18-பெண்களைக் கற்பழித்த சாமுவேலுக்கு ஒத்துழைத்த பெற்றோர், உற்றோர், மற்றோர் – பிறகு வருந்தியதால், இதெல்லாம் திரும்பப் பெறும் விவகாரங்களா என்ன? (தொடரும் செக்ஸ் குற்றங்கள்-2)
பிளேட் நாடகம் ஆடி அனைத்தையும் சாதித்தான்[1]: சாமுவேல் காதல் வலையில் சிக்காத இளம் பெண்களிடம் பிளேடால் கையை கிழித்து தற்கொலை செய்து கொள்வது போல் நடித்து அவர்களை தன் வலையில் சிக்கவைத்ததும் தற்போது தெரியவந்துள்ளது. பல முறை பல காரணங்களுக்காக சாமுவேலை பெற்றோர் கண்டித்தபோது அவர்களிடலும் இதே பாணியை அவன் கடைபிடித்துள்ளான். அவனது பெற்றோருக்கு திருமணம் நடந்து 10 ஆண்டுகள் குழந்தை இல்லையாம். பல கோயில்கள் ஏறி இறங்கி பிறந்த குழந்தை என்பதால், அவன் செய்த தவறுகளை பெற்றோர் கண்டுகொள்ளாமல் இருந்ததும் தற்போது தெரியவந்துள்ளது[2]. திருமணம் ஆகி, பத்தாண்டுகள் குழந்தை இல்லை, பிறகு பிறந்தது என்றால், அவனை ஒழுங்காக வளர்த்திருக்க வேண்டும். ஆனால், தந்தையும், தாயாரும் இப்படி பியூட்டி பார்லர்-கார் விற்பனை என்று வைத்துக் கொண்டு, அவனுக்கு உடந்தையாக இருந்தது, 18-பெண்களின் வாழ்க்கையை நாசமாக்கியுள்ளது. இனி அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் நிலை எப்படி இருக்குமோ?
சாமுவேலும், அவனது பெற்றோரும் ஓடி மறைந்தது: 25-09-2016 அன்று புகார் கொடுத்ததுமே, சாமுவேல் பெங்களூருக்கு ஓடிவிட்டான். பிறகு, அவனது பெற்றோரும் வீட்டைப் பூட்டி விட்டு மறைந்து விட்டனர். அவர் வசித்த மயிலாப்பூர் வீட்டில் போய் பெண் போலீசார் தேடியபோது, அவரது வீடு பூட்டிக்கிடந்தது[3]. விசாரித்த போது, போலீசார் தன்னை தேடுவதை அறிந்ததும், தனது நண்பர்களோடு பெங்களூருவுக்கு தப்பி ஓடிவிட்டார் என்று தெரியவந்தது[4]. அவரது பெற்றோரும் வீட்டின் கதவை பூட்டிவிட்டு தலைமறைவு ஆகிவிட்டனர்[5]. ஆக பெற்றோரும், ஒத்துழைக்கின்றனர் என்று தெரிகிறது. இதனால், போலீஸார் அவர்களை வலைவீசி தேடி வந்தனர்[6]. “இதற்கிடையே சாமுவேல் விஷயத்தில் உயர் அதிகாரி ஒருவர் நெருக்கடி கொடுத்ததால் மகளிர் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காமல் அவரை விடுவித்து விட்டனர். இதையடுத்து சாமுவேல் தலைமறைவாகி விட்டார்”, என்று “தமிழ் முரசு” எடுத்துக் காட்டியது. ஆக, அந்த உயர் அதிகாரியே, ஒருவேளை அப்படி ஐடியா கொடுத்து ஓடச்சொன்னார் போலும்.
சாமுவேல் மீது பல வழக்குகள் இருந்தன[7]: கடந்த ஒரு மாதத்திற்கு முன் ஆகஸ்ட்.2016 மயிலாப்பூரில் உள்ள கல்லூரி மாணவியை பின் தொடர்ந்து தொல்லை கொடுத்ததால் அந்த கல்லூரி மாணவியின் பெற்றோர் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் சாமுவேல் மீது புகார் அளித்ததும் விசாரணையில் தெரியவந்தது. மேலும், சாமுவேல் இரவு நேரத்தில் நண்பர்களுடன் ரேஸ் பைக் வீரராகவும் திகழ்ந்துள்ளார். கடந்த ஆண்டு கவர்னர் கான்வாய் செல்லும் போது அதிவேகமாக பைக் ஓட்டி கைதாகியிருக்கிறார். பேஸ்புக் மூலம் மற்றும் பள்ளியில் இருந்து கல்லூரிக்கு செல்லும் வசதிப்படைத்த மாணவிகளையே குறிவைத்து காதலிப்பது போல் நடித்து உல்லாசமாக இருந்து படம் எடுத்து மிரட்டி பணம் பறிப்பு செயலில் ஈடுபட்டதும், மிரட்டி பறிக்கப்பட்ட பணத்தை வைத்து கொண்டு நண்பர்களுடன் வெளிமாநிலங்களுக்கு சுற்றுலா சென்று வந்ததும் தெரியவந்தது. பெண்ணுடன் ஜல்ஸா முடிந்தவுடன், “வழக்கு எண் 18/9” படத்தில் வரும் காட்சியை போட்டுக் காட்டி மிரட்டி பணம் கேட்பது வாடிக்கையாக இருந்தது[8]. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். சாமுவேலுடன் அவரது நெருங்கிய நண்பர்கள் இரண்டு பேர் மோசடிகளில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இரண்டு பேரிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்[9]. இத்தகைய தொடர்புள்ள குற்றங்களை, ஒரு குழுவாக செய்வது, திட்டமிட்டு செய்ததே ஆகும். போலீஸ் அதிகாரி மற்ற தொடர்புகள் இருந்ததால், தப்பித்துக் கொள்ளலாம் என்ற மனப்பாங்கும், குற்றங்களைத் தொடர்ந்து செய்ய ஊக்குவி்த்துள்ளது.
27-09-2016 செவ்வாய்கிழமை சாமுவேல் கைது[10]: சாமுவேலின் நெருங்கிய உறவினர் ஒருவர் தமிழக போலீஸ் துறையில் உயர் அதிகாரியாக பணியாற்றுகிறார்[11]. அவர் சாமுவேலை காப்பாற்றுவதற்கு முயற்சித்து உள்ளார்[12]. சாமுவேலை விசாரணைக்கு ஆஜராக சொல்லுங்கள், விசாரணை நடத்திவிட்டு அவரை விட்டுவிடுகிறோம் என்று சிந்தாதிரிப்பேட்டை பெண் போலீசார் உறுதி அளித்துள்ளனர். இதை நம்பிய போலீஸ் அதிகாரி 27-09-2016 அன்று இரவு சாமுவேலை பெங்களூரிலிருந்து சென்னைக்கு வரவழைத்து உள்ளார். “புகார் கொடுத்த பெண் அழைத்ததால், மைலாப்பூரில் ஒரு கோவிலுக்கு சாமுவேல் வந்தபோது பிடிபட்டான்னென்று இந்தியன் எக்ஸ்பிரஸ் எடுத்துக்க் காட்டியது[13]. சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சாமுவேல் விசாரணைக்கு ஆஜரானார். போலீசார் சாமுவேலிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் 10 பெண்களோடு உல்லாசத்தில் ஈடுபட்டு, அவர்களின் ஆபாச படங்களை ‘பேஸ்-புக்’கில் வெளியிட்டிருப்பது தெரியவந்தது. இதுதொடர்பான ஆதாரங்களையும் போலீசார் கைப்பற்றினர். வலுவான ஆதாரங்கள் இருந்ததால் சாமுவேல் நேற்று கைது செய்யப்பட்டார்.
சாமுவேலுக்கு உதவிய போலீஸ் அதிகாரி: ஊடகங்கள், “சாமுவேலின் நெருங்கிய உறவினர் ஒருவர் தமிழக போலீஸ் துறையில் உயர் அதிகாரியாக பணியாற்றுகிறார்[14]. அவர் சாமுவேலை காப்பாற்றுவதற்கு முயற்சித்து உள்ளார்[15]. சாமுவேலை விசாரணைக்கு ஆஜராக சொல்லுங்கள், விசாரணை நடத்திவிட்டு அவரை விட்டுவிடுகிறோம் என்று சிந்தாதிரிப்பேட்டை பெண் போலீசார் உறுதி அளித்துள்ளனர்”, என்று குறிப்பிட்டாலும், அவர் யார் என்று தெரியவில்லை. 18-பெண்களை கற்பழித்த, வாழ்க்கையினை சீரழித்த அவனை எப்படி காப்பாற்ற நினைத்தார் என்று தெரியவில்லை. சட்டத்தை மீறியவனுக்கு துணை போவது, எந்த விதத்தில் நியாமானது என்று தெரியவில்லை. ஒருவேளை தனது பெண்ணை ஒருவன் அப்படி செய்திருந்தால், விட்டு வைப்பாரா? பிறகு, இக்காலத்தில், இத்தகைய பாரபட்ச மன்ப்பாங்கு எப்படி உருவாகிறது என்று தெரியவில்லை.
© வேதபிரகாஷ்
12-10-2016
[1] தினகரன், பெண்களை காதல் வலையில் வீழ்த்தியது எப்படி?, Date: 2016-09-29@ 00:24:28.
[2] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=248899
[3] தமிழ்.ஒன்.இந்தியா, 10 பெண்களை ஏமாற்றி காதலித்த காதல் மன்னன்: காதலிக்க மறுத்தால் ஆபாச புகைப்படம் பதிவு, By: Mayura Akilan, Published: Tuesday, September 27, 2016, 13:21 [IST].
[4] http://tamil.oneindia.com/news/tamilnadu/police-search-love-fraud-263779.html
[5] தமிழ்.வெப்துனியா, காதல், உல்லாசம், ஆபாச புகைப்படம் வெளியீடு: காதல் மன்னனுக்கு வலை வீச்சு!, Last Modified: செவ்வாய், 27 செப்டம்பர் 2016 (13:22 IST).
[6] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/love-airily-obscene-photo-released-police-searching-the-cheating-man-116092700008_1.html
[7] தமிழ்.முரசு, பேஸ்புக் மூலம் பழகி இளம்பெண்களை படம் எடுத்து மிரட்டிய இன்ஜினியர் கைது, 9/27/2016, 3:25:14 PM
[8] Once the relationship is established, he would pull off the scene from Vazhakku Enn 18/9 in which the unsuspecting girl believes that her boyfriend was concerned about her getting wet in the beach and that was the reason he had booked a room for her to change her dress.
http://www.deccanchronicle.com/nation/crime/280916/chennai-facebook-lover-held-for-cheating.html
[9] http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=98448
[10] An engineering student of a private college was arrested for sharing nude pictures of a woman with his friends through his mobile phone on Tuesday (27-09-2016). A senior police officer said the woman, who was working as an accountant in a petrol bunk, had stayed with her friend V. Samuel at a hotel in ECR last year 2015. During their stay, the accused Samuel had taken pictures of her changing clothes, without her knowledge. He had shared these pictures with his friends through his mobile phone. When she came to know about it, the 21-year-old woman filed a complaint at the Egmore All Women Police Station. The police arrested the accused when he came to meet her in Mylapore. The accused was produced before a Judicial magistrate and sent to Puzhal prison.
[11] தினத்தந்தி, 10 பெண்களை ஏமாற்றிய காதல் மன்னன் கைது பேஸ்–புக்கில் பெண்களின் ஆபாச படங்களை வெளியீட்டு மிரட்டல், பதிவு செய்த நாள்: செவ்வாய், செப்டம்பர் 27, 2016, 4:35 PM IST; மாற்றம் செய்த நாள்: செவ்வாய், செப்டம்பர் 27,2016, 4:35 PM IST.
[12] http://www.dailythanthi.com/News/India/2016/09/27163524/10-women-for-cheating-King-of-romance-arrested.vpf
[13] On the advice of the police officials, she had asked Samuel to meet her at a temple in Mylapore, where a trap was laid and he was caught red handed.
[14] தினத்தந்தி, 10 பெண்களை ஏமாற்றிய காதல் மன்னன் கைது பேஸ்–புக்கில் பெண்களின் ஆபாச படங்களை வெளியீட்டு மிரட்டல், பதிவு செய்த நாள்: செவ்வாய், செப்டம்பர் 27, 2016, 4:35 PM IST; மாற்றம் செய்த நாள்: செவ்வாய், செப்டம்பர் 27,2016, 4:35 PM IST.
[15] http://www.dailythanthi.com/News/India/2016/09/27163524/10-women-for-cheating-King-of-romance-arrested.vpf