Archive for the ‘செக்ஸ்’ Category

18-பெண்களைக் கற்பழித்த சாமுவேலுக்கு ஒத்துழைத்த பெற்றோர், உற்றோர், மற்றோர் – பிறகு வருந்தியதால், இதெல்லாம் திரும்பப் பெறும் விவகாரங்களா என்ன? (தொடரும் செக்ஸ் குற்றங்கள்-2)

ஒக்ரோபர் 12, 2016

18-பெண்களைக் கற்பழித்த சாமுவேலுக்கு ஒத்துழைத்த பெற்றோர், உற்றோர், மற்றோர் – பிறகு வருந்தியதால், இதெல்லாம் திரும்பப் பெறும் விவகாரங்களா என்ன? (தொடரும் செக்ஸ் குற்றங்கள்-2)

v-samuel-with-a-girl-3

பிளேட் நாடகம் ஆடி அனைத்தையும் சாதித்தான்[1]: சாமுவேல் காதல் வலையில் சிக்காத இளம் பெண்களிடம் பிளேடால் கையை கிழித்து தற்கொலை செய்து கொள்வது போல் நடித்து அவர்களை தன் வலையில் சிக்கவைத்ததும் தற்போது தெரியவந்துள்ளது. பல முறை பல காரணங்களுக்காக சாமுவேலை பெற்றோர் கண்டித்தபோது அவர்களிடலும் இதே பாணியை அவன் கடைபிடித்துள்ளான். அவனது பெற்றோருக்கு திருமணம் நடந்து 10 ஆண்டுகள் குழந்தை இல்லையாம். பல கோயில்கள் ஏறி இறங்கி பிறந்த குழந்தை என்பதால், அவன் செய்த தவறுகளை பெற்றோர் கண்டுகொள்ளாமல் இருந்ததும் தற்போது தெரியவந்துள்ளது[2]. திருமணம் ஆகி, பத்தாண்டுகள் குழந்தை இல்லை, பிறகு பிறந்தது என்றால், அவனை ஒழுங்காக வளர்த்திருக்க வேண்டும். ஆனால், தந்தையும், தாயாரும் இப்படி பியூட்டி பார்லர்-கார் விற்பனை என்று வைத்துக் கொண்டு, அவனுக்கு உடந்தையாக இருந்தது, 18-பெண்களின் வாழ்க்கையை நாசமாக்கியுள்ளது. இனி அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் நிலை எப்படி இருக்குமோ?

v-samuel-with-a-girl-4சாமுவேலும், அவனது பெற்றோரும் ஓடி மறைந்தது: 25-09-2016 அன்று புகார் கொடுத்ததுமே, சாமுவேல் பெங்களூருக்கு ஓடிவிட்டான். பிறகு, அவனது பெற்றோரும் வீட்டைப் பூட்டி விட்டு மறைந்து விட்டனர். அவர் வசித்த மயிலாப்பூர் வீட்டில் போய் பெண் போலீசார் தேடியபோது, அவரது வீடு பூட்டிக்கிடந்தது[3]. விசாரித்த போது, போலீசார் தன்னை தேடுவதை அறிந்ததும், தனது நண்பர்களோடு பெங்களூருவுக்கு தப்பி ஓடிவிட்டார் என்று தெரியவந்தது[4]. அவரது பெற்றோரும் வீட்டின் கதவை பூட்டிவிட்டு தலைமறைவு ஆகிவிட்டனர்[5]. ஆக பெற்றோரும், ஒத்துழைக்கின்றனர் என்று தெரிகிறது. இதனால், போலீஸார் அவர்களை வலைவீசி தேடி வந்தனர்[6]. “இதற்கிடையே சாமுவேல் விஷயத்தில் உயர் அதிகாரி ஒருவர் நெருக்கடி கொடுத்ததால் மகளிர் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காமல் அவரை விடுவித்து விட்டனர். இதையடுத்து சாமுவேல் தலைமறைவாகி விட்டார்”, என்று “தமிழ் முரசு” எடுத்துக் காட்டியது. ஆக, அந்த உயர் அதிகாரியே, ஒருவேளை அப்படி ஐடியா கொடுத்து ஓடச்சொன்னார் போலும்.

v-samuel-with-a-girl-5சாமுவேல் மீது பல வழக்குகள் இருந்தன[7]: கடந்த ஒரு மாதத்திற்கு முன் ஆகஸ்ட்.2016 மயிலாப்பூரில் உள்ள கல்லூரி மாணவியை பின் தொடர்ந்து தொல்லை கொடுத்ததால் அந்த கல்லூரி மாணவியின் பெற்றோர் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் சாமுவேல் மீது புகார் அளித்ததும் விசாரணையில் தெரியவந்தது.  மேலும், சாமுவேல் இரவு நேரத்தில் நண்பர்களுடன் ரேஸ் பைக் வீரராகவும் திகழ்ந்துள்ளார். கடந்த ஆண்டு கவர்னர் கான்வாய் செல்லும் போது அதிவேகமாக பைக் ஓட்டி கைதாகியிருக்கிறார். பேஸ்புக் மூலம் மற்றும் பள்ளியில் இருந்து கல்லூரிக்கு செல்லும் வசதிப்படைத்த மாணவிகளையே குறிவைத்து காதலிப்பது போல் நடித்து உல்லாசமாக இருந்து படம் எடுத்து மிரட்டி பணம் பறிப்பு செயலில் ஈடுபட்டதும், மிரட்டி பறிக்கப்பட்ட பணத்தை வைத்து கொண்டு நண்பர்களுடன் வெளிமாநிலங்களுக்கு சுற்றுலா சென்று வந்ததும் தெரியவந்தது. பெண்ணுடன் ஜல்ஸா முடிந்தவுடன், “வழக்கு எண் 18/9” படத்தில் வரும் காட்சியை போட்டுக் காட்டி மிரட்டி பணம் கேட்பது வாடிக்கையாக இருந்தது[8]. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். சாமுவேலுடன் அவரது நெருங்கிய நண்பர்கள் இரண்டு பேர் மோசடிகளில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இரண்டு பேரிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்[9]. இத்தகைய தொடர்புள்ள குற்றங்களை, ஒரு குழுவாக செய்வது, திட்டமிட்டு செய்ததே ஆகும். போலீஸ் அதிகாரி மற்ற தொடர்புகள் இருந்ததால், தப்பித்துக் கொள்ளலாம் என்ற மனப்பாங்கும், குற்றங்களைத் தொடர்ந்து செய்ய ஊக்குவி்த்துள்ளது.

v-samuel-with-a-girl-627-09-2016 செவ்வாய்கிழமை சாமுவேல் கைது[10]: சாமுவேலின் நெருங்கிய உறவினர் ஒருவர் தமிழக போலீஸ் துறையில் உயர் அதிகாரியாக பணியாற்றுகிறார்[11]. அவர் சாமுவேலை காப்பாற்றுவதற்கு முயற்சித்து உள்ளார்[12]. சாமுவேலை விசாரணைக்கு ஆஜராக சொல்லுங்கள், விசாரணை நடத்திவிட்டு அவரை விட்டுவிடுகிறோம் என்று சிந்தாதிரிப்பேட்டை பெண் போலீசார் உறுதி அளித்துள்ளனர். இதை நம்பிய போலீஸ் அதிகாரி 27-09-2016 அன்று இரவு சாமுவேலை பெங்களூரிலிருந்து சென்னைக்கு வரவழைத்து உள்ளார். “புகார் கொடுத்த பெண் அழைத்ததால், மைலாப்பூரில் ஒரு கோவிலுக்கு சாமுவேல் வந்தபோது பிடிபட்டான்னென்று இந்தியன் எக்ஸ்பிரஸ் எடுத்துக்க் காட்டியது[13]. சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சாமுவேல் விசாரணைக்கு ஆஜரானார். போலீசார் சாமுவேலிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் 10 பெண்களோடு உல்லாசத்தில் ஈடுபட்டு, அவர்களின் ஆபாச படங்களை ‘பேஸ்-புக்’கில் வெளியிட்டிருப்பது தெரியவந்தது. இதுதொடர்பான ஆதாரங்களையும் போலீசார் கைப்பற்றினர். வலுவான ஆதாரங்கள் இருந்ததால் சாமுவேல் நேற்று கைது செய்யப்பட்டார்.

v-samuel-with-a-girl-7சாமுவேலுக்கு உதவிய போலீஸ் அதிகாரி: ஊடகங்கள், “சாமுவேலின் நெருங்கிய உறவினர் ஒருவர் தமிழக போலீஸ் துறையில் உயர் அதிகாரியாக பணியாற்றுகிறார்[14]. அவர் சாமுவேலை காப்பாற்றுவதற்கு முயற்சித்து உள்ளார்[15]. சாமுவேலை விசாரணைக்கு ஆஜராக சொல்லுங்கள், விசாரணை நடத்திவிட்டு அவரை விட்டுவிடுகிறோம் என்று சிந்தாதிரிப்பேட்டை பெண் போலீசார் உறுதி அளித்துள்ளனர்”, என்று குறிப்பிட்டாலும், அவர் யார் என்று தெரியவில்லை. 18-பெண்களை கற்பழித்த, வாழ்க்கையினை சீரழித்த அவனை எப்படி காப்பாற்ற நினைத்தார் என்று தெரியவில்லை. சட்டத்தை மீறியவனுக்கு துணை போவது, எந்த விதத்தில் நியாமானது என்று தெரியவில்லை. ஒருவேளை தனது பெண்ணை ஒருவன் அப்படி செய்திருந்தால், விட்டு வைப்பாரா? பிறகு, இக்காலத்தில், இத்தகைய பாரபட்ச மன்ப்பாங்கு எப்படி உருவாகிறது என்று தெரியவில்லை.

© வேதபிரகாஷ்

12-10-2016

v-samuel-with-a-girl-8

[1] தினகரன், பெண்களை காதல் வலையில் வீழ்த்தியது எப்படி?, Date: 2016-09-29@ 00:24:28.

[2] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=248899

[3] தமிழ்.ஒன்.இந்தியா, 10 பெண்களை ஏமாற்றி காதலித்த காதல் மன்னன்: காதலிக்க மறுத்தால் ஆபாச புகைப்படம் பதிவு, By: Mayura Akilan, Published: Tuesday, September 27, 2016, 13:21 [IST].

[4] http://tamil.oneindia.com/news/tamilnadu/police-search-love-fraud-263779.html

[5] தமிழ்.வெப்துனியா, காதல், உல்லாசம், ஆபாச புகைப்படம் வெளியீடு: காதல் மன்னனுக்கு வலை வீச்சு!, Last Modified: செவ்வாய், 27 செப்டம்பர் 2016 (13:22 IST).

[6] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/love-airily-obscene-photo-released-police-searching-the-cheating-man-116092700008_1.html

[7] தமிழ்.முரசு, பேஸ்புக் மூலம் பழகி இளம்பெண்களை படம் எடுத்து மிரட்டிய இன்ஜினியர் கைது, 9/27/2016, 3:25:14 PM

[8] Once the relationship is established, he would pull off the scene from Vazhakku Enn 18/9 in which the unsuspecting girl believes that her boyfriend was concerned about her getting wet in the beach and that was the reason he had booked a room for her to change her dress.

http://www.deccanchronicle.com/nation/crime/280916/chennai-facebook-lover-held-for-cheating.html

[9] http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=98448

[10] An engineering student of a private college was arrested for sharing nude pictures of a woman with his friends through his mobile phone on Tuesday (27-09-2016). A senior police officer said the woman, who was working as an accountant in a petrol bunk, had stayed with her friend V. Samuel at a hotel in ECR last year 2015. During their stay, the accused Samuel had taken pictures of her changing clothes, without her knowledge. He had shared these pictures with his friends through his mobile phone. When she came to know about it, the 21-year-old woman filed a complaint at the Egmore All Women Police Station. The police arrested the accused when he came to meet her in Mylapore. The accused was produced before a Judicial magistrate and sent to Puzhal prison.

http://www.thehindu.com/news/cities/chennai/engineering-student-arrested-for-sharing-nude-photos-of-woman/article9155957.ece

[11] தினத்தந்தி, 10 பெண்களை ஏமாற்றிய காதல் மன்னன் கைது பேஸ்புக்கில் பெண்களின் ஆபாச படங்களை வெளியீட்டு மிரட்டல், பதிவு செய்த நாள்: செவ்வாய், செப்டம்பர் 27, 2016, 4:35 PM IST; மாற்றம் செய்த நாள்: செவ்வாய், செப்டம்பர் 27,2016, 4:35 PM IST.

[12] http://www.dailythanthi.com/News/India/2016/09/27163524/10-women-for-cheating-King-of-romance-arrested.vpf

[13] On the advice of the police officials, she had asked Samuel to meet her at a temple in Mylapore, where a trap was laid and he was caught red handed.

http://www.newindianexpress.com/cities/chennai/2016/sep/28/Chennai-engineering-student-held-for-circulating-obscene-pix-of-women-1523606.html

[14] தினத்தந்தி, 10 பெண்களை ஏமாற்றிய காதல் மன்னன் கைது பேஸ்புக்கில் பெண்களின் ஆபாச படங்களை வெளியீட்டு மிரட்டல், பதிவு செய்த நாள்: செவ்வாய், செப்டம்பர் 27, 2016, 4:35 PM IST; மாற்றம் செய்த நாள்: செவ்வாய், செப்டம்பர் 27,2016, 4:35 PM IST.

[15] http://www.dailythanthi.com/News/India/2016/09/27163524/10-women-for-cheating-King-of-romance-arrested.vpf

18-பெண்களின் வாழ்க்கையை சீரழித்த சாமுவேல் – ஆபாசப்படங்கள் எடுத்து சமூக ஊடகங்களின் மூலம் பரப்பி, சமூகத் தீவிரவாதியான தறுதலை பிள்ளை (தொடரும் செக்ஸ் குற்றங்கள்-1)!

ஒக்ரோபர் 12, 2016

18-பெண்களின் வாழ்க்கையை சீரழித்த சாமுவேல் – ஆபாசப்படங்கள் எடுத்து சமூக ஊடகங்களின் மூலம் பரப்பி, சமூகத் தீவிரவாதியான தறுதலை பிள்ளை (தொடரும் செக்ஸ் குற்றங்கள்-1)!

karppukkarasi-kannagi

இந்தியாவில், தமிழகத்தில் பெண்களின் நிலை: அடுத்தடுத்து தமிழகத்தில், இவ்வாறான நிகழ்வுகள் நடப்பது மிக்க கவலையை அளிக்கிறது. பெண்களைப் பெற்றவர்கள் நிச்சயமாக மனத்தளவில் பயந்து கொண்டிருப்பர். சுவாதி கொலைக்குப் பிறகும், இத்தகைய செயல்கள் தொடர்வது, அதிகமான சமூக சீரழிவைத் தான் காட்டுகிறது. பொதுவாக கற்பைப் போற்றும் பாரதம், அதிலும் குறிப்பாக “கற்புக்கரசி கண்ணகி” என்று போற்றப்படும் தமிழகத்தில், இவ்வாறு பெண்களின் கற்பை சூரையாடி வருவது, இளம்பெண்கள் திருமணத்திற்கு முன்பாகவே சோரம் போவது, ஆண்களின் வலையில் விழுந்து சீரழிவது முதலியன துக்கத்தை அளிப்பதாக இருக்கிறது.

samuel-facebook-love-cheat-sex-pervert-photo18-பெண்களை பாலியல் ரீதியில் ஏமாற்றி புகைப்படம் பிடித்த சாமுவேல்: சென்னையில் கல்லூரி மாணவி உள்பட 10 இளம்பெண்களை காதலித்து நெருக்கமாகப் பழகி அவர்களின் ஆபாச படங்களை ‘பேஸ்-புக்’கில் வெளியிட்ட சாமுவேல் என்ற காதல் மன்னனை போலீசார் கைது செய்தனர்[1]. சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்தவர் ராஜஸ்ரீ (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது தாயார் ராஜேஸ்வரி சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் 25-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது: “எனது மகள் பட்டப்படிப்பு படித்து உள்ளார். அவரை மயிலாப்பூரை சேர்ந்த சாமுவேல் என்ற இளைஞர் ஒரு தலையாக காதலித்து உள்ளார். காதலை சொல்லி அடிக்கடி பின்தொடர்ந்து வந்துள்ளார். எனது மகள் அவரது காதலை ஏற்கவில்லை. திடீரென்று அந்த வாலிபர் தனதுபேஸ்புக்கில் எனது மகளின் புகைப்படத்தை கிராபிக்ஸ் மூலம் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டுள்ளார். இதுபோல ஏராளமான பெண்களை காதலித்து நெருக்கமாகப் பழகி அந்த இளம்பெண்களின் ஆபாச புகைப்படங்களையும் தனதுபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். அவர்மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்”, இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த புகார் மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்க கமிஷனர் எஸ்.ஜார்ஜ் உத்தரவிட்டார்.

v-samuel-with-a-girlசாமுவேல் ஆடிய காதல் நாடகம்வலையில் விழுந்த பெண்[2]: பிபிஏ பட்டதாரியான நான் சில நாட்களாக (2015லிருந்து) ECR சாலையில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் கணக்காளராக வேலை பார்த்து வந்தேன்[3]. அப்போழுது சாமுவேல் என்னை பின் தொடர்ந்து, ‘உன்னை காதலிக்கிறேன்’ என்று ஒரு மாதமாக தொந்தரவு செய்தான். நான் முடியாது என்று மறுத்து விட்டேன். அதற்கு சாமுவேல் பிளேடால் கையை கிழித்து கொண்டு நீ இல்லையென்றால் இறந்து விடுவேன் என்று பயமுறுத்தினான். அதை நான் கண்டு கொள்ளவில்லை. அதன்பிறகு மறுபடியும் சில நாட்கள் கழித்து இன்னொரு கையை கிழித்து கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான் என்று அவனுடைய நண்பர்கள் எனக்கு தெரிவித்தார்கள். மறுபடியும் தொடர்பு கொண்ட நண்பர்கள், ‘நீ இல்லை என்றால் இறந்து விடுவான்’ என்று சொன்னார்கள். அவன் உன்னை கல்யாணம் செய்ய ஆசை படுகிறான் என்று அவன் நண்பர்கள் என்னிடம் கூறினார்கள். அதன்பிறகு அவனுடைய விருப்பத்தை நான் ஏற்று கொண்டேன். பல மாதங்களாக பழகினேன்[4].

v-samuel-with-a-girl-2பிரிஸ்கிலாஎன்ற ஒரு பெண் எச்சரித்தது[5]: அப்பொழுது அவனால் பாதிக்கப்பட்ட “பிரிஸ்கிலா” என்ற ஒரு பெண் என்னுடைய தொலைபேசியில் தொடர்பு கொண்டு சாமுவேலைப் பற்றி உனக்கு தெரியுமா அவன் ஏற்கனவே என்னையும் எனக்கு முன்னால் பல பெண்களையும் காதலித்து ஏமாற்றி இருக்கிறான் என்றார். அதை கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். பின்னர் மறுநாள் சாமுவேலை பார்க்கும்போது அவனுடைய மொபைல் போனை வாங்கி பார்த்தேன். அப்போது அந்த செல்போனில் பல பெண்களுடனும், மாணவிகளுடனும் கிளு கிளுப்பாக இருக்கும் போட்டோக்கள் ஏராளமாக இருந்தது. இதனால் அந்தப் பெண் சொன்னது உண்மை என்று தெரிந்து கொண்டு, பிறகு சாமுவேலிடம் இருந்து விலக ஆரம்பித்தேன். அவனிடம் இந்த பெண்கள் யார் என்று கேட்டேன். அதற்கு இது எல்லாம் மார்பிங் செய்த போட்டோக்கள் என்று தெரிவித்தான். அதை ஏன் வைத்திருக்கிறாய் என்று கேட்டதற்கு சும்மா என்றான். இதனால் அவனது தவறான புத்தியை தெரிந்து கொண்ட நான், ஒதுங்க ஆரம்பித்தேன். சாமுவேலும் என்னிடம் தொடர்பு கொள்ளவில்லை[6].

samuel-facebook-love-cheat-sex-pervert-demanding-money-dinakaran-cuttingரூ 10 லட்சம் கேட்டு மிரட்டியது[7]: திடீரென கடந்த வாரத்தில் (செப்டம்பர் 2016) வேறு ஒரு தொலைபேசியிலிருந்து என்னை தொடர்பு கொண்டு என்னிடம் பேச வேண்டும் என்று அழைத்தான். அதற்கு நான் மறுத்ததால் அவனுடன் நான் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை வாட்ஸ்-அப் மற்றும் பேஸ்புக்கில் அனுப்பிவிடுவேன் என்று மிரட்டி என்னிடம் ரூ.10 லட்சம் பணம் கேட்டான். நீ தரவில்லையென்றால் சுவாதி கொல்லப்பட்டது போல் உனனை நான் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினான். அதன்பிறகு உடனே என் தொலைபேசியை கட் செய்தேன். பின்னர் பார்த்தால் சாமுவேல் உண்மையாகவே என்னிடம் நெருங்கி பழகின புகைப்படத்தையும் பல பெண்களிடம் பழகிய புகைப்படத்தையும் வாட்ஸ்-அப்பில் பரவ விட்டான். இதைப்பார்த்த என் குடும்பத்தாரும் என் அம்மாவும் என்னை திட்டி அடித்தார்கள். இதன் காரணமாக என் முழு குடும்பமும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். சாமுவேலை விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்”, இவ்வாறு புகாரில் தெரிவித்துள்ளார்[8].

beauty-parlour-nexusபியூட்டி பார்லர் நடத்திய சாமுவேலின் தாய்பார்லருக்கு வந்த பெண்களையும் மாட்ட வைத்த சாமுவேல்: கூடுதல் கமிஷனர் சங்கர், இணை கமிஷனர் மனோகரன், துணை கமிஷனர் பெருமாள், உதவி கமிஷனர் குப்புசாமி ஆகியோர் மேற்பார்வையில் சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.  புகார் கூறப்பட்ட வி. சாமுவேல் [V. Samuel (21)] மயிலாப்பூர் சிவசாமி தெருவை சேர்ந்தவர். மதுரவயலில் ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்தவர் [a final year engineering student at a private university in Maduravoyal][9]. ஆனால் சில பாடங்களில் ‘பெயில்’ ஆகி உள்ளார். இவரது தாயார் சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். ஓய்வுக்குப் பிறகு, நெல்சன் மாணிக்கம் ரோடில், பியூட்டி பார்லர் வைத்து நடத்துகிறார். சாமுவேலிடம் மாட்டிய 18 பெண்களில் இந்த பார்லருக்கு வரும் கல்யாணம் ஆன பெண்களும் அடக்கம்[10]. அதாவது சாமுவேலின் ஆபாசவேலைகள் தாயுக்குத் தெரிந்தே உள்ளது[11]. தந்தை ஓய்வு பெற்ற எல்.ஐ.சி. அதிகாரி. தற்போது அவர் கார் வாங்கி விற்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். சாமுவேல் பெற்றோருக்கு ஒரே மகன் என்பதால் செல்லமாக வளர்க்கப்பட்டு உள்ளார். அவர் கேட்டதையெல்லாம் பெற்றோர் மறுக்காமல் செய்து கொடுத்து உள்ளனர்.

samuel-facebook-love-cheat-sex-pervert-dh-2சாமுவேலைச் சுற்றி இளம்பெண்களை ஏமாற்றி வந்த கூட்டம்: தந்தை கார் விற்பனை நிறுவனம் நடத்தி வருவதால் பல சொகுசு கார்களில், சாமுவேல் வலம் வந்து உள்ளார். தியேட்டர் அதிபர் ஒருவரது மகன் உள்பட இளைஞர் பட்டாளமே சாமுவேலுக்கு நண்பர்களாக உள்ளனர். செல்வம், அந்தஸ்து இருந்ததால் சாமுவேலின் வாழ்க்கை தப்பான பாதைக்கு சென்றுள்ளது. பேஸ்-புக் மூலம் அழகான இளம்பெண்களோடு தொடர்புகொண்டு, வலை விரித்துள்ளார். முதலில் காதலிப்பார். பின்னர் அந்த பெண்களை திருமணம் செய்வதாக ஏமாற்றி, நம்பிக்கையை ஊட்டி தனியாக வருமாறு செய்வார். ECR / OMR சாலைகளில் உள்ள பண்ணைவீடுகளுக்கு அழைத்துச் சென்று உல்லாசத்தில் ஈடுபடுவார். உல்லாசத்தில் ஈடுபடும் காட்சிகளை மறைமுகமாக தனது செல்போன் மூலம் படம் எடுத்து வந்தான். இதற்காக அறையில் பல கேமராக்களை பல கோணங்களில் பொருத்தியிருந்தான். இணையதளங்களில் அவற்றை வெளியிட்டு உள்ளான். ‘பேஸ்-புக்’கிலும் இவரது லீலைகளின் படங்கள் ஏராளமாக உள்ளதாக கூறப்படுகிறது. காதல் மன்னனாக வலம் வந்துள்ளார். இத்தகைய வேலைகளை 2014லிலிருந்தே செய்து வந்ததாகத் தெரிந்தது.

© வேதபிரகாஷ்

12-10-2016

facebook-love-murder-lust

[1] 18 பெண்கள் என்று சென்னைடைம்ஸ் கூறுகிறது – Chennaitimes,  Meet The Engg Student From Chennai Who Cheated More Than 18 Girls Including Married Women!, September.28, 2016.1.58.00 pm.

[2] தினகரன், பெண்களை காதல் வலையில் வீழ்த்தியது எப்படி?, Date: 2016-09-29@ 00:24:28.

[3] The Hindu, Engineering student arrested for sharing nude photos of woman, Chennai, September.28, 2016,  Updated: September 28, 2016 05:32 IST.

[4] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=248899

[5] தினகரன், பெண்களை காதல் வலையில் வீழ்த்தியது எப்படி?, Date: 2016-09-29@ 00:24:28.

[6] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=248899

[7] தினகரன், பெண்களை காதல் வலையில் வீழ்த்தியது எப்படி?, Date: 2016-09-29@ 00:24:28.

[8] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=248899

[9] Chennaitimes,  Meet The Engg Student From Chennai Who Cheated More Than 18 Girls Including Married Women!, September.28, 2016.1.58.00 pm.

[10] The married women who fell in his trap were clients of a beauty parlour which Samuel’s mother runs on Nelson Manickam Road. http://www.chennaimemes.in/2016/09/meet-engg-student-from-chennai-who.html

[11] Deccan Chronicle, Chennai: Facebook lover held for cheating, Published Sep 28, 2016, 6:29 am IST, Updated Sep 28, 2016, 6:29 am IST.

சென்னை போர்னோகிராபி வியாபார தம்பதியர் கைது – எச்சரிக்கை – அபாயகரமான சமூக தாக்குதல், செக்ஸ்-தீவிரவாதம் மற்றும் சமுதாய சீரழிவு!

ஜூலை 28, 2016

சென்னை போர்னோகிராபி வியாபார தம்பதியர் கைது எச்சரிக்கைஅபாயகரமான சமூக தாக்குதல், செக்ஸ்தீவிரவாதம் மற்றும் சமுதாய சீரழிவு!

Child porno couple arrested -Malai malarசினிமா, செக்ஸ், போர்னோகிராபி, ஆண்பெண் அந்தரங்க காட்சிகளை வெளியிடும் ஆபாச வலைத்தளங்களின் பயங்கரம்: இணையதளங்களுக்கான தேடல்களில் பொதுவாக உபயோகமுள்ள தகவல்களுக்காக தெடி, பலன் பெற்று வரும் நேரத்தில், சினிமா, செக்ஸ், போர்னோகிராபி, ஆண்-பெண் அந்தரங்க காட்சிகளை வெளியிடும் ஆபாச வலைத்தளங்களில் உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் அதிக நேரத்தை செலவிட்டு வருவது, தெரிந்த விசயமாகவே இருக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் தென்மேற்காசிய, அப்பிரிக்க நாடுகளில் இத்தகைய காரியங்களுக்கு விநியோகம் செய்ய, படங்கள், திரைப்படங்கள் முதலியவற்றை எடுத்து அனுப்பிக் கொண்டிருப்பது, ஒரு வேலையாகவே நடந்து வருகிறது. இருப்பினும், குழந்தை-உடலுறவு காட்சிகள் தடை செய்யப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக, சிறுவர்-சிறுமியர் தொடர்புடைய ஆபாச வலைத்தளங்களுக்கு (child pornography) உலகில் பல நாடுகள் தடை விதிக்கப்பட்டிருப்பதால் இதுபோன்ற வலைத்தளங்களுக்கு அதிக கிராக்கியும், மவுசும் உண்டு[1]. மேற்படி காட்சிகளை இணையத்தில் பதிவேற்றம் செய்து அவற்றை பார்க்கவரும் ‘ரசிகர்களிடம்’ ஏராளமான கட்டணம் சந்தாவாக வசூலிக்கப்படுகிறது[2].

Shady_homes_orphanages

Shady_homes_orphanages

சென்னையில் குழந்தை போர்னோகிராபி புதியதல்ல: மும்பு, வில் ஹியூம் என்ற டச்சுநாட்டுக் காரன், சென்னையிலேயே பல வருடங்கள் தங்கியிருந்து, இத்தகைய வேலையை செய்து வந்தான். பிறகு, மாட்டிக் கொண்டு, இப்பொழுது புழல் சிறையில் தண்டனை பெற்று வருகிறான். டாக்டர் பிரகாஷும் அதே வேலையை செய்துதான் மாட்டிக் கொண்டான். அதாவது, சென்னைவாசிகள், அனாதை இல்லங்கள் நடத்துபவர்கள், குழந்தைகளை இல்லங்களுக்குக் கூட்டி வருவது, அவர்களை அத்தகைய காரியங்களில் ஈடுபடுத்துவது, வீடியோ எடுப்பது என்ற நிலைகளில் பலர் நேரிடையாகவும், மறைமுகமுகமாகவும் செயல்பட்டுவருவது தெரிகிறது. சமூகத்தை சீரழிக்கிறோமோ என்ற எண்ணாமே அவர்களுக்கு இல்லாமல் இருந்தது நோக்கத்தக்கது. இந்நிலையில், தமிழகத்தின் தலைநகரான சென்னையின் அருகாமையில் வசித்துவரும் ஒரு தம்பதியர் இதுபோன்ற குழந்தைகளின் பாலியல் உறவு தொடர்பான காட்சிகளை வெளியிடும் கட்டண வலைத்தளத்தை நடத்தி வருவதாக சைபர் கிரைம் போலீசாருக்கு தெரியவந்தது[3]. இதையடுத்து, அந்த வலைத்தளத்தில் ஆபாசப் படங்களை பதிவேற்றம் செய்பவர்களின் ஐ.பி. நம்பர் மற்றும் இமெயில் ஐ.டி.க்களை மோப்பம் பிடித்த போலீசார் சென்னை அருகேயுள்ள சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அதிரடி ரெய்டு நடத்தினர்[4]. அங்கிருந்தபடி மேற்படி ஆபாசப் படங்களை பதிவேற்றம் செய்ய இந்த தம்பதியர் இரண்டு வலைத்தளங்களை நடத்தி வந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது[5].

Child porno couple arrested -Webdunia

கோடிகளில் புரளும் போனோகிராபி தொழில்: பர்மா பஜார் பக்கம் யாராவது நடந்து சென்றால், சிலர் அணுகி, “என்ன சார், அந்த…..சிடி வேண்டுமா, டிவிடி வேண்டுமா” என்று கேட்டு பின்னாலேயே வருவர். அதற்காக வருபவர்கள் மற்றும் சபலபுத்து கொண்டவர்கள் வாங்கிக் கொண்டு பார்ப்பர். பிறகு  செயல்முறையில் கிடைக்குமா என்று தேடி போகவும் செய்வர். வெறும் பார்த்துக் கொண்டே இருப்பவர்கள், இணைதளங்களில் தேடும் போது பலான படங்கள், வீடியோக்கள் கிடைக்கும். இந்த வலைத்தளங்களை பார்வையிட வரும் வாடிக்கையாளர்களிடம் இருந்து 2 கோடியே 40 லட்சம் ரூபாயை கட்டணமாக வசூலித்துள்ளதாகவும், மேற்படி தொகை பெங்களூரில் உள்ள ஒரு வங்கி கணக்கில் செலுத்தப்பட்டதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்[6].

Child porno couple arrested -ANNநன்கு  படித்த சென்னை தம்பதியர் இத்தொழிலில் ஈடுபட்டது: இதையடுத்து, இந்த ஆபாச வலைத்தளங்களை நடத்திவந்த சித்தாத்தா வேலு (Siddhartha Velu 48) மற்றும் அவரது மனைவியான பிரிசில்லா மார்கரெச் தன்ராஜ் (Priscilla Margaret Dhanraj 45) ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சித்தார்த்த வேலு பிஎச்டி பட்டதாரி[7] / பள்ளிப்படிப்பே முடிக்காதவன்[8] என்றும் ஊடகங்கள் வழக்கம் போல மாறுபட்ட விவரங்களைக் கொடுக்கின்றன[9]. அவன் படித்தானா-இல்லையா என்ற விவரத்தை விட, மனிததன்மையற்ற அவன், இத்தகைய குரூர வேலை செய்தான் என்பது தான் அபாயகரமான விசயம். திருச்சியைச் சேர்ந்த இவன், வேலூரைச் சேர்ந்த பிரிசில்லாவை 2011ல் திருமணம் செய்து கொண்டான். இவன் நெட்வொர்கிங், வெப்ஹோஸ்டிங் முதலிய வேலைகளில் கில்லாடி. பிறகு “Cutecandid, indianshowgirls, mywife4u, indianswington, shakeela4u” முதலிய வெப்சைட்டுகளை உருவாக்கினான்[10].  இணைதள அறிவு, ஞானம், தொழிற்நுட்பம் எப்படி இதுமாதிரியான தீவிரவாதிகளில் சிக்கும் போது, துஷ்பிரயோகிக்கப் படுகிறது என்பதனையும் அறிந்து கொள்ளலாம். இதன் மூலம் தான் பலரது வாழ்க்கையினை கெடுத்துள்ளார்கள் இந்த தம்பதியர். தமது பையனை சிங்கபூரில் படிக்க வைக்கின்றனராம். தன் மகன் நன்றக இருக்க வேண்டும், மற்ற பிள்லைகள் நாசமாக வேண்டும் என்ற இவர்களின் வன்மத்தைக் கவனிக்க வேண்டும். பிறகு எப்படி மற்ற சிறுவர்-சிறுமியரை அத்தகைய வேலைகளில் ஈடுபடுத்தினர். இத்தகைய வக்கிரபுத்தி, அரக்கத்தனம் நிரம்பிய மனோப்பாங்கு முதலியவற்றை அடையாளங்கொண்டு, இவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்.

Siddhartha Velu, Priscillika couple arrested 27-07-2016.விசாரணைக்குப் பிறகு, கைது முதலியன: இவர்கள் இருவரும் இங்கிலாந்து, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் வசிக்கும்போது பல்வேறு இணையதளங்களை தொடங்கி, அவற்றில் ஆபாசபடங்களை குறிப்பாக சிறுவர், சிறுமிகளின் ஆபாச படங்களை வெளியிட்டு கோடி, கோடியாக பணத்தை சம்பாதித்து வந்தனர்[11]. அவர்கள் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சென்னைக்கு இருப்பிடத்தை மாற்றி விட்டனர்[12]. முன்னர் பெங்களூரில் இருந்தனர் என்று செய்திகள் அறிவிக்கின்றன[13]. இவ்வாறன இடங்கள் ஏற்கெனவே பிடோபைல்களுடன் சம்பந்தப்பட்டிருப்பதை நினைவு கூறவேண்டும். அதுமட்டுமல்லாது, அங்கிருக்கும் கிருத்துவ அனாதை இல்லங்கள், காப்பங்களில் பிடோபைல்களின் காமக் களியாட்டங்கள், செக்ஸ் வக்கிரகங்கள் நடந்தேறியுள்ளன. ஊடகங்கள் அவ்வாறான இணைப்புகளை, சம்பந்தங்களை எடுத்துக் காட்டாவிட்டாலும், நடந்து வரும் சமூக பிறழ்சிகள், செக்ஸ்-குற்றங்கள், முதலியவற்றை பல நோக்குகளில் கவனிக்க வேண்டியுள்ளது. சமூகத்தை பாதிக்கும், இத்தகைய வக்கிரங்களை எந்த சமூக ஆர்வலரும் பொறுத்துக் கொள்ள முடியாது, பெண்ணிய சித்தாந்திகளும் அடங்கியிருக்க முடியாது. ஆனால், இத்தகய விசயங்கள் வரும் போது, அவர்கள் அமுக்கியே வாசித்து வருகின்றனர் அல்லது அமைதியாக இருந்து விடுகின்றனர்.

Siddhartha Velu, Priscillika arrested 27-07-2016

எப்படி சிக்கினர்?:  துரைப்பாக்கத்தில் பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தனர். அனாதை ஆசிரமங்களில் வசிக்கும் சிறுவர், சிறுமிகளை ஆபாசமாக படம் பிடித்து அந்த படங்களை, இணையதளங்களில் வெளியிட்டதாக இவர்கள் மீது புகார்கள் வந்தன. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. சைபர் கிரைம் போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டனர்[14]. இணைதள குற்றங்களை ஆராய்ந்து வரும் “சைபர்” பிரிவு போலீஸார், வல்லுனர்களின் உதவியுடன், அத்தகைய படங்கள் எங்கிருந்து தகவேற்றம் செய்யப்படுகின்றன முதலிய விவரங்களைக் கண்டுபிடித்து, குற்றவாளிகளை நெருங்கினர். சித்தார்த்த வேலு வசித்த வீட்டில் சோதனை நடத்தி, ஆபாச படங்கள் உள்ளிட்ட நிறைய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்[15]. முன்னர் அரசு ஆபாச தளங்களை முடக்கிய போது, இவை எப்படி தப்பித்தன என்று தெரியவில்லை. “சர்வர்” இந்தியாவில் இல்லை என்ற முறையில் தப்பித்தனவா அல்லது வேறேந்த காரணங்கள் உள்ளனவா என்று ஆராய வேண்டியுள்ளது. அவர்கள் செய்துவந்த குற்றமீறல்களுக்காக சம்பந்தப்பட்ட ஆதாரங்களும் கிடைத்தன[16]. தீவிர விசாரணைக்குப்பிறகு சித்தார்த்த வேலுவும், அவரது மனைவி பிரிசில்லா மார்க்கரேட்டும் 27-07-2016 புதன்கிழமை அன்று தகவல் தொழிற்நுட்பம் சட்டம் பிரிவுகளில் கைது செய்யப்பட்டனர்[17]. பிறகு 9வது குற்றவியல் மெட்ரோபோலிடின் மாஜிஸ்ட்ரேட் முன்னர் ஆஜர் செய்யப்பட்டனர்[18]. முறைப்படியான சட்டமுறைகளுக்குப் பிறகு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்[19]. இது பிடிஐ செய்தி ஆனதால், ஆங்கில ஊடகங்கள் அப்படியே போட்டிருக்கின்றன.

© வேதபிரகாஷ்

26-07-2016

[1] மாலைமலர், சிறுவர், சிறுமியர் உறவுகொள்ளும் ஆபாசப் படங்களை வெளியிட கட்டண வலைத்தளம் நடத்திய தம்பதியர் கைது, பதிவு: ஜூலை 27, 2016 08:55

[2]  http://www.maalaimalar.com/News/TopNews/2016/07/27085555/1028540/TN-couple-host-child-pornography-websites-held.vpf

[3] தமிழ்.வெப்துனியா, சிறுவர்கள் ஆபாச வலைத்தளம் நடத்திய கணவன் மனைவி கைது, Last Modified: புதன், 27 ஜூலை 2016 (13:02 IST)

[4] http://www.tamil.webdunia.com/article/regional-tamil-news/couple-arrested-for-running-a-porn-website-116072700021_1.html

[5] தமிழ்.ஒன்.இந்தியா, கேவலம்.. குழந்தைகளின் ஆபாச படங்களை வெப்சைட்டில் வெளியிட்டு ரூ.2.4 கோடி வசூல்! சென்னையில் தம்பதி கைது, By: Veera Kumar, Published: Wednesday, July 27, 2016, 12:18 [IST].

[6] http://tamil.oneindia.com/news/tamilnadu/chennai-couple-arrested-running-child-porn-websites-258928.html

[7] பத்ரிகா.காம், இளம்வயது சிறுவர், சிறுமிகளின் ஆபாச இணையதளம்தம்பதியர் கைது, Posted by ஏ.டி.எஸ்.பாண்டியன், Wednesday, ஜூலை 27, 2016. 1.00 pm.

[8] Police sources said, Siddhartha Velu, a native of Trichy was married to Priscillika from Vellore five years ago. The couple shifted to chenai and rented a house in sholinganallur. During investigations, it was revealed that Siddhartha, a school drop out was well versed in networking and webhosting.

[9] https://www.patrikai.com/adolescent-porn-website-couple-arrested/

[10] Velu hit upon the idea of child porn as he thought there weren’t many websites on it in India. He started two child porn websites -‘cutecandid’ and ‘indianshowgirls’. Later, he floated three more web portals, `mywife4u’, `indianswingtown’ and `shakeela4u’. The websites displayed contact email ids. The websites that had a paywall were linked to Velu’s bank account through an international money portal. Payments had to be made to view content.

http://timesofindia.indiatimes.com/city/chennai/Chennai-couple-held-for-running-child-porn-sites/articleshow/53410712.cms

[11] தினத்தந்தி, சிறுவர்,சிறுமிகளின் ஆபாச இணையதளம் நடத்தி வந்த சென்னை கணவன்மனைவி கைது, பதிவு செய்த நாள்: புதன், ஜூலை 27,2016, 11:38 AM IST; மாற்றம் செய்த நாள்: புதன், ஜூலை 27,2016, 11:38 AM IST

[12] Business Standard, TN couple host child pornography websites, held, Press Trust of India  |  Chennai July 27, 2016 Last Updated at 00:07 IST

[13] http://www.business-standard.com/article/pti-stories/tn-couple-host-child-pornography-websites-held-116072700012_1.html

[14] http://www.dailythanthi.com/News/State/2016/07/27113809/Girls-porn-picture-Published-on-the-website-The-husbandwife.vpf

[15] Deccan Chronicle, Chennai couple arrested for allegedly running child porn websites,

PTI, PublishedJul 27, 2016, 9:29 am IST; UpdatedJul 27, 2016, 9:29 am IST

[16] Indiatoday, Chennai techie couple earned Rs 2 crore from child porn sites, arrested, Rohini Swamy | Posted by Liu Chuen Chen,Chennai, July 27, 2016 | UPDATED 09:44 IST

Ihttp://indiatoday.intoday.in/story/chennai-couple-arrested-for-running-child-porn-sites/1/724907.html

[17] A case was registered under provisions of Information Technology Act and searches were conducted at the residence of the couple at Sholinganallur in Chennai. Materials establishing the couple’s links with these two child porn websites besides other websites with porn content were recovered and seized, the release said.

http://www.deccanchronicle.com/nation/crime/270716/chennai-couple-arrested-for-allegedly-running-child-porn-websites.html

[18] Indian Express, Couple who made a fortune running child porn site arrested in Chennai

Published: 27th July 2016 12:16 AM; Last Updated: 27th July 2016 06:37 AM

[19] http://www.newindianexpress.com/cities/chennai/Couple-who-made-a-fortune-running-child-porn-site-arrested-in-Chennai/2016/07/27/article3548708.ece

 

23 வயது ஆசிரியை, 15 வயது மாணவனுடன் ஓடிப்போனது, உறவு கொண்டது, கல்யாணம் செய்து கொண்டது, முதலியன இயற்கையானதா, சமூக ஏற்புடையதா, தனிமனித ஒழுக்கமா?

மார்ச் 13, 2016

23 வயது ஆசிரியை, 15 வயது மாணவனுடன் ஓடிப்போனது, உறவு கொண்டது, கல்யாணம் செய்து கொண்டது, முதலியன இயற்கையானதா, சமூக ஏற்புடையதா, தனிமனித ஒழுக்கமா?

ஓடிப்போன மாணவன், ஆசிரியை 2015-16.-பிடிபட்டனர்

சட்டப்படி நடக்கும் விசயங்கள்: இதன் பின்னர் கோதைலட்சுமி மற்றும் சிவசுப்பிரமணியன் இருவருக்கும் தென்காசி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது[1]. பின்னர் அவர்களை தொன்காசி நீதிமன்ற நீதிபதி ஜெகதீஸ்வரி முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர்[2]. அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து கோதைலட்சுமி நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்[3]. மாணவர் சிவசுப்பிரமணியன் நெல்லை கூர்நோக்கு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளார். சிவசுப்பிரமணியனின் தாயார் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளால் வரும் திங்கட்கிழமை 14-03-2016 சிவசுப்பிரமணியனை போலீசார் மதுரை உயர் நீதி மன்ற கிளையில் ஆஜர்படுத்த உள்ளனர். இதெல்லாம் சட்டப்படி நடக்கும் விவகாரங்கள், ஆனால், சமூகத்தில் இதன் விளைவைப் பற்றி கவலைப்படப் போவது யார்?

ஓடிப்போன கோதை ஆசிரியை 2015-16

முன்பு எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்லவில்லை: மாணவன் ஆசிரியையை வகுப்பில் தூக்கி நிற்பதைப் போன்று வெளியான புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏனெனில், பள்ளியில், அத்தகைய புகைப்படத்தை யார் எடுத்தது என்ற கேள்வி எழுந்தது. இணைதளத்தில் இருவரும் பாலியலில் ஈடுபடுவதைப் போன்ற வீடியோ சுற்றில் வந்தது. அப்பொழுது பல கேள்விகள் எழுப்பப்பட்டன. ஏனெனில், அதில், மூன்றவது நபர் ஒருவர் இல்லாமல், அத்தகைய வீடியோ வெளிவராது என்பது தெரிந்த விசயமானது. இன்றைய தேதியில் ஜே.என்.யூ போன்ற ட்லைசிறந்த பல்கலைக்கழகங்க வளாகத்தில் உள்ள ஹாஸ்டல்களில் புளூ பிளிம், போர்னோகிராபி எல்லாம் எடுக்கின்ற நிலையுள்ளது. உண்மையிலேயே காதல், திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தப் போகிறோம் என்றால், எந்த பெண்ணும் அத்தகைய நிலையில் நடந்து கொண்டு, புகைப்படங்களில், வீடியோக்களில் கேவலமாக பதிவு செய்ய அனுமதித்திருக்க மாட்டாள். ஆனால், அவையெல்லாம் நடந்துள்ளன. ஆசிரியைப் பற்றிய விவரங்களும் முழுமையாக வெளியிடப்படவில்லை. அவரின் புகைப்படங்களும் விதவிதமாக, மாறுபட்டிருந்தன. பெயரும் மாற்றப்பட்டிருந்தது. புகைப்படம் மற்றும் வீடியோ இவ்விருவரைத் தவிர மற்றவர்களும் பங்குக் கொண்டுள்ளது தெரிகிறது. சுமார் ரூ.15 லட்சம் நகை மற்றும் பணம் உடபட ஏன் எடுத்துச் செல்ல வேண்டும், அது என்னவாயிற்று என்று தெரியவில்லை. அப்பணம் இருந்தால், கர்ப்பினியாக இருக்கும் பெண் வேலை செய்யவேண்டிய அவசியம் இல்லை.

ஓடிப்போன மாணவன் 2015-16.-பிடிபட்டான்

தனிமனித ஒழுக்கம் தேவையா, இல்லையா?: இந்து போன்ற நாளிதழ்கள் (ஆங்கிலம்) இவற்றை மொத்தமாக சேர்த்து, ஒரு சட்டப் பிரச்சினையாக முன்னர் அணுகியது இங்கு மறுபடியும் நினைவு படுத்த வேண்டியுள்ளது[4]. அதாவது மற்ற காதலித்து வீட்டில் மறுத்ததால், எதிர்த்ததால் வீட்டைவிட்டு ஓடிபோதல், போன்ற விசயங்களாக அலசப்பட்டன. பொதுவாக உபதேசம் செய்பவர்கள், கற்பிப்பவர்கள், புத்திமதி சொல்பவர்கள் ஒழுங்காக இருக்க வேண்டும் என்பார்கள். ஆனால், “தி இந்து” ஆசிரியர்களிடம் எதிர்பார்க்க முடியாது. இங்கு தனிமனித ஒழுக்கத்தை அல்லது அவர்களது சொந்த விசயங்களைக் குறிப்பிடுவது என்பதில்லை, ஆனால், அவ்வாறிருப்பவர்கள் எப்படி ஒட்டு மொத்த சமூதாயத்தின் ஒழுக்கத்தைப் பேண உண்மையில் வேலைசெய்வார்கள் அல்லது எண்ணம் கொள்வார்கள் என்பதுதான் கேள்வி. கமல் ஹஸ்ஸன் போன்ற நடிகர்கள் ஒருவனுக்கு-ஒருத்தி, தாம்பத்தியம், இல்லறம், கற்பு முதலியவற்றைப் பற்றிப் பேசமுடியாது. அதுபோலவே பலதார மணம் புரிந்துள்ளும் ஆண்-பெண்களிடமும் இவற்றைப் பற்றி பேச்ச முடியாது. அந்நிலையில் அவர்களை பல்கலைக்கழகங்களில் அழைத்து பட்டம் கொடுத்து, பேசவைத்தால், மாணவ-மாணவியர்களிடம் எப்படி நற்பண்புகள் வளரும் என்று எதிர்பார்க்க முடியும் என்று தெரியவில்லை. “கொன்றால் பாவம், தின்ற்றால் போச்சு” என்ற ரீதியில் தான் இவர்கள் ஆண்-பெண் உறவுகளைப் பற்றி விளக்கம் கொடுப்பார்கள். பல பெண்களை மணந்து கொண்டும், சேர்ந்து வாழ்ந்தும், குழந்தைகளைப் பெற்றுக் கொண்டும், பிறகு மற்ற பெண்களுடன் சேர்ந்து வாழும் மனிதர்கள், “எயிட்ஸ்” போன்ற விளம்பரங்களுக்கு “போஸ்” கொடுப்பது, விளம்பரம்-பிரச்சாரம் செய்வது தான் காலத்தின் கோலமாக இருக்கிறது.

கோதை-மணி- காமம் -786 கதவு

கோதை-மணி- காமம் -786 கதவு

இச்சீரழிவிற்கான காரணம், ஒழுக்கமின்மைதான்: பிரச்சினைய அலசாமல் இருந்தால், ஒரு பிரயோஜனமும் இல்லை. சமீப காலத்தில் 20-30 வயதில் இருக்கும் ஆசிரியைகள் 14-18 வயதில் இருக்கும் மாணவர்களை இழுத்துக் கொண்டு ஓடும் நிகழ்ச்சிகள் ஊடகங்களில் காணப்படுகின்றன. இவை நாகரிக சீரழிவு என்று சமாதானப்படுத்தி கொள்வதா, சமூக சீர்கேடு என்று ஒதுங்கிக்கொள்வதா, அல்லது பெண்மையின் சீர்குலைவு என்று வருத்தப்படுவதா என்று தெரியவில்லை. ஆண்-பெண் படிக்கும் காலத்தில், படிப்பைத் தவிர மற்ற விசயங்களில் கவனம் செல்கிறது, மற்றும் கற்பிக்கும் ஆசிரியை-ஆசிரியர்களே காமத்துப்பாலை போதிக்கின்றனர், பயிற்சி கொடுக்கின்றனர் என்றால், அந்நிலையை அழிவு, சீர்கேடு என்று தானே சொல்ல வேண்டியுள்ளது? மேலும் “பிடோபைல்” (Pedophile) குற்றங்கள் ஆண்களிடம் தான் உள்ளது என்ற நிலைபோய், பெண்களிடமும் அத்தகைய நிலையுள்ளதா என்று கவனிக்க வேண்டியுள்ளது. இதெல்லாம் அந்நியர்களின் காமச்செயல்களாக இருந்துவரும் வேளையில் இப்பொழுது, இந்தியர்களிடம், குறிப்பாக, பெண்களிடமும் காணப்படுவது வருத்தத்திற்குரியதாகும். ஒழுக்கமின்மை தான் இதற்கு காரணம் என்று நன்றாகவே தெரிகிறது.

கோமதி-மணி- காமம்.-786

கோமதி-மணி- காமம்.-786

கல்வித்துறையில் நுழைந்துள்ள சமூக சீர்ப்பழிப்பாளர்கள்: கடந்த 60 ஆண்டுகளில் கல்வி, மேல்-படிப்பு மற்றும் சிறப்பு படிப்புகள் முதலியவற்றில் தரங்கெட்டவர்கள் வியாபார நோக்கில் நுழைந்து கோலோச்சி வருகின்றனர். சமூகத்தில் “மாதிரிகள்” (Role Models) என்றெல்லாம் தூக்கிக் காட்டப்படும் மனிதர்கள் கேடுகெட்டவர்களாக இருக்கின்றனர். என்னத்தான் பத்தினித்தன்மை பற்றி பேசினாலும், அவர்களது வேசித்தனம் பற்றி மக்கள் அறிந்துள்ளனர். ஆனால், அத்தகைய சமூக சீரழிப்பாளர்கள் பள்ளிகளில், பல்கலைக்கழகங்களில் கூடி வந்து அறிவுரை கொடுப்பது போன்ற நிகழ்வுகள் நடந்து வருகின்றன. பாடமளிப்பு விழாக்களுக்கே (Convocation function) அவர்கள் அழைக்கப்படுவது, மிகக் கேவலமான விசயம் ஆகும், அவர்களுக்கு யோக்கியதையே இல்லாத காரியத்திற்கு அவர்கள் உபயோகப்படுத்தப் படுகிறார்கள். ஏனெனில், அத்தகைய பள்ளி, கல்லூரி, பல்கலைகழகங்களின் சொந்தக்காரர்களே வரியேப்பு செய்தவர்கள், கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள், சாராய மன்னர்கள், விபச்சாரம் பெருக காரணமானவர்கள் என்று தான் இருக்கின்றனர். இனம்-இனத்தோடு சேரும் என்ற ரீதியில் தான் அவர்கள் கூட்டாக செயல்பட்டு வருகின்றனர். இவையெல்லாம் தான் மாணவ-மாணவியர்களுக்கு தவறான சமிஞைகளை அனுப்புகின்றன. ஆகவே, ஒழுக்கத்தைப் பேண வேண்டும். ஆசிரியர்-மாணவர்கள் உறவு மதிக்கப்பட வேண்டும், மாணவர்கள் ஆசிரியர்களுக்கு மதிப்பும்-மரியாதையும் கொடுக்க வேண்டும்.

கோதை-மணி- காமம்-சல்பீ

கோதை-மணி- காமம்-சல்பீ

1960லிருந்து 2016 வரையுள்ள தமிழகத்தின் நிலையும், இப்பொழுது மாற்றப்பட வேண்டிய அவசியமும்: “தாய்-தந்தை-ஆசிரியர்-தெய்வம்” என்று மதிக்கப்படும் முறை மறுபடியும் போதிக்கப்படவேண்டும்.

  • 1960-70களில் “தெய்வத்தை” மறந்தனர்;
  • 1980-90களில் ஆசிரியரை மறந்தனர்;
  • 2000-2010களில் தந்தையை மறந்தனர்:
  • இப்பொழுது தாயை மறக்க ஆரம்பித்துள்ளனர்.

இதனால் தான் எல்லா பிரச்சினைகளும் தலைத்தூக்கியுள்ளன. தாயை மதிக்காதவன், தந்தையை மதிக்க மாட்டான்; தந்தையை மதிக்காவன் குருவை-ஆசிரியனை மதிக்க மாட்டான்; இவர்களை மதிக்காதவம் கடவுளைப் பற்றி ஏன் கவலைப்படப் போகிறான். இதனை தலைகீழாகவும் சொல்லலாம். அதுதான் பெரும்பாலான காரணமாக அமைகிறது என்றுதான் நிதர்சனமான உண்மையாகிறது. சித்தாந்தங்கள் பேசி, இளைய சமுதாயத்தைக் கெடுப்பதை விட, அவர்களை நெறிபடுத்த வேண்டிய முறைகளை நேரிடையாக, நன்னெறியில், உபயோகப்படும் முறைகளில் செயல்படுத்த வேண்டும். ஒழுக்கம், கட்டுப்பாடு, சட்டதிட்டங்களை மதிக்கும் முறை, நீதி-நேர்மை போன்றவற்றிற்கு கட்டுப்பட்டு நடக்கும் தார்மீக நிலை முதலியவற்றை உருவாக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

13-03-2016

[1] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=162290

[2] http://tamil.oneindia.com/news/tamilnadu/tenkasi-teacher-arrested-police-248852.html

[3] http://www.tamil.webdunia.com/article/regional-tamil-news/tenkasi-teacher-affidavit-in-police-enqury-116031200024_1.html

[4] http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/elopement-a-major-law-and-order-problem/article4819305.ece

15 வயது மாணவன் 23 வயது ஆசிரியையுடன் பள்ளியை, வீட்டை விட்டு ஓடிப் போன சமாச்சாரமும், அவர்களை போலீஸார் தேடிப் பிடித்த கதையும்!

மார்ச் 13, 2016

15 வயது மாணவன் 23 வயது ஆசிரியையுடன் பள்ளியை, வீட்டை விட்டு ஓடிப் போன சமாச்சாரமும், அவர்களை போலீஸார் தேடிப் பிடித்த கதையும்!

ஓடிப்போன மாணவன், ஆசிரியை 2015-16

கோதைசங்கர் விவகாரம் (மார்ச்.2015)[1]: நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரகுமார். இவர் மத்திய ரிசர்வ் போலீசில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மாரியம்மாள். இவர்களது மகன் சிவசுப்பிரமணியன் (வயது 15). அங்குள்ள தனியார்  பள்ளியில் 10-ம்வகுப்பு படித்து வந்தார்.  கடந்த மார்ச் 31-ந்தேதி வீட்டை விட்டு சென்ற  சிவசுப்பிரமணியன் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து கடையநல்லூர் போலீசில் அவரது பெற்றோர் புகார் செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவசுப்பிரமணியன் எங்குசென்றார் என்று விசாரணை நடத்தி, இருவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது  சிவசுப்பிரமணியன் அவர் படித்து வந்த   பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்த செங்கோட்டை அருகே காலாங்கரையை சேர்ந்த கோதை (23)  என்பவருடன் ஓட்டம் பிடித்துள்ளது தெரியவந்தது[2], இப்படித்தான் சென்ற வருடம் மார்ச் 2015ல் இப்பிரச்சினை விவரிக்கப்பட்டது.

கோதை- சிவசுப்பிடரமணி-காமம், தூக்கல்

கோதை- சிவசுப்பிடரமணி-காமம், தூக்கல்

திட்டமிட்டு பணம்நகைகளுடன் ஓடிய ஜோடி: 10-ம்வகுப்பு படித்து வந்த சிவசுப்பிரமணியனுக்கு ஆசிரியை கோதை பாடம் எடுத்து உள்ளார். இதனால் அவர்கள் இருவரும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று ஜாலியாக இருந்துள்ளனர். மாணவர்கள் இல்லாத நேரம் வகுப்பறையிலேயே இருவரும் காதல் லீலையில் ஈடுபட்டுள்ளனர்.  புகைப்படங்கள் வேறு எடுத்துக் கொண்டுள்ளனர். இதனிடையே தங்களது காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிந்தால்  பிரித்து விடுவார்களோ என்று எண்ணிய அவர்கள் இருவரும் வெளியூர் செல்ல முடிவு செய்தனர். அதன்படி  கடந்த 31-ந்தேதி இருவரும் வீட்டிற்கு தெரியாமல் வெளியூருக்கு ஓட்டம் பிடித்தனர். போகும் போது சிவசுப்பிரமணியன் தனது வீட்டில் இருந்த ரூ.12 லட்சம் மதிப்புள்ள  60  பவுன் நகையையும் எடுத்து சென்று உள்ளார். தந்தையின் வங்கிக்கணக்கில் இருந்து பணத்தையும் எடுத்துள்ளான்[3]. இப்படி மேலும் தகவல்கள் சேர்த்துக் கொடுக்கப்பட்டன. 15 வயது பையனுக்கு எப்படி 23 வயது பெண்ணிடம், அதிலும், ஆசிரியையுடன் காதல் ஏற்பட்டது என்று விளக்கவில்லை. அது காதல் இல்லை, காமம் தான், அதிலும் இளம்பெண், வயது வந்த பையனுடன் உடலுறவு கொள்லும் அளவிற்கு ஏற்பட்ட கொக்கோக வெறித்தனம். தறிகெட்டு போனதால், ஒழுங்கீனத்தினால், முறைதவறி ஏற்பட்ட விபரீதம் ஆகும்.

கோதை-மணி காமம்

கோதை-மணி காமம்

கோதைசங்கர் விவகாரம் (மார்ச்.2016): ஒரு வருடம் கழித்து ஊடகங்கள் அக்கதை கூறும் விதம் வேடிக்கையாக இருக்கிறது. அது தவறு என்று சுட்டிக் காட்டவில்லை. மாறான, “சென்ஷேசனலிஸம்” ரீதியில் செய்திகளை வெளியிட்டுள்ளன. நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள இலத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தவர் பிரியா என்கின்ற கோதைலட்சுமி (வயது 23 / 29[4]). இவரது சொந்த ஊர் செங்கோட்டை அருகே உள்ள காலாங்கரை. எம்.எஸ்.சி., பட்டதாரியான இவருக்கும் அதே பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்த மாணவன் கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சிவசுப்பிரமணியன் என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் 31–ந் தேதி 2015 கோதைலட்சுமி, சிவசுப்பிரமணியன் ஆகிய இருவரும் மாயமாகினர் என்பது தமாஷான விசயம். ஏனெனில், போகும் போது சிவசுப்பிரமணியன் தனது வீட்டில் இருந்த ரூ.12 லட்சம் மதிப்புள்ள 60 பவுன் நகையையும் எடுத்து சென்று உள்ளார். தந்தையின் வங்கிக்கணக்கில் இருந்து பணத்தையும் எடுத்துள்ளான்[5]. அப்படியென்றால், இவ்விவகாரங்கள் தெரிந்து தான் இருக்கின்றன. சமூக சீரழிவுகளால், இந்த இருவரும் சீர்கெட்டு போனதை மறைத்துள்ளனர். ஆரம்பத்திலேயே, அத்தகைய தகாத உறவைக் கண்டித்து, முடித்திருக்க தவறி விட்டார்கள்.

கோமதி-மணி- காமம்.-786

கோமதி-மணி- காமம்.-786

திருப்பூரில் போலீஸார் பிடித்த ஜோடி: இச்சம்பவம் குறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இருவரையும் தேடிவந்தனர். நாட்டில் பற்பல பிரச்சினைகள் இருக்கும் போது, போலீஸார் இத்தகைய வேலைகளை எல்லாம் செய்ய வேண்டியுள்ளது. பெற்றோர் ஒழுங்காக வளர்த்திருந்தால், மாசிரியர்-மாணவ தர்மம் இருந்திருந்தால், இவையெல்லாம் நடந்திருக்குமா என்று நினைத்துப் பார்க்கவில்லை. மாணவன், ஆசிரியையின் நண்பர்களுக்கு திருப்பூர் பொதுதொலைபேசிகளில் இருந்து அடிக்கடி போன் வருவதை சைபர் கிரைம் போலீசார் அறிந்தனர்[6]. அவர்களை புதுவை, கும்மிடிப்பூண்டி, மதுரை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் தேடி வந்தனர். ஆசிரியை கோதைலெட்சுமி, மாணவன் சிவசுப்பிரமணியன் ஆகிய இருவரும் திருப்பூரில் பதுங்கி இருந்து அங்குள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலைபார்த்து வருவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.   இதையடுத்து டி.எஸ்.பி.ஜெயக்குமார், இன்ஸ்பெக்டர் பத்மநாப பிள்ளை தலைமையிலான தனிப்படை போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூருக்கு சென்று இருவரின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

கோதை-மணி- காமம்-சல்பீ

கோதை-மணி- காமம்-சல்பீ

தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டும்/ கெஞ்சும் ஆசிரியை: 10-03-2016 அன்று இரவு ஆசிரியை கோதைலெட்சுமி மாணவன் சிவசுப்பிரமணியன் இருவரையும் போலீசார் மடக்கி பிடித்தனர்[7]. பின்னர் அவர்கள் இருவரையும் 11-03-2016 அன்று மதியம் புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். அங்கிருந்து அவர்களை கடையநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்[8]. அப்போது ஆசிரியை கோதைலட்சுமி போலீசாரிடம் கூறும் போது, “நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் உண்மையாக காதலித்தோம். சேர்ந்து வாழ ஆசைப்பட்டோம். ஆனால் எங்கள் காதலை யாரும் ஏற்க மாட்டார்கள் என்பதால் புதுச்சேரி சென்று அங்கு நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். அதுவரை எங்களுக்குள் உடல் ரீதியான தொடர்பு இருந்ததில்லை. திருணமத்திற்கு பின்பு தான் கணவன்மனைவியாக வாழ்ந்தோம். இப்போது நான் 4 மாத கர்ப்பிணியாக உள்ளேன். எங்களை நிம்மதியாக சேர்ந்து வாழ விடுங்கள். சட்டத்தின் மூலம் எங்களை பிரித்தாலும் மீண்டும் நாங்கள் சேர்ந்து வாழ்வோம். பணத்தின் மூலம் எங்களை பிரிக்க நினைத்தால் நான் தற்கொலை செய்துகொள்வேன்[9],” என்று உருக்கமாக கூறி உள்ளார் என்று நக்கீரன்பதிவு செய்கிறது[10]. எங்களைப் பிரித்து விடாதீர்கள் என்று பிடிவாதமாக இருப்பது தெரிகிறது[11]. ஆனால், இதெல்லாம் தவறு என்று எடுத்துக் காட்டப்படவில்லை.

© வேதபிரகாஷ்

13-03-2016

[1] https://socialterrorism.wordpress.com/2015/04/12/trend-of-elopement-of-female-teachers-with-teenage-students/

[2] http://www.dailythanthi.com/News/State/2015/04/11141306/10class-student-love-Teacher-with-the-flow.vpf

[3] http://www.newindianexpress.com/states/tamil_nadu/Teacher-Elopes-with-Minor-Boy/2015/04/11/article2758555.ece

[4] தினமலர், தலைமறைவு மாணவன், ஆசிரியை திருப்பூரில் மீட்பு: தென்காசியில் நீதிபதி முன்பு ஆஜர், பதிவு செய்த நாள்
மார் 12,2016 00:04; மாற்றம் செய்த நாள்: மார்ச்.12, 2016: 03.11.

[5] http://www.newindianexpress.com/states/tamil_nadu/Teacher-Elopes-with-Minor-Boy/2015/04/11/article2758555.ece

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1476210

[7] தினத்தந்தி, மாணவருடன் ஓடிய ஆசிரியை கர்ப்பிணியாக திருப்பூரில் மீட்பு , பதிவு செய்த நாள்: வெள்ளி, மார்ச் 11,2016, 11:18 PM IST; மாற்றம் செய்த நாள்: சனி, மார்ச் 12,2016, 4:45 AM IST.

[8] http://www.dailythanthi.com/News/Districts/Thirunelveli/2016/03/11231842/The-student-ran-to-the-teacher–Pregnant-recovery.vpf

[9] தமிழ்.ஒன்.இந்தியா, தற்கொலை செய்து கொள்வேன்…10 ஆம் வகுப்பு மாணவனை பிரிய மறுக்கும் தென்காசி ஆசிரியை !, By: Karthikeyan, Published: Saturday, March 12, 2016, 20:44 [IST].

[10] நக்கீரன், நான் தற்கொலை செய்துகொள்வேன்மாணவனை பிரிய மறுக்கும் ஆசிரியை, பதிவு செய்த நாள்: 12, மார்ச் 2016 (18:21 IST); மாற்றம் செய்த நாள்: 12, மார்ச் 2016 (18:21 IST).

[11] வெப்துனியா, எங்களை பிரித்துவிடாதீர்கள்: மாணவனுடன் மீட்கப்பட்ட ஆசிரியை வேண்டுகோள், Last Modified: சனி, 12 மார்ச் 2016 (15:57 IST).

அனிதா மந்திர தாலி கட்டி வேலை வாங்கித் தருவதாக இளைஞர்களை தந்திரமாக ஏமாற்றி லட்சங்களைப் பறித்தது – இதற்கு பரிகாரம் என்ன?

பிப்ரவரி 17, 2016

அனிதா மந்திர தாலி கட்டி வேலை வாங்கித் தருவதாக இளைஞர்களை தந்திரமாக ஏமாற்றி லட்சங்களைப் பறித்தது – இதற்கு பரிகாரம் என்ன?

அனிதா மோசடி பிப்ரவரி 2016.3

இந்த அனிதாவும், அந்த அனிதாவும் ஒன்றா, வேறா (2015): இதே பிப்ரவரி 2015ல் திருப்பூருல் ஒரு அனிதா இதே மாதிரியான மோசடியில் கைதாகியுள்ள செய்தி வந்துள்ளது. மேட்டூர், மாசிலாபாளையத்தை சேர்ந்தவர் பிரான்சிஸ் சேவியர், 30. “குவாலிட்டி கண்ட்ரோலராக’, திருப்பூரில் பணியாற்றுகிறார். திருமணம் செய்ய, பெண் தேடி, இணையதளத்தில் பதிவு செய்தார். கடந்த நவ., மாதம் தொடர்பு கொண்ட சென்னையை சேர்ந்த இளம்பெண், தன்னை ஜெலின் சிந்தியா, 22 என கூறி, தொடர்ந்து பேசியுள்ளார். “சாப்ட்வேர்’ நிறுவனத்தில் பணிபுரியும் தனக்கு, ஒரு “புராஜெக்ட்’டுக்கு பணம் தேவை; தாய் மருத்துவ சிகிச்சைக்கு பணம் அவசரம் என கூறி, 1.21 லட்சம் பணம் பெற்றுள்ளார். அதன் பின்னரே, அவர் திருமணமானவர், பெயர் அனிதா என தெரியவந்துள்ளது[1]. சில நாட்களுக்குபின், ஏமாற்றப்பட்டதை அறிந்த சேவியர், அனுப்பர்பாளையம் போலீசில் புகார் செய்தார். அனிதா மேலும் பணம் கேட்டபோது, தர்மபுரிக்கு வருமாறு அழைத்தார். நேரில் வராத அனிதா, தங்கை என சோனியா, 16 மற்றும் நண்பர் ராஜேந்திரன், 20, ஆகியோரை அனுப்பியுள்ளார். அவர்களை தர்மபுரி போலீஸ் உதவியுடன் பிடித்து, அனுப்பர்பாளையம் அழைத்து வந்தார். சம்பந்தப்பட்ட அனிதா இல்லாமல், எதுவும் செய்ய முடியாது என போலீசார் திருப்பி அனுப்பி விட்டனர்.

வக்கீல்கள் மற்றும் அடியாட்களுடன் அவர் வலம் வந்த அனிதா (2015): மோசடி செய்யப்பட்டது தொடர்பாக, “பேஸ்புக்’கில், அனிதா குறித்த விவரங்களுடன் சேவியர் பதிவு செய்தார். அதை பார்த்து, சேலத்தை சேர்ந்த சாமி என்பவர், அதே அனிதாவிடம், தான் ஏமாந்த பிரச்னையை தெரிவித்தார். பழைய பொருட்கள் விற்பனை செய்வதாக, இணைய தளத்தில் விளம்பரம் செய்து, தனது மொபைல் போன் மற்றும் “டிவி’யை விற்பதாக அனிதா தந்த விளம்பரத்தை பார்த்து, ஆயிரக்கணக்கில் பணம் அனுப்பி, அவர் ஏமாந்துள்ளார்[2]. சேவியர் மற்றும் சாமி ஆகியோர் கூறுகையில், “பலவிதங்களில் இப்பெண் பலரையும் மோசடி செய்துள்ளார். வேறு யாரும் அவரிடம் ஏமாறாமல் இருக்க வேண்டும். வக்கீல்கள் மற்றும் அடியாட்களுடன் அவர் வலம் வருவதாகத் தெரிகிறது. போலீசிடம் புகார் செய்தாலும், முறையாக விசாரிப்பதில்லை. முதல்வர் தனிப்பிரிவுக்கு அனுப்பிய மனு மீதும் நடவடிக்கை இல்லை. எங்களை போல் பலரும் அவரிடம் பணம் இழந்திருக்க வாய்ப்புள்ளது. அவர், இணைய தளத்தில் தொடர்ந்து விளம்பரம் செய்து வருகிறார். போலீசார், விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

குற்றங்கள் ஏன் ஏற்படுகின்றனர் அலசல் தேவை

ஆண்களுக்கு நிகராக அல்லது மிஞ்சும் வகையில் குற்றங்களில் ஈடுபடும் பெண்கள்!:  இணைய தளத்தில் பெண் தேடும் இளைஞர்களை குறி வைத்து, பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டுள்ள சென்னையை சேர்ந்த இளம்பெண்ணால், பலரும் பணம் இழந்து தவிக்கின்றனர், என்று செய்திகளை வெளியிட்டாலும், படித்த இளம்-பெண்கள் இத்தகைய குற்றங்களை ஏன் செய்கிறார்கள் என்று அலசாமல் இருக்கிறார்கள். நிறைய மாணவ-மாணவிகள் ஐ.டி முதலிய தொழிற்நுட்ப படிப்புகள் படித்து, கல்லூரிகளிலிருந்து வெளியே வரும் போது, குறைந்த அளவிலேயே “கேம்பஸ் இன்டர்வியூ” முறையில் நல்ல வேலை கிடைத்து, ரூ.25,000/- முதல் ரூ.40,000/- என்று வேலை கிடைக்கிறது. அதையெடுத்து நல்ல மார்க்குகள் வாங்கி சாமர்த்தியசாலிகளாக இருப்பவர்களுக்கு ரூ.10,000/- முதல் ரூ.20,000/- வேலை கிடைக்கிறது. மற்றவர்களுக்கு ரூ.10,000/- மற்றும் அதைவிட குறைவாக வேலை கிடைக்கிறது. ஆனால், வேலை இல்லாமல் அவதி படுவோர் அதிகமாக இருக்கின்றனர். இதை விட “டிராப்-அவுட்” மாணவ-மாணவியர்களின் நிலை இன்னும் மோசமாக இருக்கிறது. அவர்களது குடும்பங்களும், ஏற்கெனவே, லட்சங்களைக் கொட்டி அழுததால், மிகவும் கஷ்டமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில், இம்மாணவ-மாணவிகள் சந்தித்துப் பேசிக் கொள்ளும் போது, சினிமா என்றெல்லாம் வெளியே செல்லும் போது, வேலை-வேலையின்மை, நிறைய சம்பளம்-குறைந்த சம்பளம், செலவு செய்யும் தன்மை – செலவு செய்ய முடியாமல் இருக்கும் நிலை, முதலியன வெளிப்படுகின்றன. என்னத்தான் அவர்கள் நட்பு முறையில் அனுசரித்துச் சென்றாலும், ஒருநிலையில் பிரச்சினை ஏற்படுகிறது.

குற்றங்கள் ஏன் ஏற்படுகின்றன

சமூக ஒழுக்கமின்மை, தனிமனித கட்டுப்பாடின்மை: இல்லை-இயலாமை என்றவர்கள் மற்றவர்கள் போல இருக்க ஆசைப்படுகிறார்கள். முடியவில்லை அல்லது முடியாது எனும் போது, வேறு வழிகளையும் பின்பற்ற தயாராகி விடுகிறார்கள். அபோழுது தான் சட்டமீறல்கள் ஏற்படுகின்றன. தார்மீகம் ஏற்கெனவே சீரழிந்துள்ள நிலையில், சட்டம்-நீதி பற்றிய உணர்வும் மறக்கப்படுகின்றன. “கொன்றால் பாவம், தின்றால் போச்சு” என்பது எல்லாவற்றிலும் பின்பற்றப்படுகிறது. ஊழல் என்பதோ, தமிழகத்தில் 60 ஆண்டுகளாக நியாயப்படுத்தப் பட்டு வந்துள்ளது. “லஞ்சம் கொடுக்க லஞ்சம் வாங்கு” என்ற புதுமொழியினையே உண்டாக்கி வைத்துள்ளார்கள். மேலும், ஆட்சி செய்பவர்களே ஒழுக்கமின்மை, பலமணங்கள் புரிந்தவர்கள், குற்றங்களில் ஈடுபட்டவர்கள், ஜெயிலுக்குச் சென்றவர்கள் என்றெல்லாமிருக்கும் போது, அவர்கள் மீது மக்களுக்கு மதிப்பு-மரியாதை இல்லாமல் போகிறது. பதவியில் இருப்பதனால் கொடுக்கும் மரியாதை கிடைக்குமே தவிர, தனிப்பட்ட முறையில் எதுவும் இருக்காது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இது, எப்படி சினிமாகாரனை “வரான், போறான், வராண்டா-போரான்டா” என்கிறார்களோ, அரசியல்வாதிகளையும் அப்படித்தான் விளிக்கிறார்கள், குறிப்பிடுகிறார்கள், மற்றும் பேசிக்கொள்கிறார்கள்.

குஷ்பு, கற்பு, மணியம்மை

சமூகத்தை சீரழித்து வரும் சினிமாத் துறை: போதாகுறைக்கு சினிமாக்கள் கேவலமாக வெளி வந்துக் கொண்டிருக்கின்றன. கொச்சையான வசனங்கள், சேரி பாஷையை விட மோசமான வார்த்தை உபயோகம், ஆபாசமான பாடல்கள், ஒரு பெண்-பல ஆண்கள்-காதல்-உறவு அல்லது ஒரு ஆண்-பல பெண்கள் காதல்-உறவு என்ற ரீதியில் கதைகள், போர்னோகிராபியை மிஞ்சும் கொக்கோக நடனங்கள்……..இப்படி நாத்திக சித்தாந்தம், பகுத்தறிவு கொக்கோக சினிமா, இபற்றில் ஈடுபட்டுள்ளவர்களே கல்லூரிகளை வைத்து நடத்தும் நிலை, இவற்றால் என்ன நடக்கும்? அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. மீன் விற்று சம்பாதித்த காசு நாறுமா என்றால், லஞ்சம் வாங்கி கல்லூரி கட்டிய கல்லூரியில் படிப்பு வராது என்பார்களா பகுத்தறிவுவாதிகள்?

 சுயமரியாதை திருமணம் பெரியார் முன்னிலையில்

அதிகமாக பாதிப்பு அடைவது பெண்கள் தாம்: இப்படி எல்லா நிலைகளிலும் சீர்கெட்டுள்ள நிலைகளில், பெண்கள் எளிதாக பாதிக்கப்படுகிறார்கள். அவர்களைப் பொறுத்த வரையில், ஒருமுறை தவறக்கூடாது, தவறினால், மறுமுறை தவறினால் பரவாயில்லை என்ற நிலையில் இருக்கிறார்கள். இதனால், சாதாரண குற்றங்களிலில்ருந்து, பெரிய குற்றங்கள் செய்யும் போது, அதே மனப்பாங்கு வளர்கிறது, அதிகமாகிறது. காதல், ஆண்-பெண் உறவு, கல்யாணம்  என்றெல்லாம் வரும் போது, அத்தகைய உணர்வுகள் அதிகமாகவே பாதிக்கப்படுகின்றன. இங்குதான், பெண்களின் சீரழிவு அதிகமாகிறது. பாதிக்கப் பட்ட பெண், முதலில் ஆணை, ஆண்களை, ஆண்-வர்க்கத்தை எதிரியாக பாவிக்கிறாள். அவர்களை எப்படியாவது வீழ்த்த வேண்டும், ஒழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொள்கிறாள். அவ்வாறு செயல்படும் போது, அவள் அதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. தவறான –தாம்பத்திய உறவுகள், உறவுமுறைகள் முதலியவையும் மறுக்கப்படுகின்றன.

நிலைமை மாற வேண்டும்: தொடர்ந்து இத்தகைய குற்றங்கள் நடைபெற்றுவருவதால், நிலைமை மாற வேண்டும், அதாவது, கடந்த 60 ஆண்டு கால ஆட்சி, சித்தாந்தம் முதலியவை சமூகத்திற்கு உபயோகமாக இல்லை என்றாகிறது. அதனால், மாற்று வழி என்ன எனும்போது, ஏற்கெனவே உள்ளவற்றைத்தான் மக்கள் ஏற்றுக் கொண்டு நடக்க வேண்டும். அதைப் இன்பற்றி நடப்பவர்களில் பெரும்பாலோர் சந்தோஷமாக, சாதாரண குடிமகனாக, அமைதியாக இருக்கிறார்கள் எனும்போது அவற்றை ஏற்றுக் கொண்டு நடக்க வேண்டும். வர்த்தமான-காலநிலைகளில் அவற்றில் மாறுபாடுகள் இருந்தால், அவற்றால் தவறு, தீமை என்றால், தாராளமாக மாற்றிக் கொள்ளலாம். அதற்கான வழிமுறைகள் இந்தியாவில் தாராளமாக இருந்துள்ளன, இருக்கின்றன. பெண்கள் மதிக்கப் படவேண்டும் என்றால், அத்தகைய முறைகளை மறுபடியும் அறிமுகப்படுத்த வேண்டும்.  பழமை, பஞ்சாங்கம், இடைக்கால தத்துவம், என்றெல்லாம் பிரச்சாரம் செய்வதை விடுத்து, பின்பற்ற வேண்டும். பெண்மை போற்றப்படவேண்டும்-காக்கப்படவேண்டும், தாய்மை தூய்மையாகக் கருதப் படவேண்டும்-போற்றப்படவேண்டும், கற்பு பின்பற்றப்படவேண்டும்-காக்கப்படவேண்டும். அப்பொழுது குடும்பங்கள் பேணப்படும், சமூகம் மேன்படும்.

© வேதபிரகாஷ்

17-02-12016

[1] தினமலர், திருமண ஆசை காட்டி ஆன்லைனில் மோசடி; “வலைவிரித்து ஏமாற்றும் இளம்பெண், பிப்ரவரி.12,2015.02.13.

[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1182214&Print=1

அனிதா வேலை வாங்கித் தருவதாக ஆசைக் காட்டி, மயக்கி, இளைஞர்களை ஏமாற்றி லட்சங்களைப் பறித்தது!

பிப்ரவரி 17, 2016

அனிதா வேலை வாங்கித் தருவதாக ஆசைக் காட்டி, மயக்கி, இளைஞர்களை ஏமாற்றி லட்சங்களைப் பறித்தது!

அனிதா மோசடி பிப்ரவரி 2016.1யார் இந்த அனிதா?[1]: “ஹலோ….. நான் அனிதா பேசுகிறேன்” என்று பலரை ஏமாற்றிய இளம்பெண் அனிதாவும், அவருடைய கணவர் சுரேசும் சிறை கம்பிகளை எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள், என்று தமிழ் ஊடகங்கள் செய்திகளை அள்ளி வீசியுள்ளன. அனிதாவுக்கு சொந்த ஊர் அருப்புக்கோட்டை. அங்கு பி.சிஏ இரண்டாம் ஆண்டு படித்தபோது மார்க்கெட்டிங் மேலாளராக இருந்த குமாருடன் காதல் மலர்ந்தது. இருவரும் வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டு, சென்னையில் குடியேறினர். இவர்களது இல்லற வாழ்க்கை இனிமையாக பயணித்தது. இந்த சூழ்நிலையில் அனிதா, சூப்பர் மார்க்கெட் தொடங்கலாம் என்று குமாரிடம் சொல்ல… அதற்கு அவரும் பச்சைக்கொடி காட்டினார். கடனாக 2 லட்சம் ரூபாய் வாங்கி கொடுத்தார் குமார். அதை அருப்புக்கோட்டைக்கு கொண்டு சென்று 6 மாதம் காலம் அங்கேயே தங்கினார். குமாரிடம், சூப்பர் மார்க்கெட் பணிகள் நடந்து வருவதாக அவ்வப்போது போனில் தகவல் சொன்னார்.

அனிதா மோசடி பிப்ரவரி 2016.2கணவர் மீது புகார் கொடுத்த அனிதா[2]: 6 மாதம் கழித்து அருப்புக்கோட்டைக்கு சென்று குமாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு சூப்பர் மார்க்கெட் தொடங்குவதற்கான எந்தப்பணிகளும் நடக்கவில்லை. இதுகுறித்து அனிதாவிடம் அவர் கேட்க, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பிறகு சமரசமாகி மீண்டும் சென்னைக்கு வந்தனர். கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டால் அது எந்த நேரத்திலும் உடைந்து விடும் என்பதைப் போல அனிதாவுக்கும், குமாருக்கும் அடிக்கடி தகராறு. இறுதியில் 2010ல் சேலையூர் காவல் நிலையத்தில் குமார் மீது புகார் கொடுத்தார் அனிதா. போலீஸார் இருவரிடமும் விசாரணை நடத்தி சமரசப்படுத்தினர். சிறிது காலத்துக்குப் பிறகு மீண்டும் தகராறு ஏற்பட, விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நடந்து வரும் சமயத்தில் சுரேசுடன் அனிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர் இருவரும் கணவன், மனைவியாக வாழ்ந்தனர். தமிழகத்து பெண்கள் இவ்வாறு புரட்சி செய்து வருகின்றனர் போலும்.

அனிதா மோசடி பிப்ரவரி 2016.3வேலை வாங்கித் தருகிறேன் என்று மோசடியை ஆரம்பித்தது[3]: ஆடம்பரமாக வாழ வேண்டும், ஜாலியாக இருக்க வேண்டும் என்ற கோள்கைக்கு, நிறைய பணம் வேண்டுமே, என்ன செய்வது? இந்த சூழ்நிலையில் அனிதா, ஆடம்பரமாக வாழ தன்னுடைய கவர்ச்சிகரமான பேச்சையே மூலதனமாக்கத் தொடங்கினார்[4]. பஸ், ரயில் நிலையம் போன்ற பொது இடங்களில் நின்று கொண்டு இளைஞர்களுக்கு வலைவீசுவார். இந்த வலையில் சிக்குபவர்களிடம் நெருங்கிப் பழகுவார். அப்போது தன்னை எம்என்சி (ஐடி) நிறுவனத்தில் வேலைப்பார்ப்பதாகவே அறிமுகப்படுத்திக் கொள்வார். தனது வலையில் சிக்கியவர்களின் விவரங்களை சேகரித்தப்பிறகு, ‘நீங்கள் படித்த படிப்புக்கு எங்கள் கம்பெனியில் நல்ல வேலை வாங்கித் தருகிறேன்’ என்று அக்கறையாக பேசுவார்[5]. அதை நம்பி பயோடேட்டா கொடுத்தால் வேலைக்கான ஆர்டரையும் தயார் செய்து கொடுத்துவிடுவார் அனிதா. அப்போது ரூ. 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை கமிஷனாக பெற்றுக்கொள்வார். அனிதா கொடுத்த ஆர்டரைக் கொண்டு வேலைக்குப்போகும்போதுதான் அது போலி என்பது தெரியவரும். துணிச்சலாக போர்ஜரியிலும் ஈடுப்பட்டது தெரியவருகிறது. லெட்டர்பேட் அச்சடித்தல் முதலிய வேலைகளை இவள் மட்டும் செய்திருக்க முடியாது என்பது இதிலிருந்தே தெரிய வருகிறது. இவ்வாறு அனிதாவிடம் வேலைக்காக பணம் கொடுத்து ஏமாந்தவர்களின் பட்டியல் நீள்கின்றன.

அனிதா மோசடி பிப்ரவரி 2016.9வீடுகள் கட்டியது, வி..பிக்களைக் கூட்டி வந்தது: பட்டியல் நீண்டதால், பண வரவும் அதிகமாகத்தான் இருந்தது. இளைஞர்களிடம் வாங்கிய பணத்தில், சென்னை பெரும்பாக்கத்திலும், அருப்புக்கோட்டையிலும் உறவினர்கள் பெயரில் வீடுகளைக் கட்டியுள்ளதாகவும், மேலும், பினாமிகளின் பெயரில் பல்வேறு இடங்களில் வீடுகளையும், நிலங்களையும் வாங்கி குவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், பல அரசியல் பிரமுகர்களையும் வீட்டுக்கு வரவழைத்து மது விருந்தளித்து லட்ச கணக்கில் பணத்தை கறந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது[6]. சமூக வலைதளங்கள் மூலம் பல இளைஞர்களுக்கு காதல் வலை வீசி பணத்தை கறந்த அருப்புக்கோட்டை அனிதா, அவர்களை வீட்டுக்கு வர வழைத்து மது விருந்தளித்து குத்தாட்டம் போட்ட பரபரப்பு வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன[7]. ஆக, சலமும் கொடுத்த விதம் பூர்த்தியடைந்து விட்டது.

அனிதா மோசடி பிப்ரவரி 2016.4நியூஸ்.7 செனல் வெளியிட்டுள்ள வீடியோ[8]: இப்பொழுது, அவர்களுடன் அனிதா போட்ட குத்தாட்ட வீடியோ கட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூஸ்.7 செனல் வெளியிட்டுள்ள வீடியோவில் அனிதா மற்றும் இரண்டு பெண்கள் மற்றும் ஆண்கள் காணப்படுகின்றனர்.

  1. அனிதாவெள்லை நிற சுடிதார் ஆடை.
  2. இரண்டாவது பெண்நீளம்மஞ்சள் சுடிதார் ஆடையில்.
  3. மூன்றாவது பெண்மரக்கலர் சுடிதார்சிகப்பு படுதா ஆடையுடன்.
  4. ஒரு ஆண்கத்தரிப்பு கலர் டிசர்ட், ஊதா நிற லுங்கியுடன்.
  5. இரண்டாவது ஆண்வெள்ளை கலர் சர்ட் மற்றும் பேன்ட்.

முதலில் அனிதா இரண்டாவது பெண்ணுடன் ஆடுகிறார். அப்பொழுது, ஒரு ஆண் மூன்றாம் பெண்ணையும் ஆடுமாறு கையினால் தள்ளுகிறார். அப்பெண் நின்று கொண்டு பார்த்துக் கொண்டிருந்தாள். பிறகு, மூன்றாம் பெண்ணும் சேர்ந்து ஆடுகிறாள். இடையே, இரண்டாவது பெண்ணின் படுதா சரியும் போது, முதல் ஆண் அதனை சரி செய்கிறான். அப்பொழுது, இரண்டவது ஆண் முத்தம் கொடுப்பது போன்று நெருங்கி வருகிறான். ஆட்டம் முடிந்து விடுகிறது[9]. ஆனால், முதல் ஆண், அனிதாவை தனது கைகளில் தூக்கிக் கொண்டு ஆடுகிறான். அப்பொழுது, இரண்டாவது ஆண் டம்பளரில் கொடுக்க முயற்சிக்கிறான். எல்லோருமே சிரித்து, ஜாலியாக இருப்பது தெரிகிறது. இதை வீடியோ எடுத்தவர் இவர்களுக்குத் தெரிந்தவர் என்பது அவர்களின் நடவடிக்கையிலிருந்தே தெரிகிறது[10].

 அனிதா மோசடி பிப்ரவரி 2016.5

அனிதா மீது புகார்கள் கொடுக்கப் பட்டது: இந்த சூழ்நிலையில் சென்னையில் மழை வெள்ளத்தால் எம்என்சி கம்பெனிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இதைச் சொல்லி பணம் கொடுத்தவர்களை அனிதா ஏமாற்றி வந்தார். அவசரப்படுத்தியவர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலைவாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்தார்[11]. இதில் சில வழக்கறிஞர்களும் தொடர்பு இருப்பது தெரிகிறது. ஏனெனில், சில வழக்கறிஞர்களே அவளிடத்தில் பணம் கொடுத்து ஏமாந்துள்ளனர். வழக்கறிஞர்கள் ஏன் பணம் கொடுத்தனர் என்று தெரியவில்லை. இந்த சமயத்தில் அனிதாவிடம் ஏமாந்த மலையரசன் மற்றும் சில வழக்கறிஞர்கள், சென்னை உயர் நீதிமன்ற போலீஸ் நிலையத்தில் அனிதா மீது புகார் கொடுத்தனர். அந்த புகார் மனுவில், ‘அனிதா சென்னை ஐகோர்ட்டில் வேலை வாங்கித்தருவதாக தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ.12 லட்சத்தை சுருட்டிவிட்டதாகவும், வேலையும் வாங்கித்தரவில்லை, பணத்தையும் திருப்பி தரவில்லை. பணத்தை கேட்டால், கொலை மிரட்டல் விடுக்கிறார் என்றும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது[12].

© வேதபிரகாஷ்

17-02-12016

[1] விகடன், ஹலோநான் அனிதா பேசுகிறேன்…!’ – சினிமாவை மிஞ்சிய நிஜக்கதை!, Posted Date : 15:56 (13/02/2016).

[2] http://www.vikatan.com/news/tamilnadu/58970-fake-it-girl-girl-arrested-for-fraud.art

[3] எஸ்.மகேஷ், ஹலோநான் அனிதா பேசுகிறேன்…!’ – சினிமாவை மிஞ்சிய நிஜக்கதை!, விகடன், Posted Date : 15:56 (13/02/2016).

[4] தினகரன், வசீகர பேச்சால் மயக்கியது அம்பலம: உயர் நீதிமன்றத்தில் வேலைவாங்கி தருவதாக வாலிபர்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்த பட்டதாரி பெண், மாற்றம் செய்த நேரம்:2/13/2016 1:23:17 AM.

[5] தமிழ்.ஒன்.இந்தியா, வேலை தர்றேன்காசு தாங்ககாதல் வலை வீசி இளைஞர்களைக் காலி செய்த மோசடி ராணி!, Posted by: Jayachitra, Published: Friday, February 12, 2016, 16:10 [IST].

[6] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/dancing-anitha-who-money-laundering-youngsters-116021600006_1.html

[7] வெப்துனியா, பண மோசடி ராணி அனிதாவின் மது விருந்து குத்தாட்ட வீடியோ வெளியானது,Last Modified: செவ்வாய், 16 பிப்ரவரி 2016 (10:16 IST)

[8] http://ns7.tv/ta/dancing-anitha-who-money-laundering-youngsters.html

[9] நியூஸ்.7, இளைஞர்களிடம் பண மோசடி செய்த அனிதாவின் குத்தாட்டம், Updated on February 16, 2016.

[10] http://ns7.tv/ta/dancing-anitha-who-money-laundering-youngsters.html

[11] நியூஸ்.7, சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் மோசடி, Updated on February 12, 2016.

[12] தினத்தந்தி, ஐகோர்ட்டில் வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்த பெண்: இளைஞர்களிடம் காதல் லீலையில் ஈடுபட்டதாக பரபரப்பு, மாற்றம் செய்த நாள்: வெள்ளி, பெப்ரவரி 12,2016, 4:15 AM IST; பதிவு செய்த நாள்: வெள்ளி, பெப்ரவரி 12,2016, 12:42 AM IST.

அம்மாவை மதிக்கும் ரஜினியும், அம்மாவை மிதிக்கும் அனிருத்தும் – அநாகரிகத்தின் உச்சம் – “……coz mother fucka aint nobody fucking with my…(heckling)” கொலைவெறியைத் தொடரும் இந்த உடலுறவு வெறி!

ஜனவரி 23, 2014

அம்மாவை மதிக்கும் ரஜினியும், அம்மாவை மிதிக்கும் அனிருத்தும் – அநாகரிகத்தின் உச்சம் – “……coz mother fucka aint nobody fucking with my…(heckling)” கொலைவெறியைத் தொடரும் இந்த உடலுறவு வெறி!

மேனாட்டு மோகம், அமெரிக்கக் கொக்கோகம், இந்திய பெணமையை தாக்கும் போக்கு

மேனாட்டு மோகம், அமெரிக்கக் கொக்கோகம், இந்திய தாய்மையை தாக்கும் போக்கு

ஜனவரி 2014ல் நடக்கும் தெருகூத்துகள்: “அரவிந்த் கேசரிவாலும், அநிருத் ரவிச்சந்திரனும் – இந்திய சமூகத்தை சீரழிப்பாளர்கள் தாம் – வரம்புகளை மீறும் பிரபலமாக்கும் பண்டிததனம், பாராட்டு, வளரும் விபரீதங்கள்” என்ற தலைப்பிலும்[1], “தாயுடன் உடலுறவு………………………….” என்ற கேவலமான பாடலை இணைத்தளத்தில் வெளியிட்ட விவகாரத்தை “இளைஞர்களைக் கெடுக்கும் கலப்பு இசையை பிரபலமாக்கும் இளைஞனின் பண்டிததனம், பாராட்டு, வளரும் விபரீதங்கள்!” என்ற தலைப்பிலும்[2] பதிவு செய்திருந்தேன். கூத்துகள் தெருக்களில் தான் நடக்கும் என்பதில்லை, இணைத்தளத்திலும் நடக்கின்றன! 21-01-2014 அன்று காலையில் படித்த இரண்டு செய்திகள் –

  1. அரவிந்த் கேசரிவால் தெருப்போராட்டதை நிறுத்திக் கொண்டு விட்டார்.
  2.  அநிருத் ரவிச்சந்திரனின் “தாயை………………………” என்ற பாடலை இணைதளத் தெருவிலிருந்து நீக்கிவிட்டார்கள்.

இவை என் கண்களில் பட்டதால், மிகவும் வருத்ததுடன் இதனை பதிவு செய்ய வேண்டியதாகி விட்டது. முதலில் வேண்டாம் என்று நினைத்தேன், ஆனால், இன்றைய இளைஞர்களின் மீது அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதால், அதிலுள்ள ஆபத்தை உணர்ந்து அதனை வெளிப்படுத்த தீர்மானத்துடன் பதிவு செய்ய முடிவு செய்தேன். அதிலும் ஆன்மீகம், பக்தி என்றெல்லாம் பேசி வரும் ரஜினி குடும்பத்திலிருந்து அத்தகைய கீழ்த்தரமான பாடல் வந்திருப்பதால், வேறுவழியில்லாமல் கண்டிப்புடன் பதிவு செய்கிறேன்.

மேனாட்டு மோகம், அமெரிக்கக் கொக்கோகம், இந்திய பெணமையை தாக்கும் போக்கு

மேனாட்டு மோகம், அமெரிக்கக் கொக்கோகம், இந்திய பெண்மையை தாக்கும் போக்கு

இந்திய சமூகத்தை சீரழிப்பாளர்கள் தாம்வரம்புகளை மீறும் பிரபலமாக்கும் பண்டிததனம், பாராட்டு, வளரும் விபரீதங்கள்! என்ன படித்தாலும் அதிக, மிக அதிக……………..ஆசை, பேராசை இருப்பதினால், ஒரெ நாளில் புகழ் பெற்றுவிட வேண்டும், ஊச்சத்தில் ஏறிவிட வேண்டும், உலகத்தில் தம்மைப் பற்றி பேச வேண்டும் என்ற ஆணவத்தினால், குறுகிய காலத்தில் கிடைத்த சந்தர்ப்பத்தை இவ்வாறு கேவலமாக்கிக் கொண்ட நிலை இவரிடத்திலும் தெரிகிறது. அரவிந்த் கேசரிவால் திடீரென்று முதலமைச்சர் ஆனார் அல்லது ஆக்கப்பட்டார்! அநிருத் ரவிச்சந்திரன் கொலைவெறியில் புகழ் பெற்றதால், “,………..coz mother fucka aint nobody fucking with my………………………………(heckling)” என்ற சொல்லமுடியாத அளவிற்கு இறங்கிவிட்டான்! வரம்புகளை மீறும் பிரபலமாக்கும் பண்டிதத்தனம், பாராட்டு, வளரும் விபரீதங்கள் இந்தியாவை பாதிக்கத்தான் செய்கின்றன. ஆகவே, இவர்களது கேவலங்களை வீட்டில் செய்தாலும், தெருவில் செய்தாலும், இணைத் தளத்தில் செய்தாலும், மற்றவர்கள் சும்மா இருக்க முடியாது.

மேனாட்டு மோகம், அமெரிக்கக் கொக்கோகம், இந்திய பெணமையை தாக்கும் போக்கு

மேனாட்டு மோகம், அமெரிக்கக் கொக்கோகம், இந்திய பெணமையை தாக்கும் போக்கு

ரஜினிகாந்தின் பின்னணியில் மிளிரும் அனிருத் ரவிச்சந்திரன்: அனிருத் ரவிசந்திரன் நடிகர் ரவி ராகவேந்திரன் மற்றும் லட்சுமி என்ற நர்த்தகியின் மகன் மற்றும் லதா ரஜினிகாந்தின் மைத்துனன். அதாவது ரவி ராகவேந்திரன் லதா ரஜினிகாந்த்தின் சகோதரர். ரஜினியின் பெண்களான ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா இவர்களின் ஒன்றுவிட்ட சகோதரன். ஜிங்ஸ் [Zinx] என்ற இசைக்குழுவை வைத்து நடத்தி, “கொலைவெறி” பாடல் மூலம் 21 வயதிலேயே பிரபலமான இளைஞன்[3]. பத்மா சேஷாத்ரி மற்றும் லயோலாவின் கலவை, அந்த இளைஞனின் மேனாட்டு மற்றும் இந்திய கர்நாடகத்தின் கலவை / குழப்பத்தில் வெளிப்படுகிறது. காலத்தின் கோலத்தால் அதுவே பிரபலமாகி இளைஞர்களிடம் வரவேற்பையும் பெற்று வருகிறது. இந்நிலையில் புகழுக்காக, பணத்திற்காக என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்ற போக்குத்தான் தெரிகிறது.

மேனாட்டு மோகம், அமெரிக்கக் கொக்கோகம், இந்திய பெணமையை தாக்கும் போக்கு

மேனாட்டு மோகம், அமெரிக்கக் கொக்கோகம், இந்திய பெணமையை தாக்கும் போக்கு

வியாபார நோக்கோடு பாடலை முன்னமே இணைதளத்தில் வெளியிடுவதுகலாட்டா செய்வது: “வை திஸ் கொலைவெறிடி” என்ற பாடலை 16-11-2011 அன்று திரைப்படம் வெளிவரும் முன்னரே இணைதளத்தில் வெளியிட்டு பிரபலம் ஆக்கப் பட்டது. “தங்கிலிஸ்” என்று தமிழையும் கெடுத்து, சீரழித்து, கொலை செய்து வரும் இந்த விபரீதமான, இசை அமைப்பு மற்றும் பாடக பண்டிதத் தனம், பாராட்டப் பட்டது, போற்றப்பட்டது, பரிசு-பட்டங்கள் வேறு கொடுக்கப்பட்டன. அத்தகைய ஊக்குவிப்பு, இவ்வாறே இப்பொழுது இன்னொரு பாடலை வெளியிட்டிருப்பது போல தெரிகிறது. இன்றைய நிலையில் இணைத்தள டுவிட்டர்[4], பேஸ்புக் சமூக சீரழிவுகளை நோக்கிச் சென்ரு கொண்டிருக்கிறது என்பது தெரிந்த விசயமே. சமீபத்தைய பெண்களின் தற்கொலைகள், சிறுமிகள்-இளம் பெண்கள் முதலியோரை எந்த அளவிற்கு பாதித்துள்ளது என்பதை வெளிச்சமாகியுள்ளது. இந்நிலையில், இவ்வாறான பிரபலமான, அதிகாரப்பலம் முதலியவற்றை பின்னணியாகக் கொண்டுள்ள இந்த பண்டித இளைஞன் பெண்களை கேவலப்படுத்தும் பாட்டைப் பரப்ப வேண்டிய அவசியம் என்ன என்று தெரியவில்லை.

மேனாட்டு மோகம், அமெரிக்கக் கொக்கோகம், இந்திய பெணமையை தாக்கும் போக்கு

மேனாட்டு மோகம், அமெரிக்கக் கொக்கோகம், இந்திய பெணமையை தாக்கும் போக்கு

பாடலைக் கேட்ட பெண்கள் அனைவருமே முகம் சுளிக்கின்றனர்: பெண்களை இழிவுபடுத்தும் வகையில்  “Aint nobody ****” என்ற பாடலைப்பாடி[5] அதை வலைதளத்தில் (யூ-டியூப்) வெளியிட்டதற்காக இசையமைப்பாளர் அனிருத் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநகர காவல் ஆணையரிடம் வழக்கறிஞர் ஒருவர் திங்கள்கிழமை 20-01-2014 அன்று புகார் மனு அளித்தார்[6]. சென்னை காவல் ஆணையர் ஜார்ஜிடம், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஜெபதாஸ் பாண்டியன் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: “இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து பாடியுள்ள ஒரு ஆங்கில பாடல், யூடியூபில் வெளி வந்துள்ளது. அந்தப் பாடலின் வரிகளும் சப்டைட்டில்போல கீழே வருகிறது. பாடல் வரிகள் முழு வதும் தாய்மையை கொச்சைப்படுத்தும் விதமாக[7], பெண்களை இழிவுபடுத்தி எழுதப்பட்டுள்ளன. சில இடங்களில் தாய்மையையும் இழிவுபடுத்தும் விதமாக பாடல் வரிகள் உள்ளன. இதைக் கேட்பதற்கே அருவருப் பாக உள்ளது. பாடலைக் கேட்ட பெண்கள் அனைவருமே முகம் சுளிக்கின்றனர்.  சென்சார் போர்ட் அனுமதி அளிக்கும் முன்பே அதனை போட்டுள்ளதாகவும் கூறினார்[8]. நவநாகரிகமான, இளம்பெண்களைத் தவிர மற்ற பெண்கள் இந்த கருமாந்திரத்தைக் கேட்கக்கூடிய சந்தர்ப்பம் எழாது. ஆக, கேட்டப் பெண்கள் அவ்வாறு உண்மையிலேயே பாதிக்கப்பட்டார்களா என்று தெரியவில்லை.

அம்மாவை மதிக்கும் ரஜினியும், அம்மாவை மிதிக்கும் அனிருத்தும்: கேவலமான, அசிங்கமான, கீழ்த்தரமான பாடலை உருவாக்குவது, வெளியிடுவது, பரப்புவது – இதை எப்படி திட்டுவது என்றே தெரியவில்லை. ரஜினிகாந்தின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறிய வயதான இவன் இத்தகைய காரியத்தைச் செய்துள்ளான் என்றால், இதன் பின்னணி, நோக்கம் முதலியனவும் தெரிடயவில்லை. “First time ever, independent music, it is Anirudh You can fuck with me but aint nobody fucking with my music, music, music, musoooosic…………………….ic, ic, ……………..music, …… You can fuck with me but aint nobody fucking with my music,………..coz mother fucka aint nobody fucking with my………………………………(heckling)” இத்தகைய கேவலமான பாட்டு இன்னும் இணைதளத்தில் இருந்து வருகின்றது[9]. அம்மாவை மதிக்கும் ரஜினியும், அம்மாவை மிதிக்கும் அனிருத்தும் என்று எப்படி எடுத்துக் கொள்ள முடியும்? இவனது தாயார், சகோதரி, சித்தி லதா, மாமா ரஜினி, மைத்துனிகள்……முதலிய பெண்கள் எப்படி அப்பாட்டைக் கேட்டு ரசித்திருக்க முடியும்?

சமுதாயத்தை சீரழிக்கும் செயலில் அவர் ஈடுபட்டிருப்பது கண்டிக்கத் தக்கது: இப்படி ஒரு கீழ்த்தரமான பாடலை எழுதி, இசையமைத்து, பாடி, அதை வெளியிட்ட அனிருத் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக இந்தப் பாடலை யூடியூபில் இருந்து நீக்க வேண்டும். சைபர் கிரைம் போலீசார் மூலம், அனிருத் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கவும் வேண்டுகிறேன்”, இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது[10]. புகார் கொடுத்த பின்னர் நிருபர் களிடம் ஜெபதாஸ் பாண்டியன் கூறுகையில், ‘‘அனிருத்தின் செயல்களால் யூடியூபில் வெளியாகும் வீடியோ காட்சிகளையும் (January 16 onwards) தணிக்கை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அசிங்கமான வார்த்தைகளால் பாடல் பாடியுள்ள அனிருத், அதை நியாயப்படுத்தி பேஸ்புக், டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். சமுதாயத்தை சீரழிக்கும் செயலில் அவர் ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. புகாரை பெற்றுக் கொண்ட ஆணையர், உடனடியாக நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவு காவல் துறைக்கு உத்தரவிட்டிருக்கிறார்’’ என்றார்.

தனது கருத்தை தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உள்ளது: மனித உரிமை ஆர்வலர் சுதா ராமலிங்கம் கூறும்போது, ‘‘தனது கருத்தை தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உள்ளது. பேஸ்புக், டுவிட்டர், யூடியூப் போன்ற சமூக வலைதளங்கள் கருத்துக்களை சுதந்திரமாக தெரிவிக்க சரியான இடங்களாக உள்ளன. ஆனால், இதில் தவறான சிந்தனைகளை பரப்புவது கண்டிக்கத்தக்கது’’ என்றார்[11]. மற்ற நேரங்களில் சும்மா இருக்கும் இந்த அம்மையாரை, இப்பொழுது “தி இந்து” வலியச் சென்று கருத்தைக் கேட்டிருப்பது போலல தெரிகிறது. ஏனனில் கம்யூனிஸத்தில் நாறும் பெண்ணைப் பற்றிய விவரங்களைப் பற்றி இந்த அம்மையார் விவாதிப்பது கிடையாது. ஏன் அந்த அனிருத்தின் அம்மாவிடமே கருத்தைக் கேட்டிருக்கலாமே, இல்லை லதா ரஜினி அல்லது அவரது மகள்களிடம் கேட்டிருக்கலாமே?

உள்நோக்கத்துடன் அந்தபாடல் வெளியிடப் படவில்லை”: புகார் குறித்து, அனிருத்தின் தந்தையும், நடிகர் ரஜினிகாந்தின் மைத்துனருமான ரவி ராகவேந்தர், நேற்று, போலீஸ் கமிஷனர் முன் ஆஜராகி, உள்நோக்கத்துடன் அந்த பாடல் வெளியிடப்படவில்லை. எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு, 10 நிமிடங்களில், அந்த பாடல் நீக்கம் செய்யப்பட்டு விட்டது,” என, தெரிவித்தார்[12]. அனிருத்தை அலைபேசியில் தொடர்பு கொண்ட போலீசார், வளர்ந்து வரும் சூழ்நிலையில், இதுபோன்று சமூக பொறுப்பற்று இருக்க கூடாது என, கண்டிப்புடன் தெரிவித்தனர். ஆனால், அப்பாடல் இருந்து கொண்டுதான் இருக்கிறது[13]. உள்நோக்கத்துடன் அந்த பாடல் வெளியிடப்படவில்லை”, என்பதை மெய்ப்பிக்க என்ன ஆதாரம் இருக்கிறது என்று தெரியவில்லை. மேலும் குற்றம் புரிந்த அநிருத் செல்லாமல், தந்தை ஏன் சென்று வக்காலத்து வாங்க வேண்டும் என்று தெரியவில்லை. அதாவது, அசிங்கத்தை செய்து விட்டு, அதனை ஜீரணிக்கக் கூட முடியாத நிலையில் இருக்கும் அந்த இளைஞன் எப்படி அத்தகைய பாடலை உருவாக்க வேண்டும். மேனாட்டு மோகம், அமெரிக்காவின் கொக்கோகம், முதலியவற்றில் ஊறிவிட்டால் இப்படியெல்லாம் செய்வார்களா? பிறகு என்ன கடவுள், மதம், ஆன்மீகம் முதலியன இவர்களுக்கு வேண்டிக் கிடக்கிறது?

வேதபிரகாஷ்

© 23-01-2014


[5] A city-based advocate ap­proached the police co­mmissioner’s office on Monday to file a complaint against young music composer Aniru­dh Ravichander of Why this kolaveri fame, cont­e­nding that the musician’s new audio single, the teaser of which was recently released on YouT­ube, contains der­og­­atory marks against women.

http://www.deccanchronicle.com/140121/news-current-affairs/article/complaint-against-aniru%C2%ADdh-ravichander%E2%80%99s-audio-single-teaser

[6] தி இந்து, பெண்களைஇழிவுபடுத்திபாடியதாகஇசையமைப்பாளர்அனிருத்மீதுபுகார், ஜனவரி 21, 2014

[7] தினமலர், தாய்மையைகொச்சைப்படுத்தினாராஅனிருத்? போலீஸ்கமிஷனரிடம்தந்தைவிளக்கம், ஜனவரி 21, 2014

[8] The lawyer has demanded that police charge the music director for posting material that was not cleared by the Censor Board.

http://www.thehindu.com/news/cities/chennai/complaint-against-music-director/article5598215.ece

சமூக விரோத செயல்களுக்காக குழந்தைகள் கடத்தல்: சொல்கிறார் காங். எம்.பி!

ஓகஸ்ட் 15, 2011


சமூக விரோத செயல்களுக்காக குழந்தைகள் கடத்தல்: சொல்கிறார் காங். எம்.பி.,

 

உண்மையிலேயே, இவர் இந்த பிரச்சினையை எழுப்பியுள்ளாரா அல்லது மற்ற பிரச்சினைகளிலிருந்து கவனத்தைத் திருப்ப எழுப்பியுள்ளாரா என்பது தெரியவில்லை.

இருப்பினும், தமிழகத்தைப்  பொறுத்த மட்டிலுமே[1], அதிலும் சென்னையிலேயே பலமுறை வெளிநாட்டு ஃபிடோஃபைல் எனப்படும் செக்ஸ்-குற்றவாளிகள், தப்பி சுற்றி வரும் பாலியல் குற்றவாளிகள் என பலதரப்பட்டவர்கள் இன்டர்போல் எச்சரிக்கை மூலம் எச்சரிக்கப் பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இப்பிரச்சினை அதிகமாக இருப்பதாலும், குறிப்பாக கிருத்துவ மிஷனரிகள்[2], மேனாட்டவர்கள்[3] இங்கு வந்து பாலியல் குற்றங்களில்[4] ஈடுபட்டு[5], கைதாகி, பலர் தப்பித்து, சிலர் அகப்பட்டு, தண்டனைப் பெற்று, சிறையில் அடைக்கப்பட்டும் உள்ளனர்[6] என்பதை கவனித்துக் கொள்ளவேண்டும். கிருத்துவ மாநாடுகளே இதைப்பற்றி சென்னையிலேயே விவாதித்துள்ளன[7].

தமிழகத்திலேயே குழந்தைகள் கடத்தல், விற்றல், பாலியல் குற்றங்களில் ஈடுபடுத்துவது என்ற காரியங்கள் கடந்த 30-40 ஆண்டுகளில் அதிகமாகிக் கொண்டு வருகின்றன. அப்பொழுது இவ்விவகாரங்களை ஊடகங்கள் அமுக்கி வாசித்துக் கொண்டிருந்தன அல்லது சம்பந்தப் பட்டவர்கள் வெளியே வராமல் பார்த்துக் கொண்டனர். இப்பொழுது, ஓரளவிற்கு செய்திகள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன[8]. சமூக விரோத செயல்களுக்காக ஆண்டுதோறும் 44 ஆயிரம் குழந்தைகள் கடத்தப்படுவதாக தெரிவித்துள்ளார் நெல்லை தொகுதியின் எம்பி ராமசுப்பு[9]. இப்படி முக்கியமான பிரச்சினையை எழுப்பியதற்காக இவருக்கு நன்றி சொல்லவேண்டும்.

 

பாராளுமன்ற கூட்டத்தொடரின் பூஜ்ஜிய நேரத்தில் பேசியதாக தெரிவித்துள்ள ராமசுப்பு, பல மாநிலங்களில் ஆண்டுதோறும் கடத்தப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை மனித உரிமை ஆணையத்தின் புள்ளிவிவரப்படி 44 ஆயிரம் என்கிற கணக்கு தெரிய வருகிறது. இதுபோன்று கடத்தப்படும் குழந்தைகள் சமூக விரோத செயல்களில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்[10]. மருத்துவமனைகளில் இருந்து கடத்தப்படும் குழந்தைகள் பலர், குழந்தைகள் இல்லாத பெற்றோர்களுக்கு விற்கப்படுகின்றனர்[11]. இன்னும் சிலர் பிச்சையெடுக்கும தொழிலிலும் பணத்திற்காக பாலியல் தொழில் நடத்தும் கும்பலிடமும் விற்றுவிடுகின்றனர்[12]. இதுதொடர்பாக காவல்துறை உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. இதுபோன்ற குழந்தைகள் கடத்தும் கும்பல்கள் நாடு முழுவதும் 800 கும்பல்கள் செயல்படுவது பதற வைக்கும் விஷயம். எனவே இதுபோன்ற கடத்தலில் ஈடுபடும் கும்பல்களை கைது செய்யவும், குழந்தைகளை காப்பாற்ற வேண்டிய நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் நெல்லை தொகுதியின் எம்பி ராமசுப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரின் பூஜ்ஜிய நேரத்தில் பேசியதாக தெரிவித்துள்ளார்.

 

இந்தியா பாலியல் குற்றங்கள் அரங்கேற தேர்ந்தெடுக்கப்பட்டது போல, அத்தகைய செக்ஸ்-குற்றங்கள் அதிகமாகி வருவதைக் கண்டு, உச்சநீதி மன்றம் கடந்த ஜனவரி 2010ல் எச்சரிதுள்ளது[13]. அனாதை இல்லங்கள் நடத்துவதே குழந்தைகளிலிருந்து வளர்த்து அவர்களை செக்ஸில் ஈடுபடுத்துவதற்காகத்தான் என்று பலமுறை கிருத்துவர்கள் சிக்கியுள்ளனர்[14]. அபயகேந்திரங்கள் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பதும் வெளிவந்துள்ளது[15]. சென்னையே செக்ஸ் நகரமாகி விடுமா என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது[16].


[5] https://socialterrorism.wordpress.com/2010/05/08/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF/

https://socialterrorism.wordpress.com/2010/04/27/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2/

https://socialterrorism.wordpress.com/2010/03/30/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/

https://socialterrorism.wordpress.com/2010/02/12/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AE%E0%AF%8D-2/

https://socialterrorism.wordpress.com/2010/02/10/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95/

எரிக் மார்டினின் காமலீலைகள்: ஒன்பது இளம்பெண்களை கற்பழித்தான்!

நவம்பர் 18, 2010

எரிக் மார்டினின் காமலீலைகள்: ஒன்பது இளம்பெண்களை கற்பழித்தான்!

பிரெஞ்சு நாட்டு சல்லாபம், கொக்கோகம்: பிரெஞ்சு நாட்டுக் காரர்கள் செக்ஸ் விஷயத்தில் கொஞ்சம் வீக்குதான்! பிரபல எழுத்தாளரான அலெக்ஸண்டர் டூமாஸ் என்பவர் எப்பொழுதும் ஐந்தாறு பெண்களுடன் சல்லாபித்தவண்ணம் தான் இருப்பார் என்று தெரிகிறது. சென்னையில் ஈகா தியேட்டரில் “ஸ்பானிஸ் ஃபளை” என்ற படம் 1978ல் திரையிடப்பட்டது. அந்த ஸ்பானிஸ் பூச்சிற்கு ஒரு சக்தி இருக்கிறது. அதனை சாப்பிட்டால் அசாத்யமான செக்ஸ் வந்துவிடுமாம். அவ்வளவுதான் கண்ணில் படும் பெண்களுடன் உடனடியாக உடலுறவு கொள்ள ஆரம்பித்து விடுவார்களாம். ஒருவேளை, எரிக் மார்ட்டினும் அத்தகைய சக்தியைப் பெற்றானா என்று தெரியவில்லை. எரிக் மார்டின் கல்யாணம் செய்து கொண்டான், ஆனால், வாழ்க்கை கசந்தது. விவாக ரத்தானது.

இல்வாழ்க்கை கசந்ததால், அனாதை இல்லம், கொக்கோகம் பிரான்ஸ் நாட்டில் புரூசல்ஸ் பகுதியைச் சேர்ந்த எரிக் மார்டின் (54) புரூசல்ஸ் பகுதியில் ஆதரவற்ற சிறுவர்-சிறுமிகள் காப்பகம் நடத்தி வந்தான். அங்கு சுமார் 50க்கும் மேற்பட்ட சிறுவர்-சிறுமிகள் தங்கி இருந்தனர். அதாவது இந்த ஃபெடோஃபைல்கள் எல்லோருமே ஒரே மாதிரித்தான் இருக்கிறார்கள். ஒன்று தேவையானதைத் தேடி செல்வது அல்லது இப்படி காப்பகம் வைத்து நடத்துவது, வளர்ப்பது, அனுபவிப்பது.  அங்கு இருந்த 15 வயது நிரம்பிய இளம் சிறுமிகளைப் பார்த்தப்போது காம இச்சைக் கொண்டான்.  தாங்கமுடியாமல், இளம் மொட்டுகளை தொட்டே விட்டான். ஒன்று, இரண்டு என்று ஒன்பது சிறுமிகளை ஆசைதீரக் கற்பழித்தான். இதனால் புகார் கொடுக்கப்பட்டு, வழக்கு தொடர்ந்து, நீதிமன்|ற தீர்ப்பில் 15 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. ஆனால், முன்னமே குறிப்பிட்டப்படி[1], சிறையிலிருந்து தப்பி, சென்னைக்கு வந்து விட்டான்.

சிங்காரச் சென்னையில் மறைந்து வாழ்தல்: சென்னை, தமிழகம் இப்படி செக்ஸ் கூடாரமாகி வருவது வேடிக்கையாக இருக்கிறது. தமிழ் மக்கள் என்றுமே விருந்தோம்புவதில் வல்லவர்கள். வெள்ளைத் தோலைக் கண்டால் கேட்கவே வேண்டாம், சரண்டர் தான். அதிலும் அதிகமாக காசு வரும் என்றல், கேட்கவே வேண்டாம். இவ்வாறுதான், எரிக் மார்டின் எண்.14, நடேசன் தெரு மாதவரத்தில் வீடு வாடகைக்கு எடுத்தான். அந்த பிரெஞ்சுக்காரருடன் ஒத்துப்போக அண்டைவீட்டுக்காரர்களுக்கு நிறையவே பிரச்சினைகள் இருந்தன[2]. சாமியார் மாதிரி தனித்த வாழ்க்கை வாழ்ந்துவந்ததாக கூறுகின்றனர். “அந்த இடத்தையே எங்களுக்குப் பிடிக்கவில்லை. அந்த ஆளுக்கு ஆங்கிலம் கூட அவ்வளவாகத் தெரியவில்லை, பிரெஞ்சு மொழியிலேயே பேசிவந்தான்”, என்று ஒரு பெண்மணி கூறினார். இன்னொரு காரணம், “அவன் என்றுமே நேருக்கு நேராக கண்களைப் பார்த்து எங்களுடன் பேசியது கிடையாது. கிருஸ்துமஸ் அன்று தான், “ஹலோ” என்று கூறுவான்”, மற்றபடி யாருடன் பேசமாட்டான்.. எண்.14, நடேசன் தெருவில் இருந்த அவனுக்கு செடி-கொடிகள் மீட்து மட்டும் அலாதியான காதலாம்.

வீட்டைச் சுற்றி செடி-கொடிகளை வளர்த்து மர்ம வீட்டில் வாழ்ந்த காமுகன்: வாடகைக்கு எடுத்ததும் வீட்டைச் சுற்றி பல செடி-கொடிகளை வளர்க்க ஆரம்பித்தான். அவன் தங்கியிருந்த வீடு முழுவதும் செடி-கொடிகள் மண்டி கிடந்தன. அண்டை வீட்டார் கண்டபடி வளர்ந்திருந்த அந்த செடி-கொடிகளைப் பற்றி பலதடவை புகார் செய்துள்ளனர்.  ஆனால், அவற்றை வெட்ட அவன் அனுமதிப்பது இல்லை. வேலைக்காரப் பையனுக்கு சொன்னாலும், அவனை செய்ய விடுவதில்லை. “அவங்க கைகளை வெட்டிக் கொள்ளுங்கள் என்றால் அவர்கள் என்ன நினைப்பார்கள்”, என்று அந்த பையனிடம் சொல்வானாம். பானைகளில்பலவித செடிகள், தூண்கள், சுவர்கள் கூட கொடிகளால் பின்னப்பட்ட நிலையில் இருந்தன. வரண்டா மட்டுமல்லாது, மேலும், மாடியிலும் கூட கொடிகளை வளர்த்து படரவிட்டிருந்தான்.

மாடிவீட்டு கொட்டாயில் அயல்நாட்டவர்களுக்கு விருந்து; மாடியில் ஒரு ஓலைக்கொட்டாய் போட்டிருந்தான். அதில்தான் தன்னுடைய அயல்நாட்டு விருந்தாளிகளை உட்காரவைத்து காபி கொடுப்பான். அயல்நாட்டு விருந்தாளிகள் அவன் வீட்டிற்கு, குறிப்பாக கிருஸ்துமஸ் சமயத்தில் அதிகமாகவே வருவார்கள். அதென்ன கிருஸ்துமஸ் கூட்டம்? ஒருவேளை டான் பரவுன் எழுதியுள்ளது போல யாதாவது நடக்குமோ என்னமோ? மற்றபடி, அந்த வீட்டில் யாருமே இல்லாது போல இருக்கும். விளக்குகள் இப்பொழுதும் எரிந்து கொண்டே இருக்கும். அவை எப்பொழுதாவது தான் அணைக்கப்படும் அல்லது அணைக்கப்பட்டதே கிடையாது எனலாம்.

வெளியே சென்று வேலை செய்தல்; மற்றவர்களைப்போல இல்லாமல், இந்த காமுகன், காலை 11 மணிக்கு வெளியில் செல்வான், பிறகு மாலை தான் வருவான். அடிக்கடி தான் வைத்திருக்கும் பிரிமியர் காரில் எங்கோ சென்று வருவான். அயல்நாட்டு பயணிகளுக்கு, குறிப்பாக பிரெஞ்சுநாட்டவருக்கு கெயிடாகவும், பிரெஞ்சு மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு செய்தும் சம்பாதித்து வந்தான். அவன் ஒரு வேலைக்கரப் பையனையும், பெண்ணையும் வைத்திருந்தான்[3]. அதைத்தவிர அடையாளம் இல்லாத / பெயர் சொல்லப்படாத ஒரு அண்டைவீட்டுக்காரரும் உதவி வந்ததாகத் தெரிகிறது. வீட்டின் சாவிகளை தானே வைத்துக் கொள்வான். கேட்டின் சாவிகளை மட்டும் பணிப்பெண், வேலைக்காரப் பையனிடம் தந்துவந்தான். குழந்தைகளுடன் பேசியதையோ, நட்பாக இருப்பதையோ அண்டையார் என்றும் பார்த்ததில்லை[4].

வேதபிரகாஷ்

© 18-11-2010


[1] வேதபிரகாஷ், சிங்கார செக்ஸ் சென்னையில் இன்னுமொரு காமக்கொடூர செக்ஸ் வெறியன் கைது: மாதவரத்தில் மறைந்து வாழ்ந்த எரிக் மார்டின்!, https://socialterrorism.wordpress.com/2010/11/17/chennai-becomes-haven-for-fugitives-eric-martin/

[3] Cerise Negulici, Child sex abuser of France apprehended in Chennai,  Wed, 11/17/2010 – 05:28

http://frenchtribune.com/teneur/101981-child-sex-abuser-france-apprehended-chennai