Archive for the ‘உள்நோக்கமுடைய வழக்குகள்’ Category

வெறுப்புப் பேச்சு – புகார்கள், கைதுகள், சிறையில் அடைப்பு முதலியன, சட்டத்திற்கு முன்பாக சமமாக நடைபெறுகின்றனவா? சட்டம் சொல்வதும், நடப்பதும் (2)

மார்ச் 1, 2022

வெறுப்புப் பேச்சு புகார்கள், கைதுகள், சிறையில் அடைப்பு முதலியன, சட்டத்திற்கு முன்பாக சமமாக நடைபெறுகின்றனவா? சட்டம் சொல்வதும், நடப்பதும் (2)

யார் இந்த ஈஷ்வர் சந்திரன் சுப்ரமணியன்?: இப்பொழுது 39 / 45 வயாதான இவர், அமெரிக்க பல்கலைகழகத்தின் எம்.எஸ் பட்டதாரி, திருமணம் ஆகாதவர்[1]. அசோக் நகர் / பழைய / மேற்கு மாம்பலத்தைச்சேர்ந்தவர்[2]. கம்பெனிகளுக்கு ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர், இப்பொழுது, வேலையில்லாமல் இருக்கிறார்[3]. அந்த தனிநபர் யூ-ட்யூப் செனலுக்கு பேட்டி கொடுக்கும் பொழுது, சீல கருத்துகளை நீக்கிவிடும் படி கேட்டுக் கொண்டிருந்தார். அதனால், அவர் பேசியதில் எது வெட்டப் பட்டது, ஒட்டப் பட்டது என்பது தெரியாது. ஊடகங்கள் இவ்வாறு சில மாறுபட்ட விவரங்களைக் கொடுக்கிறது. அவரது பேசும் தொணியைக் கேட்கும் போது, மிகவும் உயர்வு நவிற்சியில், மிகைபடுத்தி, கேலியாக (sarcastic, cynical, ironical, derisive, sardonic) பேசுவது தெரிகிறது. காளமேகப் புலவர் பாணியில் ஔவையார் சொன்னது போல இருந்தது.

“எட்டேகால் லட்சணமே எமனேவும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே – முட்டமுட்டக்
கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே
யாரையடா சொன்னாய் அது”.

காந்தியை பசுவுடன் ஒப்பிட்டதால், அவரின் விரோதிகள் என்று சொல்லப் படும் அம்பேத்கர், ஜின்னா, பெரியார் இவர்களை எப்படி உதாரணமாக சொல்லவேண்டும் என்று தெரியவில்லை. ஏனெனில், நடுநடுவில், என்ன, நான் சொல்வது புரியுதா என்றும் கேட்கிறார். தலித்ஸ்தான், பாகிஸ்தான், திராவிடஸ்தான் கேட்ட அவர்களை விடுத்து, தேசத்திற்கு பாடுபட்ட காந்தி என்ற பசுவை கோட்சே கொன்றது தகுமோ என்பது போல பேசியது கவனிக்க வேண்டும்.

வெறுப்புப் பேச்சு என்றால் என்ன?: இந்திய அரசமைப்பில் மக்களிடையே வெறுப்புப் பேச்சுகளால் ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்க வெறுப்புப் பேச்சு சட்டங்கள் உள்ளன. இதன்படி ஒரு குடிமகனை அவரின் இனம், மொழி, பண்பாடு, வாழும் பகுதி, சமூகம் போன்ற ஏதோ ஒரு காரணத்திற்காகத் திட்டுபவர் தண்டிக்கப்படுவார். குறிப்பாக, சமய நம்பிக்கைப் பற்றி கேலி பேசி புண்படுத்துவோர் கடுமையாக தண்டிக்க்கப்படுவர், இந்திய அரசமைப்புச் சட்டம் இந்திய ஒன்றியத்திற்கு அடையாளமாக எந்த ஒரு தனி மதத்தையும் குறிப்பிடவில்லை. பகுதி 25 (1) இன் படி “அனைத்து குடிமக்களும் சமமான உரிமைகள் அளிக்கப்பட்டு அவர்களின் சமய நம்பிக்கையை கொண்டிருக்கவும் பரப்பவும் உரிமை அளிக்கப்படுகிறார். பகுதி 19 (Article 19) அனைத்து குடிமகன்களுக்கும் பேச்சு உரிமையை வழங்குவதுடன், பொது நாகரிகம், நீதி கருதி சில இடங்களில் வரைமுறை அளித்துள்ளது. ஆனால், தினம்-தினம் திராவிடத்துவவாதிகள் இந்துமதத்தைத் தாக்கி வருவதை காணலாம். ஆனான பட்ட ஸ்டாலினே, திருமண மந்திரங்களைப் பற்றி ஆபாசமாக பேசியது தெரிந்த விசயமே. பிராமணகளை கேலி பேசுவது, திட்டுவது, வைவது, ஆபாசமாக பேசுவது, சித்தரிப்பது என்பதும் ஊடகங்களில் சர்வசாதாரணமான விசயமாக் இருக்கிறது.

சட்டம், சட்டப் பிரிவுகள் சொல்வது என்ன?[4]: பிரிவு 153A(1): பேச்சாலோ எழுத்தாலோ அல்லது சைகையாலோ, மத இன மொழி சாதி சமய சம்பந்தமான விரோத உணர்ச்சிகளைத் தூண்டி விட முயற்சி செய்வது குற்றமாகும். குற்றத்தினை புரிபவர்களுக்கு 5 ஆண்டு வரை சிறைக்காவலுமடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்

பிரிவு 153B(1)பேச்சு எழுத்து அல்லது சைகை அல்லது காணத்தகும் பொருள்களின் மூலமாகவாவது அல்லது வேறெந்த விதத்திலாவது

A ) ஒரு சமய இன மொழி அல்லது சாதி சமூகம் ஆகியவற்றில் உறுப்பினராக இருக்கின்ற காரணம் காட்டி எவரேனும் சட்ட ரீதியாக நிறுவப்பட்டுள்ள இந்திய அரசிடம் உண்மையான நம்பிக்கையோடும் விசுவாசத்தோடும் இருக்க முடியாது அல்லது இந்திய அரசாட்சியின் உரிமையும் முழுமையாக நிலை நிறுத்த முடியாது என்கிற வகையில் குற்றச்சாட்டை செய்தாலும் சுமத்தினாலும்

B) சமய இன மொழி அல்லது பிராந்திய குழு சாதி, சமூகம் அல்லது பிரிவு எதனிலேனும் உறுப்பினராக காரணம் காட்டி எவருக்கேனும் இந்தியாவின் குடிமக்கள் என்ற முறையில் அவர்களுக்குள்ள உரிமைகள் மறுக்கப்பட வேண்டும் பறிக்கப்பட வேண்டும் என்று உரைக்கிற அல்லது ஆலோசனை சொல்கின்ற பிரசாரம் செய்கின்ற அல்லது வெளியிடுகின்ற

C) சமய இன மொழி அல்லது பிராந்திய குழு சாதி, சமூகம் அல்லது பிரிசவு எதனிலேனும் உறுப்பினராக காரணம் காட்டி எந்த ஓர் உறுப்பினருக்குரிய கட்டுப்பாடு பற்றி உரைத்தல், ஆலோசனை, கோரிக்கை அல்லது வேண்டுகோள் எதையேனும்வெளியிடுதல் ஆகியவற்றால் அந்த வகுப்பினருக்கும் மற்றவர்களுக்கும் இடையே ஒற்றுமையின்மை பகை உணர்ச்சி அல்லது குரோதம் அல்லது வெறுப்பை உண்டாக்கும் விதத்தில் கோரிக்கை வேண்டுகோள், ஆலோசனை அறிவிப்பு வெளியிடுதல் போன்றவை குற்றமாகும்

மூன்று ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.

295A: மதவழிபாட்டில் ஈடுபடுவோரின் உணர்ச்சிகளை சீற்றமுற்று எழச் செய்ய வேண்டும் என்ற தீய கருத்துடன் வேண்டுமென்றே பேச்சாலோ, எழுத்தாலோ, அல்லது ஜாடையாலோ அவர்கள் மதத்தை அல்லது மத உணர்வுகளை புண்படுத்துவதும் அல்லது புண்படுத்த முயற்சி செய்வதும் குற்றமாகும். 3 ஆனண்டு சிறைத்தண்டனை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

100-வருட திராவிடத்துவ பாரம்பரியம் வெறுப்புதுவேசஆபாசஅருவறுப்பு பேச்சு என்பதாகும்: 70 வருடங்களுக்கு முன்னர் ஈவேரா / பெரியார், அண்ணாதுரை, கருணாநிதி, தீப்பொறி ஆறுமுகம், அணுகுண்டு ஆறுமுகம், தீக்குச்சி சண்முகம், எஸ்.ஏ. அசோகன், வெற்றிகொண்டான், என்றெல்லாம் இருந்தனர். திக-திமுக-தமிழ் பிரிவினைவாதிகள், நக்சலைட் வகையறாக்கள் பேச்சை கேட்டவர்களுக்கு மற்றவை ஒன்றும் திகைப்படையச் செய்யாது. சாதாரணமாக, திகவினர் இந்துவிரோத பேச்சுகளை அள்ளி வீசும் போது, பெண்கள் ஓடாத குறையாக வேகவேகமாக சென்று விடுவதை கிராமங்களில், நகர்புறக் கூட்டங்களில் பார்த்திருக்கலாம். ஐயப்பன், ஐயப்பன் நம்பிக்கைக்கு எதிராகக் கூட கேவலமாக பேசி, ஆபாசமாக பிட் நோட்டீஸுகளை கொடுத்திருக்கிறார்கள். இப்பொழுது ஆர்.எஸ்.பாரதி, சீமான், ஜார்ஜ் பொன்னையா, எச். ராஜா, கல்யாணராமன், மாரிதாஸ், கிஷோர் கே சாமி, சாட்டை முருகன், தட்க்ஷிணாமூர்த்தி, ஈஷ்வர் சந்திரன் சுப்ரமணியன் என்று பட்டியல் நீள்கிறது. புகார்கள், கைதுகள், பெயிலில் வெளி வருவது, வழக்குகள் கிடப்பில் கிடப்பது, மறந்து விடுவது என்பனவெல்லாம், அரசியல், அதிகாரம், ஆதரவு, பரஸ்பர ஆதாயம் என்ற விதங்களில் தீர்மானிக்கப் படுகின்றன.

சிந்தனைக்கு சில கருத்துகள்: அரசு, ஆட்சி, சித்தாந்தம்….முதலியன எப்படி இருந்தாலும், இந்துக்கள் தமிழகத்தில் தங்களது உரிமைகளுடன் வாழ வேண்டும்.

1. ஈஸ்வர் சந்திரன் சுப்பிரமணியன் முட்டாள் இந்துவா, மெத்தப் படித்த (இரண்டு அமெரிக்க எம்.எஸ்) இந்துத்துவவாதியா, இந்து தீவிரவாதியா?

2. இருந்த இடம் பழைய மாம்பலமா, அஷோக்நகரா? AK-47, வெடிகுண்டுகள் எல்லாம் கைப்பற்றப் பட்டனவா? பிறகு எப்படி இந்து தீவிரவாதி ஆனது?

3. ஒருவன் தன்னை தீவிரவாதி என்று சொல்லிக் கொண்டால் தீவிரவாதி ஆகி விடுவானா, இல்லை குண்டு வெடித்து சிறையில் இருந்தும் வெளியே வர பரிந்துரை செய்யப் படுபவன் உத்தமன் ஆவானா?…

4. இந்த இந்து தீவிரவாதியை இந்து சட்ட வல்லுனர்கள் கப்பாற்றுவார்களா, பலிகடா ஆக்கி விடுவார்களா? பெயிலில் வர ஏற்பாடு செய்வார்களா, போராட்டம் நடத்துவார்களா?.

5. வெறுப்புப் பேச்சு என்றால், அவ்வாறு பேசியவன் எல்லோருமே கைதாகி, சிறைக்குச் சென்றிருக்க வேண்டுமே? வீடியோக்கள் உள்ளனவே? அவர்கள் புனிதர்களா?

6. சட்டத்தின் முன்னனெல்லோரும் சமம் என்றால் – three Sections of 153 (provocative speech to incite riot), 153A(1) (for trying to create causing disharmony between religious groups) and 505(1)(B) (intent to cause fear or alarm to the public) of the Indian Penal Code – இவையெல்லாம் ஆளுக்கு ஆள் மாறுமா?

7. கடந்த காலத்தில் இதே பிரிவுகளில் எத்தனை புகார் பதிவு, கைது, சிறை, பெயில், தண்டனை வழங்க பட்டன என்று கூற முடியுமா?

8. கோட்ஸே தாசன் என்றெல்லாம் பறைச்சாற்றிய எந்த ஒரு பேஸ்புக் இந்துத்துவ வாதியும் தைரியமாக கூவக் காணோமே? புத்தகம், சிவராத்திரி என்று பஜனை செய்து கொண்டிருக்கிறார்களே?

9. அந்த வீடியோவின் முழு பேச்சு, எந்த ஊடகமாவது வெளியிட்டுள்ளதா? பேசிய விவரங்கள் எல்லோருக்கும் தெரியுமா? புகார் கொடுத்தருக்குத் தெரியுமா?

10. இதுகுறித்து வழக்கறிஞர் சந்தோஷ் கூறும்போது, “சமீப காலமாக சமூக ஆர்வலர்கள் பலரை ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.க கும்பல் தாக்கியும் கொலை செய்தும் வரும் நிலையில் இதுபோன்ற சர்ச்சையான கருத்து தெரிவித்தவர் மீது தகுந்த நடவடிக்கையை எடுக்கவேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

© வேதபிரகாஷ்

01-03-2022


[1] The Hindu, Ashok Nagar resident booked for hate speech, Special CorrespondentCHENNAIFEBRUARY 28, 2022 21:43 IST; UPDATED: FEBRUARY 28, 2022 21:43 IST.

https://www.thehindu.com/news/cities/chennai/ashok-nagar-resident-booked-for-hate-speech/article65095022.ece?fbclid=IwAR1cRKIhlpi7PSOWw_5AQm2135L0ZuQqky54kvgFXVZgy-qiMkWybtweDPs

[2] DtNext, Man held for ‘proud Hindu terrorist’ remark on YouTube, Published: Mar 01,202206:43 AM.

[3] https://www.dtnext.in/amp/News/City/2022/03/01064328/1355921/Man-held-for-proud-Hindu-terrorist-remark-on-YouTube.vpf

[4] https://ta.vikaspedia.in/e-governance/b87ba8bcdba4bbfbafbbebb5bbfbb2bc1bb3bcdbb3-b9ab9fbcdb9fb99bcdb95bb3bcd/b87ba8bcdba4bbfbaf-ba4ba3bcdb9fba9bc8-b9ab9fbcdb9fbaebcd

ஈஸ்வர் சந்திரன் சுப்பிரமணியன் – வெறுப்புப் பேச்சு – புகார்கள், கைதுகள், சிறையில் அடைப்பு முதலியன, சட்டத்திற்கு முன்பாக சமமாக நடைபெறுகின்றனவா? (1)

மார்ச் 1, 2022

ஈஸ்வர் சந்திரன் சுப்பிரமணியன்வெறுப்புப் பேச்சு புகார்கள், கைதுகள், சிறையில் அடைப்பு முதலியன, சட்டத்திற்கு முன்பாக சமமாக நடைபெறுகின்றனவா? (1)

திராவிடத்துவ இந்துவிரோதம் தெரிந்த விசயம் தான்: திராவிடத்துவ இந்து-துவேசம், எதிர்ப்பு, பழிப்பு, காழ்ப்பு, தாக்குதல் எல்லாமே மக்களுக்குத் தெரிந்த விசயங்கள் தான். ஈவேராயிஸம், பெரியாரிஸம், ஈவேரா இந்துவிரோதம், பெரியாரிஸ இந்துவிரோதம், பிள்ளையார் சிலைஉடைப்பு, ராமருக்கு செருப்பு மாலை (அன்றும், இன்றும்) பெரியார் விமர்சன சகிப்புத் தன்மையின்மை, பெரியாருக்கு பிரமாண்டமான சிலை, புத்தக கண்காட்சியை பெரியார் மையம் ஆக்கியது, பெரியாரை மையம் ஆக்கியது, இவற்றையெல்லாம் ஆராய வேண்டியுள்ளது. திக-திமுக மற்றும் தமிழக திராவிடத்துவ அடிப்படைவாதிகள், தமிழ் பிரிவினைவாதிகள், தமிழ்-போர்வையில் உலவ்ரும் மற்ற இந்தியவிரோத சக்திகள் எல்லாம் சேர்ந்து கொண்டு, பிஜேபியை எதிர்க்கிறேன் என்ற போர்வையில், இந்துவிரோதமாக, அதிகமாகவே செயல் பட்டு வருகின்றன. திராவிடியன் ஸ்டாக், திராவிடியன் மாடல் போன்ற முகமூடிகளில் தைரியமாக செயல்பட ஆரம்பித்து விட்டன. கோவில்களை சுரண்டி, சொத்துக்களை அபகரிக்க  அரசு-அதிகாரம் முதலியவற்றுடன் வேலை செய்ய ஆரம்பித்து விட்டன.

திமுக வந்தவுடன் கோவில் பணம் சுரண்டல், கோவில் இடிப்பு முதலியன ஆரம்பித்தது: முதலில் கொரோனா போர்வையில் அன்னதானம் என்று இந்து அறநிலையத்துறை பணத்தை காலி செய்தது. கோவில் நிலங்களில் குத்தகைக்கு உள்ள பள்ளிகள் முதலியவற்றை குறிவைத்து, அவற்றை தாக்க ஆரம்பித்தனர். அதற்கு பாலியல் தொல்லை போன்ற வழக்குகளையும் போட்டு, விளம்பர, பிரச்சார ரீதியில் முனைந்து வேலை செய்தனர். ஆனால், கிருத்துவ-துலுக்க பள்ளிகளைக் கண்டுகொள்ளாமல் இருந்த போது, மக்களுக்கு உண்மை தெரிய ஆரம்பித்தது. உள்ளாட்சி தேர்தல் குறிவைத்து, கோவில்களை இடிக்க ஆரம்பித்தனர், ஆனால், மசூதி-சர்ச்சுகளை தொடவில்லை. ஏற்கெனவே நடந்து வந்த வழக்குகளையும் கிடப்பில் போட வைத்தனர். இஸ்லாமிய தீவிரவாதம், குண்டுவெடிப்பு குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று ஆரம்பித்த தீவிரவாத கோஷ்டிகளும், குளிர்விட்டு, பூணூலை அறுப்போம் என்று கிளம்பி விட்டன. ஆக பிஜேபி-எதிர்ப்பு, மோடி-எதிர்ப்பு, இந்துத்துவ-எதிர்ப்பு, பார்ப்பன-எதிர்ப்பு, கோவில் இடிப்பு, பூணூல் அறுப்பு, கோவில் நிலங்களை அபகரித்தல், அபகரிப்பை சட்டரீதியில் சரிசெய்தல், …இவையெல்லாம் என்ன என்று ஆராய்ச்சி செய்ய வேண்டும். அந்நிலையில் தான், மெத்தப் படித்த ஒரு முட்டாள் இந்து உளறியதை வைத்து, புகார் கொடுத்து, கைது செய்திருக்கும்படலும் அரங்கேறியுள்ளது.

ஈஸ்வர் சந்திரன் சுப்பிரமணியன் என்பவரின் வீடியோ பேச்சு: தமிழ்நாடு முழுவதும் கடந்த 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 22-ந் தேதி எண்ணப்பட்டது. இதில், சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 1 வார்டில் பா.ஜ.க. உறுப்பினர் உமா ஆனந்தன் வெற்றி பெற்றார்[1]. இதுதொடர்பாக, அந்த வார்டில் தனியார் யூ டியூப் சேனல் ஒன்று பேட்டி எடுத்தது. ஒரு தாமரை மொட்டுவிட்டது இப்படிதானா? என்று தலைப்பிடப்பட்ட அந்த வீடியோவில் ஈஸ்வர் சந்திரன் சுப்பிரமணியன் என்பவர் பேசினார்[2]. அப்படியென்றால் அந்த செனல், வீடியோ எடுத்தவர்கள், பரப்பியவர்கள் எல்லோரும் அதே குற்றத்தை செய்தவர்க்ள் அல்லது செய்ய உதவியவர்கள் என்றெல்லாம் வாதிட முடியுமா?.  அம்பேத்கர், பெரியார் ஆகியோரை கோட்சே போட்டு தள்ளி இருக்க வேண்டும் என்று கூறி, ‘தான் ஒரு இந்து தீவிரவாதி’ என தனியார் யுடியூப் சேனலுக்கு பேட்டியளித்த நபரை சைபர் க்ரைம் போலீசார் 27-02-2022 அன்று கைது செய்தனர். ஆனால், முன்னால்-பின்னால் சொன்னதை ஊடகங்கள் வெளியிடாமல் இருக்கின்றனர்.

பெரியார் திராவிடர் கழக மாவட்ட தலைவர் கண்ணதாசன் என்பவர் கொடுத்த புகார்: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட தலைவர் கண்ணதாசன் என்பவர் கடந்த 27ம் தேதி புகார் ஒன்று அளித்தார். அதில், கடந்த 25ம் தேதி யுடியூப் சேனலில் வீடியோ பார்த்து கொண்டிருந்த போது, சென்னை மாநகராட்சி தேர்தலில் 134வது வார்டில் பாஜ வேட்பாளர் உமா ஆனந்தன் என்பவர் வெற்றி பெற்றது குறித்து, தனியார் யுடியூப் சேனல் ஒன்று அப்பகுதி பொதுமக்களிடம் கருத்து கேட்டது. அப்போது ஒருவர், ‘நான் ஒரு இந்து தீவிரவாதி’ என்பதில் பெருமை கொள்கிறேன். அம்பேத்கர், பெரியார், முகமது அலி ஜின்னா ஆகியோரை போட்டு தள்ளிவிட்டு தான் மகாத்மா காந்தியை கோட்சே கொன்று இருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் தான் அவர் உண்மையான இந்து, என்று அந்த நபர் பேசியது பொதுமக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எனவே பொதுமக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பேசிய நபர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்[3] தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடிய தலைவர்களை வன்மத்துடன் கொலை செய்ய வேண்டும் என அந்நபர் கூறியுள்ளார்.

வழக்கறிஞர் சந்தோஷ் என்பவர் ஒடுத்த புகார் மற்றும் மிரட்டல்: அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேசிய அந்நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்[4] என்று கூறியிருந்தார். வழக்கறிஞர் சந்தோஷ் என்பவரும் இதே கருத்தை வலியுறுத்தி திருப்பெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்[5]. இதுகுறித்து வழக்கறிஞர் சந்தோஷ் கூறும்போது, “சமீப காலமாக சமூக ஆர்வலர்கள் பலரை ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.க கும்பல் தாக்கியும் கொலை செய்தும் வரும் நிலையில் இதுபோன்ற சர்ச்சையான கருத்து தெரிவித்தவர் மீது தகுந்த நடவடிக்கையை எடுக்கவேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்[6]. அதன்பேரில், விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார்[7]. விசாரணையில், அசோக் நகரைச் சேர்ந்த / மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்த ஈஷ்வர் சந்திரன் சுப்ரமணியன் (45) என்பவர்[8], தனியார் யுடியூப் சேனலில் அம்பேத்கர், பெரியார் குறித்து அவதூறு கருத்துகள் கூறியும், தான் ஒரு இந்து தீவிரவாதி என்றும் கூறி பேட்டி அளித்தது தெரியவந்தது[9]. இதையடுத்து, ஈஸ்வர் சந்திரன் சுப்ரமணியன் மீது ஐபிசி 153, 153(ஏ), 505(1)(பி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நேற்று அதிரடியாக கைது செய்தனர்[10].இந்த வழக்குத் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கண்ணதாசன், ‘அம்பேத்கர், ஈவேரா குறித்து இனி அவதூறாகப்பேசினால் எதிர்மறை விளைவுகள் கடுமையாக இருக்கும்’ என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

© வேதபிரகாஷ்

01-03-2022


[1] தமிழ்.ஏபிபி.லைவ், Crime : “நான் ஒரு இந்து தீவிரவாதி” – சர்ச்சைக்குரிய வகையில் பேசியவர் கைது, By: சுகுமாறன் | Updated : 28 Feb 2022 06:35 PM (IST).

[2] https://tamil.abplive.com/news/politics/fir-filed-against-chennai-person-controversial-talk-in-youtube-channel-42015

[3] இடிவி.பாரத், அம்பேத்கரை கோட்சே கொலை செய்திருக்க வேண்டும் என சர்ச்சைக்குரிய வகையில் பேசியவர் கைது, Published on28-02-2022.

[4]  https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/chennai/a-man-arrested-for-spoken-controversially-about-ambedkar/tamil-nadu20220228184147437

[5] கலைஞர்.செய்திகள், “கோட்சே இவங்களையும் போட்டுத்தள்ளி இருக்கணும்” : வன்முறைப் பேச்சு குறித்து போலிஸில் புகார்!, Vignesh Selvaraj, Updated on : 26 February 2022, 03:28 PM.

[6] https://www.kalaignarseithigal.com/tamilnadu/2022/02/26/complaint-against-the-man-who-supports-godse-and-incites-violence

[7] கலைஞர்.செய்திகள், இந்துத்துவ தீவிரவாதிஎனக் கூறிக்கொண்டவர் கைதுசைபர் க்ரைம் போலிஸார் அதிரடி!, Vignesh Selvaraj, Updated on : 28 February 2022, 09:26 PM.

[8] https://www.kalaignarseithigal.com/tamilnadu/2022/02/28/bjp-supporter-arrested-who-called-himself-as-hindu-terrorist

[9] தினகரன், அம்பேத்கர், பெரியார் குறித்து அவதூறு கருத்துநான் ஒரு இந்து தீவிரவாதிஎன பேட்டியளித்தவர் கைது: சைபர் க்ரைம் போலீஸ் நடவடிக்கை, 2022-03-01@ 00:30:05.

[10] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=746356

பிராமணாள் கபே பிரச்சினை – ஸ்ரீரங்கத்தில் “விடுதலை”யின் படி வீரமணி பேச்சு!

நவம்பர் 7, 2012

பிராமணாள் கபே பிரச்சினை – ஸ்ரீரங்கத்தில் “விடுதலை”யின் படி வீரமணி பேச்சு!

திருவானைக்காவலில் வீரமணி பேசியதாக “விடுதலை” வெளியிட்டுள்ளதை அப்படியே பதிவு செய்யப்பட்டு, குறிப்பான திரிபுவாதங்களுக்கு, தவறான விளக்கங்களுக்கு அடிக்குறிப்பில் விமர்சனம் கொடுக்கப்பட்டுள்ளது.

 

தமிழக முதல்வர் பிராமணாள் பெயரை நீக்க முயற்சிக்க வேண்டும் இல்லையேல் தொடர் போராட்டம்[1]: தெருப்பெயரில்ஜாதிஇருக்கக்கூடாதுஎன்றுஆணைபிறப்பித்தவர்முதல்அமைச்சர்எம்.ஜி.ஆர்எம்.ஜி.ஆர். அரசுஎன்றுசொல்லிக்கொள்ளும்தமிழகமுதல்வர் பிராமணாள்பெயரைநீக்கமுயற்சிக்கவேண்டும்இல்லையேல்தொடர்போராட்டம்தமிழர்தலைவர்அறிவிப்பு – சிறீரங்கத்தில் உள்ள உணவு விடுதியில் முளைத்திருக்கும் பிராமணாள் பெயரை நீக்க தமிழக முதல் அமைச்சர் முயற்சி எடுக்க வேண்டும்; இல்லையேல் அப்பெயர் நீக்கப்படும் வரை தொடர் போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்தார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி. திருவானைக்காவலில் 4.11.2012 அன்று மாலை நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் கூட்டத்தில் அவர் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது[2], “இன்றையப் பொதுக் கூட்டம் வரலாற்றுச் சிறப்பைப் பெற்று விட்டது. இன இழிவை ஒழிக்கக் கூட்டப்பட்டுள்ள பொதுக் கூட்டம்”, என்று தொடர்ந்தார்.

காவல்துறை நடந்து கொண்டது சரியா?: இந்தப் பிரச்சினையில் காவல்துறை நடந்து கொண்ட போக்கு வருந்தத்தக்கது. இத்தகு நடவடிக்கைகளுக்காக காவல்துறையின்மீது எங்களுக்குக் கோபம் இல்லை; மாறாக பரிதாபப்படுகிறோம். திராவிடர் கழகத்தின் வரலாற்றில் எந்த காலகட்டத்திலும் வன்முறைக்கு இடம் இல்லை; எத்தனையோ மாநாடுகள், பேரணிகள், போராட்டங்களை நடத்தி வந்துள்ளதே – எந்த இடத்திலாவது வன்முறைக்குக் காரணமாக திராவிடர் கழகம் இருந்ததுண்டா? காவல்துறையினர் தாக்கினால்கூட அவர்களின் முகத்தைப் பார்க்காதே – முதுகைக் குனிந்து காட்டு என்று சொன்னவர் தந்தை பெரியார் அல்லவா! காலிகளால் எங்கள்மீது தாக்குதல்கள் தொடுக்கப் பட்ட பொழுதுகூட, பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படும் வகையில் திராவிடர் கழகம் நடந்ததுண்டா? திராவிடர் கழகத்தின் பொதுக் கூட்டத்திற்கு அனுமதி மறுப்பதற்குமுன் இக்கழகத்தின் செயல்பாடுகள்பற்றி ஒருகணம் காவல்துறை சிந்தித்துப் பார்த்திருக்க வேண்டாமா? காவல்துறையில் பெண்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று முதலில் குரல் கொடுத்தவர் தந்தை பெரியார் அல்லவா! 1929ஆம் ஆண்டு  செங்கற்பட்டில் நடந்த  முதல்  சுயமரியாதை மாநாட்டில்  தீர்மானமும் இந்த வகையில் இயற்றப்பட்டதுண்டே! இந்த வரலாறு எல்லாம் தெரியுமா?

பார்ப்பனர் மாநாட்டில் என்ன கோஷம் போடப்பட்டது?: இதே திருச்சியில் பார்ப்பனர்கள் மாநாடு கூட்டி ஊர்வலம் நடத்தி என்னையும், என் குடும்பத்தைப்பற்றியும் எவ்வளவு கேவலமாக கோஷம் போட்டார்கள்? வீரமணியின் மனைவியைப் பொதுவுடைமை ஆக்கு என்று கோஷம் போட்டு அவர்களின் தகுதியை வெளிப்படுத்தி கொள்ளவில்லையா? “போய்ப்பார்அந்த அம்மாகொடுப்பதைவாங்கிக்கொண்டுவா!”, என்றுதான் சொன்னோமே தவிர, பதிலுக்குப் பதில் அவர்கள் கையாண்ட முறையைப் பின்பற்றவில்லையே!

பழனியில் பார்ப்பனர்கள் என்ன செய்தனர்?: 1981இல்பழனியில் என்னைப் போல உருவம் செய்து பாடையில் வைத்துத் தூக்கிச் சென்றவர்கள் பார்ப்பனர்கள் அல்லவா! அதுபற்றி பத்திரிகையாளர்கள் என்னைக் கேட்ட போதுகூட நான் கோபப்படாமல் எங்கள் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி. ஒரு சூத்திரன் பிணத்தை நான்கு பார்ப்பனர்கள் தூக்கிச் சென்றார்களே – இது எங்கள் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி (பலத்த கரவொலி!) என்றுதானே சொன்னேன்.

மா-சேதுங் சொன்னது – என்ன?: சீனாவில் புரட்சி நடத்திய மா-சேதுங் சொன்னது தான் என் நினைவிற்கு வருகிறது. நம் கையில் இருக்க வேண்டிய ஆயுதங்களை, நம் எதிரிதான் தீர்மானிக்கிறான் என்று சொன்னதை இங்கு நினைவுபடுத்துகிறேன் (பலத்த கரவொலி!). இதே சிறீரங்கத்தில் ரெங்கநாதன் கோயிலுக்கு முன் தந்தை பெரியார் சிலை திறக்கப்பட்டதே – அதனால் எந்த கெடுதல் வந்து விட்டது? அதனை எதிர்த்துக்கூட உச்சநீதிமன்றம் வரை சென்றார்களே – வெற்றிபெற முடிந்ததா? அதிலும் பெரியார் தானே வெற்றி பெற்றார்[3].

2012-இலும்நாங்கள்சூத்திரர்களா?: நாங்கள் என்ன கேட்கிறோம்? 2012-இலும் நாங்கள்  சூத்திரர்களாக இருக்க வேண்டுமா? சூத்திரர்கள் என்றால் என்ன? நீங்கள் எழுதி வைத்த அசல் மனுதர்மம் இதோ என் கையில் இருக்கிறது[4]. இதில் எட்டாவது அத்தியாயம் 415ஆவது சுலோகம் என்ன சொல்லுகிறது? யுத்தத்தில் ஜெயித்துக் கொண்டு வரப்பட்டவன், பக்தியினால் வேலை செய்கிறவன், தன்னுடைய தேவடியாள் மகன்[5], விலைக்கு வாங்கப்பட்டவன், ஒருவனால் கொடுக்கப்பட்டவன், குலவழியாக தொன்றுதொட்டு வேலை செய்கிறவன், குற்றத்திற்காக வேலை செய்கிறவன் என தொழிலாளி ஏழு வகைப்படுவர்[6]. சூத்திரர்கள் என்றாலே தொழிலாளியாம். நினைத்துப் பார்க்க வேண்டும். இந்த 2012-இலும் பிராமணாள் என்று போர்டு மாட்டினால் எங்களை சூத்திரர்கள் – பார்ப்பனர்களின் வைப்பாட்டி மக்கள் என்று சொல்வதாக ஆகாதா? இதனை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமா?

காந்தியார்மீதானஇழிவைத்துடைத்ததும்யார்?: காந்தியாரையே அவமதித்தவர்கள் ஆயிற்றே பார்ப்பனர்கள்? ஆதாரத்தோடு கூறுகிறேன் – இதோ என் கையில் இருப்பது தமிழ்நாட்டில் காந்தி எனும் நூலில் அதன் 521ஆம் பக்கத்தில் காணப்படும் செய்தியைத்தான் குறிப் பிடுகிறேன். நீதிக்கட்சித் தலைவர்கள் ஏ.டி. பன்னீர்செல்வமும், பிரபல வழக்கறிஞரான கரந்தை உமா மகேசுவரம் பிள்ளையும் காந்தியாரைச் சந்தித்தபோது தமிழ்நாட்டில் நிலவும் பார்ப்பனர் – பார்ப்பனர் அல்லாதார் பிரச்சினைபற்றி பேசப்பட்டது.

அந்தச்சந்திப்பில்காந்தியார்என்னகூறினார்?: இப்போது பிராமணர்களிடத்து முற்போக்கான கொள்கைகள் பரவி வருவதைக் காண்கிறேன். சில ஆண்டுகளுக்குமுன் நான் சென்னைக்கு வந்தபோது எஸ். சீனிவாச அய்யங்கார் வீட்டுத் தாழ்வாரத்தில்தான் உட்கார்ந்திருந்தேன். இப்போது, அவர் வீட்டை என் வீடாகவே நினைத்துப் பழகி வருகிறேன். என் மனைவி அவர்களுடைய அடுப்பங்கரை வரை செல்கிறார் என்று காந்தியார் குறிப்பிட்டார் என்றால் இதன் பின்னணி என்ன? இந்தவுரையாடல் நடந்தது 1927 செப்டம்பர் 16இல்; சில ஆண்டுகளுக்கு முன் என்று காந்தியார் சொன்னது – 1925ஆம் ஆண்டுக்கு முன் – சுயமரியாதை இயக்கத்தை தந்தை பெரியார் தொடங்காத காலம். பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்காத கால கட்டத்தில் காந்தியாருக்கேகூட உரிய இடம் சீனிவாச அய்யங்காரின் தாழ்வாரம்தான். தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய பிறகு காந்தியார் சீனிவாச அய்யங்கார் வீட்டுக்குள் போக முடிந்தது – அவரது மனைவியார் சீனிவாச அய்யங்காரின் அடுப்பங்கரை வரை[7] செல்ல முடிந்தது! காந்தியார்மீதே சுமத்தப்பட்ட இழிவைத் துடைத்தெறிந்தது தந்தை பெரியார் தானே – இந்த இயக்கம் தானே!

அரசுஆவணங்களில்சூத்திரர்இழிவைஒழித்ததுயார்?: 1927ஆம் ஆண்டு வரை கூட அரசுப் பதிவேடுகளில் சூத்திரன் என்று இருந்ததே! 1927இல் நடத்தப்பட்ட பார்ப்பனர் அல்லாத மாநாட்டில் அந்த இழிவு சுட்டிக் காட்டப்பட்ட பிறகுதானே நீதிக் கட்சி ஆட்சிக் காலத்தில் அந்தப் பிறவி இழிவு – அரசு ஆவணங்களில் ஒழிக்கப் பட்டது. அய்.நா. மன்றத்தில் 199 நாடுகள் அங்கம் வகிக்கின்றனவே – எந்த ஒரு நாட்டிலும் இந்த நாட்டைத் தவிர சூத்திரன் என்ற பிறவி இழிவு உண்டா? மாண்புமிகு சூத்திரன்தானே! நம் மக்கள் அமைச்சர்களாக இருக்கலாம் ஆனாலும் மாண்புமிகு சூத்திரன் தானே! நம் தமிழர்கள் நீதிபதிகளாக இருக்கலாம். ஆனாலும் மாண்பமை சூத்திரர்தானே! மனுதர்மம் இருக்கும்வரை…இந்து லா என்று சொல்லப்படக் கூடிய அரசமைப்புச் சட்டத்தில் ஆதார நூல்கள் வரிசையில் மனுதர்மம்தானே இன்று வரைக்கும் அடிப்படை – மறுக்க முடியுமா? மனுதர்ம சாஸ்திரம் அங்கீகரிக்கப் படும் வரை எல்லோரும் சூத்திரர்கள் தானே? இது ஒன்றும் திராவிடர் கழகத்துக்கு மட்டும் உள்ள பிரச்சினை அல்லவே!

அரசமைப்புச் சட்டம் என்ன கூறுகிறது? இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 51 a (h) பிரிவு என்ன கூறுகிறது? குடி மக்களின் அடிப்படைக் கடமை என்பதில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதே, மக்கள் மத்தியில் சீர்திருத்த உணர்வை வளர்க்க வேண்டும், விஞ்ஞான மனப்பான்மையை ஊட்ட வேண்டும் – இது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று கூறப்பட் டுள்ளதே – இந்திய அரசமைப்புச் சட்டம் கூறும் இந்த அடிப்படைக் கடமையினைத் தானே திராவிடர் கழகம் செய்து கொண்டு இருக்கிறது? இதற்குத் தடை போட ஆசைப்படலாமா காவல்துறை? காவல்துறையின் இந்த அணுகுமுறை அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதம் அல்லவா! மானமுள்ள தமிழன் பிராமணாள் போர்டு மாட்டியிருக்கும் உணவு விடுதிக்குச் செல்லலாமா? ரயில் நிலையங்களில் மாட்டப்பட்டு இருந்த பிராமணாள் – சூத்திராள் – இதராள் போர்டு நீக்கப்படுவதற்குக் காரணமாக இருந்த இயக்கம் இந்த இயக்கம் – தலைவர் தந்தை பெரியார் அல்லவா!

செவ்வாய்க்கிரகம்போகலாம்[8]கர்ப்பக்கிரகத்திற்குள்நுழையமுடியாதா?: இன்னும் தமிழன் கட்டிய கோயில்களின் கர்ப்பக்கிரகத்துக்குள் தமிழன் நுழைய முடியாத நிலை! இதற்காக திராவிடர் கழகம் – தந்தை பெரியார் போராட முன்வந்தபோது கலைஞர் அவர்கள் முதல் அமைச்சராக இருந்த போது தந்தை பெரியார் அவர்களின் ஆணையை ஏற்று அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான சட்டத்தை இயற்றினாரே – இரண்டாவது முறையும் தீர்மானம் போட்டாரே – அதனை உச்சநீதிமன்றத்தில் முடக்கி வைத்திருப்போர் யார்? பார்ப்பனர்கள் தானே? செவ்வாய்க்கிரகத்துக்குப் போகலாம்; கோயில் கருவறைக்குள் போக முடியாதாம் – போகக் கூடாதாம்! இந்து அறநிலையத்துறை ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. கோயில் அர்ச்சகர்கள் இனி பஞ்சகச்சம் கட்டியிருக்க வேண்டுமாம் – குடுமியும் வைத்திருக்க வேண்டுமாம்[9]. ஆகமங்களில் கூறப்பட்டுள்ளது என்றால், ஏன் இதுவரை அது வற்புறுத்தப்படவில்லை. என்ன திடீர் என்று ஞானோதயம்? பல கோயில்களில் அர்ச்சகர்கள் இல்லை என்று இன்றைக்கு இந்து ஏட்டில் வெளிவந்துள்ள செய்தி  கூறுகிறதே.

அர்ச்சகர்பயிற்சிபெற்றோர் 207 பேர்: அர்ச்சகர் பயிற்சியை முறைப்படி பெற்றுள்ள 207 பேர்கள் வெளியில் இருக்கிறார்களே, அவர்களைக் கொண்டு அந்தக் காலி இடங்களை நிரப்பலாமே! தினமலர் ஏடே திராவிடர் கழகத்தின் போராட்டத்தை வரவேற்று எழுதி யுள்ளதே பிராமணர் என்பது ஜாதிப் பெயர் அல்ல, வர்ணப் பெயர்[10] என்று கூறி அறிவுரை கூறியிருக்கிறதே கவனத்தில் கொள்ள வேண்டாமா?

எம்.ஜி.ஆர். என்னகூறினார்?: எங்கள் அரசு எம்.ஜி.ஆர். அரசு என்று நமது முதல் அமைச்சர் கூறுகிறார்! அந்த எம்.ஜி.ஆர். ஆணையே பிறப்பித்தாரே – எந்தத் தெருப் பெயரும் ஜாதிப் பெயராக இருக்கக் கூடாது என்று ஆணை பிறப்பித்தாரே, அதன்படி டி.எம். நாயர் சாலை என்பதுகூட டி.எம். சாலை[11] என்றுதானே மாற்றப்பட்டது? அந்த எம்.ஜி.ஆர். வழி வந்த அரசு பிராமணாளை அனுமதிக்கலாமா? எடுக்கச் சொல்ல வேண்டாமா?

சிறைஒன்றும்எங்களுக்குப்புதிதல்ல!: அப்படி எடுக்கப்படாவிட்டால் எடுக்க வைப்போம் – அதற்கான போராட்டத்தில் குதிப்போம்! அந்தப் போர்டு எடுக்கப்படும் வரை போராட்டம் முற்றுப் பெறாது. டிசம்பர் முதல் தேதி, சென்னையில் கூடவிருக்கும் திராவிடர் கழகத்தின் பொதுக்குழுவில் போராட்டத் திட்டம் அறிவிக்கப்படும். கருஞ்சட்டைத் தோழர் களே, தயாராவீர்! எங்களுக்கொன்றும் சிறை புதிதல்ல – சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால் மட்டும் – எங்கள் வரலாறு தெரிந்தவர்களுக்கு இந்த உண்மை தெரியும்.

கட்டுப்பாடுள்ளஇயக்கம்: இது கட்டுப்பாடு மிகுந்த இயக்கம், தலைமை கட்டளையிட்டால் நூலிழை பிறழாமல் நடந்துகொள்ளக் கூடியவர்கள். (இந்த நேரத்தில் கழகத் தலைவர் கட்டளை ஒன்றைப் பிறப்பித்தார். அனைவரும் ஒரு நிமிடம் எழுந்திருங்கள் என்றார் அனைவரும் எழுந்து நின்றனர். அனைவரும் அமருங்கள் என்றார்; அனைவரும் அமர்ந்தனர் – இதனைச் சுட்டிக்காட்டி இந்தக் கட்டுப்பாட்டுக்குப் பெயர்தான் கருஞ்சட்டைப் பட்டாளம் – திராவிடர் கழகம் என்று குறிப்பிட்டார்[12].

தனிப்பட்டவர்மீதுகாழ்ப்புணர்வுஇல்லை: நாங்கள் மான உணர்வுக்காக இந்தப் போராட்டத்தை நடத்துகிறோம். யார்மீதும் எங்களுக்குத் தனிப்பட்ட முறையில் பகை இல்லை. காழ்ப்பும் கிடையாது. இந்தக் கூட்டம் முடிந்தவுடன் யாரும் அந்த உணவு விடுதி பக்கம்கூட செல்லக் கூடாது – வீட்டுக்கு நேராகப் போக வேண்டும்.

தந்தைபெரியாரைஅவமதித்துப்பேசுவதா?: அமைதிக்காகப் பாடுபடக் கூடியவர்கள் நாங்கள்; அமளியை ஏற்படுத்த அல்ல; இன்று உண்ணாவிரதம் என்று கூறிப் பார்ப்பனர்கள் என்ன பேசினார்கள். தந்தை பெரியாரையே அவன் – இவன் என்று பேசி இருக்கிறார்கள்[13]. அதற்கு உரிய முறையில் பரிகாரம் காணப்படும் (பலத்த கை தட்டல்) என்று குறிப்பிட்டார்.

 

கட்சிகளைத்தூக்கிஎறியுங்கள்!: கட்சிகளைத் தூக்கி எறியுங்கள், உங்களின் மான உணர்வை எண்ணிப் பாருங்கள் – உங்கள் சுயமரியாதைபற்றி நினைத்துப் பாருங்கள். இந்த இழிவை ஒழிக்க சிறை செல்ல வேண்டும் என்றால் அதற்கு நாங்கள் தயார்! இப்பொழுதே சிறை செல்ல பட்டியலைக் கொடுத்து விட்டனர் கழக இளைஞரணியினரும், மாணவர்களும். இந்த இயக்கம் இல்லாவிட்டால், நாங்கள் தொடர்ந்து பணி செய்யாவிட்டால் ஒவ்வொரு பார்ப்பனரல்லாதார் நெற்றியிலும் சூத்திரன் என்று பச்சைக் குத்தி இருக்க மாட்டானா? ஒரு பெரியார் பிறந்ததால்தானே நாம் மான உணர்ச்சி பெற்றோம். சுயமரியாதை உணர்வு பீறிட்டுக் கிளம்பியது திருவானைக்காவலில்தமிழர்தலைவர்.



[1] செவ்வாய், நவம்பர் 06, 2012  VIDUTHALAI EPAPER

[3] அதே பெரியார் நீதிமன்றத்திற்கு செல்லாமல் டபாய்த்து, நன்றாக வாங்கிக் கட்டிகொண்டதை முன்பொரு இடுகையில், உச்சநீதி மன்ற தீர்ப்பின் ஆதாரத்துடன் எடுத்துக் கோட்டியுள்ளேன்.

[4] பாவம், மனுதர்மத்தை எரிப்போம் என்று எரித்த பிறகுக்கூட, இவர் கையில் இருக்கிறதாம். அப்படியென்றால், நிறையப் பிரதிகளை வாங்கி வைத்திருப்பார் போலும்! ஆனால், எடுத்துக் காட்டும் போது, விளக்கம் கொடுக்கும் போது மட்டும், திரித்துக் கூறுவதை வழக்கமக வைத்திருக்கிறார்.

[5] இப்படியொரு வார்த்தயே இல்லை. குருஹஜஹ = என்றதை வீட்டில் பிறந்தவன் என்றுதான் பொருள் கொள்லவேண்டும். அவ்வாறுதான் மொழிபெயர்ப்பாளர்கள் பொருட்கொண்டுள்ளனர்.

R. N. Sharma, Manusmriti (translation of M. N. Dutt – Sanskrit verses with translation), Chaukhamba Sanskrit Pratishthan, New Delhi, 1998, p.389.

A. C. Burnell, The Ordinances of Manu, Oriental Books, New Delhi, 1971, p.243.

[6] இந்த சுலோகத்தில் இவர் குறிப்பிட்டபடி அத்தகைய வார்த்தைகள் இல்லை. வேண்டுமென்றே துவேஷத்தை வளர்க்க அத்தகைய வார்த்தைகளை உபயோகித்துள்ளார்.

[7] இங்கும் உண்மையினைத் திரித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்டார் என்று தான் சொல்லப்பட்டுள்ளது. அதில் ஒன்றும் மாற்று விளக்கம் கொடுக்கும் அளவில் ஒன்றும் இல்லை.

[8] செவ்வாய் கிரகத்திற்கு யார் வேண்டுமானாலும் போக முடியாது. அதற்கான படிப்பு, பயிற்சி, அனுபவம், அறிவு முய்தலியவற்ரைப் பெற்றவர்கள் போகலாம்.

[9] குடுமி வைப்பது பார்ப்பனத்துவமோ, பிராமணத்துவமோ இல்லை. கருணாநிதியே குடுமி வைத்திருந்தார். இன்று கூட, வடவிந்தியர்களில் பலர் குடுமி வைத்திருக்கின்றனர். பீஹார், யு.பி மாநிலங்களிலிருந்து வேலைக்கு வந்தோர், பலர் குடுமியுடன் சென்னையிலே உலா வந்து கொண்டிருக்கின்றனர்.

[10] இதுதான், இரட்டை வேடம் என்பது. பிறகு எதற்கு இந்த போராட்டம்? இந்து, தினமலர் – பார்ப்பன நாளிதழ்கள் என்று கரித்துக் கொட்டி, துவேஷத்தைக் கக்கிக் கொண்டிருக்கும் போது, ஏனிந்த போலித்தனமான கரிசனம்?

[11] “நாயர் சாலை” என்றுதான் இருந்து வருகிறது. “(ரெட்டி) தெரு” என்பதில், ரெட்டி அடைப்புக் குறிகளில் போட்டுள்ளார்கள். ஆனால், “நாயர்” அடைப்புக் குறிகள் இல்லாமல்தான் இருக்கிறார்!

[12] இது “கட்டுப்பாடு” என்பதா, இல்லை சொன்னதை செய்வோம் என்ற நிலையில் உள்ளார்கள் என்பதா?

[13] தமிழகத்தில் பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்ற பழக்கமே போய் விட்டது. “பெரிசு” என்று கேலிபேசி “அது-இது” என்றுகிண்டல் செய்யும் அளவிற்கு வந்துள்ளது. மேலும் கடவுளையே, அவநிவன் என்று கூறும் வழக்கமும் உள்ளது. ஆகையால், இதில் என்ன வந்து விட்டது என்று தெரியவில்லை. முதலில் பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வரவேண்டும், வளர வேண்டும்., பிறகு தான் பழக்கம் ஏற்படும். இப்பொழுது கழகங்களினால் ஏற்படுத்தப் பட்டுள்ள சீர்கேட்டைக் களைய நூறு ஆண்டுகள் ஆகும்.

தேவநாதனுக்கும் பிணை-விடுதலை!

பிப்ரவரி 19, 2010

தேவநாதனும், குஷியில் திளைக்கும் நிருபர்களும்! தேவநாதன் என்றாலே நிருபர்களுக்குக் குஷிதான்! பிளந்துக் கட்டுகிறர்கள். இதோ தலைப்புகள்:

·         தட் ஈஸ் தமிள் கூறுவதென்றால்[1], அசிங்க அர்ச்சகர் தேவநாதனுக்கு நிபந்தனை ஜாமீன்

·         தினத்தந்தி சொல்வது[2], “செக்ஸ் அர்ச்சகர் தேவநாதன் நிபந்தனை ஜாமீனில் விடுதலை …”!

·         தினகரன் சொல்வது[3], “அர்ச்சகர் தேவநாதன் ஜாமீனில் விடுதலை”!

பெண்களுடன் அசிங்கமாக நடந்து கொண்டு சிக்கினார்[4]: வெளியே, தலைப்பில் சொல்வது, “அசிங்க அர்ச்சகர் தேவநாதனுக்கு நிபந்தனை ஜாமீன்”! உள்ளேச் சொல்வதோ, “பெண்களுடன் அசிங்கமாக நடந்து கொண்டு…..”! தினத்தந்தி “செக்ஸ் அர்ச்சகர்” என்ற பட்டத்துடன் விளக்குகிறது! தினகரனோ, “அர்ச்சகர்” என்றே நிறுத்திக் கொள்கிறது!! இத்தகைய “ஊடக மரியாதை நிமித்தங்கள், வழக்குகள், பாரம்பரியங்கள்” முதலியவற்றை என்னுடைய முந்தைய கட்டுரைகளில் காணவும்[5]. ஊடகக்காரர்களின் செம்மொழி பாதிப்பு அதிகமாகவே உள்ளது [செம்மொழி = செம்மை + மொழி, செம் +மொழி, செ + மொழி, எனக்கொண்டால், தமிழ் புலவர்கள் அதற்கு என்ன அர்த்தம் என்று சொல்வார்கள்!]

ஜாமீனில் வெளியே வந்தால் தாக்கப்படலாம்: கோவில் கருவறையில் அசிங்கமாக நடந்து கொண்ட அர்ச்சகர் தேவநாதனுக்கு காஞ்சிபுரம் ஜுடிஸியல் மாஜிஸ்டிரேட் கோர்ட்- I நிபந்தனை ஜாமீன் அளித்துள்ளது. காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோவில் கருவறைக்குள் பெண்களுடன் அசிங்கமாக நடந்து கொண்டு சிக்கினார் தேவநாதன். தற்போது வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜாமீனில் வெளியே வந்தால் தாக்கப்படலாம் என்ற அச்சத்தில் அவர் ஜாமீன் கோராமலேயே இருந்து வந்தார். தமிழ்நாட்டுக் காமக் கொடூர எதிர்ப்பின் மகிமையே அலாதிதான்!

“கற்பழிக்கப்பட்ட பெண்களின்” பரிசோதனை என்னவாயிற்று? தன்னைக் கற்பழித்து விட்டதாக புகார் கொடுத்த பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை நடந்து விட்டது என்றெல்லாம் செய்தி வந்ததே என்னவாயிற்று? ஹேமலதா மாதிரி அமுக்கிவிட்டார்களா?  அத்தகைய பரிசோதனைகளில் என்னத்தான் தெரியவரும்? தேவநாதன் உடலுறவு கொண்டிருந்தால் உண்மை தெரியவரும். மற்றவர் புனைத்திருந்தால் அந்த உண்மைகளும் வெளிவரத்தானே செய்யும்? இதில் ஒருத்தி விபச்சாரி என்று வேறு சொல்கிறார்கள்! அந்த விஷயம்தான் மறைக்கப்படுகிறதா?

இதுவரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை! பெண்களுடன் தகாத முறையில் நடந்து கொண்டதற்காக இந்திய குற்றாவியல் சட்டத்தின் பிரிவுகள் 295; 153-A மற்றும் 506 (ii) பிரிவுகளில் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு வழக்குப் போடப்பட்டது[6]. இந்த நிலையில், நேற்று அவரை காஞ்சிபுரம் முதலாவது நீதித்துறை நடுவர் சுதா முன்பு போலீஸார் ஆஜர்படுத்தினர். அப்போது தேவநாதனின் காவலை மார்ச் 3ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். அப்போது தேவநாதனின் சார்பில் ஆஜரான வக்கீல், தேவநாதன் கைது செய்யப்பட்டு 90 நாட்களாகி விட்டது. இதுவரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. எனவே அவரை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதைப் பரிசீலித்த நீதிபதி, நிபந்தனை ஜாமீனில் – 2 நபர் ஜாமீனும், தலா ரூ. 5 ஆயிரம் சித்து பத்திரம் தாக்கல் செய்து விதலையாகலாம், அத்துடன் அவர் தினசரி காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும், வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். வெளியூர் செல்லக்ககடாது, என்ற நிபந்தனைகாளுடன் – தேவநாதனை விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

தேவநாதன் வழக்கை விசாரித்து வந்த டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் திடீர் மாற்றம்[7]: இதென்ன கலாட்டா? தேவநாதன் வழக்கை விசாரித்து வந்த டி.எஸ்.பி. மற்றும் இன்ஸ்பெக்டர் ஆகியோர் திடீரென மாற்றப்பட்டு விட்டனர். இவர் குறித்த புகாரின் பேரில் சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாபிராமன் அவர் மீது வழக்கு பதிவு செய்தார். கோர்ட்டில் சரண் அடைந்த தேவநாதனை காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தினார். இந்த வழக்கு மாவட்ட குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது. போலீஸ் டி.எஸ்.பி. விஜயராகவன் விசாரணையை தொடர்ந்தார். இந்நிலையில் தேவநாதன் வழக்கை முதலில் விசாரித்த இன்ஸ்பெக்டர் பட்டாபிராமன் திடீரென வேலூர் சரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். அது போல் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. விஜயராகவன், கிருஷ்ணகிரிக்கு மாற்றப்பட்டுள்ளார். தற்போது சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியை கூடுதலாக மாவட்ட குற்ற ஆவணப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் கவனித்து வருகிறார். தாலுகா இன்ஸ்பெக்டராக சம்பத் நியமிக்கப்பட்டு இருக்கிறார்[8]. இதிலும், நிருபர்களின் தலைப்புகள் இதோ:

அப்படியென்ன, இதில் பிரச்சினை?

நவம்பர் 2009 கைதுகள், பிப்ரவரி 2010 விடுதலைகள்!: புவனேஸ்வரி பிரச்சினையைத் தொடர்ந்ததுதான் இப்பிரச்சினைகள்-விவகாரங்கள்!

  • வில் ஹியூம் 07-11-2009 அன்று கைது செய்யப்படுகிறான்.
  • 08-02-2010 அன்று விடுதலை செய்யப்படுகிறான்!
  • தேவநாதன் 16-11-2009 அன்று கைது செய்யப்படுகிறான்.
  • 18-02-2010 அன்று[10] விடுதலை செய்யப்படுகிறான்!

தேவநாதனுக்கு-விடுதலை-பிணை

தேவநாதனுக்கு-விடுதலை-பிணை

குற்றவாளிகள் தண்டிக்கப் படுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனால், அவர்களை சாக்காக / முன்னுதாரணமாக வைத்துக் கொண்டு, பெரிய குற்றவாளிகள் தப்பித்துக் கொள்வதுதான் இப்பொழுதைய “modus operandi” யாகத் தெரிகிறது!

  • நிச்சயமாக புவனேஸ்வரி விசயத்தில் தப்பித்துக் கொண்டது மற்றவர்கள்தாம், பலிகடா ஆக்கப்பட்டது புவனேஸ்வரியும், பத்திரிக்கையாளர்களும்.
  • வில் ஹியூமை காப்பாற்றத் துடிப்பதிலும் பெரியவர்கள் உள்ளார்கள், இங்கு பலிகடா ஆக்கப்பட்டது பல பெண்களும், ஆண்களும்!
  • ஆனால், தேவநாதன் விஷயத்தில் மறைக்கப்படுபர்கள் வீடியோ-மாஃபியாவும், சம்பந்தப்பட்ட பெண்களும்தான், அதாவது பலிகடா ஆக்கப்பட்டது தேவநாதன்!

பின்னப்பட்டுள்ளப் புதிர்களை மக்கள்தாம் விடிவிக்கவேண்டும். மக்கள் ரசிப்பது உண்மைகளா அல்லது காமலீலைகளா என்ற விஷயம் வேறு! அதில்தான் உண்மைகள் ஊமையாகின்றன.


[1] தட் ஈஸ் தமிள், அசிங்க அர்ச்சகர் தேவநாதனுக்கு நிபந்தனை ஜாமீன், வியாழக்கிழமை, பிப்ரவரி 18, 2010

http://thatstamil.oneindia.in/news/2010/02/18/conditional-bail-archakar-devanatha.html

[2] தினத்தந்தி, http://www.dailythanthi.com/article.asp?NewsID=548145&disdate=2/19/2010

[3] தினகரன், http://www.dinakaran.com/nagaramdetail.aspx?id=5948

[4] தட் ஈஸ் தமிள், அசிங்க அர்ச்சகர் தேவநாதனுக்கு நிபந்தனை ஜாமீன், வியாழக்கிழமை, பிப்ரவரி 18, 2010

http://thatstamil.oneindia.in/news/2010/02/18/conditional-bail-archakar-devanatha.html

[5] வேதபிரகாஷ், வில் ஹியூம், புவனேஸ்வரி, தேவநாதன்: தமிழ் ஊடகங்கள்!, https://socialterrorism.wordpress.com/2009/11/20/வில்-ஹியூம்-புவனேஸ்வரி-த /

[6] http://www.thehindu.com/2010/02/19/stories/2010021959450200.htm

[7] தட் ஈஸ் தமிள், தேவநாதன் வழக்கை விசாரித்து வந்த டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் திடீர் மாற்றம், புதன்கிழமை, பிப்ரவரி 17, 2010

http://thatstamil.oneindia.in/news/2010/02/17/dsp-inspector-devanathan-case-shifted.html

[8]தினத்தந்தி,  http://www.dailythanthi.com/article.asp?NewsID=547691&disdate=2/17/2010

[9] நியூ இன்டியன் நியூஸ், ஆபாச ஐயர் தேவநாதன் வழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரிகள் திடீர் மாற்றம் , வியாழக்கிழமை, 18 பெப்ரவரி 2010

http://www.newindianews.com/view.php?2beffmA4ddc23QQAK334aaCe0AAad0e0xXO4Yccd24mmlRH22eecK466dce03OmM0o44b4cYYDD700

[10] தினமலர், குறிப்பிடுவது 19-02-2010 அன்று பிணையில் விடுதலைச் செய்யப்படுவான் என்பதாகும், சென்னைப் பதிப்பு, ப.14

வன விலங்குகள் சட்டத்தில் கைது செய்யப்பட்ட புலிதோல் சாமியாருக்கு ஜாமீன்!

ஜனவரி 12, 2010

சாமியாருக்கு ஜாமீன்

பதிவு செய்த நாள் 1/12/2010 12:36:39 AM

http://www.dinakaran.com/nagaramdetail.aspx?id=3791

கற்பழிப்பு சாமியார் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்?

தட்ஸ்தமிழ் – ‎4 மணிநேரம் முன்பு‎
சென்னை: பெண்ணை கற்பழி்த்த குற்றச்சாட்டுக்கு ஆளாகி, வீட்டில் புலித்தோல் பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார் ​(62) மீதான வழக்குகள்

புலித்தோல் சாமியார் மீதான வழக்கு ​விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்?

தினமணி – ‎10 மணிநேரம் முன்பு‎

சென்னை,​​ ஜன.​ 9: புலித்தோல் பதுக்கிய வழக்கில் கைதான சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார் ​(62) மீதான வழக்குகள் சிபிசிஐடி

Swine Fluசென்னை : பாலியல் புகாரில் சிக்கிய நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் வசிக்கும் சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார், புலி தோல் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார். அவர் ஜாமீன் கேட்டு சைதாப்பேட்டை 17வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி பூபாலன், சாமியாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவுபடி, அவர் தினமும் மாம்பலம் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.

புலித்தோல் சாமியார் மீதான வழக்கு ​விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்?
First Published : 12 Jan 2010 01:58:49 AM IST

Last Updated : 12 Jan 2010 02:26:34 AM IST

http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Tamilnadu&artid=181911&SectionID=129&MainSectionID=1b95%u0bc1+%

சென்னை, ​​ ஜன.​ 9: புலித்தோல் பதுக்கிய வழக்கில் கைதான சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார் ​(62) மீதான வழக்குகள் சிபிசிஐடி போலீஸôரின் விசாரணைக்கு விரைவில் மாற்றப்பட உள்ளன.​ நுங்கம்பாக்கம் காம்தார் நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார்.​ இவரிடம் உதவியாளராக பணியாற்றியவர்,​​ தேனாம்பேட்டை கிரியப்பா ரோட்டைச் சேர்ந்த ஹேமலதா.​ தன்னை சாமியார் மானபங்கம் செய்ததாக ஹேமலதா போலீஸôரிடம் புகார் செய்தார்.​ மேலும் புலித்தோல் பதுக்கியதாகவும் புகார் எழுந்தது.​ இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் டி.​ ராஜேந்திரன் உத்தரவின்பேரில் இது குறித்து மாம்பலம் போலீஸôர் வழக்குப்பதிவு செய்து பெங்களூரில் பதுங்கியிருந்த சாமியாரை கைது செய்தனர்.மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பு:​​ இது தொடர்பாக சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.​ இதன்பின் நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறியதால்,​​ ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.​ மருத்துவமனையில் அவரை சந்திக்க வரும் நபர்கள்,​​ அவருக்கு வழங்கப்படும் உணவு ஆகியவற்றையும் போலீஸôர் கண்காணித்து வருகின்றனர்.​ மத்திய அரசுக்கு தகவல்:​​ மத்திய தொழிலாளர் துறையின் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக உள்ள சாமியார் குறித்து போலீஸôரின் விசாரணையில் கிடைத்த தகவல்கள் அனைத்தும் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.​ உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பங்கஜ் தியாகியிடம்,​​ புதுதில்லியில் உள்ள கட்டடத்தை விற்பனை செய்வதில் சாமியார் ரூ.​ 1 கோடி மோசடி செய்ததாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.​ கேரள பெண் தற்கொலை…​ இதே போல சிங்கப்பூரில் சாமியார் முன்பு தங்கியிருந்தபோது அவரிடம் உதவியாளராக கேரளத்தைச் செர்ந்த லூசி பணியாற்றியுள்ளார்.​ சாமியார் மிரட்டியதால் மீண்டும் தனது சொந்த ஊருக்கு திரும்பிய இவர் சில நாள்களில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.இன்டர்போல் உதவியை நாட…​ சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் சாமியார் மீது வழக்குகள் ஏதும் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து தகவல்களை திரட்ட “இன்டர்போல்’ அமைப்பின் உதவியை நாடவும் போலீஸôர் பரிசீலித்து வருகின்றனர்.​ இந்த நிலையில்,​​ மந்தைவெளியைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வீட்டை ஆக்கிரமித்து,​​ அறக்கட்டளை நடத்தியுள்ளதும் தெரியவந்துள்ளது.​ இதுதொடர்பாக நிலுவையில் உள்ள வழக்கு குறித்தும் போலீஸôர் விசாரித்து வருகின்றனர்.இதற்கிடையே சாமியார் மீது மானபங்கம் செய்ததாக புகார் தெரிவித்த அவரது முன்னாள் உதவியாளர் ஹேமலதாவுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.​ இதன் அறிக்கையையும் போலீஸôர் எதிர்நோக்கியுள்ளனர்.சாமியார் மீதான புகார்கள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருவதால்,​​ அவர் மீதான அனைத்து வழக்குகளையும் சிபிசிஐடி போலீஸôரின் விசாரணைக்கு மாற்றப்பட உள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

வில் ஹியூம், புவனேஸ்வரி, தேவநாதன்: தமிழ் ஊடகங்கள் – IV

திசெம்பர் 20, 2009

வில் ஹியூம், புவனேஸ்வரி, தேவநாதன்: தமிழ் ஊடகங்கள் – IV

ஊடகங்களின் பிரச்சார ரீதியிலான அறிவிப்புகள் தொடர்கின்றன: ஒரு அர்ச்சகர் கிடைத்தாகிவிட்டது, அதுவும் பார்ப்பனர் என்று தெரிகின்றது. இப்பொழுது ஹேமலாதா என்ற பெண்மணி ஸ்ரீகுமார் பற்றி தாராளமாக புகார் கொடுக்கிறார், நிருபர்களைக் கூட்டி பேட்டி கொடுக்கிறார். 50 தடவை தான் பலாத்காரம் படுத்தப் பட்டார் என்றெல்லாம் கூறுகிறார். ஆனால் இங்கேயே ஒரு பெண்மணித் தான் கற்பழிப்புப் புகார் கொடுத்து பிணையில்லாத சொறையைலடைப்பு ரீதியில் வைக்கின்றனர். பிறகு நீதிமன்றத்திற்கு கொண்டு வந்தால் ஆபத்து என்று மறைக்கின்றனர்! இவையெல்லாம் ஆச்சரியமாக உள்ளது.

ஆகவே, ஊடகங்கள் தேவநாதன் விஷயத்தில் பல விஷயங்களை மறைக்க முயற்ச்சிப்பதாகத் தெரிகிறது. பாலியல் புகார் எடுபடாததினால், ஒருவேளை கற்ப்பழிப்பு புகார் மூலம் கைது செய்யப்பட்டாது போலத்தெரிகிறது. பிறகு குற்றம் செய்வதற்கு தூண்டுதல் / ஊக்கம் / காரணம் (motive) வேண்டும் என்பதற்கான மற்ற விஷயங்களைக் கொண்டு வருகின்றனர். உல்லாசமாக இருக்க பணம் வேண்டும்!

உண்டியல் திருட்டு: அர்ச்சகர் தேவநாதன் தன்னுடன் உல்லாசமாக இருக்கும் பெண்களுக்கு பணத்தை வாரி வழங்கியுள்ளார். இதற்காக கோவில் உண்டியலில் பக்தர்கள் போடும் காணிக்கை பணத்தையும் திருடியுள்ளார். இந்த பணத்தை வைத்துக் கொண்டு நட்சத்திர ஓட்டல்களிலும் பெண்களுடன் உல்லாசம் அனுபவித்துள்ளார். போலீஸ் விசாரணைக்கு பயந்து அர்ச்சகருடன் உல்லாசமாக இருந்த பெண்கள் பலர் தங்களது வீடுகளை காலி செய்து விட்டு வெளியூர்களுக்கு தப்பிச்சென்று விட்டனர்.

அசிங்க அர்ச்சகர் தேவநாதன் வங்கிக் கணக்கில் ரூ. 80 லட்சம் பணம்[1]: பக்தர்கள் தட்டில் போடும் தட்சணையை வைத்து பிழைப்பு நடத்தி வந்த அர்ச்சகர் தேவநாதனின் வங்கிக் கணக்கில் ரூ. 80 லட்சம் பணம் இருப்பதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். இவ்வளவு பணம் எப்படி இவருக்கு வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. அந்த வங்கிக் கணக்கு தற்போது முடக்கி வைக்கப்பட்டுள்ளது. கோவில் கருவறையில் பெண்களுடன் தகாத முறையில் நடந்து கொண்டதாக கைதாகியுள்ள காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதனை 3 நாள் காவலில் எடுத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே 2 நாள் காவலில் எடுத்து அவர் விசாரிக்கப்பட்டார். தற்போது 2வது முறையாக அவர் காவலில் எடுக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு வேலூர் சிறையிலிருந்து அவரை காஞ்சிபுரம் கொண்டு வந்தனர். பாலுச்செட்டிசத்திரம் காவல் நிலையத்தில் வைத்து தேவநாதனிடம் விசாரணை நடந்து வருகிறது. தேவநாதன் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட வங்கி கணக்கு புத்தகங்கள், மெமரி கார்டுகள் போன்றவற்றை ஆய்வு செய்தனர். அப்போது காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு வங்கியில் தேவநாதன் பெயரில் ரூ. 80 லட்சம் பணம் டெபாசிட் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிகிறது. தேவநாதன் கணக்கில் லட்சக்கணக்கில் பணம் வந்தது எப்படி? என்று தற்போது போலீஸார் ஆராய்ந்து வருகிறார்கள்.

மேலும் 5 பெண்களுடன் தொடர்பு இந்த நிலையில் அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன் மெமரி கார்டில் மேலும் 5 பெண்களின் ஆபாச படங்கள் பதிவு செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது. யார் அவர்கள், எப்போது படம் எடுக்கப்பட்டது என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தப் பெண்கள் யார் என்று தேவநாதனிடம் கேட்டபோது கோபமானாராம அவர். “ஒவ்வொருத்தாளும், தங்களுக்குப் பிடித்தவாளை படம் எடுத்து வச்சுக்குவா, அது நடிகையாகவும் இருக்கலாம், வேறு பெண்ணாகவும் இருக்கலாம். இதெல்லாம் தப்பா.. எனக்கு பிடித்த பொம்மனாட்டிகளை படம் பிடித்து வைத்திருந்தேன். அவாளை காட்டி கொடுக்கமாட்டேன்”, என்று அடம் பிடித்தாராம். இருந்தாலும் உரிய முறையி்ல் விசாரித்து தேவநாதன் செல்போன் மெமரியில் இருக்கும் ‘பொம்மனாட்டிகள்’ யார் என்பதை அறிய போலீஸார் தீவிரமாக முயன்று வருகின்றனர். ஆனால் போலீஸார் அவ்வாறே உரிய முறையி்ல் விசாரித்தார்களா இல்லையா என்று தெரியவில்லை!

அர்ச்சகரிடம் மீண்டும் போலீஸ் விசாரணை: அர்ச்சகர் தேவநாதனை போலீசார் மீண்டும் காவலில் எடுத்து விசாரித்தனர்[2]. காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோயில் அர்ச்சகர் தேவநாதன், கோயில் கருவறையில் பெண்களிடம் உல்லாசமாக இருந்ததாகவும், அதை அவரே செல்போனில் படம் பிடித்ததாகவும் புகார் எழுந்தது. போலீசார் அவரை தேடி வந்த நிலையில், காஞ்சிபுரம் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் முன்பு 16ம் தேதி சரண் அடைந்தார். 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் அனுமதி கேட்டனர். ஆனால், 2 நாள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் 3 நாட்கள் விசாரிக்க உயர்நீதிமன்றத்தில் போலீசார் மனுத்தாக்கல் செய்தனர். உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து, வேலூர் சிறையில் இருந்த தேவநாதனை, சிவகாஞ்சி போலீசார் நேற்று காலை 28-11-2009 காஞ்சிபுரம் அழைத்து வந்தனர். சிவகாஞ்சி போலீஸ் நிலையத்தில் வைத்து இன்ஸ்பெக்டர் பட்டாபிராமன் விசாரித்து வருகிறார். இதற்கிடையில், இந்து அறநிலையத் துறை உதவி ஆணையர் செல்வராஜ் நேற்று முன்தினம் கோயில் நிர்வாகிகளிடம் தேவநாதன் குறித்து விசாரித்தார்[3]. அவர் எப்போது கோயில் பணியில் சேர்ந்தார், அவரது நடவடிக்கை எப்படி என்று கேட்டறிந்தார்.

பூக்காரி உதவியுடன் கருவறையில் லீலை செய்த அர்ச்சகர் தேவநாதன்: காஞ்சீபுரம் கோவில் கருவறையில் பூக்காரி உதவியுடன் இருபதுக்கும் மேற்பட்ட பெண்களுடன் ஆபாச லீலை நடத்தியதாக காஞ்சீபுரம் மச்சேஸ்வரர் கோவில் அர்ச்சகர் தேவநாதன்[4] 27-11-2009 அன்று கூறப்பட்டது. இவர் கோவில் கருவறையில் வைத்து பெண்களிடம் செக்ஸ் லீலையில் ஈடுபட்டு அதனை ரகசியமாக காமிராவில் படம் பிடித்தார். இவரது ஆபாச படம் செல்போனில் பரவியது. தேவநாதனை காஞ்சீபுரம் போலீசார் தேடினர். இதையடுத்து அவர் கோர்ட்டில் சரண் அடைந்தார்.  செக்ஸ் அர்ச்சகர் தேவநாதனை 2 நாள் காவலில் எடுத்து விசாரித்த போது அவர் திடுக்கிடும் வாக்கு மூலம் அளித்தார். அதில் தான் 8 பெண்களை மட்டும் ஆபாச படம் எடுத்ததாக கூறினார். அவர்களது பெயர்களை மாற்றி கூறியும், உண்மையான தகவல்களை கூறாமலும் போலீசாரை ஏமாற்றினார். இதையடுத்து தேவநாதனை மீண்டும் போலீஸ் காவலில் எடுக்க போலீசார் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி: காஞ்சீபுரத்தை சேர்ந்த பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் மச்சேஸ்வரர் கோவிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். அவரிடம் தேவநாதன் நைசாக பேச்சு கொடுத்து நல்லவர் போல பழகி உள்ளார். அவரிடம் கருவறைக்குள் கண்ணை மூடி வேத மந்திரங்கள் சொன்னால் பரீட்சையில் அதிக மதிப்பெண் பெறலாம் என்று ஆசை காட்டி உள்ளார். மாணவியிடம் சில்மிஷங்கள் செய்து அதை செல்போனில் படம் பிடித்துள்ளார். தேவநாதன் தனது மனைவியையும் ஆபாச படம் பிடித்து வைத்துள்ளார். என்ற தகவலும் போலீசுக்கு கிடைத்துள்ளது. போலீஸுக்குக் கிடைத்தது இணைத்தளங்களுக்குக் கிடைக்கிறது!

பூக்காரி உடந்தை: அர்ச்சகர் தேவநாதன் 25 பெண்களுடன்[5] உல்லாசமாக இருப்பது போன்ற சி.டி.க்கள் வெளியாகியுள்ளது. இதில் குண்டு பெண் ஒருவர் கருவறையில் வைத்து தேவநாதனுடன் செக்ஸ் லீலையில் ஈடுபடுவது போன்ற சி.டி.யும் ஒன்று அந்த பெண் யார் என்பது தற்போது அடையாளம் தெரிந்துள்ளது. கோவில் அருகே பூ வியாபாரம் செய்து வரும் அப்பெண்ணிடமும் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். தேவநாதனின் செயலுக்கு உடந்தையாக அந்த பகுதியை சேர்ந்த பூக்காரி ஒருத்தி இருந்துள்ளார். அவர் தேவநாதனை பற்றி பல திடுக்கிடும் தகவல்களை கூறி வருகிறார். இந்த வழக்கில் அவரை முக்கிய சாட்சியாக சேர்க்க போலீசார் முடிவு செய்துள்ளனர். அவள் கூறிய தகவல்படி 20க்கும் மேற்பட்ட பெண்களை தேவநாதன் ஆபாசமாக படம் எடுத்துள்ளது தெரிய வந்துள்ளது.

விசாரணை மிகவும் ரகசியமாக நடத்தப்பட்டு வருகிறது[6]: இப்படி சொல்லிக் கொண்டே “ரகசியங்களை” அள்ளிவீசுகின்றன இணைதளங்கள்.குறிப்பாக “தட் ஈஸ் தமிழ்” என்ற இணைத்தளம் எல்லாவற்றையும் நேரிலேயே பார்த்தது மாதிரி செய்திகளை வெளியிடுகின்றது! பிறகு, நாளிதழ்களும் அதேமுறையைக் கையாளுகின்றன. விசாரணை ரகசியம் என்றால், எப்படிவிவரங்கள் வெளியே வருகின்றன. இதற்கும் புவனேஸ்வரி வழக்கிற்கும் ஒன்றும் வித்தியாசம் இல்லையே? இங்குள்ள பெண்கள் எல்லாம், நடிகைகள் அல்லர். அவர்களுக்குத் துணையாக சங்கம் இல்லை. இருந்திருந்தால், அர்ச்சகரை மட்டுமில்லாது, சிடி-தயாரித்து விற்ரவர்களையும் அதே மாதிரி திட்டியிருப்பார்கள். ஆகவே, ஒன்று போலீஸார் புவனேஸ்வரி வழக்கு மாதிரி, விஷயங்களை பத்திரிக்கைகளுக்குத் தந்திருக்கவேண்டும் அல்லது கசியும் விஷயங்களை வைத்துக் கொண்டு, கொஞ்சம் கற்பனையையும் கலந்து, ஆர்பாட்டத்திற்காக அவ்வாறு “செய்திகளை” வெளியிட வேண்டும்.

கருவறையில் காமலீலை- பெண்கள் பட்டியலை தந்தார் செக்ஸ் அர்ச்சகர்[7]: மேலே விஷயங்கள் சொன்னதையே சொன்னதாக நினைக்கக் கூடாது. எப்படி ஊடகங்கள் ஒரே செய்தியை வேறூபாடுகளுடன் வெளியிடுகின்றது என்பதைக் காட்டத்தான் அவ்வாறு குறிப்பிடப் படுகிறது. இப்படி தினம்-தினம் செய்திகள். முதலில் 8 பெண்கள் என்றார்கள்! அர்ச்சகர் தேவநாதன் 20 அல்லது 25 பெண்களுடன்[8] உல்லாசமாக இருப்பது போன்ற சி.டி.க்கள் வெளியாகியுள்ளது. பிறகு 30…. இப்படி எண்ணிக்கைக் கூடிக்கொண்டே போகின்றது. டாக்டரின் மனைவி தொடர்பு என்றார்கள்; பூக்காரி அவருக்கு உதவினாள் என்றார்கள்; ஆனால் சிடி-போட்டு ரூ.100/-க்கு விற்றது எப்படி, அதன் பின்னணி என்ன? இன்று 19-12-2009, திருநெல்வேலியில் அமோகமாக அந்த சிடி விற்க்கப்படுகிறது என்கிறார்கள்[9].

சிடி-தயாரிப்பாளர்களுக்கும் பெண்களுக்கும் தொடர்பு உண்டா? அந்த சிடி-தயரிப்பு, விற்பனை, அவர்கள் உபயோகப் படுத்திய உபகரணங்கள் முதலியனவற்றை பார்க்கும்போது, வில் ஹியூமிற்கும் இவர்களுக்கும் வித்தியசம் இல்லை எனவேத் தோன்றுகிறது. நிச்சயமாக, சிடி-தயாரிப்பாளர்களுக்கு எல்லா விஷயங்களும் தெரிந்திருக்கின்றன. அவர்கள் உள்ளூர்வாசிகள் என்பதனால், அதிலுள்ள பெண்களையும் அடையாளம் கண்டிருக்கலாம். சிடி-தயாரிப்பாளர்களிலிருந்துதான் விஷயமே வெளி வந்தது என்பது நோக்கத்தக்கது. ஆகவே, பெண்களுக்கும் சிடி-தயாரிப்பாளர்களுக்கும் தொடர்பு இருந்ததா? இத்தகைய விஷயங்கள் அனைவரும் ஒத்துழைக்காமல் முடியாது என்பது, பிரகாஷ் வழக்கு எடுத்துக் காட்டுகிறது.

டாக்டர் / மருத்துவர் பிரகாஷ் செயல்பாடு: மருத்துவர் பிரகாஷ்[10] எப்படி தனது பலி ஆடுகளை நீலப்படங்கள் எடுப்பதற்கு உபயோகப் படுத்தினானோ, அதேமாதிரியான போக்கு, இந்த வழக்கிலும் காணப்படுகிறது. அர்ச்சகரோடு, எப்படி எல்லோரும் ஒத்துழைத்தனர் என்பதற்கான காரணங்கள் “மனோதத்துவ ரீதியில் ஆறுதல் கூறுவது” என்பதைவிட மேலேச் சென்றுள்ளதால், அதுவும், ஒரு கோவிலின் கருவறைக்குள் நடந்துள்ளதால், அவ்விடம் அவர்களுக்கு மிகச் சிறந்த இடம் அதாவது யாருக்கும் தெரியாத “பாதுகாப்பான இடம்” என்பதனை அறிந்தே அவ்விடத்தைத் தேர்ந்தெடுத்தனர் எனவும் கொள்ள வாய்ப்புள்ளது. ஏனெனில், பிரகாஷ் எப்படி தனிமையான, ஆட்கள் வராத, வரமுடியாத இடக்களைத் தேந்தெடுத்தான் என்பதனை நினைவு கூறத்தக்கது. அவனும் தனது பலி-ஆடுகளுக்கு போதை / மயக்க மருந்து கொடுத்தான்.

சன்-டிவி செய்தியின்படி நீதிமன்ற வாசலிலே “தள்ளூ-முள்ளூ”: 30-11-2009 தேவநாதன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படுகிறான். ஏற்கெனவே அங்கு பெண்கள் கூட்டம் கூடியிருக்கிறது. அப்படியென்றால் அது போலிஸுக்குத் தெரியாமல் இருக்காது. தேவநாதன் வேனிலிருந்து இறக்கப்படுகிறான். பெண்கள் திடீரென்று அவன்மீது பாய்கின்றனர். போலீஸார் அவனை (தேவநாதனை)ப் பிடித்துத் தள்ளிவிடுகின்றனர் உள்ளே. டிவிக்களின் பாஷையில் சொல்லவேண்டுமானால் “தள்ளு-முள்ளு” ஏற்பட்டது. இதே மற்றவர் விஷயத்தில் அவ்வாறு போலீஸ் நடந்து கொண்டிருந்தால் அரசியல்வாதிகள் / கட்சிகள், மனித உரிமை / மிருக உரிமை என்ற பண்டிதர்கள் எல்லாம் பாய்ந்து வந்திருப்பார்கள். இங்கோ மௌனம்!

வில் ஹியூம்-தேவநாதன் போலீஸார் / ஊடகங்கள் நடத்தும் முறை: பாமக, விசி, ம.க.இ.க முதலிய குழுமங்கள் ஏற்கெனவே அந்த தேவநாதனை அடிக்கவேண்டும் என்று தீர்மானித்துள்ளதாக பேச்சு சில இணைதளங்களில் செய்தி வெளி வந்தது. ஆகவே போலீஸார் அந்த “தள்ளு-முள்ளு”வைத் தவிர்த்திருக்கலாம். டிவி-செனல்கள் காட்டுவதைதான் மக்கள் பார்க்கிறர்கள். வில் ஹியூம் கோர்ட்டிற்கு அழைத்துச் செல்லும்போதோ, வரும்போதோ எப்படி வருகிறான்? போலீஸார் தொடுவதுகூட கிடையாது! அப்படி என்ன மதிப்போ, மரியாதையோ தெரியவில்லை! ஆனால் தேவநாதனை ஏதோ தீவிரவாதியைப்போல தள்ளி அழைத்துச் செல்லப்படுகிறான். இங்கு அவன் செய்த குற்றங்கள் மறுக்கப்படவில்லை. ஆனால் போலீசார், ஊடகங்களின் பாரபட்சத் தன்மையினைத்தான் எடுத்துக் காட்டப் படுகிறது.

மயக்கி கற்பழித்து, படம் எடுத்து மிரட்டி தொல்லை- தேவநாதன் குறித்து பெண் வாக்குமூலம்: நாக்கில் மயக்க மருந்தைத் தடவி கோவில் கருவறைக்குள் கூட்டிக் கொண்டு போய் கற்பழித்து, அதை படம் எடுத்து வைத்துக் கொண்டு தொடர்ந்து தன்னைக் கற்பழித்ததாக அர்ச்சகர் தேவநாதன் மீது அவருடன் சம்பந்தப்பட்ட பெண் ஒருவர் கூறியுள்ளார்[11]. இதையடுத்து தேவநாதன் மீது கற்பழிப்பு வழக்கும் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோவில் கருவறைக்குள் அயோக்கியத்தனமாக நடந்து கொண்ட தேவநாதன் குறித்து மேலும் பல அசிங்கச் செய்திகள் வெளியாகியுள்ளன.

அப்பாவி போல இருந்தார்அவருடன் தொடர்புடைய ஒரு பெண் போலீஸாரிடம் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கொடுத்துள்ள வாக்குமூலத்தில், “தினமும் மச்சேஸ்வரர் கோவிலுக்கு செல்வேன். பயபக்தியுடன் சாமி கும்பிடுவேன். அங்கு அர்ச்சகராக இருந்த தேவநாதன் பார்ப்பதற்கு அப்பாவி போல நல்லவராக காட்சி அளித்தார். அவரிடம் என் கஷ்டங்களை சொல்லுவேன். அவரும் ஆறுதலாக பேசுவார். பொங்கல் கொடுத்தார்…ஒருநாள் எனக்கு கோவில் பிரசாதம் என்று சர்க்கரை பொங்கல் கொடுத்தார். பின்னர் ஒரு சாக்லெட் கொடுத்து சாப்பிட சொன்னார். நானும் சாமிக்கு வைத்து பூஜை செய்தது என்று நம்பி பிரசாதத்தை சாப்பிட்டேன். சிறிது நேரத்தில் எனக்கு மயக்கமாக இருந்தது. என்னை கோவிலின் கருவறைக்கு அர்ச்சகர் தேவநாதன் அழைத்து சென்றார். என் ஆடைகளை எல்லாம் களைந்தார். நான் தடுக்க முயன்றேன். ஆனால் மயக்கமாக இருந்ததால் என்னால் முடியவில்லை”. இத்தகைய வாக்குமூலங்களில் வெளியாவது, பெண்களின் ஒத்துழைப்புதன். ஹேமலாதாவும் இதே மாதிர் புகார் கொடுக்கிறார். இங்கு பிரசாதத்திற்கு பதிலாக காபி வருகிறது!

கற்பை சூறையாடினார்என்னை அர்ச்சகர் தேவநாதன் கருவறையில் வைத்து கற்பழித்து விட்டார். அதை தனது செல்போனில் படம் பிடித்து அடிக்கடி என்னை மிரட்டி பலமுறை என் கற்பை சூறையாடினார் என்று கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து தேவநாதன் மீது கற்பழிப்பு ஒன்றையும் போலீஸார் போட்டுள்ளனர். நிற்பது போன்ற படங்கள் இணைதளங்களில் வெளியிட்டுள்ளார்கள். முன்னமே குறிப்பிட்டது போல, அவை ஒன்றிற்கு மேற்ப்பட்ட நபர்கள் எடுத்திருக்கிறாற்கள். இப்படி கற்பழிப்பதற்கு வீடியோ ஆதாரம் இருக்குமேயானால் அவனை தூக்கில்கூட போடலாம்.

எப்படி .. நடித்துக் காட்டிய தேவநாதன்இதற்கிடையே, தேவநாதனை போலீஸார் பலத்த பாதுகாப்புடன் மச்சேஸ்வரர் கோவிலுக்குக் கூட்டிச் சென்றனர். அங்கு கருவறைக்குள் செய்த அசிங்கச் செயல்கள் குறித்து போலீஸார் விசாரித்தனர். இதையடுத்து தான் அசிங்கச் செயல்களில் ஈடுபட்ட இடங்கள், எங்கு செல்போனை வைத்து படமாக்கினேன் என்பது உள்ளிட்டவற்றை விளக்கினார் தேவநாதன். மேலும், எப்படி பெண்களுடன் செக்ஸ் உறவில் ஈடுபட்டேன் என்பதையும் அவர் நடித்துக் காட்டினாராம். விசாரணையின்போது கருவறையிலிருந்து முக்கிய ஆதாரம் ஒன்றையும் போலீஸார் கைப்பற்றினர். மேலும், தன் செல்போனில் பதிவு செய்த செக்ஸ் காட்சிகள் எவ்வாறு வெளியானது எனவும் தேவநாதன் விளக்கினார். காஞ்சீபுரம் கவரை தெருவில் உள்ள ஒரு செல்போன் கடையில்தான் தான் செல்போனை பழுது பார்க்கக் கொடுத்ததாகவும் அவர் அடையாளம் காட்டினார். அந்தக் கடையிலும் போலீஸார் விசாரணை நடத்தினர். தேவநாதன் பல பெண்களுடன் செக்சில் ஈடுபட்ட காட்சிகள் செல் போனில் இருந்து ஒரு லேப்-டாப் மூலம் டவுன்லோட் செய்யப்பட்டது தெரிய வந்தது. அந்த கடையில் இருந்து லேப்-டாப், உயர்ரக செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் தங்களுக்கு கிடைத்த ஆதாரங்களை அனைத்தையும் காஞ்சீபுரம் கோர்ட்டில் ஒப்படைத்துள்ளனர்.

வில் ஹியூம் விஷயத்தில் அவ்வாறு செய்தனரா? வில் ஹியூமை அவ்வாறே அசிங்கச் செயல்கள் குறித்து போலீஸார் விசாரித்தனரா?.

  • மஹாபலிபுரத்திற்கு சென்றனரா / அழைத்துச் செல்லப் பட்டாரா?
  • இதையடுத்து தான் அசிங்கச் செயல்களில் ஈடுபட்ட இடங்கள், எங்கு கேமரா வைத்து படமாக்கினேன் என்பது உள்ளிட்டவற்றை வில் ஹியூம் விளக்கினாரா.
  • மேலும், எப்படி பெண்களுடன் / சிறுவர்களுடன் செக்ஸ் உறவில் ஈடுபட்டேன் என்பதையும் அவர் நடித்துக் காட்டினாரா?
  • விசாரணையின்போது அதேமதிரி முக்கிய ஆதாரம் எதையேனும் போலீஸார் கைப்பற்றினரரா
  • மேலும், தன் லாப்டாப்பில் பதிவு செய்த செக்ஸ் காட்சிகள் எவ்வாறு வெளியானது எனவும் விளக்கினாரா.

இவையெல்லாம் ரகசியமாகவே உள்ளன, ஆனால் தேவநாதன் விழயத்தில் மட்டும் தாராளமாக உள்ளனர்!

ஆபாச ஐயர் தேவநாதனை எங்கு பார்த்தாலும் செருப்பால் அடிப்போம்: மகளிர் அமைப்பினர் ஆவேசம்[12]: அர்ச்சகர் தேவநாதன் நேற்று மாலையில் 01-12-2009 விசா ரணை முடிந்து காஞ்சீபுரம் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள் மன்றம் அமைப்பை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கோர்ட்டு வளாகத்தில் அர்ச்சகர் தேவநாதன் வந்த போலீஸ் ஜீப்பை வழிமறித்து செருப்பு மற்றும் துடைப்பம் ஆகியவற்றால் தாக்கினர். சாணியை வாரி ஜீப் மீது வீசினர். தகவலறிந்த டி.எஸ்.பி. சமுத்திரகனி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆவேசமாக இருந்த பெண்களை கைது செய்து ஜீப்பில் ஏற்றிசென்றனர். பின்னர் அர்ச்சகர் தேவநாதனை போலீசார் பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து சென்று நீதிபதி சுதா முன்பு ஆஜர்படுத்தினர். நீதிபதி சுதா அர்ச்சகர் தேவநாதனை மீண்டும் 15 நாள் காவலில் 16-12-2009 வரை வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து தேவநாதன் மீண்டும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அர்ச்சகர் தேவநாதனை செருப்பாலும், துடைப்பத்தாலும் தாக்கிய மக்கள் மன்ற அமைப்பாளர்களில் ஒருவரான மகேஷ் கூறியதாவது:-

கோவிலின் புனித இடமான கருவறையில் பெண்களுடன் காமவெறியாட்டம் நடத்திய காமகொடூரன் அர்ச்சகர் தேவநாதனை ஜாமீனில் விடுவிக்ககூடாது. மேலும் இந்த வழக்கில் பல உண்மைகள் வெளி வரவேண்டும். போலீசார் உரிய முறையில் விசாரணை நடத்தி பல உண்மைகளை வெளியில கொண்டு வந்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். மத உணர்வுகளை சீர்கெடுத்த காமகொடூரன் தேவநாதனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். தேவநாதனை எந்த காலத்திலும் எந்த கோவிலிலும் அனுமதிக்கவே கூடாது. அவருடைய சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும். அர்ச்சகர் தேவநாதனுக்கு உரிய தண்டனை வழங்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம் . காமகொடூரன் தேவநாதனை எங்கு பார்த்தாலும் அவரை விரட்டி, விரட்டி செருப்பால் அடிப்போம்”.

இவ்வாறு அவர் கூறினார். அர்ச்சகர் தேவநாதனுக்கு எதிராக கோர்ட்டு வளாகத்தில் போராட்டம் நடத்திய 47 பெண்கள் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். 447 ஐ.பி.சி. (அத்து மீறி நுழைதல்), 143 சட்ட விரோதமாக கூடுதல், 341 வழிமறித்து தாக்குதல், 294 ஆபாசமாக பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

டிவி நடிகையுடன் ஆபாச ஐயர் தேவநாதன் புது சிடிக்களால் பரபரப்பு[13]: மொத்தம் 21 பெண்கள் தேவநாதன் விரித்த செக்ஸ் வலையில் சிக்கியது தெரிய வந்துள்ளது[14]. இவர்களில் பெரும்பாலான பெண்களிடம் போலீசார் விசாரணை நடத்தி முடித்து விட்டனர்[15]. டாக்டர் மனைவி, பேராசிரியர் மனைவி, நர்ஸ், தொழில் அதிபர்களின் மனைவிகள் என தேவநாதனுடன் உல்லாச லீலையில் ஈடுபட்ட பெண்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது [அதெப்படி அவர்கள் எல்லாம் தாம் தேவநாதனுடன் உறவு வைத்துக் கொண்டதை பெருமையாக் கூறுகிறர்களா அல்லது புகார் கொடுக்கிரார்களா, தெரியவில்லையே]. இவர்களின் வரிசையில் டி.வி. நடிகை ஒருவரும் தற்போது சேர்ந்துள்ளார் [புவனேஸ்வரி பற்றி அப்படி ஆராய்ச்சி செய்தனரே, ஏன் இந்த நடிகையை மறைக்கின்றனர்?]. மச்சேஸ்வரர் கோவிலுக்கு அடிக்கடி வந்து செல்லும் அந்த டி.வி. நடிகையையும் தேவநாதன் தனது ஆபாச வலையில் வீழ்த்தி இருப்பதாக கூறப்படுகிறது [குடுமி வைத்த அவனிடம் என்ன அப்படி வசியம்?]. டி.வி. நடிகையும், அர்ச்சகரும் உல்லாசமாக இருப்பது போன்ற புதிய சி.டி. வெளியாகி இருப்பதாகவும் பரபரப்பாக பேசப்படுகிறது. காஞ்சீபுரம் மட்டுமின்றி அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் இந்த சி.டி. அமோகமாக விற்பனையாவதாகவும் கூறப்படுகிறது.

தேவநாதனின் பல “அவதாரங்கள்” / “நாமங்கள்”: கும்பகர்ண ஊடகங்கள் விழித்துவிட்டன, தமிழச்சிகள் முழித்துக் கொண்டனர், இணைடத்தளங்கள் ஆர்ப்பரிக்கின்றன, வலைகள் பின்ன ஆரம்பித்துவிட்டன! தேவநாதன் அர்ச்சிக்கப்படும் விதமே அலாதிதான்:

  • செக்ஸ் அர்ச்சகர்
  • ஆபாச அர்ச்சகர்
  • அசிங்க அர்ச்சகர்
  • கருவறைக் காம அர்ச்சகர்
  • காமலீலை அர்ச்சகர்
  • காமக்கொடூரன்
  • ஆபாச ஐயர்

………………..என்று தேவநாதன் பலவாறு அழைக்க / விவரிக்க / குறிப்பிடப் பட்டான். ஆனால், வில் ஹியூம். பெரும்பாலான மௌனம் மற்றும் ஒன்றுமே நடக்காதது மாதிரியான நடிப்பு. 19 வயது வரையிலுள்ள இளம்-சிறுமிகளை புதுவிதமாக பாலியிலில் வன்முறைக்குட்படுத்தி, படங்கள் / குறும்படங்கள் எடுத்து, இணைதலங்களில் வெளியிட்டு பல பாலியல் வன்முறைக் கொடுமைகள் செய்தவன் – வில் ஹியூம், வில்லியம்ஸ், “வில்ஹெல்ம்ஸ் வேய்ஜ்டெவல்டு” என்றுதான் குறிப்பிடப் படுகின்றான். அவனது ஜாதி, இனம், மதம், நிறம் முதலியனவைக் குறிப்பிடப்படுவதில்லை. ஆனால் இங்கு கடைசியல் “ஐயர்” என்று இறங்கி வந்துவிட்டனர்! அப்படியென்றால், இதிலுள்ள விஷயம் என்ன?

மன ஆறுதல் / ஆலோசனைக் கூறுதல் / கவுன்சிலிங் முதலியன அர்ச்சகர்கள் செய்யவேண்டியதில்லை: ஊடகங்களின் மூலமாக, பெண்கள் வாக்குமூலங்கள் கொடுத்துள்ளனர் என்பதிலிருந்து அறிவதாவது [அவை உண்மை என்ற படசத்தில்], அவர்கள் தங்களது குறைகளை, மனத்தில் இருக்கும் கஷ்டங்களை, ஆசைகளை வெளிப்படுத்து அவற்றை எப்படி அடைய / பூர்த்திசெய்யவேண்டும் என்ற முறையில் அந்த தேவநாதனிடத்தில் கூறியுள்ளனர் எனத் தெரிகிறது. அதனால், அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு இத்தகைய அசிங்கத்தைச் செய்திருக்கிறான். அவனுடைய வேலை, பூஜை செய்வதே தவிர வந்தவர்களுக்கு மன ஆறுதல் கூறுவது, கவுன்சிலிங் செய்வது அல்ல. டாக்டர் மனைவி, பேராசிரியர் மனைவி, நர்ஸ், தொழில் அதிபர்களின் மனைவிகள் என தேவநாதனுடன் உல்லாச லீலையில் ஈடுபட்ட பெண்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது எனும்போது, அவர்கள் எல்லொரும் ஒன்றும் தெரியாத குழந்தைகளோ, அப்பாவிகளோ அல்லர். ஆகவே, எப்படி அவர்கள் தேவநாதனிடம் மாட்டினர் அல்லது தேவநாதன் அவர்களிடம் மாட்டிக் கொண்டான் என்றும் ஆராயவேண்டியதுள்ளது.

தமிழகத்தில் ஏன் கற்பு கேவலமாகியுள்ளது? இக்காலத்தில் மேனாட்டு மற்றும் உள்நாட்டுத் தாக்குதல்களினால் இந்திய கூட்டுக்குடும்பங்கள் சிதறுண்டு, உறவுமுறைகள் பாதிக்கப்பட்டு கேவலப்படுகின்றன. ஆகையால் கணவன்-மனைவி, தாய்-மகள், தந்தை-தனயன் என்பவரெல்லாம் ஒன்றாக சேர்ந்து சாப்பிடுவது, பேசுவது, சுக–துக்கங்களை அனுபவிப்பது, என்பதெல்லாம் கானல் நீராகப் போய்விட்டது. நிச்சயமாக நாத்திக, குறிப்பாக திராவிட நாத்திகம் இத்தகைய ஆண்-பெண் உறவுகளைக் கேவலப் படுத்தியுள்ளது. மேலும் அத்தகைய உறவுகளைக் கேவலப் படுத்தும் ஊடகங்கள் – குறிபாக சின்னத்திரைகள், பெரியத் திரைகள், அதில் ‘சிரிப்பு நடிகர்கள்” என்று வரும் கூட்டங்கள் பெண்களை மிகவும் கேவலாமாகச் சித்தரிக்கின்றனர். அதாவது “ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்தால் தள்ளிக் கொண்டு போய்விடலாம்” என்று அசிங்கப் படுத்துகிறார்கள்! ஆனால் அவர்களுக்குத் தான் கலைமாமணி, பத்மஸ்ரீ………… முதலிய பட்டங்கள் கொடுக்கப் படுகின்றன.

படித்த / பணக்கார / நாகரிகப் பெண்கள்: டாக்டர் மனைவி, பேராசிரியர் மனைவி, நர்ஸ், தொழில் அதிபர்களின் மனைவிகள் என தேவநாதனுடன் உல்லாச லீலையில் ஈடுபட்ட பெண்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. ஆகவே, இவர்கள் எல்லோரும் “ஒன்றும் தெரியாத பாப்பாக்கள்” இல்லை! அறிந்தோ-அறியாமலோ இந்த மாதிரி காரியங்களில் பெண்களின் அனுசரிப்பு, இடம் கொடுத்தல், அனுமதி, ஒத்துழைப்பு முதலியன இல்லாமல் நடக்காது. பெண்களுக்கு இயற்கையாகவே உள்ள உணர்வு தன்னைக் காத்துக் கொள்வதுதான்.  அக்கையால்தான் எந்த ஆணும் வரம்பு மீறி பார்க்கிறான் எனும்போது, ஒரு பெண் தூரத்திலும் தனது ஆடையைச் சரிசெய்து கொள்கிறான். பார்ப்பவனுக்குத் தான் தெரியும் அவளது அந்த “தூரத்து உணர்வின்” சக்தியை! அவள் தனது ஆடையை சரிசெய்யும் போதோ அல்லது அப்படி த்ருமி பார்க்கும்போதோ தெரியும் அந்த ஆணுக்கு தான் செய்த தவறை! செருப்பால் அடிப்பதை விட பலமானது அந்தப் பார்வை. ஏனெனில் அவன் தனது தாயை அவ்வாறு பார்க்கமாட்டான்! ஆனால் இன்று நடப்பது என்ன?

ஊடகங்கள் தூபம் போடுவது செக்ஸ், அசிங்கம், ஆபாசம்: இந்த ஊடகங்களுக்கு என்ன பொறுப்பு இருக்கிறது? கலைமாமணி வாங்குபவர் ஏன் பத்மஸ்ரீ வாங்கியவர் நிஜவாழ்க்கையிலும் திரை அல்லது மற்ற தொழில் வாழ்க்கையிலும் பேசுவது, நடப்பது / நடிப்பது முதலியன என்னத்தைக் காட்டுகிறது? செக்ஸ் / பாலியில் ரீதியிலான ஆபாசம், அசிங்கம், காமம், இச்சை, கொக்கோகம் முதலியனத் தானே ஜோக்குகள், ஜொல்லுகள் என கவிதையாக, பாடலாக வெளிவந்து கலைமாமணிகளைத் தட்டிக் கொண்டுச் செல்கின்றன. கால்களை எந்த அளவிற்கு தூக்கினால் அல்லது முலைகளை எந்த அளவிற்குக் காட்டினால், அந்த அளவிற்கு கலைமாமணி நெருகங்குகிறது எனத்தெரிகிறதே அப்பட்டமாக! தமிழச்சிகள் இவர்களை துடைப்பக்கட்டை வைத்து சாத்தவேண்டுமோ? இல்லையே செய்வதில்லையே? முதல்வர் முன்னேயே முலை-தொடைகள் காட்டும் போது சாணத்தை வீசி சுத்தப்படுத்தியிருக்கவேண்டாமோ? “ஆபாச ஐயர் தேவநாதனை எங்கு பார்த்தாலும் செருப்பால் அடிப்போம்” என்ற வீரமகளிர் மற்றும்: மகளிர் அமைப்பினர் ஆவேசம் கொள்ளவில்லையே? எங்கேயிருந்தனர் அந்த வீரமங்கையினர்? புறநானூறு காலத்தில் கும்பகர்ணன் மாதிரி தூங்கிவிட்டு, இப்பொழுதுதான் அதுவும் காஞ்சிபுரத்தில் முழித்துக் கொண்டுவிட்டனாரா?

எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்று அலையும்போது, துடிக்கும்போது இயந்திர வாழ்க்கையில் சிக்கிக் கொள்கிறான். ஆகையால் இல்லத்தில் அனுபவிக்க வேண்டியவற்றை மற்றவரிடம் கிடைக்கும்போதோ அல்லது அத்தகைய வாய்ப்புகள், சூழ்நிலைகால் ஏற்பதும்போது, அறிந்தோ அறியாமலோ அவற்றை ஏற்றுக் கொள்கிறான். இது ஒரு காபி/டீ, மத்திய உணவு, பீடி/சிகெரெட் என்று இருக்கலாம், சினிமாவிற்கு போவது, மற்ற நிகழ்ச்சிகளுக்குப் போவது என்றும், “டிராப்” செய்வது / “லிஃப்ட்” கொடுப்பது என்றும் இருக்கலாம். இன்றைய நிலையில், பெண்கள் தினமும் தமது கணவன்மார்களுடன் தினமும் அவ்வளவு நெருக்கமாக நின்றுகொண்டோ அல்லது உட்காரவோ மாட்டார்கள். ஆனால், பஸ்களிலோ, சேர் ஆட்டோக்களிலோ அத்தகைய சந்தர்ப்பங்களை விலக்கும், மறுக்கும் பெண்கள் குறைவாகவே உள்ளனர். அத்தகைய பெரும்பான்மையான அனுசரித்துப் போகும் பெண்களாஅல் இந்தியா சீரழிகிறது. அதே நேரத்தில் அந்த குறைந்தபட்ச பெண்களால்தான் இந்த இந்தியா வாழ்கிறது.

வேதபிரகாஷ்

20-12-2009 ©


[1] சனிக்கிழமை, நவம்பர் 28, 2009, 16:56[IST]

 

http://thatstamil.oneindia.in/news/2009/11/28/devanathan-s-bank-account-freezed.html

[2] பதிவு செய்த நாள் 11/29/2009 1:15:43 AM,  http://www.dinakaran.com/chennaidetail.aspx?id=1274

[3] இத்தகைய துப்பறியும் தனத்தை வி ஹியூம் விஷயத்தில் கடைபிடித்ததாகத் தெரியவில்லை. ஏனெனில் அவன் விஷயத்தில் பல அரசு-துறைகள், அதிகாரிகள் சம்பந்தப் பட்டுள்ளனர்.

[4] வெள்ளிக்கிழமை, 27 நவம்பர் 2009, 01:00.12 PM GMT +05:30.

http://www.newindianews.com/view.php?224Yld0b3Kc0Qd4d3AMM3a0cKmV24de1D4I203eoOA2e2WC4mbcc2JOy4e

[5] http://www.newindianews.com/view.php?224Yld0b34c0Qd4d3AMM3a0cKmV34de1D4I203eoOA2e2gC4mbcc3JOS4e

[6] http://www.newindianews.com/view.php?224Yld0b34c0Qd4d3AMM3a0cKmV34de1D4I203eoOA2e2gC4mbcc3JOS4e

[7] http://thatstamil.oneindia.in/news/2009/11/29/devanathan-gives-the-list-women.html

[8] http://www.newindianews.com/view.php?224Yld0b34c0Qd4d3AMM3a0cKmV34de1D4I203eoOA2e2gC4mbcc3JOS4e

[9] தமிழ் இணைத் தளங்களைப் பார்க்கவும்.

[10] மருத்துவர் பிரகாஷ் மிகவும் தொழிற்நுட்பத்துடன், தனது மருத்துவ அறிவையும் பயன்படுத்தி, அரசியல் இணைப்புகளின், நடிகைகளின் துணைகளுடன் இந்த பாலியல் திரைப்படங்களை எடுத்ததில் முதன்மையானவர் எனலாம். இன்று அவர் சிறையில் இருக்கிறார்.

[11] செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 1, 2009, 14:13[IST]

http://thatstamil.oneindia.in/news/2009/12/01/more-filthy-stories-devanathan-emerge.html

[12] December 2, 2009; http://www.alaikal.com/news/?p=26487

[13] India News T | Thurai | December 2, 2009 at 11:21 am ; http://www.voicetamil.com/?p=13059

[14] எண்ணிக்கையை கவனமாக பார்க்கவும்.

[15] அப்படியென்றால் ஏன் செய்திகள் மறைக்கப் படுகின்றன? இணைதளத்தில் புகைப்படங்கள் தாராளமாக வெளிவருகின்றன. சிடிக்கள் விற்க்கப்படுவதாக செய்திகள் வருகின்றன. பிறகு ஏன் உண்மைகள் மறைக்கப் படவேண்டும்?

தேவநாதனுக்கு விஐபிக்களுடன் தொடர்பு-அரசு வக்கீல்

திசெம்பர் 16, 2009

ஏற்கெனவே இப்பிரச்சினையை அலசி, ” வில் ஹியூம் புவனேஸ்வரி தேவநாதன்“,  என்ற தலைப்பில் விவரங்கள் வெளியிடப்பட்டன.

புகைப்படங்கள், வீடியோ கவனமாக பரிசோதிக்கப் பாட்டு அத்தகையவை செல்ஃபோனால் குறிப்பிட்ட இடத்தில் வைத்து எடுக்கமுடியாது என்பது எடுத்துக் காட்டப்பட்டது.

ஏனெனில் கோணங்கள் மாறுகின்றன. கேமரா நகர்கின்றது.

அதாவது மூன்றாவது நபர் அத்தகைய காட்சிகளை எடுக்கிறார்.

மேலும் ஒரு படத்தில் காணப்படும் பெண்மணி சிரித்துக் கொண்டு இருக்கிறார்.

அப்படியென்றால் அவர் தெரிந்துதான் அத்தகைய செயலில் ஈடுபடுகிறார்.

உண்மையில் தேவநாதன் தானே அத்தகைய வேலையில் ஈடுபட ஆரம்பித்தால், அப்பொழுதே செருப்பால் அடித்திருக்கலாம், உள்ளேயோ அல்லது வெளியே வந்து கூச்சலிட்டிருக்கலாம்.

இந்நிலையில், இத்தகைய செய்தி வருகிறது:

தேவநாதனுக்கு விஐபிக்களுடன் தொடர்பு-அரசு வக்கீல்

செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 15, 2009, 14:25[IST]

http://thatstamil.oneindia.in/news/2009/12/15/devanathan-has-vip-links-pp.html

நாத்திகர்கள் அரசாளும்போது, என்னவேண்டுமானாலும் நடக்கலாம். ஆரம்பித்திலிருந்தே, இந்த விஷயம் ஏதோ ஒரு குறிப்பிட்ட-ஏற்கெனவே தீர்மானம் செய்தது மாதிரிதான் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. இன்றைய நிலையில் கோவில் சொத்துக்கள் விற்க்கப்படுகின்றன. இதை மறைக்கும் ரீதியிலும் இத்தகைய கவன-விலக்கு நிகழ்ச்சிகளை அரசாங்கம் அரங்கேற்றினால்-நிறைவேற்றினால் யாரும் ஒன்றும் செய்யமுடியாது.

பாதுகாப்பு இல்லை! இதுகுறித்து அரசு வழக்கறிஞர் பாஸ்கர் கூறுகையில், நேற்று அர்ச்சகர் தேவநாதனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதாக இருந்தது. ஆனால் போதிய போலீஸ் பாதுகாப்பு  இல்லாததால் `வாரண்ட்’ மூலம் காவல் நீடிப்பு செய்யப்பட்டுள்ளது. தேவநாதன் மீது கற்பழிப்பு வழக்கு போட்டுள்ளதால் அவர் ஜாமீன் மனு விசாரணை தகுதி இழந்து விட்டது. இதுவரை தேவநாதன் தரப்பு வக்கீல்கள் ஜாமீன் கேட்கவில்லை. சிவகாஞ்சி போலீஸ் விசாரணையில் இருந்த வழக்கு தற்போது மாவட்ட குற்றவியல் போலீசார் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

பெரிய ஜிஹாதி / இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பு கொடுப்பது போல தேவநாதனுக்கும் பாதுகாப்பு கொடுக்கப்படவேண்டும் என்றால், அப்படி, பாதுகாக்கப் படவேண்டிய அவசியம் என்ன? யார் அப்படி தேவநாதனை மறைப்பது? தேவநாதனால் யார் வெளி உலகத்திற்குக் காட்டப் படப்போகின்றனர்?

வியாபார நோக்கம்: விசாரணையில் பெரும் புள்ளிகள் சிலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சி.டி. ஆதாரத்தை வைத்து பார்க்கும்போது அர்ச்சகர் தேவநாதனுடன் தொடர்புடைய குற்றவாளிகள் வியாபார நோக்கத்துடன் செயல்பட்டிருக்கலாம் என தோன்றுகிறது. போலீசாரின் விசாரணையில் பல உண்மைகள் வெளிவரும் என்றார். வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தேவநாதனின் காவலை வாரண்ட் மூலம் காஞ்சிபுரம் நீதிபதி வருகிற 23ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.

கடவுளையே விற்க்கும் நிலையில் அத்தகையவர் எந்த வியாபாரத்திலும் ஈடுபடலாம். முன்னமே வில் ஹியூம் மற்றும் தேவநாதன் பிரச்சினைகளில் உள்ள ஒற்றுமைகள் எடுத்துக் காட்டப் பட்டன. இங்கு போலீஸாருக்கே சிடிகள்தாம் விவரங்கள் கொடுத்ததுபோல செய்திகள் வெளியாகின. எப்படி சொல்லிவைத்தால் http://www.rapidshare.comல் வில் ஹியூம் படங்களை ஏற்றினானோ, அதேமாதிரி தேவநாதன் படங்கள் இணைதளத்தில் ஏற்றப்பட்டன. வில் ஹியூம் விஷயத்தில் இன்டர்போல் போலீஸார் அதற்கு தகவல் கொடுத்து, உஷார் படுத்தி சென்னை போலீஸார் அவனை கைது செய்தனர். ஆனால் இவ்விஷயத்தில் அதே இணைதளத்தில் ஆபாச வீடியோக்கள் ஏற்றப்படுகின்றன, விற்கப்படுகின்றன, சில இணைதளங்கள் அத்தகைய வீடியோ படங்களை புகைப் படங்களாக வெளியிடுகின்றன. ஆனால் அத்தகைய சட்ட மீறல்களுக்கு யாரும் கைது செய்யப்படுவதாகவோ, அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகவோ தெரியவில்லை.


சிறையில் காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதன் கண்ணீர்

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=23441

காஞ்சீபுரம் பஸ்நிலையம் அருகே உள்ள மச்சேஸ்வரர் கோவிலின் கருவறையில் பல பெண்களுடன் செக்சில் ஈடுபட்டதாக அர்ச்சகர், தேவநாதன் மீது சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து தலைமறைவான அர்ச்சகர் தேவநாதன் காஞ்சீபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதுவரை சிவகாஞ்சி போலீசார் 5 நாள் காவலில் எடுத்து தேவநாதனை விசாரணை செய்தனர். விசாரணையில் போலீசார் அதிர்ந்து போகும் அளவுக்கு திடுக்கம் தகவல்கள் வெளியாகின.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று காஞ்சீபுரம் நீதிமன்றத்தில் தேவநாதனை ஆஜர் செய்ய போலீசார் அழைத்து வந்தனர்.

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வந்த போது தனியார் தொலைக் காட்சி கேமராமேன்கள், போட்டோகிராபர்கள் அங்கு குவிந்தனர். தேவநாதனை படம் எடுக்க முயன்றனர். ஆனால் காவல்துறையினர் தேவநாதனை முகத்தை கையால் மூடி அரவணைத்து வேகமாக அழைத்து சென்றனர். அப்போது புகைப்படக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது விஷ்ணு காஞ்சி இன்ஸ்பெக்டர் பாலு, தேவநாதனை புகைப்படம் எடுக்க அனுமதிக்க மாட்டோம். தேவைப்பட்டால் வேலூர் சிறைச்சாலைக்குள் சென்று எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறி ஆவேசப்பட்டார். பின்னர் நீதிபதி காயத்திரி, தேவநாதனுக்கு 15 நாள் காவல் நீடிப்பு செய்து உத்தரவிட்டார்.

அர்ச்சகர் தேவநாதன் தற்போது வேலூர் மத்திய சிறையில் உள்ளார். அவருக்கு வந்த மிரட்டல் தொடர்பாக வேலூரில் தனி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நான் கோவில் கருவறையில் பகவான் முன்னிலையில் செய்த தவறுக்கு தற்போது தண்டனை அனுபவிக்கிறேன். தனிமையில் வாடுகிறேன். பகவானை என் சக நண்பராக கருதியே இதுபோல செய்தேன். ஆனால் பகவான் என்னை தண்டித்து விட்டார் என்று சக கைதியிடம் வேலூர் சிறையில் கண்ணீருடன் கூறியுள்ளார்.

ம்ம்ம்………………………………..