வில் ஹியூம் விடுதலை! காமக்கொடூரன் கதை தொடர்கிறது!
© வேதபிரகாஷ்
இங்கு “குழந்தைகள்” என்று சொல்லியே பச்சையாக உண்மைகளை சம்பந்தப் பட்டுள்ளவர்கள் மறைக்கிறார்கள். 2002லேயே “டீன்-ஏஜ்” பருவத்தில் இருப்பவர்களை அனுபவித்தான் என்றால் அது கசப்பான உண்மை. இப்பொழுது அவர்கள் – கற்பழிக்கப்பட்ட பெண்கள், பாலியல் வேலையில் ஈடுபடுத்தப் பட்ட ஆண்கள், 20-26 வயதுகளில் இருப்பாட்கள். ஆகவே, அவர்கள் தம்மை மறைத்துக் கொள்கிறார்கள் அல்லது மறைத்து வைக்கப்படுகிறர்கள் என்று நன்றாகவேத் தெரிகிறது. கோடிகளில் பணம் வருகிறது என்ற உண்மையை இப்பொழுது வில் ஹியூம் வாயிலேயே வந்துவிட்டது. ஆகவே லட்சங்கள் கொடுத்து அவர்கள் அமைதிப் படுத்தப் பட்டால், நிச்சயம் மௌனிகளாகி விடுவர். கூப்பிட்டாலும், எந்த கோர்ட்டிற்கும் வரப்போவதில்லை.
உண்மை / வாய்மை மறக்கப்படும். 10-02-2010 அன்றுதான் தமிழகத்தின் அரசர் உண்மைக்கும், வாய்மைக்கும் மான்குட்டி-வேடன் கதை மூலம் விளக்கம் அளித்திருக்கிறார்!
பாவம், இந்த மான்குட்டிகளை யார் காப்பாற்றுவது? |
சைதாப்பேட்டை நீதிமன்றம் வில் ஹியூமிற்கு பிணை-விடுதலை அளித்தது![1] : கிருத்துவத்தின் பெயரால் எத்தனை ஆண்-பெண் “குழந்தைகள்”, வயது வந்த வாலிபர்கள், இளைஞர்கள் வில் ஹியூமினால் பாலியல் வன்முறைக் கொடுமைகளுக்குட்படுத்தப் பட்டார்கள் என்பது அந்த பரலோகத்தில் இருக்கும் “பரமபிதாவிற்கு”த்தான் தெரிந்திருக்கும்!. கடந்த நவம்பர் 7, 2009 அன்று நிர்வாணப் படங்களை இணைதளங்களில் ஏற்றும்போது, இன்டர்போல் துறையால் தகவல் கொடுக்கப்பட்டு சென்னை போலீஸாரால் கைது செய்யப்பட்டான். ஆனால், 08-02-2010 அன்று சப்தமில்லாமல் விடுதலை செய்யப்படுகிறான்! ரவிகுமார் என்ற அவனது வக்கீல் அவன் குற்றமற்றவன், மேலும் 80 நாட்கள் ஆனபிறகும், அவன் மீது எந்த குற்றப்பத்திரிக்கையும் போலீஸார் வதிவு செய்யவில்லை என்று வாதாடியதும், நீதியரசர் பிணை-விடுதலையளித்துவிட்டார்!
வீர வசனங்கள் பேசி, போராட்டங்கள் நடத்தும் சமுதாய அமைப்புகள், சங்கங்கள் முதலியன என்னசெய்கின்றன என்று தெரியவில்லை. தகவல் தொழிற்நுட்ப சட்டத்தின் படி (The Information Technology Act) போலீஸாரால் 80 நாட்களில் சார்ச் ஸீட் / குற்றப்பத்திரிக்கை பதிவு[2] செய்யமுடியவில்லையாம்! என்னே விந்தை! அருகிலேயே இருந்து கொண்டு சுகவாசம் புரிந்து உல்லாசமாக பவனி வந்து கொண்டிருந்த இவனைப் பிடிக்கவே இன்டர்போல் துறை தகவல் கொடுக்கவேண்டியதாயிற்று[3]. ஆனால் பிடித்த அவன்மீது குற்றப்பத்திரிக்கை தயார் செய்யமுடியவில்லை என்றால், அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? இதில் மேலும் கூத்து என்னவென்றால் இந்த சட்டமே அக்டோபர் 27, 2009ல்தான் அமூலுக்கு வந்ததாம்! அப்படியே நிரூபனம் செய்யப்பட்டு தண்டனைக் கொடுக்கப்பட்டால் ஏழாண்டுகள் சிறைவாசம், ரூ. 10 லட்சம் அபராதம் விதிக்கப்படுமாம்! ஏன் 40ற்கும் மேலாக – குறிப்பாக அதில் பாதிக்கும் மேலாக இருந்த பெண்களை கற்பழித்தக் குற்றத்திற்கு மொத்தமாக தண்டனையைக் கூட்டினால் அவனை தூக்கில் போடலாமே? புதிய சட்டத்தில்தான் அவனை பதிவு செய்து ஏன் சட்ட-ஓட்டைகளில் சலுகைகள் செய்துதரவேண்டும்? யார் அப்படி அவனுக்கு உதவுகிறார்கள்?
திருட்டு விசிடி, இண்டர்நெட், சைபர் கிரைம்: குற்றம் என்றால் குற்றம்தான், அனைத்துக் குற்றவாளிகளும் ஒரே மாதிரிதான் நடத்தவேண்டும். வழக்குகள் பதிவு செய்யப்படவேண்டும்………………..தண்டனை கொடுக்கவேண்டும். ஆனால், திருட்டு விசிடி என்றால் போலீஸார் பாய்ந்து-பாய்ந்து வேலை செய்கின்றனர். சரத்குமார்-ராதிகா தம்பதியர் அழுதவுடன் அடுத்த நாளே இணைதளத்தில் ஏற்றிய இஞ்சினியரைப் பிடித்து விடுகின்றனர்! ஆனால் தேவநாதன் வீடியோக்களை இணைதளத்தில் ஏற்றியவர்களைப் பிடிக்கமுடியவில்லை. ஆபாச விசிடிக்கள் விற்றாலும் கவலைப்படுவதில்லை! வில் ஹியூம் நிர்வாணப் படங்களை இணைதளங்களில் ஏற்றும்போது, இன்டர்போல் துறை வந்து தகவல் அளிக்கவேண்டும்? என்ன இதெல்லாம்? சாதாரண அறிவு, பகுத்தறிவு, மின்னறிவு, மென்னறிவு, பெரிய-அறிவு…………………….எது கொண்டு யோசித்தாலும் புரியவில்லையே? தொழிற்நுட்பத்தில் கூட ஜாதி வேறுபாடு, இன வேறுபாடு முதலியவை உள்ளனவா?
போலீஸ் கமிஷனர் சொல்வது[4]: சென்னை போலிஸ் கமிஷனர் டி. ராஜேந்திரன் சொல்வதென்னவென்றால், “அவன் மீது பலமான குற்றப்பத்திரிக்கை ஒன்று 15 நாட்களில் பதிவு செய்யப்படும்”! பிறகு முன்பு ஏன் கோட்டை விட்டார்கள்? இந்த மூன்று மாத காலத்தில் போலீஸாருக்கு அல்லது போலீஸார் தரப்பில் வேலை செய்யும் சட்ட வல்லுனர்களுக்கு வெளிவரும் செய்திகள், நடக்கும் நிகழ்ச்சிகள் முதலியன தெரியாமலா போய்விடும்? ஏற்கெனவே எழுப்பியுள்ள கேள்விகளுக்கு பதில் தேடினாலே கூட்டத்தோடு பிடித்திருக்கலாமே? தமிழ் சட்டவல்லுனர்களுக்கு அத்தகைய “பலமான குற்றப்பத்திரிக்கை” அந்த 80 நாட்களில் செய்யாததை, இந்த 15 நாட்களில் செய்யப் போகிறர்களா?
சட்ட அமைச்சரின் சொதப்பலான பதில்[5]: வீரப்ப மொய்லி என்ற சட்ட அமைச்சர், இத்தகைய குற்றங்களுக்கு கடுமையான சட்டங்களை எடுத்துவரவேண்டும் என்கிறார்! இவர் இனிமேல் சட்டத்தை எடுத்துவந்து என்ன ஆகிவிடப் போகிறது? கற்பழிக்கப்பட்டப் பெண்களின் கற்பு திரும்ப வந்துவிடுமா? இந்தியாவில் ஏதோ சட்ட்டங்களுக்குக் குறைவு மாதிரி. ஏற்கெனவே ஆயிரக்கணக்கில் சட்டங்கள் உள்ளன. உட்கார்ந்தால் சட்டம், எழுந்தால் சட்டம். இங்கு பெண்களை கற்பழித்தது, ஆண்களை பாலியல் வன்முறைக்குட்படுத்தியது என்று பார்த்தால் உள்ள சட்டங்களே போதும். இணைதளச் சட்டம், வலைச் சட்டம் என்றெல்லாம் ஆராய்ச்சி செய்யவேண்டாம். கற்பழிப்பு என்பது வேறு, நிர்வாண படங்களை இணைதளத்தில் வெளியிட்டான் என்பது வேறு. இருக்கும் சட்டங்களை விடுத்து, இல்லாததைப் பற்றி பேசுவது, அத்தகைய கொடுங்கோலர்களுக்கு, குற்றவாளிகளுக்கு உதவுவது போல ஆகும். ஏனெனில், நாளை அவனுக்கு ஆஜராகும் விசிவாசமுள்ள வக்கீல் இதைத் தான் சீர்மிகு நீதிமன்றத்தில் மாண்புமிகு நீதியரசரின் முன்பு மொழிந்து, தனக்கெயுரிய அறிவுபூர்வமான வாதங்களினால் இந்த கொடுங்கோல காமுகனை, கற்பழிப்புக் காரனை விடுதலை செய்ய “சட்ட அமைச்சரே சொல்லிவிட்டார், குற்றம் புரிந்த நேரத்தில் அதற்கான சட்டம் இல்லை” என்று பொருள்பட எடுத்துக் காட்டி பேசுவான், பயன்படுத்துவான்.
தேவநாதனும், வில் ஹியுமும்: புரியாத மர்மம்!: தேவநாதன் விஷயத்தில் மட்டும் அப்படி பறந்து-பறந்து வேலை செய்தார்களே, இங்கு மட்டும் ஏன் தூக்கம்? 2002லேயே பதிவு செய்யப்பட்ட வழக்கு வேறு இருக்கிறது. அப்பொழுது 40ற்கும் மேலாக ஆண்-பெண்களை காமத்துடன் மிருகம் போன்று மாமல்லபுரத்தில் தனது இச்சைக்கு பயன்படுத்திக் கொண்டான். ஏசுவின் பெயரால் “சின்ன வீடு” – LITTLE HOME – அப்படியொரு அந்தப்புரத்தையே நடத்தி சல்லாபங்கள் செய்து வந்தான். ஏன் அந்த சிறுவர்-சிறுமியர்களை மருத்துவ பரிசோதனை செய்யவில்லை? தமிழச்சிகள் எல்லோரும் சைதாப்பேட்டை கோர்ட்டிற்கு சென்று அவனை துடப்பக்கட்டை, செருப்புகளால் அடிக்கவில்லை! தேவநாதன் என்றால் இனிக்கிறது, வில் ஹியூம் என்றால் கசக்கிறதா? இல்லை என்ன தடுக்கிறது? மர்மாகத்தான் உள்ளது! இந்திய தோல் வெள்ளைத்தோலுக்கு இனிக்கிறது, ஆனால் வெள்ளைத்தோலைக் கண்டால், இந்திய / தமிழக தோல்களுக்கு பயமாக உள்ளதா?
வில் ஹியூம் ஒரு மாபெரும் ஆபத்து: கிரிஸ்டைன் பெடௌ என்ற குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை ஆயும் வல்லுனர் கூறுவதாவது, வில் ஹியூம் குழந்தைகளுக்கு ஒரு அபாயகரம் என்கிறார்[6]. டச்சுநாட்டுடன் இணைந்து இந்தியா அவனுக்குத் தகுந்த தண்டனையளிக்கவேண்டும். முன்பு நவம்பர் 2009ல், சுதாகர், துணை போலீஸ் கமிஷனர், சைபர்-கிரைம் அவன் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம் மற்ற கூடுதல் அத்தாட்சிகளை சைதாப்பேட்டை மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார். காஞ்சிபுரம் சூப்பிரென்டென்ட்டும் அவன் மீதுள்ள வழக்கு விரைவில் விசாரிக்கப்படும் என்று வாக்களித்தார். முன்பு இந்திய குற்றவியல் சட்டம் section 377 of IPC மற்றும் பாஸ்போர்ட் சட்டம் கீழ் தவறான தகவல்கள் கொடுத்ததற்கும், அந்நியர் பதிவு சட்டத்தின் சரத்துகளை மீறியதற்கும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 2003லிருந்து பெயிலில் இருந்து வந்தான். ஆனால் 2004ல் விசாரணை ஆரம்பித்தபோது, ஏதாவது ஒரு காரணம் காட்டி வழக்கைத் தள்ளிப்போட வைத்தான். முக்கியமாக தன்மீது குற்றஞ்சாட்டிய ஏதாவது ஒரு குழந்தையையாவது கோர்ட்டில் ஆஜராகவேண்டும் என்றுக் கெட்டுக் கொண்டான்[7]. பிறகு எப்படி 40தில் ஒன்றுகூட வரவில்லை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை?
வில் ஹியூமின் “நிர்வாண” / வெளிப்படையான (?) நேர்காணல்[8]: டைம்ஸ்-நௌ கீழே கொடுத்துள்ள கேள்வி-பதில்கள் ஓரளவிற்கு அவனுடைய மனப்பாங்கைக் காட்டுவதாக உள்ளது, சில முக்கியமான உண்மைகளௌம் வெளிவருகின்றன[9]:
செய்தியாளர்: உங்களுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டீர்களா?
வில் ஹீயூம்: இல்லை, நிச்சயமாக இல்லை. நான் ஒன்றுமே செய்யவில்லை. நீங்கள் என்னுடைய வக்கீலுடன் பேசவும். அவருக்கு எல்லாமேத் தெரியும்[10].
செய்தியாளர்: மாமல்லபுரத்தில் உள்ள அந்த பாவப்பட்ட குழந்தகளின் கதி என்ன?
வில் ஹீயூம்: எங்களுக்கு ரூ. 2 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் என்னை வெளியே தள்ளிவிட்டார்கள்.
செய்தியாளர்: அரசாங்கம் சொல்கிறதே, நீங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு விட்டீர்கள் என்று?
வில் ஹீயூம்: இல்லை, நிச்சயமாக இல்லை.
செய்தியாளர்: நெதர்லாந்திற்கு திரும்ப விரும்புகிறீர்களா?
வில் ஹீயூம்: ஆமாம், நான் அப்படித்தான் நினைக்கிறேன். எனக்கு இங்கு நிறையவே கிடைக்கிறது.
செய்தியாளர்: போலீஸாருடைய விசாரிப்பு உங்களுக்குத் திருப்திகரமாக உள்ளதா?
வில் ஹீயூம்: இல்லை. அதனை நான் சொல்லமுடியாது.
கோடிகள் ஏன் கொடுக்கவேண்டும்? “மாமல்லபுரத்தில் உள்ள அந்த பாவப்பட்ட குழந்தகளின் கதி என்ன?”, என்று கேட்டதற்கு, “எங்களுக்கு ரூ. 2 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. என்கிறான் ஹியூம்!. அதாவது ரூ. 2 கோடி பாதிக்கப்பட்ட அந்த ‘குழந்தைகளுக்கு” டச்சு அரசு கொடுத்திருந்தால், அதன் நிர்பந்தம், சரத்துகள் என்ன? முன்பு, “தன்மீது குற்றஞ்சாட்டிய ஏதாவது ஒரு குழந்தையையாவது கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படவேண்டும்” தைரியமாக கேட்கவேண்டும், இப்பொழுதோ, “ஆனால் அவர்கள் என்னை வெளியே தள்ளிவிட்டார்கள்” அதாவது கழட்டி விட்டர்கள் என்ற முறையில் ஏன் பேசவேண்டும்? எப்படி அவனுக்கு இந்த விஷயங்கள் தெரியும்? இப்படி காசுக்கு கற்ப்பை சமாதானப் படுத்திக் கொள்வதால்தான் அந்த அம்மையார், “வில் ஹியூம் ஒரு மாபெரும் ஆபத்து” என்று எச்சரிக்கிறாரா? பணத்தைக் கொடுத்து மாபெரும் மனிதகுற்றங்களை மறைக்கப் பார்க்கிறர்கள். அதற்கு சில இந்திய அரசாங்கத்தினர், அதிகாரிகள், போலீஸ், சமூக-ஊழியர் முதலியோரும் உடன் போவதாகத் தெரிகின்றது. இப்படியே போனால், “தமிழகம்” இன்னொரு “தாய்லாந்து”[11] ஆகிவிடும்!
“தமிழகம்” இன்னொரு “தாய்லாந்து” ஆகிவிடும்! கடந்த காலத்தில், சமீமத்தைய நிகழ்ச்சிகளைக் கூர்ந்து கவனித்தால் பல அயல்நாட்டவர் தமிழகத்தை தாராளமாக செக்ஸ்-தொழிலுக்கு, செக்ஸ்-சுற்றுலாவிற்கு பயன்படுத்தி வந்ததற்கு பல உதாரணங்கள் (வேலூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், கன்யாகுமரி, திருநெவேலி, திருச்சி) காட்டுகின்றன. இதில் பாதிக்கப் படுவது வயது 10 முதல் 20 வரையுள்ள ஆண்-பெண் சிறுவர்-சிறுமியர்தாம். இதில் “குழந்தைகள்” என்று சொல்லி / குறிப்பிட்டு உண்மையை மறைக்கவேண்டிய பாவத்தைச் செய்யவேண்டியதில்லை. ஏனெனில், அவர்கள் ஏற்கெனவே கற்பழிக்கப் பட்டுள்ளார்கள். சீறிபாயும் செபாஸ்டியன் சீமான்கள்[12] எல்லாம் இவ்விஷயத்தில் ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை “கர்த்தர்” அப்படி ஆணையிட்டு விட்டார் போலும்!
ஆறுவயது சிருமியைக் கற்பழித்தான் என்றால் கைது செய்யப்பட்டு தண்டனைக் கொடுக்கப்படுகிறது! பிறகு இத்தகைய மிருகங்களை வைத்துக் கொண்டு ஏன் சட்டக்கதைகள் பேசிக்கொண்டு இருக்கவேண்டும்?
© வேதபிரகாஷ்
10-02-2010
[1] http://www.ptinews.com/news/508353_Dutch-national-granted-bail-in-child-pornography-case
[2] India Blooms News Service, Dutch Paedophile granted bail, விவரங்களுக்கு இங்கே பார்க்கவும்:
http://www.indiablooms.com/NewsDetailsPage/newsDetails090210l.php
[3] ஆனால் திருட்டு விசிடி விஷயத்தில் மட்டும் உடனே பிடித்து விடுகிறர்கள்! அதாவது இன்டர்போல் துறையையும் மிஞ்சி விடுகிறர்கள்!
[4] A charge sheet will be filed against alleged paedophile William Heum within 15 days, police here said Tuesday after the Dutch national was granted bail by a local court. Chennai Police Commissioner T. Rajendran said a strong charge sheet against Heum would be filed in 15 days time.
http://sify.com/news/Chennai-police-to-file-charges-against-Will-Heum-in-15-days-news-National-kcka4eejbfe.html
[5] The Hindusthan Times, Moily slams ‘paedophile’ bail, plans tougher law, dated 10-02-2010; for details see at: http://www.hindustantimes.com/Moily-slams-paedophile-bail/H1-Article1-507191.aspx
[6] Christine Bedoe, Director, ECPAT[6], UK, is concerned once again that Will Heum poses a big risk to children.
[7] http://www.timesnow.tv/articleshow/4332402.cms
[8] REPORTER: Have you confessed to your crime?
HEUM: No, of course not. I didn’t do anything. You talk to my lawyer. He knows everything.
REPORTER: What about the poor kids in Mahabalipuram?
HEUM: We got 2 crore rupees, they put me out.
REPORTER: But the Govt is saying that you confessed?
HEUM: No, of course not.
REPORTER: Do you want to go back to Netherlands?
HEUM: Yes. I think so. I get too much here.
REPORTER: Are you happy with police investigation?
HEUM: No. I cannot say that.
[9] TIMES-NOW, Bungling cops let ‘paedophile’ Heum off the hook, 9 Feb 2010, 1757 hrs IST, http://www.timesnow.tv/articleshow/4338110.cms
[10] அதாவது அவன் இதை ஒரு சாதாரண சட்டம், சட்டமீறல் குற்றம் என்று எடுத்துச் சென்று, பிறகு நிரூபிக்கப்படவில்லை அல்லது குற்றஞ்சாட்டியவகள் வரவில்லை, ஆஜர்படுத்தப்படவில்லை என்று வழக்கு முடிக்கப்படும். அந்த சிறிய குற்றங்களுக்கு அந்நியர் சட்டம், பாஸ்போர்ட் சட்டம் முதலியவற்றிற்கு ஆயிரம், ஐந்தாயிரம் அபராதம் வுதிக்கப்படும், கட்டிவிட்டு போய்விடுவான்.
[11] தாய்லாந்து ‘குழந்தை விபச்சாரத்திர்கு” பெயர்போனது. உலகத்தில் உள்ல விமானக்கள் எல்லாம் வந்து இங்கு வந்து சில மணி நேரம் ஓய்வெடுக்கும். அந்த நேரத்தில், விருப்பமுள்ள பயணிகள் ஜாலியாக பென்களை அனுபவித்து வந்து விமானித்தில் ஏறிவிடுவர்.
[12] சமீபத்தில் ஜெயராம் என்ற நடிகர் விஷயத்தில், தமிழ்பெண்களைப் பற்றி அவதூறாக பேசியபோது, மாபெரும் போராட்டத்தை நடத்தியுள்ளார். குஷ்பு வழக்கையும் இவரிடத்திலேயே விட்டுவிட்டால் தகுந்த தண்டனை அளிப்பார் போலயிருக்கிறது!