலியலாகத்தான் உள்ளது[6]:

1964-1968 ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில், பாஸ்டனில் படித்து முதுகலைப் பட்டம் பெறுகிறான்.
1971 வடக்கு கரோலினாவிலுள்ள, டுயூக் பல்கலைகழகத்தில் மனோத்ததுவம், குழந்தை மனோதத்துவயியல் படித்து எம்.டி, பி. எச்.டி பட்டங்கள் பெறுகிறான்.
1973-76 அகஸ்டாவிலுள்ள ஜியார்ஜியா மருத்துவமனை கல்லூரியில் மனோதத்துவ மருத்துவராக வேலைப் பார்க்கிறான்.
1976-78 வுட்வார்ட் என்ற இடத்திலுள்ள அயோவா பல்கலைகழகத்தில் குழந்தை மனோதத்துவியல், துணை பேராசியராகப் பணியாற்றுகிறான்.
1983 யாகட்வொர்த்டவுன், அரிஜோனா – எம்.டி யாகப் பணிபுரிகிறான்.
1983-85 மோசெய், நியூயார்க்
1985-1990 ஜெருஸலேம் மற்றும் மேற்குகரை, இஸ்ரேல்
1990-91 ஸ்கெனெக்டாடி, நியூயார்க்
1991 வுட்வார்ட், அமெரிக்கா
1991-2004 குழந்தை பாலியல் குற்றங்களில் ஈடுபடுதல், சிக்குதல், கைது செய்யப்படுதல்
2004-2006 ஒனெய்டா ஜெயில், நியூயார்க்
2006 பரோலில் விடிவிக்கப்பட்டு அல்பேனி, நியூயார்க்
2006 பரோலில் விடிவிக்கப்பட்டு டெல் அவிவ், இஸ்ரேலுக்குத் தப்பிச் செல்கிறான்.
2006 ஜப்பான்
2006 தார்லாந்து
2006 ஹாங்காங், சைனா நாடுகள்
2007 ஸ்ரீலங்கா
2007 மஹாபலிபுரம், இந்தியா

மே 22, 2007 அன்று காஞ்சிபுரம் போலீஸாரால் கைது செய்யப்படுகிறான். அதாவது 2006 முதல் மே 2007 வரை அவன் மஹாபலிபுரம் ரிஸார்டில் தங்கியுள்ளான்.

Horowitz_Alan-Interpol-1 

Horowitz_Alan-Interpol-1
Horowitz_Alan-Interpol-2 

Horowitz_Alan-Interpol-2

வி ஹியூம் மற்றும் இந்த ரப்பி ஆலன் ஜேவிற்கு தொடர்பு இருந்ததா? இருவருமே குழந்தை செக்ஸ்-விவகாரத்தில் வல்லுனர்களாக இருந்துள்ளார்கள். முன்னவன் படிக்காமலேயே, தனது அனுபவத்தின் மீதாக வல்லுனனாக இருந்திருக்கிறான், பின்னவனோ படித்து பி.எச்.டி பெற்று மருத்துவம்-மனோதத்துவம் படித்தே எப்படி குழந்தைகளை பக்குவமாகத் தமது காம இச்சைக்குட்படுத்துவது என்று அறிந்து, செயல்படுத்தி, அனுபவித்து சுவைத்துவந்துள்ளான். அந்த விஷயத்தில் இருவருமே ஒத்துப் போகின்றனர். பிறகு மஹாபலிபுரம்[7], புருவங்களை உயர்த்துகின்றன. ஏன் மற்ற இடத்திற்கு செல்லாமல், மஹபலிபுரத்தைத் தேர்ந்தெடுக்கிறான்? கோவா[8], புவனேஸ்வர்[9], பூரி[10] இப்படி அருமையான இடங்களை விடுத்து ஏன் இங்கு வருகிறான்? ஒரு அயல்நாட்டவன், குறிப்பாக சட்டப்பிடியிலிருந்துத் தப்பியோடி திருட்டுத்தனமாக பல நாடுகளில் ஓடித்திரிந்து மறைய வருகிறன் என்றல் அவனுக்கு அங்கு ஒரு “தொடர்பு” இல்லாமல் வரமாட்டான், வரமுடியாது. விசா, பாஸ்போர்ட் முதலியவை இருக்கவேண்டும். ஆகவே, நிச்சயமாக அவனுக்கு உதவிய “தொடர்பாளிகள்”, கூட்டாளிகள், சம்பந்தப்பட்டோர் இருந்திருக்கிறார்கள். வில் ஹியூமோ தனது குடும்பம் சகிதமாக இருந்து தனது செக்ஸ்-தொழிலை செய்து வந்துள்ளன். ஆகவே, ஒருவேளை அவர்கள் சந்தித்து இருக்கலாம் அல்லது உதவியிருக்கலாம். மே 2002ல் கைது செய்யப்பட்ட வில் ஹியூம் பிறகு பிணையில் வந்து மறைந்து போகிறான். நவம்பர் 2009ல்தான் சூளைமேட்டில் கைது செய்யப்படுகிறான். ஆகவே அத்தகைய ரகசிய வாழக்கை வாழ்ந்த காலத்தில் யாருடன் இருந்தான், யேரெல்லாம் அவனை சந்தித்துள்ளனர் அல்லது இவன் சந்தித்தான் என்ற விவரங்கள் ரகசியமாகவே, மர்மமாகவே இருந்துள்ளன. ஆகவே இவனுக்கும் பல உதவியுள்ளார்கள் என்பதெல்லாம் முன்னமே எடுத்துக் காட்டப்பட்டுள்ளது[11].

வேதபிரகாஷ்

20-02-2010


[1] அவன் ஒரு குழந்தை பாலியல் குற்றவாளி என்பதால் அமெரிக்கா மற்றும் இன்டர்போல் எச்சரிக்கைகள் அனுப்பப்படுள்ளன.

 

[2] அதாவது பாஸ்போர்ட் சரிபார்த்தல், வெளிநாட்டவர் உள்நுழைய அனுமதிக்கும் அதிகாரியின் (Immigration officer) ஒப்புதல் அளித்தல், அத்தகைய அறிவிப்பை “சாஸ்திரி வவனில்” உள்ள அதிகாரிக்கு / அலுவலகத்திற்கு அறிவிக்காமல் இருந்தது என பல சட்டமீறல்கள் அடுக்கப்படும். அந்நிலையில் அதற்காகத் துணைபோன அதிகாரிகளின் பட்டியலும் நீள்கின்றது.

[3] காரில் சென்றிருந்தால், அந்த டிரைவர் நன்றாகவே பார்த்திருப்பான். தினமும் வெளிநாட்டவட் வந்து தங்கும்போது ஹோட்டல் மற்றும் ரிஸார்ட் காரர்கள் அருகிலுள்ள போலீஸாரிடம் வந்துள்ளவர்கள் பற்றி அறிவிக்கவேண்டும் மற்றும் போலீஸாரே வந்து அதற்கான ரிஜிஸ்டரைப் பார்த்துத் தெரிந்து கொள்ளவேண்டும். தின-அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும்.

[4] ஏனெனில் இங்கு பணம் வருகின்றது. சாதாரணமாக வெளிநாட்டவர்களிடத்திலே அவ்வாறு பணம் இருக்கிறது அல்லது இல்லாத நிலையிலும் உள்ளூர்வாசிகள் அல்லது சென்னையிலிருந்து உதவுகின்றனர் என்றால் அவன் வருகை அந்த உள்ளூர்வாசிகளுக்கு / தொடர்பாளிகளுக்குத் தெரியாமலில்லை.

[5] தொலைக்காட்சிக்களில் அதிகமாக விளம்பரங்கள் கொடுக்கப்படுகின்றன. அந்த மருத்துவர் முந்தைய ஜனாதிபதி அப்துல்கலாமுடன் கூட சேர்ந்து நிற்கும் புகைப்படங்கள் எல்லாம் கூட நடுநடுவே காட்டுவர்.

[6] கீழ்காணும் இணைதளத்தில் அவனைப் பற்றிய மேலும் பல  விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்: http://www.theawarenesscenter.org/Horowitz_Alan.html

[7] வேதபிரகாஷ், ,சென்னைசெக்ஸ் நகரமாகமாறுகிறதா?, மேலும் விவரங்களுக்கு இங்கே பார்க்கவும்:

https://socialterrorism.wordpress.com/2009/11/30/சென்னை-செக்ஸ்-நகரமாக-மாற/

வேதபிரகாஷ், குழந்தை விபச்சாரம்: பாலியல் வன்முறைக் கொடுமைகள், மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்: http://womanissues.wordpress.com/2009/11/13/குழந்தை-விபச்சாரம்-பாலி/

வேதபிரகாஷ், வில் ஹியூம்குழந்தைக் கற்ப்பழிப்பாளி! ,மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்: http://womanissues.wordpress.com/2009/11/17/வில்-ஹியூம்-குழந்தைக்-கற/

[8] கோவாவில் எல்லாவிதமான விபச்சாரமும் சாதாரணமானது, சகஜமானது. பணம் வருகிறது, உள்ள பல்நாட்டு முதலாளிகளை சந்தோஷப்படுத்துகிறது என்பதனால் அரசாங்கள் கண்களைமூடிக்கொண்டு இருக்கிறது.

[9] புவனேஸ்வரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்மான ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் முதலியன பிரமிப்பாக இருக்கிறது. வெளிநாட்டவர்கள் அங்கு அதிகமாக வந்து செல்வதும் மர்மமாக உள்ளது. கடந்த வருடங்களில் பல ஃபிடோஃபைல்கள் / குழந்தை பாலியல் வன்முறையாளர்கள் இங்கு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

[10] பூரியும் இதே நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. வந்துள்ள வெளிநாட்டுக் குழுக்களிடம் இதைப் பற்ரியேல்லாம் கேட்கிறர்களா இல்லையா என்றதெல்லாம் தெரிவவில்லை.

[11] வேதபிரகாஷ், வில் ஹியூம், புவனேஸ்வரி, தேவநாதன் I – IV பார்க்கவும்.

வேதபிரகாஷ், வில் ஹியூம், புவனேஸ்வரி, தேவநாதன்: தமிழ் ஊடகங்கள்!, https://socialterrorism.wordpress.com/2009/11/20/வில்-ஹியூம்-புவனேஸ்வரி-த /

ஷாஜி, பினு, பால்: இப்படி ஒன்று சேர்ந்து இளமை-பாலியல் நடத்துகிறார்களா?

பிப்ரவரி 15, 2010

ஷாஜி, பினு, பால்: இப்படி ஒன்று சேர்ந்து இளமை-பாலியல் கொடூரம் நடத்துகிறார்களா?

ஷாஜி கைது செய்யப் பட்ட செய்தி ஏற்கெனவே வந்து விட்டது!

தினகரன் – ‎18 மணிநேரம் முன்பு‎

காப்பகத்துக்கு சிறுவர்கள் சப்ளை மணிப்பூர் போதகர் பிடிபட்டார்

தினகரன் – ‎18 மணிநேரம் முன்பு‎
களியக்காவிளை : குமரி மாவட்டம், களியக்காவிளையை சேர்ந்தவர் ஷாஜி. மதபோதகரான இவர் குழித்துறை அடுத்த பாலவிளை பகுதியில் காப்பகம் நடத்தி வந்தார். இதில் மணிப்பூர், அசாம்

களியாக்கவிளை காப்பக விவகாரம் – கிறிஸ்தவ மதபோதகர் அதிரடி கைது

தட்ஸ்தமிழ் – ‎15 மணிநேரம் முன்பு‎
களியாக்கவிளை: களியாக்கவிளை அருகே குழந்தைகள் காப்பகத்தில் வெளிமாநில சிறார்களை கொடுமைப்படுத்திய வழக்கில் தேடப்பட்டு வந்த கிறிஸ்தவ மத போதகர் ஷாஜி கைது செய்யப்பட்டார்.

களியக்காவிளை அருகே 76 குழந்தைகள் மீட்கப்பட்ட காப்பக போதகர் கைது

தினமணி – ‎18 மணிநேரம் முன்பு‎ [Feb.13, 2010]
களியக்காவிளை,​​ பிப்.​ 13: கன்னியாகுமரி மாவட்டம்,​​ களியக்காவிளை அருகே 76 வெளி மாநில குழந்தைகள் மீட்கப்பட்ட விவகாரத்தில்,​​ அனாதை இல்லம் நடத்திய மத போதகரை தனிப்படை போலீஸôர்

குமரி அருகே காப்பகம் நடத்திய போதகர் கட்டுப்பாட்டில் மேலும் 20

தினகரன் – ‎13 பிப்., 2010‎
களியக்காவிளை, : குமரி மாவட்டம், களியக்காவிளையை அடுத்த பாலவிளையில் மதபோதகர் ஷாஜி என் பவர், சட்டவிரோதமாக நடத்திய காப்பகத்தில் கடந்த மாதம் 23ம் தேதி நெல்லை சிறுவர் கூர்நோக்கு

ஷாஜியின் லீலைகளை ஆராயும்போது ஆச்சரியமாக உள்ளது. பெங்களூரிலுள்ள பாஸ்டர் பினுவிடம் தான் பிடித்துவைத்தப் பெண்களை அனுப்பிவைத்தானாம். பினுதான் ஷாஜிக்கு மணிப்பூரைச் சேர்ந்த பால், தொடர்பாளியை என்பவனை அறிமுகம் செய்தது.

தகவல்களின்படி, மணிப்பூர் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களிலுள்ள இளம்பெண்களை பால் பெங்களூருக்கு அழைத்துச் சென்றதாகத் தெரிகிறது. Girls-taken-to-Bangalore-by-Paul

Girls-taken-to-Bangalore-by-Paul

இப்படி குழந்தைகள், சிறுவர்-சிறுமிகள், இளைஞர்கள் 20 வயது வரையிலுள்ளவர்களை கொடூரமான பாலியல் இச்சைகள், காமங்கள், மோகங்களுக்கு உபயோகிப்பதை தமிழில் என்ன சொல்வது? அவர்கள் “ஃபிடோஃபைல்” என்கிறார்கள். Phedophile = phedo + phile குழந்தை + விரும்புவது, அதாவது குழந்தைகளை மோகிப்பது, உடல் ரீதொயாக பலியல் தொந்தரவு, பலாத்காரம், உடலுறவு கொள்வது, உடலுறவு கொள்ளச் செய்து பார்ப்பது, படம் எடுப்பது………முதலிய கற்பனைக்கும் எட்டாத கொக்கோக வேலைகளை செய்யும் ஒரு மாபெரும் குற்றம், மனித தீவிரவாதச் செயல். ஆகவே அதை இளமை-பாலியல் எனக்குறிப்பிட்டு அத்தகைய கொடடூரத்தைச் செய்பவனை இளமை-பாலியல் தீவிரவாதி / காமக்கொடூரன் என்றே அழைக்கலாம்.

ஏன் குழந்தைகளாக இருக்கும்போதே பிடித்து வருகிறர்கள்? குழந்தைகளாக இருக்கும்போதே அவற்றின் செக்ஸ்-உருப்புகளை தொடுவது, தடவி விடுவது, சீண்டுவது, ……முதலிய செயல்களை செய்யும்போது அவை ஒரு ஏற்புடைய மன-பக்குவமான நிலைய (sexually conditioned) அடைகிறார்கள். அதாவது அத்தகைய செயல்களை செய்யும்போது அல்லது செய்விக்கப்படும்போது, வயதான பிறகும் தவறரானது என்று நினைக்கும் நிலை வருவதில்லை. மேலும் அவர்களுக்குள்ளேயே உடலுறவு தொடர்புகளை ஏற்படுத்தும்போது அந்த போலியான, அபாயகரமான விளையாட்டுக்களில் சிக்கி, தாமே அதில் ஈடுபடலாம். அந்நிலையில் வயதுக்கு வந்துவிட்ட, நன்றாக வளர்ந்த சிறுவர்-சிறுமியர் அதாவது 10-16 மற்றும் 20 வரை உள்ள இளைஞர்கள் இத்தொழிலுக்கு உபயோகப்படுத்தும் போது, வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

Boys-saved-Kanyakumari

Boys-saved-Kanyakumari

இந்தியாவில் ஏன் இந்த இளமை-பாலியல் பெருகுகிறது? அயல்நாட்டுக்காரர்களின் வருகை, மற்றும் அவர்களது தொடர்ந்து இருக்கும் நிலை முதலியன இத்தகைய பாலியல் தொழிலுக்கு நல்ல கிராக்கி உள்ளது மற்றும் பெருகுகிறது.

Manipur-boys-girls-sexually-harassed

Manipur-boys-girls-sexually-harassed

முக்கியமாக MNC கம்பெனிகள் மற்றும் அயல்நாட்டவர் தங்கியிருக்கும் வீடுகள், விருந்தினர் மாளிகைகள் முதலிய இடங்களுக்கு அருகாமையில் இந்த அனாதை இல்லங்கள் இருக்கும். “குழந்தைகளை” அனுப்பி வைப்பார்கள் அல்லது அனுபவிக்க அவர்களே வருவார்கள். நல்ல வரும்படி, டாலர்களிலேயேக் கிடைக்கிறது. இதை “Sex tourism” = “சுற்றுலா பாலியல்” என்றும் கூறுகிறார்கள். மேற்கத்தைய மக்களைப் பொறுத்தவரைக்கும் குடிப்பதும், இஷ்டத்திற்கு உடலுறவு அல்லது விபச்சாரிகளுடன் அனுபவிப்பது என்று ஒரு சாதாரண விஷயமாகி விட்டது. இந்தியர்கள் எப்படி தினமும் டீ / காபி என்று குடிக்கிறார்களோ அதுமாதிரியாகிவிட்டது. இங்கு இந்தியாவிற்கு வந்து மாதங்கள், வருடங்களாகத் தங்கும்போது, அதை எதிர்பார்க்கிறார்கள். நம்மவர்களும் தயாராகி விட்டர்கள். கிருத்துவர்களுக்கு இதைப் பற்றி ஏற்கெனவே தெரியும் என்பதால்தான் அவர்கள் இதில் நிறைய அளவிற்கு திறமைசாலிகளாக இருக்கிறார்கள்.

வில் ஹியூம் விடுதலை! காமக்கொடூரன் கதை தொடர்கிறது!

பிப்ரவரி 10, 2010

வில் ஹியூம் விடுதலை! காமக்கொடூரன் கதை தொடர்கிறது!

© வேதபிரகாஷ்

இங்கு “குழந்தைகள்” என்று சொல்லியே பச்சையாக உண்மைகளை சம்பந்தப் பட்டுள்ளவர்கள் மறைக்கிறார்கள். 2002லேயே “டீன்-ஏஜ்” பருவத்தில் இருப்பவர்களை அனுபவித்தான் என்றால் அது கசப்பான உண்மை. இப்பொழுது அவர்கள் – கற்பழிக்கப்பட்ட பெண்கள், பாலியல் வேலையில் ஈடுபடுத்தப் பட்ட ஆண்கள், 20-26 வயதுகளில் இருப்பாட்கள். ஆகவே, அவர்கள் தம்மை மறைத்துக் கொள்கிறார்கள் அல்லது மறைத்து வைக்கப்படுகிறர்கள் என்று நன்றாகவேத் தெரிகிறது. கோடிகளில் பணம் வருகிறது என்ற உண்மையை இப்பொழுது வில் ஹியூம் வாயிலேயே வந்துவிட்டது. ஆகவே லட்சங்கள் கொடுத்து அவர்கள் அமைதிப் படுத்தப் பட்டால், நிச்சயம் மௌனிகளாகி விடுவர். கூப்பிட்டாலும், எந்த கோர்ட்டிற்கும் வரப்போவதில்லை.

உண்மை / வாய்மை மறக்கப்படும். 10-02-2010 அன்றுதான் தமிழகத்தின் அரசர் உண்மைக்கும், வாய்மைக்கும் மான்குட்டி-வேடன் கதை மூலம் விளக்கம் அளித்திருக்கிறார்!

பாவம், இந்த மான்குட்டிகளை யார் காப்பாற்றுவது?

சைதாப்பேட்டை நீதிமன்றம் வில் ஹியூமிற்கு பிணை-விடுதலை அளித்தது![1] : கிருத்துவத்தின் பெயரால் எத்தனை ஆண்-பெண் “குழந்தைகள்”, வயது வந்த வாலிபர்கள், இளைஞர்கள் வில் ஹியூமினால் பாலியல் வன்முறைக் கொடுமைகளுக்குட்படுத்தப் பட்டார்கள் என்பது அந்த பரலோகத்தில் இருக்கும் “பரமபிதாவிற்கு”த்தான் தெரிந்திருக்கும்!. கடந்த நவம்பர் 7, 2009 அன்று நிர்வாணப் படங்களை இணைதளங்களில் ஏற்றும்போது, இன்டர்போல் துறையால் தகவல் கொடுக்கப்பட்டு சென்னை போலீஸாரால் கைது செய்யப்பட்டான். ஆனால், 08-02-2010 அன்று சப்தமில்லாமல் விடுதலை செய்யப்படுகிறான்! ரவிகுமார் என்ற அவனது வக்கீல் அவன் குற்றமற்றவன், மேலும் 80 நாட்கள் ஆனபிறகும், அவன் மீது எந்த குற்றப்பத்திரிக்கையும் போலீஸார் வதிவு செய்யவில்லை என்று வாதாடியதும், நீதியரசர் பிணை-விடுதலையளித்துவிட்டார்!

வீர வசனங்கள் பேசி, போராட்டங்கள் நடத்தும் சமுதாய அமைப்புகள், சங்கங்கள் முதலியன என்னசெய்கின்றன என்று தெரியவில்லை. தகவல் தொழிற்நுட்ப சட்டத்தின் படி (The Information Technology Act) போலீஸாரால் 80 நாட்களில் சார்ச் ஸீட் / குற்றப்பத்திரிக்கை பதிவு[2] செய்யமுடியவில்லையாம்! என்னே விந்தை! அருகிலேயே இருந்து கொண்டு சுகவாசம் புரிந்து உல்லாசமாக பவனி வந்து கொண்டிருந்த இவனைப் பிடிக்கவே இன்டர்போல் துறை தகவல் கொடுக்கவேண்டியதாயிற்று[3]. ஆனால் பிடித்த அவன்மீது குற்றப்பத்திரிக்கை தயார் செய்யமுடியவில்லை என்றால், அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? இதில் மேலும் கூத்து என்னவென்றால் இந்த சட்டமே அக்டோபர் 27, 2009ல்தான் அமூலுக்கு வந்ததாம்! அப்படியே நிரூபனம் செய்யப்பட்டு தண்டனைக் கொடுக்கப்பட்டால் ஏழாண்டுகள் சிறைவாசம், ரூ. 10 லட்சம் அபராதம் விதிக்கப்படுமாம்! ஏன் 40ற்கும் மேலாக – குறிப்பாக அதில் பாதிக்கும் மேலாக இருந்த பெண்களை கற்பழித்தக் குற்றத்திற்கு மொத்தமாக தண்டனையைக் கூட்டினால் அவனை தூக்கில் போடலாமே? புதிய சட்டத்தில்தான் அவனை பதிவு செய்து ஏன் சட்ட-ஓட்டைகளில் சலுகைகள் செய்துதரவேண்டும்? யார் அப்படி அவனுக்கு உதவுகிறார்கள்?

திருட்டு விசிடி, இண்டர்நெட், சைபர் கிரைம்: குற்றம் என்றால் குற்றம்தான், அனைத்துக் குற்றவாளிகளும் ஒரே மாதிரிதான் நடத்தவேண்டும். வழக்குகள் பதிவு செய்யப்படவேண்டும்………………..தண்டனை கொடுக்கவேண்டும். ஆனால், திருட்டு விசிடி என்றால் போலீஸார் பாய்ந்து-பாய்ந்து வேலை செய்கின்றனர். சரத்குமார்-ராதிகா தம்பதியர் அழுதவுடன் அடுத்த நாளே இணைதளத்தில் ஏற்றிய இஞ்சினியரைப் பிடித்து விடுகின்றனர்! ஆனால் தேவநாதன் வீடியோக்களை இணைதளத்தில் ஏற்றியவர்களைப் பிடிக்கமுடியவில்லை. ஆபாச விசிடிக்கள் விற்றாலும் கவலைப்படுவதில்லை! வில் ஹியூம் நிர்வாணப் படங்களை இணைதளங்களில் ஏற்றும்போது, இன்டர்போல் துறை வந்து தகவல் அளிக்கவேண்டும்? என்ன இதெல்லாம்? சாதாரண அறிவு, பகுத்தறிவு, மின்னறிவு, மென்னறிவு, பெரிய-அறிவு…………………….எது கொண்டு யோசித்தாலும் புரியவில்லையே? தொழிற்நுட்பத்தில் கூட ஜாதி வேறுபாடு, இன வேறுபாடு முதலியவை உள்ளனவா?

போலீஸ் கமிஷனர் சொல்வது[4]: சென்னை போலிஸ் கமிஷனர் டி. ராஜேந்திரன் சொல்வதென்னவென்றால், “அவன் மீது பலமான குற்றப்பத்திரிக்கை ஒன்று 15 நாட்களில் பதிவு செய்யப்படும்”! பிறகு முன்பு ஏன் கோட்டை விட்டார்கள்? இந்த மூன்று மாத காலத்தில் போலீஸாருக்கு அல்லது போலீஸார் தரப்பில் வேலை செய்யும் சட்ட வல்லுனர்களுக்கு வெளிவரும் செய்திகள், நடக்கும் நிகழ்ச்சிகள் முதலியன தெரியாமலா போய்விடும்? ஏற்கெனவே எழுப்பியுள்ள கேள்விகளுக்கு பதில் தேடினாலே கூட்டத்தோடு பிடித்திருக்கலாமே? தமிழ் சட்டவல்லுனர்களுக்கு அத்தகைய “பலமான குற்றப்பத்திரிக்கை” அந்த 80 நாட்களில் செய்யாததை, இந்த 15 நாட்களில் செய்யப் போகிறர்களா?

சட்ட அமைச்சரின் சொதப்பலான பதில்[5]: வீரப்ப மொய்லி என்ற சட்ட அமைச்சர், இத்தகைய குற்றங்களுக்கு கடுமையான சட்டங்களை எடுத்துவரவேண்டும் என்கிறார்! இவர் இனிமேல் சட்டத்தை எடுத்துவந்து என்ன ஆகிவிடப் போகிறது? கற்பழிக்கப்பட்டப் பெண்களின் கற்பு திரும்ப வந்துவிடுமா? இந்தியாவில் ஏதோ சட்ட்டங்களுக்குக் குறைவு மாதிரி. ஏற்கெனவே ஆயிரக்கணக்கில் சட்டங்கள் உள்ளன. உட்கார்ந்தால் சட்டம், எழுந்தால் சட்டம். இங்கு பெண்களை கற்பழித்தது, ஆண்களை பாலியல் வன்முறைக்குட்படுத்தியது என்று பார்த்தால் உள்ள சட்டங்களே போதும். இணைதளச் சட்டம், வலைச் சட்டம் என்றெல்லாம் ஆராய்ச்சி செய்யவேண்டாம். கற்பழிப்பு என்பது வேறு, நிர்வாண படங்களை இணைதளத்தில் வெளியிட்டான் என்பது வேறு. இருக்கும் சட்டங்களை விடுத்து, இல்லாததைப் பற்றி பேசுவது, அத்தகைய கொடுங்கோலர்களுக்கு, குற்றவாளிகளுக்கு உதவுவது போல ஆகும். ஏனெனில், நாளை அவனுக்கு ஆஜராகும் விசிவாசமுள்ள வக்கீல் இதைத் தான் சீர்மிகு நீதிமன்றத்தில் மாண்புமிகு நீதியரசரின் முன்பு மொழிந்து, தனக்கெயுரிய அறிவுபூர்வமான வாதங்களினால் இந்த கொடுங்கோல காமுகனை, கற்பழிப்புக் காரனை விடுதலை செய்ய “சட்ட அமைச்சரே சொல்லிவிட்டார், குற்றம் புரிந்த நேரத்தில் அதற்கான சட்டம் இல்லை” என்று பொருள்பட எடுத்துக் காட்டி பேசுவான், பயன்படுத்துவான்.

தேவநாதனும், வில் ஹியுமும்: புரியாத மர்மம்!: தேவநாதன் விஷயத்தில் மட்டும் அப்படி பறந்து-பறந்து வேலை செய்தார்களே, இங்கு மட்டும் ஏன் தூக்கம்? 2002லேயே பதிவு செய்யப்பட்ட வழக்கு வேறு இருக்கிறது. அப்பொழுது 40ற்கும் மேலாக ஆண்-பெண்களை காமத்துடன் மிருகம் போன்று மாமல்லபுரத்தில் தனது இச்சைக்கு பயன்படுத்திக் கொண்டான். ஏசுவின் பெயரால் “சின்ன வீடு” – LITTLE HOME – அப்படியொரு அந்தப்புரத்தையே நடத்தி சல்லாபங்கள் செய்து வந்தான். ஏன் அந்த சிறுவர்-சிறுமியர்களை மருத்துவ பரிசோதனை செய்யவில்லை? தமிழச்சிகள் எல்லோரும் சைதாப்பேட்டை கோர்ட்டிற்கு சென்று அவனை துடப்பக்கட்டை, செருப்புகளால் அடிக்கவில்லை! தேவநாதன் என்றால் இனிக்கிறது, வில் ஹியூம் என்றால் கசக்கிறதா? இல்லை என்ன தடுக்கிறது? மர்மாகத்தான் உள்ளது! இந்திய தோல் வெள்ளைத்தோலுக்கு இனிக்கிறது, ஆனால் வெள்ளைத்தோலைக் கண்டால், இந்திய / தமிழக தோல்களுக்கு பயமாக உள்ளதா?

வில் ஹியூம் ஒரு மாபெரும் ஆபத்து: கிரிஸ்டைன் பெடௌ என்ற குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை ஆயும் வல்லுனர் கூறுவதாவது, வில் ஹியூம் குழந்தைகளுக்கு ஒரு அபாயகரம் என்கிறார்[6]. டச்சுநாட்டுடன் இணைந்து இந்தியா அவனுக்குத் தகுந்த தண்டனையளிக்கவேண்டும். முன்பு நவம்பர் 2009ல், சுதாகர், துணை போலீஸ் கமிஷனர், சைபர்-கிரைம் அவன் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம் மற்ற கூடுதல் அத்தாட்சிகளை சைதாப்பேட்டை மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார். காஞ்சிபுரம் சூப்பிரென்டென்ட்டும் அவன் மீதுள்ள வழக்கு விரைவில் விசாரிக்கப்படும் என்று வாக்களித்தார். முன்பு இந்திய குற்றவியல் சட்டம் section 377 of IPC மற்றும் பாஸ்போர்ட் சட்டம் கீழ் தவறான தகவல்கள் கொடுத்ததற்கும், அந்நியர் பதிவு சட்டத்தின் சரத்துகளை மீறியதற்கும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 2003லிருந்து பெயிலில் இருந்து வந்தான். ஆனால் 2004ல் விசாரணை ஆரம்பித்தபோது, ஏதாவது ஒரு காரணம் காட்டி வழக்கைத் தள்ளிப்போட வைத்தான். முக்கியமாக தன்மீது குற்றஞ்சாட்டிய ஏதாவது ஒரு குழந்தையையாவது கோர்ட்டில் ஆஜராகவேண்டும் என்றுக் கெட்டுக் கொண்டான்[7]. பிறகு எப்படி 40தில் ஒன்றுகூட வரவில்லை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை?

வில் ஹியூமின் “நிர்வாண” / வெளிப்படையான (?) நேர்காணல்[8]: டைம்ஸ்-நௌ கீழே கொடுத்துள்ள கேள்வி-பதில்கள் ஓரளவிற்கு அவனுடைய மனப்பாங்கைக் காட்டுவதாக உள்ளது, சில முக்கியமான உண்மைகளௌம் வெளிவருகின்றன[9]:

செய்தியாளர்: உங்களுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டீர்களா?

வில் ஹீயூம்: இல்லை, நிச்சயமாக இல்லை. நான் ஒன்றுமே செய்யவில்லை. நீங்கள் என்னுடைய வக்கீலுடன் பேசவும். அவருக்கு எல்லாமேத் தெரியும்[10].

செய்தியாளர்: மாமல்லபுரத்தில் உள்ள அந்த பாவப்பட்ட குழந்தகளின் கதி என்ன?

வில் ஹீயூம்: எங்களுக்கு ரூ. 2 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் என்னை வெளியே தள்ளிவிட்டார்கள்.

செய்தியாளர்: அரசாங்கம் சொல்கிறதே, நீங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு விட்டீர்கள் என்று?

வில் ஹீயூம்: இல்லை, நிச்சயமாக இல்லை.

செய்தியாளர்: நெதர்லாந்திற்கு திரும்ப விரும்புகிறீர்களா?

வில் ஹீயூம்: ஆமாம், நான் அப்படித்தான் நினைக்கிறேன். எனக்கு இங்கு நிறையவே கிடைக்கிறது.

செய்தியாளர்: போலீஸாருடைய விசாரிப்பு உங்களுக்குத் திருப்திகரமாக உள்ளதா?

வில் ஹீயூம்: இல்லை. அதனை நான் சொல்லமுடியாது.

கோடிகள் ஏன் கொடுக்கவேண்டும்?மாமல்லபுரத்தில் உள்ள அந்த பாவப்பட்ட குழந்தகளின் கதி என்ன?”, என்று கேட்டதற்கு,  “எங்களுக்கு ரூ. 2 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. என்கிறான் ஹியூம்!. அதாவது ரூ. 2 கோடி பாதிக்கப்பட்ட அந்த ‘குழந்தைகளுக்கு” டச்சு அரசு கொடுத்திருந்தால், அதன் நிர்பந்தம், சரத்துகள் என்ன? முன்பு, “தன்மீது குற்றஞ்சாட்டிய ஏதாவது ஒரு குழந்தையையாவது கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படவேண்டும்” தைரியமாக கேட்கவேண்டும், இப்பொழுதோ, “ஆனால் அவர்கள் என்னை வெளியே தள்ளிவிட்டார்கள்” அதாவது கழட்டி விட்டர்கள் என்ற முறையில் ஏன் பேசவேண்டும்? எப்படி அவனுக்கு இந்த விஷயங்கள் தெரியும்?  இப்படி காசுக்கு கற்ப்பை சமாதானப் படுத்திக் கொள்வதால்தான் அந்த அம்மையார், “வில் ஹியூம் ஒரு மாபெரும் ஆபத்து” என்று எச்சரிக்கிறாரா?  பணத்தைக் கொடுத்து மாபெரும் மனிதகுற்றங்களை மறைக்கப் பார்க்கிறர்கள். அதற்கு சில இந்திய அரசாங்கத்தினர், அதிகாரிகள், போலீஸ், சமூக-ஊழியர் முதலியோரும் உடன் போவதாகத் தெரிகின்றது. இப்படியே போனால், “தமிழகம்” இன்னொரு “தாய்லாந்து”[11] ஆகிவிடும்!

“தமிழகம்” இன்னொரு “தாய்லாந்து” ஆகிவிடும்! கடந்த காலத்தில், சமீமத்தைய நிகழ்ச்சிகளைக் கூர்ந்து கவனித்தால் பல அயல்நாட்டவர் தமிழகத்தை தாராளமாக செக்ஸ்-தொழிலுக்கு, செக்ஸ்-சுற்றுலாவிற்கு பயன்படுத்தி வந்ததற்கு பல உதாரணங்கள் (வேலூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், கன்யாகுமரி, திருநெவேலி, திருச்சி) காட்டுகின்றன. இதில் பாதிக்கப் படுவது வயது 10 முதல் 20 வரையுள்ள ஆண்-பெண் சிறுவர்-சிறுமியர்தாம். இதில் “குழந்தைகள்” என்று சொல்லி / குறிப்பிட்டு உண்மையை மறைக்கவேண்டிய பாவத்தைச் செய்யவேண்டியதில்லை. ஏனெனில், அவர்கள் ஏற்கெனவே கற்பழிக்கப் பட்டுள்ளார்கள். சீறிபாயும் செபாஸ்டியன் சீமான்கள்[12] எல்லாம் இவ்விஷயத்தில் ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை “கர்த்தர்” அப்படி ஆணையிட்டு விட்டார் போலும்!

ஆறுவயது சிருமியைக் கற்பழித்தான் என்றால் கைது செய்யப்பட்டு தண்டனைக் கொடுக்கப்படுகிறது! பிறகு இத்தகைய மிருகங்களை வைத்துக் கொண்டு ஏன் சட்டக்கதைகள் பேசிக்கொண்டு இருக்கவேண்டும்?

© வேதபிரகாஷ்

10-02-2010


[1] http://www.ptinews.com/news/508353_Dutch-national-granted-bail-in-child-pornography-case

[2] India Blooms News Service, Dutch Paedophile granted bail, விவரங்களுக்கு இங்கே பார்க்கவும்:

http://www.indiablooms.com/NewsDetailsPage/newsDetails090210l.php

[3] ஆனால் திருட்டு விசிடி விஷயத்தில் மட்டும் உடனே பிடித்து விடுகிறர்கள்! அதாவது இன்டர்போல் துறையையும் மிஞ்சி விடுகிறர்கள்!

[4] A charge sheet will be filed against alleged paedophile William Heum within 15 days, police here said Tuesday after the Dutch national was granted bail by a local court.  Chennai Police Commissioner T. Rajendran said a strong charge sheet against Heum would be filed in 15 days time.

http://sify.com/news/Chennai-police-to-file-charges-against-Will-Heum-in-15-days-news-National-kcka4eejbfe.html

[5] The Hindusthan Times, Moily slams ‘paedophile’ bail, plans tougher law, dated 10-02-2010; for details see at:  http://www.hindustantimes.com/Moily-slams-paedophile-bail/H1-Article1-507191.aspx

[6] Christine Bedoe, Director, ECPAT[6], UK, is concerned once again that Will Heum poses a big risk to children.

[7] http://www.timesnow.tv/articleshow/4332402.cms

[8] REPORTER: Have you confessed to your crime?
HEUM: No, of course not. I didn’t do anything. You talk to my lawyer. He knows everything.
REPORTER: What about the poor kids in Mahabalipuram?
HEUM: We got 2 crore rupees, they put me out.
REPORTER: But the Govt is saying that you confessed?
HEUM: No, of course not.
REPORTER: Do you want to go back to Netherlands?
HEUM: Yes. I think so. I get too much here.
REPORTER: Are you happy with police investigation?
HEUM: No. I cannot say that.

[9] TIMES-NOW, Bungling cops let ‘paedophile’ Heum off the hook, 9 Feb 2010, 1757 hrs IST, http://www.timesnow.tv/articleshow/4338110.cms

[10] அதாவது அவன் இதை ஒரு சாதாரண சட்டம், சட்டமீறல் குற்றம் என்று எடுத்துச் சென்று, பிறகு நிரூபிக்கப்படவில்லை அல்லது குற்றஞ்சாட்டியவகள் வரவில்லை, ஆஜர்படுத்தப்படவில்லை என்று வழக்கு முடிக்கப்படும். அந்த சிறிய குற்றங்களுக்கு அந்நியர் சட்டம், பாஸ்போர்ட் சட்டம் முதலியவற்றிற்கு ஆயிரம், ஐந்தாயிரம் அபராதம் வுதிக்கப்படும், கட்டிவிட்டு போய்விடுவான்.

[11] தாய்லாந்து ‘குழந்தை விபச்சாரத்திர்கு” பெயர்போனது. உலகத்தில் உள்ல விமானக்கள் எல்லாம் வந்து இங்கு வந்து சில மணி நேரம் ஓய்வெடுக்கும். அந்த நேரத்தில், விருப்பமுள்ள பயணிகள் ஜாலியாக பென்களை அனுபவித்து வந்து விமானித்தில் ஏறிவிடுவர்.

[12] சமீபத்தில் ஜெயராம் என்ற நடிகர் விஷயத்தில், தமிழ்பெண்களைப் பற்றி அவதூறாக பேசியபோது, மாபெரும் போராட்டத்தை நடத்தியுள்ளார். குஷ்பு வழக்கையும் இவரிடத்திலேயே விட்டுவிட்டால் தகுந்த தண்டனை அளிப்பார் போலயிருக்கிறது!

பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய கிழவருக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை!

ஜனவரி 11, 2010

பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய கிழவருக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை

இந்த செய்தி வந்து ஐந்து மாதங்கள் கூட ஆகவில்லை.

அதற்குள் இன்னொமொரு கிழம் மாட்டிக்க்கொண்டு விட்டது!

இலவச டிவியில் மானாட, மயிலாட, மார்பாட என குலுக்கலகளைப் பார்த்துவிட்டு அலயும் இந்த கிழங்கள் என்ன செய்யும்?

எளிதாக கிடைக்கும் இலக்குகளைத்தான் குறிவைக்கும்!

போதாகுறைக்கு மான்குட்டி கதை சொல்லி உசுப்பிவிடும் கிழம் வேறு உள்ளது!

பாலியல் பலாத்காரம் 70 வயது முதியவர் கைது

பாலியல் பலாத்காரம் 70 வயது முதியவர் கைது

தினமலர், பதிவு செய்த நாள் : ஜூன் 03,2010,03:05 IST

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=11945

இடைப்பாடி: கொங்கணாபுரம் அருகே இளம்பெண்ணை  பாலியல் பலாத்காரம் செய்த  முதியவர் கைது செய்யப்பட்டார். கொங்கணாபுரம் அருகே  புதுப்பாளையத்தை சேர்ந்தவர் நைனாகவுண்டர்(70); விவசாய கூலித் தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர்  ஏழுமலை மகள் ரேவதி(18).  தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் ஏரி வேலை செய்து வருகிறார். கடந்த 27ந் தேதி ரேவதி வேலைக்கு செல்லாமல் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த நைனாகவுண்டர், ரேவதியை பாலியல்பலாத்காரம் செய்தார்.  வெளியில் சொன்னால் கொலை செய்வதாகவும் மிரட்டினார். மனமுடைந்த ரேவதி,  அரளிக் கொட்டையை தின்று தற்கொலைக்கு முயன்றார். பக்கத்து வீட்டினர் அவரை இடைப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  இடைப்பாடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து, நைனாகவுண்டரை கைது செய்தனர்.

[ திங்கட்கிழமை, 11 சனவரி 2010, 06:32.48 AM GMT +05:30 ] பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய கிழவரின் உடல்நிலையை காரணம் காட்டி அறிவுரை வழங்கிய உச்சநீதிமன்றம் அவரை விடுதலை செய்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கைகொண்டான். இப்போது 70 வயதான அவர், 1999 பிப்ரவரி 2 அன்று 60வயதான ஒரு பெண்ணை குடிசைக்குள் இழுத்துச் சென்று கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். அவரிடம் இருந்து தப்பிக்க அந்தப் பெண் அலறி துடித்துப் போராடினார். இதில் அந்த பெண்ணின் வலது கை முறிந்து விட்டது.
இது தொடர்பான வழக்கு அமர்வு நீதிமன்றத்தில் நடந்தபோது குற்றச்சாட்டை கைகொண்டான் மறுத்தார். எனினும் பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலம், சந்தர்ப்ப சூழ்நிலை போன்றவற்றை ஆதாரமாக வைத்து அவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து 2004 பிப்ரவரி 24ல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து கைகொண்டான் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவையும் சென்னை உயர்நீதிமன்றம் 2008 மார்ச் 23ல் தள்ளுபடி செய்து விட்டது.
இதையடுத்து கைகொண்டான், உச்சநீதிமன்றத்தில் சிறப்பு மேல் முறையீடு செய்தார். அவரது சார்பில் வக்கீல் எம். விஜய் பாஸ்கர் வாதாடியபோது, எப்.ஐ.ஆர். பதிவு செய்ய ஒரு நாள் தாமதம் ஏற்பட்டதையும், பாதிக்கப்பட்டவருக்கு கை முறிந்ததற்கான எக்ஸ்ரே அறிக்கை தாக்கல் செய்யப்படாததையும் ஒரு குறையாக எடுத்துக் கூறினார். இந்த வாதத்தை நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜூ, ஆர்.எம். லோட்கா ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் நிராகரித்து விட்டு இரண்டு கீழ் நீதிமன்றங்களிலும் வழங்கப்பட்ட தண்டனை சரிதான் என்று தீர்ப்பளித்தது.
இதன் பிறகு மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் வி. கனகராஜ் கூறுகையில், ‘‘ மனுதாரருக்கு 70 வயது ஆகி விட்டது. அவர் 6 ஆண்டுகள் சிறையில் இருந்து விட்டார். இப்போது பல விதமான உடல் நலக் குறைவால் அவதிப்படுகிறார். எனவே உச்சநீதிமன்றம் கருணை காட்டி விடுதலை செய்ய வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து 70 வயதான கிழவரின் நிலையைப் பார்த்து நீதிபதிகள் மனம் இளகினர். தண்டனைக் காலத்தை மாற்றி 6 ஆண்டு சிறையே போதுமானது என்று கூறி ஒரு ஆண்டுக்கு முன்பே அவரை விடுதலை செய்ய அனுமதி அளித்தனர்.
‘‘விடுதயை£ன பிறகு கைகொண்டான் தனது எஞ்சிய வாழ்நாளை ஆன்மீக வழியில் கழிக்க வேண்டும். கோவிலுக்குச் செல்லுதல், பூஜை செய்தல், மந்திரங்கள் ஓதி பக்தி பாடல் பாடுதல் போன்றவற்றில் காலத்தை கழித்து அமைதியாக வாழ வேண்டும். எக்காரணம் கொண்டு கொடிய குற்றங்களில் இனி ஈடுபடக் கூடாது’’ என்று நீதிபதிகள் அறிவுரை கூறினர்.